Archive for the ‘புகாரி’ category

போதை மருந்து கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவி, சகோதரர் முதலியோர்களிடம் விசாரணை!

மே 23, 2024

போதை மருந்து கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவி, சகோதரர் முதலியோர்களிடம் விசாரணை!

தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவுக்குப் பிறகு அமலாக்கத் துறை விசாரணை: தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவு (NCB) விசாரணை நடந்து வரும் நிலையில், அமலாக்கத் துறை (ED) சோதனை-விசாரணை தொடர்ந்து வருகிறது. அயல்நாட்டு எச்சரிக்கை மூலம், இக்கும்பல் பிடிபட்டிருப்பதால், அயல்நாட்டு தொடர்புகளும் கண்காணிப்பில் எடுத்து வந்து, அம்பந்த[ப் பட்ட அதிகாரிகள் தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர். வங்கி பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில், ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீமிடம், இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் (ED) விசாரணை நடத்தினர். போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் அடைக்கப்பட்டுள்ளனர்[1]. அவர்கள், சட்ட விரோத பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்[2]. முதலில் ஒத்துழைப்பில்லாமல் இருந்தது என்று சொல்லப் பட்டது. வீட்டிற்கு சீல் வைக்கப் பட்டது, ஒட்டிய அறிக்கை தாயாரால் கிழிக்கப் பட்டது என்றும் செய்திகள் வந்தன. ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானுவிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்[3]. ஆனால், விவரங்கள் தெரியவில்லை.

ஜாபர் சாதிக் சகோதரர் சலீமிடம் விசாரணை: ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானுவிடம் வக்குமூலம் பெற்றப் பிறகு, அதன் அடிப்படையில், ஜாபர் சாதிக், சகோதரரும், வி.சி., முன்னாள் நிர்வாகியுமான முகமது சலீம், 23, என்பவரிடம், நேற்று முன்தினம் [21-05-2024], ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர்[4] என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டாலும், அவையெல்லாம் ரத்தின சுருக்கமாகவே இருக்கின்றன. பணபறிமாற்றம் பற்றிய விவரங்கள் கேட்கப் பட்டது. நேற்றும் [22-05-2024] இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்[5]. அப்போது, வங்கி கணக்கு விபரங்களை சலீம் தாக்கல் செய்தார்[6]. அதில், சந்தேகப்படும்படியான பண பரிவர்த்தனைகள் குறித்து, அதிகாரிகள் கேட்டனர்[7]. வெளிநாடுகளில் இருந்து நன்கொடை என, நிதி அளிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்[8]. அந்த வெளிநாட்டு நபர்கள் யார், சலீமுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு[9], இலங்கையைச் சேர்ந்தவர்களிடம் இருந்தும் சலீமுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ஏன்[10], ஜாபர் சாதிக்குடன் கைதாகி சிறையில் உள்ள சதானந்தம் வங்கி கணக்கிற்கு[11], பணம் அனுப்பி இருப்பது ஏன்[12], அது போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணமா என[13], அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டு, சலீமிடம் வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது[14].

சலீம் கூட்டாளிகளுக்கு நிச்சயமாக சம்பந்தம் இருக்கத்தா செய்யும். இருப்பினும் விவரங்கள் தெரியவில்லை. இவையெல்லாம் எப்படி தமிழகத்தின் மூலம் நடந்தேறியுள்ளது என்று நினைக்கும் பொழுதும் அதிர்ச்சியாக உள்ளது. 15,000 கோடி இந்த போதை மருந்து கடத்தல் வியாபாரத்தில் புழங்குவதாகவும் செய்திகள் வந்துள்ளன. இருப்பினும், தமிழகத்தில், இதைப் பற்றி, சீரியஸாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இன்னும் அரசியல் தான் பேசப் பட்டு வருகிறது. ஆனால், போதை விசயமாக இளைஞர்கள் அடித்துக் கொள்வது, வன்முறையில் ஈடுபடுவது, போன்ற செய்திகள் அதிகமாகிக் கொண்டிருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.

அமீனா பானு மழுப்பலாக பதில் அளித்துள்ளது: அப்போது, ‘உங்கள் கணவர் போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்வது எப்போது தெரியும். வெளிநாடுகளில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு எவ்வளவு தொகை வந்துள்ளது’ என்று கேள்வி எழுப்பி உள்ளனர்[15]. அது பற்றி தனக்கு தெரியாது என அமீனா பானு தெரிவித்துள்ளார்[16]. ‘உங்கள் கணவர் தினமும் வீட்டிற்கு வந்து விடுவாரா’ என்ற கேள்விக்கு, எப்போதாவது தான் வருவார் என்று கூறியுள்ளார். ‘இயக்குனர் அமீருக்கு 3.93 கோடி ரூபாயை உங்கள் கணவர் அனுப்பி உள்ளார். அதற்கான தகவல், ‘வாட்ஸாப்’பில் அழிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஜாபர் சாதிக் சிறையில் அடைக்கப்பட்ட பின் நடந்துள்ளது. ‘இதன் பின்னணியில் நீங்கள் இருப்பதாக சந்தேகம் எழுகிறது’ என, கேட்கப்பட்ட மேலும் பல கேள்விகளுக்கு அமீனா பானு மழுப்பலாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பிறகு, சைபர்-கம்ப்யூட்டர் நிபுணர்களுக்கு அனுப்பப் பட்டு, சோதிக்கப் படுமா, அவர்களது, மின்னணு சாதங்கள் எல்லாம் முறைப்படி சோதிக்கப் படுமா என்றெல்லாம் தெரியவில்லை. இடையிடையே நேரம் கொடுக்கப் படும் நிலையில், அத்தகைய ஆதாரங்களை எல்லாம் அவர்கள் எளிதாக அழித்து விடுவர் என்பது, பெரிய விசயமே இல்லை.

அப்துல் பாஷித் புஹாரிக்குசம்மன்: ஜாபர் சாதிக்கிடம், மார்க்க நெறியாளர் என, இயக்குனர் அமீரால் அறிமுகம் செய்யப்பட்ட அப்துல் பாஷித் புஹாரி என்பவருக்கும் அமலாக்கத் துறை அதிகாரிகள், ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்[17]. இதற்கிடையே, ஜாபர் சாதிக்கின் மற்றொரு சகோதரர் மைதீன், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தில் நடித்தார்[18]. அவர் வாயிலாக, இயக்குனர் அமீருக்கு கோடிக்கணக்கில் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது[19]. அந்த பணமும் போதை பொருள் கடத்தலில் சம்பாதித்தது என, கூறப்படுகிறது[20]. மைதீன் தலைமறைவாக உள்ளார். அவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். இவ்வாறு, பல வேலைகள் தாமதமாகவே சென்றுக் கொண்டிருக்கின்றன. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என்று காலம் / மாதங்கள் சென்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிப்பது: பொதுவாக விசாரணைக்கு அழைக்கப்படுபவர் அலுவலகத்துக்கு சென்றதும் அவர்களை உட்கார வைத்து, சட்டப்படி உள்ள பிரிவுகளை எல்லாம் எடுத்து கூறி விளக்கி வாக்குமூலம் பெறப்படும். அப்பொழுது விசாரிக்கும் அதிகாரிகள் உரிய ஆவணங்கள், மற்ற ஆதாரங்களை காண்பித்து கேள்விகளை கேட்பர், அதற்கு விசாரிக்கப் படுபவர் விளக்கத்தை கொடுப்பார். விசாரணை பொதுவாக சமூகமான முறையில் தான் சென்று கொண்டிருக்கும். சில நேரங்களில், சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்றும் அடம் பிடிக்கின்ற வழக்கம் இருக்கிறது. விசாரணை நடந்த பிறகு, எழுத்து மூலம் வாக்குமூலத்தை பெற்ற பிறகு, அவர் ககையெழுத்து வாங்கப்படும். இரண்டு சாட்சிகளிடமும் கையெழுத்து வாங்கப் படும். அதன் நகலு கொடுக்கப் படும். கொடுத்த வாக்குமூலத்தில் உள்ள விவரங்கள் எல்லாம், நினைத்தால் நிச்சயமாக அந்த நகலை பெற்று அல்லது அவர்களுக்கு சாராம்ம்சங்களை வெளியிடலாம். குறிப்பாக நக்கீரன் போன்ற பெரிய புலி போல வேலை விசாரணை வல்லுனர்கள் மைனமாக இருப்பது வேடிக்கையாக தான் இருக்கிறது.

© வேதபிரகாஷ்

23-05-2024


[1] தினகரன், போதைப்பொருள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் ஜாபர் சாதிக் சகோதரரிடம் 6 மணி நேரம் விசாரணை: அமீனா வாக்குமூலத்தை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை, May 22, 2024, 1:20 am.

[2] https://www.dinakaran.com/narcotics_illegalmoney_transfer_jabersadiq_brother_investigation/

[3] தமிழ்.ஒன்.இந்தியா, ‛‛அமலாக்கத்துறையிடம் ஆஜரான ஜாபர் சாதிக்கின் சகோதரர்’’.. ரூ.2000 கோடி தொடர்பாக தீவிர விசாரணை, By Nantha Kumar R Updated: Tuesday, May 21, 2024, 12:59 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/ed-sends-summon-to-summon-to-jaffer-sadiqs-brother-for-appearing-on-enquiry-today-607457.html

[5] தமிழ்.நியூஸ்.18, போதைப் பொருள் கடத்தல் வழக்கு : ஜாபர் சாதிக் சகோதரரிடம் 3 மணி நேரம் விசாரணை!, FIRST PUBLISHED : MAY 21, 2024, 6:55 PM IST; LAST UPDATED : MAY 21, 2024, 6:55 PM IST.

[6] https://tamil.news18.com/tamil-nadu/jaffer-sadiqs-wife-appears-before-ed-quizzed-for-3-hours-1461549.html

[7] இ.டிவி.பாரத், ஜாபர் சாதிக்கின் சகோதரரிடம் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணை! – Jaffer Sadiq Case, By ETV Bharat Tamil Nadu Team, Published : May 22, 2024, 4:16 PM IST.

[8] https://www.etvbharat.com/ta/!state/chennai-ed-department-is-interrogating-jaffer-sadiq-brother-with-important-documents-in-the-drug-smuggling-case-tns24052204352

[9] தினத்தந்தி, போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை, தினத்தந்தி மே 21, 11:33 pm (Updated: மே 21, 11:3.

[10] https://www.dailythanthi.com/News/State/drug-trafficking-case-enforcement-officials-interrogate-zafar-sadiqs-sister-1106645

[11] மாலைமலர், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கின் தம்பி சலீம் ஆஜர், By Maalaimalar, 21 மே 2024 3:24 PM.

[12] https://www.maalaimalar.com/news/state/jaffer-sadiq-brother-appear-in-ed-office-719526

[13] தினமலர், போதை பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரரிடம் விசாரணை, UPDATED : மே 23, 2024 06:17 AMADDED : மே 23, 2024 01:53 AM,

[14] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-jaffer-sadiq-brother-are-being-investigated-in-the-case-of-drug-smuggling–/3630096

[15] தினமலர், அமீருக்கு ரூ.4 கோடி கொடுத்தீர்களா? ஜாபர் சாதிக் மனைவியிடம் விசாரணை, UPDATED : மே 21, 2024 04:36 AMADDED : மே 21, 2024 04:36 AM

[16] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-did-you-pay-rs-4-crore-to-aamir-interrogation-with-zafar-sadiqs-wife–/3628599

[17] தமிழ்.இந்து, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக ஜாபர் சாதிக் சகோதரரிடமும் அமலாக்க துறை தீவிர விசாரணை, Published : 22 May 2024 06:28 AM; Last Updated : 22 May 2024 06:28 AM.

[18] https://www.hindutamil.in/news/crime/1252028-ed-enquires-jaffer-sadiq-brother.html

[19] புதியதலைமுறை, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: ஜாபர் சாதிக்கின் சகோதரரிடம் அமலாக்கத்துறை விசாரணை, Webteam, Published on: , 21 May 2024, 5:36 pm,

[20] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/ed-investigates-jaffer-sadiq-s-brother-over-illegal-money-transfer-case

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (2)

ஏப்ரல் 14, 2024

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (2)

அமீர்விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது: அமீர் தொடர்ந்து சொன்னது, “விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. எப்போதும் போல என்னிடம் இருந்து வருகின்ற ஒரே வார்த்தை இறைவன் மிகப்பெரியவன்..’ என்று இயக்குநர் அமீர் நடைபெறும் விசாரணை குறித்து தகவல் தெரிவித்தார். முன்னதாக என்சிபி இரண்டாவது முறையாக நேரில் ஆஜராக இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பியதாவும், அவர் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் இயக்குநர் அமீர், என்.சி.பி.யின் இரண்டாம் கட்ட விசாரணைக்கோ, என்னிடம் உள்ள சொத்து ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவோ நான் எந்தவொரு கால அவகாசமும் கேட்கவில்லை எனத் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், இன்னொரு புறம், இந்த விசாரணைக்கு அமீர் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது[1]. இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ அமீர் மீண்டும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது[2].

