Posted tagged ‘சிறுபான்மையினர்’

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைது – இதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டு வெடிப்புகள் தொடர்பு என்ன? (2)

ஏப்ரல் 18, 2024

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைதுஇதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டுவெடிப்புகள் தொடர்பு என்ன? (2)

இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்: இது தொடர்பாக கர்நாடக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது[1], “இந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்த பயங்கரவாத நெட்ஒர்க் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். இருப்பினும், இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அதிக உந்துதல் உள்ளவர்கள். இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம். அது விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்[2]. “இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்,  எனும்பொழுது, நிச்சயமாக அங்கெல்லாம் இவர்களுடைய தொடர்புகள் இருப்பது தெளிவாகிறது. அவர்களையும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வரப்படுவது: கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வர அனுமதி கோரி கொல்கத்தா நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் முறையிட்டனர்[3]. இதையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த இரண்டு பேரையும் பெங்களூரு அழைத்துச் செல்ல மூன்று நாட்கள் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது[4]. பிதான்நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இருவரும் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டனர்[5]. வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின் இருவரும் பெங்களூரு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்[6]. 15-04-2024க்குப் பிறகு மறுபடியும் காவல் நீட்டிப்பு பெற்றிருக்கக் கூடும். இவையெல்லாம் சட்டப் படி மேற்கொள்ளும் நடவடிக்கைகள், முறைகள், செயல்பாடுகள் ஆகும். முடிவாக ஒன்று-மூன்று என பல ஆண்டுகள் ஆகலாம். போதிய ஆதாரங்கள் இல்லை விடுவிக்கவும் படலாம். ஆனால், குண்டுகள் வெடித்தது உண்மை, குண்டுவெடிப்பில் கொலையுண்டது, பாதிக்கப் பட்டது உண்மை…அதற்கு யார் பதில் சொல்லப் போகின்றனர் என்று தெரியவில்லை.

தேதிகளும்- முக்கியமான நிகழ்வுகளும்: இவ்வழக்கில் முக்கியமான தேதிகளும் நிகழ்வுகளும்:

01-03-2024 – குண்டுவெடிப்பு

03-03-2024 – NIA வழக்கை எடுத்துக் கொண்டது; ரூ 10 லட்சம் பரிசு அறிவிப்பு;

09-03-2024 – ராமேஸ்வரம் கபே மறுபடியும் பாதுகாப்புடன் திறக்கப் பட்டது.

புகைப் படங்கள் வெளியீடு.

24-03-2024  – ஒரிஸா வழியாக கொல்கொத்தாவிற்கு செல்வது.

25-03-2024 இருவரும் கொல்கொத்தவில் தலைமறைவாகத் தங்குதல்

27-03-2024 – கூட்டாளி முஸாமில் ஷெரீஃப் கைது

12-04-2024 – இருவர் கொல்கொத்தாவில் கைது, மூன்று நாள் காவல் அனுமதி

13-04-2024 – பெங்களுருக்குக் கொண்டு வருதல்

15-04-2024 – காவல் அனும்பதி நீட்டிப்பு.

இதே காலகட்டத்தில் ஜாபர் சாதிக் வழக்கும் இணையாகச் செல்வதை கவனிக்கலாம். ஆட்கள் மாறினாலும், இடம் மாறினாலும், குற்றங்கள் தன்மை மாறவில்லை. இந்திய சமுதாயத்தை நாசமாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் தான், இவர்கள் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.

வியாபாரப் போட்டிக்காக குண்டு வைக்கப் பட்டது என்ற செய்தி: கோயம்புத்தூர் குக்கர் குண்டுவெடிப்பு பொன்று, இங்கும் அரசியல் செய்ய சிலர் முயன்றனர். முதலில் வியாபார போட்டியால், யாராவது குண்டு வைத்திருக்கலாம் என்றும் சொல்லப் பட்டது. அப்படியே செய்திகளையும் பரப்ப ஆரம்பித்தார்கள். அப்படியிருந்தால், யாரும் இல்லாத நேரத்தில், பீதியுண்டாக்க வைத்திருக்கலாம். இவ்வாறு உணவுண்ணும் அப்பாவி பொது மக்கள் காயமடையும் விதத்தில், பீதியுண்டாக்கும் குறையில் குண்டு வைத்திருக்க மாட்டான். உண்மை தெரியவரும் பொழுது, அந்த வியாபாரப் போட்டியாளன் பெயரும் கெட்டு விடும். வணிகப் போட்டிகளில் இத்தகைய தீவிரவாதம் இருக்கிறது என்றால், இனி ஒவ்வொரு வணிக வளாகத்திலும், குண்டு வெடிக்க ஆரம்பித்து விடும்.

குண்டு வைப்பது என்ற கொடிய-குரூர எண்ணம்: எப்படியிருந்தாலும், குண்டு வைப்பது என்பதே தீவிரவாத செயல் எனும்பொழுது, அதனை எவ்வாறு வைத்தான், எதற்கு வைத்தான் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. அத்தகைய குரூர எண்ணம் இருந்திருப்பது ஏன் என்று தான் அராய்ச்சி செய்திருக்க வேண்டும். படித்த இளைஞர்கள் வேலைக்குச் சென்று, சம்பாதித்து பெற்றோரை பாதுகாக்க வேண்டும், குடும்பத்தைப் பேணவேண்டும் என்றில்லாமல், குண்டு வைப்பேன் என்று கிளம்பியுள்ள இந்த தீவிரவாதிகளை கவனிக்க வேண்டும். மேலும் அவ்வாறு தொழிற்நுட்பத்துடன் வெடிக்கும் குண்டு தயாரிப்பு எப்படி நடந்தது, யார் கற்றுக் கொடுத்தது, அதே முறை கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டது எவ்வாறு – போன்ற கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

தமிழகத்தில் திமுக போன்று கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசியலாக்க முயற்சி: சித்தராமையா-சிவகுமார் பிரச்சினையும் இதில் எழுந்தது, பிறகு, NIAவிடம் வழக்கை ஒப்படைக்க தீர்மானிக்கப் பட்டது. சாய் பிரசாத் என்ற பிஜேபி ஆள் இந்த இருவருடன் தொடர்பில் இருக்கிறான் என்று தீர்த்தஹல்லி, சிமோகாவில் உள்ள மொபைல் கடை வேலையாட்கள் சொன்னதாக உள்ளது. அதன் படி NIA அவனைப் பிடித்து விசாரித்துள்ளது. கைது செய்யப் பட்டான் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், அவையெல்லா காங்கிரஸ்காரர்கள் செய்த சமூக-ஊடக பிரச்சாரம் என்று தெரிய வந்தது. ஆக, இங்கும், திமுக-காங்கிரஸ் பாணி குண்டுவெடிப்பு-பிரச்சாரத்தைக் கவனிக்கலாம் இக்கட்சிகள் தான், கூட்டணியும் வைத்துள்ளன. . NIAவின் விசாரணைக்குப் பிறகு, திமுக அடங்கி விட்டது, அதுபோல, காங்கிரஸும் இங்கு அமைதியாகி விட்டது. தீவிரவாதத்தில், குண்டுவெடிப்புகளில் தமிழக-கர்நாடக தொடர்புகளை அழித்தே ஆக வேண்டும். இதில் அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை. பொது மக்களை மிகவும் பாதிக்கக் கூடிய விவகாரங்கள் என்பதால், அத்தகைய தீவிரவாத அமைப்புகள் ஆட்கள் முதலியோரைப் பற்றி, சந்தேகிக்கும் பொது மக்கள் உடனடியாக போலீசாரிடம் அல்லது NIA போன்ற அமைப்பினரிடம் தகவல், புகார் கொடுக்கவேண்டும். ரகசியமாக விசாரணை மேற்கொண்டு, முளையிலேயே அத்தகைய திட்டங்களைக் கிள்ளியெறிய வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-04-2024


[1] தமிழ்.இந்து, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபர்கள் இருவர் கொல்கத்தாவில் கைது, செய்திப்பிரிவு, Published : 12 Apr 2024 01:38 PM; Last Updated : 12 Apr 2024 01:38 PM.

[2] https://www.hindutamil.in/news/india/1229724-suspects-in-the-rameshwaram-cafe-blast-in-bengaluru-caught-in-kolkata.html

[3] இடிவிபாரத், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: இருவர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்? – Rameshwaram Cafe Blast 2 Arrest, By ETV Bharat Tamil Nadu Team, Published : Apr 13, 2024, 12:11 PM IST; Updated : Apr 14, 2024, 12:32 PM IST.

[4] https://www.etvbharat.com/ta/!bharat/national-investigation-agency-brought-two-on-rameshwaram-cafe-blast-case-and-remand-tns24041301974

[5] தமிழ்.ஏசியாநெட், Bomb Blast : ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு.. கைதான 2 முக்கிய குற்றவாளிகள்இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்!,, Ansgar R, First Published Apr 13, 2024, 11:24 AM IST;  Last Updated Apr 13, 2024, 11:24 AM IST.

[6] https://tamil.asianetnews.com/india/rameshwaram-cafe-blast-2-main-accused-brought-to-bengaluru-today-facing-court-ans-sbv9r9

மீலாது நபி கொண்டாட்ட ஊர்வலம், தற்கொலை குண்டுவெடிப்பு – முஸ்லிம்களே முஸ்லிம்களை கொல்வது எப்படி?

செப்ரெம்பர் 30, 2023

மீலாது நபி கொண்டாட்ட ஊர்வலம், தற்கொலை குண்டு வெடிப்புமுஸ்லிம்களே முஸ்லிம்களை கொல்வது எப்படி?

வெள்ளிக் கிழமை 29-09-2023 அன்று குண்டுவெடித்த இடம் – மதினா மசூதி, அல்ஃபலா சாலை, மாகாணம் மஸ்துங் மாவட்டம், பலுசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தான்: பாகிஸ்தானில் 29-09-2023 அன்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[1]. மீலாது நபி என்று முகமது நபி பிறந்த நாளை வெள்ளிக் கிழமை முஸ்லிம்கள் உலகம் முழுவதும் கொண்டாடினர்[2]. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள அல்ஃபலா சாலையில் மதீனா மசூதி உள்ளது[3]. இங்கு மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாட முஸ்ஸிம்கள் நேற்று கூடியிருந்தனர்[4]. இவர்கள் ஊர்வலமாகப் புறப்படுவதற்கு ஆயத்தமான நிலையில், தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்[5]. இதில் காவல் அதிகாரி ஒருவர் உட்பட 52 பேர் உயிரிழந்தனர்[6]. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தன.ர்[7]. தொடர்ந்து, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்[8]. இவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள், குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்[9]. மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்[10].

சுன்னி / சன்னி அல்லாத முஸ்லிம்கள் தாக்கப் படுதல்: ஆசார இஸ்லாத்தில் முகமது நபி பிறந்த நாள் கொண்டாடலாமா, கூடாதா என்ற வாத-விவாதங்கள் உள்ளன. ஏனெனில், அத்தகைய கொண்டாடங்கள் சின்னங்கள், அடையாளங்கள் வைக்க ஊக்குவிக்கும். அதுவே நாளடைவில் பெருகும் என்ற கோட்பாடும் உள்ளது. மெக்காவில், அவரது கல்லறையே அழிக்கப் பட்டது போன்ற செய்திகளும் உள்ளன. ஏனெனில், அது பிரத்யேகமாக அடையாளம் காணப்பட்டால், அதுவே சின்னமாகி, லட்சக்கணக்கில் முஸ்லிம்கள் வர ஆரம்பித்து விடுவர். பிறகு, அது வழிபடும் க்ஷேத்திரமாக மாறிவிடும். எனவே அத்தகைய முயற்சிகளும் தடுக்கப் பட்டன. முழு இஸ்லாம் மயமாக்கும் செயல்பாடுகளில், பாகிஸ்தானில் உள்ள மற்ற இஸ்லாமியக் குழுக்கள் – ஷியா, போரா, அஹ்மதிய போன்ற பிரிவுகள் அடிக்கடித் தாக்கப் பட்டு வருகின்றன, அவர்களது மசூதிகளும் தாக்கப் பட்டு, இடிக்கப் பட்டு வருகின்றன..இது அத்தகைய தாக்குதலா என்று தெரியவில்லை. இருப்பினும், குரூர-தீவிரவாத செயலுக்கு எந்த ஆதரவு-சமாதானமும் கொடுக்க முடியாது.

