Posted tagged ‘ஐ.எஸ்’

ஐசிஸ் தொடர்பு – அன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது என்று சுருக்கி விடமுடியுமா?

பிப்ரவரி 16, 2018

ஐசிஸ் தொடர்புஅன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது என்று சுருக்கி விடமுடியுமா?

பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்- போட்டோ

அன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது: கன்னியாகுமரியை சேர்ந்த அன்சார் மீரான் என்பவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, என சில ஊடகங்களும். ஐ.எஸ்.ஐ.எஸ்.- அமைப்புக்கு ஆதரவான கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தியதாக, என்று மற்ற சில ஊடகங்களும், தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரால் சென்னையில் 12-08-2018 திங்கட்கிழமை அன்று கைது செய்யப்பட்டான்[1], என்று செய்திகள் வெளியிட்டன. 13-02-2018 அன்று கைது செய்யப்பட்ட அன்சார் மீரான், முறைப்படி, தேசிய புலனாய்வு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்[2]. இதையடுத்து அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்[3]. இந்நிலையில் அவனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு போலீசார் மனு தாக்கல் செய்தனர்[4]. மனு தாக்கல் செய்தனர் என்ற செய்தியையே, ஏதோ, பெரிய விசயமாக வெளியிட்டுள்ளன[5]. என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள விசயங்களைக் கூட வெளியிடவில்லை. மேலும், “கைது செய்யப்பட்டார்,” என்று மரியாதையோடு குறிப்பிட்டன[6]. மனுவை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டியன், மனுவின் மீதான உத்தரவை 14—02-2018 புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்[7]. இதையே எல்லா நாளிதழ்களும் / ஊடகங்களும் வெளியிட்டுள்ளன[8]. சென்னையில் நடக்கும் விசயங்களே இவர்களுக்கு தெரியாதா என்ன?

Indian Muslim youth become ISIS supporters, warriors

14-02-2018 அன்று நீதிமன்றம் மூன்று நாள் விசாரணைக்கு அனுமதி[9]: தேசியப் புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மூன்று நாள்கள் அனுமதி அளித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின்போது புழல் சிறையில் இருந்த அன்சார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக, என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் அன்சாரிடம் உடனடியாக விசாரணையை ரகசியமாக தொடங்கினர். இவ்வளவு வெளிப்படையான விசாரணை, முதலியவை இருந்தும், தமிழகத்தில் ஏன் தீவிரவாதத்தை வளர்க்கின்றனர் என்பது பற்றி யோசிப்பதில் தயக்கம், மறைத்தல் மற்றும் பயமும் இருக்கிறது போலும். தவிர குற்றவாளிகள் மற்றும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு ஆதரவாக பெற்றோர், உற்றோர், மற்றோர் பேசுவது, செயல்படுவது முதலியனவும், தீவிரவாதத்திற்கு உடன் போவதை காட்டுகிறது.

Isis, Tamilnadu links, arrests 2017-18

தினமலர் கூடுதலாக கொடுக்கும் விசயம்: – அரசு வழக்கறிஞர், பிள்ளை கூறியதாவது[10]: “.எஸ்..எஸ்., அமைப்புடன் தொடர்புடைய அன்சார் மீரானை, தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், கைது செய்து உள்ளனர். இந்த வழக்கில், ஒன்பது பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர். அன்சார் மீரானுடன், இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முதல் குற்றவாளியாக கருதப்படும், ஹாஜா பக்ருதீன், சிரியாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது..எஸ்..எஸ்., அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆட்களை சேர்ப்பது போன்ற சதி வேலைகளில், அன்சார் மீரான் ஈடுபட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. மனு மீது, இன்று உத்தரவு வரும்”, இவ்வாறு அவர் கூறினார்[11]. ஓரளவிற்கு, அதிலும், அரசு வழக்கறிஞர், பிள்ளை கூறினார் என்று இவ்வாறு வெளியிட்டுள்ளது. இதெல்லாம் மற்ற ஊடகத்தினருக்கு தெரியாதா என்ன?

shahul-hameed-chennai-arrested-by-nia-and-khaja-moideen

முழு விவரங்களைக் கொடுக்கும் தினத்தந்தி[12]: தினத்தந்தி கூறுவதாவது, “.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் ஆட்களை திரட்டுவதில் கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையைச் சேர்ந்த காஜா பக்ருதீன் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. இவர் சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. சிங்கப்பூர் குடியுரிமை பெற்று இருந்த இவரை தேசிய புலனாய்வு பிரிவினர் கண்காணித்தப்படி இருந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் டெல்லி வந்தபோது தேசிய புலனாய்வு பிரிவினரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது தமிழ்நாட்டில் .எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக தனியாக ஒரு தீவிரவாத குழு உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 இளைஞர்கள் முக்கிய அங்கம் வகிப்பதும் தெரிய வந்தது. அந்த 9 இளைஞர்கள் மீதும் 9 பிரிவுகளில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களை போலீசார் தேடி வந்தனர். அதன் பயனாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அப்துல்லா முத்தலீப் பிடிபட்டார். அவரை தொடர்ந்து 18-ந்தேதி சாகுல் அமீது என்பவர் சென்னை ஓட்டேரியில் கைது செய்யப்பட்டார். இவர்கள் 3 பேரிடமும் தேசிய புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அந்த 6 பேரும் தலை மறைவாக இருந்தபடி .எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டி வருவது தெரியவந்தது[13].

nasser-who-designed-isis-flag-is-from-chennai

.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அவர்கள் நாசவேலை செய்து கை வரிசை காட்டக்கூடும்[14]: தினத்தந்தி தொடர்கிறது, “.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அவர்கள் நாசவேலை செய்து கை வரிசை காட்டக்கூடும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த .எஸ். தீவிரவாதிகளை கூண்டோடு பிடிக்க வேண்டும் என்பதில் தேசிய புலனாய்வு பிரிவு தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் தமிழ் நாட்டில் .எஸ். தீவிரவாதிகளில் 4-வது இடத்தில் இருப்பதாக கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கேடு உத்தமன் பகுதியைச் சேர்ந்த அன்சார் மீரான் சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அவனை கைது செய்ய டெல்லியில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவின் சிறப்பு படை சென்னை வந்தது. சென்னையில் நேற்று அவனை தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். அன்சார் மீரான் சென்னையில் ரகசியமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதில் இருந்தபடியே .எஸ். தீவிரவாத  அமைப்புக்கு நிதி  திரட்டி கொடுத்துள்ளான்மேலும் .எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக சிரியா செல்பவர்களுக்கு விமான டிக்கெட்டும் எடுத்து கொடுத்துள்ளான். குறிப்பாக காஜா பக்ருதீன் சிரியா செல்ல டிக்கெட் எடுத்து கொடுத்தது இவன்தான்  என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கைதான அன்சார் மீரானிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தமிழ்நாட்டில் இருந்து சிரியாவுக்கு எத்தனை பேரை அனுப்பி வைத்துள்ளனர் என்று ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள .எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்களா? என்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது[15]. சாகுல் அமீது மற்றும் காஜா மொஹித்தீன் பற்றிய விவரங்களை இங்கு படித்து அறியலாம்[16].

swalih-was-settled-in-chennai-for-some-time-now-with-wife-and-2-year-old-son

இஸ்லாமிய, ஜிஹாதி தீவிரவாதிகளின் செய்திகளை இருட்டடிப்பு செய்வது ஏன்?: ஆக தினத்தந்தி மற்றும் தினமலர் தவிர, பின்னணி தெரிந்தும், மற்ற ஊடகங்கள் இவ்வாறு செய்திகள் வெளிட்டுள்ளது, அவற்றின் பாரபட்சம் மற்றும் உண்மைகளை மறைக்கும் போக்கு வெளிப்படுகிறது. NIA தனது இணைதளத்தில் உடனுக்குடன் கைது செய்யப் பட்டவர்களின் விவரங்கள், பின்னணி, வழக்கு எண் என்ற எல்லா விவரங்களையும் “ஊடகங்களுக்காக” [Press release] என்று வெளியிட்டு வருகின்றது. அதனை தமிழில் மொழிபெயர்த்துப் போட்டாலே போதும், எல்லா விவரங்களும் பொது மக்களுக்குத் தெரிய வரும். அதனால், ஒருவேளை அவர்கள் விழிப்புடன் இருக்கலாம். ஆனால், அதையே கண்டுகொள்ளாமல், மறைத்து இவ்வாறு செய்தி வெளியிட்டிருப்பது அவர்களுக்கு சாதகாமாக இருப்பது அல்லது அவர்கள், ஊடகக்காரர்களுக்கு ஏதோ “சென்ஸார்” போன்ற ஆணையிட்டது அல்லது மிரட்டியுள்ளது போன்றது உள்ளதா எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

16-02-2018

Isis, Tamilnadu links, Haja Fakrudeen

[1] நியூஸ்7, கைதான .எஸ் ஆதரவாளரை 7 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரிய புலனாய்வு அமைப்பு!, February 14, 2018

[2] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/14/2/2018/person-arrested-chennai-national-intelligence-agency

[3] பாலிமர் செய்தி, ISIS ஆதரவாளர் அன்சார் மீரானை போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரி மனு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணை, 13-பிப்-2018 18:30

[4] https://www.polimernews.com/isis-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88/

[5] தி.இந்து, சென்னையில் பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு, Published :  14 Feb 2018  07:51 IST; Updated :  14 Feb 2018  11:00 IS

[6] http://tamil.thehindu.com/tamilnadu/article22748394.ece

தினமணி, [7] தமிழ்.ஒன்.இந்தியா, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சென்னையில் இளைஞர் அதிரடி கைது!, Posted By: Mathi, Published: Tuesday, February 13, 2018, 11:47 [IST].

[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-police-arrests-pakistan-spy-311239.html

[9] தினமணி, .எஸ். ஆதரவாளரிடம் என்ஐஏ விசாரணை தொடக்கம், Published on : 15th February 2018 02:28 AM.

http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2863616.html

[10] தினமலர், .எஸ்..எஸ்., ஆதரவாளரை போலீஸ் காவலில் விசாரிக்க மனு, Added : பிப் 14, 2018  02:18.

 

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1958705

[12] தினத்தந்தி, .எஸ். தீவிரவாதி சென்னையில் கைதுதமிழகத்தில் நாசவேலைக்கு சதி, பிப்ரவரி 13, 2018, 01:07 PM.

[13] https://www.dailythanthi.com/News/State/2018/02/13130746/ISIS-terroristArrested-in-Chennai-In-TamilNadu-The.vpf

[14] தினத்தந்தி, .எஸ். தீவிரவாதி சென்னையில் கைதுதமிழகத்தில் நாசவேலைக்கு சதி, பிப்ரவரி 13, 2018, 01:07 PM.

[15] https://www.dailythanthi.com/News/State/2018/02/13130746/ISIS-terroristArrested-in-Chennai-In-TamilNadu-The.vpf

[16] வேதபிரகாஷ், மறுபடியும் .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!, செப்டம்பர் 23, 2017.

https://islamindia.wordpress.com/2017/09/23/isis-funder-from-chennai-arrested-by-nia-more-jihadis-in-south/

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி-தீவிரவாதம் வளறும் விதம் (3)

நவம்பர் 17, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதிதீவிரவாதம் வளறும் விதம் (3)

PFI leader Ahmed Sheriff accepts receipt of money

PFI ஆட்கள் கைது மற்றும் சியரியாவில் இறப்பு: ஹம்ஸா / யு.கே.ஹம்ஸா / தலிபான் ஹம்ஸா [UK Hamsa or ‘Taliban’ Hamsa, 52] மற்றும் மனஃப் ரஹ்மான் [Manaf Rahman] என்ற இருவர் வியாழக்கிழமை, 26-10-2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[1]. பி.எப்.ஐயின் தலைவரும், “கல்ப் தேஜாஸ்” [Gulf Tejas] என்ற நாளிதழின் ஆசிரியருமான, அஹமது ஷரீப் “இந்தியா டுடே டிவி” நிருபரால் பேட்டி கண்டபோது, எப்படி தங்கள் இயக்கம், வளைகுடா நாடுகளிலிருந்து பணம் பெறுகிறது, ஹவாலா மூலம் பணம் வருகிறது, ஹவாலா இரு வழிகளிலும் செயல்பட்டு வருகின்றது, தங்களது நோக்கம் இந்தியாவில், ஒரு “இஸ்லாமிய நாட்டை” [Islamic State] உருவாக்குவது தான்….போன்றவற்றை ஒப்புக் கொண்டது தெரியவந்தது. “சத்திய சரனி” என்ற நிறுவனம்[2], அவ்வாறு பணம் பெற்றதையும் ஒப்புக் கொண்டார்[3]. அதேபோல, “சத்திய சரனி” யின் பெண்களின் பிரிவு தலைவி, ஜைனபா ஒரு பக்கம் தாங்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டிருக்கிறோம், அதற்கான சான்றிதழ்கள் கொடுக்கப் படுகின்றன என்றும், இன்னொரு பக்கம், இல்லை, தங்களது நிறுவனம், இஸ்லாம் பற்றி போதிக்கிறது, அவ்வளவுதான், என்ற ரீதியிலும் பேசியுள்ளார்[4].