அமீரின் சொத்து விவரங்கள் கேட்கப் பட்டுள்ளன: இதனிடையே, 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் அமீர் பெயரிலும் அவரது குடும்பத்தினர் பெயரிலும் வாங்கப்பட்ட சொத்துக்கள் என்னென்ன, இந்த காலகட்டத்தில் வங்கி பரிவர்த்தனை என்னென்ன என்ற விவரங்களை அதிகாரிகள் திரட்டி விசாரணை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இரண்டாவது முறையாக என்சிபி அதிகாரிகளிடம் இயக்குநர் அமீர் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் வழக்கை என்சிபி அதிகாரிகள் தீவிரமாக கையில் எடுத்து இருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விசாரணைக்கு அமீர் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது[3]. இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ அமீர் மீண்டும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது[4].

அப்துல் பாஷித் புஹாரியின் பங்கு: இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் மற்றொரு நெருங்கிய கூட்டாளியான அப்துல் பாஷித் புஹாரி என்பவரும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்[5]. மார்க்க நெறியாளராக வலம் வரும் அப்துல் பாஷித் புஹாரியை, ஜாபர் சாதிக்கிற்கு அமீர் தான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்[6]. அமீர் மற்றும் ஜாபர் சாதிக்குடன் சேர்ந்து அப்துல் பாஷித் புஹாரி, ‘ஜூகோ ஓவர்சீஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் வாயிலாக, இரண்டு முறை, 18 லட்சம்ரூபாய்க்கு பேரீச்சம் பழங்கள் இறக்குமதி செய்துஉள்ளனர். அதேபோல, 4 ஏ.எம்., என்ற கடையையும் அப்துல் பாஷித் புஹாரி நடத்தி வருகிறார். இதுகுறித்து, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். சத்து மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வது போல தான், ஜாபர் சாதிக் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதை பொருள் கடத்தி உள்ளார். அப்துல் பாஷித் புஹாரி பணம் முதலீடு செய்துள்ள ஜூகோ ஓவர்சீஸ் நிறுவனம் தொடர்ச்சியாக இயங்கவில்லை. ஆனால், ஜி.எஸ்.டி., வரி மட்டும் செலுத்தி உள்ளனர். இரண்டு முறை மட்டுமே பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. அப்துல் பாஷித் புஹாரியின் சொத்துக்கள், வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. இவரின் பின்னணியில் ஜாபர் சாதிக் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்துல் பாஷித் புஹாரியிடம் நேரடி விசாரணை நடக்க உள்ளது’ என்றனர்.

உணவகத்தின் உரிமையாளர் சி.எம்.புகாரி தொடர்பு: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வசித்து வரும் புகாரி உணவகத்தின் உரிமையாளர் சி.எம்.புகாரி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்[7]. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர்[8]. சி.எம்.புகாரி மகன் இர்பான் புகாரி ஜாபர் சாதிக் தொடங்கிய சோயா டெலிவரிஸ் என்ற நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர்களது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும், ஜாபர் சாதிக் மற்றும் இர்பான் புகாரி இடையே தொழில் ரீதியான பணப் பரிவர்த்தனைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, புகாரி குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் பாசித் புகாரி என்பவருக்கு மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அது தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

வியாபார தொடர்பும், குற்றங்கள் நடந்துள்ள நிலையும்: வியாபார தொடர்பு தான், இதனால், தனக்கும் அந்த சாதிக்கின் போதை மருந்து வியாபாரம், கடத்தல் முதலியவற்றிற்கும் சம்மந்தம் இல்லை என்று வாதிப்பது போன்றுள்ளது. இருப்பினும், அத்தகைய விவரங்கள் தெரியாமலா / தெரிந்தோ கூட்டு வைத்துக் கொண்டது ஏன் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். ஏனெனில், இவையெல்லாம் சாதாரணமாக ஒரு நபர் செய்யக் கூடிய வேலை அல்ல. தொழிற்சாலை போல வைத்து, பலரை வேலைக்கு அமர்த்தி, மிகவும் அதி-எச்சரிக்கையாக, பாதுகாப்புடன் செய்து வந்த தொழிலாகும். எல்லாவற்றையும் கடவுள் மீது போட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது. குற்றம் என்று தெரிந்து, அத்தகையக் குற்றங்களை செய்து வரும் நபர்களுடன் தொடர்ந்து, பல ஆண்டுகளாக வியாபார தொடர்புகளை வைத்துக் கொண்டுள்ளதும் சாதாரணமான விசயமாகி விடாது. மேலும், போதை மருந்து கடத்தல் பற்றிய எச்சரிக்கையே அயல்நாட்டு நிறுவனத்திலிருந்து வந்து, கையும்-களவுமாக கைதும் செய்யப் பட்டிருக்கிறார்கள். 

© வேதபிரகாஷ்

13-04-2024


[1] மாலைமலர், ஜாபர்சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் சோதனை முடிந்தது: முக்கிய ஆவணங்கள் சிக்கியது, By Maalaimalar, 10 ஏப்ரல் 2024 12:17 PM

[2] https://www.maalaimalar.com/news/state/jafarsadiq-director-aamirs-houses-raided-vital-documents-seized-712506

[3] மாலைமலர், ஜாபர்சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் சோதனை முடிந்தது: முக்கிய ஆவணங்கள் சிக்கியது, By Maalaimalar, 10 ஏப்ரல் 2024 12:17 PM

[4] https://www.maalaimalar.com/news/state/jafarsadiq-director-aamirs-houses-raided-vital-documents-seized-712506

[5] தினமலர், ஜாபர் சாதிக் கூட்டாளியின் சொத்துக்கள் வங்கி கணக்குகளை என்.சி.பி., ஆய்வு, UPDATED : ஏப் 12, 2024 05:45 AMADDED : ஏப் 12, 2024 05:45 AM.

[6] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-ncp-probes-jaffer-sadiq-associates-assets-bank-accounts–/3598702

[7] இடிவிபாரத், சென்னையில் புகாரி ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை! – Ed Raid At Buhari Hotel Owner House, By ETV Bharat Tamil Nadu Team, Published : Apr 9, 2024, 3:47 PM IST.

[8] https://www.etvbharat.com/ta/!state/ed-raid-at-buhari-hotel-owner-house-in-chennai-tns24040903438

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (1)

ஏப்ரல் 14, 2024

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (1)

04-02-2024 முதல் 09-04-2024 வரை நடந்தது என்ன?:  போதை மருந்து விவகாரங்களில் நடவடிக்கைகள் வேகமாக நடக்கின்றனவா அல்லது வேகம் குறைவா போன்றவை நடவடிக்கைகள் வைத்து தீர்மானிக்கலாம்.

04-02-2024 போதை மருந்து தில்லியில் 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

15-02-2024ல் தில்லியில் மூவர் கைது, ஜாபர் சாதிக் தலைமறைவு; லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.

22-02-2024 – படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது.

25-02-2024 – திமுகவில் இருந்து நீக்கப் பட்டது.

26-02-2024 – என்.சி.பி அலுவலத்தில் ஆஜராகும் படி ஆணை.

08-03-2024 – வெள்ளிக்கிழமை – ஜெய்பூர்

பிறகு 09-03-2024 சனிக்கிழமை அன்று ஜாபர் சாதிக் கைது செய்யப் பட்டான்.  ஒரு வாரம்காவல்.

சதானந்தன் கைது

16-03-2024 காவல் செவ்வாய்கிழமை வரை நீட்டிக்கப் பட்டது.

17-03-2024 ஞாயிறு – சென்னைக்கு கொண்டு செல்லுதல்

18-03-2024 திங்கட்கிழமை அன்று காலை விமானம் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டான்.

19-03-2024  செவ்வாய்கிழமை – தில்லிக்குத் திரும்ப அழைத்துச் செல்லப் பட்டான்.

20-03-2024  புதன் கிழமை– 14 நாட்கள் காவல்

02-04-2024 – அமீர் தில்லியில் ஆஜர்.

09-04-2024 – காலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜாபர் சாதிக் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் சோதனை.

போதை மருந்து பிடிபட்ட பிறகு ஜாபர் சாதிக் உட்பட கைது: உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய புகாரில் டெல்லியில் 15-02-2024 அன்று தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கையும் அவரது கூட்டாளியையும் என்சிபி அதிகரிகள் 09-03-2024 அன்று கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை செய்த என்சிபி NCB அதிகாரிகள் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். ஜாபர் சாதிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து ஜாபர் சாதிக்கின் வியாபார பங்குதாரர்கள் முதலியோரும் சோதனைக்கு உட்பட்டனர். விசாரணைக்குப் பிறகு, அது முறைப்படி நடந்தேறி வருகிறது.

02-03-2024 அன்று அமீரிடம் தில்லியில் விசாரணை: முன்னதாக ஜாபர் சாதிக்கின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் 02-04-2024 அன்று சம்மன் அனுப்பினர். அமீருடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் 1-வது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞர்களுடன் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய என்சிபி அதிகாரிகள், வாக்குமூலங்கள் பதிவு செய்துகொண்டதாக தகவல் வெளியாகியது. இதனிடையே, ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தது மற்றும் சட்டவிரோதமாக முதலீடு செய்தது போன்ற விவரங்களை பெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தானாக முன்வந்து வழக்கு ஒன்று பதிவு செய்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான ஆவணங்களைக் கையிலெடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு புறம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அமீர் இடையிடையே அறிக்கை விடுவது ஏன்?: அமீர் இடையிடையே அறிக்கை விடுவது போன்ற செயலையும் கவனிக்கலாம். தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்ற பிறகு, தொடர்ந்து அத்தகைய விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. ஊடகக்காரர்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளாகப் போட்டு வந்துள்ளார்கள். அதாவது, தொடர்ந்து தான் குற்றமற்றவன், அப்பாவி, தன்னை ஏதோ இந்த வழக்கில் சிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன என்று எடுத்துக் காட்டுவது போல இருக்கிறது. சினிமவில் இருப்பதனால், அத்தகைய சினிமா பாணியில் பிரச்சாரம் போல செய்வதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால், போதை மருந்து என்பது மிகவும் சீரியசான விசயம். அனைத்துலக ரீதியில் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் சமாசாரம் இல்லை. எனவே, அப்பாவி வேடம் போடுவதினாலோ அத்தகைய வாத-விவாதங்களை வைப்பதினாலோ தப்பித்துக் கொள்ள முடியாது.        

09-04-2024 அன்று சென்னையில் பல இடங்களில் சோதனை: இந்த நிலையில், திடீரென கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி காலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜாபர் சாதிக் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்[1]. இதில், சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் இல்லத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்[2]. அதுமட்டுமல்லாமல் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீர் வீடு மற்றும் தி நகர் பகுதியில் ராஜன் தெரு உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்[3]. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கும், இயக்குநர் அமீரும் நண்பர்கள் என்பதாலும், போதைப் பொருள் கடத்தலில் ஈட்டிய பணத்தை திரைப்படத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்தாரா என்ற கோணத்திலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியது[4]. அதேபோல், ஜாபர் சாதிக்குடன் சினிமா தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்த கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் இல்லத்திலும், புரசைவாக்கம் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

அமீர் வீடுஅலுவலகங்களில் நடந்த சோதனை: அமீர், “காலையில் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை இரவு 12 மணி வரை சென்றது[5]. சோதனை முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியது[6]. அமலாக்கத்துறை சோதனை முடிந்த அடுத்த நாளே மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் இயக்குநர் அமீர் பங்கேற்றார்[7]. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் அமீர், ரம்ஜான் வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்தார்[8]. அதனைத் தொடர்ந்து பேசிய அமீர், ”11 மணி நேரம் என்.சி.பி விசாரணை நடந்தது உண்மைதான்[9]. வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததும் உண்மை தான்[10]. சோதனை முடிவில் அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர். அது என்ன ஆவணங்கள் என்று அவர்களே சொல்வார்கள். எந்த விசாரணைக்கும் நான் தயார் நிலையில் இருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் என் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை நிரூபிப்பேன். விசாரணை இப்போது நடந்து வருவதால் என்னால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாது. அமலாக்கத்துறை சோதனை இரவு 12 மணிக்குத்தான் முடிந்தது,” என்றார்.

© வேதபிரகாஷ்

13-04-2024


[1] தமிழ்.இந்து, சென்னை | இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை, செய்திப்பிரிவு, Published : 09 Apr 2024 09:13 AM; Last Updated : 09 Apr 2024 09:13 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1228284-chennai-jaffar-sathik-director-ameer-houses-raided-by-ed-1.html

[3] இடிவி.பாரத், ஜாபர் சாதிக் வழக்கு விவகாரம்; இயக்குனர் அமீர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலக்காத்துறை சோதனை – ED Raid In Chennai Ameer House, Published : Apr 9, 2024, 9:15 AM IST.