தொடரும் தற்கொலை குண்டுவெடிப்புகள்: இந்நிலையில், ஷாஹீத் நவாப் கவுஸ் பக்‌ஷ் ரயிசானி நினைவு மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி மருத்துவர் சயீது மிர்வானி, இதுவரை 52 பேர் இறந்துள்ளதாகவும், 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக பாகிஸ்தானின் ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பலூசிஸ்தானின் இடைக்கால உள்துறை அமைச்சர் ஜன் அசக்சாயி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். கடந்த 15 நாட்களில் இது மாஸ்துங் மாவட்டத்தில் நடக்கும் இரண்டாவது தற்கொலைப்படை தாக்குதல் ஆகும்[11]. முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் நடந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்[12]. இந்நிலையில், இன்று 50-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது குறித்து இடைக்கால முதல்வர் அலி மர்தான் டோம்கி கூறும்போது, எதிரிகள் பலூசிஸ்தானின் மத சகிப்புத்தன்மைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் இந்த சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்[13]. இன்றைய நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூன்று நாட்கள் மாகாணத்தில் துக்கம் அனுசரிக்கப்படும்” என்றார்[14].

முஸ்லிம்களே, முஸ்லிம்களை எப்படி குண்டு வைத்து / வெடித்துக் கொல்வர் என்பது திகைப்பாக இருக்கிறது: பலூசிஸ்தானில் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதினா மசூதியின் அருகேதான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது[15]. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மஸ்துங் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் உயிரிழந்தார்[16]. மிலாடி நபியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புத் தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதிப்பும் அதிகமாகியுள்ளது. ஆக, முஸ்லிம்களே, முஸ்லிம்களை எப்படி குண்டு வைத்து / வெடித்துக் கொல்வர் என்பது திகைப்பாக இருக்கிறது. தற்கொலை குண்டு வெடித்தவன் சொர்க்கத்திற்கு போகிறான் என்றால், குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் கதி என்ன? இத்தகைய இறையியல் சித்தாந்தம், மனித நேயம் கொண்டதா இல்லையா என்று அவர்கள் தான் ஆராய்ச்சி செய்து புரிந்து கொள்ள வேண்டும்.

தற்கொலைப் படை தாக்குதல் இரண்டுமற்றொரு தாக்குதல்: இந்த தாக்குதலுக்கு அடுத்த சில மணி நேரத்தில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஹங்கு மாவட்டத்தில் ஒரு மசூதியில் குண்டு வெடித்தது. மசூதியில் 30 முதல் 40 பேர் வரை தொழுகையில் ஈடுபட்டிருந்த நிலையில், குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் நேரிட்ட இந் தஇரு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் மொத்தம் 57 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து நகர நிலைய அலுவலர் முகமது ஜாவேத் லெஹ்ரி கூறுகையில், “நடந்தது தற்கொலைப் படை தாக்குதல். டிஎஸ்பியின் கார் அருகே மனித வெடிகுண்டாக வந்தவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

மிலாது நபி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்: வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களுக்கு பாகிஸ்தானின் இடைக்கால உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் அகமது பக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறும்போது, “பலுசிஸ்தானில் அமைதியும், மத நல்லிணக்கமும் நிலவுவதை எதிரிகள் விரும்பவில்லை. அதை அழிக்க நினைக்கின்றனர். மிலாது நபி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இது தாங்கமுடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத சக்திகள் எந்த சலுகைக்கும் தகுதியானவர்கள் அல்ல. தீவிரவாத செயல்களை முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாது” என்றார். இதெல்லாம் புரியாத புதிர்களாகத் தான் இருக்கின்றன. எல்லா வசதிகள், வளங்கள் வைத்துக் கொண்டு அமைதியாக வாழ்வதை விடுத்து, ஏன் இப்படி ஒருவரையொருவர் கொன்று வாழ வேண்டும் எனத் தெரியவில்லை?

நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: குண்டுவெப்புக்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்யும்படி, பலுசிஸ்தான் மகாண முதல்வர் அலி மர்தான் டோம்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தாக்குதல்களுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இரானின் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும்[17]. தெஹ்ரிக்-இ தாலிபன் பாகிஸ்தான் (TTP) அல்லது பாகிஸ்தான் தாலிபன் மற்றும் இஸ்லாமிய அரசு குழு உள்ளிட்ட ஆயுதமேந்திய போராளிகளின் தாக்குதலுக்கு இந்த மாகாணம் இலக்காகி வருகிறது[18].

© வேதபிரகாஷ்

29-09-2023


[1] தமிழ்,இந்து, பாகிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு: 57 பேர் உயிரிழப்பு; 60 பேர் காயம்,, செய்திப்பிரிவு, Published : 30 Sep 2023 04:23 AM, Last Updated : 30 Sep 2023 04:23 AM.

[2] https://www.hindutamil.in/news/world/1131015-pakistan-mosque-blasts-57-dead-60-people-were-injured.html

[3] புதியதலைமுறை, பாகிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் – 57 பேர் பலி, Prakash J, Published on :  29 Sep 2023, 10:41 pm.

[4] https://www.puthiyathalaimurai.com/world/today-blast-in-pakistan-at-least-57-killed

[5] நக்கீரன், பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு – 34 பேர் பலி; 130 பேர் காயம், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 29/09/2023 (17:00) | Edited on 29/09/2023 (17:17).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/world/pakistan-incident-near-mosque

[7] தினமலர், பாக்.,கில் அடுத்தடுத்து மசூதிகளில் குண்டுவெடிப்பு: 55 பேர் பலி, மாற்றம் செய்த நாள்: செப் 29,2023 17:47.

[8] https://m.dinamalar.com/detail.php?id=3444187

[9] தமிழ்.ஏபிபி.லைவ், Pakistan Bomb Blast: பயங்கரம்.. பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு – 52 பேர் பரிதாபமாக உயிரிழப்பு, By: சுகுமாறன் | Updated at : 29 Sep 2023 03:22 PM (IST), Published at : 29 Sep 2023 03:05 PM (IST)

[10] https://tamil.abplive.com/news/world/pakistan-52-killed-over-100-injured-in-suicide-blast-near-mosque-in-balochistan-province-142711

[11] தமிழ்.இந்து, பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு: 52 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம், செய்திப்பிரிவு, Published : 29 Sep 2023 03:35 PM; Last Updated : 29 Sep 2023 03:35 PM.

[12] https://www.hindutamil.in/news/world/1130588-at-least-50-killed-over-130-injured-after-blast-in-pakistan-s-balochistan.html

[13] தினத்தந்தி, பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடித்து 55 பேர் பலி: 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!, செப்டம்பர் 30, 1:29 am; Updated: செப்டம்பர் 30, 2:21 am;

[14] https://www.dailythanthi.com/News/World/55-killed-in-pakistan-mosque-blast-3-days-of-mourning-1063162

[15] விகடன், பாகிஸ்தான்: மசூதி அருகே குண்டு வெடிப்பு; தற்கொலைத் தாக்குதலில் 52 பேர் பலி!, சி. அர்ச்சுணன், Published:Yesterday at 4 PMUpdated:Yesterday at 4 PM.

[16] https://www.vikatan.com/crime/suicide-blast-near-mosque-in-pakistan-52-people-died

[17] பிபிசி.தமிழ், பாகிஸ்தான்: மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதல், 52 பேர் பலிஎன்ன நடந்தது?, Published at : 29 Sep 2023; https://www.bbc.com/tamil/articles/cgl012jm464o

[18] https://www.bbc.com/tamil/articles/cgl012jm464o

அல்லாஹ் ரக்கா ரஹ்மானுடன் சூஃபி இசை அனுபவம் – திலீப் குமார் முதல் ரஹ்மான் வரை ஏற்பட்ட மாற்றங்கள் ஆச்சரியமானவை தான்! (2)

ஜூலை 27, 2023

அல்லாஹ் ரக்கா ரஹ்மானுடன் சூஃபி இசை அனுபவம் திலீப் குமார் முதல் ரஹ்மான் வரை ஏற்பட்ட மாற்றங்கள் ஆச்சரியமானவை தான்! (2)

கடந்த சில வருடங்களின் அரசியல் விசித்திரமாக இருக்கிறது: “இந்தியர்கள் மிகவும் திறந்த மனதுடைய மனிதர்கள், குறிப்பாக தெற்கில், அவர்கள் மிகவும் திறந்தவர்கள். அவர்கள் மிகவும் அரவணைப்பு மிக்கவர்கள், அவர்கள் மகிழ்ச்சியான மக்கள் எல்லோரும் வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்[1]. அதுதான் நடந்துள்ளது,” என்று அவர் கூறினார்[2]. ஏ.ஆர். ரஹ்மான், இந்தியாவில் பெரும்பாலும் இதே நிலைதான் உள்ளது என்று குறிப்பிட்டார்[3]. ஆனால், “கடந்த சில வருடங்கள் அரசியல் விஷயங்களால் விசித்திரமாக இருந்தது, இந்தியர்கள் மனதிலிருந்து வெளிப்படும் ஒளியின் மூலம் பார்க்கிறார்கள். என்னாச்சு உன் முகம் பிரகாசமாக இருக்கிறது? என்னாச்சு உன் முகம் சோர்வாக இருக்கிறது? என கேட்பார்கள். அவர்கள் முகத்தை பார்ப்பது இல்லை மனதை பார்க்கிறார்கள். இந்தியர்கள் மட்டுமல்ல. நான் எங்கே சென்றாலும் நல்ல மனிதர்கள் மற்றவர்களிடம் இருந்து வெளிப்படும் ஒளியைப் பார்க்கிறார்கள்,” என்பதை ஒப்புக்கொண்டார்[4]. ஏ.ஆர். ரஹ்மான் இயற்பெயர் திலீப். ஏ.ஆர். ரஹ்மான் மதம் மாற முடிவு செய்யும் வரை அவருடைய தாயார், குடும்பம் எல்லாம் இந்து மதத்தை பின்பற்றி வந்தனர்.

19.03.2023 –அன்பை மையப்படுத்திய இசை: சூபி கச்சேரி பற்றி தமிழ்.இந்துவில் பெரிய செய்தி வளிவந்தது[5]. “இந்தக் கூட்டத்தைப் பார்த்து மனசு நிறைஞ்சிடுச்சு. சூஃபி இசை நிகழ்ச்சிக்கு ஐநூறு பேர் வந்தாலே அதிகம் என நினைச்சேன். ஆனா, இன்னைக்கு இவ்வளவு கூட்டம்” என்று ஏஆர் ரஹ்மான் சொன்னபோது அரங்கம் அதிர்ந்தது[6]. கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.03.2023) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏ.ஆர். ரஹ்மானின் சூஃபி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திரைத்துறையில் பணிச் சூழலில் பாதுகாப்பு இல்லாமல் நெருக்கடியை எதிர்கொள்ளும் கடைநிலை லைட்மேன் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் தலைப்பு ‘விங்க்ஸ் ஆஃப் லவ்’. சினிமா பாடல்களுக்கான நிகழ்ச்சி அல்ல. முற்றிலும் சூஃபி பாடல்களுக்கான நிகழ்ச்சி. இது சென்னையில் ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்த்தும் முதல் சூஃபி இசை நிகழ்ச்சி. அரங்கில் நுழைகிறேன். ஆயிரக்கணக்கான மக்கள். இருக்கைகள் நிரம்பி பலர் நின்று கொண்டிருந்தனர்.

