Archive for the ‘உடலுறவு’ category

மேலூர் மாணவி பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு, இறுதி சடங்குகள் மயானத்தில் நடத்தப் பட்டன – நாகூர் ஹனீபா எலிமருந்து கொடுத்து கொலைசெய்த வழக்கு (3)

மார்ச் 8, 2022

மேலூர் மாணவி பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு, இறுதி சடங்குகள் மயானத்தில் நடத்தப் பட்டனநாகூர் ஹனீபா எலிமருந்து கொடுத்து கொலைசெய்த வழக்கு (3)

பிரேத பரிசோதனை 06-03-2022 சிறுமி இறந்தவுடன் நடத்தப் பட்டதா இல்லையா?: சிறுமி எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை, தூண்டப்பட்ட தற்கொலை, கொலை என்றெல்லாம் விவாதத்திற்கு உட்பபடும் நிலையில், போக்சோவில் ஹனிபா கைது செய்யப் பட்டிருக்கிறான். முன்னர், மருத்துவர்களின் அறிக்கையில் சிறுமி வேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிடப் பட்டது. ஆனால், 07-03-2022 அன்று சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன[1]. அப்படியென்றால், பிரேத பரிசோதனை முன்னர் நடக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகின்றது[2]. 15-02-2022 அன்று போலீஸில் புகார் கொடுத்து, 05-03-2022 அன்று ஹனீபா கைது செய்யப் பட்டவுடன், நிச்சயமாக, போலீஸார் மற்றும் மருத்துவர்கள், சிறுமியின் உடலை பரிசோதனைக்கு (post mortem) அனுப்பியிருக்க வேண்டும், பரிசோதனை நடந்திருக்க வேண்டும். போக்சோ சட்டத்தில் பதிவான வழக்கை, அவ்வாறு சாதாரணமாக முடித்து விட முடியாது.

கைதான 8 பேர், தேடப் படும் இரண்டு பேர்: இந்த சம்பவம் தொடர்பாக கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகூர்ஹனிபா,

  1. பிரகாஷ், அவரது நண்பர்
  2.  பெருமாள் கிருஷ்ணன், அவரது நண்பர்
  3. சாகுல்ஹமீது மற்றும்
  4. மதினா, நாகூர்ஹனிபாவின் தாயார்
  5. சுல்தான் நாகூர்ஹனிபாவின் தந்தை
  6. அலாவுதீன்,
  7. ராஜாமுகமது, நாகூர்ஹனிபாவின் சகோதரர்
  8. ரம்ஜான்பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

வழக்கு பதிவுகள் மாற்றப் படுதல்: ஆரம்பத்தில், ஒரு ‘சிறுமி காணவில்லை’ வழக்கு பதிவு செய்யப்பட்டது, பின்னர் அது 143, 366 (A), 307 IPC, 5 (L), 6 போக்சோ (POCSO) வழக்காக மாற்றப்பட்டது[3]. இருப்பினும், இந்த வழக்கு மீண்டும் 302 IPC ஆக மாற்றப்பட்டது, அவளுடைய மரணத்தைத் தொடர்ந்து 307 IPC தவிர மற்ற அனைத்து பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[4]. சிறுமி நிச்சயமாக கல்யாணம் செய்து கொள்ளாமல், கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். தவிர, “கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக,” குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது 20 நாட்களில் பலமுறை நடந்திருக்கலாம், அதில் ஹனீபா மட்டும் ஈடுபட்டிருப்பதே குற்றம் தான். இவ்வாறு வழக்குப்பதிவுகள் மாற்றம் செய்ய முடியுமா, சட்டப் படி செய்ய முடியுமா என்பதெல்லாம், சாதாரண மக்களுக்கு, செய்தி பட்ப்பவர்களுக்கு தெரியாது, புரியாது. இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது, இதன் தாக்கம், முடிவு என்ன? இதனால், என்ன பாதிப்பு ஏற்படும், சிறுமியின் பெற்றோர்களுக்கு என்ன நீதி, நியாயம், பலன்கிடைக்கும் என்று தெரியவில்லை. சட்ட வல்லுனர்கள் தான், இதைப் பற்றி ஆய்ந்து  சொல்ல வேண்டும்.

பாதிக்கப் பட்ட மாணவியின் தாயார் மாவட்ட ஆட்சியாளருக்கு 05-03-2022 அன்று எழுதிய கடிதம்: பழனியப்பன் -சபரி தம்பதியினரின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்[5].  சுல்தான் என்பவரின் மகன் நாகூர் ஹனிபா அச்சிறுமியை ஏமாற்றி பல இடங்களுக்குக் கூட்டிச் சென்று உடலுறவு கொண்டுள்ளான்[6]. பிறகு, அவன் தூண்டுதலில் எலிவிசம் சாப்பிட்டதால் இறந்து விட்டாள். சிறுமி தாயார், மாவட்ட ஆட்சியாளர்க்கு 05-03-2022 அன்று எழுதியதாக, ஒரு கடித புகைப்படத்தை வெளியிட்டு, பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா முகநூலில் பதிவு செய்துள்ளார்[7]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “மேலூர் சிறுமியின் தாயார் தன் மைனர் மகள் காணவில்லை என மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் சார்லசிடம் 15/2/22ல்  புகார் செய்தும் காவல்துறையின் மெத்தனத்தால் இன்று அச்சிறுமி இறந்துள்ளார். இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. செயல்படாத காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் .  இந்த மோசமான செயலை கண்டித்தும், அச்சிறுமிக்கு நியாயம் கேட்டும் போராடும் மக்களுக்கு எதிராக தடியடி நடத்தும் காவல் துறையின் அத்துமீறிய ஒருதலை பட்சமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்,” என எச்.ராஜா தெரிவித்துள்ளார்[8].

06-03-2022ல் தும்பைப்பட்டியில் சாலை மறியல்: இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தும் மாணவியை மீட்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை, கூட்டு பாலியல் தொந்தரவில் தங்கள் மகள் இறந்ததாகப் பெற்றோர், உறவினர்கள் புகார் தெரிவித்து உடலை வாங்க மறுத்தனர்[9]. இச்சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜக, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 06-03-2022 அன்று தும்பைப்பட்டியில் சாலை மறியல் செய்தனர்[10]. இந்நிலையில் மாணவியின் உறவினர்கள், பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் மதுரை அரசுமருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறை முன்பு 0703-2022 அன்று காலை திரண்டனர். சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரேதப் பரிசோதனைக்கு பெற்றோர், உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.

07-03-2022 அன்று பிரேத பரிசோதனை நடந்தது: மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், மேலூர் ஆர்டிஓ பிர்தெளஸ் பாத்திமா முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. இது வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேசுவரா சுப்ரமணியன், பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஆம்புலன்ஸில் ஏற்றிய மாணவியின் உடலை கோரிப்பாளையம் தேவர் சிலை வழியாகக் கொண்டு செல்ல உறவினர்கள், பாஜகவினர் திட்டமிட்டனர். ஆனால் தேவர் சிலை முன்பு திடீர் சாலை மறியல் செய்யலாம் எனக் கருதி போலீஸார் மறுத்தனர். வைகை ஆறு வடகரை சாலை, ஆவின் சந்திப்பு வழியாக தும்பைப்பட்டிக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பனகல் சாலையில் மறியல் செய்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது[11]. இருப்பினும், சிறிது நேரத்துக்குப் பின்பு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலமாக வைகை வடகரை சாலை வழியாக மாணவியின் உடல் தும்பைப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது, அடக்கம் செய்யப்பட்டது[12]

©  வேதபிரகாஷ்

08-03-2022


[1] தமிழ்.ஏபிபி.லைவ், உடற்கூராய்வு செய்யப்படும் மேலூர் சிறுமியின் உடல்சொந்த கிராமத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு, By: அருண் சின்னதுரை | Updated : 07 Mar 2022 04:10 PM (IST)

[2] https://tamil.abplive.com/news/madurai/madurai-the-body-of-a-melur-girl-who-will-be-autopsied-all-shops-in-her-own-village-will-be-closed-42922

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதுரை சிறுமி மரணம்; 8 பேர் கைது: நடந்தது என்ன? போலீஸ் விளக்கம், Written by WebDesk, March 7, 2022 6:55:13 pm.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/police-explanation-on-madurai-minor-girl-death-case-421647/

[5] தமிழ்.ஏசியா.நெட், போலீஸ் மெத்தன போக்கால் பறிபோன உயிர்.. மேலூர் சிறுமி தாயாரின் பரபரப்பு புகார் கடிதத்தை வெளியிட்ட எச்.ராஜா.!, vinoth kumar, Tamil Nadu,

[6] First Published Mar 7, 2022, 6:53 AM IST.

https://tamil.asianetnews.com/politics/h-raja-who-published-the-sensational-complaint-letter-of-the-melur-girl-mother-r8cp6n

[7] மேலூர் மாணவி தாயாரின் புகார் கடிதம் வெளியிட்டு போலீசை சாடும் எச்.ராஜா,  By KATHIRAVAN T R Sun, 6 Mar 20226:13:40 PM.

[8] https://www.toptamilnews.com/thamizhagam/H-Raja-slams-police-for-releasing-letter-of-complaint-from/cid6673172.htm

[9] தமிழ்.இந்து, கடத்தி செல்லப்பட்டு இறந்த மேலூர் மாணவி உடல் பிரேத பரிசோதனை: இறுதி ஊர்வலம் தொடர்பாக பாஜகவினர் சாலை மறியல், செய்திப்பிரிவு, Published : 08 Mar 2022 07:54 AM; Last Updated : 08 Mar 2022 07:54 AM.

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/775067-melur-student.html

[11] தினதந்தி, மேலூர் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு, பதிவு: மார்ச் 08,  2022 02:47 AM.

[12] https://www.dailythanthi.com/News/Districts/2022/03/08024752/Road-block.vpf

ஆஜ்மீர் தர்காவின் இரண்டு முஸ்லிம் சாமியார்கள் நேர்த்திக்கடன் செய்ய வந்த ஒரு பெண்ணை எட்டு நாட்களாக கூட்டு கற்பழித்துள்ளனர்!

செப்ரெம்பர் 4, 2016

ஆஜ்மீர் தர்காவின் இரண்டு முஸ்லிம் சாமியார்கள் நேர்த்திக்கடன் செய்ய வந்த ஒரு பெண்ணை எட்டு நாட்களாக கூட்டு கற்பழித்துள்ளனர்!

two priests of Ajmer dargah arrested for rape 27-08-2016

ஆஜ்மீர், தர்கா, கற்பழிப்புகள்: க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டி [Khwaja Moinuddin Chiட்shty] என்ற தர்கா முஸ்லிம்களின் பிரசித்தி பெற்ற வழிபாட்டு ஸ்தலமாக இருக்கிறது. பல நாடுகளிலிருந்து முஸ்லிம் பிரமுகர்கள், பிரபலங்கள் முதலியோர் இங்கு வந்து நேர்த்திக் கடன் செய்து விட்டு போகின்றனர். ஆபாச நடிகைகள் கூட வந்து செல்கின்றனர். அயல்நாட்டவரும் சுற்றுலா ரீதியில் வந்து செல்கின்றனர். அதனால் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், கற்பழிப்புகள் முதலியவையும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏப்ரல் 2016ல் கூட தர்காவுக்கு வந்த ஒரு ஸ்பெயின் நாட்டு பெண்ணை ஒரு கும்பல் சேர்ந்து கற்பழிக்க முயன்றுள்ளனர். பிறகு, அவரது நண்பர்களால் மீட்கப்பட்டனர்[1]. பிப்ரவரி 2015லும் தர்காவில் வழிபட வந்த ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டுள்ளாள்[2]. தில்லியிலிருந்து ஆஜ்மீருக்கு வந்து, ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கி நேர்த்திக் கடன் செய்து வஎந்த வேலையில், மத்திய பிரதேசத்து நபரால் கற்பழிக்கப்பட்டாள். குற்றவாளியையை கைது செய்து, பெண்னை தில்லிக்கு அனுப்பி வைத்தனர்[3]. ஜூன் 2014லிலும் அத்தகைய கற்பழிப்பு நடந்தது[4]. அதில் சம்பந்தப்பட்டது, மூன்றாம் பாலினத்த பெண் என்பதால் போலீஸ் மெத்தனம் காட்டியதால், சி.ஐ.டி விசாரணைக்கு ஒப்படைக்கப் பட்டது[5]. தர்கா விழாக்களின் போது, இங்கு ஆயிரக்கணக்கான மூன்றாம் பாலினத்தவர் இங்கு வந்து, மகிழ்விப்பது வழக்கமாக இருக்கிறது.

