இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!
இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!
பங்களாதேசத்தில்இஸ்லாமியத்தலைவருக்குத்தூக்குத்தண்டனை: பங்களாதேசத்தில் 1971ல் யுத்தம் நடந்தபோது, இந்தியப் படை, முக்தி வாஹினி என்ற பாகிஸ்தானிற்கு எதிராகப் போராடிய படைக்கு ஆதரவாக இருந்து, சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது. இருப்பினும், பாகிஸ்தானை ஆதரித்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்பொழுது, போர்நிலையை பயன்படுத்திக் கொண்டு, பற்பல அட்டூழியங்களைச் செய்துள்ளனர். பங்களாதேசம், இஸ்லாமிய நாடாக இருந்தாலும், இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வருகின்றானர். குறிப்பாக பாகிஸ்தான் ஆதரவாளர்களை தேசவிரோதிகளாகவே கருதுகின்றனர். இதனால், அத்தகைய போர்க் குற்றங்களை விசாரிக்க, ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப் பட்டது. அதன்படி, டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[1] விதிக்கப்பட்டுள்ளது!
ஜமாத்–இ–இஸ்லாமிதலைவர்செய்தகுற்றங்கள்: இவர் கீழ்கண்ட குற்றங்களுக்காக விசாரணைச் செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[2].
- மனிதகுலத்திற்கு எதிராக பல குற்றங்களைப் புரிந்தது
- பல கிராமங்களை கொள்ளையடித்தது
- பலகிராமங்களை தீயிட்டுக் கொளுத்தியது
- அப்பவி மக்களைக் கொன்றது
- பெண்களைக் கற்பழித்தது
- இந்துக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தது
- அவர்களின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டது.
போர் மற்றும் போர்க்குற்றங்களில் 30,00,000 மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்[3]. அதாவது,ளாப்பொழுது கிழக்கு வங்காளம் அல்லது கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சுதந்திரம் நாடி போராடியபோது, பாகிஸ்தான் படையினர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் விடுதலைப் படைக்கு எதிராக போராடினர், மக்களைக் கொன்றனர்.
கடந்த அநீதிக்குத் தீர்வு வேண்டும் என்றால், நீதி காக்கப்படவேண்டும்: நீதிபதி ஏ.டி.எம். பஸலே கபீர் தமது எழுத்து மூலம் அளித்தத் திப்பில் அறிவித்ததாவது[4], “நீதிபதிகளாகிய நாங்கள் இந்த தண்டனை அளிக்காவிட்டால், கடந்தகால அநீதி நேர்ததற்கான பிராயச்சித்ததை நீதியாக அடையமுடியாது என்ற தத்துவத்தில் மிகவும் ஆழமான நம்பிக்கைக் கொள்கிறோம் மற்றும் கொண்டிருக்கிறோம்”. நீதி எனும்போது, நீதிபதிகள் நீதியில் நம்பிக்கைக் கொண்டுள்ளது தெரிகிறது. இருப்பினும், குற்றாவாளியின் வழக்கறிஞர் மேல் முறையீடு செய்வோம் என்று அறிவித்துள்ளார்.
தீவிவாத அமைப்புகளுடன் தொடர்பு: இந்த இஸ்லாமிய இயக்கம், பாகிஸ்தானிய மற்றும் இதர தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு வேலை செடய்து வந்துள்ளது. இந்த இச்ளம்ய ஜமாத் கட்சி, முந்தைய பிரதம மந்திரியின் கட்சியான தேசியக் கட்சியுடன் சேர்ந்து அரசாட்சியிலும் பங்குக் கொண்டுள்ளது. இருப்பினும், தீவிரவாத இயக்கத் தொடர்புகளினால், பொது மக்கள் அதனை வெறுத்தொதிக்கினர்[5]. அதுமட்டுமல்லாது, அக்கட்சியின் எல்லா தலைவர்களுமே, பற்பல குற்றங்களுக்காக சிறையில் உள்ளார்கள்[6].
தொடர்ந்து நடந்த கலவரங்களில் 35 பேர் சாவு: இத்தீர்ப்பை ஆதரித்து, எதிர்த்தும் பங்களாதேசத்தில் வெளிப்படையாக பேசப்பட்டது. பலர் ஆதரித்து பொதுநிகழ்ச்சியில் பேசவும் செய்தனர். தலைநகர் டாக்காவில், சபாக் சதுக்கத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள் என்று பலர் கூடி தீர்ப்பை ஆதரித்து முழக்கமிட்டனர். “தேசவிரோத பாகிஸ்தானிய ஆதரவாளர்கள், பாகிஸ்தானிற்கு போங்கள்ளென்று ஆர்பரித்தனர்[7]. இதனால், எதிர்க்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டத்தனர் ஆர்பாட்டத்தில், ரகளையில் ஈடுபட்டனர்[8]. இதனால் அரசு பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் 35 பேர் இறந்துள்ளனர்[9]. இறந்தவர்களில் 4 போலீஸாரும் அடங்குவர், அதில் இருவர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளனர்[10]. 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்திய முஸ்லீம்கள் இதன் மூலம் பாடம் கற்றுக் கொள்வார்களா?: இங்கு, இந்தியாவில் அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு, சென்னையிலேயே எதிர்ப்புத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். காஷ்மீர முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கவேவேண்டாம், அவனது உடலைப் பெறுவது, அடக்கம் செய்வது என்ற விஷயங்களில் இரு கட்சிகளும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், ஆளும் கட்சியினர், ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமாக செயல் பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? நாடு எனும்போது, தமது நாட்டை ஆதரிக்க முஸ்லீம்கள் ஏன் மாறுபட்டு நடக்க வேண்டும்?
