இந்துமதத்தலைவர்களைக்கொல்லப்படுவதுமட்டுமேபயங்கரவாதச்செயலாகக்கருதப்படுமா – இது விவாதத்திற்கு உரியது என்பதால், ஆசிப்முஸ்தஹீன் விடுதலை!
இந்துமதத்தலைவர்களைகொல்லப் படுவதுமட்டுமேபயங்கரவாதச்செயலாகக்கருதப்படுமா: இந்து மதத் தலைவர்களை கொல்லப்படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது[1]. பிறகு அத்தகைய குரூர எண்ணத்தை என்னவென்று குறிப்பிடுவது என்று நீதிமன்றம் தான் விளக்க வேண்டும். குற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் “culpability of mind” இருந்ததா-இல்லையா என்று ஆராய வேண்டும் என்று நீதிமன்றங்களில் பலமுறை வரையருக்கப் பட்ட சட்டமுறையாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்த போது, நீதிபதிகள் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளனர்[2]. மேலும், பெயிலுக்கு கொடுத்த மனுவை ஏற்று, ISIS அனுதாபி என்று கூறப்படும் ஒருவரின் ஜாமீன் மனு, மேலும் சமீபத்தில் பல நிபந்தனைகளுடன் அவரை விடுதலை செய்தது[3]. இது பிடிஐ செய்தி என்பதால், ஆங்கில ஊடகங்களில் அப்படியே வெளிவந்துள்ளது. ஆனால், தமிழகத்து செய்தியானாலும், தமிழ் ஊடகத்தில் இன்னும் வெளி வரவில்லை.
ஐசிஸ் உறுப்பினர் என்று எடுத்துக் காட்டப் படவில்லை: மேல்முறையீடு செய்த ஈரோட்டைச் சேர்ந்த ஆசிப் முஸ்தஹீன், தான் வசிக்கும் பகுதியைச் சுற்றியுள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களைக் குறிவைத்து தனது திட்டத்தை செயல்படுத்துவதற்காக தடை செய்யப்பட்ட அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உறுப்பினராக விரும்பினார் என்பது அரசுத் தரப்பு வழக்கு[4] என்று தெரிகிறது. மற்றொரு குற்றவாளியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்[5] என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கிடையே அரபு மொழியில் வரும் செய்திகள், அவர் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் கொல்ல விரும்புவதாகவும் காட்டுவதாக அது வாதிட்டது[6]. சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் [Unlawful Activities (Prevention) Act,] 18 மற்றும் 38(2) பிரிவுகளின் கீழ் அவர் குற்றவாளி என்று அரசு தரப்பு சமர்பித்தது. இருப்பினும், குறுஞ்செய்திகளில் மேல்முறையீடு செய்தவர் தடைசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை என்று நீதிமன்றம் கூறியது[7]. அதாவது, ஐசிஸ் உறுப்பினர் என்றால் தான் குற்றவாளி ஆவான் போலிருக்கிறது.
நெருக்கமாக இருப்பதால் மட்டும் தீவிரவாதியாகி விட முடியாது: “A2 ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர் என்பதை நிரூபிக்க அரசு தரப்பால் எந்த ஆதாரமும் இல்லை. A2 ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர் என்று வைத்துக் கொண்டாலும், குறுஞ்செய்திகள் மேல்முறையீடு செய்பவர்/A1 A2 க்கு அருகில் இருக்க விரும்புவதாக மட்டுமே குறிப்பிடுகிறது[8]. ஒரு தனிநபரின் அருகாமை என்பது, பயங்கரவாத சங்கத்தின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்காக, அதனுடன் தொடர்புகொள்வது அல்லது அதனுடன் தொடர்புடையதாகக் கூறுவது வேறுபட்டது,” என்று பெஞ்ச் கூறியது[9]. தகவல்தொடர்புகளைத் தவிர, இரண்டு கத்திகள் மற்றும் மேல்முறையீட்டாளர் கத்தியை வைத்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபரின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்திருக்கும் படம் ஆகியவற்றைப் பிரதிவாதி பொலிசார் நம்பியுள்ளனர்[10]. ஆனால், அவர் அத்தகைய கொலையாளியா என்றெல்லாம் நிரூபிக்கவில்லை என்றும் வாதல் தொடரும் போலிருக்கிறது.
ஆர்எஸ்எஸ்ஸைச்சேர்ந்தஇந்துமதத்தலைவர்களுக்குஎதிராகஇந்தியாவில்பயங்கரவாதச்செயல்களைச்செய்ய சதி: யுஏபிஏ பிரிவு 18ன் கீழ் உள்ள குற்றத்தைப் பொறுத்தவரை, பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த இந்து மதத் தலைவர்களுக்கு எதிராக இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்ய ஏ1 மற்றும் ஏ2 சதி செய்ததாக இறுதி அறிக்கையில் அரசு தரப்பு வழக்கு தொடர்ந்தது[11]. “சில மதத் தலைவர்களைத் தாக்க சதி செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. UAPA வின் 15வது பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, அது எப்படி ஒரு பயங்கரவாதச் செயலாகும் என்பதை பிரதிவாதி குறிப்பிடவில்லை[12]. UAPA இன் 15வது பிரிவின் கீழ் ஒரு சட்டத்தை கொண்டு வர, அந்தச் செயல் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு அல்லது இறையாண்மையை அச்சுறுத்தும் அல்லது அச்சுறுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட வேண்டும்[13]. இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள மக்களிடமோ அல்லது எந்தப் பிரிவினரிடமோ பயங்கரவாதத்தைத் தாக்குவது, என்ற ரீதியில் தீவிரவாதம் இருக்க வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியது[14].
“இந்துமதத்தலைவர்கள்கொல்லப்படுவதுமட்டுமேஒருபயங்கரவாதச்செயலாகஅமையுமாஎன்றகேள்விவிவாதத்திற்குரியது[15]. எவ்வாறாயினும், வழக்கின் பரந்த நிகழ்தகவுகளைக் கருத்தில் கொண்டு, வழக்குத் தொடுத்துள்ள பொருட்களிலிருந்து, தீவிரமான குற்றங்கள் உட்பட பிற சட்டவிரோதச் செயல்களைச் செய்ய சதி இருந்தபோதிலும், பயங்கரவாதச் செயலைச் செய்வதற்கான சதித்திட்டம் இருந்தது என்று உறுதியாக முடிவு செய்ய முடியாது,” என்று நீதிமன்றம் மேலும் கூறியது[16]. எவ்வாறாயினும், “யுஏபிஏவின் பிரிவுகள் 18 மற்றும் 38(2) இன் கீழ் முதன்மையான வழக்கு தொடர்பான தீவ்ரமான அம்சங்கள் வழக்கின் பரந்த சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டும், ஜாமீன் விண்ணப்பத்தை பரிசீலிப்பதன் மூலமும் மட்டுமே செய்யப்படுகின்றன.” அரசு தரப்பில் என்ன வாதாடினார்கள் என்பதும் தெரியவில்லை. ஏனெனில், அரசு தரப்பு வக்கீலுக்கு இதெல்லாம் தெரியாதா என்ற கேள்வியும் எழலாம். ஒருவேளை முறையாக அவ்வாறு வழக்குப் பதிவு செய்யப் படவில்லை என்றால், இவ்வாறே ஓட்டைகளை உபயோகித்து விடுதலை பெற்று சென்று விடலாம். பிறகு, கைது செய்யப் பட்டது ஆதாரங்களை சேகரித்தது என்பதெல்லாம் வேஸ்ட் தான்.
நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுதலை: ஈரோடு உள்ளூர் நீதிமன்றத்தால் இதேபோன்ற மனு நிராகரிக்கப்பட்ட மேல்முறையீட்டாளருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு விடுதலை அளித்தது, பத்திரத்தை நிறைவேற்றும்படியும், தலா ரூ. 50,000 போன்ற தொகைக்கு இரண்டு ஜாமீன்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டது, அதில் ஒன்று இரத்த உறவினரால் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறையில் இருந்து வெளியே வந்த அவர் ஈரோட்டில் தங்கி இருக்க வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியின்றி ஊரை விட்டு வெளியேறக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இனி ஈரோடில் அவன் சுதந்திரமாகத்தன் திரிந்து கொண்டிருப்பான். கொஞ்ச நாட்களில் எல்லாம் மறந்து விடும். இப்பொழுதே தமிழில் எந்த செய்தியும் வரவில்லை.
[1] The South First, Considering killing of Hindu religious leaders as terrorist act is ‘debatable’: Madras HC while granting bail to alleged ISIS sympathizer, BY PTI, Published:15/12/2023 11:54 am.