Ajmer dargah - actresses come

க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டியின் காதிம்கள் கற்பழிப்பில் இறங்கியது (ஆகஸ்ட் 2016): 26-08-2016 அன்று கொல்கொத்தாவிலிருந்து வந்த ஒரு பக்தையைக் கற்பழித்ததற்காக, இரண்டு முஸ்லிம் சந்நியாசிகள்-காதிம்கள், ஆஸிம் மற்றும் சலீம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்[6]. இவ்விருவரும் சகோதரர்கள் என்றும் தெரிய வந்தது. சகோதரர்கள் இப்படி ஒரு பெண்ணை கூட்டாகக் கற்பழித்தது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி, இருவரையும் தேடுகின்றனர்[7]. அந்த பெண் எட்டு நாட்களுக்கு முன்னர் என்ற கிரிஸ்டி-சாமிக்கு நேர்த்தி கடன் செய்ய வந்து, விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தாள்[8]. அப்பொழுது தான், இவ்விருவரும் உள்ளே நுழைந்து, கதவை தாழிட்டு தன்னை கற்பழித்ததாக கூறினாள். 225-08-2016 அன்று தப்பித்து வெளியே வந்த அவள் போலீஸாரிடம் புகார் கொடுத்தாள்[9]. அதற்குள் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் குடும்பத்தினர், ஆஸிம் அவளை ஏழு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தான், பிறகு விவாகரத்து / தலாக் செய்துவிட்டான் என்றனர். மேலும், போலீஸார் கேட்டபோது, சட்டரீதியில் அக்குடும்பத்தினர் எந்த ஆவணத்தையும் கட்டமுடியவில்லை[10]. பிறகு, எதற்கு வக்காலத்து வாங்க வந்தார்கள் என்று தெரியவில்லை.

Ajmer sex scandal 2012

காதிம்கள் கூட்டுக் கற்பழிப்பில் ஈடுபடலாமா?: இங்கு காதிம் [खादिम] என்றால், க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டியின் சேவகர்கள், வேலையாட்கள், பாதுகாவலர்கள் என்று பொருள். காலபோக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தாலும், காதிம்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து வருகிறார்கள்[11]. இங்கு கூட்டம் அதிகமானால், இவர்களுக்கு வருமானமும் அதிகமாகிறது. இதனால், முன்னர் திவான் ஜைனுல் ஆபிதின் அலி கான் [ Dewan Zainul Abedin Ali Khan] பாலிவுட் ஆபாசங்கள் எல்லாம் இங்கு வரக்கூடாது, தடை விதிக்க வேண்டும் என்றபோது[12], காதிம்களின் அமைப்பு, அஞ்சுமான் கமிட்டி [Anjuman committee,representative body of khadims ]  எதிர்ப்பு தெரிவித்தது[13]. ஏனெனில், தர்காவில் ஜியாரத் [ziyarat in the dargarh] என்ற சடங்கை இவர்கள் தான் செய்வித்து வருகிறாற்கள். ஆனால், இந்த காதிம்கள் கற்பழிப்பில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், மனைவி இல்லாத ஒரு பெண்ணை மறுபடியும் கற்பழிக்க முடியுமா? அதிலும் இரண்டு காஜிக்கள், முல்லாக்கள், காதிம்கள் போன்றோர் சேர்ந்து கூட்டாகக் கற்பழிக்கலாமா? சகோதரர்களாக இருக்கும் அவர்கள் அவ்வாறு கற்பழிக்கலாமா? இப்பொழுது தலாக் பற்றி பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் போது, முஸ்லிம் சாமியார்கள் இவ்வாறெல்லாம் செய்யலாமா?

ஆஜ்மீர் செக்ஸ்

1992ம் ஆண்டு ஆல்மீர் கற்பழிப்பு: ஆஜ்மீர் என்றாலே கற்பழிப்பு என்ற நிலைவு, நிலை மற்றும் நெடிய ஒரு தீய பாரம்பரியம் 1992லிருந்து இருந்து வந்துள்ளது. 1992ல் நூற்றுக்கணக்கான பள்ளிமாணவிகளை அங்கு அழைத்து வந்து, கூட்டாக 18-பேர் கொண்ட ஒரு கும்பல் பண்ணை இல்லங்களுக்கு  வகுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்று கற்பழித்து வந்தது. அதுமட்டுமல்லாது, கற்பழிக்கும் காட்சிகளை புகைப்படம் எடுத்து வைத்து, அவர்களை மிரட்டி அத்தகைய கற்பழிப்புகள் தொடர்ந்தன. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்லக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்[14]. அரசியல்வாதிகள் சம்பந்தங்களினால் ஆறு ஆண்டுகளாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. ஒருவழியாக விசாரணை முடிந்து 1998ல் ஆஜ்மீர் மாவட்ட நீதிமன்றாம் எட்டு பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது[15].  ஆனால், அவர்கள் பிடிபடாமல் தப்பித்து வந்தனர்.

1992 Ajmer sex scandal accused arrested Rajasthan Voice

1998 முதல் 2012 வரை தப்பித்து வந்த குற்றாவாளிகள்: 1998ல் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டாலும், அவர்கள் பிடிபடவில்லை.

  1. அதில் பரூக் கிரிஸ்டி என்பவன் காங்கிரஸ் இளைஞர் அணியின் தலைவன் ஆவான். அவனுக்கு பைத்தியம் பிடித்தது என்றார்கள்.
  2. இன்னொருவன் புருசோத்தமன் 1994ல் பிணையில் விடுவித்தபோது, தற்கொலை செய்து கொண்டான் என சொல்லப்பட்டது. ஆனால், அவன், உயிரோடு இருந்தானாம்.
  3. சோஹைல் ஹனி முதலிய ஆறு பேர் காணாமல் போய் விட்டனர்.
  4. 2012ல் சையது சலீம் கிருஸ்டி [Saiyed Saleem Chishty, 42] பிடிக்கப்பட்டான்[16]. இவன் பங்களாதேசம் மற்றும் மும்பை போன்ற இடங்களில் மறைந்து வாழ்ந்தான். ஆஜ்மீருக்கு 2012ல் வந்தபோது பிடிபட்டான்[17].
  5. சலீம் கிரிஸ்டி, காதிம் மொஹல்லாவில் பிடிபட்டான் என்பது குறிப்பிடத் தக்கது[18].

பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

Ajmer dargah - attempted rape on Spanish woman

2004ல் உச்சநீதிமன்றம் தண்டனை குறைப்பு தீர்ப்பை தள்ளுபடி செய்தது: ராஜஸ்தான் நீதிமன்றம், ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்தது. ஆனால், 2004ல் உச்சநீதி மன்றம் அதனை தள்ளுபடி செய்தது. ஆஜ்மீர் மஹிலா சமோஹ் என்ற இயக்கம், கற்பழிக்கப் பட்ட பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியது. அப்பெண்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த இயக்கத்திற்கும் மிரட்டல்கள் இருந்ததால், தனது போராட்டங்களை நிறுத்திக் கொண்டு அமைதியானது. இப்பொழுது அவர்களின் நிலை என்ன என்பதெல்லாம் தெரியாமல் கிடக்கின்றன.

© வேதபிரகாஷ்

04-09-2016

Accused 1992 Ajmer sex scandal case arrested - Midday 2012

[1] Published on Apr 5, 2016 – A group of drunk miscreants allegedly tried to rape a Spanish tourist and beat up her friends in Ajmer in Rajasthan. The tourists were also looted. However, luckily they called up their friend, who rescued them  –  https://www.youtube.com/watch?v=jEvcPzav8FM

[2] english.pradesh18.com, Ajmer dargah tour turns tragic, minor pilgrim raped by MP man, Posted on: Feb 06, 2015 12:06 AM IST | Updated on: Feb 06, 2015 12:06 AM IST

[3] A minor girl who went to Ajmer Dargah for worship was allegedly raped by a man from Madhya Pradesh. The crime was allegedly committed in a guest house in Dargah Bazar. The pilgrim had come from Delhi to Ajmer on January 19, 2015. A case has been registered under sections of POCSO. The rape survivor moved to Delhi after the incident. Police have arrested the accused.

http://english.pradesh18.com/news/bihar/ajmer-dargah-tour-turns-tragic-minor-pilgrim-raped-by-mp-man-681681.html

[4] Indian Express, CID to probe transgender’s rape in Ajmer, Written by Sweta Dutta | Jaipur | Published:June 27, 2014 12:27 am.

[5] http://indianexpress.com/article/india/india-others/cid-to-probe-transgenders-rape-in-ajmer/

[6] Times of India, Two khadims of Ajmer Sharif Dargah face gangrape charge, TNN | Aug 27, 2016, 08.31 AM IST.

[7] http://www.india.com, Ajmer Sharif Dargah: Priest brothers accused of gangraping devotee, By Sandhya Dangwal on August 27, 2016 at 4:40 PM.

[8] http://www.india.com/news/india/ajmer-sharif-dargah-priest-brothers-accused-of-gangraping-devotee-1438898/

[9] http://timesofindia.indiatimes.com/city/ajmer/Two-khadims-of-Ajmer-Sharif-Dargah-face-gangrape-charge/articleshow/53882064.cms

[10] Meanwhile, family members of the accused have stated to police that Azim married the victim seven years ago and later they had a divorce and last week the victim again came to Ajmer but police said that no legal papers of marriage or ivorce have been produce by the family members and therefore police is looking for both the accused.

http://timesofindia.indiatimes.com/city/ajmer/Two-khadims-of-Ajmer-Sharif-Dargah-face-gangrape-charge/articleshow/53882064.cms

[11] Although the Khadims have faced a number of revolutions and changes of Government, but under all circumstances and worst political upheavals they kept themselves attached to the Shrine and performed all their traditional duties and services.http://dargahajmer.com/descendent-khadims/

[12] Indian Express, B’wood obscenity: Ajmer Dargah caretakers slam dewan’s star ban demand, Written by Agencies | Jaipur | Published:July 23, 2012 7:36 pm

[13] http://indianexpress.com/article/entertainment/entertainment-others/bwood-obscenity-ajmer-dargah-caretakers-slam-dewans-star-ban-demand/

[14] http://news.outlookindia.com/items.aspx?artid=746397

[15] http://www.thaindian.com/newsportal/uncategorized/accused-in-1992-ajmer-sex-scandal-case-arrested_100588267.html

[16] Mid-day, Accused in 1992 Ajmer sex scandal case arrested, January 04, 2012, Jaipur

[17] http://archive.mid-day.com/news/2012/jan/041211-Accused-in-1992-Ajmer-sex-scandal-case-arrested.htm

[18] http://icarelive.com/news/news.php?cat_id=1&article_id=34444

சைராபேகம்-அஃபக் ஹுஸைன் தம்பதியர் நடத்திய விபச்சாரம் – 5,000 சிறுமிகள்-பெண்கள் வியாபாரம், கோடிகளில் வருமானம்!

செப்ரெம்பர் 1, 2016

சைராபேகம்அஃபக் ஹுஸைன் தம்பதியர் நடத்திய விபச்சாரம் – 5,000 சிறுமிகள்பெண்கள் வியாபாரம், கோடிகளில் வருமானம்!

G.B-Road-Delhiதில்லியில் நடக்கும் பலான தொழில்: தலைநகர் தில்லி பல்லாண்டுகளாகவே குழந்தை மற்றும் பெண்கள் கடத்தும் வேலைகளுக்கு மையாமாக இருந்து வருகிறது[1]. உலகத்தில் நடக்கும் இந்த கொடூரத் தொழிலில் சுமார் மூன்று கோடி / 30 மில்லியன் குழந்தை மற்றும் பெண்கள் இங்கிருந்துதான் கிடைக்கின்றன[2]. உலகத்திலிருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் தினமும் வந்து செல்வதால், விபச்சாரம் பல வடிவங்களில், மாறுபட்ட நிலைகளில், வெவ்வேறுவிதமான இடங்களில் நடைப்பெற்று வருகின்றது. இப்படி பல்லாண்டுகளாக நடைப்பெற்று வருவதால், இதில் அர்சியல்வாதிகள், போலீஸார் என அனைவரின் தொடர்புகளும் தெரிகின்றன. இப்பொழுது, ஏதோ இத்தம்பதியர் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டனர் போலும்.

Deccan Herald photo - Delhi arrestசின்டிகேட் விவகாரம் தெரிய வந்தது: டில்லியை அதிர வைத்த குழந்தை கடத்தல் கும்பலை, போலீசார் கைது செய்தனர். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. பிப்ரவரி 2016ல் கூட, ஸ்வரூப் நகர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை, பைக்கில் வந்த இருவர் தூக்கிச் சென்றபோது, போலீஸார், அவளை மீட்டனர்[3]. இதுதவிர 10 பேர் (இரு பெண்கள் உட்பட) இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். ஒரு வருடமாக இத்தகைய கடத்த்லில் ஈடுபட்டு வந்த இவர்களிடம் திடுக்கிடும் விவரங்கள் வெளிவந்தன. பிடிபட்டவர்களிடம் விசாரித்தபோது, தில்லியில் வேலை செய்து வரும் ஒரு சின்டிகேட்டைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன[4].

