Posted tagged ‘ஊடகத் தீவிரவாதிகள்’

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ளவை என்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.

இந்நிலையில் தான் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்செய்திகள் வர ஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].

22-10-2022 (சனிக்கிழமை இரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 

23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து  2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.

பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கார் குண்டு வெடித்தலில் இறந்தவன் ஜமேசா முபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……

வாட்ஸ்ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட  அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!

© வேதபிரகாஷ்

29-10-2022


[1]  திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

[2]  சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[4] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும் முன்பே நடந்த கதை தான்!

செப்ரெம்பர் 27, 2015

அல்உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில்ஹாலிவுட் ஸ்டைலில்போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும் முன்பே நடந்த கதை தான்!

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம்: பிலால் மாலிக் உள்ளிட்டவர்களை என்கவுன்டர் செய்யவே, புழல் சிறையில் போலீசார் மோதல் நாடகம் நடத்தி இருக்கலாம் என பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகம்மதுசந்தேகம் எழுப்பியுள்ளார்[1]. “போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பண்ணா இஸ்மாயில் உள்ளிட்டோர் இவர்கள் உயர் பாதுகாப்பு சிறையில் தனியாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 25-09-2015 அன்று ஜெயிலர் இளவரசனை இவர்கள் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற சென்ற வார்டன்கள் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகியோர் அவர்களை திருப்பி தாக்கியதாகவும், பதிலுக்கு வார்டன்களை தீவிரவாதிகள் தாக்கியதாகவும் சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி, இரவு சிறைக்கு சென்று கைதிகளிடம் சமாதானம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டி.வியில் காயம்பட்ட சிறை அதிகாரிகளைத்தான் காட்டுகிறார்களே தவிர, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், இஸ்மாயில் இவர்களை காட்டவில்லை”.

Five arrested in Melappalayam - Musims protest, argue

Five arrested in Melappalayam – Musims protest, argue

ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை தாக்கும் அளவுக்கு நமது காவல்துறை பலவீனமானதா?: இப்படி கேள்வி கேட்டு தொடர்கிறார் கஜினி முகமது, “சிறைக்குள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் எப்படி ஒன்றாக சேர முடியும். அப்படியே சேர்ந்தாலும் ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை இவர்களால் தாக்க முடியுமா? அவ்வளவு பலவீனமானதா நமது காவல்துறை?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[2]. புழல் சிறை அதிகாரி இளவரசன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள கஜினி முகம்மது[3], இந்த வழக்கை மெதுவாக நடத்தி வருவதாகவும், இருக்கிற கொலை வழக்கு அனைத்தையும் இவர்கள் மீது போட்டுள்ளதாகவும் போலீசார் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்[4]. இப்போது சிறையில் நடந்திருப்பதாக சொல்லப்படும் தாக்குதலில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், இஸ்மாயில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என கஜினி சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், இவர்களை சிறைக்கு மாற்றுவதாக அறிவித்திருப்பது வழக்கை நடத்த முடியாமல் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டிருப்பதுபோல் தெரிகிறது. தமிழக அரசு, கைதிகளை ஒரே மாதிரியாக அணுகி அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்[5]. மாதம் ஒருமுறை இவர் சென்று வருவதினால், இவருக்கு மேலும் விசயங்கள் தெரியும் போலிருக்கிறது.

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot.fullஎன்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும்: பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் எ‌ல். கே. அத்வானி கொலை முயற்சி வழக்கில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை  நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்த காவ‌ல்துறை‌க்கு உத்தரவிட‌க் கோ‌ரி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தாக்கல் செய்யப்பட்டது[6], ஆனால் தள்ளுபடி செய்யப்பட்டது. தீவிரவாதிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு, இத்தகைய பீதியைக் கிளப்பி விடுவது வழக்கமான வேலையாக இருக்கிறது. ஆனால், குண்டு வைத்தது உண்மை, அத்தகைய தீவிரவாத எண்ணம் உள்ளது உண்மை, அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற திட்டம் தீட்டியது உண்மை; கொலைகள் நடந்திருப்பது உண்மை; குண்டுகள் வெடித்திருப்பது உண்மை; அப்பாவி மக்கள் இறந்திருப்பது உண்மை; எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமே இல்லை, நடக்கவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டால், நடந்தது நடக்கவில்லை என்றாகுமா?[7]. நீதிமன்றத்திலேயே, இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுக்கப்படுகிறது.

Chota-rajan-with-Dawoodநீதிமன்றத்தில் சட்டமீறல்கள்: அத்வானியைக் கொலை செய்ய திட்டமிட்ட ஜிஹாதிகளுள் ஒருவன் ஜாஹிர் ஹுஸைன் என்ற குற்றவாளி நீதிமன்றத்தில் செய்த கலாட்டாவால் பரப்பரப்பு ஏற்பட்டது. மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டுவரப்பட்ட அவன் பிளேடினால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றான். உடனே, போலீஸார் தடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறிய காயத்துடன் அவன் தப்பினான். கடந்த ஏப்ரல் மாதம் கூட இதே மாதிரி தற்கொலை முயற்சியில் அவன் ஈடுபட்டான்[8]. அப்பொழுது தன்னை விடுவிக்குமாறு முறையீடு செய்திருந்தான். ஆனால் நீதிபதி அவனது மனுவை தள்ளுபடி செய்தார்[9]. அதாவது, இவ்வாறு கலாட்டா செய்வதே அவர்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது என்பதற்காக எடுத்துக் காட்டப்படுகிறது. நீதிமன்றத்தையே மதிக்காதவர்கள் சிறைச்சாலையை, சிறை போலீஸாரை எப்படி மதிப்பர்?

gulshan-kumar-killer-Abdul Rauf Merchant

gulshan-kumar-killer-Abdul Rauf Merchant

முகமது அனிபா டிஎஸ்பியைத் தாக்குதல் (08-07-2013): திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை 08-07-2013 அன்று மடக்கி பிடித்தனர்[10]. அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த முகமது அனீபா, டி.எஸ்.பி. கார்த்திகேயன் மீது வீசினார். இதில் டி.எஸ்.பி. கார்த்திகேயன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்[11]. இதனால் அந்த இடத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவனை மடக்கி பிடித்த போலீசார், அவனிடம் வெடிமருந்து, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வத்தலகுண்டு காவல்நிலையத்தில், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், வெடிமருந்து மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தாகவும், இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தது உட்பட 5 வழக்குகள் முகமது அனீபா மீது டி.எஸ்.பி. கார்த்திகேயன் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது[12]. அன்று டி.எஸ்.பியை தாக்கியவர்களின் மனப்பாங்குதான், புழல் சிறையில் போலீஸாரைத் தாக்கியவர்களின் மனப்பாங்குடன் இயைந்து போகிறது. குற்றவாளிகள் மேன்மேலும் குற்றங்களை செய்து கொண்டே இருந்தால், ஒன்றும் செய்ய முடியாது என்ற போக்கும் அவர்களிடையே உள்ளது.

© வேதபிரகாஷ்

27-09-2015

[1] ஒன்.இந்தியா, புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம், Posted by: Jayachitra, Published: Sunday, September 27, 2015, 12:21 [IST].

[2]  விகடன்.காம், புழல் சிறை மோதல் என்கவுன்டருக்கான நாடகமா? சந்தேகம் எழுப்பும் பிலால் மாலிக் சகோதரர், Posted Date : 16:05 (26/09/2015)

Last updated : 16:05 (26/09/2015).

[3] புழல் சிறைக்கு இவர்கள் மாற்றப்பட்டதில் இருந்து சிறை அதிகாரி இளவரசன் ரொம்பவும் மோசமாக நடந்து கொள்கிறார். நான் மாதம் ஒரு தடவை பார்க்க செல்வேன். என்னையே கடுமையாக திட்டுவார். http://www.vikatan.com/news/article.php?aid=52934

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/bilal-malik-s-brother-questions-puzhal-prison-clash-incident-236563.html

[5] http://www.vikatan.com/news/article.php?aid=52934

[6] Claiming himself to be a friend of Fakruddin, M Abdulla of Chennai alleged that he was arrested by CB-CID SIT on November 2 and was being kept in “illegal” custody in violation of Article 21 and 22 of the Constitution.

 http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5580797

[7] https://islamindia.wordpress.com/2011/11/11/plan-to-kill-advani-arrest-haeabus-corpus-petition-legal-warangles/

[8]  http://zeenews.india.com/news/tamil-nadu/accused-in-advani-bomb-planting-case-causes-flutter-in-court_861146.html

[9]  http://www.business-standard.com/article/pti-stories/accused-in-advani-bomb-planting-case-causes-flutter-in-court-113070901058_1.html

[10]  http://www.dinamalar.com/news_detail.asp?id=753374

[11]  http://www.dnaindia.com/india/1858935/report-one-more-case-filed-for-trying-to-plant-bomb-during-lk-advani-s-yatra-in-tamil-nadu-in-2011

[12] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=103304

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (4)

ஓகஸ்ட் 2, 2015

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (4)

 

யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி

யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி

கே. வீரமணி, யாகூப் மேமனுக்கு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஏன்?[1]: தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள மனித உரிமை மனிதநேய அறிக்கை என்று மேலேயுள்ள விசயங்களைத் தொகுத்து கே. விரமணி வெளியுட்டுள்ளார். மும்பைக் குண்டுவெடிப்புத் தொடர்பாக கைது செய்யப் பட்டு சிறையிலிருந்த யாகூப் மேமனுக்கு அவசர அவசர மாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதானது –  பல விமர்சனங்களுக்கு வழி வகுத்து விட்டது[2].

  1. மகாராட்டிர மாநிலத்தில் முசுலிம்களுக்கு எதிரான கலவரத்தில் முசுலிம்கள் கொல்லப்பட்டனரே! அதற்குக் காரணமானவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
  2. நீதிபதி கிருஷ்ணா ஆணையம் குற்றவாளிகளைப் பட்டியலிட்டுக் காட்டியதே – அன்றைய பிஜேபி சிவசேனா ஆட்சி ஒரே ஒரு வரியில் கிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கையை ஏற்க மறுப்ப தாகக் கூறிடவில்லையா?
  3. மும்பைக் குண்டு வெடிப்பு என்பது அயோத்தி பாபர் மசூதி இடிப்பின் எதிரொலிதான்; நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அய்யப்பாடு- மும்பை குண்டு வெடிப்புக்குக் காரணமான பாபர் மசூதியை இடிப்பதற்குக் காரணமானவர்கள் இதுவரை தண்டிக்கப்படாதது ஏன்? இன்னும் சொல்லப் போனால் வழக்கு விசாரணை முறையாகக் கூடத் தொடங்கப்படவில்லையே ஏன்?
  4. இதன் பொருள் என்ன? நீதித்துறையும், ஆட்சித் துறை யும் நபர்களைப் பொறுத்து வளையும் – நெளியும் என்பதைத்தானே இது காட்டுகிறது! மனுதர்மத்தை எடுத்துக் காட்டி தீர்ப்பு வழங்குபவர்கள் இன்னும் இருக்கிறார்களே!
  5. அத்வானியின் ரத யாத்திரை (1991 அக்டோபர்) காரணமாக ஏற்பட்ட மதக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 564 பேர்.
  6. மாலேகான் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி களான பெண் சாமியார் பிரக்யாசிங், சாமியார் அசிமானந்த், கர்னல் புரோகித் உள்ளிட்டோருக்கான வழக்கு விசாரணை ஏன் முடிக்கப்படவில்லை – உரிய தண்டனை ஏன் வழங்கப் படவில்லை?
  7. தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படட்டும்! தூக்குத் தண்டனையே கூடாது; இது மிகவும் காட்டு விலங்காண்டித்தனம்; மனித நேயத்துக்கும், உரிமைக்கும் எதிரானது என்று குரல் உலகெங்கும் கிளர்ந்தெழும் இந்தக் கால கட்டத்தில், இப்படியொரு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட முறை கண்டிக்கத்தக்கது!
  8. மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் காட்டிய இந்த அசாதாரண நடைமுறைகள் மக்களின் நம்பிக்கையைச் சிதறடித்து விடும். யாகூப் மேமன் தூக்குத் தண்டனையே கடைசியாக இருக்கட்டும்!

