Archive for the ‘அப்துல் காதர்’ category

சட்டம் இந்தியர்களுக்கு, குறிப்பாக கிருத்துவ-முகமதியர்களுக்கு சலுகை அளிப்பது ஏன்? –  ஜவாஹிருல்லாவுக்கு ரம்ஜான் முடியும் வரை கைது நடவடிக்கை நிறுத்தி வைப்பு!

ஜூன் 24, 2017

சட்டம் இந்தியர்களுக்கு, குறிப்பாக கிருத்துவமுகமதியர்களுக்கு சலுகை அளிப்பது ஏன்? –  ஜவாஹிருல்லாவுக்கு ரம்ஜான் முடியும் வரை கைது நடவடிக்கை நிறுத்தி வைப்பு!

M H Jawahirullah and four others - CBI charge sheet - 05-10-2011-VP

வெறுப்பை வைத்து, வெறுப்பை வளர்த்து, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கும்பல்: கோயம்புத்தூர் வன்முறையைப் பற்றி மூண்டும் விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. முகமதிய அடிப்படவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், ஜிஹாதித் தீவிரவாதம் அதில் எப்படி வெளிப்பட்டது என்பது தெரிந்த விசயமே. இருப்பினும், ஜவாஹிருல்லாஹ் போன்றோர், “நவம்பர்-டிசம்பர் 1997ல், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது, காவி கும்பல் [saffron hooligans] கடைகளை சூரையாடியது, அதில் கோடிக்கணக்கில் பொருட்சேதம் ஏற்பட்டது, 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்……,” என்றெல்லாம் ஜவாஹிருல்லா தனது அக்டோபர்.9. 2011 அறிக்கையில் குறிபிட்டார்[1]. அதாவது, வெளிநாட்டிலிருந்து பணம் பெற்ற புகார், வழக்கு, நீதிமன்றம், தீர்ப்பு என்ற நிலையில் வெளியியட்ட அறிக்கையில் அவ்வாறு கதை விடுகிறார். இப்பொழுது, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம்பெற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக நிர்வாகியான ஜவாஹிருல்லா [M H Jawahirulla] உள்ளி்ட்ட 5 பேரும் சரணடைய ஒருவாரம் விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது, என்று செய்தி வருகின்றது.

Jawahirullahs clarification - 09-10-2011- Milli Gazette

  1. எம். எம். ஜவாஹிருல்லாஹ், தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் [H. Jawahirullah President of Tamilnadu Muslim Munnetra Kazhagam]
  2. எஸ். ஹைதர் அலி [S. Hyder Ali, General Secretary of TMMK]
  3. நிஸ்ஸார் அஹமது [Nissar Ahamed],
  4. ஜி. எம். ஷேக் [G.M. Sheikh]
  5. நல்ல மொஹம்மது களஞ்சியம் [Nalla Mohamed Kalanjiam].

Jawahirulla exempted from arrest till 26-06-2017

அந்நிய நிதிபெறுவதை ஒழுங்குப்படுத்தும் சட்டப்பிரிவுகளுக்கு எதிராக பணம் பெற்றது: கடந்த 1997-2000ம் காலகட்டத்தில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்அனுமதி பெறாமல், அந்நிய நிதிபெறுவதை ஒழுங்குப்படுத்தும் சட்டம் [Foreign Contribution (Regulations) Act, (FCRA) 1976] பிரிவுகளுக்கு எதிராகவும், டிசம்பர் 15, 1997 – ஜூன் 20, 2000 காலத்தில், கோயம்புத்தூர் முஸ்லிம் உதவி நிதி [Coimbatore Muslim Relief Fund (CMRF) ] என்ற பெயரில், வெ‌ளிநாடுகளில் இருந்து ரூ. 1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508 ஐ சட்டவிரோதமாகப் பெற்றது. பிறகு, அப்பணத்தை சௌகார்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்தது. அப்பொழுது அந்த நிறுவனமே பதிவ்வாகவில்லை, அனுமதியும் பெறப்படவில்லை. தமுமுக நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏ-வுமான ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, சையது நிசார் அகமது, ஜி.எம்.ஷேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகிய 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது[2]. [120(B), R/W 4(1)(C) AND SECTIONS 23 R/W 6&11 AND U/S 25&22 OF FOREIGN CONTRIBUTION REGULATION ACT 1976, ALLEGATION IS COIMBATORE MUSLIM RELIEF FUND AN ORGANISATION RECEIVED CONTRIBUTION FROM FOREIGN SOURCES WITHOUT GETTING PRIOR PERMISSION FROM CENTRAL GOVT. RCMA 12001-A-0053, DATED 31-02-2001, SPE, CBI-ACP, CHENNAI, C.C.NO. 1123/2004] 19-01-2004 அன்று குற்ரப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதனால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது[3]. முதலில் வராத அவர்கள், ஜூன் 15, 2011 அன்று  மாஜிஸ்ட்ரேட் முன்னர் தோன்றியதால், அந்த வாரன்ட் திரும்பப் பெற்றது[4]. செப்டம்பர் 30, 2004ல் நீதிமன்ற இக்குற்றத்தை நிரூபித்து தண்டனை வழங்கியது[5].  அதற்கு தான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை, வாஜ்பாயி அரசு தான் வந்த நிதியைத் தடுத்தது, அரசியல் காழ்ப்புணர்வுடன் ஒன்று வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. மூலமாக, இரண்டு வழக்குகளை போட வைத்தார் என்றேல்லாம் கூறி தனது விலாசம் முதலியவற்றுடன் அறிக்கை விட்டார்[6]. அது மில்லி கெஜட் என்ற முஸ்லிம் நாளிதழில் காணப்பட்டது[7].

 M H Jawahirullah and four others sentenced for fraud - MIDDAY

ரம்ஜான் நோன்பைக் காரணம் காட்டி சரணடைய காலஅவகாசம் வழங்கவும், மேல்முறையீட்டு காலம் வரை தங்களுக்கு ஜாமீன் வழங்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்: இந்த வழக்கை விசாரித்த பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலிக்கு தலா ஓரா‌ண்டு ‌சிறை தண்டனையும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக் மற்றும் நல்லமுகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு ‌சிறை தண்டனையும் விதித்து, அனைவருக்கும் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பளித்தது[8]. இந்தத் தீர்ப்பை சென்னை மாவட்ட 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்தது[9]. இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்ட ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் ரம்ஜான் நோன்பைக் காரணம் காட்டி சரணடைய காலஅவகாசம் வழங்கவும், மேல்முறையீட்டு காலம் வரை தங்களுக்கு ஜாமீன் வழங்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்[10]. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் சரணடைய வரும் 28-ம் தேதி வரை விலக்கு அளித்து, அதுவரை அவர்களை போலீஸார் கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்[11].இவ்வாறு, மத காரணங்களுக்காக, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, செக்யூலரிஸ கொள்கைகளின் படி சரியாகத் தெரிவில்லை[12]. மேலும் சரண்டர் என்றால், கைது என்பது அமுங்கி விடும். ஊடக பப்ளிசிடி இல்லாமல் தப்பித்துக் கொள்ளல்லாம். எப்படியும் பைலில் / பிணையில் வெ;ளியிலும் வரலாம். PTI செய்தி என்பதனால், ஆங்கில ஊடகங்களில் அப்படியே வந்துள்ளது[13].