GB Road brothelசைரா பேகம்அபக் ஹுஸைன் கைது: இங்கு, சமீப காலமாகவே, அதிக அளவில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்; ஆனால், போதிய ஆதாரங்களை தேடி வந்ததால் கைது-நடவடிக்கை தாமதித்துக் கொண்டே இருந்தது. சிறிது-சிறிதாக ஆதாரங்கள் கிடைத்தவுடன், அதிரடி நடவடிக்கையில் போலீஸ் இறங்கியது. இதை விசாரித்து வந்த போலீசார், அந்த கும்பலை நேற்று சுற்றி வளைத்தனர். தம்பதியான சாயிரா பேகம் [Saira Begum 45], அஃபக் ஹுசைன்   [Afaq Hussain, 50], ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்[5]. இவர்களுக்கு உதவியாக செயல்பட்ட, மேலும் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.

அஃபக் ஹுஸைன்,- சைரா பேகம் 5000நேபாளம் முதல் தமிழகம் வரை பெண்கள் கடத்தல்அதிர்ச்சி தகவல்: இவர்களில், தம்பதியின் தலைமையில் குழந்தை கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கும்பல், அண்டை நாடான நேபாளத்தில் இருந்து, பெண் குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்துள்ளது. மேற்கு வங்கம், அசாம், ஒடிசா, ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இருந்தும் குழந்தைகள் கடத்தப்பட்டு உள்ளனர்.  இவர்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் விற்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலிருந்து, மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, கைகள் மாறுவதால், அடையாளங்களும் மாற்றப்படுகின்றன. போலி ஆவணங்கள் மூலம் இவையெல்லாம் தாராளமாக நடக்கின்றன.

Kotha no 64பெண்கள் ஏமாற்றப்படல், விற்கப்படல், விபச்சாரத்தில் தள்ளப்படல்: வேலை வாங்கித்தருதல், ஊரைச் சுற்றி காண்பித்தல், நல்ல இடத்தில் திருமணம் செய்து தருதல் போன்ற பொய்யான வாக்குருதிகளைக் கொடுத்து அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளி வாழ்க்கையினை சீரழித்துள்ளனர். அதுமட்டுமல்லாது அவர்களை அடித்து, உதைத்து, பலவிதங்களில் கொடுமை படுத்தி விபச்சாரத்தொழிலை வலுகட்டாயமாக செய்ய வைத்துள்ளனர். ரூ.1-2 லட்சங்களுக்கு அவர்களை விற்கவும் செய்தனர். பலவிதமான கஸ்டமர்களுக்கு / வாடிக்கையாளர்களுக்கு பலவிதமாக அனுபவிக்க பிடித்து வந்த சிறுமிகள், பெண்களை பலவிடங்களில் ஒளித்து வைத்தனர். அலமாரிகள், பூமிக்கடியில் உள்ள அறைகள், பெரிய பெட்டிகள், பீப்பாய்கள் போன்றவற்றில் அடைத்து வைத்தனர்[6]. அங்கேயே, சில சமயங்களை வாடிக்கையாளர்களை மகிழ்விக்க வற்புருத்தப் பட்டுள்ளனர்[7]. அந்த அளவுக்கு ஈவு-இரக்கம் இல்லாமல் நடத்தப் பட்டுள்ளனர்.

அஃபக் ஹுஸைன்,- சைரா பேகம்சைரா பேகத்தின் கதைஹைதராபாத் முதல் தில்லி வரை[8]: சைரா பேகம் தனது பெற்றோர் இறந்தவுடன் ஹைதராபாதிலிருந்து தில்லிக்கு வந்தவள். வேறெந்த வேலையும் கிடைக்காத நிலையில் கோதா எண்.58, ஜி.பி. சாலை [Kotha No. 58, GB Road] என்ற இடத்தில் விபச்சாரம் செய்ய ஆரம்பித்தாள். இப்பகுதி விபச்சாரத் தொழிலுக்கு பிரத்தி பெற்றது[9]. 1990ல் வெளிப்படையாக கூப்பிட்டு அழைத்ததால் மாட்டிக் கொண்டு, தண்டனையும் பெற்றாள். பிறகு, விபச்சாரத்தையே தொழிலாக்கிக் கொண்டாள். 2001லும் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றாள். ஆனால், வெளியே வந்ததும் மறுபடியும் தொழிலைத் தொடர்ந்தாள். இப்பகுதியில் மூன்று முதல் ஐந்து “பிராத்தல்களை” வைத்து நடத்துவாகத் தெரிகிறது. 35% தொழிலை தன் கீழ் வைத்துள்ளதாகத் தெரிகிறது[10].

அஃபக் ஹுஸைன், வயது 50. மொரதாபாத், உத்திரபிரதேசம்.அபக் ஹுஸைன் எப்படி சைராவுடன் சேர்ந்தான்?[11]: அஃபக் ஹுஸைனும் மொரதாபாத், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஏழையானதால், தில்லிக்கு வேலைத்தேடி வந்தான். ஒரு கான்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்தாலும், குறைந்த சம்பளாமே பெற்று வந்தான். இந்நிலையில் தான் 1999ல் சைராவுடன் தொடர்பு ஏற்பட்டது. அவளை 1999லேயே திருமணம் செய்து கொண்டு, இருவரும் அந்த விபச்சாரத் தொழிலை செய்ய ஆரம்பித்தனர். ஏஜென்டுகள், ஆட்டோ-கார் டிரைவர்கள், ஹோட்டல் மானேஜர்கள் என்று பலரை வைத்துக் கொண்டு தொழிலை அமோகமாக நடத்த ஆரம்பித்தனர். சைரா சிறையில் இருந்த போதும், ஹுஸைன் தொடர்ந்து அவ்வேலையை செய்து வந்தான்.

மஹாராஷ்ட்ராவின் குற்றச்சட்டத்தின் கீழ் கைது: தாங்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிந்து விட்ட நிலையில் தங்களுடைய சொத்துகளையும் வேறு பெயர்களில் மாற்றி விட்டனர். அதற்காகவே அவர்கள் பினாமி வியாபாரங்கள், ஏஜென்டுகள் என்று பலவற்றை வைத்திருக்கின்றனர். அந்நிலையில் தான், இப்பொழுது மஹாராஷ்ட்ராவின் [the Maharashtra Control of Organised Crime Act (MCOCA] குற்றச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸார் ஆகஸ்ட்.25, 2016 அன்று நடத்தப் பட்ட சோதனையில் விலையுயந்த நான்கு கார்கள் [Fortuners, Toyota Innovas, Hondas], ரூ.9 லட்சம் மற்றும் வங்கிக் கணக்குகள் முதலியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

சிறுமியர்பெண்கள் வாங்கி விற்பதில் ரூ.100 கோடி வருமானம்: பல பகுதிகளில், குழந்தையை கடத்தி விற்பவர்களிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தைகளை வாங்கி, இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம், 100 கோடி ரூபாய் வரையில் இந்த கும்பல் சம்பாதித்துள்ளது[12]. இதுவரை, 5,000 குழந்தைகளை கடத்திஉள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.ஏற்கனவே கைதானவர்கள் : குழந்தை கடத்தலில் ஈடுபட்ட அந்த தம்பதி, 1990 மற்றும் 2001ம் ஆண்டுகளில் இரண்டு முறை கைதானவர்கள். போதிய ஆதாரம் இல்லாததால், இந்த வழக்குகளில் இருந்து விடுதலை ஆகிவிட்டனர். அதன் பின்னும், தொடர்ந்து குழந்தை கடத்தலில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். தில்லியில் இவ்வளவு நடந்து வந்த விவகாரங்கள் அமுக்கியே வாசிக்கப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

01-09-2016

[1] Firstpost, Delhi is ‘hub’ of human trafficking in India , FP Staff  Oct 18, 2013 19:19 IST

[2] http://www.firstpost.com/india/delhi-is-hub-of-human-trafficking-in-india-1180501.html

[3] Police said they have also rescued a one-year-old child who was kidnapped from North-West Delhi’s Swaroop Nagar on Tuesday (02-02-2016). Two motorcycle-borne men had just swooped in on the child playing near his labourer parents and had sped away. Initially two persons were arrested in the operation that began at 8 pm on Thursday (04-02-2016). By Friday morning (05-02-2016), police had arrested 10 persons, including two women, in this connection. More arrests are likely, said Vijay Singh, DCP (North-West). The gang is learnt to be operating at least one year from now. They have already admitted to kidnapping and selling three children, the earliest being a year back from RK Puram in South Delhi. Further investigation into the racket is on.

The Hindu, Major child trafficking racket busted in Delhi, Updated: February 5, 2016 10:28 IST

[4] http://www.thehindu.com/news/cities/Delhi/major-child-trafficking-racket-busted/article8197174.ece

[5] தினமலர், 5,000 குழந்தைகளை கடத்திய கும்பல் கைது, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.30, 2016.22:11.

[6] Indiatoday, Delhi child trafficking racket busted: Girls confined in almirahs, tunnels; forced to entertain clients in cubicles, Chirag Gothi  | Posted by Yashaswani Sehrawat, New Delhi, August 30, 2016 | UPDATED 11:54 IST.

[7] http://indiatoday.intoday.in/story/delhi-trafficking-racket-kothas-gb-road-girls/1/752020.html

[8] Indiatoday, Delhi: How a former sex worker ran a child trafficking racket worth crores, Anuj Mishra |  J.V. Shivendra Srivastava  | Edited by Samrudhi Ghosh

New Delhi, August 30, 2016 | UPDATED 18:18 IST

[9] NDTV news, Sex Racket Couple Trafficked 5000, Charged Under Organised Crime Law, Delhi | Written by Tanima Biswas | Updated: August 30, 2016 21:54 IST

[10] Afaq Hussain, 50, and his wife Saira Begum, 45, kingpins at Delhi’s notorious red light area GB Road,….. They allegedly ran three brothels and owned a third of the business in the area. Five of their assistants have also been arrested.

http://www.ndtv.com/delhi-news/sex-racket-couple-trafficked-5000-charged-under-organised-crime-law-1452341

[11] http://indiatoday.intoday.in/story/delhi-prostitution-child-trafficking-racket/1/752338.html

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1596555

 

தர்காவில் இமாம் ஒரு பெண்ணை கற்பழித்தது – பேயோட்டுகிறேன் என்று கொக்கோகத்தில் ஈடுபட்ட ஹக் கையும் களவுமாக பிடிபட்டான்!

ஓகஸ்ட் 31, 2016

தர்காவில் இமாம் ஒரு பெண்ணை கற்பழித்தது – பேயோட்டுகிறேன் என்று கொக்கோகத்தில் ஈடுபட்ட ஹக் கையும் களவுமாக பிடிபட்டான்!

two priests of Ajmer dargah arrested for rape 27-08-2016தர்காக்களில் நடப்பது என்ன?: இந்தியாவில் பொதுவாக தர்காக்களுக்கு குழந்தைகளைக் கூடிச் சென்று மந்திரித்தால், குழந்தைக்கு நல்லது, எதையாவது கண்டு பயந்தது அல்லது எந்த தீய சக்தியும் அணுகாது போன்ற நம்பிக்கைகளில் அவ்வாறு செய்கின்றனர். பெண்களும் பேய்-பிசாசு பிடித்துள்ளது அல்லது அவர்கள் ஒருமாதிரி பைத்தியம் பிடித்தது போல நடந்து கொண்டால், ஏதோ கெட்டகாற்றினால், ஆவியினால் அவ்வாறு நடந்து கொள்கிறாள் மந்திரித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தர்காவுக்குக் கூட்டிச் செல்கின்றனர். தர்காக்களில் இதற்கான பிரத்யேக அறை, பூஜைசெய்ய இமாம் போன்றோர் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் சிறுமிகள், பெண்கள் முதலியோரை பாலியல் ரிதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு சீரழிக்கப் படுகின்றனர். வெளியே சொன்னால் கொன்று விடுவேன், விலக்கி வைத்து விடுவேன் என்று பயமுருத்தியே, விவகாரங்களை மறைத்து விடுகின்றனர். எப்பொழுதாவது எல்லைகளை மீறும் போது, தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாகும் போது, பொறுக்கமுடியாமல், புகார் கொடுக்கும் போது உண்மைகள் வெளிவருகின்றன. அதுபோலத்தான், பிஜ்னோர் இமாம் விசயமும் உள்ளது.

