Posted tagged ‘ஐசில்’

இந்துமதத் தலைவர்களைக் கொல்லப்படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப் படுமா – இது விவாதத்திற்கு உரியது என்பதால், ஆசிப் முஸ்தஹீன் விடுதலை!

திசெம்பர் 16, 2023

இந்து மதத் தலைவர்களைக் கொல்லப்படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமாஇது விவாதத்திற்கு உரியது என்பதால், ஆசிப் முஸ்தஹீன் விடுதலை!

இந்து மதத் தலைவர்களை கொல்லப் படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமா: இந்து மதத் தலைவர்களை கொல்லப்படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது[1]. பிறகு அத்தகைய குரூர எண்ணத்தை என்னவென்று குறிப்பிடுவது என்று நீதிமன்றம் தான் விளக்க வேண்டும். குற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்  “culpability of mind” இருந்ததா-இல்லையா என்று ஆராய வேண்டும் என்று நீதிமன்றங்களில் பலமுறை வரையருக்கப் பட்ட சட்டமுறையாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்த போது, நீதிபதிகள் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளனர்[2]. மேலும், பெயிலுக்கு கொடுத்த மனுவை ஏற்று, ISIS அனுதாபி என்று கூறப்படும் ஒருவரின் ஜாமீன் மனு, மேலும் சமீபத்தில் பல நிபந்தனைகளுடன் அவரை விடுதலை செய்தது[3]. இது பிடிஐ செய்தி என்பதால், ஆங்கில ஊடகங்களில் அப்படியே வெளிவந்துள்ளது. ஆனால், தமிழகத்து செய்தியானாலும், தமிழ் ஊடகத்தில் இன்னும் வெளி வரவில்லை.

ஐசிஸ் உறுப்பினர் என்று எடுத்துக் காட்டப் படவில்லை: மேல்முறையீடு செய்த ஈரோட்டைச் சேர்ந்த ஆசிப் முஸ்தஹீன், தான் வசிக்கும் பகுதியைச் சுற்றியுள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களைக் குறிவைத்து தனது திட்டத்தை செயல்படுத்துவதற்காக தடை செய்யப்பட்ட அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உறுப்பினராக விரும்பினார் என்பது அரசுத் தரப்பு வழக்கு[4] என்று தெரிகிறது. மற்றொரு குற்றவாளியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்[5] என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கிடையே அரபு மொழியில் வரும் செய்திகள், அவர் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் கொல்ல விரும்புவதாகவும் காட்டுவதாக அது வாதிட்டது[6]. சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் [Unlawful Activities (Prevention) Act,] 18 மற்றும் 38(2) பிரிவுகளின் கீழ் அவர் குற்றவாளி என்று அரசு தரப்பு சமர்பித்தது. இருப்பினும், குறுஞ்செய்திகளில் மேல்முறையீடு செய்தவர் தடைசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை என்று நீதிமன்றம் கூறியது[7]. அதாவது, ஐசிஸ் உறுப்பினர் என்றால் தான் குற்றவாளி ஆவான் போலிருக்கிறது.

நெருக்கமாக இருப்பதால் மட்டும் தீவிரவாதியாகி விட முடியாது: “A2 ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர் என்பதை நிரூபிக்க அரசு தரப்பால் எந்த ஆதாரமும் இல்லை. A2 ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர் என்று வைத்துக் கொண்டாலும், குறுஞ்செய்திகள் மேல்முறையீடு செய்பவர்/A1 A2 க்கு அருகில் இருக்க விரும்புவதாக மட்டுமே குறிப்பிடுகிறது[8]. ஒரு தனிநபரின் அருகாமை என்பது, பயங்கரவாத சங்கத்தின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்காக, அதனுடன் தொடர்புகொள்வது அல்லது அதனுடன் தொடர்புடையதாகக் கூறுவது வேறுபட்டது,” என்று பெஞ்ச் கூறியது[9]. தகவல்தொடர்புகளைத் தவிர, இரண்டு கத்திகள் மற்றும் மேல்முறையீட்டாளர் கத்தியை வைத்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபரின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்திருக்கும் படம் ஆகியவற்றைப் பிரதிவாதி பொலிசார் நம்பியுள்ளனர்[10]. ஆனால், அவர் அத்தகைய கொலையாளியா என்றெல்லாம் நிரூபிக்கவில்லை என்றும் வாதல் தொடரும் போலிருக்கிறது.

ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த இந்து மதத் தலைவர்களுக்கு எதிராக இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்ய சதி: யுஏபிஏ பிரிவு 18ன் கீழ் உள்ள குற்றத்தைப் பொறுத்தவரை, பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த இந்து மதத் தலைவர்களுக்கு எதிராக இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்ய ஏ1 மற்றும் ஏ2 சதி செய்ததாக இறுதி அறிக்கையில் அரசு தரப்பு வழக்கு தொடர்ந்தது[11]. “சில மதத் தலைவர்களைத் தாக்க சதி செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. UAPA வின் 15வது பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, அது எப்படி ஒரு பயங்கரவாதச் செயலாகும் என்பதை பிரதிவாதி குறிப்பிடவில்லை[12]. UAPA இன் 15வது பிரிவின் கீழ் ஒரு சட்டத்தை கொண்டு வர, அந்தச் செயல் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு அல்லது இறையாண்மையை அச்சுறுத்தும் அல்லது அச்சுறுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட வேண்டும்[13]. இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள மக்களிடமோ அல்லது எந்தப் பிரிவினரிடமோ பயங்கரவாதத்தைத் தாக்குவது, என்ற ரீதியில் தீவிரவாதம் இருக்க வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியது[14].

 “இந்து மதத் தலைவர்கள் கொல்லப்படுவது மட்டுமே ஒரு பயங்கரவாதச் செயலாக அமையுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது[15]. எவ்வாறாயினும், வழக்கின் பரந்த நிகழ்தகவுகளைக் கருத்தில் கொண்டு, வழக்குத் தொடுத்துள்ள பொருட்களிலிருந்து, தீவிரமான குற்றங்கள் உட்பட பிற சட்டவிரோதச் செயல்களைச் செய்ய சதி இருந்தபோதிலும், பயங்கரவாதச் செயலைச் செய்வதற்கான சதித்திட்டம் இருந்தது என்று உறுதியாக முடிவு செய்ய முடியாது,” என்று நீதிமன்றம் மேலும் கூறியது[16]. எவ்வாறாயினும், “யுஏபிஏவின் பிரிவுகள் 18 மற்றும் 38(2) இன் கீழ் முதன்மையான வழக்கு தொடர்பான தீவ்ரமான அம்சங்கள் வழக்கின் பரந்த சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டும், ஜாமீன் விண்ணப்பத்தை பரிசீலிப்பதன் மூலமும் மட்டுமே செய்யப்படுகின்றன.” அரசு தரப்பில் என்ன வாதாடினார்கள் என்பதும் தெரியவில்லை. ஏனெனில், அரசு தரப்பு வக்கீலுக்கு இதெல்லாம் தெரியாதா என்ற கேள்வியும் எழலாம். ஒருவேளை முறையாக அவ்வாறு வழக்குப் பதிவு செய்யப் படவில்லை என்றால், இவ்வாறே ஓட்டைகளை உபயோகித்து விடுதலை பெற்று சென்று விடலாம். பிறகு, கைது செய்யப் பட்டது ஆதாரங்களை சேகரித்தது என்பதெல்லாம் வேஸ்ட் தான்.

நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுதலை: ஈரோடு உள்ளூர் நீதிமன்றத்தால் இதேபோன்ற மனு நிராகரிக்கப்பட்ட மேல்முறையீட்டாளருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு விடுதலை அளித்தது, பத்திரத்தை நிறைவேற்றும்படியும், தலா ரூ. 50,000 போன்ற தொகைக்கு இரண்டு ஜாமீன்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டது, அதில் ஒன்று இரத்த உறவினரால் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறையில் இருந்து வெளியே வந்த அவர் ஈரோட்டில் தங்கி இருக்க வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியின்றி ஊரை விட்டு வெளியேறக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இனி ஈரோடில் அவன் சுதந்திரமாகத்தன் திரிந்து கொண்டிருப்பான். கொஞ்ச நாட்களில் எல்லாம் மறந்து விடும். இப்பொழுதே தமிழில் எந்த செய்தியும் வரவில்லை.

© வேதபிரகாஷ்

16-12-2023


[1] The South First, Considering killing of Hindu religious leaders as terrorist act is ‘debatable’: Madras HC while granting bail to alleged ISIS sympathizer, BY PTI,  Published:15/12/2023 11:54 am.

[2] https://thesouthfirst.com/tamilnadu/considering-killing-of-hindu-religious-leaders-as-terrorist-act-is-debatable-madras-hc-while-granting-bail-to-alleged-isis-sympathiser/

[3] Times of India, Targeted killing of Hindu neta not terrorist act: Madras HC, Suresh Kumar / TNN / Dec 14, 2023, 02:16 IST.

[4] https://timesofindia.indiatimes.com/india/targeted-killing-of-hindu-neta-not-terrorist-act-madras-hc/articleshow/105971027.cms?from=mdr

[5] Times Now, Is targeted killing of Hindu neta an act of terror? Madras HC says it id debatable, TN National Desk, Updated: Dec 14, 2023, 10:20 AM IST.

[6] https://www.timesnownews.com/india/is-targeted-killing-of-hindu-neta-an-act-of-terror-madras-hc-says-its-debatable-article-105975897

[7] The Week, Madras HC grants bail to alleged ISIS sympathizer, PTI Updated: December 14, 2023 20:03 IST.

[8] https://www.theweek.in/wire-updates/national/2023/12/14/lgm4-tn-hc-isis.html

[9] Bar and Bench, Is conspiring to kill Hindu religious leader a terrorist act under UAPA? Madras High Court asks, Ayesha Arvind, Published on:  13 Dec 2023, 7:28 pm.

[10] https://www.barandbench.com/news/is-conspiring-kill-hindu-religious-leader-terrorist-act-uapa-madras-high-court

[11] Law trend, Madras HC grants bail to alleged ISIS sympathiser, By PTI News December 14, 2023 8:40 PM.

[12] https://lawtrend.in/madras-hc-grants-bail-to-alleged-isis-sympathiser/

[13] Indian Express, Plot to kill religious leaders: Accused gets bail, HC asks if act is terror under UAPA, Written by Arun Janardhanan, Chennai | Updated: December 15, 2023 03:33 IST

[14] https://indianexpress.com/article/cities/chennai/plot-to-kill-religious-leaders-accused-gets-bail-hc-asks-if-act-is-terror-under-uapa-9068828/

[15] Rediff.com, Is killing Hindu leaders a terrorist act asks HC, grants bail to pro-ISIS man, Source: PTI   –  Edited By: Senjo M RDecember 14, 2023 21:40 IST

[16] https://www.rediff.com/news/report/is-killing-hindu-leaders-a-terrorist-act-asks-hc-grants-bail-to-pro-isis-man/20231214.htm

தி கேரளா ஸ்டோரி – பெண்கள் ஐசிஸில் சேரும் விதமாக இந்தியாவிலிருந்து வெளியே அழைத்துச் செல்லும் லவ் ஜிஹாத் பற்றிய படம் என்பதால் எதிர்ப்பு!

ஏப்ரல் 30, 2023

தி கேரளா ஸ்டோரி – பெண்கள் ஐசிஸில் சேரும் விதமாக இந்தியாவிலிருந்து வெளியே அழைத்துச் செல்லும் லவ் ஜிஹாத் பற்றிய படம் என்பதால் எதிர்ப்பு!

நவம்பர் 2022ல் டீசர் வெளியானதிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது: விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுகிப்தோ சென் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ” தி கேரளா ஸ்டோரி”. முன்னர், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் அமோகமான வரவேற்பை பெற்றது[1]. அதன் தொடர்ச்சியாக அதே பணியில் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள் கடந்த 2009ம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் போர் மண்டலங்களுக்கு கடத்தி செல்லப்பட்டனர்[2]. அந்த 32,000 பெண்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லை. அவர்களைப் பற்றியும் அவர்களின் பின்னணியில் நிகழும் சம்பவங்களையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த கேரளாவை உலுக்கிய உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளார் சுதிப்தோ சென். இப்படத்தின் டீசர் தற்போது 03-11-2022 அன்று வெளியாகியுள்ளது. டீசர் வெளியானதிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது திகைப்பாக உள்ளது. “லவ் ஜிஹாத்” போர்வையில், கேரளாவிலிருந்து இளம்பெண்கள் பலர் ஐசிஸ் தீவிரவாத கும்பலுக்கு சேர்க்கப் பட்டது, கேரளாவில் உறுதியானது. அரசு ஆவணங்களும் அதை ஆமோதித்தன. அந்நிலையில், எதிர்ப்பு கேள்விக் குறியாகிறது.

