Posted tagged ‘பாகிஸ்தான்’

இந்தியாவில் இந்து மக்கட்தொகை குறைவது ஏன், முஸ்லிம் மக்கட்தொகை அதிகரிப்பது ஏன்?:

மே 11, 2024

இந்தியாவில் இந்து மக்கட்தொகை குறைவது ஏன், முஸ்லிம் மக்கட்தொகை அதிகரிப்பது ஏன்?:

 

1947-இந்தியாவிலிருந்து இந்து மக்கட்தொகை குறைவது: இந்தியாவைப் பொறுத்த வரையில் ஜனத்தொகை எல்லா விதங்களிலும் பாதிப்பதாகவே உள்ளது. 1947-பிரிவினைக்குப் பிறகும் முஸ்லிம் பிரச்சினை தீராமல் இருந்து வருகிறது. 1941 மக்கட்தொகை கணக்கின் படி 14.6% இந்துக்கள் இருந்தனர். இப்பொழ்ய்தும் 2% தான் உள்ளனர். அதாவது 12% குறைந்து விட்டது.காஷ்மீரத்தில் முஸ்லிம் மக்கள் அதிகமானதுடன், இந்துக்கள் விரட்டி அடிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். பிறகு ஊடுருவல் பிரச்சினை பெரிதாகியுள்ளது. வங்காள தேச முஸ்லிம்கள் தினம்-தினம் ஊடுருவி வருகின்றனர். நம் நாட்டில் 1950ல் இருந்து, 2015ம் ஆண்டுக்கு இடையே, ஹிந்துக்கள் மக்கள் தொகை 7.81 சதவீதம் குறைந்துள்ளது[1]. அதே நேரத்தில், முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது[2]. பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில், ‘சிறுபான்மையினர் மக்கள் தொகை — நாடுகள் இடையேயான நிலை’ என்ற பெயரில் விரிவான ஆய்வை நடத்தியது[3].

 

EAC-PM அறிக்கை சொவது என்ன?: ஷமிகா ரவி, அபூர்வ் குமார் மிஸ்ரா மற்றும் ஆப்ரஹாம் ஜோஸ் ஆகியோர் நடத்திய, இது குறித்த ஆய்வறிக்கையில் [EAC-PM – The Economic Advisory Council to the Prime Minister] கூறப்பட்டுள்ளதாவது[4]: இந்தியாவில், 1950 மற்றும் 2015ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், பெரும்பான்மையினரான ஹிந்து மக்கள் தொகை 7.8 சதவீதம் குறைந்து, 78.06 சதவீதமாக உள்ளது[5]. அதே நேரத்தில், முஸ்லிம்கள் மக்கள் தொகை 43.15 சதவீதம் அதிகரித்து, 14.09 சதவீதமாக உள்ளது[6]. கிறிஸ்துவர்கள் மக்கள்தொகை 5.4 சதவீதம் உயர்ந்து, 2.36 சதவீதமாக உள்ளது. சீக்கியரின் மக்கள் தொகை 1.85 சதவீதம், புத்த மதத்தினரின் எண்ணிக்கை 0.81 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், ஜைனர்களின் எண்ணிக்கை 0.36 சதவீதம் மற்றும் பார்சி எண்ணிக்கை 0.004 சதவீதம் குறைந்து உள்ளது. இந்த கணக்கெடுப்பு, எவ்வாறு மக்கள் தொகை உயர்ந்தது என்பதை கண்டுபிடிப்பதற்காக நடத்தப்படவில்லை. அதே நேரத்தில், சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா என்பதை ஆராய்வதற்காக நடத்தப்பட்டது. இந்தியாவின் இந்த மக்கள் தொகை விபரங்கள், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் சுமுகமான சூழ்நிலை நிலவுவதையே காட்டுகிறது. சிறுபான்மையினருக்கு சிறப்பான சூழல் நிலவுகிறது என்பதையும் இது காட்டுகிறது[7]. அதனால் தான், அண்டை நாடுகளில் இருந்து, இந்த காலகட்டத்தில் சிறுபான்மையினர் அதிகளவில் நம் நாட்டுக்குள் வந்துள்ளனர்[8].

 

முஸ்லிம் ஜனத்தொகை அதிகரிப்பும், பாதுகாப்பும்; நம் அண்டை நாடுகளில் பெரும்பான்மையினர் எண்ணிக்கை, இதே காலகட்டத்தில் உயர்ந்துள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள நாடுகளில் அவர்களுடைய மக்கள் தொகை உயர்ந்துள்ளது. மாலத்தீவுகள் மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது. அதே நேரத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக அல்லாத ஐந்து நாடுகளில், இலங்கை, பூட்டானில் மட்டும் பெரும்பான்மையின சமூகத்தினரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பொதுவெளியில் கூறப்படும் கருத்துக்களுக்கு மாறாக, இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதுடன், வளர்ச்சியும் அடைந்து வருகின்றனர் என்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளில், அங்குள்ள பெரும்பான்மையினர் எண்ணிக்கையே உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

 

உலக அளவில் ஜனத்தொகை எவ்விதத்தில் பாதிக்கும்?: வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். உலக அளவில் பெரும்பான்மையினர் மக்கள் தொகை, 22 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதுபோல ஒவ்வொரு கண்டத்திலும் இதே சூழ்நிலை நிலவுகிறது. பெரும்பான்மையின மக்கள் தொகை உயர்வு மிகவும் அதிகமாக உள்ள 20 நாடுகளை பார்க்கும்போது, அவை, முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ நாடாக உள்ளன. அதேபோல், பெரும்பான்மையின மக்கள் தொகை அதிகமாக குறைந்துள்ள, 20 நாடுகளில் மூன்று மட்டுமே முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ நாடாக உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த ஜனத்தொகை கணக்கெடுப்பின் நம்பகத்தன்மை: ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் சா்வதேச மனித உரிமைகள் கட்டமைப்பு, சிறுபான்மையினரின் உரிமைகள், நாடுகளின் பொறுப்புகள், சா்வதேச சட்டங்கள் ஆகியவை வடிவம் பெறத் தொடங்கிய காலகட்டம் என்பதால் 1950-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது[9]. இந்த ஆய்வுக்காக 167 நாடுகளின் தரவுகள் ஆராயப்பட்டன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[10].  நாட்டில் கடைசியாக 2011-ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021-ஆம் ஆண்டில் நடத்த வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும் மேற்கொள்ளப்படாத சூழலில், இந்த ஆய்வறிக்கையில் மத வாரியான எண்ணிக்கை விவரங்கள் இடம்பெறவில்லை. 2015-ஆம் ஆண்டில் மதத்தினரின் சதவீதம் குறித்து எந்த அடிப்படையில் தீா்மானிக்கப்பட்டது என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை[11]. மக்களவைத் தோ்தலுக்கு இடையே, இந்தத் தரவுகள் வெளியாகியுள்ளன. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதே காங்கிரஸின் திட்டம் என்று பிரதமா் மோடி தொடா்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், ஹிந்து-முஸ்லிம் எண்ணிக்கை விவகாரமும் பிரசாரத்தில் தீவிரமாக எதிரொலிக்கும் எனத் தெரிகிறது[12].

 

முஸ்லிம்கள் ஊடுருவல்களும் ஜனத்தொகை அதிகமாகக் காரணமாகிறது: பிரதம மந்திரிக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை அல்லது தேர்தல் நடக்கின்ற நேரத்தில் வெளியிட்ட விவரங்கள் என்று இதை ஒதுக்கி விட முடியாது. மதரீதியில் தான் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது அந்நேரத்தில் கோடிக்கணக்கான இந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டனர், கொல்லவும் பட்டனர், என்பதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். பிறகு 1971 வங்காளதேசம் உருவான போதும் முஸ்லிம்கள் ஊடுருவினார்கள். இப்பொழுது மியன்மாரில் இருந்து இந்திய எல்லைகள் வழியாக முஸ்லிம்கள் ஊடுருவி நுழைகிறார்கள். அவர்கள் அகதிகள் பார்வையில் திட்டமிட்டே நுழைகிறார்கள் மற்றவர்கள் வேலை நிமித்தம் இங்கே தங்கி விடுகிறார்கள் இவர்கள் தமிழ்நாடு வரையில் பரவி கட்டிடத் தொழில் என்று பல வேலைகளை செய்து வருகிறார்கள். இவையெல்லாம் செய்திகளாக நாளிதழ்களிலும் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இதற்கு மதசாயம் பூச வேண்டும் என்ற அவசியம் இல்லை அவ்வாறு அவர்கள் வேலை செய்து பிழைத்துக் கொண்டு இருந்து விடலாம் ஆனால், அவர்கள் முஸ்லிம்கள் என்றுதான் உள்ள நுழைகிறார்கள், செயல்படுகிறார்கள் எனும்பொழுது பிரச்சினையகிறது. ஆக, முஸ்லிம்கள் ஊடுருவல்களும் ஜனத்தொகை அதிகமாகக் காரணமாகிறது

 

© வேதபிரகாஷ்

10-05-2024


[1] தினமலர், இந்தியாவில் 8% குறைந்த ஹிந்துக்கள்: முஸ்லிம் மக்கள் தொகை 43% அதிகரிப்பு, UPDATED : மே 10, 2024 07:10 AMADDED : மே 10, 2024 07:10 AM.

[2] https://www.dinamalar.com/news/premium-news/8-fewer-hindus-in-india-43-increase-in-muslim-population–/3620586

[3] தினமலர், இந்தியாவில் குறைந்து வரும் ஹிந்துக்களின் எண்ணிக்கை: அதிகரிக்கும் சிறுபான்மையினர்: ஆய்வறிக்கையில் அம்பலம், UPDATED : மே 09, 2024 03:05 PMADDED : மே 09, 2024 02:52 PM.

[4] https://www.dinamalar.com/news/india-tamil-news/indias-declining-hindu-population-a-growing-minority-an-exposition-in-thesis–/3619822

[5] தினத்தந்தி, குறைகிறது இந்துக்கள் மக்கள் தொகை: இஸ்லாமியர்கள் எண்ணிக்கை உயர்வு ; ஆய்வறிக்கையில் தகவல், தினத்தந்தி மே 9, 6:14 pm (Updated: மே 9, 6:51 pm)

[6] https://www.dailythanthi.com/News/India/indias-hindu-population-declined-by-78-from-1950-2015-muslims-up-4315-information-in-the-report-1105009

[7] விகடன், இந்து மக்கள் தொகை வீழ்ச்சி.. முஸ்லிம்கள் எண்ணிக்கை உயர்வு?’ – ‘திடீர்ஆய்வு முடிவும் பின்னணியும்!, ஆ.பழனியப்பன், Published: மே.10, 2024 2.00; Updated: மே.10, 2024 2.00;

[8] https://www.vikatan.com/government-and-politics/pm-eac-findings-says-that-hindu-population-share-down-and-muslim-population-share-up

[9] காமதேனு, இந்தியாவில் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிப்புஅப்படியென்றால் இந்துக்கள்?, Updated on: 09 May 2024, 3:40 pm.

[10] https://kamadenu.hindutamil.in/national/increase-in-muslim-population-in-india

[11] தினமணி, நாட்டில் ஹிந்துக்கள் 7.8% சரிவு; முஸ்லிம்கள் 43.15% உயா்வு: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு ஆய்வறிக்கை, Updated on: 10 மே 2024, 5:02 am

[12] https://www.dinamani.com/chennai/2024/May/09/hindus-in-the-country-declined-by-78percent

மீலாது நபி கொண்டாட்ட ஊர்வலம், தற்கொலை குண்டுவெடிப்பு – முஸ்லிம்களே முஸ்லிம்களை கொல்வது எப்படி?

செப்ரெம்பர் 30, 2023

மீலாது நபி கொண்டாட்ட ஊர்வலம், தற்கொலை குண்டு வெடிப்புமுஸ்லிம்களே முஸ்லிம்களை கொல்வது எப்படி?

வெள்ளிக் கிழமை 29-09-2023 அன்று குண்டுவெடித்த இடம் – மதினா மசூதி, அல்ஃபலா சாலை, மாகாணம் மஸ்துங் மாவட்டம், பலுசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தான்: பாகிஸ்தானில் 29-09-2023 அன்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[1]. மீலாது நபி என்று முகமது நபி பிறந்த நாளை வெள்ளிக் கிழமை முஸ்லிம்கள் உலகம் முழுவதும் கொண்டாடினர்[2]. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள அல்ஃபலா சாலையில் மதீனா மசூதி உள்ளது[3]. இங்கு மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாட முஸ்ஸிம்கள் நேற்று கூடியிருந்தனர்[4]. இவர்கள் ஊர்வலமாகப் புறப்படுவதற்கு ஆயத்தமான நிலையில், தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்[5]. இதில் காவல் அதிகாரி ஒருவர் உட்பட 52 பேர் உயிரிழந்தனர்[6]. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தன.ர்[7]. தொடர்ந்து, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்[8]. இவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள், குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்[9]. மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்[10].