Maulana Anwarul Haq booked for rape 19-08-2016பிஜ்னோர் இமாம் மாட்டிக் கொண்டது: மௌலானா அன்வருல் ஹக் [Maulana Anwarul Haq (40)] பிஜ்னோர் நகரத்தின் தலைமை இமாமாக [head Imam of Jama Masjid in Chah Siri, Bijnor city] இருக்கிறான். அரசியல் ஆதரவும் இருப்பதால், அதே தோரணையில் உலா வந்து கொண்டிருந்த நேரத்தில் தான், ஒரு பெண் உருவில் பிரச்சினை வந்தது. ஆகஸ்ட்.19, 2016 வெள்ளிக்கிழமை அன்று அவனை சிலர் நன்றாக அடித்துள்ளனர். அதனால் தான் விவகாரம் வெளியே வந்துள்ளது. ஆகஸ்ட்.12 2016 வெள்ளிக்கிழமை அன்று கிராடாபூரைச் சேர்ந்த 30 வயதுள்ள ஒரு பெண்ணை பேய்-பிசாசை வெளியேற்றுகிறேன் என்ற சாக்கில் கற்பழித்துள்ளான்[1] என்று பிறகு தெரிய வந்தது. முதலில் பயந்த அப்பெண் பிறகு தனது கணவனிடம் நடந்ததை கூறியுள்ளாள். இதனால், அவள் கணவன் மற்றும் சிலர் அந்த இமாமை அடித்துள்ளனர்.

Maulana Anwarul Haq caught on video for rape with woman 19-08-2016தர்காவில் கற்பழித்த இமாம்: முன்னர் அக்கணவன் தன் மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது, அதனை நீக்க வேண்டும் என்று தான், இமாமிடம் தன் மனைவியைக் கூட்டிச் சென்றுள்ளான். பொதுவாக முஸ்லிம்கள் அவ்வாறு நம்பிக்கைக் கொண்டிருப்பதால், அவ்வாறு செய்துள்ளான். இமாம் அதற்கு தர்காவில் சில பரிகாரங்கள் முதலியவை செய்ய வேண்டும் என்று அவர்களை ஹரித்வாருக்கு கூட்டிச் சென்று சென்று ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளான். இமாம் அவளை ஹரித்வாரில் உள்ள கலியூர் தர்காவுக்கு [Kaliyar Sharif dargah in Haridwar] கூட்டிச் சென்று அங்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துள்ளான். பிறகு தன் கணவனுக்கு தெரிவித்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளான். இதனால், அப்பெண் விசயத்தை வெளியில் சொல்லவில்லை போலும். முஸ்லிம்கள் இப்படித்தான் உண்மைகளை மறைத்து விடுகிறார்கள் போலும்.

Maulana Anwarul Haq Imam caught on video for rape 19-08-2016ருசி கண்ட பூனை மறுபடியும் சென்றது: ருசி கண்ட பூனை சும்மாயிருக்காது என்பது போல, அந்த இமாம், மறுபடியும் அப்பெண்ணை அனுபவிக்க விரும்பினான் போலும். அதனால், ஆகஸ்ட்.19, 2016 அன்று ஹக், குர்ரம் என்ற தனது உதவியாளுடன், அப்பெண் வீட்டில் தனியாக இருக்கும் போது சென்றுள்ளான். அதாவது, பக்‌ஷிவாலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அப்பெண்ணை வருமாறு அழைத்துள்ளான்[2]. குர்ரத்தை வெளியே நிறுத்து வைத்து, உள்ளே சென்றுள்ளான். உடம்பை பரிசோதனை செய்ய வேண்டும் என்று தன்னுடைய வேலையை ஆரம்பித்துள்ளான். சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வந்தபோது, குர்ரம் அவனை உள்ளே செல்ல தடுத்துள்ளான். இதனால், சந்தேகமடைந்த கணவன், கோபத்துடன் கதவைத் தள்ளிக் கொண்டு, உள்ளே சென்றபோது, இமாம் தன் மனைவியைக் கட்டித்தழுவி சேட்டைகளை செய்து கொண்டிருந்ததைக் கண்டான். அவன் தன்னுடைய உடைகளையும் கழட்டியிருந்தான். அரை நிர்வாண கோலத்தில் இமாம் மற்றும் தன் மனைவி என்று கண்டதால், கோபத்துடன் கத்தி, விவரத்தைக் கேட்டுள்ளான். மனைவி உண்மையினை கூறினாள். இதனால், அவன் சத்தம் போட, அருகில் உள்ளவர்கள் வந்து, அவனை அடித்துள்ளனர். அடிப்பதை தடுக்கும் இமாமையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. இக்காட்சியை வீடியோ, புகைப்படமும் எடுத்துள்ளனர்[3]. இவ்வளவு நடந்தும், அவர்கள் இவ்விவகாரத்தை போலீஸில் சொல்லவில்லை.

Maulana Anwarul Haq Imam booked for rape 19-08-2016கையும் களவுமாக மாட்டிக் கொண்ட இமாம்: ஒரு இமாம், மௌலானா, முஸ்லிம் மதகுரு இவ்வளவு வக்கிரத்துடன் நடந்து கொண்டுள்ளான்[4]. ஏற்கெனவே மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததுடன், மறுபடியும், மந்திரிக்கிறேன் என்று அழைத்துள்ளான். போதாகுறைக்கு, யாரும் உள்ளே வரக்கூடாது என்று ஒரு ஆளை வேறு நிற்கவைத்துள்ளான். இதெல்லாம் அவனின் குரூர காமத்தையே வெளிப்படுத்துகிறது. இமாம் மற்றும் அப்பெண் உள்ளே இருப்பதை எல்லோரும் பார்க்கின்றனர், கணவன் விசயம்  என்ன என்று கேட்கிறான், மனைவி சொல்கிறாள், கணவன் “நீயெல்லாம் ஒரு முஸ்லிமா?” என்று கொதித்து அடிக்க ஆரம்பிக்கிறான். இவையெல்லாம் அந்த விடியோக்களில் தெரிகிறது[5]. இப்பொழுதும் கையும் களவுமாக பிடிபட்டும், அதிகாரத் தோரணையில் வாதிடுகிறான், மறுக்கிறான், திரும்பத் தாக்க முனைந்துள்ளான்[6]. போதாகுறைக்கு ஐந்தாறு பேர் வீடியோவும் எடுத்துள்ளனர்[7]. எல்லோர் முன்னிலையில், இத்தனையும் நிகழ்ந்தேறியுள்ளன[8]. பெண்களுக்கு எல்லாம் உரிமைகள் உள்ளன, தர்காவுக்குள் பென்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று இன்னொரு புறம் போராட்டம் நடைபெறுகிறது. நீதிமன்றங்கள் தலையிடுகின்றன. ஆனால் அதே நேரத்தில், தர்காக்களில் நடக்கும் இத்தகைய கற்பழிப்புகளைப் பற்றி மூச்சு விடாமல் இருப்படு வேடிக்கையாக இருக்கிறது.

Najibabad, imam caught in videoகற்பழிக்கப்பட்ட பெண், கணவன், படமெடுத்த மற்றவர் மீது பொய் புகார் கொடுத்த இமாம்: மௌலானா அன்வருல் ஹக் அப்பகுதியில் அதிகாரம் மிக்க ஆள் என்பதனால், அவர்களைக் கூப்பிட்டு மிரட்டினான். மேலும், இமாம் வீடியோ உட்பட அப்படங்களை கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்து மிரட்டியுள்ளான். ஆனால், எடுத்தவர்கள் மறுத்தனர். இதனால், ஹக் அவர்கள் மீதே போலீஸிடம் புகார் கொடுத்து, எப்.ஐ.ஆர் போட வைத்துள்ளான்[9]. அந்த கணவன் மற்றும் நான்கு நபர்கள் மீது, தன் மனைவியுடன் அவர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், ரூ.50,000/- மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாகவும் புகார் கொடுத்தான்[10]. இதற்குள் அச்சம்பவத்தைப் பற்றிய வீடியோ இணைதளங்களில் பரவ ஆரம்பித்தது. இதனால், போலீஸார் திகைத்தனர். ஏற்கெனவே கற்பழிப்புகள் அதிகமாகி, உபியில் பெருத்த சர்ச்சை கிளம்பியுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிடுப்பட்டுள்ளது. இமாம் என்றதால், தயங்கினாலும், விடீயோ ஆதாரங்கள் வெளிவந்து விட்டதால் நடவடிக்கை எடுக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது.

© வேதபிரகாஷ்

31-08-2016

Maulana Anwarul Haq Imam demanded death sentence for Kamalesh Tiwari

[1] Indian Express, Bijnor Jama Masjid imam booked for rape, Written by Manish Sahu | Lucknow | Published:August 27, 2016 12:56 am

[2] IndiaTVnews, Bijnor Jama Masjid’s head Imam booked for rape, India TV News Desk, Bijnor [Published on:27 Aug 2016, 12:03:56].

[3] Daily.Bhaskar.com, Bijnor Jama Masjid Head Imam Rapes Woman on the Pretext of ‘Rescuing Her from Evil Spirits’!, Poornima Bajwa Sharma | Aug 27, 2016, 16:25PM IST

[4] timesofahmad., India: Bijnor Jami’a Masjid imam booked for rape, Times of Ahmad | News Watch | UK deskSource/Credit: IB Times, By Asmita Sarkar | August 27, 2016.

http://www.uttarpradesh.org/uttarpradesh/bijnor-rape-police-caught-maulana-red-handed-3814/

[5] http://www.uttarpradesh.org/uttarpradesh/bijnor-rape-police-caught-maulana-red-handed-3814/

[6] http://timesofahmad.blogspot.in/2016/08/india-bijnor-jamia-masjid-imam-booked.html

[7] Z-news, What a pervert! Bijnor imam caught on camera during rape – Watch shocking video, Last Updated: Saturday, August 27, 2016 – 19:56.

[8] http://zeenews.india.com/news/uttar-pradesh/what-a-pervert-bijnor-imam-caught-on-camera-during-rape-watch-shocking-video_1923153.html

[9] http://indianexpress.com/article/cities/lucknow/bijnor-jama-masjid-imam-booked-for-rape-2998311/

[10] http://www.indiatvnews.com/news/india-bijnor-jama-masjid-s-head-imam-booked-for-rape-345516

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா?

ஓகஸ்ட் 17, 2016

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா?

அக்பர் கொலை 16-08-2016.பாத்தமுத்து

மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த மண்ணடி இரும்பு வியாபாரி அக்பர்: சென்னை மண்ணடி என்றாலே, இரும்புப் பொருட்கள், கழிவுகள் போன்றவைதான் ஞாபகம் வரும். வண்ண்டிகளால் அடைந்து கிடக்கும் தெரு, மக்கள் இப்படியும், அப்படியும் சென்று கொண்டிருக்கும் நிலை. இங்கு பெரும்பாலான வியாபாரிகள் முஸ்லிம்கள் தாம். சென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 54). இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி பாத்திமுத்து (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 16-08-2016 அன்று காலை வீட்டின் படுக்கையறையில் தொழில் அதிபர் அக்பர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்[1]. உடனே, பாத்திமுத்து சத்தம் போட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் மைத்துனர் சையதிடம் விசயத்தைக் குறினார். சையது போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்பர் பிணமாக இருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர். தொழில் அதிபர் அக்பர் வசித்து வந்த வீடு 3 மாடிகளை கொண்டது. இந்நிலையில், 3-வது மாடியில் வசித்து வந்த அக்பர் வீட்டிலேயே படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டிருப்பது மர்மமாக உள்ளது[2].

industrialist-murder-Mannady-Chennai-police-investigation_அக்பரை கொலை செய்த மனிதன் வெளியே இருந்து வரவில்லை: இரவு மர்ம நபர்கள் வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர் என்று முதலில் சொல்லப்பட்டது. அக்பர் கொலையுண்ட படுக்கையில் ரத்த கறை படிந்துள்ளது. அதனையும் போலீசார் சேகரித்துள்ளனர்[3]. படுக்கையில் இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர்[4]. கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை. அக்பரின் வீட்டில் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் யாரேனும் புகுந்து அவரை கொன்று விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது[5]. ஆனால், பிறகு வீட்டில் எதுவும் திருடப்படவில்லை என்று தெரிந்தது. வியாபார போட்டியும் இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது[6]. பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[7]. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். வீட்டில் கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது அக்பருக்கு தெரிந்த நபர்கள் அவரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது[8]. வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்தது என்றும் தெரிந்தது. மேலும், மோப்ப நாய் சோனா வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து தெரு வரை ஓடி சென்று நின்றுவிட்டது[9]. இதனால், கொலையாளி வெளியே இருந்து வரவில்லை அல்லது உள்ளேயிருந்தவர் உதவியுடன் வெளியாள் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் தீர்மானித்தனர்.