Yakub versus prohit, etc

Yakub versus prohit, etc

தி இந்துவின் ஒருதலைப் பட்சமான கருத்துத் திணிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள பெரும்பாலான விவரங்கள் “தி இந்து” (தமிழ்) இதழிலிருந்து எடுத்தாளப்பட்டவை ஆகும். தொடர்ந்து, தூக்குத்தண்டனை கூடாது, மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று யாகூப் மேமன் தூக்கிற்கு முன்னரும் பின்னரும் அதிகமாகவே செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆனால், ஏன் தூக்குத்தண்டனை அல்லது மரணதண்டனை தேவை, மனிதத் தன்மையற்ற குரூர தீவிரவாதிகளுக்குக் கருணைக் காட்டக் கூடாது, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை, திட்டமிட்டுக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்ற கருத்தை யாரிடமிருந்தும் பெற்று வெளியிடவில்லை. ஒருவேளை அத்தகைய கருத்தே தேவையில்லை என்று “தி இந்து” மற்றும் அதன் பின்னணியில் இருப்பவர்கள் முடிவு செய்திருப்பது போலிருக்கிறது. பிறகு, எப்படி அவர்களை சமநோக்குள்ளவர்கள், பாரபட்சமற்றவர்கள், உள்ள நாட்டி சட்டங்களை மதிப்பவர்கள், நீதிமன்றங்களை போற்றுபவர்கள் என்று கருத முடியும்?

யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி, நாத்திகம் கூட்டு

யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி, நாத்திகம் கூட்டு

மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாகக் மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும்: விக்கிப்பீடியாவின் விளக்கமும் பாரபட்மாக இருக்கிறது[3], “மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம்[4] தனது நடவடிக்கைகளூடாகக் மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும். கொலை போன்ற கொடூரமான குற்றங்களுக்கும், பாலியன் வன்புணர்வு போன்றவையும் தவிர்த்து போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்கும் பல உலக நாடுகள் மரண தண்டனையை தருகின்றன மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.” சரி, தீவிரவாதம், பயங்கரவாதம், ஜிஹாத் பற்றி ஒன்றும் விவாதங்கள் இல்லையா?

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்.2

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்.2

மும்பையில் பயங்கரவாத தாக்குதல்கள் (1993 முதல் 2011 வரை): மும்பை, இந்தியாவின் வணிக-வியாபார தலைநகரம், பொருளாதார மையம் என்பதனால், தொடர்ந்து குண்டுவெடிப்பில் தாக்கப்பட்டு வருகின்றது. இதில் அப்பாவி-பொது மக்கள் பலிகடாக்களாக குரூரமாகக் கொல்லப்பட்டு வருகிறர்கள்.

 

  1. 12 மார்ச் 1993 – 13 வெடி குண்டுகள் கடுமையாக வெடித்ததில் 257 பேர் பலியாகினர்
  2. 6 டிசம்பர் 2002 – கட்கோபர் எனும் இடத்தில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர்
  3. 27 ஜனவரி 2003 – வைல் பார்லேவில் ஒரு மிதிவண்டியில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் .
  4. 14 மார்ச் 2003 – முலுண்டில் ரயில் குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகினர்,
  5. 28 ஜூலை 2003 – காட்கோபரில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர் .
  6. 25 ஆகஸ்ட் 2003 – இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் நுழைவாயில் அருகே காரில் இரண்டு வெடிகுண்டு வெடித்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்
  7. 11 ஜூலை 2006 – தொடர் 209 கொலை, ரயில்களில் ஏழு குண்டுகளில் போகவில்லை
  8. 26 நவம்பர் 2008 முதல் 29 2008 நவம்பர் வரை – ஒருங்கிணைந்து நிகழ்த்தப்பட்ட தொடர் தாக்குதலில், குறைந்தது 172 பேர் கொல்லப்பட்டனர்.
  9. 13 ஜூலை 2011 – வெவ்வேறு இடங்களில் மூன்று ஒருங்கிணைந்த குண்டு வெடிப்புகள்; 26 பேர் கொல்லப்பட்டனர்.

இவற்றில், நிச்சயமாக பழிவாங்கும் எண்ணம் எல்லைகளை மீறி, இந்தியாவையே அழிக்க வேண்டும் என்ற வெறித்தனம், குரூர சதிதிட்டம், நாசகாரத்தனம் முதலியவை அடங்கியிருப்பது வெளிப்படுகிறது. இது தீவிரவாதத்தை விட மிக-மிக அதிகமானது. அதனை எப்படி, எவ்வாறு, ஏன் அறிவிஜீவிகள் உணராமல் இருக்கின்றனர் என்று புரியவில்லை.  ஒருவேளை அவர்களும் அந்த அதி-தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா என்று ஆராய வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

02-08-2015

[1] விடுதலை, யாகூப் மேமனுக்கு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஏன்? , சனி, 01 ஆகஸ்ட் 2015 14:47 http://www.viduthalai.in/e-paper/106140.html

[2] கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம், சென்னை, யாகூப் மேமனுக்கு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஏன்? , விடுதலை, 1-8-2015

[3]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88

[4] நீதிமன்றங்களை அவ்வாறு கூறலாமா, சரி பிறகு உயிர் எடுப்பவர்களை, கொலைகாரகளை, தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை என்னென்று கூறுவார்கள்?

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (1)

ஓகஸ்ட் 2, 2015

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (1)

1993 Mumbai blast- who pay for the victims.1

1993 Mumbai blast- who pay for the victims.1

மார்ச். 2013 – சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு: மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு, மார்ச் 12–ந்தேதி அன்று தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. 12 இடங்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில், 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.  இது தொடர்பான வழக்கை விசாரித்த தடா கோர்ட்டு கடந்த 2006–ம் ஆண்டில் தீர்ப்பு கூறியது. மொத்தம் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் தண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தீர்ப்பில் யாகுப் மேமனின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. யாகுப் மேமன், குண்டு வெடிப்பில் முக்கிய சதிகாரனான தேடப்படும் குற்றவாளி டைகர் மேமனின் சகோதரர். மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மரண தண்டனை பெற்ற 10 பேர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.

1993 Mumbai blast- who pay for the victims.2

1993 Mumbai blast- who pay for the victims.2

பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப் பட்டுள்ளது – சுப்ரீம் கோர்ட் ஆதாரங்கள் மூலம் அறிவித்தது (மார்ச்.2013): மேலும், குண்டு வெடிப்பை நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. குண்டு தயாரிக்கவும் மிகவும் சக்தி வாய்ந்த வெடி பொருட்களை கையாளுவதற்கும் அவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.க்கும் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், இந்த குண்டு வெடிப்பில் தூக்கு தண்டனை பெற்றுள்ள யாகுப் மேமன் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், அயூப் மேமன் ஆகியோர் தாக்குதல் நடத்துவதற்கு அம்பு எய்தவர்களாக இருந்துள்ளனர். மற்றவர்கள் அம்புகளாக இருந்துள்ளனர் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

1993 Mumbai blast- who pay for the victims.3

1993 Mumbai blast- who pay for the victims.3

போலீஸ், சுங்க வரிதுறை, கடலோர பாதுகாப்பு துறையினர் ஆகியோர் கண்டனத்திற்குரியவர்கள் (மார்ச்.2013): போலீஸ், சுங்க வரிதுறை, கடலோர பாதுகாப்பு துறையினர் ஆகியோர் கண்டனத்திற்குரியவர்கள் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது[1]. குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் வைத்து தாவூத் இப்ராகிம் மற்றும் பலரால் சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. ஏ.கே.56 ரக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆயுத சட்டத்தின் கீழ் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் கடுமையான தடா சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருந்த கிரிமினல் சதி குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சஞ்சய் தத்தும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார்.  தற்போது கோர்ட் சஞ்சய் தத்தின் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையை 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்துள்ளது. இவற்றையெல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டுதான், இப்பொழுதைய தீர்ப்பைப் படித்தறிய வேண்டும், விவாதிக்க வேண்டும். ஆனால், செக்யூலரிஸ போர்வையில், காங்கிரஸ்காரர்கள் தங்களது வாய்களைத் திறந்து உளாறியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

1993 Mumbai blast- who pay for the victims.4

1993 Mumbai blast- who pay for the victims.4

காங்கிரஸ் தலைவர்கள் யாகுப்பின் தூக்கிற்கு வருத்தப் பட்டது (ஜூலை.2015): யாகுப் மேனன் 30-07-2015 அன்று காலை தூக்கிலிடப்பட்டதும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங், “அரசு இதே போல, மற்ற எல்லா தீவிரவாத வழக்குகளிலும் ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்”, என்று டுவிட்டரில், தனது கருத்தை வெளியிட்டார்[2]. பல நேரங்களில் விசித்திரமாக பேசி வரும் இவர், இதே வேகத்தை மற்ற வழக்குகளிலும் காட்ட வேண்டும் என்று கமென்ட் அடித்தார்[3]. சசி தரூர், “அரசு ஒரு மனிதனை தூக்கிலிட்டது குறித்து வருத்தமடைகிறேன். அரசு மூலம் நடக்கும் கொலைகள் நம்மையும் கொலைகாரர்களாக்கி விடும். கொடும் செயல் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்காக அதற்குக் காரணமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த தண்டனை காரணமாக அத்தகைய செயல் தடுக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. மாறாக, மேலும் அத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கவே அது வகை செய்கிறது. தீவிரவாதத்தை படைகளைக் கொண்டுதான் ஒடுக்க வேண்டும். மரண தண்டனை மூலம் அல்ல”, என்றெல்லாம் கமென்ட் அடித்தார்[4]. ஒருவேளை தனது மனைவி மர்ம மரணத்தில் / கொலை என்று சந்தேகிக்கப்படும் வழக்கில் தான் சம்பந்தப் பட்டிருப்பதால், அவ்வாறு பேசினாரா என்பது அவருக்குத் தான் தெரியும்.

1993 Mumbai blast- Dwaood, Tiger Memon, Dossa, Javed Patel

1993 Mumbai blast- Dwaood, Tiger Memon, Dossa, Javed Patel

ஜூலை 30.2015 காலை தூக்கிலிடப்பட்ட நாள்: உச்ச நீதிமன்ற அமர்வு அந்த நேரத்தில் கூடி, மரண தண்டனையை நிறுத்தக் கோரும் குற்றவாளியின் மனுவை ஆய்வு செய்தது. ஆனால் “மிகுதியான அளவு காலஅவகாசம் அளிக்கப்பட்டு விட்டது. கடந்த ஆண்டே மேமனின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது” எனக் கூறிய நீதிபதிகள், மனுவை நிராகரித்தனர். இதனால் காலை 6.35 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார். யாகூபின் அண்ணன் சுலைமான் உடலைப் பெற்றுக்கொண்டு விமானம் மூலம் மும்பைக்கு எடுத்துச் சென்றார். மாஹிமில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிகையாக, மும்பை முழுவதும் சுமார் 450 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய மும்பை பகுதியான மாஹிம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். நேற்று மாலை இஸ்லாமிய முறைப்பட்டி யாகூபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மும்பையில் இவர்களது குண்டுவெடிப்பில் பலியான 257 ஆத்மாக்களும் சாந்தியடைந்தன என்று அவர்களது உறவினர்கள் கூறிக்கொண்டார்கள். இதை ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை, மனித உருமைகள் பேசுபவர்களையும் கண்டுகொள்ளவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத்[5] கூறும்போது, “யாகூப் மேமன் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுதான் சரண் அடைந்தார் என உளவுத் துறை (ரா) முன்னாள் அதிகாரி பி.ராமன் தான் எழுதிய ஒரு கட்டுரையில் கூறியிருந்தார். மேலும் முக்கியக் குற்றவாளி அல்லாத மேமனுக்கு மரண தண்டனை விதிப்பது சரியல்ல என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அவரை தூக்கிலிட்டிருப்பது சரியல்ல” என்றார். [இதை ஏற்கெனவே அதிகாரிகள் மறுத்துள்ளனர், ஏனெனில் அதிகாரிகளுக்கு அத்தகைய பேரம் பேசவும், எந்தவித தண்டனை குறைப்பு உத்திரவாதம் கொடுக்கவும் சட்டப்படி உரியையும், அதிகாரமும் இல்லை. எனவே, வழக்கம் போல கம்யூனிஸ்டுகள், இறந்தவரின் கருத்தைக் குறிப்பிட்டு குழப்ப முயற்சி செய்கின்றனர்]

 

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. யாகூப் மேமனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளில் ஒருவரை தூக்கிலிடுவது அவருக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி யாகும். இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதுதான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். [இவரது கருத்தும் அர்த்தமில்லாதது, பல ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கு, முறைப்படி கருணை மனு, அது மறுக்கப்பட்டது, அதை எதிர்த்து தொடரப்பட்ட மனு என்று எல்லாவற்றையும் விசாரித்து தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் டுவிட்டரில் தெரிவிக்கப்படும் கருத்துகளை வைத்து எந்த தீர்மானமும் எடுக்க முடியாது].

© வேதபிரகாஷ்

02-08-2015

[1] இதனை செக்யூலரிஸவாதிகள், யாகுப்-ஆதாரவாளர்கள் கண்டு கொள்வவதில்லை.

[2] Congress general secretary Digvijaya Singh fired the first salvo, saying that the BJP- led government should show “similar commitment” in all cases of terror as it showed in the case of Yakub Memon. “I hope similar commitment of the government and the judiciary would be shown in all cases of terror, irrespective of their caste, creed and religion,” he said in a tweet following Memon’s execution in the Nagpur central jail on Thursday morning (30-07-2015).