[4] https://www.etvbharat.com/ta/!state/enforcement-directorate-raids-in-chennai-including-house-of-director-ameer-regards-jaffer-sadiq-drug-smuggling-case-tns24040900907

[5] நக்கீரன், நள்ளிரவு வரை நடந்த ரெய்டுசிக்கலில் அமீர், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 11/04/2024 | Edited on 11/04/2024.

[6] https://www.nakkheeran.in/cinema/cinema-news/ameer-about-ed-raid-and-ncb-investigation-regards-jaffer-sadiq

[7] விகடன், NCB- தொடர்ந்து ED: ஜாபர் சாதிக், அமீர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!, எஸ்.மகேஷ்- வெ.நரேஷ் குமார்,,Published:09 Apr 2024 3 PM; Updated:09 Apr 2024 3 PM.

[8] https://www.vikatan.com/crime/ed-raid-on-jaffer-sadiq-and-director-ameer-house-and-office-in-chennai

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மோடி வரும் அதே நாளில்! அமலாக்கத்துறை ரெய்டு.. ஜாபர் சாதிக் டூ அமீர் டூ புகாரி! நூல் பிடித்து போன ஈடி, By Shyamsundar I Published: Tuesday, April 9, 2024, 8:03.

[10] https://tamil.oneindia.com/news/chennai/ed-raids-in-buhari-hotel-ameer-house-in-chennai-linked-to-jaffarsadiq-ncb-case-597017.html

ஜமேஷா முபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது (2)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது (2)

23-10-2022 அன்று ஐஎஸ் பாணியில் தற்கொலை குண்டுவெடிப்பில் ஈடுபட்டது: முபின் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு வீட்டிற்கு சென்று உடல் முழுவதும் முடிகளை மழித்து அகற்றி சேவ் செய்து விட்டு, தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி விட்டு வேறு சட்டை அணிந்து கொண்டு காரில் வெடிபொருட்களுடன் சதி திட்டத்தை நிறைவேற்ற புறப்பட்டதும் தெரியவந்தது[1] என்று தமிழக ஊடகங்கள் விவரிக்க ஆரமித்து விட்டன. பொதுவாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தான் தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு உடல் முழுவதும் உள்ள முடிகளை முழுமையாக மழித்து சேவ் செய்வர்[2]. இந்த காட்சி கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திலும் வைக்கப் பட்டிருக்கும்[3], என்ற விளக்கத்தையும் சேர்க்கிறது இன்னொரு ஊடகம். தற்போது அதே நடைமுறையை ஜமேஷா முபின் பின்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது[4].  இவையெல்லாம், பாலஸ்தீனம், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் உள்ள ஐசிஸ், அல்-குவைதா, தாலிபான் போன்ற தற்கொலை மனித குண்டாக மாறும் ஜிஹாதிகள், கையாலும் முறைகள் ஆகும். ஷஹீத் / தியாகியாக மாறுவதற்கான செயல்முறைகள் என்று தீவிரவாதிகள் / ஜிஹாதிகள் நம்புகின்றனர்[5].  இந்த விவரங்களும் ஒரு வாரம் கழித்து தான் செய்திகளாக வெளிவருகின்றன.

ஐசிஸ், ஜிஹாத் முதலிய வாசகங்கள் கண்டுபிடிப்பு: ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது வீட்டில் இருந்து ‘சிலேட்’ ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்[6]. அந்த சிலேட் தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன[7], தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெலியிட ஆரம்பித்தன. அந்த சிலேட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன[8]. அதில் அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன[9]. மேலும் தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், ‘அல்லாவின் இல்லத்தின் மீது கைவைத்தால் வேரறுப்போம்’ என்று கூறி இருந்தார். மேலும் மனித இனம் முஸ்லீம்கள் மற்றும் காபிர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது எனவும் எழுதப்பட்டுள்ளது. இது தீவிரமயமாக்களின் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும் முபின் வெள்ளைத்தாளில் எழுதிய வாசகங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் ஒரு தாளில், ‘ஜிகாத்தின் கடமைக்கான அழைப்பு’ என்று எழுதி இருந்தார். மேலும் ‘புனிதப் போரை நடத்துவது இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கடமை’ என்றும் எழுதி இருந்தார். இந்த வாசகங்கள் ஜமேஷா முபின் தனது கைப்பட எழுதியுள்ளதாக தெரிகிறது. எனவே முபின் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது, என பிறகு தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன.

தன்னிச்சையாக நடத்தப் பட்ட தீவிரவாத செயலா, கூட்டு முயற்சியா போன்ற வாதவிவாதங்கள்செய்திகள்: பிற மதங்களைச் சேர்ந்த கடவுள்களின் பெயர்கள், குடியுரிமை திருத்தம் சட்டம், கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை, முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது பற்றிய குறிப்புகள் கொண்ட விளக்கப்படம் – ஆகியவை கடந்த வாரம் கோவை கார் சிலிண்ட வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து தமிழக காவல்துறையினரால் மீட்கப்பட்ட குறைந்தது 4 டைரிகளில் தமிழில் கையால் எழுதப்பட்ட பதிவுகளில் ஒன்றாக உள்ளது. இவையெல்லாம், அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலியவற்றை மனோதத்துவ ரீதியில் ஊக்குவிப்பதற்கு, அதிகமாக்குவதற்கு என்பதை அறிந்து கொள்ளலாம். இவை தானாக, தன்னிச்சையாக வந்து விடாது. இத்தனை வெடிமருந்து பொருட்கள் சேகரிக்க வேண்டும் என்பதிலிருந்தே நிச்சயமாக, ஒன்றிற்கும் மேற்பட்ட, பலர் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இதுவரை ஆறுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ஜிஹாதி புத்தகங்கள், இலக்கியம் முதலியவை கண்டெடுப்பு: இவை ஹதீஸ் (சொற்கள், செயல்கள் மற்றும் முஹம்மது நபியின் மௌன அங்கீகாரம் பற்றிய பதிவு) மற்றும் ஜிஹாத் (இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிரான போராட்டம்) பற்றிய குறிப்புகளைக் கொண்டிருந்தன[10]. மனிதர்கள் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது[11]. அதுமட்டுமின்றி, ஜிஹாத் கடமை யாருக்கு இருக்கிறது, யாருக்கு அந்த கடமை இல்லை என்ற குறிப்பையும் போலீசார் கண்டுபிடித்தனர்[12]. இந்த பொருட்கள் தவிர, ஐஎஸ்ஐஎஸ் கொடியின் சின்னம் வரையப்பட்ட ஸ்லேட்டை போலீசார் மீட்டனர்[13]. ‘அல்லாஹ்வின் வீட்டின் மீது யார் கை வைத்தாலும் அவர்களை அழித்து விடுவோம்’ என்ற மற்றொரு ஸ்லேட்டும் கிடைத்தது[14]. இவை உருது மற்றும் தமிழில் எழுதப் பட்டிருந்தன[15]. ஆக இவையெல்லாம் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலியவற்றின் உச்சமாகும். எனவே இவையெல்லாம் திட்டமிட்ட செயல்கள் என்பதைத் தான் காட்டுகின்றன. தமிழகத்தை பொறுத்த வரையில், கோவையில் இது இரண்டாவது முறையாக இத்தகைய செயல் நிறைவேறியிருப்பதால், உன்னிப்பாக கவனிக்கப் பட்டு அலச வேண்டியுள்ளது.

முபீன் ஒரு சுயமான தீவிரவாதி, அவனுக்கு அதிநவீன வெடிகுண்டு தயாரிக்கும் திறனும் இல்லை: “அவருடைய உக்கடம் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வெடிகுண்டு தயாரித்தல், ஜிஹாத் மற்றும் பிற மதங்களைப் பற்றிய அவரது வெளிப்படையாகத் தெரிகிறது. நாங்கள் விசாரித்த குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் கருத்துப்படி, ஜமேஷா முபீன் இந்திய முஸ்லிம்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்துவார்,” என்று பாலகிருஷ்ணன் கூறினார். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டது புரிகிறது. முபீன் ஒரு சுயமான தீவிரவாதி என்று இதுவரை தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது, என்று தமிழக ஊடகங்கள் முடிவுக்கு வருகின்றன. அவை பெரும்பாலும் புத்தகங்கள் மற்றும் இணையத்தில் இருந்து பெறப்பட்டது. மேலும், அவருக்கு எந்த அதிநவீன வெடிகுண்டு தயாரிக்கும் திறனும் இல்லை.” என்று கூறினார். ஆனால், காஸ் சிலிண்டர் வெடிக்கும் அளவுக்கு, தொழிற்நுட்பம் தெரிந்து கொண்டது, அது வெடித்து, அவனே பலியானது நிதர்சனமாக உள்ளது.

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தினத்தந்தி, கோவையில் கார் வெடிப்பு: முபின் .எஸ். பயங்கரவாதி…! அதிர்ச்சி தரும் பின்னணி, நவம்பர் 4, 3:31 pm

[2] https://www.dailythanthi.com/News/State/car-blast-in-coimbatore-mubin-is-terrorist-stunning-background-829318?infinitescroll=1

[3] தமிழ்.ஒன்.இந்தியா, உடல் முழுக்கஷேவ்’! ’விஸ்வரூபம்பாணியில் தயாரான ஜமேஷா முபின்! கோவை கார் வெடிப்பில் வெளியானபகீர்,’ By Rajkumar R Published: Friday, November 4, 2022, 9:29 [IST].

[4] https://tamil.oneindia.com/news/coimbatore/new-information-has-come-out-from-nia-on-covai-car-blast-483633.html

[5] ஈரான், ஈராக் போன்ற நாடுகளில், மூளைசலைவை செய்ய, வீடியோக்கள் காண்பிக்கப் படுகின்றன. அவற்றைப் பார்க்கும் இளைஞர்கள் அதுபோலவே தயாராகின்றனர். உயிதியாகம் செய்து, ஷஹீதாக, சொர்க்கம் செல்வதற்கு தயாராகிறார்கள். அவ்வாறே, அவர்களுக்கு போதனையும் செய்யப் படுகிறது.

[6] மாலைமுரசு, ஜமேஷா முபீன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள்ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?!!, webteam, Nov 4, 2022 – 17:5

[7] https://malaimurasu.com/Key-documents-found-in-Jamesha-Mubeens-house-link-to-ISIS

[8] கோவை கார் வெடிப்பு சம்பவம்! கமல் பட பாணியில் தயாரான ஜமேஷா முபின்!

Sakthi by SAKTHI November 4, 2022

[9] https://www.news4tamil.com/new-information-has-come-out-from-nia-on-covai-car-blast/

[10] The News Minute, Coimbatore blast: Handwritten notes recovered from Jamesha Mubin’s house, THURSDAY, NOVEMBER 03, 2022 – 16:53

[11] https://www.thenewsminute.com/article/coimbatore-blast-handwritten-notes-recovered-jamesha-mubin-s-house-169553

[12] Times Now, Coimbatore car blast: Documents talking about jihad, kafirs and Muslims recovered from Jamesha Mubin’s house, Times Now Bureau, Updated Nov 3, 2022 | 02:01 PM IST

[13] https://www.timesnownews.com/india/coimbatore-car-blast-documents-talking-about-jihad-kafirs-and-muslims-recovered-from-jamesha-mubins-house-article-95273880

[14] Republic TV, In Coimbatore Blast Case, Docs On ‘Jihad’ & Radicalisation Found At Deceased Mubin’s House, Last Updated: 3rd November, 2022 16:31 IST

[15] https://www.republicworld.com/india-news/politics/in-coimbatore-blast-case-docs-on-jihad-and-radicalisation-found-at-deceased-mubins-house-articleshow.html

இஸ்லாம், மதமாற்றம், பலதார திருமணம் – பாதிக்கப் படுவது பெண்களே, குறிப்பாக இந்துப் பெண்களே.

மார்ச் 15, 2014

இஸ்லாம், மதமாற்றம், பலதார திருமணம் – பாதிக்கப் படுவது பெண்களே, குறிப்பாக இந்துப் பெண்களே.