சூபி கச்சேரி நிகழ்ச்சி: தலைப்பாகை அணிந்து சூஃபி இசைக் கலைஞர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். வெள்ளைச் சட்டையும் வெள்ளைக் கைலியும் அணிந்த இளைஞர்கள், ஊது கட்டையுடன் அரங்கைச் சுற்றிலும் புகை பரப்பினர். ஊதுக் கட்டையின் நறுமணம் ஒட்டுமொத்த அரங்கையே சூஃபி பயணத்துக்கு தயார்படுத்தியது. யாரும் எதிர்பாராத கணம் அல்லா ரக்கா ரஹ்மான் மேடையில் தோன்றினார். குர்தாவும் சூஃபிகளின் அடையாளங்களில் ஒன்றான வெண்ணிற தலைப்பாகையும் அணிந்திருந்தார்.பணிவும் உளத்தூய்மையும் சூஃபித்துவத்தின் மிக அடிப்படையான பண்புகள். ஏ.ஆர். ரஹ்மானிடம் எப்போதும் இந்தப் பண்புகளைப் பார்க்க முடியும். அன்றைய தினம் அது ரஹ்மானிடம் பேரொளியாக வெளிப்பட்டது. திரைத்துறை இசையைத் தாண்டி, சமகாலத்தின் உலகின் முதன்மையான சூஃபி இசைக்கலைஞர்களில் ஒருவராக ஏ.ஆர். ரஹ்மான் அறியப்படுகிறார். ‘பிஸா’ படத்தில் ‘பியா ஹாஜி அலி’ (Piya Haji Al), ‘ஜோதா அக்பர்’ படத்தில் ‘குவாஜா மேரே குவாஜா’ (Khwaja Mere Khwaja), ‘டெல்லி 6′ படத்தின் ‘அர்ஷியான்’ (Arziyan), ‘ராக் ஸ்டார்’ படத்தில் ‘குன் பயா குன்’ (Kun Faya Kun) ஆகியவை சூஃபி இசையில் ஏ.ஆர். ரஹ்மான் உச்சம் தொட்ட பாடல்கள். இந்தப் பாடல்களும், அவர் தனி ஆல்பமாக வெளியிட்ட ‘ஸிகிர்’ (Zikr) உட்பட சில சூஃபிப் பாடல்களும் இந்நிகழ்ச்சியில் பாடப்பட்டன. புற உலகத்தை மறக்கச் செய்து, தனித்த இசை உலகுக்கு அந்தப் பாடல்கள் பார்வையாளர்களை அழைத்துச் சென்றன.

நினைவுகளை மீட்டிய இசை: ஏஆர் ரஹ்மான் மற்றும் ஜாவித் அலியின் குரலும், அவர்கள் பின்னால் அமர்ந்திருந்த சூஃபி இசைக் கலைஞர்களின் சேர்ந்திசையும் சிவமணியின் டிரம்ஸிலிருந்து வெளிப்பட்ட தாளங்களும் மாபெரும் இசை அனுபவத்தை வழங்கின. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைத் தந்த அந்த இசை, எனக்கு என் ஊர் நினைவைக் கொண்டுவந்தது. என்னுடைய சொந்த ஊரான கடையநல்லூர் சூஃபித் தன்மை நிறைந்த ஓர் ஊர். அங்கு பரசுராமபுரம் தெருவில் சிராஜும் முனீர் என்று ஒரு மதரஸா உண்டு. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அந்த மதரஸாவுக்கு குர்ஆன் பயிலவரும் சிறுவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அத்தனை பேருக்கும் பள்ளிவாசலில் இடம் போதாது என்பதால், அந்தத் தெருவில் உள்ள வீடுகளின் திண்ணைகளில் வைத்து குர்ஆன் சொல்லிக்கொடுக்கப்படும்.

கடையநல்லூர் பரோட்டாவும், குரான் ஓதுதலும்: காலையில் 6 மணிக்கெல்லாம், ஊரில் உள்ள பள்ளி வயது சிறுவர்கள் தலையில் கருப்பு வெள்ளை நிற தொப்பி அணிந்து மதரஸாவுக்கு குர்ஆன் பயில வந்துவிடுவார்கள். வீடுகளின் திண்ணைகள்தான் அவர்களுக்கான வகுப்பறை. குர்ஆன் நன்கு கற்றுக்கொண்ட முன்னாள் மாணவர்கள்தான் ஆசிரியர்கள். காலை நேரத்தில் அந்தத் தெருவில் ஒவ்வொரு வீட்டு திண்ணையிலிருந்தும் வெளிப்படும் சிறுவர்கள் குர்ஆன் ஓதும் ராகம், அந்தத் தெருவையே இசைத்தன்மை கொண்டதாக மாற்றும். பரோட்டா கடைகளில், காலை நேரத்தில் “இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன், ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன், இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன், எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்” என நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்கும்.

தர்கா பாடல்களும் சூபித்துவமும்: தர்கா செல்லும் வழக்கம் உடையவர்களின் வீடுகளில் வியாழக்கிழமை மாலை நேரங்களில் “யா ரப்பி ஸலாம் அலைக்கும்… யாரசூல் ஸலாம் அலைக்கும்…” என மவுலூத் ஓதும் ராகம் கேட்கும். பள்ளிவாசல்களிலிருந்து எழும் பாங்கு ஓசை; குழந்தைகளை உறங்க வைக்க பாடப்படும் “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” என என் நினைவு அடுக்குகளில் புதைந்திருந்த கலாச்சாரக் கூறுகளை ரஹ்மானின் அன்றைய இசை உயிர்பெறச் செய்தது. மதங்களைக் கடந்த இசை: சூஃபிப் பாடல்கள் இஸ்லாத்தை மையப்படுத்தியவை என்றாலும் அதன் ராகமும் இசைமையும் மதம் கடந்த ஆன்மிக அனுபவத்தை வழங்கக்கூடியது. அன்பின் தூய்மையை உணரச்செய்வது. அதனாலேயே, சூஃபிப் பாடல்கள் மதம், மொழி கடந்து கேட்கப்படுகிறது. அன்றைய நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் பெரும்பாலானோர் முஸ்லிம் அல்லாதவர்கள்தான்.

சூபித்துவ குருவும், படல்களும்: ரஹ்மானுக்கும் அவரது தாய்க்கும் ஆன்மிக வழிகாட்டியாக விளங்கியவர் சூஃபி ஞானி பீர் கரிமுல்லா ஷா காதிரி. அந்த வயது முதிர்ந்த காதிரி வழியாகவே ரஹ்மானுக்கு சூஃபி இசை அறிமுகம் ஆகிறது. காதிரி தன்னுடைய ஆர்மோனியப் பெட்டியில் கவ்வாலி வாசிப்பது வழக்கம். அதைக் கேட்கையில் ரஹ்மானின் ஆன்மாவில் இனம் புரியாத மாற்றம் நிகழ்கிறது. அந்த அனுபவத்தை “வார்த்தைகளால் விவரிக்க முடியாத அறிவியல்” என்று ரஹ்மான் குறிப்பிடுவதுண்டு. “காதிரி சிறப்பான பாடகர் கிடையாது. ஆனால், அவர் தன் ஆர்மோனிய பெட்டியை எடுத்து கவ்வாலி வாசிக்கையில் அவரை சுற்றிச் பட்டாம்பூச்சிகள் பறப்பதையும் நறுமணம் கமழ்வதையும் ஒருவர் உணர முடியும்” என்பார் ரஹ்மான். இறைவனை உணர்வதற்கான பாதையாக பார்க்கப்படும் சூஃபித்துவத்தை தனக்கான வாழ்வியலாக தேர்ந்தெடுத்த ரஹ்மான், “இறைவன் முன்னால் என்னை ஒரு யாசகனாகவே உணர்கிறேன். சூஃபி வழியை நான் தேர்ந்தெடுத்தப் பிறகு என்னுடைய ஆசைகளிலிருந்தும் வெற்றிகளிலிருந்தும் ‘நான்’ என்ற உணர்வை பிரித்து வைக்க கற்றுக்கொண்டேன். அதன் வழியாகவே என் மீது குவியும் பாராட்டுகளிலிருந்தும் நான் விலகி இருக்கிறேன்” என்கிறார். சமத்துவத்தையும் சகோதரத்தையும் முன்னிறுத்தி மதம் கடந்த அன்பை பரப்பியது ஏ.ஆர்.ரஹ்மானின் அன்றைய சூஃபி இசை மேடை!

தர்கா-சூபித்துவம் ஹராமா, ஹலாலா, ஷிர்கா இல்லையா?: பொதுவாக தமிழக மக்களுக்கு சூபி, சூபித்துவம் என்றால் ஒன்றும் தெரியாது எனலாம். முஸ்லிகளிடையே கேட்டால் கூட சரிவர பதில் சொல்ல மாட்டார்கள். ஆசார இஸ்லாம் சூபித்துவத்தை ஏற்றுக் கொள்வதில்லை. முன்பெல்லாம் “ஷிர்க்” என்றெல்லாம் சொல்லி, கூட்டங்கள் எல்லாம் போட்டு எதிர்த்து வந்தார்கள். ஏற்கெனவே, தர்கா பக்கத்தில் மசூதி கட்டி, தர்காவை பிரித்து விட்டார்கள். அதாவது, இடையே சுவற்றை எழுப்பி விட்டார்கள். இதனால், மறைமுகமாக, தர்கா வழிபாடு மற்றும் அதனை சேர்ந்தவை மறுக்கப் படுகின்றன. இருப்பினும் நாகூர் போன்ற தர்காக்களுக்கு நாடு முழுவதும் பிரபலம் இருப்பதாலும், முஸ்லிம் அதிகாரிகள் வந்து செல்வதாலும், அதனை ஒரு முக்கிய பக்தி ஸ்தலம் போலவே வைத்திர்க்கின்றனர். அங்கு வந்து நேர்த்திக் கடன் செய்வது, மொட்டை அடிப்பது என்பனவெல்லாம் அரங்கேற்றி வருகின்றன. ஆகவே, ரஹ்மான் செய்யும் சூபி கச்சேரிகளை, ஆசார முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை போலும்.

© வேதபிரகாஷ்

26-07-2023


[1] சினி.உலகம்.காம், மதம் மாறும் போது எனக்கு எந்த அழுத்தமும் இல்லை, ஆனால்...ஆர்.ரஹ்மான் பேட்டி,  By Dhiviyarajan ஜூலை 27, 2023.

[2]. https://cineulagam.com/article/ar-rahman-speak-about-religion-converting-1690370174

[3]  தமிழ்.நியூஸ்.18, மதம் மாறிய நேரத்தில்.. தென்னிந்தியர்களின் திறந்த மனம்.. பளீச்சென பேசிய .ஆர்.ரகுமான், News18 Tamil, July 26, 2023, 18:39 IST,

[4] https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-ar-rahman-reveals-why-he-change-his-faith-for-the-first-time-1081718.html

[5] தமிழ்.இந்து, அல்லாஹ் ரக்கா ரஹ்மானுடன் சூஃபி இசை அனுபவம்!, முகம்மது ரியாஸ், Published : 23 Mar 2023 06:10 AM; Last Updated : 23 Mar 2023 06:10 AM

[6] https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/964637-experience-sufi-music-with-rahman.html

05-02-2019 கொலை 23-07-2023 என்.ஐ.ஏ சோதனை – குரூர ஜிஹாதி கொலை எப்படி நடக்கும்? மனிதனை மனிதன் அவ்வாறு கொல்ல முடியுமா? (2) 

ஜூலை 26, 2023

05-02-2019 கொலை 23-07-2023 என்..ஏசோதனைகுரூர ஜிஹாதி கொலை எப்படி நடக்கும்? மனிதனை மனிதன் அவ்வாறு கொல்ல முடியுமா? (2) 

தலைமறைவாக இருக்கும் கொலை குற்றவாளிகளுக்கு, பி.எப்.., மற்றும் எஸ்.டி.பி.., கட்சி நிர்வாகிகள் மற்றும் சில முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடைக்கலம் தருவது மற்றும் நிதியுதவி செய்து வருவது: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலக்காவேரியை சேர்ந்த அப்துல் மஜீத், 40; பாபநாசம் வடக்குமாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன், 31; திருவிடைமருதுார் திருமங்கலகுடியைச் சேர்ந்த சாஹூல் ஹமீத், 30; நபீல் ஹாசன், 31; திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, 37 ஆகியோரை தேடி வந்தனர்[1]. தலைமறைவான இவர்கள் பற்றி துப்புக் கொடுத்தால், 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு தரப்படும் என்றும் அறிவித்துள்ளனர்[2]. அத்துடன், சென்னை பூந்தமல்லியில் உள்ள, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், 18 பேர் மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர்[3]. அதேநேரத்தில், தலைமறைவாக இருக்கும் கொலை குற்றவாளிகளுக்கு, பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகள் மற்றும் சில முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடைக்கலம் தருவது மற்றும் நிதியுதவி செய்து வருவது பற்றி, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது[4].