சுன்னி / சன்னி அல்லாத முஸ்லிம்கள் தாக்கப் படுதல்: ஆசார இஸ்லாத்தில் முகமது நபி பிறந்த நாள் கொண்டாடலாமா, கூடாதா என்ற வாத-விவாதங்கள் உள்ளன. ஏனெனில், அத்தகைய கொண்டாடங்கள் சின்னங்கள், அடையாளங்கள் வைக்க ஊக்குவிக்கும். அதுவே நாளடைவில் பெருகும் என்ற கோட்பாடும் உள்ளது. மெக்காவில், அவரது கல்லறையே அழிக்கப் பட்டது போன்ற செய்திகளும் உள்ளன. ஏனெனில், அது பிரத்யேகமாக அடையாளம் காணப்பட்டால், அதுவே சின்னமாகி, லட்சக்கணக்கில் முஸ்லிம்கள் வர ஆரம்பித்து விடுவர். பிறகு, அது வழிபடும் க்ஷேத்திரமாக மாறிவிடும். எனவே அத்தகைய முயற்சிகளும் தடுக்கப் பட்டன. முழு இஸ்லாம் மயமாக்கும் செயல்பாடுகளில், பாகிஸ்தானில் உள்ள மற்ற இஸ்லாமியக் குழுக்கள் – ஷியா, போரா, அஹ்மதிய போன்ற பிரிவுகள் அடிக்கடித் தாக்கப் பட்டு வருகின்றன, அவர்களது மசூதிகளும் தாக்கப் பட்டு, இடிக்கப் பட்டு வருகின்றன..இது அத்தகைய தாக்குதலா என்று தெரியவில்லை. இருப்பினும், குரூர-தீவிரவாத செயலுக்கு எந்த ஆதரவு-சமாதானமும் கொடுக்க முடியாது.

தொடரும் தற்கொலை குண்டுவெடிப்புகள்: இந்நிலையில், ஷாஹீத் நவாப் கவுஸ் பக்‌ஷ் ரயிசானி நினைவு மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி மருத்துவர் சயீது மிர்வானி, இதுவரை 52 பேர் இறந்துள்ளதாகவும், 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக பாகிஸ்தானின் ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பலூசிஸ்தானின் இடைக்கால உள்துறை அமைச்சர் ஜன் அசக்சாயி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். கடந்த 15 நாட்களில் இது மாஸ்துங் மாவட்டத்தில் நடக்கும் இரண்டாவது தற்கொலைப்படை தாக்குதல் ஆகும்[11]. முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் நடந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்[12]. இந்நிலையில், இன்று 50-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது குறித்து இடைக்கால முதல்வர் அலி மர்தான் டோம்கி கூறும்போது, எதிரிகள் பலூசிஸ்தானின் மத சகிப்புத்தன்மைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் இந்த சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்[13]. இன்றைய நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூன்று நாட்கள் மாகாணத்தில் துக்கம் அனுசரிக்கப்படும்” என்றார்[14].

முஸ்லிம்களே, முஸ்லிம்களை எப்படி குண்டு வைத்து / வெடித்துக் கொல்வர் என்பது திகைப்பாக இருக்கிறது: பலூசிஸ்தானில் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதினா மசூதியின் அருகேதான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது[15]. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மஸ்துங் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் உயிரிழந்தார்[16]. மிலாடி நபியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புத் தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதிப்பும் அதிகமாகியுள்ளது. ஆக, முஸ்லிம்களே, முஸ்லிம்களை எப்படி குண்டு வைத்து / வெடித்துக் கொல்வர் என்பது திகைப்பாக இருக்கிறது. தற்கொலை குண்டு வெடித்தவன் சொர்க்கத்திற்கு போகிறான் என்றால், குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் கதி என்ன? இத்தகைய இறையியல் சித்தாந்தம், மனித நேயம் கொண்டதா இல்லையா என்று அவர்கள் தான் ஆராய்ச்சி செய்து புரிந்து கொள்ள வேண்டும்.

தற்கொலைப் படை தாக்குதல் இரண்டுமற்றொரு தாக்குதல்: இந்த தாக்குதலுக்கு அடுத்த சில மணி நேரத்தில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஹங்கு மாவட்டத்தில் ஒரு மசூதியில் குண்டு வெடித்தது. மசூதியில் 30 முதல் 40 பேர் வரை தொழுகையில் ஈடுபட்டிருந்த நிலையில், குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் நேரிட்ட இந் தஇரு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் மொத்தம் 57 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து நகர நிலைய அலுவலர் முகமது ஜாவேத் லெஹ்ரி கூறுகையில், “நடந்தது தற்கொலைப் படை தாக்குதல். டிஎஸ்பியின் கார் அருகே மனித வெடிகுண்டாக வந்தவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

மிலாது நபி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்: வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களுக்கு பாகிஸ்தானின் இடைக்கால உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் அகமது பக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறும்போது, “பலுசிஸ்தானில் அமைதியும், மத நல்லிணக்கமும் நிலவுவதை எதிரிகள் விரும்பவில்லை. அதை அழிக்க நினைக்கின்றனர். மிலாது நபி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இது தாங்கமுடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத சக்திகள் எந்த சலுகைக்கும் தகுதியானவர்கள் அல்ல. தீவிரவாத செயல்களை முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாது” என்றார். இதெல்லாம் புரியாத புதிர்களாகத் தான் இருக்கின்றன. எல்லா வசதிகள், வளங்கள் வைத்துக் கொண்டு அமைதியாக வாழ்வதை விடுத்து, ஏன் இப்படி ஒருவரையொருவர் கொன்று வாழ வேண்டும் எனத் தெரியவில்லை?

நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: குண்டுவெப்புக்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்யும்படி, பலுசிஸ்தான் மகாண முதல்வர் அலி மர்தான் டோம்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தாக்குதல்களுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இரானின் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும்[17]. தெஹ்ரிக்-இ தாலிபன் பாகிஸ்தான் (TTP) அல்லது பாகிஸ்தான் தாலிபன் மற்றும் இஸ்லாமிய அரசு குழு உள்ளிட்ட ஆயுதமேந்திய போராளிகளின் தாக்குதலுக்கு இந்த மாகாணம் இலக்காகி வருகிறது[18].

© வேதபிரகாஷ்

29-09-2023


[1] தமிழ்,இந்து, பாகிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு: 57 பேர் உயிரிழப்பு; 60 பேர் காயம்,, செய்திப்பிரிவு, Published : 30 Sep 2023 04:23 AM, Last Updated : 30 Sep 2023 04:23 AM.

[2] https://www.hindutamil.in/news/world/1131015-pakistan-mosque-blasts-57-dead-60-people-were-injured.html

[3] புதியதலைமுறை, பாகிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் – 57 பேர் பலி, Prakash J, Published on :  29 Sep 2023, 10:41 pm.

[4] https://www.puthiyathalaimurai.com/world/today-blast-in-pakistan-at-least-57-killed

[5] நக்கீரன், பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு – 34 பேர் பலி; 130 பேர் காயம், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 29/09/2023 (17:00) | Edited on 29/09/2023 (17:17).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/world/pakistan-incident-near-mosque

[7] தினமலர், பாக்.,கில் அடுத்தடுத்து மசூதிகளில் குண்டுவெடிப்பு: 55 பேர் பலி, மாற்றம் செய்த நாள்: செப் 29,2023 17:47.

[8] https://m.dinamalar.com/detail.php?id=3444187

[9] தமிழ்.ஏபிபி.லைவ், Pakistan Bomb Blast: பயங்கரம்.. பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு – 52 பேர் பரிதாபமாக உயிரிழப்பு, By: சுகுமாறன் | Updated at : 29 Sep 2023 03:22 PM (IST), Published at : 29 Sep 2023 03:05 PM (IST)

[10] https://tamil.abplive.com/news/world/pakistan-52-killed-over-100-injured-in-suicide-blast-near-mosque-in-balochistan-province-142711

[11] தமிழ்.இந்து, பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு: 52 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம், செய்திப்பிரிவு, Published : 29 Sep 2023 03:35 PM; Last Updated : 29 Sep 2023 03:35 PM.

[12] https://www.hindutamil.in/news/world/1130588-at-least-50-killed-over-130-injured-after-blast-in-pakistan-s-balochistan.html

[13] தினத்தந்தி, பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடித்து 55 பேர் பலி: 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!, செப்டம்பர் 30, 1:29 am; Updated: செப்டம்பர் 30, 2:21 am;

[14] https://www.dailythanthi.com/News/World/55-killed-in-pakistan-mosque-blast-3-days-of-mourning-1063162

[15] விகடன், பாகிஸ்தான்: மசூதி அருகே குண்டு வெடிப்பு; தற்கொலைத் தாக்குதலில் 52 பேர் பலி!, சி. அர்ச்சுணன், Published:Yesterday at 4 PMUpdated:Yesterday at 4 PM.

[16] https://www.vikatan.com/crime/suicide-blast-near-mosque-in-pakistan-52-people-died

[17] பிபிசி.தமிழ், பாகிஸ்தான்: மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதல், 52 பேர் பலிஎன்ன நடந்தது?, Published at : 29 Sep 2023; https://www.bbc.com/tamil/articles/cgl012jm464o

[18] https://www.bbc.com/tamil/articles/cgl012jm464o

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (1)

மே 8, 2017

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி .எஸ். தொடர்புகளும், ஒற்றர்களும்பணபரிமாற்றமும் (1)

Shabir sha meeting Abdul Basit - August .2014

அப்துல் பசித், பாகிஸ்தான் தூதர் தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்தாரா?: ரூ.70 லட்சம் பாகிஸ்தான் உளவு துறை ஐ.எஸ்.ஐ மூலம், ஹுரியத் தலைவர் ஷபிர் ஷா [Hurriyat leader Shabir Shah] வழியாக, கல்லெறி ஜிஹாதிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது[1]. சமீபத்தில் கைதான இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள், இதை ஒப்புக்கொண்டு விவரங்களைக் கொடுத்துள்ளனர்[2]. பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் [Abdul Basit, Pakistan’s envoy to India] மூலம் பணம் பரிமாறப்பட்டுள்ளது[3]. அதாவது தூதரகம் மூலமாகவே இத்தகைய தீவிரவாதிகளுக்கு பணவிநியோகம் நடந்துள்ளது[4].  “ஹைகமிஷனராக” இருந்து கொண்டு செய்திருக்கிறாரா என்று கேள்வி கேட்டுள்ளன ஊடகங்கள்[5]. ஊடகங்கள் இவற்றை எடுத்துக் காட்டினாலும், அரசு முறையாக இதைப்பற்றி ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அப்துல் பசித்தை கூப்பிட்டு விளக்கம் கேட்கவில்லை. சென்ற ஆண்டு-2016, இவர் காஷ்மீரில் இருக்கும் ஊடகக்காரர்களை வரவழைத்து, இந்தியாவிற்கு எதிரான விசயங்களை அதிகப்படுத்தி, செய்திகளாக போடவும், அதன் மூலம், அங்குள்ள மக்களைத் தூண்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிந்ததும், இங்கு குறிப்பிடத் தக்கது[6]. தூதுவர், தூதரகம், இருநாட்டு உறவுகள் போன்ற விசயங்களில் இந்தியா மென்மையாக, மெதுவாக, சோம்பேறித்தனமாக செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது.

SYurriat meeting Abdul Basit - August .2014

1997ம் ஆண்டு முதல் நடந்த விவகாரங்களை 2017ல் கிளறுவது ஏன்?: 1997ல் அலி ஷா கிலானி சவுதி அரேபியாவிலிருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப் பட்டது, அதனால் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதில் உள்ள சட்டமீறல்கள் முதலிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 29, 2010 அன்றும் இவர்மீது, தேசத்துரோக வழக்குப் போடப்பட்டது[7]. 2001ல் நேரிடையாக பண விநியோகம் நடந்த 173 ஹவாலா பரிவர்த்தனைகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன[8]. இந்த விவரங்களை முதலமைச்சர் மெஹ்பூபா முப்டியே கொடுத்துள்ளார்[9].  பாகிஸ்தான் மட்டுமல்லாது, சவுதி அரேபியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்தும் பணம் வந்துள்ளது. சவுதியிலிருந்து தான் அதிகமாக பணம் வந்துள்ளது. அதாவது, ஹக்கானி ஆவணங்கள் முதலியன சவுதி அரேபியா உலகம் முழுவதும், வஹாபி அடிப்படைவாதத்தை பரப்பும் மூலமாக, தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று எடுத்துக் காட்டியுள்ளதால், அதில் எந்தவித ரகசியமும் இல்லை எனலாம்.

How hawala money is routed from Rawalpindi to Srinagar-three arrested

ஹவாலா பணம் ஹீவிரவாதிகளுக்கு செல்வது: 2011ல் அமுலாக்கப்பிரிவினர் கட்டுப்பாட்டு 1997ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றபோதே, அதிலிருந்தே விவரங்களைத் தெரிந்து கொள்லலாமே. எப்படி இருப்பினும், “டைம்ஸ்-நௌ” வெளியிட்ட விவரங்களை மற்ற ஊடகங்களையும், தங்களது சரக்கைச் சேர்ந்து, செய்திகளை வெளியிட்டுள்ளன என்று தெரிகிறது. 20 வருடங்களாக “புலனாய்வு ஜார்னலிஸம்” என்று தம்பட்டம் அதித்துக் கொண்டிருந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. எல்லையில் நான்கு வியாபாரிகளை பிடித்தபோது, லஸ்கர்-இ-தொய்பா மூலம் அனுப்பப்படும் பணத்தை தீவிரவாதிகளுக்குக் கொடுக்க ஹவாலா மூலம் செயல்பட்டது தெரிய வந்தது. வங்கி மூலம் பணமாற்றத்தை செய்வதை விட, இம்மாதிரி ஹவாலா மூலம் பணபரிமாற்றம் செய்வது, அவர்களுக்கு நல்லது மற்றும் கொடுத்தவர்-வாங்கியவர்கள் விவரங்கள் தெரியாது, கண்டுபிடிக்க முடியாது என்ற கோணத்தில் தீவிரவாதிகள் கையாண்டு வருகிறார்கள். இதனால், அந்த ஹவாலாகாரர்களும் கணிசமான தொகை கமிஷனாகக் கிடைக்கிறது.

