ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைது – இதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டு வெடிப்புகள் தொடர்பு என்ன? (2)

இடப்பட்டது ஏப்ரல் 18, 2024 by vedaprakash
பிரிவுகள்: அடையாளம், அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இஸ்லாமிக் ஸ்டேட், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய பிரச்சினை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, உயிர் பலி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், என்.ஐ.ஏ, என்.சி.பி, என்ஐஏ, என்ஐஏ அதிகாரி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், காஃபிர், குக்கர், குக்கர் குண்டு, குக்கர் வெடிகுண்டு, குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கோவை குண்டுவெடிப்பு, சித்தராமய்யா, சித்தராமையா, ஜமேசா முபின், ஜமேஷா முபின், ஜமேஷா முபீன், ஜாபர் சாதிக், ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் தன்மை, தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் ஜிஹாதி, பெங்களூரு குண்டுவெடிப்பு, மங்களூரு, மங்களூரு குக்கர் குண்டு, மங்களூரு குண்டுவெடிப்பு, மங்களூர், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு, வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல், வெடியுப்பு, ஹெராயின்

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைதுஇதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டுவெடிப்புகள் தொடர்பு என்ன? (2)

இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்: இது தொடர்பாக கர்நாடக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது[1], “இந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்த பயங்கரவாத நெட்ஒர்க் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். இருப்பினும், இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அதிக உந்துதல் உள்ளவர்கள். இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம். அது விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்[2]. “இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்,  எனும்பொழுது, நிச்சயமாக அங்கெல்லாம் இவர்களுடைய தொடர்புகள் இருப்பது தெளிவாகிறது. அவர்களையும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வரப்படுவது: கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வர அனுமதி கோரி கொல்கத்தா நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் முறையிட்டனர்[3]. இதையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த இரண்டு பேரையும் பெங்களூரு அழைத்துச் செல்ல மூன்று நாட்கள் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது[4]. பிதான்நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இருவரும் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டனர்[5]. வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின் இருவரும் பெங்களூரு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்[6]. 15-04-2024க்குப் பிறகு மறுபடியும் காவல் நீட்டிப்பு பெற்றிருக்கக் கூடும். இவையெல்லாம் சட்டப் படி மேற்கொள்ளும் நடவடிக்கைகள், முறைகள், செயல்பாடுகள் ஆகும். முடிவாக ஒன்று-மூன்று என பல ஆண்டுகள் ஆகலாம். போதிய ஆதாரங்கள் இல்லை விடுவிக்கவும் படலாம். ஆனால், குண்டுகள் வெடித்தது உண்மை, குண்டுவெடிப்பில் கொலையுண்டது, பாதிக்கப் பட்டது உண்மை…அதற்கு யார் பதில் சொல்லப் போகின்றனர் என்று தெரியவில்லை.

தேதிகளும்- முக்கியமான நிகழ்வுகளும்: இவ்வழக்கில் முக்கியமான தேதிகளும் நிகழ்வுகளும்:

01-03-2024 – குண்டுவெடிப்பு

03-03-2024 – NIA வழக்கை எடுத்துக் கொண்டது; ரூ 10 லட்சம் பரிசு அறிவிப்பு;

09-03-2024 – ராமேஸ்வரம் கபே மறுபடியும் பாதுகாப்புடன் திறக்கப் பட்டது.

புகைப் படங்கள் வெளியீடு.

24-03-2024  – ஒரிஸா வழியாக கொல்கொத்தாவிற்கு செல்வது.

25-03-2024 இருவரும் கொல்கொத்தவில் தலைமறைவாகத் தங்குதல்

27-03-2024 – கூட்டாளி முஸாமில் ஷெரீஃப் கைது

12-04-2024 – இருவர் கொல்கொத்தாவில் கைது, மூன்று நாள் காவல் அனுமதி

13-04-2024 – பெங்களுருக்குக் கொண்டு வருதல்

15-04-2024 – காவல் அனும்பதி நீட்டிப்பு.

இதே காலகட்டத்தில் ஜாபர் சாதிக் வழக்கும் இணையாகச் செல்வதை கவனிக்கலாம். ஆட்கள் மாறினாலும், இடம் மாறினாலும், குற்றங்கள் தன்மை மாறவில்லை. இந்திய சமுதாயத்தை நாசமாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் தான், இவர்கள் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.

வியாபாரப் போட்டிக்காக குண்டு வைக்கப் பட்டது என்ற செய்தி: கோயம்புத்தூர் குக்கர் குண்டுவெடிப்பு பொன்று, இங்கும் அரசியல் செய்ய சிலர் முயன்றனர். முதலில் வியாபார போட்டியால், யாராவது குண்டு வைத்திருக்கலாம் என்றும் சொல்லப் பட்டது. அப்படியே செய்திகளையும் பரப்ப ஆரம்பித்தார்கள். அப்படியிருந்தால், யாரும் இல்லாத நேரத்தில், பீதியுண்டாக்க வைத்திருக்கலாம். இவ்வாறு உணவுண்ணும் அப்பாவி பொது மக்கள் காயமடையும் விதத்தில், பீதியுண்டாக்கும் குறையில் குண்டு வைத்திருக்க மாட்டான். உண்மை தெரியவரும் பொழுது, அந்த வியாபாரப் போட்டியாளன் பெயரும் கெட்டு விடும். வணிகப் போட்டிகளில் இத்தகைய தீவிரவாதம் இருக்கிறது என்றால், இனி ஒவ்வொரு வணிக வளாகத்திலும், குண்டு வெடிக்க ஆரம்பித்து விடும்.

குண்டு வைப்பது என்ற கொடிய-குரூர எண்ணம்: எப்படியிருந்தாலும், குண்டு வைப்பது என்பதே தீவிரவாத செயல் எனும்பொழுது, அதனை எவ்வாறு வைத்தான், எதற்கு வைத்தான் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. அத்தகைய குரூர எண்ணம் இருந்திருப்பது ஏன் என்று தான் அராய்ச்சி செய்திருக்க வேண்டும். படித்த இளைஞர்கள் வேலைக்குச் சென்று, சம்பாதித்து பெற்றோரை பாதுகாக்க வேண்டும், குடும்பத்தைப் பேணவேண்டும் என்றில்லாமல், குண்டு வைப்பேன் என்று கிளம்பியுள்ள இந்த தீவிரவாதிகளை கவனிக்க வேண்டும். மேலும் அவ்வாறு தொழிற்நுட்பத்துடன் வெடிக்கும் குண்டு தயாரிப்பு எப்படி நடந்தது, யார் கற்றுக் கொடுத்தது, அதே முறை கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டது எவ்வாறு – போன்ற கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

தமிழகத்தில் திமுக போன்று கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசியலாக்க முயற்சி: சித்தராமையா-சிவகுமார் பிரச்சினையும் இதில் எழுந்தது, பிறகு, NIAவிடம் வழக்கை ஒப்படைக்க தீர்மானிக்கப் பட்டது. சாய் பிரசாத் என்ற பிஜேபி ஆள் இந்த இருவருடன் தொடர்பில் இருக்கிறான் என்று தீர்த்தஹல்லி, சிமோகாவில் உள்ள மொபைல் கடை வேலையாட்கள் சொன்னதாக உள்ளது. அதன் படி NIA அவனைப் பிடித்து விசாரித்துள்ளது. கைது செய்யப் பட்டான் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், அவையெல்லா காங்கிரஸ்காரர்கள் செய்த சமூக-ஊடக பிரச்சாரம் என்று தெரிய வந்தது. ஆக, இங்கும், திமுக-காங்கிரஸ் பாணி குண்டுவெடிப்பு-பிரச்சாரத்தைக் கவனிக்கலாம் இக்கட்சிகள் தான், கூட்டணியும் வைத்துள்ளன. . NIAவின் விசாரணைக்குப் பிறகு, திமுக அடங்கி விட்டது, அதுபோல, காங்கிரஸும் இங்கு அமைதியாகி விட்டது. தீவிரவாதத்தில், குண்டுவெடிப்புகளில் தமிழக-கர்நாடக தொடர்புகளை அழித்தே ஆக வேண்டும். இதில் அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை. பொது மக்களை மிகவும் பாதிக்கக் கூடிய விவகாரங்கள் என்பதால், அத்தகைய தீவிரவாத அமைப்புகள் ஆட்கள் முதலியோரைப் பற்றி, சந்தேகிக்கும் பொது மக்கள் உடனடியாக போலீசாரிடம் அல்லது NIA போன்ற அமைப்பினரிடம் தகவல், புகார் கொடுக்கவேண்டும். ரகசியமாக விசாரணை மேற்கொண்டு, முளையிலேயே அத்தகைய திட்டங்களைக் கிள்ளியெறிய வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-04-2024


[1] தமிழ்.இந்து, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபர்கள் இருவர் கொல்கத்தாவில் கைது, செய்திப்பிரிவு, Published : 12 Apr 2024 01:38 PM; Last Updated : 12 Apr 2024 01:38 PM.

[2] https://www.hindutamil.in/news/india/1229724-suspects-in-the-rameshwaram-cafe-blast-in-bengaluru-caught-in-kolkata.html

[3] இடிவிபாரத், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: இருவர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்? – Rameshwaram Cafe Blast 2 Arrest, By ETV Bharat Tamil Nadu Team, Published : Apr 13, 2024, 12:11 PM IST; Updated : Apr 14, 2024, 12:32 PM IST.

[4] https://www.etvbharat.com/ta/!bharat/national-investigation-agency-brought-two-on-rameshwaram-cafe-blast-case-and-remand-tns24041301974

[5] தமிழ்.ஏசியாநெட், Bomb Blast : ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு.. கைதான 2 முக்கிய குற்றவாளிகள்இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்!,, Ansgar R, First Published Apr 13, 2024, 11:24 AM IST;  Last Updated Apr 13, 2024, 11:24 AM IST.

[6] https://tamil.asianetnews.com/india/rameshwaram-cafe-blast-2-main-accused-brought-to-bengaluru-today-facing-court-ans-sbv9r9

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைது – இதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார்குண்டு வெடிப்புகள் தொடர்பு என்ன? (1)

இடப்பட்டது ஏப்ரல் 18, 2024 by vedaprakash
பிரிவுகள்: ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், குக்கர், குக்கர் வெடிகுண்டு, குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கோவை கார்குண்டு, சித்தராமய்யா, சித்தராமையா, சித்தராமைய்யா, சிமோகா, சிவமொக்கா, ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், தீர்த்தஹள்ளி, தீவிரவாத நிதியுதவி, தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், தேச விரோதம், தேசவிரோத செயல்கள், தேசவிரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, நடவடிக்கை, நாட்டுக் குண்டு, நிதிநிறுவனம், நிதியுதவி, நைட்ரேட், பயிற்சி, பைப் குண்டு, பைப் வெடிகுண்டு, பொட்டாசியம் நைட்ரேட், மங்களூரு, மங்களூரு குக்கர் குண்டு, மங்களூர், மத-அடிப்படைவாதம், மதவாதம், மதவிரோதி, மதவெறி, மர்மமான வியாபாரம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம் தன்மை, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், மூளை சலவை, மூளை சலவை செய்வது, மூளைசலவை, மூளைச்சலவை, ராமேஸ்வரம் கஃபே, வன்முறை, வன்முறையில் ஈடுபடுவது, வாடகைக்கு வீடு, வாஹாபி, வாஹாபி இயக்கம், விசாரணை, வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வேலை, வேவு

Tags: , , , , , , , , , , , , , , , , ,

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைதுஇதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டுவெடிப்புகள் தொடர்பு என்ன? (1)

அல் ஹிந்த் அறக்கட்டளை, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, தீர்த்தஹள்ளி பாதை முதலியன:  அப்துல் மதீன் அகமது தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகிய இருவரும் கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 2020-ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு ஏஜென்சிகளின் ரேடாரின் கீழ் உள்ளனர். இவர்கள், ‘தீர்த்தஹள்ளி பாதை’ [Thirthahalli module] எனக் குறிப்பிடப்படும் ஒரு பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு முகமைகள் நம்புகின்றன[1]. பெங்களூரில் உள்ள சுட்டகுண்டேபாளையத்தில் அல் ஹிந்த் அறக்கட்டளையை நடத்தி வந்த மெகபூப் பாஷாவும், தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீனும் இணைந்து, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை உருவாக்கி தென்னிந்தியாவில் மையங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது[2].

இது உள்ளூர் தீவிரவாதமாஅனைத்துலக ரீதியில் பாதிப்பை உண்டாக்கும் சதி வேலையா?: முந்தைய வெடிகுண்டுகள் தொடர்புகள் போலவே, இதிலும், தமிழக தொடர்பு இருப்பதை கவனிக்கலாம். ஐஎஸ் பாணி கிளர்ச்சியை தென்னிந்தியாவில் தொடங்க வேண்டும் என்பதே இவர்களின் திட்டம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இவர்களோடு, அப்துல் மதீன் அகமது தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  1. 2020 அக்டோபரில் மங்களூருவில் நடந்த பயங்கரவாத ஆதரவு கூட்டம்,
  2. செப்டம்பர் 2022-இல் ஷிவ்மொகாவில் துங்கா நதிக்கரையில் நிகழ்ந்த ஐஇடி குண்டுவெடிப்பு மற்றும்
  3. குக்கர் குண்டுவெடிப்பு –

ஆகிய மூன்று பயங்கரவாத வழக்குகளிலும் தாஹா மற்றும் ஹுசைன் குற்றம்சாட்டப்பட்டனர். இதையெல்லாம் கூட, முன்னர் “உள்ளூர் தீவிரவாதம்” என்று குறிப்பிடப் பட்டு திசைத் திருப்பப் பட்டது. ஆனால், பெங்களூரு, மும்பக்கு அடுத்தப் படியாக, வியாபார-வணிக முக்கியத்துவம் அடைந்து வந்துள்ள நிலையில், இத்தகைய தீவிரவாத செயல்கள், இந்திய பொருளாதாரத்தைப் பாதிப்பதாக உள்ளது என்பதனை கவனிக்க வேண்டும்.

