Archive for the ‘நைஜீரியா’ category

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (3)

மே 10, 2015

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதைபுனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல்பொகோ ஹரமின் கவர்ச்சியானசெக்ஸியான திட்டம் (3)

Nigerian refugees sit at a Chadian camp in the village of Klissoum near NDjamena March 28, 2015- Philippe Desmazes-Getty Images

Nigerian refugees sit at a Chadian camp in the village of Klissoum near NDjamena March 28, 2015- Philippe Desmazes-Getty Images

பெண்கள் ஜிஹாதிகளாக மாறும் முறை: மேற்கத்தைய படிப்பு முறை தேவையில்லை, அதை சொல்லிக் கொடுக்கும் பள்ளிகளை குண்டு வைத்து தகர்ப்போம், சிறுமிகள் மற்றும் பெண்கள் படிக்க வேண்டிய அவசியல் இல்லை. அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்றால் தடுக்கப்படுவர், மீறீனால் சுட்டுத்தள்ளப்படுவர் என்றுதான் இன்றளவும் ஜிஹாதிக்குழுக்கள் நடந்து கொண்ட் வருகின்றனர். மலாலாவை வைத்து, மேற்கத்தைய ஊடகங்கள் பிரச்சாரம் செய்தாலும், பெர்ம்பான்மையான முஸ்லிம் பெண்கள் படிப்பறிவு இல்லாமல் தான் இருக்கின்றனர். மாறாக, இந்த ஜிஹாதிக் குழுக்கள் மற்ற ஜிஹாதிகளுக்கு எல்லாவிதங்களிலும் உதவச் சொல்கின்றனர். அத்தகைய முறையில் போதனை அளிக்கப்படுகிறது. அவர்களையும், ஜிஹாதில் பங்கு கொள்ளச் செய்கின்றனர். அவ்வாறு அல்லாவிற்கு முழுமையாக சரணாகதி அடைந்த பெண்கள், எல்லாவற்றையும் செய்ய அறிவுருத்தப் படுகிறாள். அந்நிலையில் தான், பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, குழந்தைகளை ஜிஹாதிகளாக வளர்த்துப் பெரியவர்களாக்க ஒப்புக் கொள்ளுதல் போன்ற நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.

Nigerian soldiers rescued these women and children from Boko Haram extremists.

Nigerian soldiers rescued these women and children from Boko Haram extremists.

ஜிஹாதிகளின்நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்: பொகோ ஹரம் என்ற இஸ்லாமிய ஜிஹாதி இயக்கம் பிடித்து வைக்கப்பட்டுள்ள வயதுக்கு வந்துள்ள சிறுமிகள், இளம் பெண்கள் முதலியோரை உடலுறவு கொண்டு, கர்ப்பமாக்கி, குழந்தைகளை பெற்றெடுக்க செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்[1]. இதன் மூலம் புதிய வீரியமுள்ள ஹிஹாதி வீரர்களை பிறப்பெடுத்து, உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகப் பெருமையாகக் கூறிக் கொண்டனர். அதாவது குழந்தைகள் பிறந்ததும், அவை ஜிஹாதித்துவ பெண்மணிகளால் ஜிஹாத்-பாலூட்டி, அடிப்படைவாத-தாலாட்டி, இஸ்லாம்-சீராட்டி வளர்க்கப்படுவர். இதனால், அல்லா பெயரால் என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் கூடிய ரோபோக்களாகத் தயாராவர். அதனால், புதிய போராளிகள் கொண்ட பரம்பரை உருவாகும்[2]. அவர்கள் போர்ச்சுகீசியரும் இத்தகைய முறைகளை கோவாவில் பயன்படுத்தினர் என்பதனைக் கவனிக்கவேண்டும்[3]. கிருத்துவர்கள் மற்றும் முகமதியர்கள் மற்ற நாடுகளில் 100-200 ஆண்டுகளில் பலன் பெற அல்லது விளைவு ஏற்பட திட்டமிட்டு செய்யும் இத்தகைய செயல்களினால் ஏற்படும் தீங்குகள் அந்த்கந்த நாடுகளில் பிறகு தான் தெரியவரும்.

she says her husband was killed before she was abducted by Islamist extremists.

she says her husband was killed before she was abducted by Islamist extremists.

ஜிஹாதிகளை உருவாக்கும் எந்திரங்களாக பெண்கள் உபயோகப்படுத்தப் படல்: வடகிழக்கு நைஜீரியா, போர்னோ மாநிலத்தின் ஆளுனர் அல்-ஹாஜி காசிம் ஷேட்டிமா [Alhaji Kashim Shettima], சமீபத்தில் காமரூன் நாட்டு எல்லைகளில் உள்ள சம்பசி காடுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட 214 சிறுமிகள், இளம் பெண்கள், பெண்கள் முதலியோரை வேண்டுமென்றே, வலுக்கட்டாயமாக கற்பழித்து அனுப்பியுள்ளனர் என்று தெரிவித்தார்[4]. புரொபசர் பாபாதுன்டே ஓஸ்டோமேயின் [Professor Babatunde Osotimehin] என்ற ஐக்கிய நாடுகள் சங்க இயக்குனரும் இவ்விவரத்தை வெளியிட்டார். கருத்தரித்து குழந்தைகளைப் பெற்றெடுக்க தயாராக 214 பெண்கள் இருக்கிறார்களாம்[5]. இவர்களில் சிலருக்கு இரட்டை, மூன்று, நான்கு குழந்தைகளும் பிறக்க வாய்ப்புள்ளது. மதவெறி மற்றும் காழ்ப்புடன் இத்தகைய பேச்சுகளை பேசுகிறார்கள் என்பதனையும் கவனிக்கலாம். இதுவரை காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐத் தாண்டியுள்ளது. இப்பொழுது 1,000ஐ எட்டுகிறது[6]. இவர்கள் கடந்த ஆண்டில் கடத்திச் செல்லப்பட்ட 234 பெண்களில் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. 2014லிலிருந்து இத்தீவிரவாதிகள் 2,000ற்கும் மேற்பட்டவர்களைக் கடத்திச் சென்றுள்ளார்கள்.  மதரீதியில், இவ்வாறு பொம்மைகளைப் போல, அடிமைகளை விட மோசமான நிலையில் சொல்வதை செய்யும் மக்களை உருவாக்கும் எண்ணம் உலகத்திலேயே மோசமானது. இதனால், ஈவு-இரக்கம் இல்லாமல், மிகக்கொடுமையான, குரூரமான தீவிரவாத-பயங்கரவாத செயல்களை அவர்கள் மூலம் நிறைவேற்றப் போகிறார்கள் என்று தெரிகிறது.