அக்பர் கொலை 16-08-2016“சென்னையில் தொழில் அதிபர் கொலை நகைபணம் கொள்ளை” என்று ஆரம்பித்து “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று முடிந்துள்ள செய்திகள்:  நேற்று, “சென்னையில் தொழில் அதிபர் கொலை நகை-பணம் கொள்ளை” என்று தான் செய்திகள் வந்தன. பிறகு, “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று செய்திகள் முடிந்துள்ளன. அதாவது, தாம்பத்திய உறசு முறைக்கு அப்பாற்பட்ட கள்ளக்காதல்-தொடர்பு தான் கொலைக்குக் காரணம் என்பது தெரிந்திருக்கிறது, இருப்பினும், “முஸ்லிம்கள் சமாச்சாரம்” என்று செய்தியாளர்கள் ஜாக்கிரதையாக இருந்து, “நகை-பணம் கொள்ளை” என்று கதையினை ஆரம்பித்து வைத்தார்கள். பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[10] என்று முன்னரே கூறப்பட்டது. பிறகு, அதனை ஏன் இன்னும் விளக்கவில்லை என்று தெரியவில்லை. கள்ளக்காதலால், மனைவி கணவனை கொலை செய்தாள், கணவன் மனைவியைக் கொலை செய்தான், ஏன் ஆட்களை வைத்தே கொலை செய்தாள் / செய்தான் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன, வந்துக் கொண்டிருக்கின்றன. அந்நிலையிலும், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய வீராங்கனைகள், மனநல வல்லுனர்கள் என்று யாரும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வழக்கம் போல ஊறுகாய் ;போடுவது எப்படி, எந்த கடையில் எந்த புடவை வாங்கலாம், லிங்கின்ஸைப் போடுவது எப்படி என்று தான் வாத-விவாதங்களை செய்து கொண்டிருந்தனர். பெண்ணிய அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை.

அக்பர் கொலை 16-08-2016.தினத்தந்திபோலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு: தூத்துக்குடி காயல்பட்டினத்தை சேர்ந்தவர் அக்பர் (50). இவர் சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள வீட்டின் 3வது மாடியில் வாடகைக்கு வசித்தார். தொழிலதிபரான இவர், மண்ணடி பகுதியிலேயே இரும்பு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பாத்திமுத்து (45). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது[11]. கள்ளக்காதலை கைவிடக்கோரி பாத்திமுத்து பலமுறை கெஞ்சியும் அக்பர் மறுத்து விட்டார். சில வாரங்களுக்கு முன்பு கள்ளக்காதலியுடன் இருந்த அக்பரை, பாத்திமுத்து கையும், களவுமாக பிடித்து எச்சரித்தார். அடித்து உதைத்தனர் என்றும் இன்னொரு ஊடகம் குறிப்பிட்டது. 15-08-2016 இரவு அன்று 12.30 மணியளவில் குடிபோதையில் வந்த அக்பரிடம், பாத்திமுத்து கள்ளக்காதலை கைவிட கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது[12].  ‘‘ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்னையும் குழந்தைகளையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் செய்வது நியாயமா’’ என்று பாத்திமுத்து அழுது புலம்பினார். ஆனால் அவரோ பாத்திமுத்துவை எட்டி உதைத்தார். பிறகு போதையில் தனது அறையில் படுத்துள்ளார்.  அவரைப் பார்க்கக் பார்க்க ஆத்திரமுற்ற பாத்திமுத்து வீட்டிலிருந்த இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து அவரது கழுத்தில் சராமாரியாக 3 முறை வெட்டியுள்ளார்[13]. மேலும் ரத்தம் கொட்டியதை பார்த்ததும் பாத்திமுத்துக்கு மயக்கம் வந்துவிட்டது. அரிவாளை துணியில் சுற்றி பீரோவுக்கு அடியில் தள்ளிவிட்டு அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு தன்னுடைய அறைக்கு சென்று தூங்கினார்.

© வேதபிரகாஷ்

17-08-2016

[1] தினத்தந்தி, கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது, பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 1:08 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 2:45 AM IST.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் தொழிலதிபர் கொலை.. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கொடூரம்!, By: Ganesh Raj, Published: Tuesday, August 16, 2016, 17:48 [IST]

[3] தினத்தந்தி, சென்னையில் தொழில் அதிபர் கொலை நகைபணம் கொள்ளை, பதிவு செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST

[4] மாலைமலர், சென்னை மண்ணடியில் தொழில் அதிபர் படுகொலை: நகைபணம் கொள்ளை?, பதிவு: ஆகஸ்ட் 16, 2016 12:03.

[5] http://www.dailythanthi.com/News/State/2016/08/16151929/Kill-the-industry-leaders-in-Chennai-5-kg-jewel-robbery.vpf

[6] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=96671

[7] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/businessman-murdered-chennai-260381.html

[9] தமிழ்முரசு, மண்ணடியில் பயங்கரம்கழுத்து அறுத்து தொழிலதிபர் படுகொலை; மனைவி, கள்ளக்காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை, 8/16/2016 . 3:33:44 PM

[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf

[11] The Times of India, Woman kills sleeping hubby, tells children to wake him up, TNN, Chennai edition, Aug 17, 2016, 04.17 AM IST.

[12] http://timesofindia.indiatimes.com/city/chennai/Woman-kills-sleeping-hubby-tells-children-to-wake-him-up/articleshow/53731735.cms

[13] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58

பாகிஸ்தான் நடிகை கொலை – ஆணவக் கொலையா, கௌரவ கொலையா, மதக்கொலையா, ஜிஹாதி கொலையா – பின்னணி என்ன?

ஜூலை 19, 2016

பாகிஸ்தான் நடிகை கொலை – ஆணவக் கொலையா, கௌரவ கொலையா, மதக்கொலையா, ஜிஹாதி கொலையா – பின்னணி என்ன?

How-qandeel-was killed by his brother

பவுசியா அஷீம், குவாந்தீல் பலூச் ஆகி, நடிகைமாடல் ஆனது: பாகிஸ்தானைச் சேர்ந்தவர் குவாந்தீல் பலூச் (26). இவரது இயற்பெயர் பவுசியா அஷீம். பாகிஸ்தானில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர். அத்துடன் மாடலிங்கிலும் ஈடுபட்டு வருகிறார். மாடலிங்கில் ஈடுபட ஆரம்பித்தவுடன் தனது பெயரை குவாந்தீல் பலூச் என்று மாற்றிக் கொண்டார். மாடலிங்கில் அவருக்கு கிடைத்த புகழை விட சமூக வலைதளங்களில் அவரால் வெளியிடப்பட்ட அவரது வீடியோக்கள் மற்றும் ஏடாகூட”செல்பி” புகைப்படங்கள் மூலம் அவரது ரசிகர் கூட்டம் பெருகியது[1]. அத்துடன் முகநூலில் வெளியிட்ட அவரது சர்ச்சைக்குரிய சுய விளம்பரம் தேடும் கருத்துக்கள் மூலமும் புகழ்பெற்றார்[2]. கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிதியை திட்டி தீர்த்து வீடியோ வெளி யிட்டார். அண்மையில் அவரது சர்ச்சைக்குரிய இசை ஆல்பம் ஒன்றும் வெளியானது. ஆனால், பழமைவாதிகளால் அவர் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தார்.

_qandeel_baloch_640x360_qandeelquebee_nocreditஇந்திய தொலைக் காட்சியின்பிக்பாஸ்ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு கொடுத்தது: சமூகவலைத்தளம் மூலம் உல களாவிய அளவில் அவர் பிரபலமானதால் இந்திய தொலைக் காட்சியின் ‘பிக்பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் நட்சத்திரங்களில் இணையத்தில் அதிகம் தேடப்படும் 10 பேரில் ஒருவராக குவான்டீல் பிரபலமடைந்தார். பழமைவாதிகள் அவருக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்தனர். இதன்காரணமாக கராச்சியில் வசித்து வந்த அவர் பாதுகாப்பு கருதி முல்தானில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அவருக்கு உடன் பிறந்த 2 சகோதரிகளும் 5 சகோதரர்களும் உள்ளனர். குவான்டீலின் சமூக வலைத்தள வாழ்க்கையை குடும்பத்தினர் விரும்பவில்லை[3]. வெளியில் பெரிய அளவில் புகழ் பெற்ற போதும் அவரது மாடலிங் தொழில் மற்றும் சமூக வலைதள நடவடிக்கைகளுக்கு அவரது குடும்பத்தார் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது.   மாடலிங் தொழிலை விட்டு விலகும்படி அவரது சகோதரர் மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்பகிறது.

qandeel-650x425முஃப்தி அப்துல் குவாயின் நிலை: அண்மையில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்தவரும், மத குருவுமான முஃப்தி அப்துல் குவாய் [member of Central Ruet-e-Hilal Committee, Mufti Abdul Qawi] என்பவருடன் செல்ஃபி எடுத்து, அதனை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்தியாவில் இத்தகைய படங்களை வைத்து, ஊடகங்கள் “இன்னொரு நித்தியானந்தா” என்றெல்லாம் விவரிப்பர். படங்களுடன் செய்திகளை வெளியிட்டு கலாட்டா செய்வர். ஆனால், இவ்விசயத்தில் அமுக்கப் பார்க்கின்றன போலும். இதனைத் தொடர்ந்து முஃப்தி அப்துல் குவாய் மத நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டது மற்றும் மத்திய ருயத்-இ-ஹிலால் கமிட்டி உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார் [4].  குவாந்தீல் இம்ரான் கானை சந்திக்க வேண்டும் என்று தன்னிடம் சொன்னதாகவும், ஆனால், அச்சந்திப்பு நிகழவில்லை என்றும் முப்தி கூறினார். ஆனால், இத்தகைய “மரியாதை கொலைகளை” இஸ்லாம் அனுமதிப்பதில்லை மற்றும் பலூச்சின் கொலையை ஷரியத்தின் படியும் நியாயப்படுத்த முடியாது என்றார்[5]. மேலும் தான் பலுச்சை நல்வழிபடுத்த அறிவுறுத்தியதாகவும், பாவம் செய்யக்கூடாது என்று போதித்ததாகவும் கூறினார்[6]. இது (பலூச்சின் கொலை) ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றார்[7]. இவரை போலீஸார் விசாரிக்க வேண்டுமா, கூடாது என்பது பற்றி மாறுபட்ட கருத்து நிலவுகிறது[8]. ஆக இறுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தான் விஞ்சியது என்றாகிறது.

Mufti Qavi removed from Ruet-e-Hilal Committee after controversial selfies with Qandeel Balochதென்னாப்பிரிக்கா, வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுகளில் வேலை செய்தது (2007-2012): பௌசியா ஆஸீம் மார்ச்.1, 1990ல் பிறந்தாள். 2003-04ல் 14 வயதில் எட்டாவது படிக்கும் போதே, ஒரு பையனை காதலித்தாள், ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ள நினைத்தாள், ஆனால் நடக்கவில்லை, அவன் ஏமாற்றி விட்டான் என்றெல்லாம் பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகின்றன[9]. இதனால், தான் தனித்து இருக்க விரும்பினாள். அந்த ஏமாற்றம் திருப்பு முனையாக அமைந்தது. ஒரு பேருந்து கம்பெனியில் சேர்ந்து வேலை செய்தாள். 2007ல், அதாவது 17 வயதில் தென்னாப்பிரிக்காவுக்கு தைரியமாக சென்று வேலைக்கு சென்றாள். பிறகு, வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வேலை செய்துள்ளாள். அப்படியென்றால், அவளுக்கு அந்த அளவுக்கு துணொவும், தைரியமும் இருந்திருக்க வேண்டும். யாராவது உதவினார்களா போன்ற விவரங்கள் தெரியவில்லை. பிறகு தான் பாகிஸ்தானுக்கு வந்து நடிப்பு மூலம் தனது திறமைகளை வெளிகாட்டத் தீர்மானித்தாள்[10]. அப்படியென்றால், பத்தாண்டுகளில் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள், உழைத்திருப்பாள் என்பதை கவனிக்க வேண்டும். 2013க்குப் பிறகு தான் அவள் பிரபலமடைந்தாள். வழக்கம் போல தமிழ் ஊடகங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “நிர்வாண சவால் புகழ் பாகிஸ்தான் மாடல் கொலை!” என்று தலைப்பிட்டுதான் செய்திகளை வெளியிட்டுள்ளன.