நவம்பர் 2022ல் முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்து புகார் கொடுத்தது: ஒரு நர்ஸாக வேண்டும் என்ற கனவோடு இருந்த ஒரு பெண்ணை தனது வீட்டில் இருந்து கடத்தி சென்று ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷாலினி உன்னிகிருஷ்ணன் எனும் பெண்ணின் உருக்கமான பதிவுடன் இந்த டீசர் துவங்குகிறது. பார்வையாளர்களை உருகவைத்துள்ள இந்த டீசர் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த டீசரில் பர்தா அணிந்து தோன்றும் அடா சர்மா தான் மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்பட்டதாக பொய்யான தகவல்களை உண்மைப் போல் முன்வைத்துள்ளதாகவும் கேரளாவை தவறாக சித்தரிப்பதாக தெரிவித்து இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தணிக்கை குழுவில் புகார் செய்யப்பட்டது. மேலும், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் மீதான முதற்கட்ட விசாரணையில் ஒரு பிரிவினரின் மத உணர்வை புண்படுத்துவது மற்றும் கலவரத்திற்கு அழைப்பு விடுப்பது போன்ற மையக்கருத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது[3]. இதனடிப்படையில் கேரளா டி.ஜி.பி. அனில்காந்த் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனருக்கு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்[4].

விபுல் அம்ருத்லால் ஷா 2018 முதல் 2022 வரை முறையான ஆரய்ச்சிக்குப் பிறகே படத்தை தயாரித்துள்ளார்: இது போன்ற ஒரு கதையை அடிப்படையாக வைத்து படம் எடுக்க பலரும் அச்சப்படும் நிலையில் மிகவும் துணிச்சலாகவும் தைரியமாகவும் இதில் களம் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா. இப்படத்திற்காக கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் முழுமையான ஆராய்ச்சிக்கு பிறகே அதை திரையில் படமாக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொண்டுள்ளார் “தி கேரளா ஸ்டோரி” படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென். அரேபிய நாடுகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தார் மற்றும் உள்ளூர் வாசிகளிடம் இருந்து சில அதிர்ச்சியான தகவல்களை சேகரித்துள்ளார் இயக்குனர். 2009ம் ஆண்டு முதல் இந்து மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த கேரளா மற்றும் மங்களூருவைச் சேர்ந்த 32000 சிறுமிகள் கடத்தப்பட்டு இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத பகுதிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த சதி செயலின் பின்னணியில் இருக்கும் உண்மை கதையையும். பெண்களின் வலிமையை பற்றியும் எடுத்துரைக்கும் வகையிலும் “தி கேரளா ஸ்டோரி” படத்தினை படமாக்கியுள்ளனர். டீசர் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு 2023 தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

05-05-2023 அன்று வெளியாகவுள்ள படத்திர்கு எதிர்ப்பு: கேரள மாநிலத்துக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் எதிரான கருத்துக்களை பரப்புவதாக, ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிராக கேரளாவில் அதிருப்தி அதிகரித்துள்ளது. கேரளாவில் அந்த திரைப்படத்தை திரையிட அனுமதி வழங்கக்கூடாது என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. ’தி கேரளா ஸ்டோரி’ என்ற பன்மொழித் திரைப்படம் மே 5 அன்று இந்தியா நெடுக, திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அந்த திரைப்படத்தை கேரளாவில் வெளியிடக்கூடாது என்றும், திரையிடுவதற்கு அரசு தடை விதிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், சிபிஎம்மின் மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் போராடி வருகின்றன. ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது முதலே அதற்கு எதிராக கேரளாவில் கண்டனம் வலுத்து வருகிறது. கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு, சர்வதேச பயங்கரவாத அமைப்பான ’ஐஎஸ்ஐஎஸ்’ஸில் செயல்பட்டு வருவதாக அந்த முன்னோட்டம் விவரித்து இருந்தது. மேலும் கேரளாவின் 32 ஆயிரம் பெண்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருப்பதாகவும் அதில் புள்ளிவிவரங்கள் அடுக்கப்பட்டுள்ளன. மேலும் லவ் ஜிகாத் என்ற சர்ச்சைக்குரிய தலைப்பிலும் விவாதங்களை முன்னோட்டம் கிளப்பியுள்ளது.

எப்ரல் 2023ல் காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: இந்த நிலையில் சங் பரிவார் அமைப்புகளின் குரலை எதிரொலிக்கும் வகையிலான ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்[5]. ’கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷத்தை கக்கி இருப்பதாகவும், உள்நோக்கத்தோடு கேரள மாநிலம குறித்தும் கேரள மக்கள் குறித்தும் தவறான கருத்துக்களை வழங்கும் திரைப்படத்தை தடை செய்யவும்’ அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்[6]. இதனிடையே பாஜக ஆதரவு அமைப்புகள், ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வரவேற்றுள்ளன[7]. ஆனால், காங்கிரஸ் எதிர்க்கிறது[8]. இப்படம் பொய்யான பிரச்சாரம் செய்கிறது, அதனால் தடை செய்ய வேண்டும் என்று சதீசன் கூறியுள்ளார்[9]. கேரள பிஷப் போன்றோரே அச்சமயத்தில், இளம்பெண்கள் “லவ் ஜிஹாதில்” சிக்க வைக்கப் பட்டு. ஐசிஸ் போருக்கு கூட்டிச் செல்லப் பட்டனர் என்று எடுத்துக் காட்டியுள்ளார். மாநில அரசும் அவ்விவரங்களை மறுக்கவில்லை[10].

29-04-2023 – முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு; இந்நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரி படத்தை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்[11]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன[12]. அந்த வகையில் அவர்களின் கொள்கைகளை பரப்புரை செய்ய எடுக்கப்பட்ட படம் இது என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது[13]. வகுப்பு பிரிவினை வாதம் மற்றும் கேரளாவிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் நோக்கத்துடன் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது[14]. விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த “லவ் ஜிஹாத்” குற்றச்சாட்டுகளை வடிவமைத்தது திட்டமிட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். ஆனால் சமீபத்தில் லவ் ஜிகாத் என்ற ஒன்று கிடையாது என்று மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழலில் கேரளாவில் மதநல்லிணக்க சூழலை அழித்து வகுப்புவாத விஷ விதைகளை விதைக்க சங்பரிவார் முயற்சித்து வருவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

30-4-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், ‘The Kerala Story’ teaser :மனதை பதைபதைக்கவைக்கும்தி கேரளா ஸ்டோரிடீசர் வெளியீடு, By: லாவண்யா யுவராஜ் | Updated at : 03 Nov 2022 10:36 PM (IST), Published at : 03 Nov 2022 10:36 PM (IST)

[2] https://tamil.abplive.com/entertainment/the-kerala-story-teaser-is-out-now-82794

[3] மாலை மலர், சர்ச்சைகளை கிளப்பியதி கேரளா ஸ்டோரிடீசர்.. வழக்குப்பதிவு செய்ய உத்தரவு.., By மாலை மலர், 9 நவம்பர் 2022 6:08 PM

[4] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-movie-teaser-controversy-534578

[5] காமதேனு, ‘சங் பரிவார் குரலை எதிரொலிக்கும் திரைப்படம்’; ‘தி கேரளா ஸ்டோரிக்கு கேரளாவில் வலுக்கும் எதிர்ப்பு!,காமதேனு, Updated on : 28 Apr, 2023, 6:50 pm. https://kamadenu.hindutamil.in/cinema/ban-the-kerala-story-movie

[6] https://kamadenu.hindutamil.in/cinema/ban-the-kerala-story-movie

[7] Malayala Manorama, False propaganda: VD Satheesan calls for ban on screening ‘The Kerala Story’, Onmanorama Staff, Published: April 28, 2023 03:56 PM IST

[8] https://www.onmanorama.com/news/kerala/2023/04/28/vd-satheesan-against-screening-the-kerala-story-sudipto-sen.html

[9] PTI News, Congress urges state govt not to give permission to screen ‘The Kerala Story’ which makes ‘false claims‘, Updated: Apr 28 2023 3:03PM

[10] https://www.ptinews.com/news/national/congress-urges-state-govt-not-to-give-permission-to-screen-the-kerala-story-which-makes-false-claims/559755.html

[11] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரெய்லருக்கு  கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் கண்டனம்!, தினத்தந்தி 30 April 2023 3:16; PM (Updated: 30 April 2023 3:17 PM)

[12] https://www.dailythanthi.com/News/India/kerala-chief-minister-pinarayi-vijayan-condemned-the-trailer-of-the-kerala-story-954112

[13] ஏபிபிலைவ், The Kerala Story: ’பிரிவினைவாதத்தை தூண்டும் ட்ரெய்லர்’ – தி கேரளா ஸ்டோரி  படத்துக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம், By: பேச்சி ஆவுடையப்பன் | Updated at : 30 Apr 2023 02:48 PM (IST), Published at : 30 Apr 2023 02:48 PM (IST).

[14] https://tamil.abplive.com/entertainment/cm-pinarayi-vijayan-slams-film-the-kerala-story-for-spreading-hate-114580

என்ஐஏ தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் சோதனை – கோயம்புத்தூர் கார் வெடிப்பு-விபத்து, தற்கொலை விவகாரம்!

நவம்பர் 21, 2022

என்ஐஏ தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் சோதனைகோயம்புத்தூர் கார் வெடிப்புவிபத்து, தற்கொலை விவகாரம்!

10 நாட்களில் 3-வது சோதனை 10 நாட்களில் 3-வது சோதனைவிட்டுவிட்டு நடக்கும் சோதனைகள்: சோதனை 20-11-2022 சனிக்கிழமை அன்று கார் வெடிப்பு வழக்குத் தொடா்பாக சென்னை, திருச்சியில் 6 இடங்களில் போலீஸார் சோதனை செய்து, பென்டிரைவ், மடிக்கணினி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்[1]. 10-11-2022 மற்றும் 15-11-2022 என்று சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன[2]. கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக். 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த சிலிண்டா் வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞா் உயிரிழந்தார். இது தொடா்பாக ஜமேஷா முபீன் கூட்டாளிகள் 6 பேரை கோவை போலீஸார் கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக என்ஐஏ தமிழகம்,கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் 43 இடங்களில் கடந்த 10ஆம் தேதி [10-11-2022] ஒரே நேரத்தில் சோதனை செய்தது. இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத உறுதி மொழி ஏற்ற ஜமேஷா முபீன், தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. அதேபோல், இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ நாட்டு வெடிகுண்டுகள்தயாரிக்க பயன்படும் வேதிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கியதாக கைதானவர்கள் தரப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்[3]. இருப்பினும் அதில் சில பொருட்களை சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கியிருக்கலாம் எனஎன்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது[4]. இந்த வெடிப்பொருட்கள்-ரசாயனங்கள் பற்றி ஏற்கெனவே வாத-விவாதங்கள் காரசாரங்களில் முடிந்துள்ளன.

15-11-2022 அன்று சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்: என்ஐஏ வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் சென்னை பெருநகர காவல்துறையினா் கடந்த 15ஆம் தேதி 5 இடங்களில் சோதனை செய்து, வெளிநாட்டு பணம்,ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

20-11-2022 சனிக்கிழமை அன்று சென்னையில் சோதனை: இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சனிக்கிழமை 4 இடங்களில் போலீஸார் ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்[5].

இச் சோதனை –

  1. சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில் வசிக்கும் சாகுல் ஹமீது (31) வீடு[6],
  2. வேப்பேரி ஈவெரா பெரியார் சாலையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் எஸ்.எம்.புஹாரி (57) வீடு,
  3. ஏழு கிணறு பகுதியில் பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமா் முக்தார் (33) வீடு,
  4. வி.வி.எம்.தெருவில் உள்ள முகமது ஈசாக் கெளத் (33) வீடு

ஆகிய இடங்களில் நடைபெற்றது. பல மணி நடைபெற்ற சோதனையில் 4 வீடுகளிலும் இருந்து 12 பென் டிரைவ்கள், 14 கைப்பேசிகள்,ஒரு மடிக்கணினி, 2 கையடக்க கேமராக்கள், ஒரு சிறிய ரக சூட்கேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இவை அனைத்தும் தடயவியல்துறை ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் அடிப்படையில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது[7]. கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக சென்னையில் என்ஐஏ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது[8].

