Posted tagged ‘ஷஹீத்’

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (3)

மே 10, 2015

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதைபுனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல்பொகோ ஹரமின் கவர்ச்சியானசெக்ஸியான திட்டம் (3)

Nigerian refugees sit at a Chadian camp in the village of Klissoum near NDjamena March 28, 2015- Philippe Desmazes-Getty Images

Nigerian refugees sit at a Chadian camp in the village of Klissoum near NDjamena March 28, 2015- Philippe Desmazes-Getty Images

பெண்கள் ஜிஹாதிகளாக மாறும் முறை: மேற்கத்தைய படிப்பு முறை தேவையில்லை, அதை சொல்லிக் கொடுக்கும் பள்ளிகளை குண்டு வைத்து தகர்ப்போம், சிறுமிகள் மற்றும் பெண்கள் படிக்க வேண்டிய அவசியல் இல்லை. அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்றால் தடுக்கப்படுவர், மீறீனால் சுட்டுத்தள்ளப்படுவர் என்றுதான் இன்றளவும் ஜிஹாதிக்குழுக்கள் நடந்து கொண்ட் வருகின்றனர். மலாலாவை வைத்து, மேற்கத்தைய ஊடகங்கள் பிரச்சாரம் செய்தாலும், பெர்ம்பான்மையான முஸ்லிம் பெண்கள் படிப்பறிவு இல்லாமல் தான் இருக்கின்றனர். மாறாக, இந்த ஜிஹாதிக் குழுக்கள் மற்ற ஜிஹாதிகளுக்கு எல்லாவிதங்களிலும் உதவச் சொல்கின்றனர். அத்தகைய முறையில் போதனை அளிக்கப்படுகிறது. அவர்களையும், ஜிஹாதில் பங்கு கொள்ளச் செய்கின்றனர். அவ்வாறு அல்லாவிற்கு முழுமையாக சரணாகதி அடைந்த பெண்கள், எல்லாவற்றையும் செய்ய அறிவுருத்தப் படுகிறாள். அந்நிலையில் தான், பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, குழந்தைகளை ஜிஹாதிகளாக வளர்த்துப் பெரியவர்களாக்க ஒப்புக் கொள்ளுதல் போன்ற நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.

Nigerian soldiers rescued these women and children from Boko Haram extremists.

Nigerian soldiers rescued these women and children from Boko Haram extremists.

ஜிஹாதிகளின்நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்: பொகோ ஹரம் என்ற இஸ்லாமிய ஜிஹாதி இயக்கம் பிடித்து வைக்கப்பட்டுள்ள வயதுக்கு வந்துள்ள சிறுமிகள், இளம் பெண்கள் முதலியோரை உடலுறவு கொண்டு, கர்ப்பமாக்கி, குழந்தைகளை பெற்றெடுக்க செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்[1]. இதன் மூலம் புதிய வீரியமுள்ள ஹிஹாதி வீரர்களை பிறப்பெடுத்து, உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகப் பெருமையாகக் கூறிக் கொண்டனர். அதாவது குழந்தைகள் பிறந்ததும், அவை ஜிஹாதித்துவ பெண்மணிகளால் ஜிஹாத்-பாலூட்டி, அடிப்படைவாத-தாலாட்டி, இஸ்லாம்-சீராட்டி வளர்க்கப்படுவர். இதனால், அல்லா பெயரால் என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் கூடிய ரோபோக்களாகத் தயாராவர். அதனால், புதிய போராளிகள் கொண்ட பரம்பரை உருவாகும்[2]. அவர்கள் போர்ச்சுகீசியரும் இத்தகைய முறைகளை கோவாவில் பயன்படுத்தினர் என்பதனைக் கவனிக்கவேண்டும்[3]. கிருத்துவர்கள் மற்றும் முகமதியர்கள் மற்ற நாடுகளில் 100-200 ஆண்டுகளில் பலன் பெற அல்லது விளைவு ஏற்பட திட்டமிட்டு செய்யும் இத்தகைய செயல்களினால் ஏற்படும் தீங்குகள் அந்த்கந்த நாடுகளில் பிறகு தான் தெரியவரும்.

she says her husband was killed before she was abducted by Islamist extremists.

she says her husband was killed before she was abducted by Islamist extremists.