How hawala money is routed from Rawalpindi to Srinagar

நிலைமை தொடர்கிறது: 2014ம் ஆண்டில், 48 ஏஜென்டுகள், பொருள் பரிமாற்றம் மூலம் பணத்தை தீவிரவாதிகளுக்கு அனுப்பியுள்ளனர். என்.ஐ.ஏ மற்றும் அமுலாக்கத்துறை, 20 வழக்குகளில் ரூ. 75,00,000/- பரிமாற்றம் செய்ததை கண்டுபிடித்துள்ளனர். 2009 மற்றும் 2011 கள்ளப்பணம் மூலம் ரூ.1,20,00,000/- பரிவர்த்தனை நடந்துள்ளது. 2011ல் 74,000 சவுதி ரியால் பணம் வந்துள்ளது. அதாவது, இம்முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது என்று தெரிகிறது. இவற்றில் முஸ்லிம்களே சம்பந்தப்பட்டுள்ள போது, அவர்கள் ஆட்டிக் கொடுக்காமல், இருந்து வருகின்றனர். ஹுரியத் கான்பரென்ஸ், ஜம்மு-காஷ்மீர் லிபரேஷன் பிரென்ட், இஸ்லாமிய மாணவர்கள் முன்னணி, ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஜைஸ்—இ-மொஹம்மது, ஜமாத்-உல்-முஜாஹித்தீன் போன்ற பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு அப்பணம் சென்றுள்ளது[10]. 1997ல் சவுதி முதலிய அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெற்றதற்கு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதே போல, ஷாஜியா என்ற பெண் மூலம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் பெற்றதும் தெரிய வந்தது[11]. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இந்திய ஊடகங்கள் சில இவையெல்லாம் ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வருகின்றன என்று தெரிவிக்கின்றன[12].

© வேதபிரகாஷ்

08-05-2017

Two ISI agents arrested in April 2017- Abdul Basit nexus

[1] Times of India, How ISI funds stone-pelters via Hurriyat in Kashmir: Times Now, TIMESOFINDIA.COM | Updated: May 6, 2017, 06.30 PM IST

[2] http://timesofindia.indiatimes.com/india/how-isi-funds-stone-pelters-via-hurriyat-in-kashmir-times-now/articleshow/58546402.cms

[3] Zeenews, Pak embassy helps distribute ISI funds to stone-pelters in Kashmir: Report, By Zee Media Bureau | Last Updated: Sunday, May 7, 2017 – 00:36

[4] http://zeenews.india.com/india/pak-embassy-helps-distribute-isi-funds-to-stone-pelters-in-kashmir-report-2002780.html

[5] Times.now, Is Pak high commissioner Abdul Basit paying separatists to create unrest in Kashmir? , May 06, 2017, 13.33 IST.

[6] Sources say that last year the Pakistan high commission had invited Kashmiri journalists to a meeting where they were asked to file reports project Indian security forces in bad light so they can generate hatred towards India and create a mass movement.

http://www.timesnow.tv/india/video/is-pak-high-commissioner-abdul-basit-paying-separatists-to-create-unrest-in-kashmir/60563

[7] On November 29, 2010 Geelani, along with writer  Arundhati Roy, Maoist Varavara Rao and three others, was charged under “sections 124A (sedition), 153A (promoting enmity between classes), 153B (imputations, assertions prejudicial to national integration), 504 (insult intended to provoke breach of peace) and 505 (false statement, rumour circulated with intent to cause mutiny or offence against public peace… to be read with Section 13 of the Unlawful Activities Prevention Act of 1967″. The charges, which carried a maximum sentence of life imprisonment, were the result of a self-titled seminar they gave in New Delhi, Azadi-the Only Way” on October 21, at which Geelani was heckled

[8] One.India, How Pakistan funded the Kashmir unrest 173 times, Written by: Vicky Nanjappa, Updated: Sunday, May 7, 2017, 8:14 [IST]

[9] http://www.oneindia.com/india/how-pakistan-funded-the-kashmir-unrest-173-times-2428208.html

[10] Investigations reveal that between the years 2009 and 2011 an amount of Rs 12 million had been recovered. Fake and foreign currency was recovered from agents who were funding terrorists. In 2011, some agents had also brought in 74,000 Saudi Arabian Riyals into the valley. NIA sources say that the funding has gone both to terrorist groups and separatists. Money has been pumped into the Hurriyat Conference, Jammu-Kashmir Liberation Front, Islamic Students Front, Hizbul Mujahideen, Jaish-e-Mohammad and Jamiat ul-Mujahideen.

[11] An 1997 FIR against separatist Syed Ali Shah Geelani an FIR alleges that he had got funding to the tune of Rs 190 million from Saudi Arabia and also another donation of Rs 100 million from the Kashmir American Council. Investigations had revealed that all these funds were routed through a Delhi-based Hawala operative. It was also found that Yasin Malik, another separatist, had received funding of USD 1 lakh and the money was being carried by a woman called Shazia. We are looking at each case since 1995, and this will help us get a better picture of the entire racket,” an NIA officer adds. Intelligence Bureau officials tell OneIndia that the money is being used for various purposes.

[12] Outlook, Secret Intel Docs Show Pakistan’s ISI Funds Hurriyat To Create Trouble In Kashmir, Says Channel Report, May 7, 2017. 6.48 pm

http://www.outlookindia.com/website/story/secret-intel-docs-show-pakistans-isi-funds-hurriyat-to-create-trouble-in-kashmir/298784

விமான விபத்திற்கு கருப்பு ஆடு பலிகொடுத்த பாகிஸ்தானிய விமானத்துறையும், ஒரு பைத்தியம் செய்த 20 நிர்வாணக் கொலையும் (2)

ஏப்ரல் 3, 2017

விமான விபத்திற்கு கருப்பு ஆடு பலிகொடுத்த பாகிஸ்தானிய விமானத்துறையும், ஒரு பைத்தியம் செய்த 20 நிர்வாணக் கொலையும் (2)

Sargohda - dargah - buildin black magic-sufism

ஆண், பெண்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அவர்களை தடிகளால் அடித்து, பேய் விரட்டப்படுகிறது: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா மாவட்டத்தில் லாஹூர் நலரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் முஹம்மது அலி குஜ்ஜார் தர்கா உள்ளது. அந்த தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் அந்நாட்டு அரசு பணியாளர், தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் வேலைசெய்தார், என்பது தெரியவந்து உள்ளது.  மனநிலை பாதிப்புடன் இங்கு வரும் பக்தர்களுக்கு பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் மிக கொடூரமான முறையில் சிகிச்சை அளிப்பது வழக்கம். ஆண், பெண்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அவர்களை தடிகளால் அடித்து, பேய் விரட்டப்படுகிறது. இதற்காக வருபவர்கள் தங்குவதற்கு தர்கா வளாகத்தில் காப்பகம் ஒன்றும் உள்ளது. இங்கு சிலநாட்கள் தங்கி ‘சிகிச்சை’ பெற்றால் தங்களது பிரச்சனை நீங்கிவிடும் என்பது இங்கு வருபவர்களின் (மூட) நம்பிக்கையாக உள்ளது.

Sargohda - bodies taken out

தர்காவின் நிர்வாகத்திற்காக போட்டி, சண்டை: இந்நிலையில், இந்த தர்காவின் நிர்வாகத்தை யார் கவனிப்பது? என்பது தொடர்பாக பரம்பரை வாரிசுகளுக்கு இடையில் சமீபகாலமாக போட்டியும் மோதலும் இருந்து வந்துள்ளது[1]. தலைமை பேயோட்டுகிறவன் தான் திறமையான பேயோட்டுகிறவன் என்றால், அவனை வைத்து தான் அந்த தொழில் நடத்தியாக வேண்டும். ஆகவே அவனைக் கொலைசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவனையே தீர்த்துக் கட்ட வேண்டும் என்றால், அவனை விட பெரிய எத்தனாக, அவனது மகன் அல்லது வேறொருவன் இருந்திருக்க வேண்டும். இந்த போட்டியின் விளைவாக ஞாயிற்றுக்கிழமை அன்று பின்னிரவு [02-04-2017] நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட 20 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்[2]. அந்த தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்[3].  என்று தமிழ் ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

Sargohda - dargah - victim bodies taken out

தொலைபேசியில் வரச்சொல்லி, மயக்க மருந்து கொடுத்து கொலை செய்த மனநோயாளி: தர்காவிற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்காக இரவு தொலை பேசியில் அழைப்பு விடுத்து உள்ளார். முக்கியமான பணி இருப்பதாக கூறி தன்னுடைய அறைக்கு அளைத்து அவர்களுக்கு மயக்க மருந்தை கொடுத்து உள்ளார்[4].  அதாவது,, ஒரு மனநோயாளி / பைத்தியம் இந்த அளவுக்கு வேலை செய்யுமா என்று தெரியவில்லை. இல்லை, அந்த பைத்தியம் அந்த அலவுக்கு விசயம் தெரிந்து வைத்துள்ளது. அவரது ஆலோசனையின் பேரில் உதவியாளர்கள் சிலர் அங்கு வசித்துவந்த எதிர் தரப்பினருக்கு மயக்க மருந்து கலந்த உணவு வகைகளை கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டவர்கள் மயங்கி சாய்ந்தபோது அவர்களின் ஆடைகளை களைந்து கத்தி மற்றும் வீச்சரிவாள்களால் வெட்டியும், கனத்த தடிகம்புகளால் தாக்கியும் அப்துல் வஹீதின் ஆதரவாளர்கள் துடிதுடிக்க கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சிகிச்சைக்காக அந்த தர்காவுக்கு வந்திருந்த மூன்று / நான்கு பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்[5]. இந்த கோரச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்யுள்ள போலீசார் மேலும் பலரை தேடி வருகின்றனர்[6]. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலையை தொடர்ந்து, சம்பவம் நடந்த தர்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Sargohda - dargah - building

ஷியாக்களுக்கு எதிரான பிரச்சாரமா?: பாகிஸ்தானில், சுன்னிகளைத் தவிர மற்ற முஸ்லிம்கள், முஸ்லிம்களாகக் கருதப் படுவதில்லை. கடந்த 50 ஆண்டுகளில் காதியான் – அஹமதியா முஸ்லிம்கள் வேடையாடப் பட்டு, விரட்டியடிக்கப் பட்டனர். பஹாய் முஸ்லிம்களின் கதியும் அவ்வாறே முடிந்தது. ஷியாக்கள் அதிகமாக இருப்பதால். தலிபான் இயக்கம் வளர்ந்த பிறகு, அவர்களைத் தாக்கி வேட்டையாடி வருகின்றனர். ஐசிஸ் வந்த பிறகு கேட்கவே வேண்டாம், ஜிஹாதி தீவிரவாதம் எல்லைகளக் கடந்தது. தொடர்ந்து ஷியாக்கள் பலவிதங்களில் தாக்கப் பட்டு வருகின்றனர். தர்காக்களை ஒழிக்கிறோம் என்ற போர்வையில், குண்டுவெடிப்புகளுடன் வேலைசெய்து வருகிறார்கள். சுன்னிகள் தவிரவீதர முஸ்லிம்களின் மசூதிகள், மடாலயங்கள், சூபிகானா போன்ற இடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. குண்டுவெடிப்புகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.  பாகிஸ்தானை விட்டு, ஓடி வந்த பஹாய் முஸ்லிம்கள், தில்லியில், தாமரை கோவிலைக் கட்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. கர்நாடகத்தில், அஹமதியா முஸ்லிம்கள் கனிசமாக உள்ளனர். ஆனால், இவர்கள் எல்லோருமே அடங்கிக் கிடக்கின்றனர். எதைப் பற்றியும் எந்த கருத்தையும் சொல்வதில்லை.

Attacks on shrines since 2005

பிப்ரவரியில் நடந்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் சாவு, காயம் முதலியன: பாகிஸ்தானில் உள்ள தர்கா ஒன்றின் மீது நடைபெற்ற தாக்குதலில் குறைந்தது 80 பேர் பலியானதை தொடர்ந்து நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றில் டஜன்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது[7]. சுமார் 18 தீவிரவாதிகள் தெற்கு சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அங்குத்தான் அந்த தர்கா அமைந்திருந்தது. மேலும் 13 பேர் வட-மேற்கு பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேவான் நகரில் இருந்த சூஃபி தர்காவில் தற்கொலை குண்டுத்தாரி ஒருவர் வழிப்பட வந்திருந்தோர் மத்தியில் தன்னைத்தானே வெடிக்க வைத்துள்ளார். இஸ்லாமிய அரசு என அழைத்துக்கொள்ளும் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ஜிஹாதி குழுக்கள் நடத்திவரும் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் இது சமீபத்தியதாகும். தாக்குதலில் பலியானவர்களுக்கு 17-02-2017 அன்று (வெள்ளிக்கிழமை) இறுதிச் சடங்கு நடைபெறுகிறது, என்று பிபிசி வெளியிட்டது[8]. ஆனால், அத்தகைய “குண்டுதாரிகள்” ஏன் ஷியா மசூதிகளில் மட்டும், தங்களை வெடித்துக் கொள்கிறார்கள் என்று சொல்லவில்லை.