20-11-2022 சனிக்கிழமை அன்று திருச்சியில் சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடா்பாக திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது[9]. இதில், –

  1. ஷாகுல் ஹமீத் (வயது 25)- இனாம்குளத்தூா் நடுத்தெருவில் வசிக்கும் ஆவின் நிறுவன ஒப்பந்த தொழிலாளி,
  2. ஷர்புதீன் (வயது 25) – கந்தசாமி தெருவைச் சோ்ந்த ஜெராக்ஸ் கடை நடத்துபவா் –

என இருவா் மீது சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனா். இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பின் முகநூல் பக்கத்தை லைக் செய்ததாகக் கூறப்படுகிறது[10]

இதையடுத்து, ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரதிதாசன் தலைமையில், இரண்டு காவல் ஆய்வாளா்கள், 13 உதவி ஆய்வாளா்கள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மோப்பநாய் உதவியுடன் இனாம்குளத்தூருக்கு சனிக்கிழமை வந்தனா். சந்தேகப்படும் நபா்கள் இருவா் தங்கியிருந்த வீடுகளிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இரு இடங்களிலும், சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் இருவரது வீடுகளில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், இருவரது சமூக வலைதள பகிர்வுகள் குறித்தும், தொலைபேசி தொடா்புகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். “இச்சோதனையில் ஹார்டு டிஸ்க்குகள், 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது,” என்று நக்கீரன் குறிப்பிடுகிறது. 

17-11-2022 முதல் 19-11-2022 வரை கம்பத்தில் சோதனைவிசாரணை: கம்பத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த நிர்வாகிகள் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 18-11-2022, வெள்ளிக்கிழமை அன்று விசாரணை நடத்தினா்[11]. தீவிரவாதிகள் அமைப்புடன் தொடா்பு இருப்பதாக பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என மாநிலத்தில் 16-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை போலீஸார் கடந்த செப். 22-இல் சோதனை நடத்தினா். இதில் அந்த அமைப்பின் மண்டலச் செயலாளா் பொறுப்பில் இருந்த தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்த யாசா் அராபத் (32) என்பவரைக் கைது செய்தனா். அதன் பின்னா் கம்பத்தில் செயல்பட்ட மாவட்ட அலுவலகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக கம்பத்தில் அந்த அமைப்பைச் சோ்ந்த 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை காவல் ஆய்வாளா் அருண் மகேஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 3-ஆவது நாளாக 19-11-20022 அன்று வெள்ளிக்கிழமையும் அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: “கம்பத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவருடன், சிலருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், கம்பத்தில் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. தொடா்ந்து விசாரணை நடைபெறும்,” என்றனா்[12].

© வேதபிரகாஷ்

21-11-2022.


[1] தினமணி, கார் வெடிப்பு வழக்கு: சென்னை, திருச்சியில் போலீஸார் சோதனை, By DIN  |   Published On : 19th November 2022 11:15 PM  |   Last Updated : 20th November 2022 04:51 AM.

[2] https://www.dinamani.com/tamilnadu/2022/nov/19/police-raids-in-trichy-and-chennai-3952494.html

[3] தமிழ்.இந்து,  கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: மேலும் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை, செய்திப்பிரிவு, Published : 19 Nov 2022 06:21 AM; Last Updated : 19 Nov 2022 06:21 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/900225-coimbatore-car-cylinder-blast-1.html

[5] தினத்தந்தி, என்... வழக்கு தொடர்பாக சென்னையில் மீண்டும் 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனைசெல்போன்கள் பறிமுதல், நவம்பர் 20, 12:20 am

[6] https://www.dailythanthi.com/News/State/nia-in-connection-with-the-case-the-police-raided-the-houses-of-4-people-in-chennai-again-cell-phones-were-seized-840708

[7] தமிழ்.இந்து, 3-வது முறையாக சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ சோதனை: ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பா என விசாரணை, செய்திப்பிரிவு, Published : 20 Nov 2022 04:20 AM; Last Updated : 20 Nov 2022 04:20 AM

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/900669-nia-raids-4-locations-on-chennai-for-the-3rd-time-probe-for-links-with-isis.html

[9]   நக்கீரன், என்.. திடீர் சோதனை; மூன்று மணி நேர சோதனைக்குப் பிறகு ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 19/11/2022 (20:30) | Edited on 19/11/2022 (20:46).

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nia-raid-trichy-confiscation-hard-disks

[11] தினமணி, கம்பத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிா்வாகிகள் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை, By DIN  |   Published On : 18th November 2022 11:36 PM  |   Last Updated : 18th November 2022 11:36 PM.

[12] https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2022/nov/18/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3951860.html

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி-தீவிரவாதம் வளறும் விதம் (3)

நவம்பர் 17, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதிதீவிரவாதம் வளறும் விதம் (3)

PFI leader Ahmed Sheriff accepts receipt of money

PFI ஆட்கள் கைது மற்றும் சியரியாவில் இறப்பு: ஹம்ஸா / யு.கே.ஹம்ஸா / தலிபான் ஹம்ஸா [UK Hamsa or ‘Taliban’ Hamsa, 52] மற்றும் மனஃப் ரஹ்மான் [Manaf Rahman] என்ற இருவர் வியாழக்கிழமை, 26-10-2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[1]. பி.எப்.ஐயின் தலைவரும், “கல்ப் தேஜாஸ்” [Gulf Tejas] என்ற நாளிதழின் ஆசிரியருமான, அஹமது ஷரீப் “இந்தியா டுடே டிவி” நிருபரால் பேட்டி கண்டபோது, எப்படி தங்கள் இயக்கம், வளைகுடா நாடுகளிலிருந்து பணம் பெறுகிறது, ஹவாலா மூலம் பணம் வருகிறது, ஹவாலா இரு வழிகளிலும் செயல்பட்டு வருகின்றது, தங்களது நோக்கம் இந்தியாவில், ஒரு “இஸ்லாமிய நாட்டை” [Islamic State] உருவாக்குவது தான்….போன்றவற்றை ஒப்புக் கொண்டது தெரியவந்தது. “சத்திய சரனி” என்ற நிறுவனம்[2], அவ்வாறு பணம் பெற்றதையும் ஒப்புக் கொண்டார்[3]. அதேபோல, “சத்திய சரனி” யின் பெண்களின் பிரிவு தலைவி, ஜைனபா ஒரு பக்கம் தாங்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டிருக்கிறோம், அதற்கான சான்றிதழ்கள் கொடுக்கப் படுகின்றன என்றும், இன்னொரு பக்கம், இல்லை, தங்களது நிறுவனம், இஸ்லாம் பற்றி போதிக்கிறது, அவ்வளவுதான், என்ற ரீதியிலும் பேசியுள்ளார்[4].

ISIS tape to attack Pooram fest-DM-16_11_2017_010_024

ஐந்து பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது[5]: ஆறு பேர் கைது செய்யப்பட்டதை பொலீஸார் உறுதி செய்தது[6]. முன்னர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சோதனையில் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய  ஐந்து பேரை கைது செய்தனர் என்று செய்தி வந்தது[7]. இவர்களிடம் விசாரணை நடத்தியதில்  இந்த மாவட்டத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் சிரியாவில் பலியானது உறுதியாகி உள்ளது. இறந்தவர்கள் –

  1. ஷநாத் (வயது 25) சலாட்பகுதியை சேர்ந்தவர்,
  2. ரிஷல் (30) வலாபட்டனம்,
  3. ஷமீர் (45)
  4. அவரது மகன் சல்மான் (20) பப்பினிசேரி,
  5. ஷாஜீர் (25) எச்சூர்

ஆகியோர் என அடையாளம் தெரிந்து உள்ளது[8]. ஆகவே, நிச்சயமாக, இவர்களது பெற்றோர்கள் மறுக்க, மறைக்க முடியாது. ஆனால், தெரிந்து அவர்கள் எப்படி, தம் மகன்கள் ஐசிஸில் சேர ஒப்புக் கொண்டார்கள் என்பது புதிராக உள்ளது. இல்லை, அந்த அளவிற்கு அவர்களும் மூளைசலவை செய்யப்பட்டுள்ளனர் போலும். மேலும் அதே பகுதியை சேர்ந்த 15 வாலிபர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கேரள போலீசாரால் அக்டோபர் 26 ம் தேதி கைது செய்யப்பட்ட U.K. ஹம்சா இவர்களை ஐ.எஸ் நெட்வொர்க்கில் சேர அழைத்துச் சென்றார். அவர்களில் சிலர் இன்னும் சிரியாவில் இருக்கிறார்கள்.

ISIS tape- probe demanded- IE

தீவிரவாத நட்பு, தீவிரவாதத்தில் தான் முடியும்; சென்ற வாரம், பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள் நிரூபணம் ஆகும் முறையில், கைதுகள், கொலைகள் நடந்த செய்திகள் வெளியாகின. இப்பொழுது இத்தகைய குரூர செயல்திட்ட விலக்கம் மூலம் ஜிஹாதித்துவத்தின் ஒடிய முகம் வெட்ட வெளிச்சமாகிறது! இதுவா மனிதத்தன்மை? எந்த மனிதன் இதனை தெய்வீகம் என்பான்? ஆனால், துலுக்க வெறியர்கள், இவற்றை கடவுள் பெயரில் தான் செய்து வருகின்றனர். இவற்றையெல்லாம் அறிந்தும், தமிழகத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்வாதிகளாகத் துடிக்கும் நடிகர்களும் அமைதியாக இருப்பது, மாறாக இந்து தீவிரவாதம் என்றெல்லாம் பேசுவது, அவர்களது ஆதரவு மற்றும் தொடர்புகளைக் காட்டுகிறது எனலாம். திரையுகத்தைப் பொறுத்த வரையில், தாவூத் இப்ராஹிம் உதவியில்லாமல், எவனும் படத்தை வெற்றியாக வெளியிட முடியாது. அவனுக்குண்டான கப்பம், வசூலிக்கப் பட்டு சென்று விடுகிறது என்று தெரிகிறது. அந்நிலையில், இவர்களும், அவர்களால் சந்தோசமாக வைக்கப்படுகின்றனர் என்றாகிறது, இல்லையெனில், எல்லாவற்றையும் அறிந்தும், அறியாதது போல மேடைகளில் சமமாக உட்கார்ந்து கொள்ளுதலும், சந்தோசமாக பொழுது கழிப்பதும், பல கதைகளை சொல்கின்றன என்றாகிறது. பொது மக்களுக்கு விரோதமான, அத்தகைய உறவு நிச்சயமாக ஒரு நாள் பேரிழப்பில் தான் சென்று முடிவடையும் என்பது திண்ணம்.

PFI leader accepts receipt of money-PFI Sainaba

கேரளா ஏன், எப்படி, எவ்வாறு ஜிஹாதிகளை ஏற்றுமதி செய்கிறது?: ஐசிஸிக்கு, இந்த மலபார் பகுதியிலிருந்து, தீவிரவாதத்திற்கு எப்படி இளைஞர்கள் சுலபமாகக் கிடைக்கிறார்கள்?  இதைப் பற்றி அலசும் போது கவனிக்க வேண்டிய காரணிகள் சுருக்கமாகக் கொடுக்கப் படுகின்றன[9]. முகமதியரிடையே ஒரு பக்கம் படிப்பின்மை, இன்னொரு பக்கம் ஐ.டி. இஞ்ஜினியரிங் என்று படித்துள்ள நிலை என்றுள்ளது. ஐ.டி படித்த இளைஞர்கள் சுலபமாக ஜிஹாதித்துவத்திற்கு மாறுவது, பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றின் மூலம் பிரச்சாரம் செய்வது. மற்ற மத-அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிக் குழுக்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது. வளைகுடா நாடுகளுடன் எல்லோருக்கும் தொடர்புகள் இருப்பது. வேலையின்மையைப் பயன்படுத்தி, வேலை வாங்கிக் கொடுக்கிறேன் என்ற நிலையில் ஆள் சேர்ப்பது. அதிக முகமதியர் மக்கட்தொகை உள்ள இடங்கள், கடைகள் முதலிய இடங்களில் முஸ்லிம் அல்லாத இளம்பெண்களை கவர்ந்து, மதம் மாற்றி, லவ்-ஜிஹாத் மூலம் கல்யாணம் செய்து வைப்பது. லவ்-ஜிஹாத் மூலம் வசீகரித்து, பெண்ணோடு அனுப்பி வைப்பது. சம்பந்தப் பட்ட குடும்பத்தினருக்கு தவறாமல், மாதன் தோறும் பணம் வந்துக் கொண்டிருப்பது. விசா, பாஸ்போர்ட், மணி-எக்ஸ்சேஞ்ச், விமான டிக்கெட்,…..போன்றவற்றில் முகமதியர் ஆதிக்கம் செல்லுத்துவதால், பண-பரிமாற்றம், ஆட்கள் எளிதாகச் சென்று வருதல் போன்றவை சுலபமாக நடந்து வருகிறது. விவரங்களும் அவர்களுடனே இருந்து விடுகிறது. அனைத்திற்கும் மேலாக அரசியல் செல்வாக்கு, போலிஸ் முதலிய துறைகளில் பெரிய பதவிகளில் இருக்கும் முகமதியர்களின் உதவி முதலியவை அவர்களை சட்டப்பிடிகளிலிருந்தும் தப்பித்துக்க் கொள்ள உதவுகிறது. இப்பொழுது, கம்யூனிஸ கூட்டாட்சி வந்த பிறகு, அரசுக்கு சித்தாந்த போராட்டங்களில் ஈடுபடவே நேரமில்லாத நிலையில், ஜிஹாதிகள் சுலபமாக தங்களது செயல்களை செய்ய ஆரம்பித்து விட்டனர்[10].