[3] http://indianexpress.com/article/india/india-others/show-same-urgency-in-other-terror-cases-digvijaya-singh-on-yakub-memons-hanging/

[4] Party colleague and former union minister Shashi Tharoor said he was “saddened” by Memon’s execution.”Saddened by news that our government has hanged a human being. State-sponsored killing diminishes us all by reducing us to murderers too,” Tharoor tweeted. “There is no evidence that death penalty serves as a deterrent, to the contrary in fact. All it does is exact retribution, unworthy of a government,” the Thiruvananthapuram parliamentarian said.

[5] http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/article7484832.ece

இந்திய தேசிய கொடி எரிப்பும், ஐ.எஸ் கொடி எரிப்பும்: முஸ்லிம்களின் போலித்தனம், தேசவிரோதம், தீவிரவாத ஆதரவு!

ஜூலை 28, 2015

இந்திய தேசிய கொடி எரிப்பும், .எஸ் கொடி எரிப்பும்: முஸ்லிம்களின் போலித்தனம், தேசவிரோதம், தீவிரவாத ஆதரவு!

ஐ.எஸ் கொடி

ஐ.எஸ் கொடி

.எஸ் தீவிரவாதிகளின் கொடியை எரித்ததற்கு காஷ்மீர் முஸ்லிம்கள் கலாட்டா, ஆர்பாட்டம்: இந்தியாவில் எல்லாமே விசித்திரமாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன, அதிலும் காஷ்மீர் என்றால் கேட்கவே வேண்டாம். ஜூலை 18 2015 அன்று ஐசிஸ் கொடியை எரித்ததற்காக கலாட்டா, ஊரடங்கு என்று 14-07-2015, செவ்வாய் கிழமையிலிருந்து நடந்து வருகிறது. விஷமிகள் வதந்திகளைப் பரப்பி விடுவார்கள் என்று அரசு உடனே முன்னெச்சரிக்கையாக ஜி.பி.ஆர்.எஸ்.சேவையை முடக்கி விட்டது[1]. போலீஸார், பாதுகாப்புத் துறையினர், தெருக்களில் நடமாட்டத்தைக் கட்டுப் படுத்தினர். விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தல் ஆட்கள் ஐசிஸ் கொடியின் மீது, கலிமா-தாயபா எழுதி எரித்ததாக உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்[2]. எங்களுக்கு ஐசிஸ் கொடியை எரிப்பதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை, ஆனால், அவர்கள் ஒரு கருப்புக் காகிதத்தால் ஐசிஸ் கொடி போன்று செய்து, அதில் கையினால், குரான் வசனங்களை எழுதி எரித்தனர் என்று விளக்கம் அளித்தனர்[3]. அதனால், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூச்சலிட்டனர்.  ஐ.எஸ் எப்படி அதே வாசகங்களை தங்களது கொடிகளில்[4] வைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

Curfew in rajouri

Curfew in rajouri

ஊடகங்களின் பாரபட்ச செய்தி வெளியீடுகள்: ஊரடங்கு உத்தரவை மீறி 15 முஸ்லிம்கள் கலாட்டா செய்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டனர். விஷ்வ இந்து பரிஷத் ஆட்களைக் கேட்டதற்கு, நாங்கள் கொடியைத்தான் எரித்தோம் அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது எங்களுக்குத் தெரியாது என்றனர்[5]. உண்மையில் நாங்கள் ஆர்பாட்டக்காரர்களை ஐசிஸ் கொடியில் அவ்வாறு எழுதப்பட்டிருப்பதை எதிர்க்கச் சொன்னதாகக் கூறினர்[6]. ஐ.பி.என்-சி.என்.என் இந்த செய்தியை வெளியிட்டு, “Protests in Rajouri after VHP burns IS flag, curfew imposed”, என்று தலைப்பிட்டுள்ளது விசமத்தனமாக உள்ளது[7]. இதே செய்தியை மற்ற ஊடகங்களும் அப்படியே சில மாறுதல்களுடன் வெளியிட்டுள்ளன. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று மாவட்ட மாஜிஸ்திரேட் தீப்தி உப்பால் தெரிவித்து உள்ளார். இருப்பினும் ஐ.எஸ். தீவிரவாதம் கொடி எரிக்கப்பட்ட விவகாரத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கைதுசெய்யப்படுவார்கள் என்பதை மறுத்துவிட்டார். தீப்தி பேசுகையில், தீவிரவாத இயக்கம் மற்றும் தேசத்திற்கு எதிரான இயக்கங்களின் கொடியை எரிப்பது என்பது தேசபற்று பணியாகும், என்று கூறினார். “நாங்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கொடியை தான் எரித்தோம், ஆனால் அதில் என்ன எழுதப்பட்டு இருந்தது என்று எங்களுக்கு தெரியாது,” என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் ராமாகாந்த் துபேய் தெரிவித்து உள்ளார்[8].

IndiaTv-Rajori-protest-final

IndiaTv-Rajori-protest-final

முஸ்லிம்கள் கலாட்டா, கல்-எரிதல், ஊர்-அடங்கு உத்தரவு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரியில் போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்நாடுகளின் அரசுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. தங்களுக்கு எதிரான வெளிநாட்டவர்களை பிணைக் கைதிகளாக  பிடித்து கொன்று குவிப்பதோடு பெண்கள்,  குழந்தைகளை கூட மிக கொடூரமாக அவர்கள் கொலை செய்வது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் ரஜொரி நகரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொடியை விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[9]. இதனை கண்டித்து போலீசார் மீது இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். ஐ.எஸ். அமைப்பின் கொடியை எரித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பதற்றம் நிலவுவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க போலிசார் மற்றும் ராணுவத்தினர் ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்[10].

kashmir-Pakistan flag shown

kashmir-Pakistan flag shown

ஐ.எஸ் கொடியை எரித்தால், முஸ்லிம்களுக்கு ஏன் கோபம் வருகிறது?: தீவிரவாதத்தை எதிர்ப்பதும், அவர்களது சின்னங்களை எரிப்பதும் எப்படி குற்றமாகும் என்று வி.எச்.பி உள்ளூர் தலைவர் கேட்டார்[11]. ஹுரியத் கான்பரன்ஸ் என்ற இந்தியவிரோத அமைப்பும் இதற்கு கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இப்படியே ஜம்மு முஸ்லிம்களின் மீது சதிகளைத் திணித்துக் கொண்டே இருந்தால், காஷ்மீர் பள்ளத்தாகிலிருந்து, பெரிய எதிர்ப்பு கிளம்பும், அதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தது[12]. ஜே.கே.எல்.எப்.பின் ஆட்கள் மற்றும் தனி எம்.எல்.ஏவான ஷேக் அப்துல் ரஷ்ஹித் [ independent MLA Shiekh Abdul Rashid ] முதலியோரும் ஆர்பாட்டத்தில் இறங்ககினர் இருப்பினும் தடுக்கப் பட்டு கைது செய்யப்பட்டனர்[13]. இதே முகமதியர்கள், ஐ.எஸ் மற்றும் பாகிஸ்தான் கொடியேந்தி ஆர்பாட்டம் செய்தபோது, இந்திய-விரோத கோஷங்கள் இட்டபோது, ஏன் எதிர்க்கவில்லை என்று தெரியவில்லை. ஜூலை 25 அன்று கடையடைப்பு போராட்டம் வேறு நடத்தியிருக்கிறார்கள்[14]. அதற்கு அழைப்பு விடுத்தது, காஷ்மீர் வணிகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு, காஷ்மீர் தொழிற்சாலைகள் ஒருங்கிணைப்பு, காஷ்மீர பொருளாதார கூட்டமைப்பு மற்றும் வழக்கம் போல தேச-விரோதிகளின் கட்சிகள் இத்யாதிகள். ஓட்டல்கள்-விடுதிகள் சங்கம், சுற்றுலா துறை, ஏஜென்டுகள் சங்கம், வக்கீல்கள் சங்கம், டாக்டர்கள் சங்கம், பள்ளிகள், கல்லூரிகள் எல்லாரும் கலந்து கொண்டனர்[15]. ஆக இங்கும், முஸ்லிம்கள், முஸ்லிம்களாகத் தான் செயல் பட்டிருக்கின்றனரே அன்றி, இந்தியர்களாக செயல்படவில்லை. பிரிவினைவாதிகள், தேசவிரோதிகள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள், தீவிரவாதிகளை ஆதரிப்போர் என்று எல்லோரும் சேர்ந்து, தங்களை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதை கவனித்த மற்ற இந்திய முஸ்லிம்களும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை, தங்களது செக்யூலரிஸத்தை வழக்காம் போலக் காட்டிக் கொண்டு அமைதியைக் காத்தன. செக்யூலரிஸப் பழங்களைப் பற்றி கேட்கவே வ்டேண்டாம், அவை காணாமல் போய்விட்டன.

Protesters hold ISIS flag in Srinagar-TOI photo by Bilal Bahadur- October 2014

Protesters hold ISIS flag in Srinagar-TOI photo by Bilal Bahadur- October 2014

இந்திய தேசியைக் கொடியை எரித்தால் சந்தோஷம், பாகிஸ்தான் கொடியைக் காட்டினால் சந்தோஷம், ஆனால், ஐ.எஸ் கொடியை எரித்தால் கோபம் ஏன்?: பாவம், ஐசிஸ் கொடி கிடைக்காததால், அவ்வாறு கருப்புக் காகிதத்தை வைத்து கொடியைத் தயாரித்தார்கள் போலும். சரி, அதேபோல ஏதோ எழுதினார்கள் என்றால், அவர்களுக்கு அரேபிய, பாரசீக அல்லது உருது மொழி தெரியாதே, பிறகு எப்படி அவர்கள் குரான் வசனங்களை அக்காகிதத்தில் எழுத முட்டியும்? ஒருவேளை அதேபோன்று கிறுக்கியிருப்பார்கள். ஆகவே, ஒரு தார்மீக எதிர்ப்பைக் காட்டுவதற்காக அவர்கள் அவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்திய தேசியக் கொடிகளைத் தொடர்ந்து, முஸ்லிம்கள் எரித்து வருகிறர்கள் அதற்கு எந்த முஸ்லிமும், எம்.எல்.ஏவும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. உண்மையில் அது ராஜ-துரோக, தேசவிரோத குற்றமாக இருந்தாலும், நடந்து கொண்டே இருக்கிறது. ஊடகங்கள் அவற்றைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறர்கள். ஐசிஸ் முதல், பாகிஸ்தான் கொடி வரை கைகளில் ஏந்தி கொண்டு, ஆட்டி, ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள்.  இந்திய தேசக்கொடி பலமுறை எரிக்கப்பட்டுள்ளன. ஊடகங்கள் அவற்றை தாராளமாகக் காட்டி வருகின்றன. ஆனால், இதுவரை, யாராவது கைது செய்யப்பட்டார்களா, சட்டமீறல்களுக்காக, தண்டனை கொடுக்கப்பட்டதா, ஜெயிலுக்குப் போனார்களா என்றெல்லாம் தெரியவிக்கப் படவில்லை. ஊடகங்கள் அத்துடன் அமைதியாகி விடுவதுதான் வழக்கமாகக் கொண்டுள்ளன.

© வேதபிரகாஷ்

28-07-2015

[1]  Arun Sharma, Curfew continues to remain in force over IS flag burning in Rajouri , Indian Express, Published:July 22, 2015 9:51 am

[2] http://indianexpress.com/article/india/india-others/curfew-continues-to-remain-in-force-over-is-flag-burning-in-rajouri/

[3] It is being alleged that some VHP and Bajrang Dal activists made an IS flag using a black piece of paper, and wrote the holy inscriptions on it by hand, followed by the words “IS” and “Hai Hai’’. Later, local Muslim leaders clarified that while they had no objection to the burning of the IS flag, they were protesting against writing of holy inscriptions by hand. The protesters asked the police to register a case and arrest the culprits by Monday evening.

[4] The flag is black with the words La ‘ilaha ‘illa-llah – “There is no God but God” – emblazoned across the top in white in a somewhat coarse, handwritten Arabic script. It’s a very different kind of typeface from the more elaborate calligraphy on the Saudi flag, for example, that also includes this same shahada, or Islamic statement of faith. Even more rough around the edges is the white circle in the middle of the ISIS flag. Inside it are three words: “God Messenger Mohammed.” It’s an interesting choice of word order given that the second part of the shahada is “and Mohammed is God’s messenger.” http://time.com/3311665/isis-flag-iraq-syria/

[5] However, clarifying that it had no intention to hurt the sentiments of Muslims, the VHP, on the other hand, asked the protesters to demonstrate against the IS for writing holy inscriptions on its flag. “We had only burnt the IS flag. We did not know as to what was written on it in Persian,” the state VHP patron, Ramakant Dubey, said today.