Women demonstrating for the freedom of the girls abducted by Boko Haram

Women demonstrating for the freedom of the girls abducted by Boko Haram

மதவுரிமைகளில் மனிதவுரிமைகள் மறைந்து விடுகின்றன: பெண்களின் உரிமைகள் என்ற ரீதியில் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் மூலம் இவற்றை வெளியிட்டாலும், அவ்வூடகங்களின் நிருபர்கள், நிபுணர்கள் முதலியோர் கிறிஸ்தவர்களாக இருப்பதினால், இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம்-விரோத ரீதியில் செய்திகள் வெளியிடப்படுகின்றன என்று குற்றாஞ்சாட்டுகின்றன. அதே வேளையில், அல்-ஹஜிரா, கல்ப் செய்திகள் போன்ற இஸ்லாமிய ஊடகங்களிலேயே, பொகோ ஹராம், ஐசிஸ் போன்ற இயக்கங்களின் கொலைகள், கடத்தல்கள் முதலியவற்றை வெளியிட்டு வருகிறார்கள். அதனால், அவை பொய் என்றாகி விடாது. இதற்கும் மதரீதியில் விளக்கம் கொடுத்து, ஜிஹாதிகளை உயர்வாகப் பேசி, தற்கொலையாளிகளை “ஷஹீத்” என்று பாராட்டி, அத்தகைய செயல்களை அல்லாவுக்காக செய்யப் படபடுகின்றன என்றும் விவாதிக்கலாம். ஆனால், இருவகையான விளக்கங்கள், செய்தி வெளியீடுகள், பாதிக்கப் பட்ட மக்களின் துயரங்களை மாற்றிவிடப் போவதில்லை. ஹிஹாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் உயிர்கள் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. கற்பழிக்கப் பட்ட பெண்களின் தூய்மை, தாய்மை, மேன்மை முதலியவை அப்பெண்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அல்லாவுக்கு அவர்கள் செய்த காரியங்கள் மகிழ்வூட்டலாம், ஷ்ஹீதுகள் நேரிடையாக சொர்க்கத்துக்குப் போகலாம், ஆனால், பாதிக்கப் பட்ட பெண்கள், இவ்வுலகத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். பிறகு அவர்களது சாபங்களுக்கு யார் பதில் சொல்லப்போவது? அப்பெண்களின் துயத்தை எடுத்துக் காட்டும் வீடியோ ஒன்று[7].

Women kidnapped by suspected Boko Haram militants

Women kidnapped by suspected Boko Haram militants

நைஜீரிய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை: கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களினால் உலக மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களால் பழைய நாகரிகங்களின் ஆதாரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. சரித்திரம் ஆதாரங்கள், ஆராய்ச்சிகள் என்றெல்லாம் பேசும் மேற்கத்தைய நிபுணர்கள் இவ்விசயங்களில் அமுக்கமாகவே இருந்து வருகிறார்கள். இப்பொழுது, ஐசிஸ் மற்றும் பொகோ ஹராம் சமுதாயத்தைப் பலவழிகளில் பாதித்து வருகின்றன. பொருளாதார ரீதியில் சிறந்து விளங்க வேண்டிய நைஜீரியா, இப்பொழுது, பொகோ ஹராம் தீவிரவாதத்தால் சீரழிந்துள்ளது. உள்ளூர் ஆட்சியாளர்கள், முதலில் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை சீரமக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

09-05-2015

[1] Ludovica Iaccino, Nigeria: Boko Haram impregnated girls ‘to guarantee new generation of fighters’, IBTimes, May 6, 2015 17:58 BST

[2] http://www.ibtimes.co.uk/nigeria-boko-haram-impregnated-girls-guarantee-new-generation-fighters-1500022

[3]  கோவாவில் ஆரம்பித்த அவர்களது கலப்பின மக்கள் உற்பத்தி முயற்சி, பல ஜாதிகளை உண்டாக்கின. காஸ்டா / ஜாதி என்ற பெயரே அவர்களால் தான் உருவாக்கப்பட்டு, இன்று இந்தியர்களை ஆடிப்படைத்து வருகின்றது.

[4] The governor of Borno state, north-eastern Nigeria, has said that terror group Boko Haram (now Iswap) deliberately impregnated the 214 girls recently rescued by the army in the Sambisa forest on the border with Cameroon. The girls were part of some 234 women and children freed after being kidnapped by the terrorists, who are believed to have abducted some 2,000 civilians since the beginning of 2014.

[5]http://www.theroot.com/articles/news/2015/05/_214_out_of_the_234_women_girls_rescued_from_boko_haram_are_reportedly_pregnant.html

[6] The news was broken early this week by our former Minister of Health, Professor Babatunde Osotimehin, now Executive Director of United Nations Population Fund. He said most of the girls rescued from Boko Haram camps were visibly pregnant. Another source put the actual figures of expectant mothers at 214. That was when the figure of those rescued stood at about 600.  Now, the number has hit at least 1,000.  So, it means more babies could be expected.  Of the identified 214 pregnant, some could be carrying twins, triplets, and possibly quadruplets.  It’s really an invasion! http://sunnewsonline.com/new/?p=118371

[7] http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/nigeria/11593573/They-told-us-if-we-didnt-come-with-them-they-would-beat-us.html

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (2)

மே 10, 2015

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதைபுனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல்பொகோ ஹரமின் கவர்ச்சியானசெக்ஸியான திட்டம் (2)

30 More Women, Children Escape Boko Haram Sambisa

30 More Women, Children Escape Boko Haram Sambisa

நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” – இனவெறி முதல் ஜிஹாத் வரை: ஜிஹாதி பாதையில் தீவிரவாதத்தை வளர்க்க பொருளாரத்தைப் பாதிக்கும் செயல்கள் நடந்து கொண்டிருக்கும் வேலையில், பொகோ ஹராமின் பெண்களின் மீதான தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” என்ற [eugenics] முறையும் இக்காலத்தில் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது கவனிக்கத்தக்கது. அமெரிக்காவில் வெள்ளை-கறுப்பு நிற மக்களிடையே உள்ள வேறுபாடுகளை களைய அவர்க்களுக்கிடையே திருமணத்தை ஊக்குவித்து வருகிறது. விருப்பப்படி குழந்தைகளைப் பெற்ருக் கொள்ள நவீன முறைகளும் உருவாக்கப் பட்டு விட்டன[1]. இப்பொழுதைய பால்டிமோர் கலவரங்களுக்குக் கூட அத்தகைய விளக்கம் கொடுக்கப்பட்டது. உலகப்போர்களுக்கு முக்கியமான காரணம் இனவெறி மற்றும் அது சம்பந்தமான விஞ்ஞானத்திற்குப் புறம்பான இனவெறி நம்பிக்கைகள். அதில் ஒன்று இனத்தூய்னை என்பது. இதன் மூலம் வெள்ளைநிற மக்களிடையே, யார் உயர்ந்தவர், சிறந்தவர் மற்றும் அறிவாளி அத்தகைய நிலை எந்த மக்களிடம் காணப்படுகிறது என்றெல்லாம் ஆராய்ச்சி நடந்து, அதிலும் மதம் புகுத்தப்பட்டது. இப்பொழுது, ஜிஹாதிகளின் அறிவுஜீவிக்குழுக்கள் அவற்றைப் பின்பற்றுகின்றன போலும்.

