Posted tagged ‘அடக்குமுறை’

துலாகரில் டிசம்பர் 13-15 தேதிகளில் நடந்த கலவரங்கள் – முஸ்லிம்கள் “மீலாது நபி” ஊர்வலம் நடத்தி இந்துக்களின் வீடுகளை சூரையாடி எரித்துள்ளனர்! – துலாகர் கலவரம் (1)

ஜனவரி 3, 2017

துலாகரில் டிசம்பர் 13-15 தேதிகளில் நடந்த கலவரங்கள் முஸ்லிம்கள் “மீலாது நபி” ஊர்வலம் நடத்தி இந்துக்களின் வீடுகளை சூரையாடி எரித்துள்ளனர்! துலாகர் கலவரம் (1)

dhulagarh-mamtas-suppression-of-facts

கலவரங்கள் நடந்த விவரங்களை மறைத்த மம்தா அரசு: மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள துலாகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு – டிசம்பர் 13-15 தேதிகளில் – மத பேரணியில் இரு தரப்பினருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. ஏற்பட்ட கலவரங்களில், இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், ஊடகங்களின் மீதான அடக்குமுறைகளினால், “சென்சார் / தடை” விதிக்கப்பட்டது போல நிலையினால், செய்திகள் அதிகமாக வெளிவராமல் மறைக்கப்பட்டன. ஆங்கில ஊடகங்களுக்கே இந்த கதி என்றால், தமிழ் ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒன்றுமே நடக்கவில்லை என்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளார்கள். போதாகுறைக்கு 12-12-2016 அன்று வர்தா புயலினால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் தங்களது சொந்த வீடுகள், பொருட்கள், பணம் எல்லாம் இழந்து, அகதிகள் போல தெருக்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இக்கலவரங்கள் பற்றிய செய்திகள் கூட கொஞ்சமாக கடந்த இருநாட்களாக டிசம்பர் 31 2016 மற்றும் ஜனவரி 1, 2017 – வந்து கொண்டிருக்கின்றன.

18_Monday_2016_Police acts against the members of Tehreek-e-Hurriyat who were taking out a protest march against the killing of four persons in Handwara

முஸ்லிம் மக்கட்தொகை பெருகினாலே மதகலவரம் உருவாகும் என்ற நிலை: துலாகர் ஹௌரா மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற் மற்றும் வியாபார ஸ்தலமாகும். கொல்கொத்தாவிலிருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது. சுமார் 45% முஸ்லிம்கள் உள்ளாதால், 2013லிருந்து, மத-கலவரங்கள் அதிகமாகி வருகின்றன. 2013ல் மட்டும் 106 கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. பிறகு, 15-20 என்று குறைந்துள்ளன[1], ஆனால், கலவரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மம்தா ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, ஏழ்மை மற்றும் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி வைத்துக் கொண்டு தனது பலத்தை ஸ்திரமாக்கிக் கொள்ள முயன்று வருகிறார். பங்களாதேச முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் மேற்கு வங்காள எல்லைகள் மூலம் நுழைந்து, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பரவி வருவது தெரிந்த விசயமே. முன்னர் அசாமில் இதுவே ஒரு பிரச்சினையாகக் கொண்டு அசாம் கணபரிஷத் 1980களில் போராடி ஆட்சிக்கு வந்தது. ஆனால், பிறகு அடங்கி விட்டது. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் உள்-நுழைந்த அந்நிய முஸ்லிம்களுக்கு, ரேசன் கார்ட், ஓட்டர் கார்ட் என்று கொடுத்து ஊக்குவித்து, ஓட்டுவங்கியை வளர்த்தனர். இப்பொழுது, ஆதார் கார்டுடன் வாழ்ந்து வருகின்றனர், தொடர்ந்து ஊக்குவிப்பது திரிணமூல் காங்கிரஸ். இதனால், வளர்க்கப்பட்ட மூஸ்லிம்கள் இந்துக்களுக்குத் தொல்லைக் கொடுத்து வருகின்றனர்.