ISIS tape to attack Pooram fest-DM-16_11_2017_010_024

ஐந்து பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது[5]: ஆறு பேர் கைது செய்யப்பட்டதை பொலீஸார் உறுதி செய்தது[6]. முன்னர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சோதனையில் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய  ஐந்து பேரை கைது செய்தனர் என்று செய்தி வந்தது[7]. இவர்களிடம் விசாரணை நடத்தியதில்  இந்த மாவட்டத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் சிரியாவில் பலியானது உறுதியாகி உள்ளது. இறந்தவர்கள் –

  1. ஷநாத் (வயது 25) சலாட்பகுதியை சேர்ந்தவர்,
  2. ரிஷல் (30) வலாபட்டனம்,
  3. ஷமீர் (45)
  4. அவரது மகன் சல்மான் (20) பப்பினிசேரி,
  5. ஷாஜீர் (25) எச்சூர்

ஆகியோர் என அடையாளம் தெரிந்து உள்ளது[8]. ஆகவே, நிச்சயமாக, இவர்களது பெற்றோர்கள் மறுக்க, மறைக்க முடியாது. ஆனால், தெரிந்து அவர்கள் எப்படி, தம் மகன்கள் ஐசிஸில் சேர ஒப்புக் கொண்டார்கள் என்பது புதிராக உள்ளது. இல்லை, அந்த அளவிற்கு அவர்களும் மூளைசலவை செய்யப்பட்டுள்ளனர் போலும். மேலும் அதே பகுதியை சேர்ந்த 15 வாலிபர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கேரள போலீசாரால் அக்டோபர் 26 ம் தேதி கைது செய்யப்பட்ட U.K. ஹம்சா இவர்களை ஐ.எஸ் நெட்வொர்க்கில் சேர அழைத்துச் சென்றார். அவர்களில் சிலர் இன்னும் சிரியாவில் இருக்கிறார்கள்.

ISIS tape- probe demanded- IE

தீவிரவாத நட்பு, தீவிரவாதத்தில் தான் முடியும்; சென்ற வாரம், பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள் நிரூபணம் ஆகும் முறையில், கைதுகள், கொலைகள் நடந்த செய்திகள் வெளியாகின. இப்பொழுது இத்தகைய குரூர செயல்திட்ட விலக்கம் மூலம் ஜிஹாதித்துவத்தின் ஒடிய முகம் வெட்ட வெளிச்சமாகிறது! இதுவா மனிதத்தன்மை? எந்த மனிதன் இதனை தெய்வீகம் என்பான்? ஆனால், துலுக்க வெறியர்கள், இவற்றை கடவுள் பெயரில் தான் செய்து வருகின்றனர். இவற்றையெல்லாம் அறிந்தும், தமிழகத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்வாதிகளாகத் துடிக்கும் நடிகர்களும் அமைதியாக இருப்பது, மாறாக இந்து தீவிரவாதம் என்றெல்லாம் பேசுவது, அவர்களது ஆதரவு மற்றும் தொடர்புகளைக் காட்டுகிறது எனலாம். திரையுகத்தைப் பொறுத்த வரையில், தாவூத் இப்ராஹிம் உதவியில்லாமல், எவனும் படத்தை வெற்றியாக வெளியிட முடியாது. அவனுக்குண்டான கப்பம், வசூலிக்கப் பட்டு சென்று விடுகிறது என்று தெரிகிறது. அந்நிலையில், இவர்களும், அவர்களால் சந்தோசமாக வைக்கப்படுகின்றனர் என்றாகிறது, இல்லையெனில், எல்லாவற்றையும் அறிந்தும், அறியாதது போல மேடைகளில் சமமாக உட்கார்ந்து கொள்ளுதலும், சந்தோசமாக பொழுது கழிப்பதும், பல கதைகளை சொல்கின்றன என்றாகிறது. பொது மக்களுக்கு விரோதமான, அத்தகைய உறவு நிச்சயமாக ஒரு நாள் பேரிழப்பில் தான் சென்று முடிவடையும் என்பது திண்ணம்.

PFI leader accepts receipt of money-PFI Sainaba

கேரளா ஏன், எப்படி, எவ்வாறு ஜிஹாதிகளை ஏற்றுமதி செய்கிறது?: ஐசிஸிக்கு, இந்த மலபார் பகுதியிலிருந்து, தீவிரவாதத்திற்கு எப்படி இளைஞர்கள் சுலபமாகக் கிடைக்கிறார்கள்?  இதைப் பற்றி அலசும் போது கவனிக்க வேண்டிய காரணிகள் சுருக்கமாகக் கொடுக்கப் படுகின்றன[9]. முகமதியரிடையே ஒரு பக்கம் படிப்பின்மை, இன்னொரு பக்கம் ஐ.டி. இஞ்ஜினியரிங் என்று படித்துள்ள நிலை என்றுள்ளது. ஐ.டி படித்த இளைஞர்கள் சுலபமாக ஜிஹாதித்துவத்திற்கு மாறுவது, பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றின் மூலம் பிரச்சாரம் செய்வது. மற்ற மத-அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிக் குழுக்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது. வளைகுடா நாடுகளுடன் எல்லோருக்கும் தொடர்புகள் இருப்பது. வேலையின்மையைப் பயன்படுத்தி, வேலை வாங்கிக் கொடுக்கிறேன் என்ற நிலையில் ஆள் சேர்ப்பது. அதிக முகமதியர் மக்கட்தொகை உள்ள இடங்கள், கடைகள் முதலிய இடங்களில் முஸ்லிம் அல்லாத இளம்பெண்களை கவர்ந்து, மதம் மாற்றி, லவ்-ஜிஹாத் மூலம் கல்யாணம் செய்து வைப்பது. லவ்-ஜிஹாத் மூலம் வசீகரித்து, பெண்ணோடு அனுப்பி வைப்பது. சம்பந்தப் பட்ட குடும்பத்தினருக்கு தவறாமல், மாதன் தோறும் பணம் வந்துக் கொண்டிருப்பது. விசா, பாஸ்போர்ட், மணி-எக்ஸ்சேஞ்ச், விமான டிக்கெட்,…..போன்றவற்றில் முகமதியர் ஆதிக்கம் செல்லுத்துவதால், பண-பரிமாற்றம், ஆட்கள் எளிதாகச் சென்று வருதல் போன்றவை சுலபமாக நடந்து வருகிறது. விவரங்களும் அவர்களுடனே இருந்து விடுகிறது. அனைத்திற்கும் மேலாக அரசியல் செல்வாக்கு, போலிஸ் முதலிய துறைகளில் பெரிய பதவிகளில் இருக்கும் முகமதியர்களின் உதவி முதலியவை அவர்களை சட்டப்பிடிகளிலிருந்தும் தப்பித்துக்க் கொள்ள உதவுகிறது. இப்பொழுது, கம்யூனிஸ கூட்டாட்சி வந்த பிறகு, அரசுக்கு சித்தாந்த போராட்டங்களில் ஈடுபடவே நேரமில்லாத நிலையில், ஜிஹாதிகள் சுலபமாக தங்களது செயல்களை செய்ய ஆரம்பித்து விட்டனர்[10].

© வேதபிரகாஷ்

17-11-2017

PFI-ISIS link visibly naked- Vedaprakash

[1] The police revelation also comes days after the arrest of five suspected ISIS recruiters from Kannur. The ringleader of the recruitment is said to be a 52-year old man identified as UK Hamsa or ‘Taliban’ Hamsa. It was not immediately clear whether the youths were recruited by the group linked to Hamsa. According to the National Investigation Agency, nearly a 100 Indians, many of them from Kerala have left India to join ISIS.

https://www.indiatimes.com/news/india/isis-fever-grows-stronger-in-kerala-as-six-more-men-from-the-state-join-isis-in-syria-332902.html

[2] PO Karuvambram, Cherani, Manjeri – 676123, Kerala, India, Tel: +91 483 2765010, Email: saranimail@gmail.com,  http://www.sathyasarani.org/

[3] On Tuesday, 31-10-2017, India Today TV aired the explosive sting report which laid bare a nexus between Islamic extremist groups and Popular Front of India. Ahmed Shareef, a senior PFI leader and associate editor of group mouthpiece Gulf Thejas was the first to be caught on camera. He claimed before undercover reporters that a key aim of PFI was to create an Islamic state in India and later spread it to the rest of the world. He also revealed the modus operandi of illegal fund transactions from the Gulf to Kerala. Shareef said that Sathya Sarani in Malappuram, which is considered an Islamic education institution, received a lot of money through hawala.

India Today, Six PFI members joined ISIS; police say, P S Gopikrishnan Unnithan Posted by Ganesh Kumar Radha Udayakumar, Thiruvananthapuram, November 3, 2017 | UPDATED 06:19 IST

[4] AS Zainaba, president of the AFI’s women’s wing, said on hidden camera Sathya Sarani is a conversion factory masquerading as an educational organisation. http://indiatoday.intoday.in/story/kerala-police-pfi-isis-kannur/1/1081364.html

[5] தினத்தந்தி, .எஸ் இயக்கத்தில் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் சிரியாவில் பலி கேரள போலீசார் உறுதி

[6] Deccan Chronicle, 6 more youth from Kerala join ISIS, confirm police, ANI, Published Nov 2, 2017, 7:10 pm IST; Updated Nov 2, 2017, 7:10 pm IST

[7] http://www.deccanchronicle.com/nation/current-affairs/021117/6-more-youth-from-kerala-join-isis-confirm-police.html

[8] http://www.dailythanthi.com/News/TopNews/2017/10/28140247/Kerala-Police-confirm-deaths-of-five-ISlinked-men.vpf

[9] முதல் ஐந்து காரணிகள் ஏசியா நெட் செய்தியிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளது:

Asianet.newsable, Why India could soon be under a ‘Made in Kerala’ threat, by T. S. Sudhir, October 27, 2017. 10:51 am.

[10] http://newsable.asianetnews.com/editorial/why-india-could-soon-be-under-a-made-in-kerala-threat

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி-தீவிரவாதம் வளறும் விதம் (2)

நவம்பர் 17, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதிதீவிரவாதம் வளறும் விதம் (2)

Popular Front meeting, Chennai 08-11- 2017-2

ஐசிஸ் தொடர்புள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாபுகழ் பாடும் விகடன்: PFI மற்றும் ISIS தொடர்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில், விகடன், சென்னையில் நடந்த அவர்களது மாநாட்டைப் பற்றி அதிகமாகவே விளம்பரம் கொடுத்துள்ளது[1].  ஜே. அன்பரசன்,  பா.காளிமுத்து, ப. பிரியங்கா என்ற மூவர் இதனை செய்துள்ளனர்[2]. அவர்களின் செய்தி, “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ என்பது இந்திய அளவில் வளர்ந்து வரும் மிகப்பெரிய முஸ்லிம் அமைப்பு. தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் காலங்களில் இந்த அமைப்பு செய்துவரும் தன்னார்வ சேவைகள் அனைவரும் அறிந்த ஒன்று. ‘லவ் ஜிகாத் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு  ஆதரவு அளித்தல்’ போன்ற பொய்யானக் காரணங்களைச் சொல்லி மத்திய அரசு, ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பைத் தடை செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அவ்வமைப்பினர் கூறுகின்றனர். அதனால், பி.ஜே.பி அரசை எதிர்த்தும், இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்தியா முழுவதும் ‘உரிமை முழக்க மாநாடு’ நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள் ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பினர். கடந்த 8 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், பல்லாயிரக்கணக்கில் முஸ்லிம் மக்கள் கூட ‘உரிமை முழக்க மாநாடு’ நடைபெற்றது. இதற்கு முதல் நாள் அதாவது கடந்த 7 ஆம் தேதி மதுரையிலும், திருவனந்தபுரத்திலும் மாநாடு நடத்தினார்கள்.

Popular Front meeting, Chennai 08-11- 2017

திருமாவளவன், முதலியோர் கலந்து கொண்டது திகைப்படையச் செய்வதாக உள்ளது: சென்னையில் நடைபெற்ற மாநாட்டில்,

  1. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,
  2. மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,
  3. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்,
  4. ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மற்றும்
  5. முஸ்லிம் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது அலி ஜின்னா, “சமீப காலமாக அவதூறு அறிக்கை கொடுத்ததாகச் சொல்லி, எங்கள் அமைப்பைத் தடை செய்ய தேசிய புலனாய்வு முகமை  (N.I.A) தீவிர பணியினை மேற்கொண்டு வருகிறது. இந்த அவதூறு பிரசாரத்தை முறியடித்து, மக்களைச் சந்தித்து உண்மையைச் சொல்லும் பணியில், ‘பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியாஇறங்கியுள்ளது. இதனடிப்படையில், இந்தியா முழுவதும் 14 மாநிலங்களில் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.”  இவ்வாறு முழுக்க-முழுக்க உண்மைகளை மறைத்து, பிரச்சார ரீதியில் நடத்தப் பட்ட மாநாட்டில், மேலே குறிபிட்டவர்கள், எப்படி, ஏன் கலந்து கொண்டனர் என்பது, திகைப்பாக இருக்கிறது. பொறுப்புள்ள அரசியல்வாதிகள் என்ற ரீதியில், நாட்டு நடப்புகள் இவர்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?

