இந்தியாவில் இந்து மக்கட்தொகை குறைவது ஏன், முஸ்லிம் மக்கட்தொகை அதிகரிப்பது ஏன்?:
1947-இந்தியாவிலிருந்து இந்து மக்கட்தொகை குறைவது: இந்தியாவைப் பொறுத்த வரையில் ஜனத்தொகை எல்லா விதங்களிலும் பாதிப்பதாகவே உள்ளது. 1947-பிரிவினைக்குப் பிறகும் முஸ்லிம் பிரச்சினை தீராமல் இருந்து வருகிறது. 1941 மக்கட்தொகை கணக்கின் படி 14.6% இந்துக்கள் இருந்தனர். இப்பொழ்ய்தும் 2% தான் உள்ளனர். அதாவது 12% குறைந்து விட்டது.காஷ்மீரத்தில் முஸ்லிம் மக்கள் அதிகமானதுடன், இந்துக்கள் விரட்டி அடிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். பிறகு ஊடுருவல் பிரச்சினை பெரிதாகியுள்ளது. வங்காள தேச முஸ்லிம்கள் தினம்-தினம் ஊடுருவி வருகின்றனர். நம் நாட்டில் 1950ல் இருந்து, 2015ம் ஆண்டுக்கு இடையே, ஹிந்துக்கள் மக்கள் தொகை 7.81 சதவீதம் குறைந்துள்ளது[1]. அதே நேரத்தில், முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது[2]. பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில், ‘சிறுபான்மையினர் மக்கள் தொகை — நாடுகள் இடையேயான நிலை’ என்ற பெயரில் விரிவான ஆய்வை நடத்தியது[3].
EAC-PM அறிக்கை சொவது என்ன?: ஷமிகா ரவி, அபூர்வ் குமார் மிஸ்ரா மற்றும் ஆப்ரஹாம் ஜோஸ் ஆகியோர் நடத்திய, இது குறித்த ஆய்வறிக்கையில் [EAC-PM – The Economic Advisory Council to the Prime Minister] கூறப்பட்டுள்ளதாவது[4]: இந்தியாவில், 1950 மற்றும் 2015ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், பெரும்பான்மையினரான ஹிந்து மக்கள் தொகை 7.8 சதவீதம் குறைந்து, 78.06 சதவீதமாக உள்ளது[5]. அதே நேரத்தில், முஸ்லிம்கள் மக்கள் தொகை 43.15 சதவீதம் அதிகரித்து, 14.09 சதவீதமாக உள்ளது[6]. கிறிஸ்துவர்கள் மக்கள்தொகை 5.4 சதவீதம் உயர்ந்து, 2.36 சதவீதமாக உள்ளது. சீக்கியரின் மக்கள் தொகை 1.85 சதவீதம், புத்த மதத்தினரின் எண்ணிக்கை 0.81 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், ஜைனர்களின் எண்ணிக்கை 0.36 சதவீதம் மற்றும் பார்சி எண்ணிக்கை 0.004 சதவீதம் குறைந்து உள்ளது. இந்த கணக்கெடுப்பு, எவ்வாறு மக்கள் தொகை உயர்ந்தது என்பதை கண்டுபிடிப்பதற்காக நடத்தப்படவில்லை. அதே நேரத்தில், சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா என்பதை ஆராய்வதற்காக நடத்தப்பட்டது. இந்தியாவின் இந்த மக்கள் தொகை விபரங்கள், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் சுமுகமான சூழ்நிலை நிலவுவதையே காட்டுகிறது. சிறுபான்மையினருக்கு சிறப்பான சூழல் நிலவுகிறது என்பதையும் இது காட்டுகிறது[7]. அதனால் தான், அண்டை நாடுகளில் இருந்து, இந்த காலகட்டத்தில் சிறுபான்மையினர் அதிகளவில் நம் நாட்டுக்குள் வந்துள்ளனர்[8].
முஸ்லிம் ஜனத்தொகை அதிகரிப்பும், பாதுகாப்பும்; நம் அண்டை நாடுகளில் பெரும்பான்மையினர் எண்ணிக்கை, இதே காலகட்டத்தில் உயர்ந்துள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள நாடுகளில் அவர்களுடைய மக்கள் தொகை உயர்ந்துள்ளது. மாலத்தீவுகள் மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது. அதே நேரத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக அல்லாத ஐந்து நாடுகளில், இலங்கை, பூட்டானில் மட்டும் பெரும்பான்மையின சமூகத்தினரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பொதுவெளியில் கூறப்படும் கருத்துக்களுக்கு மாறாக, இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதுடன், வளர்ச்சியும் அடைந்து வருகின்றனர் என்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளில், அங்குள்ள பெரும்பான்மையினர் எண்ணிக்கையே உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
உலக அளவில் ஜனத்தொகை எவ்விதத்தில் பாதிக்கும்?: வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். உலக அளவில் பெரும்பான்மையினர் மக்கள் தொகை, 22 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதுபோல ஒவ்வொரு கண்டத்திலும் இதே சூழ்நிலை நிலவுகிறது. பெரும்பான்மையின மக்கள் தொகை உயர்வு மிகவும் அதிகமாக உள்ள 20 நாடுகளை பார்க்கும்போது, அவை, முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ நாடாக உள்ளன. அதேபோல், பெரும்பான்மையின மக்கள் தொகை அதிகமாக குறைந்துள்ள, 20 நாடுகளில் மூன்று மட்டுமே முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ நாடாக உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஜனத்தொகை கணக்கெடுப்பின் நம்பகத்தன்மை: ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் சா்வதேச மனித உரிமைகள் கட்டமைப்பு, சிறுபான்மையினரின் உரிமைகள், நாடுகளின் பொறுப்புகள், சா்வதேச சட்டங்கள் ஆகியவை வடிவம் பெறத் தொடங்கிய காலகட்டம் என்பதால் 1950-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது[9]. இந்த ஆய்வுக்காக 167 நாடுகளின் தரவுகள் ஆராயப்பட்டன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[10]. நாட்டில் கடைசியாக 2011-ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021-ஆம் ஆண்டில் நடத்த வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும் மேற்கொள்ளப்படாத சூழலில், இந்த ஆய்வறிக்கையில் மத வாரியான எண்ணிக்கை விவரங்கள் இடம்பெறவில்லை. 2015-ஆம் ஆண்டில் மதத்தினரின் சதவீதம் குறித்து எந்த அடிப்படையில் தீா்மானிக்கப்பட்டது என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை[11]. மக்களவைத் தோ்தலுக்கு இடையே, இந்தத் தரவுகள் வெளியாகியுள்ளன. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதே காங்கிரஸின் திட்டம் என்று பிரதமா் மோடி தொடா்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், ஹிந்து-முஸ்லிம் எண்ணிக்கை விவகாரமும் பிரசாரத்தில் தீவிரமாக எதிரொலிக்கும் எனத் தெரிகிறது[12].
