முருகேசனுக்கு சுன்னத் – அதாவது ஆண்குறி சதை அறுப்பு விழா!

முருகேசனுக்கு சுன்னத் – அதாவது ஆண்குறி சதை அறுப்பு விழா!

 

சுன்னத் செய்து கொண்ட முருகேசன்

முஸ்லீம் ஆட்சி திரும்பி விட்டதா? நீதிபதி கான் சொல்லி மூன்று நாட்கள்கூட ஆகவில்லை, “முஸ்லீம்கள் இந்தியாவை ஆண்டுள்ளனர், ஆளப்பட்டனர், இப்பொழுது ஆட்சியில் பங்கு கொண்டுள்ளனர்”! ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிளஸ்1 மாணவர் முருகேசனுக்கு, புதுக்கோட்டையை சேர்ந்த ராவுத்தர் என்பவர் சுன்னத் செய்ததால், அவரை அங்குள்ள இளைஞர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்[1].

sunnath-Can it be done for grown boy

sunnath-Can it be done for grown boy

சூப் கடையில் வேலை பார்த்த சிறுவனுக்கு சுன்னத்! ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் வலம்புரி. இவர் குடும்பத்துடன் தூத்துக்குடியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் முருகேசன் (17). உறவினரான சலவைத் தொழிலாளி முருகன் வீட்டில் தங்கி, ஏர்வாடி பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். தற்போது காலாண்டு விடுமுறையையொட்டி, இங்குள்ள புதுக்கோட்டையை சேர்ந்த ராவுத்தர் (30) என்பவரது சூப் கடையில் வேலை செய்து வந்தார்.

sunnath-cicumcision

sunnath-cicumcision

தர்காவில் சுன்னத் செய்வார்களா? இந்நிலையில் ராவுத்தர், தப்ஸ்[2] முழக்கத்துடன் நேற்று முருகேசனுக்கு மாலை அணிவித்து தர்காவிற்கு ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார். இதன்பின் வீட்டுக்கு அழைத்து வந்த அவர், சுன்னத் செய்பவரை வைத்து முருகேசனுக்கு சுன்னத் நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்.

circumcision

circumcision

குதிரை ஏறும் ராவுத்தனின் பெயர்[3] கொண்ட முருகேசனுக்கு ராவுத்தரின் சுன்னத்: தகவலறிந்த மாணவரின் உறவினர் முருகன், ராவுத்தர் வீட்டுக்கு சென்று பார்த்த போது, சுன்னத் செய்யப்பட்ட நிலையில் இருந்த முருகேசனை கண்டு அதிர்ச்சியடைந்தார். உறவினர்கள் ராவுத்தரை பிடித்து ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தங்கதுரையிடம் ஒப்படைத்து புகார் செய்தனர். தூத்துக்குடியில் உள்ள மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழக்கரை டி.எஸ்.பி., பெருமாள் ராமனுஜம் மாணவரிடம் விசாரணை நடத்தினார்.

சுன்னத் செய்து கொண்ட மாணவர்கூறியதாவது: முருகேசன் சொன்னதாவது, “பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க மாட்டார்கள் என்ற காரணத்திற்காக யாரிடமும் தெரிவிக்காமல் சுன்னத் செய்து கொள்ள சம்மதித்தேன், இது என்னுடைய சுய விருப்பத்தின்படி நடந்தது”, என்றார். சுன்னத் செய்து கொள்ள பெற்றோர் அனுமதி தேவையா? சுன்னத் என்ன தமாஷுக்கு செய்து கொள்கிறார்களா? 10+1 படிக்கும் போதே தமிழகத்தில் சுன்னத் மகிமை சொல்லிக் கொடுக்கப்படுகிறதா? முருகேசன் சுன்னத் செய்து கொண்டது செக்ஸ் போன்ற துர்புத்தி காரணங்களுக்கா? அந்த வயசில் யார் அத்தகைய கருத்தை மனத்தில் ஊட்டியது?


[1] தினமலர், ஏர்வாடிமாணவருக்கு “சுன்னத்’ : புதுக்கோட்டை வியாபாரி மீது புகார், அக்டோபர் 02, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=97879

[2] பறை அடித்தல், ஏர்வாடி தப்ஸ் (தப்பு – பறை வாத்தியம்) என்றே சொல்வார்கள்.

