Posted tagged ‘காஷ்மீரம்’

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் (1)

ஜூலை 30, 2017

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் (1)

Shabir sha meeting Abdul Basit - August .2014

பணபறிமாற்றத்தில் பாகிஸ்தான் தூதரகம் சம்பந்தப்பட்டது (மே. 2017): 28-07-2017 அன்று பாகிஸ்தானின் பிரதமர் ஊழல் விசயமாக பதவி விலகிய போது, பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் பதவியும் பறிபோனது. ஆனால், இந்த ஆள் தான், பிரிவினைவாதிகள், தீவிரவாதிகளை, தில்லியில் உள்ள தூதரகத்திற்கு வரவழைத்து, சதிதிட்டங்களைத் தீட்டி, காஷ்மீரத்தில் எப்பொழுதும் அமைதி குலைக்க அவர்களுக்கு பணம் கொடுத்தது மே 2017ல் தெரிய வந்தது என்பதை நினைவு கொள்ள வேண்டும். ரூ.70 லட்சம் பாகிஸ்தான் உளவு துறை ஐ.எஸ்.ஐ மூலம், ஹுரியத் தலைவர் ஷபிர் ஷா [Hurriyat leader Shabir Shah] வழியாக, கல்லெறி ஜிஹாதிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது[1]. சமீபத்தில் கைதான இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள், இதை ஒப்புக்கொண்டு விவரங்களைக் கொடுத்துள்ளனர்[2]. பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் [Abdul Basit, Pakistan’s envoy to India] மூலம் பணம் பரிமாறப்பட்டுள்ளது[3]. அதாவது தூதரகம் மூலமாகவே இத்தகைய தீவிரவாதிகளுக்கு பணவிநியோகம் நடந்துள்ளது[4].  “ஹைகமிஷனராக” இருந்து கொண்டு செய்திருக்கிறாரா என்று கேள்வி கேட்டுள்ளன ஊடகங்கள்[5].

SYurriat meeting Abdul Basit - August .2014

இந்தியா பாகிஸ்தான் விசயத்தில் மெத்தனமாக இருக்கிறதா?: ஒரு புறம் யாதவை உளவாளி என்று அறிவித்து, பாகிஸ்தான் அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து, அனைத்துலக ரீதியில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இவ்வளவு உள்ளூர் விசயங்களில் தலையீடு செய்து, கலவரங்களை உண்டாக்கி வந்தாலும், அதுபோன்று நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஊடகங்கள் இவற்றை எடுத்துக் காட்டினாலும், அரசு முறையாக இதைப்பற்றி ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அப்துல் பசித்தை கூப்பிட்டு விளக்கம் கேட்கவில்லை. சென்ற ஆண்டு-2016, இவர் காஷ்மீரில் இருக்கும் ஊடகக்காரர்களை வரவழைத்து, இந்தியாவிற்கு எதிரான விசயங்களை அதிகப்படுத்தி, செய்திகளாக போடவும், அதன் மூலம், அங்குள்ள மக்களைத் தூண்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிந்ததும், இங்கு குறிப்பிடத் தக்கது[6]. தூதுவர், தூதரகம், இருநாட்டு உறவுகள் போன்ற விசயங்களில் இந்தியா மென்மையாக, மெதுவாக, சோம்பேறித்தனமாக செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் ஆட்கள் அதிகமாக இருப்பதும் தெரிய வருகின்றன.

Kashmir separatist leaders aiding and abeting terror

காஷ்மீர தீவிரவாத-பயங்கரவாத-பிரிவினைவாதிகளின் இரட்டை வேடங்கள், துரோகங்கள், தேசவிரோதச் செயல்கள்: சையது அலி ஷா கிலானி, மீர்வ்யிஸ் பரூக், முதலியோர் அரசின் செலவில் பாதுகாப்புப் பெற்றுள்ளார்கள். ஆனால், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். ஶ்ரீநகர் போன்ற முக்கிய இடங்களில் வர்த்தக வளாகங்களின் சொந்தக்காரர்களாக இருந்து கொண்டு கோடிகளில் வாடகை, குத்தகை போன்றவற்றில் வருமானம் பெற்று வருகிறார்கள், சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பையன்கள், பேரன்கள் தில்லி மற்றும் மற்ற இந்திய மற்றும் அயல்நாடுகளில் உள்ள சிறந்த பள்ளிகள்-கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். ஆனால், காஷ்மீரில் உள்ள பள்ளிகள்-கல்லூரிகள் நடத்த விடாமல் கலாட்டா செய்து வருகிறார்கள். மாணவ-மாணவியர் பள்ளிகள்-கல்லூரிகளுக்குச் சென்று படிக்காமல், பணம் கொடுத்து, திசைத் திருப்பி, கல்லடி-ஜிஹாதிகளாக செயம்பட வைக்கின்றனர். ஷபிர் ஷா தொடர்புகள் நயீன் கான் மூலம் தெரிய வந்ததால், அவனை சையது அலி ஷா கிலானி கட்சியிலிருந்து விலக்கி வைத்தார். ஆனால்

NIA press release 19-05-2017

19-05-2017 அன்று ஆரம்ப விசாரணை நடவடிக்கை பதிவு செய்தது[7]: “இந்தியா டிவி” தொலைக்காட்சியில் வெளியான, நிருபர் மற்றும் ஹுரியத் கான்பரன்ஸ் தலைவர்களின் உரையாடகளில் தீவிரவாத பணபரிவர்த்தனைப் பற்றிய விசயங்களை கண்டு கொண்டது.

  1. பொதுசொத்துக்களுக்கு நாசம் விளைவித்தது,
  2. பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்து கலவரம் புரிந்தது,
  3. பள்ளிகளை எரித்தது,
  4. அரசாங்க அலுலகங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு நாசம் விளைவித்தது

போன்ற சட்டவிரோத காரியங்களை மேற்கொள்ள கீழ் கண்ட ஹுரியத் தலைவர்களுக்கு, பாகிஸ்தானிய தீவிரவாதியான, ஹாவிஸ் மொஹம்மது சையது மற்றும் தீவிரவாத இயக்கங்கள் மூலம் பணம் பெற்ற விவகாரங்களில் ஆதாரம் இருப்பதால், அவர்களிடம் விசாரிக்க, ஆரம்ப விசாரணை துவங்கப்பட்டது:

  1. சையது அலி ஷா கிலானி [Syed Ali Shah Geelani],
  2. நயீம் கான் [Naeem Khan],
  3. பரூக் அஹமது தார் [Farooq Ahmed Dar],
  4. காஜி ஜேவத் பாபா [Gazi Javed Baba],
  5. மற்றும் பலர் [and others]

இதில் விசயம் என்னவென்றால், இவர்கள் எல்லோருமே, இந்தியாவில், இந்திய குடிமகன்களாக இருந்து கொண்டு, சொத்துகள் வைத்துக் கொண்டு அவற்றிலிருந்து லட்சக்கணக்கில் வருவாய் பெற்றுக் கொண்டு, இவ்வாறு செய்து வருகின்றனர். தங்களது மகன், மகள், பேரன், பேத்தியர் முதலியவர்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்ல படிப்பு படிக்க வைத்து, உள்ளூர் மக்கள் படிக்கவிடாத படி, பள்ளிகளை எரித்து வருகின்றனர்.

Curfew in rajouri

Curfew in rajouri

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்குகல்லெறிஜிஹாதிகளுக்கு நிதியுதவி: ஜம்மு – காஷ்மீரில், பிரிவினைவாத தலைவன், சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷா உட்பட, ஏழு பேரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு [The National Investigation Agency (NIA)], பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் கைது செய்துள்ளது[8]. ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சமீபத்தில், ரம்ஜான் பண்டிகை முடிந்ததும், பிரிவினைவாத தலைவன் சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷாவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர்[9]. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுவது குறித்தும், என்.ஐ.ஏ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது.  குறிப்பாக கல்லெறி-ஜிஹாதிகளுக்கு மாத சம்பளம் கொடுத்து, தொடர்ந்து கலவரத்தில் ஈடுபடுத்தப் படுவதும் கண்டுபிடிக்கப் பட்டது. இதில், சுமார் 100 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

30-07-2017

Burhan Wani - praised by Urudu PAK media

[1] Times of India, How ISI funds stone-pelters via Hurriyat in Kashmir: Times Now, TIMESOFINDIA.COM | Updated: May 6, 2017, 06.30 PM IST

[2] http://timesofindia.indiatimes.com/india/how-isi-funds-stone-pelters-via-hurriyat-in-kashmir-times-now/articleshow/58546402.cms

[3]  Zeenews, Pak embassy helps distribute ISI funds to stone-pelters in Kashmir: Report, By Zee Media Bureau | Last Updated: Sunday, May 7, 2017 – 00:36.

[4] http://zeenews.india.com/india/pak-embassy-helps-distribute-isi-funds-to-stone-pelters-in-kashmir-report-2002780.html

[5] Times.now, Is Pak high commissioner Abdul Basit paying separatists to create unrest in Kashmir? , May 06, 2017, 13.33 IST.

[6] Sources say that last year the Pakistan high commission had invited Kashmiri journalists to a meeting where they were asked to file reports project Indian security forces in bad light so they can generate hatred towards India and create a mass movement.

http://www.timesnow.tv/india/video/is-pak-high-commissioner-abdul-basit-paying-separatists-to-create-unrest-in-kashmir/60563

[7] NIA has also taken cognizance of the news item related to the recording of conversations between the reporter and leaders of the separatist groups operating in Kashmir valley, by India Today TV, on 16.05.2017 in this regard. National Investigation Agency has registered a PE (Preliminary Enquiry) into the funding of Hurriyat leaders namely Syed Ali Shah Geelani, Naeem Khan, Farooq Ahmed Dar, Gazi Javed Baba and others in J&K by Hafiz Muhammed Saeed and other Pakistan based terrorists and agencies to carry out subversive activities in Kashmir and for damaging public property, stone pelting on the security forces, burning of schools and other Government establishments.

http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/413_1_PressRelease19052017.pdf

[8] தினமலர், கிலானியின் மருமகன் கைது : காஷ்மீரில் என்..., அதிரடி, பதிவு செய்த நாள்.ஜூலை 24.2017, 22:01.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1818923

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், முகமதிய பயங்கரவாதமாகி, முஸ்லிம் ஜிஹாதாகி, துருக்க மனித வெடிகுண்டாக மாறியுள்ள நிலை! ஆனால் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் சாவு (1)

ஏப்ரல் 15, 2017

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், முகமதிய பயங்கரவாதமாகி, முஸ்லிம் ஜிஹாதாகி, துருக்க மனித வெடிகுண்டாக மாறியுள்ள நிலை! ஆனால் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் சாவு (1)

Abdul Rasheed - the death message - Kerala jihdi

கேரளா கடவுளின் தேசமா, சாத்தானின் தேசமா?: “கடவுளின் சொந்தமான தேசம்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு தப்பட்டம் அடித்துக் கொள்ளும் கேரளம், ஆரம்பகாலத்தில் கூலியாட்கள் மற்றும் வேலையாட்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது, அதாவது ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. பிறகு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கன்னியாஸ்திரிக்களை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. சமீபகாலத்தில் ஜிஹாதிகளை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. செக்ஸ் விவகாரங்களில் நாறடித்து வரும் நிலையில், இந்த ஜிஹாதி ஏற்றுமதி உலகத்தையே திகைக்க வைத்துள்ளது. கேராளாவில் தான் படித்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்கிறார்கள். பிறகு, எப்படி, அப்படி மெத்தப் படித்தவர்கள் இடையே, இத்தனை குரூரக் குற்றவாளிகள், கற்பழிப்பாளர்கள், கொலையாளிகள், குண்டுவெடிப்பாளர்கள், ஜிஹாதிகள் என்றெல்லாம் உருவாகிக் கொண்டிருப்பார்கள். படித்த படிப்பினால் பிரயோஜனம் இல்லையா? பிறகு அங்கிருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் எதைத்தான் அவர்கள் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸம், லெனினிஸம், மார்க்சிஸம் என்றெல்லாம் சொல்லி செக்யூலரிஸத்தை வளர்த்தனர். ஆனால், இஸ்லாமிய / கிருத்துவ அடிப்படைவாதங்கள், ஜிஹாதி தீவிரவாதங்கள் வளர்ந்து பெருகியதையும் அவர்கள் ஊக்குவித்துள்ளார்கள் என்றே தெரிகிறது. ஐசிஸ் சார்பாக இப்பொழுது வளைகுடா நாடுகளில் போரிடுவதோடு மட்டுமல்லாது, இந்தியாவுக்கும் எதிராக போராட ஆரம்பித்து விட்டார்கள்.