Boko-Haram-rescued women from sex harassment

Boko-Haram-rescued women from sex harassment

பெண்களைக் கடத்தல், உடலுறவு கொள்ளுதல், கர்ப்பமாக்குதல், ஜிஹாதித்துவ குழந்தைகளைப் பெற்றெடுத்தல்: இஸ்லாமிய நாடுகளில் அல்லது முஸ்லிம்களினால் இது – “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” வேறுமுறையில் செயல்படுத்தப் படுகின்றன. அதாவது, பெண்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள செய்தல், நிறைய பெண்களை திருமணம் செய்து கொள்ளுதல், நூற்றுக்கணக்கில் பெண்களை கற்பழித்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளச் செய்தல் என்ற முறைகள் பின்பற்றப் படுகின்றன. முஸ்லிம்களின் நான்கு-மனைவி திட்டம் விமர்சிக்கப் பட்டாலும், பொகோ ஹராம் என்ற ஜிஹாதி இயக்கத்தின் வலுக்கட்டாய உடலுறவு, செக்ஸ், கற்பழிப்பு முதலியவை இந்திய ஊடகங்களில் குறைவாகவே விவாதிக்கப்படுகின்றன. போகோ ஹராம் தலைவரான அபுபக்கர் என்பவர் இந்தப் பெண்களை நாங்கள் விரும்பும் நபர்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுவோம். அல்லது அடிமைகளாக விற்று விடுவோம். அல்லது அவர்களை மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்துவோம் என்று அச்சுறுத்தியிருக்கிறார். ஏற்கெனவே பத்து வயதுச் சிறுமிகளை எல்லாம் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள்தான் போகோ ஹராம் இயக்கத்தினர்[2]. ஆகவே பெண்களைக் கடத்தல், உடலுறவு கொள்ளுதல், கர்ப்பமாக்குதல், ஜிஹாதித்துவ குழந்தைகளைப் பெற்றெடுத்தல் என்ற இம்முறை, அவர்களது குரானில் உள்ள “இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்ட பெண்கள்” பிறகு அனைவருக்கும் பொதுவானர்கள் என்ற இறையியல் சித்தாந்தத்திற்கு ஏற்றமுறையில் செயல்படுத்துவாதாகத் தோன்றுகிறது[3].

Escaped women tell their horrowful stories

Escaped women tell their horrowful stories

பள்ளி சிறுமிகள் கடத்தல்செக்ஸ், குழந்தை பெற்றெடுப்பு 2014-15 நிகழ்வுகள்: நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14ந்தேதி 2014 பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை கடத்திச் சென்ற நைஜீரிய ஆயுதக்குழுவான போகோ ஹரம் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சிறை வைத்தனர்[4]. இவர்களை விடுவிக்க மக்கள் தெருக்களில் வந்து ஆர்பாட்டம் செய்தனர். போர்னா பகுதியின் ஆளுநர், பெண்கள் மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் குறித்து உரிய தகவல் அளிப்பவர்க்ளுக்கு சன்மானம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பள்ளி மாணவிகளில் 107 பேர் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாகவும், சில மாணவிகளை விடுவித்துவிட்டதாக தீவிரவாதிகள் தகவல் அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் தீவிரவாதிகள் கடத்தி செல்லும் வழியிலேயே சில மாணவிகள் ஜீப்பில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றுவிட்டதாக நைஜீரிய ராணுவ தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தக் கடத்தலுக்குப் பின்னணியாக, போகோ ஹராம் இயக்கத்துக்கு அல் காய்தா உதவியிருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது[5]. காரணம் இதே போன்ற மாணவிகள் கடத்தல் சம்பவங்களை அல்ஜீரியாவில் 1990-க்களிலும், 2000களிலும் அல் காய்தா நிகழ்த்தி இருக்கிறது[6].

Escape more than 60 women and girls abducted by Boko Haram

Escape more than 60 women and girls abducted by Boko Haram

ராணுவம் மற்றும் ஆட்சியாளர்களுன் முரண்பட்ட அறிக்கைகள்பாதிக்கப்பட்டது பெண்கள் தாம்: ஆனால், இன்று இது குறித்து போர்னா நைஜீரிய பள்ளியின் முதல்வர் கூறுகையில், “கடத்தப்பட்ட மாணவிகள் குறித்து இதுவரை எந்த தகவலும் அறியப்படவில்லை. மாணவிகள் விடுவிக்கப்பட்டதாக ராணுவம் சார்பில் ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை. நாங்கள் அனைவரும் மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை பிராத்தித்து வருகிறோம்”, என்று அவர் தெரிவித்தார். நைஜீரியாவில் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்ததாக கருதப்படும் பகுதிகளில் மாணவிகளை தேடும் பணியை அதன் அரசு முடக்கி விட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் கல்வி முறை பெரும் பாவம் என்று கூறி அதனை தீவிரமாக எதிர்த்து வரும் பொகோ ஹரம் அமைப்பினர், சமீப காலமாக பள்ளிகள் மற்றும் மாணவர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது[7]. அதாவது, தலிபன்கள் ஆப்கானிஸ்தானில் செய்து வருவதை, பொகோ ஹராம் இங்கு செய்கின்றனர். மேற்கத்தைய கல்வியை எதிர்க்கிறோம் என்பதில், இஸ்லாமியக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தெரிகிறது.

