Posted tagged ‘துரோகம்’

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (1)

மே 8, 2017

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி .எஸ். தொடர்புகளும், ஒற்றர்களும்பணபரிமாற்றமும் (1)

Shabir sha meeting Abdul Basit - August .2014

அப்துல் பசித், பாகிஸ்தான் தூதர் தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்தாரா?: ரூ.70 லட்சம் பாகிஸ்தான் உளவு துறை ஐ.எஸ்.ஐ மூலம், ஹுரியத் தலைவர் ஷபிர் ஷா [Hurriyat leader Shabir Shah] வழியாக, கல்லெறி ஜிஹாதிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது[1]. சமீபத்தில் கைதான இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள், இதை ஒப்புக்கொண்டு விவரங்களைக் கொடுத்துள்ளனர்[2]. பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் [Abdul Basit, Pakistan’s envoy to India] மூலம் பணம் பரிமாறப்பட்டுள்ளது[3]. அதாவது தூதரகம் மூலமாகவே இத்தகைய தீவிரவாதிகளுக்கு பணவிநியோகம் நடந்துள்ளது[4].  “ஹைகமிஷனராக” இருந்து கொண்டு செய்திருக்கிறாரா என்று கேள்வி கேட்டுள்ளன ஊடகங்கள்[5]. ஊடகங்கள் இவற்றை எடுத்துக் காட்டினாலும், அரசு முறையாக இதைப்பற்றி ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அப்துல் பசித்தை கூப்பிட்டு விளக்கம் கேட்கவில்லை. சென்ற ஆண்டு-2016, இவர் காஷ்மீரில் இருக்கும் ஊடகக்காரர்களை வரவழைத்து, இந்தியாவிற்கு எதிரான விசயங்களை அதிகப்படுத்தி, செய்திகளாக போடவும், அதன் மூலம், அங்குள்ள மக்களைத் தூண்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிந்ததும், இங்கு குறிப்பிடத் தக்கது[6]. தூதுவர், தூதரகம், இருநாட்டு உறவுகள் போன்ற விசயங்களில் இந்தியா மென்மையாக, மெதுவாக, சோம்பேறித்தனமாக செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது.

SYurriat meeting Abdul Basit - August .2014

1997ம் ஆண்டு முதல் நடந்த விவகாரங்களை 2017ல் கிளறுவது ஏன்?: 1997ல் அலி ஷா கிலானி சவுதி அரேபியாவிலிருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப் பட்டது, அதனால் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதில் உள்ள சட்டமீறல்கள் முதலிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 29, 2010 அன்றும் இவர்மீது, தேசத்துரோக வழக்குப் போடப்பட்டது[7]. 2001ல் நேரிடையாக பண விநியோகம் நடந்த 173 ஹவாலா பரிவர்த்தனைகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன[8]. இந்த விவரங்களை முதலமைச்சர் மெஹ்பூபா முப்டியே கொடுத்துள்ளார்[9].  பாகிஸ்தான் மட்டுமல்லாது, சவுதி அரேபியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்தும் பணம் வந்துள்ளது. சவுதியிலிருந்து தான் அதிகமாக பணம் வந்துள்ளது. அதாவது, ஹக்கானி ஆவணங்கள் முதலியன சவுதி அரேபியா உலகம் முழுவதும், வஹாபி அடிப்படைவாதத்தை பரப்பும் மூலமாக, தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று எடுத்துக் காட்டியுள்ளதால், அதில் எந்தவித ரகசியமும் இல்லை எனலாம்.

How hawala money is routed from Rawalpindi to Srinagar-three arrested

ஹவாலா பணம் ஹீவிரவாதிகளுக்கு செல்வது: 2011ல் அமுலாக்கப்பிரிவினர் கட்டுப்பாட்டு 1997ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றபோதே, அதிலிருந்தே விவரங்களைத் தெரிந்து கொள்லலாமே. எப்படி இருப்பினும், “டைம்ஸ்-நௌ” வெளியிட்ட விவரங்களை மற்ற ஊடகங்களையும், தங்களது சரக்கைச் சேர்ந்து, செய்திகளை வெளியிட்டுள்ளன என்று தெரிகிறது. 20 வருடங்களாக “புலனாய்வு ஜார்னலிஸம்” என்று தம்பட்டம் அதித்துக் கொண்டிருந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. எல்லையில் நான்கு வியாபாரிகளை பிடித்தபோது, லஸ்கர்-இ-தொய்பா மூலம் அனுப்பப்படும் பணத்தை தீவிரவாதிகளுக்குக் கொடுக்க ஹவாலா மூலம் செயல்பட்டது தெரிய வந்தது. வங்கி மூலம் பணமாற்றத்தை செய்வதை விட, இம்மாதிரி ஹவாலா மூலம் பணபரிமாற்றம் செய்வது, அவர்களுக்கு நல்லது மற்றும் கொடுத்தவர்-வாங்கியவர்கள் விவரங்கள் தெரியாது, கண்டுபிடிக்க முடியாது என்ற கோணத்தில் தீவிரவாதிகள் கையாண்டு வருகிறார்கள். இதனால், அந்த ஹவாலாகாரர்களும் கணிசமான தொகை கமிஷனாகக் கிடைக்கிறது.

How hawala money is routed from Rawalpindi to Srinagar

நிலைமை தொடர்கிறது: 2014ம் ஆண்டில், 48 ஏஜென்டுகள், பொருள் பரிமாற்றம் மூலம் பணத்தை தீவிரவாதிகளுக்கு அனுப்பியுள்ளனர். என்.ஐ.ஏ மற்றும் அமுலாக்கத்துறை, 20 வழக்குகளில் ரூ. 75,00,000/- பரிமாற்றம் செய்ததை கண்டுபிடித்துள்ளனர். 2009 மற்றும் 2011 கள்ளப்பணம் மூலம் ரூ.1,20,00,000/- பரிவர்த்தனை நடந்துள்ளது. 2011ல் 74,000 சவுதி ரியால் பணம் வந்துள்ளது. அதாவது, இம்முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது என்று தெரிகிறது. இவற்றில் முஸ்லிம்களே சம்பந்தப்பட்டுள்ள போது, அவர்கள் ஆட்டிக் கொடுக்காமல், இருந்து வருகின்றனர். ஹுரியத் கான்பரென்ஸ், ஜம்மு-காஷ்மீர் லிபரேஷன் பிரென்ட், இஸ்லாமிய மாணவர்கள் முன்னணி, ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஜைஸ்—இ-மொஹம்மது, ஜமாத்-உல்-முஜாஹித்தீன் போன்ற பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு அப்பணம் சென்றுள்ளது[10]. 1997ல் சவுதி முதலிய அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெற்றதற்கு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதே போல, ஷாஜியா என்ற பெண் மூலம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் பெற்றதும் தெரிய வந்தது[11]. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இந்திய ஊடகங்கள் சில இவையெல்லாம் ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வருகின்றன என்று தெரிவிக்கின்றன[12].