ஜிஹாதிகளை உருவாக்கும் எந்திரங்களாக பெண்கள் உபயோகப்படுத்தப் படல்: வடகிழக்கு நைஜீரியா, போர்னோ மாநிலத்தின் ஆளுனர் அல்-ஹாஜி காசிம் ஷேட்டிமா [Alhaji Kashim Shettima], சமீபத்தில் காமரூன் நாட்டு எல்லைகளில் உள்ள சம்பசி காடுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட 214 சிறுமிகள், இளம் பெண்கள், பெண்கள் முதலியோரை வேண்டுமென்றே, வலுக்கட்டாயமாக கற்பழித்து அனுப்பியுள்ளனர் என்று தெரிவித்தார்[4]. புரொபசர் பாபாதுன்டே ஓஸ்டோமேயின் [Professor Babatunde Osotimehin] என்ற ஐக்கிய நாடுகள் சங்க இயக்குனரும் இவ்விவரத்தை வெளியிட்டார். கருத்தரித்து குழந்தைகளைப் பெற்றெடுக்க தயாராக 214 பெண்கள் இருக்கிறார்களாம்[5]. இவர்களில் சிலருக்கு இரட்டை, மூன்று, நான்கு குழந்தைகளும் பிறக்க வாய்ப்புள்ளது. மதவெறி மற்றும் காழ்ப்புடன் இத்தகைய பேச்சுகளை பேசுகிறார்கள் என்பதனையும் கவனிக்கலாம். இதுவரை காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐத் தாண்டியுள்ளது. இப்பொழுது 1,000ஐ எட்டுகிறது[6]. இவர்கள் கடந்த ஆண்டில் கடத்திச் செல்லப்பட்ட 234 பெண்களில் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. 2014லிலிருந்து இத்தீவிரவாதிகள் 2,000ற்கும் மேற்பட்டவர்களைக் கடத்திச் சென்றுள்ளார்கள்.  மதரீதியில், இவ்வாறு பொம்மைகளைப் போல, அடிமைகளை விட மோசமான நிலையில் சொல்வதை செய்யும் மக்களை உருவாக்கும் எண்ணம் உலகத்திலேயே மோசமானது. இதனால், ஈவு-இரக்கம் இல்லாமல், மிகக்கொடுமையான, குரூரமான தீவிரவாத-பயங்கரவாத செயல்களை அவர்கள் மூலம் நிறைவேற்றப் போகிறார்கள் என்று தெரிகிறது.