Jawahirulla exempted from arrest till 26-06-2017-2

சட்டம் இந்தியர்களுக்கு, குறிப்பாக கிருத்துவமுகமதியர்களுக்கு சலுகை அளிப்பது ஏன்?: முன்பு, ஒரு கிருத்துவ பாதிரிக்கு, தண்டனை கொடுக்காமல், வருத்தப் படுங்கள் [repentance] என்று ஆணையிட்டது ஞாபகம் இருக்கலாம். அதாவது, அவர்களது மதநம்பிக்கையின் படி, வருத்தப் பட்டால், பாவம் விலகி, அவர் நல்லவராகத் திருந்தி விடுவாராம். அப்படியென்றால், எல்லா குற்றவாளிகளுக்கும் அத்தகைய தண்டனை கொடுக்கலாமே? இப்பொழுது, ரம்ஜான் மாதம் என்பதால் 28-06-2017 வரை சட்டத்தை நிறுத்தி வையுங்கள் என்று நீதிபதி, போலீஸாருக்கு, உத்தரவிட்டிருப்பது, சட்டத்திற்கு முரணானது போன்றேயுள்ளது. ஏனெனில், மற்றவர்களுக்கு, மதரீதியிலாக, இத்தகைய சலுகைகளைக் கொய்டுப்பதில்லை. அப்படியிருக்கும் போது, கிருத்துவர்களுக்கும், முகமதியர்களுக்கும், இத்தகைய சலுகைகளை ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. முன்னர், காஞ்சிமட சங்கராச்சாரியார், தீபாவளி அன்றே கைது செய்யப்பட்டது கவனிக்கப் பட வேண்டும். பிறகு சட்டம், நீதி எல்லோருக்கும் ஒன்றாகத்தனே செயல்பட வேண்டும். ஆக செக்யூலரிஸ நாட்டில் இப்படியும் நடக்கும் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

22-06-2017

Jawahirulla exempted from arrest till 26-06-2017-3

[1] Coimbatore a commercially vibrant city in Tamilnadu witnessed unprecedented carnage against Muslims in November-December 1997. 19 Muslims were killed and properties worth several million rupees were looted by saffron hooligans who were aided and abetted by the local police. Tamilnadu has never witnessed such a large scale riot and arson.

http://www.milligazette.com/news/2449-dr-jawahirullah-s-clarification-coimbatore-indian-muslims-riots-relief-work-news

[2] DNA, Madras HC exempts TMMK leader from surrendering in FCRA case, Wed, 21 Jun 2017-08:11pm , PTI.

[3] The Hindu, Non-bailable warrants recalled, CHENNAI:, JUNE 15, 2011 00:00 IST ; UPDATED: JUNE 15, 2011 04:10 IST.

[4] A city magistrate court on Tuesday recalled the non-bailable warrants of arrest issued against an MLA and four others in connection with a case relating to alleged violation of Foreign Contributions Regulation Act. On Monday, the Additional Chief Metropolitan Magistrate, Egmore, had issued the warrants against M.H.Jawahirullah, MLA, and four others in connection with a case in which the prosecution alleged that they had collected foreign contribution to the tune of Rs.two crore in the name of “Coimbatore Muslim Relief Fund,” violating the law. The charge sheet had been filed in the case. As the accused did not turn up in the court on Monday, the Additional CMM ordered issue of the warrants against them. On Tuesday, the five came to the court and the warrants against them were recalled. — Special Correspondent

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nonbailable-warrants-recalled/article2105543.ece

[5] http://www.dnaindia.com/india/report-madras-hc-exempts-tmmk-leader-from-surrendering-in-fcra-case-2479714

[6] The CMRF did not receive any fund from any Foreign Government, Foreign Agency or Foreign Citizens. However the NDA Government led by Vajpayee slapped two cases against Coimbatore Muslim Relief Fund. One was through the Income Tax Department and another one was by the Central Bureau of Investigation. The Vajpayee government slapped these cases with political vendetta.

http://www.milligazette.com/news/2449-dr-jawahirullah-s-clarification-coimbatore-indian-muslims-riots-relief-work-news

[7] The Milli Gazette, Dr Jawahirullah’s clarification,  Published Online: Oct 09, 2011.

M.H. Jawahirullah, President, Tamilnadu Muslim Munnetra Kazhagam, 7 Vada Maraicoir Street, Chennai 600 001; Email: jawahir[@]tmmk.in;  9 October 2011.

[8] தமிழ்.ஒன்.இந்தியா, வெளிநாட்டில் இருந்து ரூ1.55 கோடி அனுமதியின்றி வசூல்: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை உறுதி, By:  Mathi , Published: Monday, June 19, 2017, 15:10 [IST]

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-court-confirms-one-year-jail-term-jawahirullah-286621.html

[10] தி.இந்து.தமிழ், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் சரணடைய ஒருவாரம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு, Published: June 22, 2017 08:56 ISTUpdated: June 22, 2017 08:56 IST.

[11]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article9732564.ece

[12] India Today, Madras HC exempts TMMK leader from surrendering in FCRA case, June 21, 2017 | UPDATED 20:05 IST.

[13] http://indiatoday.intoday.in/story/madras-hc-exempts-tmmk-leader-from-surrendering-in-fcra-case/1/984305.html

மூன்றாவது அணிக்கு வேலையில்லை, ஜெயலலிதா சரியில்லை, திமுகவுடன் கூட்டணி உறவு தொடரும்!

நவம்பர் 26, 2015

மூன்றாவது அணிக்கு வேலையில்லை, ஜெயலலிதா சரியில்லை, திமுகவுடன் கூட்டணி உறவு தொடரும்!

தமிழகத்தில் “மூன்றாவது அணி இல்லை” என்றதிலிருந்து அதிமுக-எதிர்ப்பில், ஜெயலலிதா-எதிர்ப்பில் முடிந்துள்ள முஸ்லிம் லீக்கின் போக்கு (3)!