முஸ்லிம்கள் ஊடுருவல்களும் ஜனத்தொகை அதிகமாகக் காரணமாகிறது: பிரதம மந்திரிக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை அல்லது தேர்தல் நடக்கின்ற நேரத்தில் வெளியிட்ட விவரங்கள் என்று இதை ஒதுக்கி விட முடியாது. மதரீதியில் தான் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது அந்நேரத்தில் கோடிக்கணக்கான இந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டனர், கொல்லவும் பட்டனர், என்பதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். பிறகு 1971 வங்காளதேசம் உருவான போதும் முஸ்லிம்கள் ஊடுருவினார்கள். இப்பொழுது மியன்மாரில் இருந்து இந்திய எல்லைகள் வழியாக முஸ்லிம்கள் ஊடுருவி நுழைகிறார்கள். அவர்கள் அகதிகள் பார்வையில் திட்டமிட்டே நுழைகிறார்கள் மற்றவர்கள் வேலை நிமித்தம் இங்கே தங்கி விடுகிறார்கள் இவர்கள் தமிழ்நாடு வரையில் பரவி கட்டிடத் தொழில் என்று பல வேலைகளை செய்து வருகிறார்கள். இவையெல்லாம் செய்திகளாக நாளிதழ்களிலும் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இதற்கு மதசாயம் பூச வேண்டும் என்ற அவசியம் இல்லை அவ்வாறு அவர்கள் வேலை செய்து பிழைத்துக் கொண்டு இருந்து விடலாம் ஆனால், அவர்கள் முஸ்லிம்கள் என்றுதான் உள்ள நுழைகிறார்கள், செயல்படுகிறார்கள் எனும்பொழுது பிரச்சினையகிறது. ஆக, முஸ்லிம்கள் ஊடுருவல்களும் ஜனத்தொகை அதிகமாகக் காரணமாகிறது
பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக்கணக்கில் வருவது, வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (2)
ஜூன் 2021ல்திருப்பூரில்மூவர்கைது: திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி, முறைகேடாக தங்கிய வங்க தேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்[1]. திருப்பூர், அம்மாபாளையம் ராக்கியா பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்; நகல் எடுக்கும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு வீட்டை, ஏப்., மாதம் ஷிமுல் காஜி, 30, என்பவருக்கு வாடகைக்கு விட்டார். ஆதார் கார்டில் ஈரோடு மாவட்ட முகவரி இருந்தது.அவர், வங்க தேசத்தவர் என பின் தெரிந்தது.இது குறித்து, ஷிமுல் காஜியிடம் கேட்டபோது, அவருடன் சேர்ந்து, அவரது நண்பர்கள் சைபுல் இஸ்லாம், 40, மன்னன் மோலல், 31, ஆகியோரும் சேர்ந்து, மணிகண்டனிடம் வாக்குவாதம் செய்தனர். அவரை தாக்கி மிரட்டல் விடுத்தனர்.அவர் அளித்த புகார்படி, திருமுருகன்பூண்டி போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்தனர். வங்க தேசத்தைச் சேர்ந்த மூவரும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பது தெரிந்தது. கொலை மிரட்டல், சட்டவிரோதமாக தங்கியது உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்[2]. இவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டனரா, குடும்பத்தினருடன் தங்கியிருந்தனரா என விசாரணை நடக்கிறது.
ஊன் 2019 பிரச்சினை – திருப்பூர்இச்செயல்களுக்குமையமாகிறதா?: திருப்பூர், ஜூன் 1 –திருப்பூர் மாநகரில் சட்டவிரோதமாக அடைக்கலமாகும் வங்கதேசத்தவர் உள்ளிட்ட வெளிநாட்டினர் பிரச்சனை குறித்து காவல் துறை சார்பில் சம்பிரதாயத்துக்கு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட சிறுபூலுவபட்டி அத்திமரத்தோட்டம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேர் முறையான ஆவணங்கள் இல்லாமல் இங்கு தங்கியிருந்து பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப் பட்டனர்[3]. இதற்கு முன்பு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளில் தொடர்புடையவர்கள் இங்கு தங்கியிருந்ததும், நக்சல் அமைப்புடன் தொடர்புடையவர்கள் இங்கு தங்கியிருந்ததும், நைஜீரியா நாட்டில் இருந்து வந்தவர்கள் முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் இங்கு வந்து ஆண்டுக்கணக்கில் தங்கியிருந்ததும் அவ்வப்போது கண்டறியப்பட்டுள்ளது[4]. இது தவிர திருப்பூர் போன்ற ஏற்றுமதி நகரத்தில், நைஜீரியர்கள், வங்கதேசத்தவர் போன்ற வெளிநாட்டினர் மட்டுமின்றி வெளி மாநிலத்தவர்கள் அதிகளவு வருகை தருவதை குறுகிய அடையாள அரசியலைப் பின்பற்றும் அரசியல் சக்திகள் பயன்படுத்தி பதற்றத்தை ஏற்படுத்த முயல்வதும் அதிகரிக்கிறது.
வங்கதேசத்தில்இருந்துபலர்மேற்குவங்கமாநிலம்வழியாகஇந்தியாவிற்குள்வந்து, பல்வேறுபகுதியில்சட்டவிரோதமாககுடியேறிவருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்திலும் இதுபோன்று குடியேறுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் இருந்து வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அடிக்கடி தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது, தொழில்நுட்ப உதவியுடன் இன்டர்நெட் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த தொடர்பு குறித்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் மத்திய உளவுத் துறை மற்றும் சென்னை கடலூர் கண்காணிப்பு பிரிவு போலீசார் வங்கதேசத்தவரை தேடிவந்துள்ளனர். விசாரணையில் தெரியவந்தது[5]. மேலும் விசாரணையில், நாஜ்மூர் ஷித்தர் (வயது 35), அவரது மனைவி பரீதாபீவி (25), 3 வயது சிறுவன் மற்றும் ஷக்தர் முல்லா (50), பாபுஷேக் (22) பாத்திமா பீவி (25) என்பதும், முறையான ஆவணங்கள் இல்லாமல் அங்கு குடியேறியதும் தெரியவந்தது[6].
பல கேள்விகள் எழுப்பினாலும் வஙகதேசத்திலிருந்து வருவது நிதர்சனமாக உள்ளது:
வங்கதேசத்தில் இருந்து இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியது எப்படி,
ரெட்டிச்சாவடி பகுதிக்கு இவர்களை அழைத்து வந்தவர்கள் யார்?,
அங்கு குடியேறியதற்கான காரணம் என்ன?,
இவர்களை போன்று வேறு யாரேனும் கடலூர் மாவட்டத்தில் குடியேறி இருக்கிறார்களா?