Women demonstrating for the freedom of the girls abducted by Boko Haram

Women demonstrating for the freedom of the girls abducted by Boko Haram

மதவுரிமைகளில் மனிதவுரிமைகள் மறைந்து விடுகின்றன: பெண்களின் உரிமைகள் என்ற ரீதியில் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் மூலம் இவற்றை வெளியிட்டாலும், அவ்வூடகங்களின் நிருபர்கள், நிபுணர்கள் முதலியோர் கிறிஸ்தவர்களாக இருப்பதினால், இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம்-விரோத ரீதியில் செய்திகள் வெளியிடப்படுகின்றன என்று குற்றாஞ்சாட்டுகின்றன. அதே வேளையில், அல்-ஹஜிரா, கல்ப் செய்திகள் போன்ற இஸ்லாமிய ஊடகங்களிலேயே, பொகோ ஹராம், ஐசிஸ் போன்ற இயக்கங்களின் கொலைகள், கடத்தல்கள் முதலியவற்றை வெளியிட்டு வருகிறார்கள். அதனால், அவை பொய் என்றாகி விடாது. இதற்கும் மதரீதியில் விளக்கம் கொடுத்து, ஜிஹாதிகளை உயர்வாகப் பேசி, தற்கொலையாளிகளை “ஷஹீத்” என்று பாராட்டி, அத்தகைய செயல்களை அல்லாவுக்காக செய்யப் படபடுகின்றன என்றும் விவாதிக்கலாம். ஆனால், இருவகையான விளக்கங்கள், செய்தி வெளியீடுகள், பாதிக்கப் பட்ட மக்களின் துயரங்களை மாற்றிவிடப் போவதில்லை. ஹிஹாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் உயிர்கள் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. கற்பழிக்கப் பட்ட பெண்களின் தூய்மை, தாய்மை, மேன்மை முதலியவை அப்பெண்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அல்லாவுக்கு அவர்கள் செய்த காரியங்கள் மகிழ்வூட்டலாம், ஷ்ஹீதுகள் நேரிடையாக சொர்க்கத்துக்குப் போகலாம், ஆனால், பாதிக்கப் பட்ட பெண்கள், இவ்வுலகத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். பிறகு அவர்களது சாபங்களுக்கு யார் பதில் சொல்லப்போவது? அப்பெண்களின் துயத்தை எடுத்துக் காட்டும் வீடியோ ஒன்று[7].

Women kidnapped by suspected Boko Haram militants

Women kidnapped by suspected Boko Haram militants

நைஜீரிய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை: கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களினால் உலக மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களால் பழைய நாகரிகங்களின் ஆதாரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. சரித்திரம் ஆதாரங்கள், ஆராய்ச்சிகள் என்றெல்லாம் பேசும் மேற்கத்தைய நிபுணர்கள் இவ்விசயங்களில் அமுக்கமாகவே இருந்து வருகிறார்கள். இப்பொழுது, ஐசிஸ் மற்றும் பொகோ ஹராம் சமுதாயத்தைப் பலவழிகளில் பாதித்து வருகின்றன. பொருளாதார ரீதியில் சிறந்து விளங்க வேண்டிய நைஜீரியா, இப்பொழுது, பொகோ ஹராம் தீவிரவாதத்தால் சீரழிந்துள்ளது. உள்ளூர் ஆட்சியாளர்கள், முதலில் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை சீரமக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

09-05-2015

[1] Ludovica Iaccino, Nigeria: Boko Haram impregnated girls ‘to guarantee new generation of fighters’, IBTimes, May 6, 2015 17:58 BST

[2] http://www.ibtimes.co.uk/nigeria-boko-haram-impregnated-girls-guarantee-new-generation-fighters-1500022

[3]  கோவாவில் ஆரம்பித்த அவர்களது கலப்பின மக்கள் உற்பத்தி முயற்சி, பல ஜாதிகளை உண்டாக்கின. காஸ்டா / ஜாதி என்ற பெயரே அவர்களால் தான் உருவாக்கப்பட்டு, இன்று இந்தியர்களை ஆடிப்படைத்து வருகின்றது.

[4] The governor of Borno state, north-eastern Nigeria, has said that terror group Boko Haram (now Iswap) deliberately impregnated the 214 girls recently rescued by the army in the Sambisa forest on the border with Cameroon. The girls were part of some 234 women and children freed after being kidnapped by the terrorists, who are believed to have abducted some 2,000 civilians since the beginning of 2014.

[5]http://www.theroot.com/articles/news/2015/05/_214_out_of_the_234_women_girls_rescued_from_boko_haram_are_reportedly_pregnant.html

[6] The news was broken early this week by our former Minister of Health, Professor Babatunde Osotimehin, now Executive Director of United Nations Population Fund. He said most of the girls rescued from Boko Haram camps were visibly pregnant. Another source put the actual figures of expectant mothers at 214. That was when the figure of those rescued stood at about 600.  Now, the number has hit at least 1,000.  So, it means more babies could be expected.  Of the identified 214 pregnant, some could be carrying twins, triplets, and possibly quadruplets.  It’s really an invasion! http://sunnewsonline.com/new/?p=118371