Cine secularism acts differently in TN-2017

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் [08-10-2017][3]: இகடன் குழு தொடர்ந்து, இவற்றையும் வெளியிட்டுள்ளது. உரிமை முழக்க மாநாட்டில் முக்கியமான 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை:

  1. பாசிசத்துக்கு எதிரான கூட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு களப்பணி ஆற்றிட வேண்டும்.
  2. தேசிய புலனாய்வு முகமை (N.I.A) கலைக்கப்பட வேண்டும்.
  3. மதுரை, போலி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும்.
  4. பாபர் மசூதி மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும்.
  5. பத்தாண்டுகள் சிறையில் கழித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.
  6. மியான்மரில் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளான ரோஹிங்கியா இன முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
  7. நீட் தேர்வை ரத்து செய்து கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
  8. தீவிரவாத எதிர்ப்பு சட்டமான யு.ஏ.பி.ஏ உள்ளிட்ட சட்டங்கள் மனித உரிமை மீறலுக்கும், நீதி மறுப்பதற்கான ஒரு கருவியாகவுமே இருக்கிறது. எனவே இந்தக் கருப்புச் சட்டங்களை நீக்க வேண்டும்.
  9. கெளரி லங்கேஷின் படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது. மேலும் கொலைக் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
  10. மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்க வேண்டும்.
  11. மக்கள் நலப் பணிகளுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அர்ப்பணிக்கும் வக்ஃப் வாரியம் சீரமைக்கப்பட வேண்டும்.
  12. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்.
  13. தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
  14. லவ் ஜிகாத் பொய் பிரசாரத்தை நிறுத்த வேண்டும்.
  15. கல்வி வளாகங்களை சங்பரிவார்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[4].

ISIS plan to kill Hindus - Dinamani- 15-11-2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்:  பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI], எஸ்.எப்.ஐ [SFI] தடைக்குப் பிறகு தோன்றிய இயக்கம் ஆகும்.  தடை செய்யப்பட்ட சிமி கூட்டத்தினர் இம்மாதிரியான Social Democratic Party of India (SDPI), Popular Front of India (PFI), National Development Front (NDF), என்று பரவி வருவதாகத் தெரிகிறது[5]. இப்பொழுது, லவ் ஜிஹாத், மதமாற்றம், ஐசிஸ்க்கு ஆள்சேர்ப்பு போன்ற காரியங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் பலமுறை கொலை[6], வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல்[7], தேசவிரோத செயல்கள் முதலியவற்றில் ஈடுபடுதல், முதலியவை உறுதிபடுத்தியிருப்பதால், போலீஸ் நடவடிக்கை எடுக்கப் பட்டதுள்ளது[8]. தமிழகத்தைப் பொறுத்த வரையில், தேசவிரோத, கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகளின் ஆதரவு இருந்து வருகிறது. அவ்வப்போது, ஏதோ சேவை செய்கிறோம் என்பது போலவும் காட்டிக்கொள்வதுண்டு. ஆனால், தீவிரவாத செயல், ஐசிஸ் தொடர்பு, கைது என்றெல்லாம் வரும் போது அமுங்கி விடுவர். ஆனால், பி.எப்.ஐ.யின் அடிப்படைவாத செயல்கள், பயங்கரமாக வெளிப்பட்டுக் கொண்டுக்கின்றன. இப்பொழுது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் ஐசிஸ்குள்ள தொடர்புகள் வெளியாகி வருகின்றன.

© வேதபிரகாஷ்

17-11-2017

PFI conversion factory- Nov.2017

[1] விகடன், உரிமை முழக்க மாநாடு… ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா‘-வின் புதிய பரிணாமம்!, Posted Date : 21:21 (09/10/2017); Last updated : 21:21 (09/10/2017.

[2] https://www.vikatan.com/news/tamilnadu/104514-popular-front-of-india-conference.html

[3] விகடன், உரிமை முழக்க மாநாடு… ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா‘-வின் புதிய பரிணாமம்!, Posted Date : 21:21 (09/10/2017); Last updated : 21:21 (09/10/2017.

[4] https://www.vikatan.com/news/tamilnadu/104514-popular-front-of-india-conference.html

[5]  According to a government paper, starting largely as a Kerala Muslim outfit and successor to National Development Front (NDF), the PFI now has more than 80,000 members and sympathisers, with a countrywide spread. The paper,that has already been circulated in the PMO,National Security Council Secretariat and the Home Ministry, states that the PFI has a militant core cadre, radical following and a subtly divisive and subversive media organ. While this case was handed over to the NIA last month [January 2014], subsequent police raids at that time on PFI activists had led to the recovery of subversive material. The paper says that raid on 100-odd PFI establishments had led to recovery of crude explosives,lethal weapons,besides a computer disk containing clips of executions by the al-Qaeda. It says Green Valley Foundation in Mallapuram district provided combat training to PFI cadre under the cover of providing vocational training to the indigent and physically challenged.

[6] http://news.outlookindia.com/items.aspx?artid=769976

[7]  http://zeenews.india.com/news/kerala/country-made-bombs-seized-21-pfi-cadres-arrested-in-kerala_844220.html

[8] http://indianexpress.com/article/news-archive/web/concern-in-govt-over-pfis-growing-outfits-spread/0/

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி-தீவிரவாதம் வளறும் விதம் (1)

நவம்பர் 17, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதிதீவிரவாதம் வளறும் விதம் (1)

Abdul Rashid Abdulla Isis -terror tape

கேரளாவில் தொடரும் ஐசிஸ் ஆதரவு பிரச்சாரம், தீவிரவாத ஊக்குதல் ஆதரவு முதலியன: ஐஎஸ் அமைப்பின் பிராந்திய பிரிவான “தவுலதுல் இஸ்லாம்”, தனது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு சமீபத்தில் ஒரு குரல் பதிவை (ஆடியோ) வெளியிட்டுள்ளது. “கேரளாவின் ஒளி” என்ற வாட்ஸ்-அப் குழுவில் இது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது[1]. இது அத்தகைய 50வது பதிவேற்றம் என்று சொல்லப்படுகிறது. முன்னர் என்.ஐ.ஏ அப்துல் ரஷீத் என்பவன் அத்தகைய இரண்டு வாட்ஸ்-அப் குழுக்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்தது[2]. சுமார் 10 நிமிடங்கள் ஓடும் அதில் ஒருவர் மலையாள மொழியில் பேசுகிறார். “நமது மக்கள் அனைவரும் .எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணையவேண்டும். அப்படி இணைய விருப்பமில்லை என்றால் தீவிரவாத இயக்கத்தினருக்கு அதிக அளவில் நிதி உதவி அளித்திடவேண்டும். ஐஎஸ் முஜாஹிதீன் அமைப்பினர் உலகின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்துகின்றனர். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை திருவிழாவின்போது, நமது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தாக்குதல் நடத்தினார்[3]. அதில் பலர் உயிரிழந்தனர். இதுபோல, திருச்சூர் (கேரளா) பூரம் அல்லது கும்பமேளா உள்ளிட்ட திருவிழாக்களின்போது உங்கள் புத்திசாலிதனத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துங்கள்[4]. முதலில் இந்த விழா நடக்கும் பகுதிகளுக்கு முன்னதாகவே சென்று உணவில் விஷம் வையுங்கள்[5]. அதை அங்கே வருபவர்களுக்கு சாப்பிட கொடுங்கள்[6].

Abdul Rashid Abdulla Isis -terror tape-drive car into mela

ஐசிஸ் தீவிரவாதி தொடர்ந்து சொல்வது:இந்த தாக்குதலில் தன்னந்தனியாக ஈடுபடுங்கள். லாரியை பயன்படுத்துங்கள். அதேபோல் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சரக்கு வாகனங்களை ஓட்டிச் சென்று அவர்கள் மீது ஏற்றி பெரும் எண்ணிக்கையில் கொன்று குவியுங்கள்[7]. இத்தகைய தாக்குதல் முறைகளைத்தான் உலகம் முழுவதும் இன்று நமது தீவிரவாத இயக்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்[8]. அண்மையில் நமது போராளி ஒருவர் இசை நிகழ்ச்சியின்போது இப்படி தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொன்று குவித்தார். உணவில் விஷம் கலந்து விடுங்கள். அல்லது கத்தியைப் பயன்படுத்துங்கள். குறைந்தது ரயிலை தடம்புரளச் செய்யுங்கள். உங்களால் இதெல்லாம் முடியவில்லை என்றால் ரெயில் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடுங்கள். அதுவும் முடியாவிட்டால் கத்தி முனையில் தாக்குதல் நடத்துங்கள். அவர்கள்(ராணுவத்தினர்) நமது கதையை முடிக்க முயன்றாலும் அது நடக்காது. நமக்கு இதில் உயிர் இழப்புகள் ஏற்படலாம். ஆனால் நமது இயக்கம் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டேதான் இருக்கும். உயிர் இருக்கும் வரை நாம் போராடுவோம்,” என அவர் பேசி உள்ளார்[9].

ISIS want to kill Hindus in India-tape-3

கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரசீத் பேசியது: கேரளாவைச் சேர்ந்த 100 பேர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாக கேரள போலீஸார் கூறியிருந்த நிலையில் இந்த ஆடியோவெளியாகி உள்ளது. இந்த கேரள மாநிலம் காசர்கோடு பகுதியிலிருந்து ஆப்கன் சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த ரஷித் அப்துல்லாவின் குரலாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது[10]. திருச்சூர் பூரம், கும்பமேளா விழாக்களின்போது உணவில் விஷம் வைத்து பெரும் அளவில் மக்களை கொன்று குவியுங்கள் என்று ஐ.எஸ். தீவிரவாதி விடுத்த ஆடியோ மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து சிரியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்துள்ளதாக கேரள போலீஸ் கூறுகிறது. இவர்களில் பலர் ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளில் ராணுவத்துக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு மரணத்தையும் தழுவியதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் பல்வேறு வழிகளில் தாக்குதல்களை நடத்தி பெரும் எண்ணிக்கையில் மக்களை கொன்று குவிக்கும்படி ஐ.எஸ். தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக கேரள மாநிலம் காசர்கோடு நகரில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் இணைந்த ஒருவர் 10 நிமிடம் மலையாள மொழியில் பேசும் ஆடியோ உரை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[11]. இதையடுத்து கேரளாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன[12].

ISIS want to kill Hindus in India-tape-1

கேரளாகாரன் என்பதால், கேரளாவில் இக்கட்டான நிலை: இதுகுறித்து கேரள காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் இருந்து குரல் பதிவு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பேசியிருப்பவர், ஐஎஸ் அமைப்பில் அண்மையில் சேர்ந்த கேரளம் மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த ரஷித் அப்துல்லாவாக இருக்கலாம் என்று நம்புகிறோம். ரஷித் அப்துல்லாவுக்கு எதிராக என்ஐஏ அமைப்பும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இன்டர்போல் அமைப்பும் அவருக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் பிரப்பித்துள்ளது’ என்றன. இந்த குரல் பதிவு தொடர்பாக கேரள போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்[13]. இதுதொடர்பாக வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 300 குரல் பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சரவை செயலகத்தின் முன்னாள் இயக்குநர் வி. பாலசந்திரன் கூறும்போது, இது மிகவும் கவலைதரும் விஷயமாகும். அந்த அமைப்பினர் தங்களது சண்டையை ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர நினைக்கின்றனர்’ என்றனர்[14].