Ridiculing Boko Haram Where It Hurts

Ridiculing Boko Haram Where It Hurts

கடத்தப்பட்ட மாணவிகள் விற்கப்படுதல் முதலியன: அந்த மாணவிகளில் ஒரு சிலரை விற்பனை செய்யவும், வேறு சிலரை அடிமைகளாக வைத்திருக்கவும், மற்றவரைக் கட்டாயத் திருமணம் செய்துவைக்கப் போவதாகவும் அந்த இயக்கத்தின் தலைவர் அறிவித்தார். கடத்தப்பட்ட மாணவிகளில் சிலர் காமரூனிலும், சட் முதலிய நாடுகளில் கட்டாயத் திருமணம் செய்துவைக்கும் கூட்டத்தினருக்கு 12 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டதாகவும் தெரியவந்தது. 53 மாணவிகள் தப்பியுள்ளதாகவும், மற்றவர் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளதாகவும் காவல் படையினரின் தகவல் தெரிவித்தன. பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டை பயனளிக்காது போனமையும், கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் வீதிகளில் ஆர்பாட்டங்கள் நடத்தின. பொகோ ஹரம் இயக்கத்தினர், வட நைஜீரியாவில் முஸ்லீம் மத அரசை அமைக்கப் போராடி வருகின்றமை நினைவு கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் மேலும், நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜோநாதன் மேலும், பாதிக்கப்பட்டோர்களும், ஊர்மக்களும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடப்பட்டுள்ளது. வீதி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பெண்களில் இருவர் கைது செய்யப்பட்டு, ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக, ஜனாதிபதியின் மனைவியால் குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட பெண்கள் கூறும் விசயங்கள் எந்த மனிதனையும் திகைக்க வைக்கின்றன[8]. இடைக்காலத்தில் முகமதியர்கள் எப்படி பெண்களைக் கடத்தியது, அடிமைகளாக விற்றது, ஹேரம் என்ற அந்தப்புரங்களில் சுல்தான்கள், படைத்தலைவர்கள், என்று முறையே அனுபவிக்கப் பட்டு, பிறகு வீரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஏனெனில், இந்த நவீன காலத்திலும் அதே முறைகளை, வேறு மாதிரி செய்து வருவது வெளிப்படுகிறது[9]. அவற்றையெல்லாம் மீறிய முறைதான் ஜிஹாதி-குழந்தைகளைப் பெற்றெடுத்தல், வளர்த்தல் முதலியனவாகும்[10].

© வேதபிரகாஷ்

09-05-2015

[1] http://www.theguardian.com/commentisfree/2014/oct/03/sperm-donot-lawsuit-racism-eugenics-lesbian-couple-black-donor

[2] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-6/article7052396.ece

[3]  பைபிளில் இத்தகைய ஆதாரங்கள், அவற்றைப் பின்பற்றிய போக்கு சரித்திரத்தில், பல உதாரணங்களில் காணலாம்.

[4] https://www.ctc.usma.edu/v2/wp-content/uploads/2015/05/CTCSentinel-Vol8Issue42.pdf

[5] https://www.ctc.usma.edu/v2/wp-content/uploads/2015/03/CTCSentinel-Vol8Issue316.pdf

[6] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1/article7002695.ece

[7]http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-129-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88/article5922474.ece

[8] Wall Street Journal, Boko Haram and the Lost Girls of Nigeria- After a military rescue, captives tell their story to The Wall Street Journal, By Patrick McGrothy, Updated May 8, 2015 3:38 p.m. ET.

[9] http://www.wsj.com/articles/boko-haram-and-the-lost-girls-of-nigeria-1431113437

[10] http://www.ibtimes.co.uk/nigeria-boko-haram-impregnated-girls-guarantee-new-generation-fighters-1500022

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (1)

மே 10, 2015

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதைபுனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல்பொகோ ஹரமின் கவர்ச்சியானசெக்ஸியான திட்டம் (1)

Osama and Ayman Al-Zawahari

Osama and Ayman Al-Zawahari

ஜிஹாதியில் கலக்கும் போதைமருந்துஆயுதங்கள்பெண்கள் வியாபாரம்: ஐஎஸ்ஐஎஸ், தலிபான், அல் காயிதா, பொகோ ஹரம் முதலிய ஜிஹாதி, இஸ்லாமிய திவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் பற்றி அதிக அளவில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் செயல்பாடுகள் பல நாடுகளில், பல இஸ்லாமிய இயக்கங்களின் பின்னணிகளில், உள்ளூர் முஸ்லிம்கள் கொடுத்து வரும் ஆதரவுகளில் வெளிப்படுகின்றன. அமெரிக்க உளவாளி ஏஜென்சிகள் இவற்றிற்குள் உள்ள தொடர்புகளை வெளிகாட்டி வருகின்றன[1]. இஸ்லாமிய நாடுகளில் அந்தந்த நாட்டில் நிலவும் பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்கேற்ப, தமது ஜிஹாதி திட்டங்களை மாற்றியமைத்துச் செயல்படுத்தி வருகின்றன. ஆப்கானிஸ்தானத்தில் ரகசியமாக கஞ்சாச் செடிகளை வளர்த்து, அவற்றின் மூலம் மருந்து தொழிற்சாலைகளில் போதை மருந்து தயாரித்து, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல வழிகளில் அடையச் செய்து விற்று வருகின்றன. இதனால், அவர்கள் சமூகம் பலவிதங்களில் பாதிக்கப்படுவதால், இத்தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் வரும் பணத்தில் ஆயுதங்களை வாங்கி, உலகத்தில் எங்கெல்லாம் சண்டை-சச்சரவுகள் நடந்து கொண்டிருக்கின்றனவோ, அந்த மோதல்களில், தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள இயக்கங்களுக்கு ஆயுதங்களை விற்கவும் செய்கின்றன. கலைசெல்வங்களைக் கொள்ளையெடுத்து, விற்றும் பணத்தைக் குவிக்கிறது. இந்நிலையில் தான், பெண்களை மோசமாக நடத்தும் போக்கு அவர்களிடம் வெளிப்படுவது திகைப்படையச் செய்வதாக உள்ளது.

பொகோ ஹரம் தலைவன்

பொகோ ஹரம் தலைவன்

பொகோ ஹராம் குறிப்பாக பெண்களை பாலியல் ரீதியில் தாக்குவது ஏன்?: ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக, பொகோ ஹராம் பெண்களின் மீதாக நடத்தப் படும் பாலியல் ரீதியான தாக்குதல்கள் அதிர்ச்சியடைய வைக்கிறது. இடைக்காலத்தைப் போல, சிறுமிகள், இளம்-பெண்கள் மற்றும் பெண்களைக் கடத்துவது, செக்ஸுக்கு உபயோகப்படுத்துவது, பிறகு ஜிஹாதி தொழிஸ்சாலைக்குக் குழந்தைகளைப் பெற்றுக் கொடுப்பது என்ற புதிய யுக்தியில் இறங்கியுள்ளதை அறிய முடிகிறது. ஆனால், அதே நேரத்தில், இன்னொரு வகையான இஸ்லாமிய சித்தாந்திகள், இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம், பெண்களுக்கு முழு உரிமகளைக் கொடுக்கிறது, என்றெல்லாம் அதிரடியாக பிரச்சாரம் செய்து வருவார்கள். எனினும் எப்பொழுதெல்லாம், ஜிஹாதி குண்டுவெடிப்புகள், கொலைகள், கற்பழிப்புகள் முதலியவை நடக்கும் போது அமைதியாக இருப்பார்கள். இவ்வாறு இரட்டை வேடங்கள் போட்டுக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பொகோ ஹராம் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது, முதன்முதலாக இஸ்லாமிய ராஜ்யத்தைத் தோற்றுவித்தோம் என்று பறைச்சாற்றிக் கொண்டு, எல்லோருடைய கவனத்தையும் இழுத்துள்ளது.