dulagarh-attacked-on-14-12-2016-rioters-in-action

மீலாது நபிக்கு அடுத்த நாள் ஊர்வலம் நடத்தி கலவரத்தை உண்டாக்கியது: டிசம்பர் 12, 2016 மீலாது நபி நிமித்தம் மேற்கு வங்க அரசு விடுமுறை அளித்தது. ஆனால், டிசம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் “ஈத்-இ-மிலத்-உன்-நபி” / மீலாது நபி ஊர்வலம் நடத்தியதில், முஸ்லிம் கும்பல், அப்பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டு இந்துக்களின் விடுகள் மற்றும் கடைகள் முதலியவை சூரையாடப் பட்டன. பொருட்கள் கொள்ளையிடப்பட்டதோடு தீயிட்டு கொளுத்தப் பட்டன.  இந்துக்கள் தங்களது பூஜை நேரத்தில், வேண்டுமென்றே, ஊர்வலம் நடத்தியதோடு, திட்டமிட்டு, ஆயுதங்களுடன் வந்து தாக்கி அவ்வாறு செய்துள்ளார்கள். முதலில் சில செய்திகள் வெளிவந்தாலும், வங்காள அரசின் அடக்குமுறைகளால், செய்திகள் வெளிவராமல் தடுக்கப்பட்டன. ஆனால், சமூக வலைத்தளங்களில், கலவரச் செய்திகள் பரவின. இருப்பினும், அரசு தொடர்ந்து கலவரம் நடந்ததை மறுத்து வந்துள்ளது. வி.பி. சிங் தான், மீலாது நபிக்கு அரசு விடுமுறை முதன்முதலில் அறிவித்தார் என்று, செக்யூலரிஸவாதிகள் பெருமையாகக் கூறுவர். இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத விடுமுறையை, இந்திய அரசியல்வாதிகள் அறிவித்துள்ளனர்.

dhulagarh_victims_are_terrified_and_worried_about_their_future

மார்கசிரிஷ பூர்ணிமாஅன்று மீலாது நபி ஊர்வலம் ஏன்?: டிசம்பர் 12ம் தேதி 2016 அரசு விடுமுறை தினமாக அறிவித்தது. அதாவது முஸ்லிம்களுக்கு அன்றுதான் கொண்டாட்டம், ஆனால், அடுத்த நாள் டிசம்பர் 13 அன்று முகமதியர் மீலாது நபி என்று ஊர்வலம் என்று தெருக்களில் வலம் வந்தனர். அதாவது 12ம் தேதி ஊர்வலம் போகாமல், அடுத்த நாள் போனது எப்படி என்று தெரியவில்லை. உள்ளூர் வழக்கம் தெரிந்த நிலையில், போலீஸார் எப்படி அனுமதி கொடுத்தனர் என்பதும் கேள்விக்குரியதாக உள்ளது. சினிமா பாடல்களை சப்தமாக ஒலித்துக் கொண்டு தெருக்களில் சென்றனர். அன்று “மார்கசிரிஷ பூர்ணிமா” [Margashirsha Purnima] என்ற மங்களகரமான நாளை அன்று இந்துக்கள் கொண்டாடினர்[2]. 15ம் தேதியிலிருந்து “தனுர் மாதம்” தொடங்குகிறது என்பதால், தங்களது நோன்பு, விரதம் முதலியவற்றைத் தொடங்குவார்கள். பாரம்பரிய வங்காள மக்கள், இத்தகைய விழாக்கள், சம்பரதாயங்கள் முதலியவற்றை விடாமல் கொண்டாடி வருகின்றனர். அதனால், தங்களது சடங்குகளுக்கு தொந்தரவாக இருப்பதால், சப்தத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை.