© வேதபிரகாஷ்

17-11-2017

PFI-ISIS link visibly naked- Vedaprakash

[1] The police revelation also comes days after the arrest of five suspected ISIS recruiters from Kannur. The ringleader of the recruitment is said to be a 52-year old man identified as UK Hamsa or ‘Taliban’ Hamsa. It was not immediately clear whether the youths were recruited by the group linked to Hamsa. According to the National Investigation Agency, nearly a 100 Indians, many of them from Kerala have left India to join ISIS.

https://www.indiatimes.com/news/india/isis-fever-grows-stronger-in-kerala-as-six-more-men-from-the-state-join-isis-in-syria-332902.html

[2] PO Karuvambram, Cherani, Manjeri – 676123, Kerala, India, Tel: +91 483 2765010, Email: saranimail@gmail.com,  http://www.sathyasarani.org/

[3] On Tuesday, 31-10-2017, India Today TV aired the explosive sting report which laid bare a nexus between Islamic extremist groups and Popular Front of India. Ahmed Shareef, a senior PFI leader and associate editor of group mouthpiece Gulf Thejas was the first to be caught on camera. He claimed before undercover reporters that a key aim of PFI was to create an Islamic state in India and later spread it to the rest of the world. He also revealed the modus operandi of illegal fund transactions from the Gulf to Kerala. Shareef said that Sathya Sarani in Malappuram, which is considered an Islamic education institution, received a lot of money through hawala.

India Today, Six PFI members joined ISIS; police say, P S Gopikrishnan Unnithan Posted by Ganesh Kumar Radha Udayakumar, Thiruvananthapuram, November 3, 2017 | UPDATED 06:19 IST

[4] AS Zainaba, president of the AFI’s women’s wing, said on hidden camera Sathya Sarani is a conversion factory masquerading as an educational organisation. http://indiatoday.intoday.in/story/kerala-police-pfi-isis-kannur/1/1081364.html

[5] தினத்தந்தி, .எஸ் இயக்கத்தில் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் சிரியாவில் பலி கேரள போலீசார் உறுதி

[6] Deccan Chronicle, 6 more youth from Kerala join ISIS, confirm police, ANI, Published Nov 2, 2017, 7:10 pm IST; Updated Nov 2, 2017, 7:10 pm IST

[7] http://www.deccanchronicle.com/nation/current-affairs/021117/6-more-youth-from-kerala-join-isis-confirm-police.html

[8] http://www.dailythanthi.com/News/TopNews/2017/10/28140247/Kerala-Police-confirm-deaths-of-five-ISlinked-men.vpf

[9] முதல் ஐந்து காரணிகள் ஏசியா நெட் செய்தியிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளது:

Asianet.newsable, Why India could soon be under a ‘Made in Kerala’ threat, by T. S. Sudhir, October 27, 2017. 10:51 am.

[10] http://newsable.asianetnews.com/editorial/why-india-could-soon-be-under-a-made-in-kerala-threat

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி-தீவிரவாதம் வளறும் விதம் (2)

நவம்பர் 17, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதிதீவிரவாதம் வளறும் விதம் (2)

Popular Front meeting, Chennai 08-11- 2017-2

ஐசிஸ் தொடர்புள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாபுகழ் பாடும் விகடன்: PFI மற்றும் ISIS தொடர்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில், விகடன், சென்னையில் நடந்த அவர்களது மாநாட்டைப் பற்றி அதிகமாகவே விளம்பரம் கொடுத்துள்ளது[1].  ஜே. அன்பரசன்,  பா.காளிமுத்து, ப. பிரியங்கா என்ற மூவர் இதனை செய்துள்ளனர்[2]. அவர்களின் செய்தி, “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ என்பது இந்திய அளவில் வளர்ந்து வரும் மிகப்பெரிய முஸ்லிம் அமைப்பு. தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் காலங்களில் இந்த அமைப்பு செய்துவரும் தன்னார்வ சேவைகள் அனைவரும் அறிந்த ஒன்று. ‘லவ் ஜிகாத் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு  ஆதரவு அளித்தல்’ போன்ற பொய்யானக் காரணங்களைச் சொல்லி மத்திய அரசு, ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பைத் தடை செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அவ்வமைப்பினர் கூறுகின்றனர். அதனால், பி.ஜே.பி அரசை எதிர்த்தும், இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்தியா முழுவதும் ‘உரிமை முழக்க மாநாடு’ நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள் ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பினர். கடந்த 8 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், பல்லாயிரக்கணக்கில் முஸ்லிம் மக்கள் கூட ‘உரிமை முழக்க மாநாடு’ நடைபெற்றது. இதற்கு முதல் நாள் அதாவது கடந்த 7 ஆம் தேதி மதுரையிலும், திருவனந்தபுரத்திலும் மாநாடு நடத்தினார்கள்.

Popular Front meeting, Chennai 08-11- 2017

திருமாவளவன், முதலியோர் கலந்து கொண்டது திகைப்படையச் செய்வதாக உள்ளது: சென்னையில் நடைபெற்ற மாநாட்டில்,

  1. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,
  2. மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,
  3. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்,
  4. ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மற்றும்
  5. முஸ்லிம் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது அலி ஜின்னா, “சமீப காலமாக அவதூறு அறிக்கை கொடுத்ததாகச் சொல்லி, எங்கள் அமைப்பைத் தடை செய்ய தேசிய புலனாய்வு முகமை  (N.I.A) தீவிர பணியினை மேற்கொண்டு வருகிறது. இந்த அவதூறு பிரசாரத்தை முறியடித்து, மக்களைச் சந்தித்து உண்மையைச் சொல்லும் பணியில், ‘பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியாஇறங்கியுள்ளது. இதனடிப்படையில், இந்தியா முழுவதும் 14 மாநிலங்களில் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.”  இவ்வாறு முழுக்க-முழுக்க உண்மைகளை மறைத்து, பிரச்சார ரீதியில் நடத்தப் பட்ட மாநாட்டில், மேலே குறிபிட்டவர்கள், எப்படி, ஏன் கலந்து கொண்டனர் என்பது, திகைப்பாக இருக்கிறது. பொறுப்புள்ள அரசியல்வாதிகள் என்ற ரீதியில், நாட்டு நடப்புகள் இவர்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?

Cine secularism acts differently in TN-2017

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் [08-10-2017][3]: இகடன் குழு தொடர்ந்து, இவற்றையும் வெளியிட்டுள்ளது. உரிமை முழக்க மாநாட்டில் முக்கியமான 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை:

  1. பாசிசத்துக்கு எதிரான கூட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு களப்பணி ஆற்றிட வேண்டும்.
  2. தேசிய புலனாய்வு முகமை (N.I.A) கலைக்கப்பட வேண்டும்.
  3. மதுரை, போலி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும்.
  4. பாபர் மசூதி மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும்.
  5. பத்தாண்டுகள் சிறையில் கழித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.
  6. மியான்மரில் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளான ரோஹிங்கியா இன முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
  7. நீட் தேர்வை ரத்து செய்து கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
  8. தீவிரவாத எதிர்ப்பு சட்டமான யு.ஏ.பி.ஏ உள்ளிட்ட சட்டங்கள் மனித உரிமை மீறலுக்கும், நீதி மறுப்பதற்கான ஒரு கருவியாகவுமே இருக்கிறது. எனவே இந்தக் கருப்புச் சட்டங்களை நீக்க வேண்டும்.
  9. கெளரி லங்கேஷின் படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது. மேலும் கொலைக் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
  10. மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்க வேண்டும்.
  11. மக்கள் நலப் பணிகளுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அர்ப்பணிக்கும் வக்ஃப் வாரியம் சீரமைக்கப்பட வேண்டும்.
  12. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்.
  13. தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
  14. லவ் ஜிகாத் பொய் பிரசாரத்தை நிறுத்த வேண்டும்.
  15. கல்வி வளாகங்களை சங்பரிவார்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[4].

ISIS plan to kill Hindus - Dinamani- 15-11-2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்:  பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI], எஸ்.எப்.ஐ [SFI] தடைக்குப் பிறகு தோன்றிய இயக்கம் ஆகும்.  தடை செய்யப்பட்ட சிமி கூட்டத்தினர் இம்மாதிரியான Social Democratic Party of India (SDPI), Popular Front of India (PFI), National Development Front (NDF), என்று பரவி வருவதாகத் தெரிகிறது[5]. இப்பொழுது, லவ் ஜிஹாத், மதமாற்றம், ஐசிஸ்க்கு ஆள்சேர்ப்பு போன்ற காரியங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் பலமுறை கொலை[6], வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல்[7], தேசவிரோத செயல்கள் முதலியவற்றில் ஈடுபடுதல், முதலியவை உறுதிபடுத்தியிருப்பதால், போலீஸ் நடவடிக்கை எடுக்கப் பட்டதுள்ளது[8]. தமிழகத்தைப் பொறுத்த வரையில், தேசவிரோத, கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகளின் ஆதரவு இருந்து வருகிறது. அவ்வப்போது, ஏதோ சேவை செய்கிறோம் என்பது போலவும் காட்டிக்கொள்வதுண்டு. ஆனால், தீவிரவாத செயல், ஐசிஸ் தொடர்பு, கைது என்றெல்லாம் வரும் போது அமுங்கி விடுவர். ஆனால், பி.எப்.ஐ.யின் அடிப்படைவாத செயல்கள், பயங்கரமாக வெளிப்பட்டுக் கொண்டுக்கின்றன. இப்பொழுது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் ஐசிஸ்குள்ள தொடர்புகள் வெளியாகி வருகின்றன.

© வேதபிரகாஷ்

17-11-2017

PFI conversion factory- Nov.2017

[1] விகடன், உரிமை முழக்க மாநாடு… ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா‘-வின் புதிய பரிணாமம்!, Posted Date : 21:21 (09/10/2017); Last updated : 21:21 (09/10/2017.

[2] https://www.vikatan.com/news/tamilnadu/104514-popular-front-of-india-conference.html

[3] விகடன், உரிமை முழக்க மாநாடு… ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா‘-வின் புதிய பரிணாமம்!, Posted Date : 21:21 (09/10/2017); Last updated : 21:21 (09/10/2017.

[4] https://www.vikatan.com/news/tamilnadu/104514-popular-front-of-india-conference.html

[5]  According to a government paper, starting largely as a Kerala Muslim outfit and successor to National Development Front (NDF), the PFI now has more than 80,000 members and sympathisers, with a countrywide spread. The paper,that has already been circulated in the PMO,National Security Council Secretariat and the Home Ministry, states that the PFI has a militant core cadre, radical following and a subtly divisive and subversive media organ. While this case was handed over to the NIA last month [January 2014], subsequent police raids at that time on PFI activists had led to the recovery of subversive material. The paper says that raid on 100-odd PFI establishments had led to recovery of crude explosives,lethal weapons,besides a computer disk containing clips of executions by the al-Qaeda. It says Green Valley Foundation in Mallapuram district provided combat training to PFI cadre under the cover of providing vocational training to the indigent and physically challenged.

[6] http://news.outlookindia.com/items.aspx?artid=769976

[7]  http://zeenews.india.com/news/kerala/country-made-bombs-seized-21-pfi-cadres-arrested-in-kerala_844220.html

[8] http://indianexpress.com/article/news-archive/web/concern-in-govt-over-pfis-growing-outfits-spread/0/

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி-தீவிரவாதம் வளறும் விதம் (1)

நவம்பர் 17, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதிதீவிரவாதம் வளறும் விதம் (1)

Abdul Rashid Abdulla Isis -terror tape

கேரளாவில் தொடரும் ஐசிஸ் ஆதரவு பிரச்சாரம், தீவிரவாத ஊக்குதல் ஆதரவு முதலியன: ஐஎஸ் அமைப்பின் பிராந்திய பிரிவான “தவுலதுல் இஸ்லாம்”, தனது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு சமீபத்தில் ஒரு குரல் பதிவை (ஆடியோ) வெளியிட்டுள்ளது. “கேரளாவின் ஒளி” என்ற வாட்ஸ்-அப் குழுவில் இது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது[1]. இது அத்தகைய 50வது பதிவேற்றம் என்று சொல்லப்படுகிறது. முன்னர் என்.ஐ.ஏ அப்துல் ரஷீத் என்பவன் அத்தகைய இரண்டு வாட்ஸ்-அப் குழுக்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்தது[2]. சுமார் 10 நிமிடங்கள் ஓடும் அதில் ஒருவர் மலையாள மொழியில் பேசுகிறார். “நமது மக்கள் அனைவரும் .எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணையவேண்டும். அப்படி இணைய விருப்பமில்லை என்றால் தீவிரவாத இயக்கத்தினருக்கு அதிக அளவில் நிதி உதவி அளித்திடவேண்டும். ஐஎஸ் முஜாஹிதீன் அமைப்பினர் உலகின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்துகின்றனர். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை திருவிழாவின்போது, நமது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தாக்குதல் நடத்தினார்[3]. அதில் பலர் உயிரிழந்தனர். இதுபோல, திருச்சூர் (கேரளா) பூரம் அல்லது கும்பமேளா உள்ளிட்ட திருவிழாக்களின்போது உங்கள் புத்திசாலிதனத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துங்கள்[4]. முதலில் இந்த விழா நடக்கும் பகுதிகளுக்கு முன்னதாகவே சென்று உணவில் விஷம் வையுங்கள்[5]. அதை அங்கே வருபவர்களுக்கு சாப்பிட கொடுங்கள்[6].