indian union muslim league-iuml-kmcc-muslim league

அகில இந்திய முஸ்லிம் லீக் உதயம் 1906 டிசம்பர் 30-31 மற்றும் பிரிவினை[1]: முஸ்லிம் லீக் இணைதளம் கூறுகிறது, “இன்றைய வங்க தேச தலைநகர் டாக்காவில் நவாப் வாக்காருல் முல்க் தலைமையில் அகில இந்திய முஸ்லிம் கல்வி மாநாடு கூட்டப்பட்டது. முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்க ஓர் அரசியல் கட்சி வேண்டும் என்ற கோரிக்கையை நவாப் சலீமுல்லா கான் இக்கூட்டத்தில் வலியுறுத்தியது, ஏற்கப்பட்டது. இதற்கான முறைப்படி தீர்மானத்தை டில்லி ஹக்கீம் அஜ்மல் கான் முன் மொழிந்து, நவாப் முஹ்ஸினுல் முல்க் வழிமொழிந்து, அகில இந்திய முஸ்லிம் லீகின் முதல் கூட்டம் நவாப் வக்காருல் முல்க் தலைமையில் நடைபெற்றதுசர் சுல்தான் முஹம்மது ஷாஹ் ஆகாகான் தலைவராகவும், நவாப் முஹ்ஸினுல் முல்க், நவாப் வக்காருல் முல்க் ஆகியோர் பொதுச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்முஸ்லிம் லீகிற்கு சட்டதிட்டங்கள் அமைக்க மௌலான முஹம்மதலி ஜவஹர் அவர்களை பொறுப்பாளாராக்க கொண்டு குழு அமைப்பட்டதுஇளம்பிறையும், ஜந்து முனை கொண்ட நட்சத்திரம் இடதுபுற மூலையில் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக் கொடி முஸ்லிம் லீகின் கொடியாக வடிவமைக்கப்பட்டதுபின் நடந்த லீக் மாநாடுகளில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரப்பட்டது. ’மிண்டோமார்லி சீரிதிருத்தம்என்ற 1909-ம் ஆண்டு இந்தியன் கவுன்ஸில் சட்டம் மூலம் 1913 அக்டோபர் 10-ல் முஸ்லிம் லீகில் சேர்ந்தகாயிதெ ஆஜம் முஹம்மதலி ஜின்னாஹ் 1935-ல் தான் அதன் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1940 மார்ச் 23-ல் லாகூர் மாநாட்டில்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடமேற்கு, வடகிழக்கு மாகானங்கள் தனி ராஜ்யமாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது”; “நேராக இறங்கி” இந்துக்களைக் கொன்றது முதலியவை சரித்திரமாகியது. இந்திய சுதந்திர போராட்டமும் பிரிவினை கோரிக்கையும் உச்ச கட்டத்தை எட்டின.  1947 மார்ச் 24-ல் மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய வைஸ்ராயாக பதவி ஏற்றதும் தேசப்பிரிபினைக்கான செயல் வடிவம் தீட்டப்பட்டது.  அதாவது, இவ்விதமாகத்தான் இஸ்லாம் பெயரில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது.

IUML factions and flagsபாகிஸ்தான் உருவான பிறகும் முஸ்லிம் லீக் இந்தியாவில் தொடர்ந்தது[2]: முஸ்லிம் லீக் இணைதளம் கூறுகிறது, “1896 ஜுன் 5ல் திருநெல்வேலி பேட்டையில் பிறந்த காயிதெ மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில சாகிப் 1937-ல் முஸ்லிம் லீகில் உறுப்பினரானார் 1936-ல் மதராஸ் ஜில்லா முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1945-ல் மதராஸ் மாகான சட்டசபைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்கட்சி தலைவரானார். அதே ஆண்டு மதராஸ் மாகான முஸ்லிம் லீக் தலைவரானார்சுதந்திரத்திற்குப்பின் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்ஸிலின் கடைசிக் கூட்டம் 1947 டிசம்பர் 13,14 தேதிகளில் பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள பந்தர் ரோடு காலிக்தினா ஹாலில் நடைபெற்றது. ஜின்னா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்தியாவிலிருந்து காயிதெ மில்லத், கே.டி.எம். அஹமது இப்ராகீம் எம்.எல்.சி, மலபார் சீதி சாகிப் எம்.எல்., என்.எம். அன்வர் சாகிப், .கே. ஜமாலி சாகிப் எம்.எல். ஆகிய ஐவர் கலந்து கொண்டனர்வரும் காலத்தில் முஸ்லிம் லீக் பற்றி இந்தியா, பாகிஸ்தானில் உள்ள கவுன்ஸில் உறுப்பினர்கள் தனித்தனியாக முடிவு செய்து கொள்ள வேண்டுமென முடிவெடுக்கப்பட்டு, தனித்தனி கன்வீனர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் பாகிஸ்தானுக்கான கன்வீனராகவும், காயிதெ மில்லத் இந்தியாவிற்கான கன்வீனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்”.

05-karunanidhi-iuml-head-khadeகேரள மாதிரைப் பின்பற்ற ஆசை: கேரளாவில், நம்பூதிரி பாட் இருக்கும் போது, மலப்புரம் மாவட்டம் முஸ்லிம்களுக்கு என்ற ரீதியில் உருவாக்கப்பட்டது. இதனால், முஸ்லிம் ஜனத்தொகைப் பெருகி, இன்று கனிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அதனால், ஆட்சியிலும் உள்ளனர். அதே முறையை இங்கும் பின்பற்ற வேண்டும் என்கிறாரகள். திமுக-அதிமுக என்று மாறி-மாறி கூட்டு சேர்ந்து கொண்டு எம்.பி, எம்.எல்.ஏ பதவிகளைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்துக்கள் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் எந்த கட்சியினாலும், ஒரு எம்.எல்.ஏ, எம்.பியை உருவாக்க முடியவில்லை. இந்துக்களின் நலன்களை தமிழ்நாட்டில் யாரும் கவலைப்படுவதும் இல்லை. மாறாக, மூஸ்லிம் லீக் கட்சிகள் நடத்தும் இபதர் பார்ட்டிகளில் கலந்து கொண்டு, கஞ்சி குடித்துக்கொண்டு இந்துமதத்தை வசைப்பாடிக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் முஸ்லிம் லீக்-திராவிட கட்சிகள் கூட்டணி சாதித்துள்ளன. கோவில்சொத்துகளை ஆக்கிரமித்டுக் கொண்டு, வாடகைத் தராமலும் முஸ்லிம்கள் உள்ளனர். அந்த அளவிற்கு செக்யூலரிஸ கொள்ளைகளை முச்லிம்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Kerala Muslims support Saddam Hussein3-வது அணிக்கு வேலையில்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேட்டி[3]: தமிழகத்தில் 3–வது அணிக்கு வேலையில்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் சென்ற மாதம் அக்டோபரில் கூறினார். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகள் மத்திய அரசின் கொள்கையாக மாறிவிட்டன. பா.ஜனதா பெயரில் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் உள்ள மத சார்பற்ற சக்திகள் ஜனநாயக இயக்கங்கள் ஒன்றுதிரண்டு மதவாத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அரசியல் அரங்குகள், சாகித்ய அகாடமி என அனைத்திலும் மதவாத கொள்கைகள் புகுத்தப்பட்டு வருகிறது. இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகத்தின் அடித்தளமே தகர்ந்துவிடும். இதற்கு ஆதாரமாக மாட்டுக்கறி பிரச்சினைக்காக 4 அப்பாவி முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டு உள்ளனர். அரியானா பா.ஜனதா முதல்வர் உள்பட மத்திய மந்திரிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வருகின்றனர். முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி வன்முறை தூண்டப்படுகிறது”.