Kerala youth - women too

குடும்பத்தோடு ஜிஹாதி தீவிரவாதத்தில் சேர்வது எப்படி?: கேரள மாநிலத்தில் சமீப காலத்தில் பெண்கள் உள்பட 21 இளைஞர்கள் மாயமானார்கள். அவர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்பட்டது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் இருந்து 11 பேர் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தனர். இவர்களில் 4 பெண்கள் 3 குழந்தைகள் அடங்குவர். பெண்களில் இருவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள். அதாவது, இப்படி குடும்பத்தோடு ஜிஹாதி தீவிரவாதத்தில் சேர்கிறார்கள் என்றால், அவர்களது பெற்றோர் எப்படி அவர்களை வளர்த்துள்ளனர். அதையே தொழிலாக ஏற்றுக்கொள்ளும் வகையில், அவர்களது மனப்பாங்கு ஏற்பட எப்படி அவர்கள் ஒத்துழைத்தார்கள். அல்லது, அது நல்லதல்ல என்று நடுவில் கண்டுபிடித்தால், ஏன் தடுக்கவில்லை. இத்தகைய நிதர்சன கேள்விகள் எழுப்பப்படும் போது, பதில்கள் அவர்கள் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், நிகழ்வுகள் உண்மையினை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் ஏற்றுக் கொண்டு ஒத்துழைத்திருக்கிறார்கள். ஜிஹாதி தீவிரவாதத்திற்கு ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Kerala -USA bombed on Nangahar province, Afganisthan

காங்கிரஸுக்குப் பிறகு கம்யூனிஸ ஆட்சி வந்தாலும் நிலைமை மாறவில்லை: மும்பை வெடிகுண்டு விவகாரங்களில் மற்ற தென்னிந்திய வெடிகுண்டுகள் வழக்குகளில் கேரளாவின் தீவிரவாத பங்கு அதிகமாகவே இருந்து வருகிறது. டேவிட் கோல்மேன் ஹெட்லி [ஒரு முஸ்லிம்] மூணாறில் சொகுசு விருந்தினர் பங்களாவில் தங்கி உளவு பார்த்துச் சென்றதும், அதற்கு ஆவணவற்றை செய்து கொடுத்தவர்களும் அங்கு இன்றும் இருக்கிறார்கள். முன்னர் காங்கிரஸ்காரர்கள் உதவி செய்து வந்தார்கள். கிருத்துவ-இஸ்லமிய கும்பல்கள் அவர்களுக்கு எல்லாம் கொடுத்து வந்தன, அனுபவித்துத் திளைத்து நாட்டிற்கு துரோகம் செய்து வந்தனர். இப்பொழுது, கம்யூனிஸ ஆட்சி வந்துள்ளதால், அவை எல்லைகளைக் கடந்து போய் கொண்டிருக்கின்றன. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தவும் முதல்–மந்திரி பினராயி விஜயன் போலீசாருக்கு உத்தரவிட்டார். கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் சட்டசபையில் கூறும்போது, ‘‘கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த 17 பேர், பாலக்காட்டை சேர்ந்த 4 பேர் என 21 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் .எஸ். இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள .எஸ். முகாம்களுக்கு சென்றுவிட்டதாக பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன,’’ என்றார். ஆனால், மெத்தப் படித்த கேரளாகாரர்கள் என்னடா இது, மலையாள மக்கள் இந்த அளவுக்கு தீவிரவாதிகளாகி விட்டார்களா என்று கவலைப்பட்டதாகத் தெரியவில்ல.

Kerala youth - women too at Nangahar province, Afganisthan

பெற்றோர்உற்றோர்மற்றோர்களுடன் தீவிரவாதிகளின் தொடர்புகள் இருந்து வருவது: இந்நிலையில் 13-04-2017 அன்று ஐ.எஸ் இயக்கத்தில் செயல்பட்டு வரும் கேரள இளைஞரான முர்ஷித் என்பவர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் கொல்லப்பட்டு விட்டதாக, முர்ஷித்தின் பெற்றோர்களுக்கு டெலகிராம் மூலம் தகவல் வந்துள்ளது. அமெரிக்க வெடிகுண்டு தாக்குதலில் முர்ஷித் கொல்லப்பட்டு விட்டதாக தங்களுக்கு வந்த வாட்ஸ் அப் தகவல் வந்திருப்பதாக முர்ஷித் முகமதுவின் உறவினர்கள் கூறியுள்ளனர்[1]. சில வாரங்களுக்கு முன்னதாக (தி இந்து), / கடந்த இரு மாதங்களுக்கு முன் (தினத்தந்தி) ஐ.எஸ்.-ல் இணைந்த டி.கே.ஹபீசுதீன் (வயது 24) என்ற கேரள இளைஞர் அமெரிக்க தாக்குதலில் பலியானதாக இதேபோல் உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது[2]. காசர்கோடு மாவட்டம், பட்னே நகர இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் ரஹ்மான், இதுகுறித்து கூறியதாவது: “பட்னேவைச் சேர்ந்த முர்ஷீத் முகமது என்ற இளைஞர் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சமூக வலைதளம் ஒன்றின் மூலம் எனக்கு செய்தி கிடைத்தது[3]. அவர் இறந்த தேதி போன்ற பிற தகவல்கள் தெரியவில்லை”, என்று அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்[4]. ஆனால், இந்த தகவலை போலீஸ் தரப்பில் இன்னும் உறுதிபடுத்தவில்லை[5].

Kerala youth Hafeesudheen, who joined ISIS, killed in drone strike in Afghanistan

அப்பட்டமாக பொய் சொல்லும் பெற்றோர், உற்றோர், அரசியல்வாதிகள்: இப்படி பெற்றோர், உற்றோர்களுக்கு டெலகிராம் / வாட்ஸ் அப் தகவல் மூலம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன எனும்போது, அவர்களுக்கு தங்களது மகன் / மகள் / மறுமகன் / மறு மகள் / குடும்பம் முதலியன ஜிஹாதி தீவிரவாதத்தில் ஈடுபட்டிருப்பது தெரிந்தே இருக்கிறது என்பது உண்மையாகிறது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கும் தெரிந்துள்ளது. பிறகு, அவர்கள் ஏன் உரிய அதிகாரிகளிடம் புகார் கொடுக்கவில்லை, என்.ஐ.ஏ போன்ற விசாரணை குழுக்களுக்கு விவரங்கள் கொடுக்காமல் ஒத்துழைக்கவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன. ஆக, தெரிந்தே அவர்கள் அனுமதித்துள்ளனர், ஒப்புக்கொண்டுள்ளனர், ஒத்துழைப்புக் கொடுக்கின்றனர். அதாவது, இதில் சம்பந்தப் பட்டவர்களுக்கு பரஸ்பர லாபங்கள் இருக்கின்றன. ஒருவேளை கோடிக்கணக்கில் உதவிகள், அனுபவிக்கும் சகாயங்கள் முதலியன இவர்களுக்குக் கிடைத்து வருகின்றன போலும். அதனால் தான், மறைத்துள்ளனர், இன்றும் தங்களுக்கு விசயம் தெரிந்தாலும், போலீஸார் சொல்லவில்லை, உறுதிபடுத்தவில்லை என்றெல்லாம் சொல்வது, பொய் சொல்கிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. தங்கள் மகன் / மகள் காணவில்லை என்று புகைப்படங்களுடன், இவர்கள் போலீஸுக்கு புகார் அளிக்காமல் இருக்கும் பட்சத்தில், அவர்கள் எப்படி உறுதி செய்ய முடியும்?

© வேதபிரகாஷ்

15-04-2017

USA bombed on Nangahar province, Afganisthan

[1] தி.இந்து, .எஸ்.-ல் இணைந்த கேரள இளைஞர் அமெரிக்க தாக்குதலில் பலி, சி.கவுரிதாசன் நாயர், Published: April 14, 2017 16:49 ISTUpdated: April 14, 2017 16:49 IST.

[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/article9640031.ece

[3] தினமணி,.எஸ். அமைப்பில் சேர்ந்த கேரள இளைஞர் ஆப்கனில் சாவு?, By DIN  |   Published on : 15th April 2017 12:29 AM

[4] http://www.dinamani.com/india/2017/apr/15/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2684471.html

[5] தினத்தந்தி, .எஸ் இயக்கத்தில் இணைந்ததாக கூறப்பட்ட கேரள இளைஞர் ஆப்கானிஸ்தானில் பலி, ஏப்ரல் 14, 12:15 PM

மோடியை விமர்சித்த முஸ்லிம் நடிகை கொலை செய்யப்பட்டாள் – மிஸ்டர் மோடி காஷ்மீரை எங்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று கேட்டவள்!

ஜூலை 19, 2016

மோடியை விமர்சித்த முஸ்லிம் நடிகை கொலை செய்யப்பட்டாள் – மிஸ்டர் மோடி காஷ்மீரை எங்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று கேட்டவள்!

How-qandeel-was killed by his brother-shot dead in Multan

15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று கொலை செய்யப்பட்டது: இந்நிலையில்தான் 15-07-2016 வெள்ளிக்கிழமை இரவு அவர் தனது வீட்டில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார்[1]. சனிக்கிழமை என்று சில பாகிஸ்தான் நாளிதழ்கள் கூறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்ப வீட்டில் வைத்து அவருடைய குரல்வளையை நெரித்துக் கொன்றதை சகோதரர் வாசீம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஒத்துக்கொண்டார் என்கிறது தமிழ்.பிபிசி[2]. பாகிஸ்தானிலேயே, முதலில் அவள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டாள் என்று செய்திகள் வெளியாகின[3]. அவரது சகோதரர் வசீம் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது[4]. அவர் வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை தேடி வந்த போலீசார், 16-07-2016 சனிக்கிழமை இரவு பஞ்சாப்  மாகாணத்தில் உள்ள  தேரா  காசி கான் பகுதியில் கைது செய்தனர். பிபிசியின் படி “ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்ப வீட்டில் வைத்து அவருடைய குரல்வளையை நெரித்துக் கொன்றதை சகோதரர் வாசீம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஒத்துக்கொண்டார்”, என்றால், 16-07-2016 சனிக்கிழமை இரவு பஞ்சாப்  மாகாணத்தில் உள்ள  தேரா  காசி கான் பகுதியில் கைது செய்தனர் என்பது சரியாக இருக்க முடியும். இது வெள்ளிக்கிழமையில் நடந்த ஜிஹாதி கொலை என்பதனை மறைக்க முயல்வது போல தெரிகிறது.

Qanteel Bloch - brother killerகொலைசெய்த சகோதரன் கூறியது: கைது செய்யப்பட்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் வசீம் பேசும்பொழுது தெரிவித்ததாவது, “எனது தங்கைக்கு மயக்க மருந்து குடுத்து அவர் உறங்கும் பொழுது கழுத்தை நெரித்துக் கொன்றேன. சமூக வலைதளங்களில்   அவளது நடவடிக்கைகள் மூலம் எங்கள் குடும்பத்திற்கு தீராத அவப்பெயரை உண்டாக்கி விட்டாள். பலூச் இனத்திற்கே எனது தங்கையால் அவப்பெயர் வந்து விட்டது. ஆபாசப் படங்களைப் போட்டு எங்களது சமூகத்தை அவர் கேவலப்படுத்தி வந்தார்[5]. மேலும் மதகுரு முஃதி காவியுடன் அவள் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் முக்கியமான ஒன்றாகும். நான் அவளைக் கொன்றதே அவளுக்கு தெரியாது. அவளுக்கு மயக்க மருந்தை மாத்திரை வடிவில்   கொடுத்து விட்டு அவள் உறங்கும் பொழுது கழுத்தை நெறித்துக் கொன்றேன்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்[6]. இந்தக் கொலை குறித்து கருத்து தெரிவித்த வசீமின் தந்தை முஹம்மத் அஷீம், இந்த கொலையை வசீம் அவனது சகோதரன் முக்கமது அஸ்லம் சஹீனின் தூண்டுதலின் பேரில் செய்தான் என்று தெரிவித்தார். இந்நிலையில் குவாந்தீல் பலூச்சின் உடலை அவரது சொந்த ஊரான சாசாதார்தின் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து விசாரித்த காவல்துறையினர். குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக அவரது அண்ணனே பலோச்சை ஆணவக் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்[7]. பாகிஸ்தானில், சமீபத்தில் ஆணவக்கொலைகள் அதிகரித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பிரபல மாடல் அழகி கொலை செய்யப்பட்டிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது[8]. ஆண்டொன்றுக்கு 100க்கும் மேலான கொலைகள் நடக்கின்றன.

qandeel marriage certificateகௌரவ கொலையா, மதக்கொலையா, ஜிஹாதி கொலையா – பின்னணி என்ன?: பாகிஸ்தானிய ஊடகங்களே இக்கொலையை பலவிதமாகச் சித்தரித்துள்ளன. மனித உரிமை குழுக்கள் இதனை கௌரவக் கொலையாக கருதுகின்றன. இதனை எதிர்த்து ஆர்பாட்டமும் நடத்தியுள்ளனர். ஆனால், குவான்தீன் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்து மாடல், நடிகை என்றெல்லாம் உலா வந்ததாலும், பேஸ்புக்கில் பலரை விமர்சித்ததாலும், அவள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக இருந்தாள் என்று மதவாதிகள் தீர்மானித்திருந்தனர். அந்நிலையில் அவள் கொலை செய்யப் பட்டிருந்தால், அதனை மதக்கொலை எனலாம். ஆசார இஸ்லாத்தை நீர்த்தாள், பர்தாவிலிருந்து வெளிவந்தாள், ஹிஜாபை துறந்தாள், இஸ்லாமாக வாழவில்லை என்று அவளை அடுக்கடுக்காக குறைகூறி குற்றஞ்சாட்டியுள்ளனர். அவளது சகோதரன் கொடுத்த விளக்கம், மற்றும், அவளை கொலை செய்தலால், சுவர்க்கத்தின் கதவு தனக்காக திறந்திருக்கிறது என்றேல்லாம் பேசியதைப் பார்த்தால், இது ஒரு ஜிஹாதி கொலை என்று தோன்றுகிறது[9]. “அவளைக் கொன்றதற்காக நான் வருத்தப்படவில்லை. மாறாக பெருமைப்படுகிறேன். என்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களின் மனவருத்தத்தை நீக்கியதற்காக, சுவர்க்கத்தில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளேன். நான் என்னுடைய குடும்ப மானத்தைக் காத்துள்ளேன், நான் எந்த டண்டனைக்கும் தயாராக உள்ளேன்”, என்றான்[10]. ஆக ஒரு ஜிஹாதி பேசுவதைப் போல பேசியுள்ளான்[11].