Abdul Rashid Abdulla Isis -terror tape-drive car into mela

ஐசிஸ் தீவிரவாதி தொடர்ந்து சொல்வது:இந்த தாக்குதலில் தன்னந்தனியாக ஈடுபடுங்கள். லாரியை பயன்படுத்துங்கள். அதேபோல் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சரக்கு வாகனங்களை ஓட்டிச் சென்று அவர்கள் மீது ஏற்றி பெரும் எண்ணிக்கையில் கொன்று குவியுங்கள்[7]. இத்தகைய தாக்குதல் முறைகளைத்தான் உலகம் முழுவதும் இன்று நமது தீவிரவாத இயக்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்[8]. அண்மையில் நமது போராளி ஒருவர் இசை நிகழ்ச்சியின்போது இப்படி தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொன்று குவித்தார். உணவில் விஷம் கலந்து விடுங்கள். அல்லது கத்தியைப் பயன்படுத்துங்கள். குறைந்தது ரயிலை தடம்புரளச் செய்யுங்கள். உங்களால் இதெல்லாம் முடியவில்லை என்றால் ரெயில் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடுங்கள். அதுவும் முடியாவிட்டால் கத்தி முனையில் தாக்குதல் நடத்துங்கள். அவர்கள்(ராணுவத்தினர்) நமது கதையை முடிக்க முயன்றாலும் அது நடக்காது. நமக்கு இதில் உயிர் இழப்புகள் ஏற்படலாம். ஆனால் நமது இயக்கம் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டேதான் இருக்கும். உயிர் இருக்கும் வரை நாம் போராடுவோம்,” என அவர் பேசி உள்ளார்[9].

ISIS want to kill Hindus in India-tape-3

கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரசீத் பேசியது: கேரளாவைச் சேர்ந்த 100 பேர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாக கேரள போலீஸார் கூறியிருந்த நிலையில் இந்த ஆடியோவெளியாகி உள்ளது. இந்த கேரள மாநிலம் காசர்கோடு பகுதியிலிருந்து ஆப்கன் சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த ரஷித் அப்துல்லாவின் குரலாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது[10]. திருச்சூர் பூரம், கும்பமேளா விழாக்களின்போது உணவில் விஷம் வைத்து பெரும் அளவில் மக்களை கொன்று குவியுங்கள் என்று ஐ.எஸ். தீவிரவாதி விடுத்த ஆடியோ மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து சிரியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்துள்ளதாக கேரள போலீஸ் கூறுகிறது. இவர்களில் பலர் ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளில் ராணுவத்துக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு மரணத்தையும் தழுவியதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் பல்வேறு வழிகளில் தாக்குதல்களை நடத்தி பெரும் எண்ணிக்கையில் மக்களை கொன்று குவிக்கும்படி ஐ.எஸ். தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக கேரள மாநிலம் காசர்கோடு நகரில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் இணைந்த ஒருவர் 10 நிமிடம் மலையாள மொழியில் பேசும் ஆடியோ உரை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[11]. இதையடுத்து கேரளாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன[12].

ISIS want to kill Hindus in India-tape-1

கேரளாகாரன் என்பதால், கேரளாவில் இக்கட்டான நிலை: இதுகுறித்து கேரள காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் இருந்து குரல் பதிவு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பேசியிருப்பவர், ஐஎஸ் அமைப்பில் அண்மையில் சேர்ந்த கேரளம் மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த ரஷித் அப்துல்லாவாக இருக்கலாம் என்று நம்புகிறோம். ரஷித் அப்துல்லாவுக்கு எதிராக என்ஐஏ அமைப்பும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இன்டர்போல் அமைப்பும் அவருக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் பிரப்பித்துள்ளது’ என்றன. இந்த குரல் பதிவு தொடர்பாக கேரள போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்[13]. இதுதொடர்பாக வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 300 குரல் பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சரவை செயலகத்தின் முன்னாள் இயக்குநர் வி. பாலசந்திரன் கூறும்போது, இது மிகவும் கவலைதரும் விஷயமாகும். அந்த அமைப்பினர் தங்களது சண்டையை ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர நினைக்கின்றனர்’ என்றனர்[14].

© வேதபிரகாஷ்

17-11-2017

Jihadi terror- Asianet- modified- Vedaprakash

[1] he voice in the audio clip, posted on a WhatsApp group called ‘Light of Kerala’, is suspected to be that of Abdul Rashid, an engineering graduate. Abdul Rashid is believed to be the man behind the exodus of 21 Keralites to Afghanistan .This is reportedly the 50th such clip that has emerged on the WhatsApp group ‘Light of Kerala’.

http://www.thenewsminute.com/article/horrifying-audio-clip-kerala-isis-recruiter-urging-war-hindus-democracy-surfaces-71651

[2] In an earlier case investigated by National Investigation Agency, it was revealed that Abdul Rashid created at least two WhatsApp groups, in which he added about 200 people in Kerala, and began transmitting messages, urging them to join the Syria-based terror group.

http://www.deccanchronicle.com/nation/current-affairs/151117/kerala-probe-on-to-trace-islamic-state-audio-clips.html

[3] மாலைமலர், திருச்சூர் பூரம் விழாவில் மக்களுக்கு உணவில் விஷம் வையுங்கள்: .எஸ். பயங்கரவாதியின் மிரட்டல் ஆடியோ, பதிவு: நவம்பர் 16, 2017 07:03

[4] http://www.maalaimalar.com/News/TopNews/2017/11/16070309/1129089/Put-poison-in-the-food-at-the-Thrissur-Pooram-festival.vpf

[5] தினத்தந்தி, திருச்சூர் பூரம் விழாவில் மக்களுக்கு உணவில் விஷம் வையுங்கள் .எஸ். பயங்கரவாதியின் மிரட்டல் ஆடியோ, நவம்பர் 16, 2017, 04:45 AM

[6] http://www.dailythanthi.com/News/TopNews/2017/11/16035820/Thrissur-Pooram-festival-put-poison-in-the-food-of.vpf

[7] பாலிமர்.டிவி, அதிக மக்கள் கூடும் இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும்கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்ற தீவிரவாதி எச்சரிக்கை, 15-நவ்-2017 13:40

[8]https://www.polimernews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/

[9] தி.இந்து, திருச்சூர் பூரம் விழாவில் தாக்குதல் நடத்தப்படும்: ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை, Published :  16 Nov 2017  09:15 IST; Updated :  16 Nov 2017  09:22 IST

[10] http://tamil.thehindu.com/india/article20464351.ece

[11] தமிழ்.ஒன்.இந்தியா, திருச்சூர் பூரம் திருவிழாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் பகீர் சதித் திட்டம்ஷாக் தகவல்கள், Posted By:  Mathi, Published: Wednesday, November 15, 2017, 9:19 [IST]

[12] https://tamil.oneindia.com/news/india/isis-advise-kerala-muslims-poison-food-at-thrissur-pooram-kkumbh-mela-301836.html

[13] தினமணி, கும்ப மேளா, திருச்சூர் பூரம் விழாக்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் மிரட்டல், Published on : 16th November 2017 12:53 AM.

[14]http://www.dinamani.com/india/2017/nov/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF-2808510.html

மறுபடியும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!

செப்ரெம்பர் 23, 2017

மறுபடியும் .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!

ISIS-K kERALA NEXUS- WOMEN TOO

தென்னகத்தில் .எஸ் ஆதரவு அதிகம் ஏன்?: ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் உலகம் முழுவதையும் தனது தீவிரவாதத்தினால் அச்சுறுத்தி வருகிறது[1]. தொடக்கத்தில் ஈராக் மற்றும் சிரியாவில் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, பின் உலகின் பல்வேறு நாடுகளில் ஆட்களை சேர்த்து, படர்ந்து, விடரிந்து தாக்குதல் நடத்தி வருகிறது[2].  ஐ.எஸ் அமைப்புக்கு உலகம் முழுவதும் ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது, அதன்படியே, இந்தியாவிலேயே ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அந்த தீவிரவாதையக்கத்தில் சேர்ந்து, போராடி, இறந்து கொண்டிருக்கும் செய்தியும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவிலும் ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதுவாடிக்கையான விசயம் ஆகிவிட்டது. இதுதொடர்பாக, என்.ஐ.ஏ தானாக விசாரணையில் விவரங்கள் வெளிவந்தன. கேரளா மற்றும் தமிழகத்தில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகப் பலர் கைது செய்யப்பட்டனர். ஆகவே தன்னகத்தில், ஐ.எஸ் ஆதரவு அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

Shahul Hameed, Chennai arrested by NIA -and Khaja Moideen

சாகுல் ஹமீது, ஓட்டேரியில் கைது (18-09-2017): இந்நிலையில், 18-09-2017 அன்று ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக, சென்னை ஓட்டேரிப் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது [Shakul Hameed (A-3), son of Mohammed Zackariya,resident of House No. 59, S. S. Puram, A-Block, 10th Street, Ottery, Chennai- 600 012] என்பவவர் முதல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஹாஜா பக்ருதீனுடன் [Haja Fakkurudeen (A)] தொடர்பு கொண்டவன். சக- குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காஜ மொஹித்தீன் [co-accused Khaja Moideen (A-2)] மற்றும் இவன் ஹாஜா பக்ருதீனுடன் தமிழகம் வந்தபோது, கடலூரில் சந்தித்துள்ளான். பிறகு தமிழக,ம் மற்றும் கந்நாட மாநிலங்களில் பல இடங்களுக்கு சென்று ஐசிஸுக்கு ஆள் சேர்த்திருக்கிறார்கள். சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ் தீவிரவாத இயக்கதுக்கு ஆதரவாக பரப்புரை செய்ததாகவும், அந்த அமைப்புக்கு நிதி திரட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்[3]. அப்போது அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்[4]. பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இந்த வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 15-09-2017 அன்று காஜா மொஹித்தீன் இவ்வழக்கில் ரீமான்டில் வைக்கப்பட்டான். தவிர பல குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டிருக்கிறான்[5].

Swalih was settled in Chennai for some time now with wife and 2-year-old son.

சென்னையில் கடந்த மாதங்களில் கைதானவர்கள்: ஹரூன் ரஷீத் [முகமதி அலி ஜின்னாவின் மகன்] என்பவன் 04-07-2017 அன்று கைது செய்யப்பட்டான். இதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மண்ணடியில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது[6].  18-09-2017 அன்று கைது செய்யப்பட்ட சாகுல் அமீதையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஜா மொய்தீனையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. சார்பில் நாளை பூந்தமல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது[7]. சென்னையில் தொடர்ந்து ஐ.எஸ் விவகாரத்தில் பலர் கைது செய்து பட்டு வருவது, திட்டமிட்டி ஆட்கள் வேலை செய்து வருவது தெரிகிறது. தேவையில்ல்லாத விசயங்களை வைத்துக் கொண்டு, தினமும் அலசும் ஊடகங்கள். இத்தகைய அபாயகரமான விசயத்தைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது” என்றதற்கு மேலாக ஊடகத்தினருக்கு, வேறெந்த விவரமும் கிடைக்காதது போலமூன்ரு-நான்கு வரிகளில் செய்தி வெளியிட்டுள்ளன[8]. என்.ஐ.ஏ. ஊடகத்தினருக்கான அறிக்கை என்பதிலிருந்தே மேலும் விவரங்களை வெளியிடலாம்[9]. ஆனால் அவர்களுக்கு பயமா அல்லது வெளியிடக் கூடாது என்று யாராவது ஆணையிட்டுள்ளார்களா என்று தெரியவில்லை.

Nasser who designed ISIS flag is from Chennai

தினகரன் அளிக்கும் கூடுதல் தகவல்கள்[10]: டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீஸ் தரப்பில் ஆர்.சி. 3/2017 என்ற  வழக்கு எண்ணில் பிரிவுகள் 15, 16, 17, 20, 29 கீழ் சாகுல் ஹமீதை கைது செய்துள்ளனர்.  இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் முதல் குற்றவாளியாக காஜா பஹ்ரூதின் என்பவர் காட்டப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.  மேலும் அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி தனி கிளை சிறையில் உள்ள காஜா மொய்தீன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சாகுல் ஹமீது மற்றும் காஜா மொய்தீன் ஆகிய இருவரையும்  தேசிய புலனாய்வு முகமை போலீசார், கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை 19-09-2017 அன்று வந்தது.