என்று பல்வேறு கோணங்களில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதே வேளையில், இங்கு வசித்து வந்தவர்களுக்கு தீவிரவாதிகளுடன் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா என்றும் கியூ பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோல் அடையாளம் தெரியாத நபர்கள் வங்கதேசத்தினர் போன்றவர்கள் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில்மட்டும் 73,000 வங்காளதேசத்தவர்கள் இருக்கிறார்கள்: சென்னையில் மட்டும் 73,000 வங்காள தேசத்தவர்கள். உரிய அனுமதி இன்றி ஊடுருவியர்கள். என தெரிய வந்துள்ளது[7]. கட்டிடத் தொழிலில் பெரும்பாலோர் இவர்களாகத் தான் இருக்கிறார்கள். வேலையைப் பொறுத்த வரையில் இவர்கள் குறைந்த கூலி வாங்கிக் கொண்டு கடின வேலைகளை செய்து வருகின்றனர். இது கொரானாவால் வெளி வரும் உண்மைகள்.சென்னையில் மட்டுமே இவ்வளவு பேர் என்றால் தமிழகம் முழுக்க,நாடு முழுக்க எவ்வளவு பேர் இருப்பார்கள். ஏன் CAA வை எதிர்க்கிறார்கள் என்பது இப்போது நன்கு புரியும்[8]. வன்முறையில் ஈடுபட்டவர்களை விசாரிக்கும் போது அவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்துள்ளார்கள். அவர்களின் ஆவணங்களை கேட்கும் போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து உள்ளார்கள். பின் தீவிர விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் மேற்கு வங்கம் வந்து பின் தமிழகம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
பங்களாதேசத்தவர், முஸ்லிம்கள்என்றாலும்தெரிவிக்கப்படவேண்டும்: பங்களாதேசத்தவர், அவர்கள் முஸ்லிம்களாகத் தான் இருக்கின்றனர், ஆனால், தங்களது அடையாளங்களை மறைத்து, ஏன் “இந்துக்கள்” போர்வையிலும் வேலை செய்து வருகின்றனர். பங்களாதேசத்திலிருந்து, எவ்வாறு, இத்தனை தூரம் வரமுடிகிறது, அவர்களை எவ்வாறு யார் எப்படி வேலைகளுக்கு வைக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்பது இல்லை. பெரும்பாலான கட்டிட வேலை நடக்கும் இடங்களில் இவர்கள் தான், ஆயிரக் கணக்கில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அங்கு வேலை செய்யும் மேஸ்திரிகளுக்கு, மேற்பார்வையாளர்களுக்கு, இஞ்சினியர்களுக்கு, பில்டர்களுக்கும் தெரிந்து தான் உள்ளது. ஆனால், யாரும் கண்டுகொள்வதில்லை என்றே தெரிகிறது. ஏற்கெனவே, கோவையில் “காஸ்-குண்டு வெடிப்பு,” முயற்சி நடந்திருக்கிறது. அது மங்களூரு “ஆட்டோ-குண்டு வெடிப்பு,”டன் தொடர்பு படுத்தி செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. தமிழக-கர்நாடக இணைப்புகள் வெளிப்படுகின்றன. பிறகு, பங்களாதேச இணைப்பு என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.
“இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்
அப்பாவி இந்துக்கள் மீது தாக்குதல்கள்: 1971ல் நடந்த போர்க்குற்றங்களுக்காக, .டெலேவார் ஹொஸைன் சையிதீ என்ற தீவிரவாத ஜமாத்-இ-இஸ்லாமித் தலைவருக்குத் தூக்குத்தண்டனையளித்தப் பிறகு கலவரம் ஏற்பட்டதில் ஏற்படுத்தப்பட்டதில் நாட்டின் சிறுபான்மையினரான இந்துக்கள் 28-03-2013 (வியாழக்கிழமை) அன்றுலிருந்து தாக்கப்பட்டிருக்கிறார்கள். நான்கு நாட்களாக இந்த கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
2013லும் தொடரும் 1971 மாதிரியான குரூரக்கொலைக்குற்றங்கள்: 1971 குரூர-போர்க்குற்றங்களைப் போலவே, இப்பொழுதும் நடந்தேறியுள்ள திட்டமிட்டத் தாக்குதலிகளில், ஆயிரக்கணக்கான சிறுபான்மையினரின் வீடுகள், 150 வழிபாட்டு ஸ்தலங்கள் கடந்த இரு தினங்களில் தாக்கப்பட்டிருக்கின்றன, என்று பங்களாதேசத்தின் இந்து-பௌத்த-கிருத்துவ ஐக்கிய பரிஷத்தின் பொது செயலாளர் மற்றும் வழக்கறிஞருமான ராணா தாஸ் குப்தா என்பவர் கூறியுள்ளார். இப்பொழுது, எந்த குற்றங்களுக்காக, டெலேவார் ஹொஸைன் சையிதீ குற்றஞ்சாட்டப் பட்டு, தண்டனைப் பெற்றுள்ளாரோ, அதே மாதிரியான குற்றங்கள், இன்றும் நடக்கின்றன, அதாவது 2013லும் தொடரும் 1971 மாதிரியான குரூரக்கொலைக்குற்றங்கள் என்று அவர் எடுத்துக் காட்டுகிறார்.
இந்துக்கள் தாக்கப்பட்டுள்ள ஊர்கள் / இடங்கள்: சிட்டகாங், குல்னா, படிசால், நோவகாலி, கலிபந்தா, ரங்கப்பூர், சைல்ஹெட், தாகுர்காவ், பகேரெத் மற்றும் சபைனவாப்கஞ்ச் முதலிய இடங்களிலுள்ள சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் கடைகள் தாக்கப்பட்டிருப்பதாக, சிட்டகாங் பிரஸ் கிளப்பில் நடந்த கூட்டத்தில் நிருபர்களுக்கு கூறினார். ஆனால், இந்திய ஊடகங்கள் மௌனியாக இருக்கின்றன.
ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிர் – தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள்: ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிர் முதலிய இயக்கங்களின் குரூரக்கொடுமைகளுக்காகக் குற்றஞ்சாட்டினார். சத்கானியவில் நடந்த தாக்குதல்களுக்கு சோரோடி யூனியன் பரிஷத்தின் சேர்மேன் ரெஜைவுல் கரீம் மற்றும் பன்ஸ்காளியில் நடந்த தாக்குதல்களுக்கு முனிசிபல் கவுன்சிலர்களான அபு மற்றும் சலீம் முதலியோர் மீது குற்றஞ்சாட்டினார்.