© வேதபிரகாஷ்

17-11-2017

Jihadi terror- Asianet- modified- Vedaprakash

[1] he voice in the audio clip, posted on a WhatsApp group called ‘Light of Kerala’, is suspected to be that of Abdul Rashid, an engineering graduate. Abdul Rashid is believed to be the man behind the exodus of 21 Keralites to Afghanistan .This is reportedly the 50th such clip that has emerged on the WhatsApp group ‘Light of Kerala’.

http://www.thenewsminute.com/article/horrifying-audio-clip-kerala-isis-recruiter-urging-war-hindus-democracy-surfaces-71651

[2] In an earlier case investigated by National Investigation Agency, it was revealed that Abdul Rashid created at least two WhatsApp groups, in which he added about 200 people in Kerala, and began transmitting messages, urging them to join the Syria-based terror group.

http://www.deccanchronicle.com/nation/current-affairs/151117/kerala-probe-on-to-trace-islamic-state-audio-clips.html

[3] மாலைமலர், திருச்சூர் பூரம் விழாவில் மக்களுக்கு உணவில் விஷம் வையுங்கள்: .எஸ். பயங்கரவாதியின் மிரட்டல் ஆடியோ, பதிவு: நவம்பர் 16, 2017 07:03

[4] http://www.maalaimalar.com/News/TopNews/2017/11/16070309/1129089/Put-poison-in-the-food-at-the-Thrissur-Pooram-festival.vpf

[5] தினத்தந்தி, திருச்சூர் பூரம் விழாவில் மக்களுக்கு உணவில் விஷம் வையுங்கள் .எஸ். பயங்கரவாதியின் மிரட்டல் ஆடியோ, நவம்பர் 16, 2017, 04:45 AM

[6] http://www.dailythanthi.com/News/TopNews/2017/11/16035820/Thrissur-Pooram-festival-put-poison-in-the-food-of.vpf

[7] பாலிமர்.டிவி, அதிக மக்கள் கூடும் இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும்கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்ற தீவிரவாதி எச்சரிக்கை, 15-நவ்-2017 13:40

[8]https://www.polimernews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/

[9] தி.இந்து, திருச்சூர் பூரம் விழாவில் தாக்குதல் நடத்தப்படும்: ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை, Published :  16 Nov 2017  09:15 IST; Updated :  16 Nov 2017  09:22 IST

[10] http://tamil.thehindu.com/india/article20464351.ece

[11] தமிழ்.ஒன்.இந்தியா, திருச்சூர் பூரம் திருவிழாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் பகீர் சதித் திட்டம்ஷாக் தகவல்கள், Posted By:  Mathi, Published: Wednesday, November 15, 2017, 9:19 [IST]

[12] https://tamil.oneindia.com/news/india/isis-advise-kerala-muslims-poison-food-at-thrissur-pooram-kkumbh-mela-301836.html

[13] தினமணி, கும்ப மேளா, திருச்சூர் பூரம் விழாக்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் மிரட்டல், Published on : 16th November 2017 12:53 AM.

[14]http://www.dinamani.com/india/2017/nov/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF-2808510.html

மறுபடியும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!

செப்ரெம்பர் 23, 2017

மறுபடியும் .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!

ISIS-K kERALA NEXUS- WOMEN TOO

தென்னகத்தில் .எஸ் ஆதரவு அதிகம் ஏன்?: ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் உலகம் முழுவதையும் தனது தீவிரவாதத்தினால் அச்சுறுத்தி வருகிறது[1]. தொடக்கத்தில் ஈராக் மற்றும் சிரியாவில் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, பின் உலகின் பல்வேறு நாடுகளில் ஆட்களை சேர்த்து, படர்ந்து, விடரிந்து தாக்குதல் நடத்தி வருகிறது[2].  ஐ.எஸ் அமைப்புக்கு உலகம் முழுவதும் ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது, அதன்படியே, இந்தியாவிலேயே ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அந்த தீவிரவாதையக்கத்தில் சேர்ந்து, போராடி, இறந்து கொண்டிருக்கும் செய்தியும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவிலும் ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதுவாடிக்கையான விசயம் ஆகிவிட்டது. இதுதொடர்பாக, என்.ஐ.ஏ தானாக விசாரணையில் விவரங்கள் வெளிவந்தன. கேரளா மற்றும் தமிழகத்தில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகப் பலர் கைது செய்யப்பட்டனர். ஆகவே தன்னகத்தில், ஐ.எஸ் ஆதரவு அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

Shahul Hameed, Chennai arrested by NIA -and Khaja Moideen

சாகுல் ஹமீது, ஓட்டேரியில் கைது (18-09-2017): இந்நிலையில், 18-09-2017 அன்று ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக, சென்னை ஓட்டேரிப் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது [Shakul Hameed (A-3), son of Mohammed Zackariya,resident of House No. 59, S. S. Puram, A-Block, 10th Street, Ottery, Chennai- 600 012] என்பவவர் முதல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஹாஜா பக்ருதீனுடன் [Haja Fakkurudeen (A)] தொடர்பு கொண்டவன். சக- குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காஜ மொஹித்தீன் [co-accused Khaja Moideen (A-2)] மற்றும் இவன் ஹாஜா பக்ருதீனுடன் தமிழகம் வந்தபோது, கடலூரில் சந்தித்துள்ளான். பிறகு தமிழக,ம் மற்றும் கந்நாட மாநிலங்களில் பல இடங்களுக்கு சென்று ஐசிஸுக்கு ஆள் சேர்த்திருக்கிறார்கள். சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ் தீவிரவாத இயக்கதுக்கு ஆதரவாக பரப்புரை செய்ததாகவும், அந்த அமைப்புக்கு நிதி திரட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்[3]. அப்போது அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்[4]. பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இந்த வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 15-09-2017 அன்று காஜா மொஹித்தீன் இவ்வழக்கில் ரீமான்டில் வைக்கப்பட்டான். தவிர பல குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டிருக்கிறான்[5].

Swalih was settled in Chennai for some time now with wife and 2-year-old son.

சென்னையில் கடந்த மாதங்களில் கைதானவர்கள்: ஹரூன் ரஷீத் [முகமதி அலி ஜின்னாவின் மகன்] என்பவன் 04-07-2017 அன்று கைது செய்யப்பட்டான். இதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மண்ணடியில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது[6].  18-09-2017 அன்று கைது செய்யப்பட்ட சாகுல் அமீதையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஜா மொய்தீனையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. சார்பில் நாளை பூந்தமல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது[7]. சென்னையில் தொடர்ந்து ஐ.எஸ் விவகாரத்தில் பலர் கைது செய்து பட்டு வருவது, திட்டமிட்டி ஆட்கள் வேலை செய்து வருவது தெரிகிறது. தேவையில்ல்லாத விசயங்களை வைத்துக் கொண்டு, தினமும் அலசும் ஊடகங்கள். இத்தகைய அபாயகரமான விசயத்தைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது” என்றதற்கு மேலாக ஊடகத்தினருக்கு, வேறெந்த விவரமும் கிடைக்காதது போலமூன்ரு-நான்கு வரிகளில் செய்தி வெளியிட்டுள்ளன[8]. என்.ஐ.ஏ. ஊடகத்தினருக்கான அறிக்கை என்பதிலிருந்தே மேலும் விவரங்களை வெளியிடலாம்[9]. ஆனால் அவர்களுக்கு பயமா அல்லது வெளியிடக் கூடாது என்று யாராவது ஆணையிட்டுள்ளார்களா என்று தெரியவில்லை.

Nasser who designed ISIS flag is from Chennai

தினகரன் அளிக்கும் கூடுதல் தகவல்கள்[10]: டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீஸ் தரப்பில் ஆர்.சி. 3/2017 என்ற  வழக்கு எண்ணில் பிரிவுகள் 15, 16, 17, 20, 29 கீழ் சாகுல் ஹமீதை கைது செய்துள்ளனர்.  இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் முதல் குற்றவாளியாக காஜா பஹ்ரூதின் என்பவர் காட்டப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.  மேலும் அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி தனி கிளை சிறையில் உள்ள காஜா மொய்தீன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சாகுல் ஹமீது மற்றும் காஜா மொய்தீன் ஆகிய இருவரையும்  தேசிய புலனாய்வு முகமை போலீசார், கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை 19-09-2017 அன்று வந்தது.

Shahul Hameed, Chennai arrested by NIA -19-09-2017 - Dinakaran-2

அரசு தரப்பு வழக்கறிஞர் கூறிய தகவல்கள்[11]: இந்நிலையில் இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக, நிதி திரட்டியதாக, ஆதரவாக செயல்பட்டதாக சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் இது தொடர்பாக சிரியா நாட்டிற்கு சென்று அங்கு ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் அம்பத்தூர் இந்து முன்னணி  பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில்  காஜா மொய்தீன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதாக அறியப்பட்டுள்ளது. அவர் இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை கொச்சின் தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரிப்பார்கள்சாகுல் ஹமீது மற்றும் காஜா மொய்தீன் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர் தரப்பிலிருந்து கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது. நீதிபதியின் உத்தரவுக்குப்பின் சாகுல் ஹமீது, காஜா மொய்தீன் இருவரையும் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் டெல்லி அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்த உள்ளனர். இவர்களை முழுமையாக விசாரித்த பிறகுதான் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்கள் பதுங்கி இருக்குமிடம்இவர்களது தலைவர் யார்? இவர்களை இயக்குபவர் யார் இவர்களுக்கு நிதி உதவி எப்படி வருகிறது? உள்ளிட்ட  பல்வேறு தகவல்கள் தெரியவரும்’’ என்றார்.

© வேதபிரகாஷ்

23-09-2017

Shahul Hameed, Chennai arrested by NIA -19-09-2017 - Deccan Herald-modified

[1] விகடன், .எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது!, Posted Date : 19:19 (18/09/2017); Last updated : 21:09 (18/09/2017), இரா.குருபிரசாத்.

[2] http://www.vikatan.com/news/tamilnadu/102625-nia-arrested-an-accused-shakul-hameed-from-chennai-in-a-case-related-to-isis.html

[3] தினமணி, சென்னையில் .எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர் கைது!, Published on : 18th September 2017 05:37 PM

[4]http://www.dinamani.com/tamilnadu/2017/sep/18/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2775335.html

[5] On 15th September, 2017, accused Khaja Moideen @ Abdullah Muthalif (A-2), son ofChinna Thambi Ambalam, resident of Salapathputhu Nagar, Kollumedu, Taluk Kattumanarkovil, Cuddalore district, Tamil Nadu who has already been in judicial custody in Crime No. 746/2014 of Ambattur Police Station, Chennai has been remanded in this case by the Hon’ble NIA Special Court (Sessions Court for Bomb Blast cases), Poonamalle, Chennai. The custody of Khaja Moideen @ Abdullah Muthalif (A-2) has been sought by the Chief Investigation Officer in RC-03/2017/NIA/DLI.

 

[6] மாலைமலர், .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியவர் சென்னையில் கைது, பதிவு: செப்டம்பர் 18, 2017 19:10.

[7] http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/18191008/1108657/NIA-arrests-ISIS-supporter-in-Chennai.vpf

[8] தமிழ்.ஒன்.இந்தியா, .எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது. லக்ஷ்மி பிரியா, திங்கர்கிழமை.செப்டம்பர் 18, 2017  16:53 [IST]

[9] https://tamil.oneindia.com/news/tamilnadu/nia-makes-one-arrest-chennai-isis-case-296179.html

[10] தினகரன், சென்னையில் .எஸ். இயக்க ஆதரவாளர் கைது, 2017-09-19@ 00:43:12

[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=336681

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது – இங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்! (3)

ஏப்ரல் 15, 2017

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியதுஇங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்! (3)

CRPF jawan insulted

காஷ்மீர் கல்லடிகலாட்டா பொறுக்கிகள் ராணுவத்தினரை அவமதித்தது: காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரை, துணை ராணுவத்தினரை அங்குள்ள இளைஞர்கள் கல்வீசி தாக்குவது தொடர் கதை ஆகி வருகிறது. அக்கலவரக்காரர்களை அடக்க முன்னர் “பெட்டட்” துப்பாக்கிகளை உபயோகித்து வந்தனர். ஆனால், இப்ப்பொழுது, உபயோகிப்பதில்லை. தேசதுரோகத்தை வளர்த்து வருவதால், அவர்கள் அத்தகைய நச்சிலேயே ஊறி வளர்ந்துள்ளனர். சமீபத்தில் அங்கு இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீநகரில் கரல்போரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினரை அவர்கள் ஓட, ஓட விரட்டி கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. அதுமட்டுமல்லாது, அவர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சூழ்ந்து கொண்டு அவர்களை அவமதித்தும், திட்டியும், காலால் கூட உதைத்தனர். ஆனால், கைகளில் ஆயுதம் ஏந்திய அவர்கள் நடந்து சென்றனர். அந்த அளவுக்கும் அவர்கள் பொறுத்துப் போகிறார்கள். இதைப்பற்றி மனித உரிமை போராளிகள் யாரும் பொங்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு தீவிரவாதிகள், ஜிஹாதிகள், மனிதவெடிகுண்டுகள் – இவர்களின் உரிமைகள் தான் தெரியும் போல! அருந்ததி ராய் போன்றோர் சூடு-சொரணை-வெட்கம்-மானம் இல்லாமல் காணாமல் போய் விட்டனர்!

