Archive for the ‘டைகர் மேமன்’ category

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (4)

ஓகஸ்ட் 2, 2015

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (4)

 

யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி

யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி

கே. வீரமணி, யாகூப் மேமனுக்கு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஏன்?[1]: தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள மனித உரிமை மனிதநேய அறிக்கை என்று மேலேயுள்ள விசயங்களைத் தொகுத்து கே. விரமணி வெளியுட்டுள்ளார். மும்பைக் குண்டுவெடிப்புத் தொடர்பாக கைது செய்யப் பட்டு சிறையிலிருந்த யாகூப் மேமனுக்கு அவசர அவசர மாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதானது –  பல விமர்சனங்களுக்கு வழி வகுத்து விட்டது[2].

  1. மகாராட்டிர மாநிலத்தில் முசுலிம்களுக்கு எதிரான கலவரத்தில் முசுலிம்கள் கொல்லப்பட்டனரே! அதற்குக் காரணமானவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
  2. நீதிபதி கிருஷ்ணா ஆணையம் குற்றவாளிகளைப் பட்டியலிட்டுக் காட்டியதே – அன்றைய பிஜேபி சிவசேனா ஆட்சி ஒரே ஒரு வரியில் கிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கையை ஏற்க மறுப்ப தாகக் கூறிடவில்லையா?
  3. மும்பைக் குண்டு வெடிப்பு என்பது அயோத்தி பாபர் மசூதி இடிப்பின் எதிரொலிதான்; நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அய்யப்பாடு- மும்பை குண்டு வெடிப்புக்குக் காரணமான பாபர் மசூதியை இடிப்பதற்குக் காரணமானவர்கள் இதுவரை தண்டிக்கப்படாதது ஏன்? இன்னும் சொல்லப் போனால் வழக்கு விசாரணை முறையாகக் கூடத் தொடங்கப்படவில்லையே ஏன்?
  4. இதன் பொருள் என்ன? நீதித்துறையும், ஆட்சித் துறை யும் நபர்களைப் பொறுத்து வளையும் – நெளியும் என்பதைத்தானே இது காட்டுகிறது! மனுதர்மத்தை எடுத்துக் காட்டி தீர்ப்பு வழங்குபவர்கள் இன்னும் இருக்கிறார்களே!
  5. அத்வானியின் ரத யாத்திரை (1991 அக்டோபர்) காரணமாக ஏற்பட்ட மதக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 564 பேர்.
  6. மாலேகான் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி களான பெண் சாமியார் பிரக்யாசிங், சாமியார் அசிமானந்த், கர்னல் புரோகித் உள்ளிட்டோருக்கான வழக்கு விசாரணை ஏன் முடிக்கப்படவில்லை – உரிய தண்டனை ஏன் வழங்கப் படவில்லை?
  7. தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படட்டும்! தூக்குத் தண்டனையே கூடாது; இது மிகவும் காட்டு விலங்காண்டித்தனம்; மனித நேயத்துக்கும், உரிமைக்கும் எதிரானது என்று குரல் உலகெங்கும் கிளர்ந்தெழும் இந்தக் கால கட்டத்தில், இப்படியொரு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட முறை கண்டிக்கத்தக்கது!
  8. மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் காட்டிய இந்த அசாதாரண நடைமுறைகள் மக்களின் நம்பிக்கையைச் சிதறடித்து விடும். யாகூப் மேமன் தூக்குத் தண்டனையே கடைசியாக இருக்கட்டும்!
Yakub versus prohit, etc

Yakub versus prohit, etc

தி இந்துவின் ஒருதலைப் பட்சமான கருத்துத் திணிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள பெரும்பாலான விவரங்கள் “தி இந்து” (தமிழ்) இதழிலிருந்து எடுத்தாளப்பட்டவை ஆகும். தொடர்ந்து, தூக்குத்தண்டனை கூடாது, மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று யாகூப் மேமன் தூக்கிற்கு முன்னரும் பின்னரும் அதிகமாகவே செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆனால், ஏன் தூக்குத்தண்டனை அல்லது மரணதண்டனை தேவை, மனிதத் தன்மையற்ற குரூர தீவிரவாதிகளுக்குக் கருணைக் காட்டக் கூடாது, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை, திட்டமிட்டுக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்ற கருத்தை யாரிடமிருந்தும் பெற்று வெளியிடவில்லை. ஒருவேளை அத்தகைய கருத்தே தேவையில்லை என்று “தி இந்து” மற்றும் அதன் பின்னணியில் இருப்பவர்கள் முடிவு செய்திருப்பது போலிருக்கிறது. பிறகு, எப்படி அவர்களை சமநோக்குள்ளவர்கள், பாரபட்சமற்றவர்கள், உள்ள நாட்டி சட்டங்களை மதிப்பவர்கள், நீதிமன்றங்களை போற்றுபவர்கள் என்று கருத முடியும்?

யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி, நாத்திகம் கூட்டு

யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி, நாத்திகம் கூட்டு

மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாகக் மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும்: விக்கிப்பீடியாவின் விளக்கமும் பாரபட்மாக இருக்கிறது[3], “மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம்[4] தனது நடவடிக்கைகளூடாகக் மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும். கொலை போன்ற கொடூரமான குற்றங்களுக்கும், பாலியன் வன்புணர்வு போன்றவையும் தவிர்த்து போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்கும் பல உலக நாடுகள் மரண தண்டனையை தருகின்றன மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.” சரி, தீவிரவாதம், பயங்கரவாதம், ஜிஹாத் பற்றி ஒன்றும் விவாதங்கள் இல்லையா?

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்.2

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்.2

மும்பையில் பயங்கரவாத தாக்குதல்கள் (1993 முதல் 2011 வரை): மும்பை, இந்தியாவின் வணிக-வியாபார தலைநகரம், பொருளாதார மையம் என்பதனால், தொடர்ந்து குண்டுவெடிப்பில் தாக்கப்பட்டு வருகின்றது. இதில் அப்பாவி-பொது மக்கள் பலிகடாக்களாக குரூரமாகக் கொல்லப்பட்டு வருகிறர்கள்.

 

  1. 12 மார்ச் 1993 – 13 வெடி குண்டுகள் கடுமையாக வெடித்ததில் 257 பேர் பலியாகினர்
  2. 6 டிசம்பர் 2002 – கட்கோபர் எனும் இடத்தில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர்
  3. 27 ஜனவரி 2003 – வைல் பார்லேவில் ஒரு மிதிவண்டியில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் .
  4. 14 மார்ச் 2003 – முலுண்டில் ரயில் குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகினர்,
  5. 28 ஜூலை 2003 – காட்கோபரில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர் .
  6. 25 ஆகஸ்ட் 2003 – இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் நுழைவாயில் அருகே காரில் இரண்டு வெடிகுண்டு வெடித்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்
  7. 11 ஜூலை 2006 – தொடர் 209 கொலை, ரயில்களில் ஏழு குண்டுகளில் போகவில்லை
  8. 26 நவம்பர் 2008 முதல் 29 2008 நவம்பர் வரை – ஒருங்கிணைந்து நிகழ்த்தப்பட்ட தொடர் தாக்குதலில், குறைந்தது 172 பேர் கொல்லப்பட்டனர்.
  9. 13 ஜூலை 2011 – வெவ்வேறு இடங்களில் மூன்று ஒருங்கிணைந்த குண்டு வெடிப்புகள்; 26 பேர் கொல்லப்பட்டனர்.

இவற்றில், நிச்சயமாக பழிவாங்கும் எண்ணம் எல்லைகளை மீறி, இந்தியாவையே அழிக்க வேண்டும் என்ற வெறித்தனம், குரூர சதிதிட்டம், நாசகாரத்தனம் முதலியவை அடங்கியிருப்பது வெளிப்படுகிறது. இது தீவிரவாதத்தை விட மிக-மிக அதிகமானது. அதனை எப்படி, எவ்வாறு, ஏன் அறிவிஜீவிகள் உணராமல் இருக்கின்றனர் என்று புரியவில்லை.  ஒருவேளை அவர்களும் அந்த அதி-தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா என்று ஆராய வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

02-08-2015

[1] விடுதலை, யாகூப் மேமனுக்கு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஏன்? , சனி, 01 ஆகஸ்ட் 2015 14:47 http://www.viduthalai.in/e-paper/106140.html

[2] கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம், சென்னை, யாகூப் மேமனுக்கு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஏன்? , விடுதலை, 1-8-2015

[3]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88

[4] நீதிமன்றங்களை அவ்வாறு கூறலாமா, சரி பிறகு உயிர் எடுப்பவர்களை, கொலைகாரகளை, தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை என்னென்று கூறுவார்கள்?