[5] Times Now, Is targeted killing of Hindu neta an act of terror? Madras HC says it id debatable, TN National Desk, Updated: Dec 14, 2023, 10:20 AM IST.
[9] Bar and Bench, Is conspiring to kill Hindu religious leader a terrorist act under UAPA? Madras High Court asks, Ayesha Arvind, Published on: 13 Dec 2023, 7:28 pm.
[13] Indian Express, Plot to kill religious leaders: Accused gets bail, HC asks if act is terror under UAPA, Written by Arun Janardhanan, Chennai | Updated: December 15, 2023 03:33 IST
[15] Rediff.com, Is killing Hindu leaders a terrorist act asks HC, grants bail to pro-ISIS man, Source: PTI – Edited By: Senjo M RDecember 14, 2023 21:40 IST
05-02-2019 கொலை 23-07-2023 என்.ஐ.ஏசோதனை – குரூரஜிஹாதிகொலைஎப்படிநடக்கும்? மனிதனைமனிதன்அவ்வாறுகொல்லமுடியுமா? (1)
05-02-2019 கொலை 23-07-2023 சோதனை: எஸ்.எப்.ஐ [SFI] ஹைடைக்குப் பிறகு, பி.எப்.ஐ [PFI], எஸ்.டி.பி.ஐ [SDPI] போன்ற அமைப்புகள் உருவாகின. கேரளா, கர்நாடகா என்று பரவி, தமிழகத்திலும் நுழைந்தன. கோயம்புத்தூர் ருகில் இருப்பதனால், வியாபார ரீதியில் அத்தகைய அமைப்புகள் வேலை செய்து வந்தன. கோயம்புத்தூர் குண்டுவெடிப்புக்குப் பிறகு, அவற்றின் தீவிரவாத-பயங்கரவாத முகங்களும் வெளிப்பட்டன. இவர்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறது. சமீபத்தில் கோயம்புத்தூரில் தற்கொலை காஸ் சிலிண்டர் குண்டு வெடித்தது. அதிருஷ்டவசமாக, குண்டுவைக்க வந்தவன் மட்டும் இறந்தான். மற்ற தீயது நடக்காமல் நின்றது அல்லது முடிந்தது. இருப்பினும், அவ்வப்பொழுது, ஏதாவது ஒரு வகையில் தீவிரவாத-பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக, சோதனை, கைது என்று தமிழகத்தில் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அவ்வகையில், 23-07-2023 அன்று பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலை விவகாரத்தில்சோதனை நடந்தது.
23-07-2023 அன்றுஎன்.ஐ.ஏ. சோதனைதொடர்ந்தது: தமிழகத்தில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்[1]. ஹிந்துக்களை மதமாற்றம் செய்ததை கண்டித்ததால், ‘ஜிகாதி’ முறையில், பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொல்லப்பட்ட வழக்கில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது[2]. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது தொடர்பாக, தஞ்சை, நெல்லை உட்பட, ஒன்பது மாவட்டங்களில், 21 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் 23-07-2023 அன்று அதிரடி சோதனை நடத்தி, ‘டிஜிட்டல்’ ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்[3]. அதாவது, என்.ஐ.ஏ தொடர்ந்து வேலை செய்து வருவதாலும், இந்திஆ முழுவதும் பலவிதமான தீவிரவாத-பயங்கரவாத இயக்கங்கங்கள் மற்றும் தொடர்புடைய ஆட்களை கண்காணித்து வருவதாலும், கிடைக்கும் தகவல்களை வைத்து சோதனைகளை தொடரவேண்டியுள்ளது/
மதமாற்றத்தைத்தட்டிக்கேட்டராமலிங்கம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, திருபுவனம் மேலதுாண்டில் விநாயகம்பேட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம், 45; பா.ம.க., பிரமுகர்[4]. திருபுவனத்தில், ‘தமிழன் கேட்டரிங் சர்வீஸ்’ என்ற பெயரில், திருமண நிகழ்வுகளுக்கு சாமியானா, பந்தல் போடுதல், மற்றும் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வந்தார்[5]; அத்துடன், சமையல் ஒப்பந்ததாரராகவும் இருந்து வந்தார்[6]. தொழில் நிமித்தமாக, திருபுவனத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இவர் சென்ற போது, ஏழ்மை நிலையில் இருக்கும் ஹிந்துக்களை, ஒரு கும்பல் தொடர்ச்சியாக சந்தித்து பேசி, பாக்கியநாதன் தோப்பு என்ற பகுதிக்கு சென்ற அவர், மத மாற்றம் செய்து வந்ததை கண்டித்தார். இதுதொடர்பான, ‘வீடியோ’ சமூக வலைதளத்திலும் வெளியானது. பாமக கட்சியை சேர்ந்தவர் என்றாலும், அத்தகைய சமூக தாக்குதல் தீவிரமானது, சமுகத்திற்கு தீங்கு விளைவிக்கிறது என்று புரிந்து எதிர்த்திருக்கிறார். பொதுவாக இந்துத்துவவாதிகள் தாம் எதிர்ப்பர் என்று சொல்வதுண்டு, அத்தகையோரை அவ்வாறே அடையாளம் காணுவது உண்டு. ஆனால், அத்தகைய உணர்வு உள்ளவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
05-02-2019 அன்றுமுஸ்லிம்கள்திட்டமிட்டுராமலிங்கத்தைக்கொன்றது: ராமலிங்கம் கைநீட்டி பேசுவது அந்த கும்பலுக்கு பிடிக்கவில்லை. அப்போது, ‘கைகளை வெட்டி விடுவோம்; தீர்த்து கட்டப்படுவாய்’ என்று, அந்தக் கும்பல் மிரட்டியது. இந்நிலையில், 2019 பிப்., 5ம் தேதி இரவு [05-02-2019] கடையை மூடிவிட்டு ராமலிங்கம் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள், அவரை நடு வழியில் மறித்து, முதலில் கையை வெட்டி துண்டாக்கினர். பின், சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இதுகுறித்து, திருவிடைமருதுார் போலீசார் விசாரித்து வந்தனர். கட்சித் தலைவர் ராமதாஸ் இக்கொலை பற்றி துரிதமாக விசாரிக்க வேண்டுமென்றார்[7]. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள், நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த மைதீன் அஹமது ஷாலி என்பவரை விசாரணைக்காக முன்னர் கொச்சி அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றனர்[8]. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ராமலிங்கம் கொலையில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன[9]. அத்துடன், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்கள் குறித்த ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அதனால், மைதீன் அஹமது ஷாலியை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைதுசெய்து விசாரித்து வருகிறார்கள். தொடர்புடைய குற்றவாளி, நெல்லை மாவட்டம் தென்காசியில் கைதுசெய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது[10].
கொலைசெய்யும்அளவுக்குமனோபாவம்இருப்பதுஏன், எப்படி?: கைகளை ஆட்டினால் என்ன, ஆட்டா விட்டால் என்ன, மதம் மாற்றம் தவறு என்றால், தைப் பற்ரித் தானே விவாதிக்க வேண்டும்? எப்படி கொலையில் செனூ முடிய முடியும்? அங்குதான், மனித நேயம், மனித மனம், மனோதத்துவ ரீதியில் ஏதோ குத்துகிறது. பின் இந்த வழக்கு, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளின் விசாரணைக்கு மாற்றப்பட்டது[11]. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குறிச்சி மலையை சேர்ந்து முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஷ்வான், அசாருதின் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்[12]. தொடர் விசாரணையில், தற்போது தடை செய்யப்பட்டுள்ள, ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பை சேர்ந்தவர்கள், ராமலிங்கத்தை படுகொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக, 18 பேர் மீது வழக்குப் பதிந்தனர்[13]; 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்[14].
[5]தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதமாற்றத்திற்குஎதிர்ப்புதெரிவித்தபாமகபிரமுகர்கொலை… தஞ்சையில்போலீசார்குவிப்பு…, Written by WebDesk, Updated: February 7, 2019 11:42 IST.
[11] மாலை மலர்,பாமகபிரமுகர்ராமலிங்கம்கொலைவழக்கு.. தமிழகம்முழுவதும் 24 இடங்களில்என்ஐஏஅதிரடிசோதனை, By மாலை மலர், 23 ஜூலை 2023 7:11 AM; (Updated: 23 ஜூலை 2023 11:33 AM)
[13] தினமணி, பாமகபிரமுகர்ராமலிங்கம்கொலைவழக்கு: திருச்சியில்என்ஐஏசோதனை, By DIN | Published On : 23rd July 2023 04:16 PM | Last Updated : 23rd July 2023 04:16 PM.
திருப்பரங்குன்றம் மலையில் தர்கா முளைத்தது – 1805 முதல் 2023 வரை – இந்து அமைப்புகள் சட்டப்படி முறையாக வாதாடமல் இருந்தது!