Bloch husband and m-in-Lகாதல் போல, திருமணமும் தோல்வியில் முடிந்தது (2008-09): குவான்டிலுக்கு 17 வயதிலேயே அவரது பெற்றோர் ஆஷிக் ஹுஸைன் என்பவருக்கு திருமணம் 2008ல் செய்து வைத்தனர்[11]. 2009ல் ஒரு குழந்தை பிறந்தது. ஒரு வருடத்திலேயே அந்த பந்தம் முறிவுக்கு வந்தது. அது ஒரு காதல் திருமணம், பலூச் தனக்கு காதல் கடிதங்களை ரத்ததினால் எழுதினாள் என்றெல்லாம் அவர் சொன்னார்[12]. அவள் தனக்கு பங்களா வேண்டும் என்றெல்லாம் கேட்ட்டாள், அவளுக்காக தான் அதிகமாக செலவிழக்க வேண்டியிருந்தது என்றெல்லாம் குற்றஞ்சாட்டினார். அவளே பல நாடுகளுக்குச் சென்று வேலை செய்து சம்பாதித்துள்ளாள் எனும் போது, கணவனிடம் ஏன் பணம் கேட்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. அவர் மேலும், பலூச் மூன்று திருமணங்கள் செய்து கொண்டால் என்றும் கூறினார்[13]. தினம் தினம் தன்னை கணவர் அடித்து சித்ரவதை செய்ததாக குவான்டில் கூறியுள்ளார்[14]. சீறிய வயதான, அழகான மனைவியுடன் அவரால் வாழ முடியவில்லை என்றால், அவர் மீது ஏதோ தவறுள்ளது என்ற் தெரிகிறது. அவருடன் குடும்பம் நடத்த முடியாமல், குழந்தையுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள தாரூல் அமானில் போய் அகதியாக வாழ்க்கை நடத்தி வந்தார். பின்னர் தாய்நாடு திரும்பிய குவான்டில், அடிக்கடி சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்டு வந்தார்[15].

Bloch husband and son17லிருந்து 26 வயதில் மூன்று திருமணம் செய்து கொண்டு, ஒரு பையனைப் பெற்ற நடிகை: தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான்கானை காதலிப் பதாகவும் அவரை திருமணம் செய்ய காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் குவான்டீல் பகிரங்கமாக அறிவித்தார். இதனிடையே குவான்டீலுக்கு ஏற்கெனவே 3 முறை திருமணமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து அவர் கூறியபோது பெற்றோர் வற்புறுத் தலால் இளம் வயதில் கட்டாய திருமணம் செய்து விவகாரத்து பெற்றுவிட்டதாகக் தெரிவித்தார். அவருக்கு 7 வயதில் ஒரு மகன் இருப்பதையும் ஒப்புக்கொண்டார்[16]. இதெல்லாம் வழக்கம் போல, பிரபலமடைய அவள் கடைபிடித்த யுக்திகள் என்றே தோன்றுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று உள்துறை அமைச்சர் மற்றும் டி.எஸ்.பியிடம் புகார் கொடுத்திருந்தார்[17]. ஆனால், அரசு நிச்சயமாக கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.

© வேதபிரகாஷ்

19-07-2016

Qandeel Baloch with her ex-husband Aashiq Hussain

[1] https://www.facebook.com/OfficialQandeelBaloch/

[2] தினமணி, பாகிஸ்தான் மாடல் அழகியைகவுரவக் கொலைசெய்த சகோதரர் கைது, By DN, முல்தான், First Published : 17 July 2016 02:35

[3]http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D/article8859718.ece

[4] விகடன், நிர்வாண சவால் புகழ் பாகிஸ்தான் மாடல் கொலை!, Posted Date : 13:46 (16/07/2016).

[5] Earlier today, Qawi said that neither Islam permits killing for ‘honour’ nor Qandeel Baloch’s murder could be justified through sharia. While talking to the media in a mosque in Multan’s Qadeerabad, Qawi said that none could justify murder for ‘honour’ of the family in light of Islam and murderer Wasim should be punished.

http://dunyanews.tv/en/Pakistan/345483-Police-decide-to-interrogate-Mufti-Qawi-in-Qandeel

[6] easternmirrornagaland.com, Qandeel Baloch’s murder a lesson for others: Mufti Abdul Qawi, By PTI  /  July 18, 2016.

[7] http://www.easternmirrornagaland.com/qandeel-balochs-murder-a-lesson-for-others-mufti-abdul-qawi/

[8]  Dunya News, Police decide to interrogate Mufti Qawi in Qandeel Baloch murder case,  Last Updated On 18 July,2016 03:53 pm

[9] http://en.dailypakistan.com.pk/pakistan/qandeel-balochs-another-husband-with-son-come-forward-model-claims-it-was-forced-marriage/

[10] Back in 2003-04, when she was still in the eighth grade, she fell in love with a boy and they both decided to elope together. Unfortunately, the day Fouzia fled her home the boy she was in love with ditched her. This betrayal marked a turning point in the model’s life who then decided to become completely self-reliant in life. She joined a bus transport company as a hostess and braved the grim challenges of life. Back then, she was reportedly in touch with her family. However, she later decided to move on with her life and joined show business with a new name Qandeel Baloch. In 2007, she went to South Africa to earn money for herself. She later worked in the Middle East and various European countries before opting to return back to Pakistan to work on her acting skills.

http://en.dailypakistan.com.pk/pakistan/qandeel-balochs-another-husband-with-son-come-forward-model-claims-it-was-forced-marriage/

[11] The Express Tribune, Plot thickens: Qandeel Baloch was once married and has a son, By News Desk, Published: July 14, 2016

[12] Daily Pakistan Global, Qandeel Baloch married thrice, not twice, claims ex-husband, Khurram Shahzad, July 14, 2016 8:41 pm

[13] http://en.dailypakistan.com.pk/pakistan/qandeel-baloch-married-thrice-not-twice-claims-ex-husband/

[14] http://tribune.com.pk/story/1141469/plot-thickens-qandeel-baloch-married-son/

[15] http://www.vikatan.com/news/world/66243-pakistani-model-qandeel-baloch-killed.art

[16] தி.இந்து, பாகிஸ்தான் நடிகை கவுரவ கொலை: இந்திய கிரிக்கெட் அணிக்கு சவால் விடுத்தவர், Published: July 16, 2016 16:06 ISTUpdated: July 17, 2016 11:43 IST.

[17] Weeks before her murder, however, Qandeel had notified the Interior Minister and Senior Superintendent of Police in Islamabad about the threatening calls she had been receiving, and had requested security.

http://www.catchnews.com/world-news/why-the-qandeel-baloch-story-reveals-society-s-darker-side-1468839244.html/2

பர்வீன்-பைசூல் விவகாரம் – போலீசாருக்கு குழப்பமாம், ஊடகக்காரகள் தெளிவாக இருக்கிறார்களாம்!

ஜனவரி 8, 2014

பர்வீன்-பைசூல் விவகாரம் – போலீசாருக்கு குழப்பமாம், ஊடகக்காரகள் தெளிவாக இருக்கிறார்களாம்!

பைசூலின்  மீது  மறுபடியும்  புகார்: இந்த நிலையில், 30-12-2013 அன்று பகலில் நடிகை ராதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புதிய புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில், பைசூல் மீது கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெறவில்லை என்றும், தன்னை கடத்திச்சென்று, மகாபலிபுரத்தில் ஒரு லாட்ஜில் சிறை வைத்து அடித்து துன்புறுத்தி, மிரட்டியதால் புகாரை வாபஸ் பெற்றேன் என்றும், பைசூல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்[1].  புகாரில் ராதா கூறியதாவது: பைசூல் என்னுடன் 6 வருடம் குடும்பம் நடத்தினார். திடீரென என்னை வீட்டைவிட்டு துரத்தி விட்டு, என் பணத்தையும் பறித்துக் கொண்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தேன். கடந்த 18ம் தேதி பைசூலின் உறவினர்  மாலிக், மற்றும் அவருடைய சகோதரர் ரஹ்மான் ஆகியோர் என் வீட்டுக்கு ஆசிட்டுடன் வந்தனர்[2].

புகார்  வாபஸ்  பெற  வேண்டும்,    இல்லையென்றால்  ஆசிட்  வீசி  கொன்று   விடுவோம்  என்று   மிரட்டல்: பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும், இல்லையென்றால் உன் முகத்தில் ஆசிட் வீசி கொன்று விடுவோம் என, மிரட்டினர். இதை தொடர்ந்து, உயிருக்கு பயந்து நானும் புகாரை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தேன். பின்னர், கத்தி முனையில் என்னை காவல் நிலையத்துக்குஅழைத்துச் சென்று வழக்கை வாபஸ் பெற வைத்தனர். மேலும், என்னை காரில் ஏற்றிக் கொண்டு, பைசூல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரும் என்னை தொடர்ந்து மிரட்டியதுடன், காவல்துறையில் எனக்கு செல்வாக்கு உள்ளது, உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறினார்.

போலீஸ் பாதுகாப்பு வேண்டும்: என்னிடம் ஆள் பலமும், பண பலமும் உள்ளது. உடனடியாக ஊரை காலிசெய்துவிடு என தொடர்ந்து மிரட்டினார். உயிருக்கு பயந்து அவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நானும், சரி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். தற்போது என் உயிருக்கும், உடமைக்கும், ஆபத்து உள்ளது எனவே, போலீசார் எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து, பைசூலை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்[3].

போலீசாரைகுழப்பத்தில்ஆழ்த்திஇருக்கிறது: அவர் திடீரென்று இதுபோல் அதிரடி பல்டி அடித்து மீண்டும் ஒரு புகார் கொடுத்துள்ளது, போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பாவம், தமிழ் ஊடகப் புலிகளுக்கு மட்டும் குழப்பமே இல்லாமல் தெளிவாக இருக்கீறார்கள் போலும். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலும், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் நின்று கொண்டே இருந்தார். ஒருவேளை உட்காருவதற்கறொன்றும் இல்லை போலிருக்கிறது. இந்த விஷயத்தில் அடுத்தகட்டமாக உயர் போலீஸ் அதிகாரிகளை கலந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வடபழனி போலீசார் கூறினார்கள்[4]. ஆமாம், இவ்விசயங்களுக்கு எல்லாம் இப்படி போலீஸ் சேவை சீரழிக்க வேண்டிய நிலையில் இருக்க வேண்டும் போலிருக்கிறது.

வேதபிரகாஷ்

© 08-01-2014


[3] தினகரன், பைசூல்மீதுநடிகைராதாமீண்டும்புகார் – முகத்தில்ஆசிட்வீசுவதாககூறிமிரட்டிவழக்கைவாபஸ்பெறவைத்தனர், 31-12-2013.

[4] மாலைமலர், தொழில்அதிபர்மீதானபுகாரைவாபஸ்வாங்கவில்லை: நடிகைராதாமீண்டும்புகார், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 9:19 AM IST

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)

திசெம்பர் 20, 2013

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)

Faizul complaintant getting undue publicity.2இவ்விவகாரத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவுகளை இங்கே பார்க்கவும்:

  1. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (1)[1]
  2. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (2)[2]
  3. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)[3]

Faizul complaintant getting undue publicityநடிகை  ரா தா  திடீர்  பல்டி:   தொழிலதிபர் மீதான  வழக்கு வாபஸ்: எல்லா தமிழ் நாளிதழ்களும், மிகச்சிறிய மாற்றத்துடன், இந்த செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளன. 18-12-2-13 அன்று இரவு நடிகை ராதா திடீரென்று வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார் என்று தினமலர் கூறுகிறது[4]. கையோடு கொண்டு வந்திருந்த மனுவை அங்கிருந்த போலீசாரிடம் கொடுத்தார் என்று மாலைமலர் கூறுகிறது.  தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை கைவிட்டு விடவேண்டும் என்றும் மனு எழுதி கொடுத்துவிட்டு அவசரமாக சென்றார்[5]. எனினும் அவர் வந்துள்ளது உண்மைதான் என்று தெரிகிறது, மனு கொடுக்கப்பட்டதும் நிஜமே.  மற்ற விசயங்களில் ஊடகங்களில் சட்டமேதைகள் போன்று விவாதிப்பார்கள். ஆனால், இப்பொழுது, அதை போலீசாரிடமே விட்டு விட்டார்கள் போலிருக்கிறது!

Faizul complaint by drug trafficking arrested affectedவடபழனி போலீசார் நிலை: இதே ராதா வடபழனி இன்ஸ்பெக்டர் பைசூலுக்கு ஆதரவாக வேலை செய்வதால், வழக்கை வேறு அதிகாரிக்கு / போலீஸ் ஷ்டேசனுக்கு மாற்ற வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். அப்பொழுது போலீசார் மிகவும் கடுப்பாகி விட்டனர். அதனால் இது போலீசாருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது. இந்த மனுவை ஏற்பதற்கில்லை என்றும்[6], இதை கோர்ட்டில் போய் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர்[7]. அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நடிகை ராதா காரில் ஏறி வேகமாக போய்விட்டார்[8]. நடிகை ராதாவின் இந்த திடீர் முடிவு போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், ஊடகக்காரர்களுக்கு வேடிக்கையாக இருந்தது போலும்! மற்ற நெரங்களில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல், காத்து நிற்பதைப் போல 18-12-2013 அன்று ஊடகக்காரர்கள் நிற்கவில்லை போலும்!!