Stone pelting Jihad - Gautam Ganbhir

கிரிக்கெட் வீரர்கள் பொங்கியது[1]: இந்த வீடியோவைப் பார்த்த பலர் கொதித்து போயினர். கிரிக்கெட்டை பாகிஸ்தான் மற்றும் அதன் பிராக்ஸிகளான இவர்கள் ஒரு போராக கருதுவதால், இது தொடர்பாக, சாதனை படைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் டுவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார் போலும். அதில் அவர், “இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நமது துணை ராணுவத்தினரை இப்படி செய்யக்கூடாது. இத்தகைய கெட்ட செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர் டுவிட்டரில் ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர், “நமது ராணுவ வீரர்கள் மீது விழுகிற ஒவ்வொரு அடிக்கும், 100 பேரின் உயிரை வீழ்த்த வேண்டும். யாருக்கெல்லாம் இங்கே இருக்க இஷ்டம் இல்லையோ அவர்கள் எல்லாரும் நாட்டை விட்டு வெளியேறட்டும். காஷ்மீர் எங்களுக்கே உரித்தானது,” என கூறி உள்ளார்[2]. மேலும், “இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிற இவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். நமது தேசியக்கொடியில் உள்ள காவி நிறம் நமது கோபத்தீயின் அடையாளம். வெள்ளை என்பது போராளிகளுக்கான சவச்சீலை, பச்சை என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான வெறுப்புணர்வு” எனவும் கூறி உள்ளார். தாக்குதலுக்கு உள்ளான துணை ராணுவத்தின் (மத்திய ஆயுதப்படை) ஐ.ஜி.ரவிதீப் சிங் சஹி செய்தி நிறுவனம் ஒன்றிடம் நேற்று பேசுகையில், “வீடியோ காட்சி உண்மையானதுதான். சம்பவம் எங்கு நடைபெற்றது, பாதிப்புக்குள்ளான படைப்பிரிவு எது என்பதை கண்டறிந்துள்ளோம். இதுதொடர்பாக தகவல்களை சேகரித்து சதூரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். வழக்கு பதிந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார். இதைப்பற்றியும் பரூக் அப்துல்லா பொறுப்பற்ற முறையில் கமென்ட் அடித்துள்ளார்.

Stone pelting Jihad - Sehwag -unacceptable
ரத்தவெள்ளம் ஏற்படுவதை சமயோஜிதமாக தடுத்ததை விஷமத்தனமாகத் திரித்துக் கூறுவது: மேலே குறிப்பிட்ட விடீயோ பற்றி விவாதம் நடக்கும் வேளையில், இன்னொரு வீடியோ சுற்றில் விடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை [07-04-2017] இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பத்காம் மாவட்டத்தின் பீர்வான் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த படை வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பிடித்ததாகவும், தங்கள் மீது கற்களை வீசித் தாக்காமல் தற்காத்துக் கொள்ள அந்த இளைஞரை ஜீப்பின் முன்பகுதியில் கயிற்றால் கட்டி மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது, என்று தினத்தந்தி விவரிக்கிறது. அப்போது, கல்வீச்சில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கதிதான் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. உண்மையில் தேர்தலின் போது ஓட்டுப்பதிவு நடக்கும் போது, யாரும் அருகில் இத்தகைய வன்முறை முதலிய கலாட்டாக்கள் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால், வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த வீடியோ காட்சி 14-04-2017 அன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. ஆனால், ராணுவத்தினர் சொன்னதை வெளியிடவில்லை.

Omar Abdulla against CRPF

உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்தது: தேர்தலின் போது, வன்முறையில் ஈடுபட்டு, கலவரத்தில் ஈடுபாட்டு ஓட்டு போட வருபவர்களை அச்சுருத்தும் வகையில் செயல் படுபவர் மீது சுடவும் செய்யலாம். ஆனால், அவ்வாறு செய்தால், இருக்கின்ற நிலையில், நிலைமை இன்னும் சீர்கேடாகும். ரத்தக்களறியே ஏற்பட்டிருக்கும். ஆகவே அதைத் தடுக்கவே, ராணுவத்தினர், பாடம் கற்பிக்க அவ்வாறு செய்தனர். இதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘தங்கள் மீது கற்கள் படக்கூடாது என்பதற்காகத்தான் அந்த இளைஞர் ஜீப்பின் முன்பக்கமாக கயிற்றில் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டாரா?. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. படையினரின் இந்த செயல் மூர்க்கத்தனமானது. இது எதிர் விளைவை ஏற்படுத்தாது என்பது என்ன நிச்சயம்? கல்வீச்சில் ஈடுபடுபவர்களின் கதி இதுதான் என்பதை வெளிப்படையாக கூறும் இந்த சம்பவம் பற்றி உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும்,’’ என்று கூறியுள்ளார்[3]. இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘இந்த வீடியோ காட்சியின் உண்மை தன்மை பற்றி சரிபார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராணுவம் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது’’ என்றார்[4]. ஆக, அப்பனும், பிள்ளையும் இவ்வாறாக அரசியல் நடத்துகின்றனர்.

Omar Abdulla against CRPF-not worried about stonepelting

தாத்தா, மகன், பேரன் – தேசநலனுக்காக எதிராக செயல்பட்டு வரும் குடும்பம்: ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா என்று மூன்று பரம்பரையாக, காஷ்மீரத்தை ஆண்டு வந்துள்ளனர் இவர்கள். பரூக் அப்துல்லா மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஷேக் அப்துல்லா தனது காலத்தில் தேசத்துரோகியாக செயல்பட்டு வந்ததும், பரூக் அப்துல்லா நன்றாக அனுபவித்துக் கொண்டு, இங்கிலாந்து பங்களாவில் சொகுசாக வாழ்ந்து கொண்டு, அவ்வப்போது, இந்தியாவுக்கு வந்து செல்வதும், உமர் அப்துல்லா மோடிக்கு எதிராக செயல்பட்டதால், பதவி இழந்ததும் எல்லோருக்கும் தெரிந்த கதை எனலாம். மற்ற இப்பொழுதுள்ள பிரிவினைவாதிகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவின் வசதிகளை அனுபவித்துக் கொண்டே, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர், ஆனால், மத்த்ய அரசு அவர்களை உல்லாசமாக வைத்திருக்கிறது.

US official report of bombing Afganistan on 13-04-2017

இந்தியா காஷ்மீர் மாநிலத்திற்கு கோடிக்கணக்கில் செலவழிப்பது: காஷ்மீருக்காக, கோடிகளை அள்ளிக் கொட்டுகிறது மத்திய அரசு, ஆனால், பதிலுக்கு அங்கிருந்து வரும் வருவாய் மிகக்குறைவே ஆகும். அதாவது, மற்ற மாநிலங்களின் வரிப்பணம் அங்கு செலவாகிறது, விரயமாகிறது. தீவிரவாதத்தால், அங்கிருக்கும் மக்கள் இருக்கும் சுற்றுலா தொழிலையும் கெடுத்துக் கொண்டனர். சூட்டிங்களும் நிறுத்தப்பட்டன. அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் அங்கு செல்ல வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளது. ஆகவே, தீவிரவாதத்தால், அவர்களுக்கு தீமை தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜனநாய முறைகளை மறுத்து, தீவிரவாதத்தை வளர்க்கும், அவர்களை ஆதரிக்குமரீவர்கள் மீது, நிச்சயமாக தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். ஆப்கானிஸ்தான் அளவுக்கு வளர்த்து குண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. இப்பொழுது தான், சுரங்கப்பாதை திறந்து வைக்கும் போது, தீவிரவாதமா அல்லது சுற்றுலாவா, இரண்டில் ஒன்றை தேர்ந்தெட்த்துக் கொள்ளுங்கள் என்று மோடி கூறியிருப்பதால், நல்லதை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு நல்லதாகும் எனலாம்.

© வேதபிரகாஷ்

15-04-2017

CRPF-attacked -stonepelting- budgam

[1] மாலைமலர், காஷ்மீரில் துணை ராணுவத்தினரை இளைஞர்கள் விரட்டி தாக்குவதா?: ஷேவாக், காம்பீர் வேதனை, பதிவு: ஏப்ரல் 14, 2017 09:21.

[2] http://www.maalaimalar.com/News/Sports/2017/04/14092128/1079897/Gambhir-Sehwag-tweet-in-support-of-attacked-CRPF-Jawans.vpf

[3] தினதத்தந்தி, காஷ்மீரில், ராணுவ ஜீப்பில் இளைஞர், மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டாரா? ஏப்ரல் 15, 05:00 AM

[4] http://www.dailythanthi.com/News/India/2017/04/15025043/In-Kashmir-the-military-jeep-YouthHuman-shield-use.vpf

 

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது ஆப்கானிஸ்தானில் “வெடிகுண்டுகளுக்கெல்லாம் தாயிடம்” செத்தது! (2)

ஏப்ரல் 15, 2017

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது ஆப்கானிஸ்தானில்வெடிகுண்டுகளுக்கெல்லாம் தாயிடம்செத்தது! (2)

ISIS-K suffered huge loss

வெடிகுண்டுகளுக்கெல்லாம் தாய்என்ற குண்டை அமெரிக்கா ஐசிஸ் தீவிரவாத்களின் மீது போட்டது (13-04-2017): ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக அமெரிக்க படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன[1].  இந்நிலையில் அமெரிக்காவின் அணு ஆயுதம் அல்லாத மிகப்பெரிய குண்டாக கருதப்படும் MOAB [Mother of all bombs] GBU-43 என்ற குண்டை, 13-04-2017 அன்று இரவு 7 மணிக்கு ஐ.எஸ் அமைப்பினரின் இருப்பிடத்தில் அமெரிக்கப் படைகள் வீசின. அணுகுண்டுகள் இல்லாத ரகத்தில் இதுதான் மிகப் பெரிய வெடிகுண்டு. சுமார் 9,797 கிலோ எடை கொண்ட இந்த பிரமாண்ட வெடிகுண்டில், 9 ஆயிரம் டன் வெடிபொருள்கள் அடங்கியிருக்கும்[2]. இத்தாக்குதலில் குறைந்தபட்சம் 36 தீவிரவாதிகள் உயிரிழந்திருக்கக்கூடும் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது[3]. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் கேரளாவில் இருந்து சென்று ஐ.எஸ் அமைப்பினருடன் இணைந்து செயல்பட்ட 21 பேரில்,  2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது[4]. இருப்பினும், உள்ளூர் ஊடகங்கள், இப்படியெல்லாம் விளக்கி விட்டு, ஒரு / இருவர் சாவு? என்று கேள்விக்குறியைத்தான் போட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன[5]. இந்தியர்கள், கேரளாகாரர்கள், மலையாளிகள், ஜிஹாதிகள் என்றெல்லாம் சொன்னாலும், அவர்கள் உருவானதை விளக்க வேண்டும்.

ISIS-K kERALA NEXUS- WOMEN TOO

ஐசிஸுக்கு கேரள ஜிஹாதிகள் சென்றது எப்படி?: சரி, குடும்பத்தோடு, இந்த ஜிஹாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு எப்படி சென்றனர்? இந்த நபர்கள் அனைவருமே ஒரு இடைத் தரகர் மூலம் ஆப்கனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆப்கனில் தீவிரவாத செயல்களில் ஈடுபட இந்தியாவிலிருந்தே அதிகம் பேரை ஈர்க்க ஐஸ்ஐஎஸ் திட்டமிட்டிருந்தது. 13-04-2017 அன்று இரவு அமெரிக்கா நடத்திய மிகப்பெரிய குண்டு வீச்சு தாக்குதலில் கேரளாவிலிருந்து சென்று ஆப்கனில் தங்கியிருந்த 21 பேரும் கொல்லப்பட்டுவிட்டதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ‘ஒன்இந்தியாவிடம்’ பேசிய உளவுத்துறை அதிகாரி ஒருவர்[6], “இந்த தாக்குதல் இப்போது நடைபெறும் என்று முன்கூட்டியே நாங்கள் கணிக்கவில்லை. ஆனால் ட்ரம்ப் இப்படி செய்வார் என எதிர்பார்த்ததுதான். அமெரிக்காவின் இந்த தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து நாச வேலை செய்ய நினைப்போரின் சிந்தனையை மாற்றக் கூடியது. ட்ரம்ப் ஏற்கனவே தனது பிரசாரத்தின்போது கூறியதை இப்போது செயல்படுத்த ஆரம்பித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை முழுமையாக அழிகக அவர் எந்த எல்லைக்கும் செல்வார்,” என்றார்.  ஆனால், அசாசுதீன் ஒவைசி மற்றும் தமிழக-கேரள முஸ்லிம் தலைவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். என்னடா, இந்திய முஸ்லிம்கள் ஜிஹாதிகளாக மாறி கொல்லப்பட்டனரே என்று சதோசப்படுவதா அல்லது வருத்தப்படுவதா என்று தெரியவில்லை போலும்!