உள்ளூர் முஸ்லீம் தலைவர்களே காரணம்: 2003ல் பன்ஸ்காளியில் சில்பாரா என்ற இடத்தில் 11 பேர் அடங்கிய ஒரு இந்து குடும்பத்தை உயிரோடு எரித்ததற்கும், மற்றும் பன்ஸ்காளியில் திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தியதற்கும், அமினுர் ரஹ்மான் சௌத்ரி என்பவர் மீது குற்றஞ்சாட்டினார். அதாவது பத்தாண்டு காலமாகியும் அக்கொலையாளிகள் அப்படியே வாழ்ந்து வருகிறார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அரசுக்கு வேண்டுகோள்: இத்தகைய கொடுமைகள் நடக்காமல் இருக்கவும், குற்றம் புரிந்தவர்களை உடனடியாக கைது செய்யவும், அவர்கள் மீது உரிய முறையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், பலிகடா ஆனவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும், இடித்தழிக்கப்பட்ட வீடுகள்-கோவில்களைத் திரும்பக் கட்டிக் கொடுக்கவும் அரசாங்கத்தை இந்து-பௌத்த-கிருத்துவ ஐக்கிய பரிஷத்தின் சார்பில் கேட்டுக் கொண்டார்.
சாம்பலாகிப் போன வீடுகள்: குறிப்பிட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் மூன்று இரவுகளாக தூக்கம் இல்லாமல், என்ன நடக்குமோ என்று திறந்த வெளியில் ஆகாயத்தின் கீழ் உயிருக்குப் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது”, என்று மினோதி ராணீ தாஸ் என்ற பெண்மணி கூக்குரலிட்டுக் கதறினார், “சந்தோஷமான குடும்பம் எங்களுக்கு இருந்தது, ஆனால் இப்பொழுது எங்களுக்கு எதுவுமே இல்லை, கூரையில்லை, உணவில்லை, சமைக்க இடமில்லை, பாத்திரம் இல்லை, எதுவும் இல்லை. இங்கிருப்பதெல்லாம் கொஞ்சம் சாம்பல் தான்”.
பல இந்து குடும்பங்களின் கதி: மினோதி ராணீ தாஸ் மட்டுமல்ல, அவரைப்போல, சுற்றி வாழும் 76 இந்து குடும்பங்களின் கதிட்யும், இதே கதிதான். தீர்ப்பை ஆதரித்து கோடிக்கணகான மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களோ செத்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 40 வீடுகள் சூரையாடப் பட்டு, எரியூட்டப்பட்டன. பொருட்களை எடுத்துச் சென்று விட்டனர். எல்லாம் முடிந்த பிறகு தான் போலீஸார் வந்து பார்வையிட்டனர்.
இந்துக்கள் சாட்சி சொன்னதற்காக தாக்குதல் நடத்தப் பட்டனவாம்: சையதீ குற்றாஞ்சாட்டப்பட்டதற்கே, பாதிக்கப் பட்ட இந்து குடும்பத்தவர் சாட்சி சொன்னதால் தான், அதனால் தான், ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிரரியக்கங்களைச் சேர்ந்த 250-300 பேர் அப்பகுதிகளில் வந்து அத்தகைய கொடிய செயல்களைச் செய்துள்ளனர். முகமூடிகளை அணிந்து கொண்டு, “சையதீக்கு ஏதாவது நேர்ந்தால், ஒவ்வொரு வீட்டையும் கொளுத்துவோம்”, என்று கத்திக் கொண்டே அடித்து நொறுக்கினர்.
இந்துக்களுக்கு ஏன் பாதுகாப்புத் தரப்படவில்லை?: . தீர்ப்பை ஆதரித்து கோடிக்கணகான மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் செய்திகளை விளம்பரப்படுத்தியுள்ளார்கள். பிறகு கலவரத்தில் 42-45 மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றார்கள். ஆனால், பாதிக்கப் பட்ட இந்து குடும்பத்தவர் சாட்சி சொன்னதால் தான், சையதீக்கு தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், அவர்களுக்கு, அவர்கள் குடும்பங்களுக்கு மற்றும் இந்துக்களுக்கு ஏன் பாதுகாப்புக் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி எக்ஷழுகின்றது. மேலும் போலீஸார், எல்லாம் நடந்த பிறகு வந்தனர் என்பது, போலீஸாரும் முஸ்லீம்கள், அதனால், முஸ்லீம்கள் செய்ததை ஆதரித்தது போலாகிறது.
“இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது”: இதன் அர்த்தம் என்ன? 1947ல் இந்தியா மதரீதியில் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, பலகோடி இந்துக்கள் பாகிஸ்தானிலேயே தங்கி விட்டனர். ஏனெனில் அவர்களில் பலருக்கு அந்த விஷயமே தெரியாது. அதுபோல பங்களாதேசத்தில் தங்கி விட்ட இந்த பெண்மணி கூறுகிறார். மேலும், 1971ல் பங்களாதேசம் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றபிறகு, நிலைமை சரியாகி விடும் என்று தொடர்ந்துத் தங்கியிருக்கலாம். ஆனால், பங்களாதேசமும் இஸ்லாமிய நாடாகப் பிரகடனம் செய்யப்பட்டு, இஸ்லாம் மயமாக்கல் தொடர்ந்தபோது, இத்தகைய குரூரங்கள் தொடர்ந்தன. இந்து பெண்கள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். கற்பழித்து மதமாற்றம் செய்தனர். தடுத்த, எதிர்த்த பெற்றோர்களையும் மதமாறும்படி வற்புறுத்தினர் அல்லது மறுத்தவர்களைக் கொன்றனர்.
இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!
பங்களாதேசத்தில்இஸ்லாமியத்தலைவருக்குத்தூக்குத்தண்டனை: பங்களாதேசத்தில் 1971ல் யுத்தம் நடந்தபோது, இந்தியப் படை, முக்தி வாஹினி என்ற பாகிஸ்தானிற்கு எதிராகப் போராடிய படைக்கு ஆதரவாக இருந்து, சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது. இருப்பினும், பாகிஸ்தானை ஆதரித்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்பொழுது, போர்நிலையை பயன்படுத்திக் கொண்டு, பற்பல அட்டூழியங்களைச் செய்துள்ளனர். பங்களாதேசம், இஸ்லாமிய நாடாக இருந்தாலும், இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வருகின்றானர். குறிப்பாக பாகிஸ்தான் ஆதரவாளர்களை தேசவிரோதிகளாகவே கருதுகின்றனர். இதனால், அத்தகைய போர்க் குற்றங்களை விசாரிக்க, ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப் பட்டது. அதன்படி, டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[1] விதிக்கப்பட்டுள்ளது!