போகோ ஹராம் தீவிரவாத இயக்க தலைவன் அபுபக்கர் ஷெக்காவு.

போகோ ஹராம் தீவிரவாத இயக்க தலைவன் அபுபக்கர் ஷெக்காவு.

முஸ்லிம்கிருத்துவர்களாக மதமாற்றப் பட்ட நைஜீரிய மக்கள்: நைஜீரியா, கிழக்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடா பகுதியில் கடற்கரையைக் கொண்டுள்ள நாடாகும். வடக்கே நைஜர் மற்றும் சட் நாடுகள் உள்ளன; கிழக்கே சட் மற்றும் காமரூன், மேற்கே பேனின் நாடுகள் உள்ளன. இந்நாட்டில் 50% முஸ்லிம்கள், 48% கிறிஸ்தவர்கள் (அதில் 74% புரொடெஸ்டென்ட், 25% கத்தோலிக்க மற்றும் 1% மற்ற பிரிவுகள்), மீதம் 1.5% புராதன மதங்களைப் பின்பற்றுகிறார்கள். “உன் நம்பிக்கை உனக்கு, என் நம்பிக்கை எனக்கு” என்று மற்ற நம்பிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு, நம்பிக்கைகளுக்கு மற்றும் உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள் அல்லது நியாயப்படி-சட்டப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இத்தகைய மதமாற்றம் அங்கு ஏற்பட்டிருக்காது. அதாவது, இப்பொழுது மதரீயில் முஸ்லிம்-கிறிஸ்தவர்களுக்கிடையில் கலவரங்கள் ஏற்படுகின்றன எனும்போது, சமூகத்தை எவ்வாறு மதமாற்றங்கள் பாதித்துள்ளன என்பதை மற்ற நாட்டு சமூகங்கள் கவனிக்க வேண்டும். பெட்ரோல்யத்தை நம்பி வாழும் இந்நாட்டு பொருளாதாரம் நன்றாக இருக்கும் நிலையில் தான் தீவிரவாதத்தின் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.

Boko Karam hide-outs - Wall Street Journal picture

Boko Karam hide-outs – Wall Street Journal picture

ஜிஹாதித்துவமும், பொருளாஹாரமும்: கடந்த ஐந்தாண்டுகளில் முஸ்லிம்கள் ஜிஹாதி பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளதால், மதகலவரங்கள் ஆரம்பித்துள்ளன. கிருத்துவ அடிப்படைவாதிகளும் கலவரத்தைத் தூண்டி விட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இங்கு வேடிக்கை என்னவென்றால், இந்த நம்பிக்கையாளர்கள் எல்லாமே கருப்பின மக்கள் தாம்[2]. அவர்களை தங்களது சொந்த மதங்களினின்று மதமாற்றி, மக்களைப் பிரித்து மோதவிட்டுள்ளது போன்ற நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. இதனைத்தான் உலக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமோ, கிருத்துவமோ மக்களை இணைக்காமல் பிரித்துக் கொண்டிருக்கிறது மற்றுமல்லாது, பிரித்துக் கொன்றுக் கொண்டிருக்கின்றன. இருமதங்களாலும் அமைதியை உண்டாக்க முடியாமல், சர்ச்சை-சண்டை-போர்-கலவரம்-தீவிரவாதம்-பயங்கரவாதம் இவற்றைத்தான் உண்டாக்கி வருகின்றன.

boko-haram-map

boko-haram-map

போகோ ஹராம்இஸ்லாமிய இயக்கமாசேனையா? பொகோ ஹரம் தோற்றுவித்தவனான மொஹம்மது யூசுப் என்பவனின் போதனைகளை அறிந்து கொண்டால், ஜிஹாத் எப்படி வேலை செய்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். 2010ல் அவன் சுத்தமான சலாபியத்துவ முஸ்லிம்களான கீழ்கண்டவர்களைப் பின்பற்றச் சொன்னான்[3]:

  1. அல்-குவைதாவைத் தோற்ருவித்த ஒசாம பின் லேடன்.
  2. தலிபன்.
  3. சையத் குதுப், எகிப்தைய சித்தாந்தி.
  4. இபின் தய்மியா

பொகோ ஹராம் என்றால் மேற்கத்தைய படிப்புமுறை எதிப்பு என்று பொருள் – (“Western education is forbidden”). பொகோ என்றால் போலி, ஹராம் என்றால் விலக்க / தடைசெய்யப்பட்டது, அதாவது, மேற்கத்தைய படிப்புமுறைக்குத் தடை என்ற பொருளில் உள்ளது. ஜமாது அஹ்லிஸ் சுன்னா லிட்ட-அவதி வல்-ஜிஹாத் [Jama’atu Ahlis Sunna Lidda’Awati Wal-Jihad (Arabic: جماعة أهل السنة للدعوة والجهاد‎, Jamā’at Ahl as-Sunnah lid-Da’wah wa’l-Jihād] என்று பெயரைக்கொண்டுள்ளது, மற்றும் மக்களுக்கு ஜிஹாத் போதிக்கும் அல்லது சுன்னாவுடனான னஜ்க்கள் அல்லது விலாயத் அல் சுடான் அல் கர்பி [Wilāyat al Sūdān al Gharbī (Arabic: ولاية السودان الغربي‎], மேற்காசிய பிரதேச ஜிஹாதி குழு, என்று பலவாறு அழைக்கப்படுகிறது. வடகிழக்கு நைஜீரியாவில் தனது மறைவிடங்களைக் கொண்டிருந்தாலும், அண்டைநாடுகளான நைஜர், சட், காமரூன் முதலிய இடங்களில்ய்ம் செயல்பட்டு வருகின்றது.