© வேதபிரகாஷ்
28-02-2013
[2] Prosecutors accused him of involvement in looting and burning villages, raping women and forcing members of religious minorities to convert to Islam during the war.
[3] http://www.upi.com/Top_News/World-News/2013/02/28/Sayeedi-guilty-of-war-crimes-in-Bangladesh/UPI-42511362056195/
[4] “As judges of this tribunal, we firmly hold and believe in the doctrine that ‘justice in the future cannot be achieved unless injustice of the past is addressed,’ ” Justice A. T. M. Fazle Kabir commented in a written summary of the judgment.
[5] One of the largest Islamist parties in South Asia, Jamaat was the leading coalition partner of former Premier Khaleda Zia’s Bangaldesh Nationalist Party. It bred many terror groups but is now becoming an outcast in Bangladesh, with almost its entire top leadership behind bars on war crimes charges.
[6] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2286185/Shahbag-Square-cheers-change-Dhakas-young-protesters-demand-ban-extremism-death-war-criminals.html?ito=feeds-newsxml
[7] Just adjacent to the Bangbandhu medical college, and not far away from the Prime Minister’s residence, it has become home to thousands of students, doctors, artists, government officials and landless workers who have made it their abode amid chants of “phaansi” to traitors and “traitors go to Pakistan”.
http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2286185/Shahbag-Square-cheers-change-Dhakas-young-protesters-demand-ban-extremism-death-war-criminals.html?ito=feeds-newsxml
[9] Violent clashes between protesters and security forces erupted across Bangladesh on Thursday, leaving at least 35 people dead.
குறிச்சொற்கள்: 1971, 1971 யுத்தம், ஃபத்வா, அடிப்படைவாதம், அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலவரம், கிழக்கு பாகிஸ்தான், கிழக்கு வங்காளம், குண்டு வெடிப்பு, கொலை, சிறுபான்மையினர், சூடு, ஜமாத், ஜமாத்-இ-இஸ்லாம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், டாக்கா, தீவிரவாதம், பங்களாதேசம், பங்காபந்து, பயங்கரவாதம், முஜாஹித்தீன், முஜிபுர் ரஹ்மான், முஸ்லீம்கள், மேற்கு பாகிஸ்தான், மேற்கு வங்காளம், வங்காள தேசம், வங்காள மொழி, வங்காளப் பிரிவினை, வங்காளம், வங்காளம் இரண்டாகப் பிரிக்கப் பட்டது, ஷேக் முஜிபுர் ரஹ்மான்
You can comment below, or link to this permanent URL from your own site.
மார்ச் 1, 2013 இல் 11:48 முப
வங்கதேசத்தில் வன்முறை : 42 பேர் பலி
By dn, டாக்கா
First Published : 01 March 2013 11:53 AM IST
http://dinamani.com/latest_news/article1483826.ece
வங்கதேசத்தில், முக்கிய இஸ்லாமிய அரசியல் தலைவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டதை அடுத்து நிகழ்ந்த வன்முறைச் செயல்களில் 42 பேர் பலியாகினர்.
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போர் நேரத்தில் கொலை மற்றும் பாலியல் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டக் குற்றத்துக்காக ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் டெல்வார் ஹொசைன் சயீதீக்கு, அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை அறிவித்தது.
இதையடுத்து, அக்கட்சியின் உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். காவல்நிலையங்கள், அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 42 பேர் கொல்லப்பட்டனர். வங்கதேசத்தின் பல பகுதிகள் போர்க்களம் போல காட்சியளிக்கின்றன.
மார்ச் 1, 2013 இல் 11:49 முப
வங்கதேசத்தில் மரண தண்டனை தீர்ப்பை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை: 17 பேர் சாவு
பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, பெப்ரவரி 28, 8:41 PM IST
http://www.maalaimalar.com/2013/02/28204111/17-killed-in-Bangladesh-death.html
டாக்கா, பிப். 28-
பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெறுவதற்காக வங்கதேசத்தில் கடந்த 1971-ம் ஆண்டில் போராட்டம் நடைபெற்றது. இந்த சுதந்திர போரில் ஏராளமானோர் உயிரிழந்தனர். போரின்போது ஆயிரக்கணக்கான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த மனித உரிமைகள் மீறல் உள்ளிட்ட போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு கடந்த 2010-ம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனி நீதிமன்றத்தை அமைத்தார். இந்த நீதிமன்றம், போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி இரண்டு தீர்ப்புகளை ஏற்கனவே வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் துணைத்தலைவர் டெல்வார் ஹூசைன் சாயிதி மீதும் போர்க்குற்ற நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டது. அவர் விடுதலைப் போரின்போது ஏராளமான கொலைகள் செய்ததாகவும், பெண்களை பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. விசாரணையில் அவரது குற்றம் நிரூபணமானதால், அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
இதனைக் கண்டித்து அவர் சார்ந்த ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி இன்று நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இந்த அழைப்பை பெரும்பாலான அமைப்புகள் புறக்கணித்தன. இருப்பினும் முழு அடைப்பையொட்டி பல்வேறு இடங்களில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காய்பான்டா மாவட்டத்தில் ஜமாத் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒரு இடத்தில் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜமாத் ஆதரவாளர்கள் தாக்கியதில் 2 போலீஸ்காரர்கள் இறந்துள்ளனர். இச்சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
மார்ச் 11, 2013 இல் 1:05 முப
[…] [22] https://islamindia.wordpress.com/2013/03/01/bangladesh-islamic-party-leader-sentenced-to-death-for-wa… […]
மே 11, 2013 இல் 2:57 முப
[…] [9] https://islamindia.wordpress.com/2013/03/01/bangladesh-islamic-party-leader-sentenced-to-death-for-wa… […]