ஜமாத்–இ–இஸ்லாமிதலைவர்செய்தகுற்றங்கள்: இவர் கீழ்கண்ட குற்றங்களுக்காக விசாரணைச் செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[2].
மனிதகுலத்திற்கு எதிராக பல குற்றங்களைப் புரிந்தது
பல கிராமங்களை கொள்ளையடித்தது
பலகிராமங்களை தீயிட்டுக் கொளுத்தியது
அப்பவி மக்களைக் கொன்றது
பெண்களைக் கற்பழித்தது
இந்துக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தது
அவர்களின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டது.
போர் மற்றும் போர்க்குற்றங்களில் 30,00,000 மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்[3]. அதாவது,ளாப்பொழுது கிழக்கு வங்காளம் அல்லது கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சுதந்திரம் நாடி போராடியபோது, பாகிஸ்தான் படையினர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் விடுதலைப் படைக்கு எதிராக போராடினர், மக்களைக் கொன்றனர்.
கடந்த அநீதிக்குத் தீர்வு வேண்டும் என்றால், நீதி காக்கப்படவேண்டும்: நீதிபதி ஏ.டி.எம். பஸலே கபீர் தமது எழுத்து மூலம் அளித்தத் திப்பில் அறிவித்ததாவது[4], “நீதிபதிகளாகிய நாங்கள் இந்த தண்டனை அளிக்காவிட்டால், கடந்தகால அநீதி நேர்ததற்கான பிராயச்சித்ததை நீதியாக அடையமுடியாது என்ற தத்துவத்தில் மிகவும் ஆழமான நம்பிக்கைக் கொள்கிறோம் மற்றும் கொண்டிருக்கிறோம்”. நீதி எனும்போது, நீதிபதிகள் நீதியில் நம்பிக்கைக் கொண்டுள்ளது தெரிகிறது. இருப்பினும், குற்றாவாளியின் வழக்கறிஞர் மேல் முறையீடு செய்வோம் என்று அறிவித்துள்ளார்.
தீவிவாத அமைப்புகளுடன் தொடர்பு: இந்த இஸ்லாமிய இயக்கம், பாகிஸ்தானிய மற்றும் இதர தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு வேலை செடய்து வந்துள்ளது. இந்த இச்ளம்ய ஜமாத் கட்சி, முந்தைய பிரதம மந்திரியின் கட்சியான தேசியக் கட்சியுடன் சேர்ந்து அரசாட்சியிலும் பங்குக் கொண்டுள்ளது. இருப்பினும், தீவிரவாத இயக்கத் தொடர்புகளினால், பொது மக்கள் அதனை வெறுத்தொதிக்கினர்[5]. அதுமட்டுமல்லாது, அக்கட்சியின் எல்லா தலைவர்களுமே, பற்பல குற்றங்களுக்காக சிறையில் உள்ளார்கள்[6].
தொடர்ந்து நடந்த கலவரங்களில் 35 பேர் சாவு: இத்தீர்ப்பை ஆதரித்து, எதிர்த்தும் பங்களாதேசத்தில் வெளிப்படையாக பேசப்பட்டது. பலர் ஆதரித்து பொதுநிகழ்ச்சியில் பேசவும் செய்தனர். தலைநகர் டாக்காவில், சபாக் சதுக்கத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள் என்று பலர் கூடி தீர்ப்பை ஆதரித்து முழக்கமிட்டனர். “தேசவிரோத பாகிஸ்தானிய ஆதரவாளர்கள், பாகிஸ்தானிற்கு போங்கள்ளென்று ஆர்பரித்தனர்[7]. இதனால், எதிர்க்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டத்தனர் ஆர்பாட்டத்தில், ரகளையில் ஈடுபட்டனர்[8]. இதனால் அரசு பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் 35 பேர் இறந்துள்ளனர்[9]. இறந்தவர்களில் 4 போலீஸாரும் அடங்குவர், அதில் இருவர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளனர்[10]. 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்திய முஸ்லீம்கள் இதன் மூலம் பாடம் கற்றுக் கொள்வார்களா?: இங்கு, இந்தியாவில் அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு, சென்னையிலேயே எதிர்ப்புத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். காஷ்மீர முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கவேவேண்டாம், அவனது உடலைப் பெறுவது, அடக்கம் செய்வது என்ற விஷயங்களில் இரு கட்சிகளும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், ஆளும் கட்சியினர், ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமாக செயல் பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? நாடு எனும்போது, தமது நாட்டை ஆதரிக்க முஸ்லீம்கள் ஏன் மாறுபட்டு நடக்க வேண்டும்?
[2] Prosecutors accused him of involvement in looting and burning villages, raping women and forcing members of religious minorities to convert to Islam during the war.
[4] “As judges of this tribunal, we firmly hold and believe in the doctrine that ‘justice in the future cannot be achieved unless injustice of the past is addressed,’ ” Justice A. T. M. Fazle Kabir commented in a written summary of the judgment.
[5] One of the largest Islamist parties in South Asia, Jamaat was the leading coalition partner of former Premier Khaleda Zia’s Bangaldesh Nationalist Party. It bred many terror groups but is now becoming an outcast in Bangladesh, with almost its entire top leadership behind bars on war crimes charges.
இந்திய சுதந்திரப் போரில் தியாகம் புரிந்தவர்களின் நினைவிடத்தை சூரையாடிய
வெறிக்கொண்ட முஸ்லீம் இளைஞர்கள்!
முஸ்லீம் இளைஞர்கள் வெறியுடன் அமர்ஜோதி ஜவான் நினைவகத்தை சேதப்படுத்தியது: மும்பையில் நடந்த கலவரத்தில் முஸ்லீம் இளைஞர்கள் சிறிதும் உண்மையினை உணராமல், இந்நாட்டின் தியாகிகளின் மகத்துவத்தை நினையாமல், வெறியுடன், வெறுப்புடன், காழ்ப்புடன் அமர் ஜோதி ஜவான் நினைவகத்தை கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்து சேதப்படுத்தினர்[1]. உடையாத “பைபர் கிளாஸ்” கண்ணடி பெட்டியையும் உடைத்து சூரையாடியுள்ளனர்[2]. அது மட்டுமல்லாது, அங்கு வைக்கப்பட்டிருந்த தலைகவசம் மற்றும் துப்பாக்கி முதலியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்[3]. மும்பை கார்ப்பரேஷன் அதிகாரிகள் இன்றைக்குள் அதனை சீர் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்கள், ஆனால் முடியவில்லை[4].
