காஷ்மீரத்தில் ஹிஜ்புல் முஜாஹித்தீன்-தளபதி தோன்றிய விதம் – பேற்றோரே உருவாக்கிய ஜிஹாத்-தியாகி!
காஷ்மீரத்தில் ஹிஜ்புல் முஜாஹித்தீன்-தளபதி தோன்றிய விதம் – பேற்றோரே உருவாக்கிய ஜிஹாத்-தியாகி!
பெற்றோரே மகனை தீவிரவாதியாக்க ஊக்குவித்தனர்: பள்ளித் தலைமையாசிரியரின் மகனான புர்கான், படிப்பில் கெட்டிக்காரராக இருந்தான். ஒருகட்டத்தில் படிப்பில் நாட்டமில்லாமல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாக காணாமல் போனான். இதுவே முரண்பாடாக இருக்கிறது. பரீட்சைக்கு முன்னால் பையனை காணோ என்றால், பெற்றோரறெப்படி அமைதியாக இருந்தனர்? படிப்பில் கெட்டிக்காரனாக இருப்பவன் எப்படி படிப்பில் நாட்டமில்லாமல் போவான் என்று தெரியவில்லை. பின்னர் ஹிஸ்புல் இயக்கத்தில் சேர்ந்திருப்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. வயது 15 லேயே தீவிரவாடியாகி விட்டான் எனும்போது, அபோழுதாவது தவறு என்று சுட்டிக் காட்டி, மகனை மீட்டிருக்க வேண்டும், ஆனால், தந்தை என்ற முறையிலோ, ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் என்ற வகையிலோ ஒன்றும் செய்யவில்லை என்றே தெரிகிறது. வானியின் தந்தை, அதை “அல்லாவின் சேவையில் ஷஹீதானான்”, என்று தனது மகனை போற்றினார்[1] எனும்போது, எல்லா உண்மைகளையும் அறிந்து, மகனின் தீவிரவாத்தை ஆதரித்தார் என்று தான் தெரிகிறது. ஏற்கெனவே, ஒரு மகனை இழந்ததும் அவருக்கு பொருட்டாகத் தேரியவில்லை போலும். பெற்ற மகன்களை ஜிஹாதிகளாக்கி, ஷஹீதுகள் என்று போற்றி, மேன்மேலும், கொலைகள், குரூர பலிகள், முதலியவற்றைப் பெருக்கவே, அவர்கள் மனங்கள் விரும்புகின்றன போலும்.
வழக்கம் போல பிணத்தை வைத்துக் கொண்டு நடத்திய கலவரங்கள்: 144-ஊரடங்கு உத்தரவை மீறி ஊர்வலத்தை நடத்தியுள்ளனர். தேசவிரோத, ஜிஹாதி கோஷங்களை முழங்கியுள்ளனர். உடலடக்கம் பின்பும், கல்லேறிந்து கலாட்டா செய்துள்ளனர்; ராணுவம், போலீஸார் இருந்தாலும், அவர்கள் இந்த வெறிபிடித்த கூட்டத்தின் செயல்களுக்கு எல்லாம் பொறுத்தே இருந்தனர். எனினும், பிரிவினைவாதிகளின் திட்டப்படி பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது[2]. போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி ஆக்ரோஷமாக கற்களைவீசி தாக்குதல் நடத்தியதால் பொதுமக்கள் யாரும் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இந்துக்களின் வீடுகள், அரசு கட்டிடங்கள், வாகனங்கள் என்று குறி வைத்து தாக்கினர். மறைந்திருந்த-அடையாளம் கண்டுபிடிக்க முடியாத தீவிரவாதிகள் சுடவும் செய்தனர். இவ்வாறாக தூண்டிவிடும் போக்கும் அறிந்த விசயமே. இதனால், கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் முயன்றது. அந்நிலையில் குல்காம், அனந்த்நாக் மாவட்டங்களில் நடந்த வன்முறை மோதல்களில் 11 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்[3].
தாக்குதல், பதில்–தாக்குதல்–கலவரம், துப்பாக்கி சூடு, சாவு, ஊர்வலம், கலவரம் என்று நடப்பது: இந்த செய்தி பரவியதும், ஹால் புல்வாமா என்ற இடத்தில் இருந்த இந்து-பண்டிடுகள் தற்காலிக கேம்ப் / தங்குமிடம் கற்களால் தாக்கப்பட்டது. குல்காம் என்ற இடத்தில் பாஜக அலுவலமும் தாக்கப்பட்டது[4]. இதனை தமிழ் ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. தெற்கு காஷ்மீரில் 5 காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச்சாவடிகள் தீக்கிரையாக்கப்பட்டன[5]. “இந்திய நிர்வாகத்துக்கு” உட்பட்ட காஷ்மீரில் கடந்த சில ஆண்டுகளாக திடீரென வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று “பிபிசி” கூறுகிறது[6]. ஆயுதம் ஏந்திப் போராடும் தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் ஆதரவு அதிகரித்து வருவது, பாதுகாப்புப் படையினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. எழுபது லட்சம் பேர் உள்ள காஷ்மீர் பள்ளத்தக்கில், சுமார் 143 தீவிரவாதிகள் முழுவேகத்துடன் இயங்குவதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. அந்த 143 பேரில், 89 பேர், பெரும்பாலும் தென் காஷ்மீர் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். காஷ்மீர் முழுவதும் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்குமாறு பிரிவினைவாதத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்[7].