12-04-2024 அன்று ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கூட்டாளி கைது: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் உள்பட வழக்கில் தொடர்புடைய இருவர் கொல்கத்தாவில் 12-04-2024 அன்று வெள்ளிக்கிழமை, கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது[3]. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில்[4], “பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் 1 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் குண்டுவைத்த நபர் மற்றும் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபர் என சந்தேகிக்கப்படும் இருவர், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா அருகே இன்று (ஏப்ரல் 12) கைது செய்யப்பட்டனர்[5]. குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அப்துல் மதீன் அகமது தாஹா (Adbul Matheen Ahmed Taahaa வயது 30), உணவகத்தில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் (Mussavir Hussain Shazib வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்[6]. இவர்கள் போலியான அடையாளத்துடன் மறைவான இடத்தில் தங்கி இருந்த நிலையில் இன்று அதிகாலை இருவரும் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்புகள், மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகா, கேரள மாநில காவல் துறை ஆகியோரின் துணையோடும், ஒத்துழைப்போடும் இவர்களை கைது செய்யும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது[7].  இன்னொருவன் நெல்லூர், சென்னை, வந்து ஒரிசா வழியாக, கொல்கொத்தாவிற்குச் சென்றதாகத் தெரிகிறது[8]. விக்னேஸ் மற்றும் சுமித் பெயர்களில் இப்ரவரியில் 2024 சென்னையில் தங்கியதாகத் தெரிகிறது. ஆக, இவ்விடங்களில் இவர்களுக்கு உதவியாக தொடர்புகள் இருந்தனவா என்றும் நோக்கத் தக்கது.

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு, கோவை கார் குண்டுவெடிப்பு ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பு தொடர்பு என்ன?: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு, கோவை கார் குண்டுவெடிப்பு இது தொடர்பாக ஏற்கனவே நடந்த மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு, கோவை கார் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களை ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள், அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தான் ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர்[9]. இதற்கான ஆதாரங்கள் கிடைத்ததன் பேரில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களில் தீவிரமாக சோதனை நடத்தினர்[10]. இதனிடையே வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவாடங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஜப் என்பவர், கடந்த மார்ச் 27ம் தேதி் கைது செய்யப்பட்டார். ஆனால், தமிழக ஆளும் அரசியல்வாதிகள் கோவை கார் குண்டுவெடிப்பு பற்றி அமுக்கியே வாசித்தனர், அதனை விபத்து என்று குறிப்பிட்டு வந்தனர். இப்பொழுதெல்லாம், இதை பற்றி கண்டுகொள்வதில்லை.

சந்தேகிக்கப் பட்ட நபர் பற்றிய புகைப்படம் வெளியீடு முதலியன: குண்டுவெடிப்பு தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்திருந்தது. தகவல் அளிப்பவர்களின் அடையாளங்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் நிறுவனம் வலியுறுத்தியது. பெங்களூரின் புரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபலமான உணவகமான தி ராமேஸ்வரம் கஃபேயில் ஒரு பையை வைத்திருக்கும் போது சிசிடிவி கேமரா காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட குற்றவாளியின் படத்தையும் நிறுவனம் வெளியிட்டது. என்ஐஏ வெளியிட்ட புகைப்படத்தில், குண்டுவைத்தவர் தொப்பி, கருப்பு பேன்ட் மற்றும் கருப்பு காலணிகளை அணிந்திருப்பதைக் காணலாம். அந்த பதிவில், “அவரை கைது செய்ய வழிவகுக்கும் எந்தவொரு தகவலுக்கும் வெகுமதி வழங்கப்படும்” என்றும் என்ஐஏ வலியுறுத்தியது. உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) இந்த வழக்கின் விசாரணையை பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பிடம் ஒப்படைத்த மூன்று நாட்களுக்குப் பிறகு என்ஐஏ வெகுமதியை அறிவித்தது. வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவடாங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஃப் என்பவர், கடந்த மார்ச் 27ல் கைது செய்யப்பட்டார்[11]. ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 3 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது[12].  என்.ஐ.ஏ அதிக முயற்சியோடு செயல்பட்டது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

16-04-2024


[1] A group once associated with graffiti near a police station in Mangaluru has become the most wanted terror module in Karnataka. Known in police circles as the “Thirthahalli module”, this group is believed to be responsible for a series of improved explosive device (IED) explosions in both Mangaluru and Bengaluru, with aspirations of establishing an Islamic State Caliphate within Karnataka’s forests, according to a charge sheet filed by NIA.

Hindustan Times, NIA links ‘Thirthahalli module’ to IED blasts in parts of Karnataka, By Arun Dev, Bengaluru, Mar 30, 2024 07:40 AM IST.

[2] Their emergence on the radar of investigative agencies dates back to January 2020 when state police uncovered the Al Hind terror module, inspired by the Islamic State (IS), operating in Bengaluru’s Suddaguntepalya. Spearheaded by Mehboob Pasha, affiliated with the Al Hind Trust, Shihabudeen and Khaja Moideen from Cuddalore, Tamil Nadu the module aimed at establishing an IS province through insurgent activities spanning Karnataka and Tamil Nadu. “They formed the Al-Hind module and selected Bengaluru as their base and conducted several criminal conspiracy meetings in Karnataka and Tamil Nadu since April 2019,” NIA said in its charge sheet filed in the Al-Hind module case in September 2021.

https://www.hindustantimes.com/india-news/nia-links-thirthahalli-module-to-ied-blasts-in-parts-of-karnataka-101711738475993.html

[3] விகடன், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கைதுகொல்கத்தாவில் மடக்கிய NIA!, சி. அர்ச்சுணன், Published:12 Apr 2024 3 PM; Updated:12 Apr 2024 3 PM.

[4] https://www.vikatan.com/crime/nia-arrests-two-main-accused-of-bengaluru-rameshwaram-cafe-blast

[5] புதியதலைமுறை, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்புமூளையாக செயல்பட்ட இருவர் அதிரடியாக கைது!,ஜெனிட்டா ரோஸ்லின், Published on: 12 Apr 2024, 12:48 pm

[6] https://www.puthiyathalaimurai.com/india/nia-arrests-2-main-suspects-in-bengaluru-rameshwaram-cafe-blast-case

[7] தமிழ்.ஒன்.இந்தியா, ராமேஸ்வரம் கபேவசமாய் சிக்கிய மாஸ்டர் மைண்ட்..சுற்றி வளைத்து கைது செய்த என்ஐஏ.! சென்னையில் தஞ்சமா?, By Rajkumar R, Updated: Friday, April 12, 2024, 12:43 [IST].

[8] https://tamil.oneindia.com/news/india/two-accused-involved-in-bengaluru-rameswaram-cafe-blast-incident-arrested-in-kolkata-by-nia-597799.html

[9] தினகரன், பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: மேற்குவங்கத்தில் முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது, Published: April 12, 2024, 11:50 amLast Updated on April 12, 2024, 11:51 am.

[10] https://www.dinakaran.com/bengaluru_blast_two_arrested/

[11] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Bengaluru Cafe blast: பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு வழக்கு.. 2 பேரை அதிரடியாக கைது செய்தது என்ஐஏ!, Karthikeyan S HT Tamil, Apr 12, 2024 11:27 AM IST,

[12] https://tamil.hindustantimes.com/nation-and-world/two-arrested-from-west-bengal-in-connection-with-bengalurus-rameswaram-cafe-blast-131712900386950.html

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (2)

இடப்பட்டது ஏப்ரல் 14, 2024 by vedaprakash
பிரிவுகள்: அமீர், அமைதி, அரசியல்வாதிகள், அழிவு, ஆதரவு, ஆதாரம், இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இறைவன், குற்றச்சாட்டு, குற்றஞ்சாட்டப்படக்குடிய ஏற்புடையதாக பல ஆவணங்கள், குற்றப் பழக்கம், குற்றம், சுல்தான் அமீர், ஜாபர், புகாரி, புஹாரி, போட்டி, போதை, போதை கடத்தல், போதை தடுப்பு, போதை மருந்து, போதை மருந்து தயாரித்தல்

Tags: , , , , , , , , , , , , , , , , ,

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (2)

அமீர்விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது: அமீர் தொடர்ந்து சொன்னது, “விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. எப்போதும் போல என்னிடம் இருந்து வருகின்ற ஒரே வார்த்தை இறைவன் மிகப்பெரியவன்..’ என்று இயக்குநர் அமீர் நடைபெறும் விசாரணை குறித்து தகவல் தெரிவித்தார். முன்னதாக என்சிபி இரண்டாவது முறையாக நேரில் ஆஜராக இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பியதாவும், அவர் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் இயக்குநர் அமீர், என்.சி.பி.யின் இரண்டாம் கட்ட விசாரணைக்கோ, என்னிடம் உள்ள சொத்து ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவோ நான் எந்தவொரு கால அவகாசமும் கேட்கவில்லை எனத் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், இன்னொரு புறம், இந்த விசாரணைக்கு அமீர் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது[1]. இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ அமீர் மீண்டும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது[2].

அமீரின் சொத்து விவரங்கள் கேட்கப் பட்டுள்ளன: இதனிடையே, 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் அமீர் பெயரிலும் அவரது குடும்பத்தினர் பெயரிலும் வாங்கப்பட்ட சொத்துக்கள் என்னென்ன, இந்த காலகட்டத்தில் வங்கி பரிவர்த்தனை என்னென்ன என்ற விவரங்களை அதிகாரிகள் திரட்டி விசாரணை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இரண்டாவது முறையாக என்சிபி அதிகாரிகளிடம் இயக்குநர் அமீர் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் வழக்கை என்சிபி அதிகாரிகள் தீவிரமாக கையில் எடுத்து இருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விசாரணைக்கு அமீர் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது[3]. இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ அமீர் மீண்டும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது[4].

அப்துல் பாஷித் புஹாரியின் பங்கு: இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் மற்றொரு நெருங்கிய கூட்டாளியான அப்துல் பாஷித் புஹாரி என்பவரும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்[5]. மார்க்க நெறியாளராக வலம் வரும் அப்துல் பாஷித் புஹாரியை, ஜாபர் சாதிக்கிற்கு அமீர் தான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்[6]. அமீர் மற்றும் ஜாபர் சாதிக்குடன் சேர்ந்து அப்துல் பாஷித் புஹாரி, ‘ஜூகோ ஓவர்சீஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் வாயிலாக, இரண்டு முறை, 18 லட்சம்ரூபாய்க்கு பேரீச்சம் பழங்கள் இறக்குமதி செய்துஉள்ளனர். அதேபோல, 4 ஏ.எம்., என்ற கடையையும் அப்துல் பாஷித் புஹாரி நடத்தி வருகிறார். இதுகுறித்து, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். சத்து மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வது போல தான், ஜாபர் சாதிக் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதை பொருள் கடத்தி உள்ளார். அப்துல் பாஷித் புஹாரி பணம் முதலீடு செய்துள்ள ஜூகோ ஓவர்சீஸ் நிறுவனம் தொடர்ச்சியாக இயங்கவில்லை. ஆனால், ஜி.எஸ்.டி., வரி மட்டும் செலுத்தி உள்ளனர். இரண்டு முறை மட்டுமே பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. அப்துல் பாஷித் புஹாரியின் சொத்துக்கள், வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. இவரின் பின்னணியில் ஜாபர் சாதிக் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்துல் பாஷித் புஹாரியிடம் நேரடி விசாரணை நடக்க உள்ளது’ என்றனர்.

உணவகத்தின் உரிமையாளர் சி.எம்.புகாரி தொடர்பு: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வசித்து வரும் புகாரி உணவகத்தின் உரிமையாளர் சி.எம்.புகாரி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்[7]. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர்[8]. சி.எம்.புகாரி மகன் இர்பான் புகாரி ஜாபர் சாதிக் தொடங்கிய சோயா டெலிவரிஸ் என்ற நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர்களது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும், ஜாபர் சாதிக் மற்றும் இர்பான் புகாரி இடையே தொழில் ரீதியான பணப் பரிவர்த்தனைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, புகாரி குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் பாசித் புகாரி என்பவருக்கு மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அது தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

வியாபார தொடர்பும், குற்றங்கள் நடந்துள்ள நிலையும்: வியாபார தொடர்பு தான், இதனால், தனக்கும் அந்த சாதிக்கின் போதை மருந்து வியாபாரம், கடத்தல் முதலியவற்றிற்கும் சம்மந்தம் இல்லை என்று வாதிப்பது போன்றுள்ளது. இருப்பினும், அத்தகைய விவரங்கள் தெரியாமலா / தெரிந்தோ கூட்டு வைத்துக் கொண்டது ஏன் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். ஏனெனில், இவையெல்லாம் சாதாரணமாக ஒரு நபர் செய்யக் கூடிய வேலை அல்ல. தொழிற்சாலை போல வைத்து, பலரை வேலைக்கு அமர்த்தி, மிகவும் அதி-எச்சரிக்கையாக, பாதுகாப்புடன் செய்து வந்த தொழிலாகும். எல்லாவற்றையும் கடவுள் மீது போட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது. குற்றம் என்று தெரிந்து, அத்தகையக் குற்றங்களை செய்து வரும் நபர்களுடன் தொடர்ந்து, பல ஆண்டுகளாக வியாபார தொடர்புகளை வைத்துக் கொண்டுள்ளதும் சாதாரணமான விசயமாகி விடாது. மேலும், போதை மருந்து கடத்தல் பற்றிய எச்சரிக்கையே அயல்நாட்டு நிறுவனத்திலிருந்து வந்து, கையும்-களவுமாக கைதும் செய்யப் பட்டிருக்கிறார்கள். 