boko-haram-western education is a sin

boko-haram-western education is a sin

கடந்த ஐந்தாண்டுகளாக மதகலவரங்கள் நடப்பது சாதாரணமான விஷயமாகி விட்டது. இத்தகைய மத கலவரங்கள், கிருத்துவர்கள் மீதான தாக்குதல்கள், சர்ச்சுகளின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது போன்ற தீவிரவாத காரியங்களுக்கு இஸ்லாமிய பொகோ ஹராம் என்ற இயக்கம் (The Islamist Boko Haram group) பொதுவாகக் குற்றம் சாட்டப்படுகிறது[4]. இது இஸ்லாம் பெயரால் கிருத்துவர்களை மட்டுமல்ல, முஸ்லீம்களையே கொன்று வருகிறது என்று எடுத்துக் காட்டுகின்றனர்[5]. ஜனவரி 3.2015 அன்று சுமார் 150 பேரைக் கொன்றுள்ளது, இது பாகா கொலை [2015 Baga massacre] என்றழைக்கப்படுகிறது[6]. ஜனவரி.12, 2015 அன்று காமரூனில் நுழைந்து, அரசு படைகளைத் தாக்கியது[7]. அரசு அறிக்கையின் படி 143 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. ஜனவரி.18, 2015 அன்று காமரூன் கிடராமங்களில் நுழைந்து 60-80 பேர்களைக் கடத்திச் சென்றது. அவற்றில் 50 பேர் 10-15 வயதைச் சேர்ந்தவர்கள். சுன்னி-ஷியா போர்கள், கொலைகள் முதலியவற்றை முகமதியர்கள் மறைத்தாலும், அவை இஸ்லாமிய நாடுகளிலேயே காலம்-காலமாக நடத்துக் கொண்டுதான் வருகின்றன. ஜிஹாதி சித்தாந்தத்தில் உருவான இவ்வியக்கம் முஸ்லீம்கள் அல்லாதவர்களின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது. 2012ல் மட்டும் சுமார் 380 பேர் மதகலவரங்களில் கொல்லப்பட்டுள்ளனர்[8]. நைஜிரிய மக்களுக்கிடையே இதைப் பற்றிய கருத்து மாறுபட்டதாக இருக்கிறது[9]. கென்யாவிலிருந்து கடத்தி வரப்படும் தந்தவியாபாரத்தில் ஈடுபட்டிப்பதாகவும் குற்றஞ்சாட்டப் படுகிறது[10]. பெட்ரோல், தந்தம் எதுவாக இருந்தாலும், அதிலிருந்து கிடைக்கும் பணம் தீவிரவாதத்தை வளர்க்கத்தான் உபயோகப்படுத்தப் படுகிறது. ஆயிரக்கணக்கான அகதிகள் அண்டை நாடுகளுக்குச் செல்வதை அந்நாடுகள் தடுக்கின்றன. நைஜருக்கு வந்த 3,000 அகதிகள் திருப்பி அனுப்பப் பட்டனர்[11]. சட் எதிர்-தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவுகிறது[12]. கடந்த ஆண்டுகளில் இந்த இயக்கதினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத-ஜிஹாதி தாக்குதல்கள் கீழ்கண்டவாறுள்ளது[13].

6 June 2011 Bombing attack on a beer garden in Maiduguri, leaving 25 dead and 12 injured
10 July 2011 Bombing at the All Christian Fellowship Church in Suleja, Niger State
11 July 2011 The University of Maiduguri temperory closes down its campus citing security concerns
12 August 2011 Prominent Muslim Cleric Liman Bana is shot dead by Boko Haram
26 August 2011 2011 Abuja bombing
4 November 2011 2011 Damaturu attacks
25 December 2011 December 2011 Nigeria bombings
5–6 January 2012 January 2012 Nigeria attacks
20 January 2012 January 2012 Kano bombings
28 January 2012 Nigerian army says it killed 11 Boko Haram insurgents
8 February 2012 Boko Haram claims responsibility for a suicide bombing at the army headquarters in Kaduna.
16 February 2012 Another prison break staged in central Nigeria; 119 prisoners are released, one warder killed.
8 March 2012 During a British hostage rescue attempt to free Italian engineer Franco Lamolinara and Briton Christopher McManus, abducted in 2011 by a splinter group Boko Haram, both hostages were killed.
31 May 2012 During a Joint Task Force raid on a Boko Haram den, it was reported that 5 sect members and a German hostage were killed.
3 June 2012 15 church-goers were killed and several injured in a church bombing in Bauchi state. Boku Haram claimed responsibility through spokesperson Abu Qaqa.
Logo_of_Boko_Haram.svg

Logo_of_Boko_Haram.svg

பொகோ ஹராம் இயக்கத்திற்கு பணம் எப்படி கிடைக்கிறது: ஹக்காணி குழுமங்கள் மூலம் இவர்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. தவிர பரஸ்பர உதவிகளையும் செய்து கொண்டு வருகின்றன. பொகோ ஹராம் அவ்வப்போது செலவுகளுக்கு என்று வங்கிகளைக் கொள்ளையடிக்கிறது. வணிகர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோரை பயமுறுத்தி பணம் பறிக்கிறது. “பணம் கொடுக்காவிட்டால் கடத்தி விடுவோம்’’ என்பதுதான் அச்சுறுத்தல், இவையெல்லாம் எப்படி நக்சலைட், போடோ முதலிய குட்டங்கள் செய்து வருகின்றனவோ அத்தகைய பணம்-பரிக்கும் வேலை தான். சில சமயம் பெரும் தொழில் அதிபர்களை கடத்தி வைத்துக் கொண்டு அவர்களைப் பணயக் கைதிகளாக்கி பணம் பெறுவதும் உண்டு. வெளிநாட்டு செல்வந்தர்கள் என்றால் அதற்கான ரேட் அதிகம். சமீபத்தில் பிரெஞ்சு குடும்பம் ஒன்றை பணயக் கைதிகளாக்கி 30 லட்சம் டாலர்களைப் பறித்தது போகோ ஹராம்[14]. ‘’ஐ.எஸ். அமைப்புக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு’’ என்றிருக்கிறார். இராக், சிரியா பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவரும் அமைப்பு ஐ.எஸ். இப்படி அதற்கான ஆதரவை வெளிப்படுத்தியதன் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ள ஐ.எஸ்.போராளிகளின் ஆதரவைத் தாங்கள் பெற முடியும் என்று நம்புகிறது போகோ ஹராம்[15].

© வேதபிரகாஷ்

09-05-2015

[1]  Combating Terrorism Center brings out monthly CTC Sentinel issue that contains the global activities of Islamic terror groups, their network, funding agencies and other links with which they have been operating in many countries.

[2] இனரீதியில், இந்த சொற்றோடர் பிரயோகம் செய்யப்படவில்லை. அங்கு நடக்கும் சமூகவிரோத, மக்கள்விரோத குற்றங்களை ஆயும் ரீதியில் உபயோகப் படுத்தப் பட்டுள்ளது.