Qandeel-Baloch-admits-her-marriageகுவான்தீல் பலூச்சின் வீடியோ பேச்சுகள்: பாகிஸ்தான் ட்ரிப்யூன் கீழ்கண்ட ஐந்து வீடியோக்களை தொகுத்து வெளியிட்டுள்ளது[12]. பொறுமையாக அவற்றை கேட்கும் போது, ஒரு முஸ்லிம் என்ற நிலையில் அவர் பேசியுள்ளது தெரிகிறது. அவளது சகோதரன், இவற்றைக் கேட்டிருந்தால், நிச்சயமாக அவன் கொன்றிருக்க மாட்டான். ஆனால், அதே நேரத்தில் அடிப்படைவாத முஸ்லிம், ஒரு பெண் இவ்வளவு தைரியசாலியாக, அறிவாளியாக இருப்பதையும் விரும்பியிருக்க மாட்டான்.கஊழலைத் தட்டிக் கேட்டதால், அரசியல்வாதிகளும் அதிருப்தி அடைந்திருப்பார்கள்.

எண் வீடியோ விவரம் நேரம் – நிமிடம்-நொடி விடியோ லிங்
1 பேஸ்புக்கில் தன்னை வெறுத்தவர்களை, தைரியமாக நேர்கொண்டு பதில் அளித்தாள். 1.46 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/714341198710635/
2 பாகிஸ்தான் தோற்றதற்கு ஷஹீத் அப்ரிதை திட்டியது. 1.34 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/788099754668112/
3 முஸரப், இம்ரான் கான் முதலியோரது அரசியல் ஊழலைப் பற்றி விமர்சித்தது. 2.04 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/749377201873701/
4 இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கேள்வி கேட்டது. 5.16 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/785186261626128/
5 தனக்குத்தானே, ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டது. 0.49 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/707321109412644/

அவள் பேசும் விதம், அவள் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அரசியல் நிகழ்வுகளை நன்றாக அறிந்திருக்கிறாள் என்று தெரிகிறது. இந்தியாவில் கூட எந்த நடிகையும் இந்த அளவுக்கு தைரியமாக பதில் சொல்லியிருக்க முடியாது.

© வேதபிரகாஷ்

19-07-2016

With mufti - Qanteel Bloch

[1]http://www.dinamani.com/world/2016/07/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81/article3533905.ece

[2] பிபிசி.தமிழ், பாகிஸ்தான் மாடல் அழகியை கொலை செய்த அவரது சகோதரர் கைது, 17 ஜூலை 2016.

[3] https://jang.com.pk/latest/138693-qandeel-baloch-shot-dead-in-multan; http://atv.com.pk/qandeel-baloch-shot-dead/

[4] http://www.bbc.com/tamil/global/2016/07/160717_pak_model_brother

[5] தமிழ்.ஒன்.இந்தியா, பலூச் இனத்தின் அவமானச் சின்னம் என் தங்கை.. பாக். அழகியின் அண்ணன் வாக்குமூலம், By: Sutha, Updated: Monday, July 18, 2016, 11:38 [IST]

[6] http://tamil.oneindia.com/news/international/qandeel-balooch-killing-she-was-drugged-before-murder-258248.html

[7] நியூஸ்.7.டிவி, நிர்வாண சவால் விடுத்த பாகிஸ்தான் மாடல் அழகி ஆணவக்கொலை!, July 17, 2016.

[8]  http://ns7.tv/ta/qandeel-baloch-case-brother-held-pakistan-celebritys-murder.html

[9] http://edition.cnn.com/2016/07/18/asia/pakistan-qandeel-baloch-brother-confession/

[10]  “I have no regrets. Instead I am proud of what I did,” he added. “I have earned a place in heaven by relieving the agony of my parents and family.” Waseem, who said he has decided not to hire a lawyer, recorded his confessional statement in court on Sunday. “I saved my family’s honour and I’m ready for any punishment,” he said.

http://www.samaa.tv/pakistan/2016/07/qandeels-brother-says-he-earned-a-place-in-heaven-by-killing-her/

[11] samaa.tv/pakistan, Qandeel’s brother says he earned “a place in heaven” by killing her, July 18, 2016, By: Samaa Web Desk

[12] http://tribune.com.pk/story/1143002/5-times-qandeel-baloch-brutally-honest/

 

முஸ்லிம்கள், இந்தியர்களின் நலன்களுக்கு அல்லது தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றிய தங்களது நிலையை தெளிவாக்க வேண்டும்!

ஜூலை 17, 2016

முஸ்லிம்கள், இந்தியர்களின் நலன்களுக்கு அல்லது தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றிய தங்களது நிலையை தெளிவாக்க வேண்டும்!

Pro-zakir ralley in patna raising pro-paki slogans 16-07-2016

ஜாகிர் நாயக் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை(ஜூன் 19, 2010): இந்திய பிரபல மதபிரச்சாரகர் ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி. இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். இதேவேளை, ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது. ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Zakir Naik inspired terrorists 01-07-2016

ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக வேண்டும் என்று பேசிவரும் ஜாகிர் நாயக்: இப்படியும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஒஸோமா பின் லேடனைப் புகழும், தீரவாதக் கொள்கையையுடைய ஜாகிர் நாயக்கை தடைசெய்யப்பட்டார், என்றும் கூறுகிறது. அந்நாட்டு உள்துறை செயலர், “டிவி மதப்பிரச்சாரகர் தூண்டிவிடும் வகையில் பேசுவதாலும் அவருடைய ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையினாலும் தடைசெய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார்”. இப்பொழுதும் அந்த கருத்தை மறுக்கவில்லை. ஆனால், திடீரென்று முஸ்லிம்கள் எப்படி நாரக்கிற்கு ஆதரவு தெர்விக்கிறார்கள் என்று பார்த்தால், அது முஸ்லிம் ஆதரவு, ஷியா எதிர்ப்பு, முதலியவற்றை விட, மோடி-எதிர்ப்பு என்ற வகையில் வந்து முடிந்துள்ளது. ஜாகிர் நாயக்கை முடக்கத்தான் பாஜக அரசு முயல்கிறது என்பது போன்ற சித்தரிப்பு மற்றும் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது. இது கிட்டத்தட்ட “சகிப்புத் தன்மை” பிரச்சாரம் போல ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திக்விஜய சிங், எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு விட்டதால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஏகப்பட்ட அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்.

அதிரை - எஸ்.டி.பி.ஐ போராட்டம்

வெள்ளிக்கிழமை 15-07-2016 பாட்னாவில் நடந்த ஆர்பாட்டம்: ஜாகிர் நாயக் மற்றும் அசாஸுத்தீன் ஒவைசி இவர்களை ஆதரித்து, பாட்னா விஞ்ஞான கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் போட்டுக் கொண்டு ஆர்பாட்டம் செய்தவர்களை போலீஸார் கைது செய்தனர்[1]. அது மட்டுமல்லாது, அதன் பின்னணியுள்ளவர்களைப் பற்றி விசாரிக்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளது[2]. அமெரிக்காவே, காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று சொல்ல பாகிஸ்தான் அமுக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கும் போது, இந்தியாவில், பீஹாரில் இருக்கும் முஸ்லிம்கள் இவ்வாறு பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எப்படி போட முடியும்? அத்தகைய மனோபாங்குதான் என்ன?  ஆக, காஷ்மீர பிரச்சினையையும், இந்த ஜாகிர் நாயக்-ஒவைசி பிரச்சினையுடன் முடிச்சுப் போட பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

 zakir naik protest chennai 2

தமிழக முஸ்லிம்கள் தீவிரவாதத்தை முதலில் எதிர்க்க வேண்டும்: தமிழக முஸ்லிம்கள் முதலில் இஸ்லாம் தீவிரவாததத்திற்கு உபயோகப்படுத்துவதை எதிர்க்க வேண்டும். ஐசிஸ்-ஐசில் முதலிய இயக்கங்கள் உலகளவில் அப்பாவி மக்களைக் கொன்று வருவதை யாரும் மறுக்க முடியாது. இன்று வரை இந்தியாவில் காஷ்மீ, உத்திரபிரதேசம், கேரளா, ஹைதரபாத் முதலிய இடங்களில் காகிர் நாயக்கை வைத்து நடைபெற்று வரும் விவகாரக்களைக் கவனிக்க வேண்டும். இந்தி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களுடம் சேர்வதை அவர்கள் தடுக்கவில்லை. கேரள முஸ்லிம் பெற்றோர்களே கலங்கியுள்ள நிலையில், அதைத் தடுக்க என்ன செய்வது என்று விடை கொடுப்பதில்லை. சவுதி அரேபிய இஸ்லாம், இந்திய இஸ்லாத்திடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இஸ்லாமிய தீவிரவாத்த்தைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ல முடியும். சவுதி வகாபிசத்துவ தீவிரவாதத்தை ஆதரித்ததால் தான், ஜாகிர்நாயக்கின் வகாபிச சேவையைப் பாராட்டி இஸ்லாத்திற்கு சேவை செய்தவராக அறிவித்து 2015 ஆம் ஆண்டுக்கான மன்னர் பைசல் சர்வதேச விருதாக சவுதி வகாபிச அரசு 24 காரட் 200 கிராம் தங்கப் பதக்கத்தோடு இந்திய பண மதிப்பாக ரூபாய் 1,35,00,000/- (2 லட்சம் யுஎஸ் டாலர்கள்) அன்பளிப்புத் தொகையாகவும் வழங்கியது. மார்க்கண்டேய கட்ஜு ஸாகிர்நாயக் பிரச்சாரம் குறித்தும் சமயத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான முரண்குறித்தும், வகாபிசம் சூபிகள் பேசிய இஸ்லாமிய அறவியல் கருத்துக்களிலிருந்து மாறுபட்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

 zakir naik protest chennai 3

முஸ்லிம்கள் ஏன் இந்திய குடிமகன்கள் என்பதை மறக்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்?: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள், எதிர்ப்புகள் முதலியவற்றில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதை கவனிக்க வேண்டும். அவர்களை ஏன் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்காமல் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். வெறும் வார்த்தைகள் ஒன்றும் செய்து விடமுடியாது. ஆயிரம் அப்பாவி மக்களைக் கொன்று விட்டு, அதனை நான் கண்டிக்கிறேன் என்றால் என்ன பிரயோஜனம்? ஒசாமா பின் லேடனை ஆதரிக்கிறேன் என்ற ஜாகிர் நாயக்கை ஆதரித்து ஆர்பாட்டம் நடத்துவதால் பொது மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ன இது, தீவிரவாதிகளை எதிர்த்து தானே கூட்டம் போடுகிறார்கள் என்று நினைப்பார்கள். முஸ்லிம்கள் இந்திய குடிமகன்கள் என்பதை மறந்து, அடிக்கடி எல்லைகளைக் கடந்த ஆதரவுகளை தெரிவித்த்துக் கொள்வது, தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் முதலியோருக்கு சாதகமாக பேசுவது, அறிக்கைக்கள் விடுவது, ஆர்பாட்டங்கள் செய்வது முதலியனன, அவர்களை மேலும் இந்திய சமூகத்திலிருந்து பிரிக்கத்தான் செய்யும்.

ZAkir on sex

இசுலாமியத் தீவிரவாதம்  என்றால் என்ன?: இசுலாமியத் தீவிரவாதம் (Islamic Terrorism) என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும் கொலைகளையும் குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நியாயப்படுத்துகின்றனர். சமீப காலங்களில் உலகெங்கும் தீவிரப் போக்குடைய இஸ்லாமியக் குழுக்கள் பிற இஸ்லாமியப் பிரிவைச் சார்ந்தவர்களையும் இறை நம்பிக்கையற்றவர்களையும் மற்றும் பிற மதத்தவர்களையும் கலீபா ஆட்சிமுறையின் படி தலையை வெட்டிக் கொல்லப் பரிந்துரைப்பது மற்றும் அடிமைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்கின்றனர். இவ்வாறான செயல்கள் மிதவாத இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமியர்களுக்கும் கருத்தியல் வேறுபாடுகளை உருவாக்குகின்றன. இத்தீவிரவாதச் செயல்களானது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, சூடான், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, சீனா, காக்கேசியா, வட-அமெரிக்கா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் குண்டுவெடிப்புகள், கடத்தல், தற்கொலைப் படையினர் போன்றவற்றிற்காக பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் இணையம் வழி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதாகவும் அறியப்படுகிறது. இப்படி விகிபீடியா கூறுவதை[3] முஸ்லிம்கள் மறுக்கவில்லையே?

 

© வேதபிரகாஷ்

17-07-2016

Zakir girls need not study

[1] India Today, Pro-Pakistan slogans raised in Patna, one arrested after police orders probe, Rohit Kumar Singh, Posted by Bijaya Kumar Das, Patna, July 16, 2016 | UPDATED 15:11 IST

[2] http://indiatoday.intoday.in/story/pro-pakistan-slogans-raised-in-patna-one-arrested-after-police-orders-probe/1/716225.html

[3] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில் தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?

ஜூலை 17, 2016

2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில்  தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?

நாயக் ஆதரவு - அனைத்து இஸ்லாமிய கட்சிகள் கூட்டமைப்பு - மோடி விரோதம்

23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்: கூட்டத்தில் கீழ்கண்டவர் கலந்து கொண்டு பேசினர்.  23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[1].