dulagarh-attacked-on-14-12-2016-rioters-and-police

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூக்குரலிட்டு இந்துக்கள் வீடுகள்-கடைகள் தாக்கப்பட்டது: “செக்யூலரிஸம்”, சமதர்மம் மற்றும் உரிமைகள் பேசப்படும் இந்தியாவில் முஸ்லிம்கள் அதை மதிக்காமல் கலவரத்தை ஏற்படுத்த தீர்மானமாக இருந்தனர் போலும். இதை சாக்காக வைத்துக் கொண்டு, ஊர்வலத்தினர், இந்துக்களோடு வாய்சண்டை இழுத்து, கேலிபேசி, கிண்டலடித்து, திட்டியுள்ளனர். வாக்குவாதம் கைசண்டையாகி, முகமதியர் இந்துக்களைத் தாக்கியுள்ளனர். கலவரமாகியபோது, நாட்டு வெடிகுண்டுகளை வீடுகள் மற்ரும் கடைகள் மீது வீசினர். டிரம்களில் கெரோஸின் மற்றும் பெட்ரோல் முதலியவற்றையும் எடுத்து வந்து தீயிட்டுக் கொளுத்தினர்[3]. இக்கலவரம், டிசம்பர் 14ம் தேதியும் தொடர்ந்தது.  இதெல்லாம் திட்டமிட்டபடி நடந்த தாக்குதல் என்று தெரிகிறது. தாக்கியவர்களில் சிலர், “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்றெல்லாம் கத்தியதாக கூறினார்கள்[4]. முஸ்லிம்களின் இந்த மனோபாங்கு தான் விசித்திரமாக இருக்கிறது. 1947ல் தனிநாடு கொடுத்தப் பிறகு, இந்தியாவில் பிறந்து, வளர்ந்து வருபவர்கள் எப்படி, இவ்வாறு கத்த முடியும்? இக்கால முஸ்லிம்களுக்கு அதுகூட தெரியாதா அல்லது தெரியாமல் வளர்க்கப்பட்டுள்ளனரா? மேலும் அவர்களை கவனித்த, பாதிக்கப்பட்ட இந்துக்கள், “அவர்கள்” அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்றும் தெரிவித்தனர். அதாவது, கலவரத்திற்கு, வெளியிலிருந்து கூட்டி வரப்பட்டது தெரிகிறது.

dulagarh-attacked-on-14-12-2016-victim-explains-times-now

வீடுகளை சூரையாடி, தீயிட்டு கொளுத்த முயன்ற போது, செய்யாதே என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோதும், கொளுத்திவிட்டுச் சென்றது[5]: நாட்டு வெடிகுண்டுகள் போட்டு தாகியதை பாதிக்கப்பட்டவர் “டைம்ஸ் நௌ” டிவி பேட்டியில் கூறினார். மேற்கு வங்காள கலவரங்களில் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தப் படுவது, ஒரு தொடர்ந்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. 10-15 முறை வெடிக்க வைத்ததாக கூறினார். அவர்கள், வீடுகளை சூரையாடியப் பிறகு, தீயிட்டு கொளுத்த முயன்ற போது, அவ்வாறு செய்யாதே என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோதும், விடாமல், பெட்ரோல்-கிரோஸின் ஊற்றி கொளுத்தி விட்டு சென்றனர். அதனால், இந்துக்களது வீட்டுப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. வந்தவர்கள் “புதியவர்களாக” தென்பட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டினார். அருகில் இருந்த கார்கள்-லாரிகள் முதலியவற்றையும் விட்டு வைக்கவில்லை. பாதிக்கப்பட்ட இந்துக்கள், தாங்கள் மீளமுடியாத அளவுக்கு அழித்துவிட்டு சென்றுள்ளனர் என்று புலம்பினர்.

© வேதபிரகாஷ்

03-01-2017

Kerala, Kashmir becoming hub of ISIS

[1] Merchant, Minhaz (28 December 2016). “How Mamata tore the secular fabric of Bengal into shreds”Daily Mail. Retrieved 31 December 2016

[2] Daily Mail-UK, How Mamata tore the secular fabric of Bengal into shreds, by Minhaz Merchant, Published: 23:58 GMT, 28 December 2016 | Updated: 10:50 GMT, 31 December 2016

[3] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4071842/How-Mamata-tore-secular-fabric-Bengal-shreds.html

[4] India Today, Rather than protecting, Bengal polica gave two minutes to flee our own homes: Dhulagarh riot victims tell India Today, Indrajit Kundu | Posted by Ashna Kumar, December 28, 2016 | UPDATED 13:25 IST.