பல இடங்களில் சோதனை நடந்தது: இதுதொடர்பாக, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, கோயமுத்துார், மயிலாடுதுறை என, ஒன்பது மாவட்டங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்[5]. பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தலைமறைவு கொலை குற்றவாளிகளின் வீடுகள் என, 21 இடங்களில், 23-07-2023 அன்று அதிகாலை, 4:00 மணியில் இருந்து, இரவு, 7:00 மணி வரை சோதனை நடந்தது[6]. அப்போது, மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள், வங்கி பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்கள்; ரகசிய பேச்சுக்கு பயன்படுத்தப்பட்ட, 25க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், மெமரி கார்டுகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பல இடங்களில் சோதனை முடிந்தாலும், விசாரணை இரவிலும் தொடர்ந்தது.

சோதனை நடந்தது எங்கெங்கே ?: தமிழகத்தில் கீழ் கண்ட இடங்களில்சோதனை நடந்தது:

* தஞ்சாவூர் நடராஜபுரம் தெற்கு காலனியில் உள்ள, எஸ்.டி.பி.ஐ., ஊடகப் பிரிவு மாவட்ட செயலர் பக்ருதீன் வீட்டில், நேற்று அதிகாலை, 5:30 மணி முதல் காலை, 10:15 மணி வரை சோதனை நடந்தது. மொபைல் போன், பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டது[7].

* தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் உள்ள ஹாஜா அலாவூதீன் வீடு; கும்பகோணம் அருகே திருவாய்ப்பாடியில் உள்ள முகமது செரீப்; திருமங்கலகுடியில் உள்ள குலாம் உசேன்; ராஜகிரியில் உள்ள முகமது பாரூக் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது[8].

* திருச்சி பீம்நகர், பண்டரிநாதபுரம் ஹாஜி முகமது உசேன் வீட்டில், ஐந்து மாதங்களுக்கு முன், அப்சல் கான் என்பவர் வாடகைக்கு குடி வந்தார். இரண்டு சாட்சிகளுடன், என்.ஐ.ஏ., இன்ஸ்பெக்டர் ரஞ்சித்சிங் தலைமையில், மூன்று பேர் குழுவினர், நேற்று அப்சல் கானிடம் விசாரணை நடத்தினர்[9].

* புதுக்கோட்டை உசிலங்குளத்தில் உள்ள ரசித்முகமது, 47 என்பவரது வீட்டில், நேற்று காலை ,6:00 மணியளவில் மூன்று பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். அவர், பி.எப்.ஐ., அமைப்பின் திருச்சி மண்டல முன்னாள் பொறுப்பாளர், விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் தரப்பட்டுள்ளது[10].

* திருப்பூர் சாமுண்டிபுரம், குலாம் காதர் கார்டனை சேர்ந்தவர் முபாரக் பாட்ஷா, 42; எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகி மற்றும் பி.எப்.ஐ.,யின் முன்னாள் மாநில பேச்சாளர். அவரது வீட்டில், எட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நான்கு மணி நேர விசாரணைக்கு பின், மொபைல் போன், லேப்டாப் போன்றவை கைப்பற்றப்பட்டன

* கோவை கோட்டைமேடில் உள்ள, பி.எப்.ஐ., அமைப்பின் முன்னாள் நிர்வாகி அப்பாஸ், 42, வீட்டில் காலை, 6:00 முதல் 8:45 மணி வரை, 3 பேர் குழுவினர் சோதனை நடத்தினர். மொபைல்போன், ஆதார் கார்டு, பான் கார்டு, மற்றும், 90,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

* விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த தொரவியில் உள்ள அப்துல்லா வீட்டிலும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சில ஆண்டுகளுக்கு முன் அப்துல்லா இறந்து விட்டார். அவரது மனைவி பாத்திமா, 75; மகன் அஜித்,35; ஆகியோரிடம், வழக்கில் தொடர்புடைய பாபு என்கிற, நைனா முகம்மது குறித்து விசாரணை செய்தனர்.

எஸ்.டி.பி.., மாநில தலைவர் முபாரக் வீட்டில் சோதனை: என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வந்த பாபு என்கிற நைனா முகம்மது, தற்போது கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் வசிப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து, அவரைத் தேடி அங்கு புறப்பட்டுச் சென்றனர். திருநெல்வேலி மேலப்பாளையம் ஹக் காலனியில், எஸ்.டி.பி.ஐ., மாநில தலைவர் முபாரக் வசிக்கிறார். இவரது வீட்டில் 24-0-2023 அன்று அதிகாலை, 5:00 மணியில் இருந்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கோஷங்கள் எழுப்பினர்[11]. இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ‘இந்த சோதனை மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை. திருபுவனம் ராமலிங்கம் கொலைக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிறுபான்மையினரை ஒடுக்கும் செயல். இதை சட்டப்படி சந்திப்போம்’ என, முபாரக் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்[12]. என்ஐஏ அதிகாரிகளின் சோதனையைக் கண்டித்து, கோவையில் எஸ்டிபிஐ கட்சியினா் 3-07-2023 ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்[13]. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்கின் மேலப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். என்ஐஏ அதிகாரிகளின் இந்த சோதனையைக் கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது[14].

ஜிகாதிகொலை: என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ராமலிங்கம், ‘ஜிகாதி’ முறையில் கொல்லப் பட்டு உள்ளார். இவரை கொல்ல தேனியில், அறிவகம் என்ற இடத்தில் இருந்து கொலையாளிகளை அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே நடந்த, ஹிந்து முன்னணி பிரமுகர் வேலுார் வெள்ளையப்பன், பா.ஜ., நிர்வாகி ‘ஆடிட்டர்’ ரமேஷின் கொலைகளை போலவே, ராமலிங்கத்தையும், புனித போர் என கழுத்து, தாடை, கை விரல்கள், முட்டிகளில் வெட்டி கொலை செய்து இருப்பது, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.  ஆக கொலை செய்வதில் கூட இத்தகைய குரூரம், உச்சக்கட்ட வன்மம், வெறி எல்லாம் இருக்குமா என்று எண்ணவே இயலாத நிலை ஏற்படுகிறது. பிறகு, மனோதத்துவ ரீதியில் பார்க்கும் பொழுது, ஒரு மனிதன், இன்னொரு மனிதனை அவ்வாறு எப்படி கொல்ல மனம் வரும்? அப்படி துண்டு துண்டாக வேட்ட இரக்கமில்லா எண்ணம் மற்றும் செயல்பாடு வரும்? ஆகவே, அத்தகைய கொலைவெறி மனோபாவம், பனப்பாங்கு மற்றும் செயல்படுத்தும் குரூரம் முதலியவை எப்படித்தான் உண்டாகும் என்று ஆராய்ச்சி செயவேண்டும் போலிருக்கிறது.

கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது,” என்பது என்ன?: பாரதம் அமைதியான பூமி, “கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது,” என்று பாரதியார், அஹிம்சைக்கு இலக்கணம் வகுத்த புனித மண். மஹாத்மா காந்தி அவ்வாறே சுதந்திரம் பெற்றார். அத்தகைய நாடு, ஒரு வேளை பிரிந்து, பாகிஸ்தான் உருவானதால், காரணமான முஸ்லிம்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனரா என்று திகைப்பாக இருக்கிறது. இவர்கள் எல்லோருமே இந்துக்கள் தானே, பிறகு மதம் மாற்றம் ஏன், தடுக்க பேசியவர்களை கொல்வானேன், பிறகு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவானேன், மேன்மேலும் தொடர்ந்து குரூரமான வேலைகளில் ஈடுபடுவானேன். மனிதர்களை மனிதர்களாகக் கூட மதிக்கத் தெரியாத அத்தகைய மனம் எப்படி மனிதனுக்கு உருவாகும். கடவுள் தான் பதில் சொல்வார் போலும்.

© வேதபிரகாஷ்

26-07-2023


[1] தினத்தந்தி, கோவை, தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 21 இடங்களில் என்... திடீர் சோதனை, ஜூலை 24, 6:01 am

[2] https://www.dailythanthi.com/News/State/nia-in-21-places-in-districts-including-coimbatore-thanjavur-nellai-surprise-check-1014848

[3] தமிழ்.ஏபிபி.லைவ், NIA Raid: என்.. அதிகாரிகள் அதிரடி சோதனை.. துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு.. நடந்தது என்ன?, By: ஆர்த்தி | Published at : 24 Jul 2023 07:56 AM (IST); Updated at : 24 Jul 2023 07:56 AM (IST)

[4] https://tamil.abplive.com/news/india/tamil-nadu-nia-officials-conducted-a-raid-yesterday-a-cash-reward-of-rs-5-lakh-will-be-given-for-further-clues-130747

[5] தமிழ்.இந்து, பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழகத்தில் 21 இடங்களில் என்ஐஏ சோதனை, செய்திப்பிரிவு, Published : 24 Jul 2023 04:46 AM; Last Updated : 24 Jul 2023 04:46 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/1064219-nia-raids-21-places-in-tn-in-connection-with-murder-of-pmk-ramalingam-1.html

[7] காமதேனு, பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை: கோவை, திருச்சியில் பரபரப்பு, Updated on:  23 Jul 2023, 12:40 pm

[8] https://kamadenu.hindutamil.in/national/nia-raids-homes-of-popular-friend-of-india-executives-in-coimbatore-and-trichy

[9] தமிழ்.நியூஸ்.18, பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்குதமிழகம் முழுவதும் என்ஐஏ அதிரடி சோதனை | NIA, 21:40 PM JULY 23, 2023

[10] https://tamil.news18.com/videos/tamil-nadu/ramalingam-murder-case-nia-raids-across-tamil-nadu-nia-1077215.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, சிறுபான்மை இயக்கங்களை அடக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்ஐஏ சோதனை நடக்கிறது.. நெல்லை முபாரக் தடதட!, By Vignesh Selvaraj Published: Sunday, July 23, 2023, 11:54 [IST]

[12] https://tamil.oneindia.com/news/thirunelveli/nia-raid-with-political-vandalism-to-suppress-minority-movements-sdpi-leader-nellai-mubarak-523335.html?story=1

[13] தினமணி, கோவையில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம், By DIN  |   Published On : 24th July 2023 12:53 AM  |   Last Updated : 24th July 2023 12:53 AM

[14] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2023/jul/24/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-4042783.html

05-02-2019 கொலை 23-07-2023 என்.ஐ.ஏ சோதனை – குரூர ஜிஹாதி கொலை எப்படி நடக்கும்? மனிதனை மனிதன் அவ்வாறு கொல்ல முடியுமா? (1) 

ஜூலை 26, 2023

05-02-2019 கொலை 23-07-2023 என்..ஏசோதனைகுரூர ஜிஹாதி கொலை எப்படி நடக்கும்? மனிதனை மனிதன் அவ்வாறு கொல்ல முடியுமா? (1) 

05-02-2019 கொலை 23-07-2023 சோதனை: எஸ்.எப்.ஐ [SFI] ஹைடைக்குப் பிறகு, பி.எப்.ஐ [PFI], எஸ்.டி.பி.ஐ [SDPI] போன்ற அமைப்புகள் உருவாகின. கேரளா, கர்நாடகா என்று பரவி, தமிழகத்திலும் நுழைந்தன. கோயம்புத்தூர் ருகில் இருப்பதனால், வியாபார ரீதியில் அத்தகைய அமைப்புகள் வேலை செய்து வந்தன. கோயம்புத்தூர் குண்டுவெடிப்புக்குப் பிறகு, அவற்றின் தீவிரவாத-பயங்கரவாத முகங்களும் வெளிப்பட்டன. இவர்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறது. சமீபத்தில் கோயம்புத்தூரில் தற்கொலை காஸ் சிலிண்டர் குண்டு வெடித்தது. அதிருஷ்டவசமாக, குண்டுவைக்க வந்தவன் மட்டும் இறந்தான். மற்ற தீயது நடக்காமல் நின்றது அல்லது முடிந்தது. இருப்பினும், அவ்வப்பொழுது, ஏதாவது ஒரு வகையில் தீவிரவாத-பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக, சோதனை, கைது என்று தமிழகத்தில் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அவ்வகையில், 23-07-2023 அன்று பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலை விவகாரத்தில்சோதனை நடந்தது.