  1. மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா,
  2. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி,
  3. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி,
  4. மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி,
  5. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.முகம்மது இஸ்மாயில்,
  6. ஐ.என்.டி.ஜெ. தலைவர் எஸ்.எம்.பாக்கர்,
  7. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக்,
  8. இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அகமது,
  9. ஜம்மியத் உலமாயே ஹிந்து தலைவர் மன்சூர் காஸிபி,
  10. வெல்பேர் பார்ட்டி தலைவர் எஸ்.என்.சிக்கந்தர்,
  11. ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஷப்பீர் அகமது,
  12. முஸ்லிம் லீக் தலைவர் பாத்திமா முஸப்பர்,
  13. இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகம்மது கான் பாக்கவி

இப்படி, முஸ்லிம் அல்லாத இயக்கங்கள், பொட்டு வைத்த பெண்கள் முதலியோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளது வியப்பாக உள்ளது. உண்மையிலேயே அவர்கள் விசயம் அறிந்து கலந்து கொண்டுள்ளனரா அல்லது தமிழகத்திற்கே உரிய “கூட்டம் சேர்க்கும்” முறையில் கலந்து கொண்டார்களா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

img_2005-1

அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழுள்ள உரிமைகள்: தாங்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றி புலன் விசாரணை மேற்கொள்வதில் தலையிடுவதில்லை என்றாலும், தீவிரவாதத்திற்கும், அவருக்கும் தொடர்பிருப்பது போன்று சித்தரிப்பதை எதிர்ப்பதாக கூறினர்[2]. அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றும், அதனை அரசு தடுக்கக் கூடாது என்றும் ஆர்பாட்டம் செய்தனர்[3]. மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா அரசுகளை எதிர்த்து பலவித கோஷங்களை எழுப்பினர்[4]. பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றாலும், அவை மற்றவர்களின் உரிமைகளை மீறக்கூடாது,  பொது அமைதியை பாதிக்கக்கூடாது என்றெல்லாம் கூட உள்ளன. அவற்றை மறந்து, மறைத்து, மறுத்து ஆர்பாட்டம் செய்வது வேடிக்கைதான்.

ஜாகிர் ஆதரவு போராட்டம் - 16-07-2016 - த.த.ஜா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் ஆர்பாட்டத்தை அறிவித்து, பிறகு நிறுத்துக் கொண்டது: முன்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் பட்டுக்கோட்டையில், “ஜாகிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க சதி செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து”ம் மற்றும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக போராட்டம் என்று அறிவித்தது[5]. பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜாகிர் நாயக்-கிற்கு ஆதரவாக நடைபெற இருந்த அனைத்து மாவட்ட ஆர்ப்பாட்டங்களும் ரத்து என்று அறிவித்தது. ஜாகிர் நாயக்கை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மும்பை காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த அனைத்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் ரத்து செய்யப்பபடுகிறது என்றது[6]. அதாவது ஒதுங்கவில்லை, ஜாகிர் நாயக்கே அடுத்த ஆண்டுதான் இந்தியாவுக்கு வரப்போகிறார் எனும்போது, இப்பொழுது என்ன ஆர்பாட்டம் வேண்டியிருக்கிறது, “வேஸ்ட்” தான் என்று தீர்மானித்திருக்கும். ஆனால், மற்ற கூட்டத்தினர் அவ்வாறில்லை, அவர்களுக்கு “மோடியை” எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. கேரளா, காஷ்மீர், பங்களாதேசம், பாரீஸ், துருக்கி…..என்று எங்கு என்ன நடந்தாலும் அவர்களுக்குக் கவலை இல்லை, எப்படியாவது “மோடியை” தாக்க வேண்டும்.

muslims-against-zakirnaik

2009ல் ஜாகிர் நாயக்கை எதிர்த்தவர்கள் இப்பொழுது – 2016ல் ஆதரிப்பதேன்? (ப்ழைய கட்டுரையிலிருந்து): பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதே நேரத்தில் சிலர் ஆதரித்து, நாயக்கின் கூட்டங்களை எடெற்பாடு செய்தனர். இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது[7]:

சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்

ஜனவரி 10, 2009, 3:37 பிற்பகல்
கோப்பு வகை: டாக்டர் ஜாகிர் நாயக்

இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று, இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள், இன்ஷா அல்லாஹ், வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில், மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது. (ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.
எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM
சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்!

ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்! மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!
ஒன்றும் புரியவில்லையே?

© வேதபிரகாஷ்

17-07-2016

IRF - Islamic research Centre, Mumbai - The Hindu

[1] http://ns7.tv/ta/muslims-protest-against-central-government-chennai.html

[2] http://www.thenewsminute.com/article/islamic-groups-protest-chennai-demand-govt-cease-portraying-zakir-naik-terrorist-46610

[3] The Business Standard, Muslim outfits rally behind Zakir Naik, hold protest, Press Trust of India, Chennai July 16, 2016 Last Updated at 16:32 IST

[4] http://www.business-standard.com/article/current-affairs/muslim-outfits-rally-behind-zakir-naik-hold-protest-116071600502_1.html

[5] http://adiraipirai.in/?p=26723

[6] http://adiraipirai.in/?p=26767

[7]https://markaspost.wordpress.com/2009/01/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/

ஜாகிர் நாயக்கின் விசயத்தில் இந்திய-தமிழக மூஸ்லிம்களின் ஆதரிப்பது-எதிர்ப்பது என்ற முரண்பாடு ஏன்?

ஜூலை 17, 2016

ஜாகிர் நாயக்கின் விசயத்தில் இந்திய-தமிழக மூஸ்லிம்களின் ஆதரிப்பது-எதிர்ப்பது என்ற முரண்பாடு ஏன்?

ஜாகிர் ஆதரவு போராட்டம் - 16-07-2016 - த.த.ஜா. போராட்டம்

தமிழகத்தில் ஜாகிர் நாயக் எதிர்ப்புஆதரவு: ஜாகிர் நாயக்கை பொதுவாக இந்திய முஸ்லிம்கள் எதிர்த்தனர். ஒசமா பின் லேடனை ஆதரித்தது, எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும் என்றது போன்ற விவகாரங்களூக்காக நாயக் தனிமைப் படுத்தப் பட்டாலும், உள்ளூர எல்லா முஸ்லிம்களும் ஆதரித்துதான் வந்தனர். இந்தியாவில் நடத்தப் பட்ட கூட்டங்களுக்கு, இஸ்லாமிய அமைப்புகள், வியாபார நிறுவனங்கள் ஆதரவு கொடுத்தன. சென்னையில், கிருஷ்ணா கார்டன்ஸ் (திருமங்கலம்), காமராஜர் அரங்கம், இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகம் (ஈஞ்சம்பாக்கம்) என்று கூட்டங்கள் நடத்தப்பட்டன. முஸ்லிம்கள், குறிப்பாக படித்த இந்துக்களுக்கு குறி வைத்து, அவர்களை வேண்டி, நட்புரீதியில் “வற்புறுத்தி” கலந்து கொள்ள செய்தனர். அந்த கூட்டங்கள் முஸ்லிம்களுக்குட்தான் பிரமிப்பாக இருந்தது. தமிழக முஸ்லிம் இயக்கத்தினரின் தலைவர்களுக்கு புளியைக் கரைத்தது. பொறாமையாகக் கூட இருந்தது, நல்ல வேளை, தமிழில் பேசவில்லை என்று ஆஸ்வாசப்படுத்திக் கொண்டனர். இருப்பினும், தமிழில் அவரது ஆதரவாளர்கள் நாயக்கின் புத்தகங்கள் வெளியிட்டனர்.

Bangladesh-bans-televangelist-Zakir-Naik-s-Peace-TV

பீஸ் டிவி வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டது (09-07-2016): நாயக்கின் பிரசுரங்கள் தீவிரவாதிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், கடந்த ஜூலை 1-ம் தேதி டாக்கா உணவக தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், நாயக்கின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டதை அடுத்து, வங்கதேசத்தில் நாயக்கின் பிரச்சாரங்கள் தடை செய்யப் பட்டன.  வங்காளதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ’பீஸ் டிவி’ க்கு தடை விதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது[1]. சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது[2]. நாயக்கின், ‘பீஸ் டிவி’யை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலமாக ஒளிபரப்பவும் வங்கதேச அரசு தடை விதித்துள்ளது[3]. இதைத்தொடர்ந்து, ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை!

பீஸ் மொபைல்

பீஸ் டிவியை அடுத்து, பீஸ் மொபைல் போன்களுக்குக்கும் தடை (14-07-2016): முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்கின், ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு வங்கதேச அரசு தடை விதித்திருக்கிறது.  ‘ஜாகிர் நாயக்கின் எந்தவிதமான பிரசுரங்களையும் வெளியிடக் கூடாது என அரசு தெளிவான உத்தரவை பிறப்பித்திருப்பதால், அவரின் பிரசுரங்கள் அடங்கிய ‘பீஸ் மொபைல் போன்’களை இனி அனுமதிக்க முடியாது’ என, வங்கதேச தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷாஜஹான் மஹமூத் தெரிவித்துள்ளார். ‘முதல் இஸ்லாமிய ஸ்மார்ட்போன்’ என்ற விளம்பரத்துடன் சந்தைக்கு வந்த இந்த கைபேசியில், ‘குரான்’ ஓதுவதற்கான வசதிகள், தொழுகை நேர நினைவூட்டல், இஸ்லாமிய வால்பேப்பர்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன.  ஜாகிர் நாயக்கின் ‘பீஸ் டிவி’ பிரசங்கங்களை, ஆங்கிலம், இந்தி, உருது போன்ற மொழிகளில் கேட்கவும், பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்த கைபேசிகளை, ‘பெக்சிக்கோ’ குழுமம் இறக்குமதி செய்து விற்பனை செய்தது[4]. ஆனால், தமிழகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை! ஆனால், ஜாகிர் நாயக்கைப் பற்றி விசாரணை ஆரம்பிக்கப்பட்டதும், தமிழகத்தில் ஆர்பாட்டம் ஆரம்பித்து விட்டது. இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் மீது மகாராஷ்டிர அரசும், மத்திய பாஜக அரசும் கடுமையான அவதூறு பரப்பி வருவதாகவும்[5], இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகளை ஒன்றிணைத்து நாளை (ஜூலை 16) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ரஹ்மான் மிஸ்பாகி தெரிவித்துள்ளார்[6].

Muslim youth become ISIS supporters, warriors

உலகத்தில், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாத, ஜிஹாத் தீவிரவாத செயல்கள் என்ன நடந்தாலும் போராட்டம்ஆர்பாட்டம் இல்லை: 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மொஹம்மது லுஹ்வாஸ் ஃபூலெல் (31) என்ற முஸ்லிம் பாரிசில் லாரியை வெறித்தனமாக மக்கள் கூட்டத்தினுள் ஓட்டிச் சென்று ஒரு முஸ்லிம் குழந்தைக்களையும் சேர்த்து 84 பேரைக் கொன்றுள்ளான். குழந்தைகள் கொல்லப்பட்ட காட்சிகள் பரிதாபமாக இருந்தது. ஐரோப்பாவின் ஒரே இஸ்லாமிய நாடான, துருக்கியில் நடந்துள்ள ராணுவப் புரட்சியில் 100க்கும் மேலானவர்கள் பலியாகியுள்ளனர். இரண்டு தீவிரவாத தாக்குதல்களிலும் காயமடைந்தோர் பலர் மருத்துமனைக்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், தமிழக முஸ்லிம்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள். கேரளாவில் இளம் வயது முச்லிம் ஆண்கள்-பெண்கள் ஐஎஸ்சில் சேர்ந்து விட்டனர் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உம், அவர்கள் அசையவில்லை.

நியூஸ் 7 செனல் 17-07-2016

ஜாகிர் நாயக்கை ஆதரித்து நடத்திய போராட்டம் (16-07-2016): இவற்றையெல்லாம் கண்டிக்காமல், சென்னையில், “ஜாகிர் நாயக்கை தீவிரவாதி போன்று சித்திரப்பதை” கண்டித்து 500 பேர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்[7]. இப்பொழுதுள்ள நிலையில், தமிழக அரசு எப்படி அனுமதி கொடுத்தது என்பது கூட ஆச்சரியமாகத்தான் உள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் [Indian Union Muslim League (IUML)], தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் [the Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK)] மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி [the Social Democratic Party of India] முதலியன இந்த எதிர்ப்பு-போராட்டத்தில் பக்குக் கொண்டுள்ளன. முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக் மீது வீண் பழி சுமத்தி, அவரது பணிகளை முடக்க நினைப்பதாக கூறி மராட்டியம் மற்றும் மத்திய அரசை கண்டித்து, சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது[8].

Zakir supporting Osama bin laden

ஜாகீர் நாயக் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரித்தது இல்லை: தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முகம்மது ஹனீபா தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது[9]: “உலகம் முழுவதும் முஸ்லிம் மதம் குறித்து பரப்புரை செய்து வருபவர் ஜாகீர் நாயக். இவர் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரித்தது இல்லை. அவருடைய பேச்சாலும், எழுத்தாலும் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதப் பழியை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு சுமத்தும் பாசிச சக்திகளையும் எதிர்த்து வருகிறார். எனவே அவர் மீது மத்திய அரசும், மராட்டிய அரசும் காழ்ப்புணர்வு கொண்டு அவரை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது”, இவ்வாறு அவர் பேசினார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஜாகீர் நாயக்குக்கு எதிராக பேசியதாக கூறி, உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. எம்.பி. சாத்வி பிராட்சியின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது[10]. ஆனால், போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்று குறிப்பிடவில்லை.

© வேதபிரகாஷ்

17-07-2016

[1] தினத்தந்தி, ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும்பீஸ் டிவியை வங்கதேசம் தடை செய்தது, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 10,2016, 3:55 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 10, 2016, 3:55 PM IST.