Shahul Hameed, Chennai arrested by NIA -19-09-2017 - Dinakaran-2

அரசு தரப்பு வழக்கறிஞர் கூறிய தகவல்கள்[11]: இந்நிலையில் இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக, நிதி திரட்டியதாக, ஆதரவாக செயல்பட்டதாக சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் இது தொடர்பாக சிரியா நாட்டிற்கு சென்று அங்கு ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் அம்பத்தூர் இந்து முன்னணி  பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில்  காஜா மொய்தீன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதாக அறியப்பட்டுள்ளது. அவர் இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை கொச்சின் தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரிப்பார்கள்சாகுல் ஹமீது மற்றும் காஜா மொய்தீன் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர் தரப்பிலிருந்து கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது. நீதிபதியின் உத்தரவுக்குப்பின் சாகுல் ஹமீது, காஜா மொய்தீன் இருவரையும் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் டெல்லி அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்த உள்ளனர். இவர்களை முழுமையாக விசாரித்த பிறகுதான் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்கள் பதுங்கி இருக்குமிடம்இவர்களது தலைவர் யார்? இவர்களை இயக்குபவர் யார் இவர்களுக்கு நிதி உதவி எப்படி வருகிறது? உள்ளிட்ட  பல்வேறு தகவல்கள் தெரியவரும்’’ என்றார்.

© வேதபிரகாஷ்

23-09-2017

Shahul Hameed, Chennai arrested by NIA -19-09-2017 - Deccan Herald-modified

[1] விகடன், .எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது!, Posted Date : 19:19 (18/09/2017); Last updated : 21:09 (18/09/2017), இரா.குருபிரசாத்.

[2] http://www.vikatan.com/news/tamilnadu/102625-nia-arrested-an-accused-shakul-hameed-from-chennai-in-a-case-related-to-isis.html

[3] தினமணி, சென்னையில் .எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர் கைது!, Published on : 18th September 2017 05:37 PM

[4]http://www.dinamani.com/tamilnadu/2017/sep/18/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2775335.html

[5] On 15th September, 2017, accused Khaja Moideen @ Abdullah Muthalif (A-2), son ofChinna Thambi Ambalam, resident of Salapathputhu Nagar, Kollumedu, Taluk Kattumanarkovil, Cuddalore district, Tamil Nadu who has already been in judicial custody in Crime No. 746/2014 of Ambattur Police Station, Chennai has been remanded in this case by the Hon’ble NIA Special Court (Sessions Court for Bomb Blast cases), Poonamalle, Chennai. The custody of Khaja Moideen @ Abdullah Muthalif (A-2) has been sought by the Chief Investigation Officer in RC-03/2017/NIA/DLI.

 

[6] மாலைமலர், .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியவர் சென்னையில் கைது, பதிவு: செப்டம்பர் 18, 2017 19:10.

[7] http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/18191008/1108657/NIA-arrests-ISIS-supporter-in-Chennai.vpf

[8] தமிழ்.ஒன்.இந்தியா, .எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது. லக்ஷ்மி பிரியா, திங்கர்கிழமை.செப்டம்பர் 18, 2017  16:53 [IST]

[9] https://tamil.oneindia.com/news/tamilnadu/nia-makes-one-arrest-chennai-isis-case-296179.html

[10] தினகரன், சென்னையில் .எஸ். இயக்க ஆதரவாளர் கைது, 2017-09-19@ 00:43:12

[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=336681

ஜூமா மஸ்ஜித் தெரு, “காஸா ரோடு” ஆகியதா, “விஸ்டெம் அகடெமி” தீவிரவாதத்தை போதிக்கிறதா – காசர்கோடில் நடப்பதென்ன? (1)

ஜூன் 25, 2017

ஜூமா மஸ்ஜித் தெரு, “காஸா ரோடுஆகியதா, விஸ்டெம் அகடெமிதீவிரவாதத்தை போதிக்கிறதாகாசர்கோடில் நடப்பதென்ன? (1)

Gaza Road, thuruthi, Kerala - TOI

பாலஸ்தீன பயங்கரவாதம் பின்பற்றப் படுகிறதா?: பாலஸ்தீன நகரின் காஸா / காஜா [Gaza Road] என்ற பெயரை கேரளாவின் காசர்கோடு நகராட்சியில், உள்ள ஒரு தெருவுக்கு காஸா என்று பெயர் வைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. ‘காஸா’ ஊடகங்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் நகரம். இஸ்ரேல் – எகிப்து நாடுகளுக்கு இடையே பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம்தான் காஸா[2]. அங்கு கடைப்பிடிக்கப் படும் தீவிரவாத முறைகள் – பெட்ரோல் குண்டு, தற்கொலை மனித குண்டு, கல்லெறிதல் போன்றவை காஷ்மீரத்தில் பின்பற்றப்படுவதை காணலாம். அதனால், இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே நடக்கும் சண்டைகளின்போது காஸா நகரம் ஊடகங்களில் இடம்பெறுவது வழக்கம்[3]. இந்நிலையில், கேரளா மாநிலத்தின் காசர்கோடு நகராட்சியில் உள்ள துருத்தி வார்டில் உள்ள ஜூமா மஸ்ஜித் தெரு [Thuruthi Jama Masjid] அண்மையில் பெயர் மாற்றப்பட்டு ‘காஸா தெரு’ என்று எழுதப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது[4]. இது கேரளாவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, அதாவது, வேறுவிதமாக, இது பிரச்சினையை ஏற்படுத்துகிறது. பெயர்மாற்றத்தை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. “டைம்ஸ் நௌ” டிவி-தொலைகாட்சியில் தினமும் இதைப் பற்றிய விவாதம் ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கிறது.

Gaza- palestine, woen jihadis

ஜூமா மஸ்ஜித் தெரு பெயர்காஸா ரோடுஎன்று பெயர் மாற்றம்: உள்ளூர் தீவிரவாதம் என்று பேசப்படும் நிலையில், கேரளாவில் தொடர்ந்து இத்தகைய நிகழ்வுகள் அறியப்படுகின்றன[5]. இது தொடர்பாக இந்திய உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு முகமையும் கேரளாவின் காசர்கோடு நகராட்சியின் “ஜூமா மஸ்ஜித் தெரு” பெயர் காஸா என்று பெயர் மாற்றத்தில் ஐ.எஸ். தீவிரவாதப் பின்னணி உள்ளதாக சந்தேகிக்கிறது[6]. இந்த சந்தேகத்துக்கு காரணம் கடந்த 2016ஆம் ஆண்டு கேரளாவின் தற்போதைய காஸா தெரு பகுதியிலிருந்துதான் 21 இளைஞர்கள் காணாமல் போனார்கள்[7]. காணாமல் போன இளைஞர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம் என்று தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம், காசர்கோடு பஞ்சாயத்து தலைவர் ஏ.ஜி.சி.பஷீர் [district panchayat president AGC Basheer] துருத்தி ஜூமா மஸ்ஜித் தெருவை காஸா என்று பெயர் மாற்றி திறந்துவைத்தார் என்று கூறப்படுகிறது[8]. இது குறித்து அவர் ஜூன் 19ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளிடம் கூறுகையில், காசர்கோடு நகராட்சி எல்லையில் வரும் அந்த தெருவை திறந்துவைத்தது நான் இல்லை. ஆனால், நான் அண்மையில்தான் அந்த பகுதிக்கு போயிருந்தேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால், காணாமல் போன இளைஞர்களைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.

ISIS-K kERALA NEXUS- WOMEN TOO

பெயர் மாற்றம் எதைக் குறிக்கிறது?: காஸா என்று பெயர் மாற்றப்பட்ட அந்த தெருவுக்கு நகராட்சி நிதியில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இது போன்ற பெயரில் ஏதேனும் தெரு நகராட்சி எல்லைக்குள் இருந்தால் எங்களின் கவனத்துக்கு வந்திருக்கும் என்று காசர்கோடு நகராட்சி தலைவி பீபாத்திமா இப்ராஹிம் தெரிவித்துள்ளார்[9]. ஆனால், அப்பகுதியில் உள்ள பாஜக தலைவர் ரமேஷ் கூறுகையில், காசர்கோடு நகராட்சி பகுதியிலுள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற தீவிரமான முயற்சி நடக்கிறது. இந்த விஷயம் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த பெயர் மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், இது போன்ற பல பெயர்கள் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்[10]. இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத உளவுத்துறை அதிகாரி கூறுகையில் மத வகுப்பு பிரிவுடைய காசர்கோடு மாவட்டத்தில் ஐ.எஸ். போன்ற அமைப்பினர் ஊடுருவியிருக்கின்றனர்[11]. இருப்பினும், மத்திய உளவுத்துறையின் பார்வையில் நீங்கள் குறிப்பிடுகிற காஸா தெரு பெயர் மாற்றம் சம்பவம் எங்களின் கவனத்துக்கு வரவில்லை. என்று தெரிவித்துள்ளார்[12].

Kerala Isis nexus

காஸா ரோடில் இருக்கும் விஸ்டம் அகடமி மதம் மாற்றத்தில் ஈடுபட்டுள்ளதா?: கேரள மாநிலம் காசர்கோடில் இயங்கும் ‘விஸ்டம் அகாடமி’ எனும் டுடோரியல் கோச்சிங் மையத்தில் படிப்பதற்காக சேரும் இந்து இளம்பெண்களை அங்கிருக்கும் சில ஏஜண்டுகள் கலிபாக்கள் எனும் இஸ்லாம் மதகுருக்கள் மூலமாக இஸ்லாம் மதத்துக்கு மாறிவிடும் அளவுக்கு மூளைச் சலவைச் செய்து வருகிறார்கள்[13]. இந்தியாவைச் சேர்ந்த இந்துப் பெண்களை முஸ்லிம்களாக மாற்றி அவர்களை சிரியாவுக்கு அழைத்துச் செல்லவும், சிரியன் மொழியைக் கற்றுக் கொள்ள வைக்கவும் இங்கேயே ஏஜண்டுகள் வாயிலாக ரகசியமாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. காஸா எனப்படும் காசர்கோடு டுடோரியல் பள்ளியில் பயிலும் போது இப்படி மூளைச் சலவை செய்து மனம் மாற்றம் செய்யப் பட்ட, பாதிக்கப் பட்ட இளம்பெண் ஒருவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் மாலை ‘Times now’ ல் பிரேக்கிங் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது.

ISIS-K kERALA NEXUS

தமிழ் ஊடகங்கள் அமைதியாக இருப்பது: “பி.டி.ஐ” செய்தி என்பதால், ஆங்கில ஊடகங்கள், செய்திதாள்கள் அனைத்திலும், இச்செய்தி வெளி வந்துள்ளது. ஆனால், தமிழில் வரவில்லை. தமிழ் சேனல்களில் இது தொடர்பான செய்திகள் எதுவும் உண்டா? என்று தேடியதில் பாக்கியின்றி எல்லாவற்றிலும் நமது அரசியல் அண்ணாத்தைகளும், விமர்சகப் புலிகளும் இணைந்து ஆழ்ந்த விவாத நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஒரு நிமிடம் யாருமே ‘Times Now’ பார்த்திருக்கவில்லையா? அல்லது இது ஃபேக் நியூஸா? என்று சந்தேகமாகி விட்டது. இன்று இந்நேரத்தில் இணையத்தில் தேடுகிறேன். அப்போதும் Times Now ல் மட்டுமே அந்தச் செய்தி காணக் கிடைக்கிறது. என்ன தான் நடக்கிறது எனத் தெரியவில்லை. இதோ கூப்பிடு தூரத்தில் இருக்கும் கேரளாவின் காஸர் கோடில் தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் விளைவிக்கும் வண்ணம் ஒரு விசயம் நடந்திருக்கிறது என்றால் நமது ஊடகங்களில் ஏன் அதைப் பற்றிய செய்திகள் இல்லை?  “வாட்ஸ்-அப்” விவகாரத்தை செய்தியாக்கி விட்ட்து என்று “டைம்ஸ்-நௌ” செனலை விமர்சனம் செய்யப்படும் போக்கும் காணப்படுகிறது[14].