Kerala Muslims support Yasser Arafatதமிழகத்தை பொறுத்தவரை .தி.மு.., தி.மு..வை தவிர 3–வது அணிக்கு வேலையில்லை: “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும். எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர 3–வது அணிக்கு வேலையில்லை[4]. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி. அதற்கு இணையான கட்சி தி.மு.க. மட்டுமே. உதிரி கட்சியினர் ஆட்சியை பிடிப்போம் என கூறுவது அவர்களது தனிப்பட்ட ஆசை, விருப்பம். அ.தி.மு.க. ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந் தாலும் ஆட்சி, அதிகாரம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எந்த அதிகாரியும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இல்லை. நாட்டிலேயே அதிக அளவில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அரசின் மீது மக்கள் அவநம்பிக்கையில் உள்ளனர். அதனால்தான் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின்போது மக்கள் எழுச்சியும், வரவேற்பும் அதிகரித்து உள்ளது. மக்களின் அதிருப்தி வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக திரும்பும். அந்த எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வுக்குதான் செல்லும். எனவே வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்”, இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொருளாளர் ஷாஜகான், முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், மாவட்ட செய லாளர் முகம்மதுபைசல், சாதுல்லாகான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

IUML Kerala banner with Paki-PMஆளும் மத்திய அரசுடன் கூட்டுவைத்துக் கொண்டு அனுபவித்த திராவிட கட்சிகள்: பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ள ஆவலாகத்தான் திராவிட கட்சிகள் இருக்கின்றன. அவை ஒன்றும் கூட்டு வைத்துக் கொள்ளாமலும் இருந்ததில்லை. செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசினால் கூட, தில்லியில் அதிகாரத்தை விரும்பத்தஆன் செய்கின்றன. ஒரு எம்.பி பதவுக்கு அலையும் கட்சித்தலைவர்கள் தமிழகத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். அதனால் தான், ஓட்டுகள் கிடைக்காது என்றால் கூட அத்தகையக் கட்சித் தலைவர்கள் ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு அறிக்கைக்கள் விடுவது, கூட்டங்கள் போடுவது என்று செய்திகளில் வர ஆசைப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். எந்த கட்சியாவது கூப்பிடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதால் அதை கூட்டணியில் சேர்க்க தயாராக இல்லை என்ற நிலையில் பாஜகவுடன் கூட்டு வத்துக் கொள்ள திமுக முயல்கிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[5]. இதனால் தான் முஸ்லிம் லீக் போன்றவை மறைமுகமாக பேரம் பேசுகின்றன போலும். மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மமக ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை உருவாக்கி, “அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸுடன் கூட்டணியில்லை: ஒத்த கருத்துடைய கட்சிகள் வரலாம்”, என்று அறைகூவல் விடுத்துள்ளதும் வேடிக்கையாகவே இருக்கிறது[6]. காங்கிரஸ் பிளவு பட்டுள்ளதால், பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளத்தான் திமுக மற்றும் அதிமுக விரும்பும். பாஜகவைப் பொறுத்த வரையில், அதிமுகதான் விருப்பமான கட்சி, ஆனால், ஊழல் என்ற பிரச்சினையும், ஜெயலலிதா வழக்குகளும் தடுக்கின்றன. அதற்கேற்ற முறையிலும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. அந்நிலையில், பணிவுடன் வரும் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று தான் பாஜகவினர் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

© வேதபிரகாஷ்

26-11-2015

[1] http://www.muslimleaguetn.com/history.asp

[2] http://www.muslimleaguetn.com/history.asp

[3]  மாலைமலர், 3-வது அணிக்கு வேலையில்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேட்டி, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, அக்டோபர் 26, 2015: 5:17 PM IST.

[4] http://www.maalaimalar.com/2015/10/26171739/dont-work-to-third-party-india.html

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-tries-woo-bjp-forging-alliance-238651.html

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-forms-new-poll-alliance-peoples-welfare-front-2016-239004.html

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

ஜூலை 17, 2011

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

 

குண்டு தயாரிப்பு விவரம்: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[1]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது. இப்பொழுதும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[2]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[3]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[4]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[5]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்து இருந்தது[6]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுக்கிறது.

 

வழக்கம் போல முரண்பட்ட வெளியிடப்படும் அறிக்கைகள்: ஆளும் சோனியா கட்சித் தலைவர்கள் சட்டப்படி திவிரவாதிகளுக்கு உதவும் வகையில் முன்னுக்குமுணாகப் பேசுவது, அறிக்கைகள் விடுவது தொடர்கிறது. அவை முழுவதுமாக பொய் அல்லது நீதிமன்ற அவமதிப்பு அல்லது வழக்கை திசைத்திருப்பும், பாதிக்கும் என்று தெரிந்தே செய்து வருகிறார்கள். மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மும்பைக்கு 13-07-2011 நள்ளிரவில் வந்த ப.சிதம்பரம், குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் பார்த்து நலம் விசாரித்தார். 14-07-2011 அன்று காலை ப.சிதம்பரமும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், “இதுவரை 17 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டுள்ளது. அது யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 131 பேர் காயமடைந்து 13 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். 82 பேரின் நிலைமை ஸ்திரமாக உள்ளது. 23 பேர் மிகவும் கடுமையான காயங்களைச் சந்தித்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 

ஒன்றும் தெரியாமல் உள்துறை அமைச்சர் இருப்பதைவிட இல்லாமலேயே இருக்கலாம்: “நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை எச்சரிக்கை எதுவும் எங்களுக்கு இல்லை. மாநில உளவுத்துறையோ அல்லது மத்திய உளவுத்துறையோ இதுகுறித்து எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. கிட்டத்தட்ட 30 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் தீவிரவாதம் திரும்பியுள்ளது. மும்பை மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். தாதர், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் மூன்று குண்டுகள் வெடித்தன. மூன்று இடங்களையும் நான் நேரில் பார்த்தேன். அதில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாதரில் நடந்தது சிறிய அளவிலான குண்டுவெடிப்பு. மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரவு முழுவதும் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக அலசி ஆராய்ந்துள்ளனர். தடவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

 

அம்மோனியம்நைட்ரேட்உபயோகப்படுத்தப்பட்டிருப்பது: “மகாராஷ்டிர தடவியல் ஆய்வகம் பல முக்கிய தொடக்க நிலை ஆதாரங்களை சேகரித்துள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன. அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்தப்படவில்லை. அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. யார் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. யாரையும் குறிப்பிட்டு நாங்கள் சந்தேகிக்கவில்லை. மாறாக, அனைவரையுமே சந்தேகிக்கிறோம். அனைத்து தீவிரவாத குழுக்களின் தொடர்புகள் குறித்தும் நாங்கள் விசாரிக்கிறோம். அனைத்து விதமான தகவல்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சமீபத்தில் புனேயில் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல மும்பையில், சிபிஐ மாவோயிஸ்ட்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். மும்பையை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் அவர்கள் குறி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் மும்பை அதிக அளவில் குறி வைக்கப்படுவது பெரும் வேதனை தருகிறது”, என்றார் ப.சிதம்பரம்[7].