திடீர் தர்கா முளைத்து இந்துக்களை மிரட்டுவது, உரிமைகளைப் பறிப்பது: திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் முருகன் கோவில் இருப்பது எல்லோருக்கும் தெரியும். மலைக்குப் போகும் வழியில் ஓரு தர்காவும் அமைந்துள்ளது.[1] இது பிறகு கட்டப் பட்டது. இதைப் பற்றி விவரமாக, ஏற்கெனவே எழுதியுள்ளேன்[2]. முதலில் அங்கு தர்கா – சமாதி எப்படி வந்தது என்பதே விசித்திரமான விசயம். தர்காவில் தொழுகை என்பது அதைவிட அதிர்ச்சியான விசயமாக இருக்கிறது[3]. ஏனெனில் முஸ்லிம்கள் தான், தர்கா-சமாதி போன்ற இடங்கள் மசூதி கிடையாது அங்கெல்லாம் தொழுகை நடத்தக் கூடாது, அல்லாவை அணங்கும், தொழுகை புரியும் இடம் மாஸ்க் / மசூதி தான், தர்கா கிடையாது என்று உறுதியாகக் கூறி வருகின்றனர். பிறகு இது புரியவில்லையே. நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது[4]. இப்பொழுதும், பழைய விவரங்களை மறந்து வழக்குகள் தொடர்வது, தீர்ப்பு அளிப்பது போன்றவை உள்ளனவோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. எது எப்படியாகிலும், திடீர் தர்கா முளைத்து இந்துக்களை மிரட்டுவது, உரிமைகளைப் பறிப்பது என்பது பற்றி எப்படி யோசிக்காமல் இருக்க முடியும்?
2023ல் இந்து முன்னணி வழக்கு தொடுப்பது: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலர் ராமலிங்கம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது[5]: “திருப்பரங்குன்றம்சுப்பிரமணியசுவாமிகோவில்முருகனின்அறுபடைவீடுகளில்ஒன்று[6]. திருப்பரங்குன்றம்மலைஇக்கோவிலுக்குசொந்தமானது[7]. திருப்பரங்குன்றம்மலையில்காசிவிஸ்வநாதர்கோயிலும், சிக்கந்தர்பாதுஷாதர்காவும்உள்ளது[8]. மலைக்குசெல்லும்பாதையில்நெல்லித்தோப்புபகுதியில்ரம்ஜான்மாதங்களில்இஸ்லாமியர்கள்தொழுகைநடத்திவருகின்றனர். இதனால்காசிவிஸ்வநாதர்கோயிலுக்குசெல்லும்பக்தர்களுக்குபாதிப்புஏற்படுகிறது. பக்தர்கள்பழனியாண்டவர்வீதிவழியாகமலைமீதுள்ளகாசிவிஸ்வநாதர்கோவிலுக்குசெல்வர். மலையின்மத்தியபகுதியானநெல்லித்தோப்பில்ஓய்வெடுப்பர். பின்அக்கோவிலுக்குசெல்வர். மலைமீதுசிக்கந்தர்பாதுஷாதர்காஉள்ளது. வழக்கமாகபள்ளிவாசலில்முஸ்லிம்கள்தொழுகைநடத்திவந்தனர். தர்காநிர்வாகிகள்மற்றும்முஸ்லிம்கள்ஏப்., 22ல்ரம்ஜான்பண்டிகையன்றுநெல்லித்தோப்புபகுதியில்தொழுகைநடத்தினர். தர்காஅல்லதுஅருகிலுள்ளகாலிஇடத்தில்தொழுகைநடத்தாமல்பக்தர்கள்சென்றுவரும்பாதையைமறைத்துநடத்தினர். திருப்பரங்குன்றம்கோவிலுக்குசொந்தமானமலையைசிக்கந்தர்மலைஎன்றும், சிக்கந்தர்மலைமீதுஇனிதொடர்ந்துதொழுகைநடத்துவோம்எனவும்அறிவிப்புசெய்தனர்[9]. இன்றுபக்ரீத்பண்டிகையையொட்டிகோவிலுக்குச்சொந்தமானபாதையைமறைத்துநெல்லித்தோப்புபகுதியில்தொழுகைநடத்ததர்காநிர்வாகிகள்முயற்சிக்கின்றனர்[10]. எனவே, திருப்பரங்குன்றம்மலையில்நெல்லித்தோப்புபகுதியில்இஸ்லாமியர்கள்தொழுகைநடத்ததடைவிதிக்கவேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது[11].
அரைமணிநேரம்தொழுகைநடத்துவதால்எந்தபாதிப்பும்ஏற்படாது – நீதிமன்றம்: இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல். விக்டோரியாகவுரி அமர்வில் இன்று [27-06-2023] விசாரணைக்கு வந்தநிலையில்[12], “திருப்பரங்குன்றம்மலைக்குமேல்தர்காஉள்ளது. அரைமணிநேரம்தொழுகைநடத்துவதால்எந்தபாதிப்பும்ஏற்படாது[13]. நாளை [28-06-2023] பக்ரீத்பண்டிகைகொண்டாடப்படுகிறது[14]. இந்நேரத்தில்தொழுகைக்குதடைவிதிக்கமுடியாது”, என்று தெரிவித்துள்ளனர்[15]. அப்படியென்றால், கோவிலுக்குச் செல்பவர்கள் கோவிலுக்குச் செல்லலாம், தொழுகை செய்வோர், அரைஅணி நேரத்திற்கு தொழுகை செய்யலாம் என கொள்ள முடியமா? இந்த மனு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டதுடன், விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்[16]. அதாவது ஒரு மாதம் [ஜூலை இறுதிக்கு] தள்ளி வைக்கப் பட்டது. நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி நாம் ஒன்றும் சொல்ல முடியாது. நீதிபதிகள் இந்துக்களின் உரிமைகளையும் கருத்திற்க் கொள்வார்கள் என்று நம்புவோமாக…
இதே போல இந்து சயய ஊர்வலங்களையும் தடையின்றி நடத்தலாம், யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது: அப்படியென்றால் விநாயக சதுர்த்தி ஊர்வலம், மற்ற பால்குடம், முலைப்பாரி போன்ற ஊர்வலங்களும் அவ்வாறே சடங்குகளாக, இந்துக்கள் பல்லாண்டுகளாகக் கடைபிடித்து வருகின்றனர். பிறகு, அவற்றை முஸ்லிம்கள் எதிர்ப்பதும், நீதிமன்றங்கள் தடை விதிப்பதும் ஏன் நடந்து கொண்டிருக்கின்றன? இந்துக்களுக்கு ஒரு சட்டம், முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம் என்றாகிறதா? அல்லது நீதிபதிகளே அத்தகைய விளக்கங்களைக் கொடுத்து முன்னுதாரணத்தை உண்டாக்குகின்றனரா? நாளைக்கு, இன்னொரு நீதிபதி, இதை உதாரணம் காட்டி, தீர்ப்பு கொடுத்துத் தப்பித்துக் கொள்வார். இது தான் நடந்து கொண்டிருக்கிறது.
1805 முதல் 2023 வரை – இந்துஅமைப்புகள்சட்டப்படிமுறையாகவாதாடமல்இருந்தது: மண்டபத்தின் முகப்பில் மேலே 1805 என்று தெளிவாக தெரிகிறது. அதாவது, அம்மண்டபம், 1805ல் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். உள்ளே ஒரு குகை உள்ளது, அது கர்ப்பகிருகம் போன்றுள்ளது. அதற்கான கதவும், இந்து கோவில் கதவு போன்று, மணிகளுடன் இருக்கின்றன. தூண்கள் எல்லாமே, இந்து கோவில் தூண்கள் போலத்தான் உள்ளன. ஆகவே, ஒரு இந்து கோவில் ஆக்கரமிக்கப்பட்டு, அது தர்காவாக மாற்றப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. முதலில், நீதிபதியை அந்த இடத்திற்கு நேரடியாக வந்து, உள்ள நிலைமை என்னவென்று பார்த்தால், அவருக்கு உண்மை புரிந்து-தெரிந்து விடும், ஆனால், மதகலவரம் ஏற்படும் என்றெல்லாம் கூறுவதும், அத்தகைய மனப்பாங்கு ஏற்படுவதும், மேலெழுந்தவாரியான விசயக்களை வைத்து, கருத்துரிவாக்கம் கொள்வது போன்றுள்ளது. சரித்திர ஆதாரங்கள் எனும் போது, மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும், அவர் படித்துப் பார்த்திருக்கலாம். இடைக்காலத்தில் இவ்வாறு நடந்துள்ளதை அறிந்து கொள்ளலாம், ஆனால், எடுத்தவுடன், மதகலவரம் என்றெல்லாம் யோசிப்பது, முன்னரே தீர்மானம் செய்து கொண்டது போலத்தான் உள்ளது. இந்து மஹாசபா சார்பிலும், வழக்கில் சரியான ஆதாரங்களை வைக்காமல், வாதிட்டிருப்பது போல தெரிகிறது. மற்றபடி, இந்து முன்னணி பிஜேபி முதலியோர், இதில் வாதி-பிரதிவாதிகளாக இல்லாததால், சட்டப் படி, இவ்வழக்கில், அவர்களுக்கு எந்த முகாந்திரமோ, பாத்தியதையோ இல்லை என்றாகிறது.