ISIS-K kERALA NEXUS

கேரளா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செல்ல மாநிலமாக மாறிவருவது எப்படி?:. கேரளா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செல்ல மாநிலமாக மாறிவருகிறது என்கிறது “ஒன்.இந்தியா” வளைதளம். அங்குள்ள பல முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தால் வலை வீசப்படுகிறார்கள் என்றும் சேர்த்து சொல்கிறது. இந்த ஆபத்தை உணர்ந்த கேரள முஸ்லிம் அமைப்புகள் பலவும் தங்கள் இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி அவர்களை நன் மார்க்கத்தில் திருப்ப முயன்று வருகின்றன, என்று “இன்.இந்தியா” கூறியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. மலப்புரம் என்ற தனி மாவட்டம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து ஆரம்பத்திலுருந்து வளர்த்த இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதம் ஆகி, தீவிரவாதம் ஆகி, இப்பொழுது, வெளிப்ப்டையான ஜிஹாத் ஆகியுள்ளது. ஆப்கனில் 13-04-2017 அன்று நடந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த அறிவிப்பை வெள்ளைமாளிகை வெளியிடவில்லை. அதுகுறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் இந்திய உளவுத்துறை ஈடுபட்டு வருகிறது. கேரளாவை சேர்ந்த 21 பேர் இறந்திருக்க கூடும் என்றபோதிலும், இதை “மினி கேரளா” என்ற கோட்வேர்ட் வைத்தே அழைக்கிறது இந்திய உளவுத்துறை[7].

kerala-isis-nexus-confirmed-youth-after-conversion-Afgan

ஊடகங்கள் உண்மைகளை மறைக்கும் விதம்: கடந்த அக்டோபர் [2016] மாதத்திலேயே, படித்த முஸ்லிம் இளைஞர்கள் அங்கு செல்வது ஊடகங்கள் எடுத்துக் காட்டின. ஆனால், ஒரு நிலையில், அதனை “கிருத்துவ-இஸ்லாமிய லவ்-ஜிஜாத்” போல கேரள ஊடகங்கள் சித்தரித்தன. எப்படியிருந்தாலும் ஐசிஸ்.ஸில் சேருவது ஏன் என்று விவாதிக்கப்படவில்லை. அதிலும் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று பயிற்சி பெறுகின்றனர் என்று செய்திகள் வந்தபோதிலும் அமைதியாக இருந்தனர்[8]. தங்களது மகன் / மகள் திரும்ப வரவேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை. ஏஜென்டுகளோ ஆட்களை அனுப்பிக் கொண்டே இருந்தனர்[9]. அதாவது ஏஜென்டுகளும் முஸ்லிம்கள் என்பதால், குடும்பத்திற்கு பணம் கிடைக்கிறது என்று அமைதியாக இருந்து விட்டனர் போலும். வேலைக்கு ஆட்களை அனுப்பி வைத்த கேரளா, இப்பொழுதும் ஆட்களை அனுப்பி வைக்கிறது, செய்யும் வேலை என்ன என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. கக்கூஸ் கழுவினாலும் சரி, இந்திய துரோகிகளாக இருந்தாலும் சரி, பணம் வருகிறது. குழந்தை வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரு கிருத்துவப் பாதிரியை பிடித்து வைத்தார்கள் எனும்போது, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, பணம் கொடுத்து விடிவிக்க செய்தனர். ஆக, இதன் பின்னணி என்ன என்பதும் மர்மமாக இருக்கிறது.

kerala-isis-nexus-confirmed-youth-after-conversion

ராணுவத்தில் சேர்ந்தால் மகிழும் தாயும், ஜிஹாதில் சேர்ந்தால் மகிழும் தாயும்: தன் மகன் ராணுவத்தில் சேர்ந்து இந்திய நாட்டிற்கு சேவைசெய்ய வேண்டும் என்று எத்தையோ தாய்மார்கள், பெற்றோர்கள் இருக்கும் நம் நாட்டில், இவ்வாறு தமது மகன் / மகள் ஹிஹாதியாகவேண்டும், தீவிரவாதியாக வேண்டும், மனித வெடிகுண்டாக வேண்டும் என்று ஆசைப்படும் தாய்மார்கள், பெற்றோர்கள் கண்டு திடுக்கிடுவதாக இருக்கிறது. அதாவது அவர்களது மனங்களே, தீவிரவாதத்தால் ஊறிப்போனதால், ஜிஹாதித்துவம் அவர்களுக்கு உற்சாகமாக இருக்கிறது, குண்டுவெடித்து மக்களைக் கொன்றால், ஆனந்தமாக இருக்கிறது, மனிதவெடிகுண்டாக வெடித்து மற்றவர்களைக் கொன்றால், அம்மகிழ்ச்சி இன்னும் பெரும்மடங்காகிறது போலும். இல்லையென்றால், பெற்ற தாய் எவளும் அதற்கு உடன்பட மாட்டாள். இருப்பினும், இவையெல்லாம் நிதர்சனமாக இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் தான், தங்களைக் காக்கும் ராணுவவீரர்களையே அவமதிக்கிறார்கள் கேடுகெட்ட காஷ்மீர் முகமதிய இளைஞர்கள். அவர்கள் பெற்றோர் அவர்களை அவ்விதமாக வளர்த்துள்ளனர் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

15-04-2017

six-arrested-02-10-2016 - KeralA NEXUS

[1] http://www.dailythanthi.com/News/World/2017/04/14121527/Missing-Kerala-youth-who-joined-IS-killed-in-Afghanistan.vpf

[2] விகடன், ஆப்கன் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் பலி?!,  Posted Date : 02:27 (15/04/2017); Last updated : 02:43 (15/04/2017)

[3] http://www.vikatan.com/news/world/86485-isis-kerala-recruits-feared-dead-in-afghanistan-attack.html

[4] நியூஸ்7.செனல், அமெரிக்கா வீசிய வெடிகுண்டில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு!, April 15, 2017.

[5] http://ns7.tv/ta/tamil-news/india-world/15/4/2017/least-2-20-isis-kerala-recruits-feared-dead-afghanistan-moab

[6] தமிழ்.ஒன்.இந்தியா, அமெரிக்க குண்டு வீச்சில் சிக்கி ஆப்கனில் ஒரு மினி கேரளாவே காலி!, ByVeera Kumar, Published: Friday, April 14, 2017, 10:06 [IST]

[7] http://tamil.oneindia.com/news/international/a-mini-kerala-is-recruits-was-wiped-in-trump-s-big-afghan-bombing/slider-pf232606-279763.html

[8] dailymail.co.uk, Deep links between young Keralans and ISIS as probe reveals THIRTY youths attended training camps in Afghanistan before returning to start sleeper cells, By INDIA TODAY; PUBLISHED: 23:28 BST, 25 October 2016 | UPDATED: 12:47 BST, 27 October 2016

The arrest of 31-year-old Subahani, who is a native of Thodupuzha in Idukki district, was a major breakthrough as he had identified key persons in the network…….NIA identified Sajeer Abdulla Mangalaseri as the chief of the IS network in Kerala. 35-year-old Sajeer, a Civil Engineer from National Institute of Technology, Kozhikode and a Salafist who hails from Moozhikal in Kozhikode has been recruiting people from Kerala in IS fold.

[9] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3872224/Deep-links-young-Keralans-ISIS-probe-reveals-THIRTY-youths-attended-training-camps-Afghanistan-returning-start-sleeper-cells.html

 

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், முகமதிய பயங்கரவாதமாகி, முஸ்லிம் ஜிஹாதாகி, துருக்க மனித வெடிகுண்டாக மாறியுள்ள நிலை! ஆனால் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் சாவு (1)

ஏப்ரல் 15, 2017

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், முகமதிய பயங்கரவாதமாகி, முஸ்லிம் ஜிஹாதாகி, துருக்க மனித வெடிகுண்டாக மாறியுள்ள நிலை! ஆனால் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் சாவு (1)

Abdul Rasheed - the death message - Kerala jihdi

கேரளா கடவுளின் தேசமா, சாத்தானின் தேசமா?: “கடவுளின் சொந்தமான தேசம்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு தப்பட்டம் அடித்துக் கொள்ளும் கேரளம், ஆரம்பகாலத்தில் கூலியாட்கள் மற்றும் வேலையாட்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது, அதாவது ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. பிறகு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கன்னியாஸ்திரிக்களை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. சமீபகாலத்தில் ஜிஹாதிகளை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. செக்ஸ் விவகாரங்களில் நாறடித்து வரும் நிலையில், இந்த ஜிஹாதி ஏற்றுமதி உலகத்தையே திகைக்க வைத்துள்ளது. கேராளாவில் தான் படித்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்கிறார்கள். பிறகு, எப்படி, அப்படி மெத்தப் படித்தவர்கள் இடையே, இத்தனை குரூரக் குற்றவாளிகள், கற்பழிப்பாளர்கள், கொலையாளிகள், குண்டுவெடிப்பாளர்கள், ஜிஹாதிகள் என்றெல்லாம் உருவாகிக் கொண்டிருப்பார்கள். படித்த படிப்பினால் பிரயோஜனம் இல்லையா? பிறகு அங்கிருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் எதைத்தான் அவர்கள் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸம், லெனினிஸம், மார்க்சிஸம் என்றெல்லாம் சொல்லி செக்யூலரிஸத்தை வளர்த்தனர். ஆனால், இஸ்லாமிய / கிருத்துவ அடிப்படைவாதங்கள், ஜிஹாதி தீவிரவாதங்கள் வளர்ந்து பெருகியதையும் அவர்கள் ஊக்குவித்துள்ளார்கள் என்றே தெரிகிறது. ஐசிஸ் சார்பாக இப்பொழுது வளைகுடா நாடுகளில் போரிடுவதோடு மட்டுமல்லாது, இந்தியாவுக்கும் எதிராக போராட ஆரம்பித்து விட்டார்கள்.

Kerala youth - women too

குடும்பத்தோடு ஜிஹாதி தீவிரவாதத்தில் சேர்வது எப்படி?: கேரள மாநிலத்தில் சமீப காலத்தில் பெண்கள் உள்பட 21 இளைஞர்கள் மாயமானார்கள். அவர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்பட்டது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் இருந்து 11 பேர் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தனர். இவர்களில் 4 பெண்கள் 3 குழந்தைகள் அடங்குவர். பெண்களில் இருவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள். அதாவது, இப்படி குடும்பத்தோடு ஜிஹாதி தீவிரவாதத்தில் சேர்கிறார்கள் என்றால், அவர்களது பெற்றோர் எப்படி அவர்களை வளர்த்துள்ளனர். அதையே தொழிலாக ஏற்றுக்கொள்ளும் வகையில், அவர்களது மனப்பாங்கு ஏற்பட எப்படி அவர்கள் ஒத்துழைத்தார்கள். அல்லது, அது நல்லதல்ல என்று நடுவில் கண்டுபிடித்தால், ஏன் தடுக்கவில்லை. இத்தகைய நிதர்சன கேள்விகள் எழுப்பப்படும் போது, பதில்கள் அவர்கள் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், நிகழ்வுகள் உண்மையினை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் ஏற்றுக் கொண்டு ஒத்துழைத்திருக்கிறார்கள். ஜிஹாதி தீவிரவாதத்திற்கு ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Kerala -USA bombed on Nangahar province, Afganisthan

காங்கிரஸுக்குப் பிறகு கம்யூனிஸ ஆட்சி வந்தாலும் நிலைமை மாறவில்லை: மும்பை வெடிகுண்டு விவகாரங்களில் மற்ற தென்னிந்திய வெடிகுண்டுகள் வழக்குகளில் கேரளாவின் தீவிரவாத பங்கு அதிகமாகவே இருந்து வருகிறது. டேவிட் கோல்மேன் ஹெட்லி [ஒரு முஸ்லிம்] மூணாறில் சொகுசு விருந்தினர் பங்களாவில் தங்கி உளவு பார்த்துச் சென்றதும், அதற்கு ஆவணவற்றை செய்து கொடுத்தவர்களும் அங்கு இன்றும் இருக்கிறார்கள். முன்னர் காங்கிரஸ்காரர்கள் உதவி செய்து வந்தார்கள். கிருத்துவ-இஸ்லமிய கும்பல்கள் அவர்களுக்கு எல்லாம் கொடுத்து வந்தன, அனுபவித்துத் திளைத்து நாட்டிற்கு துரோகம் செய்து வந்தனர். இப்பொழுது, கம்யூனிஸ ஆட்சி வந்துள்ளதால், அவை எல்லைகளைக் கடந்து போய் கொண்டிருக்கின்றன. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தவும் முதல்–மந்திரி பினராயி விஜயன் போலீசாருக்கு உத்தரவிட்டார். கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் சட்டசபையில் கூறும்போது, ‘‘கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த 17 பேர், பாலக்காட்டை சேர்ந்த 4 பேர் என 21 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் .எஸ். இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள .எஸ். முகாம்களுக்கு சென்றுவிட்டதாக பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன,’’ என்றார். ஆனால், மெத்தப் படித்த கேரளாகாரர்கள் என்னடா இது, மலையாள மக்கள் இந்த அளவுக்கு தீவிரவாதிகளாகி விட்டார்களா என்று கவலைப்பட்டதாகத் தெரியவில்ல.