© வேதபிரகாஷ்

13-04-2024


[1] மாலைமலர், ஜாபர்சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் சோதனை முடிந்தது: முக்கிய ஆவணங்கள் சிக்கியது, By Maalaimalar, 10 ஏப்ரல் 2024 12:17 PM

[2] https://www.maalaimalar.com/news/state/jafarsadiq-director-aamirs-houses-raided-vital-documents-seized-712506

[3] மாலைமலர், ஜாபர்சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் சோதனை முடிந்தது: முக்கிய ஆவணங்கள் சிக்கியது, By Maalaimalar, 10 ஏப்ரல் 2024 12:17 PM

[4] https://www.maalaimalar.com/news/state/jafarsadiq-director-aamirs-houses-raided-vital-documents-seized-712506

[5] தினமலர், ஜாபர் சாதிக் கூட்டாளியின் சொத்துக்கள் வங்கி கணக்குகளை என்.சி.பி., ஆய்வு, UPDATED : ஏப் 12, 2024 05:45 AMADDED : ஏப் 12, 2024 05:45 AM.

[6] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-ncp-probes-jaffer-sadiq-associates-assets-bank-accounts–/3598702

[7] இடிவிபாரத், சென்னையில் புகாரி ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை! – Ed Raid At Buhari Hotel Owner House, By ETV Bharat Tamil Nadu Team, Published : Apr 9, 2024, 3:47 PM IST.

[8] https://www.etvbharat.com/ta/!state/ed-raid-at-buhari-hotel-owner-house-in-chennai-tns24040903438

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (1)

இடப்பட்டது ஏப்ரல் 14, 2024 by vedaprakash
பிரிவுகள்: அமீர், சுல்தான் அமீர், ஜாபர் சாதிக், தேச விரோதம், தேசவிரோத செயல்கள், தேசவிரோதம், புகாரி, புஹாரி, போதை, போதை கடத்தல், போதை தடுப்பு, போதை மருந்து, போதை மருந்து தயாரித்தல், மருந்து, வங்கி கணக்கு, விசாரணை, விரோதம்

Tags: , , , , , , , , , , , , , , , ,

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (1)

04-02-2024 முதல் 09-04-2024 வரை நடந்தது என்ன?:  போதை மருந்து விவகாரங்களில் நடவடிக்கைகள் வேகமாக நடக்கின்றனவா அல்லது வேகம் குறைவா போன்றவை நடவடிக்கைகள் வைத்து தீர்மானிக்கலாம்.

04-02-2024 போதை மருந்து தில்லியில் 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

15-02-2024ல் தில்லியில் மூவர் கைது, ஜாபர் சாதிக் தலைமறைவு; லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.

22-02-2024 – படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது.

25-02-2024 – திமுகவில் இருந்து நீக்கப் பட்டது.

26-02-2024 – என்.சி.பி அலுவலத்தில் ஆஜராகும் படி ஆணை.

08-03-2024 – வெள்ளிக்கிழமை – ஜெய்பூர்

பிறகு 09-03-2024 சனிக்கிழமை அன்று ஜாபர் சாதிக் கைது செய்யப் பட்டான்.  ஒரு வாரம்காவல்.

சதானந்தன் கைது

16-03-2024 காவல் செவ்வாய்கிழமை வரை நீட்டிக்கப் பட்டது.

17-03-2024 ஞாயிறு – சென்னைக்கு கொண்டு செல்லுதல்

18-03-2024 திங்கட்கிழமை அன்று காலை விமானம் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டான்.

19-03-2024  செவ்வாய்கிழமை – தில்லிக்குத் திரும்ப அழைத்துச் செல்லப் பட்டான்.

20-03-2024  புதன் கிழமை– 14 நாட்கள் காவல்

02-04-2024 – அமீர் தில்லியில் ஆஜர்.

09-04-2024 – காலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜாபர் சாதிக் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் சோதனை.

போதை மருந்து பிடிபட்ட பிறகு ஜாபர் சாதிக் உட்பட கைது: உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய புகாரில் டெல்லியில் 15-02-2024 அன்று தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கையும் அவரது கூட்டாளியையும் என்சிபி அதிகரிகள் 09-03-2024 அன்று கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை செய்த என்சிபி NCB அதிகாரிகள் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். ஜாபர் சாதிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து ஜாபர் சாதிக்கின் வியாபார பங்குதாரர்கள் முதலியோரும் சோதனைக்கு உட்பட்டனர். விசாரணைக்குப் பிறகு, அது முறைப்படி நடந்தேறி வருகிறது.

02-03-2024 அன்று அமீரிடம் தில்லியில் விசாரணை: முன்னதாக ஜாபர் சாதிக்கின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் 02-04-2024 அன்று சம்மன் அனுப்பினர். அமீருடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் 1-வது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞர்களுடன் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய என்சிபி அதிகாரிகள், வாக்குமூலங்கள் பதிவு செய்துகொண்டதாக தகவல் வெளியாகியது. இதனிடையே, ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தது மற்றும் சட்டவிரோதமாக முதலீடு செய்தது போன்ற விவரங்களை பெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தானாக முன்வந்து வழக்கு ஒன்று பதிவு செய்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான ஆவணங்களைக் கையிலெடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு புறம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அமீர் இடையிடையே அறிக்கை விடுவது ஏன்?: அமீர் இடையிடையே அறிக்கை விடுவது போன்ற செயலையும் கவனிக்கலாம். தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்ற பிறகு, தொடர்ந்து அத்தகைய விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. ஊடகக்காரர்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளாகப் போட்டு வந்துள்ளார்கள். அதாவது, தொடர்ந்து தான் குற்றமற்றவன், அப்பாவி, தன்னை ஏதோ இந்த வழக்கில் சிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன என்று எடுத்துக் காட்டுவது போல இருக்கிறது. சினிமவில் இருப்பதனால், அத்தகைய சினிமா பாணியில் பிரச்சாரம் போல செய்வதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால், போதை மருந்து என்பது மிகவும் சீரியசான விசயம். அனைத்துலக ரீதியில் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் சமாசாரம் இல்லை. எனவே, அப்பாவி வேடம் போடுவதினாலோ அத்தகைய வாத-விவாதங்களை வைப்பதினாலோ தப்பித்துக் கொள்ள முடியாது.        

09-04-2024 அன்று சென்னையில் பல இடங்களில் சோதனை: இந்த நிலையில், திடீரென கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி காலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜாபர் சாதிக் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்[1]. இதில், சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் இல்லத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்[2]. அதுமட்டுமல்லாமல் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீர் வீடு மற்றும் தி நகர் பகுதியில் ராஜன் தெரு உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்[3]. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கும், இயக்குநர் அமீரும் நண்பர்கள் என்பதாலும், போதைப் பொருள் கடத்தலில் ஈட்டிய பணத்தை திரைப்படத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்தாரா என்ற கோணத்திலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியது[4]. அதேபோல், ஜாபர் சாதிக்குடன் சினிமா தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்த கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் இல்லத்திலும், புரசைவாக்கம் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

அமீர் வீடுஅலுவலகங்களில் நடந்த சோதனை: அமீர், “காலையில் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை இரவு 12 மணி வரை சென்றது[5]. சோதனை முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியது[6]. அமலாக்கத்துறை சோதனை முடிந்த அடுத்த நாளே மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் இயக்குநர் அமீர் பங்கேற்றார்[7]. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் அமீர், ரம்ஜான் வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்தார்[8]. அதனைத் தொடர்ந்து பேசிய அமீர், ”11 மணி நேரம் என்.சி.பி விசாரணை நடந்தது உண்மைதான்[9]. வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததும் உண்மை தான்[10]. சோதனை முடிவில் அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர். அது என்ன ஆவணங்கள் என்று அவர்களே சொல்வார்கள். எந்த விசாரணைக்கும் நான் தயார் நிலையில் இருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் என் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை நிரூபிப்பேன். விசாரணை இப்போது நடந்து வருவதால் என்னால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாது. அமலாக்கத்துறை சோதனை இரவு 12 மணிக்குத்தான் முடிந்தது,” என்றார்.

© வேதபிரகாஷ்

13-04-2024


[1] தமிழ்.இந்து, சென்னை | இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை, செய்திப்பிரிவு, Published : 09 Apr 2024 09:13 AM; Last Updated : 09 Apr 2024 09:13 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1228284-chennai-jaffar-sathik-director-ameer-houses-raided-by-ed-1.html

[3] இடிவி.பாரத், ஜாபர் சாதிக் வழக்கு விவகாரம்; இயக்குனர் அமீர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலக்காத்துறை சோதனை – ED Raid In Chennai Ameer House, Published : Apr 9, 2024, 9:15 AM IST.

[4] https://www.etvbharat.com/ta/!state/enforcement-directorate-raids-in-chennai-including-house-of-director-ameer-regards-jaffer-sadiq-drug-smuggling-case-tns24040900907

[5] நக்கீரன், நள்ளிரவு வரை நடந்த ரெய்டுசிக்கலில் அமீர், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 11/04/2024 | Edited on 11/04/2024.

[6] https://www.nakkheeran.in/cinema/cinema-news/ameer-about-ed-raid-and-ncb-investigation-regards-jaffer-sadiq

[7] விகடன், NCB- தொடர்ந்து ED: ஜாபர் சாதிக், அமீர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!, எஸ்.மகேஷ்- வெ.நரேஷ் குமார்,,Published:09 Apr 2024 3 PM; Updated:09 Apr 2024 3 PM.

[8] https://www.vikatan.com/crime/ed-raid-on-jaffer-sadiq-and-director-ameer-house-and-office-in-chennai

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மோடி வரும் அதே நாளில்! அமலாக்கத்துறை ரெய்டு.. ஜாபர் சாதிக் டூ அமீர் டூ புகாரி! நூல் பிடித்து போன ஈடி, By Shyamsundar I Published: Tuesday, April 9, 2024, 8:03.

[10] https://tamil.oneindia.com/news/chennai/ed-raids-in-buhari-hotel-ameer-house-in-chennai-linked-to-jaffarsadiq-ncb-case-597017.html

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் அமீர் சுல்தானுக்கு சம்மன்! ஆஜராகி திரும்பிய அமீர்! (2)

இடப்பட்டது ஏப்ரல் 4, 2024 by vedaprakash
பிரிவுகள்: ஒழிப்பு, கஞ்சா, கஞ்சி, கஞ்சி அரிசி, கஞ்சி குல்லா, போட்டி, போதை, போதை கடத்தல், போதை தடுப்பு, போதை மருந்து, போதை மருந்து தயாரித்தல், ரமலான், ரமழான், ரமஷான், ரம்ஜான், ரம்ஜான் அரிசி, ரம்ஜான் கஞ்சி, ரம்ஜான் கஞ்சி அரிசி, ரம்ஜான் தாராவீஹ், விசாரணை, வியாபாரம்

Tags: , , , , , , , , , , , , , , ,

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் அமீர் சுல்தானுக்கு சம்மன்! ஆஜராகி திரும்பிய அமீர்! (2)

02-04-2024 – தில்லியில் அமீர் ஆஜர்: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் தி.மு.க நிர்வாகி, சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் கூட்டாளிகளுடன் 09-03-2024 அன்று கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்[1]. ஜாபர் சாதிக் பின்னணி குறித்து டெல்லியிலிருக்கும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்[2]. ஜாபர் சாதிக், தமிழ் சினிமாவிலிருக்கும் சிலருடன் தொடர்பிலிருக்கும் தகவல் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்தது[3]. அதனடிப்படையில் ஜாபர் சாதிக்குடன் நட்பிலிருந்த இயக்குநர் அமீரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்து, அவருக்கு சம்மன் அனுப்பினார்கள்[4]. அதனால் 02.04.2024 அன்று டெல்லிக்குச் சென்ற அமீர், போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி) அலுவலகத்தில் ஆஜராகினார். காலை 9 மணி அளவில் வந்த அவரிடம் பகல் 12 மணி அளவில் விசாரணை தொடங்கப்பட்டது. சுமார் 12 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  இப்பொழுது சில ஊடகங்கள் உஷாராகி விட்டன போலிருக்கிறது. திடீரென்று என்.சி.பி அதிகாரிகளை சந்தித்தோம் என செய்திகளை வாரி வழங்கியிருக்கின்றன.

என்.சி.பி அதிகாரிகள் விகடனுடன் பேசினார்களாம்: விசாரணையின்போது என்.சி.பி-யின் மூத்த அதிகாரி ஒருவர்தான் அமீரிடம் கேள்விகளைக் கேட்டிருக்கிறார். கேள்விகளுக்கு அமீரும் பதிலளித்திருக்கிறார். சில கேள்விகளுக்கு சென்டிமென்ட்டாக அவர் பதிலளித்தாக என்.சி.பி வட்டாரங்கள் தெரிவித்தன. அதில், “நான் இறைபக்தி நிறைந்தவன். அதனால் இறைவனுக்குப் பிடிக்காத செயலில் ஈடுபட மாட்டேன். என்னை எப்போது வேண்டும் என்றாலும் நீங்கள் விசாரிக்கலாம். என்னுடைய பாஸ்போர்ட்டைக்கூட உங்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளேன்,” என்று அமீர் கூறியதாக என்.சி.பி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து என்.சி.பி அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.  “இது குறித்து” என்றால், எந்த சென்டிபென்டைப் பற்றி என்று குறிப்பிடவில்லை. “நான் இறைபக்தி நிறைந்தவன். அதனால் இறைவனுக்குப் பிடிக்காத செயலில் ஈடுபட மாட்டேன்…..,” என்றால்< ஈடுபட்டவர்கள் எல்லாம், “இறைபக்தி” இல்லாதவர்களா அல்லது, அவ்ர்கள், “இறைவனுக்குப் பிடிக்கின்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? …..”!