Uzma Ahmed - retuned to India

உஸ்மா அகமதுவின் கதை: கடந்த மாதத்தில் இந்தியாவைப் பரபரப்புக்குள்ளாக்கிய செய்திகளில் ஒன்றை இப்போது குறிப்பிட்டாக வேண்டும்; டெல்லியைச் சேர்ந்த 22 வயதுப் பெண்ணான உஸ்மா அஹமது, மலேசியாவில் பணிபுரியும் போது தனது நண்பரான தாஹிர் அலி எனும் இஸ்லாமியருடன் இணைந்து பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலாவுக்கென அழைத்துச் சென்ற தாஹிர் அங்கே துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டு அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்தான். “பாகிஸ்தானில் நான் இருந்த பகுதியில் என்னைப் போலவே மலேசியாவைச் சேர்ந்த இளம்பெண்கள் பலர் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அதிருஷ்டவசமாக நான் அங்கிருந்து தப்பி இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரகத்துக்கு வந்து சேர்ந்து அங்கேயே 20 நாட்கள் தங்கியிருந்து இந்திய வெளியுறவுத் துறையின் உதவி மூலமாக மறுபிறவி எடுத்ததைப் போல இந்தியா வந்து சேர்ந்தேன். பாகிஸ்தான் ஒரு மரணக் கிணறு அங்கே என்னைப் போல சென்று மாட்டிக் கொண்டு பெண்கள் மீள்வது நினைத்துப் பார்க்க முடியாத விசயம். அங்கே ஒவ்வொரு வீட்டிலும் 2 அல்லது 3 மனைவிகள் இருக்கிறார்கள். என்னால் தப்ப முடிந்திரா விட்டால் இப்போது என்னை யாருக்காவது விற்றிருப்பார்கள் அல்லது வேறு ஏதாவது தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தி இருப்பார்கள்”, எனக் கண்ணீருடன் பேட்டியளித்த உஸ்மாவை நாம் அதற்குள் மறந்து விடக் கூடாது. உஸ்மா ஏன் பாக்கில் அடைத்து வைக்கப் பட்டார் என்ற விசயத்தை ஆராய்ந்தால் “பிரேக்கிங் நியூஸ்” விவகாரத்தையும் நம்மால் புரிந்து கொள்ள இயலும்.

© வேதபிரகாஷ்

25-06-2017


Kerala youth - women too

[1] Deccan Herald, Road in Kerala renamed after Gaza Strip, PTI, Published Jun 19, 2017, 7:49 pm IST, Updated Jun 19, 2017, 7:49 pm IS.

[2] http://www.deccanchronicle.com/nation/current-affairs/190617/road-in-kerala-renamed-after-gaza-strip.html

[3] மின்னம்பலம், கேரளாவின்காஸாதெருவை கண்காணிக்கும் உளவுத்துறை!, திங்கள், ஜூன்.19 2017.

[4] https://minnambalam.com/k/2017/06/19/1497877556

[5] Indian Express, A Kerala road ‘renamed’ Gaza Street: Report,, By: Express Web Desk | New Delhi | Published:June 19, 2017 3:49 pm

[6] http://indianexpress.com/article/india/kerala-road-renamed-gaza-street-4711571/

[7] India Today, Gaza street in Kerala’s Kasargod district throws intelligence agencies into tizzy, Rohini Swamy, Edited by Dev Goswami, Kasargod, June 19, 2017,  UPDATED 13:51 IST

[8] http://indiatoday.intoday.in/story/kerala-street-renamed-to-gaza/1/982100.html

[9] Times of India, Kerala’s ‘Gaza Street’ on the radar of IB, NIA, K P Sai Kiran| TNN | Updated: Jun 19, 2017, 12.28 PM IST

[10] http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/keralas-gaza-street-on-the-radar-of-ib-nia/articleshow/59210094.cms

[11] Hindustan Times, Kerala road ‘renamed’ Gaza Street, intelligence agencies not amused, Thiruvananthapuram, HT Correspondent, Updated: Jun 19, 2017 22:43 IST

[12] http://www.hindustantimes.com/india-news/kerala-road-renamed-gaza-street-intelligence-agencies-not-amused/story-N6DKwBjANNMqI70JOqEUKI.html

[13] கார்த்திகா வாசுதேவன், இந்தியப் பெண்களை மத மாற்றம் செய்து நாடு கடத்த ISIS  நிர்ணயித்திருக்கும் அதிர்ச்சி தரும் ரேட் கார்டு விவகாரம்!, By தினமணி, Published on : 24th June 2017 05:56 PM.

[14] https://www.newslaundry.com/2017/06/24/times-now-kerala-isis-whatsapp-report

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது – இங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்! (3)

ஏப்ரல் 15, 2017

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியதுஇங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்! (3)

CRPF jawan insulted

காஷ்மீர் கல்லடிகலாட்டா பொறுக்கிகள் ராணுவத்தினரை அவமதித்தது: காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரை, துணை ராணுவத்தினரை அங்குள்ள இளைஞர்கள் கல்வீசி தாக்குவது தொடர் கதை ஆகி வருகிறது. அக்கலவரக்காரர்களை அடக்க முன்னர் “பெட்டட்” துப்பாக்கிகளை உபயோகித்து வந்தனர். ஆனால், இப்ப்பொழுது, உபயோகிப்பதில்லை. தேசதுரோகத்தை வளர்த்து வருவதால், அவர்கள் அத்தகைய நச்சிலேயே ஊறி வளர்ந்துள்ளனர். சமீபத்தில் அங்கு இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீநகரில் கரல்போரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினரை அவர்கள் ஓட, ஓட விரட்டி கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. அதுமட்டுமல்லாது, அவர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சூழ்ந்து கொண்டு அவர்களை அவமதித்தும், திட்டியும், காலால் கூட உதைத்தனர். ஆனால், கைகளில் ஆயுதம் ஏந்திய அவர்கள் நடந்து சென்றனர். அந்த அளவுக்கும் அவர்கள் பொறுத்துப் போகிறார்கள். இதைப்பற்றி மனித உரிமை போராளிகள் யாரும் பொங்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு தீவிரவாதிகள், ஜிஹாதிகள், மனிதவெடிகுண்டுகள் – இவர்களின் உரிமைகள் தான் தெரியும் போல! அருந்ததி ராய் போன்றோர் சூடு-சொரணை-வெட்கம்-மானம் இல்லாமல் காணாமல் போய் விட்டனர்!

Stone pelting Jihad - Gautam Ganbhir

கிரிக்கெட் வீரர்கள் பொங்கியது[1]: இந்த வீடியோவைப் பார்த்த பலர் கொதித்து போயினர். கிரிக்கெட்டை பாகிஸ்தான் மற்றும் அதன் பிராக்ஸிகளான இவர்கள் ஒரு போராக கருதுவதால், இது தொடர்பாக, சாதனை படைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் டுவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார் போலும். அதில் அவர், “இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நமது துணை ராணுவத்தினரை இப்படி செய்யக்கூடாது. இத்தகைய கெட்ட செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர் டுவிட்டரில் ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர், “நமது ராணுவ வீரர்கள் மீது விழுகிற ஒவ்வொரு அடிக்கும், 100 பேரின் உயிரை வீழ்த்த வேண்டும். யாருக்கெல்லாம் இங்கே இருக்க இஷ்டம் இல்லையோ அவர்கள் எல்லாரும் நாட்டை விட்டு வெளியேறட்டும். காஷ்மீர் எங்களுக்கே உரித்தானது,” என கூறி உள்ளார்[2]. மேலும், “இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிற இவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். நமது தேசியக்கொடியில் உள்ள காவி நிறம் நமது கோபத்தீயின் அடையாளம். வெள்ளை என்பது போராளிகளுக்கான சவச்சீலை, பச்சை என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான வெறுப்புணர்வு” எனவும் கூறி உள்ளார். தாக்குதலுக்கு உள்ளான துணை ராணுவத்தின் (மத்திய ஆயுதப்படை) ஐ.ஜி.ரவிதீப் சிங் சஹி செய்தி நிறுவனம் ஒன்றிடம் நேற்று பேசுகையில், “வீடியோ காட்சி உண்மையானதுதான். சம்பவம் எங்கு நடைபெற்றது, பாதிப்புக்குள்ளான படைப்பிரிவு எது என்பதை கண்டறிந்துள்ளோம். இதுதொடர்பாக தகவல்களை சேகரித்து சதூரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். வழக்கு பதிந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார். இதைப்பற்றியும் பரூக் அப்துல்லா பொறுப்பற்ற முறையில் கமென்ட் அடித்துள்ளார்.

Stone pelting Jihad - Sehwag -unacceptable
ரத்தவெள்ளம் ஏற்படுவதை சமயோஜிதமாக தடுத்ததை விஷமத்தனமாகத் திரித்துக் கூறுவது: மேலே குறிப்பிட்ட விடீயோ பற்றி விவாதம் நடக்கும் வேளையில், இன்னொரு வீடியோ சுற்றில் விடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை [07-04-2017] இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பத்காம் மாவட்டத்தின் பீர்வான் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த படை வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பிடித்ததாகவும், தங்கள் மீது கற்களை வீசித் தாக்காமல் தற்காத்துக் கொள்ள அந்த இளைஞரை ஜீப்பின் முன்பகுதியில் கயிற்றால் கட்டி மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது, என்று தினத்தந்தி விவரிக்கிறது. அப்போது, கல்வீச்சில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கதிதான் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. உண்மையில் தேர்தலின் போது ஓட்டுப்பதிவு நடக்கும் போது, யாரும் அருகில் இத்தகைய வன்முறை முதலிய கலாட்டாக்கள் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால், வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த வீடியோ காட்சி 14-04-2017 அன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. ஆனால், ராணுவத்தினர் சொன்னதை வெளியிடவில்லை.

Omar Abdulla against CRPF

உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்தது: தேர்தலின் போது, வன்முறையில் ஈடுபட்டு, கலவரத்தில் ஈடுபாட்டு ஓட்டு போட வருபவர்களை அச்சுருத்தும் வகையில் செயல் படுபவர் மீது சுடவும் செய்யலாம். ஆனால், அவ்வாறு செய்தால், இருக்கின்ற நிலையில், நிலைமை இன்னும் சீர்கேடாகும். ரத்தக்களறியே ஏற்பட்டிருக்கும். ஆகவே அதைத் தடுக்கவே, ராணுவத்தினர், பாடம் கற்பிக்க அவ்வாறு செய்தனர். இதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘தங்கள் மீது கற்கள் படக்கூடாது என்பதற்காகத்தான் அந்த இளைஞர் ஜீப்பின் முன்பக்கமாக கயிற்றில் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டாரா?. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. படையினரின் இந்த செயல் மூர்க்கத்தனமானது. இது எதிர் விளைவை ஏற்படுத்தாது என்பது என்ன நிச்சயம்? கல்வீச்சில் ஈடுபடுபவர்களின் கதி இதுதான் என்பதை வெளிப்படையாக கூறும் இந்த சம்பவம் பற்றி உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும்,’’ என்று கூறியுள்ளார்[3]. இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘இந்த வீடியோ காட்சியின் உண்மை தன்மை பற்றி சரிபார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராணுவம் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது’’ என்றார்[4]. ஆக, அப்பனும், பிள்ளையும் இவ்வாறாக அரசியல் நடத்துகின்றனர்.

Omar Abdulla against CRPF-not worried about stonepelting

தாத்தா, மகன், பேரன் – தேசநலனுக்காக எதிராக செயல்பட்டு வரும் குடும்பம்: ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா என்று மூன்று பரம்பரையாக, காஷ்மீரத்தை ஆண்டு வந்துள்ளனர் இவர்கள். பரூக் அப்துல்லா மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஷேக் அப்துல்லா தனது காலத்தில் தேசத்துரோகியாக செயல்பட்டு வந்ததும், பரூக் அப்துல்லா நன்றாக அனுபவித்துக் கொண்டு, இங்கிலாந்து பங்களாவில் சொகுசாக வாழ்ந்து கொண்டு, அவ்வப்போது, இந்தியாவுக்கு வந்து செல்வதும், உமர் அப்துல்லா மோடிக்கு எதிராக செயல்பட்டதால், பதவி இழந்ததும் எல்லோருக்கும் தெரிந்த கதை எனலாம். மற்ற இப்பொழுதுள்ள பிரிவினைவாதிகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவின் வசதிகளை அனுபவித்துக் கொண்டே, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர், ஆனால், மத்த்ய அரசு அவர்களை உல்லாசமாக வைத்திருக்கிறது.

US official report of bombing Afganistan on 13-04-2017

இந்தியா காஷ்மீர் மாநிலத்திற்கு கோடிக்கணக்கில் செலவழிப்பது: காஷ்மீருக்காக, கோடிகளை அள்ளிக் கொட்டுகிறது மத்திய அரசு, ஆனால், பதிலுக்கு அங்கிருந்து வரும் வருவாய் மிகக்குறைவே ஆகும். அதாவது, மற்ற மாநிலங்களின் வரிப்பணம் அங்கு செலவாகிறது, விரயமாகிறது. தீவிரவாதத்தால், அங்கிருக்கும் மக்கள் இருக்கும் சுற்றுலா தொழிலையும் கெடுத்துக் கொண்டனர். சூட்டிங்களும் நிறுத்தப்பட்டன. அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் அங்கு செல்ல வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளது. ஆகவே, தீவிரவாதத்தால், அவர்களுக்கு தீமை தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜனநாய முறைகளை மறுத்து, தீவிரவாதத்தை வளர்க்கும், அவர்களை ஆதரிக்குமரீவர்கள் மீது, நிச்சயமாக தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். ஆப்கானிஸ்தான் அளவுக்கு வளர்த்து குண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. இப்பொழுது தான், சுரங்கப்பாதை திறந்து வைக்கும் போது, தீவிரவாதமா அல்லது சுற்றுலாவா, இரண்டில் ஒன்றை தேர்ந்தெட்த்துக் கொள்ளுங்கள் என்று மோடி கூறியிருப்பதால், நல்லதை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு நல்லதாகும் எனலாம்.