Sargohda - dargah - buildin black magic

ஷியாக்களின் பலியைசகிப்புத் தன்மையோடுஅனுசரித்து வரும் செக்யூலரிஸ சித்தாந்திகள்: ராணுவம் மற்றும் போலீஸ் சுன்னிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், ஷியாக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். ஆகவே, சுன்னிகளும் பேயோட்டுதல், மந்திரம் வைத்தல், பில்லி-சூன்யம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருந்தாலும், இதனை சாக்காக வைத்துக் கொண்டு, அவர்களை ஒழிப்பதை நியாயப் படுத்துவது போன்ற, இந்நிகழ்சிகள் தெரிகின்றன. மனித உரிமைகள் எல்லாம் இதில் யாரும் கவலைப்படவில்லை. இங்குள்ள செக்யூலரிஸ்டுகளும் கண்டுகொள்வதில்லை. இங்குள்ள ஷியா முஸ்லிம்கள், ஆச்சரியப் படும் அளவுக்கு ஊமைகளாக இருக்கின்றனர். இங்கு ஒரு பாரூக் நாத்திகன் என்பதனால் கொலை செய்யப்பட்டான் என்றால், அங்கு சுன்னிகள் தவிர மற்ற எல்லோருமே “காபிர்கள்” என்று முத்திரைக்குத்தப்பட்டு தீர்த்துக் கட்டப் படுகிறார்கள். ஆனால், “சகிப்புத் தன்மையோடு” அமைதி காக்கிறார்கள். இப்பொழுதும், பைத்தியம் கொலை செய்தது என்று கதையை முடித்து விடுவார்கள்.

© வேதபிரகாஷ்

03-04-2017

Sargohda - dargah - surviving victim

[1] மாலைமலர், மயக்க மருந்து தந்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி: பாகிஸ்தான் தர்காவில் கொடூரம், பதிவு: ஏப்ரல் 02, 2017 10:57

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/02105709/1077548/20-people-killed-by-mentally-ill-custodian-of-dargah.vpf

[3] தினத்தந்தி, பாகிஸ்தானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தர்கா நிர்வாகியால் 20 பேர் கொடூரக் கொலை, ஏப்ரல் 02, 12:00 PM

[4] http://www.dailythanthi.com/News/World/2017/04/02120016/20-killed-by-shrine-custodian-in-Sargodha-police.vpf

[5] தினமலர், தர்காவுக்கு சென்ற 20 பேர் நிர்வாணமாக்கி படுகொலை, பதிவு செய்த  நாள். ஏப்ரல்.3, 2017, 00.05.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1743594

[7] பிபிசி, தர்கா மீது நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி: 31 தீவிரவாதிகள் கொலை, பிப்ரவரி 17, 2017.

[8] http://www.bbc.com/tamil/global-39005133

மறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ் பொறுப்பேற்றுள்ளது!

நவம்பர் 13, 2016

மறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ் பொறுப்பேற்றுள்ளது!

explosion-pakistan-718147பல்லாண்டுகளாக ஷியாக்களின் மீது சுன்னிகள் நடத்தி வரும் தாக்குதல்கள்: பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மீதான தாக்குதல் பல்லாண்டுகளாக நடந்து வருகின்றன. ஷியாக்களின் மக்கட்தொகை 10-25% சதவீதங்களில் உள்ளது என்று பாகிஸ்தான் கூறுக் கொள்கிறது. 2015 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 40 மில்லியன் / நான்கு கோடி ஷியாக்கள் உள்ளதாக சொல்லிக் கொள்கிறது. ஆனால், அவர்கள் இரண்டாந்தர குடிமக்களைப் போலத்தான் நடத்தப் படுகிறார்கள். சுன்னி முஸ்லிம்கள் அவர்களை காபிர்கள் என்றே பிரகடனப் படுத்தி ஜிஹாத் என்ற “புனித போரை” அவர்கள் மீது தொடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும். ஷியாக்களின் புனித வழிபாட்டு தினங்களில் அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்களில் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். முதியவர், பெண்கள், குழந்தைகள் என்று கூடியிருந்தாலும், இரக்கமில்லாமல், குண்டுவெடிப்புகள் மூலம் கொன்று வருகின்றனர்.

pakistan-shrine-731590உலகம் முழுவதிலும் ஷியாக்களின் தாக்குதல் அதிகமாகி வருகின்றது: தலிபான்கள், முஜாஹித்தீன்கள், ஐசிஸ் தீவிரவாதிகள் என்று பல குழுக்கள் வளர்ந்து விட்ட நிலையில், அவர்கள் எல்லோருமே சுன்னிகளாக இருக்கும் பட்சத்தில், ஷியாக்களின் மீதான தாக்குதல்கள் மிகவும் கோரமாக, குரூரமாக, மிருகத்தன்மையுடன் நடத்தப் பட்டு வருகின்றன. இஸ்லாத்தில் இந்த சுன்னி-ஷியா பிளவு சண்டைகள் மொஹம்மது காலத்திலேயே ஆரம்பித்து, தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய இரான்–இராக் சண்டையும் அதனால் தான் நடந்தது. இரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் மெக்கா-மெதினா நிர்வகிப்பு விவகாரங்களிலும், இப்பிரச்சினை தலைத் தூக்குவதுண்டு. அதனால், சவுதி அரேபியா இரானைக் கட்டுப் படுத்தி வைக்க எல்லா முறைகளையும் கையாண்டு வருகின்றது.

sufi-shrine-bombed-dawn-1

சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை நடத்தப் பட்ட குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை என்றாலே மசுதிகளில் அல்லது மற்ற இலக்குகளின் மீது குண்டுவெடிக்கும் தாக்குதல் நடக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. பலோசிஸ்தான் குஜ்தார் மாகாணத்தில் லாஸ்பெல்லாவில் பிரபல தர்கா ஷா நூரனி சூபி வழிபாட்டுத் தலம் உள்ளது[1]. கராச்சியிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு ஷியாக்கள் அதிகமாக வாழ்கின்றனர் என்பது தெரிந்த விசயமே. பிரதி வெள்ளிக்கிழமை தமால் என்ற சூபி சடங்கை பார்ப்பதற்கு இங்கு ஷியாக்கள் அதிகக் கணக்கில் கூடுவதுண்டு[2]. தமால் என்பது சூபி-நடனமாகும். சூபி பக்தர்கள் சுழன்று கொண்டே ஆடிப் பாடுவர். ஏ. ஆர். ரஹ்மான் சூபி மெட்டுகள் பலவற்றை சினிமா பாடல்களில் உபயோகப்படுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ஷியாக்கள் தாக்குவதை அவர் கண்டிப்பதாகத் தெரியவில்லை. இங்கு சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை சுமார் 500 பேர் தரிசனம் செய்வதற்காக திரண்டிருந்தனர்[3]. அப்போது கோவில் வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது[4]. இதில், ஏராளமான பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

sufi-shrine-bombed-dawn-2

இரவின் இருள், மருத்துவமனை அருகில் இல்லாதது இறப்புகள் அதிகமாக காரணமாகின்றன: சம்பவ இடத்திற்கு போலீசாரும், மீட்புக்குழுவினரும் ஆம்புலன்சுகளுடன் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்[5]. அருகில் மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஷியாக்கள் மாகாணம் என்பதால், பாகிஸ்தான் அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இருள் சூழ்ந்த காரணத்தால் மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது[6]. இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது[7]. ஐ.எஸ் உலகம் முழுவது உள்ள ஷியாக்களை ஒழிப்பதற்கு தயாராக உள்ளது[8]. சிரியாவில் ஷியாக்களைக் கொன்று குவித்து வருகின்றது[9].

sufi-shrine-bombed-dawn-6

52 பேர் சாவு, 150ற்கும் மேற்பட்டவர் படுகாயம்: 12-11-2016 சனிக்கிழமை அன்று 14 வயது சிறுவன், மசூதியில் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 43 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரமாக-நேரமாக இந்த எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. தாக்குதல் நடந்தபோது சுமார் 600 பக்தர்கள் அங்கே இருந்தார்களாம். பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[10]. வழக்கம் போல பாக்., அதிபர் நவாஸ் ஷெரிஃப், இம்ரான் கான் போன்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[11].  ஆனால், இதனால், ஷியாக்கள் மீதான தாக்குதல்கள் குறையப் போவதில்லை.

sufi-shrine-bombed-dawn-8

இந்தியாவின் மீது, தமிழகத்தின் மீதான தாக்கம், விளைவு: இந்தியாவில் ஷியாக்கள், சுன்னிகளால் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “ஷிர்க்” என்ற போர்வையில், சுன்னிகள், ஷியாக்களை மிரட்டி வைத்துள்ளனர் எனலாம். ஷியாக்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு, யாரும் தங்களது உரிமைகளைக் கேட்பதில்லை. ஆஜ்மீர், நாகூர் போன்ற தர்காக்களில் மொட்டைப் போட்டுக் கொண்டு சென்றலும், அவர்களும், இத்தீவிரவாத-ஜிஹாதி வகையறாக்களைக் கண்டிப்பதில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போன்றோரும், சுப்பித்துவம், சூபி இசை என்றெல்லாம் பேசி, தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டாலும், ஷியாக்கள் தாக்கப்படும் போது, கொல்லப்படும் போது, கண்டு கொள்வதில்லை. கிலாபத் இயக்கத்தை [1919-1922] ஆதரித்ததின் மூலம் காந்தி இந்திய முஸ்லிம்களைப் பிரித்தார். இன்றும் கிலாபத்தை மறுபடியும் நிறுவியதாக கூறிக்கொள்ளும் ஐசிஸ் ஷியாக்களை வேட்டையாடி வருகின்றது. கிலாபத்தை காந்தியும், ஐசிஸும் ஆதரித்தது-ஆதரிப்பது வினோதமே, ஆனால், உண்மை.

 

© வேதபிரகாஷ்

13-11-2016

shia-rights-watch_shia-death-in-july-2015

[1] தினத்தந்தி, பாகிஸ்தானில் பயங்கரம்:பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு 30 பேர் பலி, பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST.

[2] The Dawn, Tragic scenes at Shah Noorani shrine after bombing, 13th November 2016 | DAWN.COM

http://www.dawn.com/news/1295998/tragic-scenes-at-shah-noorani-shrine-after-bombing

[3] http://www.dailythanthi.com/News/World/2016/11/12195714/Several-feared-dead-in-a-blast-near-Shah-Nooranis.vpf

[4] மாலைமலர், பாகிஸ்தான் வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி, பதிவு: நவம்பர் 12, 2016 19:58.

[5] http://www.maalaimalar.com/News/World/2016/11/12195838/1050492/At-least-30-killed-in-huge-blast-in-Lasbellas-Shah.vpf

[6] தினமலர், பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு: 43 பேர் பலி; பலர் படுகாயம், பதிவு செய்த நாள்: நவம்பர்.12, 2016. 20.00; மாற்றம் செய்த நாள். நவம்பர்.12, 2016.00.34.

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1647324

[8] Express (UK), ISIS bomb at Muslim shrine kills at least 25 people in huge explosion in Pakistan, By KATIE MANSFIELD, 14:17, Sat, Nov 12, 2016 | UPDATED: 20:12, Sat, Nov 12, 2016

[9] http://www.express.co.uk/news/world/731590/explosion-pakistan-shah-noorani-shrine-death-toll-injured

[10] விகடன், பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 43 பேர் பலி, Posted Date : 23:16 (12/11/2016); Last updated : 23:15 (12/11/2016).

[11] http://www.vikatan.com/news/world/72258-huge-bomb-blast-in-dargah-shah-noorani-shrine-at-pakistan—43-feared-dead.art

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் – ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (3)?

ஒக்ரோபர் 26, 2016

 

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (3)?

muhammad-ghani-usman-and-adel-haddadi

சுபஹனி மொஹிதீன் மற்றும் மொஹம்மது கனி உஸ்மான் மிகவும் நெருங்கிய நண்பர்களாம்: சுபஹனியில் மிக்க நெருங்கிய நண்பன், லஸ்கர்-இ-தொய்பாவின் சிறந்த வெடிகுண்டு தயாரிப்பாளனான மொஹம்மது கனி உஸ்மான் [Mohammad Ghani Usman] ஆவான்[1]. இவன் பாரிஸ் குண்டுவெடிப்பு வழக்கில் சால்ஸ்பர்க் அருக்கில் ஆஸ்திரிய போலீஸாரால் டிசம்பர் 2015ல் கைதானான். மும்பை 26/11ல் தொடர்புள்ள உஸ்மான், அடெல் ஹட்டாட் [Adel Haddad] என்கின்ற ஐசிஸ் கூட்டாளியோடு பிரான்ஸில் நுழையும் போது பிடிபட்டான். இவர்கள் இருவரும் ஒரே படகில் கிரேக்கத் தீவான லெரோஸுக்குச் சென்றனர். அப்பொழுது, அவர்களுடன் அஹமது அல்-மொஹம்மது [Ahmed Al-Mohammed] மற்றும் மொஹம்மது அல்-மொஹம்மது [M al Mahmod] என்ற இருவரும் இருந்தனர். போலி பாஸ்போர்ட் மூலம் இவர்கள் பாரிஸில் நுழைந்தனர்[2]. அஹமது அல்-மொஹம்மது மற்றும் மொஹம்மது அல்-மொஹம்மது இருவரும் நவம்பர் 13, 2015 அன்று தங்களை ஸ்டேட் டி பிரான்ஸ் [Stade De France] என்ற இடத்தில் வெடித்துக் கொண்டனர். இப்படி தமிழக கடையநல்லூர்வாசி, இவர்கள் எல்லோருடனும் உல்லாசப் பயணம் செய்யவில்லை. ஆக, இவர்கள் எல்லோருமே ஒன்றாக பிரான்ஸில் ஜிஹாதி-குண்டுவெடிப்பு திட்டத்துடன் நுழைந்துள்ளனர்[3].