[5] http://www.timesnow.tv/india/video/times-now-report-from-dhulagarh-the-story-india-isnt-reporting/53364

நைஜீரியாவில் முஸ்லீம்-கிருத்துவ மதகலவரங்கள்-சண்டைகள் ஏன்?

ஜூன் 23, 2012

நைஜீரியாவில் முஸ்லீம்-கிருத்துவ மதகலவரங்கள்-சண்டைகள் ஏன்?

ஆப்பிரிக்கக் கண்டத்தை மதரீதியில் மாற்றியது: “இருண்ட கண்டம்” என்று அழைத்த ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய நாடுகள் கனிம வளங்களுக்காக, அக்கண்டத்தின் மக்களை அடிமையாக்கி தோட்டங்களில் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்ய வைத்து கொள்ளை லாபம் அடித்து வந்ததனர். போட்டிக்கு வந்த முஸ்லீம்களும் விட்டுவைக்கவில்லை. பிறகு இரு பிரிவினரும் ஆப்பிரிக்க மக்களை மதமாற்ற ஆரம்பித்தனர். ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகீசியர் இவ்வேலைகளில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். பிறகு ஜிஹாதி இயக்கத்தினரும் தங்கள் பங்கைத் தொடர்ந்தனர். இதனால், ஆப்பிரிக்கக் கண்டம், பல நாட்களாக உடைந்தது. ஆப்பிரிக்க மக்களிடையே இனம், மொழி, ஜாதி போன்ற பிரிவுகளின் தன்மைகளை ஐரோப்பியர்கள் மற்றும் அரேபியர்கள் ஊட்ட ஊட்ட அவர்கள் அவ்வாறே பிரிவுண்டனர். 20ம் நூற்றாண்டில் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற ஆரம்பித்தன. ஆனால், மதங்களில் கட்டுண்டன. 1960ல் நைஜீரியா இங்கிலாந்திலிருந்து விடுதலைப் பெற்றது. 1999 வரை ராணுவ புரட்சிகள்-ஆட்சிகள் என்றிருந்து, ஒருவழியாக ஜனநாயகத்திற்கு வந்தது.

முஸ்லீம்கள்-கிருத்துவர்கள் கலவரங்கள்-சண்டைகள்: ஆப்பிரிக்காவில் கிருத்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மாறி-மாறி அந்த கண்டத்தின் மக்களை மதமாற்றி, ஒவ்வொரு நாட்டின் ஜனத்தொகையில் மதம் ரீதியாக மக்களை பிரித்து, அந்நாட்டு மக்களுக்குள்ளேயே சமூகங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அவ்வப்போது தூண்டிவிட்டுக் கொண்டு, கலவரங்களை உண்டாக்கி மக்களைக் கொன்று குவிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். ஜனத்தொகை அதிகம் உள்ள நைஜீரியாவில் 160 மில்லியன் மக்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் தெற்கில் கிருத்துவர்கள் மற்றும் வடக்கில் முஸ்லீம்கள் என்று பிளவுபட்டுள்ளனர். 50.4% முஸ்லீம்கள், 50.8% கிருத்துவர்கள் (15% Protestant, 13.7% Catholic and 19.6% other Christian), மற்ற மதத்தினர் 1.4% உள்ளனர்.