[2] http://www.dailythanthi.com/News/World/2016/07/10155526/Bangladesh-bans-televangelist-Zakir-Naik-s-Peace-TV.vpf

[3] தி.இந்து, மத போதகர் ஜாகிர் நாயக்கின்பீஸ் மொபைல் போன்களுக்கு தடை விதித்தது வங்கதேச அரசு, Published: July 14, 2016 21:21 ISTUpdated: July 15, 2016 10:22 IST

[4] http://tamil.thehindu.com/world/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/article8850254.ece

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஜாகிர் நாயக் மீது அவதூறுதமிழக இஸ்லாமிய அமைப்புகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்வீடியோ, By: Jayachitra, Published: Friday, July 15, 2016, 15:05 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/muslim-organisations-protest-258114.html

[7] The News minute, Islamic groups protest in Chennai, demand govt cease portraying Zakir Naik as terrorist, TNM Staff| Saturday, July 16, 2016 – 13:57

[8] தினத்தந்தி, ஜாகீர் நாயக் மீது வீண் பழி: முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 17,2016, 12:28 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 17,2016, 12:28 AM IST

[9] http://www.dailythanthi.com/News/India/2016/07/17002835/Islamic-groups-protest-in-Chennai-demand-govt-cease.vpf

[10] நியூஸ்.7.செனல், மத்திய அரசை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் சென்னையில் ஆர்பாட்டம், July 16, 2016.

அல்லாவின் பெயரால் ஜிஹாத், காபிர்கள் அழிப்பு, ஷஹீத் அடையும் நிலை – எல்லாமே ஹை-டெக் தொழிற்நுட்பத்தில் தான் நடக்கின்றன!

ஜூலை 10, 2016

அல்லாவின் பெயரால் ஜிஹாத், காபிர்கள் அழிப்பு, ஷஹீத் அடையும் நிலை – எல்லாமே ஹை-டெக் தொழிற்நுட்பத்தில் தான் நடக்கின்றன!

Burhan supporting Zakir Naik - twitterஜாகிர் கான் தாக்கம், புர்ஹான் வானி தீவிரவாதியானது, தொடர்புகள்: இங்குதான், ஜாகிர் கான் போன்ற ஜிஹாதி-விற்பன்னர்கள், மாயாஜால மயக்கு பேச்சாளர்கள், பேச்சு-தீவிரவாதிகள் வருகிறார்கள். இஞ்ஜினியரிங், தொழிற்நுட்பம், மருத்துவம் படித்த இளைஞர்கள் இவரது பேச்சுகளுக்கு மயங்கி ஜிஹாதிகளாகின்றனர்[1]. அதனால் தான், “நீ இளம் வயதில், ஏன் இப்படி ஆனாய்?” என்று கேட்டால், “ஜாகிர் நாயக்கின் பேச்சில் ஈர்க்கப் பட்டேன், இஸ்லாத்திற்காக போராட முடிவெடுத்தேன்”, என்று வெளிப்படையாக இவர்கள் சொல்லிகொள்கிறார்கள். அந்நிலையில் தான், ஜாகிர் நாயக்கின் ஊக்குவிப்பு, தூண்டுதல், முதலியவை கண்டறியப்பட்டுள்ளன. புர்ஹான் டுவிட்டரில் ஜாகிர் நாயகிற்கு ஆதரவு தெரிவித்துள்ளான். முன்பெல்லாம் “பாப்ரி மஸ்ஜித்” உடைக்கப்பட்டதால் தான், நாங்கள் பழி வாங்க அவ்வாறு செய்தோம் போன்ற வாதங்கள் இப்பொழுது வருவதில்லை என்பது நோக்கத்தக்கது. ஏனெனில், சுன்னி இஸ்லாம் தவிர மற்ற எந்த இஸ்லாத்தையும் இஸ்லாம் இல்லை என்று போதிக்கப்படுவதால், பெரும்பாலாக ஷியா முஸ்லிம்கள் இந்த ஐசிஸ்-ஐசில்-ஐ.எஸ் ஜிஹாதிகளால் தாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், அவர்களது மசூதிகளும் இடிக்கப்படுகின்றன, குரான் புத்தகங்களும் எரிக்கப்படுகின்றன.

Burhan supporting Zakir Naikஅல்லாவை மகிழ்விக்க ஷஹீதுகள் உருவாக்கப்படுகின்றனர்: இக்கால நாகரிக படித்த முஸ்லிம் சாதாரணமாக அடிப்படைவாதியாக இருப்பதில்லை. ஆனால், எங்கோ, ஒரு நிலையில், அவன் அவ்வாறாக இருக்கிறான் என்று கண்டறிந்ததும், முதலில் அவனை அடிப்படைவாதியாக்க முயற்சிகள் நடக்கின்றன. முஸ்லிம் என்றதால், சிக்கிரத்தில் அது அவனது மனதை பிடித்து விடுகிறது. அவ்வாறான இஸ்லாமிய அடிப்படைவாதம் புனிதமானது என்று புரிய வைத்த பிறகு, பார், எப்படி நீ அவ்வாறு புண்ணியவானக இருக்கும் போது, உனக்கு இடையூறுகள் செய்கிறார்கள் என்று அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கிறது. அந்நிலையில் கூல்லா மாட்டிக் கொள்கிறான், தாடி வைத்துக் கொள்கிறான். “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” என்பது வேலை செய்ய ஆரம்பிக்கிறது. பிறகு, தீவிரவாத செயல்கள் எல்லாமே புனிதமாகத் தோன்றுகின்றன. “அல்லா மகிழ்கிறார்” என்று கனவு காண்கிறான், சொர்க்க ததவு திறந்துள்ளது என்று உணரிகிறான், பிரகென்ன, ஜிஹாதியாக மாறி, ஷஹீதாகி சொர்க்கத்திற்கு செல்ல வேண்டியது தான்.

Burhan supporting Zakir Naik - Can Zakir Naik say now, he was not inspired by himமுஸ்லிம்களை முஸ்லிம்களே கொல்லும் தீவிரவாதம், முஸ்லிம்அல்லாதவர்களைக் கொல்லும் தீவிரவாதம்: இத்தகைய மனோநிலைகளில் வேலை செய்து வரும் ஜிஹாதிகள் “அல்லாவின் பெயரால்” என்றால் சொல்வதை கேட்கிறார்கள், சுலபமாக ஆணைகளை ஏற்றுக் கொள்கிறார்கள், நடத்திக் காட்டுகிறார்கள். முஸ்லிம்களை முஸ்லிம்களே கொல்லும் தீவிரவாதம் இருப்பது கண்டு ஆச்சரியப் படவேண்டிய அவசியம் இல்லை. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை எப்பொழுது வேண்டுமானாலும் “காபிர்” என்று பிரகடனம் செய்து, ஜிஹாதைத் துவக்கி விடலாம். குரானின் மீது ஆணையிட்டு, ஒரு முஸ்லீம் மறு முஸ்லீமை காபிர் என்று அறிவித்து விட்டால், அவன் மீது ஜிஹாதைத் தொடங்கிவிடலாம். அதாவது அந்த மறு முஸ்லீம் என்பவன் ஒரு குறிபிட்டப் பிரிவை / சமூகத்தை / நாட்டை சேராதவனாக இருப்பான். Burhan-targeting friendsபாகிஸ்தானில் ஷியாக்கள் தாக்கப்படுவது, அவர்கள் மசூதிகள் இடிக்கப்படுவது, அவர்களது மசூதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வது எல்லாமே ஜிஹாத் தான், தீவிரவாதம் தான். அது எப்படி வேலை செய்கிறதோ, அதேபோலத்தான் இந்தியாவிலும் வேலை செய்கிறது. மற்ற முஸ்லிம்கள் ஏற்ருக் கொள்வார்கள் அல்லது தனித்தனி குழுக்கள் ஆவார்கள். இந்நிலையில், முஸ்லிம்-அல்லாதவர்களைக் கொல்லும் தீவிரவாதம் பற்றி சொல்லவே வேண்டாம், அது அல்வா தின்பது போல, கரும்பு தின்ன கூலி கொடுப்பது போல! அதிலும் மனத்தை மாற்றும் போதை மருந்து [psychotropic drug] கொடுத்து வேலை வாங்கும் போது, சுலபமாக நடந்து விடுகிறது. இறந்தவனுடன் எல்லாமே மறைந்து விடுகின்றன. அடுத்தவர்கள் அல்லது ஏவி விட்டவர்கள் சொன்னால்தான் உண்மை வெளிவரும். இல்லையென்றால், ஏதோ தீவிரவாதி, ஜிஹாதி செய்தான் என்று செய்திகளில் படித்து மறந்து விடுவார்கள்.

Burhan Wani - supported by omar, jilani etcதில்லி இமாமும், திக் விஜய் சிங்கும்: ஜாகிர் நாயக்கின் விசயத்தில் கலாட்டா செய்து வரும் திக்விஜய் சிங்கின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். 2013ல் திக் விஜய் சிங்கை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளபோதும்[2], முந்தைய தில்லி இமாம் போல கைது செய்யப்படமால் சுற்றி வருகிறார். இருவரும் இந்துக்களுக்கு எதிராக அவதூறு பேசுவது, தூஷிப்பது, முதலிய வேலைகளில் ஈடுபடுவது ஒப்புமையாக உள்ளது. திக் விஜய் சிங் இந்தியாவில் செய்து வருகிறார் என்றால், தில்லி இமாம் பாகிஸ்தானிற்கும் சென்று பேசியுள்ளார். ஜூலை 17, 2011ல் பாரதிய யுவமோர்சாவினர் திக் விஜயசிங்கிற்கு எதிராக கருப்புக் கொடிகள் காட்டியபோது, காங்கிரஸ்காரர்கள் அவர்களை அடித்துள்ளனர். அதனால் வழக்குத் தொடுத்தபோது, உஜ்ஜயினி கோர்ட்டில், பெயிலில் விடமுடியாத கைது வாரண்டைப் பிறப்பித்தது[3]. இருப்பினும் இப்பொழுது – அதாவது பெங்களூரில் குண்டு வெடித்த அதே நாளில் – இந்தூர் கோர்ட்டில் கைது-வாரண்டிற்கு எதிராக பெயிலைப் பெற்றுள்ளார்[4]. அதே பொல இப்பொழுதும் 2016ல் இத்தனை குண்டுவெடிப்புகள், கொலைகள் நடந்தாலும், திக்விஜய் திசைத்திருப்பும் போக்கில் பேசி வருகிறார். ஜாகிர் நாயக்கே, அவற்றை ஆதரிக்கவில்லை என்றாலும், இவர் ஜாகி நாயக்கை ஆதரிப்பதை விடமாட்டார் போலும். அவருடைய “செக்யூலரிஸம்” அப்படி வேலை செய்து கொண்டிருக்கிறது.

J-K - New type of young terrorist-burhan waniபண்டிட்டுகள், பட்டுகள் எல்லாம் ஜிஹாதிகள் ஆகிறார்களே?: இந்த பண்டிட்டுகள், பட்டுகள் இந்துக்கள் மட்டுமல்லாது, பிராமணர்களும் கூட, பிறகு, அவர்கள் எப்படி ஜிஹாதிகள், தீவிரவாதிகள் ஆனார்கள்? அதாவது, சாத்விக குணம் கொண்டவர்கள், அப்பாவிகள், கோழைகள், பயப்படுபவர்கள் …….என்றெல்லாம் இகழப்படும் பார்ப்பனர்கள், அங்கு தீவிரவாதிகளாகி விட்டனர் எனும்போது வியப்பாக இருக்கிறது. இதை இஸ்லாத்தின் மேன்மை என்பதா, அல்லது அவர்கள் வழிதவறி சென்று விட்டனர் என்பதா? ஒருவேளை முஸ்லிம்களாகி, இறைச்சி முதலியவற்றை உண்டு, சிறுவயதிலிருந்தே மாற்றப்பட்டு விட்டாதால், இரண்டு-மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு, அத்தகையவர்களாக உருவாக்கப்படுகிறார்களா என்று நோக்கத்தக்கது. இனிமேல், இதையும் “பார்ப்பனீய தீவிரவாதம்” என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்களா? முஸ்லிம்களாகி, இறைச்சி முதலியவற்றை உண்டு, சிறுவயதிலிருந்தே மாற்றப்பட்டு விட்டாதால், இரண்டு-மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு, அத்தகையவர்களாக உருவாக்கப்படுகிறார்கள் என்பது மனோதத்துவரீதியில் அறிந்து கொள்ளலாம். இங்கு பாரம்பரிய காரணிகளை விட, சுற்றுசூழ்நிலை காரணிகள் அதிகமாகவே தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சுமார் 200 வருடங்களில் அப்பகுதிகளில் இருந்த இந்துக்களின் எண்ணிக்கை குறைந்ததற்கும், தீவிரவாதம் வளர்ந்ததற்கும் உள்ள சம்பந்தங்ளையும் ஆராயலாம்.

© வேதபிரகாஷ்

10-07-2016

[1] A new breed of militants is rising in Kashmir – young, educated, tech-savvy. HT travelled to the valley to find out what is fuelling these young men to take up arms against the state.

http://www.hindustantimes.com/static/the-young-militants-of-kashmir/

[2] http://articles.timesofindia.indiatimes.com/2013-04-03/indore/38247299_1_digvijay-singh-bjym-jiwajiganj-police-station

[3]  A local court here on Tuesday issued a non-bailable arrest warrant against Congress General Secretary Digvijay Singh and Ujjain’s Congress MP Prem Chand Guddu after they failed to appear before it in connection with a case against them and others for allegedly thrashing Bharatiya Janata Yuva Morcha (BJYM) workers.

http://zeenews.india.com/news/madhya-pradesh/local-court-issues-non-bailable-warrant-against-digvijay-singh_839408.html

[4]  Indore Bench of Madhya Pradesh High Court on Wednesday granted anticipatory bail to senior Congress leader Digvijaya Singh and party MP Prem Chand Guddu in connection with a case filed against them and others for allegedly thrashing BJP youth wing workers in Ujjain in 2011. Justice PK Jaiswal, who on Tuesday heard arguments on separate applications filed by the two and reserved his judgement, granted pre-arrest bail on Wednesday, their lawyer Akash Sharma told PTI.

http://ibnlive.in.com/news/high-court-grants-anticipatory-bail-to-digvijaya-singh-mp/386123-37-64.html

காஷ்மீரத்தில் ஹிஜ்புல் முஜாஹித்தீன்-தளபதி தோன்றிய விதம் – பேற்றோரே உருவாக்கிய ஜிஹாத்-தியாகி!