[5] தினமணி, திருப்பரங்குன்றம்மலைசிக்கந்தா்தா்ஹாவில்தொழுகைக்குதடைவிதிக்கநீதிமன்றம்மறுப்பு, By DIN | Published On : 29th June 2023 01:29 AM | Last Updated : 29th June 2023 01:29 AM.
[7] தமிழ்.இந்து, திருப்பரங்குன்றம்மலையில்தொழுகைக்குதடைவிதிக்கஉயர்நீதிமன்றம்மறுப்பு, கி.மகாராஜன், Published : 28 Jun 2023 03:03 PM; Last Updated : 28 Jun 2023 03:03 PM.
[13] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், திருப்பரங்குன்றம்மலையில்தொழுகைக்குதடைவிதிக்கமறுப்பு: உயர்நீதிமன்றம்அதிரடி, Written by WebDesk, Madurai, June 28, 2023 17:00 IST.
தமிழ்.ஒன்.இந்தியா, அரைமணிநேரம்தொழுகையால்எந்தபாதிப்பும்வராது.. திருப்பரங்குன்றம்மலைதொழுகைக்குஹைகோர்ட்ஒப்புதல், By Mani Singh S Updated: Wednesday, June 28, 2023, 17:44 [IST]
தமிழ்.ஒன்.இந்தியா, அரைமணிநேரம்தொழுகையால்எந்தபாதிப்பும்வராது.. திருப்பரங்குன்றம்மலைதொழுகைக்குஹைகோர்ட்ஒப்புதல், By Mani Singh S Updated: Wednesday, June 28, 2023, 17:44 [IST]
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு-தடை: விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது[1]. இந்த எண்ணிக்கை உயர்வு படுத்தி காட்டப் பட்டுள்ளது என்று எதிர்த்ததால், மாற்றப் பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது[2], என்கிறது ஊடகங்கள். உண்மையில், முஸ்லிம் அமைப்பினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர். இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. அதில் எவ்வாறு இந்திய பெண்கள் ஏமாற்றப் பட்டு, மதம் மாற்றப் பட்டு, ஐசிஸ் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதனை காட்டுவதால், முஸ்லிம் அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர்.
மேற்குவங்காளம்தடை – உச்சநீதிமன்றத்தில்வழக்கு: முஸ்லிம் ஓட்டுகளை நம்பி அரசியல் செய்யும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர். இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலை உடனடியாக நிறுத்த முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த மே 8-ஆம் தேதி உத்தரவிட்டார். இதனால், தமக்கு பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்த, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் வழக்குத் தொடர்ந்தனர். மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலுக்கு அரசு தடை விதித்த நிலையில், தமிழகத்தில் அதிகாரபூா்வமற்ற தடை உள்ளதாக குற்றம்சாட்டி, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் இரு மாநில அரசும் விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.
பத்துநாட்களில் 100 கோடிகளைத்தாண்டியவசூல்: எதிர்ப்புகள் எதுவும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை வசூல் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த பத்து நாட்களில் கேரளா ஸ்டோரி வசூலித்த மொத்த கலெக்சன் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது[3].
குறைந்த பட்ஜெட்டில் எதிர்த்தாலும் அதிக வசூல் செய்துள்ல படமாக இருக்கிறது: மேலும் அடுத்தடுத்து பல திரைப்படங்களின் தோல்வி ஹிந்தி திரையுலகை கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது. அதை தூக்கி நிறுத்தும் படியாக இருந்தது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம். அந்த வகையில் தி கேரளா ஸ்டோரி நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கி வசூலில் மாஸ் காட்டி இருக்கிறது[4]. வெளியான 9 நாட்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது[5]. 13-05-2023 அன்று ஒரே நாளில் மட்டும் இப்படம் ரூ.19 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[6]. வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு 37க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 12ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த வசூலுக்கு முதல் காரணமே படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புத்தான் என்கிறார்கள்[7]. படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டு பலரும் பார்த்ததே வசூலுக்கு வழி வகுத்தது[8]. இல்லாவிட்டால் படம் வந்ததே தெரியாமல் போயிருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படியும் சில ஊடகங்களின் வெளிப்பாடு இருக்கிறது.
தமிழகத்தின் பதில்: தமிழ்நாட்டிலும் முதல் நாள் 05-05-2023 வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது[9]. அதில், இந்த படத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது[10]. படத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது சென்னை மற்றும் கோவையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது[11]. ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம் அறிமுகமில்லாதவர்களின் நடிப்பு போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ஆம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. பார்வையாளர்கள் குறைவாக இருந்ததால் படத்தை திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்களே நிறுத்திவிட்டனர்[13]. பிறகு, மற்ற இடங்களில் ஓடி எப்படி ரூ.100 கோடி வசூல் கிடைத்தது என்பது கவனிக்கத் தக்கது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு மட்டுமே தர முடியுமே தவிர, பார்வையாளர்களை அதிகரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாது[14]. அதாவது பார்வையாளர்களைக் கூட்டி வரமுடியாது என்றெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளதும் விசித்திரமாக உள்ளது. கலாட்டா செய்வார்கள், அடிப்பார்கள், கலவரங்கள் நடக்கும், குண்டுகள் கூட வெடிக்கும் போன்ற அச்சம் தாம் பொது மக்களை தியேட்டர்களுக்குச் செல்ல விடமால் தடுத்தது எனலாம்.
19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு: 19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[15]. அந்த அளவுக்கு பெரிய போலீஸ் அதிகாரிகள் கொடுக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் மிரட்டிக் கொண்டிருந்தனர் போலும். மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது[16]. அப்படியென்றால், இத்தகைய விளம்பரத்திற்கு கூட்டம் வர வேண்டியிருக்குமே, ஆனால், வரவில்லை. இதிலிருந்து, தியேட்டர் முதலாளிகள், தங்களது தியேட்டர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று நிறுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. அத்தகைய போலீஸ் பாதுகாப்பு, விளம்பரம், ரூ 100 கோடி வசூல் என்றால், மறுபடியும் தாராளமாக திரையிட ஆரம்பிக்கலாமே?
[9] தமிழ்.வெப்.துனியா, நாங்கதடைபண்ணல.. படத்தையாரும்பாக்கவேஇல்ல! – The Kerala Story வழக்கில்தமிழகஅரசுபதில்!, Written By Prasanth Karthick, Last Modified, செவ்வாய், 16 மே 2023 (12:15 IST).
[15] தினமணி, திகேரளாஸ்டோரிதிரையிடல்நிறுத்தப்பட்டதுஏன்? தமிழகஅரசுபதில், By DIN | Published On : 16th May 2023 02:50 PM | Last Updated : 16th May 2023 02:50 PM
கம்யூனிஸ்டு, காங்கிரஸ்உள்ளிட்டகட்சிகள்கடும்கண்டனம்எதிர்ப்பு: இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் கூட்டணி இதிலும் வேலை செய்கிறது போலும். இந்நிலையில், இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த மே5-ந்தேதி வெளியானது. இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்று ஊடகங்களே கூறுவது முன்னரே தீர்மானிக்கப் பட்ட விசயம் போல தோன்றுகிறது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
05-05-2023 – தமிழகநீதிமன்றத்தில்வழக்கு, தள்ளுபடி, திரைப்படம்வெளியீடு, ஆர்பாட்டம்: தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது[1]. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது[2]. இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன[3]. ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின[4]. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது.
06-05-2023 – பாதுகாப்புகாரணங்களுக்காகதென்தமிழகத்தில்இந்தபடம்திரையிடப்படவில்லை. இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
07-05-2023 சென்னையில்சீமான்ஆர்பாட்டம்: சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்ற நிலையில், அனுமதி எப்படி கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்[5]. அதாவது, முஸ்லிம்களும் சேர்ந்து கொண்டனர் என்பது தெரிகிறது. எனவே, இவர்களின் செக்யூலரிஸ வாதம், வேடம் முதலியவை பெரிய மோசடி என்றாகிறது. இருப்பினும் தமிழக மக்கள் பேச்சுக்களால், வசன-பேச்சுகளால் ஏமாந்து விடுகின்றனர்.