தமிழ் ஊடகங்களின் தேசவிரோத போக்கு செய்திகள்: “இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில்”, என்கிறது பிபிசி. தமிழ் தெரிந்த ஒருவர் இவ்வாறு எழுதியிருந்தாலும், இந்திய உணர்வு அதில் இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதே நேரத்தில் லெட்டினென்ட் ஜெனரல் சைது அடா ஹஸ்னைன் என்பவரின், “ஒரு துரோகியின் இறப்பு: புர்ஹான் வானியின் கொலையும், அதற்கு பிறகு நடந்தவையும்”, என்ற விவரமான கட்டுரை அவசியம் படிக்க வேண்டும்[8]. ஒரு முஸ்லிமாக இருந்தாலும், காஷ்மீரத்தின் இப்பிரச்சினை பற்றி நேற்று வரை நடந்தவற்றை விவரத்துடன் கொடுத்துள்ளார். அவர் வானியை “துரோகி” என்றே ராணுவ பாஷையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்திய நிருபர், அதைவிட மோசமாக செய்தியை வெளியிட்டது கவனிக்கலாம். இவர் அனைத்துலக விவேகானந்த நிறுவனம் மற்றும் தில்லி கருத்துவாக்கம் குழு முதலியவற்றுடன் சம்பந்தப்பட்டுள்ளார். தமிழக ஊடகத்துறையில் உள்ளவர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்களது சித்தாந்த நோக்கிலேயே செயல்படுகின்றனர் என்று தெரிகிறது.

Srinagar, India-October 29-2015: Kashmiri villagers carry the body of top Lashkar-e-Taiba commander Abu Qasim during his funeral procession in Bugam district Kulgam some 75 km from Srinagar, Kashmir, India. Police on Thursday claimed that the most wanted LeT Commander Abu Qasim was killed during an encounter in Khandaypora area of Kulgam district, south Kashmir. (Photo by Waseem Andrabi/ Hindustan Times) – this is only for illustrative purpose.
இந்தியாவில் மறுபடி இஸ்லாம் ஆட்சி நிறுவப்பட வேண்டும்: ஐசிஸ், தலிபான், அல்-குவைதா, இஜ்புல் முஜாஹித்தீன் போன்ற ஜிஹாதி-தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவைத் தாக்க வேண்டும், பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. இருபக்கமும் இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தான், பங்களாதேசம், ஊடுருவி செல்ல “கம்யூனிஸ” நேபாளம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் இருப்பதால், அவர்களது போக்குவரத்து இப்பகுதிகளில் சுலபமாக இருக்கின்றன. எல்லை மாநிலங்களான பீஹார், மேற்கு வங்காளம் இவர்களின் போக்குவரத்திற்கு உபயோகமாக இருக்கின்றன. நிதிஷ்குமார் மற்றும் மம்தா ஆட்சிகளில் “முஸ்லிம்களின் ஆதரவு, முஸ்லிம்களை டாஜா செய்தல்” என்று கொள்கை கடைப்பிடிப்பதால், எந்த வழக்கில் முஸ்லிம் சம்பந்தப்பட்டிருந்தாலும், மென்மையாகவே அரசு அதிகாரிகள், போலீஸார் முதலியோர் நடந்து கொள்கின்றனர். மேலும், முஸ்லிம்களே அப்பகுதிகளில் அரசியலில் ஆதிக்கம் செல்லுத்தி வருவதால், எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி என்றுள்ளோரும் ஆதரவு-பாதுகாப்பு கொடுக்கின்றனர். இதனால், பரஸ்பர ஆதாயம், பலன்கள் முதலியவற்றால், தீவிரவாதிகள் தாராளாமாகவே செயல்பட்டு வருகின்றனர்.