ஜூலை 10, 2016

காஷ்மீரத்தில் ஹிஜ்புல் முஜாஹித்தீன்-தளபதி தோன்றிய விதம் – பேற்றோரே உருவாக்கிய ஜிஹாத்-தியாகி!

burhan father proud of his son

பெற்றோரே மகனை தீவிரவாதியாக்க ஊக்குவித்தனர்: பள்ளித் தலைமையாசிரியரின் மகனான புர்கான், படிப்பில் கெட்டிக்காரராக இருந்தான். ஒருகட்டத்தில் படிப்பில் நாட்டமில்லாமல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாக காணாமல் போனான். இதுவே முரண்பாடாக இருக்கிறது. பரீட்சைக்கு முன்னால் பையனை காணோ என்றால், பெற்றோரறெப்படி அமைதியாக இருந்தனர்? படிப்பில் கெட்டிக்காரனாக இருப்பவன் எப்படி படிப்பில் நாட்டமில்லாமல் போவான் என்று தெரியவில்லை. பின்னர் ஹிஸ்புல் இயக்கத்தில் சேர்ந்திருப்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. வயது 15 லேயே தீவிரவாடியாகி விட்டான் எனும்போது, அபோழுதாவது தவறு என்று சுட்டிக் காட்டி, மகனை மீட்டிருக்க வேண்டும், ஆனால், தந்தை என்ற முறையிலோ, ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் என்ற வகையிலோ ஒன்றும் செய்யவில்லை என்றே தெரிகிறது. வானியின் தந்தை, அதை “அல்லாவின் சேவையில் ஷஹீதானான்”, என்று தனது மகனை போற்றினார்[1] எனும்போது, எல்லா உண்மைகளையும் அறிந்து, மகனின் தீவிரவாத்தை ஆதரித்தார் என்று தான் தெரிகிறது. ஏற்கெனவே, ஒரு மகனை இழந்ததும் அவருக்கு பொருட்டாகத் தேரியவில்லை போலும். பெற்ற மகன்களை ஜிஹாதிகளாக்கி, ஷஹீதுகள் என்று போற்றி, மேன்மேலும், கொலைகள், குரூர பலிகள், முதலியவற்றைப் பெருக்கவே, அவர்கள் மனங்கள் விரும்புகின்றன போலும்.

J-K - New type of young terrorists- techie, computer savvyவழக்கம் போல பிணத்தை வைத்துக் கொண்டு நடத்திய கலவரங்கள்: 144-ஊரடங்கு உத்தரவை மீறி ஊர்வலத்தை நடத்தியுள்ளனர். தேசவிரோத, ஜிஹாதி கோஷங்களை முழங்கியுள்ளனர். உடலடக்கம் பின்பும், கல்லேறிந்து கலாட்டா செய்துள்ளனர்;  ராணுவம், போலீஸார் இருந்தாலும், அவர்கள் இந்த வெறிபிடித்த கூட்டத்தின் செயல்களுக்கு எல்லாம் பொறுத்தே இருந்தனர். எனினும், பிரிவினைவாதிகளின் திட்டப்படி பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது[2]. போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி ஆக்ரோஷமாக கற்களைவீசி தாக்குதல் நடத்தியதால் பொதுமக்கள் யாரும் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இந்துக்களின் வீடுகள், அரசு கட்டிடங்கள், வாகனங்கள் என்று குறி வைத்து தாக்கினர். மறைந்திருந்த-அடையாளம் கண்டுபிடிக்க முடியாத தீவிரவாதிகள் சுடவும் செய்தனர். இவ்வாறாக தூண்டிவிடும் போக்கும் அறிந்த விசயமே. இதனால், கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் முயன்றது. அந்நிலையில் குல்காம், அனந்த்நாக் மாவட்டங்களில் நடந்த வன்முறை மோதல்களில் 11 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்[3].

J-K - New type of young terrorists.stone jihadதாக்குதல், பதில்தாக்குதல்கலவரம், துப்பாக்கி சூடு, சாவு, ஊர்வலம், கலவரம் என்று நடப்பது: இந்த செய்தி பரவியதும், ஹால் புல்வாமா என்ற இடத்தில் இருந்த இந்து-பண்டிடுகள் தற்காலிக கேம்ப் / தங்குமிடம் கற்களால் தாக்கப்பட்டது. குல்காம் என்ற இடத்தில் பாஜக அலுவலமும் தாக்கப்பட்டது[4]. இதனை தமிழ் ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. தெற்கு காஷ்மீரில் 5 காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச்சாவடிகள் தீக்கிரையாக்கப்பட்டன[5]. “இந்திய நிர்வாகத்துக்கு” உட்பட்ட காஷ்மீரில் கடந்த சில ஆண்டுகளாக திடீரென வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று “பிபிசி” கூறுகிறது[6]. ஆயுதம் ஏந்திப் போராடும் தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் ஆதரவு அதிகரித்து வருவது, பாதுகாப்புப் படையினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. எழுபது லட்சம் பேர் உள்ள காஷ்மீர் பள்ளத்தக்கில், சுமார் 143 தீவிரவாதிகள் முழுவேகத்துடன் இயங்குவதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. அந்த 143 பேரில், 89 பேர், பெரும்பாலும் தென் காஷ்மீர் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். காஷ்மீர் முழுவதும் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்குமாறு பிரிவினைவாதத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்[7].

Burhan Wani - praised by PAK media Dwan etcதமிழ் ஊடகங்களின் தேசவிரோத போக்கு செய்திகள்: “இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில்”, என்கிறது பிபிசி. தமிழ் தெரிந்த ஒருவர் இவ்வாறு எழுதியிருந்தாலும், இந்திய உணர்வு அதில் இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதே நேரத்தில் லெட்டினென்ட் ஜெனரல் சைது அடா ஹஸ்னைன் என்பவரின், “ஒரு துரோகியின் இறப்பு: புர்ஹான் வானியின் கொலையும், அதற்கு பிறகு நடந்தவையும்”, என்ற விவரமான கட்டுரை அவசியம் படிக்க வேண்டும்[8]. ஒரு முஸ்லிமாக இருந்தாலும், காஷ்மீரத்தின் இப்பிரச்சினை பற்றி நேற்று வரை நடந்தவற்றை விவரத்துடன் கொடுத்துள்ளார். அவர் வானியை “துரோகி” என்றே ராணுவ பாஷையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்திய நிருபர், அதைவிட மோசமாக செய்தியை வெளியிட்டது கவனிக்கலாம். இவர் அனைத்துலக விவேகானந்த நிறுவனம் மற்றும் தில்லி கருத்துவாக்கம் குழு முதலியவற்றுடன் சம்பந்தப்பட்டுள்ளார். தமிழக ஊடகத்துறையில் உள்ளவர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்களது சித்தாந்த நோக்கிலேயே செயல்படுகின்றனர் என்று தெரிகிறது.

qasim funeral huge crowd

Srinagar, India-October 29-2015: Kashmiri villagers carry the body of top Lashkar-e-Taiba commander Abu Qasim during his funeral procession in Bugam district Kulgam some 75 km from Srinagar, Kashmir, India. Police on Thursday claimed that the most wanted LeT Commander Abu Qasim was killed during an encounter in Khandaypora area of Kulgam district, south Kashmir. (Photo by Waseem Andrabi/ Hindustan Times) – this is only for illustrative purpose.

இந்தியாவில் மறுபடி இஸ்லாம் ஆட்சி நிறுவப்பட வேண்டும்: ஐசிஸ், தலிபான், அல்-குவைதா, இஜ்புல் முஜாஹித்தீன் போன்ற ஜிஹாதி-தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவைத் தாக்க வேண்டும், பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. இருபக்கமும் இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தான், பங்களாதேசம், ஊடுருவி செல்ல “கம்யூனிஸ” நேபாளம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் இருப்பதால், அவர்களது போக்குவரத்து இப்பகுதிகளில் சுலபமாக இருக்கின்றன. எல்லை மாநிலங்களான பீஹார், மேற்கு வங்காளம் இவர்களின் போக்குவரத்திற்கு உபயோகமாக இருக்கின்றன. நிதிஷ்குமார் மற்றும் மம்தா ஆட்சிகளில் “முஸ்லிம்களின் ஆதரவு, முஸ்லிம்களை டாஜா செய்தல்” என்று கொள்கை கடைப்பிடிப்பதால், எந்த வழக்கில் முஸ்லிம் சம்பந்தப்பட்டிருந்தாலும், மென்மையாகவே அரசு அதிகாரிகள், போலீஸார் முதலியோர் நடந்து கொள்கின்றனர். மேலும், முஸ்லிம்களே அப்பகுதிகளில் அரசியலில் ஆதிக்கம் செல்லுத்தி வருவதால், எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி என்றுள்ளோரும் ஆதரவு-பாதுகாப்பு கொடுக்கின்றனர். இதனால், பரஸ்பர ஆதாயம், பலன்கள் முதலியவற்றால், தீவிரவாதிகள் தாராளாமாகவே செயல்பட்டு வருகின்றனர்.

Support-for-Burhan-Wani-Breathtaking-Literallyஇணைதள ஜிஹாதில் ஆட்களை சேர்த்தல்: இந்நிலையில் தான், இணைதளம் மூலம் படித்த இளைஞர்களை ஐசிஸ்/ஐசில் போன்றவை வேலைக்கு வைத்துக் கொள்ள ஆரம்பித்தன. இஞ்ஜினியரிங், தொழிற்நுட்பம், மருத்துவம் போன்ற படிப்புகள் படித்தவர்களை “தகுந்த வேலை” என்று அமர்த்தி, நன்றாக சம்பளம் கொடுத்து, பிறகு, படிப்படியாக, அவர்களது நாடித்துடிப்பை அறிந்து, மதவெறி ஏற்றி, ஜிஹாதித்துவத்தை போதித்து, இந்தியாவில் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை, நீங்கள் இவ்வாறிருக்கிறீர்கள் என்றால், அதற்கு காபிர்களின் ஆட்சி தான் காரணம், அவர்கள் ஆட்சி ஒழிய வேண்டும், 300 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இஸ்லாமிய அரசை இந்தியாவில் நிறுவ வேண்டும், அப்பொழுது, இந்தியாவிலேயே, உங்களுக்கு இதே போன்ற வேலை கிடைக்கும். அதற்கு தான் நாங்கள் பாடுபட்கிறோம், நீங்கள் ஒத்துழையுங்கள் என்று ஆரம்பித்து, தீவிரவாதிகளாக்குகின்றனர். அவர்களுக்கு எல்லாம் கொடுத்து அடிமையாக்குகின்றனர். தினம்-தினம் செக்ஸுக்கு இளம்பெண்கள், குடி, போதை மருந்து, நல்ல சாப்பாடு…….என்று கொடுத்து வளைத்து போடுகின்றனர். பிறகு, என்ன சொன்னாலும் கேட்பர் என்ற நிலை உண்டாக்கியவுடன், ஜிஹாதியாக, பிதாயுனாக மாற்றுகின்றனர். பிதாயீன் என்று சொல்லிக் கொண்டு யார் வேண்டுமானாலும் இருக்கலாம் போலிருக்கிறது. அட்னன் ரஷீத், முந்தைய பாகிஸ்தானிய விமானப்படையினர் கூட அவ்வாறு உள்ளனர்[9]. இவன் முஸாரப்பை கொல்லும் முயற்சியில் கைது செய்யப்பட்டான். பட்கல் என்பவனும் அவ்வாறேயுள்ளான்[10]. ஜிஹாதிகளும் அவ்வாறே இருக்கிறார்கள். இஸ்லாத்திற்காக உயிரை விடுவதில் இருகூட்டத்தாரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள், உயிரை விடுகிறார்கள். பெயர்கள், இடங்கள் மாறினாலும், அவர்களது செயல்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அதனால், ஊக்குவிக்கும் மூலம் ஒன்றுதான் என்று வெளிப்படுகிறது.

© வேதபிரகாஷ்

10-07-2016

[1] At the funeral in Tral Eidgah, eyewitnesses said three to four armed Hizbul Mujahideen militants fired a gun salute. Wani’s father Muzaffar called his son a “martyr in the service of Allah”.

http://timesofindia.indiatimes.com/india/11-killed-200-hurt-as-Valley-erupts-over-Wanis-death/articleshow/53135735.cms

[2] மாலைமலர், ஜம்மு காஷ்மீரில் தொடரும் வன்முறைக்கு 2 பேர் பலி: 50 பேர் காயம், பதிவு: ஜூலை 09, 2016 17:21, மாற்றம்: ஜூலை 09, 2016 17:22

[3] The Times of India, 11 killed, 200 hurt as Valley erupts over Wani’s death, M Saleem Pandit| TNN | Jul 10, 2016, 04.16 AM IST

[4] As news of Wani’s killing spread, mobs pelted stones on Kashmiri Pandit transit camps in Haal Pulwama and attacked a BJP office in Kulgam. Authorities also suspended train services within the Valley.

http://timesofindia.indiatimes.com/india/11-killed-200-hurt-as-Valley-erupts-over-Wanis-death/articleshow/53135735.cms

[5] http://www.maalaimalar.com/News/TopNews/2016/07/09172201/1024590/Violence-erupts-in-Kashmir-two-protesters-killed.vpf

[6] பிபிசி.தமிழ், காஷ்மீரில் வன்முறை வெடித்தது: 8 பேர் சாவு, 09-07-2016: 11.30 pm

[7] http://www.bbc.com/tamil/global/2016/07/160709_kashmir_8_dead

[8] Lt Gen Syed Ata Hasnain, The death of a renegade : Burhan Wani’s killing and its aftermath, Posted on 10/07/2016 by Dailyexcelsior.