என்.சி.பி அதிகாரிகள் விகடனுடன் பேசினார்களாம்: “சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிலிருந்த குற்றச்சாட்டில் ஜாபர் சாதிக் மற்றும் அவரின் கூட்டாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தியபோதுதான் ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை சினிமா தயாரிப்புக்கு பயன்படுத்திய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விசாரித்தபோதுதான் எங்களின் விசாரணை வளையத்துக்குள் இயக்குநர் அமீர் வந்தார். அதனால் அவரிடம் விசாரித்தோம். எங்கள் பிரிவின் உயரதிகாரி ஒருவர் மட்டும் அமீரிடம் தனியாக சில மணி நேரம் விசாரித்தார். அதில் ஜாபர் சாதிக்குக்கும் அவருக்கும் உள்ள பழக்கம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு ஜாபர் சாதிக், தன்னுடைய தம்பியை சினிமா மூலம் பிரபலப்படுத்த முடிவு செய்து படம் ஒன்றை தயாரிக்க பணம் கொடுத்ததாக (இறைவன் மகா பெரியவன்) அமீர் பதிலளித்தார். அடுத்து ஜாபர் சாதிக்கும், அமீரும் சினிமா தவிர சில பிசினஸ்களில் ஈடுபட்டதாக எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சில கேள்விகளை கேட்டோம். அதற்கும் அமீர் பதிலளித்தார். அமீரிடம் ஜாபர் சாதிக்கின் சினிமா தொடர்புகள் குறித்து விசாரித்தோம். அப்போது அமீர், ஜாபர் சாதிக்குக்கு தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் சில இயக்குநர்களையும் சினிமா தொடர்புகளையும் அறிமுகப்படுத்தி வைத்ததாக பதிலளித்தார். அதன் பிறகுதான் கட்சிரீதியான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பொறுமையாக அமீர் பதிலளித்தார். மறுபடியும் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோரி” என்றனர்.

விகடன் கேட்ககேட்க என்.சி.பி அதிகாரிகள் பதில் சொன்னார்களாம்: மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு[5], “ஜாபர் சாதிக்கின் நெட்வொர்க், தமிழ் சினிமாவிலும் அரசியல் கட்சியிலும் இருப்பது தெரியவந்திருக்கிறது. குறிப்பாக சென்னை மாவட்ட தி.மு.விலிருந்த முன்னாள் எம்.எல். ஒருவர், சினிமா பிசினஸிலும் ஈடுபட்டு வந்தார். அவருக்கும் ஜாபர் சாதிக்குக்கும் சினிமா தொடர்புகள் இருந்திருக்கின்றன. அந்த நிர்வாகியின் மறைவுக்குப் பிறகு அரசியல்வாதி ஒருவருடன், ஜாபர் சாதிக்குக்கு அரசியலைத் தாண்டிய பிசினஸ் தொடர்புகள் இருந்திருக்கின்றன. எனவே, அமீரிடம் விசாரணை நடத்திய பிறகு அவர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்திருக்கிறோம். அமீருடன் இன்னும் இரண்டு பேருக்கு சம்மன் அனுப்பியிருந்தோம். அவர்கள் ரம்ஜானுக்காக வெளிநாட்டிலிருப்பதால், விசாரணைக்கு காலஅவகாசம் கேட்டிருக்கிறார்கள்,” என்றார்[6].

அமீர் ஊடகத்தினரை 2-3 நாளில் சந்திப்பாராம்: அமீரை, தேவைப்பட்டால் மறு விசாரணைக்கு ஆஜராகவும் வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், அதற்கு 2-3 நாள்களில் சந்திக்கிறேன் என அமீர் பதில் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது[7]. இந்த நிலையில், அதற்கு 2-3 நாள்களில் சந்திக்கிறேன் என அமீர் பதில் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது[8]. அமீர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில், “அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்[9]. இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். அதுவரை என்னை யாரும் அழைக்க வேண்டாம் “என பதிவிட்டுள்ளார்[10]. இந்த இரண்டு வரி செய்தியும், செய்தியாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[11]. இரண்டு-மூன்று நாட்கள் என்ன செய்யப் போகிறார் என்றும் யாரும் கேட்கவில்லை, ஆராய்ச்சி செய்யவில்லை[12].

“ரம்ஜான்” சென்டிமென்டுகளா, செக்யூலிரஸமா? எது வேலை செய்கிறது?: விகடன் இப்படி நிரம்பவே “சென்டிமென்டுடன்” வேலை செய்து, புலன் விசாரணை செய்து, நக்கீரனையும் மிஞ்சும் வகையில் விவரங்களை சேகரித்து, செய்திகளாக வெளியிட்டிருக்கிறது. “ரம்ஜான்” சென்டிமென்டுகள் முஸ்லீம்களுக்கு இருக்கும் என்றால், இதே போல சென்டிமென்டுகள் மற்றவர்களுக்கு இருக்காதா என்று தெரியவில்லை. ஒருவேளை, இதில் கூட செக்யூலரிஸம் வேலை செய்கிறது போலும். அதிலும், திராவிடத்துவ செக்யூலரிஸம் அதிகமாகவே வேலை செய்கிறது. ஆகவே, என்.சி.பி, அவர்கள் எல்லோரும் கஞ்சி குடித்து, நோன்பு முடித்து வருவார்கள் போலும், பிறகு, விசாரணை தொடரு போலிருக்கிறது. பொருத்துப் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!

© வேதபிரகாஷ்

04—04-2024


[1] நக்கீரன், போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குநர் அமீர் ஆஜர்!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 02/04/2024 | Edited on 02/04/2024.

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/india/director-aamir-ncb-office-delhi

[3] தமிழ்.நியூஸ்.18, போதைப்பொருள் வழக்குடெல்லி என்சிபி அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்.., FIRST PUBLISHED : APRIL 2, 2024, 12:35 PM IST, LAST UPDATED : APRIL 2, 2024, 2:49 PM IST.

[4] https://tamil.news18.com/national/director-amir-appears-before-ncb-enquiry-1399415.html

[5] விகடன், ஜாபர் சாதிக் வழக்கு: விசாரணைக்கு ஆஜரான அமீர்கேள்விகளை அடுக்கிய அதிகாரிகள்!,எஸ்.மகேஷ், Published: 03-04-2024 at 5 PM; Updated: 03-04-2024 at 7 PM.

[6] https://www.vikatan.com/crime/narcotics-control-bureau-officers-investigated-director-ameer-in-drug-case

[7] தினமணி, விரைவில் சந்திக்கிறேன்இயக்குநர் அமீர் பதில், Published on:  03 ஏப்ரல் 2024, 12:04 pm; Updated on: 03 ஏப்ரல் 2024, 12:04 pm.

[8] https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2024/Apr/03/see-you-soon-director-aamir

[9] தினத்தந்தி, டெல்லியில் இயக்குனர் அமீரிடம் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய என்.சி.பி. அதிகாரிகள், ஏப்ரல் 3, 10:57 am (Updated: ஏப்ரல் 3, 11:11 am).

[10] https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/ncp-officers-conducted-an-11-hour-intensive-interrogation-of-director-ameer-in-delhi-1100062

[11] ஹிந்துஸ்தான்.தமிழ், Ameer: யாரும் என்னை அழைக்க வேண்டாம்.. போதைப் பொருள் வழக்கு விசாரணை முடித்து வரும் அமீர் வேண்டுகோள், Aarthi Balaji, HT Tamil, Apr 03, 2024 08:47 AM IST

[12] https://tamil.hindustantimes.com/entertainment/ameer-first-post-after-returning-from-delhi-investigation-131712113335281.html

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் அமீர் சுல்தானுக்கு சம்மன்! ஆஜராகி திரும்பிய அமீர்! (1)

இடப்பட்டது ஏப்ரல் 4, 2024 by vedaprakash
பிரிவுகள்: அடையாளம், அத்தாட்சி, அமீர், அமீர் சுல்தான், அமைதி, அரசியல்வாதிகள், அழுக்கு, அஹிம்சை, ஆதாரம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், என்.சி.பி, கஞ்சா, கஞ்சி, கஞ்சி அரிசி, கஞ்சி குல்லா, கடத்தல், கடத்தல் மிரட்டல், குற்றச்சாட்டு, குற்றப் பழக்கம், குற்றம், சட்டம் மீறல், சட்டவிரோதம், சமரசம், சாட்சி, டிவிட்டர், பாவத் தடுப்பு, பாவத் தடுப்பு கமிஷன், பாவப் பணம், பாவப்பணம், பிராயசித்தம், புகார், போதை, போதை கடத்தல், போதை தடுப்பு, போதை மருந்து, போதை மருந்து தயாரித்தல், போலி

Tags: , , , , , , , , , , ,

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் அமீர் சுல்தானுக்கு சம்மன்! ஆஜராகி திரும்பிய அமீர்! (1)

பி.டி. பாணி செய்தியா, செக்யூலரிஸமா?: ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது[1], இப்படித்தான் ஒரு வரியில் செய்திகள் வந்துள்ளன[2].. மற்ற விசயங்களுக்கு ஏதோ பெரிய சி.ஐ.டி மாதிரி விவரங்களை அள்ளி வீசும் ஊடகங்கள் இதற்கு, இத்தகைய முறையைப் பின்பற்றுவது பல கேள்விகளை எழுப்புகிறது. சில ஊடகங்கள் முன்னும்-பின்னும் பழைய விவரங்களை சேர்த்துள்ளன[3]. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 3.,500 கிலோ ‘சூடோபெட்ரைன்’ எனும் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபா் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினா் (என்.சி.பி.) கடந்த மார்ச் 9 ஆம் தேதி தில்லியில் வைத்து கைது செய்தனா்[4].  இனி, விவரங்களை அலசுவோம்.

யார் இந்த அமீர்அமீர் சுல்தான்?: தமிழ் ஆர்வலராக இருந்த அவர், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரசின் அட்டூழியங்களைக் கண்டித்து, இயக்குநர் பாரதிராஜா, தமிழ் ஆர்வலர் மற்றும் பிற முக்கிய தமிழ் இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திரைப்படப் பேரணியில் பங்கேற்றார். 24 அக்டோபர் 2008 அன்று, அமீர் கைது செய்யப்பட்டார். 2008ஆம் ஆண்டு இலங்கையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பேரணி நடைபெற்றது. பேரணியின் போது, அமீர் மற்றும் சக இயக்குனர் சீமான் ஆகியோர் இந்திய அரசை விமர்சித்தும், இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், தீவில் உள்ள தமிழ் பிரிவினைவாதக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவை தெரிவித்தும் உரைகளை நிகழ்த்தினர்.பின்னர் அவர்களது உதவி இயக்குநர்களான பாரதிராஜா மற்றும் நடிகர் ஆர்.சரத்குமார் ஆகியோரின் உதவியுடன் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இப்பொழுது, ஜாபர் சாதிக்குடன் வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.

2021லிருந்து மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் கடத்தல் வியாபாரம்: மூன்று ஆண்டுகளாக, அதாவது 2021லிருந்து நடந்து வருகிறது  எனும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது. அம்மருந்துகளை அவ்வளவு எளிதாக வாங்கி விட முடியுமா, வாங்கியவர் மூலங்களை அறிவது கடினமா போன்ற விவரங்களும் தெரியவில்லை. மூன்று வருடங்களில் ஒருசிலரால் செய்யும் காரியமும் இது இல்லை. தொழிற்சாலை, ஆட்கள், வாகனங்கள் என்று பல விவகாரங்கள் உள்ளன. ஏற்ற்மதி என்றால், சுங்க ஆவணங்களே சம்பந்தப் பட்டவர்களின் விவரங்களைக் காட்டிக் கொடுக்கும். இதையடுத்து, இந்த சா்வதேச போதைப்பொருள் கடத்தல் மோசடியை விசாரிக்க அமலாக்க இயக்குநரகம், ஜாபா் சாதிக் மீது சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது[5]. ஜாபர் சாதிக் அரசியல், திரையுலக பிரமுகர்கள் மற்றும் பிற பிரபல நபர்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன[6]. பிறகு தான் ஊடகங்களுக்கு தைரியம் வந்தது போலிருக்கிறது. இதில், வேடிக்கையென்னவென்றால், இதே ஊடகத்தினர், ஏன், அதே நிருபர்கள் அத்தகைய நிகழ்ச்சிகளைப் பற்றியும் புகைப்படங்களுடன் செய்திகலாக வெளியிட்டுள்ளன. இப்பொழுது, ஒரு வேளை மறைக்க ஆரம்பிக்கின்றன, முயல்கின்றன போலும்.

ஜாதிக்கின் சகோதரர்கள் பிடிபடாமல் இருப்பது எப்படி?: போதை மருந்து பிரிவு நடவடிக்கைகளும் மெதுவாக செல்வது போலிருக்கிறது. அவரது 8 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன[7]. ஆனால், விளைவு என்ன என்று தெரியவில்லை. மேலும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகிறார்கள்[8]. இன்னும் அவர்கள் சிக்காமல் இருப்பதும் வினோதமான விசயம் தான். அதன் பின்புலம் என்ன என்று புரியவில்லை. இதனிடையே அவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்களை சேர்க்க நிதியுதவி செய்ததாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது[9]. சென்னையிலும் தொடர்ந்து விசாரணை முதலியன நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் இருப்பிடத்தை நேற்றைய தினம் தமிழக போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் கண்டறிந்ததாக தெரிகிறது[10]. அங்கும் சென்று சோதனை நடத்தியிருக்கிறார்கள். சதா என்ற சதானந்தத்தின் கோடவுனில் அத்தகைய உற்பத்தி நடந்தது என்றும் தெரிகிறது.