[6]  http://www.greaterkashmir.com/news/jammu/curfew-in-rajouri-town-after-vhp-burns-is-flag/192233.html

[7] http://www.ibnlive.com/news/india/protests-in-rajouri-after-vhp-burns-is-flag-curfew-imposed-1023783.html

[8] http://www.dailythanthi.com/News/India/2015/07/22090023/Curfew-Imposed-in-Jammu-and-Kashmir-s-Rajouri-Over.vpf

[9] http://www.vikatan.com/news/article.php?aid=49886

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=157270

[11] http://indianexpress.com/article/india/india-others/tension-in-rajouri-over-burning-of-isis-flag-by-vhp-bajrang-dal/

[12] It cautioned that if this process is not stopped and “hatching of conspiracies against the Jammu Muslims not stopped, it will have serious consequences and provoke a strong reaction against this in Kashmir Valley.”

http://www.dailykashmirimages.com/news-hurriyat-g-condemns-burning-of-flag-with-%E2%80%98kalima-tayyaba-73058.aspx

[13] http://www.outlookindia.com/news/article/jklf-langate-mla-protest-against-burning-of-is-flag-in-jk/907536

[14] The bandh call was first issued by the Kashmir Chamber of Commerce and Industries, Federation Chamber of Industries, Kashmir, and the Kashmir Economic Alliance. It was later supported by the Traders and Manufacturers Federation and other groups. The JKLF and the moderate faction of the Hurriyat Conference, headed by Mirwaiz Umar Farooq, had also supported the shutdown call http://www.tribuneindia.com/news/jammu-kashmir/kashmir-shuts-against-rajouri-flag-burning/111324.html

The strike was also supported by a faction of Hurriyat Conference-led by Mirwaiz Umar Farooq, Yasin Malik-led Jammu Kashmir Liberation Front (JKLF) and High Court Bar Association (HCBA).

http://risingkashmir.in/news/kashmir-observes-shutdown-over-flag-burning-row/

Kashmir Hotel & Restaurant Association (KHARA), Travel Agents Society of Kashmir (TASK), Kashmir

[15] Handicraft Manufactures & Exporters Association, J&K Private Diagnostic Centers Association, Joint Committee of Private Schools among others also supported the strike call.

http://www.kashmirreader.com/valley-shuts-down-over-rajouri-flag-burning/

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (12)

திசெம்பர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (12)

Burdwan blast accused Shahnoor Alam -Photo- PTI-File

Burdwan blast accused Shahnoor Alam -Photo- PTI-File

இந்திய-விரோத அந்நிய சக்திகளில் வடகிழக்கு மாநிலங்களில் சதிதிட்டங்களை செயல்படுத்தி வருவது: வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் இந்திய-விரோத செயல்கள், தீவிரவாத காரியங்கள், உள்ளூர் மக்களுக்கு எதிராக அவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கரவாத வேலைகள் முதலியவற்றில், பெரும்பாலும் அந்நிய சக்திகள் பின்னணியில் இருந்து கொண்டு, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. அவற்றில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, அல்-குவைதா, தலிபான், வங்காளதேசத்தின் ஜமாத்-உல்-முஜாஹித்தீன், கிருத்துவ மிஷனரிகள், இடதுசாரி-கம்யூனிஸ்ட் சித்தாந்த போடோலாந்து தீவிரவாதிகள், நக்சல்பாரிகள் முதலியோர் அடங்கும். கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இக்காரயங்கள் நடந்து வந்தபோதிலும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இப்பொழுது திரிணமூல் கட்சி இவ்விசயங்களில் மெத்தனமாகவே செயல் பட்டு வந்துள்ளன. இதனால், வங்காளதேசத்திலிருந்து முஸ்லிம்கள் ஊடுருவி, அசாம் மாநிலங்களில், நிரந்தரமாகத் தங்கி வாக்காளர் அட்டை, ரேஷ்னகார்ட் முதலியவற்றைப் பெற்று ஆளும் கட்சிகளுக்கு ஓட்டு வங்கியாக செயல்பட்டு வருவதுடன், கடத்தல், கள்ளநோட்டு-போதை மருந்து விநியோகம், மனிதகடத்தல் (பெண்கள்-குழந்தைகளையும் சேர்த்து) முதலிய காரியங்களிலும் ஈடுபட்டு, அதில் வரும் பணத்தின் பங்கை அரசியல்வாதிகளுக்குக் கொடுத்து வருவதால், அவர்களும் அமைதியாகவே இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் மறுபடியும் அந்நிய சக்திகள் தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளன.

21-12-2014-10 grenades found JMB - Assam

21-12-2014-10 grenades found JMB – Assam

ஒரே நாளில் இம்பால் குண்டுவெடிப்பில் மூன்று பேர் சாவு, பஸ்கா மாவட்டத்தில் 10 கையெறிகுண்டு கண்டுபிடிப்பு: 21-12-2014 அன்று மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் ஒரு குண்டு வெடித்து, மூன்று பேர் கொல்லப்பட்ட அதே நாளில்[1], அசாமில், பார்பேடாவில், நாம்பாரா மாவட்டத்தில், பதசர்குச்சி என்ற கிராமத்தில் ஷாஹநூர் ஆலத்தின் [Sahanur Alom] கையாளியான நூர்ஸலால் ஹக் [Nurjamal Haque வயது 25] என்பவன் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் குறிப்பிட்ட இடத்தில், மறைத்து வைக்கப்பட்ட தோண்டிப் பார்த்ததில் 10 நாட்டு கையெறி-வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன[2]. அக்குண்டுகள் பஸ்கா மாவட்டத்தில், பன்பரா கிராமத்தில் உள்ள ஒரு வாழைத்தோப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன[3]. வெடிகுண்டுகள் தவிர, கையெறி குண்டுகளும் தயாரிக்கப்படுகின்றன என்று தெளிவாகிறது. சஹநூர் ஆலத்தின் வீட்டிற்கருகில் சுமார் 500 மீ தொலைவில் ரூபோஹி நதிக்கரையில் பாலிதீன் உறைகளில் சுற்றி அவை புதைக்கப்பட்டிருந்தன[4].  அதாவது, சோதனைக்கு வருகிறார்கள் என்பதும், அவர்களுக்கு முன்னமே தெரிந்திருக்கிறது என்றாகிறது. 90க்கும் மேற்பட்ட குண்டுகள் மறைத்து வைக்கப் பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது[5]. இருப்பினும் கண்டெடுக்கப்பட்ட குண்டுகள் சோதனைக்குப் பின்னர் அழிக்கப்பட்டன.

jmb - Bangala terror

jmb – Bangala terror

மதரஸாவின் முதல்வரே குண்டுகள் விசயத்தில் கைது: ஜிஹாதி நோட்டிசுகள், கையேடுகள், சிறுபுத்தங்களும் குழிகளில் கண்டெடுக்கப்பட்டன. முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாதி இயக்கத்திற்கு சேர்ப்பது, அவர்களை இத்தகைய பிரச்சார இலக்கியங்களினால் வெறிகொள்ள செய்வது, தீவிரவாதிகளாக மாற்றுவது போன்ற வேலைகளில் தான் மதரஸாக்கள் ஈடுப்பட்டுவருகின்றன என்பது தெளிவாகிறது. நூர்ஸலால் ஹக் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பஸ்கா மாவட்டத்தில், சல்பாரி கிராமத்தில் 12-12-2014 வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டான். இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப் பட்டனர்[6]. இன்னொரு கூட்டாளியான நஜ்முல் இஸ்லாம் [ Nazmul Islam] என்பவன் ஞாயிற்றுக்கிழமை 14-12-2014 அன்று பார்பேடாவில் கைது செய்யப்பட்டான்[7]. இவன் கோராகுரி அஞ்சாலிக் மதரஸாவின் பிரின்சிபால் ஆவான்[8]. அதாவது, மதரஸாக்கள் எப்படி ஜிஹாதி-தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

huji Bangaladesh

huji Bangaladesh

அனைத்து அசாம் மாணவர்கள் குழுமத்தின் அறிக்கையில் வெளியாகும் தகவல்கள்: அடுத்த நாள் (22-12-2014), அனைத்து அசாம் மாணவர்கள் குழுமம் [The All Assam Students’ Union (AASU)] அல்-குவைதா, ஜமாத்-உல்-முஜாஹித்தீன் போன்ற தீவிரவாத அமைப்புகளை வேரறுக்க வேண்டுமானால், சட்டத்திற்குப் புறம்பாக, வங்காளதேசத்திலிருந்து ஊரடுருவியுள்ள முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கையை மறுபடியும் வைத்தது[9]. அரசே பார்பேடா, நல்பாரி மற்றும் பஸ்கா போன்ற மாவட்டங்களில் தீவிரவாதிகள் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒப்பொஉக் கொண்டுள்ளதால், உடனடியாக, அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டது[10]. அசாம் உடன்படிக்கையை அரசு செயல்படுத்தத் தயங்கியதால், பாகிஸ்தானிலிருந்து வரும் ஐ.எஸ்.ஐ ஆட்களும் அந்த போர்வையில், வங்காளாதேசத்தின் வழியாக, எல்லைகளைக் கடந்து அசாமில் வந்து நுழைந்துள்ளார்கள்[11]. மேலும் உச்சநீதி மன்றம் சட்டவிரோதமாக உள்நுழைந்த-இடம் பெயர்ந்தவர்களை அடையாளம் காணும் சட்டத்தை [Illegal Migrants (Determination by Tribunals) Act] திரும்பப்பெற்றதால், அசாம் வெளியிலிருந்து தாக்குதல்களையும், உள்ளே கலவரத்தொந்தரவுகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று எடுத்துக் காட்டியுள்ளதையும், அனைத்து அசாம் மாணவர்கள் குழுமம் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியது[12].

AASU demand on illegal immigration, infiltration etc

AASU demand on illegal immigration, infiltration etc

மதரஸாக்களைக் குறைகூறக்கூடாது என்றால், அவை ஏன் குண்டு தொழிற்சாலையாக, கிடங்குகளாக செயல்படவேண்டும்?: மதரஸாக்களை ஒட்டு மொத்தமாகக் குறைகூறக்கூடாது என்று எதிர்க்கும் முஸ்லிம்கள், மதரஸாக்கள் இவ்வாறு தீவிரவாதத்திற்கு உபயோகப்படுத்தப் படுவதை ஏன் எதிர்ப்பதில்லை, போலீஸாரிடம் புகார் கொடுப்பதில்லை அல்லது முளையிலேயே கிள்ளி எரிவதில்லை என்ற வினாக்களிலிருந்தே, அவர்களது, நேரிடையான மற்றும் மறைமுக ஆதரவு வெளிப்படுகிறது. முன்பு பர்த்வானிலேயே பெரிய கூட்டம் போட்டு, அதில் சில இந்துக்களையும் ஆதரவாகப் பேசவைத்ததை நினைவு கூறவு, இப்பொழுது, அவர்கள் எல்லோருமே அமைதியாகி விடுவர். இதனை எதிர்த்துக் கூட்டம் போடமாட்டார்கள், கண்டன-அறிக்கைகளையும் வெளியிட மாட்டார்கள். அதுதான், அவர்களது தங்களது செக்யூலரிஸத்தை வெளிப்படுத்தும் விதம் போலும். உண்மையில், இத்தகைய செக்யூலரிஸாத்தால் தான் ஜிஹாதித்துவ-தீவிரவாதம், ஊக்குவிக்கப்படுகிறது, ஆதரிக்கப்படுகிறது மற்றும் வளர்க்கப்படுகிறது,

Photo taken on the occasion of signing of memorandum of settlement on the Assam problem between the Government representatives and representatives of the All Assam Students Union and the all Assam Gana Sangram Parishad in New Delhi on August 15, 1985.

Photo taken on the occasion of signing of memorandum of settlement on the Assam problem between the Government representatives and representatives of the All Assam Students Union and the all Assam Gana Sangram Parishad in New Delhi on August 15, 1985.