23-07-2023 அன்று என்... சோதனை தொடர்ந்தது: தமிழகத்தில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்[1]. ஹிந்துக்களை மதமாற்றம் செய்ததை கண்டித்ததால், ‘ஜிகாதி’ முறையில், பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொல்லப்பட்ட வழக்கில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது[2]. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது தொடர்பாக, தஞ்சை, நெல்லை உட்பட, ஒன்பது மாவட்டங்களில், 21 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் 23-07-2023 அன்று அதிரடி சோதனை நடத்தி, ‘டிஜிட்டல்’ ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்[3]. அதாவது, என்.ஐ.ஏ தொடர்ந்து வேலை செய்து வருவதாலும், இந்திஆ முழுவதும் பலவிதமான தீவிரவாத-பயங்கரவாத இயக்கங்கங்கள் மற்றும் தொடர்புடைய ஆட்களை கண்காணித்து வருவதாலும், கிடைக்கும் தகவல்களை வைத்து சோதனைகளை தொடரவேண்டியுள்ளது/

மதமாற்றத்தைத் தட்டிக் கேட்ட ராமலிங்கம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, திருபுவனம் மேலதுாண்டில் விநாயகம்பேட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம், 45; பா.ம.க., பிரமுகர்[4]. திருபுவனத்தில், ‘தமிழன் கேட்டரிங் சர்வீஸ்’ என்ற பெயரில், திருமண நிகழ்வுகளுக்கு சாமியானா, பந்தல் போடுதல், மற்றும் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வந்தார்[5]; அத்துடன், சமையல் ஒப்பந்ததாரராகவும் இருந்து வந்தார்[6]. தொழில் நிமித்தமாக, திருபுவனத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இவர் சென்ற போது, ஏழ்மை நிலையில் இருக்கும் ஹிந்துக்களை, ஒரு கும்பல் தொடர்ச்சியாக சந்தித்து பேசி, பாக்கியநாதன் தோப்பு என்ற பகுதிக்கு சென்ற அவர், மத மாற்றம் செய்து வந்ததை கண்டித்தார். இதுதொடர்பான, ‘வீடியோ’ சமூக வலைதளத்திலும் வெளியானது. பாமக கட்சியை சேர்ந்தவர் என்றாலும், அத்தகைய சமூக தாக்குதல் தீவிரமானது, சமுகத்திற்கு தீங்கு விளைவிக்கிறது என்று புரிந்து எதிர்த்திருக்கிறார். பொதுவாக இந்துத்துவவாதிகள் தாம் எதிர்ப்பர் என்று சொல்வதுண்டு, அத்தகையோரை அவ்வாறே அடையாளம் காணுவது உண்டு. ஆனால், அத்தகைய உணர்வு உள்ளவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

05-02-2019 அன்று முஸ்லிம்கள் திட்டமிட்டு ராமலிங்கத்தைக் கொன்றது: ராமலிங்கம் கைநீட்டி பேசுவது அந்த கும்பலுக்கு பிடிக்கவில்லை. அப்போது, ‘கைகளை வெட்டி விடுவோம்; தீர்த்து கட்டப்படுவாய்’ என்று, அந்தக் கும்பல் மிரட்டியது. இந்நிலையில், 2019 பிப்., 5ம் தேதி இரவு [05-02-2019] கடையை மூடிவிட்டு ராமலிங்கம் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள், அவரை நடு வழியில் மறித்து, முதலில் கையை வெட்டி துண்டாக்கினர். பின், சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இதுகுறித்து, திருவிடைமருதுார் போலீசார் விசாரித்து வந்தனர். கட்சித் தலைவர் ராமதாஸ் இக்கொலை பற்றி துரிதமாக விசாரிக்க வேண்டுமென்றார்[7]. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள், நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த மைதீன் அஹமது ஷாலி என்பவரை விசாரணைக்காக முன்னர் கொச்சி அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றனர்[8]. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ராமலிங்கம் கொலையில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன[9]. அத்துடன், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்கள் குறித்த ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அதனால், மைதீன் அஹமது ஷாலியை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைதுசெய்து  விசாரித்து வருகிறார்கள். தொடர்புடைய குற்றவாளி, நெல்லை மாவட்டம் தென்காசியில் கைதுசெய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது[10].

கொலை செய்யும் அளவுக்கு மனோபாவம் இருப்பது ஏன், எப்படி?: கைகளை ஆட்டினால் என்ன, ஆட்டா விட்டால் என்ன, மதம் மாற்றம் தவறு என்றால், தைப் பற்ரித் தானே விவாதிக்க வேண்டும்? எப்படி கொலையில் செனூ முடிய முடியும்? அங்குதான், மனித நேயம், மனித மனம், மனோதத்துவ ரீதியில் ஏதோ குத்துகிறது. பின் இந்த வழக்கு, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளின் விசாரணைக்கு மாற்றப்பட்டது[11]. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குறிச்சி மலையை சேர்ந்து முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஷ்வான், அசாருதின் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்[12]. தொடர் விசாரணையில், தற்போது தடை செய்யப்பட்டுள்ள, ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பை சேர்ந்தவர்கள், ராமலிங்கத்தை படுகொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக, 18 பேர் மீது வழக்குப் பதிந்தனர்[13]; 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்[14].

© வேதபிரகாஷ்

26-07-2023


[1] தினமலர், தஞ்சை, நெல்லை உட்பட 9 மாவட்டங்களில் 21 இடங்களில்என்..., சோதனை!, – நமது நிருபர் குழு, மாற்றம் செய்த நாள்: ஜூலை 25,2023 03:27.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3384223

[3] தினமலர், தமிழகத்தில் 24 இடங்களில் என்..., ரெய்டு!, மாற்றம் செய்த நாள்: ஜூலை 23,2023 16:32.; https://m.dinamalar.com/detail.php?id=3383781

[4] https://m.dinamalar.com/detail.php?id=3383781

[5]தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக பிரமுகர் கொலைதஞ்சையில் போலீசார் குவிப்பு, Written by WebDesk, Updated: February 7, 2019 11:42 IST.

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/pmk-man-murdered-in-kumbakonam-300-police-officials-deployed-fearing-communal-tension/

[7] நக்கீரன் பா... நிர்வாகி வெட்டிக் கொலை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை தேவை! ராமதாஸ், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 07/02/2019 (09:45) | Edited on 07/02/2019 (09:54).

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/pmk-man-murdered-ramadoss-condemned

[9]  விகடன், திருபுவனம் பா.. பிரமுகர் கொலைநெல்லையில் முக்கியக் குற்றவாளி கைது, பி.ஆண்டனிராஜ், Published:27 Jun 2019 7 PMUpdated:27 Jun 2019 7 PM

[10] https://www.vikatan.com/crime/160555-nia-arrested-a-key-accused-in-ramalingam-muder-case

[11] மாலை மலர்,பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு.. தமிழகம் முழுவதும் 24 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை, By மாலை மலர், 23 ஜூலை 2023 7:11 AM; (Updated: 23 ஜூலை 2023 11:33 AM)

[12] https://www.maalaimalar.com/news/state/thirupuvanam-ramalingam-murder-case-nia-raids-at-multiple-locations-in-9-districts-639856

[13] தினமணி, பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு:  திருச்சியில் என்ஐஏ சோதனை, By DIN  |   Published On : 23rd July 2023 04:16 PM  |   Last Updated : 23rd July 2023 04:16 PM.

[14] https://www.dinamani.com/tamilnadu/2023/jul/23/pmk-ramalingam-murder-case-nia-raid-in-trichy-4042551.html

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா முளைத்தது – 1805 முதல் 2023 வரை – இந்து அமைப்புகள் சட்டப்படி முறையாக வாதாடமல் இருந்தது!

ஜூன் 29, 2023

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா முளைத்தது – 1805 முதல் 2023 வரை – இந்து அமைப்புகள் சட்டப்படி முறையாக வாதாடமல் இருந்தது!

திடீர் தர்கா முளைத்து இந்துக்களை மிரட்டுவது, உரிமைகளைப் பறிப்பது: திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் முருகன் கோவில் இருப்பது எல்லோருக்கும் தெரியும். மலைக்குப் போகும் வழியில் ஓரு தர்காவும் அமைந்துள்ளது.[1] இது பிறகு கட்டப் பட்டது. இதைப் பற்றி விவரமாக, ஏற்கெனவே எழுதியுள்ளேன்[2]. முதலில் அங்கு தர்கா – சமாதி எப்படி வந்தது என்பதே விசித்திரமான விசயம்.   தர்காவில் தொழுகை என்பது அதைவிட அதிர்ச்சியான விசயமாக இருக்கிறது[3]. ஏனெனில் முஸ்லிம்கள் தான், தர்கா-சமாதி போன்ற இடங்கள் மசூதி கிடையாது அங்கெல்லாம் தொழுகை நடத்தக் கூடாது, அல்லாவை அணங்கும், தொழுகை புரியும் இடம் மாஸ்க் / மசூதி தான், தர்கா கிடையாது என்று உறுதியாகக் கூறி வருகின்றனர். பிறகு இது புரியவில்லையே. நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது[4]. இப்பொழுதும், பழைய விவரங்களை மறந்து வழக்குகள் தொடர்வது, தீர்ப்பு அளிப்பது போன்றவை உள்ளனவோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. எது எப்படியாகிலும், திடீர் தர்கா முளைத்து இந்துக்களை மிரட்டுவது, உரிமைகளைப் பறிப்பது என்பது பற்றி எப்படி யோசிக்காமல் இருக்க முடியும்?

2023ல் இந்து முன்னணி வழக்கு தொடுப்பது: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலர் ராமலிங்கம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது[5]: “திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று[6]. திருப்பரங்குன்றம் மலை இக்கோவிலுக்கு சொந்தமானது[7]. திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் உள்ளது[8]. மலைக்கு செல்லும் பாதையில் நெல்லித்தோப்பு பகுதியில் ரம்ஜான் மாதங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். இதனால் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பக்தர்கள் பழனியாண்டவர் வீதி வழியாக மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வர். மலையின் மத்திய பகுதியான நெல்லித்தோப்பில் ஓய்வெடுப்பர். பின் அக்கோவிலுக்கு செல்வர். மலை மீது சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. வழக்கமாக பள்ளிவாசலில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர். தர்கா நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம்கள் ஏப்., 22ல் ரம்ஜான் பண்டிகையன்று நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்தினர். தர்கா அல்லது அருகிலுள்ள காலி இடத்தில் தொழுகை நடத்தாமல் பக்தர்கள் சென்று வரும் பாதையை மறைத்து நடத்தினர். திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான மலையை சிக்கந்தர் மலை என்றும், சிக்கந்தர் மலை மீது இனி தொடர்ந்து தொழுகை நடத்துவோம் எனவும் அறிவிப்பு செய்தனர்[9]. இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி கோவிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள் முயற்சிக்கின்றனர்[10]. எனவே, திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது[11].

அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது – நீதிமன்றம்: இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல். விக்டோரியாகவுரி அமர்வில் இன்று [27-06-2023] விசாரணைக்கு வந்தநிலையில்[12], “திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் தர்கா உள்ளது. அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது[13]. நாளை [28-06-2023] பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது[14]. இந்நேரத்தில் தொழுகைக்கு தடை விதிக்க முடியாது”, என்று தெரிவித்துள்ளனர்[15]. அப்படியென்றால், கோவிலுக்குச் செல்பவர்கள் கோவிலுக்குச் செல்லலாம், தொழுகை செய்வோர், அரைஅணி நேரத்திற்கு தொழுகை செய்யலாம் என கொள்ள முடியமா? இந்த மனு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டதுடன், விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்[16]. அதாவது ஒரு மாதம் [ஜூலை இறுதிக்கு] தள்ளி வைக்கப் பட்டது. நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி நாம் ஒன்றும் சொல்ல முடியாது. நீதிபதிகள் இந்துக்களின் உரிமைகளையும் கருத்திற்க் கொள்வார்கள் என்று நம்புவோமாக…

இதே போல இந்து சயய ஊர்வலங்களையும் தடையின்றி நடத்தலாம், யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது: அப்படியென்றால் விநாயக சதுர்த்தி ஊர்வலம், மற்ற பால்குடம், முலைப்பாரி போன்ற ஊர்வலங்களும் அவ்வாறே சடங்குகளாக, இந்துக்கள் பல்லாண்டுகளாகக் கடைபிடித்து வருகின்றனர். பிறகு, அவற்றை முஸ்லிம்கள் எதிர்ப்பதும், நீதிமன்றங்கள் தடை விதிப்பதும் ஏன் நடந்து கொண்டிருக்கின்றன? இந்துக்களுக்கு ஒரு சட்டம், முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம் என்றாகிறதா? அல்லது நீதிபதிகளே அத்தகைய விளக்கங்களைக் கொடுத்து முன்னுதாரணத்தை உண்டாக்குகின்றனரா? நாளைக்கு, இன்னொரு நீதிபதி, இதை உதாரணம் காட்டி, தீர்ப்பு கொடுத்துத் தப்பித்துக் கொள்வார். இது தான் நடந்து கொண்டிருக்கிறது.