[3] அருணகிரிநாதர் முருகனை தமது பாடல்களில், “குதிரை ஏறும் ராவுத்தனே” என்று விளித்துள்ளார்!

Explore posts in the same categories: ஆண் உறுப்பு, ஆண்குறி, ஆண்குறி சதை, ஆண்குறி சதை அறுப்பு, உடலுறவு, குஞ்சி, செக்ஸ், விருத்த சேதனம்

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

6 பின்னூட்டங்கள் மேல் “முருகேசனுக்கு சுன்னத் – அதாவது ஆண்குறி சதை அறுப்பு விழா!”

  1. vedaprakash Says:

    விருத்தசேதனம் / சுன்னத்து (ஆண்குறியின் நுனித்தோலை நீக்குதல்)
    http://indg.in/health/child-health/bb5bbfbb0bc1ba4bcdba4b9abc7ba4ba9baebcd-b9abc1ba9bcdba9ba4bcdba4bc1-b86ba3bcdb95bc1bb1bbfbafbbfba9bcd-ba8bc1ba9bbfba4bcdba4bb2bc8-ba8bc0b95bcdb95bc1ba4bb2bcd

    பிறந்த ஆண்பிள்ளைகளின் ஆண்குறியின் முனையில், உறை அல்லது தொப்பி போன்ற நுனித்தோல் காணப்படும். விருத்த சேதனத்தின் போது, ஆண்குறியின் முனைப்பகுதி வெளியில் தெரியும் வண்ணமாக, நுனித்தோல் அறுவைசிகிச்சையின் மூலம் நீக்கப்படும்.

    * குழந்தை பிறந்த இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்குள் விருத்தசேதனம்/சுன்னத்து செய்வது மிக நல்லது. ஆனால் பொதுவாக இந்த முறையானது பிள்ளை பிறந்த முதல் 10 நாட்களுக்குள் செய்யப்படும். (அநேக வேலைகளில் பிறந்த 48 மணி நேரத்திற்குள்ளும் செய்யப்படும்)
    * குறைப்பிரசவத்தில் பிறந்தக் குழந்தைகள் மற்றும் உடல் நலக் குறைவு உள்ள குழந்தைளுக்கு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டப் பிறகே சுன்னத்து செய்யப்படும்
    * ஆண்குறியில் பிரச்சனை உள்ள குழந்தைகட்கு, அப்பிரச்சனை அறுவைசிகிச்சை முறையில் சரிசெய்தப் பிறகே விருத்த சேதனம் செய்யப்படுகிறது. ஏனெனில், விருத்தசேதனத்தின் போது நீக்கப்படும் நுனித்தோலானது சில சமயங்களில், குறைபாடுடன் உள்ள ஆண்குறியினைச் சரிசெய்ய பயன்படும்.

    விருத்தசேதனம் பண்ணப்பட்ட ஆண்குறியினை பராமரித்தல்

    * ஒவ்வொரு முறை குளிப்பாட்டும் போதும் பதமான சுடுதண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு கழுவவேண்டும்.
    * குழந்தைகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படுத்தாவண்ணம் அவர்களை கவனமாக பராமரிக்க வேண்டும்
    * நுனித்தோல் எடுக்கப்பட்ட இடத்தில் கட்டுப்போடப்பட்டிருப்பின் தேவையின் அடிப்படையில புதியக் கட்டினை போட்டுக்கொள்ளலாம்
    * விருத்தசேதனத்தின் போது ஏற்படும் காயம் ஆற 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும். அதுவரை அப்பகுதி ரணமாக அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படும். கீழ்க்காணும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்

    – தொடர்ந்து இரத்தக்கசிவு இருத்தல்
    – ஆண்குறியின் முனை சிவப்பாக மாறி 3 நாட்களில் இது மிகவும் மோசமாகும் போது.
    – காய்ச்சல் இருந்தால
    – நோய் தொற்று வந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டால் அதாவது சீழுடன் கூடிய சிவப்பு நிற சிறு பிளவைகள் போன்றவை இருந்தால்.
    – விருத்தசேதனம் செய்த 6 முதல் 8 மணி நேரத்திற்குள் சிறுநீர் கழிக்கவில்லை என்றால்.