 

Shahi Imam 1973-2009

Shahi Imam 1973-2009

முஸ்லிம்கள் தாஜா செய்யப் பட்டு வந்தது (1947-1985): நாங்கள் இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்படமாட்டோம், எங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது, என்ற ரீதியில் முஸ்லிம்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர். இந்திய முஸ்லிம்கள் விடுதலைப் பெற்ற பின்னரும், அதாவது பாகிஸ்தான் மதரீதியில் உருவானப் பிறகும், “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” என்று கலாட்டா, ஆர்பாட்டம், போராட்டம், கலவரம் என்று செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். 1947 முதல் 1964 வரை நேரு காலத்தில் செல்லப்பிள்ளைகளாக நடத்தப் பட்டனர். 1984 வரை, அதாவது இந்திரா பிரியதர்சினி நேரு காலம்வரை ஓரளவிற்கு மாறுபட்டனர் எனலாம். சஞ்சய் காந்தி முஸ்லிம்களுக்கும் கருத்தடை / குடும்பக்கட்டுப் பாடு ஆபரேஷனை வலுக்கட்டாயமாக செய்வித்தார் என்ற புகாரும் / சர்ச்சையும் இருந்தது[1]. ஆனால், ராகுல் கந்தி பதவிக்கு வந்தவுடன், முகமதியர் தறிக்கெட்டு நடக்க ஆரம்பித்தனர் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. 1980ல் தில்லி இமாம் அப்துல்லா புகாரி “ஆதம் சேனா” என்று ஆரம்பித்து, மதவாதத்தைத் தூண்டி விட்டார்[2].  1985ல் ஷா பானு வழக்குப் பெரியப் பிரச்சினையை ஏற்படுத்தியது[3]. சையது சஹாப்புத்தீன், ஆரிப் முகமது கான், அப்துல்லா புகாரி என அனைவரும் தாம் தான் இஸ்லாத்தைக் காக்கப் போகிறேன் என்பது போல செயல்பட்டு குடும்பச் சட்டங்களை சீர்குலைத்தனர் எனலாம். ஷா பானு வழக்கு இவர்களின் முகத்திரையைக் கிழித்தது, அவரவர் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அளவுகளையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டின.

 

Sha bano divorced in 1978

Sha bano divorced in 1978

மொஹம்மதுஅஹமதுகானின்நிக்காஹ்வும், தலாக்கும், மெஹர்பிரச்சினையும் (1985)[4]: மொஹம்மது அஹமது கான் என்பவர் ஷா பானுவை 1932ல் நிக்காஹ் செய்து கொண்டார். வக்கீலாக இருந்த இவர், ஷா பானு மூலம் இரண்டு மகள்களையும் பெற்றெடுத்துக் கொண்டார். சுமார் 46 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை நடத்திய இவர், திடீரென்று 1978ல் வீட்டைவிட்டுத் துரத்தி விட்டாராம். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர் ஒரு போலீஸ் கான்ஸ்டேபிளின் மகளும் ஆவார். பிறகு 06-11-1978 அன்று தலாக் / விவாகரத்து செய்து விட்டாராம். இதனால் வேறு வழியில்லாமல் மெஹர் என்று சொல்லப்படக் கூடிய ஜீவனாம்சத் தொகையான ரூ 500 பிரதி மாதமும் அளிக்கப்படவேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார். இந்திய குற்றவியல் சட்டமுறையின் பிரிவு 125ன் கீழ் இத்தொகை கேட்கப்பட்டது. கீழ்கோர்ட் அளித்தது, ஆனால், மொஹம்மது அஹமது கான் மேல்முறையீடு செய்தார். உச்சநீதி மன்றத்தில் மொஹம்மது அஹமது கானின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது, ஷா பானுவிற்கு அப்பணம் கொடுக்கப் படவேண்டும் என்றாகியது. ஆனால், முஸ்லிம்கள் இதனை வயதான மூதாட்டிக்கு கிடைத்த வெற்றியாகக் கருதவில்லை, மாறாக முஸ்லிம்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளில் நுழைவதாக கொத்தித்தனர்.

 

Abdullah Bukhari made VP singh to recall Jagan Mohan

Abdullah Bukhari made VP singh to recall Jagan Mohan

இஸ்லாம்  ஆபத்தில்  உள்ளதுஎன்ற  போராட்டமும், முஸ்லிமளுக்கு  தனிசட்டம்  உருவான  விதமும் (1985-87): முஸ்லிம் இயக்கங்கள் உடனே இதனை “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” என்று திசைத்திருப்பி கலாட்டா, ஆர்பாட்டம், போராட்டம், கலவரம் என்று ஆரம்பித்தன.  உச்சநீதிமன்றம் தனது எல்லைகளைக் கடந்து முஸ்லிம் சட்டத்திற்குள் நுழைந்து தீர்ப்பளித்துள்ளது, இது அவர்களது மதஉரிமைகளை மீறும் செயலாகும் என்று கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். தில்லி மசூதி இமாம் புகாரி, உச்சநீதிமன்ற நீதிபதிகளை இழிவாகப் பேசி, அவர்களது கால்களை உடைக்க வேண்டும் என்று பேசினார், வசைபாடினார். இதனால், பேசிய அவர், செய்தியை வெளீயிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலியவற்றின் மீது வழக்குகள் தொடரப்பட்டன. நீதிமன்ற அவதூறு குற்றத்திற்காக வழக்குகள் தொடரப்பட்டு, உயர்நீதி மன்றங்கள் கைது செய்ய வாரண்டையும் பிறப்பித்தது. ஆனால், அவர் இறக்கும் 2009 – வரை கைது செய்யப் படவில்லை. நீதிபதிகளின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதனால், முஸ்லிம்களை தாஜா செய்ய சட்டத்தை மாற்றி, முஸ்லிம்களுக்கு என்று தனியாக 1986லேயே ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. அதுதான் முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகளைக் காக்கும்) சட்டம், 1986 என்ற பெயரில் 19-05-1986 அன்று நிறைவெற்றப்பட்டது.

 

Two Muslim leaders always cry Islam is in danger

Two Muslim leaders always cry Islam is in danger

முஸ்லிம்  பெண்கள்  உரிமைகளில்  மிதவாதஅடிப்படைவாத  முஸ்லிம்களின்  போராட்டங்கள்  (1987-88): அதாவது, முஸ்லிம்களுக்கு மற்ற பெண்களைப் போன்று பொதுசட்டம் பொறுந்தாது. தலாக் செய்யப்பட்ட பெண்களுக்கு என்ன ஜீவனாம்சம் கொடுக்கலாம் அல்லது கூடாது என்பதெல்லாம் பற்றி யாரும் கேட்கமுடியாது. அது முஸ்லிம் சட்டத்திலேயே தீர்மானிக்கப்படும். சையது சஹாப்புத்தீன், ஆரிப் முகமது கான், அப்துல்லா புகாரி என அனைவரும் தாம் தான் இஸ்லாத்தைக் காக்கப் போகிறேன் என்பது போல செயல்பட்டு இவ்விசயத்தில் குழப்பத்தை உண்டாக்கினர். இவ்வாறு முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம் என்ற பெயரில் அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டன என்று மிதவாத முஸ்லிம்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டனர். ஆனால், அடிப்படைவாத முஸ்லிம்கள் தாம் வெற்றிப் பெற்றனர், மற்ற முஸ்லிம்கள் அடங்கிவிட்டனர், அடக்கப்பட்டனர். 1988ல் இந்தியா முதலாக சல்மான் ருஷ்டியின் “சாத்தானிக் வெர்சஸ்” என்ற புத்தகத்தைத் தடை செய்தது. இது அயத்துல்லா கோமேனி என்ற இரானிய மதத்ததலைவர் பத்வா போடுவதற்கு முன்பே செய்யப்பட்ட செயலாகும்.

 

Allah quran etc symbolism

Allah quran etc symbolism

ஜம்முகாஷ்மீர்  தீவிரவாத  மாதிரி  செயல்கள்  இந்து  பெண்களைப்  பாதித்த  விதம் (1985-95): 1985-1995 காலகட்டத்தில் அடிப்படைவாத முஸ்லிம்களின் செயல்கள் தீவிரவாத செயல்களாகவும் மாறின. ஜகன் மோஹன் கவர்னராக இருந்தபோது, ஓரளவிற்கு கட்டுல்க்குள் இருந்தது. ஆனால், 1990 இமாம் புகாரி வி.பி.சிங்கை வற்புறுத்தி அவரை நீக்கச் செய்தார்[5]. இதனால், இஸ்லாமிய தீவிரவாதம் கட்டவுழ்த்து விடப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து இந்துக்கள் ஈவு-இரக்கமின்றி வெளியேற்றப்பட்டனர். அதாவது, முஸ்லிம்களாக மாறுங்கள், இல்லை வெளியேறுங்கள் என்று ஜிஹாதிகள், இந்துக்களை மிரட்டினர், தாக்கினர், துன்புறுத்தினர், கொலை செய்யவும் ஆரம்பித்தனர். இவ்வாறான வெளிப்படையான தீவிரவாதம் கட்டவிழ்க்கப் பட்டதால், லட்சக் கணக்கான இந்துக்கள் வெளியேறினர்; பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் – கொல்லப்பட்டனர், பெண்கள் கற்பழிக்கப் பட்டனர். காஷ்மீர இந்து பெண்கள் மற்ற மாநில ஆண்களைத் திருமணம் செய்து கொண்டால், சொத்துரிமை கிடையாது என்றும் மிரட்டினர். அதாவது, இம்மாநிலம் இந்து பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் ஷரீயத்தை அமல்படுத்த ஆரம்பித்தது. ஆனால், இஸ்லாம் சட்டத்தில் முஸ்லிம் பெண்களும் மாற்றமடையவில்லை. மாறாக, தற்கொலைப் படையில் சேர்ந்து குண்டுகளாக மாறினர்.

Yasin Bhatkal arrested

ஜம்முகாஷ்மீர்  மாநில  மாதிரி  மற்ற  மாநிலங்களுக்குப்  பரவிய  வீதம் (1995-2002): இத்தகைய மாற்றம் மற்ற மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் பரவியது. எங்கு முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனரோ அங்கு, குறிப்பாக இந்து பெண்களை மதம் மாற்றம் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு செயல்திட்டங்களை உருவாக்கினர். இதனால், மணமான இந்துக்கள் கூட அவர்களின் வலையில் சிக்கினார்கள். அதாவது, பலதார மணங்களைப் புரிந்து கொள்ள இஸ்லாத்தை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், பாதிக்கப்பட்ட இந்து பெண்கள் புகார் கொடுக்க ஆரம்பித்தனர்.  முதல் மனைவியின் விருப்பம் / சம்மதம் இல்லாமல் இந்து கணவன் இரண்டாவது, மூன்றாவது மனைவிகளைக் கொண்டு, இஸ்லாமிற்கு மாறியவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப் பட்டன. இந்தியக் குற்றாவியல் சட்டத்தின் 494 பிரிவிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் முஸ்லிமாக மாறுகிறான். காஜியிடமிருந்து சான்றிதழ் பெறுகிறான்.  இதனால், அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இந்து மனைவிகள் தவித்தனர். 1996ல் எம். எப். ஹுஸைன் இந்து கடவுளர்களை “கலை நயத்துடன்’ வடித்துத் தாக்கியபோது கூட, இந்தியப் பெண்மைதான் தாக்கப்பட்டது.

 

Fidayeen attack 4

Fidayeen attack 4

முஸ்லிம்கள்   இஸ்லாத்தை  வைத்துக்கொண்டு  இந்து  பெண்களை  ஏமாற்றுவதால்  தான்  சரளா  முதுகல்  உச்சநீதிமன்றத்திற்கு  செல்ல  வேண்டிய  அவசியம் ஏற்பட்டது: அந்நிலையில் தான் “கல்யாணி” என்ற அமைப்பு, இப்பிரச்சினையை வழக்காக உச்சநீதி மன்றத்தில் கொண்டு சென்றது. ஶ்ரீமதி சரளா முதுகல் என்ற “கல்யாணி” அமைப்பின் தலைவி இவ்வழக்கை தொடுத்தார்[6]. உள்ள பிரச்சினை தெளிவாக நீதிமன்றத்தின் முன்பாக வைக்கப்பட்டது. 1978 முதல் 1992 வரை எவ்வாறு இந்து பெண்கள் பாதிக்கப் பட்டனர் என்ற உண்மைகள் வைக்கப்பட்டன[7]. பல முந்தைய தீர்ப்புகளை அலசி, ஒரு இந்து ஆண் செய்துகொண்ட திருமணம், திருமண பந்தம், இந்து திருமண சட்டத்தின் கீழ் வருவதால், எந்த காரணத்தினாலும் அதனை முடிவுக்குக் கொண்டுவர முடியாது[8]. அவன் முஸ்லிமாக மாறினாலும் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தி குற்றவியல் சட்டத்தின் பிரிவு 494ன் படி குற்றாவாளி ஆகிறான்[9]. அதே போல ஒரு முகமதியன் ஒரு மணமான இந்து பெண்ணை ஏமாற்றி, மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டாலும் அது செல்லாது[10]. துரதிருஷடமாக அந்த முகமதியனின் ஈனச்செயலால், இந்தியக் குற்றாவியல் சட்டத்தின் 440 பிரிவின் கீழ் விபச்சாரத்தின் கீழ் குற்றஞ்சாட்டப் பட்டாள்[11]. அதாவது சட்டம் கூட அவளது கற்ப்பை பாதுகாக்க முடியாமல் தண்டிக்கிறது. அதே நேரத்தில் பாதித்த முஸ்லிமை எப்படி சட்டம் தண்டித்தது என்று குறிப்பிடவில்லை. அதாவது, இந்து பெண் இருமுறைகளில் தண்டிக்கப் படுகிறாள், சமூகத்தில் மரியாதை இழக்கிறாள், தன்னுடை சுயமரியாதை, உரிமைகள் அனைத்தையும் இழக்கிறாள்.