tatp-explosives-used-in-brusselsஹைதராபாதில் TATP-குண்டு-தயாரிப்பு-வெடிப்பிற்கு தொடர்புள்ள ரசாயனங்கள் பிடிபடல்: ஜூன் 29, 2016 அன்று ஹைதராபாதில் அப்துல்லா பின் அஹமது [Abdullah bin Ahmed] என்ற ஐசிஸ் ஆளின் வீட்டில் சோதனையிட்டபோது, வீட்டின் கீழறையில், மிக்க நச்சுத்தன்மை வாய்ந்த டிரை-அசிடோன் டிரை-பெராக்ஸைட் [triacetone triperoxide (TATP)] என்ற வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டது[4]. இதே TATP தான் பாரிஸ் குண்டுவெடிப்பிலும் உபயோகப்படுத்தப் பட்டது. 200 லிட்டர் அசிடோன், ஹைரஜன் பெராக்ஸை மட்டும் பாட்டிகளில் கந்தக அமிலம் முதலியவற்றை ஹபீப் மொஹம்மது என்கின்ற “சார்” [Habeeb Mohammad alias Sir] என்பவனிடமிருந்து வாங்கியிருந்தான்[5].  இவனுக்கு இவை எவ்வாறு கிடைத்தன, அவற்றை அப்துல்லா பின் அஹமதுக்கு ஏன் விற்றான் போன்ற கேள்விகளும் எழுகின்றன. இவையெல்லாம் நிச்சயமாக தமாஷுக்கு வாங்கி வைக்கவில்லை, ஏனெனில், இவற்றை வைத்துக் கொண்டு 40-50 IED என்கின்ற வெடிகுண்டுகள் தயாரிக்க முடியும். பிறகு, அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகின்றனர்?

isis-linked-july-2016-arrested-26-11-link-etcமொஹம்மது இப்ராஹிம் யஜ்தானி கீழே வேலை செய்பவர்கள், வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டவர்கள்: இவர்கள் எல்லோருமே மொஹம்மது இப்ராஹிம் யஜ்தானி [Mohammad Ibrahim Yazdani] என்பவனின் கீழ் வேலை செய்து வருகிறார்கள்[6]. சந்தேகம் வராமல் பொதுவாக வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் ரசாயனங்களை வைத்துக் கொண்டு வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி என்ற அத்தொழிற்நுட்பத்தை அவனிடமிருந்து தான் பெற்றனர்[7]. யஜ்தானி இந்த கலையை சிரியாவில் உள்ள ஷபி ஆர்மர் என்பவனிடமிருந்து கற்றுக் கொண்டான். இவன் தான் அர்மார் அல்லது யூசூப் அல்-ஹிந்த் [Syria-based Shafi Armar alias Yusuf Al Hindi] என்பவன். பட்கல்லில் இருந்த இவன் இப்பொழுது சைசிஸுக்காக வேலை செய்கிறான். ஜுனூத்  உல் முஜாஹித்தீன் மற்றும் அன்சுர்-உல் தௌஹீத் இல் பிலாத் அல்-ஹிந்த் போன்ற இயக்கங்களை நடத்தி, ஐசிஸுக்காகா ஆட்களை சேர்ப்பவன்[8]. பட்கல் என்பது கநாடகாவில் கடற்கரை நகரமாக இருக்கிறது. இங்கு முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றனர், அவர்களில் உள்ளவர்கள் தான் தீவிரவாத செயல்களில் அதிகமாக சம்பந்தப்பட்டுள்ளனர். குறிப்பாக யாசின் பட்கல், உள்ளூரில் எளிதாக கிடைக்கும் ரசாயனப் பொருட்களை வைத்து வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் வல்லவன். எனவே அங்கிருந்த அர்மார் இத்தகைய யுக்தியை கையாண்டு வெடிகுண்டுகளை தயாரிக்கிறான் என்பதில் வியப்பில்லை. பர்பனி குழுமம் [Parbhani module] என்று நடத்தி தனது நாசவேலைகளை செய்து வருபவன். சுபஹனியும் வெடிப்பொருட்கள் வாங்கியதிலும், கேரள நண்பவர்களுக்கு கொடுத்த விவகாரங்களிலும் தான் பிடிபட்டான். கேரளாவில் உள்ள முக்கிய அரசாங்க அதிகாரிகளைக் கொல்வதற்குதான், வெடிகுண்டுகள் தயாரிக்க அவற்றை மொஹித்தீன் வாங்கினான் என்று சொல்லப்பட்டது. ஆகையால், இவர்களுக்கு இந்த ரசாயனப் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் என்ன, அவற்றை வைத்துக் கொண்டு, இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதெல்லாம் ஆராயும் போது, அவர்களது குரூரத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.

subahani-haja-moideenகடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள்: பட்கல்-வெடிகுண்டு தயாரிப்பு முறை இவர்கள் எல்லோரிடத்திலும் வெளிப்படுகிறது. எப்படி முன்னர் இந்தியன் முஜாஹித்தீன் முறைகள் இவர்களிடம் வெளிப்பட்டனவோ, ஐசிஸ் உருவாகியப் பிறகு, அவர்களிடம் வெளிப்படுகிறது. ஐசிஸுக்கு பணம் அதிகமாக இருப்பதால், இவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு, அத்தகைய வெடிகுண்டு தயாரிப்பை செய்து வருகிறது. அவ்வகையில் உருவானது தான் “சாத்தானின் தாய்” எனப்படுகின்ற இந்த TATP-வெடிகுண்டு. இது பாரிஸில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது, ஹைதராபாத், கடையநல்லூர் தீவிரவாதிகளிடமும் வெளிப்படுகிறது. இந்த TATP-குண்டு தயாருக்கும் முறை, இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள சந்திப்புகள், நாடுகள் கடந்த பயணிப்புகள், சகவாசங்கள் முதலியன அவர்களது தீவிரவாத இணைப்புகளைக் காட்டுகின்றன. இதெல்லாம் தற்கெயலாக நடந்தவை என்று சொல்ல முடியாது. முஸ்லிம் இளைஞர்களாக இருந்து கொண்டு, நாட்டுப் பற்று இல்லாமல், இந்தியாவிற்கு எதிராக சதிதிட்டம் போடுதல், வெடிமருந்து பொருட்களை சேகரித்தல், வெடிகுண்டுகள் தயாரித்தல், மலை-காடுகள் பிரதேசங்களில் வெடித்து சோதனை செய்தல், பயிற்சிபெறுதல், குண்டுவெடிப்புகள் நிகழ்த்துதல் போன்றவை தீவிரவாத-பயங்கரவாத நாசவேலைகள் செய்வதையே எடுத்துக் காட்டுகின்றன. இப்பொழுது அனைத்துல ரீதியில் செயல்படுவதால், இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

26-10-2016

abdelhamid-abaaoud-paris-bomb-blast-plotter

[1] The Times of India, Tamil Nadu IS jihadi’s best pal was Pakistani bombmaker, Neeraj Chauhan| TNN | Updated: Oct 25, 2016, 02:10 IST.

[2] Usman, who Indian investigators feel also needs to be investigated for the 26/11Mumbai attacks conspiracy, was caught along with another ISIS operative — an Algerian national — Adel Haddadi while they were trying to enter France for “second wave of attacks in Europe”, as claimed by authorities there. It had turned out that Usman and Haddadi had travelled on the same boat to Greek Island of Leros on October 3, 2015 on which two Paris suicide bombers – Ahmed Al-Mohammed and M al Mahmod, who blew themselves up at Stade De France on November 13, 2015, were also there. Initially Usman and Haddadi were detained by Greek authorities as they were in possession of fake Syria passports in the name of Faycal Alaifan and Fozi Brahi respectively and were taking shelter as “refugees”.

[3] http://timesofindia.indiatimes.com/india/LeTs-bomb-expert-was-the-best-friend-of-IS-jihadi-from-India/articleshow/55039440.cms

[4]  A lethal explosive triacetone triperoxide (TATP) that was used by Islamic State (IS) bombers in the Paris and Brussels attacks was found in the basement of a Hyderabad house of a member – Abdullah bin Ahmed Al Amoodi alias Fahad of the IS module that was busted by the NIA on Wednesday.29-06-2016 –  the module led by Mohammad Ibrahim Yazdani – When Fahad’s residence was raided early on Wednesday morning, the NIA team found around 200 litres of acetone, hydrogen peroxide and bottles of sulphuric acid. Interrogation of the suspects revealed that the chemicals were enough to make 40-50 IEDs and were purchased by arrested member Habeeb Mohammad alias Sir from Anantapur and Hyderabad.

http://timesofindia.indiatimes.com/india/Explosives-links-Hyderabad-to-Paris-Brussels/articleshow/52998048.cms?

[5]The Times of India, Explosives links Hyderabad to Paris & Brussels, Neeraj Chauhan & Bharti Jain| TNN | Jul 1, 2016, 12.40 AM IST.

[6] http://timesofindia.indiatimes.com/india/Explosives-links-Hyderabad-to-Paris-Brussels/articleshow/52998048.cms?

[7] Investigators said Yazdani was guided by Syria-based Shafi Armar and had procured huge quantities of acetone, hydrogen peroxide and sulphuric acid, the primary ingredients of TATP. Often termed the ‘Mother of Satan’, the explosive is easy to make in a basement lab under controlled conditions with chemicals easily available at pharmacies, hardware shops and cosmetics stores, making it a popular choice of terror groups like al-Qaida and IS.

http://timesofindia.indiatimes.com/india/Explosives-links-Hyderabad-to-Paris-Brussels/articleshow/52998048.cms?

[8] Armar, a resident of Bhatkal in Karnataka and former Indian Mujahideen (IM) operative, headed and recruited Indians for the IS and its regional franchisee Junood ul Khalifa-e-Hind. He had also headed Ansar-ul Tawhid fil Bilad al-Hind, which too has links with IS.

http://www.dnaindia.com/mumbai/report-cops-suspect-syria-based-parbhani-handler-could-be-im-man-2250499

மோடியை விமர்சித்த முஸ்லிம் நடிகை கொலை செய்யப்பட்டாள் – மிஸ்டர் மோடி காஷ்மீரை எங்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று கேட்டவள்!

ஜூலை 19, 2016

மோடியை விமர்சித்த முஸ்லிம் நடிகை கொலை செய்யப்பட்டாள் – மிஸ்டர் மோடி காஷ்மீரை எங்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று கேட்டவள்!

How-qandeel-was killed by his brother-shot dead in Multan

15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று கொலை செய்யப்பட்டது: இந்நிலையில்தான் 15-07-2016 வெள்ளிக்கிழமை இரவு அவர் தனது வீட்டில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார்[1]. சனிக்கிழமை என்று சில பாகிஸ்தான் நாளிதழ்கள் கூறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்ப வீட்டில் வைத்து அவருடைய குரல்வளையை நெரித்துக் கொன்றதை சகோதரர் வாசீம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஒத்துக்கொண்டார் என்கிறது தமிழ்.பிபிசி[2]. பாகிஸ்தானிலேயே, முதலில் அவள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டாள் என்று செய்திகள் வெளியாகின[3]. அவரது சகோதரர் வசீம் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது[4]. அவர் வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை தேடி வந்த போலீசார், 16-07-2016 சனிக்கிழமை இரவு பஞ்சாப்  மாகாணத்தில் உள்ள  தேரா  காசி கான் பகுதியில் கைது செய்தனர். பிபிசியின் படி “ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்ப வீட்டில் வைத்து அவருடைய குரல்வளையை நெரித்துக் கொன்றதை சகோதரர் வாசீம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஒத்துக்கொண்டார்”, என்றால், 16-07-2016 சனிக்கிழமை இரவு பஞ்சாப்  மாகாணத்தில் உள்ள  தேரா  காசி கான் பகுதியில் கைது செய்தனர் என்பது சரியாக இருக்க முடியும். இது வெள்ளிக்கிழமையில் நடந்த ஜிஹாதி கொலை என்பதனை மறைக்க முயல்வது போல தெரிகிறது.

Qanteel Bloch - brother killerகொலைசெய்த சகோதரன் கூறியது: கைது செய்யப்பட்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் வசீம் பேசும்பொழுது தெரிவித்ததாவது, “எனது தங்கைக்கு மயக்க மருந்து குடுத்து அவர் உறங்கும் பொழுது கழுத்தை நெரித்துக் கொன்றேன. சமூக வலைதளங்களில்   அவளது நடவடிக்கைகள் மூலம் எங்கள் குடும்பத்திற்கு தீராத அவப்பெயரை உண்டாக்கி விட்டாள். பலூச் இனத்திற்கே எனது தங்கையால் அவப்பெயர் வந்து விட்டது. ஆபாசப் படங்களைப் போட்டு எங்களது சமூகத்தை அவர் கேவலப்படுத்தி வந்தார்[5]. மேலும் மதகுரு முஃதி காவியுடன் அவள் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் முக்கியமான ஒன்றாகும். நான் அவளைக் கொன்றதே அவளுக்கு தெரியாது. அவளுக்கு மயக்க மருந்தை மாத்திரை வடிவில்   கொடுத்து விட்டு அவள் உறங்கும் பொழுது கழுத்தை நெறித்துக் கொன்றேன்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்[6]. இந்தக் கொலை குறித்து கருத்து தெரிவித்த வசீமின் தந்தை முஹம்மத் அஷீம், இந்த கொலையை வசீம் அவனது சகோதரன் முக்கமது அஸ்லம் சஹீனின் தூண்டுதலின் பேரில் செய்தான் என்று தெரிவித்தார். இந்நிலையில் குவாந்தீல் பலூச்சின் உடலை அவரது சொந்த ஊரான சாசாதார்தின் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து விசாரித்த காவல்துறையினர். குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக அவரது அண்ணனே பலோச்சை ஆணவக் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்[7]. பாகிஸ்தானில், சமீபத்தில் ஆணவக்கொலைகள் அதிகரித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பிரபல மாடல் அழகி கொலை செய்யப்பட்டிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது[8]. ஆண்டொன்றுக்கு 100க்கும் மேலான கொலைகள் நடக்கின்றன.

qandeel marriage certificateகௌரவ கொலையா, மதக்கொலையா, ஜிஹாதி கொலையா – பின்னணி என்ன?: பாகிஸ்தானிய ஊடகங்களே இக்கொலையை பலவிதமாகச் சித்தரித்துள்ளன. மனித உரிமை குழுக்கள் இதனை கௌரவக் கொலையாக கருதுகின்றன. இதனை எதிர்த்து ஆர்பாட்டமும் நடத்தியுள்ளனர். ஆனால், குவான்தீன் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்து மாடல், நடிகை என்றெல்லாம் உலா வந்ததாலும், பேஸ்புக்கில் பலரை விமர்சித்ததாலும், அவள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக இருந்தாள் என்று மதவாதிகள் தீர்மானித்திருந்தனர். அந்நிலையில் அவள் கொலை செய்யப் பட்டிருந்தால், அதனை மதக்கொலை எனலாம். ஆசார இஸ்லாத்தை நீர்த்தாள், பர்தாவிலிருந்து வெளிவந்தாள், ஹிஜாபை துறந்தாள், இஸ்லாமாக வாழவில்லை என்று அவளை அடுக்கடுக்காக குறைகூறி குற்றஞ்சாட்டியுள்ளனர். அவளது சகோதரன் கொடுத்த விளக்கம், மற்றும், அவளை கொலை செய்தலால், சுவர்க்கத்தின் கதவு தனக்காக திறந்திருக்கிறது என்றேல்லாம் பேசியதைப் பார்த்தால், இது ஒரு ஜிஹாதி கொலை என்று தோன்றுகிறது[9]. “அவளைக் கொன்றதற்காக நான் வருத்தப்படவில்லை. மாறாக பெருமைப்படுகிறேன். என்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களின் மனவருத்தத்தை நீக்கியதற்காக, சுவர்க்கத்தில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளேன். நான் என்னுடைய குடும்ப மானத்தைக் காத்துள்ளேன், நான் எந்த டண்டனைக்கும் தயாராக உள்ளேன்”, என்றான்[10]. ஆக ஒரு ஜிஹாதி பேசுவதைப் போல பேசியுள்ளான்[11].