அமீருக்கு சம்மன்: மேலும் மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறையினர் ஜாபா் சாதிக்கை மார்ச் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்[11]. இந்த நிலையில் ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது[12]. இத்தனை நாட்கள் ஏன் என்று தெரியவில்லை. பொதுவாக, நேரம் கொடுத்தால், குற்றவாளிகள் ஆதாரங்களை எல்லாம் அழித்து விடுவார்கள் என்பார்கள். அதிலும் இவ்வாறு வாரங்கள் என்று நேரம் கொடுக்கும் பொழுது என்ன செய்வார்கள் என்பது அதிகாரிகளுக்குத் தான் தெரியும். ஏப்ரல் 2ஆம் தேதி தில்லி அலுவலகத்தில் ஆஜராகும்படி அமீருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது[13]. ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தை இயக்குனர் அமீர் இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது[14].

அமீர் மற்றும் மேலும் இருவருக்கும் சம்மன்: இந்த வழக்கில் இயக்குநர் அமீர், அப்துல் பாசித் புகாரி Abdul Fazid Buhari ], சையது இப்ராஹிம் [Syed Ibrahim] ஆகிய 3 பேர் டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது[15]. ஆஜராவாரா இல்லையா என்று தெரியவில்லை[16]. இந்து மூன்று பேர் யார், என்ன விவரங்கள் என்றும் தெரியவில்லை. முன்னர், இவர் தனக்கும் இவ்விவகாரத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று அறிக்கை விட்டிருப்பதும் நோக்கத் தக்கது. தமிழகத்தில் இவ்வாறு போதை மருந்து விவகாரத்தில் இத்தனை பிரபலங்கள் சம்பந்தப் பட்டிருப்பது திகைப்பாக இருக்கிறது[17]. மேலும் கோலிவுட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது[18]. தேர்தல் நேரத்தில் இவையெல்லாம் நடக்கும் போது, கவனிக்கப் படாமல் இருக்கலாம்[19]. இருப்பினும், இது தமிழக தேர்தலின் மீது பாதிப்பை ஏற்படுத்துவா என்று பார்க்க வேண்டும்[20]. வழக்கம் போல, இச்செய்தியை பிடிஐ பாணியில் தமிழ் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[21]. அதிலும், ஒரு வரி செய்தியாகத்தான் வெளியிட்டுள்ளன[22]. ஒரு பக்கம் திமுக, இன்னொரு பக்கம் சினிமா தொடர்புகள், மற்றும் முஸ்லிம்கள் சந்திருப்பது, தீவிரவாதிகள் தொடர்பு, தொடரும் சோதனை எல்லாம் தமிழக செக்யூலரிஸ ஊடகங்களைக் கட்டிப் போட்டு வைத்துள்ளன போலும்.

© வேதபிரகாஷ்

03—04-2024


[1] மாலைமலர், ஜாபர் சாதிக் வழக்குநேரில் ஆஜராக இயக்குனர் அமீருக்கு சம்மன், 31 மார்ச் 2024 12:18 PM.

[2]https://www.maalaimalar.com/tags/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

[3] தமிழ்.வெப்துனியா, ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன், ஞாயிறு 31 மார்ச் 2024 12:17 IST.

[4] https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/jaffer-sadik-drug-case-a-summon-to-ameer-124033100021_1.html

[5] நியூஸ்.7.தமிழ், ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்!, by Web Editor March 31, 2024.

[6] https://news7tamil.live/director-ameer-summons-in-jaber-sadiq-case.html

[7] சமயம், ஜாபர் சாதிக் வழக்கில் சிக்கிய இயக்குநர் அமீர்.. விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்புப்பிரிவு சம்மன்.. பரபரப்பு!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | 31 Mar 2024, 12:26 pm.

[8] https://tamil.samayam.com/latest-news/crime/ncp-summons-director-ameer-in-jaffer-sadiq-drugs-smuggling-case/articleshow/108913905.cms

[9] ஏபிபி, Breaking News LIVE : இயக்குநர் அமீருக்கு டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு சம்மன்..!, By : ABP NADU  | Updated at : 31 Mar 2024 01:53 PM (IST)

[10] https://tamil.abplive.com/news/india/breaking-news-live-updates-latest-news-tamilnadu-india-worldwide-31st-march-lok-shaba-election-2024-election-commission-175729

[11] தினத்தந்தி, ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு; இயக்குநர் அமீருக்கு சம்மன், தினத்தந்தி மார்ச் 31, 12:20 pm

[12] https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/rs2-thousand-crore-drug-smuggling-case-summons-director-ameer-1099631

[13] தினமணி, ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன், Published on: 31 மார்ச் 2024, 12:31 pm; Updated on: 31 மார்ச் 2024, 12:31 pm.

[14] https://www.dinamani.com/tamilnadu/2024/Mar/31/director-ameer-summons-in-jaffer-sadiq-case

[15] தமிழ்.ஒன்.இந்தியா, ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 3 பேருக்கு சம்மன்.. போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி, By Vishnupriya R Updated: Sunday, March 31, 2024, 13:03 [IST].

[16] https://tamil.oneindia.com/news/chennai/delhi-ncb-officials-issue-summon-to-director-ameer-595001.html

[17] காமதேனு, ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்குஇயக்குநர் அமீருக்கு சம்மன்; பரபரப்பில் கோலிவுட், Updated on: 31 Mar 2024, 1:00 pm.

[18] https://kamadenu.hindutamil.in/crime-corner/zafar-sadiq-drug-case-director-ameer-summoned-to-appear-before-ncb-office-on-april-2

[19] குமுதம், ஜாபர் சாதிக் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்த குழு.. தேர்தல் நேரத்தில் செக்..,Mar 31, 2024 – 13:36

[20] https://kumudam.com/Special-Committee-to-Investigation-in-Jafer-Sadiq-Case

[21] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஜாபர் சாதிக் வழக்கு: இயக்குநர் அமீர் ஆஜராக சம்மன், Vasuki Jayasree, 31 Mar 2024 12:46 IST

[22] https://tamil.indianexpress.com/tamilnadu/director-ameer-gets-notice-for-jaffer-sadiq-drug-case-4437388

மசூதியில் ரம்ஜான் நோன்பு கஞ்சி வைப்பதில் இரு தரப்பினர் இடையே சண்டை, மோதல், அடிதடி- போலீஸார் சமாதானம் செய்து வைத்தனர்!

இடப்பட்டது ஏப்ரல் 3, 2024 by vedaprakash
பிரிவுகள்: அக்பர், மீராசா ஆண்டவா், மீராசா ஆண்டவா் பள்ளிவாசல், மீராசா ஆண்டவா் மசூதி, ரம்ஜான், ரம்ஜான் அரிசி, ரம்ஜான் கஞ்சி, ரம்ஜான் கஞ்சி அரிசி, ரம்ஜான் தாராவீஹ், ரம்ஜான் நோன்பு, ரம்ஜான் நோன்பு அரிசி, லெப்பை, வழிபாடு, வாக்குறுதி, விரதம், ஷரியத், ஷரீயத், ஷியா

Tags: , , , , , , , , , , ,

மசூதியில் ரம்ஜான் நோன்பு கஞ்சி வைப்பதில் இரு தரப்பினர் இடையே சண்டை, மோதல், அடிதடி- போலீஸார் சமாதானம் செய்து வைத்தனர்!

ரம்ஜான் நோன்பு கஞ்சி வைப்பதில் முஸ்லீம்களுக்குள் தகராறு ஏன்?: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது. இதனை முன்னிட்டு இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். அதிகாலையில் உணவருந்திவிட்டு, பிறகு மாலையில் கஞ்சியை குடித்து விட்டு நோன்பு துறப்பது அவர்களின் வழக்கம். இந்த நோன்பு கஞ்சிக்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பிற மதத்தினரும் ரசிகர்கள் தான். அந்த அளவுக்கு இந்தக் கஞ்சியின் சுவை இருக்கும். இறைச்சி, மசாலா உள்ளிட்டவை கலந்திருப்பதால் இந்த நோன்புக் கஞ்சிக்கு பிரத்யேக சுவை உண்டு. இந்தக் கஞ்சியை பள்ளிவாசலுக்கு சென்று வாங்கும் இஸ்லாமியர்கள், இதனை பிற மதங்களைச் சேர்ந்த அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து உண்பார்கள்[1]. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த நோன்புக் கஞ்சியால் இஸ்லாமியர்களே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[2].

பள்ளிவாசல் நிர்வாகம் முதல் கஞ்சி காய்ச்சுவதில் வரை சண்டை ஏன்?: கன்னியாகுமரியில் மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. இந்தப் பள்ளிவாசலை நிர்வாகம் செய்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது[3]. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக ரமலான் நோன்பு காலத்தில் நோன்புக் கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக முஸ்லிம்களில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது[4].  இப்படி சென்றமாதத்திலிருந்து, வாரம்-வாரம் செய்தி வந்து கொண்டிருக்கிறது. “இரு  தரப்பினர்” என்றாலும், அவர் யார் என்று குறிப்பிடாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இஸ்லாத்தில் “இரு  தரப்பினர்” என்றால் யார்-யார் என்று சொல்ல வேண்டும். இப்படி வாரம்-வாரம் அடித்துக் கொள்வது, போலீஸ் வருவது, செய்தி போடுவது, பிறகு அமைதியாகி விடுவது, எப்படி என்று தெரியவில்லை.

17-03-2024 அன்று சமரசத்திற்கு வந்தது: கன்னியாகுமரி மீராசா ஆண்டவா் பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்சும் பிரச்னைக்கு ஞாயிற்றுக்கிழமை முடிவு எட்டப்பட்டது[5]. இப்பள்ளிவாசலில் ஏற்கனவே இருதரப்பினருக்குள் பிரச்னை இருந்துவரும் நிலையில், சனிக்கிழமை இரவு நோன்பு கஞ்சி காய்ச்சுவதில் மோதல் ஏற்பட்டது. இதில், ஒரு தரப்பினா் காவல்நிலையத்தை முற்றுகையிட்டும், மற்றொரு தரப்பினா் பள்ளிவாசல் முன்பும் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில் நாகா்கோவில் கோட்டாட்சியா் காளிஸ்வரி தலைமையில் கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமார், அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் அனில்குமார் ஆகியோர் பேச்சாவார்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டு, இருதரப்பினரும் சமாதானமாக செல்வதாக எழுத்துபூா்வமாக எழுதிக் கொடுத்தனா்[6]. இதனால் கஞ்சி காய்ச்சும் பிரச்னைக்கு முடிவு எட்டபட்டது. இதனிடையே பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த இருதரப்பு பெண்களும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீஸார் தலையிட்டு அவா்களை கலைந்து போகச் செய்தனா்.

25-3-2024 அன்று ஏற்பட்ட சண்டை: இந்த நாளும் அதே போன்ற சண்டை ஏற்பட்டதாக செய்தி வந்துள்ளது[7]. அதாவது, இந்த நாளிலும் அதே போன்ற சண்டை ஏற்பட்டு. போலீஸார் சமாதானம் செய்து வைத்தனர் போலும்[8]. தினத்தந்தி சொல்வது[9], “கன்னியாகுமரியில் ரமலான் நாட்களில் நோன்பு கஞ்சி வைப்பதில் ஏற்பட்ட தகராறில், போலீசார் முன்னிலையில் கை கலப்பில் ஈடுபட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.மெயின் ரோட்டில் மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது.இங்கு தொழுகை நடத்துவதில் இரு தரப்பினர் இடையே சில வருடங்களாக பிரச்சனை இருந்து வருகிறது.இந்நிலையில் இந்த ஆண்டு ரமலான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில் நோன்பு கஞ்சி வைப்பதில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதனப்படுத்தினர்[10].”.

ஏப்ரல் 2024ல் மறுபடியும் சண்டை, தகராறு: கன்னியாகுமரியில் தொழுகை நடத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், போலீசார் கண்முன்பே ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கி கொண்டனர் என்று செய்திகள் மறுபடியும் வந்துள்ளன. கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள மீராசா ஆண்டவர் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதில் இரு தரப்பினர் இடையே சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது.  தற்போது ரமலான் நோன்பு நடைபெற்று வரும் நிலையில் பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதில் இரு தரப்பினிடையே கடந்த சில நாட்களாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.  இதை அடுத்து இரு தரப்பினரையும் அழைத்து கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது.  இதனால் அங்கு கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையிலான ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இரு தரப்பினரும் அடித்துக் கொண்டது: இருப்பினும், இரு தரப்பினிடையே வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கல்லாலும், கையாளும் கொடூரமாக போலீசார் கண் முன்பே தாக்கிக் கொண்டனர்[11]. ஆண்கள் ஒருபுறம் தாக்கிக் கொள்ள அதற்கு இணையாக பெண்களும் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொண்டனர்[12]. போலீஸார் தடுக்க முயன்றும், முடியவில்லை. ஆக்ரோஷமாகத் தாகிக் கொண்டனர். மேலும், கன்னியாகுமரி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலுக்கும் ஒரு தரப்பினர் முற்பட்டனர்[13]. இதை அடுத்து அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்[14]. இதையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்[15]. படுகாயம் அடைந்த ஆறு பேர் அப்பகுதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்[16].

© வேதபிரகாஷ்

03—04-2024


[1] சமயம், நோன்பு கஞ்சிக்காக வெடித்த கலவரம்.. ரத்தம் வழிய வழிய தாக்கிக் கொண்ட இஸ்லாமியர்கள்.. அட பாவமே, Authored Byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil | 2 Apr 2024, 8:42 pm.

[2] https://tamil.samayam.com/latest-news/state-news/muslims-fight-each-other-for-nonbu-kanji-in-kanyakumari/articleshow/108981406.cms

[3]               காமதேனு, நோன்புக் கஞ்சி காய்ச்சுவதில் முஸ்லிம்களிடையே மோதல், Updated on: 02 Apr 2024, 12:45 pm.