அத்தகைய வெறிக்குக் காரணம் என்ன – யார் அப்படி அவர்களை வெறி கொள்ள செய்தனர்?: அடுல் காம்ப்ளே என்ற “மிட்-டே” என்ற நாளிதழைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் எடுத்த புகைப்படங்களில், அந்த வெறிகொண்ட முஸ்லீம் இளைஞர்கள் பதிவாகியுள்ளார்கள். அவர்கள் செயல்படும் விதத்திலிருந்தே, அவர்கள் எந்த அளவிற்கு வெறிகொண்டுள்ளார்கள் என்பதனையறியலாம். அஜ்மல் கசாப் போன்று ஆக்ரோஷமாக உள்ளான் என்று பார்த்தவர்களே கூறுகிறார்கள்[5]. அந்த அளவிற்கு முஸ்லீம் இளைஞர்களை வெறிகொள்ளச் செய்வது யார்? நாட்டின் மேன்மையை, வீரர்கள் சுதந்திரத்திற்காகத் தியாகம் புரிந்தத்தையும் அறியாமல் அப்படி கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்துள்ளார்கள் என்றால் அந்நிலை மாறவேண்டும். அவர்கள் திருந்த வேண்டும், தம்முடைய நாட்டைப் பற்றிப் புரிந்து கொள்ளவேண்டும்.
அமர்ஜோதி ஜவான் நினைவகம் உருவாகிய வரலாறு: அமர் ஜோதி ஜவான் மெமோரியல் – அமர் ஜோதி ஜவான் நினைவகம் ட்ரில் ஹவல்தார் சய்யது ஹுஸைன் (Drill Havaldar Sayyed Hussein) மற்றும் சிப்பாய் மங்கள் சாதியா (Sepoy Mangal Cadiya) என்ற இரு இந்திய வீரர்களின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் நிறுவப்பட்டதாகும். இவ்விரு வீரர்களும் ஆங்லிலேயரை எதிர்த்து போராடி, 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் ஈடுபட்டவர்கள். 150 ஆண்டு நினைவு விழாவின் போது, 2009ல் ஆஜாத் மைதானத்தில் நிறுவப்பட்டது. அக்டோபர் 15, 1857 – தீபாவளி நாளன்று சார்லஸ் போர்ஜெட் (Charles Forjett, the then Superintendent of Police, Bombay Region) எனேஅ அப்பொழுதய கிழக்கிந்திய கம்பெனியின் போலீஸ் சூப்பிரென்டென்டின் உத்தரவு படி, கிரெக்கெட் கிளப் அருகில் உள்ள மைதானத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனால்தான், அந்த இடம் “ஆஜாத் மைதான்” சுதந்திர மைதானம் என்று அழைக்கப்பட்டது. ரவீந்தர வைகர் (Ravindra Waikar) என்பவர்தாம், அந்த நினைவிடம் அமைக்கக் காரணமாக இருந்தவர். அப்பொழுதைய கமிட்டியின் தலைவராக இருந்து, நினைவகத்தை உருவாக்கத் திட்டமிட்டார். அந்நினைவிடம் சேதப்படுத்தப் பட்டதைக் குறித்து, அவர் மிகவும் வருத்தமடைந்தார். “அச்செயல் மிகவும் அசிங்கமானது, வெட்கப்படவேண்டியது, கண்டிக்க வேண்டியது”, என்று தனது கருத்தை வெளியிட்டார்.
சேதப் படுத்தியவர்களை கைது செய்ய போலீஸார் தீவிரம்:
Mumbai Crime Branch and local police are racing against each other to nab these hoodlums, knowing whoever makes these crucial arrests will reap rich professional rewards.“Of all the miscreants, these men are the most wanted. They have hurt the sentiments of the entire nation. They must be arrested on priority,” said a senior Crime Branch official, on condition of anonymity.
An officer from Azad Maidan police station said, “In such a scenario, it is better if these men surrender before the police reach them. By giving themselves up, they would be able to avoid the wrath of the police as well as the public.”
“These photographs have been circulated among our informers. We are in constant touch with them for leads. Every policeman is on the lookout for them at present. If we manage to arrest them before Independence Day, it will be our tribute to the freedom fighters,” he added.
The photographs caused a furore in social media networks. Readers across the nation condemned the act, some even comparing the vandals to 26/11 militant Ajmal Qasab.
Confirming the report, joint commissioner of police (crime) Himanshu Roy said, “This man (top-right) has insulted the national monument of India, and arresting him is our priority. Several Muslim leaders have also condemned the act.”
மும்பை கலவரக்காரர்களிலேயே, இவ்விருவரும் தான் இந்த நாட்டின் மதிப்பையே அவமதித்துள்ளார்கள்.அவர்களை கைது செய்ய வேண்டியதுதான் எங்களது தலையாயக் கடமையாக உள்ளது, என்று மும்பை போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
ஒவ்வொரு போலீஸாரிடமும் இப்படங்கள் உள்ளதால், அவர்கள் பிடிபட்டு விடுவார்கள் என்று நம்புகிறோம்.
மேலும் அவர்களாகவே வந்து சரண்டர் ஆகிவிட்டாலும் நல்லதுதான்.
சுதந்திரத்தினத்கிற்கு முன்பாகவாது, அவனைப் பிடித்துவிட வேண்டும். அப்படி செய்தால், அது அந்த தியாக-வீரர்களுக்கு செய்யும் உயர்ந்த மரியாதையாக இருக்கும்.
இப்படங்களைப் பார்த்தவர்களும் கொதித்துப் போயுள்ளார்கள். அக்மல் கசாப்புடன் ஒப்பிட்டி, அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே போரிட்டது: இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே சத்தியாகிரகம், அஹிம்சை முறைகளில் போரிட்டார்கள். ஜின்னா போன்றவர்கள், பாகிஸ்தான் கேட்கும் வரை அவர்கள் ஒற்றுமையாகத்தான் செயல்பட்டார்கள். அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக நினைவு சின்னங்களை, இப்படி வன்முறை, வெறி, காழ்ப்பு போன்ற உணர்வுகளுடன் சூரையாடுவதே அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக – முறைகளை நிந்திப்பதாகும், அவமதிப்பதாகும், தேசவிரோதமாகும். ஆகவே, இக்கால இந்திய முஸ்லீம்கள் தங்களது பிள்ளைகளுக்கு உண்மையான சுதந்திர உணர்வுகளை ஊட்டி வளர்க்க வேண்டும். அதைவிடுத்து, “நாங்கள் முஸ்லீம்கள், நாங்கள் இந்தியர்களிடமிருந்து மாறுபட்டவர்கள், நாங்கள் பாகிஸ்தானிற்காகத்தான் ………………………………….., பாகிஸ்தான் கொடிகளை ஏந்திக் கொண்டு இந்தியாவிலேயே போராடுவோம்……………………………………………..”, என்று வளர்த்து வந்தால், இத்தகைய வெறிதான் வரும், வளரும், பாதிக்கும்.