(The writer is an ex GOC of the Srinagar based 15 Corps, now associated with the Vivekanand International Foundation and the  Delhi Policy Group), feedbackexcelsior@gmail.com

[9]A special fidayeen unit headed by Adnan Rasheed, a former Pakistan Air Force personnel has been formed by the Pakistani Taliban and the Islamic Movement of Uzbekistan to attack jails and free imprisoned militants. Rasheed was convicted for an attempt to assassinate former President Pervez Musharraf.

 http://www.indiatvnews.com/news/world/former-paf-man-heads-fidayeen-unit-to-free-jailed-militants–10548.html

[10] பிதாயீன் மாதிரி தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று தான் பட்கல் வெறியுடன் உள்ளான். அதே மாதிரி குண்டுவெடி-கொலைகளையும் செய்துள்ளான்.

http://kashmirmonitor.org/03032013-ND-bhatkal-wanted-to-carry-fidayeen-strike-in-train-with-foreign-passengers-in-2011-43016.aspx

ஹைடெக்-ஜிஹாத் தீவிரவாதம், இணைதள ஆட்சேர்ப்பு, சேடிலைட்-போதனை, ஆனால், குண்டுவெடிப்பில் சாவுதான், ரத்த பீறல்தான், கைகால் சேதம் தான்!

ஜூலை 10, 2016

ஹைடெக்-ஜிஹாத் தீவிரவாதம், இணைதள ஆட்சேர்ப்பு, சேடிலைட்-போதனை, ஆனால், குண்டுவெடிப்பில் சாவுதான், ரத்த பீறல்தான், கைகால் சேதம் தான்!

J-K - New type of young terrorists- Tral hotbed of terror

ரம்ஜான் முடியும் வாரத்தில் நடந்த தீவிரவாத கொலைகள் 07-07-2016 வரை: முதல் வாரத்தில் ரம்ஜான் முடியும் தருவாயில் உலகத்தில் பல இடங்களில் இஸ்லாம் பெயரில் தீவிரவாத குண்டுவெடிப்புகள், துப்பாக்கி சூடுகள், குரூர கத்திக் குத்துகள்-வெட்டுகள் என்ற முறையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொலைசெய்யப் பட்டிருக்கிறார்கள். தினபதற்கு விலங்குகள் என்றால், அவர்களது ஜிஹாதி-பசிக்கு மனிதர்களே தேவைப்பட்டனர் போலும். 01-07-2016 மற்றும் 07-07-2016 தேதிகளில், இந்தியாவுக்குள் இருக்கும் அண்டை நாடான பங்களாதேசத்தில் 9/11 மற்றும் போன்ற தாக்குதலில் மக்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். அதே வாரத்தில் தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அதே போன்ற தீவிரவாத செயல்கள் தினம்-தினம் நடந்து கொண்டிருந்தன. இந்திய ராணுவத்திற்கு, இந்தியாவும் தாக்கப்படும் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன. அந்நிலையில் தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று சுட்டுக் கொன்றனர்.

Burhan Wani - praised by Urudu PAK media

08-07-2016 வெள்ளிக்கிழமைபாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டதால், பதிலுக்கு சுட்டதில் கொலை: இதுகுறித்து அந்த மாநில காவல் துறை டிஜிபி கே.ராஜேந்திரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது[1]: “பர்ஹன் முசாஃபர் வானி (21) என்ற பயங்கரவாதி, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்து இளைஞர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர வைக்க முயற்சி செய்து வந்தார். இவரைப் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தின் கோகெர்நாக் பகுதியில் அவர் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்ற பாதுகாப்புப் படையினர், அவரைத் தேடினர். அப்போது, ஓர் இடத்தில் பதுங்கி இருந்த பர்ஹன் முசாஃபரும், மேலும் 2 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்”, என்று ராஜேந்திரா தெரிவித்தார். காஷ்மீரின் புதிய தீவிரவாதத்தின் போஸ்டர் பாய் என்று அழைக்கப்படும், 21 வயதான பர்ஹன் முசாஃபர் வானி தனது 15-ஆவது வயதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. இவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை அறிவித்திருந்தது[2].

J-K - New type of young terrorists- Pandits, Bhats turning into jihadists

ஹிஜ்புல் முஜாஹித்தீன் அட்டகாசமும், புர்ஹான் வானியின் இணைதள ஜிஹாதும், உண்மையன ஜிஹாதும்: கடந்த 1989ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரித்து தர வேண்டுமென்று ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரையும் கொன்றுள்ளது, என்றாலும், மத அடிப்படையில் நடந்து வரும் அத்தகைய தீவிரவாதம், காஷ்மீரத்திலிருந்து எல்லா இந்துக்களையும் கொன்று விட்டது, மிச்சமிருந்தவர்களை விரட்டி விட்டது என்று இங்கு குறிப்பிடவில்லை. இந்த இயக்கத்தின் முக்கிய அங்கமாக இருந்தார் புர்கான் என்ற 21 வயது இளைஞர். இவரை 08-07-2016 அன்று இரவு பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்திய ராணுவத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி ஆகும். பள்ளித் தலைமையாசிரியரின் மகனான புர்கான், படிப்பில் கெட்டிக்காரராக இருந்தான். ஒருகட்டத்தில்  படிப்பில் நாட்டமில்லாமல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாக காணாமல் போனான். இதுவே முரண்பாடாக இருக்கிறது. படிப்பில் கெட்டிக்காரனாக இருப்பவன் எப்படி படிப்பில் நாட்டமில்லாமல் போவான் என்று “விகடன்” விளக்கவில்லை. பெற்றோர்கள் அத்தகைய மாற்றத்தைக் கண்காணித்து சரிபடுத்தியிருக்க வேண்டும். பின்னர் ஹிஸ்புல் இயக்கத்தில் சேர்ந்திருப்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. அப்போது அவனுக்கு வயது 15 தான். அபோழுதாவது தவறு என்று சுட்டிக் காட்டி, மகனை மீடிருக்க வேண்டும். செய்யவில்லை என்றே தெரிகிறது.

 J-K - New type of young terrorists

தேசத்துரோகியை புகழ்ந்து தள்ளிய தமிழ் ஊடகங்கள்: இணையதளங்கள், சமூக வலைத் தளங்களை கையாளுவதில் புர்கான் கெட்டிக்காரனாக இருந்ததால், இதன் வாயிலாக தீவிரவாத இயக்கத்துக்கு வேண்டிய நபர்களை தேர்ந்தெடுப்பதில் திறமையாக செயல்பட்டான், என்று திடீரென்று “விகடன்” கூறுகிறது. அவ்வாறான திறமையை அவன் எப்படி, எங்கு, எவ்விதம் பெற்றான் என்று விளக்கவில்லை. தீவிரவாதச் செயல்களை வீடியோவாக பதிவு செய்து அதனை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவான்[3]. அதற்கு லைக் போடுபவர்கள், காமாண்ட் போடுபவர்களை குறி வைத்து நட்பாக்கிக் கொள்வான்[4]. பின்னர் அந்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து இயக்கத்தில் சேர்க்கும் வேலையில் ஈடுபடுவான். அப்படி 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை அந்த இயக்கத்தில் புர்கான் சேர்த்துள்ளான்[5]. தான் சேர்த்து விட்டவர்கள் ‘ஆக்டிவாக’ இருக்கிறார்களா என்றும் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளான். டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமியக் கொடி பறக்கவிட வேண்டுமென்பதுதான் புர்கானின் கோஷமாக இருந்தது. ஹிஸ்புல் இயக்கத்தின் முக்கிய பொறுப்புக்கு வந்திருந்த இவனது தலைக்கு இந்திய அரசு 10 லட்சம் அறிவித்திருந்தது, என்றேல்லாம் புகழ்ந்து தள்ளின ஊடகங்கள். தேசத்துரோகத்தில் ஈடுபட்டான் என்று ஒரு வரி கூட இல்லை. சுட்டுக் கொல்லப்பட்ட புர்கான் ஒரு கிரிக்கெட் வீரனும் கூட.  கடந்த 2015ம் ஆண்டு புர்கானின் சகோதரன் காலீத்தையும் இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.  காலீத், புர்கானை சந்திக்க சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர் என்று அரைகுறையாக செய்தியை வெளிட்டுள்ளது. தாக்கினால், பதிலுக்கு தாக்கத்தான் செய்வர், அதனை குறிப்பிடாமல், இவ்வாறு செய்திகளை வெளியிடுவது விசித்திரம் தான்!

Kashmiri mourners carry the body of Burhan Muzaffar Wani, the new-age poster boy for the rebel movement in the restive Himalayan state of Jammu and Kashmir, ahead of his funeral in Tral, his native town, 42kms south of Srinagar on July 9, 2016. A top commander from the largest rebel group in Indian-administered Kashmir was killed in a gun battle with government forces on July 8, police said. Young and media savvy, Burhan Wani was a top figure in Hizbul Mujahideen and had a one million rupee ($14,900) bounty on his head. Wani, 22, joined the rebel movement at the age of 15 and in recent years had been behind a huge recruitment drive to the group's ranks, attracting young and educated Kashmiris to the decades-old fight for independence of the restive disputed region. Viewed locally as a hero, his death sparked protests in nearby Anantnag town, with hundreds taking to the streets shouting independence slogans and lauding Wani as a revolutionary, witnesses said. / AFP PHOTO / TAUSEEF MUSTAFA

Kashmiri mourners carry the body of Burhan Muzaffar Wani, the new-age poster boy for the rebel movement in the restive Himalayan state of Jammu and Kashmir, ahead of his funeral in Tral, his native town, 42kms south of Srinagar on July 9, 2016.
A top commander from the largest rebel group in Indian-administered Kashmir was killed in a gun battle with government forces on July 8, police said. Young and media savvy, Burhan Wani was a top figure in Hizbul Mujahideen and had a one million rupee ($14,900) bounty on his head. Wani, 22, joined the rebel movement at the age of 15 and in recent years had been behind a huge recruitment drive to the group’s ranks, attracting young and educated Kashmiris to the decades-old fight for independence of the restive disputed region. Viewed locally as a hero, his death sparked protests in nearby Anantnag town, with hundreds taking to the streets shouting independence slogans and lauding Wani as a revolutionary, witnesses said. / AFP PHOTO / TAUSEEF MUSTAFA

09-07-2016 சனிக்கிழமை பிண ஊர்வலம்: ஸ்ரீநரில் 114 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு எதிராக பிரிவினைவாதிகள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்[6]. இதனால், ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவுக்கு இணையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சமூக வலைத்தளங்களின் மூலம் வீண் வதந்திகள் பரவுவதை தவிர்க்கும் வகையில்  மொபைல் இண்டர்நெட் சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. உள்மாவட்டங்களுக்கு இடையில் ஓடும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், அங்குள்ள டிரால் நகரில் வானியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது[7].  நான்கு ஹிஜ்புல் முஜாஹித்தீன் வீரர்கள் வானத்தை நோக்கி சுட்டனர். ராணுவம், போலீஸார் முதலியோர் இருக்கு போதே, இவ்வாறு ஹிஜ்புல் முஜாஹித்தீன் எப்படி துப்பாக்கிகளோடு வந்தனர் என்று தெரியவில்லை. வானியின் தந்தை, அதை “அல்லாவின் சேவையில் ஷஹீதானான்”, என்று தனது மகனை போற்றினார்[8]. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு படையினரின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி மாற்று வழியில் வந்து பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்[9]. சட்டத்தை மீறியது பற்றி எந்த மனித உரிமை மற்றும் செக்யூலரிஸ பழங்கள் தங்களது கருத்துகளை வெளியிடவில்லை. இந்த கூட்டத்தினரிடையே பேசுவதற்காக சில பிரிவினைவாதிகள் வர முயற்சித்தனர். அதாவது சாவிலும் ஆதாரம் தேடத்தான் அந்த ஜிஹாதிகள் இருக்கிறார்கள் என்பதை, அந்த முஸ்லிம்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வினோதம் தான். ஆனால், பலத்த பாதுகாப்பை மீறி பிரிவினைவாதிகளால் அங்கு செல்ல முடியவில்லை.

© வேதபிரகாஷ்

10-07-2016


[1] தினமணி, ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி பர்ஹன் வானி சுட்டுக் கொலை: காவல்துறை டிஜிபி, By dn-First Published : 09 July 2016 11:31 AM IST

[2]http://www.dinamani.com/latest_news/2016/07/09/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA/article3521154.ece

[3] விகடன், ஃபேஸ்புக்கில் ஆள் பிடிப்பார்:ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட புர்கான்!, Posted Date : 16:59 (09/07/2016).

[4] Burhan Wani managed in five years, to create a band of 60-70 young locally recruited terrorists. Many were well educated and technically proficient to exploit social media for their cause. Their photographs in combat fatigues with weapons went viral on Facebook and Whatsapp.

http://www.dailyexcelsior.com/death-renegade-burhan-wanis-killing-aftermath/

[5] http://www.vikatan.com/news/india/65996-dead-in-protests-after-terrorist-burhan-death.art

[6] தினத்தந்தி, பர்ஹான் வானி இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு, காஷ்மீரில் தொடர்ந்து பதட்டமான சூழல், பதிவு செய்த நாள்: சனி, ஜூலை 09,2016, 2:28 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, ஜூலை 09,2016, 2:28 PM IST.