© வேதபிரகாஷ்

08-05-2017

Two ISI agents arrested in April 2017- Abdul Basit nexus

[1] Times of India, How ISI funds stone-pelters via Hurriyat in Kashmir: Times Now, TIMESOFINDIA.COM | Updated: May 6, 2017, 06.30 PM IST

[2] http://timesofindia.indiatimes.com/india/how-isi-funds-stone-pelters-via-hurriyat-in-kashmir-times-now/articleshow/58546402.cms

[3] Zeenews, Pak embassy helps distribute ISI funds to stone-pelters in Kashmir: Report, By Zee Media Bureau | Last Updated: Sunday, May 7, 2017 – 00:36

[4] http://zeenews.india.com/india/pak-embassy-helps-distribute-isi-funds-to-stone-pelters-in-kashmir-report-2002780.html

[5] Times.now, Is Pak high commissioner Abdul Basit paying separatists to create unrest in Kashmir? , May 06, 2017, 13.33 IST.

[6] Sources say that last year the Pakistan high commission had invited Kashmiri journalists to a meeting where they were asked to file reports project Indian security forces in bad light so they can generate hatred towards India and create a mass movement.

http://www.timesnow.tv/india/video/is-pak-high-commissioner-abdul-basit-paying-separatists-to-create-unrest-in-kashmir/60563

[7] On November 29, 2010 Geelani, along with writer  Arundhati Roy, Maoist Varavara Rao and three others, was charged under “sections 124A (sedition), 153A (promoting enmity between classes), 153B (imputations, assertions prejudicial to national integration), 504 (insult intended to provoke breach of peace) and 505 (false statement, rumour circulated with intent to cause mutiny or offence against public peace… to be read with Section 13 of the Unlawful Activities Prevention Act of 1967″. The charges, which carried a maximum sentence of life imprisonment, were the result of a self-titled seminar they gave in New Delhi, Azadi-the Only Way” on October 21, at which Geelani was heckled

[8] One.India, How Pakistan funded the Kashmir unrest 173 times, Written by: Vicky Nanjappa, Updated: Sunday, May 7, 2017, 8:14 [IST]

[9] http://www.oneindia.com/india/how-pakistan-funded-the-kashmir-unrest-173-times-2428208.html

[10] Investigations reveal that between the years 2009 and 2011 an amount of Rs 12 million had been recovered. Fake and foreign currency was recovered from agents who were funding terrorists. In 2011, some agents had also brought in 74,000 Saudi Arabian Riyals into the valley. NIA sources say that the funding has gone both to terrorist groups and separatists. Money has been pumped into the Hurriyat Conference, Jammu-Kashmir Liberation Front, Islamic Students Front, Hizbul Mujahideen, Jaish-e-Mohammad and Jamiat ul-Mujahideen.

[11] An 1997 FIR against separatist Syed Ali Shah Geelani an FIR alleges that he had got funding to the tune of Rs 190 million from Saudi Arabia and also another donation of Rs 100 million from the Kashmir American Council. Investigations had revealed that all these funds were routed through a Delhi-based Hawala operative. It was also found that Yasin Malik, another separatist, had received funding of USD 1 lakh and the money was being carried by a woman called Shazia. We are looking at each case since 1995, and this will help us get a better picture of the entire racket,” an NIA officer adds. Intelligence Bureau officials tell OneIndia that the money is being used for various purposes.

[12] Outlook, Secret Intel Docs Show Pakistan’s ISI Funds Hurriyat To Create Trouble In Kashmir, Says Channel Report, May 7, 2017. 6.48 pm

http://www.outlookindia.com/website/story/secret-intel-docs-show-pakistans-isi-funds-hurriyat-to-create-trouble-in-kashmir/298784

மிகக்கொடுமையான மற்றும் மோசமான ஆயுத போராட்டம் வெடிக்கும் – மிரட்டும் யாசின் மாலிக்!

மார்ச் 11, 2013

மிகக்கொடுமையான மற்றும் மோசமான ஆயுத போராட்டம் வெடிக்கும் – மிரட்டும் யாசின் மாலிக்!

மிகக்கொடுமையான, மோசமான ஆயுத போராட்டத்தை காண வேண்டியிருக்கும்: ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் மிகவும் கொடுமையான ஆயுத போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டியுள்ளான். 1990களில் ஏற்பட்ட குரூரப் போராட்டத்தைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் விளக்கியுள்ளான்[1].  1987ல் காஷ்மீர் பிரச்சினைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தில்லியில் உள்ளவர்கள் நடித்தார்கள், ஆனால், விளைவுகளை அவர்கள் அறிந்திருப்பார்கள். இப்பொழுது அவர்கள் அவ்வாறு சொல்லமுடியாது. வருங்கால இளைஞர்கள் பொறுக்கமாட்டார்கள். அதனால் நாம் மிகக்கொடுமையான, மோசமான ஆயுதபோராட்டத்தை காணவேண்டியிருக்கும்[2].

உண்மையைப் புரட்டும் எத்தன்: உண்மையில் 1980களில் தான் இந்துக்கள் ஒட்டு மொத்தமாக மிரட்டப்பட்டு, காஷ்மீரத்திலிருந்து விரட்டப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான இந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், மதம் மாற்றப்பட்டார்கள், ஆண்கள் மதம் மாறாவிட்டால், கொல்வோம் என்று மிரட்டி, தங்களது கோடிக்கணக்கான சொத்துக்களையும் விட்டுவிட்டு விரட்டப் பட்டார்கள். ஆனால், இவ்வுண்மைகளை மறைத்து, இக்கொடியவன் பொய்களை சொல்லி, மக்களை ஏமாற்றப்பார்க்கிறான். சோனியா, ராஹுல் இதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

யாசின் மாலிக் பாகிஸ்தான் சென்று வரும் போதெல்லாம் ஜிஹாதி தீவிரவாதம் பெருகும் என்றால், அது ஏன் தடுக்கப்படுவதில்லை?: 2005ல் யாசின் மாலிக் சென்றிருந்தபோது, எப்படி பாகிஸ்தான் ஜிஹாதிகளை ஊக்குவிக்கிறது, கூலிப்படைகள் உருவாக்கப்படுகின்றன, பாகிஸ்தான் உதவுகிறது என்று அவனே விளக்கியதை பாகிஸ்தான் ஊடகங்கள்[3] பெருமையாக வெளியிட்டன[4]. இதோ அவன் சொன்னதை பாருங்களேன்[5]: “காஷ்மீரத்தில் ஆயுத போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, செய்க் ரஷீத் அஹமது, பாகிஸ்தானிய செய்தித்துறை அமைச்சர், ஒரு படையை ஏற்படுத்தி அதில் 3,500 ஜிஹாதிகளுக்கு கொரில்லா போர் முறைகளில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தார்…………முன்னின்று போராடும் ஜிஹாதிகளுக்கு பலவழிகளில் உதவியுள்ளார். அவரது மகத்தான பங்களிப்பு சிலருக்குத்தான் தெரியும்”.