போகோ ஹராம் – இஸ்லாமிய இயக்கமா-சேனையா? கடந்த ஐந்தாண்டுகளாக மதகலவரங்கள் நடப்பது சாதாரணமான விஷயமாகி விட்டது. இத்தகைய மத கலவரங்கள், கிருத்துவர்கள் மீதான தாக்குதல்கள், சர்ச்சுகளின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது போன்ற தீவிரவாத காரியங்களுக்கு இஸ்லாமிய போகோ ஹராம் என்ற இயக்கம் (The Islamist Boko Haram group) பொதுவாகக் குற்றம் சாட்டப்படுகிறது[1]. இது இஸ்லாம் பெயரால் கிருத்துவர்களை மட்டுமல்ல, முஸ்லீம்களையே கொன்று வருகிறது என்று எடுத்துக் காட்டுகின்றனர்[2]. ஜிஹாதி சித்தாந்தத்தில் உருவான இவ்வியக்கம் முஸ்லீம்கள் அல்லாதவர்களின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது. 2012ல் மட்டும் சுமார் 380 பேர் மதகலவரங்களில் கொல்லப்பட்டுள்ளனர்[3]. நைஜொஈரிய மக்களுக்கிடையே இதைப் பற்றிய கருத்து மாறுபட்டதாக இருக்கிறது[4]. கென்யாவிலிருந்து கடத்தி வரப்படும் தந்தவியாபாரத்தில் ஈடுப்பட்டிப்பதாகவும் குற்றஞ்சாட்டப் படுகிறது. கடந்த ஆண்டுகளில் இந்த இயக்கதினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத-ஜிஹாதி தாக்குதல்கள் கீழ்கண்டவாறுள்ளது[5].

6 June 2011 Bombing attack on a beer garden in Maiduguri, leaving 25 dead and 12 injured
10 July 2011 Bombing at the All Christian Fellowship Church in Suleja, Niger State
11 July 2011 The University of Maiduguri temperory closes down its campus citing security concerns
12 August 2011 Prominent Muslim Cleric Liman Bana is shot dead by Boko Haram
26 August 2011 2011 Abuja bombing
4 November 2011 2011 Damaturu attacks
25 December 2011 December 2011 Nigeria bombings
5–6 January 2012 January 2012 Nigeria attacks[
20 January 2012 January 2012 Kano bombings
28 January 2012 Nigerian army says it killed 11 Boko Haram insurgents[54]
8 February 2012 Boko Haram claims responsibility for a suicide bombing at the army headquarters in Kaduna.[55]
16 February 2012 Another prison break staged in central Nigeria; 119 prisoners are released, one warder killed.
8 March 2012 During a British hostage rescue attempt to free Italian engineer Franco Lamolinara and Briton Christopher McManus, abducted in 2011 by a splinter group Boko Haram, both hostages were killed.
31 May 2012 During a Joint Task Force raid on a Boko Haram den, it was reported that 5 sect members and a German hostage were killed.
3 June 2012 15 church-goers were killed and several injured in a church bombing in Bauchi state. Boku Haram claimed responsibility through spokesperson Abu Qaqa.

 

31, ஜூலை 2009 வெள்ளிக்கிழமை,: ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கு எதிராக `பகோஹரம்’ என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக முகமது யூசுப் என்பவர் செயல்பட்டு வந்தார்.  அங்கு அரசு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தீவிரவாதிகள் அரசு ஆதரவாளர்களை கொன்று குவித்தனர். 4 நாட்களாக அங்கு கடும் சண்டை நீடித்து வந்தது. இதில் 300 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தரப்பில் மட்டும் 100 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமான பொது மக்கள் ராணுவ வீரர்களும் பலியாகி இருக்கின்றனர். ஆனால் சாவு எண்ணிக்கை 600-ஐ தாண்டி இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தீவிர வாதிகள் தலைவர் முகமது யூசுப் ராணுவத்திடம் சிக்கினார். அவரையும் சுட்டுக் கொன்றனர். அவர் ராணுவத்தினர் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்ற போது சுட்டு கொல்லப்பட்டதாக அரசு அறிவித்து உள்ளது.