[7] http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/nigeria/11593573/They-told-us-if-we-didnt-come-with-them-they-would-beat-us.html

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (2)

மே 10, 2015

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதைபுனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல்பொகோ ஹரமின் கவர்ச்சியானசெக்ஸியான திட்டம் (2)

30 More Women, Children Escape Boko Haram Sambisa

30 More Women, Children Escape Boko Haram Sambisa

நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” – இனவெறி முதல் ஜிஹாத் வரை: ஜிஹாதி பாதையில் தீவிரவாதத்தை வளர்க்க பொருளாரத்தைப் பாதிக்கும் செயல்கள் நடந்து கொண்டிருக்கும் வேலையில், பொகோ ஹராமின் பெண்களின் மீதான தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” என்ற [eugenics] முறையும் இக்காலத்தில் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது கவனிக்கத்தக்கது. அமெரிக்காவில் வெள்ளை-கறுப்பு நிற மக்களிடையே உள்ள வேறுபாடுகளை களைய அவர்க்களுக்கிடையே திருமணத்தை ஊக்குவித்து வருகிறது. விருப்பப்படி குழந்தைகளைப் பெற்ருக் கொள்ள நவீன முறைகளும் உருவாக்கப் பட்டு விட்டன[1]. இப்பொழுதைய பால்டிமோர் கலவரங்களுக்குக் கூட அத்தகைய விளக்கம் கொடுக்கப்பட்டது. உலகப்போர்களுக்கு முக்கியமான காரணம் இனவெறி மற்றும் அது சம்பந்தமான விஞ்ஞானத்திற்குப் புறம்பான இனவெறி நம்பிக்கைகள். அதில் ஒன்று இனத்தூய்னை என்பது. இதன் மூலம் வெள்ளைநிற மக்களிடையே, யார் உயர்ந்தவர், சிறந்தவர் மற்றும் அறிவாளி அத்தகைய நிலை எந்த மக்களிடம் காணப்படுகிறது என்றெல்லாம் ஆராய்ச்சி நடந்து, அதிலும் மதம் புகுத்தப்பட்டது. இப்பொழுது, ஜிஹாதிகளின் அறிவுஜீவிக்குழுக்கள் அவற்றைப் பின்பற்றுகின்றன போலும்.

Boko-Haram-rescued women from sex harassment

Boko-Haram-rescued women from sex harassment

பெண்களைக் கடத்தல், உடலுறவு கொள்ளுதல், கர்ப்பமாக்குதல், ஜிஹாதித்துவ குழந்தைகளைப் பெற்றெடுத்தல்: இஸ்லாமிய நாடுகளில் அல்லது முஸ்லிம்களினால் இது – “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” வேறுமுறையில் செயல்படுத்தப் படுகின்றன. அதாவது, பெண்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள செய்தல், நிறைய பெண்களை திருமணம் செய்து கொள்ளுதல், நூற்றுக்கணக்கில் பெண்களை கற்பழித்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளச் செய்தல் என்ற முறைகள் பின்பற்றப் படுகின்றன. முஸ்லிம்களின் நான்கு-மனைவி திட்டம் விமர்சிக்கப் பட்டாலும், பொகோ ஹராம் என்ற ஜிஹாதி இயக்கத்தின் வலுக்கட்டாய உடலுறவு, செக்ஸ், கற்பழிப்பு முதலியவை இந்திய ஊடகங்களில் குறைவாகவே விவாதிக்கப்படுகின்றன. போகோ ஹராம் தலைவரான அபுபக்கர் என்பவர் இந்தப் பெண்களை நாங்கள் விரும்பும் நபர்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுவோம். அல்லது அடிமைகளாக விற்று விடுவோம். அல்லது அவர்களை மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்துவோம் என்று அச்சுறுத்தியிருக்கிறார். ஏற்கெனவே பத்து வயதுச் சிறுமிகளை எல்லாம் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள்தான் போகோ ஹராம் இயக்கத்தினர்[2]. ஆகவே பெண்களைக் கடத்தல், உடலுறவு கொள்ளுதல், கர்ப்பமாக்குதல், ஜிஹாதித்துவ குழந்தைகளைப் பெற்றெடுத்தல் என்ற இம்முறை, அவர்களது குரானில் உள்ள “இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்ட பெண்கள்” பிறகு அனைவருக்கும் பொதுவானர்கள் என்ற இறையியல் சித்தாந்தத்திற்கு ஏற்றமுறையில் செயல்படுத்துவாதாகத் தோன்றுகிறது[3].