1805 முதல் 2023 வரைஇந்து அமைப்புகள் சட்டப்படி முறையாக வாதாடமல் இருந்தது: மண்டபத்தின் முகப்பில் மேலே 1805 என்று தெளிவாக தெரிகிறது. அதாவது, அம்மண்டபம், 1805ல் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். உள்ளே ஒரு குகை உள்ளது, அது கர்ப்பகிருகம் போன்றுள்ளது. அதற்கான கதவும், இந்து கோவில் கதவு போன்று, மணிகளுடன் இருக்கின்றன. தூண்கள் எல்லாமே, இந்து கோவில் தூண்கள் போலத்தான் உள்ளன. ஆகவே, ஒரு இந்து கோவில் ஆக்கரமிக்கப்பட்டு, அது தர்காவாக மாற்றப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. முதலில், நீதிபதியை அந்த இடத்திற்கு நேரடியாக வந்து, உள்ள நிலைமை என்னவென்று பார்த்தால், அவருக்கு உண்மை புரிந்து-தெரிந்து விடும், ஆனால், மதகலவரம் ஏற்படும் என்றெல்லாம் கூறுவதும், அத்தகைய மனப்பாங்கு ஏற்படுவதும், மேலெழுந்தவாரியான விசயக்களை வைத்து, கருத்துரிவாக்கம் கொள்வது போன்றுள்ளது.  சரித்திர ஆதாரங்கள் எனும் போது, மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும், அவர் படித்துப் பார்த்திருக்கலாம். இடைக்காலத்தில் இவ்வாறு நடந்துள்ளதை அறிந்து கொள்ளலாம், ஆனால், எடுத்தவுடன், மதகலவரம் என்றெல்லாம் யோசிப்பது, முன்னரே தீர்மானம் செய்து கொண்டது போலத்தான் உள்ளது.  இந்து மஹாசபா சார்பிலும், வழக்கில் சரியான ஆதாரங்களை வைக்காமல், வாதிட்டிருப்பது போல தெரிகிறது. மற்றபடி, இந்து முன்னணி பிஜேபி முதலியோர், இதில் வாதி-பிரதிவாதிகளாக இல்லாததால், சட்டப் படி, இவ்வழக்கில், அவர்களுக்கு எந்த முகாந்திரமோ, பாத்தியதையோ இல்லை என்றாகிறது.

© வேதபிரகாஷ்

29-06-2023


[1] வேதபிரகாஷ், மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், தர்கா உண்டானது, கார்த்திகை தீபம் விளக்கேற்றல் தடைபட்டது (4), 07-12-2017.

[2]  https://islamindia.wordpress.com/2017/12/07/tirupparangundram-kartigai-deepam-stopped-because-of-muslim-opposition-with-their-dargah-nearby/

[3]தினத்தந்தி, திருப்பரங்குன்றம் மலையில் தொழுகை: அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, தினத்தந்தி Jun 29, 2:53 am

[4] https://www.dailythanthi.com/News/State/prayers-on-tiruparangunram-hill-madurai-high-court-orders-authorities-to-respond-996780

[5] தினமணி, திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தா் தா்ஹாவில் தொழுகைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு, By DIN | Published On : 29th June 2023 01:29 AM  |   Last Updated : 29th June 2023 01:29 AM.

[6] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2023/jun/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-4029327.html

[7] தமிழ்.இந்து,  திருப்பரங்குன்றம் மலையில் தொழுகைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு, கி.மகாராஜன், Published : 28 Jun 2023 03:03 PM; Last Updated : 28 Jun 2023 03:03 PM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/1029424-refusal-to-ban-prayer-on-thiruparankundram-hill-madurai-high-court.html

[9] தினமலர்,திருப்பரங்குன்றம் கோவில் மலையில் தொழுகைக்கு தடை கோரி வழக்கு, பதிவு செய்த நாள்: ஜூன் 29,2023 00:59

[10] https://m.dinamalar.com/detail-amp.php?id=3360979

[11] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Thiruparankundram: ‘திருப்பரங்குன்றம் தர்காவில் தொழுகை நடத்த தடை இல்லை‘ – ஐகோர்ட் அதிரடி உத்தரவு, Karthikeyan S, Jun 28, 2023 01:57 PM IST.

[12] https://tamil.hindustantimes.com/tamilnadu/madurai-high-court-refuses-to-ban-prayer-at-tiruparangunram-dargah-131687940647888.html

[13] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், திருப்பரங்குன்றம் மலையில் தொழுகைக்கு தடை விதிக்க மறுப்பு: உயர் நீதிமன்றம் அதிரடி, Written by WebDesk, Madurai, June 28, 2023 17:00 IST.

https://tamil.indianexpress.com/tamilnadu/refusal-to-ban-dharka-prayer-on-thiruparankundram-hill-madurai-high-court-709030/

ஐ.பி.சி.தமிழ்நாடு, திருப்பரங்குன்றம் மலையில் தொழுகை நடத்த தடையில்லைநீதிமன்றம் அதிரடி, Madurai,  By Thahir, 28-06-2023, 4.00 மாலை.

https://ibctamilnadu.com/article/it-is-not-forbidden-to-offer-prayers-on-mountain-1687937915

தமிழ்.ஒன்.இந்தியா, அரை மணி நேரம் தொழுகையால் எந்த பாதிப்பும் வராது.. திருப்பரங்குன்றம் மலை தொழுகைக்கு ஹைகோர்ட் ஒப்புதல், By Mani Singh S Updated: Wednesday, June 28, 2023, 17:44 [IST]

https://tamil.oneindia.com/news/madurai/there-is-no-ban-on-offering-prayers-on-tiruparangunram-hill-madurai-high-court-branch-518774.html

[14] https://tamil.indianexpress.com/tamilnadu/refusal-to-ban-dharka-prayer-on-thiruparankundram-hill-madurai-high-court-709030/

[15] ஐ.பி.சி.தமிழ்நாடு, திருப்பரங்குன்றம் மலையில் தொழுகை நடத்த தடையில்லைநீதிமன்றம் அதிரடி, Madurai,  By Thahir, 28-06-2023, 4.00 மாலை.

[16] https://ibctamilnadu.com/article/it-is-not-forbidden-to-offer-prayers-on-mountain-1687937915

தமிழ்.ஒன்.இந்தியா, அரை மணி நேரம் தொழுகையால் எந்த பாதிப்பும் வராது.. திருப்பரங்குன்றம் மலை தொழுகைக்கு ஹைகோர்ட் ஒப்புதல், By Mani Singh S Updated: Wednesday, June 28, 2023, 17:44 [IST]

https://tamil.oneindia.com/news/madurai/there-is-no-ban-on-offering-prayers-on-tiruparangunram-hill-madurai-high-court-branch-518774.html

தி கேரளா ஸ்டோரி – பெண்கள் ஐசிஸில் சேரும் விதமாக இந்தியாவிலிருந்து வெளியே அழைத்துச் செல்லும் லவ் ஜிஹாத் பற்றிய படம் என்பதால் எதிர்ப்பு!

ஏப்ரல் 30, 2023

தி கேரளா ஸ்டோரி – பெண்கள் ஐசிஸில் சேரும் விதமாக இந்தியாவிலிருந்து வெளியே அழைத்துச் செல்லும் லவ் ஜிஹாத் பற்றிய படம் என்பதால் எதிர்ப்பு!

நவம்பர் 2022ல் டீசர் வெளியானதிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது: விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுகிப்தோ சென் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ” தி கேரளா ஸ்டோரி”. முன்னர், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் அமோகமான வரவேற்பை பெற்றது[1]. அதன் தொடர்ச்சியாக அதே பணியில் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள் கடந்த 2009ம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் போர் மண்டலங்களுக்கு கடத்தி செல்லப்பட்டனர்[2]. அந்த 32,000 பெண்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லை. அவர்களைப் பற்றியும் அவர்களின் பின்னணியில் நிகழும் சம்பவங்களையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த கேரளாவை உலுக்கிய உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளார் சுதிப்தோ சென். இப்படத்தின் டீசர் தற்போது 03-11-2022 அன்று வெளியாகியுள்ளது. டீசர் வெளியானதிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது திகைப்பாக உள்ளது. “லவ் ஜிஹாத்” போர்வையில், கேரளாவிலிருந்து இளம்பெண்கள் பலர் ஐசிஸ் தீவிரவாத கும்பலுக்கு சேர்க்கப் பட்டது, கேரளாவில் உறுதியானது. அரசு ஆவணங்களும் அதை ஆமோதித்தன. அந்நிலையில், எதிர்ப்பு கேள்விக் குறியாகிறது.

நவம்பர் 2022ல் முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்து புகார் கொடுத்தது: ஒரு நர்ஸாக வேண்டும் என்ற கனவோடு இருந்த ஒரு பெண்ணை தனது வீட்டில் இருந்து கடத்தி சென்று ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷாலினி உன்னிகிருஷ்ணன் எனும் பெண்ணின் உருக்கமான பதிவுடன் இந்த டீசர் துவங்குகிறது. பார்வையாளர்களை உருகவைத்துள்ள இந்த டீசர் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த டீசரில் பர்தா அணிந்து தோன்றும் அடா சர்மா தான் மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்பட்டதாக பொய்யான தகவல்களை உண்மைப் போல் முன்வைத்துள்ளதாகவும் கேரளாவை தவறாக சித்தரிப்பதாக தெரிவித்து இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தணிக்கை குழுவில் புகார் செய்யப்பட்டது. மேலும், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் மீதான முதற்கட்ட விசாரணையில் ஒரு பிரிவினரின் மத உணர்வை புண்படுத்துவது மற்றும் கலவரத்திற்கு அழைப்பு விடுப்பது போன்ற மையக்கருத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது[3]. இதனடிப்படையில் கேரளா டி.ஜி.பி. அனில்காந்த் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனருக்கு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்[4].

விபுல் அம்ருத்லால் ஷா 2018 முதல் 2022 வரை முறையான ஆரய்ச்சிக்குப் பிறகே படத்தை தயாரித்துள்ளார்: இது போன்ற ஒரு கதையை அடிப்படையாக வைத்து படம் எடுக்க பலரும் அச்சப்படும் நிலையில் மிகவும் துணிச்சலாகவும் தைரியமாகவும் இதில் களம் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா. இப்படத்திற்காக கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் முழுமையான ஆராய்ச்சிக்கு பிறகே அதை திரையில் படமாக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொண்டுள்ளார் “தி கேரளா ஸ்டோரி” படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென். அரேபிய நாடுகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தார் மற்றும் உள்ளூர் வாசிகளிடம் இருந்து சில அதிர்ச்சியான தகவல்களை சேகரித்துள்ளார் இயக்குனர். 2009ம் ஆண்டு முதல் இந்து மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த கேரளா மற்றும் மங்களூருவைச் சேர்ந்த 32000 சிறுமிகள் கடத்தப்பட்டு இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத பகுதிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த சதி செயலின் பின்னணியில் இருக்கும் உண்மை கதையையும். பெண்களின் வலிமையை பற்றியும் எடுத்துரைக்கும் வகையிலும் “தி கேரளா ஸ்டோரி” படத்தினை படமாக்கியுள்ளனர். டீசர் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு 2023 தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

05-05-2023 அன்று வெளியாகவுள்ள படத்திர்கு எதிர்ப்பு: கேரள மாநிலத்துக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் எதிரான கருத்துக்களை பரப்புவதாக, ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிராக கேரளாவில் அதிருப்தி அதிகரித்துள்ளது. கேரளாவில் அந்த திரைப்படத்தை திரையிட அனுமதி வழங்கக்கூடாது என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. ’தி கேரளா ஸ்டோரி’ என்ற பன்மொழித் திரைப்படம் மே 5 அன்று இந்தியா நெடுக, திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அந்த திரைப்படத்தை கேரளாவில் வெளியிடக்கூடாது என்றும், திரையிடுவதற்கு அரசு தடை விதிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், சிபிஎம்மின் மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் போராடி வருகின்றன. ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது முதலே அதற்கு எதிராக கேரளாவில் கண்டனம் வலுத்து வருகிறது. கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு, சர்வதேச பயங்கரவாத அமைப்பான ’ஐஎஸ்ஐஎஸ்’ஸில் செயல்பட்டு வருவதாக அந்த முன்னோட்டம் விவரித்து இருந்தது. மேலும் கேரளாவின் 32 ஆயிரம் பெண்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருப்பதாகவும் அதில் புள்ளிவிவரங்கள் அடுக்கப்பட்டுள்ளன. மேலும் லவ் ஜிகாத் என்ற சர்ச்சைக்குரிய தலைப்பிலும் விவாதங்களை முன்னோட்டம் கிளப்பியுள்ளது.