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (2)

ஓகஸ்ட் 2, 2015

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (2)

தொல்.திருமாவளவன் (விசிக தலைவர்): “யாகூப் மேமனின் விசாரணையில் பல்வேறு குறைகள் இருந்ததை அவரை சரணடையச் செய்த ரா உளவுப்பிரிவின் முன்னாள் அதிகாரி பி. ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். உலகம் முழுவதும் 140 நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்தியாவும் மரண தண்டனையை முற்றாக கைவிட வேண்டும். மரண தண்டனைக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்”. கொசுரு: இந்தியாவின் மனசாட்சியையே உலுக்கும் வகையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அதுவும் அவரது பிறந்த நாளில், இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்[1]. [பாரபட்சத்துடனும், முஸ்லிம்களுக்கு ஆதரவாக கண்மூடித்தனமாக பேசி வரும் இவரது கருத்தை யார் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. அண்டைநாடுகளான பஙளாதேசம் மற்றும் பாகிஸ்தானிலேயே தீவிரவாதிகளை தூக்கிட்டு வருகிறார்கள். அது இவருக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே. அரபு நாடுகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை].

அசாசுதீன் ஒவைஸி தீவிரவாத வாதங்கள்: அசாசுதீன் ஒவைஸி உடனே, பாபு பஜரங்கி, மாயா கொடானி, காலனெல் புரோஹித், சுவாமி அஸீமாநத் முதலியோரும் தூக்கில் போடப்படவேண்டும் என்றார்[2].  “பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்தி சிங் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இருந்ததைப் போன்ற அரசியல் பின்புலம் யாகூப் மேமனுக்கு இல்லாமல் போனதே அவர் தூக்கிலிடப்பட காரணமாக அமைந்தது. இதைப் பின்பற்றி பாபர் மசூதியை இடித்தவர்களையும் தூக்கிலிட வேண்டும்” முன்னர் யாகுப் மேனன் முஸ்லிம் என்பதனால் தான் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது என்றெல்லாம் பேசினார். இவரும், இவரது சகோதரனும் வாய்-தீவிரவாதப் பேச்சுகளில் வல்லவகள். இருப்பினும் ஊடகங்கள் இவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்து பேச வைத்து, அவற்றை பிரபலப்படுத்தி, பரப்பி வருகிறார்கள். [அண்டைநாடுகளான பஙளாதேசம் மற்றும் பாகிஸ்தானிலேயே தீவிரவாதிகளை தூக்கிட்டு வருகிறார்கள். அவர்கள் எல்லோருமே முஸ்லிம்கள் தாம். பிறகு அவர்கள் முஸ்லிம்கள் என்றாலும், ஏன் தூக்கில் போடுகிறர்கள், மரணதண்டனையை நிறைவேற்ருகிறார்கள்? அது இவருக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே. அரபு நாடுகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை].

எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ் (அகில இந்திய தேசிய லீக்)[3]: “அப்துல் கலாம் என்னும் மாமேதை மறைந்ததற்காக உலக மக்கள் அனைவரும் கவலை கொண்டுள்ளனர். இந்த வேளையில், யாகூப் மேமனை தூக்கிலிட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது. தானாக சரணடைந்த யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றியது இஸ்லாமிய சமூகம் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” [இப்படி அரைகுறையாக இவர் கூறியிருப்பதிலிருந்தே, இவருக்கு விசயம் தெரிவில்லை அல்லது மறைக்கிறார் என்றாகிறது]

கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி (எஸ்.டி.பி. மாநிலத் தலைவர்): “முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் நடக்கும் நாளில், யாகூப் மேமனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் மூலம் மரண தண்டனை ஒழிப்பு குறித்த கலாமின் கோரிக்கையும் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.” [இங்கும் கலாமின் கருத்து திரிக்கப் பட்டிருக்கிறது. தீவிரவாதிகளைப் பொறுத்த வரையிலும், அடுத்தவர்களின் உயிரை பறிக்க அவர்களுக்கு உரிமையில்லை, அதனால், சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளார்]