Escaped women tell their horrowful stories

Escaped women tell their horrowful stories

பள்ளி சிறுமிகள் கடத்தல்செக்ஸ், குழந்தை பெற்றெடுப்பு 2014-15 நிகழ்வுகள்: நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14ந்தேதி 2014 பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை கடத்திச் சென்ற நைஜீரிய ஆயுதக்குழுவான போகோ ஹரம் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சிறை வைத்தனர்[4]. இவர்களை விடுவிக்க மக்கள் தெருக்களில் வந்து ஆர்பாட்டம் செய்தனர். போர்னா பகுதியின் ஆளுநர், பெண்கள் மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் குறித்து உரிய தகவல் அளிப்பவர்க்ளுக்கு சன்மானம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பள்ளி மாணவிகளில் 107 பேர் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாகவும், சில மாணவிகளை விடுவித்துவிட்டதாக தீவிரவாதிகள் தகவல் அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் தீவிரவாதிகள் கடத்தி செல்லும் வழியிலேயே சில மாணவிகள் ஜீப்பில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றுவிட்டதாக நைஜீரிய ராணுவ தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தக் கடத்தலுக்குப் பின்னணியாக, போகோ ஹராம் இயக்கத்துக்கு அல் காய்தா உதவியிருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது[5]. காரணம் இதே போன்ற மாணவிகள் கடத்தல் சம்பவங்களை அல்ஜீரியாவில் 1990-க்களிலும், 2000களிலும் அல் காய்தா நிகழ்த்தி இருக்கிறது[6].

Escape more than 60 women and girls abducted by Boko Haram

Escape more than 60 women and girls abducted by Boko Haram

ராணுவம் மற்றும் ஆட்சியாளர்களுன் முரண்பட்ட அறிக்கைகள்பாதிக்கப்பட்டது பெண்கள் தாம்: ஆனால், இன்று இது குறித்து போர்னா நைஜீரிய பள்ளியின் முதல்வர் கூறுகையில், “கடத்தப்பட்ட மாணவிகள் குறித்து இதுவரை எந்த தகவலும் அறியப்படவில்லை. மாணவிகள் விடுவிக்கப்பட்டதாக ராணுவம் சார்பில் ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை. நாங்கள் அனைவரும் மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை பிராத்தித்து வருகிறோம்”, என்று அவர் தெரிவித்தார். நைஜீரியாவில் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்ததாக கருதப்படும் பகுதிகளில் மாணவிகளை தேடும் பணியை அதன் அரசு முடக்கி விட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் கல்வி முறை பெரும் பாவம் என்று கூறி அதனை தீவிரமாக எதிர்த்து வரும் பொகோ ஹரம் அமைப்பினர், சமீப காலமாக பள்ளிகள் மற்றும் மாணவர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது[7]. அதாவது, தலிபன்கள் ஆப்கானிஸ்தானில் செய்து வருவதை, பொகோ ஹராம் இங்கு செய்கின்றனர். மேற்கத்தைய கல்வியை எதிர்க்கிறோம் என்பதில், இஸ்லாமியக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தெரிகிறது.