சீமான்எதிர்ப்பு– போலீஸார்கைது: இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது[6]. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்[7]. தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன[8]. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்[9]. அவரது கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[10]. அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். படம் தடை செய்யப்பட வேண்டும் என கோரி, கொடி பிடித்தபடியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்[11]. திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்[12]. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். சீமானை சூழ்ந்து முஸ்லிம் பெண்கள் நின்று கொண்டு தலையாட்டிக் கொண்டிருப்பதை, செய்தி-செனல்களில் பார்க்கலாம்.
தமிழகஅரசுதடை: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளதுலதாவது, இத்தகைய நிலைமையை எதிர்பார்த்துக் கொன்டிருந்தது போலும். சீமான் ஆர்பாட்டம் செய்தவுடன், அந்நிலைமை ஏற்பட்டவுடன், தமிழக அரசு அப்படத்தை தடை செய்ய துணிந்து விட்டது போலும். பிறகு, நீதிமன்ற தீர்ப்பு, போலீஸ் அதிகாரி அறிவுரை, பாதுகாப்பு முதலியவவை ஒரே நாளில் என்னவாகும், என்னவாயிற்று என்று தெரியவில்லை. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார்.
[1] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story: தொடர்எதிர்ப்புகள்… தமிழ்நாடுமுழுவதும் ‘திகேரளாஸ்டோரி‘ படத்தின்காட்சிகள்ரத்து..!, By: ராகேஷ் தாரா | Updated at : 07 May 2023 04:20 PM (IST); Published at : 07 May 2023 04:20 PM (IST)
கேரளாவில்லவ்ஜிஹாத்தெரிந்தவிசயம்தான்: “லவ் ஜிஹாத்” பற்றி கேரளாவில் அரசாங்கம், போலீஸ் துறை, என்.ஐ.ஏ மற்றும் உளவுத்துறை என்று எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை ஆகும். கிருத்துவ பெண்களும் பாதிக்கப் பட்டதால், பாதிரியார்களும் இதை எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். சிலர், ஐசிஸ் கொடுமைகளிலிருந்து தப்பியும் திரும்ப வந்துள்ளனர். ஆகவே, அதை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படத்தை எதிர்ப்பதில் என்ன பலன் வந்து விடப் போகிறது என்று தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், படம் நன்றாக ஓடவேண்டும், விளம்பரம் பெற வேண்டும் என்றால் இவ்வாறு எல்லாம் செய்வது வழக்கமாக உள்ளது. ஒருவேளை, இப்படம் ஓடி பலரின் கவனத்தைக் கவர்ந்தால், யாருக்கு லாபம் என்றும் யோசிக்கத்தக்கது. ஏனெனில், இக்காலத்தில் மறைமுகமாக, எதிர்மறை விளம்பரத்தையும் பெற சிலர் முயல்கின்றனர். அல்லது, அதன் மூலம், எங்களை எதிர்த்தால் இந்த நிலை தான் ஏற்படும் என்று எச்சரிக்கும் தொணியிலும் எதிர்த்து, அமைதியாகும் போக்கையும் கவனிக்கலாம்.
டிரைலருக்குப்பிறகுஅமைதியானவர்கள், மறுபதியும்எதிர்ப்பில்ஈடுபட்டது: பலகட்ட எதிர்ப்புகள், சர்ச்சைகளைத் தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மே.05, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகைகள் அதா ஷர்மா, சோனியா பாலானி, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதிப்தோ சென் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விரீஷ் ஸ்ரீவல்சா – பிஷாக் ஜோதி இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற காட்சிகளுடன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெறத் தொடங்கியது. இந்தப் படத்தை வெளியிட தடை கோரி கடும் எதிர்ப்புகள் வெளியாகின[1]. கேரள அரசு சார்பில் இந்தப் படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2].
மெத்தப் படித்தவர், கடவுளின் தேசத்தில் வாழ்பவர்கள் எதிர்க்கும் படமாக மாறியது: மெத்தப் படித்த கேரளாவில் இவ்வாறு நடப்பது விசித்திரமாக உள்ளது. ஆனால் இந்தப் படத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடுமாறும் தெரிவித்திருந்தது[3]. கடந்த 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் இதுபோல் மதமாற்றம் செய்யப்பட்டு காணாமல் போனதாக ட்ரெய்லரில் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது[4]. ஆனால் படத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி சரமாரியாக கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், எண்ணிக்கையை 3 என மாற்றினர்[5]. இருப்பினும் உண்மை எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். மார்க்சிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசும் சித்தாந்திகளிடமிருந்து தான், இத்தகைய எதிர்ப்புகள் கிளம்புவதை கவனிக்கலாம். ஒருபக்கம், கேரளாவில் இஅதைப் பற்றிய வழக்குகளே நிலுவையில் இருக்கும் பொழுது, அரசு எதிர்ப்பதன் காரணம் அறியப் பட வேண்டியதாக உள்ளது. அரசு தரப்பில் அத்தகைய நிலை கேரளாவில் இல்லை என்று உறுதியாக சொல்வதற்குப் பதிலாக, படத்தை எதிர்க்கும் போக்கு எதனைக் காட்டுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.
தமிழகத்தில்எச்சரிக்கை, திரையரங்களுக்குபாதுகாப்பு: மேலும், தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிட்டால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பும் என தமிழக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது[6]. தமிழகத்தில் ஏகபட்ட குற்றங்கள் சமூகத்தை பாதித்து வரும் நிலையில், இது எப்படி அந்த அளவுக்குப் பெரிய முக்கியமான பிரச்சினையாகி, தமிழக உளவுத்துறை ஆராய்ச்சி செய்யும் அளவுக்குச் சென்றுள்ளது என்று தெரியவில்லை. போலீஸாரும் அதற்கேற்றபடி செயல்பட தயாராக இருக்க டிஜிபி ஆணையிட்டுள்ளார்[7]. இந்நிலையில், திரைத்துறையினர் தொடங்கி பலரது எதிர்ப்புகள், கண்டனங்கள் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது[8]. சென்னையில் எதிர்பார்த்தப் படி, பிரச்சினை எதுவும் எழவில்லை. திரையரங்களிலும் நிலைமை சாதாரணமாகவே இருந்தது. திரையரங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க, போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர்[9]. தமிழ்நாடு டிஜிபி அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை.அனுப்பியுள்ளார்[10]. அதில் கேரளா ஸ்டோரி படம் திரையாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும், பதற்றமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்[11]. மேலும் சமூக வலைதளங்களில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஆகியவை ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்[12].
திரைப்படத்தைப்பற்றியவிமர்சனங்கள்: தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ட்விட்டர்வாசிகள் வைக்கும் விமர்சனங்களைக் கீழே பார்க்கலாம். “மன அமைதியைக் கெடுக்கும், வெறுப்புணர்வு மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் படம் இது . நாட்டில் வன்முறையை பரப்பும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஜீரோ ஸ்டார் தருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். “இந்தப் படம் முழுக்க முழுக்க பொய்களும் சூழ்ச்சியும் நிறைந்தது. படத்தில் சொல்லப்பட்ட எந்த ஒரு விஷயமும் உண்மைக்கு நெருக்கமாக இல்லை. இது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் படம். ஒவ்வொரு நடிகரும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். ”சூப்பர். இந்தப் படத்தைப் பாருங்கள் இந்தப் படம் உங்கள் வழக்கமான லாலா லேண்ட் படம் அல்ல. இது சொல்லும் உண்மை வெறுப்பு இல்லை, சிலரது மனநிலையை அம்பலப்படுத்துகிறது. படத்துக்காக இயக்குனர் அற்புதமான ஆய்வு செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் திரைப்படம், யதார்த்தை முகத்தில் அறைந்து சங்கடப்படுத்துகிறது. விபுல் அம்ருத்லால் ஷா & சுதிப்டோசென் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக பாராட்டுக்குத் தகுதியானவர்கள். அதா ஷர்மா வாழ்நாள் நடிப்பை வழங்கியுள்ளார்[13]. ”நீங்கள் உணர்ச்சிரீதியாக முட்டாளாக இருந்தால், இந்த பிரச்சாரத் திரைப்படம் சில நாட்களுக்கு உங்கள் கவனத்தை உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும்” எனத் தெரிவித்துள்ளார்[14].
[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், The Kerala Story Review: எப்படிஇருக்கு ‘திகேரளாஸ்டோரி’ திரைப்படம்? ட்விட்டர்விமர்சனம்இதோ!, HT Tamil Desk, 05 May 2023, 12:07 IST.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், திகேரளாஸ்டோரிபடத்தைதிரையிட்டவணிகவளாகம்முற்றுகை… போலீஸார் – எஸ்டிபிஐகட்சியினர்இடையேதள்ளுமுள்ளு!!, Narendran S, First Published May 5, 2023, 8:30 PM IST; Last Updated May 5, 2023, 8:31 PM IST..