[7] Tral is notorious for its alienation and use of violence over the last 26 years. The Wagad ridge to its West and the Dachigam Forest to the North afford excellent hideouts. Despite presence of a full RR unit here along with CRPF the area has only been passingly under control. Burhan belonged to Tral and last year in April his brother was killed in an encounter when he was mistakenly taken to be Burhan even as he had gone to the forest to meet his renegade brother.

http://www.dailyexcelsior.com/death-renegade-burhan-wanis-killing-aftermath/

[8] At the funeral in Tral Eidgah, eyewitnesses said three to four armed Hizbul Mujahideen militants fired a gun salute. Wani’s father Muzaffar called his son a “martyr in the service of Allah”.

http://timesofindia.indiatimes.com/india/11-killed-200-hurt-as-Valley-erupts-over-Wanis-death/articleshow/53135735.cms

[9] http://www.dailythanthi.com/News/India/2016/07/09142807/Thousands-Gather-at-Tral-For-Funeral-of-Hizbul-Militant.vpf

புனித ரம்ஜான் காலத்தில் ஜிஹாதிகள் இப்படி ஏன் குரூரகொலைகள், ரத்தம் சிந்தும் குண்டுவெடிப்புகள் முதலியவற்றை செய்ய வேண்டும்?

ஜூலை 6, 2016

புனித ரம்ஜான் காலத்தில் ஜிஹாதிகள் இப்படி ஏன் குரூரகொலைகள், ரத்தம் சிந்தும் குண்டுவெடிப்புகள் முதலியவற்றை செய்ய வேண்டும்?

Ramadan jihad terror ISIS

புனிதமாதத்தில் இத்தகைய குரூரக் கொலைகள் ஏன்?: புனித மாதம் ரம்ஜான் வரும்போதே, அம்மாதத்தில் காபிர்களைக் கொன்றால் நல்லது என்ற பிரச்சாரம் ஜிஹாதிகளால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது[1]. ஐசிஸ் பிரச்சாரகன், “அல்லாவின் ஆணையால், இம்மாதம் காபிர்களுக்கு மிக்கவும் வலியுள்ள மாதமாக்குங்கள்”, என்றான். அதுதான் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு குரூரமாக அறுத்துக் கொலைசெய்கிறார்களே? இவர்களுக்கு மனிதத்தன்மையே இல்லை என்ற அளவுக்குத்தானே மற்றவர்கள் இன்று புரிந்து கொண்டு விட்டனர். இன்னொரு தீவிரவாதி அதை விளக்கி, விஷத்தைச் சேர்த்து, ஒரு குறும்புத்தகத்தைத் தயாரித்து விநியோகித்தான், “ரமதான் முடியப்போகிறது, மறந்து விடாதீர்கள், இது வெற்றி-மாதமாகும்”, என்று போதையோடு கூறினான்[2]. இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் போன்றவற்றின் ஊடகங்களளே, அந்த உண்மையினை மறைக்கவில்லை[3]. அல்லாவின் பெயரால் தான் இக்கொலைகள், குண்டுவெடிப்புகள் நடக்கின்றன[4]. இதுவரை ரம்ஜான் மாதத்தில் 800க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[5]. இராக் மற்றும் சிரியாவில் 400க்கும் மேற்பட்டவர்களை சிரமறுத்து, சித்திரவதை செய்து கொன்றிருக்கிறது[6].

Ramadan jihad terror ISIS.illustrationநடந்துள்ள கொலைகளும், ஒப்புக்கொண்டுள்ள நிலையும்: ஐசிஸ், ஐசில் எது ஒப்புக்கொண்டாலும், உண்மையில் இவை நடந்துள்ளன. அதுபோலவே,

  1. ஓர்லான்டோ – 49 பேர் கொல்லப்பட்டனர்.
  2. ஒரு தற்கொலை குண்டுவெடிப்பில் ஜோர்டனில் ஏழு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
  3. அதே நாளில், அல் முகல்லா, யேமன், லெபனாலில் உள்ள ஒர்யு கிருத்துவ கிராமம் முதலிய இடங்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
  4. இஸ்தான்புல் – அடுத்தநாளில், இஸ்தான்புல், அதத்ருக் விமானநிலையம் தாக்கப்பட்டது – குறைந்தபட்சம் 41 பேர் கொல்லப்பட்டனர்.
  5. ஆப்கானிஸ்தான்
  6. டாக்கா 01-07-2016 வெள்ளியன்று தூதரகங்கள் இருக்கும் பகுதியில், ஒரு ரெஸ்டாரென்ட் தாக்கப்பட்டு, 22 அயல்நாட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
  7. பாக்தாத் – 03-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பாக்தாத் குண்டுவெடிப்பில் 143 பேர் கொல்லப்பட்டனர்.

பாக்தாத் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் முஸ்லிம்கள் இருந்தாலும், அங்கிருந்த ஒரு கடைக்காரன், “ரம்ஜான் முடிந்து, எங்களுடைய நோன்பு முடித்துக் கொள்ளப் போகின்ற நிலையில் சந்தோஷப்படுகிறோம், இருப்பினும், அது ரத்தத்துடன் பூசப்பட்டுள்ளது”, என்று தனது எண்ணங்களை வெளிப்படுத்தினான்[7]. ஆனால், அவனும் உடைந்த கண்ணாடி துகள்கள் பறந்து வந்து விழும்போது, பாதிக்கப்பட்டான்[8].

the Battle of Badr- 313 vs 1000

ரம்ஜான் மாதத்தில் ஜிஹாதி குரூரங்கள் அதிகமாக இருப்பதேன்?: ஜிஹாதி பிரச்சாரகர்கள் பத்ர் யுத்தத்தை [the Battle of Badr] ரம்தான் மாத வெற்றிப் போரை, மற்ற இக்கால ஜிஹாத் போராட்டங்களுடன் ஒப்பிட்டு, தீவிரவாதிகளை ஊக்குவித்து வருகின்றனர்[9]. முகமது நபி மெக்காவில் எப்படி தனது எதிரிகளை ரமதான் மாதத்தில் வெற்றிக் கொண்டாரோ, அதேபோல, இம்மாதத்தில் ஜிஹாதில் இறங்கினால் வெற்றி கிடைக்கும் என்று மதவெறியை ஏற்றி வருகின்றனர்[10]. குறிப்பாக 313 சேனையை வைத்டுக் கொண்டு 1000 பேர் சேனையை வென்றது, இன்று குண்டுவெடிப்புகள், தற்கொலை குண்டுவெடிப்புகள், அதிநவீன துகபாக்கிகள் மூலம் பலரை சுட்டுக் கொல்வது என்று நிறைவேற்றப்பட்டு வருகிறது[11]. தீவிரவாத-பயங்கரவாத கூட்டத்தின் பெயர் மாறினாலும், இந்த ஜிஹாதி கொள்கை ஒன்றாகவே-இதுவாகவே இருக்கிறது. இந்த மோமின்-காபிர், தாருல் இஸ்லாம், தாருல் ஹராப், முதலிய சித்தாந்தங்களே, இந்த ஜிஹாதிக்கு ஊக்குவிப்பதாக இருக்கிறது[12]. ஐசிஸ், ஐ.எஸ், ஐசில், அல்-குவைதா, தலிபான் போன்ற தீவிரவாத-பயங்கரவாத இயக்கங்கள் இவ்வாறூ தான் வெறியோடு செயல்பட்டு வருகின்றன. இதனால், ஜிஹாத்-போதையில், தீவிரவாதிகள் எப்படியாவது காபிர்களைக் கொல்லவேண்டும் என்றா வெறியில் அலைய ஆரம்பித்து விடுகிறார்கள். ஓர்லான்டோ கொலைகாரன் இவ்வீரர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டான்[13]. இந்த ரமதான் காலத்தில் நடந்துள்ள தீவிரவாத-பயங்கரவாத கொலைகளை “நியூயார்க் டைம்ஸ்” பட்டியல் இட்டுள்ளது[14].

தேதி, இடம் குண்டுவெடிப்பில் கொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை முதலியன
ஜூலை.4, 2016 சவுதி அரேபியாவில் அமெரிக்க தூதுவரள் மற்ரு ஷியாக்களை குறிவைத்து நடத்தியகுண்டுவெடிப்புகளில் ஐந்து பேர் சாவு.
JULY 1, 2016
Bangladesh
Gunmen detonated explosives and took a number of people hostage at a restaurant in Dhaka. MORE »
JUNE 30, 2016
Egypt
A gunman fatally shot a Christian minister in El Arish, the main town in northern Sinai. MORE »
JUNE 29, 2016
Turkey
At least 44 people were killed and 238 people wounded in suicide bombings at Istanbul’s main international aiport. Turkey blamed the Islamic State for the attack. MORE »
JUNE 13, 2016
France
A police captain was fatally stabbed and his companion was also killed at their home in a small town northwest of Paris. MORE »
JUNE 12, 2016
Florida
A man who called 911 to proclaim allegiance to the Islamic State terrorist group, and who had been investigated in the past for possible terrorist ties, stormed a gay nightclub wielding an assault rifle and a pistol and carried outthe worst mass shooting in United States historyMORE »
JUNE 7, 2016
Bangladesh
A Hindu priest was attacked while riding a bicycle in a rural area not far from his home and hacked to deathMORE »
JUNE 5, 2016
Bangladesh
A Christian man was hacked to death in his grocery store. MORE »
PAKISTAN-RELIGION-ISLAM-RAMADAN

A Pakistani policeman stands guard as Muslims as faithfull perform a special evening prayer “Taraweeh” on the first day of the Muslim fasting month of Ramadan on a street of Karachi on July 10, 2013. Islam’s holy month of Ramadan is celebrated by Muslims worldwide marked by fasting, abstaining from foods, sex and smoking from dawn to dusk for soul cleansing and strengthening the spiritual bond between them and the Almighty. AFP PHOTO / ASIF HASSAN

முஸ்லிம்கள் வாதிடும் முறை: உலக நாடுகளில், ஜிஹாதிகளால் ஏகப்ப்ப்பட்ட பாதிப்புகளை அடைவதால், அவர்கள் இஸ்லாத்துக்கும் தீவிரவாதம்-பயங்கரவாத செயல்களுக்கும் உள்ள சம்பந்தத்தை, இணைப்புகளை, ஊக்குவிப்புகளை தெள்லத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்கள். இருப்பினும், முஸ்லிம்கள் இவ்வாறெல்லாம் வாதிட்டு வருகின்றனர்:

  1. இஸ்லாம் என்றால் அமைதி, இவர்கள் அமைதியைக் குலைக்கிறார்கள்;
  2. இந்த தீவிரவாதிகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை,
  3. தீவிரவாதத்திற்கும், இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை.
  4. அவர்கள் இஸ்லாத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்,
  5. அவர்கள் பெயரளவில் தான் முஸ்லிம்கள், முஸ்லிம்கள் போன்ற பெயர்களை வைத்திருக்கிறார்கள்,
  6. இன்னும் ஒருபடி போய் அவர்கள் முஸ்லிம்களே இல்லை.

ஷேக் அஸினா, “என்ன முஸ்லிம்கள் நீங்கள்? ரம்ஜான் மாதத்தில் இப்படி கொலை செய்கின்றீர்களே?”, என்று வெளிப்படையாகக் கேட்டுள்ளார்[15]. அதாவது அவருக்கும் அந்த உண்மை தெரிந்துள்ளது. இனி முஸ்லிம்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை!

© வேதபிரகாஷ்

06-07-2016

saudi_bomb blast in Medina 04-07-2016

[1] The New York Times, ISIS Uses Ramadan as Calling for New Terrorist Attacks, By Ben Hubbard, JULY 3, 2016.

[2] http://www.nytimes.com/2016/07/04/world/middleeast/ramadan-isis-baghdad-attacks.html?_r=0

[3] The Nation, ISIS using Ramzan to call for new terror attacks, July 04, 2016, 1:31 am

[4] http://nation.com.pk/international/04-Jul-2016/isis-using-ramzan-to-call-for-new-terror-attacks

[5] The News-18, Over 800 Killed by ISIS During the Holy Month of Ramzan, D. P. Dash, First published: July 5, 2016, 2:10 PM IST | Updated: 18 hours ago.

[6] http://www.news18.com/news/world/over-800-killed-by-isis-during-the-holy-month-of-ramzan-1265979.html?utm_source=fp_top_internal

[7] http://www.firstpost.com/world/ramzan-a-time-for-terror-jihadists-interpret-religion-in-a-way-most-muslims-deplore-2874146.html

[8] Firstpost, Is Ramzan a time for terror? Most deplorably to Muslims, that’s what jihadis think, FP Staff  Jul 5, 2016 14:56 IST

[9] A large share of the victims have been Muslims, belying the Islamic State’s claim to be the defender of their faith. “We were happy and preparing to break the last day of the fasting month very soon and to celebrate Eid, but our feelings have been stained with blood,” said Hadi al-Jumaili, a shopkeeper who was hit with flying glass in the attack in Baghdad.

[10] http://www.frontpagemag.com/fpm/263111/ramadan-month-jihad-robert-spencer

[11] Frontpage.magazine, Ramadan: month of jihad – As Muslims struggle to increase their devotion to Allah, expect more mass murder, Robert Spencer June 7, 2016

[12] http://www.frontpagemag.com/fpm/263111/ramadan-month-jihad-robert-spencer

[13] http://www.nytimes.com/2016/06/19/us/omar-mateen-gunman-orlando-shooting.html

[14] http://www.nytimes.com/interactive/2016/03/25/world/map-isis-attacks-around-the-world.html

[15] http://indiatoday.intoday.in/story/dhaka-attack-restaurant-isis-sheikh-hasina/1/706051.html