இந்தியப் பிரிவினைவாதிகளின் பாகிஸ்தான் விஜயம்[6]: இப்பொழுது கூட 26/11 தீவிரவாதி, பயங்கரவாதி ஹாபித் சையதுடன் உட்கார்ந்து, தண்டிக்கப்பட்ட தீவிரவாதியை ஆதரித்துக்கொண்டு, சுமார் 70 நாட்கள் பாகிஸ்தானில் இருந்துவிட்டு வந்திருக்கும் இவன் தான் இப்படி மிரட்டுகிறான்[7]. பிரிவினைவாதிகளை ஊக்குவிப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சி வெளிப்படயாகவே குற்றஞ்சாட்டியது[8]. முன்னர் ஏழு பேர் அடங்கிய ஹுரியத் கட்சியினர், டிசம்பர் 15 முதல் 28 வரை பாகிஸ்தானில் இருந்து பல பாகிஸ்தான் தலைவர்களை சந்தித்துள்ளனர்[9].

  1. மீர்வாயிஸ் உமர் பரூக் Hurriyat chairman, Mirwaiz Umar Farooq,
  2. கனிபட் professor Gani Bhat
  3. பிலால் கனி லோன் Bilal Gani Lone
  4. மௌலானா அப்பாஸ் அன்ஸாரி Moulana Abbas Ansari
  5. ஆக சையது அல்-ஹஸன் Aga Syed Al-Hasan
  6. முஸாதிக் அடில் Musadiq Adil
  7. முக்தார் அஹ்மது வாஸா Mukhtar Ahmad Waza

இந்த ஹுரியத்தின் பயங்கரவாத இணைப்புப் பற்றி ஏற்கெனவே பல விஷயங்கள் வெளிவந்துள்ளன[10]. வளைகுடா நாடுகளினின்று வரும் பணத்தை காஷ்மீர தீவிரவாதிகளுக்கு அனுப்ப பலவிதங்களில் வேலை செய்து வருகின்றனர். 2003ல் பாகிஸ்தானிய தூதரே மேற்குறிப்பிடப்பட்ட அப்துல் கனி பட்டிற்கு பணம் கொடுத்தபோது, நாடு கடத்தப்பட்டார், அவர்களது கூட்டாளி சபீர் அஹமது தார் என்பவன் கைது செய்யப்பட்டான்[11]. இப்படி வர்ம் பணம் ஹவாலா மற்றும் போதை மருந்து விற்பனை மூலம் இந்த ஜிஹாதிகளுக்குக் கொடுக்கப்படுகிறது[12].

இப்பிரிவினைவாதிகள் பாகிஸ்தான் தலைவர்களை சந்தித்துப் பேசியது என்ன?: இப்படி இவர்கள் வெளிப்படையாக பாகிஸ்தானிற்குச் சென்று பல நாட்கள் இருந்து கொண்டு, பாகிஸ்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வருகிறார்கள் என்றால், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்ற விவரங்களை ஏன் இந்திய அரசாங்கம் தெரியப்படுத்துவதில்லை. இந்திய மக்களை ஏன் இருட்டில் வைத்திருக்க விரும்புகிறது? ராணுவ வீரர்களைக் கொல்கிறது, தலைகளை வெட்டி, முண்டங்களை அனுப்புகிறது என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால், இம்முண்டங்களுக்கு என்ன விளங்கும்?

ஷபீர்ஷாவை ஊக்குவித்தது போல சோனியா காங்கிரஸ், யாசின்மாலிக்கை ஊக்குவிக்கிறதா?: காங்கிரஸைப் பொறுத்தவரைக்கும் நாட்டுநலன் என்பது கிடையாது, எப்படி ராஜிவ் காந்தி இந்தியர்களை ஏமாற்றினாரோ, அதைவிட அதிகமாக, வெளிப்படையாகவே, சோனியா இந்தியாவை தாரைவார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். முஸ்தபா கமல் என்கின்ற, தேசிய மாநாட்டுக் கட்சி செயலாளர், முன்பு பிரிவினைவாதி ஷபீர் ஷாவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் ஆக்கலாம் என்று திட்டமிட்டிருந்தது. அதேபோல, இப்பொழுது ஊக்குவித்தது போல, யாசின் மாலிக்கை ஊக்குவிக்கிறதா?, என்று கேட்டிருக்கிறார்[13]. சோனியா காங்கிரஸ் எதையும் செய்யலாம் என்று தெரிகிறது.

ஆயுதம் எடுத்தால், ராணுவத்தினால் அடக்கவேண்டியதுதானே அரசாங்கத்தின் கடமை: இந்துக்களைக் கொன்றுள்ள ஜிஹாதி மற்றும் முஸ்லீம் பிரிவினை, தீவிர பயங்கரவாதிகளை மன்னித்து, அரசியலில் சேர்த்துக் கொண்டால், அந்த கொல்லப்பட்ட இந்துக்களின் குடும்பங்களின் கதி என்ன? தில்லியில் கொட்டாய்களில், குடிசைகளில், தகர டப்பா வீடுகளில் வாழ்ந்து வரும் அந்த இந்து அகதிகளின் கதி என்ன? மறுபடியும் ஆயுதம் எடுப்போம் என்று மிரட்டினால், அரசு ஏன் மௌனமாக இருக்கிறது?  ஆயுதம் எடுத்தால், ராணுவத்தினால் அடக்க வேண்டியதுதானே அரசாங்கத்தின் கடமை?

சட்டங்களை மதிப்பதில்லை, நடவடிக்கை இல்லை[14].

மற்ற மதங்களைப் பழித்து கூத்தடிக்கின்றனர், கவலையில்லை[15].

பாகிஸ்தானியர்கள் என்ன செய்தாலும் நன்றாக கவனித்து அனுப்பப்படுவார்கள்[16].

ராணுவ வீரர்களைக் கொன்றவர்களை, முண்டங்களை அனுப்பியவர்களைக் கொண்டாடுவார்கள்[17].

பக்கத்தில் பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டாலும் கவலையில்லை[18].

அங்கு இந்துக்கள் மீது எந்த கொடுமைகள் நடத்தப்பட்டாலும் கவலையில்லை[19].

இந்திய முஸ்லீம்களும் கவலைப்படுவதில்லை, ஒருவேளை மகிழ்சியாக இருப்பார்கள் போலும்[20].

காஷ்மீர் சட்டசபையிலேயே பிரிவினைவாதம் பேசப்பட்டாலும் கவலையில்லை[21].