எப்ரல் 2023ல் காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: இந்த நிலையில் சங் பரிவார் அமைப்புகளின் குரலை எதிரொலிக்கும் வகையிலான ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்[5]. ’கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷத்தை கக்கி இருப்பதாகவும், உள்நோக்கத்தோடு கேரள மாநிலம குறித்தும் கேரள மக்கள் குறித்தும் தவறான கருத்துக்களை வழங்கும் திரைப்படத்தை தடை செய்யவும்’ அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்[6]. இதனிடையே பாஜக ஆதரவு அமைப்புகள், ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வரவேற்றுள்ளன[7]. ஆனால், காங்கிரஸ் எதிர்க்கிறது[8]. இப்படம் பொய்யான பிரச்சாரம் செய்கிறது, அதனால் தடை செய்ய வேண்டும் என்று சதீசன் கூறியுள்ளார்[9]. கேரள பிஷப் போன்றோரே அச்சமயத்தில், இளம்பெண்கள் “லவ் ஜிஹாதில்” சிக்க வைக்கப் பட்டு. ஐசிஸ் போருக்கு கூட்டிச் செல்லப் பட்டனர் என்று எடுத்துக் காட்டியுள்ளார். மாநில அரசும் அவ்விவரங்களை மறுக்கவில்லை[10].

29-04-2023 – முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு; இந்நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரி படத்தை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்[11]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன[12]. அந்த வகையில் அவர்களின் கொள்கைகளை பரப்புரை செய்ய எடுக்கப்பட்ட படம் இது என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது[13]. வகுப்பு பிரிவினை வாதம் மற்றும் கேரளாவிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் நோக்கத்துடன் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது[14]. விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த “லவ் ஜிஹாத்” குற்றச்சாட்டுகளை வடிவமைத்தது திட்டமிட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். ஆனால் சமீபத்தில் லவ் ஜிகாத் என்ற ஒன்று கிடையாது என்று மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழலில் கேரளாவில் மதநல்லிணக்க சூழலை அழித்து வகுப்புவாத விஷ விதைகளை விதைக்க சங்பரிவார் முயற்சித்து வருவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

30-4-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், ‘The Kerala Story’ teaser :மனதை பதைபதைக்கவைக்கும்தி கேரளா ஸ்டோரிடீசர் வெளியீடு, By: லாவண்யா யுவராஜ் | Updated at : 03 Nov 2022 10:36 PM (IST), Published at : 03 Nov 2022 10:36 PM (IST)

[2] https://tamil.abplive.com/entertainment/the-kerala-story-teaser-is-out-now-82794

[3] மாலை மலர், சர்ச்சைகளை கிளப்பியதி கேரளா ஸ்டோரிடீசர்.. வழக்குப்பதிவு செய்ய உத்தரவு.., By மாலை மலர், 9 நவம்பர் 2022 6:08 PM

[4] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-movie-teaser-controversy-534578

[5] காமதேனு, ‘சங் பரிவார் குரலை எதிரொலிக்கும் திரைப்படம்’; ‘தி கேரளா ஸ்டோரிக்கு கேரளாவில் வலுக்கும் எதிர்ப்பு!,காமதேனு, Updated on : 28 Apr, 2023, 6:50 pm. https://kamadenu.hindutamil.in/cinema/ban-the-kerala-story-movie

[6] https://kamadenu.hindutamil.in/cinema/ban-the-kerala-story-movie

[7] Malayala Manorama, False propaganda: VD Satheesan calls for ban on screening ‘The Kerala Story’, Onmanorama Staff, Published: April 28, 2023 03:56 PM IST

[8] https://www.onmanorama.com/news/kerala/2023/04/28/vd-satheesan-against-screening-the-kerala-story-sudipto-sen.html

[9] PTI News, Congress urges state govt not to give permission to screen ‘The Kerala Story’ which makes ‘false claims‘, Updated: Apr 28 2023 3:03PM

[10] https://www.ptinews.com/news/national/congress-urges-state-govt-not-to-give-permission-to-screen-the-kerala-story-which-makes-false-claims/559755.html

[11] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரெய்லருக்கு  கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் கண்டனம்!, தினத்தந்தி 30 April 2023 3:16; PM (Updated: 30 April 2023 3:17 PM)

[12] https://www.dailythanthi.com/News/India/kerala-chief-minister-pinarayi-vijayan-condemned-the-trailer-of-the-kerala-story-954112

[13] ஏபிபிலைவ், The Kerala Story: ’பிரிவினைவாதத்தை தூண்டும் ட்ரெய்லர்’ – தி கேரளா ஸ்டோரி  படத்துக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம், By: பேச்சி ஆவுடையப்பன் | Updated at : 30 Apr 2023 02:48 PM (IST), Published at : 30 Apr 2023 02:48 PM (IST).

[14] https://tamil.abplive.com/entertainment/cm-pinarayi-vijayan-slams-film-the-kerala-story-for-spreading-hate-114580

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

26-10-2022 (புதன் கிழமை): தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. எல்லைக் கடந்த தீவிரவாத இணைப்புகளால், தமிழக முதல்வர் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரைத்தார்.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வின்சென்ட் சாலையில் உள்ள அப்சல்கான் வீட்டுக்கு சென்றனர். லாப்டாப்பைக் கைப்பற்றினர்.

 இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வெடித்த போது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 பேரிடமும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

27-10-2022 (வியாழன் கிழமை):  தமிழகம் இந்த வழக்கை, என்.ஐ.ஏவிடம் (NIA) ஒப்படைத்தது. வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்[1]. என்.ஐ.ஏ எப்.ஐ.ஆர் (FIR) போட்டது. என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது[2]. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில் அபாயகரமான 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

28-10-2022 (வெள்ளிக் கிழமை):  கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவன் – பெரோஸ் இஸ்மாயில் தான், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டு கைதாகி, கேரளா சிறையில் இருக்கும் மொஹம்மது ஹஸாருத்தீன் மற்றும் ரஷீத் அலி இருவரையும் சந்தித்தாக ஒப்புக் கொண்டான். இவர்களுக்கு ஐசிஸுடனும் [Islamic State of Iraq and Syrai (ISIS),] தொடர்பு உள்ளது[3].

109 பொருட்கள் பறிமுதல்அவற்றின் எடை 60, 70 கிலோவா, 100 கிலோவா?: முதலில் எச்சரிக்கையாக அமுக்கி வாசித்த ஊடகங்கள், பிறகு, பெரிய “துப்பறியும் சாம்பு”  ரேஞ்சில் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[4]. 109 ஐட்டங்களை பட்டியல் போடவில்லை என்றாலும், எடை போட ஆரம்பித்த விட்டன. ஹராசு சரியில்லையா, நிருபர்களுக்கு எடை பார்க்கத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. 60, 70, 100 என்று குறிப்பிடுகின்றன[5]. பலியான ஜமேஷா முபின் மற்றும் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 7 பேர் மீதும் 120 பி, 153 ஏ., உபா சட்டப்பிரிவு 16 மற்றும் 17 ஆகிய 4 பிரிவுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது[6]. இதில், வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேஷா முபின் திட்டமிட்டதாகவும், அவரின் வீட்டில் இருந்து 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்ஸிஜன் சிலிண்டர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், கையுறை, நோட்டு புத்தகம், ஜிஹாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது[7]. மொத்த வெடிப்பொருட்களின் எடையை 65, 75, 100 கிலோ என்று பலவிதமாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன[8]. 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் என்றால், மீதி 33.5 கிலோ மற்றப் பொருட்கள் இருக்க வேண்டும், ஆக மொத்தம் 100 கிலோ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும்[9].

கார்கள் பறிமுதல்: கோவையில் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 கார்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்[10]. வின்சென்ட் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].  இதில், 7 கார்களின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து அந்த கார்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 5 கார்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக 3 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் குண்டு வெடிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்[12]. விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது போலும்[13]. எல்லா நகரங்களிலும், எல்லா இடங்களிலும், இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. ஆனால், கார் வெடித்தால் இவ்வாறான, அதிரடி நடவடிக்கை வேற்கொள்வார்களா என்று தெரியவில்லை. போலீஸார், திடீரென்று, இவ்வளவு எச்சரிக்கையாக இப்பொழுது செயல்படுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், அவர்களது முயற்சிகளை பாராட்டலாம். நம்மை போன்று அவர்களும் கடமையுடன் செயல்படுகிறார்கள்.

கோவை கார் காஸ் சிலிண்டர் வெடிப்பு முதல் கார் குண்டு வெடிப்பு வரை: “கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து…….”  என்று ஆரம்பித்து, ஊடகங்கள், “கோவை காரில் காஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்து..”,  மற்றும், “கோவை காரில் இரண்டு காஸ் சிலிண்டர்களில் ஒன்று  வெடித்து விபத்து………”, .“கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து………”, “கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த வழக்கு” என்றெல்லாம் குறிப்பிடப் பட்டு, “கோவை கார் குண்டு வெடிப்பு வழக்காக” மாறியுள்ளது. போலீஸாருக்கு விருது, பாராட்டு………………ஊடகங்களுக்கு, மெத்தப் படித்து, தமிழகத்தில் ஊறிப்போன நிருபர்களுக்கு, இதெல்லாம் தெரியாதது போல தலைப்பிட்டு செய்திகளை போடுவதிலிருந்து, ஒன்று அவர்களும் விசயங்களை மறைக்கிறார்கள் அல்லது யாருக்கோக் கட்டுப் பட்டு, அவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றாகிறது. பிறகு, அவர்களது நடுநிலைத் தன்மை, ஊடக தருமம், பத்திரிக்கா தொழில் நியாயம், செக்யூலரிஸ சித்தாந்தம் முதலியவை பற்றி சந்தேகங்கள் எழத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] மாலைமலர், கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்என்... விசாரணை அதிகாரி நியமனம்,  Byமாலை மலர்28 அக்டோபர் 2022 4:53 PM

[2] https://www.maalaimalar.com/news/state/coimbatore-car-blast-incident-nia-appointment-of-investigating-officer-529573?infinitescroll=1

[3] Police sources, on Friday, October , said that one of the six accused in the Coimbatore blast case, confessed during interrogation that he met two men in a Kerala prison who had links with terror group Islamic State of Iraq and Syrai (ISIS), who were involved in the Easter bombings in Sri Lanka.  Feroz Ismail confessed that he had met Mohammed Azharuddin and Rashid Ali, lodged in a prison in the neighbouring state and further questioning is on to ascertain the motive behind the meeting, they said. Azharuddin and Ali are in jail in connection with a case against them in Kerala.

[4] தமிழ்.இந்து, கோவை | ஜமேஷா முபின் வீட்டில் 60 கிலோ வெடிமருந்து பறிமுதல்? – போலீஸ் கண்காணிப்பால் மிகப்பெரிய நாசவேலை தவிர்ப்பு, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 06:50 AM; Last Updated : 26 Oct 2022 06:50 AM

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/887653-60-kg-of-ammunition-seized.html

[6] தினத்தந்தி, கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல், அக்டோபர் 29, 4:47 am

[7] https://www.dailythanthi.com/News/State/109-items-seized-from-car-blast-victim-jamesha-mubins-house-824772

[8] மாலை மலர், ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல், By மாலை மலர்,27 அக்டோபர் 2022 9:40 AM

[9] https://www.maalaimalar.com/news/state/tamil-news-100-kg-explosives-seized-from-jamesha-mubins-house-528818?infinitescroll=1

[10] இ.டிவி.ப்சாரத்,கார் வெடிப்புச்சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல்,

[11] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/coimbatore/after-car-blast-incident-in-coimbatore-police-seized-unattended-two-wheeler-and-cars-parked-on-the-roads/tamil-nadu20221028160747877877082

[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை சம்பவம் எதிரொலி: திருச்சியில் அனாதையாக நின்ற10 கார்கள் பறிமுதல், Written by WebDesk, Updated: October 28, 2022 3:10:41 pm

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-incident-reverberates-10-orphaned-cars-seized-in-trichy-532243/

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.

மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க நான்கு மூத்த தலைவர்களை பகவத் நியமித்தார். எங்கள் பக்கத்தில், ஆர்எஸ்எஸ் உடனான பேச்சுவார்த்தையை தொடர முஸ்லீம் மூத்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை நாங்கள் நியமிக்க உள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. பசு வதையில் ஈடுபட்டால், சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினோம். காஃபிர் என்பது அராபிய மொழியில் நம்பிக்கையற்றவர்களை குறிக்க பயன்படுத்துவது. இது தீர்க்கப்பட முடியாத பிரச்சினை அல்ல என்று அவரிடம் கூறினோம். அதேபோல் இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர் அல்லது ஜெகாதி என்று கூறும்போது நாங்கள் வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.

நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6]..  மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8].  மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள்  லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].

தீவிரவாத தொடர்புகள் நீங்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1] காமதேனு, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!, Updated on : 22 Sep, 2022, 3:29 pm; 2 min read

[2] https://kamadenu.hindutamil.in/politics/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims

[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன் பகவத்முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு: பசுவதை உட்பட முக்கிய பிரச்னைகள் பற்றி பேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.

[4] https://tamil.indianexpress.com/india/rss-muslim-intellectuals-to-hold-periodic-talks-address-issues-of-concern-to-the-two-sides-514530/

[5] இடிவி.பாரத், மசூதிக்கு விசிட் அடித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்விஷயம் என்ன தெரியுமா?, Published on : 22, Sep 2022, 9.09 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/rss-chief-mohan-bhagwat-visits-mosque/tamil-nadu20220922210942766766339

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், முஸ்லிம் தலைவர் இமாம் உமர் அகமது இல்யாசியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்புகாரணம் இதுதான்!!, Narendran S, First Published Sep 22, 2022, 9:20 PM IST; Last Updated Sep 22, 2022, 9:20 PM IST.

[8] https://tamil.asianetnews.com/india/rss-chief-mohan-bhagwat-met-muslim-leader-imam-umar-ahmed-ilyasi-rimc0w

[9] தினத்தந்தி, இமாம் அமைப்பு தலைவருடன் மோகன் பகவத் சந்திப்பு, Sep 22, 2:32 pm

[10] https://www.dailythanthi.com/News/India/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims-798250

மயிலாடுதுறையில் நடப்பது என்ன, என்.ஐ.ஏ சோதனை ஏன், முஸ்லிம்கள் கைது செய்யப் படுவது ஏன், இந்தியாவை துண்டாடும் இந்திய கிலாபா கட்சி, இந்திய கிலாபா முன்னணி தேவையா? (2)

மே 11, 2022

மயிலாடுதுறையில் நடப்பது என்ன, என்.. சோதனை ஏன், முஸ்லிம்கள் கைது செய்யப் படுவது ஏன், இந்தியாவை துண்டாடும் இந்திய கிலாபா கட்சி, இந்திய கிலாபா முன்னணி  தேவையா? (2)

அக்டோபர் 2021ல் அப்துல்லா மீது குற்றப் பத்திரிக்கைத் தாக்கல்: இஸ்லாமிய தேசம் ஒன்றை இந்தியாவில் தனியாக உருவாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மதுரையை சேர்ந்த அப்துல்லா (என்ற) சரவணகுமார் (31), என்பவர் ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது[1].  இவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மதுரை போலீசாரால் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசாருக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்த வழக்கு பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சரவணகுமார் மீது என்ஐஏ அதிகாரிகள், 5 வது செஷன்ஸ் நீதிபதி முன்பு நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்[2]. அப்துல்லா, அப்துல்லாவாகத்தான் செயல்படுகிறான், சரவணன் என்பதால், இந்தியாவை ஆதரிக்கவில்லை. மற்ற இந்துபெயர்கள் கொண்டவர்களும், தமிழகத்தில், இந்தியவிரோதிகளாகத் தான், பேசியும், எழுதியும் வருகின்றனர். பிறகு, இவ்விரு கூட்டங்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தூண்டும் துண்டு பிரசுரங்கள்:  சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததற்கான சில ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறை, திருச்சி, கோவை என, பல இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கி உள்ளனர். இவர்களிடம் எப்போதும் துப்பாக்கி இருக்கும். அதேபோல, ஒரு கைவிலங்கு, அதற்குரிய இரண்டு சாவிகளும் வைத்திருப்பர். காரில் மடிக்கணினி, ‘பவர் பாங்க், வீடியோ பேனா’ உள்ளிட்ட பொருட்களையும் வைத்திருப்பர். இவர்கள், பயங்கரவாத அமைப்புக்கு, சமூக வலைதளம் வாயிலாக, ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு நிதியுதவி செய்து வந்த நபர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்பதற்கான ஆதாரங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். இத்தனையும் தமிழக போலீஸாருக்குத் தெரியாமல் நடக்கின்றனவா அல்லது முஸ்லிம்கள் என்றதால், கண்டுகொள்ளாமல் இருக்கப் படுகிறதா?  

கிலாபத் இயக்கம் நடத்தும் அடிப்படைவாத முஸ்லிம்கள்: ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தஞ்சாவூரில் மூன்று பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் 12-02-2022 அன்று சோதனை நடத்தினர்[3]. கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த மதுரை அப்துல்காதர் என்பவருக்கு ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பியதாகவும் ஓராண்டுக்கு முன்புதேசிய புலனாய்வு அமைப்பினரால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்[4]. இதேபோல, மன்னார்குடியைச் சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரும் நான்கு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கிலாபத் இயக்கத்தில் உள்ள –

  1. தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி கீழவாசல் தைக்கால் தெருவைச் சேர்ந்த மெக்கானிக் அப்துல்காதர் (49),
  2. அதே பகுதியை சேர்ந்த  முகமதுயா சின் (30),
  3. காவேரி நகரைச் சேர்ந்த அகமது (37)

இதனை தொடர்ந்து, தஞ்சை மகர்நோன்புசாவடியில் உள்ள அப்துல்காதர், முகமதுயாசின் மற்றும் காவேரி நகர் முகமது ஆகியோர் வீட்டுக்குள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவாக பிரிந்து சென்றனர். ஆகியோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டை பூட்டி சோதனை நடத்தினர்.

என்.ஐ.ஏ சோதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்த முஸ்லிம்கள்: இந்த சோதனை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி காலை 10 மணி வரை நடைபெற்றது. அப்போது, மூன்று பேரின் செல்போன்கள், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிப்.16-ல் சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் மூன்று பேரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் கொடுத்துவிட்டு, புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே மகர்நோன்புசாவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[5]. ஆதாரம் இன்றி சோதனை நடந்து வருவதாகவும், அவர்கள் மூன்று பேருக்கும் தொடர்பு இல்லை என்றும் கோ‌ஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்[6]. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனையும், பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும் நடப்பதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தஞ்சையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

போலீஸாரை மிரட்டும் அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது எது, யார்?: இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது யார்? என்,ஐ,ஏ.வையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்வது, கேள்விகள் கேட்பது எல்லாம் எந்த அளவுக்கு மோசமானது, ஏன் ஆபத்தானது என்பதனை அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்கும், மறைமுகமாக வேறு பலன்கள் கிடைக்கும் என்றெல்லாம் அரசியல் கட்சிகள் செயல் படலாம். ஆனால், அவையெல்லாம் தேசவிரோதமாகத்தான் முடியும். இவ்வாறு, முஸ்லிம்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதே, ஊக்கம் கொடுப்பதற்கு சமம் ஆகும். மேலும் “தொப்புள் கொடி உறவுகள்” என்றெல்லாம் பேசும் போது, எங்களை ஒன்றும் செய முடியாது, அரசே ஆதரவாக உள்ளது என்ற தொரணையும் வரும். அதுதான், மயிலாடுதுறை போலீஸாரைப் பார்த்து அந்த முஸ்லிம்கள் திமிருடன் கேட்டது.

போலீஸார் உதவியுடன் என்.ஐ.ஏ சோதனை: முன்னதாக, அப்துல்காதர் மற்றும் முகமது யாசின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்துவதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தஞ்சாவூர் ஏடிஎஸ்பி பிருந்தா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சோதனை முடிந்து வெளியில் வந்த என்ஐஏ அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சூழ்ந்துகொண்டு, முழக்கம் எழுப்பினர். அவர்களை போலீஸார் கலைந்து போகச் செய்தனர். இதேபோல, காரைக்கால் நகராட்சி சந்தைத் திடலுக்கு எதிரே உள்ள ராவணன் நகர் பகுதியில் வசிக்கும் உணவக உரிமையாளரான அப்துல்அமீன் என்பவரின் வீட்டிலும் என்ஐஏஅதிகாரிகள் 12-02-2022 அன்று அதிகாலை 5மணி முதல் பகல் 1 மணி வரை சோதனை நடத்தினர். 

14-03-2022 அன்று, கீழ்கண்டவர்கள் மீது வழக்குத்தொடரப் பட்டது[7].

  1. பாவா பஹ்ருத்தீன் என்கின்ற மன்னார் பாவா, சம்சுதீன் மகன், வயது 41, மன்னார்குடி, தஞ்சாவூர் ( Bava Bahrudeen @ Mannai Bava s/o Samsudeen,aged 41 yrs, r/o Mannargudi, Tiruvarur District, Tamil Nad) மற்றும்
  2. ஜியாவுத்தீன் ஜாகுபார் மகன், வயது 40, கும்பகோணம், தஞ்சாவூர் ( Ziyavudeen Baqavi, s/o Jagubar, aged 40 yrs, r/o Kumbakonam, Thanjavur Dt),

இசமா சாதிக் எனப்படுகின்ற சாதிக் பாட்சா இத்தகைய தேசவிரோத நடவடிக்கைகளுடன், மனித நீதி பாசறை என்ற அமைப்பின் உறுப்பினருமாகவும் உள்ளார். அது இப்பொழுது போப்புலர் பிரென்ட் ஆப் இன்டியரேன்றழைக்கப் படுகிறது. எப்.ஐ.ஆர்,ன் படி இந்த ஐந்து நபர்களும், இஐசிஸ் சித்தாந்தத்தைப் பரப்பி, தேசவிரோதத்தை வளர்த்து வருகின்றனர். இந்தியாப் பகுதிகளைத் துண்டாடி அவற்றை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் அல்லது “பிரச்சினை உள்ள பகுதி” என்று அறிவிக்கப் படும் வகையில் தீவிரவாதத்தை உண்டாக்கவேண்டும் என்று,  “இந்திய கிலாபா கட்சி (Khilafah Party of India),” “இந்திய கிலாபா முன்னணி (Khilafa Front of India),” “இந்திய அறிவிஜீவி மாணவர் (Intellectual Students of India),” “இந்திய மாணவர் கட்சி (Student Party of India),” என்றெல்லாம் உருவாக்கி, செயல்பட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

© வேதபிரகாஷ்

11-05-2022


[1] தினகரன், ஐஎஸ்ஐஎஸ் ஆதவாளர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை, 2021-10-07@ 01:03:24.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=710564

[3] தமிழ்.இந்து, 3 பேருக்கு .எஸ் உடன் தொடர்பு? – தஞ்சையில் என்ஐஏ சோதனை: முஸ்லிம்கள் போராட்டத்தால் பரபரப்பு, செய்திப்பிரிவு, Published : 13 Feb 2022 11:22 AM; Last Updated : 13 Feb 2022 11:22 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/767041-nia-raid-in-tanjore-1.html

[5] மாலைமலர், தஞ்சையில் 3 பேரின் வீடுகளில் என்... அதிகாரிகள் திடீர் சோதனை, பதிவு: பிப்ரவரி 12, 2022 13:02 IST..

[6] https://www.maalaimalar.com/news/district/2022/02/12130227/3480787/Tamil-News-NIA-raid-three-houses-in-Tanjore.vpf

[7] NIA Files Charge Sheet against Two Operatives of Hizb-ut-Tahrir in Madurai Iqbal HuT case (RC-08/2021/NIA/DLI) dated 14-03-2022.