Ridiculing Boko Haram Where It Hurts

Ridiculing Boko Haram Where It Hurts

கடத்தப்பட்ட மாணவிகள் விற்கப்படுதல் முதலியன: அந்த மாணவிகளில் ஒரு சிலரை விற்பனை செய்யவும், வேறு சிலரை அடிமைகளாக வைத்திருக்கவும், மற்றவரைக் கட்டாயத் திருமணம் செய்துவைக்கப் போவதாகவும் அந்த இயக்கத்தின் தலைவர் அறிவித்தார். கடத்தப்பட்ட மாணவிகளில் சிலர் காமரூனிலும், சட் முதலிய நாடுகளில் கட்டாயத் திருமணம் செய்துவைக்கும் கூட்டத்தினருக்கு 12 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டதாகவும் தெரியவந்தது. 53 மாணவிகள் தப்பியுள்ளதாகவும், மற்றவர் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளதாகவும் காவல் படையினரின் தகவல் தெரிவித்தன. பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டை பயனளிக்காது போனமையும், கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் வீதிகளில் ஆர்பாட்டங்கள் நடத்தின. பொகோ ஹரம் இயக்கத்தினர், வட நைஜீரியாவில் முஸ்லீம் மத அரசை அமைக்கப் போராடி வருகின்றமை நினைவு கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் மேலும், நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜோநாதன் மேலும், பாதிக்கப்பட்டோர்களும், ஊர்மக்களும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடப்பட்டுள்ளது. வீதி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பெண்களில் இருவர் கைது செய்யப்பட்டு, ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக, ஜனாதிபதியின் மனைவியால் குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட பெண்கள் கூறும் விசயங்கள் எந்த மனிதனையும் திகைக்க வைக்கின்றன[8]. இடைக்காலத்தில் முகமதியர்கள் எப்படி பெண்களைக் கடத்தியது, அடிமைகளாக விற்றது, ஹேரம் என்ற அந்தப்புரங்களில் சுல்தான்கள், படைத்தலைவர்கள், என்று முறையே அனுபவிக்கப் பட்டு, பிறகு வீரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஏனெனில், இந்த நவீன காலத்திலும் அதே முறைகளை, வேறு மாதிரி செய்து வருவது வெளிப்படுகிறது[9]. அவற்றையெல்லாம் மீறிய முறைதான் ஜிஹாதி-குழந்தைகளைப் பெற்றெடுத்தல், வளர்த்தல் முதலியனவாகும்[10].

© வேதபிரகாஷ்

09-05-2015

[1] http://www.theguardian.com/commentisfree/2014/oct/03/sperm-donot-lawsuit-racism-eugenics-lesbian-couple-black-donor

[2] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-6/article7052396.ece

[3]  பைபிளில் இத்தகைய ஆதாரங்கள், அவற்றைப் பின்பற்றிய போக்கு சரித்திரத்தில், பல உதாரணங்களில் காணலாம்.

[4] https://www.ctc.usma.edu/v2/wp-content/uploads/2015/05/CTCSentinel-Vol8Issue42.pdf

[5] https://www.ctc.usma.edu/v2/wp-content/uploads/2015/03/CTCSentinel-Vol8Issue316.pdf

[6] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1/article7002695.ece

[7]http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-129-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88/article5922474.ece

[8] Wall Street Journal, Boko Haram and the Lost Girls of Nigeria- After a military rescue, captives tell their story to The Wall Street Journal, By Patrick McGrothy, Updated May 8, 2015 3:38 p.m. ET.

[9] http://www.wsj.com/articles/boko-haram-and-the-lost-girls-of-nigeria-1431113437

[10] http://www.ibtimes.co.uk/nigeria-boko-haram-impregnated-girls-guarantee-new-generation-fighters-1500022

காஷ்மீரத்தில் இஸ்லாமிய பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்தாம் தங்களுக்குள் சுட்டுக் கொள்/கொல்கின்றனராம்!

ஜனவரி 4, 2011

காஷ்மீரத்தில் இஸ்லாமிய பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்தாம் தங்களுக்குள் சுட்டுக் கொள்/கொல்கின்றனராம்!