 

உள்ளூர் அல்லது வெளியூர் தீவிரவாத இயக்கமா? இருப்பினும் மும்பை எதிர்-தீவிரவாத குழு மெத்தனமாகவே இருந்துள்ளது. முந்தைய குண்டுவெடிப்புகளைப் போல, இப்பொழுது இந்திய-முஜாஹித்தீன் போன்ற எந்த தீவிரவாத இயக்கமும் ஈ-மெயில் அனுப்பி பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்திய-முஜாஹித்தீன் 14 இளைஞர்களை இந்த மூன்று குண்டுவெடிப்புகளில் உபயோகப்படுத்தியுள்ளதாக யூகிக்கப்படுகிறது.  ராஞ்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டபோது, சிமியின் அங்கத்தினர்கள் அத்தகைய வேலைச் செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. பெங்களூர் மற்றும் ஹைதரபாத் நகரங்களிலுள்ள அவர்களது கூட்டாளிகள் உதவியுள்ளார்கள். பிடிக்கப்பட்டுள்ள சல்மான் என்பவன் முன்னமே அவர்கள் அத்தகைய குண்டுவெடிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளான்[8]. சிறிய இடங்களை ரகசியமாகக் கண்காணிக்கும் கேமராக்களில் பிடிபட்டுள்ள காட்சிகளினின்று, குறிப்பிட்ட மூன்று நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவன் முழுவதுமாக அடையாளங்காணபாட்டுள்ளான். அவர்களுடைய படங்கள் வரையப்படபோகின்றன. இருப்பினும், இம்முறை அவர் வெளியிடப்படாது என்று சொல்லப்படுகிறது. முந்தைய 26/11 குண்டுவெடிப்புகள் போல 13/7 அன்றும் உள்ளூர்வாசிகள் உதவியுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது[9].

 

சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள்: மும்பையில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. குண்டுவெடிப்புக்கு முன்பு 3 மர்ம ஆசாமிகள் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடியது தொடர்பான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது[10]. இந்த தகவலை மகாராஷ்டிர முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்திருக்கிறார். அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இந்த தகவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.தெற்கு மும்பை பகுதியில் தாதர், ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் உட்பட 3 இடங்களில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். 133 பேர் காயமடைந்தனர்.

 

செல்போனில் பேசிக்கொண்டிருந்த அந்த மூவர்: இது தீவிரவாதிகளின் செயல் என்பது உறுதி செய்யப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் கடைகள் மற்றும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒபரா ஹவுஸ் அருகே கவு ஹள்ளி என்ற இடத்தில் வீடியோ கேமராவில் 3 பேர் அந்தப் பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடமாடியதுகண்டுபிடிக்கப் பட்டது. அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் செல்போன் மூலமே சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனவே இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியன் மொஜாகிதீன் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். ஆனால் இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசிடம் பிடிபடாமல் இருக்க செல்போனை கடந்த சில மாதங்களாக பயன்படுத்துவதில்லை. எனவே இந்த தாக்குதலை நடத்தியவர்கள் வேறு தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

மூவரில் ஒருவன் இறந்து விட்டானா? மற்றொரு இடத்தில் கிடைத்த வீடியோ காட்சிகளை போலீசார் பார்த்தனர். அதில் ஒருவர் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாக வாகன நிறுத்த இடத்தை நோக்கி செல்கிறார். சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் குண்டு வெடிக்கிறது. அந்த இடத்தில் மின்சார ஒயர்கள் பின்னப்பட்டு ஒருவர் பிணமாக கிடந்தார். வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக அது இருக்கலாம் என்று தற்போது போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் கொண்டு சென்ற பையை போன்று அந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. எனவே அவர் பையில் வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக இருக்க வேண்டும் என்று புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டை வைத்து விட்டு அவர் திரும்புவதற்குள் முன்கூட்டியே வெடித்து விட்டதால் அவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

 

மும்பை குண்டுவெடிப்பு-குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து நடந்த தாக்குதல்? குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து மும்பையில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது[11]. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலட், கான்டிவ்லி, பொரிவிலி ஆகிய பகுதிகளைக் குறி வைத்து நடத்தப்பட்டது. 13-07-2011 மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளும் குஜராத் சமுதாயத்தினர், குறிப்பாக வர்த்தகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்திருக்கிறது. எனவே இந்த முறையும் குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஜவேரி பஜார், கேட்வே ஆப் இந்தியா ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல 2003ல் கட்கோபர், 2003 மார்ச்சில் முலுந்த், 2003 ஜனவரியில் விலே பார்லே ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இங்கும் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 2003 சம்பவத்திற்குப் பின்னர் பேசிய மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, குஜராத்திகளை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

 

தீவிரவாதிகளின் இலக்கு ஏன்? அதேசமயம், குஜராத்திகளை குறி வைத்துத்தான் பெரும்பாலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதாக கூறுகிறார் மும்பை மாநகர குஜராத்தி சமாஜ் தலைவர் ஹேம்ராஜ் ஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், ஜவேரி பஜார் பகுதி கமிஷனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. ஓபரா ஹவுஸ் பகுதியில் உள்ள கவ் காலி, தாதரில் உள்ள கபூதர்கானா ஆகியவை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாகும். மாலை நேரங்களில் இங்குமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஷா. சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் விரேன் ஷா கூறுகையில், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் பகுதிகளில் தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்திகள்தான். இங்கு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதைப் பார்க்கும்போது குஜராத்திகளைக் குறி வைத்தே தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேசமயம், மக்கள் நெருக்கமான பகுதிகளை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும் கருத முடியும் என்றார்.

 

மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்[12]: மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு உயர் அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் தொட ர்பு சாதனங்கள் அனைத்தும் முழு மையாக செயலிழந்து விட்டன என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சவாண் மேலும் கூறுகையில், குண்டு வெடிப்பு நடந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் காவல் துறை உயர் அதிகாரிகளையோ, நிர்வாக உயர் அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

 

தீவிரவாதிகளுக்கு துணையாக அவ்வாறு நிறுவனங்கள் செய்துள்ளனவா? வேறு எந்த வகை சாதனங்களையும் தகவல் தெரிவிக்க பயன்படுத்த இயலாத நிலை இருந்ததால், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. எனவே, இதுபோன்ற நேரங்களில் செயற்கைகோள் துணையுடன் இயங்கும் தொலைத் தொடர்பு சாதனங்களையோ அல்லது எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் அமைந்த சாதனங்களையோ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. எனவே, இதுகுறித்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார்.

 

26/11ற்கு பின்னரும் நவீனப்படுத்தப்படவில்லை என்று புலம்பும் மஹாராஷ்ட்ர முதல்வர்: அவர் மேலும் கூறுகையில், காவல்துறையினருக்கான சாதனங்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஆனால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட ராம் பிரதான் குழு பரிந்துரைத்த எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. காவல் துறையை நவீனப்படுத்துவதற்கான குழு பரிந்துரைகள் எதையும் நாம் நினைத்த அளவில் அமல்படுத்த இயலவில்லை என்றார். உளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் உரிய தகவல் தரவில்லை என்பதை ஏற்க முடியாது என்ற சவாண், அதுபற்றி கூறுகையில், ஆனால் அப்பிரிவின் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றார் சவாண்.


[1] இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்!

மார்ச் 11, 2011

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்!