Hemraj-s-family-continues-fast-for-sixth-day

பழைய வழக்குகள் ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப் பட்டதால் பாரபட்சம் தெரிந்தது: இந்து ஆண் அல்லது கணவன் இரண்டாவது திருமணத்தைச் செய்து கொள்ள முஸ்லிம் ஆகி தப்பிக்கப் பார்க்கிறான், என்றால், அதே போல, இந்து பெண் தானே முஸ்லிமாக மதம் மாறி, ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டாலும் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது[12]. கிருத்துவ மனைவி அவ்வாறு முஸ்லிமாக மாற்றப்பட்டாலும், அதே முறை பின்பற்றப்பட்டது[13]. அதாவது, இவ்வாறு முஸ்லிம்கள் / மதம் மாறிய இந்துக்கள் இந்து பெண்களை பலாத்காரமாகவோ, ஏமாற்றிவோ, கடத்தியே திருமணம் செய்து கொள்வதால் பாதிக்கப் படுவது பெண்கள் தாம். இருதாரத் திருமணத்திற்காக சட்டத்திலுருந்து தப்பித்துக்கொள்ள அவர்கள் அவ்வாறு செய்யலாம் ஆனால், உண்மையில் சட்டத்தை வளைக்கத்தான் அவ்வாறு செய்வதால் சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்பளித்தன.

Atrocities on Hindus -7- 2013

ஓட்டு  வங்கி  அரசியல்  சட்டமீறல்களை  ஆதரித்து  வருகின்றது: இந்து சட்டம் இந்துக்களுக்குப் பொறுந்தும் எனும் போது, இஸ்லாமை உபயோகித்து, இந்து சட்டத்தை உடைக்க முடியாது என்பதுதான் நிரூபிக்கப் பட்டது. இதுதான் சரளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பிலும் முடிவானது. அதனால் தான், ஒரு பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அது ஷா பானு தீர்ப்பிலேயே எடுத்துக் கட்டப்பட்டது[14]. பிறகு 2003ல் கூட இன்னொரு தீர்ப்பில் நினைவு கூறப்பட்டது[15]. இது ஏதோ புதியதான சரத்து அல்ல. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 44ல் உள்ளது[16]. ஆனால், ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. முஸ்லிம் ஓட்டு வங்கி என்ற முறையில் தேர்தல்களில் முஸ்லிம்களை நம்பி, குறிப்பிட்ட இடங்களில் ஜெயித்து ஆட்சிக்கு வருவதால் இதைப் பற்றி கடந்த 60 வருடங்களாக பேசுவதே இல்லை[17]. ஆனால், பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றாலே, முஸ்லிம்கள் “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” என்று கூக்குரலிட ஆரம்பித்துவிடுவார்கள். செக்யூலரிஸ்ட் வகையறாக்களும் அவர்களை ஆதரிக்க ஆரம்பித்து விடும். பிஜேபி போன்ற கட்சிகள் ஏதாவது சொன்னால், அவற்றை மற்ற எல்லா கட்சிகளும் சேர்ந்து கொண்டு தாக்க ஆரம்பித்து விடும். இதுதான், கடந்த ஆண்டுகளில் நடந்து வருகிறது. அரசியல் ஆதாயத்திற்காக, இதனால் தான் பிஜேபியும் அமைதியாக வேண்டியுள்ளது.

 

© வேதபிரகாஷ்

13-03-2014


[1] Syed Abdullah Bukhari became the Shahi Imam of Jama Masjid in 1973. He was one of the strong voices that opposed the Emergency in 1975. He protested against the targeting of Muslims when they were asked to undergo ‘nasbandi’ (vasectomy). The former Shahi Imam of Delhi’s Jama Masjid, Syed Abdullah Bukhari, died at the All-India Institute of Medical Sciences here on Wednesday July 8, 2009 following a heart attack. He was 87. http://www.hindu.com/2009/07/09/stories/2009070959730400.htm

[2] Seeing political leaders flocking to the Jama Masjid and seeking blessings from his father, Ahmed Bukhari too realised the political and religious significance of the Shahi Imam’s post. In 1980, he entered the political fray by forming the Adam Sena. It was publicised as an organisation that would protect Muslims from every danger, especially during communal riots. But despite all his efforts, it failed to win popular support. “The Sena was not welcomed by the Muslim community and seeing no support, Ahmed Bukhari shut down the organisation,” says senior journalist Wadood Sajid. http://www.tehelka.com/the-bullys-pulpit/

[3] Mohammed Ahmed Khan vs Shah Bano Begum and Ors – 1985 AIR 945

[7] Smt Sarla Mudgal vs UOI & Ors – 1995 AIR 1531

[8] The doctrine of indissolubility of marriage, under the traditional Hindu law, did not recognise that conversion would have the effect of dissolving a Hindu marriage. Conversion to another religion by one or both the Hindu spouses did not dissolve the marriage.

[9] It would be useful to have a look at some of the old cases on the subject. In Re Ram Kumari 1891 Calcutta 246 where a Hindu wife became convert to the Muslim faith and then married a Mohammedan, it was held that her earlier marriage with a Hindu husband was not dissolved by her conversion. She was charged and convicted of bigamy under Section 494 of the IPC. It was held that there was no authority under Hindu law for the proposition that an apostate is absolved from all civil obligations and that so far as the matrimonial bond was concerned, such view was contrary to the spirit of the Hindu law. Re Ram Kumari 1891 Calcutta 246

[10] The Madras High Court followed Ram Kumari in Budansa vs. Fatima 1914 IC 697. Budansa vs Fatima 1914 IC 697

[11] In Gul Mohammed v. Emperor AIR 1947 Nagpur 121 a Hindu wife was fraudulently taken away by the accused a Mohammedan who married her according to Muslim law after converting her to Islam. It was held that the conversion of the Hindu wife to Mohammedan faith did not ipso facto dissolve the marriage and she could not during the life time of her former husband enter into a valid contract of marriage. Accordingly the accused was convicted for adultery under Section 497 of the IPC. Gul Mohammed vs Emperor AIR 1947 Nagpur 121

[12] Nandi @ Zinab vs Criown – ILR 1920 Lahore 440

[13] Emperor vs Mt. Ruri AIR 1919 Lahore 389

[14] Mohammed Ahamed Khan vs Sha Bano Begum AIR 1985 SC 945

[15] July 23, 2003: The Supreme Court today called for a common civil code for all citizens of the country, holding that it would not go against the two key constitutional provisions governing religion. The court said the effort to secure a uniform civil code across India — Article 44 — would not come in the way of the right to freedom of religion or the freedom to manage religious affairs as laid down in Articles 25 and 26 of the Constitution. Rather, it would “help the cause of national integration”.

http://www.telegraphindia.com/1030724/asp/frontpage/story_2194921.asp

[16] In Ms. Jordan Diengdeh vs. S.S. Chopra AIR 1985 SC 935 O. Chinnappa Reddy, J. speaking for the Court referred to the observations of Chandrachud, CJ in Shah Bano Begum’s case and observed as under: “It was just the other day that a Constitution Bench of this Court had to emphasise the urgency of infusing life into Art. 44 of the Constitution which provides that “The State shall endeavour to secure for the citizens a uniform civil code throughout the territory of India.” The present case is yet another which focuses .. on the immediate and compulsive need for a uniform civil code. The totally unsatisfactory state of affairs consequent on the lack of a uniform civil code is exposed by the facts of the present case. Before mentioning the facts of the case, we might as well refer to the observations of Chandrachud, CJ in the recent case decided by the Constitution Bench (Mohd. Ahmed Khan vs. Shah Bano Begum).” One wonders how long will it take for the Government of the day to implement the mandate of the framers of the Constitution under Article 44 of the Constitution of India

[17] The Successive Governments till-date have been wholly re-miss in their duty of implementing the constitutional mandate under Article 44 of the Constitution of India. We, therefore, request the Government of India through the Prime Minister of the country to have a fresh look at Article 44 of the Constitution of India and “endeavour to secure for the citizens a uniform civil code throught the territory of India”. http://indiankanoon.org/doc/733037/

மேலப்பாளையத்தில் மறுபடியும் முஸ்லிம்களின் வீடுகள்-அலுவகங்கங்களில் சோதனை, வெடிப்பொருட்கள் பறிமுதல், கைது, இத்யாதி (1)

ஓகஸ்ட் 1, 2013

மேலப்பாளையத்தில் மறுபடியும் முஸ்லிம்களின் வீடுகள்-அலுவகங்கங்களில் சோதனை, வெடிப்பொருட்கள் பறிமுதல், கைது, இத்யாதி (1)

CBCID raid at Kichan Buhari office

மேலப்பாளையத்தில் சிலர், வெடிகுண்டு பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது: இந்து அமைப்பு தலைவர்கள் மற்றும் பா.ஜ., பிரமுகர் கொலைகளில், பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, “பறவை’ பாதுஷா, கிச்சான் புகாரி ஆகியோர், மூளையாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இருவரிடமும் விசாரிக்க, பெங்களூருவில், தமிழக எஸ்.ஐ.டி., போலீசார் முகாமிட்டுள்ளனர். சேலம் பா.ஜ., பிரமுகர், ஆடிட்டர் ரமேஷ் கொலை சம்பவத்துக்கு பின், தமிழக உளவு அமைப்புக்கள் தீவிர விசாரணையில் இறங்கியதால், திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் சிலர், வெடிகுண்டு பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட 5 பேரின் வீடுகள் உள்பட 8 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை (30-07-2013) சோதனை நடத்தினர்.

Five arrested in Melappalayam for hoarding explosives

மேலப்பாளையத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த வெடிபொருள்கள் மற்றும்  142 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல்: மேலப்பாளையத்தில் ஒரு வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 17.5 கிலோ வெடிபொருள்கள் மற்றும் 142 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களை சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் கடந்த சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்[1]. அங்கு சோதனை நடத்திய போது, பெங்களூரு வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய, “பறவை’ பாதுஷா மற்றும் கிச்சான் புகாரியின் கூட்டாளிகள்,

  1. முகம்மது தாசிம், 33,
  2. கட்ட சாகுல், 38,
  3. நூரூல் ஹமீது, 22,
  4. அன்வர் பிஸ்மி, 20,
  5. சம்சுதீன், 20,

ஆகியோர், கைது செய்யப்பட்டனர்[2]. அவர்களிடம் இருந்து, வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவர்களில் முகமது தாசிம் மற்றும் கட்ட சாகுல் ஆகிய இருவருக்கும் பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றங்கள் செய்பவர்கள் தொடர்ந்து அதே குற்றங்களை செய்து வருகிறார்கள் என்பதை முன்னமே பலமுறை எடுத்துக் காட்டப்பட்டது. சேலத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ், வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் வெள்ளையப்பன் ஆகியோர் கொலைகளில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Meappaayam arrest Juy 2013

கொலை திட்டத்தை,  அரங்கேற்றுவதில் கிச்சான் புகாரி, “பறவை‘  பாதுஷா ஆகியோர்,  மூளையாக செயல்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளோம்  –  போலீஸ்: இவர்களிடம், பாளையங்கோட்டை, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில், எஸ்.ஐ.டி., அதிகாரிகள், விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிச்சான் புகாரி, “பறவை’ பாதுஷா ஆகியோரை, விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன் படி இன்று, “பறவை’ பாதுஷாவை, கஸ்டடியில் எடுக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர். இதற்காக, அதிகாரிகள், பெங்களூருவில் முகாமிட்டு உள்ளனர். இது குறித்து, எஸ்.ஐ.டி., போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: “பெங்களூரு, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள கிச்சான் புகாரி, 2012ல், சேலம் மத்திய சிறையில், ஆறு மாதம் அடைக்கப்பட்டு இருந்தான். அப்போது, சேலம் உள்ளூர் ரவுடிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. பின், பெங்களூரு சிறைக்கு மாற்றப்பட்டான். சேலம் தொடர்பை, சாதகமாக பயன்படுத்திய கிச்சான் புகாரி, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, கூட்டாளி, “பறவைபாதுஷாவுடன் சேர்ந்து, தமிழகத்தில், இந்து ஆதரவு அமைப்பு தலைவர்களை, கொல்ல திட்டத்தை வகுத்து, ஆதரவாளர்கள் மூலம், கொலை செய்து வந்துள்ளான். கொலை திட்டத்தை, அரங்கேற்றுவதில் கிச்சான் புகாரி, “பறவைபாதுஷா ஆகியோர், மூளையாக செயல்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளோம்[3]. இதில், இன்று, “பறவைபாதுஷாவையும், அதைத் தொடர்ந்து, கிச்சான் புகாரியையும் விசாரிக்க உள்ளோம். அதன் பின், மேலப்பாளையத்தில், வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்ட, ஐந்து பேரை, தனித்தனியாக விசாரணை நடத்த உள்ளோம். இந்த விசாரணைக்கு பின்னரே, கொலையாளிகள் குறித்த முழு விவரங்களும் தெரிய வரும். இவர்களுக்கு உதவிய உள்ளூர் பிரமுகர்களைக் கண்டுபிடித்து, அவர்களிடம் விசாரணையும் முடிக்கப்பட்டு விட்டது[4]. இதில் சிலரை, குற்றவாளிகளாக உறுதி செய்துள்ளோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர்”, இவ்வாறு, அதிகாரி கூறினார்.