தொடர்ந்து நடத்தப்படும் கருத்தரங்கங்கள்: காஷ்மீர் பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் முதலியோர் சிந்தாதிகளாக மாறிவிட்டனரோ என்ற ரீதியில் கருத்தரங்கங்கள் நடத்த ஆரம்பித்து விட்டனர். அப்துல் கனி பட், பிரிவினைவாத-தீவிரவாதி தலைவர், “மீர்வாயிஸ் மௌல்வி, அப்துல் கலி லோன் போன்ற தலைவர்களைக் கொன்றது, தீவிரவாதிகளேத் தவிர, பாதுபாக்குப் படையினர் இல்லை”, என்று இப்பொழுது ஒப்புக்கொண்டுள்ளாராம்[1]. ஸ்ரீநகரில் டிசம்பர் 31ம் தேதி 1993, அப்துல் அஹத் வானி என்ற பிரிவினைவாதத் தலைவர் சுட்டுக் கொன்ற தினத்தன்று[2], ஒரு கருத்தரங்கத்தை ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியினர் (Jammu and Kashmir Liberation Front – JKLF) ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பேசும்போது இப்படி உண்மையை ஒப்புக்க்கொண்டுள்ளார்[3]. காஷ்மீரத்தில் இஸ்லாமிய பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் பற்பல பேனர்களில் / ப்பொர்வைகளில் தங்களது குரூரக் கொலைகள், குண்டுவெடிப்புகள் மேற்கொண்டு வருகின்றனர். காஷ்மீரத்தில் இஸ்லாமிய பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் போட்டி, பொறாமை, உட்பூசல்கள் போன்ற காரணங்களுக்காக தங்களுக்குள் தாக்கிக் கொலை செய்கின்றனராம்! அதில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படத்தான் செய்கின்றனர். பாதுபாப்புப் படைகள், அவர்களை எதிர்கொள்ளும் போது, பல பாதுபாப்பு வீர்ர்களும் கொல்லப்படத்தான் செய்கின்றனர்.

கொலைக்காரர்களை அடையாளங்காட்ட வேண்டிய அவசியம் இல்லை நம்மக்கள்தாம் நம்ம்வரைக் கொன்றார்கள்[4]: இதுவரைக்கும் ஷஹீத் என்றெல்லாம் பேசிவந்தவர்களுக்கு, இறப்பின் பயம் வந்துவிட்டது போலும். “இறப்பு என்பது மிகவும் கொடியதாகும். எவரையும் கொல்வது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத செயலாகும். அதிலும் அப்பாவிகள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாவது நியாயப்படுத்தவே முடியாது. மனித மனசாட்சி அப்துல் ஹட்வானி, மௌலானா மெஹ்மூத் ஃபரூக், அப்துல் கனில் லோன் முதலியோர் எங்களது மக்களின் துப்பாக்கி குண்டுகளல் பலியானார்கள் என்ற போது உண்மையிலேயே நடுங்குகிறது”, என்று தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்[5]. “என்னுடைய சகோதரன் என் கண்கள் முன்னாலேயே, எங்களது ஆட்களால் கொல்லப்பட்டான். அந்த நிதர்சனத்தை நான் உணற்கிறேன். நானும் அதுமாதிரி பாதிக்கப்படலாம். ஆனால், என்னை யாரும் பயமுறுத்த முடியாது. என்னுடைய வாயைக் கட்டமுட்யாது, காதுகளை அடைக்கமுடியாது. நான் தொடர்ந்து எனது வேலையைச் செய்து வருவேன்”, என்று முடித்தார்.