Qandeel-Baloch-admits-her-marriageகுவான்தீல் பலூச்சின் வீடியோ பேச்சுகள்: பாகிஸ்தான் ட்ரிப்யூன் கீழ்கண்ட ஐந்து வீடியோக்களை தொகுத்து வெளியிட்டுள்ளது[12]. பொறுமையாக அவற்றை கேட்கும் போது, ஒரு முஸ்லிம் என்ற நிலையில் அவர் பேசியுள்ளது தெரிகிறது. அவளது சகோதரன், இவற்றைக் கேட்டிருந்தால், நிச்சயமாக அவன் கொன்றிருக்க மாட்டான். ஆனால், அதே நேரத்தில் அடிப்படைவாத முஸ்லிம், ஒரு பெண் இவ்வளவு தைரியசாலியாக, அறிவாளியாக இருப்பதையும் விரும்பியிருக்க மாட்டான்.கஊழலைத் தட்டிக் கேட்டதால், அரசியல்வாதிகளும் அதிருப்தி அடைந்திருப்பார்கள்.

எண் வீடியோ விவரம் நேரம் – நிமிடம்-நொடி விடியோ லிங்
1 பேஸ்புக்கில் தன்னை வெறுத்தவர்களை, தைரியமாக நேர்கொண்டு பதில் அளித்தாள். 1.46 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/714341198710635/
2 பாகிஸ்தான் தோற்றதற்கு ஷஹீத் அப்ரிதை திட்டியது. 1.34 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/788099754668112/
3 முஸரப், இம்ரான் கான் முதலியோரது அரசியல் ஊழலைப் பற்றி விமர்சித்தது. 2.04 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/749377201873701/
4 இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கேள்வி கேட்டது. 5.16 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/785186261626128/
5 தனக்குத்தானே, ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டது. 0.49 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/707321109412644/

அவள் பேசும் விதம், அவள் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அரசியல் நிகழ்வுகளை நன்றாக அறிந்திருக்கிறாள் என்று தெரிகிறது. இந்தியாவில் கூட எந்த நடிகையும் இந்த அளவுக்கு தைரியமாக பதில் சொல்லியிருக்க முடியாது.

© வேதபிரகாஷ்

19-07-2016

With mufti - Qanteel Bloch

[1]http://www.dinamani.com/world/2016/07/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81/article3533905.ece

[2] பிபிசி.தமிழ், பாகிஸ்தான் மாடல் அழகியை கொலை செய்த அவரது சகோதரர் கைது, 17 ஜூலை 2016.

[3] https://jang.com.pk/latest/138693-qandeel-baloch-shot-dead-in-multan; http://atv.com.pk/qandeel-baloch-shot-dead/

[4] http://www.bbc.com/tamil/global/2016/07/160717_pak_model_brother

[5] தமிழ்.ஒன்.இந்தியா, பலூச் இனத்தின் அவமானச் சின்னம் என் தங்கை.. பாக். அழகியின் அண்ணன் வாக்குமூலம், By: Sutha, Updated: Monday, July 18, 2016, 11:38 [IST]

[6] http://tamil.oneindia.com/news/international/qandeel-balooch-killing-she-was-drugged-before-murder-258248.html

[7] நியூஸ்.7.டிவி, நிர்வாண சவால் விடுத்த பாகிஸ்தான் மாடல் அழகி ஆணவக்கொலை!, July 17, 2016.

[8]  http://ns7.tv/ta/qandeel-baloch-case-brother-held-pakistan-celebritys-murder.html

[9] http://edition.cnn.com/2016/07/18/asia/pakistan-qandeel-baloch-brother-confession/

[10]  “I have no regrets. Instead I am proud of what I did,” he added. “I have earned a place in heaven by relieving the agony of my parents and family.” Waseem, who said he has decided not to hire a lawyer, recorded his confessional statement in court on Sunday. “I saved my family’s honour and I’m ready for any punishment,” he said.

http://www.samaa.tv/pakistan/2016/07/qandeels-brother-says-he-earned-a-place-in-heaven-by-killing-her/

[11] samaa.tv/pakistan, Qandeel’s brother says he earned “a place in heaven” by killing her, July 18, 2016, By: Samaa Web Desk

[12] http://tribune.com.pk/story/1143002/5-times-qandeel-baloch-brutally-honest/

 

பாகிஸ்தான் நடிகை கொலை – ஆணவக் கொலையா, கௌரவ கொலையா, மதக்கொலையா, ஜிஹாதி கொலையா – பின்னணி என்ன?

ஜூலை 19, 2016

பாகிஸ்தான் நடிகை கொலை – ஆணவக் கொலையா, கௌரவ கொலையா, மதக்கொலையா, ஜிஹாதி கொலையா – பின்னணி என்ன?

How-qandeel-was killed by his brother

பவுசியா அஷீம், குவாந்தீல் பலூச் ஆகி, நடிகைமாடல் ஆனது: பாகிஸ்தானைச் சேர்ந்தவர் குவாந்தீல் பலூச் (26). இவரது இயற்பெயர் பவுசியா அஷீம். பாகிஸ்தானில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர். அத்துடன் மாடலிங்கிலும் ஈடுபட்டு வருகிறார். மாடலிங்கில் ஈடுபட ஆரம்பித்தவுடன் தனது பெயரை குவாந்தீல் பலூச் என்று மாற்றிக் கொண்டார். மாடலிங்கில் அவருக்கு கிடைத்த புகழை விட சமூக வலைதளங்களில் அவரால் வெளியிடப்பட்ட அவரது வீடியோக்கள் மற்றும் ஏடாகூட”செல்பி” புகைப்படங்கள் மூலம் அவரது ரசிகர் கூட்டம் பெருகியது[1]. அத்துடன் முகநூலில் வெளியிட்ட அவரது சர்ச்சைக்குரிய சுய விளம்பரம் தேடும் கருத்துக்கள் மூலமும் புகழ்பெற்றார்[2]. கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிதியை திட்டி தீர்த்து வீடியோ வெளி யிட்டார். அண்மையில் அவரது சர்ச்சைக்குரிய இசை ஆல்பம் ஒன்றும் வெளியானது. ஆனால், பழமைவாதிகளால் அவர் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தார்.

_qandeel_baloch_640x360_qandeelquebee_nocreditஇந்திய தொலைக் காட்சியின்பிக்பாஸ்ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு கொடுத்தது: சமூகவலைத்தளம் மூலம் உல களாவிய அளவில் அவர் பிரபலமானதால் இந்திய தொலைக் காட்சியின் ‘பிக்பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் நட்சத்திரங்களில் இணையத்தில் அதிகம் தேடப்படும் 10 பேரில் ஒருவராக குவான்டீல் பிரபலமடைந்தார். பழமைவாதிகள் அவருக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்தனர். இதன்காரணமாக கராச்சியில் வசித்து வந்த அவர் பாதுகாப்பு கருதி முல்தானில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அவருக்கு உடன் பிறந்த 2 சகோதரிகளும் 5 சகோதரர்களும் உள்ளனர். குவான்டீலின் சமூக வலைத்தள வாழ்க்கையை குடும்பத்தினர் விரும்பவில்லை[3]. வெளியில் பெரிய அளவில் புகழ் பெற்ற போதும் அவரது மாடலிங் தொழில் மற்றும் சமூக வலைதள நடவடிக்கைகளுக்கு அவரது குடும்பத்தார் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது.   மாடலிங் தொழிலை விட்டு விலகும்படி அவரது சகோதரர் மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்பகிறது.

qandeel-650x425முஃப்தி அப்துல் குவாயின் நிலை: அண்மையில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்தவரும், மத குருவுமான முஃப்தி அப்துல் குவாய் [member of Central Ruet-e-Hilal Committee, Mufti Abdul Qawi] என்பவருடன் செல்ஃபி எடுத்து, அதனை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்தியாவில் இத்தகைய படங்களை வைத்து, ஊடகங்கள் “இன்னொரு நித்தியானந்தா” என்றெல்லாம் விவரிப்பர். படங்களுடன் செய்திகளை வெளியிட்டு கலாட்டா செய்வர். ஆனால், இவ்விசயத்தில் அமுக்கப் பார்க்கின்றன போலும். இதனைத் தொடர்ந்து முஃப்தி அப்துல் குவாய் மத நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டது மற்றும் மத்திய ருயத்-இ-ஹிலால் கமிட்டி உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார் [4].  குவாந்தீல் இம்ரான் கானை சந்திக்க வேண்டும் என்று தன்னிடம் சொன்னதாகவும், ஆனால், அச்சந்திப்பு நிகழவில்லை என்றும் முப்தி கூறினார். ஆனால், இத்தகைய “மரியாதை கொலைகளை” இஸ்லாம் அனுமதிப்பதில்லை மற்றும் பலூச்சின் கொலையை ஷரியத்தின் படியும் நியாயப்படுத்த முடியாது என்றார்[5]. மேலும் தான் பலுச்சை நல்வழிபடுத்த அறிவுறுத்தியதாகவும், பாவம் செய்யக்கூடாது என்று போதித்ததாகவும் கூறினார்[6]. இது (பலூச்சின் கொலை) ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றார்[7]. இவரை போலீஸார் விசாரிக்க வேண்டுமா, கூடாது என்பது பற்றி மாறுபட்ட கருத்து நிலவுகிறது[8]. ஆக இறுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தான் விஞ்சியது என்றாகிறது.

Mufti Qavi removed from Ruet-e-Hilal Committee after controversial selfies with Qandeel Balochதென்னாப்பிரிக்கா, வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுகளில் வேலை செய்தது (2007-2012): பௌசியா ஆஸீம் மார்ச்.1, 1990ல் பிறந்தாள். 2003-04ல் 14 வயதில் எட்டாவது படிக்கும் போதே, ஒரு பையனை காதலித்தாள், ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ள நினைத்தாள், ஆனால் நடக்கவில்லை, அவன் ஏமாற்றி விட்டான் என்றெல்லாம் பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகின்றன[9]. இதனால், தான் தனித்து இருக்க விரும்பினாள். அந்த ஏமாற்றம் திருப்பு முனையாக அமைந்தது. ஒரு பேருந்து கம்பெனியில் சேர்ந்து வேலை செய்தாள். 2007ல், அதாவது 17 வயதில் தென்னாப்பிரிக்காவுக்கு தைரியமாக சென்று வேலைக்கு சென்றாள். பிறகு, வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வேலை செய்துள்ளாள். அப்படியென்றால், அவளுக்கு அந்த அளவுக்கு துணொவும், தைரியமும் இருந்திருக்க வேண்டும். யாராவது உதவினார்களா போன்ற விவரங்கள் தெரியவில்லை. பிறகு தான் பாகிஸ்தானுக்கு வந்து நடிப்பு மூலம் தனது திறமைகளை வெளிகாட்டத் தீர்மானித்தாள்[10]. அப்படியென்றால், பத்தாண்டுகளில் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள், உழைத்திருப்பாள் என்பதை கவனிக்க வேண்டும். 2013க்குப் பிறகு தான் அவள் பிரபலமடைந்தாள். வழக்கம் போல தமிழ் ஊடகங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “நிர்வாண சவால் புகழ் பாகிஸ்தான் மாடல் கொலை!” என்று தலைப்பிட்டுதான் செய்திகளை வெளியிட்டுள்ளன.