Five arrested in Melappalayam - Musims protest, argue

வீடுகளில் சோதனை  –  முஸ்லிம்களின் ஏதிர்ப்பு[5]: இந்நிலையில், மேலப்பாளையத்தில் 8 இடங்களில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் பிறைச்சந்திரன், சிறப்புப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நாகராஜன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் இந்தச் சோதனையை நடத்தினர்[6]. இந்த 8 இடங்களிலும் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார், அங்கிருந்தவர்கள் வைத்திருந்த அனைத்து செல்போன்களையும் பரிசோதித்து, விவரங்களைப் பதிவு செய்து கொண்டனர். அப்போது பங்களாப்பா தெருவில் உள்ள வீட்டிலிருந்து 17.5 கிலோ வெடிபொருள்கள் (ஜெலட்டின் குச்சிகள்), 142 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெடிபொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது வீட்டின் உரிமையாளரான பெண்ணுக்குத் தெரியாது எனக் கூறப்படுகிறது[7]. அவரது உறவினரான அதே தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அன்வர் பிஸ்மி (20) என்பவர் அந்த பார்சலை கொண்டுவந்து, வெளிநாட்டில் உள்ள நண்பருக்கு அனுப்ப வேண்டும் என்றும், சில நாள்கள் இங்கேயே இருக்கட்டும் என்றும் கூறி பார்சலை அந்த வீட்டில் வைத்தாராம்[8]. முகமது தாசிம், சாகுல் ஹமீது ஆகிய இருவர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கிச்சான் புகாரியின் அலுவகமான CTS (சிறுபான்மை உதவி அறக்கட்டளை) மற்றும் SDPI கட்சியின் சாகுல் ஹமீது உஸ்மானி மற்றும் மனித நேயக்கட்சியின் மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் முதலியோரின் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டபோது, போலீசாருடன் வாதத்தில் ஈடுபட்டனர்[9]. TCM - Melappalayam search by CBCIDஅதனை அதிரடி சோதனை, மேலப்பாளையத்தில் பரபரப்பு, கைது வேட்டை என்றெல்லாம் செய்திகள் வெளியிட்டன. இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் முஸ்லிம்கள் முதலில் தீவிரவாத நிகழ்சிகள் நடப்பதை ஏன் தடுக்காமல் இருக்கிறார்கள்?

Bomb plnters to kill Advani

ஜனவரி  2009ல் கைது செய்யப்பட்ட கிச்சான் புகாரியின் கையாட்கள்ஷேக்பாதுஷா, அபுதாகிர்: நெல்லை மாவட்டம் புளியரை சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் கடந்த 26ம் தேதி பண்பொழி தைக்கா முக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மேலப்பாளையத்தை சேர்ந்த சேட் பாதுஷா, பெரிய குப்தா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அபுதாகீர் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அவர்கள் வெடிகுண்டுகள் தயாரிக்க உதவும் ரசாயான பொருட்கள் வைத்திருந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்து அமைப்பை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்தவற்காக மேலப்பாளையத்தை சேர்ந்த கி்ச்சான்புகாரி கேட்டு கொண்டதற்கு இணங்க மேக்கரையை சேர்ந்த கோபால் என்பவரிடம் இருந்து வெடிகுண்டு தாயரிக்க உதவும் ரசாயான பொருட்களை வாங்கி வந்ததாக அவர்கள் கூறினர்[10]. இதையடுத்து மேலப்பாளையத்தை சேர்ந்த அபுதாகீர், சேட் பாதுஷா, கீச்சான் புகாரி, முல்லன், செய்யதலி, மேக்கரையை சேர்ந்த சாதிக் அலி, ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க் பரிந்துரையின் பேரில் இவர்கள் 5 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பிரகாஷ் உத்தரவு பிறப்பித்தார்[11]. 2009யே, “இந்து அமைப்பை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்தவற்காக மேலப்பாளையத்தை சேர்ந்த கி்ச்சான்புகாரி கேட்டு கொண்டதற்கு இணங்க மேக்கரையை சேர்ந்த கோபால் என்பவரிடம் இருந்து வெடிகுண்டு தாயரிக்க உதவும் ரசாயான பொருட்களை வாங்கி வந்ததாக” முஸிம்கள் சொன்னபோதே, ஏன் விசாரணை, சோதனை முதலியவை முடுக்கி விடப்படவில்லை? திமுக ஆட்சியில் இருந்ததால், ஓட்டுகள் போய்விட்டும் என்று கடமை செய்யாமல் போலீஸார் தடுக்கப்பட்டனரா? இப்பொழுது, ஜெயலலிதா வந்தவுடன் போலீஸார் வேலை செய்கின்றனரா? 2009-2013 ஆண்டுகளில் எவ்வளவோ செய்திருக்கலாமே? ஒருவேளை இக்கொலகளே தடுக்கப் பட்டிருக்கலாமே? ஆகவே, இந்திய அரசியவாதிகள் தீவிரவாதம் என்று வரும்போது, “ஓட்டுவங்கி” பேரங்களை விடுத்து கடமைகளை செய்யவேண்டும். இப்தர் பார்ட்டிகள், நடத்தி கஞ்சி குடித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது.

TMMK notice - not to attack non-muslim places of worship

2002  ஹாமித் கைது  –  தமுமுகவின் அறிக்கை: “ஹாமித் பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவும்” என்ற தலைப்பில், கீழ்கண்ட நோட்டீஸ் கணப்படுகிறது[12]. முன்னாள் மாநிலத் தலைவருமான மவ்லவி ஹாமித் பக்ரி 2002 ஆம் ஆண்டு புனித ரமலான் மாதம் பிறை 27 ல் (2/12/2002) கைது செய்யப்பட்டார்[13]. முக்கியமாக அதில், “அப்பாவிகளைக் கொல்வதையும், பிற மத வழிபாட்டுத் தலங்களைத் தாக்குவதையும் யாரேனும் நியாயப்படுத்தினால் அவர்கள் இறைவன் முன்லையிலும் குற்றவாளிகள் என்பதால் எள் முனையளவும் இத்தகையோருக்காக தமுமுக எந்த விதமான உதவியும் செய்யாது என்பதை திட்டவட்டமாக அறிவிக்கின்றோம்”, என்பது கவனிக்கத் தக்கது. “அப்பாவிகளைக் கொல்வதையும், பிற மத வழிபாட்டுத் தலங்களைத் தாக்குவதையும்…….”, என்றால் அவை எப்படி இஸ்லாத்தில் வந்துள்ளன என்று முதலில் ஆராய வேண்டும். ஆனால், சரித்திரம் ஏற்கெனவே முஸ்லிம்கள் ஏன் அப்படி செய்துள்ளனர் என்று எடுத்துக் காட்டியுள்ளது. “முஸ்லிம்களின் அரசவை நிகழ்சிகள்” என்பவற்றில் அவர்களே விளக்கமாக விவரித்துள்ளனர். ஆகவே, முஸ்லிம்கள் முதலில் அத்தகைய கொலைவெறியை தணிக்க வேண்டும், அது உள்ளவர்களைக் கண்டிக்க வேண்டும், ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும். “இத்தகையோருக்காக தமுமுக எந்த விதமான உதவியும் செய்யாது” என்றுதான் சொல்கிறார்களே தவிர, அவ்வாறு செய்யாதே என்று உறுதியாக சொவதில்லை. வருடாவருடம், இத்தகைய கொலைகள், குண்டு வெடிப்புகள், வெடிப்பொருட்கள் பறிமுதல், கைது,…………..என்று நடந்து கொண்டிருப்பதால், முஸ்லீம் பெரியவர்கள் குறிப்பாக, இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் கூட்டாத்தாருடன் சேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அத்தகைய, “தீவிரவாதிகளாக்கும் கூட்டாத்தார்” பற்றி தெரிய வரும்போது, முஸிம்கள் என்று அமைதி காப்பதை விடுத்து, போலீஸாருக்கு அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் தீவிரவாதம் அடங்கும், குறையும்.

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot

முஸ்லிம்கள்  இவ்வாறு  நடப்பதை  ஏன்  தடுக்காமல்  இருக்கிறார்கள்?: சிறையிருந்தே அரசியவாதிகள், குறிப்பாக –

  • இந்து தலைவர்கள் கொல்லப்படவேண்டும் என்பது,
  • வெடிப்பொருட்கள் சேகரிப்பது,
  • குண்டுகள் தயாரிப்பது,
  • பலிக்கடாக்களின் வீடுகள், இடங்கள் முதலியவற்றை நோட்டம் இடுவது,
  • விவரங்களை சேகரிப்பது,
  • பிறகு சமயம் பார்த்து குண்டுகள் வைப்பது
  • அல்லது தாக்கிக் கொலை செய்வது, ……………………..
  • அதற்காக பொருள் உதவி செய்வது.
  • முஸ்லிம்கள் என்பதால் அமைதியாக இருப்பது.

இதற்கு பெயர் தான் “ஸ்லீப்பர் செல்” என்பது. சிறையிலிருந்தே தீவிரவாத குரூரங்கள் நடத்தப் படுகின்றன என்றால், எப்படி முடியும்? அப்பாவி மக்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? முதலில் தாக்கப்படுபவர்கள் தாங்கள் தாக்கப்படப் போகிறோம் என்பதை எப்படி அறிவது? எப்பொழுதுமே தீவிரவாதிகளின் உரிமைகள் தாம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது, பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது,…………..ஆனால், தீவிரவாத குரூரங்களினால் பாதிக்கப் பட்டவர்களைப் பற்றி யாரும் நினைத்துக் கூடப் பார்ப்பது கிடையாது.

வேதபிரகாஷ்

© 01-08-2013


[4] சிறப்பு நிருபர், தினமலர், கிச்சான்புகாரி, “பறவைபாதுஷாவிடம்விசாரணை: தமிழக  எஸ்..டி., போலீசார்பெங்களூருவில்முகாம், பதிவு செய்த நாள் : ஜூலை 30, 2013, 23:14 IST

[7] இது சஞ்சய் தத் வழக்கு போல உள்ளது. அதிலும், ஒரு இஸ்லாமிய பெண் இவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார். உச்சநீதி மன்றம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது.

[10] இந்து பிரமுகர்களை கொல்ல சதி-நெல்லையில் ஐவர் கைது Published: Monday, January 5, 2009, 11:21 [IST], Read more at: http://tamil.oneindia.in/news/2009/01/05/tn-five-arrested-for-conspiracy-to-kill-hindu-lead.html

குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!

மார்ச் 19, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!

முஸ்லீகளுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்: “முதலில் முஸ்லீம்களின் நலன் தான், பிறகு தான் அரசாட்சி, என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நான் முஸ்லீம்களை ஏமாற்றமாட்டேன். முஸ்லீம்கள் ஆசைகளுக்காக எங்களுடைய அரசாங்கத்தையே தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்[1]………..எனது சபையில் 11 முஸ்லீம் மந்திரிகள் இருக்கிறார்கள். அரசு முதன்மை செயலாளரே முஸ்லீம் தான் (Javed Usmani)”, என்று முல்லா முலாயம் சிங், ஜமைத் உலாமா ஹிந்த் [Ulema-e-Hind] ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் அடுக்கிக் கொண்டே போனார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்குகள் நடைப்பெற்று வரும் நிலையில் சிறைலிருக்கும் கணிசமான முஸ்லீம் கைதிகளையும் சமீபத்தில் விடுவிக்க முஸ்லீம்கள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த அப்பாவி முஸ்லீமும் சிறையில் இருக்கமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்[2]. இப்படி முல்லாயம் பேசியவுடன், சோனியாவின் விசுவாசியான பேனி பேசியது இப்படித்தான்!

மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா என்றும் பேசியுள்ளார்[3]. இருவரும் இப்படியிருக்கும் போது, உபியை எப்படி காப்பாற்ற முடியும்? என்று பேனி கேட்டுள்ளார். “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய்.” பேனி பிரசாத் வர்மாவின் பேச்சு, முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, என்ற பேச்சு. கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[4]. இதைக்கேள்விப்பட்ட முல்லாயம், “ஒன்று அவர் பதவி விலக வேண்டு, இல்லை நான் கைது செய்யப்படவேண்டும்”, என்று ஆர்பரித்தார்[5], என்னைப்பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?”, என்றும் கேட்டார்[6].

மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்இப்படி ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார்அதாவது பிஜேபியை வம்புக்கு இழுத்தார்: இவரது பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியினர் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெனிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெனிபிரசாத் கூறுகையில், “என்னை பதவி விலக சொல்வதற்கு முலாயம் யார் ? நான் பதவி விலகத்தயார் ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன். முலாயம்சிங் அயோத்தி இடிப்பு சம்பவத்தின்போது சிலருக்கு துணையாக இருந்தார். குறிப்பாக மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்”“, என்றார். மேலும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.

மாயாவதி அமைதியாக இருக்கும்போது, இன்னொரு கஞ்சிகுடித்தவர் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார்: ஆமாம், கருணாநிதி வழக்கம் போல, தங்களது ஆதரவு பற்றி பரிசீலினை செய்ய வேண்டியிருக்கும் என்று பாடலை ஆரம்பித்தார். உடனே, இலங்கை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக, திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இந்தியா சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இதையடுத்து மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் இன்று கருணாநிதியை சந்தித்து, அமெரிக்காவின் தீர்மானம் குறித்து விவாதித்தனர். கருணாநிதியின் சிஐடி காலனி வீட்டில் இன்று மாலை 5.30 மணியளவில் சந்திப்பு தொடங்கியது.  முன்னதாக, இன்று காலையில், டெசோ உறுப்பினர் சுப. வீரபாண்டியன் மற்றும் திமுக தலைமை நிர்வாகிகளுடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இச்சந்திப்பில், மத்திய அமைச்சர்களுடன் என்ன பேசுவது என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குலாம்நபிஆசாத் இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: “தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் சில திருத்தம் செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரினார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்திலும் திருத்தம் பற்றி விளக்கியிருந்தார். அது தொடர்பாகவும் நேரில் விவாதித்தோம். கருணாநிதியுடன் பேசியது பற்றி பிரதமரிடம் கூறுவோம். கருணாநிதியின் கோரிக்கை பற்றி பிரதமரிடம் ஆலோசித்து, பின்னர் முடிவு எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்.

சிதம்பரம்  இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதியை , மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று வழக்கம் போல புன்னகையுடன் சொன்னார். பிறகு, “சி.ஏ.ஜி.க்கு கூடுதலாக உறுப்பினர்கள் நியமிக்கும் திட்டம் இல்லை”, என்றார்[7]. ஆனால், இதன் ரகசியம் என்ன, கருணாநிதி அவ்வாறு கேட்டுக் கொண்டாரா, அல்லது இவராகச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. பிறகு சிவகங்கைக்குச் சென்று ஏதாவது வங்கிக் கிளையை திறந்து வைப்பார் போலும்!

நாராயணசாமி இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[8]: “இலங்கையில் தமிழர்கள் நலமுடன் வாழ மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக மக்களும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் திருப்தி அடையும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். இதற்கான அறிவிப்பை பிரதமர் விரைவில் அறிவிப்பார். மூவரும் ஒரே பாட்டை மாற்றிப் பாடியுள்ளனர்.

நாராயணசாமி விடுவாரா – அவரும் பிஜேபியை இழுத்துள்ளார்: கூடங்குளத்தை வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை சீண்டி வரும் இவர், “கடந்த 9 ஆண்டுகளாக தி.மு.க. – காங்கிரஸ் இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது. இதில் பிரிவு எதுவும் வராதா என்று பா.ஜனதா எதிர்ப்பார்க்கிறது. இலங்கை பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கையை வரவேற்று பா.ஜனதா குட்டையை குழப்ப பார்க்கிறது. எதிர்கட்சியான அவர்களே இப்படி செய்யும் போது ஆளுங்கட்சியான நாங்கள் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம். அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்வது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்”, இவ்வாறு அவர் கூறினார்[9]. ஆக தேர்தலுக்காக இவ்வாறு எல்லோரும்மாடுகின்றனர் என்று தெரிகிறது.

ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர் மாயாவதி, முல்லாயம் சிங் யாதவ், மோடி, பீஜேபி என்று அனைவரையும் இழுத்து வசவு பாடியாகி விட்டது. பிறகு ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர்? ஒருவேளை புத்த பிக்குகளைத் தாக்கி அதனால் ஏற்படுத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும், அவர் மீது அவதூறு ஏற்படும், அவரது ஆட்சியை கலையுங்கள் என்று கூட பேசலாம் என்று செய்ய ஆரம்பித்துள்ளனரா? வழக்கம் போல மம்தா-சமதா-அம்மா-மாயா சீண்டல்கள் ஆரம்பித்துள்ளன. பங்களாதேச முஸ்லீம்கள் விவகாரத்தில் மம்தா காங்கிரஸை மிஜ்சி விட்டார். சமதா கட்சி முதல்வர் தில்லிக்கே வந்து விட்டார். மாயாவைத் திட்டியாகி விட்டது. அதனால் அம்மாவை இப்படி சீண்டுகிறர்கள் போலும்!

முஸ்லீம் கூட்டுத் தேவை[10]: நிதிஷ் குமாரை கவனித்தாகி விட்டது; கருணாநிதியை சந்தித்தாகி விட்டது; ஆனால், இப்படி பேனி பேசியவுடன், முலாயம் முஸ்லீம் பிரச்சினையைத் திசைத்திருப்பி விட்டது போலாகி உள்ளது. முஸ்லீம் பிரச்சினையை விட்டு, முலாயம் பிரச்னையை அலச ஆரம்பித்து வருவார்கள்[11]. முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது[12], இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருந்தாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு செய்வது விடுவார். தமிழகத்திலும் ஒரு முஸ்லீம் மாநாடு நடத்தி அதில் கருணாநிதி பங்கு கொள்ளலாம். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.

© வேதபிரகாஷ்

19-03-2013


[1] “We will not hesitate in even sacrificing our government to fulfil the aspirations of the Muslims,” he said. “We will not let any kind of injustice be done against Muslims,” he added.

http://www.dnaindia.com/india/report_keeping-muslim-votebank-intact-a-challenge-for-mulayam_1812375

[2] He referred to the demand for the release of Muslim youths, who had been lodged in various jails in the state after being charged with terror activities. He said the SP government will make sure that no ‘innocent’ Muslim youth remains in prison.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html

“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது” – சொன்னது பேனி பிரசாத் வர்மா!

மார்ச் 18, 2013

“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது” – சொன்னது பேனி பிரசாத் வர்மா!

மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா என்றும் பேசியுள்ளார்[1]. [एक औद्योगिक प्रशिक्षण संस्‍थान के शिलान्‍यास के मौके पर पहुंचे बेनी ने प्रदेश के लिए मुलायम सिंह यादव और बसपा प्रमुख मायावती को लुटरा करार देते हुए कहा कि यह लुटेरा और गुंडा दोनों है। इन दोनों से आप अपने प्रदेश को कैसे बचाओगे। मंत्री जी यहीं नहीं रुके और उन्‍होंने कहा कि मुलायम के आतंकवादियों से इसके रिश्ते हैं और अगर वह मुझको मरवा डालेंगे तो सौ बेनी प्रसाद पैदा होंगे।] ருவரும் இப்படியிருக்கும் போது, உபியை எப்படி காப்பாற்ற முடியும்? என்று பேனி கேட்டுள்ளார்.

“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது”: பேனி பிரசாத் வர்மாவின் பேச்சு, முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, என்ற பேச்சு. கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதற்கிடையில் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, “முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை[2], அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது”, என்று பேசியிருக்கிறார்[3]. अक्सर अपने बयानों की वजह से चर्चा में बने रहने वाले केंद्रीय इस्पात मंत्री बेनी प्रसाद वर्मा ने एक बार फिर समाजवादी पार्टी प्रमुख मुलायम सिंह यादव को निशाने पर लिया है। इस बार सारी हदें पार करते हुए बेनी प्रसाद वर्मा ने मुलायम सिंह यादव को बहुत कुछ कह दिया। बेनी ने कहा, ‘मुलायम सिंह न सिर्फ गुंडा है, बल्कि उसके रिश्ते आतंकवादियों से हैं।’
बेनी प्रसाद वर्मा उत्तर प्रदेश के गोंडा में एक जनसभा को संबोधित कर रहे थे। तभी उन्होंने मुलायम सिंह के बारे में बोलना शुरू कर दिया। एक से एक तीखे शब्द इस्तेमाल करते हुए बेनी ने मुलायम पर जमकर भड़ास निकाली। बेनी ने कहा, ‘जितना मैं तुम्हारे बारे में जानता हूं कोई और नहीं जानता। कमिशन खाओ और अपने परिवार को भी खिलाओ, मगर बेनी प्रसाद वर्मा ऐसा नहीं करेगा। मुलायम सिंह! तुमने हमेशा विरोधियों को अपने दुश्मनों की तरह लिया है।’ इसके बाद बेनी कहा, ‘अपराध और बेईमानी तुम्हारा पेशा है। मुलायम सिंह प्रदेश के लिए शाप है।’ “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய். ”

இதைக்கேள்விப்பட்ட முல்லாயம், “ஒன்று அவர் பதவி விலக வேண்டு, இல்லை நான் கைது செய்யப்படவேண்டும்”, என்று ஆர்பரித்தார்[4], என்னைப்பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?”, என்றும் கேட்டார்[5].

வழக்கம் போல பாராளுமன்றத்தில் கலாட்டா: சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று மத்திய உருக்கு துறை அமைச்சர் பெனிபிரசாத் பேச்சால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[6]. இவ்வாறு முலாயம்சிங்கை பேசியது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் லோக்சபாவில் சமாஜ்வாடி கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் லக்னோ அருகே உள்ள அவரது குண்டா தொகுதியில் மத்திய அமைச்சர் வர்மா பேசுகையில், “முலாயம் சிங் கொள்ளையர்கள், மற்றும் பயங்கரவாதிகளுக்குதொடர்பு வைத்துள்ளார். இவர் எப்படி நமது மாநிலத்தை காத்திட முடியும்?”, என பேசினார்.
மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார் – இப்படி ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார்: இவரது பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியினர் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெனிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெனிபிரசாத் கூறுகையில், “என்னை பதவி விலக சொல்வதற்கு முலாயம் யார் ? நான் பதவி விலகத்தயார் ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன். முலாயம்சிங் அயோத்தி இடிப்பு சம்பவத்தின்போது சிலருக்கு துணையாக இருந்தார். குறிப்பாக மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்”“, என்றார். மேலும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.

மத்தியஅமைச்சர்கமல்நாத்வருத்தம்: எப்படியாகிலும், முல்லாயம் அல்லது மாயா என்று உபி அரசியல்வாதிகளின் தயவு வேண்டும் என்பதனால், காங்கிரஸ்காரர்கள் தாஜா செய்ய ஆரம்பித்துள்ளனர். தலைவர்கள் பேசும் போது கவனமாக பேச வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திரிவேதி மறைமுகமாக அமைச்சர் பெனிபிரசாத்தை சாடியுள்ளார். மத்திய அமைச்சர் கமல்நாத் இந்த பேச்சு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்[7].

முஸ்லீம் கூட்டுத் தேவை[8]: ஆனால், இப்படி பேனி பேசியவுடன், முலாயம் முஸ்லீம் பிரச்சினையைத் திசைத்திருப்பி விட்டது போலாகி உள்ளது. முஸ்லீம் பிரச்சினையை விட்டு, முலாயம் பிரச்னையை அலச ஆரம்பித்து வருவார்கள்[9]. முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது[10], இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருந்தாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு ச்வது விடுவார். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.

© வேதபிரகாஷ்

18-03-2013


குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

மார்ச் 17, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

mulayam-singh-yadavs-iftar-diplomacy-muslims

காபிர்களுடன் உறவு-கூட்டு ஏன், எதற்கு, எப்படி: காபிர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது, இருப்பினும் காபிரை வைத்து காபிரை அழிக்கலாம் என்றால் அவ்வாறான நிலையில் ஓரளவிற்கு நட்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, முஸ்லீம்கள் இருக்கும் போது, விஷயம் அறிந்தும் அறியாதது போல, இந்திய துரோகிகள், அரசியல் ஆதாயத்திற்காக, ஓட்டுவங்கி அரசியலுக்காக பேரம் பேசி தேர்தலை சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்தில் இப்தர் பார்ட்டி நடத்துவதிலிருந்து, அரசியல்வாதிகள் தனியாக மற்றும் இஸ்லாம் அமைப்புகளே நடத்தும் நோன்பு விழாக்கள் பல நடந்து வருகின்றன. அத்தகைய காபிர்-மோமின் கூடுதல்களில் நாத்திக, இந்துவிரோத, ஏன் கம்யூனிஸ்ட் போன்றோரும் கலந்து கொள்கின்றனர். அப்பொழுது, குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகி விட்டது.