[4] https://kamadenu.hindutamil.in/crime-corner/communal-clashes-erupt-in-kanyakumari-over-brewing-of-fasting-porridge

[5]  தினமணி, குமரி மீராசா ஆண்டவா் பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்சும் பிரச்னைக்கு முடிவு, Din, Updated on: 18 மார்ச் 2024, 12:00 am

[6] https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2024/Mar/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81

[7] தமிழ்.நியூஸ்.7, கன்னியாகுமரியில் நோன்பு கஞ்சி வைப்பதில் இரு பிரிவினர் இடையே கைகலப்பு, by Web Editor, March 25, 2023

[8] https://news7tamil.live/in-kanniyakumari-two-sides-of-people-fighting-nonbu-kanchi-making-for-ramalan-festival.html

[9] நோன்பு கஞ்சி வைப்பதில் மோதல்.. இரு பிரிவினர் இடையே கைகலப்பு – குமரியில் பரபரப்பு By தந்தி டிவி 26 மார்ச் 2023 8:11 AM.

[10] https://www.thanthitv.com/latest-news/kanyakumari-ramadan-175937

[11] அப்டேட்நியூஸ், தொழுகை நடத்துவதில் தகராறுபோலீசார் கண்முன்பே கொடூரமாக தாக்கி கொண்ட இஸ்லாமியர்கள்பெண்களும் குடுமிப்பிடி சண்டை!!, Author: Babu Lakshmanan, 2 April 2024, 12:46 pm.

[12] https://www.updatenews360.com/tamilnadu/kaniyakumari-islamic-people-fight-infront-of-police020424/

[13] தமிழ்.ஒன்.இந்தியா, நோன்பு கஞ்சி காய்ச்சுவதில் மோதல்.. கன்னியாகுமரி பள்ளிவாசலில் அடிதடி.. பதற்றம்போலீஸ் குவிப்பு, By Nantha Kumar R Published: Tuesday, April 2, 2024, 12:37 [IST]

[14] https://tamil.oneindia.com/news/kanyakumari/clash-between-two-groups-at-meerasa-andava-masjid-in-kanyakumari-595439.html

[15] தினமலர், முஸ்லிம்களுக்குள் மோதல் குமரியில் 5 பேர் படுகாயம், UPDATED : ஏப் 03, 2024 01:34 AM | ADDED : ஏப் 03, 2024 01:34 AM..

[16] https://www.dinamalar.com/amp/news/tamil-nadu-district-news-kanniyakumari/-5-people-injured-in-clash-between-muslims-in-kumari–/3591404

உள்-ஒதுக்கீடு என்று ஆரம்பித்து எஸ்சி, பிசி என்று கேட்டு ஆரம்பித்து, இப்பொழுது, ஜாதி இல்லை என்று சொல்லி ஜாதி ஜான்றிதழ் கேட்கும் முஸ்லிம்கள்!

இடப்பட்டது பிப்ரவரி 16, 2024 by vedaprakash
பிரிவுகள்: அடிப்படைவாதம், அடிமைத்தனம், அடையாளம், அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, அஹ்மதியா, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமை, இந்துக்களின் உரிமைகள், இரட்டை வேடம், உள் ஒதுக்கீடு, உள்-இட-ஒதுக்கீடு, எஸ்.சி, எஸ்.டி.பி.ஐ, எஸ்.ஸி, எஸ்சி, எஸ்டிபிஐ, ஏமாற்று வேலை, சட்டம் மீறல், சட்டவிரோதம், சமத்துவம், சமரசப்பேச்சு, சமரசம், தமிழ் முஸ்லிம், தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத், தமுமுக, தலித், தலித் போர்வை, தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், துலுக்கன், துலுக்கர், நாத்திக முஸ்லீம்!, நாத்திகத் தமிழன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட், பாரபட்சம், முஸ்லிம், முஸ்லிம் அடிப்படைவாதம், முஸ்லீமின் மனப்பாங்கு, முஸ்லீம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் சாதி, முஸ்லீம் ஜாதி, முஸ்லீம் தன்மை, முஸ்லீம்களில் சிறுபான்மையினர், ஷரியத், ஷரீயத், ஷியா, ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி

Tags: , , , , , , , , , , , , , , , , , , ,

உள்ஒதுக்கீடு என்று ஆரம்பித்து எஸ்சி, பிசி என்று கேட்டு ஆரம்பித்து, இப்பொழுது, ஜாதி இல்லை என்று சொல்லி ஜாதி ஜான்றிதழ் கேட்கும் முஸ்லிம்கள்!

ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இஸ்லாம் மதத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்[1]. என்னடா இது, ஜாதி இல்லை என்கின்ற அவர்கள் ஜாதி சான்றிதழ் கேட்கிறார்களே, முரணாக இருக்கிறதே என்று முதலமைச்சருக்குத் தெரியாதாது விசித்திரமாக இருக்கிறது. பேரவையில் முதலமைச்சர் 15.2.2024 அன்று தனது பதிலுரையில் கூறியதாவது[2]: “மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா, ‘ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை[3]. இந்த முரண்பாட்டை உடனடியாகக் களைய வேண்டும்என ஒரு நீண்டகால கோரிக்கையை முன்வைத்துள்ளார்[4]. சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப் பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்குத் தேவையான பல்வேறு நலத் திட்டங்களையும், ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த, சிறுபான்மையின மக்களின் நலன் களையும் என்றென்றும் பாதுகாத்து வரும் இந்த அரசு, ஜவாஹிருல்லாவின் கோரிக்கையைப் பரிசீலித்து, சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்,”[5] இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்[6].  இதனை அப்படியே எல்லா ஊடகங்களும் வெளியிட்டிருக்கின்றன[7]. சில ஊட்கங்கள் மட்டும் தலைப்பிட்டு, இவ்விவகாரத்தைத் தனியாக வெளியிட்டுள்ளன[8]. முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு, மமக தலைவர் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்தார், என்று சுருக்கமாக செய்தி முடிந்து விடுகிறது. இதைப் பற்றி ஏன் மற்ற கட்சிகள் அமைதியாக இருந்தன, எந்த கேளியையும் எழுப்பவில்லை என்று தெரியவில்லை. செக்யூலரிஸத் தனமாக இருந்து விட்டனர் போலும்

ஜாதி இல்லை என்று சொல்லி ஜாதி ஜான்றித்ழ் கேட்கும் முஸ்லிம்கள்: எல்லோரும் சகோதரர்கள், சம உரிமைகளுடன் இருக்கிறார்கள், எந்தவிதமான வேற்றுமைகளும் கிடையாது என்றெல்லாம் தான் இன்றைய அளவுக்கும் கூறிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், இஸ்லாமிய நாடுகளே தினமும் ஒன்றை ஒன்று தாக்கி கொண்டு இருக்கின்றன. அதைப்பற்றி இப்பொழுது நமக்கு விவாதிக்க தேவை இல்லை. இருப்பினும் தமிழகத்தில் ஜாதி இல்லை, ஜாதியத்தை ஒழிப்பேன், ஜாதியை ஒழிப்பேன் என்றெல்லாம் பேசுகின்றவர்கள் தான், ஜாதியை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்களிடைய ஜாதி இல்லை, எந்த வேறுபாடும் இல்லை, எதுவும் இல்லை என்று பறைச் சாற்றி வருகின்ற முகமதியர், இப்பொழுது இஸ்லாமியர் என்று கூறப்பட வேண்டும் என்கிறார்கள். அவர்கள் இடவொதிக்கீடு கேட்பதுதான் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. முதலில் உள்-ஒதுக்கீடு 3.5% என்று சட்டத்திற்கு புறம்பாக கருணாநிதி கொடுத்தார், வழக்கு நிலுவையில் உள்ளது. இருப்பினும் அடிக்கடி எஸ்சி சலுகை கேட்டு வருகிறார்கள். அதாவது இந்துக்கள் எஸ்சி வகுப்பினராக இருந்து இஸ்லாத்துக்கு மதம் மாறினார் அதே நிலையை தொடர்ந்து ஜாதி சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். எல்லாம் மறைந்து விடும் என்று பறைசாற்றிய பிறகு இஸ்லாமியராக இருந்து கொண்டு இல்லை எனக்கு எஸ்சி சான்றிதழ் தர வேண்டும் என்று கேட்பதும் மிக மிக தமாஷாக இருக்கிறது. இருப்பினும், முஸ்லிம்கள் இதனை சோதித்டுக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால், இந்து பிசிக்கள்-எஸ்சிக்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

முதலில் பிசி, பிறகு எஸ்சிஇது எப்படி சாத்தியமாகும்?: தாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு,  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது[9]. ராமநாதபுரம் மாவட்டம், கூரியூர் உமர்நகர் முஸ்லிம் ஜமாஅத் செயலர் எம்.கே. முஜிபுர் ரகுமான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பில் (எஸ்.சி.) இருந்து, 30 ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிமாக மதம் மாறினோம். இருப்பினும், இதுவரை எங்களுக்குச் ஜாதிச் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் கல்வி, வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

முன்பு பிசிமுஸ்லிமாக இருந்து இப்பொழுது எஸ்சி முஸ்லிம் ஆக முடியுமா?: முஸ்லிம் மதத்தினரையும், அதன் உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் பிற்பட்ட வகுப்பினர் என தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது[10]. சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரத்தைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியம் தேர்வை எழுதியிருந்தார். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர். அவருக்கு தேர்வாணையம், உங்களை ஏன் பொதுப் பிரிவில் சேர்க்கக் கூடாது என கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரை பி.சி. (முஸ்லிம்) பிரிவில் சேர்க்க உத்தரவிட்டது. ஆகவே, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்கள் குறித்து ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய ஜாதி அந்தஸ்து வழங்க உத்தரவிட வேண்டும். மேலும்,  இடைக்கால உத்தரவாக மேற்குறிப்பிட்ட பிரிவினரை பி.சி. முஸ்லிமாகக் கருதி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா,  கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இம் மனு மீதான இறுதி விசாரணை முடியும் வரை, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பி.சி. முஸ்லிமாகக் கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.

© வேதபிரகாஷ்

16-02-2024


[1] விடுதலை, மதம் மாறிய முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை : முதலமைச்சர் அறிவிப்பு, Last updated: 2024/02/16 at 4:20 PM, Published February 16, 2024.

[2] https://viduthalai.in/40155/backward-certificate-for-muslim-converts/

[3] தமிழ்.இந்து, முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்கப்படுமா? – சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும் என முதல்வர் தகவல், Published : 16 Feb 2024 05:40 AM, Last Updated : 16 Feb 2024 05:40 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1200227-backward-certificate-for-those-who-converted-to-islam.html

[5] தமிழ்.நியூஸ்.18, ரூ.2,000 கோடியில் புதிய திட்டம்; மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடுமுதல்வரின் முக்கிய அறிவிப்புகள், FIRST PUBLISHED : FEBRUARY 15, 2024, 1:46 PM IST, LAST UPDATED : FEBRUARY 15, 2024, 1:46 PM IST

[6] https://tamil.news18.com/tamil-nadu/chief-minister-stalins-announcement-that-2-lak-50-thousands-houses-will-be-renovated-1346082.html

[7] தினகரன், மெட்ரோ ரயில் பணிக்காக நிதி தர மறுக்கிறது ஒன்றிய அரசிடம் நிதி பெற எங்களுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்: எடப்பாடிக்கு முதல்வர் அழைப்பு, February 16, 2024, 1:10 am

[8]https://www.dinakaran.com/metro_railwork_uniongovernment_jointvoice_edappadi_chiefminister_call/

[9] தினமணி, முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருத வேண்டும், Published on: 19 ஜனவரி 2013, 4:34 am; Updated on: 19 ஜனவரி 2013, 4:34 am.

[10] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2013/Jan/18/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-619662.html

தமிழக கவர்னர் 467ம் நாகூர் கந்தூரி விழாவில் கலந்து கொண்டது, வழிபாடு செய்தது!

இடப்பட்டது திசெம்பர் 24, 2023 by vedaprakash
பிரிவுகள்: அடையாளம், அதிமுக, அத்தாட்சி, அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், அரேபிய குடி, அரேபியா, ஆஜ்மீர், இசை, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்தியப் பிரச்சினை, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமை, இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமிஸ்ட், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உருது ஜிஹாதி, உருவ வழிபாடு, உரூஸ், உள்ளே நுழைவது, ஊர்வலம், எச்சரிக்கை, எதிர்ப்பு, எல்லோரும் சமம், எஸ். ஹைதர் அலி, கட்டுக்கதை, கந்தூரி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், சகிப்பு, சகிப்புத் தனம், சகிப்புத் தன்மை, சகிப்புத்தனம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், சகோதரர், சகோதரி, சடங்குகள், சந்தனகூடு, சந்தனம் பூசும் உரூஸ் வைபவம், சந்தனம் பூசும் நிகழ்ச்சி, சரித்திர ஆதாரம், சரித்திரம், சலாபிஸம், சாட்சி, சாத்தான், சுன்னி, சுன்னி சட்டம், சுன்னி-ஷியா, சூஃபி, சூஃபி நம்பிக்கையாளர், சூஃபித்துவம், ஜமாஅத், ஜமாஅத்தார், ஜமாத், தடை, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, நாகூர், நாகூர் தர்கா, நாகூர் ஹூசைன், மததுரோகி, மதமாற்றம், மதம், மதம் மாற்றம், மதரஸாக்கள், மதவாதம், மனித நேயம், வியாபாரம், விரதம், ஷியா, ஷியா சட்டம், ஷியா-சுன்னி, ஷிர்க்

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

தமிழக கவர்னர் 467ம் நாகூர் கந்தூரி விழாவில் கலந்து கொண்டது, வழிபாடு செய்தது!