[5] The photographs caused a furore in social media networks. Readers across the nation condemned the act, some even comparing the vandals to 26/11 militant Ajmal Qasab.
சல்மான் ரஷ்டியை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரின் – இருப்பினும் புத்தகம் வெளியிடப்பட்டது!
தேர்தல் ஜுரத்தில் காங்கிரஸ் இவ்வாறு செய்கிறதா? காங்கிரஸ் முஸ்லீம்களை தாஜாவ் செய்ய வேண்டும் என்று பலவேலைகளை செய்து வருகிறது. ராஹுல் காந்தி குல்லா போட்டுக் கொண்டு, தாடி வைத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்தாகி விட்டது. சோனியாவும் பைஜாமா குர்தா போட்டுக் கொண்டு, பிரச்சாரம் செய்து சென்று விட்டார். முல்லாயம் சிங் யாதவோ, தில்லி இமாமை கொண்டு வந்து ஆதரவைக் காட்டி விட்டார். சும்மா இருக்குமா, காங்கிரஸ், சல்மான் ருஷ்டியை அடுத்து தஸ்லிமா நஸ்ரினைப் பிடித்துக் கொண்டு விட்டது. அவரது புத்தகத்திற்கு தடை என்று ஆரம்பித்து விட்டது. புரிந்து கொண்ட முஸ்லீம்கள், புத்தக கண்காட்சி திடலுக்கு வந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். நல்ல வேளை, காங்கிரஸ் ஆட்சி நடக்காதத்தால், அவர்கள் உள்ளே அனுமதிக்கப் படவில்லை.
புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர்களையும், புத்தகங்களையும் தடை செய்வதேன்? ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ரஷ்டி கலந்துகொள்ள முடியாமல் போனதுபோன்றே, கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் புத்தக வெளியீட்டு விழா, சில அடிப்படைவாத முஸ்லீம்கள் மிரட்டலால் ரத்து செய்யப்பட்டுள்ளது[1]. “தி சாட்டானிக் வெர்சஸ்” (சாத்தானின் கவிதைகள்) என்ற புத்தகத்தை எழுதி ஆண்டுகள் பல ஆகிவிட்டபோதிலும், அதில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதாக கூறி, எழுத்தாளர் சல்மான் ரஷ்டியை இன்னமும் துரத்திக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய அமைப்பினர். அவர்களது எதிர்ப்பு காரணமாக அண்மையில் ஜெப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொள்ள முடியாமல் தனது நிகழ்ச்சியையே ரத்து செய்தார் சல்மான்.
புத்தக வெளியீட்டு விழாவிற்கு மறுப்பு / தடை: இந்நிலையில், அவரைப்போன்றே இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு ஆளானவர் பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். வங்கதேசத்திலிருந்து தப்பிவந்து இந்தியாவில் அடைக்கலமான தஸ்லிமா, இன்னமும் பகிரங்கமாக நடமாட முடியாமல் தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார். அவரது விசாவை புதுப்பிக்கக் கூட இந்திய அரசாங்கம் தயங்கியது. அதாவது, தேர்தல் ஜுரம் வந்து விட்டதால், கங்கிரஸுக்கு ஒனறும் புரியவில்லை. இந்நிலையில் அவர் எழுதிய “நிர்பஸான்” (தலைமறைவு வாழ்க்கை) என்ற அவரது 7 ஆவது அத்தியாய சுயசரிதை புத்தகத்தின் வெளியீட்டு விழா, கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 36வது புத்தக கண்காட்சியில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து வந்த மிரட்டல்கள் மற்றும் கோரிக்கைகள் காரணமாக புத்தக வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.
பிறகு எதிர்ப்புகளை மீறி, புத்தகம் வெளியிடப்பட்டது: “முதலில் அரங்கத்தில் நாற்காலிகள் இல்லை என்றார்கள், பிறகு வசதி இல்லை என்றார்கள்; பிறகு அடிப்படைவாதிகள் வெளியே எதிர்ப்பைத் தெரிவித்து நிற்கிறார்கள் என்றார்கள், கடைசியாக புத்தகம் அங்கு வெளியிட அனுமதி இல்லை என்றார்கள்”, என்று சிபானி முகர்ஜி என்ற புத்தக வெளியீட்டார் கூறினார்[2]. இத்தகவலை தஸ்லிமா, தனது ட்விட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இருந்தாலும், புத்தகம் வெளியீட்டாளர்களின் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்[3]. அதாவது, விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, மேடை / மண்டபத்திற்குவெளியே, அப்புத்தகம் வெளியிடப் பட்டது, அதனால், விற்பனைக்கும் வைக்கப் பட்டது[4]. நபரூன் பட்டாச்சார்யா என்ற எழுத்தாளர் மூலம், ஒரு புத்தக விற்பனைக் கூடத்தில் தஸ்லிமா நஸ்.ரீன் மற்றும் மனித உரிமைகள் ஆதரவாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது[5].
[2] “We had booked the auditorium but the organisers told us that it will not be available. Initially they told us that there are no chairs in the auditorium. On probing further they told us that that minority groups were protesting and had approached the city police over the release of the book. To prevent any disturbance in law and order we were asked to cancel the programme” said Shibani Mukherji, publisher, People’s Book Society, the publishers of the book series.
[4] Earlier, the Guild asked the publisher not to release the book after protests were reported from fundamentalists. Taslima’s publisher, People’s Book Society (PBS), thereafter released the autobiography outside the auditorium as a mark of protest.
லஸ்கர் தீவிரவாதத் தலைவன் இந்தியாவுடன் பேசத் தயாராம்!
26/11 தீவிரவாதத் தாக்குதல் முதலிவற்றிற்கு காரணமான லச்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன், ஹாவிட்ஸ் சய்யித் ஜம்மு-காஷ்மீரம் விஷயமாகத் தான் இந்தியாவுடன் பேசத் தயாராக உள்ளேன் என்கிறானாம்! “இந்தியாவின் மீது ஜிஹாத், காஃபிகளை ஒழிப்போம், காஷ்மீர்-ஹைதராபாத்-ஜுனாகத் முதலியவற்றை விடுவிப்போம்…………..என்று கத்திக் கொண்டிருந்த” அல் ஜஸிரா தொலைக்காட்சியில் குரல் / தொணி திடீரென்று மாறியதாம்!
Hafeez-Saeed-Mumbai-ரத்தம்
“நாங்கள் உரையாடலுக்கு என்றுமே மறுக்கவில்லை. எங்களுக்கு எதிராக அத்தகையப் பிரச்சாரம் நடக்கிறது. நாங்கள் இப்பொழுதுமே உரையாடலுக்குத் தயாராக உள்ளோம்”, என்றானாம் ஹாவிட்ஸ் சய்யித்!