[3] https://www.ctc.usma.edu/posts/a-biography-of-boko-haram-and-the-baya-to-al-baghdadi

[4] http://www.nytimes.com/2012/02/26/world/africa/in-northern-nigeria-boko-haram-stirs-fear-and-sympathy.html?_r=1

[5] http://allafrica.com/stories/201206220837.html

[6] “Boko Haram crisis: Nigeria estimates Baga deaths at 150”. BBC News. 12 January 2015.

[7]  “Cameroon repels Boko Haram attack, says 143 militants killed”. Yahoo News. 12 January 2015.

[8]  http://news.antiwar.com/2012/06/17/39-killed-as-church-bombs-spark-religious-violence-in-nigeria/

[9] http://tribune.com.ng/index.php/opinion/42937-are-boko-haram-terrorists-human

[10] Kathleen Caulderwood (16 May 2014). “Fake Charities, Drug Cartels, Ransom and Extortion: Where Islamist Group Boko Haram Gets Its Cash”. International Business Times. Retrieved 10 January 2014.

[11] http://www.dinamani.com/world/2015/05/08/3000-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/article2802500.ece

[12] the Republic of Chad is building a reputation as a leading African state in the fight against terrorism. Chad will provide more than a third of the 8,700 soldiers—3,000 men, nearly as many as Nigeria’s 3,250—currently assigned to the African Union (AU) approved Multi-National Joint Task Force (MNJTF),1 and Chadian forces have already claimed successes against Boko Haram in its strongholds along Nigeria’s borders.

[13] http://en.wikipedia.org/wiki/Boko_Haram

[14] Kathleen Caulderwood (16 May 2014). “Fake Charities, Drug Cartels, Ransom and Extortion: Where Islamist Group Boko Haram Gets Its Cash”. International Business Times. Retrieved 10 January 2014.

[15] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3/article7010500.ece

நைஜீரியாவில் முஸ்லீம்-கிருத்துவ மதகலவரங்கள்-சண்டைகள் ஏன்?

ஜூன் 23, 2012

நைஜீரியாவில் முஸ்லீம்-கிருத்துவ மதகலவரங்கள்-சண்டைகள் ஏன்?

ஆப்பிரிக்கக் கண்டத்தை மதரீதியில் மாற்றியது: “இருண்ட கண்டம்” என்று அழைத்த ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய நாடுகள் கனிம வளங்களுக்காக, அக்கண்டத்தின் மக்களை அடிமையாக்கி தோட்டங்களில் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்ய வைத்து கொள்ளை லாபம் அடித்து வந்ததனர். போட்டிக்கு வந்த முஸ்லீம்களும் விட்டுவைக்கவில்லை. பிறகு இரு பிரிவினரும் ஆப்பிரிக்க மக்களை மதமாற்ற ஆரம்பித்தனர். ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகீசியர் இவ்வேலைகளில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். பிறகு ஜிஹாதி இயக்கத்தினரும் தங்கள் பங்கைத் தொடர்ந்தனர். இதனால், ஆப்பிரிக்கக் கண்டம், பல நாட்களாக உடைந்தது. ஆப்பிரிக்க மக்களிடையே இனம், மொழி, ஜாதி போன்ற பிரிவுகளின் தன்மைகளை ஐரோப்பியர்கள் மற்றும் அரேபியர்கள் ஊட்ட ஊட்ட அவர்கள் அவ்வாறே பிரிவுண்டனர். 20ம் நூற்றாண்டில் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற ஆரம்பித்தன. ஆனால், மதங்களில் கட்டுண்டன. 1960ல் நைஜீரியா இங்கிலாந்திலிருந்து விடுதலைப் பெற்றது. 1999 வரை ராணுவ புரட்சிகள்-ஆட்சிகள் என்றிருந்து, ஒருவழியாக ஜனநாயகத்திற்கு வந்தது.

முஸ்லீம்கள்-கிருத்துவர்கள் கலவரங்கள்-சண்டைகள்: ஆப்பிரிக்காவில் கிருத்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மாறி-மாறி அந்த கண்டத்தின் மக்களை மதமாற்றி, ஒவ்வொரு நாட்டின் ஜனத்தொகையில் மதம் ரீதியாக மக்களை பிரித்து, அந்நாட்டு மக்களுக்குள்ளேயே சமூகங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அவ்வப்போது தூண்டிவிட்டுக் கொண்டு, கலவரங்களை உண்டாக்கி மக்களைக் கொன்று குவிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். ஜனத்தொகை அதிகம் உள்ள நைஜீரியாவில் 160 மில்லியன் மக்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் தெற்கில் கிருத்துவர்கள் மற்றும் வடக்கில் முஸ்லீம்கள் என்று பிளவுபட்டுள்ளனர். 50.4% முஸ்லீம்கள், 50.8% கிருத்துவர்கள் (15% Protestant, 13.7% Catholic and 19.6% other Christian), மற்ற மதத்தினர் 1.4% உள்ளனர்.

போகோ ஹராம் – இஸ்லாமிய இயக்கமா-சேனையா? கடந்த ஐந்தாண்டுகளாக மதகலவரங்கள் நடப்பது சாதாரணமான விஷயமாகி விட்டது. இத்தகைய மத கலவரங்கள், கிருத்துவர்கள் மீதான தாக்குதல்கள், சர்ச்சுகளின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது போன்ற தீவிரவாத காரியங்களுக்கு இஸ்லாமிய போகோ ஹராம் என்ற இயக்கம் (The Islamist Boko Haram group) பொதுவாகக் குற்றம் சாட்டப்படுகிறது[1]. இது இஸ்லாம் பெயரால் கிருத்துவர்களை மட்டுமல்ல, முஸ்லீம்களையே கொன்று வருகிறது என்று எடுத்துக் காட்டுகின்றனர்[2]. ஜிஹாதி சித்தாந்தத்தில் உருவான இவ்வியக்கம் முஸ்லீம்கள் அல்லாதவர்களின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது. 2012ல் மட்டும் சுமார் 380 பேர் மதகலவரங்களில் கொல்லப்பட்டுள்ளனர்[3]. நைஜொஈரிய மக்களுக்கிடையே இதைப் பற்றிய கருத்து மாறுபட்டதாக இருக்கிறது[4]. கென்யாவிலிருந்து கடத்தி வரப்படும் தந்தவியாபாரத்தில் ஈடுப்பட்டிப்பதாகவும் குற்றஞ்சாட்டப் படுகிறது. கடந்த ஆண்டுகளில் இந்த இயக்கதினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத-ஜிஹாதி தாக்குதல்கள் கீழ்கண்டவாறுள்ளது[5].