சுன்னிப் பிரிவினர் எதிர்த்தது: நாகை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்காவின் 467ம் ஆண்டு கந்துாரி விழா வரும் டிசம்பர் 14ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகியது[1]. பொதுவாக அமாவாசைக்கு அடுத்தநாளிலிருந்து  பௌர்ணமி  வரை  14-நாட்கள்  விழாவில்  முஸ்லிம்கள் பலர்  கலந்து  கொள்வார்கள்.  இந்த விழா, முஸ்லிம் மதத்திற்கு எதிரானது என முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் [சுன்னி], இவ்விழாவை தடை செய்ய வேண்டும் என ஆண்டுதோறும் போராடி வருகின்றனர்[2]. 1930களிலேயே இந்த எதிர்ப்பு இருந்தது, ஆனால், பிறகு அடங்கி விட்டது. இந்நிலையில், கந்துாரி விழாவின் போது, முஸ்லிம்களின் கோட்பாடுகளை விளக்கி பிரசாரம் செய்ய, போலீசாரிடம் சில முஸ்லிம் அமைப்பினர் அனுமதி கேட்டனர்[3]. போலீசார் அனுமதி மறுத்ததால், முஸ்லிம் அமைப்பினர் போலீசாரை கண்டித்தும், கந்துாரி விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை தடை செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்[4]. கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து, மனு அளித்து சென்றனர். சில வருடங்களுக்கு முன்னர், “ஷிர்க்” என்றெல்லாம் சொல்லி, “ஷிர்க்-எதிர்ப்பு” போராட்டங்கள் எல்லாம் கூட நடத்தினார்கள். இப்பொழுது நிறுத்தியிருக்கிறார்கள் போலும்.

14-12-2023 முதல் 25-12-2023 வரை நடக்கும் சந்தனக்கூடு விழா: உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467 ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் 23-12-2023 அன்று நடைபெற்றது. 21ம் தேதி வாணவேடிக்கையும், 22ம் தேதி இரவு பீர் அமர வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் 23ம்தேதி அன்று மாலை நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டது[5]. நாகப்பட்டினம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சந்தனகூடு சென்று அடுத்த நாள் 24ம்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடைபெற்றது[6]. விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என தர்கா அரங்காவலர் குழு அழைப்பு விடுத்தது[7], அதே நேரம் ஆளுநர் ரவி சந்தனக்கூடு நிகழ்விற்கு வந்தால், சட்ட ஒழுங்கு என்கிற பெயரில் வியாபாரம் பாதிக்கும் என வர்த்தக சங்கத்தினர் மாவட்ட எஸ்,பியிடம் புகார் அளித்தனர்[8].

ஆளுநர் வருகைக்கு எதிர் கட்சியினர் எதிர்ப்புகைது: முன்னதாக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட எல்லையில் கீழ்வேளூர் புறவழிச்சாலையில் காங்கிரஸ், விசிக கம்யூனிஸ்ட் திக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து[9] போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆளுநர் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்[10]. அவர்களை ஆளுநர் வருகைக்கு முன்பாகவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 62 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்[11]. இதேபோல் திருவாரூரிலிருந்து நாகை செல்லும் பைபாஸ் சாலையில் வாழவாய்க்கால் அருகே 10 பேரும், ரயில்வே மேம்பாலம் அருகே 5 பேரும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடியை கட்ட முயன்றனர்[12]. இவர்கள் அனைவரும் மா. கம்யூ., இ.கம்யூ. கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் தஞ்சையிலிருந்து ஆளுநர் திருவாரூர் வரும் வழியில் நீடாமங்கலத்தில் கருப்பு கொடி காட்ட முயன்ற இ.கம்யூ கட்சியை சேர்ந்த 25 பேரையும், கொரடாச்சேரி வெட்டாறுபாலம் அருகே மா. கம்யூ., இ.கம்யூ., கட்சியை சேர்ந்த 25 பேர் என மொத்தம் 67 பேர் கைது செய்யப்பட்டனர்.

24-12-2023 அன்று கவர்னர் வந்து வழிபட்டது: அரசியல் கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாகூர் தர்காவில் ஆளுநர் தரிசனம் மேற்கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது[13]. இந்த நிலையில், நாகூர் தர்காவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆலை 10.35 மணிக்கு வருகை புரிந்தார்[14]. கவர்னர் வருகையால் அலங்கார வாசல் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சுற்றிலுள்ள ஒருசில கடைகள் அடைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்[15]. அதனை தொடர்ந்து தர்கா வந்தடைந்த கவர்னருக்கு பாரம்பரிய முறைப்படி வழக்கமாக தர்கா மணி மேடையில் அமர்ந்திருந்தபடி நகரா மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது[16]. ஆளுநர் ஆர்.என்.ரவியை அலங்கார வாசலில் நாகூர் தர்ஹா தலைமை அறங்காவலர் ஹாஜி உசேன் சாஹிப், ஆலோசனை குழு உறுப்பினர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், நாகை எஸ்பி ஹர்ஷிங் ஆகியோர் வரவேற்றனர்[17]. பின்னர் தர்காவினுள் சென்ற ஆளுநர் பெரிய ஆண்டவர் சமாதியில் இஸ்லாமியர்களோடு சிறப்பு துவா ஓதப்பட்ட நிகழ்வில் பங்கேற்றார்[18].

கவர்னர் வழிபட்டு பதிவு செய்தது: நாகூர் தர்காவின் விசேஷமிக்க சந்தனக்கூடு கந்தூரி திருவிழாவில் பங்கேற்ற கவர்னர் ரவி, பேரழிவை ஏற்படுத்திய புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தார். நாகை நாகூர் ஆண்டவர் தர்ஹாவின் 467ம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய திருவிழாவான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (டிச.,23) நடைபெற்றது. இன்று தர்ஹா வந்தடைந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின் தர்ஹா வாசலில் வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில்[19], “467 வது கந்தூரி திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனைகள். புனிதரின் ஆசீர்வாதங்களைப் பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பாரதத்தின் கலாச்சாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் பழமை வாய்ந்த இந்த தர்ஹா பிரதிபலிக்கிறது,” என கவர்னர் ஆர்.என்.ரவி எழுதினார்[20]. இது தொடர்பான ஆளுநர் மாளிகை எக்ஸ் தள பதிவில், :ஆளுநர் அவர்கள், நாகூர் தர்காவின் விசேஷமிக்க சந்தனக்கூடு வருடாந்திர கந்தூரி திருவிழாவில் பங்கேற்று[21], தமிழ்நாட்டின் குறிப்பாக தென் மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நமது மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது[22].

சந்தனக் கூடு நாகூர் தெருக்களில் ஊர்வலம்: பொதுவாக அமாவாசைக்கு அடுத்தநாளிலிருந்து  பௌர்ணமி  வரை  14-நாட்கள்  விழாவில்  முஸ்லிம்கள் பலர்  கலந்து  கொள்வார்கள்.  நாகூர் தர்காவில் பாரம்பரிய முறைப்படி அரைக்கப்பட்ட சந்தனங்கள் குடங்களில் நிரப்பட்டு நாகப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சந்தன குடங்களை பெற்று நாகப்பட்டினம் யாஹூசைன் பள்ளிவாசல் வந்தடைந்தது. இதன்பின் சந்தன கூடு ஊர்வலம் யாஹூசைன் பள்ளிவாசலில் இருந்து இரவு 7 மணியளவில் புறப்பட்டு அபிராமி அம்மன் திருவாசல் வந்தது. உடன் சாம்பிராணி சட்டி ரதம், நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார ரதங்கள் சந்தன கூடு சென்ற ரதத்தின் முன்னும், பின்னும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அணிவகுத்து சென்றன. இந்த சந்தனக்கூடு ஊர்வலம் நாகப்பட்டினம் புதுப்பள்ளி தெரு வழியாக நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, உள்ளிட்ட தெருக்கள் வழியாக சென்றது. 

பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாக நாகூர் எல்லையை சந்தனக்கூடு சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதிய பின்னர் வாணக்காரத்தெரு, தெற்கு தெரு, அலங்காரவாசல் வழியாக வந்து அங்குள்ள பாரம்பரிய முறைகாரர் வீட்டில் சந்தன குடத்தை வாங்கி கூட்டில் வைக்கப்பட்டது. இதையடுத்து கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது. சந்தன கூடு ஊர்வலத்தை நாகப்பட்டினத்தில் இருந்து நாகூர் வரை பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு நின்று கண்டு ரசித்தனர். இதை தொடர்ந்து 24-12-2023 அன்று (24ம் தேதி) அதிகாலை ஆண்டவரின் சமாதி அறைக்கு எடுத்து சொல்லப்பட்டது. தொடர்ந்து, தர்காவின் பரம்பரை கலிபா ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் 25-12-2023ம் தேதி கடற்கரைக்கு பீர் செல்லும் நிகழ்ச்சியும், வரும் 27ம் தேதி புனித கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

16ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்தற்கான ஆதாரங்கள் இல்லை: 16ஆம் நூற்றாண்டில் நாகூர் பற்றிய வெளிநாட்டார் குறிப்புகளிலும், இலக்கியங்களிலும் பயணக் குறிப்புகளிலும் ஷாஹுல் வலியுல்லா அவர்களைப் பற்றியோ அல்லது தர்கா பற்றியோ குறிப்புகள் ஏதும் இல்லை. இதே காலகட்டத்தில் (1545) நாகப்பட்டினம் பகுதிக்கு வருகைதந்து ஏராளமான பரதவர்களை கிருத்துவ மதத்திற்கு மாற்றம் செய்து கொண்டிருந்த புனித ப்ரான்சிஸ் சேவியர் அவர்களின் குறிப்புகளிலும் நாகூர் ஆண்டவர் பற்றிய குறிப்புகள் இல்லை. தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் (1560-1614) காலத்தில் நாயக்க மன்னர்களைப் பற்றி எழுதப்பட்ட ரகுநாதபியுதாயமு, சாகித்ய ரத்னகாரா, சங்கீதசுதா ஆகிய தெலுங்கு இலக்கியங்களில் ஷாஹுல் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. எனவே, பிற்காலத்தில் ஐதர் அலி-திப்பு சுல்தான் படையெடுப்புகளில், இங்கிருந்த கோவில்கள் ஆக்கிரமிக்கப் பட்டபோது, ஒரு கோவில் மற்றும் குளம் ஆக்கிரமிக்கப் பட்டு, அது தர்காவாக மற்றப் பட்டிருக்கலாம்.

பதினைந்து நாட்களுக்கு நடக்கும் விழா இஸ்லாமிய முறைப்படி இல்லை: ஹஜரத்  சையது  ஷாஹுல்  ஹமீது  காதிர்  வாலி  [Hazrath Syed Shahul Hameed Quadir Wali] என்பருடைய  சமாதி  நாகூரில்  உள்ளது. இவர் முகமது  நபியின்  வழி   23வது  சந்ததியர்  என்று  கூறப்படுகிறது. அந்த வாலி இறந்த தினத்தை  முஸ்லிம்கள்  இங்கு 14-நாள்   விழாவாகக்  கொண்டாடுகின்றனர். நாகை மீராபள்ளிவாசலில், தர்காவின் ஐந்து மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள் வைக்கப்பட்டு ‘துவா’ ஓதப்படும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெரிரதம், சின்ன ரதம் மற்றும் செட்டிப் பல்லக்கு, கப்பல்கள் போன்று வடிவமைக்கப்பட்ட இரண்டு வாகனங்களில், மங்கள வாத்தியங்கள் முழங்க கொடிகள் ஏற்றவைக்கப்பட்டு, ஊர்வலமாக நாகை, நாகூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு நாகூர் தர்கா வந்தடையும். இவ்விதமாக 14 நாட்கள் அமர்க்களமாக விழா கொண்டாடப்படும்.ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று விழா  கொண்டாடுவது சகஜமாகி விட்டது. ஆஜ்மீர் போன்ற தர்காக்களிலும் இவையெல்லாம் நடக்கின்றன. உண்மையில், ஒரிசா போன்ற மாநிலங்களில் மார்கழி மாதத்தில் கொண்டாடப் படும், “போடு பந்தனா” போன்ற விழா, இங்கிருந்த மாலுமிகள் மதம் மாறியபொழுது, அவர்கள் கொண்டாடிய விழாவை, அப்படியே கோவிலுடன் மற்றிவிட்டது புலப்படுகிறது.

© வேதபிரகாஷ்

23-12-2023.


[1] தினமலர், நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம், பதிவு செய்த நாள்: டிச 11,2023 23:43

[2] https://m.dinamalar.com/detail.php?id=3501426

[3] மாலைமலர், நாகூர் தர்கா கந்தூரி விழா: சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம், By மாலை மலர், 24 டிசம்பர் 2023 10:39 AM.

[4] https://www.maalaimalar.com/devotional/worship/nagore-dargah-ganduri-festival-sandalwood-procession-is-a-riot-694936

[5] தினகரன், நாகூர் தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பங்கேற்பு, 02:11 am Dec 23, 2023 |

[6] https://m.dinakaran.com/article/News_Detail/1278262

[7] நக்கீரன், ஒருபக்கம் கருப்புக்கொடி; மறுபக்கம் வரவேற்புநாகூர் தர்காவில் ஆளுநர், செல்வகுமார், Published on 23/12/2023 | Edited on 23/12/2023

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/black-flag-struggle-governor-rn-ravi-who-came-nagai

[9] நியூஸ்7தமிழ், நாகூர் தர்ஹாவில் இன்று சந்தனக் கூடு விழாசிறப்பு துவாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி!, by Web EditorDecember 23, 2023;

[10] https://news7tamil.live/nagore-ganduri-festival-governors-visit.html

[11] தினகரன், 467வது ஆண்டு கந்தூரி விழா நாகூர் ஆண்டவர் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்: ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு,12:20 am Dec 24, 2023.