 

தனிப்பட்ட முறையில் முஸ்லீம்களின் மீது எந்த எதிர்மறையான நோக்கம் இல்லையெனெனும், அரசியல் ரீதியாக முஸ்லீம் லீக் இந்தியாவில் செய்து வரும் அரசியலை விமர்சித்து அலசும் கட்டுரை இது.

 

திராவிட கட்சிகளும், முஸ்லீம் லிக்கும்: ஜின்னா பெரியாருக்கு என்றுமே அரசியல் ரீதியில் உதவியது கிடையாது. ஆனால், பெரியார் தாம் தேவையில்லாமல், ஜின்னாவிடம் போய் கெஞ்சிக் கொண்டிருந்தார். ஒருமுறை ஜின்னாவே பெரியாருக்கு வெளிப்படையாக கடிதமும் எழுதி விட்டார். தான் முஸ்லீம்களுக்காகத்தான் போராட முடியுமே தவிர முஸ்லீம் அல்லாதவர்களுக்கு முடியாது என்று தெரிவித்தார்[1]. அதுபோல திகவிற்கு பிறகு திமுக முஸ்லீம் லிக்குடன் நெருக்கமாக இருந்தாலும், திமுக தான் முஸ்லீம்களுக்கு நண்பன் என்று காட்டிக் கொள்ள உபயோகப் பட்டதே தவிர, முஸ்லீம் லீக்கினால் திராவிட கட்சிகளுக்கு என்ன ஆதாயம் கிடைத்தது என்றதை அவர்கள் தாம் கூறிக்கொள்ள வேண்டும்.

 

முஸ்லீம் லீக்குகள் கட்சிகள் பிரிந்திருந்தாலும் சாதிக்கும் நிலை: முஸ்லீம்களுக்குள் இறையியல் ரீதியில், இனம், மொழி, பாரம்பரியம், கலாச்சாரம் என்று பலவித காரணிகளால் பற்பல வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் பிரச்சினை என்று வரும்போது, ஒன்றாக வேலை செய்து வருகின்றார்கள். இந்தியா இரண்டாவதற்கு காரணம் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தான் என்று காட்டுவது சரித்திரம். என்னத்தான் இந்தியா செக்யூலரிஸத்தில் ஊறினாலும், பாகிஸ்தான் மதவாதத்தில் திளைத்தாலும், பாதிக்கப்பட்டுள்ளது இந்துக்கள்தாம் என்பது அந்தந்த நாட்டு சரித்திரங்கள் எடுத்துக் காட்டுகின்றன[2]. இந்தியாவில் முஸ்லீம்கள் எல்லா உரிமைகளையும் பெற்று இருக்கும் நிலையில், பாகிஸ்தானில் இந்துக்கள் மிருகங்கள் போல் வேட்டையாடப் படுகிறார்கள்[3]. இந்நிலையில், முஸ்லீம் கட்சிகள் பிரிந்துள்ளது போல காட்டிக் கொண்டு, இரண்டு அணியிலும் பங்குகளைக் கேட்டு தமது அரசியல் பலத்தைப் பெருக்கவே வழிகண்டு வருகின்றனர். ஆனால், வெளியில் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வது போலக் காட்டிக் கொள்கின்றன[4]. மொத்தத்தில் ஆறு இடங்களை முஸ்லீம் கட்சிகள் பெற்றுவிட்டன. வெற்றிபெற்றதும், அவர்கள் ஒன்றாகத்தான் வேலை செய்யப் போகிறார்கள்.

 

திராவிட கட்சி கூட்டணிகளில் முஸ்லீம் லீக்குகள்-கட்சிகள்: அதிமுக கூட்டணியில் முஸ்லீம் கட்சிகள் உள்ளன. திமுகவிலும் உள்ளன. “அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்என தமுமுக மாநில பொது செயலாளர் ஹைதர்அலி தெரிவித்தார்…………..மேலும் அதிமுக கூட்டணியில் தற்போது தேமுதிக வந்துள்ளது. அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்[5].  மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சொந்த சின்னத்தில் போட்டியிட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது[6]. தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் வந்தார். இரவிபுதூர்கடையில் நிருபர்களிடம் கூறியதாவது: “மனிதநேய மக்கள் கட்சி 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த பார்லி., தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 15 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கிறோம். அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்று விஜயகாந்த் கூறி வருகிறார். இதனால் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வருவதை நாங்கள் வரவேற்கிறோம். மனிதநேய மக்கள் கட்சிக்கு அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். எங்கள் கட்சி தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட உள்ளோம். 1991க்கு பிறகு சிறுபான்மை கட்சிக்கு மூன்று இடம் ஒதுக்கப்படுவது இது தான் முதல் முறை ஆகும்[7]. இருப்பினும், திமுகவில் உள்ள முஸ்லீம் கட்சிகள் வேறுவிதமாக பேசுகின்றன.

 

எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக்[8]: சென்னை, மார்ச்.9, 2011: நாங்கள் ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததால்தான் திமுக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறியாமல் காப்பாற்றப்பட்டது என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெரிவித்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளிடையே கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டபோது, அக்கட்சிகளின் நலன்விரும்பிகளுடன் தங்கள் கட்சி தொடர்புகொண்டதாக முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் இ. அகமது தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள முஸ்லீம் லீக் சகாக்களுடன் ஆலோசித்து கருத்து வேறுபாடுகளைக் களைய என்னாலான முயற்சிகளைச் செய்தேன். தமிழக சகாக்களின் தாராளம் காரணமாக என்னால் அதைச் செய்ய முடிந்தது. இக்கட்டான நிலைமையும் முடிவுக்கு வந்தது என அகமது தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். தேச நலன் கருதி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், வலுப்படுத்தவும் தனது கட்சி எப்போதும் முயற்சித்து வருவதாக…………..”, அகமது குறிப்பிட்டார்.

 

எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்துல் சமதின் மகள் பாத்திமா முசாபர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட 3 சீட்களில் ஒன்றை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் கட்சி மேலிட முடிவை எதிர்த்து மூத்த பெண் தலைவர் குரல் கொடுத்துள்ளார்[9]. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா முசாபர். இவர் மறைந்த அப்துல் சமதின் மகளாவார். வரும் சட்டசபை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் உள்ளது. அக்கட்சிக்கு திமுக 3 சீட் ஒதுக்கியிருந்தது. ஆனால் காங்கிரஸுக்கு 63 சீட் கொடுக்க தீர்மானித்ததால் சீட் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கிய 3 சீட்களில் ஒன்றை திமுக வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது.

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது: இதற்கு பாத்திமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு சீட்டை திரும்ப எடு்த்துக் கொள்ள அனுமதித்ததன் மூலம் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது. கட்சி தலைமையின் இந்த முடிவு பாரபட்சமானது, ஒருதலையானது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அகமது, மாநில தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். நாங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் மேலிடங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஒரு சீட்டை விட்டுக் கொடுத்துள்ள எங்கள் கட்சி மேலிடத்தின் முடிவு முஸ்லிம் சமுதாயம் மற்றும் கட்சியினர் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது”, என்றார். உண்மையிலேயே அவர்கள் ராஜினாமா செய்வார்களா அல்லது எதிர்த்து பிரச்சாரம் செய்வார்களா, ஆறு இடங்களிலும் சசதுர்யமாக வெல்வார்களா என்பது மே மாதத்தில் தெரிந்து விடும்.