ஜனவரி 24, 2010: நைஜீரியாவில் வடக்கு பகுதியில் உள்ள ஜோஷ் நகரில் கிருத்துவர்கள்-முஸ்லீம்களுக்கு இடையே பயங்கர கலவர‌த்‌தி‌ல் 400 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். ஏ‌ற்ப‌ட்ட கலவர‌த்‌தி‌ல் கிருத்துவர்கள்-முஸ்லீம்களுகள் ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இந்த கலவரத்தை அந்நாட்டு காவ‌ல்துறை‌யினரு‌ம், ராணுவத்தினரும் அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடக்கத்தில் கலவரத்தில் இறந்தவர்கள் 150 என கணக்கிடப்பட்டது. தற்போது சாவு எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. கலவரம் நடந்த ஜோஷ் நகரிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் ஆங்காங்கே பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. ஜோஷ் நகரில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து மட்டும் 150 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 18 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை செஞ்சிலுவை சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

மே 30, 2012: நைஜீரியா நாட்டில் தென்கிழக்கு பகுதியில் இருக்கும் கிராமத்தில் கிருத்துவர்கள்-முஸ்லீம்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அதில் அங்குள்ள வீடுகள், கிறிஸ்தவ ஆலயம் போன்றவை தீ வைத்து எரிக்கப்பட்டன. கத்தி, பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கினர். இந்த மோதல்-கலவரத்தில் கிராம தலைவர், 4 போலீசார் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்பட 45 பேர் பலியானார்கள். வீடுகளை இழந்த சுமார் 2 ஆயிரம் பேர் பக்கத்து கிராமங்களுக்கு ஓடி தஞ்சம் அடைந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

ஜூன் 17, 2012: நைஜீரியாவின் கடுனா மாகாணத்தில் தெற்குப்பகுதியிலுள்ள நஸார்வா மற்றும் பர்னவா நகரங்கள் மற்றும் ஜாரியாவில் ஐந்து சர்ச்சுகள் வெடிகுண்டுகள் வீசி தர்க்கப்பட்டுள்ளன[6]. இதனால் நைஜீரியா தலைநகர் எல்லைப்பகுதியில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலியானதாகவும் மற்றும் 50 பேர் காயமடைந்ததாகவும் செஞ்சிலுவை சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இப்பொழுது நிலவரம் 98 வாவு, 150 காயம்[7], தலைநகர் அபுஜா எல்லைப்பகுதியில் நசரவா மாகாணத்தில் 17-06-2012 (ஞாயிற்று ஈஸ்டர் கொண்டாட்டம்) அன்று ஆரம்பித்து நடந்து வரும் கலவரத்தில் 6,000 பேர் வீட்டை வி‌ட்டு வெளியேறியதாகவும் தெரியவந்துள்ளது. ஒரு தற்கொலைப்படை மதவாதி சர்ச்சுக்குள் குண்டை வெடித்ததிலிருந்து கலவரம் ஆரம்பித்தது[8]. கலவரம் நடந்த பகுதியில் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என செஞ்சிலுவை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமூலில் இருந்தாலும், கலவரம் தொடர்கிறது[9]. இஸ்லாமியவாதிகள், பாதுபாப்பு வீரர்களுக்கிடையே கடுமையான சண்டை நடக்கிறது[10]. இப்படி 2009லிருந்து ஆரம்பித்த மதகலவரங்கள்-சண்டைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சாதாரண மக்கள் அமைதியாகவே வாழ விரும்புகிறார்கள்: பொகோ ஹரம் இயக்கத்தை முஸ்லீம்கள் ஆதரித்தும், எதிர்த்தும் எழுதினாலும், கருத்துகளைத் தெரிவித்தாலும், அவர்களின் தீவிரவாதத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று படித்த முஸ்லீம்கள் கூறியுள்ளார்கள். அமெரிக்கா பொகோ ஹராம் இயக்கத்தலைவர்களை தீவிரவாதிகள் என்று அறிவித்துள்ளது[11]. ஐ.நா கிருத்துவர்களின் மீதான தாக்குதல்கள், மனித இனத்திற்கு எதிரான தாக்குதல் என்று அறிவித்துள்ளது[12]. முஸ்லீம் தலைவர்கள் கிருத்துவர்களின் வலியைப் புரிந்து கொள்கிறோம் என்கிறார்கள்[13]. ஆக மொத்தத்தில், மாரிவரும் உலகத்தில், மக்கள் அமைதியாகவே வாழ விரும்புகின்றனர்.

வேதபிரகாஷ்

23-06-2012