[12] https://m.dinakaran.com/article/News_Detail/1278904

[13] ஜெயா.நியூஸ்.லைவ், நாகூர் தர்காவின் 467-ம் ஆண்டு கந்தூரி விழா : சந்தனக்கூடு ஊர்வலத்தில் கலந்து கொள்ள சென்ற ஆளுநருக்கு உற்சாக வரவேற்பு, Dec 23 2023 4:04PM

[14] http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_238431.html

[15] விகடன், பாரதத்தின் கலாசாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் இந்த தர்கா பிரதிபலிக்கிறது”- நாகூரில் ஆளுநர் ரவி, இரா விஜயராகவன், Published: 23-12-2023 at 5 PM; Updated: @3-12-2023 at 5 PM.

[16] https://www.vikatan.com/government-and-politics/tn-governor-ravi-visit-nagoor-darga-protest-near-district-border

[17] இடிவிபாரத், நாகூர் கந்தூரி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி; கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த 50க்கும் மேற்பட்டோர் கைது!, டிசம்பர் 24, 2023.

[18] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/tamil-nadu-governor-rn-ravi-at-the-nagore-kanduri-function/tamil-nadu20231223183222850850770

[19] தினமலர், பாரதத்தின் பண்பாட்டை நாகூர் தர்கா பிரதிபலிக்கிறது: கவர்னர் ரவி, மாற்றம் செய்த நாள்: டிச 23,2023 19:05.

[20] https://m.dinamalar.com/detail.php?id=3510622

[21] தினத்தந்தி, பாரதத்தின் கலாசாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் நாகூர் தர்கா பிரதிபலிக்கிறதுகவர்னர் ஆர்.என்.ரவி, டிசம்பர் 24, 5:15 am (Updated: டிசம்பர் 24, 5:15 am).

[22] https://www.dailythanthi.com/News/State/governor-participated-in-the-annual-kandoori-festival-of-nagore-dargah-on-the-auspicious-day-1087184

இந்துமதத் தலைவர்களைக் கொல்லப்படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப் படுமா – இது விவாதத்திற்கு உரியது என்பதால், ஆசிப் முஸ்தஹீன் விடுதலை!

இடப்பட்டது திசெம்பர் 16, 2023 by vedaprakash
பிரிவுகள்: அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, அல் - உம்மா, அல்-முஹாஜிரோன், அல்லா பெயர், ஆசிப் முஸ்தகீன், ஆசிப் முஸ்தஹீன், ஆதரவு, ஆதாரம், ஆர்.எஸ்.எஸ், இந்திய கொடி, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்து-முஸ்லிம், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமிஸ்ட், இஸ்லாம், உயிர் பலி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, எச்சரிக்கை, என்.ஐ.ஏ, என்ஐஏ, எஸ்.டி.பி.ஐ, ஐ.எஸ், ஐ.எஸ்.ஐ, ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், ஐஸில், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், சங்கப் பரிவார், சங்கம், ஜாமீன் மறுப்பு, ஜிஹாதி, ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜுதாயிஸம், தமிழ் ஜிஹாதி, தமிழ் முஸ்லிம், தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத், முஸ்லீமின் மனப்பாங்கு, முஸ்லீம், முஸ்லீம் நாத்திகவாதி, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம்

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , ,

இந்து மதத் தலைவர்களைக் கொல்லப்படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமாஇது விவாதத்திற்கு உரியது என்பதால், ஆசிப் முஸ்தஹீன் விடுதலை!

இந்து மதத் தலைவர்களை கொல்லப் படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமா: இந்து மதத் தலைவர்களை கொல்லப்படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது[1]. பிறகு அத்தகைய குரூர எண்ணத்தை என்னவென்று குறிப்பிடுவது என்று நீதிமன்றம் தான் விளக்க வேண்டும். குற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்  “culpability of mind” இருந்ததா-இல்லையா என்று ஆராய வேண்டும் என்று நீதிமன்றங்களில் பலமுறை வரையருக்கப் பட்ட சட்டமுறையாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்த போது, நீதிபதிகள் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளனர்[2]. மேலும், பெயிலுக்கு கொடுத்த மனுவை ஏற்று, ISIS அனுதாபி என்று கூறப்படும் ஒருவரின் ஜாமீன் மனு, மேலும் சமீபத்தில் பல நிபந்தனைகளுடன் அவரை விடுதலை செய்தது[3]. இது பிடிஐ செய்தி என்பதால், ஆங்கில ஊடகங்களில் அப்படியே வெளிவந்துள்ளது. ஆனால், தமிழகத்து செய்தியானாலும், தமிழ் ஊடகத்தில் இன்னும் வெளி வரவில்லை.

ஐசிஸ் உறுப்பினர் என்று எடுத்துக் காட்டப் படவில்லை: மேல்முறையீடு செய்த ஈரோட்டைச் சேர்ந்த ஆசிப் முஸ்தஹீன், தான் வசிக்கும் பகுதியைச் சுற்றியுள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களைக் குறிவைத்து தனது திட்டத்தை செயல்படுத்துவதற்காக தடை செய்யப்பட்ட அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உறுப்பினராக விரும்பினார் என்பது அரசுத் தரப்பு வழக்கு[4] என்று தெரிகிறது. மற்றொரு குற்றவாளியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்[5] என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கிடையே அரபு மொழியில் வரும் செய்திகள், அவர் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் கொல்ல விரும்புவதாகவும் காட்டுவதாக அது வாதிட்டது[6]. சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் [Unlawful Activities (Prevention) Act,] 18 மற்றும் 38(2) பிரிவுகளின் கீழ் அவர் குற்றவாளி என்று அரசு தரப்பு சமர்பித்தது. இருப்பினும், குறுஞ்செய்திகளில் மேல்முறையீடு செய்தவர் தடைசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை என்று நீதிமன்றம் கூறியது[7]. அதாவது, ஐசிஸ் உறுப்பினர் என்றால் தான் குற்றவாளி ஆவான் போலிருக்கிறது.

நெருக்கமாக இருப்பதால் மட்டும் தீவிரவாதியாகி விட முடியாது: “A2 ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர் என்பதை நிரூபிக்க அரசு தரப்பால் எந்த ஆதாரமும் இல்லை. A2 ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர் என்று வைத்துக் கொண்டாலும், குறுஞ்செய்திகள் மேல்முறையீடு செய்பவர்/A1 A2 க்கு அருகில் இருக்க விரும்புவதாக மட்டுமே குறிப்பிடுகிறது[8]. ஒரு தனிநபரின் அருகாமை என்பது, பயங்கரவாத சங்கத்தின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்காக, அதனுடன் தொடர்புகொள்வது அல்லது அதனுடன் தொடர்புடையதாகக் கூறுவது வேறுபட்டது,” என்று பெஞ்ச் கூறியது[9]. தகவல்தொடர்புகளைத் தவிர, இரண்டு கத்திகள் மற்றும் மேல்முறையீட்டாளர் கத்தியை வைத்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபரின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்திருக்கும் படம் ஆகியவற்றைப் பிரதிவாதி பொலிசார் நம்பியுள்ளனர்[10]. ஆனால், அவர் அத்தகைய கொலையாளியா என்றெல்லாம் நிரூபிக்கவில்லை என்றும் வாதல் தொடரும் போலிருக்கிறது.

ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த இந்து மதத் தலைவர்களுக்கு எதிராக இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்ய சதி: யுஏபிஏ பிரிவு 18ன் கீழ் உள்ள குற்றத்தைப் பொறுத்தவரை, பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த இந்து மதத் தலைவர்களுக்கு எதிராக இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்ய ஏ1 மற்றும் ஏ2 சதி செய்ததாக இறுதி அறிக்கையில் அரசு தரப்பு வழக்கு தொடர்ந்தது[11]. “சில மதத் தலைவர்களைத் தாக்க சதி செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. UAPA வின் 15வது பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, அது எப்படி ஒரு பயங்கரவாதச் செயலாகும் என்பதை பிரதிவாதி குறிப்பிடவில்லை[12]. UAPA இன் 15வது பிரிவின் கீழ் ஒரு சட்டத்தை கொண்டு வர, அந்தச் செயல் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு அல்லது இறையாண்மையை அச்சுறுத்தும் அல்லது அச்சுறுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட வேண்டும்[13]. இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள மக்களிடமோ அல்லது எந்தப் பிரிவினரிடமோ பயங்கரவாதத்தைத் தாக்குவது, என்ற ரீதியில் தீவிரவாதம் இருக்க வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியது[14].

 “இந்து மதத் தலைவர்கள் கொல்லப்படுவது மட்டுமே ஒரு பயங்கரவாதச் செயலாக அமையுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது[15]. எவ்வாறாயினும், வழக்கின் பரந்த நிகழ்தகவுகளைக் கருத்தில் கொண்டு, வழக்குத் தொடுத்துள்ள பொருட்களிலிருந்து, தீவிரமான குற்றங்கள் உட்பட பிற சட்டவிரோதச் செயல்களைச் செய்ய சதி இருந்தபோதிலும், பயங்கரவாதச் செயலைச் செய்வதற்கான சதித்திட்டம் இருந்தது என்று உறுதியாக முடிவு செய்ய முடியாது,” என்று நீதிமன்றம் மேலும் கூறியது[16]. எவ்வாறாயினும், “யுஏபிஏவின் பிரிவுகள் 18 மற்றும் 38(2) இன் கீழ் முதன்மையான வழக்கு தொடர்பான தீவ்ரமான அம்சங்கள் வழக்கின் பரந்த சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டும், ஜாமீன் விண்ணப்பத்தை பரிசீலிப்பதன் மூலமும் மட்டுமே செய்யப்படுகின்றன.” அரசு தரப்பில் என்ன வாதாடினார்கள் என்பதும் தெரியவில்லை. ஏனெனில், அரசு தரப்பு வக்கீலுக்கு இதெல்லாம் தெரியாதா என்ற கேள்வியும் எழலாம். ஒருவேளை முறையாக அவ்வாறு வழக்குப் பதிவு செய்யப் படவில்லை என்றால், இவ்வாறே ஓட்டைகளை உபயோகித்து விடுதலை பெற்று சென்று விடலாம். பிறகு, கைது செய்யப் பட்டது ஆதாரங்களை சேகரித்தது என்பதெல்லாம் வேஸ்ட் தான்.

நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுதலை: ஈரோடு உள்ளூர் நீதிமன்றத்தால் இதேபோன்ற மனு நிராகரிக்கப்பட்ட மேல்முறையீட்டாளருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு விடுதலை அளித்தது, பத்திரத்தை நிறைவேற்றும்படியும், தலா ரூ. 50,000 போன்ற தொகைக்கு இரண்டு ஜாமீன்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டது, அதில் ஒன்று இரத்த உறவினரால் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறையில் இருந்து வெளியே வந்த அவர் ஈரோட்டில் தங்கி இருக்க வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியின்றி ஊரை விட்டு வெளியேறக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இனி ஈரோடில் அவன் சுதந்திரமாகத்தன் திரிந்து கொண்டிருப்பான். கொஞ்ச நாட்களில் எல்லாம் மறந்து விடும். இப்பொழுதே தமிழில் எந்த செய்தியும் வரவில்லை.

© வேதபிரகாஷ்

16-12-2023


[1] The South First, Considering killing of Hindu religious leaders as terrorist act is ‘debatable’: Madras HC while granting bail to alleged ISIS sympathizer, BY PTI,  Published:15/12/2023 11:54 am.

[2] https://thesouthfirst.com/tamilnadu/considering-killing-of-hindu-religious-leaders-as-terrorist-act-is-debatable-madras-hc-while-granting-bail-to-alleged-isis-sympathiser/

[3] Times of India, Targeted killing of Hindu neta not terrorist act: Madras HC, Suresh Kumar / TNN / Dec 14, 2023, 02:16 IST.

[4] https://timesofindia.indiatimes.com/india/targeted-killing-of-hindu-neta-not-terrorist-act-madras-hc/articleshow/105971027.cms?from=mdr

[5] Times Now, Is targeted killing of Hindu neta an act of terror? Madras HC says it id debatable, TN National Desk, Updated: Dec 14, 2023, 10:20 AM IST.

[6] https://www.timesnownews.com/india/is-targeted-killing-of-hindu-neta-an-act-of-terror-madras-hc-says-its-debatable-article-105975897

[7] The Week, Madras HC grants bail to alleged ISIS sympathizer, PTI Updated: December 14, 2023 20:03 IST.

[8] https://www.theweek.in/wire-updates/national/2023/12/14/lgm4-tn-hc-isis.html

[9] Bar and Bench, Is conspiring to kill Hindu religious leader a terrorist act under UAPA? Madras High Court asks, Ayesha Arvind, Published on:  13 Dec 2023, 7:28 pm.

[10] https://www.barandbench.com/news/is-conspiring-kill-hindu-religious-leader-terrorist-act-uapa-madras-high-court

[11] Law trend, Madras HC grants bail to alleged ISIS sympathiser, By PTI News December 14, 2023 8:40 PM.

[12] https://lawtrend.in/madras-hc-grants-bail-to-alleged-isis-sympathiser/

[13] Indian Express, Plot to kill religious leaders: Accused gets bail, HC asks if act is terror under UAPA, Written by Arun Janardhanan, Chennai | Updated: December 15, 2023 03:33 IST

[14] https://indianexpress.com/article/cities/chennai/plot-to-kill-religious-leaders-accused-gets-bail-hc-asks-if-act-is-terror-under-uapa-9068828/

[15] Rediff.com, Is killing Hindu leaders a terrorist act asks HC, grants bail to pro-ISIS man, Source: PTI   –  Edited By: Senjo M RDecember 14, 2023 21:40 IST

[16] https://www.rediff.com/news/report/is-killing-hindu-leaders-a-terrorist-act-asks-hc-grants-bail-to-pro-isis-man/20231214.htm