போர்க்குற்றங்களைப் பற்றி பிரமாதமாக பேசி வரும் போது, இப்போர்குற்றங்கள், தூக்குத் தண்டனைகள் பற்றி மூச்சு-பேச்சு இல்லை[22].

யார் மிரட்டப்பட்டாலும், தமாஷ் தான்[23].

சோனியாவின் கொள்கையே இப்படித்தான் இருக்கிறது, பாவம் காங்கிரஸ்காரர்கள்[24].

கத்தி போய் குண்டு வந்தால் நமக்கென்ன, ஓட்டு வருகிறதா என்று பார்க்கும் சோனியா[25].

குண்டு வெடித்தால் என்ன, சில நாட்கள் செய்திகளைப் போட்டு சும்மா இருந்து விடுவார்கள்[26].

யாசின் மாலிக் முஸ்லீம், அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாரும் ஒன்றும் கேட்க முடியாது[27].

நாங்கள் அப்படித்தான் இருபோம், பேசுவோம், யாரும் ஒன்றும் செய்யமுடியாது[28].

வேதபிரகாஷ்

11-03-2013


[1] Jammu and Kashmir Liberation Front (JKLF) chairman Muhammad Yasin Malik Sunday warned that denial of political space to people of Kashmir, especially youth, can lead to eruption of “more ferocious armed rebellion” than the one witnessed early during 90’s. He said Kashmiri youth are being persecuted today more atrociously that what was done in 90’s.

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[2] “In 1987, New Delhi had claimed that they were unaware of Kashmir situation. But this time around, Government of India is fully aware of the happenings and the sentiment. If the treatment meted out to the youth continues, I am afraid, the generation next won’t listen to anybody and we may witness a worst and more dangerous armed resistance.”

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[3] “Sheikh Rashid has played a great role for Kashmir’s liberation. He used to support the frontline Jihadis, but very few people know about his contributions,” the JKLF chief informed the audience. The JKLF leader praised Rashid for his contribution to the armed struggle, but the minister refused to comment when journalists approached him. http://www.dailytimes.com.pk/default.asp?page=story_14-6-2005_pg1_4

[4] The Yasin Malik event was predictably reported in the Pakistani media and the Daily Times – one of Pakistan’s most professional and credible newspapers had the following news report on June 14 with an Islamabad dateline. ‘When the armed struggle in held Kashmir was at its zenith, Information Minister Sheikh Rashid Ahmed set up a camp where around 3,500 Jihadis were trained in guerrilla warfare, revealed Yasin Malik, the Jammu & Kashmir Liberation Front (JKLF) chairman, at an exhibition of 1.5 million signatures by Kashmiris demanding their involvement in the dialogue process. “Sheikh Rashid has played a great role for Kashmir’s liberation. He used to support the frontline Jihadis, but very few people know about his contributions,” the JKLF chief informed the audience.’

http://acorn.nationalinterest.in/2005/06/14/pakistani-cabinet-minister-ran-jihadi-camps/

[7] Even as the images of separatist leader Yasin Malik sharing the dais with LeT chief and 26/11 mastermind Hafiz Saeed has caused widespread outrage, Malik denies the report claiming that Saeed just happened to be at the venue where he was holding a meet. Enraged political leaders have demanded the government to stop pampering people with terrorist links and initiate stern action against Malik.

http://www.istream.com/news/watch/287259/Yasin-Maliks-terror-nexus-exposed

[11] Pakistan’s Charge d’Affaires, Jalil Abbas Jilani was asked to leave India on February 8, 2003 after the Delhi Police formally filed documents charging him with passing on Rs. 370,000 to Anjum Zamruda Habib, a key member of the far-right women’s organisation, the Khawateen Markaz. The money, police investigators say, was to be passed on to Abdul Gani Bhat, the head of the principal anti-India political coalition in Kashmir, the All-Parties Hurriyat Conference (APHC). The APHC’s representative in New Delhi, Sabir Ahmad Dar, was also arrested along with Habib.

http://www.outlookindia.com/article.aspx?219021

[13] Dr Mustafa Kamal, additional secretary of NC accused New Delhi of grooming separatists for taking over in J&K. “I remember former governor Jagmohan in his book, My Frozen Turbulence, has stated that he wanted to groom separatist Shabir Shah to be the chief minister of Jammu and Kashmir. Is New Delhi grooming separatists to take over charge of Jammu and Kashmir”. Source: http://www.defence.pk/forums/central-south-asia/234543-yasin-malik-shares-dias-alleged-let-chief-hafiz-saeed-pakistan-4.html#ixzz2N8V3M6oN

மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை

பிப்ரவரி 13, 2013

மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை

ஒமர் அப்துல்லாவின் அரசியல்: மெஹபூபா முப்தி மற்றும் ஒமர் அப்துல்லா எப்பொழுதும் அரசியல் செய்து, இந்தியாவை ஏமாற்றி பதவிக்கு வந்து, வாழ்க்கையை அனுபவித்து வரும் மறைமுக ஜிஹாதிகள். பயங்கரவாதி முகமது அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்[1]. உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், மத்திய அரசு ஆகியவற்றின் உத்தரவின்படி நிறைவேற்றுப்பட்டுள்ள தண்டனைக்கு மாநில முதல்வர் ஒருவர் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது அரசியல்ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக நாளிதழ்கள் செய்தி வெளியிடுவதிலிருந்து, எப்படி இங்குள்ளவர்களும் மறைமுகமாக ஆதரிக்கின்றனர் என்று தெரிகிறது. அதற்கேற்றாற்போல சென்னையிலேயே, தூக்கிலிட்டதை எதிர்த்து சுவரொட்டிகளும் காணப்படுகின்றன.

Photo0647

(இந்திய) விரோத மனப்பான்மை உருவாகும்: இது தொடர்பாக ஒமர் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பது: “நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது போன்ற நடவடிக்கைகள் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் தங்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவும், (இந்திய) விரோத மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு அளித்துவிடும். அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே அவர்களால் கருதப்படுகிறது. இதனால் பெரும்பான்மையான காஷ்மீர் இளைஞர்கள் தவறான வழியில் சென்று விடவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எப்போதுமே நாம்தான் பாதிக்கப்படும் மக்கள் என்ற எண்ணமும், தங்களுக்கு நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையும் காஷ்மீர் மக்களிடம் உருவாக அனுமதித்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இப்போது சில கருத்துகளைக் கூறுகிறேன்”, என்றார். இவர்கள் ஏதோ இந்தியாவிற்காக வேலை செய்வது போலவும், நல்லவர்கள் போலவும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

Kashmir Door to Teach India a Lesson - Hafiz Saeed

சாவிலும் பிழைப்பைத்தேடும் ஜிஹாதி மனப்பாங்குள்ளவர்கள்: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், “அப்சல் குருவை தூக்கிலிடும் முன்பு அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காதது துரதிருஷ்டவசமானது. இந்த விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டியுள்ளது’ என்றார். தான் மரண தண்டனைக்கு எதிரானவன் என்று உறுதிபடப் பேசிய ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். ஆனால், அரசாங்கத்தின் தரப்பில் உரிய முறைகளைப் பின்பற்றித்தான் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற விஷயங்கள் தமிழக நாளிதழ்கள் வெளியிடவில்லை. ஜிஹாதிகளைப் பொறுத்த வரைக்கும் சாவு “ஷஹீதுத்துவம்” என்றுதான் ஏற்றுக் கொண்டு சாகின்றனர். மனிதகுண்டுகளே அவ்வாறுதான் உருவாகி வெடித்துக் கொண்டிருக்கின்றன.

“எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார் ஒமர்: ஜிஹாத் என்ற மதவெறியில் குண்டுகளை வெடித்து அப்பாவி மக்களை வயது கூட பார்க்காமல் குழந்தைகள், முதியவர், பெண்கள் என்று அனைவரையும் கை-கால்கள் சிதற, தலைகள் சிதற, ரத்தம் பீரீட்டு கொட்ட, சதைகள் சிதற குரூரக் கொலைப்பலிகள் செய்து வருவதை நினைந்து, உள்ளம் உருத்தத்தான் இப்படி கூறுகிறார் போலும் ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். அப்படியென்றால், யாருக்கு ரத்தவெறி இருக்கிறது?

காஷ்மீர் மக்களின் (முஸ்லீம்களின்) கருத்து: மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பலரில் அப்சல் குருவை மட்டும் தேர்வு செய்து மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளதாகக் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, “இது தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட தண்டனை அல்ல என்பதை காஷ்மீர் மக்களுக்கும் உலகுக்கும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அவருக்கு சீக்கிரமாகவே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் எனது கருத்து. இந்த தலைமுறை காஷ்மீர் மக்கள் தங்களை அப்சல் குருவின் அங்கமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர் மீதான விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்பதே காஷ்மீர் மக்களின் கருத்தாக உள்ளது. இதே கருத்துதான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எழுந்துள்ளது[2].

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள்? இந்திய ஜனநாயகத்தின் அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அப்சல் குரு தொடர்புடைய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு கருதப்படுகிறது. முன்னாள் பிரதமர் என்பவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? பஞ்சாப் முதல்வர் தனது அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். அவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? என்று ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பேயந்த் சிங் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது குறித்து அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். “நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வார்த்தைகளை விளக்குவது மிகவும் கடினம். ஒருமித்த அளவில் மக்களின் மனவோட்டத்தில் திருப்தி அடைவதன் மூலம் ஒருவரைத் தூக்கிலிட்டு விட முடியாது. சட்டப்படியும், நீதிப்படியும் அத்தண்டனை வழங்குவதற்கான காரணங்கள் அனைத்தும் வலுவாக இருக்க வேண்டும்.

நிறைவேற்றி இருக்கக் கூடாது: மரண தண்டனைக்காக காத்திருப்பவர்கள் குறித்தும், இதுவரை மரண தண்டனை பெற்றவர்கள் குறித்தும் வேறுவிதமான கேள்விகளை எழுப்ப நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அரசியல் நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டில் இருந்து மத்திய அரசு தன்னை காத்துக் கொள்ள வேண்டும். இது சட்டப்படியே எல்லாம் நடந்துள்ள என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் இருத்திருக்க வேண்டுமென்பதுதான் எங்கள் கட்சியின் கருத்து என்றார். இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசில் இருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு, “நாங்கள் விலகினால் அப்சல் குருவை மீண்டும் கொண்டு வர முடியும் என்றால் அரசில் இருந்து வெளியேறுவோம்’ என்று ஒமர் அப்துல்லா பதிலளித்தார். இவரும் இவரது உறவினரான மெஹ்பூபா முப்தியும் இப்படி மாறி-மாறி பேசியதும், எதிர்பார்த்தபடி, கலவரங்கள் ஆரம்பித்துள்ளன.

 காஷ்மீரில் 2ஆவது நாளாக ஊரடங்கு: ஸ்ரீநகர், பிப். 10:÷நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு சனிக்கிழமை (09-02-2013) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் கட்டுப்பாடில் உள்ள காஷ்மீரில்[3] பதற்றமான சூழ்நிலை நிலவுவதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவையும் மீறி காஷ்மீரில் பல இடங்களில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதிலிருந்தே அவர்களுக்கு முன்னமே விஷயம் தெரிந்துள்ளது என்றாகிறது. அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 36 போராட்டக்காரர்களுக்கும், 23 போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டம் பரவுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் செல்போன், இன்டர்நெட் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செய்தி தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்புவதை கேபிள் ஆபரேட்டர்கள் தவிர்த்து விட்டனர்.

 மோதலில் ஒருவர் சாவு: 6 பேர் படுகாயம்: ஸ்ரீநகர், பிப். 10: அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப்படை மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அதிகாரவட்டாரங்கள் தெரிவித்ததாவது: மத்திய காஷ்மீர் பகுதியில் உள்ள கந்தர்பால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை பாதுகாப்புப்படையினர் விரட்டியபோது தாரிக் அகமது பட் மற்றும் மேலும் 2 பேர் ஆற்றில் குதித்தனர். இதில் பட் உயிரிழந்தார் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் போலீஸார் இந்த தகவலை மறுத்தனர். படகில் சென்றபோது அது கவிழ்ந்ததில் ஒருவர் நீந்தி கரைசேர்ந்தார். மற்றொருவரை சிலர் காப்பாற்றினர். தாரிக் அகமது பட்டை காப்பாற்ற இயலவில்லை. அவரது சடலம் மீட்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, அவரது சாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் பாரமுல்லா மாவட்டம் வாட்டர்காம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது அவர்களை கலைந்துபோகச் செய்த பாதுகாப்புப் படையினருடன் இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

வீட்டுக் காவலில் கிலானி?: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஜாகீர் ஹுசேன் கல்லூரியில் பேராசிரியராக உள்ள எஸ்.ஏ.ஆர். கிலானியை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கிலானியை அதே ஆண்டு டிசம்பரில் தில்லி போலீஸார் கைது செய்தனர். எனினும், கிலானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை என்று 2003-ல் உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை காலையில் விசாரணைக்காக நியூ பிரெண்ட்ஸ் காலனியில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு கிலானியை போலீஸார் அழைத்துச் சென்றனர். அன்றைய தினம் இரவு 10 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் கிலானியின் வீட்டைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து வெளியே செல்லவும் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தில்லியில் வசித்து வரும் ஹுரியத் தலைவர்கள் சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக், பத்திரிகையாளர் இஃப்திகர் கிலானி ஆகியோரின் வீட்டு வாயிலில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் 2வது நாளாக தொடருகிறது ஊரடங்கு[4]: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவையும் மீறி, ஒரு சில இடங்களில், நேற்று முன்தினம், வன்முறை ஏற்பட்டது. இதில், 23 போலீசார் உட்பட, 36 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், காஷ்மீரில், நேற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தது. பதற்றமான இடங்களில், போலீசாருடன், துணை ராணுவப் படையினரும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். செய்தி சேனல்கள், மொபைல் போன், இணையதள சேவைகள், இரண்டாவது நாளாக, நேற்றும் முடக்கி வைக்கப்பட்டிருந்தன; பத்திரிகைகளும், வெளிவரவில்லை.  அப்சல் தூக்குக்கு எதிர்ப்பு காஷ்மீரில் போராட்டம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்[5].