[13] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story Twitter Review: வெறுப்புபிரச்சாரமா? உண்மைசம்பவமா? திகேரளாஸ்டோரிபடத்தின்ட்விட்டர்விமர்சனம்இதோ! , By: பீட்டர் பார்க்கர் | Updated at : 05 May 2023 01:17 PM (IST) , Published at : 05 May 2023 01:08 PM (IST)
பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக்கணக்கில் வருவது வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (1)
பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர்தொடர்ந்துதமிழகத்திற்குலட்சக்கணக்கில்வருவது; தமிழகத்தில் கட்டிடத் தொழில் பெருகப் பெருக “வட மாநிலத்தவர்” என்ற போர்வையில் லட்சக்கணக்கில் வேலையாட்கள் வந்து குவிகின்றனர். சென்னையைச் சுற்றி ஆயிரக்கணக்கில் அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டுவது, கோடிக்கணக்கில் வியாபாரம் செய்வது என்பது பலநிலைகளில் நடந்து வருகிறது. அதில் அரசியல் அதிகமாகவே செயல் பட்டு வருகின்றது. இருப்பினும், தொடர்ந்து, “வட மாநிலத்தவர்” போர்வையில் பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்கு லட்சக்கணக்கில் வருவது வேலை செய்வது, தங்கி விடுவது, நிச்சயமாக எல்லாவிதங்களிலும் பிரச்சினை, சட்டமீறல் மற்றும் பெருங்குற்றமாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் இவர்கள் முஸ்லிம்கள் என்பதாலேயே அடக்கி வாசிக்கிறார்கள். ஊடகங்களும் அதனை அமுக்கி விடுகின்றனர் எனலாம். பாலியல் பிரச்சினையில் காட்டும் அளவு கடந்த பாரபட்சம் இதில், இன்னும் பலமடங்குக் காட்டப் படுகிறது. ஆனால், எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், குற்றங்கள் அதிகரித்து, கைதாவது அதிகமாகி, அரசாங்க ரீதியில் பதிவாகி வருகின்ற நிலையில் உண்மைகளை மறைக்க முடியாத நிலைக்கும் வந்தாகி விட்டது. ஒரு நிலையில் அவர்கள் இல்லை என்றால் வேலைகளே ஸ்தபித்து விடும் என்ற நிதர்சனத்தையும் முதலாளிகள் உணர்ந்து, அந்த உண்மையினை வெளிப்படையாகச் சொல்லவும் செய்து விட்டனர்.
தமிழகத்தவர் ஏன் வேலை செய்வதில்லை?: இருப்பினும், தமிழகத்தில் உள்ளோர் அந்த வேலைகளை ஏன் செய்வதில்லை, செய்ய விரும்பவில்லையா, அத்தகைய மனப்பாங்கு ஏன் உள்ளது போன்ற கேள்விகளும் எழுகின்றன. குறைந்து கூலிக்கு நிறைய வேலை செய்கின்றனர் என்பதை விட அவர்கள் அவ்வாறு செய்யும் பொழுது, இங்குள்ளவர் ஏன் செய்ய முடியாது என்பது தான் முக்கியமான கேள்வியாகிறது. பள்ளி-கல்லூரிகளில் ஒழுங்காக படிக்காமல் இருப்பது, சினிமா-பொழுது போக்கு போன்றவற்றில் அதிகமாக ஈடுபடுவது, பொழுது போக்குவது, பெற்றோர், பெரியவர், ஆசிரியர்கள் முதலியவர்களை மதிக்காமல் இருப்பது போன்றவை தான் தினம்-தினம் நிகழ்ச்சிகளாகி, அவை ஊடகங்களிலும் தாராளமாகவே, விவரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிறகு, இளைஞர்கள் அவற்றிற்கு வ்ருத்தப் பட வேண்டாமோ, தங்களை மாற்றிக் கொள்ள உடனடியாக திருந்தும் வழிகளை நாட வேண்டாமோ? ஆனால், அத்தகைய குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. போதை மருந்து, குடி, செக்ஸ், சினிமா, பொழுதுபோக்கு என்றவற்றில் தான் அவர்கள் உழன்று, தங்களை சீரழித்து, மற்றவர்களை கெடுத்து வருகின்றனர்.
டிசம்பர் 2006ல்எண்ணூரில்வங்கதேசத்தவர்கைது: சென்னை அருகே உள்ள எண்ணூர் படகில் வந்தவர் மீது சந்தேகம் எழ, அவர்களை நிறுத்தினர். அந்தப் படகுகளை வளைத்துப் பிடித்த பாதுகாப்புப் படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்[1]. அப்போது அவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது[2]. இவர்கள் பிடிபட்டது குறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாரும், மத்தியபுலனாய்வுப் படையினரும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 16 பேரும் மாலத் தீவுக்குச் சென்றதாகவும், அங்கு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு படகுகள் திசைமாறி இங்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இருப்பினும் இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாமோ என்றசந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து 16 பேரிடமும் போலீஸாரும், மத்திய புலனாய்வுப் படையினரும் துருவித் துருவி விசாரணைநடத்தி வருகின்றனர். இவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
பிப்ரவரி 2020ல் 40 வங்கதேசத்தவர்திருப்பிவைக்கப்பட்டனர்: முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்[3]. இதுதவிர போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற 2 வங்க தேசத்தினர் பிடிபட்டுள்ளனர்[4]. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலை, மருத்துவம் உட்பட பல்வேறு தேவைகளுக்காக தமிழகம் வருகின்றனர். சிலர் இங்கேயே தங்கி விடுகின்றனர். இதேபோல் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களில் சிலரும் முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இங்கோ பங்களாதேசத்தவர் பலமுறைகளைக் கையாள்கின்றனர் என்று தெரிகிறது. பொதுவாக, பங்களாதேசத்திலிருந்து, மேற்கு வங்காளத்தில் நுழைவது, அங்கிருந்து, அஸ்ஸாம் மூலம் பல மாநிலங்களுக்குப் பரவி செல்வது போன்ற திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இதற்கு ஏஜென்டுகளும் இருக்கிறார்கள்.
வங்கதேசத்தவர்தமிழகத்தில்சட்டவிரோதமாகதங்கிபணிசெய்தது – தொடர்விசாரணை: இதுகுறித்து மத்திய உளவு பிரிவு, தமிழக கியூ பிரிவு உள்ளிட்ட புலனாய்வு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், வங்க தேசத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணி செய்து வந்தது தெரியவந்ததாகவும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு மீண்டும் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் மேலும் கூறும்போது, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் வங்கதேசத்தில் இருந்துகொல்கத்தாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்கள் அங்குள்ளவர்கள் போல போலி ஆவணம் தயார் செய்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குள் நுழைந்ததாகவும் அவர்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும்போலிபாஸ்போர்ட்டுடன்இருவர்பிடிபடுதல்: இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்புவுக்கு நேற்று முன்தினம் விமானம் ஒன்று புறப்பட்டது. முன்னதாக அதில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப் போது புத்தமத துறவிகள் உடை யில் இந்திய பாஸ்போர்ட்டில் டூடுல், மின்டொ ஆகிய 2 பேர் இலங்கை செல்வதற்காக வந்திருந்தனர். அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது அவை போலி எனத் தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களின் விமான பயணத்தை ரத்துசெய்த அதிகாரிகள், மேல் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
செயல்படும் விதம், திட்டம் மற்றும் முடிவுகள்: பங்களாதேசத்திலிருந்து “வொர்க் மர்மிட்” வாங்கிக் கொண்டு மேற்கு வங்காளத்திற்குள் வேலைக்கு வருகின்றனர்.
காலை வேலைக்கு வந்து மாலையில் திரும்பி சென்று விடவேண்டும்.
ஆனால், தினம்-தினம் ஆயிரம் பேர் வந்தால் 100-200 பேர் தங்கி விடுகின்றனர், மறைந்து விடுகின்றனர்>…..
மேற்கு வங்காளத்திற்குள் தங்கியவர்கள் முதலில் ஆதார், ரேஷன், பேன் என்று கார்டுகளை வாங்கி, ஓட்டர் ஐடியையும் வாங்கி விடுகின்றனர்
மேற்கு வங்காளத்திலிருந்து பிறகு மற்ற மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.
இவர்களிடம் இரண்டு நாடுகள் அடையாள அட்டைகளும் இருக்கின்றன. இதனால், சகஜமாக செயல்பட்டு வருகிறனர்.