மதரஸாக்கள் தீவிரவாதிகளின் பயிற்சிக்கூடமாக செயல்பட்டது: அசாமில் உள்ள பல கிராமங்களில் தீவிரவாத செயல்களுக்கு, முஸ்லிம்களை தயாராக்கி வைத்திருக்கிறார்கள். லார்குச்சியில் உள்ள மதரஸா அதற்காகப் பயன்படுத்தப் பட்டது. பல இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு ஜிஹாதி பயிற்சி அளிக்கப்பட்டது[13]. கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது, இவர்கள் மிகவும் திட்டமிட்டு, இக்காரியங்களை செய்ய ஆரம்பித்துள்ளனர் என்று தெரிகிறது. ஒருவேளை, அக்டோபர்.2, 2014 அன்று குண்டுவெடித்து, அவர்கள் மாட்டிக் கொண்டிருக்காவிட்டால், இவர்கள் நாடு முழுவதும், பல குண்டுவெடிப்புகளை நடத்தியிருப்பார்கள் என்று தெரிகிறது. மேலும், அவர்கள், ஜிஹாதி எண்ணங்களில் ஊறியுள்ளது, அவர்களது பேச்சுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஏதோ தீவிரவாத செயல்களை செய்கிறோமோ என்ற எண்ணமே இல்லாமல், புனித காரியத்தைச் செய்கிறோம் என்ற நிலையில் உள்ளார்கள். அப்பாவி மக்களைக் கொல்வதும், அவர்களுக்கு புனித காரியமாகவே தோன்றுகிறது.

he girls Madrasa at Simulia village under Mangalkot PS of Burdwan, alleged terror training centre

he girls Madrasa at Simulia village under Mangalkot PS of Burdwan, alleged terror training centre

வழக்கம் போல திரிணமூல்-பிஜேபி பரஸ்பர குற்றச்சாட்டுகள்: 21-12-2014 அன்று ஷகீல் அஹமதுவின் உடலும் புதைக்கப் பட்டது[14]. முன்பு உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் கலாட்டா செய்து வந்தனர். தீர்ணமூல் காங்கிரஸ் தொடர்ந்து தனக்கும், இந்த குண்டுவெடிப்புகள், தொழிற்சாலை, ஜே.எம்.பி தீவிரவாத ஊக்குவிப்பு முதலியவற்றில் தொடர்பில்லை என்று வாதிட்டு வந்தாலும், அவற்றிற்கிடையே உள்ள சம்பந்தங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்பொழுது சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி பணமும், இதற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[15]. வழக்கம் போல மம்தா இது பிஜேபியின் சதி, ராவின் மூலம் தான் இவையெல்லாம் செய்யப்பட்டது என்று கூறிவருவது, மிக்க வியப்பாகவும், பொறுப்பற்ரதாகவும் இருக்கிறது. மதகலவரங்களை உருவாக்கவே இவையெல்லாம் செய்யப் பட்டு வருகின்றன என்றும் குற்றஞ்சாட்டினார்[16]. அதற்கு மேலும் டெரிக் ஓபராய் என்ற அக்கட்சி ஊடக தொடர்பாளர், தமதிச்சைக்கேற்றபடி பேசி வருவதும் வியப்பாக உள்ளது. அக்கட்சியின் எம்.எல்.ஏ, அமைச்சர் என்று பலருடைய தொடர்புகள் இதில் மெய்ப்பிக்கப்பட்டும், இருவரும் அப்பட்டமாக இல்லவே இல்லை என்று சாதித்து வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

25-12-2014

[1] http://www.assamtribune.com/dec2114/at044.txt

[2] The Special Operation Unit of the state police recovered the bombs that were hidden in Nampara village in Patacharkuchi following the alleged confession of Nurzalal Haque who is an alleged associate of Shahnoor Alam, the prime accused in the October 2 Burdwan blast. Alam, who was arrested nearly two weeks ago by the National Investigation Agency from the state, was the face of jihadi terror in Assam, according to the police.

http://www.ndtv.com/article/india/10-crude-bombs-found-in-assam-after-alleged-confession-of-burdwan-blast-accused-637943

[3] In a major breakthrough, the Assam Police today managed to recover 10 bombs of the Jamaat-ul-Mujaheedin, Bangladesh (JMB). Police sources said that the crude bombs were kept concealed inside a banana plantation in Panpara village in Baksa district. The recoveries were made following the confessions of JMB militant Nurjamal, who was arrested on Friday. Sources said that Nurjamal was a trained cadre of the JMB and he was a close associate of Sahanur Alom, one of the key men of the Bangladesh based militant outfit in the State. http://www.assamtribune.com/dec2214/at051.txt

[4] Based on Sahanur’s confession, the National Investigation Agency (NIA) recovered the grenades near Rupohi river, about 500 metre from his house in Salbari sub-division, NIA sources said.

http://indianexpress.com/article/india/india-others/burdwan-blast-case-nia-recovers-10-hand-grenades/

[5] http://www.deccanchronicle.com/141221/nation-current-affairs/article/burdwan-blast-case-nia-recovers-10-hand-grenades

[6] http://www.telegraphindia.com/1141222/jsp/frontpage/story_4732.jsp#.VJjNKULY8

[7] NDTV, 10 Crude Bombs Found in Assam After Alleged Confession of Burdwan Blast Accused All India | Edited by Mala Das (with inputs from Agencies) | Updated: December 22, 2014 11:32 IST

[8] Police today arrested Nazmul Islam, principal of Koraguri anchalik madarsa in Barpeta district, based on the confession of Haque.

http://www.telegraphindia.com/1141222/jsp/frontpage/story_4732.jsp#.VJjNKULY8

[9] The All Assam Students’ Union (AASU) today reiterated its demand for uprooting the fundamentalist organisations like Al-Qaeda and Jamaat-ul-Mujahideen Bangladesh and also for deporting the illegal Bangla migrants from Assam. http://www.assamtribune.com/dec2314/at055.txt

[10] http://www.assamtribune.com/dec2314/at055.txt

[11] Illegal Bangla migrants, members of the fundamentalist organisations and even members of the intelligence organisation of Pakistan are entering Assam taking advantage of its porous border with Bangladesh. This is because of the failure of the Government to implement the Assam Accord, it said. http://www.assamtribune.com/dec2314/at055.txt

[12] It reminded the Central as well as the State Government of the observation made by the Supreme Court of India while repealing the infamous Illegal Migrants (Determination by Tribunals) Act. The apex court had, interalia, said in its verdict that due to illegal migration, Assam is facing external aggression as well as internal disturbances, said the student body. http://www.assamtribune.com/dec2314/at055.txt

[13] http://indianexpress.com/article/india/india-others/burdwan-blast-probe-key-suspect-shahnoor-alam-arrested/

[14] http://www.oneindia.com/india/body-of-another-burdwan-blast-accused-buried-1599494.html

[15] http://articles.economictimes.indiatimes.com/2014-12-21/news/57280801_1_saradha-scam-trinamool-rajya-sabha-trinamool-congress

[16] http://www.ndtv.com/article/india/centre-stage-managed-burdwan-blast-to-trigger-riots-in-bengal-claims-mamata-banerjee-624484

ஜனநாயகத்தில் பிஜேபி வேட்பாளரை எதிர்க்கும் தாக்கும் கோழைகளாக சமூக –ஜனநாயக கட்சியின் முஸ்லிம்கள் மாறியிருப்பது!

ஏப்ரல் 15, 2014

ஜனநாயகத்தில் பிஜேபி வேட்பாளரை எதிர்க்கும் தாக்கும் கோழைகளாக சமூக –ஜனநாயக கட்சியின் முஸ்லிம்கள் மாறியிருப்பது!

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்1

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்1

எஸ்.டி.பி.,யின் வன்முறை,  அராஜகம் மற்றும் அமைதி குலைக்கும் போக்கு: தஞ்சாவூர் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ / SDPI (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா)  அமைப்பினரிடம் போலீஸார் திங்கள் கிழமை விசாரணை மேற்கொண்டனர்[1].  SDPI  சமீபத்தில் வன்முறையில் ஈட்டுபட்டு வருவது அதிகமாக உள்ளது. இச்சம்பவத்தில், 4 கார்கள்மற்றும் 6-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அடித்து நொறுக்கப்பட்டு,  வலைகளுக்கும் தீவைக்கப் பட்டது[2]. சமூக –ஜனநாயக கட்சி என்று பெயர் வைத்திருக்கும் இவர்களிடம் அத்தகைய குணங்களே காணப்படவில்லையே?

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்2

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்2

பள்ளிவாசல்அருகில்தெருவுக்குள்பிரசாரம்செய்யசெல்லக்கூடாதுஎஸ்.டி.பி.:. தஞ்சைமக்களவைத்தொகுதிபாஜகவேட்பாளர்கருப்புஎம்.முருகானந்தம்சேதுபாவாசத்திரம்ஒன்றியப்பகுதிகளில்திங்கள்கிழமை (14-04-2014) பிரசாரம்மேற்கொண்டார். காலை 11 மணியளவில்மல்லிப்பட்டிணம்கடைவீதியிலிருந்துதெருக்களுக்குசெல்லமுயன்றபோதுபள்ளிவாசல்அருகில்தெருவுக்குள்பிரசாரம்செய்யசெல்லக்கூடாதுஎனஎஸ்.டி.பி.ஐ. அமைப்பைச்சேர்ந்தசுமார் 100-க்கும்மேற்பட்டோர்வேட்பாளரைதடுத்துநிறுத்தினர். இதையடுத்து, அங்குபாதுகாப்புக்குநிறுத்தப்பட்டிருந்தபோலீஸாரும், மல்லிப்பட்டிணம்ஜமாத்தார்களும்பேச்சுவார்த்தையில்ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குஉடன்படாதஎஸ்.டி.பி.ஐ. அமைப்பினர்திடீரெனபிரசாரத்துக்குவந்தவர்கள்மீதுகற்கள், பாட்டில்களைவீசியெறியத்தொடங்கினர். இதில், வேட்பாளரின்பாதுகாப்புக்காகஜீப்பில்நின்றசுமார் 20-க்கும்மேற்பட்டோரும், காவல்துறையினரும்காயமடைந்தனர்[3]. இதனால், இருதரப்பினருக்குஇடையேமோதல்ஏற்பட்டது. இதில், சாலைஓரங்களில்நிறுத்திவைக்கப்பட்டிருந்தசுமார் 4 கார்கள்அடித்துநொறுக்கப்பட்டன. கடற்கரையில்நிறுத்திவைக்கப்பட்டிருந்த 6-க்கும்மேற்பட்டவிசைப்படகுகள்அடித்துநொறுக்கப்பட்டுவலைகளுக்கும்தீவைக்கப்பட்டது.

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்3

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்3

மசூதியில்ஒளிந்திருப்பது, மற்றகாரியங்களுக்குப்பயன்படுத்துவதுமுதலியன: தகவலறிந்ததஞ்சைமாவட்டஎஸ்.பி. தர்மராஜன்உள்படபோலீஸார்மற்றும்வருவாய்த்துறையினர்சம்பவஇடத்துக்குச்சென்றுகலவரம்ஏற்படாமல்தடுத்தனர். கற்களைவீசிதாக்கிவிட்டுபள்ளிவாசலில்மறைந்திருந்த 30-க்கும்மேற்பட்டஎஸ்.டி.பி.ஐ. அமைப்பினரைபோலீஸார்பிடித்துசென்றனர்.மசூதியில்SDPIஆட்கள்மறைந்திருந்தனர்என்பதுமுஸ்லிம்களின்பழையவித்தையைக்காட்டுகிறது, ஆனால், அவர்களதுபுத்திமாறவில்லைஎன்றுதெரிகிறது. அதாவதுமசூதிகள்சமூகவிரோதிசெயல்களுக்குமற்றும்தீவிரவாதகாரியங்களுக்குஉபயோகப்படுத்துவதைமெய்ப்பிக்கிறது. பொதுவாகமசூதியில்மற்றவர்கள்நுழையக்கூடாதுஎன்றுவாதிடுவர், தடுப்பர், ஆனால், இவ்வாறுதுஷ்பிரயோகம்செய்வதைமுஸ்லிம்பெரியவர்கள்ஏன்தடுப்பதில்லைஎன்றுஅவர்கள்தாம்விளக்கவேண்டும்.

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்4

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்4

வன்முறையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்பிஜேபி:. தஞ்சை பாஜ வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜ மாநில செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை[4],  இன்று  14.04.2014 காலை 11.00  மணியளவில், தஞ்சாவூர் பாஜவேட்பாளர் கருப்பு முருகானந்தம் பிரசாரத்தின் போது தாக்கப்பட்டுள்ளார்.  தேர்தல் பிரச்சாரத்தை தஞ்சை மாவட்டம், மல்லிபட்டிணம் கிராமத்தில், வன்முறை எண்ணம் கொண்ட விஷமசக்திகள் தாக்குதல் நடத்தி,  தடுக்க முற்பட்டுள்ளனர். இத்தாக்குதல் பிரசாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப் பட்டதாகும். தாக்குதலை  வன்மையாக கண்டிப்பதுடன், வன்முறையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க.  வேட்பாளரின் பிரச்சார வாகனத்தையும், உடன் சென்ற பா.ஜ.க செயல்வீரர்கள் மீதும் கண்மூடிதனமான தாக்குதல் நடத்தி 30-க்கும்மேற்பட்டபா.ஜ.கதொண்டர்கள்படுகாயம்அடைந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தாக்குதலில் சேதமடைந்துள்ளன. வேட்பாளரின் வாகன ஓட்டுனரும்,  வேட்பாளரும் இந்ததாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

 

SDPI attack on BJP.2

SDPI attack on BJP.2

மல்லிபட்டிணத்தில்போலீசார்அனுமதிஅளித்திருந்தும், காவல்துறைபாதுகாப்புபோதுமானதாகஇல்லாததால்வன்முறை: தஞ்சைமாவட்டம்மல்லிபட்டிணத்தில்விஷமசக்திகளால்நடத்தபட்டவன்முறைதாக்குதல், பா.ஜ.கவின்தேர்தல்பிரச்சாரத்தைசீர்குலைக்கும்நோக்கத்துடன்நடத்தப்பட்டதாகும். தாக்குகுதலைவன்மையாககண்டிப்பதுடன், வன்முறையாளர்மீதுதகுந்தநடவடிக்கையும்எடுக்கதமிழ்நாடுபா.ஜ.க. கேட்டுக்கொள்கிறது[5].பிரசாரத்துக்குமல்லிபட்டிணத்தில்போலீசார்அனுமதிஅளித்திருந்தும், காவல்துறைபாதுகாப்புபோதுமானதாகஇல்லாததால்இந்தவன்முறைநடத்திடவிஷமசக்திகளுக்குவாய்ப்புஅளித்துள்ளதுஎன்றுகருதுகிறோம். இதற்குதமிழகஅரசேபொறுப்புஏற்கவேண்டும்என்றுதமிழகபாஜதலைவர்பொன்.ராதாகிருஷ்ணன்வெளியிட்டஅறிக்கையில்தெரிவித்திருக்கிறார்[6].