Supporters of Memon against hanging 2015

Supporters of Memon against hanging 2015

அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் கருணை மனு கொடுத்தது: செக்யூலரிஸ வகையறாக்கள் அப்படி-இப்படி என்று சுற்றி வளைத்து, மரண தண்டனை கூடாது என்ற வாதத்தை குறிப்பிட்ட ஊடகங்கள் வெளிப்படையாக வைத்தன[4]. இதில் வேடிக்கையென்னவென்றால், ராஜிவ் காந்தி கொலைகாரர்களின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப் பட்டு, அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதுவும் குறிப்பட்ட மாநில மக்களை தாஜா செய்வதற்காக செய்யப் பட்டது என்று செக்யூலரிஸ வகையறாக்கள் திரிபு விளக்கம் அளித்தன. முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவில் யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் கரத் (மார்க்சிஸ்ட் கம்யூ.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), சிவா (தி.மு.க.) உள்ளிட்ட கட்சித்தலைவர்களும்,  பா.ஜனதா எம்.பி. சத்ருகன் சின்கா, மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி, நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் என பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களும் கையெழுத்து இட்டனர்[5].

Tejas, 1993 victim-Mehta family pays tribute every year

Tejas, 1993 victim-Mehta family pays tribute every year

257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்!: கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அப்பாவி 257 மனிதர்களின் உயிர்களைப் பற்றி இந்த மனிதர்கள் கவலைப் பட்டனரா என்று தெரியவில்லை. காயமடைந்த700க்கும் மேற்பட்ட மனிதர்களைப் பற்றியும் இரக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  தீவிரவாதிகள் இரக்கத்துடனா குண்டுகளை வைத்து வெடிக்க வைத்தனர்? கருணையுடனா அத்தனை அப்பாவி மக்களைக் கொன்றனர். கை-கால் பிய்ந்து, ரத்தம் பீய்ச்சி அடித்து, உடல்கள் சிதறிய போது, இரக்கம், கருணை, மனிதாபமானம் முதலிய குணாதரியங்களைப் பற்றி இவர்கள் சிந்தித்துப் பார்த்தார்களா? எந்த உயிரையும் எடுக்க மனிதனுக்கு உரிமையில்லை என்றால், இவ்வுயிர்களை எப்படி தீவிரவாதிகள் எடுத்தார்கள்?

1993 victim-pays tribute every year

1993 victim-pays tribute every year

பலிக்கடாக்களுக்கு நீதி தாமதப்படுத்துவது ஏன்?: பலிக்கடாக்களின் உறவினர்களுக்கு நீதி நேரம் தாழ்த்தித்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. வினாயக் தெவ்ருக்கர் தனது 19 வயதான சகோதரி சசிகலா மற்றும் 11 வயது சகோதரன் வசந்த் முதலியோரை சென்சுரி பஜார், வோர்லியில் பிணமாக ரத்தம் மற்றும் உடல் பாகங்களில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. ஐந்து-மணி தேடலுக்குப் பிறகு மருத்துவ மனையில் அவர்களது உடல்களைக் கண்டு பிடித்தனர்[6]. 36 வயதாகும் தெவ்ருக்கர் மனப்பிராந்தியுடன் வாழ்ந்து வருகிறார். “எங்கள் பெற்றோர் அதிலிருந்து மீளவில்லை…..கொலையாளி சீக்கிரம் தண்டனை பெற்றால் தான், ஓரளவிற்கு பாதிக்கப்பட்டவருக்கு மனநிம்மதி கிடைக்கும்.. 22 ஆண்டுகளுக்குப் பிறகு அவன் தண்டனை பெற்றால்…..இதெல்லாம் அரசியலாகி விட்டது. நாளைக்கே ஒரு குண்டு வெடிக்கலாம், நான் அத்தகைய நிகழ்சியுடன் சேர்ந்து வாழ வேண்டியதுதான். நான் எனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியதுதான். பலசாலிகளிடம் தான் நீதியுள்ளது. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது”, என்று சோகத்தோடு கூறினார்[7].

A woman pays homage to victims of the 1993 Mumbai serial blasts, at one of the blast sites in Mumbai

A woman pays homage to victims of the 1993 Mumbai serial blasts, at one of the blast sites in Mumbai