இவர்களில் உண்மையில் பிழைப்பிற்கு வேலை செய்பவர் யார், கடத்தல்கார்ர்கள் யார், தீவிரவாதிகள் யார் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சென்று / செயல்பட்டு வருகின்றனர்.
10-11-2022 –வியாக்கிழமை – ஆவணங்கள்பறிமுதல்: ஓட்டேரியில் தாசமக்கான் பகுதி அருகே சலாவுதீன் என்பவா் வீட்டில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையா் பவன் குமார் ரெட்டி தலைமையில் போலீஸார் சோதனை செய்தனா். எம்கேபி நகரைச் சோ்ந்த ஜகுபா் சாதிக் என்ற ஜாபா் சாதிக் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனா். மேலும், திருவொற்றியூா், மண்ணடி ஆகிய இடங்களிலும் போலீஸார் சோதனை செய்தனா். சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனா். வியாழக்கிழமை மாலைக்குள் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் முடிவில் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், மெமரி கார்டு உள்ளிட்ட மின்னணு கருவிகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்டஐ.எஸ்.ஐ.எஸ்இயக்கஆதரவாளர்கள்லிஸ்ட்: மண்ணடி சைவ முத்தையா தெரு, சேவியர் தெரு, ஏழு கிணறு, கொடுங்கையூர், வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்[1]. கொடுங்கையூர் பகுதியில் புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்[2]. மண்ணடி பகுதியில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்றது. தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகம், ஏற்கனவே என்.ஐ.ஏ-வால் விசாரணை செய்யப்பட்டவர்கள் என 109 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய உளவுத்துறை கொடுத்ததன் அடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது[3]. இதேபோல் கடந்த வாரமும் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்[4]. அதில், ரூ. 56 லட்சம் பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் 15-11-2022 அன்று பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடைபெற்றது.
15-11-2022 – நான்குநபர்களிடம்விசாரணை–சோதனை: பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஏர்கெனவே ஈடுபட்டுள்ள குற்றங்களை வைத்து, தொடர்ந்து விசாரிக்கும்பொழுது, அவர்கள் இன்றும் அத்தகைய லிங்குகளுடன் தொடர்ந்து வேலை செய்து வருவது புலனாகிறது.
முகமது தப்ரஸ் – குறிப்பாக சென்னை கொடுங்கையூர் வள்ளுவர்தெருவில் உள்ள முகமது தப்ரஸ் என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. இவர் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பணபரிவர்த்தனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தவ்பிக் அகமது – அதேபோல் ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்த தவ்பிக் அகமது என்பவர் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பணபரிவர்த்தனை செய்ததாக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஹாரூன் ரஷித் – மேலும் மண்ணடி சைவ முத்தையா முதலி தெருவை சேர்ந்த ஹாரூன் ரஷித் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஹாரூண் ரஷீத் வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம், ரூ.1,600 மதிப்புள்ள சீன கரன்சி, ரூ.4,820 தாய்லாந்து கரன்சி, ரூ.50 ஆயிரம் மியான்மா் கரன்சி, ரூ.7 மதிப்புள்ள சிங்கப்பூா் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வா்த்தக நிறுவனத்திலிருந்து மடிக்கணினி, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, மின்னணு கருவிகள், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முகமது முஸ்தபா – வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா மீது தடை செய்யப்பட்ட இயக்கத்தினருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கு உள்ளது.
இந்த அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடைய இந்த 4 நபர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், அவர்கள் யார் யாருடன் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 10-11-2022 அன்று சோதனைக்குப் பிறகு, 15-11-2022 சோதன வருகிறது.
15-11-2022 அன்றுஊடகங்களின்செய்தி – விசாரணைக்குப்பிறகுவிவரங்கள்வெளியிடப்படவில்லை: தமிழக ஊடகங்கள் ஏதோ ஜாக்கிரதையாக செய்தி வெளியிடுவதைப் போல உள்ளது[5]. “அதேபோல்மண்ணடியில்உள்ளஒருவீட்டில்துணைஆணையர்ஆல்பர்ட்ஜான்தலைமையில்சோதனைநடைபெற்றுவருகிறது,” கூறப்படுகிறது என்றெல்லாம் தான் செய்திகள் சொல்கின்றன[6]. இதே சிவசங்கர் பாபா என்றெல்லாம், நேரே பார்த்தது போல எழுதுவார்கள். இருப்பினும் சென்னையில் மொத்தம் எத்தனை பேரின் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை[7]. சோதனை முடிந்த பிறகு அதுபற்றிய விபரங்களையும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் யாருக்கும் தொடர்பு இருந்தால் அதுபற்றிய விபரங்களையும் போலீசார் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது[8]. கோவை சம்பவம் போன்று வேறு எங்காவது நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது[9]. தீவிரவாத செயல்களுக்கு துணை புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது[10]. தமிழ்.இந்து[11], “ஐஎஸ்ஐஎஸ்பயங்கரவாதஇயக்கத்தினருடன்தொடர்பில்இருப்பதாகஎழுந்தசந்தேகத்தின்அடிப்படையில், சென்னையில் 5 இடங்களில்மாநகரபோலீஸாருடன்இணைந்துஎன்ஐஏஅதிகாரிகள்திடீர்சோதனையில்ஈடுபட்டனர்,………………….சென்னையில்சிலர்ஐஎஸ்ஐஎஸ்பயங்கரவாதிகளின்தொடர்பில்இருப்பதாகசந்தேகித்துமாநிலஉளவுப்பிரிவுபோலீஸாருக்குமத்தியஉளவுத்துறைசமீபத்தில்ஒருபட்டியல்அனுப்பியது. அதன்அடிப்படையிலேயேதற்போதுசோதனைநடத்தப்பட்டுள்ளது..” என்கிறது[12].
15-11-2022 மாலை பீரிட்டு எழுந்து 16-11-2022 காலையும் அடங்கி விட்ட சோதனை செய்திகள்: 15-11-2022 மாலை மற்றும் 16-11-2022 காலை நாளிதழ்களில் செய்திகள் வெளியிட்டதுடன் அடங்கி விட்டன. மற்ற விசயங்களில், விவகாரங்களில் ஆராய்ச்சி செய்வது, “கிரைம்-நடந்தது என்ன?,” என்று வீடியோ போடுவது, புலன் விசாரணை மேற்கொள்வது, செர்லாக்-சாம்பு, நக்கீரன் போன்ற வேலைகளில் எந்த நிபுணத்துவ நிருபரும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாலை டிவிக்களில் வாத-விவாதங்களும் இல்லை. ஆக அப்படியே அடங்கி விட்டது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகத்து ஊடகங்களைப் பற்றி கூட ஆராய்ச்சி செய்து, பிச்.டி வாங்கலாம் போலிருக்கிறது.
[11] தமிழ்.இந்து, ஐஎஸ்ஐஎஸ்பயங்கரவாதஇயக்கத்துடன்தொடர்பா? – சென்னையில் 5 இடங்களில்என்ஐஏ, போலீஸார்தீவிரசோதனை, செய்திப்பிரிவு Published : 16 Nov 2022 04:31 AM; Last Updated : 16 Nov 2022 04:31 AM.
கோவையில் திடீரென்று ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? தொடர்ந்து ஏன் கண்காணிக்கப் படவில்லை? (2)
ஐஎஸ்ஆதரவுஇளைஞர்களுக்குஉளவியல்ஆலோசனை: இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவைமாநகரில்கார்வெடிப்புதினத்தில்இருந்துதீவிரபாதுகாப்புமற்றும்வாகனதணிக்கையில்போலீசார்ஈடுபட்டுவருகின்றனர். உக்கடம்சங்கமேஸ்வரர்கோயில், கோனியம்மன்கோயில்உள்ளிட்டகோயில்களில்தற்போதுவரைபோலீசார்பாதுகாப்புபணியில்ஈடுபட்டுள்ளனர். உயர்அதிகாரிகளின்உத்தரவுபடி, உளவுத்துறைபோலீசார்தீவிரமாகபலரைகண்காணித்துவருகின்றனர். இந்நிலையில், கோவைமாநகரில்ஐ.எஸ். அமைப்பின்மீதுஈடுபாடுகொண்ட 60க்கும்மேற்பட்டஇளைஞர்கள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்[1]. அவர்களதுபட்டியலைதயார்செய்துவைத்துள்ளோம்[2]. அவர்களுக்குகவுன்சலிங்கொடுக்கமுயற்சிசெய்துவருகிறோம். மேலும்மருத்துவகுழுசார்பில், அவர்களுக்குஉளவியல்ஆலோசனைவழங்கவும்திட்டமிட்டுவருகிறோம். அவர்களைநல்வழிப்படுத்தஅனைத்துநடவடிக்கைகளும்மேற்கொள்ளப்படும்………[3]மேலும்உலாமாக்கள், உளவியல்நிபுணர்கள்மூலம்அவர்களுக்குதவறானசெயல்களில்ஈடுபடக்கூடாது, ஐ.எஸ். இயக்கத்தின்மோசனமானசெயல்பாடுகள்உள்ளிட்டவைகுறித்துஎடுத்துகூறி, நல்லகருத்துகளைபோதித்துஅவர்களைநல்லகுடிமகனாகமாற்றும்திட்டம்செயல்படுத்தஉள்ளோம். இதற்காகஅனுபவம்வாய்ந்தஉளவியல்நிபுணர்களைதயாராகஉள்ளோம்[4]…………..…………..…,’’ என்றார்.