Bloch husband and m-in-Lகாதல் போல, திருமணமும் தோல்வியில் முடிந்தது (2008-09): குவான்டிலுக்கு 17 வயதிலேயே அவரது பெற்றோர் ஆஷிக் ஹுஸைன் என்பவருக்கு திருமணம் 2008ல் செய்து வைத்தனர்[11]. 2009ல் ஒரு குழந்தை பிறந்தது. ஒரு வருடத்திலேயே அந்த பந்தம் முறிவுக்கு வந்தது. அது ஒரு காதல் திருமணம், பலூச் தனக்கு காதல் கடிதங்களை ரத்ததினால் எழுதினாள் என்றெல்லாம் அவர் சொன்னார்[12]. அவள் தனக்கு பங்களா வேண்டும் என்றெல்லாம் கேட்ட்டாள், அவளுக்காக தான் அதிகமாக செலவிழக்க வேண்டியிருந்தது என்றெல்லாம் குற்றஞ்சாட்டினார். அவளே பல நாடுகளுக்குச் சென்று வேலை செய்து சம்பாதித்துள்ளாள் எனும் போது, கணவனிடம் ஏன் பணம் கேட்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. அவர் மேலும், பலூச் மூன்று திருமணங்கள் செய்து கொண்டால் என்றும் கூறினார்[13]. தினம் தினம் தன்னை கணவர் அடித்து சித்ரவதை செய்ததாக குவான்டில் கூறியுள்ளார்[14]. சீறிய வயதான, அழகான மனைவியுடன் அவரால் வாழ முடியவில்லை என்றால், அவர் மீது ஏதோ தவறுள்ளது என்ற் தெரிகிறது. அவருடன் குடும்பம் நடத்த முடியாமல், குழந்தையுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள தாரூல் அமானில் போய் அகதியாக வாழ்க்கை நடத்தி வந்தார். பின்னர் தாய்நாடு திரும்பிய குவான்டில், அடிக்கடி சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்டு வந்தார்[15].

Bloch husband and son17லிருந்து 26 வயதில் மூன்று திருமணம் செய்து கொண்டு, ஒரு பையனைப் பெற்ற நடிகை: தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான்கானை காதலிப் பதாகவும் அவரை திருமணம் செய்ய காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் குவான்டீல் பகிரங்கமாக அறிவித்தார். இதனிடையே குவான்டீலுக்கு ஏற்கெனவே 3 முறை திருமணமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து அவர் கூறியபோது பெற்றோர் வற்புறுத் தலால் இளம் வயதில் கட்டாய திருமணம் செய்து விவகாரத்து பெற்றுவிட்டதாகக் தெரிவித்தார். அவருக்கு 7 வயதில் ஒரு மகன் இருப்பதையும் ஒப்புக்கொண்டார்[16]. இதெல்லாம் வழக்கம் போல, பிரபலமடைய அவள் கடைபிடித்த யுக்திகள் என்றே தோன்றுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று உள்துறை அமைச்சர் மற்றும் டி.எஸ்.பியிடம் புகார் கொடுத்திருந்தார்[17]. ஆனால், அரசு நிச்சயமாக கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.

© வேதபிரகாஷ்

19-07-2016

Qandeel Baloch with her ex-husband Aashiq Hussain

[1] https://www.facebook.com/OfficialQandeelBaloch/

[2] தினமணி, பாகிஸ்தான் மாடல் அழகியைகவுரவக் கொலைசெய்த சகோதரர் கைது, By DN, முல்தான், First Published : 17 July 2016 02:35

[3]http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D/article8859718.ece

[4] விகடன், நிர்வாண சவால் புகழ் பாகிஸ்தான் மாடல் கொலை!, Posted Date : 13:46 (16/07/2016).

[5] Earlier today, Qawi said that neither Islam permits killing for ‘honour’ nor Qandeel Baloch’s murder could be justified through sharia. While talking to the media in a mosque in Multan’s Qadeerabad, Qawi said that none could justify murder for ‘honour’ of the family in light of Islam and murderer Wasim should be punished.

http://dunyanews.tv/en/Pakistan/345483-Police-decide-to-interrogate-Mufti-Qawi-in-Qandeel

[6] easternmirrornagaland.com, Qandeel Baloch’s murder a lesson for others: Mufti Abdul Qawi, By PTI  /  July 18, 2016.

[7] http://www.easternmirrornagaland.com/qandeel-balochs-murder-a-lesson-for-others-mufti-abdul-qawi/

[8]  Dunya News, Police decide to interrogate Mufti Qawi in Qandeel Baloch murder case,  Last Updated On 18 July,2016 03:53 pm

[9] http://en.dailypakistan.com.pk/pakistan/qandeel-balochs-another-husband-with-son-come-forward-model-claims-it-was-forced-marriage/

[10] Back in 2003-04, when she was still in the eighth grade, she fell in love with a boy and they both decided to elope together. Unfortunately, the day Fouzia fled her home the boy she was in love with ditched her. This betrayal marked a turning point in the model’s life who then decided to become completely self-reliant in life. She joined a bus transport company as a hostess and braved the grim challenges of life. Back then, she was reportedly in touch with her family. However, she later decided to move on with her life and joined show business with a new name Qandeel Baloch. In 2007, she went to South Africa to earn money for herself. She later worked in the Middle East and various European countries before opting to return back to Pakistan to work on her acting skills.

http://en.dailypakistan.com.pk/pakistan/qandeel-balochs-another-husband-with-son-come-forward-model-claims-it-was-forced-marriage/

[11] The Express Tribune, Plot thickens: Qandeel Baloch was once married and has a son, By News Desk, Published: July 14, 2016

[12] Daily Pakistan Global, Qandeel Baloch married thrice, not twice, claims ex-husband, Khurram Shahzad, July 14, 2016 8:41 pm

[13] http://en.dailypakistan.com.pk/pakistan/qandeel-baloch-married-thrice-not-twice-claims-ex-husband/

[14] http://tribune.com.pk/story/1141469/plot-thickens-qandeel-baloch-married-son/

[15] http://www.vikatan.com/news/world/66243-pakistani-model-qandeel-baloch-killed.art

[16] தி.இந்து, பாகிஸ்தான் நடிகை கவுரவ கொலை: இந்திய கிரிக்கெட் அணிக்கு சவால் விடுத்தவர், Published: July 16, 2016 16:06 ISTUpdated: July 17, 2016 11:43 IST.

[17] Weeks before her murder, however, Qandeel had notified the Interior Minister and Senior Superintendent of Police in Islamabad about the threatening calls she had been receiving, and had requested security.

http://www.catchnews.com/world-news/why-the-qandeel-baloch-story-reveals-society-s-darker-side-1468839244.html/2

கேரள ஐஎஸ் தொடர்புகள், லவ்-ஜிஹாத், வேலைவாய்ப்பு போர்வையில் ஆட்சேர்ப்பு – யுத்தபூமியை நோக்கி பயணம்!

ஜூலை 16, 2016

கேரள ஐஎஸ் தொடர்புகள், லவ்-ஜிஹாத், வேலைவாய்ப்பு போர்வையில் ஆட்சேர்ப்பு – யுத்தபூமியை நோக்கி பயணம்!

Kerala Isis nexus- confirmed

முதலமைச்சர் ஒப்புக் கொண்டார்: சட்டசபையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன்[1], “காசர்கோடில் இருந்து 17 பேரும், பாலக்காட்டில் இருந்து 4 பேரும் மாயமாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாயமானவர்களில் காசர்கோட்டில் இருந்து 4 பெண்கள், 3 குழந்தைகளும், பாலக்காட்டில் இருந்து 2 பெண்களும் அடங்குவர். பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்தார். ஊடகங்களில் வெளியான தகவலின்படி இவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர். மும்பை விமான நிலையத்தில் காத்திருந்த காசர்கோடு பகுதியை சேர்ந்த பிரோஸ் என்பவர் அண்மையில் கைதாகியுள்ளார். 10-07-2016 அன்று மும்பையில் பெரோஸ் கான் என்பவன் கைது செய்யப்பட்டதிலிருந்து, கேரள இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது[2].

Kerala Isis nexus- confirmed- youth after conversionஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவாகி வருகிறது: கேரள இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவது தொடர்பான விவகாரத்தை அரசு மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது[3]. மத்திய அரசின் ஆதரவுடன் இதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்தவொரு தீவிரவாத நடவடிக்கையையும் அரசு பொறுத்துக் கொள்ளாது. நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் அரசியல் ஆதாயத்துக்காக இந்த விவகாரத்தை பெரிது படுத்தவும் அனுமதிக்க மாட்டோம். இப்பிரச்சினையால் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான மனோபாவம் வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவாகி வருகிறது. ஒரு சிலர் வேண்டுமென்றே மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். கேரளாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எந்தவொரு தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஏற்க மாட்டார்கள். வெறும் அரசால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றாக கைகோர்த்தால் மட்டுமே தீய சக்திகளை தனிமைப்படுத்தி களையெடுக்க முடியும்”, என்று சட்டசபையில் பேசியுள்ளார்[4]. கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரையில், இது அவர்களே வளர்த்து விட்ட விவகாரம் ஆகும். அரசியல் மற்றும் இதர சம்பந்தங்களை தாராளமாக வைத்துக் கொண்டு அனுபவித்து வருகின்றனர்.

Kerala jouranalist joins ISISஜிஹாதிகள் பெற்றோர்களையும், ஏன் குடும்பத்தையே தீவிரவாதிகளாக்க முயற்சிப்பது: கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காட்டை சேர்ந்த 16 பேர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திடீரென மாயமானார்கள். இவர்களில் 4 பெண்களும் 2 குழந்தைகளும் உண்டு. இவர்கள் இலங்கை மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். இதன்பிறகு கடந்த ஒரு மாதமாகியும் இவர்களை பற்றிய எந்த தகவலும் வரவில்லை. இந்நிலையில் காணாமல் போன ஹபீசுதீன் என்பவரின் மனைவி செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. அந்த செய்தியில், “நாங்கள் சொர்க்க ராஜ்ஜியத்திற்கு வந்து விட்டோம். இனி எங்களை தேட வேண்டாம். நாங்கள் இஸ்லாமிய நாட்டிற்கு வந்து விட்டோம். இங்கு நிரபராதிகளை அமெரிக்கா கொன்று குவிக்கிறது. எனவே அவர்களை பழிவாங்குவதற்காக ஐஎஸ் அமைப்புக்காக நாங்கள் எங்களை அர்ப்பணித்து விட்டோம். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி புரிய வைக்க வேண்டும். அவர்களையும் ஐஎஸ் அமைப்பிற்கு அழைத்து கொண்டு வரவேண்டும்”, என்று குறிப்பிடப்பட்டிருந்தது[5].  அதாவது, குடும்பத்தையே தீவிரவாதிகளாக்க திட்டம் இருப்பது வெளிப்படுகிறது. மேலும், இது கேரளாவிலிருந்து தீவிரவாதிகளாக்க ஏற்றுமதி நடக்கிறது எனலாம். முன்பு கன்னியாஸ்த்ரிக்கள், நர்ஸுகள் மாதிரி, இப்பொழுது இவர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள்.

Kerala Isis nexusதீவிரவாதியின் தகவல் படித்து திகைத்துப் போன மனைவி: இதை பார்த்து ஹபீசுதீனின் மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து கணவரின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் காசர்கோடு எம்பி கருணாகரன், எம்எல்ஏ ராஜகோபாலன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனிடமும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக விசாரணை நடத்த கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவுக்கு முதல்வர் உத்தரவிட்டார். உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காசர்கோடு மாவட்டம் திருக்கரிப்பூரை சேர்ந்த டாக்டர் இஜாஸ் என்பவர் தலைமையில் 16 பேரும் சிரியாவுக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது[6]. காசர்கோடில் உள்ள அப்துல் ரஸீத் (29) அப்துல்லா [Abdul Rasheed]  என்பவன் அப்துல்லாவின் மகன் [Abdulla] இவர்களை இவ்வழிக்கு இழுத்துள்ளான் என்று தெரிகிறது[7]. இவன் பெங்களுரில் இஞ்சினியரிங் படித்து மும்பைக்கு வியாபாரம் நிமித்தம் சென்று வருகிறான்[8]. ஈஸா மற்றும் யாஹியாவின் தந்தை வின்சென்ட், தன்னுடைய மகள்கள் ஜாகிர் நாயக்கின் பிரச்சாரத்தால் கவரப்பட்டார்கள் என்கிறார்[9].

Kerala, Kashmir becoming hub of ISISதமிழகத்தின் மீதான தாக்கம்: கேரளாவில் இருந்து ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்கள், தமிழக எல்லையில் உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் தமிழகத்தில் இருந்து யாரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்க, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை காவல் துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படுபவர்களில் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகுதியைச் சேர்ந்த பிடிஎஸ் மாணவி நிமிஷா என்ற பாத்திமாவும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. இவரது தாய் பிந்து. தனது மகளும் ஐஎஸ்சில் சேர்ந்ததாக நேற்று பத்திரிகைகளில் தகவல் வந்த பிறகுதான் அவருக்கு இது தெரியவந்துள்ளது. இதுபோல் கொச்சியை சேர்ந்த ஒரு பெண்ணும் ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமாணவிகளை குறிவைத்து காதலித்து திருமணம் செய்வதோடு அவர்களை ஐ.எஸ் அமைப்பில் இணைத்து விடுகின்றனர்.

Missing Keralites links with ISIS confirmed - Kaumudi onlineமத்திய அரசின் விசாரணை: இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உளவுத்துறையான ரா அதிகாரிகள் கேரளா வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர்கள் காசர்கோட்டிலும் மங்களூரிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூரில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் அமைப்பு செயல்படுவதாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. சிறப்பு புலனாய்வு குழுவினரால் “ஐஎஸ்சில் சேர்ந்தவர்கள்”, அவர்களது உறவினர்கள் முதலியோரது தொலைபேசி-அலைபேசி விவரங்கள் ஆராயப்படுகின்றன[10]. இதன் மூலம், இறுதியாக அவர்கள் எங்கிருந்து யாருடன் தொடர்பு கொண்டார்கள் என்று தெரிய வரும்[11].