பலிக்கடாக்களின் சோகக்கதையும், மனநிலையும்[8]: பாதிக்கப்பட்ட 1,600 குடும்பத்தினர் யாகுப் தூக்கிலப்படுவதில் உறுதியாக இருக்கின்றனர். தாய், தந்தை, மகள், மகன், சகோதரன், சகோதரன், மாமா, மாமி என்றெல்லாம் இழந்தவர்கள் இதில் மாற்றுக் கருத்து எதையும் கொள்ளாவில்லை-சொல்லவில்லை. உண்மையில் கருணை மனுவை அவன் கொடுத்தது, நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது தான் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. துஸார் தேஷ்முக், “பலரது உடல்கள் கிடைக்கவில்லை. சிலருக்கு உடல் பகுதிகள் தான் கிடைத்தன. கிடைத்ததைக் கொண்டு இறுதி சடங்குகளை முடித்த குடும்பங்கள் ஏராளம். இந்நிலையில் ஒரு கொலைகாரனின் கருணை மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. கருணையே இல்லாத அவன் எப்படி கருணை மனு போடுகின்றான் என்றே தெரியவில்லை. அம்மனு விசாரணைக்குள்ளது என்பது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. நாங்கள் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்”, என்று சோகக் கதையினை விளக்கினார். 1993 குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட அனைவரும், யாகூப் துக்கிலிடப்படவேண்டும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுதுதான், இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு கொஞ்சமாவது சாந்தி கிடைக்கும் என்கிறார்கள்[9]. பாதிக்கப்பட்ட 1,600 குடும்பத்தினர், முதலமைச்சருக்கு அவன் தூக்கிலிடப்படவேண்டும் என்று மனு கொடுத்தனர்[10]. மஹாராஷ்ட்ர அசெம்பிளிக்கு வெளியே கூடி தங்களது கோர்க்கையினை வெளிப்படுத்தினர்[11].

© வேதபிரகாஷ்

02-08-2015

[1]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/article7481183.ece

[2] All India Majlis-e-Ittehadul Muslimeen leader and Hyderabad parliamentarian Asaduddin Owaisi said the government should ensure death sentence in all similar cases. “Death sentence should also be given to Babu Bajrangi, Maya Kodnani, Col. Purohit and Swami Aseemanand,” he said.

http://timesofindia.indiatimes.com/india/Political-war-of-words-erupts-over-Yakub-Memons-execution-Owaisi-says-Kodnani-and-others-should-also-get-death/articleshow/48281117.cms

[3]  தி இந்து, இணையதள செய்திப் பிரிவு, அரசியல் விவாத மேடைக்கு வித்திட்ட யாகூப் தூக்கு மேடை, Published: July 31, 2015 10:06 ISTUpdated: July 31, 2015 10:08 IST

[4] http://www.ndtv.com/blog/lessons-from-the-yakub-memon-execution-1202101

[5] http://www.dailythanthi.com/News/India/2015/07/27021144/Yaqub-Memon–death-penaltyTo-cancel-Petition-to-the.vpf

[6] http://www.hindustantimes.com/india-news/yakub-memon-hanging-justice-comes-too-late-for-1993-mumbai-blasts-victims-kin/article1-1371806.aspx

[7] Badri Chatterjee, Justice comes too late for 1993 Mumbai blasts victims’ kin, Hindustan Times, Mumbai, Updated: Jul 22, 2015 11:14 IST

[8] Family members of some of the victims of 1993 Mumbai blasts on Wednesday demanded that Yakub Memon to be hanged and submitted a mass petition to Chief Minister Devendra Fanavis in this regard

http://www.ibnlive.com/videos/india/families-of-1993-mumbai-blasts-victims-demand-yakub-to-be-hanged-1027379.html

[9] http://www.dnaindia.com/mumbai/report-1993-blasts-death-to-yakub-memon-will-give-solace-to-victims-says-bjp-mp-kirit-somaiya-2106875

[10] Family members of the victims of 1993 Mumbai blasts on Wednesday 29-07-2015 demanded that Yakub Memon to be hanged and submitted a mass petition to Chief Minister Devendra Fanavis in this regard. “Yakub should be hanged,” Tushar Deshmukh, who lost his mother in the blasts, said in a memorandum to Fadnavis at Vidhan Bhawan here. “The families have suffered. We demand that the death sentence be carried out,” Deshmukh said. He said the memorandum was signed by of 1600 family members of the victims.on Tuesday 28-07-2015, the Supreme Court set up a three-judge bench to decide Yakub’s fate after a two-judge bench was split on his plea seeking stay of his execution scheduled for tomorrow (30-07-2015). On March 12, 1993, 12 coordinated blasts had rocked Bombay, as the city was then known, leaving 257 dead and over 700 injured.

http://www.ibnlive.com/news/india/hang-yakub-demand-kin-of-blast-victims-1027262.html

[11] http://www.odishanewsinsight.com/breakingnews/1993-mumbai-blast-victims-demonstrate-outside-maha-assembly/