தீவிரவாதம்வளர்ந்துஇந்நிலைஅடைந்ததுஎப்படி?: கீழ்கண்ட நிகழ்வுகளிலிருந்து, அத்தகைய நிலை, நிச்சயமாக ஒரே நாளில் உருவாகி விட முடியாது:
போலீஸார் கோவை மாநகரில் ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்.
அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளனர்.
அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும் மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு வருகிறது.
அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்………
மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் ……….செயல்படுத்த முடிவு.
இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக்க உள்ளோம்…..
அதனால், பல நாட்களாக, ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை எப்படி, ஏன், எவ்வாறு கவனிக்கப் படாமல் இருக்கிறது, என்பதும் நோக்கத்தக்கது.
உளவியல்ஆலோசனைஎப்படி, யாரால், எவ்வாறுஎங்கேநடக்கும்?: இதுவரை வெளிவந்துள்ள செய்திகளை கூர்மையாகப் படித்து, திரட்டி, அதில் உள்ள அம்சங்களை கீழ் கண்டவாறு கொடுக்கப் படுகிறது:
கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்தல்
உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது
ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி,
நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் பிரத்யேகமான திட்டம்
அத்திட்டத்தை செயல்படுத்துதல்
பொதுவாக தமிழக ஊடகங்கள், பிரச்சினைகளை அலசுவதில்லை, பல்லாண்டுகளாக இத்தகைய தீவிரமான சிக்கல்கள் மற்றும் தொடரும் கேள்விக்குரிய விஷயங்கள் இருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக செய்திகளாக வெளியிட்டு அமைதியாகி விடுகின்றனர்.
06-11-2022 அன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் ஜவஹிருல்லா சந்தித்தார். பின்னர், அவர் கூறியபோது[5], “…கடந்த, 1998ல்நடந்தகுண்டுவெடிப்பால், கோவைமக்கள்பாதிக்கப்பட்டு, மீண்டும்சகஜநிலைதிரும்பபலஆண்டுகளானது. கார்வெடிப்புபோல், வேறுசம்பவங்கள்நடக்ககூடாது. இச்சம்பவத்தில்ஈடுபட்டஒற்றைநபரைஇயக்கியதுயார், இவ்வளவுபெரியசம்பவத்தைநடத்துவதன்பின்னணிஎன்ன, என்பதுகுறித்துஉண்மைவெளிக்கொண்டுவரவேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பேஇஸ்லாமியசமூகத்தைசீர்குலைக்ககூடியநோக்கில்செயல்படக்கூடியது[6]. அதன்ஆதரவாளர்களாகஇருப்பவர்கள், அமைதியைசீர்குலைக்கும்நோக்கில்செயல்படுகின்றனர்[7]. இதுபோன்றமனநிலையில்உள்ளவர்களுக்குஉளவியல்ரீதியானகவுன்சிலிங்கொடுக்கபோலீஸ்தயாராகஉள்ளது[8]. போலீசார்சிறப்பாகசெயல்படுகின்றனர்[9]. கார்வெடிப்புசம்பவத்தைஎன்.ஐ.ஏ., எப்படிவிசாரிக்கப்போகிறதுஎன்பதுகேள்விக்குறிதான். தமிழகபோலீசாரேவிசாரிக்கவேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[10].
பயங்கரவாதம், தீவிரவாதம்மற்றும்அழிப்புவாதம்என்றால்என்ன?: பயங்கரவாதம் எனும்பொழுதே சில மனிதர்கள் குறிப்பிட்ட அடிப்படைவாத சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப் பட்ட திட்டம், ஆணை மற்றும் உந்துதல், அவற்றின் மூலம் குறிப்பிட்ட மனிதர்கள், மனித குழுமங்கள் மற்றும் நாடுகளைத் தாக்குதல், குண்டுவெடிப்புகள் நடத்துதல், பீதியை உண்டாக்குதல் என்றாகிறது. இவையெல்லாம் ஒரே நாளில் வந்து விடாது. சிறு வயதிலிருந்தே சில அறிவுரைகள், போதனைகள், சித்தாந்தங்கள் முதலியவை படிப்படியாக கற்பிக்கப் படவேண்டும். உலகிலுள்ள மக்களை “ஏற்றுக் கொள்ளப் பட்டவர்கள்” மற்றும் “ஏற்றுக் கொள்ளப் படாதவர்கள்” என்று பிரித்து, அவ்வாறே அந்த பேதம், வித்தியாசம் மற்றும் வேறுபாடுகளை அறிய-புரிய வைத்து வெருப்பை மனங்களில் வளர்ப்பது முதல் பணியாக அமைகிறது. பிறகு, “நாம் உயர்ந்தவர்கள்” ஆனால், அவர்கள் “தாழ்ந்தவர்கள்” எனவே, அவர்கள், “நம்முடன் வாழத் தகுதியற்றவர்கள்” என்று பிரித்து அடையாளம் காண வைப்பது. இல்லை, தங்களை குறிப்பிட்ட சின்னங்களுடன் இணைத்து, பிரித்து அடையாளம் காண வைப்பது என்பதிலும் முடியலாம்.
[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இஸ்லாமியசமூகத்தைசீர்குலைக்கும்ஐஎஸ்ஐஎஸ்..! ஜமீஷாமுபீனைஇயக்கியதுயார்..? ஜவாஹிருல்லாகேள்வி , Ajmal Khan, First Published Nov 7, 2022, 8:36 AM IST; Last Updated Nov 7, 2022, 8:36 AM IST
ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ்பாணியில் தற்கொலைவெடிகுண்டாகமாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)
சமயஇலக்கியங்கள்அனைத்தும்தமிழில்உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷாமுபீனின்நாட்குறிப்புபதிவுகள்பெரும்பாலும்மற்றமதங்கள், குறிப்பாகஇந்துமதம்மற்றும்கிறித்துவம்பற்றியஅவரதுபார்வையைவெளிப்படுத்துகின்றன. அவர்அந்தமதங்களின்கடவுள்களின்பெயர்களைமேற்கோள்காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர்இணைக்கும்அம்புகளுடன்கையால்எழுதப்பட்டசார்ட்விளக்கப்படத்தில்அவற்றைசித்தரித்துள்ளார். சி.ஏ.ஏஹிஜாப்சர்ச்சை, உணவுமீதானகட்டுப்பாடுகள், மாட்டிறைச்சிகாரணமாகநடந்தகொலைகள்போன்றசம்பவங்கள்இந்தியமுஸ்லிம்கள்எதிர்கொள்ளும்பிரச்சனைகளாககுறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள்இரண்டாம்தரகுடிமக்களாகமாறிவருகின்றனர். இந்தச்பிரச்னைகளைஎப்படிச்சமாளிப்பதுஎன்றும்அவர்திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.
அனைத்துதரப்புமக்களுடனும்ஒருநல்லிணக்கத்தோடுவாழ்வதையேநாங்கள்விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள் நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து மனித நேயம், மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது. தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது
ஜமாத்துகளின்சார்பில்வன்மையாககண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
100-க்கும்மேற்பட்டவீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர். கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.
‘கோட்டைஈஸ்வரன்கோவிலில்இருந்தகண்காணிப்புகேமராவில்பதிவானகாட்சிகள்வாயிலாக, கார்குண்டுவெடிப்புவழக்கில்துப்புதுலக்கமுக்கியதகவல்கள்கிடைத்தன‘: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.
கண்காணிப்புகேமராகாட்சிகளைகேட்டுச்சென்றபோது, பள்ளிவாசல்ஒன்றின்நிர்வாகிகடும்எதிர்ப்புதெரிவித்து, போலீசாரிடம்வாக்குவாதம்செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].
வேதபிரகாஷ்
05-11-2022
[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவைகார்சிலிண்டர்வெடிப்பில்பலியானஜமேஷாமுபீன்; இலக்கைநோக்கிபயணித்தசுயமானதீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm
[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23
அண்மைய பின்னூட்டங்கள்