 JKLF meeting at Islamabad

இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி கைகோர்த்துக் கொண்டு போராட்டம்: இஸ்லாமாபாதில் இந்தியவிரோதி யாஸின் மாலிக் மற்றும் பயங்கரவாதி ஹாபிஸ் சையீது தண்டனையை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். மொஹம்மது அப்சலின் உடலை ஒப்புவிக்கும் படி ஆர்பாட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி இருவரும் மேடையில் அருகருகில் உட்கார்ந்து கொண்டது, பேசிக்கொண்டது பற்றி செய்திகள் வந்துள்ளன[6]. இறுதிமரியாதை சடங்கும் நடத்தப் பட்டது. ஹாவித் சையதே செய்து வைப்பான் என்று அறிவிக்கப்பட்டாலும், ஜமத்-இ-இஸ்லாமி தலைவர் செய்து வைத்தார்[7].

Yasin Malik  sitting with Hafiz Saeed of Jamat-ud-Dawa protesting against the hanging of Mohammed Afzal Guru

காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம்: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான். கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[8]. இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.

மனைவியுடன் இருக்க வருடா-வருடம் பாஸ்போர்ட் கொடுக்கும் சோனியா அரசு[9]: யாஸின் மாலிக்கின் மனைவி பாகிஸ்தானில் இருக்கிறாள். இவளுடன் சேர்ந்து இருக்க வருடா-வருடம் சோனியா அரசு பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொடுத்து வருகிறது. இவனோ மனைவியுடனும் இருந்து, ஜிஹாதிகளுடனும் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறான். ஆனால், காங்கிரஸ்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. அம்மா சொன்னால் அப்படியே தலையாட்டி வருகிறார்கள், காலில் விழவும் தயாராக இருக்கிறர்கள். அம்மையார் தலைவி என்றால்தான், அவர்களுக்கு பதவி, பட்டம், சொத்து, பணம் எல்லாம். ஆகவே, இத்தகைய அடிமை வாழ்வு தொடர்ந்தே வருகிறது. இடைக்காலத்தில் இதைப் போன்ற இந்திடயர்கள் முஸ்லீகம்களுடன் துணைபோனதால் தான் முஹம்மது கோரி, முஹம்மது கஜினி, மாலிக்காபூர், பாபர், ஹுமாயூன் முதலியோர் இந்துக்களைக் கொன்று, சூறையாடினார்கள். இப்பொழுது இப்படி கூட்டணியில் குண்டு போட்டு கொன்று வருகிறார்கள், ஊழலில் கோடிகளை கொள்ளையடித்து வருகிறார்கள் இதுதான் வித்தியாசம்!

Mixed reactions- while people protested in Kashmir, others elsewhere in India celebrated

ஊடகங்களின் விஷமத்தனம்: இந்திய அரசு தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதைப் பொறுத்த வரைக்கும் உள்ள முறையை சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டினாலும், ஏதோ அரசு அவசரப்பட்டுவிட்டது, குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப் படவில்லை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் கதைகளை அவிஅத்துவிட ஆரம்பித்துள்ளனர். ஜிஹாதி-பயங்கரவாதிகளால், ஜிஹாதி-தீவிரவாதிகளால் மக்கள் கொள்ளப்பட்டபோது, இவர்கள் இவ்வாறு பேசவில்லையே, ஏன்? அப்படியென்றால் அவர்களுக்கு குடும்பங்கள், உரிமைகள் இல்லையா? இல்லை, அவர்கள் இவர்களை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் அல்லது வேற்றுமையானவர்கள்? இப்படி கேள்விகள் கேட்டால், விடை என்னவென்று மக்களுக்குப் புரிய ஆரம்பித்து விடுகிறது. அகவே, ஊடகங்களின் விஷமத்தனம் நன்றாகவே தெரிகிறது. அதனால்தான், ஒரு ஊடகம் இப்படி – இந்தியர்களில் சிலர் எதிர்த்து போராட்டம் நடத்தினாலும், சிலர் கொண்டாடுகிறார்கள் என்று போலித்தனமான-விஷமத்தனமான படத்தை வெளியிட்டுள்ளார்கள்[10]. சிறுவனை உயிர்தியாகியாக்கிய இந்திய ராணுவம் என்று பாகிஸ்தான் நாளிதழ்[11] கூறுகிறது!

பாகிஸ்தானின் விரோதத்தனம்: நட்பு என்று சொல்லிக் கொண்டு, தலைகளைத் துண்டாடி, துரோகச் செயல்களில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய பாகிஸ்தான், கேடு கெட்ட செக்யூலார் இந்தியாவை இந்த சமயத்திலும் நன்றாகவே சாடியுள்ளது[12]. இந்தியா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பாடம் சொல்லிக் கொடுக்கிறது[13]. அதை வெட்கம்-மானம்-சூடு-சொரணை இல்லாத உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கேட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

வேதபிரகாஷ்

11-02-2013


[2] இதற்கேற்றார்போல, அருந்ததிராய் போன்ற கூட்டத்தார் பேசி வருகிறார்கள்.

Sujato Bhadra, a Kolkata-based member of the Association for Protection of Democratic Rights, said that the higher courts had not addressed Guru’s claims that his trial had been faulty. “The government carried out the execution without allowing him to exhaust a judicial recourse after the president rejected his mercy petition,” Bhadra said.”This is a blatant miscarriage of justice.”

[3] “Indian administered Kashmir”, “India Occupied Kashmir”, Indian Held Kashmir (IHK) என்றுதான் பாகிஸ்தானிய மற்றும் காஷ்மீர முஸ்லீம்கள், ஊடகவாதிகள் கூறி-எழுதி வருகின்றனர்.

http://dawn.com/2013/02/11/at-least-two-dead-in-indian-administered-kashmir/

[6] On Sunday afternoon, Mr. Saeed reached the venue of Mr. Malik’s hunger strike and the two met briefly.

http://www.thehindu.com/news/national/centre-probing-yasin-maliks-alleged-passport-violations/article4407896.ece

[7] Though JuD activists had claimed that Mr. Saeed would lead the ‘ghayabana namaz-e-janaza’ (funeral prayers in absentia) for Afzal at the protest site, the prayers were led by a Jamat-e-Islami leader.