 

முஸ்லிம் லீக் கட்சிகளின் இணைப்பு (10-03-2011): இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புடன், திருப்பூர் அல்டாப் தலைமையிலான தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளின் இணைப்பு, தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில் அறிவாலயத்தில் நேற்று நடை பெற்றது. இது குறித்து காதர் மொய்தீன், அல்டாப் ஆகியோர் கூறியதாவது: “முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காகவும், அரசியல் களத்தில் ஒருங்கிணைந்த சக்தியாக தி.மு.க., கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம்”, என்றனர்[10]. 2002ல் நடந்த ஒரு நிகழிச்சி இங்கு நினைவிற்கு வருகின்றது.

 

அதிமுகவுடன் தங்கள் கட்சி வைத்திருந்த உறவு முறிந்து விட்டதாக இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர்சுலைமான் சேட் கூறினார் (05-05-2002). சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது[11]: வாணியம்பாடி சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த அப்துல் லத்தீப் மறைவு காரணமாகவே தற்போதுஅத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. எனவே இந்தத் தொகுதியை இந்திய தேசிய லீக்கிற்கே விட்டுக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர்ஜெயலலிதாவிடம் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தேன். இதுபற்றிப் பரிசீலனை செய்வதாக அப்போது அவர் உறுதியளித்தார். ஆனால் பாரம்பரியமாகவே முஸ்லீம்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இத்தொகுதியில் முஸ்லீம்கள் அல்லாத ஒருவரைஜெயலலிதா தன்னிச்சையாக அறிவித்துள்ளார். எங்களுடைய எந்த ஆலோசனையையும் கேட்காமலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளதால், அதிமுகவுடனானஎங்கள் உறவை நாங்கள் துண்டித்து விட்டோம். முன்பு பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டதாகக் கூறிய ஜெயலலிதா, தற்போது அந்தக் கட்சியுடன் உறவுவைத்துக் கொள்ளத் தயாராகிக் கொண்டிருப்பதும் எங்களுக்குப் பெரும் வேதனையை அளித்துள்ளது. வாணியம்பாடியில் எங்கள் கட்சி போட்டியிடுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம் கோரிக்கைவிடுத்துள்ளேன் என்றார்.

 

அரசியல் கட்சிகளிம் போலித்தனங்கள்: திராவிட கட்சிகளைப் போல, முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளும் உருமாறி விட்டனவா அல்லது அதுபோல நடிக்கின்றனவா? இந்தியாவில் உள்ள ஒரே மதவாதி கட்சி பி.ஜே.பி தான் என்று இந்த முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளே கூறுவதும் வேடிக்கையான விஷயம் தான். ஆனால், செக்யூலரிஸ கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் திமுக, அதிமுக மாறி மாறி பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துள்ளன. இப்பொழுதுகூட, காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டு சேரும் பட்சத்தில் மாறுபட்ட எண்ணங்கள் இருந்தன. காங்கிரஸைப் பற்றி கேட்கவே வேண்டாம். செக்யூலரிஸம் சொல்லிக் கொண்டு பி.ஜே.பியை விட, அதிகமாகவே மதசாட்ர்புள்ள கட்சிகளுடன் – முஸ்லீம் லீக், கிருத்துவ கட்சிகள், சீக்கிய கட்சிகள் – தொடர்ந்து கூட்டு வைத்திருந்து வந்துள்ளன. ஆகவே, இப்படி முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் ஆளும் மற்றும் எதிர் கூட்டணிகளில் இருப்பது, அரசியலை மீறிய நிலையைத்தான் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

11-03-2011


[1] கே. வி. ராமகிருஷ்ண ராவ், ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் (3), ஜின்னா பெரியாருக்கு எழுதிய கடிதம், பம்பாய், ஆகஸ்டு 17, 1944, http://www.thinnai.com/?module=displaystory&story_id=209011514&format=print&edition_id=20090115

[2] இந்துக்களை ஒழித்துக் கட்டியதன் மூலம் பாகிஸ்தான் சிறுபான்மையினயை பிரச்சினையை அரவே ஒழித்துவிட்டடு போலும்!

[3] இதைப் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரைகளில் இணைதளத்தில் பார்க்கலாம்.

[5] தினமலர், 234 தொகுதிகளிலும் அதிமுக.,கூட்டணி பெறும் : தமுமுக பொது செயலாளர் பேட்டி, பிப்ரவரி 26, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=195519

[6] அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட், http://pfikaraikal.wordpress.com/2011/02/22/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/

[7] தினமலர், மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி, பிப்ரவரி 26, 2011, http://www.dinamalar.com/news_Detail.asp?Id=195461

[8] தினமணி, எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக், First Published : 09 Mar 2011 03:53:36 PM IST http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=388118&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

[10] தினமலர்,  முஸ்லிம் லீக் அமைப்புகள் இணைப்பு,  மார்ச் 11, 2011,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=203425

 

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் !

ஓகஸ்ட் 23, 2010

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் பிரச்சினையை விட்டுவிட்டு மதானையைப் பிடித்துக் கொண்டன தமுமுக: தமுமுகவினர் முன்பு காஷ்மீர் பிரச்சினைக்கு, சென்னையில் ஆர்பாட்டம் நடத்தினர். இப்பொழுதுகூட, தீவிரவாதி-ஜிஹாதிகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு அப்பாவி பெண்மணிகளை – தாய்-மகள் என்றுகூட பார்க்காமல் (ஜரினா மற்றும் ஷகிலா) சுட்டுக் கொன்றுள்ளனர்[1]. முன்பு கல்லெடித்து கலாட்டா செய்தனர் அந்த தீவிரவாதிகள், இப்பொழுது கடைக்காரர்களே கல்லடித்து அவர்களை விரட்டுகின்றனர்[2]. எனெனில், அவர்களுக்கு அந்த அளவிற்கு வெறுப்பு வந்து விட்டது[3] போலும்! ஆக அந்த பிரச்சினை சரி வராது என்று நினைத்து, கோயம்புத்தூருக்குச் சென்று, தமுமுக ஆர்பாட்டம் செய்துள்ளனர் போலும்.