இணைதள ஜிஹாதில் ஆட்களை சேர்த்தல்: இந்நிலையில் தான், இணைதளம் மூலம் படித்த இளைஞர்களை ஐசிஸ்/ஐசில் போன்றவை வேலைக்கு வைத்துக் கொள்ள ஆரம்பித்தன. இஞ்ஜினியரிங், தொழிற்நுட்பம், மருத்துவம் போன்ற படிப்புகள் படித்தவர்களை “தகுந்த வேலை” என்று அமர்த்தி, நன்றாக சம்பளம் கொடுத்து, பிறகு, படிப்படியாக, அவர்களது நாடித்துடிப்பை அறிந்து, மதவெறி ஏற்றி, ஜிஹாதித்துவத்தை போதித்து, இந்தியாவில் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை, நீங்கள் இவ்வாறிருக்கிறீர்கள் என்றால், அதற்கு காபிர்களின் ஆட்சி தான் காரணம், அவர்கள் ஆட்சி ஒழிய வேண்டும், 300 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இஸ்லாமிய அரசை இந்தியாவில் நிறுவ வேண்டும், அப்பொழுது, இந்தியாவிலேயே, உங்களுக்கு இதே போன்ற வேலை கிடைக்கும். அதற்கு தான் நாங்கள் பாடுபட்கிறோம், நீங்கள் ஒத்துழையுங்கள் என்று ஆரம்பித்து, தீவிரவாதிகளாக்குகின்றனர். அவர்களுக்கு எல்லாம் கொடுத்து அடிமையாக்குகின்றனர். தினம்-தினம் செக்ஸுக்கு இளம்பெண்கள், குடி, போதை மருந்து, நல்ல சாப்பாடு…….என்று கொடுத்து வளைத்து போடுகின்றனர். பிறகு, என்ன சொன்னாலும் கேட்பர் என்ற நிலை உண்டாக்கியவுடன், ஜிஹாதியாக, பிதாயுனாக மாற்றுகின்றனர். பிதாயீன் என்று சொல்லிக் கொண்டு யார் வேண்டுமானாலும் இருக்கலாம் போலிருக்கிறது. அட்னன் ரஷீத், முந்தைய பாகிஸ்தானிய விமானப்படையினர் கூட அவ்வாறு உள்ளனர்[9]. இவன் முஸாரப்பை கொல்லும் முயற்சியில் கைது செய்யப்பட்டான். பட்கல் என்பவனும் அவ்வாறேயுள்ளான்[10]. ஜிஹாதிகளும் அவ்வாறே இருக்கிறார்கள். இஸ்லாத்திற்காக உயிரை விடுவதில் இருகூட்டத்தாரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள், உயிரை விடுகிறார்கள். பெயர்கள், இடங்கள் மாறினாலும், அவர்களது செயல்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அதனால், ஊக்குவிக்கும் மூலம் ஒன்றுதான் என்று வெளிப்படுகிறது.
© வேதபிரகாஷ்
10-07-2016
[1] At the funeral in Tral Eidgah, eyewitnesses said three to four armed Hizbul Mujahideen militants fired a gun salute. Wani’s father Muzaffar called his son a “martyr in the service of Allah”.
[2] மாலைமலர், ஜம்மு காஷ்மீரில் தொடரும் வன்முறைக்கு 2 பேர் பலி: 50 பேர் காயம், பதிவு: ஜூலை 09, 2016 17:21, மாற்றம்: ஜூலை 09, 2016 17:22
[3] The Times of India, 11 killed, 200 hurt as Valley erupts over Wani’s death, M Saleem Pandit| TNN | Jul 10, 2016, 04.16 AM IST
[4] As news of Wani’s killing spread, mobs pelted stones on Kashmiri Pandit transit camps in Haal Pulwama and attacked a BJP office in Kulgam. Authorities also suspended train services within the Valley.
[5] http://www.maalaimalar.com/News/TopNews/2016/07/09172201/1024590/Violence-erupts-in-Kashmir-two-protesters-killed.vpf
[6] பிபிசி.தமிழ், காஷ்மீரில் வன்முறை வெடித்தது: 8 பேர் சாவு, 09-07-2016: 11.30 pm
[7] http://www.bbc.com/tamil/global/2016/07/160709_kashmir_8_dead
[8] Lt Gen Syed Ata Hasnain, The death of a renegade : Burhan Wani’s killing and its aftermath, Posted on 10/07/2016 by Dailyexcelsior.
(The writer is an ex GOC of the Srinagar based 15 Corps, now associated with the Vivekanand International Foundation and the Delhi Policy Group), feedbackexcelsior@gmail.com
[9]A special fidayeen unit headed by Adnan Rasheed, a former Pakistan Air Force personnel has been formed by the Pakistani Taliban and the Islamic Movement of Uzbekistan to attack jails and free imprisoned militants. Rasheed was convicted for an attempt to assassinate former President Pervez Musharraf.
[10] பிதாயீன் மாதிரி தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று தான் பட்கல் வெறியுடன் உள்ளான். அதே மாதிரி குண்டுவெடி-கொலைகளையும் செய்துள்ளான்.
Explore posts in the same categories: ஃபிதாயீன், அமைதி, அமைதி டிவி, அமைதி தூதுவர், அல் - உம்மா, அல் - கொய்தா, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதம், இந்துக்கள், இறை தூதர், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், Uncategorizedகுறிச்சொற்கள்: ஃபத்வா, இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், பர்ஹன் வனி, பாகிஸ்தான், புனிதப்போர், புர்ஹான் வனி, புர்ஹான் வானி, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள், முஸ்லீம்கள்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்