© வேதபிரகாஷ்

16-07-2016

[1] http://tamil.oneindia.com/news/india/21-missing-from-kerala-may-be-is-camps-cm-257874.html

[2] Firoz Khan, a 24-year-old from Trikaripur in Kerala’s Kasargod district, was arrested yesterday (10-07-2016) evening by officers of the Intelligence Bureau from Mumbai. He was nabbed from a hotel in Dongri in Mumbai. Firoz had left for Mumbai on June 22 on the pretext of going to Kerala’s Kozhikode city. A phone call Firoz made to inform his family about his whereabouts is what trapped him. During the call, he said some others who went missing from his village have reached IS camps in Syria, says a Manorama report.

[3] தி.இந்து, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த விவகாரம்: கேரள மாநிலத்தில் இருந்து 6 பெண்கள் உட்பட 21 பேர் மாயம் – சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தகவல், Published: July 12, 2016 09:49 ISTUpdated: July 12, 2016 10:02 IST.

[4] http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%AA%E0%AF%86

[5] தினகரன், ஐஎஸ் தீவிரவாதிகளான கேரள வாலிபர்கள்: தமிழகத்தில் உளவுத்துறை உஷார், Date: 2016-07-10@ 00:16:56

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=230018

[7] Reports said that a person called Abdul Rasheed Abdulla is suspected to have led the youths on to the terror path.

http://english.manoramaonline.com/in-depth/is-kerala-terrorism/kerala-jihadi-threat-missing-youths-story-in-points.html

[8] http://www.kaumudi.com/innerpage1.php?newsid=80207

[9] Father of Eesa and Yahiya, Vincent, alleged that his sons were influenced by Islamic preacher Zakir Naik

http://english.manoramaonline.com/news/just-in/people-missing-kasaragod-kerala-police-isis-islamic-state.html

[10] english.manoramaonline, ISIS links: Kerala police analyzing phone records, Thursday 14 July 2016 10:58 AM IST, byOur Correspondent

[11] http://english.manoramaonline.com/in-depth/is-kerala-terrorism/isis-links-kerala-missing-youth-police-tracking-phone-records.html

கேரள ஐஎஸ் தொடர்புகள், 1970ல் மேற்கொண்ட கம்யூனிஸ்டுகளின் மலபுரம் பரிசோதனை 2016ல் இவ்வாறான நிலையில் உள்ளது!

ஜூலை 16, 2016

கேரள ஐஎஸ் தொடர்புகள், 1970ல் மேற்கொண்ட கம்யூனிஸ்டுகளின் மலபுரம் பரிசோதனை 2016ல் இவ்வாறான நிலையில் உள்ளது!

Sanheetha Nataka Academy kerala oppose hanging of afsal guru

ஜிஹாதி இஸ்லாத்தை நோக்கி, கேரள முஸ்லிம்கள் செல்வது: மலையாள முஸ்லிம்கள் இந்தியாவுக்கு எதிராக போராடுவது ஒன்றும் புதியதல்ல. 2008ல், காஷ்மீரில் ராணுவத்தினருடன் நடைபெற்ற சண்டையில் இறந்தவர்களைப் பற்றி ஆராய்ந்ததில், அவர்கள் கேரளாவிலிருந்து வந்தது தெரிய வந்தது.  9/11 மற்றும் 26/11 ஜிஹாதி-தீவிரவாதி டேவிட் கோல்மென் ஹெட்மேன் மூணாறில் உள்ள டாடாவின் விருந்தினர் மாளிகையில் வந்து தங்கியிருந்து, நோட்டம் விட்டிருக்கிறான். 1990களிலிருந்தே கேரளாவில் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதத்துடன் சேர்ந்து செயல்பட ஆரம்பித்து விட்டது[1]. அதாவது, உள்ளூர் முஸ்லிம்கள் ஆதரவு இல்லாமல், இக்காரியங்கள் எல்லாம் நடக்காது என்பதனை இவ்விவகாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஷரீயத் சட்டம் அமூல் படுத்தப் படவேண்டும், இஸ்லாமிய அரசு ஏற்படுத்தப் படவேண்டும் என்பதெல்லாம் அதன் திட்டமாகும்[2]. அப்பொழுது தான் தூய்மையான, உண்மையான இஸ்லாத்தை அடைய முடியும், அதற்கு முகமது நபி இருந்து, வழிநடத்திய பூமிக்குச் சென்றால் தான் தமக்கு அவரது அருள் கிடைக்கும், தானும் சிறந்த ஜிஹாதியாக மாற முடியும், பொராட முடியும் என்றேல்லாம் இளைஞர்கள் மூளை சலவை செய்யப்படுகிறார்கள். இதனால், அவர்கள், எளிதில் நம்பி அங்கு செல்ல தயாராகி விடுகிறார்கள்.  இஸ்லாமிய வங்கிகளும் திறந்து வைக்கப் பட்டுள்ளன.

Communist IUML nexus Keralaகம்யூனிஸத்தில் இஸ்லாம் பரிசோதனை, அவர்களையே தாக்குகிறது!: கம்யூனிஸ்டின் “மலப்புரம்” பரிசோதனை 1970ல் ஆரம்பித்தது, 2016ல், மறுபடியும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இப்பிரச்சினை, அனைத்துலக விசயமாகி விட்டது. சென்ற வருடம் 2015 – மலபுரத்தில், ஐஎஸ் தொடர்பு கொண்ட 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான்[3]. துபாயில் இன்டெர்போல் மூலம் கண்காணிக்கப்பட்ட அவன் 29-08-2015 அன்று கைதானான்[4]. அரபு நாடுகளிலிருந்து வரும் பணத்திலிருந்து மதரஸாக்களை அமைத்து, அவற்றின் மூலம், சலாபி / வஹாபி போன்ற தீவிர இஸ்லாமிஸம் போதிக்கப்படுவதால், அவர்கள் எளிதில் ஜிஹாதிகளாக மாற துணிந்து விடுகிறார்கள். திருமணம் என்பதை மதமாற்றத்திற்கு பயன்படுத்தப் படுகிறது என்பதை கேரள அரசு மறுத்து-மறைத்து வருகிறது. இப்பொழுது அதில் கிருத்துவர்களும் சிக்கியுள்ளார்கள் என்பது தெரிந்த நிலையில், விசயத்தை அமுக்கி வாசிக்கப் பார்க்கிறது[5]. “மெரின்”லிருந்து “மரியம்” என்று மலையாள மனோரமா விவரங்களை வெளியிட்டது[6]. ஏற்கெனவே லவ்-ஜிஹாத் என்று குற்றஞ்சாட்டப்படுவதால், அதனை பூசிமெழுகப்பார்க்கிறது. ஆனால், சமீபத்தைய, ஐஎஸ் ஆள்-சேர்ப்பு நடவடிக்கைகள் அவற்றை வெளிப்படுத்தி விட்டன. 10-07-2016 அன்று மும்பையில் பெரோஸ் கான் என்பவன் கைது செய்யப்பட்டதிலிருந்து, கேரள இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது[7].

ISIS recruit on Facebookதிடீரென்று பெற்றோர்கள் கவலைப்படுவது: தமிழகத்தில் திருப்பூர் நகரத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற ஒரு தம்பதி உட்பட 20 இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 15 இளைஞர்கள் மாயமாகி உள்ளனர். இவர்கள் எங்கு சென்றார்கள், என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இது தொடர்பாக இளைஞர்களின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்திருக்க கூடும் என்ற சந்தேகமும், அச்சமும் எழுந்துள்ளது[8]. இதனால் மாயமான இளைஞர்கள் குறித்து உடனடியாக விசாரிக்க போலீசாருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்[9]. அம்மாநிலத்தில் இருந்து இதுவரை 21 பேர் மாநிலத்தில் இருந்து மாயமாகி இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் அறிவித்துள்ளார். அவர்களில் 6 பேர் பெண்கள் என்பதுதான் கூடுதல் அதிர்ச்சியாகும்.

iuml - back with Islamic flagதிருப்பூரில் பிடிபட்ட இரு முஸ்லிம் இளைஞர்கள் (14-07-2016): மாயமான அனைவரும் கேரளாவின் தமிழக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போன முஹமது (மலபுழம்) மற்றும் ஷப்பீர் (பாலக்காடு) திருப்பூரில், ஒரு பின்னாலடை தொழிற்சாலையில் வேலைசெய்வது தெரிய வந்துள்ளது[10]. முன்பு மேற்கு வங்காளத்திலிருந்து வந்த ஐஎஸ் தீவிரவாதி திருப்பூரில் தங்கியிருந்தபோது தான் கைது செய்யப்பட்டான். 14-07-2016 அன்று அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கேரளாவுக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர்[11]. ஆனால், கோயம்புத்தூர் வழியாக கேரள முஸ்லிம்கள் இப்படி தாராளமாக வந்து செல்வதும், அவர்கள் குற்றங்கள் மற்றும் தீவிரவாத தொடர்புகள் உள்ளதும் கவனிக்கத்தக்கது. அதாவது திருப்பூரில் அவர்களுக்கு ஆதரவாக ஒரு குழுவுள்ளது தெரிய வருகிறது.

PFI army to fight against India11-07-2016 அன்று கேரள சட்டசபை விவாதத்தில் ஐஎஸ் விவகாரம் வெளிவந்தது: கேரளாவில் 11-07-2016 அன்று சட்டசபை கூடியதும் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பினார். ‘‘கேரள இளைஞர்கள் சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் பெரும் பீதியை ஏற்படுத்துகின்றன. ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமான பதிலோ, விளக்கமோ அளிக்கப்படவில்லை. நிலைமையை சமாளிக்க பொது மக்களின் உதவியை முதல்வர் நாட வேண்டும். கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்[12]. பாஜக எம்எல்ஏ ஒ.ராஜகோபால், முதல்வரின் சொந்த தொகுதியில் வசித்து வந்த பல் மருத்துவ படிப்பு மாணவியும் மாயமாகியுள்ளார். அவர் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு பாலக்காட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், அம்மாவட்டத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றவர்களில் அவரும் ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

© வேதபிரகாஷ்

16-07-2016

[1] In 2008, five Malayali Muslim youth went all the way to Kashmir to fight alongside the separatists and four of them were shot dead by Indian forces. If it’s Kashmir in 2008, it’s only natural that it’s IS in 2016 because Islamism has been growing in the state since the 1990s. The common ideal is international Islam, as against the state’s age-old local Islam, and the allegiance is to what’s purported to be the purest form and practice — something that the Islamists believe belong to the Prophet’s land and the Prophetic era. It’s part of their blind trust in global kinship, an exclusive transnational state of radical Islam and the rein of Sharia law.

http://www.firstpost.com/india/kerala-should-be-worried-about-its-missing-youths-and-possible-islamic-state-links-2884596.html

[2] The First Post, Kerala should be worried about its missing youths and possible Islamic State links, G Pramod Kumar,  July 10, 2016 14:49 IST

[3] http://www.marunadanmalayali.com/news/exclusive/isis-recruitment-from-malappuram-21553

[4] MALAPPURAM:  Intelligence sleuths have taken into custody a 23 –year-old youth hailing from Pattarnakkavu, over his alleged ISIS links. The person was arrested jointly by IB and Karipur Emigration department as soon as he deplaned at Karipur airport. He, who was living in Dubai, had been under the observation of Abu Dhabi Interpol. And, his arrest was carried out as he arrived at the airport on August 29, 2015. The person had gone abroad five years ago and did his studies there, according to sources. He is also known to have travelled to several foreign countries.

http://kaumudiglobal.com/innerpage1.php?newsid=68525

[5] http://www.firstpost.com/india/kerala-should-be-worried-about-its-missing-youths-and-possible-islamic-state-links-2884596.html

[6] FROM MERIN TO MARIAM, FROM COCHIN TO SYRIA-Merin, who hails from a Christian family in Cochin, went to Mumbai after finishing her studies in Cochin. Her mother Mini told Manorama that she was influenced by her long-time classmate Yahiya, his brother Eeza and his wife Fathima, and converted to Islam. Merin who christened herself Mariam, later married Yahiya. Mini also said that the couple informed her about travelling to Sri Lanka for some prayers and that she had tried to stop her daughter.

India Today, ISIS recruits from Kerala: 11 out of 22 missing Keralites suspected to be in Syria, Posted by Vivek Surendran, New Delhi, July 11, 2016 | UPDATED 18:02 IST.

[7] Firoz Khan, a 24-year-old from Trikaripur in Kerala’s Kasargod district, was arrested yesterday (10-07-2016) evening by officers of the Intelligence Bureau from Mumbai. He was nabbed from a hotel in Dongri in Mumbai. Firoz had left for Mumbai on June 22 on the pretext of going to Kerala’s Kozhikode city. A phone call Firoz made to inform his family about his whereabouts is what trapped him. During the call, he said some others who went missing from his village have reached IS camps in Syria, says a Manorama report.

http://indiatoday.intoday.in/story/isis-kerala-recruitment-syria-kasargod-pinarayi-vijayan/1/712168.html

[8] தினமலர், ஐஎஸ்.,ல் சேர்ந்தார்களா கேரள இளைஞர்கள்?, பதிவு செய்த நாள். ஜூலை9, 2016: 11.59.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1560666

[10] Onmanorama Staff, 2 missing Kerala youths traced in Tamil Nadu. No, they didn’t leave to join ISIS, Friday 15 July 2016 02:17 AM IST.

[11] http://english.manoramaonline.com/news/just-in/kerala-palakkad-youths-isis-suspect-traced-tamil-nadu.html

[12] தமிழ்.ஒன்.இந்தியா, கேரளாவில் இருந்து 21 பேர் மாயம்உறுதிப்படுத்தினார் பினராயி.. ஐஎஸ்ஸில் சேர்ந்திருக்கலாம் என சந்தேகம், By: Mayura Akilan, Published: Tuesday, July 12, 2016, 11:23 [IST]