6 June 2011 Bombing attack on a beer garden in Maiduguri, leaving 25 dead and 12 injured
10 July 2011 Bombing at the All Christian Fellowship Church in Suleja, Niger State
11 July 2011 The University of Maiduguri temperory closes down its campus citing security concerns
12 August 2011 Prominent Muslim Cleric Liman Bana is shot dead by Boko Haram
26 August 2011 2011 Abuja bombing
4 November 2011 2011 Damaturu attacks
25 December 2011 December 2011 Nigeria bombings
5–6 January 2012 January 2012 Nigeria attacks[
20 January 2012 January 2012 Kano bombings
28 January 2012 Nigerian army says it killed 11 Boko Haram insurgents[54]
8 February 2012 Boko Haram claims responsibility for a suicide bombing at the army headquarters in Kaduna.[55]
16 February 2012 Another prison break staged in central Nigeria; 119 prisoners are released, one warder killed.
8 March 2012 During a British hostage rescue attempt to free Italian engineer Franco Lamolinara and Briton Christopher McManus, abducted in 2011 by a splinter group Boko Haram, both hostages were killed.
31 May 2012 During a Joint Task Force raid on a Boko Haram den, it was reported that 5 sect members and a German hostage were killed.
3 June 2012 15 church-goers were killed and several injured in a church bombing in Bauchi state. Boku Haram claimed responsibility through spokesperson Abu Qaqa.

 

31, ஜூலை 2009 வெள்ளிக்கிழமை,: ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கு எதிராக `பகோஹரம்’ என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக முகமது யூசுப் என்பவர் செயல்பட்டு வந்தார்.  அங்கு அரசு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தீவிரவாதிகள் அரசு ஆதரவாளர்களை கொன்று குவித்தனர். 4 நாட்களாக அங்கு கடும் சண்டை நீடித்து வந்தது. இதில் 300 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தரப்பில் மட்டும் 100 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமான பொது மக்கள் ராணுவ வீரர்களும் பலியாகி இருக்கின்றனர். ஆனால் சாவு எண்ணிக்கை 600-ஐ தாண்டி இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தீவிர வாதிகள் தலைவர் முகமது யூசுப் ராணுவத்திடம் சிக்கினார். அவரையும் சுட்டுக் கொன்றனர். அவர் ராணுவத்தினர் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்ற போது சுட்டு கொல்லப்பட்டதாக அரசு அறிவித்து உள்ளது.

ஜனவரி 24, 2010: நைஜீரியாவில் வடக்கு பகுதியில் உள்ள ஜோஷ் நகரில் கிருத்துவர்கள்-முஸ்லீம்களுக்கு இடையே பயங்கர கலவர‌த்‌தி‌ல் 400 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். ஏ‌ற்ப‌ட்ட கலவர‌த்‌தி‌ல் கிருத்துவர்கள்-முஸ்லீம்களுகள் ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இந்த கலவரத்தை அந்நாட்டு காவ‌ல்துறை‌யினரு‌ம், ராணுவத்தினரும் அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடக்கத்தில் கலவரத்தில் இறந்தவர்கள் 150 என கணக்கிடப்பட்டது. தற்போது சாவு எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. கலவரம் நடந்த ஜோஷ் நகரிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் ஆங்காங்கே பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. ஜோஷ் நகரில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து மட்டும் 150 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 18 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை செஞ்சிலுவை சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

மே 30, 2012: நைஜீரியா நாட்டில் தென்கிழக்கு பகுதியில் இருக்கும் கிராமத்தில் கிருத்துவர்கள்-முஸ்லீம்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அதில் அங்குள்ள வீடுகள், கிறிஸ்தவ ஆலயம் போன்றவை தீ வைத்து எரிக்கப்பட்டன. கத்தி, பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கினர். இந்த மோதல்-கலவரத்தில் கிராம தலைவர், 4 போலீசார் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்பட 45 பேர் பலியானார்கள். வீடுகளை இழந்த சுமார் 2 ஆயிரம் பேர் பக்கத்து கிராமங்களுக்கு ஓடி தஞ்சம் அடைந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

ஜூன் 17, 2012: நைஜீரியாவின் கடுனா மாகாணத்தில் தெற்குப்பகுதியிலுள்ள நஸார்வா மற்றும் பர்னவா நகரங்கள் மற்றும் ஜாரியாவில் ஐந்து சர்ச்சுகள் வெடிகுண்டுகள் வீசி தர்க்கப்பட்டுள்ளன[6]. இதனால் நைஜீரியா தலைநகர் எல்லைப்பகுதியில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலியானதாகவும் மற்றும் 50 பேர் காயமடைந்ததாகவும் செஞ்சிலுவை சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இப்பொழுது நிலவரம் 98 வாவு, 150 காயம்[7], தலைநகர் அபுஜா எல்லைப்பகுதியில் நசரவா மாகாணத்தில் 17-06-2012 (ஞாயிற்று ஈஸ்டர் கொண்டாட்டம்) அன்று ஆரம்பித்து நடந்து வரும் கலவரத்தில் 6,000 பேர் வீட்டை வி‌ட்டு வெளியேறியதாகவும் தெரியவந்துள்ளது. ஒரு தற்கொலைப்படை மதவாதி சர்ச்சுக்குள் குண்டை வெடித்ததிலிருந்து கலவரம் ஆரம்பித்தது[8]. கலவரம் நடந்த பகுதியில் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என செஞ்சிலுவை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமூலில் இருந்தாலும், கலவரம் தொடர்கிறது[9]. இஸ்லாமியவாதிகள், பாதுபாப்பு வீரர்களுக்கிடையே கடுமையான சண்டை நடக்கிறது[10]. இப்படி 2009லிருந்து ஆரம்பித்த மதகலவரங்கள்-சண்டைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சாதாரண மக்கள் அமைதியாகவே வாழ விரும்புகிறார்கள்: பொகோ ஹரம் இயக்கத்தை முஸ்லீம்கள் ஆதரித்தும், எதிர்த்தும் எழுதினாலும், கருத்துகளைத் தெரிவித்தாலும், அவர்களின் தீவிரவாதத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று படித்த முஸ்லீம்கள் கூறியுள்ளார்கள். அமெரிக்கா பொகோ ஹராம் இயக்கத்தலைவர்களை தீவிரவாதிகள் என்று அறிவித்துள்ளது[11]. ஐ.நா கிருத்துவர்களின் மீதான தாக்குதல்கள், மனித இனத்திற்கு எதிரான தாக்குதல் என்று அறிவித்துள்ளது[12]. முஸ்லீம் தலைவர்கள் கிருத்துவர்களின் வலியைப் புரிந்து கொள்கிறோம் என்கிறார்கள்[13]. ஆக மொத்தத்தில், மாரிவரும் உலகத்தில், மக்கள் அமைதியாகவே வாழ விரும்புகின்றனர்.

வேதபிரகாஷ்

23-06-2012