Kerala youth - women too at Nangahar province, Afganisthan

பெற்றோர்உற்றோர்மற்றோர்களுடன் தீவிரவாதிகளின் தொடர்புகள் இருந்து வருவது: இந்நிலையில் 13-04-2017 அன்று ஐ.எஸ் இயக்கத்தில் செயல்பட்டு வரும் கேரள இளைஞரான முர்ஷித் என்பவர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் கொல்லப்பட்டு விட்டதாக, முர்ஷித்தின் பெற்றோர்களுக்கு டெலகிராம் மூலம் தகவல் வந்துள்ளது. அமெரிக்க வெடிகுண்டு தாக்குதலில் முர்ஷித் கொல்லப்பட்டு விட்டதாக தங்களுக்கு வந்த வாட்ஸ் அப் தகவல் வந்திருப்பதாக முர்ஷித் முகமதுவின் உறவினர்கள் கூறியுள்ளனர்[1]. சில வாரங்களுக்கு முன்னதாக (தி இந்து), / கடந்த இரு மாதங்களுக்கு முன் (தினத்தந்தி) ஐ.எஸ்.-ல் இணைந்த டி.கே.ஹபீசுதீன் (வயது 24) என்ற கேரள இளைஞர் அமெரிக்க தாக்குதலில் பலியானதாக இதேபோல் உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது[2]. காசர்கோடு மாவட்டம், பட்னே நகர இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் ரஹ்மான், இதுகுறித்து கூறியதாவது: “பட்னேவைச் சேர்ந்த முர்ஷீத் முகமது என்ற இளைஞர் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சமூக வலைதளம் ஒன்றின் மூலம் எனக்கு செய்தி கிடைத்தது[3]. அவர் இறந்த தேதி போன்ற பிற தகவல்கள் தெரியவில்லை”, என்று அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்[4]. ஆனால், இந்த தகவலை போலீஸ் தரப்பில் இன்னும் உறுதிபடுத்தவில்லை[5].

Kerala youth Hafeesudheen, who joined ISIS, killed in drone strike in Afghanistan

அப்பட்டமாக பொய் சொல்லும் பெற்றோர், உற்றோர், அரசியல்வாதிகள்: இப்படி பெற்றோர், உற்றோர்களுக்கு டெலகிராம் / வாட்ஸ் அப் தகவல் மூலம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன எனும்போது, அவர்களுக்கு தங்களது மகன் / மகள் / மறுமகன் / மறு மகள் / குடும்பம் முதலியன ஜிஹாதி தீவிரவாதத்தில் ஈடுபட்டிருப்பது தெரிந்தே இருக்கிறது என்பது உண்மையாகிறது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கும் தெரிந்துள்ளது. பிறகு, அவர்கள் ஏன் உரிய அதிகாரிகளிடம் புகார் கொடுக்கவில்லை, என்.ஐ.ஏ போன்ற விசாரணை குழுக்களுக்கு விவரங்கள் கொடுக்காமல் ஒத்துழைக்கவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன. ஆக, தெரிந்தே அவர்கள் அனுமதித்துள்ளனர், ஒப்புக்கொண்டுள்ளனர், ஒத்துழைப்புக் கொடுக்கின்றனர். அதாவது, இதில் சம்பந்தப் பட்டவர்களுக்கு பரஸ்பர லாபங்கள் இருக்கின்றன. ஒருவேளை கோடிக்கணக்கில் உதவிகள், அனுபவிக்கும் சகாயங்கள் முதலியன இவர்களுக்குக் கிடைத்து வருகின்றன போலும். அதனால் தான், மறைத்துள்ளனர், இன்றும் தங்களுக்கு விசயம் தெரிந்தாலும், போலீஸார் சொல்லவில்லை, உறுதிபடுத்தவில்லை என்றெல்லாம் சொல்வது, பொய் சொல்கிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. தங்கள் மகன் / மகள் காணவில்லை என்று புகைப்படங்களுடன், இவர்கள் போலீஸுக்கு புகார் அளிக்காமல் இருக்கும் பட்சத்தில், அவர்கள் எப்படி உறுதி செய்ய முடியும்?

© வேதபிரகாஷ்

15-04-2017

USA bombed on Nangahar province, Afganisthan

[1] தி.இந்து, .எஸ்.-ல் இணைந்த கேரள இளைஞர் அமெரிக்க தாக்குதலில் பலி, சி.கவுரிதாசன் நாயர், Published: April 14, 2017 16:49 ISTUpdated: April 14, 2017 16:49 IST.

[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/article9640031.ece

[3] தினமணி,.எஸ். அமைப்பில் சேர்ந்த கேரள இளைஞர் ஆப்கனில் சாவு?, By DIN  |   Published on : 15th April 2017 12:29 AM

[4] http://www.dinamani.com/india/2017/apr/15/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2684471.html

[5] தினத்தந்தி, .எஸ் இயக்கத்தில் இணைந்ததாக கூறப்பட்ட கேரள இளைஞர் ஆப்கானிஸ்தானில் பலி, ஏப்ரல் 14, 12:15 PM

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (4)!

பிப்ரவரி 26, 2017

.எஸ்.சில் ஆள்சேர்ப்பதற்கான சதிதிட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (4)!

chennai-mannady-isis-sponsor-arrested-mohammed-sanjeevin-today-photo

பர்மா பஜார் ஆட்கள் ஹவாலா பணத்தை நன்கொடையாகக் கொடுத்தது: மேலும், சென்னையில் உள்ள நான்கு முக்கிய பிரமுகர்களிடம் அவர் ஐ.எஸ் இயக்கத்திற்காக பணம் பெற்றுள்ளதாகவும், அவர்கள் யார் யார்? என்பதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேடப்படும் 4 பேரும் ரூ.3 லட்சம் வரை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு மண்ணடி, பர்மா பஜார் பகுதியைச் சேர்ந்த சிலர் ஹவாலா பணத்தை நன்கொடையாக வழங்கியிருப்பது தெரியவந்தது[1]. மண்ணடியில்ணைரும்பு வியாபாரம் செய்யும் எவரும் பலவித வரிகளை ஏய்த்து தான் வியாபாரம் செய்து வருகின்றனர். பர்மா பஜார் வியாபாரத்தைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கருப்புப் பணம் அதிகமாக உற்பத்தியாவதே அத்தொழில்களில் தான். போதாகுறைக்கு, ஹவாலா என்றால், கேட்கவா வேண்டும். இத்தகைய பணம் தான் தீவிரவாதத்திற்கு செல்கிறது. இதையடுத்து போலீஸார், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்து போலீஸார் 22-02-2017 புதன்கிழமை விசாரணை செய்தனர்[2]. அளித்திருப்பதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது 20-02-2017லிருந்து, அந்த நான்கு பேரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார், அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை மூலம், சென்னையில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் பற்றிய மேலும் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது[3]. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு உதவி செய்ததாகவும், அந்த இயக்கத்தில் இருந்ததாகவும் தமிழகத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[4]. சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த சுவாலிக் முகமது, திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சுபஹானி, கோவையைச் சேர்ந்த அபு பஷீர் உள்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 3 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

burma-bazar-chennai

பிப்ரவரி 16, 2017 அன்று பாபநாசம் மொஹம்மது நாசர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்: மொஹம்மது நாசர் / காலித் [4 வயது], தந்தை பெயர் – பக்கீர் மொஹம்மது, விலாசம் – 17/3, சின்னக்கடை, திருப்பாலத்துரை தெரு, பாபநாசம் போஸ்ட், தஞ்சாவூர் தாலுகா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் துபாயில் அக்டோபர் 2014 வரை வேலை செய்து வந்தான். ஐஎஸ்.சுடன் சேர்ந்து “ஜிஹாத்” போரிட வேண்டும் என்ற வெறியுடன், தனது இந்திய சகாக்கள் சிலருடன் செப்டம்பர் 2015ல் சூடானுக்கு சென்றிருக்கிறான். அங்கேயேயிருந்து, பல ஆட்களுடன் தொடரு கொண்டு, இருந்தான். ஆனால், டிசம்பர் 11, 2015 அன்று தில்லிக்கு வந்தபோது, கைது செய்யப்பட்டான். ஜூன்.3, 2016 அன்று அவன் மீது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 21, 2017 அன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பிப்ரவரி 16, 2017 அன்று மறுபடியும் பல பிரிவுகளில், தில்லி-பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதாவது, இதெல்லாம் ஒரே நேரத்தில் நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அந்த தஞ்சாவூர் / பநாசம் மொஹம்மது நாசருக்கு, இந்த சென்னை மொஹம்மது இக்பாலை தெரியுமா-தெரியாதா என்று ஆராய்ச்சி செய்யலாமே?

mohamed-naser-391_1_pressrelease_17_02_2017-papanasam

மைல்லாப்பூர் மொஹம்மது இக்பாலை யாரும் கண்டு கொள்ளவில்லை: சென்னை பஜார் தெரு, மயிலாப்பூரை சேர்ந்த மொஹம்மது இக்பால் என்றவன் வாழ்ந்து வருகிறான் என்றால், யாரும் ஒன்றும் நினைத்திருக்க மாட்டார்கள் எனலாம். ஆனால், அவன் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு, பணம் சேகரித்து வருகிறான் என்பது யாருக்கும் தெரிந்திருக்காது. சரி, சென்னையிலேயே அப்படி பணத்தை தாராளமாக தரும் முஸ்லிம்களும் இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. பிறகு, அவர்களின் தேசப் பற்று எத்தகையது என்பது யோசிக்கத் தக்கது. சாதாரணமான விசயங்களுக்கு மேலும்-கீழும் குதித்து ஆர்பாட்டம் செய்து, கலாட்டா செய்யும் முஸ்லிம்கள் இத்தகைய விசயங்கள் வெளிவரும் போது, ஒன்றுமே தெரியாதது போலவும், நடக்காதது போலவும் இருப்பார்கள் என்றும் தெரிந்ததே. இந்துத்துவவாதிகள் போன்றோருக்கு கவலையே இல்லை. அதிமுக, சசிகலா, தீபா என்று பேசியே பொழுது போக்கி விடுவார்கள். மைல்லாப்பூர் தான், “இந்தித்துவவாதிகள்” அதிகம் இருக்கும் இடமாயிற்றே, துப்பறியும் புலிகள் கண்டு கொள்ளவில்லையா?

is-linked-terrorists-interrogated-by-ap-police-26_02_2017_112_010

மொஹம்மது இக்பாலின் சைனா பயணங்கள் முதலியன: சீனா பொருட்களை வாங்காதீர்கள், தடை செய்யுங்கள், எதிர்ப்போம் என்றெல்லாம், டுவிட்டர், பேஸ்புக் முதலியவற்றில் இந்துத்துவ வீரர்களும் காரசாரமாக பதிவு செய்வர். 100-500 என்றெல்லாம் “லைக்ஸ்” போடுவர். இக்பால் “டிராவல் ஹக்” என்ற சமூக குழுவை டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்-அப் முதலியவற்றில் நடத்தி வந்தான். ஆனால், பிப்ரவரி 4, 2017 அன்று கைதான போது, அவற்றையெல்லாம், சுத்தமாக நீக்கிவிட்டானாம்[5]. இருப்பினும், கணினி வல்லுனர்கள் அவற்றை அறிய முடியாமலா போய்விடும்? அவற்றை மீட்டெடுக்க வழிகள் இல்லாமலா இருக்கும்? இதுவும் பிஜேபி-கணினி வல்லுனர், இந்துத்துவவாதிகளுக்கு தெரியாது போலும். தெரிந்தால் உதவலாமே? ஆனால், மைலாப்பூரில், ஒருவன் சீனப்பொருட்களை வாங்கி விற்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியாது போலும். அவர்களும் கடைகள் வைத்திருப்பதால், ஊக்குவிக்கிறார்களோ என்னமோ? ஆகவே, இக்பால் சீனாவிலிருந்து வரும் பொருட்களை, குறிப்பாக மொபைல் விற்பனையில் பணம் சம்பாதித்து வந்தான்[6]. இதனால், கடத்தல்காரர்களிடமும் தொடர்பு இருந்தது. இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தான்.