இதனால் பாதுகாப்புப் படையினர் ஒன்றும் தேவதைகளாகி விடமாட்டார்கள்: அமைதி முயற்சிகளுக்காக பாடுபட்டனர் என்ற காரணத்திற்காக, மௌலானா மெஹ்மூத் ஃபரூக் 1991லும், அப்துல் கனில் லோன் 2002லும் கொல்லப்பட்டனர். தொடர்ந்து பேசுகிறார், “இதனால் பாதுகாப்புப் படையினர் ஒன்றும் தேவதைகளாகி விடமாட்டார்கள், அவர்களும் மக்களைக் கொன்றதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். ஆக உள்ளப் பிரச்சினை என்னவென்றால், எங்கள் மக்களே எங்களைக் கொல்வதுதான்” என்று விளக்கமும் கூறினார். அதாவது இங்குதான், அந்த வித்தியாசம் வெளிப்படுகிறது போலும். அதாவது, பாதுகாப்புப் படையினர் மற்றும் லட்சக்கணக்கான / ஏன் கோடிக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதற்கு எந்த வருத்தமும் தெரிவிக்கப் படவில்லை. ஏனெனில், அவை காஃபிர்களின் உயிர்கள், அதனால், சந்தோஷம்தான் போலும்! ஆனால், சகோதரன், தந்தை………என்று வரும்போது பாசம் வந்து விடுகிறது. ஆமாம், இவர்கள் எல்லாம் என்ன சுத்தமான முஸ்லீம்களா, இல்லையே இன்னும் அந்த பட், லேன் என்ற தமது இந்து பூர்விகத்தை ஒட்டவைத்துக் கொண்டுதானே உலவி வருகிறார்கள்!

ஹர்தால், கடையடைப்பு போன்றதால் சாதித்தது ஒன்றும் இல்லை: சைத் அலி ஷா ஜிலானி பேசும்போது, “கடந்த ஐந்து மாதங்களாக ஹர்த்தால் நடந்தது. 112 பேர் கொல்லப்பட்டனர். முடிவில் சாதித்தது ஒன்றும் இல்லை, ஏனெனில், ஒரு வழிமுறையே இல்லாமல் காரியம் நடக்கின்றது. பித்துப் பிடித்து, உணர்ச்சிகள் மூலமாகவே மூழ்கியிருக்க முடியாது, ஒரு நிலையில், உண்மையை பேசியேயாக வேண்டும்”, என்றார்.

என்னுடைய சகோதரனும் பிரிவினைவாதியினால்தா கொல்லப்பட்டான்[6]: பேராசிரியர் அப்துல் கனி பட் பேசும் போது, “தம் மக்கள் சாவதை தியாகம் என்ரு சொல்லிக்கொண்டே காலத்தைக் கடத்த முடியாது. மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய காலம் உள்ளது. ஜிலானி ஒரு பக்கம் இந்தியாவுடன் பேச முடியாது என்கிறார். ஆனால், மறுபக்கம் இந்திய பாரளுமன்ற உறுப்பினஎர்களுடன் பேசி வருகின்றார். இத்தகைய முரண்பாடுகள் இருக்கக்கூடாது. அதே மாதிரி நாங்கள் டில்லியுடன் பேசினால் எங்களை காஃபிர்கள் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்[7]. இத்தகைய முரண்பாட்டையும் கவனிக்க வேண்டும்”. இவர் சையத் ஜிலானியின் தீவிரவாத பிரிவினைவாதத்தை எதிர்ப்பவர்[8]. இவரது சகோதரை மொஹம்மது பட் 1995ல் சுட்டுக் கொல்லப் பட்டார்.

“உண்மை வெளிவர வேண்டும் சஜ்ஜத் லோன் சொல்வது[9]: சஜ்ஜன் லோன், “திருவாளர் பட் இத்தனை காலமாக அமைதியாக இருந்துவிட்டு, இப்பொழுது ஏன் இவ்வாறு பேசுகிறார் என்று தெரியவில்லை. இம்மாதிரி பேசுவதால், இயக்கத்தின் வலுதான் குறையும். மற்றவர்கள் இதை தமது லாபங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வர்”, என்றெல்லாம் ஃபேஸ்புக்கில் எழுதுகிறாராம்!

வேதபிரகாஷ்

04-01-2011