போலீசார்  விசாரணையைத்  தொடருவார்களா  அல்லது  விட்டு  விடுவார்களா?: தொழிலதிபர் பைசூலை கைது செய்ய தேடிவரும் நிலையில் நடிகை ராதா இதுபோல் திடீரென்று புகாரை வாபஸ் வாங்கி பல்டி அடித்து இருப்பது ஏன்? அதில் உள்ள மர்மம் என்ன? ராதாவின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது குறித்தும், இதன் பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்[9].   இதனை ஏற்க மறுத்து, புதிய கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்[10].  இருப்பினும், புகார் கொடுத்தவரே, வாபஸ் வாங்கிக் கொண்டுள்ளதில் சட்டநிலைனை என்ன என்ற கேளிவியும் எழுகின்றது. போதை மருந்து கடத்தல், வேலை வாங்கித் தருவதாக ஆட்களை ஏமாற்றுதல், பெண்ணின் மீதே பலருடன் வாழ்ந்தவள், ஆதாரங்களை வெளியிடுவேன் என்றெல்லாம் பேட்டிக் கொடுத்துள்ள நிலை, ராதாவுடன் படுத்த காட்சிகளையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளேன், அவற்றை இணைதளத்தில் போடுவேன் என்றெல்லாம் மிரட்டியதாக ஊடகங்களில் அளவிற்கு அதிகமாகவே வந்துவிட்ட நிலையில் போலீசார் சும்மா இருக்க முடியுமா?

பர்வீன்பைசூல்  அல்லது   ராதாஷ்யாம்  சமரசம்  செய்து  கொண்டனரா?: ராதா வழக்கை வாபஸ் பெற்றார்[11] என்பதை தவிர, பர்வீன்-பைசூல் அல்லது ராதா-ஷ்யாம் சமரசம் செய்து கொண்டதைப் போல, ஆங்கிலத்தில் சில இணைதளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

Actress Radha Got Compromised[12]
Radha accused Faizul of blackmailing her to reveal their intimate photos and videos. She also made statements like the Police is not helping her and acting against her to help Faizul. Now the scene has completely changed. As a development, she reportedly has withdrawn the complaint and got compromised with Faizul.
நடிகைராதாசமரசம் நடிகை ராதா பைசூல் மீது, தங்களது அந்தரங்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியதற்காக புகார் கொடுத்தார். போலீசார் தனக்கு உதவுவதில்லை, மாறாக பைசூலுக்குத் துணை போகின்றனர் என்றேல்லாம் கூட புகார் கூறிவந்தார்.

ஆனால், காட்சி இப்பொழுது முழுவதுமாக மாறிவிட்டது. இப்பொழுது பைசூல் மீது கொடுக்கப்பட்ட புகார் திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும், இதனால் பைசூலிடம் சமாசம் செஹ்ய்து கொண்டதாகவும் தெரிகிறது[13]. இதே மாதிரி மரியம் பீவி கொடுத்த புகார்[14], அக்ரம் கான் ஆட்கள் மிரட்டுகிறார்கள் என்றது[15] மற்றும் அக்பர் பாஷா கொடுத்த புகாரும் வாபஸ் பெற்றால், போதை மருந்து கடத்தல் முதலிய விவகாரங்களும் மறைக்கப்படுமா?

பைசூல்  எனது  கணவர்  தானே  என்றால்,   திருமணம்  இல்லாமலேயே  அந்த   அந்தஸ்து  எப்படி  கிடைக்கிறது?: ராதாவின் திடீர் பல்டி மற்றும் புகாரை வாபஸ் வாங்கியதற்கான காரணம் குறித்து கருத்து கேட்பதற்காக நடிகை ராதாவிடம் நிருபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர்[16]. அப்போது நடிகை ராதா, “ எது எப்படியோ  பைசூல் எனது கணவர்தானே, ஒரு வேகத்தில் புகார் கொடுத்துவிட்டேன். ஆனால் இப்போது மனசு கேட்கவில்லை. அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார். தொடர்ந்து அவரை ஓட விடுவதற்கு எனக்கு மனம் இல்லை[17]. அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்”, என்று கூறி போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்[18]. சரி, பிறகு வீட்டிற்கு நேராகச் சென்று பேட்டிக் கண்டு, விவரங்களை வெளியிட்டிருக்கலாமே? ஆனால், செய்யவில்லை.

பைசூல்எனதுகணவர்தானேஎன்றால், திருமணம்எப்பொழுதுநடந்தது?: அந்தர் பல்டி, வழக்கு வாபஸ் என்று தான், நமது சூரப்புலி ஊடகவீரர்கள் எழுதுகிறார்களே தவிர, திடீரென்று பைசூலுக்கு பர்வீன் எப்படி மனைவி ஆனாள் என்பது குறித்து ஒன்றும் யோசிக்கவில்லை போலிருக்கிறது. நித்தியானந்தா விசயத்தில் அப்படி குதித்த ஊடகக்காரடர்கள் இதை அப்படியே அமுக்கப் பார்க்கிறார்களா? லெனின் போன்ற வீராதி வீரர்கள் படுக்கை அறைக் காட்சிகளை வீடியோ பிடிப்பதில் வல்லவர்கள் ஆயிற்றே? பிறகெப்படி அமைதி காக்கிறார்கள். ராதாவுடன் படுத்த காட்சிகளையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளேன், அவற்றை இணைதளத்தில் போடுவேன் என்றெல்லாம் மிரட்டியதாக செய்திகளை வெளியிட்ட போது, எந்த பெண்ணிய வீராங்கனைகளும் இதைப் பற்றி கேட்கவில்லையே? ஆணுக்கும்-பெண்ணுக்கும் சண்டை வரலாம், ஆனால், அந்தரங்க படுக்கை விசயங்களை ஒரு ஆண் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுகிறான் என்றால், அது எந்தவிதமான கலாச்சாரம், நாகரிகம் என்று எந்த தமிழ்-தெலிங்கு உணர்வுள்ள, இனமான ரோஷமுள்ள எவனும் கேட்கவில்லையே? ஏனிந்த மௌனம் அல்லது பாரபட்சம் அல்லது மறைப்பு?

பர்வீன்பைசூல்  அல்லது  ராதாஷ்யாம்  விவகாரங்களில்  பல  உண்மைகள்   மறைக்கப்படுகின்றன: கீழ் குறிப்பிட்டுள்ள விசயங்களில் பல கேள்விகள் எழும்புகின்றன:

  1. ஒரு பெண் இன்னொரு ஆணுடன் திருமணம் ஆகாமல் உடலுறவு கொண்டுறஆறுவருடம் வாழ்ந்தது.
  2. கருவுற்றபோது, அபார்ஷண் செய்து கொண்டது, அதற்கான சான்றிதழ்கள் பெற்றுக் கொண்டது.
  3. ஆண் அவ்வாறான படுக்கைக் காட்சிகளை, பெண்ணுக்குத் தெரியாமல் போட்டோ-வீடியோ எடுத்து வைத்துக் கொண்டது.
  4. ஒரு நாள் அப்பெண் இதனை அறிந்து ஏன் எடுத்தீர்கள், என்று கேட்டதற்கு, நீ இல்லாத நேரத்தில் அதனைப் பார்த்து ரசிப்பதற்கு என்றது.
  5. பெண் ஆணை தன்னை ஏமாற்றி விட்டான் என்று புகார் கொடுத்தது.
  6. தங்களது அந்தரங்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியதற்காக புகார் கொடுத்தது.
  7. ரூ.50 லட்சம் மோசடி செய்து விட்டார் என்றும் பெண் புகார் கொடுத்தது.
  8. ஆண் பல பெண்களுடன் / நடிகைகளுடன் செக்ஸ் தொடர்பு கொண்டுள்ளார் என்றது.
  9. ஆண் பதிலுக்கு பெண்ணின் அந்தரங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியது.
  10. பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது என்று அந்த ஆண் பேசியது.
  11. ஆணின் தங்கை, அப்பெண் தன்னை மிரட்டுவதாக புகார் கொடுத்தது.
  12. அப்பெண் போலீசார் தனக்கு உதவுவதில்லை, மாறாராணுக்குத் துணை போகின்றனர் என்றேல்லாம் கூட புகார் கூறிவந்தது.
  13. இன்னொரு ஆள், அந்த ஆண் தன்னை போதை மருந்து கடத்தலில் மாட்டி விட்டார் என்று புகார் கொடுத்தது.
  14. மூன்று முறை முன் ஜாமீன் பெற மனு போட்டது.
  15. மூன்று முறையும்முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
  16. அந்த ஆணை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்றது.
  17. ஆனால், இப்பொழுது, பெண் மட்டும் புகாரை வாபஸ் பெற்றுள்ளது.
  18. குறிப்பாக, இப்புகாரணனைத்துப் பெண் பொலீஸ் நிலையத்தில் கொடுக்கப் பட்டுள்ளதால், புகாரை முடித்துவிட முடியுமா?
  19. ஏற்கெனவே கோர்ட்டில் சென்றுள்ள வழக்குகள் என்னவாகும்?
  20. மேலாக, இதனை எந்த பெண் இயக்கமும், மனித உரிமைகள் என்றெல்லாம் பேசும் இயக்கங்களும் ஏன் கண்டுகொள்ளவில்லை.

வேதபிரகாஷ்

© 20-12-2013


[4] தினமலர், சென்னை பதிப்பு,

[5] மாலைமலர், நடிகைராதாதிடீர்பல்டி: தொழிலதிபர்மீதானவழக்கைவாபஸ்பெற்றார், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2:57 AM IST; மாற்றம் செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 3:25 AM IST

[11] Actress Radha has suddenly withdrawn the case against entrepreneur Faizul. Police are conducting a new investigation on what is the mystery in her sudden decision. She who starred in “Sundara Travels” film lodged a complaint at Commissioner Office stating, Faizul of Triplicane had lived with her for 6 years as husband, cheated her Rs.50 lakh of money and also threatened her that he would make her private videos public. Vadapalani all-women police registered a complaint and began investigation.  In order to refrain arrest Faizul filed anticipatory bail petition 3 times which was dismissed by the court. In this situation, actress Radha challenged that she would see Faizul jailed. Meanwhile, actress Radha came to Vadapalani all-women police station yesterday and said she would withdraw the case against Faizul. While speaking to the reporter over phone she said, she was not willing to make her husband run around. However, police are investigating on the reason for her sudden change. http://indiaeng.tamil4.com/view.php?view=9000

பர்வீன்–பைசூல் ஜோடி மீது மரியம் பீவி-அக்பர் பாஷா பரஸ்பர புகார்கள், குற்றச்சாட்டுகள் ஏன்?

திசெம்பர் 13, 2013

பர்வீன்–பைசூல் ஜோடி மீது மரியம் பீவி-அக்பர் பாஷா பரஸ்பர புகார்கள், குற்றச்சாட்டுகள் ஏன்?

பர்வீன் மறுபடியும் புகார் அளிக்கிறாராம் - 11-12-13

11-12-13 அன்று பர்வீன் என்கின்ற ராதாவின் மறுபடி-குற்றச்சாட்டு: தேதி “11-12-13” விசித்திரமானது, முக்கியமானது என்றெல்லாம் அலசிக்கொண்டிருக்கும் போது,  சென்னை மாநகர காவல்துறை ஆணையரை புதன்கிழமை 11-12-13 அன்று சந்தித்த நடிகை ராதா, காவல்துறையினர் மீது பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்[1].  இணை கமிஷனர் திருஞானத்தை அவரது அலுவலகத்தில் நடிகை ராதா சந்தித்தார். அப்போது என் வழக்கை விசாரிக்கும் வடபழனி உதவி கமிஷனர் மற்றும் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் அளித்திருந்தார்[2]. “என் வழக்கை விசாரிக்கும் அதிகாரி பைசூலுக்கு ரகசியமாக உதவி வருகிறார்”, என்கிறாராம்[3]. எனவே வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைப்புகார் அளித்துள்ளார். சுந்தரா டிராவல்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராதாவின் செய்திகள் தாம் இப்பொழுது பரப்பரப்பாக ஊடகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன[4].

பர்வீன் மறுபடியும் புகார் அளித்தாராம் - 11-12-13

  1. பைசூல்  மீது மோசடி,   மிரட்டல்   உள்ளிட்ட   சட்டப்   பிரிவுகளின்   கீழ்   வழக்குப்பதிவு  செய்யப்பட்டது: ராதா என்கின்ற பர்வீன், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தொழிலதிபர் பைசூல் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், பைசூல் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதோடு, ரூபாய் 50 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.  இது தொடர்பாக வடபழனி பொலிசார் விசாரணை நடத்தினர். ராதாவை நேரில் அழைத்து சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்திய பொலிசார் அவரது வாக்கு மூலத்தையும் பதிவு செய்தனர். அப்போது பைசூலுக்கு எதிராக மோசடி ஆவணங்களையும் ராதா பொலிசிடம் கொடுத்தார். இதையடுத்து பைசூல் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பைசூல் முன்ஜாமீன் கேட்டு 2 முறை தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து பைசூல் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொலிசார் பிடியில் சிக்காமல் பைசூல் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார்[5].