 

SDPI attack on BJP.3

SDPI attack on BJP.3

வேட்பாளர்மீதுகற்களைவீசிதாக்குவதும்ஜனநாயகத்திற்குஎதிரானதாகும்பாமக:இதுகுறித்து  பாமகஇளைஞரணிதலைவர்அன்புமணிவெளியிட்டஅறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூர்மாவட்டம்பட்டுக்கோட்டைஅருகேவாக்குசேகரிக்கசென்றபாஜவேட்பாளர்கருப்புமுருகானந்தம்மற்றும்கூட்டணிக்கட்சியினர்மீதுகல்வீசிதாக்குதல்நடத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்மீதுகற்களைவீசிதாக்குவதும்ஜனநாயகத்திற்குஎதிரானதாகும். பாஜவேட்பாளர்மீதுநடத்தப்பட்டதாக்குதலுக்குகண்டனங்களைதெரிவித்துகொள்கிறேன். தமிழ்நாட்டில்மக்களவைத்தேர்தல்அறிவிக்கப்பட்டநாளிலிருந்துதேசியஜனநாயகக்கூட்டணிவேட்பாளர்கள்மீதுதாக்குதல்நடத்தப்படுவதுஅதிகரித்திருக்கிறது. தர்மபுரிதொகுதியில்பரப்புரைமேற்கொண்டஎன்மீதுபெத்தூர்காலனிஎன்றஇடத்தில்கல்வீச்சுநடத்தப்பட்டது. இப்போதுதஞ்சாவூர்தொகுதியில்பாரதியஜனதாவேட்பாளர்கருப்புமுருகானந்தம்மீதுதாக்குதல்நடத்தப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்திற்குஎதிரானஇதுபோன்றதாக்குதல்களைதேர்தல்ஆணையமும், காவல்துறையும்தடுத்துநிறுத்துவதுடன், இதற்குகாரணமானவர்கள்மீதுசட்டப்படிநடவடிக்கைஎடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும்காலங்களில்இத்தகையதாக்குதல்களைதடுக்கும்நோக்குடன்தேசியஜனநாயகக்கூட்டணியின்வேட்பாளர்கள்அனைவருக்கும்போதியபாதுகாப்புஅளிக்கவேண்டும்.இவ்வாறுஅறிக்கையில்கூறப்பட்டுள்ளது[7].

 

SDPI attack on BJP

SDPI attack on BJP

பிஜேபி வேட்பாளர்களின் மீது தாக்குதல் நடத்துவது ஒரு திட்டமாக தெரிகிறது: பிஜேபியின் பிரபலம், பலம், ஆதிக்கம் இந்தியா முழுவதிலும், குறிப்பாக மேற்கு வங்காளம், கேரளா முதலிய கம்யூனிஸம் கோலோச்சி வந்த மாநிலங்களில் அதிகமாவது, கம்யூனிஸ்டுகளுக்கும், அப்போர்வையில் இருக்கும் முஸ்லிம்களுக்கும் பிடிக்கவில்லை. இதனால், கடந்த பத்து நாட்களில் அத்தகைய தாக்குதல்கள் நடந்துள்ளன.

 

  1. TMC workers attack Babul Supriyo rally in Asansol ( 11-04-2014)[8]: Trinamool Congress workers allegedly attacked an election meeting of BJP candidate and popular Bollywood playback singer Babul Supriyo on Saturday afternoon in Asansol. Though the singer was spared, he said one of the BJP workers was injured and hospitalised.Supriyo has sung some of the popular numbers for Kaho Naa Pyar Hai, Fanaa, Hum Tum and Company.
  2. BJP candidate Sonaram’s motorcade attacked in Barmer (14-04-2014)[9]: The motorcade of Barmer BJP candidate Sonaram was attacked when he was campaigning in Shiv area in the district, with party members alleging that supporters of expelled leader Jaswant Singh were behind it.
  3. BJP candidate Satyapal Singh attacked in UP (10-04-2014)[10]: BJP candidate and former Mumbai police chief Satyapal Singh’s motorcade was attacked Thursday in Uttar Pradesh when he was proceeding to check allegations of bogus voting. The attack, by unidentified men, took place when Satyapal Singh was going to Malakpur village in Baghpat constituency. Some villagers reportedly manhandled him, an official said here.
  4. TMC goons attack BJP (07-04-2014)[11]: The incident took place at around 8 pm on Monday in Shitalkuchi phoolbari area. Hemchandra Burman was returning home after completing a meeting with other BJP activists. TMC goons attacked at that time. 4 BJP leaders are seriously injured and has been admitted to Mathabhanga hospital.

 

SDPI attack on BJP.4

SDPI attack on BJP.4

ஊடகங்களின் பாரபட்சம்: பிஜேபி மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர். அத்வானி வரும்போதெல்லாம் குண்டுகள் வைக்கப் படுகின்றன. ஆனால், போலீஸார் அவற்றை மெத்தனமாகவோ, சாதார் அணமான விசயமாகவோ எடுத்துக் கொள்வது வியப்பாக உள்ளது. இவற்றின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் இருப்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்,  இருப்பினும் அத்தகைய வன்முறையாளர்களிடம் தாஜா செய்து கொண்டு, மென்மையாக நடந்து கொண்டிருப்பதில் என்ன முடிவு ஏற்படப் போகின்றது என்றும் தெரியவில்லை. இவ்வாறு தாக்கப்படுவதில் பிஜேபி வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அரவிந்த் கேசரிவால் கன்னத்தில் யோரோ அறைந்தார் என்றால் அதனை 24×7 மணி ந்நேரமும் 100 முறை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிஜேபி வேட்பாளர்கள் இவ்வாறு தாக்கப்படுவது பற்றி செய்திகள் குறைவாகவே காண்பிக்கப் படுகிறது. இப்பொழுது, தஞ்சாவூரில் தாக்கப் பட்டது, காண்பிக்கப் படவேயில்லை. ஆகவே, ஊடக பாரபட்சம் முதலியவையும் இதில் வெளிப்படுகின்றன.

 

© வேதபிரகாஷ்

15-04-2014

 

[1]http://www.dinamani.com/tamilnadu/2014/04/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/article2169115.ece

[2]தினமணி, பாஜகவேட்பாளர்மீதுதாக்குதல்: கார்கள், படகுகள்சேதம், By dn, பேராவூரணி, First Published : 15 April 2014 03:19 AM IST

[3] http://news.oneindia.in/india/bjp-candidate-30-others-injured-tamil-nadu-attack-lse-1430315.html

[4]தினகரன், பாஜவேட்பாளர்மீதுதாக்குதல்தமிழகஅரசுபொறுப்பேற்கவேண்டும், 15-04-2014.

[5]திஇந்து, தஞ்சைபாஜகவேட்பாளர்மீதுதாக்குதல்: பொன்.ராதாகிருஷ்ணன்கண்டனம், Published: April 14, 2014 20:42 IST; Updated: April 14, 2014 20:42 IST

[6] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article5911833.ece

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=87624

[8] http://www.hindustantimes.com/elections2014/election-beat/bjp-candidate-s-meeting-attacked-in-west-bengal/article1-1207375.aspx

[9] http://www.business-standard.com/article/elections-2014/bjp-candidate-sonaram-s-motorcade-attacked-in-barmer-114041100368_1.html

[10] http://www.indiatvnews.com/politics/national/bjp-candidate-satyapal-singh-attacked-in-up-16491.html

[11] http://www.bjpbengal.org/news/tmc-goons-attacked-bjp-candidate-cooch-behar

 

பர்வீன்-பைசூல் விவகாரம் – போலீசாருக்கு குழப்பமாம், ஊடகக்காரகள் தெளிவாக இருக்கிறார்களாம்!

ஜனவரி 8, 2014

பர்வீன்-பைசூல் விவகாரம் – போலீசாருக்கு குழப்பமாம், ஊடகக்காரகள் தெளிவாக இருக்கிறார்களாம்!

பைசூலின்  மீது  மறுபடியும்  புகார்: இந்த நிலையில், 30-12-2013 அன்று பகலில் நடிகை ராதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புதிய புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில், பைசூல் மீது கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெறவில்லை என்றும், தன்னை கடத்திச்சென்று, மகாபலிபுரத்தில் ஒரு லாட்ஜில் சிறை வைத்து அடித்து துன்புறுத்தி, மிரட்டியதால் புகாரை வாபஸ் பெற்றேன் என்றும், பைசூல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்[1].  புகாரில் ராதா கூறியதாவது: பைசூல் என்னுடன் 6 வருடம் குடும்பம் நடத்தினார். திடீரென என்னை வீட்டைவிட்டு துரத்தி விட்டு, என் பணத்தையும் பறித்துக் கொண்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தேன். கடந்த 18ம் தேதி பைசூலின் உறவினர்  மாலிக், மற்றும் அவருடைய சகோதரர் ரஹ்மான் ஆகியோர் என் வீட்டுக்கு ஆசிட்டுடன் வந்தனர்[2].

புகார்  வாபஸ்  பெற  வேண்டும்,    இல்லையென்றால்  ஆசிட்  வீசி  கொன்று   விடுவோம்  என்று   மிரட்டல்: பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும், இல்லையென்றால் உன் முகத்தில் ஆசிட் வீசி கொன்று விடுவோம் என, மிரட்டினர். இதை தொடர்ந்து, உயிருக்கு பயந்து நானும் புகாரை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தேன். பின்னர், கத்தி முனையில் என்னை காவல் நிலையத்துக்குஅழைத்துச் சென்று வழக்கை வாபஸ் பெற வைத்தனர். மேலும், என்னை காரில் ஏற்றிக் கொண்டு, பைசூல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரும் என்னை தொடர்ந்து மிரட்டியதுடன், காவல்துறையில் எனக்கு செல்வாக்கு உள்ளது, உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறினார்.

போலீஸ் பாதுகாப்பு வேண்டும்: என்னிடம் ஆள் பலமும், பண பலமும் உள்ளது. உடனடியாக ஊரை காலிசெய்துவிடு என தொடர்ந்து மிரட்டினார். உயிருக்கு பயந்து அவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நானும், சரி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். தற்போது என் உயிருக்கும், உடமைக்கும், ஆபத்து உள்ளது எனவே, போலீசார் எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து, பைசூலை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்[3].

போலீசாரைகுழப்பத்தில்ஆழ்த்திஇருக்கிறது: அவர் திடீரென்று இதுபோல் அதிரடி பல்டி அடித்து மீண்டும் ஒரு புகார் கொடுத்துள்ளது, போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பாவம், தமிழ் ஊடகப் புலிகளுக்கு மட்டும் குழப்பமே இல்லாமல் தெளிவாக இருக்கீறார்கள் போலும். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலும், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் நின்று கொண்டே இருந்தார். ஒருவேளை உட்காருவதற்கறொன்றும் இல்லை போலிருக்கிறது. இந்த விஷயத்தில் அடுத்தகட்டமாக உயர் போலீஸ் அதிகாரிகளை கலந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வடபழனி போலீசார் கூறினார்கள்[4]. ஆமாம், இவ்விசயங்களுக்கு எல்லாம் இப்படி போலீஸ் சேவை சீரழிக்க வேண்டிய நிலையில் இருக்க வேண்டும் போலிருக்கிறது.

வேதபிரகாஷ்

© 08-01-2014


[3] தினகரன், பைசூல்மீதுநடிகைராதாமீண்டும்புகார் – முகத்தில்ஆசிட்வீசுவதாககூறிமிரட்டிவழக்கைவாபஸ்பெறவைத்தனர், 31-12-2013.

[4] மாலைமலர், தொழில்அதிபர்மீதானபுகாரைவாபஸ்வாங்கவில்லை: நடிகைராதாமீண்டும்புகார், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 9:19 AM IST

முஸ்லிம் முஸ்லிம் மீது பழி போடுவது தப்பித்துக் கொள்ளவா, நாட்டை சீரழிக்கவா?