jameel-ahmad-arrested-in-oct-2016

ஐசிஸ் தொடர்புகளால் கண்காணிக்கப் பட்டு மாட்டிக் கொண்டான்: ஐசிஸ் தொடர்புகளால், அவன் சந்தோசமாக இருந்தாலும், பிரச்சினை வந்தது. அக்டோபர் 2016ல் கைதான் ஜமீல் கான் [Jameel Khan] மற்றும் 2014ல் கர்நாடகாவில் கைதான மெஹ்தி மஸ்ரூர் பீஸ்வாஸ் [Mehdi Masroor Biswas] முதலியோருடன் இவனுக்கு தொடர்பு இருந்தது என்பதனை என்.ஐ.ஏ தெரிந்து கொண்டது[7]. வியாபார நிமித்தம் மலேசியா, சிங்கப்பூர், மெக்கா, மெதினா, சைனா என்று பலதடவை சென்றிருக்கிறான். சைனாவுக்கு மட்டும் எட்டு முறை சென்று வந்திருக்கிறான்[8]. இதனால், சைனாவுக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ல தொடர்புகளையும் ஆராய வேண்டும். ஏனெனில், சைனப் பொருட்களை எப்படி இறக்குமதி செய்கிறார்கள் அல்லது இந்தியாவிற்குள் வருகின்றன என்பதில் வரியேப்பு போன்ற விசயங்களையும் கவனிக்க வேண்டும். இந்த விவரங்களும் சரி பார்க்கப்பட்டன. பலதடவை ஐசிஸுடன் சேர சிரியாவுக்கு செல்ல முயற்சித்திருக்கிறான். ஆனால், பல காரணங்களுக்காக முடியவில்லை[9]. இதனால், சென்னையில் இருந்து கொண்டே, நிதி திரட்டுமாறு அவனுக்கு ஆணையிடப்பட்டது. அதைத்தான், அவன், விசுவாசத்துடன் செய்து வந்தான். தனது, மொமைல் மூலம் தெரிந்து கொண்ட நுணுக்கங்களை, தீவிரவாதம் வளர்க்க உபயோகித்தான்[10].

mohammed-iqbal-isis-fund-kik-messengaer“கிக் மெஸஞ்சர்”, “டெலிகிராம்” போன்றவற்றை உபயோகித்து, அபு-சாத் அல்-சுடானி மற்றும் அபு ஒஸாமா அல் சொமானி என்ற இருவருடன் தொடர்பு கொண்டிருந்தான்[11]. இப்பொழுது, அந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில் மாட்டிக் கொண்டான். சென்னை கல்லூரி மாணவர்களுக்கும் இவனுக்கும் தொடர்புகள் இருக்கின்றன[12].  அப்படியென்றால், பெற்றோர்களுக்கு, உறவினர்களுக்கு, மற்றவர்களுக்குத் தெரியாமலா போகும்? மற்றும் சுமார் 20 பேர்களுடன், நிதி தொடர்பான சம்பந்தங்களும் இருக்கின்றன. ஆனால், அவன் சொல்லாமல் சாதித்து வருகிறான்.

© வேதபிரகாஷ்

26-02-2017

mohammed-iqbal-isis-fund-telegram

[1] தினமணி, .எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஹவாலா பணம்: என்... விசாரணை, Published on 24 February, 2017, 03.24 AM

[2]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/24/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2654997.htmlUPDATED: FEBRUARY 22, 2017 01:18 IST

[3] தினமணி, .எஸ். இயக்கத்துக்கு நிதி அளித்த சென்னை இளைஞர் கைது: மேலும் 4 பேர் சிக்குகின்றனர்: சிரியா செல்ல திட்டமிட்டது அம்பலம், Published on : 21st February 2017 01:47 AM

[4]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/21/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2653020.html

[5] With two foreign handlers and one local link ‘Jameel Khan’, Iqbal is now being probed for his alleged links to Shami Witness, now known as Mehdi Masroor Biswas, who was arrested by Karnataka Police in 2014. He was alleged to have operated the single most influential pro-ISIS Twitter account from India, which was followed by two-thirds of all the foreign jihadis, but its was identity exposed following a Channel 4 News investigation in the UK.

http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4243456/Arrested-ISIS-recruit-links-Medhi-Biswas.html

[6] On the face of it, everything about Iqbal – a businessman of Chinese mobiles and goods – looked innocuous. He belongs to a well-to-do Chennai-based family and is married with two children, staying in the upmarket locality of Myalapore. However Iqbal’s undoing began after he was radicalised online.

dailymail.co.uk, Arrested ISIS ‘recruit’ was ‘radicalised online’ and ‘had links to Medhi Biswas’, By KAMALJIT KAUR SANDHU, PUBLISHED: 23:46 GMT, 20 February 2017 | UPDATED: 02:55 GMT, 21 February 2017.

[7] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4243456/Arrested-ISIS-recruit-links-Medhi-Biswas.html

[8] Iqbal who ran an account ‘Travel Haq’ on social media sites had deleted his account just before his arrest on February 4, making it difficult for the ATS to establish the link. Iqbal frequented Malaysia, Hong Kong, Singapore, Mecca and Medina but his business interests took him to China seven to eight times.

dailymail.co.uk, Arrested ISIS ‘recruit’ was ‘radicalised online’ and ‘had links to Medhi Biswas’, By KAMALJIT KAUR SANDHU, PUBLISHED: 23:46 GMT, 20 February 2017 | UPDATED: 02:55 GMT, 21 February 2017.

[9] DECCAN CHRONICLE.Chennai: 4 college students under intelligence scanner for ISIS links,| R PRINCE JEBAKUMAR, Published: Feb 22, 2017, 1:50 am IST; Updated: Feb 22, 2017, 8:46 am IST

[10] A year before his arrest, he is believed to have gone through websites of ISIS, drawn by Abu Bakr al-Baghdadi’s declaration of a caliphate.  Through social media applications like Kik messenger and telegram, Iqbal allegedly established contact with two ISIS handlers Abu Saad al-Sudani, a Sudanese, and Abu Osama Al Somali, a Somalian notorious commander.  Arrested earlier this month in Rajamundri on Andhra Pradesh-Tamil Nadu border, Iqbal spilled the beans of his failed dream to fight along with other ISIS militants in Syria and Iraq to establish a caliphate.  On invitation from Saad, Iqbal made two attempts to reach the warzone in Syria – first, applying for a visa to Turkey to slip into Syria to get trained as an ISIS fighter in one of several ISIS’ camps, and secondly, by trying to reach Turkey through the France route,’ Rajasthan ATS ADG Umesh Mishra told Mail Today.  ‘After his failed attempts, Sudani advised Iqbal to raise funds for the establishment of caliphate. Five fund transfers made by Iqbal to [Jameel] Ahmed are now under scanner.

http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4243456/Arrested-ISIS-recruit-links-Medhi-Biswas.html

[11] dailymail.co.uk, Arrested ISIS ‘recruit’ was ‘radicalised online’ and ‘had links to Medhi Biswas’, By KAMALJIT KAUR SANDHU, PUBLISHED: 23:46 GMT, 20 February 2017 | UPDATED: 02:55 GMT, 21 February 2017.

[12] The custodial interrogation of an ISIS sympathiser from the city had revealed the role of at least 14 others being involved in the Chennai module; of them four could be college students.

http://www.deccanchronicle.com/nation/in-other-news/220217/chennai-four-city-college-students-under-radar-for-isis-links.html

 

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (3)!

பிப்ரவரி 26, 2017

.எஸ்.சில் ஆள்சேர்ப்பதற்கான சதிதிட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (3)!

ISIL Chennai terror nexus - The Hindu - a tale of two friends

சென்னையில் ஐஎஸ்.தீவிரவாதிகளின் திட்டங்கள்: சிரியா மற்றும் ஈரானை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், உலக நாடுகள் பல வற்றில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், உலக நாடுகளில் உள்ள இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் சேர்ப்பதற்கான வேலைகளையும் செய்து வருகிறது. இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய உளவுத் துறை, மாநில போலீசாருடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2016 ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரபல தங்கம் கடத்தல் மன்னன், ஜமீல் முகமது என்பவரிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர்களை குறிவைத்து ஐ.எஸ் தீவிர வாத இயக்கும் காய் நகர்த்தி வருவது தெரிய வந்துள்ளது[1]. அதாவது, ஐஎஸ் தீவிரவாதிகள் சென்னையிலேயே இருக்கிறார்கள். ஜெயலலிதா இறப்பு, ஜல்லிக்க்கட்டு, சசிகலா விவகாரங்களில் இவை மறைக்கப்படுகின்றன.

after_iqbal_failed_twice_to_reach_syria_he_was_advised_to_raise_-money

மைலாப்பூரில் வாழ்ந்த ஐஎஸ் தீவிரவாதி: இக்பால் என்ற வாலிபருடன் ஜமீல் கான் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது[2]. இக்பால் ஐ.எஸ்.இயக்கத்துக்கு தமிழகத்தில் இருந்து நிதி திரட்டி கொடுக்கும் பணியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[3]. அந்தவகையில் இக்பால், ஜமீல் முகமதுவிடம் ரூ.65 ஆயிரம் பணம் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது[4]. இதையடுத்து ராஜஸ்தான் போலீசார், தமிழக போலீசாரின் உதவியுடன் இக்பாலை தேடி வந்தனர். இந்தநிலையில் இக்பால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 06-02-2017 அன்று தங்க கடத்தலில் சிக்கினார். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சென்னையில் இக்பாலை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், ராஜஸ்தான் போலீசார் சென்னைக்கு விரைந்து வந்தனர். பின்னர் புழல் சிறையில் இருந்த இக்பாலை ராஜஸ்தான் மாநில நீதிமன்றத்தில் கைது உத்தரவு பெற்று முறைப்படி 13-02-2017 அன்று கைது செய்தனர்.

mohammed-iqbal-taken-to-rajastan-for-interrogation-25_02_2017_013_010

mohammed-iqbal-taken-to-rajastan-for-interrogation-25_02_2017_013_010

ஐ.எஸ்.தீவிரவாதியான ஜமீல் முகமதுவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து நிதி உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் இக்பால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், இக்பால் நீண்ட நாட்களாகவே ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  ஆக சென்னை மக்கள், ஐஎஸ் எரிமலை மீது உட்கார்ந் திருக்கின்றனர், இந்த வெறியர்கள், என்றைக்கு குண்டு வைப்பர்களோ, என்ன நடக்குமோ என்று தெரியவில்லை.

chennai-mannady-isis-sponsor-arrested-mohammed-iqbal

சிரியாவுக்கு செல்ல முடியாது மொஹம்மது இக்பால்: முகமது இக்பாலிடம் 22-02-2017 அன்று விடிய விடிய நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது[5]: “முகமது இக்பால் கடந்த 2015ம் ஆண்டு ஈரான் நாட்டிற்கு செல்ல ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகத்தில் விசாவுக்கு பதிவு செய்திருந்தார். பின்னர் முகமது இக்பால் தந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் அவர் தூதரகத்தில் விசா பெறுவதற்கான விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. இதற்காக ஒரு பன்னாட்டு ஏஜென்சியை அணுகினார். அதன்படி iqb1984@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பை ஏற்படுத்தி அதில் கிடைக்கப்பற்ற தகவல்கள் மூலமாக ஒரு குறிப்பிட்ட பன்னாட்டு சுற்றுலா சேவை நிறுவனத்திற்கு மின் அஞ்சல் பணம் பரிமாற்றம் மூலமாக 90 யூரோ அதாவது இந்திய மதிப்பில் 8,098 ரூபாயை  செலுத்தியுள்ளார்[6]. இவ்வளவவுதான், தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன. ஜல்லிக் கட்டு விவகாரத்தில், முஸ்லிம்கள் கலாட்டா செய்தது, இத்தகைய விவகாரங்களை மறைக்கத்தானா என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஓருவருடைய தனிப்பட்ட விவரங்களைக் கொடுப்பதை விட, அவனது கூட்டாளிகள் யார், எப்பொழுது கைது செய்யப் பட்டார்கள் போன்ற விவகாரங்களைக் கொடுக்கலாம். என்.ஐ.ஏ கைது செய்யப்பட்டவர்களின் விவகாரங்கள், அவர்கள் செய்த குற்றம் முதலியவற்றை தனது இணைதளத்தில், தினமும் வெளியிட்டு வருகிறது.

© வேதபிரகாஷ்

26-02-2017

chennai-mannady-isis-sponsor-arrested-mohammed-iqbal-dainik-bhaskar-photo

[1] The Hindu, Mylapore resident has IS links, Chennai, February 22, 2017 01:18 IST;  Updated: February 22, 2017 01:18 IST.

[2] A resident of Mylapore, who was arrested by intelligence agencies in Rajasthan last month January 2017, has revealed during interrogation that he had links with the Islamic State. A senior officer of the city police said Mohammed Iqbal (32), a resident of Bazaar Street, was arrested based on a tip-off obtained from the Rajasthan Anti-Terrorist Squad.

http://www.thehindu.com/news/cities/chennai/mylapore-resident-has-is-links/article17343462.ece

[3] சென்னை.ஆன்.லைன், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய சென்னை வாலிபர் கைது, February 21, 2017, Chennai.

[4] http://www.chennaionline.com/article/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81

[5] தினகரன், ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய விவகாரம், சிரியா தலைவரிடம் பேசியது என்ன? சென்னை வாலிபரிடம் விசாரணை, 2017-02-23@ 00:04:40

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=282040