ஜிஹாதியின் ஆக்ரோஷ முகம்
மொஹம்மது அஜ்மல் கஸாப், ஜமாத்-உத்-தாவாவின் தலைவன் ஹாவிட்ஸ் சய்யீதை 26/11 மூன்று நாள் தாக்குதல், குண்டு வெடிப்புகள், அப்பாவி இந்தியர்களின் பலி அனைத்திற்கும் அவனா காரனம் என்று குற்றாஞ்சாட்டியுள்ளான். ஆனால் வேடிக்கையென்னவென்றால், தனக்கு ச்டம்பந்தம் இல்லையென்று பாகிஸ்தான் நீதிமன்றத்தில் சொல்லிவிட்டானாம், அவர்களும் அதை ஒப்புக்கொண்டு விட்டுவிட்டார்களாம்!
ஆனால், ப்ரேர்னா ராய் என்ற செய்தியாளர் அல் ஜெஸீராவிடமிருந்து பெற்ற “இந்திய போலீஸாரின் கஸாப்பின் துப்பறியும் போது கிடைத்த விவரங்கள் அடங்கிய” வீடியோவை வெளியிட்டுள்ளாராம்!
ஜிஹாதின் உண்மை உருவத்தை அறியாமல், பேசுவதே போலித்தனமானது.
காஃபிர் என்று சொல்லிக் கொண்டு இந்துக்களைக் கொன்று குவித்தது, இடைக்காலத்தில் மட்டுமல்ல. அதற்குப் பிறகும், இப்பொழுதும் நடக்கிறது.
தலைவெட்டும்-ஜிஹாத்
இந்திய செக்யூலார் ஊடகங்கள் அவற்றை முழுக்க மறைத்து விடுகின்றன. லட்சக் கணக்கான இந்துக்கள் தமது வீடுகளை மற்றும் சொத்துகளை விட்டுவிட்டு ஓடிவந்து அகதிகளாக டில்லியில் துணிவீடுகளில் வாழ்வது எதற்காக?
அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?
தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் பலர் இந்திய ராணுவத்தில் வேலை செய்கின்றனர். அவர்களில் பலர் காஷ்மீரத்தில், இந்திய எல்லைப்புறங்களில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கும் தெரியும் உண்மை என்னவென்று!
இந்திய வீரர்கள் அல்லது இந்தியர்கள் அதாவது இந்துக்கள் கொலைசெய்யப்பட்டால், அவர்களது ஆண் உறுப்பை அறுத்து அவர்களின் வாய்களில் சொருகியுள்ள நிலையில் பிணங்கள் கிடக்குமாம்! அதாவது, “நீங்கள் இதர்குதான் லாயக்கு”, என்ற ரீதியில் உணர்த்த அவ்வாறு செய்வார்களாம்!
இந்நிலையில்தான் பேசுகிறார்கள், சுயயாட்சி, மாநில சுயயாட்சி, காஷ்மீரத்திற்கு முதலியவைப் பற்றி. வக்காலத்து வாங்குவது இத்தகைய பிரிவினைவாதிகளுக்குத் தான்!!
வங்க பந்து என்று அன்பாக அழைக்கப் பட்டவர், ஷேக் முஜிபுர் ரஹ்மான்.
ஒரு பெரிய பிரதேசமாக இருந்த வங்காளத்தை ஆங்கிலேயர்கள் 1909ல் கிழக்கு மற்றும் மேற்கு என்று இரண்டாகப்பிரித்தனர்.
பங்க பந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான்
மார்ச் மாதம் 9, 1969 ராவல்பிண்டியில் முதல் வட்டமேஜை மாநாடு கலந்துகொள்ளும் முன்பு
ஜனவரி 1960ல் அகர்தலா வழக்கு பற்றி விசாரிக்க செல்லும் போது
மார்ச் 7, 1971 வங்கதேசம் பிரகடனம் பற்றி பேசியபோது
1970ல் தேர்தல் பிரச்சாரத்தின்போது
1971ல் பொது தேர்தல் தள்ளிவைத்த்தினால் மக்கள் போராட்டத்தில் இறங்கினர்
பதவியேற்றா வங்க பந்து
Bangabandhu
சந்தோஷ புன்சிரிப்புடன்
புன்முறுவலுடன்!
பக்கிங்காம் அரண்மனையில், ராணி எலிஸபெத்துடன்
இந்திரா காந்தியை வழியனுப்பி
வைத்தல் (முதல் விஜயம்)
ஜனவரி 12, 1972 அன்று பிரதம மந்திரியாக பிரமாணம் எடுத்தபோது
ஜனவரி 10, 1972 அன்று டாகா விமானநிலையித்தல் அவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டபோது.
பங்க பந்து அரசியல் நிர்ணய சட்டத்தில் கையெழுத்திட்டபோது
பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலைக்குப் பிறகு, ஜனவரி 1972ல், ஹீத்ரோ விமானநிலைத்தில் எட்வர்ட் ஹீத் – இங்கிலாந்து பிரதமரால் வரவெற்றபோது
குவைத் அமீருடன்
முதன்முதலாக ஐக்கிய நாட்டு சபையில் பேசுவது
அவாமி லீக் மாநாட்டில் பேசுவது
ஏழைகளுக்கு ஆதரவு!
தந்தை ஷேக் லுஃப்தர் ரஹ்மான் மற்றும் தாயார் சஹாரா கதுன் உடன்
தனது குடும்பத்துடன்
குடும்பத்துடன் உணவு அருந்துவது
ஆகஸ்ட் 15, 1975 அன்று தனது குடும்ப அங்கத்தினருடன் தேசவிரோத ராணுவத்தினர் சிலரால் கொலையுண்டபோது.
மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என ஒன்றாக இருந்த அவர்களை மக்களை – மதம் என்றரீதியில் வைத்துதான் அவர்கள் அவ்வாறு இரண்டாகப் பிரித்து பிரிவினைக்கு வித்திட்டனர்.
ஆனால், அந்த மதமே அவர்களை ஒன்றாக வைத்திரிக்கமுடியவில்லை!
பற்பல போராட்டங்களுக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தானிடமிருந்து விடுதலைப் பெற்று ‘வங்காள தேசம்” ஆகியது!
ஆனால், ராணுவத்தினர் சிலர், தாமே ஆளவேண்டும் என்ற எண்ணமோங்க, பங்க பந்து ஆகஸ்ட் 15, 1975 அன்று திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டார்.
அந்த கொலையாளிகள் தாம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது தூக்கிலப் பட்டனர்.
இருப்பினும், கொலையாளிகளின் மனைவி ஒருத்தி சொல்கிறாள், “எனது கணவன் ஷஹீத்“, என்று!
அண்மைய பின்னூட்டங்கள்