ஏப்ரல் 29, 2013

முஸ்லிம் முஸ்லிம் மீது பழி போடுவது தப்பித்துக் கொள்ளவா, நாட்டை சீரழிக்கவா?

குர்ஷித் ஆலம் கான் அத்தகை யசதிதிட்டத்தைத் தீட்டியிருக்க வேண்டும் (28-04-2013): ஆஸம் கான் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் செலவதற்காக பாஸ்டன் விமானநிலையத்திற்குச் சென்ற போது, வழக்காமாக நடத்தப் படும் சோதனைகள் நடைப் பெற்றன. சமீபத்தில் பாஸ்டன் வெடிகுண்டில் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், சோதனைகள் அதிகமாகவே இருந்தன. இதனால், ஆஸம் கான் சிறிது நேரம் காக்க வைக்கப் பட்டார்[1]. ஆனால், அது தம்மை முஸ்லிம் என்பதனால் அவ்வாறு நடஎது கொண்டார்கள் என்று குறைகூறினார். இப்பொழுது, சல்மான் குர்ஷித் தான் இதற்குக் காரணம் என்று பழிபோடுகிறார்[2]. குர்ஷித் ஆலம் கான் அத்தகைய சதி திட்டத்தைத் தீட்டியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்[3].

முஸ்லிம்,  முஸ்லிமை எப்படி பழிவாங்குவார்?: உம்மா, ஷரீயத் மற்றும் ஹதீஸ் முதலிய சித்தாந்தங்களின் படி, ஒரு முஸ்லிம், முஸ்லீமிற்கு எதிராக செயல்படலாகாது. அப்படி செய்வதானால், ஒரு முஸ்லிம், அடுத்த முஸ்லீமை காபிர் என்று அறிவித்து ஜிஹாத் தொடக வேண்டும். அப்படியென்றால், அரசியல் ரீதியில் இந்த இரு முஸ்லிம் தலைவர்களும் ஜிஹாதை ஆரம்பித்து விட்டார்கள் போலும்.

பாஸ்டன் விமான நிலையத்தில் சோதனை: 24-04-2013 புதன்கிழமை அன்று, அகிலேஷ் யாதவ் சார்பில் 11 பேர் கொண்ட படாளம் பாஸ்டன் விமானநிலையத்தில் வந்திறங்கியது. வழக்காமாக நடத்தப் படும் சோதனைகள் நடைப் பெற்றன. சமீபத்தில் பாஸ்டன் வெடிகுண்டில் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், சோதனைகள் அதிகமாகவே இருந்தன. இதனால், ஆஸம் கான் சிறிது நேரம் காக்க வைக்கப் பட்டார்[4].

முஸ்லிம்கள் கும்பமேளாவிற்கு பொறுப்பு,  ஆனால், இந்துக்கள் செத்தா முஸ்லிம்கள் பொறுப்பல்ல: செக்யூலர் நாடென்பதால், கும்பமேளாவிற்கு பொறுப்பாக ஆஸம்கான் என்ற மதவாத அமைச்சரே நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், நெரிசலில் இறப்புகள் ஏற்பட்டவுடன், முஸ்லிம்கள் “கும்பமேளாவிற்கு பொறுப்பு, ஆனால், இந்துக்கள் செத்தால் நாங்கள் பொறுப்பல்ல”, என்ற ரீதியில் பழியை ரெயில்வே மீது போட்டார் ஆஸம் கான். ஆனால், ரெயில்வே பொறுப்பாளர் தான் பொறுப்பு என்றனர். இதனால் ஆஸம் கான் ராஜினாமா செய்தார்.

கும்பமேளா என்பது சரித்திரரீதியில் சுமார் 3000 வருடங்களாக நடைப் பெற்றுவருகின்றது. அதில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள மக்கள் கோடி கணக்கில் வந்து கலந்து கொள்வார்கள். இப்பொழுது சொல்லப்படும் “கூட்டத்தை நிர்வகிப்பது” (Crowd Management) என்ற தத்துவம் எல்லாம் அப்பொழுது கிடையாது, ஏனெனில், மக்களே ஒழுங்காக, சிரத்தையாக, சீராக மேளாவில் கலந்து கொண்டு தத்தம் இடங்களுக்கு, நாடுகளுக்குத் திரும்பிச் சென்று விடுவர். ஆனால், இப்பொழுது ஹார்வார்ட் பல்கலைக் கழகத்திலிருந்து (Harvard University) ஒரு குழு, இதைப் பற்றி ஆய்வு நடத்த ஜனவரியிலேயே வந்து தங்கியது[5]. கடந்த பிப்ரவரி 2013ல் நடந்து முடுந்த கும்பமேளா வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகும்.

மக்கள் இறந்த பிறகு, பழியை ஊடகங்களின் மீது போட்ட ஆஸம் கான்:  அலகாபாத்தில், கூட்டநெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டவர்கள் பலியான விவகாரத்திற்கு, மீடியாக்களே காரணம் என்று, கும்பமேளா ‌குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியவரும், மாநில அமைச்சருமான முகம்மது ஆசம் கான் கூறியுள்ளார்[6]. உத்தரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஆசம் கான் கூறியதாவது, மகாகும்பமேளா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக சாக்கடையில் விழுந்து 2 பேர் பலியாயினர். மீடி‌யாக்கள் இந்த செய்தியை வெளியிட்டு பெரும்பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், அவ்விடத்திலிருந்து விரைந்து வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் ரயில்வே ஸ்டேசன் பகுதிக்கு விரைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாயினர். மாநில நிர்வாகம், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. ஆனால், அளவிற்கதிகமாக ஆட்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் மட்டுமே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.முஸ்லிம் முஸ்லிம் மீது பழி போடுவது தப்பித்துக் கொள்ளவா, நாட்டை சீரழிக்கவா?

முஸ்லிமையே விடாவிட்டால், நானும் போக மாட்டேன் – முலாயத்தின் மகன் முழக்கம்: முன்னர் ராமஜென்மபூமி விஷயத்தில் முலாயம் அடாவடி காரியங்களை மேற்கொண்டதால், சாதுக்கள் பலர் கொல்லப்பட நேர்ந்தது; அவர்களை அயோத்தியாவிற்கு வரமுடியாத அளவிற்கு தடுத்தார்; ரெயில்கள் திருப்பிவிடப்பட்டன; ரத்து செய்யப்பட்டன; நடந்து வந்தவர்களையும் அடித்து, துரத்தினர்; இதனால் “முல்லாயம் சிங் யாதவ்” என்றெ அழைக்கபடலானார். அவரது மகன், சும்மா இருப்பாரா? முஸ்லிமையே விடாவிட்டால், நானும் போக மாட்டேன்[7] – என்று முலாயத்தின் மகன் முழக்கமிட்டு, தனது “முல்லா”த்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டார்[8]. இவருடன் ஆஸம் கான், டயானா எக், கெர்க் கிரீனௌ, ராஹுல் மல்ஹோத்ரா முதலியோர் பேசுவதாக இருந்தது[9]. ஆனால், அவர் வரமாட்டார் என்று ஹார்வார்ட் வெப்சை அறிவித்தது[10].

வேதபிரகாஷ்

29-04-2013


[2] A routine action by the US administration is turning into the latest threat for the UPA government. The Samajwadi Party, on whose outside support the UPA government depends, has raked up the brief questioning of minister Azam Khan at Boston’s Logan airport by an official of the US mainland security office. It has tried to blame the UPA government for the incident to possibly whip up Muslim sentiments in its favour and against Congress.

http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/azam-khan-says-salman-khurshid-to-blame-for-his-detention-in-boston/articleshow/19773634.cms

[3] The Samajwadi Party (SP) has blamed external affairs minister Salman Khurshid for plotting the “humiliation” of its senior leader Azam Khan at the Boston airport last Wednesday (24-04-2013).

http://timesofindia.indiatimes.com/india/Khurshid-plotted-my-detention-at-US-airport-Azam/articleshow/19774620.cms

[7] Yadav was listed as a panel speaker in the spring symposium of Harvard’s South Asia Initiative on the subject “Harvard Without Borders: Mapping the Kumbh Mela.” But evidently, Harvard’s outlook on borders was not shared by the department of homeland security when it held up minister Khan at the airport. Yadav later opted out of the presentation at the last minute due to what organizers said was “unforeseen circumstances.”

[9] Also speaking with Yadav on the “Harvard without Borders: Mapping the Kumbh Mela” panel are

  • Diana Eck, a professor of law and psychiatry and a member of the divinity faculty at Harvard;
  • Azam Khan, Urban Development Minister of Uttar Pradesh;
  • Gregg Greenough, professor from the Harvard School of Public Health; and
  • Rahul Mehrotra, a professor of urban design and planning and chair of Harvard’s department of urban planning and design.

The moderator of the panel is Tarun Khanna, director of the South Asia Institute a professor from Harvard Business School.

http://www.indusbusinessjournal.com/ME2/dirmod.asp?sid=&nm=&type=Publishing&mod=Publications%3A%3AArticle&mid=8F3A7027421841978F18BE895F87F791&tier=4&id=C185E65B79234812A70DD51227A3F1C5

[10] Harvard University website said: “Due to unforeseen circumstances, today’s Harvard without Borders: Mapping the Kumbh Mela panel speaker will be UP chief secretary Javed Usmani in place of UP CM Akhilesh Yadav.”

http://www.telegraphindia.com/1130427/jsp/nation/story_16833610.jsp#.UX3dtqJTCz4

மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை

பிப்ரவரி 13, 2013

மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை

ஒமர் அப்துல்லாவின் அரசியல்: மெஹபூபா முப்தி மற்றும் ஒமர் அப்துல்லா எப்பொழுதும் அரசியல் செய்து, இந்தியாவை ஏமாற்றி பதவிக்கு வந்து, வாழ்க்கையை அனுபவித்து வரும் மறைமுக ஜிஹாதிகள். பயங்கரவாதி முகமது அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்[1]. உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், மத்திய அரசு ஆகியவற்றின் உத்தரவின்படி நிறைவேற்றுப்பட்டுள்ள தண்டனைக்கு மாநில முதல்வர் ஒருவர் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது அரசியல்ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக நாளிதழ்கள் செய்தி வெளியிடுவதிலிருந்து, எப்படி இங்குள்ளவர்களும் மறைமுகமாக ஆதரிக்கின்றனர் என்று தெரிகிறது. அதற்கேற்றாற்போல சென்னையிலேயே, தூக்கிலிட்டதை எதிர்த்து சுவரொட்டிகளும் காணப்படுகின்றன.

Photo0647

(இந்திய) விரோத மனப்பான்மை உருவாகும்: இது தொடர்பாக ஒமர் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பது: “நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது போன்ற நடவடிக்கைகள் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் தங்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவும், (இந்திய) விரோத மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு அளித்துவிடும். அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே அவர்களால் கருதப்படுகிறது. இதனால் பெரும்பான்மையான காஷ்மீர் இளைஞர்கள் தவறான வழியில் சென்று விடவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எப்போதுமே நாம்தான் பாதிக்கப்படும் மக்கள் என்ற எண்ணமும், தங்களுக்கு நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையும் காஷ்மீர் மக்களிடம் உருவாக அனுமதித்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இப்போது சில கருத்துகளைக் கூறுகிறேன்”, என்றார். இவர்கள் ஏதோ இந்தியாவிற்காக வேலை செய்வது போலவும், நல்லவர்கள் போலவும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

Kashmir Door to Teach India a Lesson - Hafiz Saeed

சாவிலும் பிழைப்பைத்தேடும் ஜிஹாதி மனப்பாங்குள்ளவர்கள்: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், “அப்சல் குருவை தூக்கிலிடும் முன்பு அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காதது துரதிருஷ்டவசமானது. இந்த விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டியுள்ளது’ என்றார். தான் மரண தண்டனைக்கு எதிரானவன் என்று உறுதிபடப் பேசிய ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். ஆனால், அரசாங்கத்தின் தரப்பில் உரிய முறைகளைப் பின்பற்றித்தான் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற விஷயங்கள் தமிழக நாளிதழ்கள் வெளியிடவில்லை. ஜிஹாதிகளைப் பொறுத்த வரைக்கும் சாவு “ஷஹீதுத்துவம்” என்றுதான் ஏற்றுக் கொண்டு சாகின்றனர். மனிதகுண்டுகளே அவ்வாறுதான் உருவாகி வெடித்துக் கொண்டிருக்கின்றன.

“எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார் ஒமர்: ஜிஹாத் என்ற மதவெறியில் குண்டுகளை வெடித்து அப்பாவி மக்களை வயது கூட பார்க்காமல் குழந்தைகள், முதியவர், பெண்கள் என்று அனைவரையும் கை-கால்கள் சிதற, தலைகள் சிதற, ரத்தம் பீரீட்டு கொட்ட, சதைகள் சிதற குரூரக் கொலைப்பலிகள் செய்து வருவதை நினைந்து, உள்ளம் உருத்தத்தான் இப்படி கூறுகிறார் போலும் ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். அப்படியென்றால், யாருக்கு ரத்தவெறி இருக்கிறது?