[12] Commenting on the execution of Kashmiri leader Afzal Guru by India, Pakistan on Monday reaffirmed its solidarity with the people of Jammu and Kashmir and expressed serious concern on high-handedness of the Indian government with Kashmiris.

http://paktribune.com/news/Pakistan-voices-concern-on-Indias-treatment-of-Kashmiris-257326.html

இந்தியர்களை குறிவைத்து தாக்குதல் காபூல் படுகொலை குறித்து தகவல்!

மார்ச் 4, 2010

ஆப்கானிஸ்தானில் தலிபானின் இந்தியர்களை குறிவைத்து தாக்குதல், படுகொலைகள், முதலியன

இந்தியர்கள் குறிவைத்துத் தாக்கப்படுதல்[1]: பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவதியே திறனற்று இருக்கும் நிலையில், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை குறிவைத்து தாக்கினார் என்ற விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும், “இந்தியர்கள் யார் என்று தெரிந்து கொண்டுதான் வந்தனர்”, என்று குறிவைத்துத்தான் வந்துள்ளனர், என்றெல்லாம் உள்ளன. ஆகவே, இனி ஆப்கானிஸ்தானில்ற்குச் சென்று வேலை செய்வோம் என்று இந்தியர்கள் செல்லவேண்டியதில்லை, சாகத்தேவையில்லை. கோடிக்கணக்கில் கொட்டி முஸ்லீம்களின் ஆதரவு பெறுகிறோம் என்று இந்த கேடுகெட்ட சோனியா அரசு நாடகமும் தேவையில்லை.

இந்திய முஸ்லீம்கள் தலிபானை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை: புனரைப்பு வேலை என்று சரான்ஜு டெல்ராம் நெடுஞ்சாலை, பல அணைக் கட்டுகள், மின் திட்டங்கள் போன்ற பணிகளுக்காக இந்தியப் படையினரும், இந்திய இன்ஜினியர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களை தாலிபான் பயங்கரவாதிகள் அடிக்கடி கடத்துவதும், கொடூரமாகக் கொலை செய்து உடலை “காபிர்களுக்கு இதுதான் கதி” என்ற எச்சரிக்கை வாசகத்துடன் அனுப்புவது தெரிந்தவிஷயமே.

தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமுமுக ஆர்பாட்டம் / சாலைமறியல் நடத்தவில்லை: இந்தியர்களுக்கும் ஆசைவிடவில்லை. அயல்நாடு சென்றால் சம்பாதிக்கலாம் என்று செல்கின்றனர், ஆனால், பலிக்கடா போல சாகின்றனர். கேரளாவைச் சேர்ந்த டிரைவர் மணியப்பன், ஆந்திராவைச் சேர்ந்த இன்ஜினியர் சூரியநாராயணா ஏப்ரல் 29, 2006ல் தலையறுத்து கொலைசெய்ததை இந்திய முஸ்லீம்கள் தடுக்கவில்லை[2]. ஆப்கனில் இத்தாலி பேக்கரி நிறுவனத்தில் வேலை செய்த கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த சைமனை தாலிபான்கள் கடத்திச் சென்றபோது, விட்டுவிடுமாறு கேட்டுக் கொள்ளவில்லை. கை வெட்டப்பட்டப்பிணமாக கண்டெடுக்கப் பட்டபோதும் முஸ்லீம்கள் கண்டுகொள்ளவில்லை.  ஆப்கனின் நிம்ப்ரோஸ் மாகாணத்தில் இந்திய எல்லை சாலை நிர்மாணப் படையின் இன்ஜினியரான கிருஷ்ணகிரி, கே.திப்பனப்பள்ளியைச் சேர்ந்த கோவிந்தசாமி, இன்னொரு இன்ஜினியரான காசியைச் சேர்ந்த மகேந்திர பிரதாப் சிங் ஆகியோர் தாலிபான்களின் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டபோதும் மூச்சுபேச்சு இல்லை. தமுமுக எந்த போராட்டமும் நடத்தவில்லை. இருப்பினும், விடாப்பிடியாக, ஆப்கானிஸ்தானின் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் முஸ்லீம்களின் நன்மதிப்பைப் பெறலாம் என்று இந்தியா நினைப்பது மடத்தனமானது. கர்ஸாய் மிகவும் தெளிவாக சொல்லியுள்ளார், முஸ்லீம் எனும்போது, நாங்கள் பாகிஸ்தானிற்குத்தான் ஆதரவு தருவோம் என்று.

நித்யானந்தா, ரஞ்சிதா விஷயங்களில் உள்ள ஆர்வம் இதில் இல்லை: காபூலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், இந்தியர்களைக் குறிவைத்துத்தான் வந்துள்ளனர் என்றும், அந்த இந்தியர்கள் யார் என்று தெரிந்து கொண்டுதான் வந்தனர் என்றும், வாஷிங்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகை தெரிவித்துள்ளது. காபூலில் உள்ள இரண்டு ஓட்டல்களில் சமீபத்தில் பயங்கரவாதிகள் புகுந்து குண்டு வீசித்துப்பாக்கியால் சுட்டு பலரைக் கொன்றனர். இவர்களில் ஆறு பேர் இந்தியர்கள்; ஒருவர் இத்தாலியர்; ஒருவர் பிரான்ஸ் நாட்டின் சினிமா தயாரிப்பாளர்; மூன்று ஆப்கன் போலீஸ் அதிகாரிகள்; பொதுமக்கள் நால்வர், ஒரு அடையாளம் தெரியாத நபர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து ஆப்கன் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக, “தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் கூறியிருப்பதாவது: காபூலில் தாக்குதல் நடத்த வந்தவர்களில், நான்கு பேர், பெண்களைப் போல பர்தா அணிந்தபடி அதற்குள் ஆயுதங்களை மறைத்துக் கொண்டு வந்துள்ளனர். அவர்களில் ஒருவன், வெடிபொருட்கள் நிறைந்த வேனுக்குள் மறைந்து கொண்டான். மற்ற மூவரும் இரண்டு ஓட்டல்களில் புகுந்துள்ளனர்.ஆப்கன் புலனாய்வுப் பிரிவு செய்தித் தொடர்பாளர் சயீது அன்சாரி கூறுகையில், “சம்பவம் நடக்கத் தொடங்கிய பின், ஆப்கன் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அசோசியேட்டட் பிரஸ்சுக்கு போன் செய்து சம்பவத்துக்கு தலிபான்கள் பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், வந்தவர்கள் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.,யோடு தொடர்புடைய லஷ்கர் -இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அவர்கள் ஓட்டலுக்குள் புகுந்தவுடன், “எங்கே அந்த இந்திய இயக்குனர்?’ என்று கத்தியபடி வந்தனர். மற்ற இருவரும் இந்தியர்களைத்தான் தேடினர். அவர்கள் தலிபான்களாக இருந்தால் அவர்களுக்கு இந்தியர்களைத் தெரிய வாய்ப்பில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், காபூலிலுள்ள அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், ஆப்கன் தலிபான்களின் ஒரு பிரிவான ஹக்கானி பிரிவுதான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். ஏற்கனவே, காபூலிலுள்ள இந்தியத் தூதகரத்தை 2008ல் தாக்கியது அவன் குரூப்தான் என்று இந்தியாவும் ஆப்கனும் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியுள்ளன.ஹக்கானி தலிபான்கள், பாகிஸ்தானின் வடக்கு வாசிரிஸ்தானில் செயல்பட்டு வருகின்றனர். லஷ்கருக்கும், தலிபான்களுக்கும் தொடர்பு இருப்பதை, பாகிஸ்தான் ராணுவத்தின் பிரிகேடியர் முகமது சாத் உறுதிப்படுத்தியுள்ளார். ஹக்கானி பிரிவில் லஷ்கர் பயங்கரவாதிகள் பயிற்சி எடுத்திருப்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