© வேதபிரகாஷ்

15-04-2017

CRPF-attacked -stonepelting- budgam

[1] மாலைமலர், காஷ்மீரில் துணை ராணுவத்தினரை இளைஞர்கள் விரட்டி தாக்குவதா?: ஷேவாக், காம்பீர் வேதனை, பதிவு: ஏப்ரல் 14, 2017 09:21.

[2] http://www.maalaimalar.com/News/Sports/2017/04/14092128/1079897/Gambhir-Sehwag-tweet-in-support-of-attacked-CRPF-Jawans.vpf

[3] தினதத்தந்தி, காஷ்மீரில், ராணுவ ஜீப்பில் இளைஞர், மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டாரா? ஏப்ரல் 15, 05:00 AM

[4] http://www.dailythanthi.com/News/India/2017/04/15025043/In-Kashmir-the-military-jeep-YouthHuman-shield-use.vpf

 

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது ஆப்கானிஸ்தானில் “வெடிகுண்டுகளுக்கெல்லாம் தாயிடம்” செத்தது! (2)

ஏப்ரல் 15, 2017

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது ஆப்கானிஸ்தானில்வெடிகுண்டுகளுக்கெல்லாம் தாயிடம்செத்தது! (2)

ISIS-K suffered huge loss

வெடிகுண்டுகளுக்கெல்லாம் தாய்என்ற குண்டை அமெரிக்கா ஐசிஸ் தீவிரவாத்களின் மீது போட்டது (13-04-2017): ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக அமெரிக்க படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன[1].  இந்நிலையில் அமெரிக்காவின் அணு ஆயுதம் அல்லாத மிகப்பெரிய குண்டாக கருதப்படும் MOAB [Mother of all bombs] GBU-43 என்ற குண்டை, 13-04-2017 அன்று இரவு 7 மணிக்கு ஐ.எஸ் அமைப்பினரின் இருப்பிடத்தில் அமெரிக்கப் படைகள் வீசின. அணுகுண்டுகள் இல்லாத ரகத்தில் இதுதான் மிகப் பெரிய வெடிகுண்டு. சுமார் 9,797 கிலோ எடை கொண்ட இந்த பிரமாண்ட வெடிகுண்டில், 9 ஆயிரம் டன் வெடிபொருள்கள் அடங்கியிருக்கும்[2]. இத்தாக்குதலில் குறைந்தபட்சம் 36 தீவிரவாதிகள் உயிரிழந்திருக்கக்கூடும் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது[3]. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் கேரளாவில் இருந்து சென்று ஐ.எஸ் அமைப்பினருடன் இணைந்து செயல்பட்ட 21 பேரில்,  2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது[4]. இருப்பினும், உள்ளூர் ஊடகங்கள், இப்படியெல்லாம் விளக்கி விட்டு, ஒரு / இருவர் சாவு? என்று கேள்விக்குறியைத்தான் போட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன[5]. இந்தியர்கள், கேரளாகாரர்கள், மலையாளிகள், ஜிஹாதிகள் என்றெல்லாம் சொன்னாலும், அவர்கள் உருவானதை விளக்க வேண்டும்.

ISIS-K kERALA NEXUS- WOMEN TOO

ஐசிஸுக்கு கேரள ஜிஹாதிகள் சென்றது எப்படி?: சரி, குடும்பத்தோடு, இந்த ஜிஹாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு எப்படி சென்றனர்? இந்த நபர்கள் அனைவருமே ஒரு இடைத் தரகர் மூலம் ஆப்கனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆப்கனில் தீவிரவாத செயல்களில் ஈடுபட இந்தியாவிலிருந்தே அதிகம் பேரை ஈர்க்க ஐஸ்ஐஎஸ் திட்டமிட்டிருந்தது. 13-04-2017 அன்று இரவு அமெரிக்கா நடத்திய மிகப்பெரிய குண்டு வீச்சு தாக்குதலில் கேரளாவிலிருந்து சென்று ஆப்கனில் தங்கியிருந்த 21 பேரும் கொல்லப்பட்டுவிட்டதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ‘ஒன்இந்தியாவிடம்’ பேசிய உளவுத்துறை அதிகாரி ஒருவர்[6], “இந்த தாக்குதல் இப்போது நடைபெறும் என்று முன்கூட்டியே நாங்கள் கணிக்கவில்லை. ஆனால் ட்ரம்ப் இப்படி செய்வார் என எதிர்பார்த்ததுதான். அமெரிக்காவின் இந்த தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து நாச வேலை செய்ய நினைப்போரின் சிந்தனையை மாற்றக் கூடியது. ட்ரம்ப் ஏற்கனவே தனது பிரசாரத்தின்போது கூறியதை இப்போது செயல்படுத்த ஆரம்பித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை முழுமையாக அழிகக அவர் எந்த எல்லைக்கும் செல்வார்,” என்றார்.  ஆனால், அசாசுதீன் ஒவைசி மற்றும் தமிழக-கேரள முஸ்லிம் தலைவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். என்னடா, இந்திய முஸ்லிம்கள் ஜிஹாதிகளாக மாறி கொல்லப்பட்டனரே என்று சதோசப்படுவதா அல்லது வருத்தப்படுவதா என்று தெரியவில்லை போலும்!

ISIS-K kERALA NEXUS

கேரளா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செல்ல மாநிலமாக மாறிவருவது எப்படி?:. கேரளா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செல்ல மாநிலமாக மாறிவருகிறது என்கிறது “ஒன்.இந்தியா” வளைதளம். அங்குள்ள பல முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தால் வலை வீசப்படுகிறார்கள் என்றும் சேர்த்து சொல்கிறது. இந்த ஆபத்தை உணர்ந்த கேரள முஸ்லிம் அமைப்புகள் பலவும் தங்கள் இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி அவர்களை நன் மார்க்கத்தில் திருப்ப முயன்று வருகின்றன, என்று “இன்.இந்தியா” கூறியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. மலப்புரம் என்ற தனி மாவட்டம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து ஆரம்பத்திலுருந்து வளர்த்த இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதம் ஆகி, தீவிரவாதம் ஆகி, இப்பொழுது, வெளிப்ப்டையான ஜிஹாத் ஆகியுள்ளது. ஆப்கனில் 13-04-2017 அன்று நடந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த அறிவிப்பை வெள்ளைமாளிகை வெளியிடவில்லை. அதுகுறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் இந்திய உளவுத்துறை ஈடுபட்டு வருகிறது. கேரளாவை சேர்ந்த 21 பேர் இறந்திருக்க கூடும் என்றபோதிலும், இதை “மினி கேரளா” என்ற கோட்வேர்ட் வைத்தே அழைக்கிறது இந்திய உளவுத்துறை[7].

kerala-isis-nexus-confirmed-youth-after-conversion-Afgan

ஊடகங்கள் உண்மைகளை மறைக்கும் விதம்: கடந்த அக்டோபர் [2016] மாதத்திலேயே, படித்த முஸ்லிம் இளைஞர்கள் அங்கு செல்வது ஊடகங்கள் எடுத்துக் காட்டின. ஆனால், ஒரு நிலையில், அதனை “கிருத்துவ-இஸ்லாமிய லவ்-ஜிஜாத்” போல கேரள ஊடகங்கள் சித்தரித்தன. எப்படியிருந்தாலும் ஐசிஸ்.ஸில் சேருவது ஏன் என்று விவாதிக்கப்படவில்லை. அதிலும் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று பயிற்சி பெறுகின்றனர் என்று செய்திகள் வந்தபோதிலும் அமைதியாக இருந்தனர்[8]. தங்களது மகன் / மகள் திரும்ப வரவேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை. ஏஜென்டுகளோ ஆட்களை அனுப்பிக் கொண்டே இருந்தனர்[9]. அதாவது ஏஜென்டுகளும் முஸ்லிம்கள் என்பதால், குடும்பத்திற்கு பணம் கிடைக்கிறது என்று அமைதியாக இருந்து விட்டனர் போலும். வேலைக்கு ஆட்களை அனுப்பி வைத்த கேரளா, இப்பொழுதும் ஆட்களை அனுப்பி வைக்கிறது, செய்யும் வேலை என்ன என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. கக்கூஸ் கழுவினாலும் சரி, இந்திய துரோகிகளாக இருந்தாலும் சரி, பணம் வருகிறது. குழந்தை வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரு கிருத்துவப் பாதிரியை பிடித்து வைத்தார்கள் எனும்போது, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, பணம் கொடுத்து விடிவிக்க செய்தனர். ஆக, இதன் பின்னணி என்ன என்பதும் மர்மமாக இருக்கிறது.

kerala-isis-nexus-confirmed-youth-after-conversion

ராணுவத்தில் சேர்ந்தால் மகிழும் தாயும், ஜிஹாதில் சேர்ந்தால் மகிழும் தாயும்: தன் மகன் ராணுவத்தில் சேர்ந்து இந்திய நாட்டிற்கு சேவைசெய்ய வேண்டும் என்று எத்தையோ தாய்மார்கள், பெற்றோர்கள் இருக்கும் நம் நாட்டில், இவ்வாறு தமது மகன் / மகள் ஹிஹாதியாகவேண்டும், தீவிரவாதியாக வேண்டும், மனித வெடிகுண்டாக வேண்டும் என்று ஆசைப்படும் தாய்மார்கள், பெற்றோர்கள் கண்டு திடுக்கிடுவதாக இருக்கிறது. அதாவது அவர்களது மனங்களே, தீவிரவாதத்தால் ஊறிப்போனதால், ஜிஹாதித்துவம் அவர்களுக்கு உற்சாகமாக இருக்கிறது, குண்டுவெடித்து மக்களைக் கொன்றால், ஆனந்தமாக இருக்கிறது, மனிதவெடிகுண்டாக வெடித்து மற்றவர்களைக் கொன்றால், அம்மகிழ்ச்சி இன்னும் பெரும்மடங்காகிறது போலும். இல்லையென்றால், பெற்ற தாய் எவளும் அதற்கு உடன்பட மாட்டாள். இருப்பினும், இவையெல்லாம் நிதர்சனமாக இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் தான், தங்களைக் காக்கும் ராணுவவீரர்களையே அவமதிக்கிறார்கள் கேடுகெட்ட காஷ்மீர் முகமதிய இளைஞர்கள். அவர்கள் பெற்றோர் அவர்களை அவ்விதமாக வளர்த்துள்ளனர் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

15-04-2017

six-arrested-02-10-2016 - KeralA NEXUS

[1] http://www.dailythanthi.com/News/World/2017/04/14121527/Missing-Kerala-youth-who-joined-IS-killed-in-Afghanistan.vpf

[2] விகடன், ஆப்கன் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் பலி?!,  Posted Date : 02:27 (15/04/2017); Last updated : 02:43 (15/04/2017)

[3] http://www.vikatan.com/news/world/86485-isis-kerala-recruits-feared-dead-in-afghanistan-attack.html

[4] நியூஸ்7.செனல், அமெரிக்கா வீசிய வெடிகுண்டில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு!, April 15, 2017.

[5] http://ns7.tv/ta/tamil-news/india-world/15/4/2017/least-2-20-isis-kerala-recruits-feared-dead-afghanistan-moab

[6] தமிழ்.ஒன்.இந்தியா, அமெரிக்க குண்டு வீச்சில் சிக்கி ஆப்கனில் ஒரு மினி கேரளாவே காலி!, ByVeera Kumar, Published: Friday, April 14, 2017, 10:06 [IST]

[7] http://tamil.oneindia.com/news/international/a-mini-kerala-is-recruits-was-wiped-in-trump-s-big-afghan-bombing/slider-pf232606-279763.html

[8] dailymail.co.uk, Deep links between young Keralans and ISIS as probe reveals THIRTY youths attended training camps in Afghanistan before returning to start sleeper cells, By INDIA TODAY; PUBLISHED: 23:28 BST, 25 October 2016 | UPDATED: 12:47 BST, 27 October 2016

The arrest of 31-year-old Subahani, who is a native of Thodupuzha in Idukki district, was a major breakthrough as he had identified key persons in the network…….NIA identified Sajeer Abdulla Mangalaseri as the chief of the IS network in Kerala. 35-year-old Sajeer, a Civil Engineer from National Institute of Technology, Kozhikode and a Salafist who hails from Moozhikal in Kozhikode has been recruiting people from Kerala in IS fold.

[9] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3872224/Deep-links-young-Keralans-ISIS-probe-reveals-THIRTY-youths-attended-training-camps-Afghanistan-returning-start-sleeper-cells.html