Mullah Mulayam and Imam - 2012

முஸ்லீம்களை நம்பும் உபி அரசியல்வாதிகள்: உபியைப் பொறுத்த வரைக்கும் “முல்லா”யம் சிங் யாதவ், முஸ்லீம்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளார். காங்கிரஸ்காரர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், சுன்னத் செய்து கொள்லக் கூட தயாராக உள்ளார்கள். ராஹுல் உபிக்கு போக வேண்டும் என்றால், ஒரு மாதம் முன்னரே ஷேவ் செய்யாமல் இருப்பார். தாடி இல்லாமல் அவரை உபியில் பார்க்க முடியாது. இப்பொழுது கூட, கொலை செய்யப்பட்ட ஜியா உல் ஹக்கின் மனைவி பர்வீன் ஆஜாதைச் சென்று பார்த்துள்ளார்[1]. ஆனால், காஷ்மீரில் கொல்லப்படும் எந்த வீரரின் குடும்பதையோ, மனைவியையோ பார்த்ததாக தெரியவில்லை. அதாவது முஸ்லீம் என்றால், அதிலும் தேர்தல் வருகிறது என்றால் இத்தகைய நாடகங்கள், ஆனால், இந்தியர்களை ஏமாற்றும், துரோகம் இழைக்கும் வேலைகள் என்பதனை மற்றவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.

Mullah Mulayam and Imam

புகாரி-முல்லா நிக்கா தலாக்கில் முடிந்துள்ளது: இப்பொழுது தில்லி இமாம் மௌலானா சையது அஹ்மது புகாரி, “முல்லா”யம் சிங் யாதவுடனான தம்முடைய உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இவரது மறுமகன் உமர் அலி கான் (Umar Ali Khan) மற்றும் வாசிம் அஹமது (Waseem Ahmad) தம்முடைய ராஜினாமா கடிதங்களை சனிக்கிழமை அனுப்பியுள்ளனராம். முஸ்லீம்களை கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர், அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை என்று குற்றஞ்சாட்டியுளார். இருப்பினும், உறுதியான வாக்கு அளித்தால், தமது நிலையை மறுபரிசீலினை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[2] எட்டாவா என்ற இடத்தில் ஏப்ரல் 21ம் தேதி, ஒரு முஸ்லீம் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்[3].

 

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

முஸ்லீம் ஊழல் செய்ய மாட்டாரா?: உபி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட வாசிம் அஹமது, ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால், பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[4]. ஆனால், புகாரி அதனை எதிர்க்கிறார். முஸ்லீம் என்பதினால் தான், ஊழல் குற்றச்சாட்டு ஏற்படுகிறது என்று வாதிடுகிறார். அரசியலில் ஊழல் இல்லாவர் என்பது கிடையாது என்ற நிலையில் இத்தகைய வாதமே போலித்தனமாகும்.

 

லல்லு-பாஷ்வான்-குல்லா

லல்லு-பாஷ்வான்-குல்லா

ஆஸம் கானும் ஜெயபிரதாவும்: முலாயம் கட்சியில் ஏற்கெனவே ஆஸம் கான் என்ற முஸ்லீம் அமைச்சர் அடாவடித் தனமாக செயல் பட்டு வருகின்றார் என்பது தெரிந்த விஷயமே. கடந்த தேர்தலின் போது, ஜெயபிரதாவின் மீது அவதூறு ஏற்பட, அசிங்கமான சிடியை வெளியிட்டார் என்று அந்த நடிகையே குற்றஞ்சாட்டியுள்ளார்[5]. அப்பொழுதைய சமஜ்வாதி கட்சியின் பொதுசெயளாலராக இருந்த அமர்சிங் தேர்தல் கமிஷனரிடம் “ஜெயபிரதாவின் நிர்வாண படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் அடங்கிய சிடியை ஆஸம் கான் ஆட்கள் விநியோகித்து வருகிறார்கள்”, என்று புகார் கொடுத்தார்[6]. வெளிப்படையாக, அந்நடிகை இந்து என்பதனால் சீட் கொடுக்கக் கூடாது, அதிலும் முஸ்லீம் வேட்பாளருக்கு எதிராக நிறுத்தக் கூடாது என்றெல்லாம் வெளிப்படையாக முலாமிற்கு கண்டிஷன் போட்டார்.

Azam CD - poster of nude Jataprada

புகாரி- ஆஸம் கான் லடாய்: புகாரியின் மறுமகன் நியமிக்கப்பட்டதற்கு, ஆஜம் கான் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமல்லது “புகாரியை முஸ்லீம்கள் தலைவர்” என்று ஏற்றுக் கொள்ளமுடியாது என்றெல்லாம் பேசியுள்ளார்[7]. ஏனெனில் முஸ்லீம் அமைச்சர் பதவியை தனது மறுமகனுக்குக் கொடுக்குமாறு, புகாரி கேட்டுக் கொண்டார்[8]. இதனால்தான், ஆஸம் கான் – புகாரி இவர்களிடம் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதில் முல்லாயம் சிக்கியுள்ளார்[9].

 

Omar Abdullah - Rahul-Mullah-Topi

Omar Abdullah – Rahul-Mullah-Topi

எந்த முஸ்லீம் கூட்டு அதிக ஓட்டு கிடைக்கும்?: போதாகுறைக்கு, இப்பொழுது பிரைலியைச் சேர்ந்த மௌலானா தௌக்கீர் ராஸா என்பவருடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் (Maulana Tauqeer Raza of Bareilly, for support in the Lok Sabha elections) என்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்[10]. எந்த முஸ்லீம் கூட்டத்துடன் கூட்டு வைத்துக் கொண்டால், அதிக ஓட்டு கிடைக்கும் என்று பார்க்கிறார் போலும்[11]. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளதால், இம்முறை இந்த முஸ்லீம் கூட்டினால் வென்று விடலாம் என்றும் கணக்குப் போடுகிறார்[12].

 

வேதபிரகாஷ்

17-03-2013


[2] However, while Maulana Bukhari indicated that he was not averse to another round of talks with Mr. Singh, he said the discussions should be centred around solid assurances.

http://www.thehindu.com/news/national/other-states/maulana-bukhari-severs-ties-with-sp/article4516659.ece

[4] Sources said that the fissures came to the fore after Ahmad was removed from the post of chairman, UP Pollution Control Board (UPPCB), following stinging charges of corruption against him. Though Ahmad was later adjusted in the Civil Defence Council, the shifting allegedly fuelled animosity between Bukhari and Akhilesh Yadav.

http://timesofindia.indiatimes.com/city/lucknow/Bukhari-distances-self-from-SP-kin-quit-posts/articleshow/19011574.cms

[5] Jaya Prada, who is seeking re-election from Rampur constituency in Uttar Pradesh, alleged, “they (Khan and supporters) have released my CDs and posters just to scandalize my image”. “I am yet to see the content of the CDs but the posters released by them are very bad in taste, damaging my reputation. I am approaching the Election Commission to check this sort of campaigning,” she said.

http://articles.timesofindia.indiatimes.com/2009-05-11/india/28155645_1_azam-khan-rampur-jaya-prada-posters

[6] Samajwadi Party general secretary Amar Singh filed a complaint with the Election Commission charging SP rebel Azam Khan with distributing ‘nude’ photographs and obscene CDs of actor and Rampur candidate Jaya Prada.

http://www.dnaindia.com/india/report_seedy-cd-amar-wants-to-get-azams-scalp_1255500

[7] In April 2012, Bukhari entered into a murkier spat with minority affairs minister Azam Khanwho questioned the Imam’s claim of being a “Muslim leader”. It all started after Bukhari’s son-in-law Umar was nominated by SP as its candidate in the Legislative Council. Azam was peculiarly against Umar citing his failure during the assembly elections. Mulayam tried to pacify Bukhari, who, however, remained unmoved and retaliated by lambasting the SP of relying too much on Azam, while leaving nothing important for others.

http://timesofindia.indiatimes.com/city/lucknow/Bukhari-distances-self-from-SP-kin-quit-posts/articleshow/19011574.cms

உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன் – சொன்னது / எழுதியது தலைவெட்டிராஜா!

மார்ச் 10, 2013

உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன்  –  சொன்னது  /  எழுதியது தலைவெட்டிராஜா!

Raja Parvez Ashraf  inside the dargah of Khwaja Moinuddin Chishti

முஸ்லீம் பிரதம மந்திரியின் தர்கா வழிபாடு: பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் சனிக்கிழமை (09-03-2013) அன்று ஆஜ்மீரில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்தினார். அவரைப் புறக்கணிக்கப் போவதாக ஆஜ்மீர் ஷெரீஃப் தர்கா மதகுரு ஜைனுல் அபெதின் அலி கான் அறிவித்தாலும், வந்தவருக்கு எல்லாம் மரியாதைகளும் செய்யப்பட்டன. மேளாதாளத்துடன் வரவேற்கப்பட்டார்[1] [ Ashraf was welcomed in the dargah with the beating of drums and the representatives of Dargah Committee and Anjum Khuddam Syedzadgan received him at the entrance gate]. தர்கா வாசலில் இப்படி மேளதாளம் அடிக்கலாமா என்று தெரியவில்லை[2]. தலையில் தலைப்பாகை வைப்பது,தௌடை அளித்தது, இத்யாதிகள் எல்லாமே நடந்தன.

Raja Parvez Ashraf with his family at the shrine of Khwaja Moinuddin Chisht

உலகத்திற்குஅமைதிவேண்டும், பாகிஸ்தானிற்குவளம்வேண்டும்: எல்லாவற்றையும் விட வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த தலைவெட்டியான் தான் , “உலக அமைத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டேன்” – சொன்னது / எழுதியதுதான்! இப்படித்தான் பாகிஸ்தான் நாளிதழ் வெளியிட்டது[3]. ஆனால், அந்த தலைவெட்டி ராஜா முழுக்க எழுதியுள்ளது – “....I wish for peace in the world and for peace and prosperity in Pakistan”! “பாகிஸ்தானிற்கு வளம் வேண்டும்” என்று சேர்த்துதான் எழுதியுள்ளான்[4]. அதாவது, உலகத்தில் அமைதி வேண்டும் என்றால், உலகத்திற்கு இஸ்லாம் வேண்டும் என்ற பொருளும் உண்டு. அதனால், உலகத்திற்கு அமைதியும், பாகிஸ்தானிற்கு வளமும் வேண்டும் என்று இந்தியாவிற்கே வந்து எழுதியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! வழக்கம் போல, நமது ஹிந்துவோ, ““I and my family members are fortunate to get an opportunity to visit the dargah. I express gratitude to Gharib Nawaz for this,” he wrote in Urdu.” என்று குறிப்பிட்டுள்ளது! அதாவது, இந்த தர்காவிற்கு நானும் எனது குடும்பத்தாரும் வந்ததற்காக பாக்கியத்தை செய்துள்ளோம். இதற்கான நன்றியை நான் கரீப் நவாஜிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உருதுவில் எழுதியுள்ளார்[5].

Raja Parvez Ashraf shook hands with Khushid

பீரே வா என்றால், சோனியா வராதே என்றா சொல்வார்?: காதிம் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சையத் பிலால் சிஷ்டி கூறுகையில், “எனது அழைப்பின் பேரில்தான் அஷ்ரஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகின்றனர். அவர்களின் புனித யாத்திரைக்குத் தேவையான உதவிகளை நான் செய்வேன்‘ என்றார். அதனால் தான், பேனாவில் ரத்தத்தை நிரப்புவேன் என்று மிரட்டிய, குர்ஷித் அனுப்பப்பட்டார், நன்றாக ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது, டாடா காண்பித்துவிட்டு சென்றுவிட்டார் தலைவெட்டி ராஜா!

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: தர்கா வேறு, மசூதி வேறு என்று ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. ஆனால், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

வேதபிரகாஷ்

10-03-2013


[2] மசூதி முன்னால் மேளதாளம் அடிக்கக் கூடாது என்று அலரும் முஸ்லீம்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? தர்காவிற்கு பக்கத்தில் மசூதி கட்டி, சுவரை வேறு கட்டி வைக்கிறார்கள்.

[4] “…I wish for peace in the world and for peace and prosperity in Pakistan,” Ashraf wrote in Urdu in the visitors book after spending 30 minutes at the shrine.  http://zeenews.india.com/news/nation/pakistan-pm-raja-pervez-ashraf-prays-at-ajmer-sharif_834170.html