பர்வீன் மறுபடியும் புகார் - 11-12-13

2.வேலை வாங்கி தருவதாக மோசடி: இதேபோல், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்கள் மூலம் போதை பொருள் கடத்துவதாக, பைசூல் மீது அக்ரம்கான் என்பவரும் புகார் அளித்தார்.

பர்வீன் மறுபடியும் புகார், புகார் - 11-12-13

3. போதை  மருந்து  கடத்தல்  புகார்: அக்ரம்கான் பைசூல் போதை மருந்து கடத்தலிலும் ஈடுபட்டுள்ளதாக புகாரில் கூறியுள்ளார். ராயப்பேட்டையை சேர்ந்த அக்பர் பாஷா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: “ராயப்பேட்டை, யானைக்குளம் 2வது தெரு வில் வசிக்கிறேன். 2007ம் ஆண்டு வரை சென்னையில், துணிகளுக்கு எம்பிராய்டரி போடும் வேலை செய்தேன். வறுமை காரணமாக, வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன்இந்நிலையில், எங்கள் தெருவில் வசிக்கும் நிசார் (43) என்பவர் என்னை அணுகி, எவ்வித செலவும் இல்லாமல் பல இளைஞர் களை வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளேன். அதுபோல் உன்னையும் வெளி நாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார். அவரது பேச்சை நம்பி வெளிநாடு செல்ல சம்மதித்தேன். 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்னுடைய பாஸ்போர்ட்டை நிசாரிடம் ஒப்படைத்தேன். 25.11.2007 அன்று நிசார், தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு 29ம் தேதி அக்பர் டிராவல்ஸ் மூலம் மும்பை சென்று, வெளி நாடு செல்வதுக்கான பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளும்படி கூறினார். மேலும், சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் பைசூல் என்பவர் இதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் கூறினார். அதன்படி, பைசூல் என்னை தொடர்புக் கொண்டு 900 அமெரிக்க டாலரும், தைவான் நாட்டு சிம்கார்டும், கொடுத்து என்னை இலவசமாக வெளிநாடு அனுப்பினார்முன்னதாக, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நிசார் என்னை சந்தித்து, சுமார் 2 அடி நீளமுள்ள பூங்கொத்து ஒன்றை கொடுத்தார். பூங்கொத்தை எதுக்கு கொடுக்கிறாய் என்று கேட்டதற்கு, இது ஒரு அன்பளிப்பு என்றும், இதை பெறுவதற்கு ஏர்போட்டுக்கு ஒரு நபர் வருவார், அவரிடம் இதை கொடுத்துவிடு எனவும் கூறினார். இதை நம்பி பூங்கொத்தை வாங்கி கொண்டு அன்று இரவு விமானம் மூலம் தைவான் சென்றேன். அப்போது தைவான் நாட்டின் சுங்கத்துறையினர், நான் வைத்திருந்த பூங்கொத்து கண்டு சந்தேகம் அடைந்து, பூங்கொத்தை உடைத்துப் பார் த்தனர். அதில் 11 கிலோ எடையில் கேட்டமைன் என்ற போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்து என்னை கைது செய்தனர். இதையடுத்து தைவான் நாட்டு காவல்துறையினர் என்னை சிறையில் அடைத்தனர். கடந்த 5 வருடமாக அந்நாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து, 3.2.2013 அன்று விடுதலை செய்யப்பட்டேன். இந்திய தூதரகத்தின் உதவியோடு இந்தியா திரும்பிய நான், பைசூல் மற்றும் நிசார், ஆகியோரால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் சிறிது காலம் தலைமறைவாக வாழ்ந்தேன். கடந்த ஒரு வாரமாக பைசூல் பற்றி பத்திரிகை யில் வந்த செய்திகளை பார்த்து அவரை அடை யாளம் கண்டு கொண்டேன். பைசூல் மூலம் ஏமாற்றப் பட்டு, வெளி நாட்டு சிறை யில் தண்டனை அனுபவிக்கும் பல இளைஞர் களை காப்பாற்றி, பைசூல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு புகாரில் அக்பர் பாஷா கூறியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக, தொழிலபதிபர் பைசூல் மீது நடிகை ராதா சில தினங்களுக்கு முன்பு புகார் கூறியுள்ளார்[6].  இந்த 2 புகார்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.

4. பைசூலின்  சகோதரி  மரியம்  பீவி  புகார்: இந்நிலையில், பைசூலின் சகோதரி மரியம் பீவி, புகாரை வாபஸ் வாங்க வேண்டுமானால் ரூ.1 கோடி தர வேண்டும் என்று தன்னை சிலர் மிரட்டுவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார்.

பரஸ்பர புகார்கள் கொடுக்கும் முஸ்லிம்கள்

பைசூலின்  சகோதரி  மரியம்பீவி (46)   கொடுத்த   புகார்:  சேப்பாக்கம் தைபூன் அலிகான் தெருவில் அக்கா, தம்பிகளுடன் வசித்து வருகிறேன். அனைவரும் தம்பி பைசூல் வீட்டில் தங்கி உள்ளோம். என் தம்பி போதைப் பொருள் கடத்துவதாக அக்ரம்கான் என்பவர் புகார் அளித்துள்ளார். இதில் எந்த உண்மையும் இல்லை. நேற்று முன்தினம் இரவு எங்கள் வீட்டிற்கு வந்தவர்கள் நாங்கள் அக்ரம்கானின் ஆட்கள், கமிஷனர் அலுவலகத்தில் பைசூல் மீது புகார் அளித்துள்ளோம். புகாரை வாபஸ் வாங்க ரூ.50 லட்சம் தர வேண்டும். நடிகை ராதாவும் எங்கள் தலைவரின் ஆலோசனைப்படிதான் புகார் அளித்துள்ளார். இந்த 2 புகாரையும் வாபஸ் வாங்க ரூ.1 கோடி வேண்டும். 2 நாட்களுக்குள் தரவில்லை என்றால் அனைவரையும் அசிங்கப்படுத்துவோம். இதை வெளியே சொன்னால் பைசூலை தீர்த்து கட்டுவோம் என்று மிரட்டி சென்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்[7].

நடிகையின் ரகசிய வாழ்க்கை

11-12-2013   அன்று  மறுபடியும்  பர்வீன்  புகார்: இந்த 3 புகார்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது[8]. இந்தநிலையில் சென்னை காவல்துறை ஆணையரை புதன்கிழமை 11-12-2013 அன்று சந்தித்த ராதா, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று காவல்துறையினர் மீது புகார் தெரிவித்துள்ளார்[9].  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பைசூலின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது. இதனால் நான் மன உளைச்சல் அடைத்துள்ளேன். அதேவேளையில் எனக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் கூட போலீஸார் மறுக்கின்றனர். போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் தொடர்புடைய பைசூலை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன்”, என்றார்[10].

போலீசுக்கு  எதிராக  புகார், நடவடிக்கை  எடுக்கப்படும்   என்கிறார்களாம்: பர்வீன் சொன்னது, “வடபழனி மகளிர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரேசா, பைசூலுக்கு சாதகமாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால் எனக்கு நியாயம் கிடைக்குமா என்று தெரியவில்லை[11]. இதுவரை பைசூலை போலீசார் கைது செய்யவில்லை. இந்த வழக்கை  திசை திருப்ப போலீசார் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. தலைமறைவாக உள்ள பைசூல் போலீசாருக்கு தெரியாமல் எப்படி தொலைக்காட்சிக்கு மட்டும் பேட்டி அளிக்கிறார். அவர் வெளியில் இருந்தால் சாட்சிகளை அழித்து விடுவார். இதனால் கூடுதல் கமிஷனர் நல்லசிவத்தை சந்தித்து பைசூலை கைது செய்ய வலியுறுத்தினேன். அதற்கு அவர் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்”,  என்றார்[12].

வேதபிரகாஷ்

© 13-12-2013


[1] நக்கீரன், காவல்துறையினர்மீதுநடிகைராதாபரபரப்புபுகார்!, புதன்கிழமை, 11, டிசம்பர் 2013 (22:57 IST

[9] தினமணி, பைசூலைகைதுசெய்யக்கோரிஆணையர்அலுவலகத்தில்நடிகைராதாமனு, By வாசு, சென்னை, First Published : 11 December 2013 08:33 PM IST

[12] தினகரன், பைசூலுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர் நடிகை ராதா பரபரப்பு புகார்

,

முருகேசனுக்கு சுன்னத் – அதாவது ஆண்குறி சதை அறுப்பு விழா!

ஒக்ரோபர் 3, 2010

முருகேசனுக்கு சுன்னத் – அதாவது ஆண்குறி சதை அறுப்பு விழா!

 

சுன்னத் செய்து கொண்ட முருகேசன்

முஸ்லீம் ஆட்சி திரும்பி விட்டதா? நீதிபதி கான் சொல்லி மூன்று நாட்கள்கூட ஆகவில்லை, “முஸ்லீம்கள் இந்தியாவை ஆண்டுள்ளனர், ஆளப்பட்டனர், இப்பொழுது ஆட்சியில் பங்கு கொண்டுள்ளனர்”! ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிளஸ்1 மாணவர் முருகேசனுக்கு, புதுக்கோட்டையை சேர்ந்த ராவுத்தர் என்பவர் சுன்னத் செய்ததால், அவரை அங்குள்ள இளைஞர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்[1].

sunnath-Can it be done for grown boy

sunnath-Can it be done for grown boy

சூப் கடையில் வேலை பார்த்த சிறுவனுக்கு சுன்னத்! ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் வலம்புரி. இவர் குடும்பத்துடன் தூத்துக்குடியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் முருகேசன் (17). உறவினரான சலவைத் தொழிலாளி முருகன் வீட்டில் தங்கி, ஏர்வாடி பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். தற்போது காலாண்டு விடுமுறையையொட்டி, இங்குள்ள புதுக்கோட்டையை சேர்ந்த ராவுத்தர் (30) என்பவரது சூப் கடையில் வேலை செய்து வந்தார்.

sunnath-cicumcision

sunnath-cicumcision

தர்காவில் சுன்னத் செய்வார்களா? இந்நிலையில் ராவுத்தர், தப்ஸ்[2] முழக்கத்துடன் நேற்று முருகேசனுக்கு மாலை அணிவித்து தர்காவிற்கு ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார். இதன்பின் வீட்டுக்கு அழைத்து வந்த அவர், சுன்னத் செய்பவரை வைத்து முருகேசனுக்கு சுன்னத் நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்.

circumcision

circumcision

குதிரை ஏறும் ராவுத்தனின் பெயர்[3] கொண்ட முருகேசனுக்கு ராவுத்தரின் சுன்னத்: தகவலறிந்த மாணவரின் உறவினர் முருகன், ராவுத்தர் வீட்டுக்கு சென்று பார்த்த போது, சுன்னத் செய்யப்பட்ட நிலையில் இருந்த முருகேசனை கண்டு அதிர்ச்சியடைந்தார். உறவினர்கள் ராவுத்தரை பிடித்து ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தங்கதுரையிடம் ஒப்படைத்து புகார் செய்தனர். தூத்துக்குடியில் உள்ள மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழக்கரை டி.எஸ்.பி., பெருமாள் ராமனுஜம் மாணவரிடம் விசாரணை நடத்தினார்.

சுன்னத் செய்து கொண்ட மாணவர்கூறியதாவது: முருகேசன் சொன்னதாவது, “பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க மாட்டார்கள் என்ற காரணத்திற்காக யாரிடமும் தெரிவிக்காமல் சுன்னத் செய்து கொள்ள சம்மதித்தேன், இது என்னுடைய சுய விருப்பத்தின்படி நடந்தது”, என்றார். சுன்னத் செய்து கொள்ள பெற்றோர் அனுமதி தேவையா? சுன்னத் என்ன தமாஷுக்கு செய்து கொள்கிறார்களா? 10+1 படிக்கும் போதே தமிழகத்தில் சுன்னத் மகிமை சொல்லிக் கொடுக்கப்படுகிறதா? முருகேசன் சுன்னத் செய்து கொண்டது செக்ஸ் போன்ற துர்புத்தி காரணங்களுக்கா? அந்த வயசில் யார் அத்தகைய கருத்தை மனத்தில் ஊட்டியது?


[1] தினமலர், ஏர்வாடிமாணவருக்கு “சுன்னத்’ : புதுக்கோட்டை வியாபாரி மீது புகார், அக்டோபர் 02, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=97879

[2] பறை அடித்தல், ஏர்வாடி தப்ஸ் (தப்பு – பறை வாத்தியம்) என்றே சொல்வார்கள்.

[3] அருணகிரிநாதர் முருகனை தமது பாடல்களில், “குதிரை ஏறும் ராவுத்தனே” என்று விளித்துள்ளார்!