கேரள போலீஸார் எப்பொழுதும் தீவிரவாதிகளுக்கே உதவிக் கொண்டிருக்கவேண்டுமா? கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மதானியை பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடகப் போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறக் கழகத்தினர் இன்று கோவையில், நேற்று காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர்[4]. தமுமுகவின் கோவை மாவட்டத் தலைவர் பர்கத் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். கர்நாடக போலீஸாருக்குத் துணைபோன கேரள போலீஸாரை அவர்கள் கடுமையாக விமர்சித்தினர்[5]. மாவட்ட செயலர் ரபீக், பொருளாளர் அகமது கபீர் முன்னிலை வகித்தனர். ஏற்கெனெவே, கேரள போலீஸார், அவ்வாறு உதவி செய்துததன், ரொம்ப நல்லபேரை வாங்கிக்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் சாதிக்[6], மாநில துணைச் செயலர் செய்யது பேசியதாவது[7]: “கடந்த 2008ல் பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட கேரளாவை சேர்ந்த நசீர் கொடுத்த வாக்குமூலத்தில், மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையானவர், கேரள சிறப்பு போலீஸ் படை பாதுகாப்பில் இருந்தார். அவர் எங்கெல்லாம் சென்றார் என கேரள போலீசாருக்கு தெரியும்.இப்படி இருக்கும் போது, 31வது குற்றவாளியாக இருக்க முடியுமா? மதானி கைது மூலம் வேறு யாரையோ சிக்க வைக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது. மதானியை கைது செய்ய தீவிரம் காட்டிய போலீசார், மலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா பெரும்புள்ளிகளை கைது செய்யாதது ஏன்?கேரள போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் எப்படி குண்டு வைத்திருக்க முடியும். எனவே கேரள போலீசாரையும் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்க வேண்டும்”.

முஸ்லீம்கள் இந்தியாவை ஆண்டால்தான் முஸ்லீம்களுக்கு உரிமைகள் கிடைக்கும்: “தவிர கர்நாடக அரசையும் மத்திய போலீசார் விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும், முஸ்லிம்களை கைது செய்து, தீவிர விசாரணைக்கு பின் விடுவிக்கின்றனர்.மத்திய உளவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்., பற்றுள்ளவர்கள் தான் அதிகாரிகளாக உள்ளனர். இவர்கள் தான் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். முஸ்லிம்களாகிய நமக்குரிய உரிமைகள் கிடைக்க, நாம் இந்தியாவை ஆள வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது[8]. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மதானியை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்”, இவ்வாறு செய்யது பேசினார். கோவை மாநகர் மாவட்ட தலைவர் மொய்தீன் சேட் நன்றி கூறினார்

கேரள போலீஸார் தடியன்டவிடே நசீருக்கு உதவுவது ஏன்? அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, கேரள போலீஸார் நடத்தும் விதத்தைக் கண்டு, அதிகமான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அதன்படியே, ஐ.பி மற்றும் ராவின் உயர்மட்ட அதிகாரிகள், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்திடம் இதைப் பற்றி சொல்லியுள்ளனர். கேரள போலீஸ் துறையிலுள்ள, சில கருப்பு ஆடுகள் நஸீருக்கு உதவுகின்றன அன்று அவர்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்[9]. அதன்படியே, உள்துறை அமைசகம் கேரள அரசை விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நஸிரின் முகத்தை மறைக்காமல் இருப்பது, ஊடகக்காரர்கள் அவனது போகும் இடங்களை அறிந்து கொள்வது, அவனுடன் பேச எத்தனிப்பது………..முதலியன நடக்கும் விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா உளவுப் படைகளைவிட தமுமுகவிற்கு உண்மை தெரியும் போல இருக்கிறது: பெங்களூர் குண்டுவெடிப்பில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நசீர் என்பவர் அளித்த தகவலின் பேரில் மதானியை போலீஸார் கைது செய்துள்ளனர். அத்தகவலை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை என்றும், வேறு பலமான ஆதாரங்கள் இல்லாததாலும் மதானியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதாவது, போலீஸார் ஒன்றுமே இல்லாமல் கைது செய்துள்ளனராம்! அப்பொழுது, நஸீரையும் விட்டு விடாலாமே? மற்ற கைது செய்யப்பட்டுள்ள, எல்லா தீவிரவாதிகளையும் விட்டுவிடலாமே?

தாவூத் ஜிலானி சொல்வர்டு பொய்யா, நஸீர் சொல்வர்து பொய்யா? தடியன்டவிடே நசீர் லஸ்கர் தீவிரவாதி மட்டுமல்லது தாவூத் ஜீலானி என்கின்ற டேவிட் ஹெட்மேன் கோல்மென் என்ற தீவிரவாதியுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் பங்களாதேசத்தின் உடனடி நடவடிக்கை போலீஸார், எஃப்.பி.ஐ கொடுத்த தகவலின்படித்தான், அந்த மூன்று லஸ்கர்-சந்தேகத் தீவிரவாதிகளை பிடிக்கச் சொன்னது[10].  நஸீர் சொல்லியுள்ள இடங்களுக்குத்தான், இப்பொழுது மௌலானா மைதானியை அழைத்துச் சென்றுள்ளனர்[11]. இதையும் மறுக்க முடியுமா?


[1] http://www.ndtv.com/article/india/zareena-19-and-mother-killed-by-militants-in-kashmir-46663

[2] http://timesofindia.indiatimes.com/india/Protestors-in-Kashmir-face-stones-their-own-bitter-pill/articleshow/6420878.cms

[3] http://www.dnaindia.com/india/report_kashmir-stone-pelters-get-a-taste-of-their-own-medicine_1427515

[4] தினமணி, மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்; First Published : 23 Aug 2010 04:26:06 PM IST; Last Updated : 23 Aug 2010 04:28:31 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=…………….SectionName=Latest

[5] Demonstration in Tamil Nadu condemning Kerala and Karnataka govts on Madani’s arrest; Published: Monday, Aug 23, 2010, 15:30 IST; Agency: PTI
http://www.dnaindia.com/india/report_demonstration-in-tamil-nadu-condemning-kerala-and-karnataka-govts-on-madani-s-arrest_1427524

[6] http://www.indiatalkies.com/2010/08/activists-muslim-voluntary-forum-protest-madanis-arrest-karnataka-police.html

[7] தினமலர், இந்தியாவை நாம் ஆளும் போது தான் நமக்குரிய உரிமைகள் கிடைக்கும்: .மு.மு.., மாநில துணை செயலர், ஆகஸ்ட் 23, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=68650

[8] ஜிஹாதி மொழி பேசப்படிகிறது இங்கு, அதாவது, காஃபிர்கள் ஆளும் நாட்டில் மோமின்களுக்கு உரிமைகள் கிடைக்காது, அதனால், இந்தியாவை முஸ்லீம்கள் ஆளவேண்டும், என்ற கருத்து வைக்கப்படுகிறது. முஸ்லீம்கள் எப்படி, எவ்வாறு மறுபடியும் ஆளமுடியும், ஆள்வார்கள் என்று மற்றவர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும்.

[9] Arjun Raghunath, Black sheep among cops shielding LeT man Nazeer, Express News Service,First Published : 25 Jun 2010 03:01:37 AM IST; Last Updated : 25 Jun 2010 07:53:38 AM IST,

http://expressbuzz.com/topic/black-sheep-among-cops-shielding-let-man-nazeer/184388.html

[10] http://www.asianetindia.com/news/arrest-naseer-accomplice-registered-meghalaya_106626.html

[11] Dajjiworld, Madani in Madikeri, IB team Coming,  Sunday, August 22, 2010 11:16:15 AM (IST) ,

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=83862&n_tit=Madani+in+Madikeri%2C+IB+team+Coming+