  2. vedaprakash Says:

    வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசத்தில்’ , இக்கதையின் கதாநாயகர் பேயத்தேவர் தன் பேரனுக்கு ‘ மார்க்கக் கல்யாணம்’ செய்து வைப்பதாக எழுதி ‘ மார்க்கக் கல்யாணம்’ என்றால் என்னவென்று விலாவாரியாக எழுதியிருப்பார். அதொன்றுமில்லை, முஸ்லிம்கள் செய்யும் ‘சுன்னத்’ இதைத்தான் ‘ மார்க்கக் கல்யாணம்’ என எழுதியிருந்தார்.

    சுன்னத், சின்னத், சுன்னத்து, சுன்னத் கல்யாணம், கத்னா என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு பழக்கம் ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதாகும். இது யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சமயம் சார்ந்த ஒரு பழக்கமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் இதை சர்கம்சிஷன் (Circumcision) என்று சொல்கிறார்கள்.

    Edgar Thurston என்பவர் சென்னை அரசினர் அரும்பொருள்
    காப்பகத்தின் மேலாளராக இருந்தார். அத்துடன் அக்காலத்தில்
    உலகப்புகழ்வாய்ந்த சில ஆராய்ச்சிக் கழகங்களில் உறுப்பினராகவும்
    இருந்தார். அவர் தென்னிந்தியாவில் அப்போது இருந்த அனைத்து ஜாதியினரைப் பற்றியும் ஆராய்ந்து நூல்களாக எழுதியிருக்கிறார். அந்தந்த ஜாதியின் இயல்புகள், தன்மைகள், மானிடவியல், பழக்கவழக்கங்கள், மொழி, சமயம், நம்பிக்கைகள், கர்ணபரம்பரைக் கதைகள், புராணக்கதைகள், வரலாறு போன்றவற்றை மிகவும் விரிவாக எழுதியுள்ளார்.

    ‘Castes and Tribes of South India’ என்னும் தலைப்பில் 1896-ஆம் ஆண்டில் அவை வெளிவந்தன. அதற்கும் முன்னரேயே அவர் அந்த ஆய்வுகளைச் செய்திருக்கிறார். ரங்காச்சாரி என்பவர் அவருக்கு உதவியாளராக இருந்தார். மூன்றாவது வால்யூமின்
    53-ஆம் பக்கத்திலிருந்து 91-ஆம் பக்கம்வரைக்கும் கள்ளர்களைப்
    பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன.

    74-ஆம் பக்கத்தில், “It is a curious fact that the Puramalai-
    nadu Kallans practice the rite of circumscision”, என்று ஆரம்பித்து
    எப்படி அந்த சுன்னத் கல்யாணம் நடைபெறுகிறது என்பதையும்
    விளக்கியுள்ளார். சுன்னத் செய்யப்படவிருக்கும் இளைஞன் தன்னுடைய தாய் மாமனுடைய தோளில் தூக்கப்பட்டு, சுன்னத் செய்யும் இடத்திற்குக் கொண்டு செல்லப்படுவதையும், அங்கு எல்லாருக்கும் தாம்பூலம் கொடுக்கப்படுவதையும், சங்கு ஊதி, அந்தச் சடங்கு செய்யப்படுவதையும், அந்த இளைஞனுக்குப் புத்தாடை வழங்கப்படுவதையும் விவரித்திருக்கிறார்.

  3. Francis Joseph Says:

    Definitely, the youngster has been misled by the Muslims and conducted sunnath forcefully.

    In Bangladesh and Pakistan, it has been going on for the last 60-70 years.

    In fact, there have been Dabligh / Jamat groups prowling here and there to catch such youngsters under one or the other pretext.

    Either they tempt with sex, good job at the gulf countries and allure them to get circumcised!

  4. ashraf Says:

    sunni…. ponda…….. thoudiyamagan……..
    cana koothi…. vedaprakash koothi… ippadi eluthuratha nippaduda.. illana porattam panni hunna arrest pannuvom da koothi….

  5. kumar Says:

    Pongada ………… Eanna da mislim matham (கோபத்துடன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்). விமர்சனமாக இருந்தாலும், குறிப்பாக இருந்தால் நலம்.

    • vedaprakash Says:

      கோபத்துடன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். விமர்சனமாக இருந்தாலும், குறிப்பாக இருந்தால் நலம். மதநம்பிக்கைகளை குறைசொல்வது கடினம். அவற்றிற்கு காரணத்தைக் கண்டுபிடித்தால், காலம் மாறும் நிலையில் மாற்றத்திற்கு விடை காணலாம்.


பின்னூட்டமொன்றை இடுக