காஷ்மீர் மக்களின் (முஸ்லீம்களின்) கருத்து: மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பலரில் அப்சல் குருவை மட்டும் தேர்வு செய்து மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளதாகக் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, “இது தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட தண்டனை அல்ல என்பதை காஷ்மீர் மக்களுக்கும் உலகுக்கும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அவருக்கு சீக்கிரமாகவே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் எனது கருத்து. இந்த தலைமுறை காஷ்மீர் மக்கள் தங்களை அப்சல் குருவின் அங்கமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர் மீதான விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்பதே காஷ்மீர் மக்களின் கருத்தாக உள்ளது. இதே கருத்துதான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எழுந்துள்ளது[2].

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள்? இந்திய ஜனநாயகத்தின் அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அப்சல் குரு தொடர்புடைய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு கருதப்படுகிறது. முன்னாள் பிரதமர் என்பவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? பஞ்சாப் முதல்வர் தனது அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். அவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? என்று ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பேயந்த் சிங் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது குறித்து அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். “நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வார்த்தைகளை விளக்குவது மிகவும் கடினம். ஒருமித்த அளவில் மக்களின் மனவோட்டத்தில் திருப்தி அடைவதன் மூலம் ஒருவரைத் தூக்கிலிட்டு விட முடியாது. சட்டப்படியும், நீதிப்படியும் அத்தண்டனை வழங்குவதற்கான காரணங்கள் அனைத்தும் வலுவாக இருக்க வேண்டும்.

நிறைவேற்றி இருக்கக் கூடாது: மரண தண்டனைக்காக காத்திருப்பவர்கள் குறித்தும், இதுவரை மரண தண்டனை பெற்றவர்கள் குறித்தும் வேறுவிதமான கேள்விகளை எழுப்ப நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அரசியல் நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டில் இருந்து மத்திய அரசு தன்னை காத்துக் கொள்ள வேண்டும். இது சட்டப்படியே எல்லாம் நடந்துள்ள என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் இருத்திருக்க வேண்டுமென்பதுதான் எங்கள் கட்சியின் கருத்து என்றார். இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசில் இருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு, “நாங்கள் விலகினால் அப்சல் குருவை மீண்டும் கொண்டு வர முடியும் என்றால் அரசில் இருந்து வெளியேறுவோம்’ என்று ஒமர் அப்துல்லா பதிலளித்தார். இவரும் இவரது உறவினரான மெஹ்பூபா முப்தியும் இப்படி மாறி-மாறி பேசியதும், எதிர்பார்த்தபடி, கலவரங்கள் ஆரம்பித்துள்ளன.

 காஷ்மீரில் 2ஆவது நாளாக ஊரடங்கு: ஸ்ரீநகர், பிப். 10:÷நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு சனிக்கிழமை (09-02-2013) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் கட்டுப்பாடில் உள்ள காஷ்மீரில்[3] பதற்றமான சூழ்நிலை நிலவுவதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவையும் மீறி காஷ்மீரில் பல இடங்களில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதிலிருந்தே அவர்களுக்கு முன்னமே விஷயம் தெரிந்துள்ளது என்றாகிறது. அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 36 போராட்டக்காரர்களுக்கும், 23 போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டம் பரவுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் செல்போன், இன்டர்நெட் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செய்தி தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்புவதை கேபிள் ஆபரேட்டர்கள் தவிர்த்து விட்டனர்.

 மோதலில் ஒருவர் சாவு: 6 பேர் படுகாயம்: ஸ்ரீநகர், பிப். 10: அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப்படை மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அதிகாரவட்டாரங்கள் தெரிவித்ததாவது: மத்திய காஷ்மீர் பகுதியில் உள்ள கந்தர்பால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை பாதுகாப்புப்படையினர் விரட்டியபோது தாரிக் அகமது பட் மற்றும் மேலும் 2 பேர் ஆற்றில் குதித்தனர். இதில் பட் உயிரிழந்தார் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் போலீஸார் இந்த தகவலை மறுத்தனர். படகில் சென்றபோது அது கவிழ்ந்ததில் ஒருவர் நீந்தி கரைசேர்ந்தார். மற்றொருவரை சிலர் காப்பாற்றினர். தாரிக் அகமது பட்டை காப்பாற்ற இயலவில்லை. அவரது சடலம் மீட்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, அவரது சாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் பாரமுல்லா மாவட்டம் வாட்டர்காம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது அவர்களை கலைந்துபோகச் செய்த பாதுகாப்புப் படையினருடன் இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

வீட்டுக் காவலில் கிலானி?: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஜாகீர் ஹுசேன் கல்லூரியில் பேராசிரியராக உள்ள எஸ்.ஏ.ஆர். கிலானியை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கிலானியை அதே ஆண்டு டிசம்பரில் தில்லி போலீஸார் கைது செய்தனர். எனினும், கிலானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை என்று 2003-ல் உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை காலையில் விசாரணைக்காக நியூ பிரெண்ட்ஸ் காலனியில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு கிலானியை போலீஸார் அழைத்துச் சென்றனர். அன்றைய தினம் இரவு 10 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் கிலானியின் வீட்டைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து வெளியே செல்லவும் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தில்லியில் வசித்து வரும் ஹுரியத் தலைவர்கள் சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக், பத்திரிகையாளர் இஃப்திகர் கிலானி ஆகியோரின் வீட்டு வாயிலில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் 2வது நாளாக தொடருகிறது ஊரடங்கு[4]: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவையும் மீறி, ஒரு சில இடங்களில், நேற்று முன்தினம், வன்முறை ஏற்பட்டது. இதில், 23 போலீசார் உட்பட, 36 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், காஷ்மீரில், நேற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தது. பதற்றமான இடங்களில், போலீசாருடன், துணை ராணுவப் படையினரும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். செய்தி சேனல்கள், மொபைல் போன், இணையதள சேவைகள், இரண்டாவது நாளாக, நேற்றும் முடக்கி வைக்கப்பட்டிருந்தன; பத்திரிகைகளும், வெளிவரவில்லை.  அப்சல் தூக்குக்கு எதிர்ப்பு காஷ்மீரில் போராட்டம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்[5].

 JKLF meeting at Islamabad

இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி கைகோர்த்துக் கொண்டு போராட்டம்: இஸ்லாமாபாதில் இந்தியவிரோதி யாஸின் மாலிக் மற்றும் பயங்கரவாதி ஹாபிஸ் சையீது தண்டனையை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். மொஹம்மது அப்சலின் உடலை ஒப்புவிக்கும் படி ஆர்பாட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி இருவரும் மேடையில் அருகருகில் உட்கார்ந்து கொண்டது, பேசிக்கொண்டது பற்றி செய்திகள் வந்துள்ளன[6]. இறுதிமரியாதை சடங்கும் நடத்தப் பட்டது. ஹாவித் சையதே செய்து வைப்பான் என்று அறிவிக்கப்பட்டாலும், ஜமத்-இ-இஸ்லாமி தலைவர் செய்து வைத்தார்[7].

Yasin Malik  sitting with Hafiz Saeed of Jamat-ud-Dawa protesting against the hanging of Mohammed Afzal Guru

காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம்: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான். கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[8]. இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.

மனைவியுடன் இருக்க வருடா-வருடம் பாஸ்போர்ட் கொடுக்கும் சோனியா அரசு[9]: யாஸின் மாலிக்கின் மனைவி பாகிஸ்தானில் இருக்கிறாள். இவளுடன் சேர்ந்து இருக்க வருடா-வருடம் சோனியா அரசு பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொடுத்து வருகிறது. இவனோ மனைவியுடனும் இருந்து, ஜிஹாதிகளுடனும் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறான். ஆனால், காங்கிரஸ்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. அம்மா சொன்னால் அப்படியே தலையாட்டி வருகிறார்கள், காலில் விழவும் தயாராக இருக்கிறர்கள். அம்மையார் தலைவி என்றால்தான், அவர்களுக்கு பதவி, பட்டம், சொத்து, பணம் எல்லாம். ஆகவே, இத்தகைய அடிமை வாழ்வு தொடர்ந்தே வருகிறது. இடைக்காலத்தில் இதைப் போன்ற இந்திடயர்கள் முஸ்லீகம்களுடன் துணைபோனதால் தான் முஹம்மது கோரி, முஹம்மது கஜினி, மாலிக்காபூர், பாபர், ஹுமாயூன் முதலியோர் இந்துக்களைக் கொன்று, சூறையாடினார்கள். இப்பொழுது இப்படி கூட்டணியில் குண்டு போட்டு கொன்று வருகிறார்கள், ஊழலில் கோடிகளை கொள்ளையடித்து வருகிறார்கள் இதுதான் வித்தியாசம்!

Mixed reactions- while people protested in Kashmir, others elsewhere in India celebrated

ஊடகங்களின் விஷமத்தனம்: இந்திய அரசு தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதைப் பொறுத்த வரைக்கும் உள்ள முறையை சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டினாலும், ஏதோ அரசு அவசரப்பட்டுவிட்டது, குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப் படவில்லை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் கதைகளை அவிஅத்துவிட ஆரம்பித்துள்ளனர். ஜிஹாதி-பயங்கரவாதிகளால், ஜிஹாதி-தீவிரவாதிகளால் மக்கள் கொள்ளப்பட்டபோது, இவர்கள் இவ்வாறு பேசவில்லையே, ஏன்? அப்படியென்றால் அவர்களுக்கு குடும்பங்கள், உரிமைகள் இல்லையா? இல்லை, அவர்கள் இவர்களை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் அல்லது வேற்றுமையானவர்கள்? இப்படி கேள்விகள் கேட்டால், விடை என்னவென்று மக்களுக்குப் புரிய ஆரம்பித்து விடுகிறது. அகவே, ஊடகங்களின் விஷமத்தனம் நன்றாகவே தெரிகிறது. அதனால்தான், ஒரு ஊடகம் இப்படி – இந்தியர்களில் சிலர் எதிர்த்து போராட்டம் நடத்தினாலும், சிலர் கொண்டாடுகிறார்கள் என்று போலித்தனமான-விஷமத்தனமான படத்தை வெளியிட்டுள்ளார்கள்[10]. சிறுவனை உயிர்தியாகியாக்கிய இந்திய ராணுவம் என்று பாகிஸ்தான் நாளிதழ்[11] கூறுகிறது!

பாகிஸ்தானின் விரோதத்தனம்: நட்பு என்று சொல்லிக் கொண்டு, தலைகளைத் துண்டாடி, துரோகச் செயல்களில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய பாகிஸ்தான், கேடு கெட்ட செக்யூலார் இந்தியாவை இந்த சமயத்திலும் நன்றாகவே சாடியுள்ளது[12]. இந்தியா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பாடம் சொல்லிக் கொடுக்கிறது[13]. அதை வெட்கம்-மானம்-சூடு-சொரணை இல்லாத உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கேட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

வேதபிரகாஷ்

11-02-2013


[2] இதற்கேற்றார்போல, அருந்ததிராய் போன்ற கூட்டத்தார் பேசி வருகிறார்கள்.

Sujato Bhadra, a Kolkata-based member of the Association for Protection of Democratic Rights, said that the higher courts had not addressed Guru’s claims that his trial had been faulty. “The government carried out the execution without allowing him to exhaust a judicial recourse after the president rejected his mercy petition,” Bhadra said.”This is a blatant miscarriage of justice.”

[3] “Indian administered Kashmir”, “India Occupied Kashmir”, Indian Held Kashmir (IHK) என்றுதான் பாகிஸ்தானிய மற்றும் காஷ்மீர முஸ்லீம்கள், ஊடகவாதிகள் கூறி-எழுதி வருகின்றனர்.

http://dawn.com/2013/02/11/at-least-two-dead-in-indian-administered-kashmir/

[6] On Sunday afternoon, Mr. Saeed reached the venue of Mr. Malik’s hunger strike and the two met briefly.

http://www.thehindu.com/news/national/centre-probing-yasin-maliks-alleged-passport-violations/article4407896.ece

[7] Though JuD activists had claimed that Mr. Saeed would lead the ‘ghayabana namaz-e-janaza’ (funeral prayers in absentia) for Afzal at the protest site, the prayers were led by a Jamat-e-Islami leader.

[12] Commenting on the execution of Kashmiri leader Afzal Guru by India, Pakistan on Monday reaffirmed its solidarity with the people of Jammu and Kashmir and expressed serious concern on high-handedness of the Indian government with Kashmiris.

http://paktribune.com/news/Pakistan-voices-concern-on-Indias-treatment-of-Kashmiris-257326.html