2003லிருந்து 2011 வரை ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள் முதலியன[3]

2011

May 10, 2011: Afghanistan National Intelligence Agency spokesperson Lutfullah Mashal said that Inter-Services ISI hired two persons, identified as Sher Zamin and Khan Zamin, to kill the Indian Consul General of Jalalabad province.

2010

December 16, 2010: Indian embassy in Kabul and four consulates in Afghanistan have been put on high alert following intelligence inputs that the Taliban militants may be preparing for a strike at Indian establishments.

October 11, 2010: Two Indian nationals were killed in a missile attack launched by the Taliban militants on an Indian NGO’s office in Kunar province of Afghanistan. Qari Omar Haqqani, a spokesperson for the Afghan Taliban, told reporters from an undisclosed location that the militants had attacked the office of the Indian NGO with missiles in which three people, including two Indian workers, were killed. The nationality of the third person who died in the attack is yet to be ascertained.

February 26, 2010: The Taliban militants on carried out coordinated suicide attacks at two hotels in Kabul, the capital city of Afghanistan, killing at least nine Indians, including two Major-rank Army officers. At least 10 others, including five Indian Army officers, were injured in the strike that killed eight others, including locals and nationals from other countries. The bombers, believed to be three in number, struck at the guest houses, particularly at Park Residence, rented out by the Indian Embassy for its staffers and those linked to India’s developmental work in Afghanistan.

2009

October 8, 2009: Targeting the Indian embassy in Kabul for the second time, a Taliban suicide bomber blew up an explosives-laden car outside the mission, killing 17 persons and injuring over 80, including three Indo-Tibetan Border Police (ITBP) soldiers. The embassy staff, however, was unhurt. The Taliban claimed responsibility for the attack and identified the bomber as Khalid, Al Jazeera TV channel said.

February 9, 2009: Simon Paramanathan, an Indian from Villupuram in Tamil Nadu held captive by militants in Afghanistan for nearly four months is dead, his family and the Ministry of External Affairs (MEA) said in New Delhi. Simon, employed in the Italian food chain Ciano International, was abducted in October 2008. The company had been negotiating with the captors belonging to an unnamed militant outfit, which had sought a ransom of USD 200000. However, the negotiations “to work out a reasonable ransom” reportedly failed to break the deadlock. An MEA official said in New Delhi that Afghanistan authorities informed that Simon died while in the custody of his abductors.

2008

December 24, 2008: A 38-year-old man from Tamil Nadu working with a food store attached to Italian soldiers deployed in Afghanistan, has been kidnapped by Afghan militants in Herath province, police said, according to Rediff. Simon, who hails from Kalakurichi Village in Villupuram District, was kidnapped by a group calling itself Mujahideen on October 13, 2008, police said. Simon was working with an Italian food store supplying food to its soldiers in Afghanistan. He was kidnapped along with two other company employees while they were delivering food at the International Security Assistance Force camp in Bagram air base, the sources said.

July 7, 2008: A suicide attack on the Indian Embassy in Kabul killed 41 persons and injured over 140. The killed included two senior diplomats, Political Counsellor V. Venkateswara Rao and Defence Adviser Brigadier Ravi Datt Mehta, and Indo-Tibetan Border Police (ITBP) staffers Ajai Pathaniya and Roop Singh.

June 5, 2008: An ITBP trooper was killed and four others injured in an attack by the Taliban in the south-west Province of Nimroz.

April 12, 2008: Two Indian nationals, M.P. Singh and C. Govindaswamy, personnel of the Indian Army’s Border Roads Organisation (BRO), were killed and seven persons, including five BRO personnel, sustained injuries in a suicide-bomb attack in the Nimroz Province.

January 3, 2008: In the first-ever suicide attack on Indians in the country, two ITBP soldiers were killed and five others injured in the Razai village of Nimroz Province.

December 15, 2007: Two bombs were lobbed into the Indian consulate in Jalalabad, capital of the Nangarhar province in Afghanistan. There was however, no casualty or damage.

2006

May 7, 2006: An explosion occurred near the Indian Consulate in the fourth police district of the western Herat Province. There were no casualties.

April 28, 2006: An Indian telecommunications engineer working for a Bahrain based firm in the Zabul Province, K Suryanarayana was abducted and subsequently beheaded after two days.

February 7, 2006: Bharat Kumar, an engineer working with a Turkish company, was killed in a bomb attack by the Taliban in the western province of Farah.

2005

November 19, 2005: Maniappan Kutty, a driver working with the BRO’s project of building the Zaranj-Delaram highway, was abducted and his decapitated body was found on a road between Zaranj, capital of Nimroz, and an area called Ghor Ghori, four days later.

2003

December 9, 2003: Two Indian engineers – P Murali and G Vardharai working on a road project in Zabul province were abducted. They were released on December 24 after intense negotiations by Afghan tribal leaders with the Taliban militia, which was demanding the release of 50 imprisoned militants in return for the Indian engineers.

November 8, 2003: An Indian telecommunications engineer working for the Afghan Wireless Company was shot dead.


[1] தினமலர், ,இந்தியர்களை குறிவைத்து தாக்குதல் காபூல் படுகொலை குறித்து தகவல்; மார்ச் 04,2010,00:00  IST; http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4971

[2] அடுத்த நாளில் மே 1, 2006 – காஷ்மீரில் 22 இந்துக்கள் கொலைசெய்யப்படுகின்றனர். இதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.