Posted tagged ‘மங்களூரு குக்கர் குண்டு’

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைது – இதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டு வெடிப்புகள் தொடர்பு என்ன? (2)

ஏப்ரல் 18, 2024

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைதுஇதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டுவெடிப்புகள் தொடர்பு என்ன? (2)

இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்: இது தொடர்பாக கர்நாடக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது[1], “இந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்த பயங்கரவாத நெட்ஒர்க் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். இருப்பினும், இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அதிக உந்துதல் உள்ளவர்கள். இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம். அது விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்[2]. “இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்,  எனும்பொழுது, நிச்சயமாக அங்கெல்லாம் இவர்களுடைய தொடர்புகள் இருப்பது தெளிவாகிறது. அவர்களையும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வரப்படுவது: கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வர அனுமதி கோரி கொல்கத்தா நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் முறையிட்டனர்[3]. இதையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த இரண்டு பேரையும் பெங்களூரு அழைத்துச் செல்ல மூன்று நாட்கள் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது[4]. பிதான்நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இருவரும் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டனர்[5]. வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின் இருவரும் பெங்களூரு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்[6]. 15-04-2024க்குப் பிறகு மறுபடியும் காவல் நீட்டிப்பு பெற்றிருக்கக் கூடும். இவையெல்லாம் சட்டப் படி மேற்கொள்ளும் நடவடிக்கைகள், முறைகள், செயல்பாடுகள் ஆகும். முடிவாக ஒன்று-மூன்று என பல ஆண்டுகள் ஆகலாம். போதிய ஆதாரங்கள் இல்லை விடுவிக்கவும் படலாம். ஆனால், குண்டுகள் வெடித்தது உண்மை, குண்டுவெடிப்பில் கொலையுண்டது, பாதிக்கப் பட்டது உண்மை…அதற்கு யார் பதில் சொல்லப் போகின்றனர் என்று தெரியவில்லை.

தேதிகளும்- முக்கியமான நிகழ்வுகளும்: இவ்வழக்கில் முக்கியமான தேதிகளும் நிகழ்வுகளும்:

01-03-2024 – குண்டுவெடிப்பு

03-03-2024 – NIA வழக்கை எடுத்துக் கொண்டது; ரூ 10 லட்சம் பரிசு அறிவிப்பு;

09-03-2024 – ராமேஸ்வரம் கபே மறுபடியும் பாதுகாப்புடன் திறக்கப் பட்டது.

புகைப் படங்கள் வெளியீடு.

24-03-2024  – ஒரிஸா வழியாக கொல்கொத்தாவிற்கு செல்வது.

25-03-2024 இருவரும் கொல்கொத்தவில் தலைமறைவாகத் தங்குதல்

27-03-2024 – கூட்டாளி முஸாமில் ஷெரீஃப் கைது

12-04-2024 – இருவர் கொல்கொத்தாவில் கைது, மூன்று நாள் காவல் அனுமதி

13-04-2024 – பெங்களுருக்குக் கொண்டு வருதல்

15-04-2024 – காவல் அனும்பதி நீட்டிப்பு.

இதே காலகட்டத்தில் ஜாபர் சாதிக் வழக்கும் இணையாகச் செல்வதை கவனிக்கலாம். ஆட்கள் மாறினாலும், இடம் மாறினாலும், குற்றங்கள் தன்மை மாறவில்லை. இந்திய சமுதாயத்தை நாசமாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் தான், இவர்கள் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.

வியாபாரப் போட்டிக்காக குண்டு வைக்கப் பட்டது என்ற செய்தி: கோயம்புத்தூர் குக்கர் குண்டுவெடிப்பு பொன்று, இங்கும் அரசியல் செய்ய சிலர் முயன்றனர். முதலில் வியாபார போட்டியால், யாராவது குண்டு வைத்திருக்கலாம் என்றும் சொல்லப் பட்டது. அப்படியே செய்திகளையும் பரப்ப ஆரம்பித்தார்கள். அப்படியிருந்தால், யாரும் இல்லாத நேரத்தில், பீதியுண்டாக்க வைத்திருக்கலாம். இவ்வாறு உணவுண்ணும் அப்பாவி பொது மக்கள் காயமடையும் விதத்தில், பீதியுண்டாக்கும் குறையில் குண்டு வைத்திருக்க மாட்டான். உண்மை தெரியவரும் பொழுது, அந்த வியாபாரப் போட்டியாளன் பெயரும் கெட்டு விடும். வணிகப் போட்டிகளில் இத்தகைய தீவிரவாதம் இருக்கிறது என்றால், இனி ஒவ்வொரு வணிக வளாகத்திலும், குண்டு வெடிக்க ஆரம்பித்து விடும்.

குண்டு வைப்பது என்ற கொடிய-குரூர எண்ணம்: எப்படியிருந்தாலும், குண்டு வைப்பது என்பதே தீவிரவாத செயல் எனும்பொழுது, அதனை எவ்வாறு வைத்தான், எதற்கு வைத்தான் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. அத்தகைய குரூர எண்ணம் இருந்திருப்பது ஏன் என்று தான் அராய்ச்சி செய்திருக்க வேண்டும். படித்த இளைஞர்கள் வேலைக்குச் சென்று, சம்பாதித்து பெற்றோரை பாதுகாக்க வேண்டும், குடும்பத்தைப் பேணவேண்டும் என்றில்லாமல், குண்டு வைப்பேன் என்று கிளம்பியுள்ள இந்த தீவிரவாதிகளை கவனிக்க வேண்டும். மேலும் அவ்வாறு தொழிற்நுட்பத்துடன் வெடிக்கும் குண்டு தயாரிப்பு எப்படி நடந்தது, யார் கற்றுக் கொடுத்தது, அதே முறை கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டது எவ்வாறு – போன்ற கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

தமிழகத்தில் திமுக போன்று கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசியலாக்க முயற்சி: சித்தராமையா-சிவகுமார் பிரச்சினையும் இதில் எழுந்தது, பிறகு, NIAவிடம் வழக்கை ஒப்படைக்க தீர்மானிக்கப் பட்டது. சாய் பிரசாத் என்ற பிஜேபி ஆள் இந்த இருவருடன் தொடர்பில் இருக்கிறான் என்று தீர்த்தஹல்லி, சிமோகாவில் உள்ள மொபைல் கடை வேலையாட்கள் சொன்னதாக உள்ளது. அதன் படி NIA அவனைப் பிடித்து விசாரித்துள்ளது. கைது செய்யப் பட்டான் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், அவையெல்லா காங்கிரஸ்காரர்கள் செய்த சமூக-ஊடக பிரச்சாரம் என்று தெரிய வந்தது. ஆக, இங்கும், திமுக-காங்கிரஸ் பாணி குண்டுவெடிப்பு-பிரச்சாரத்தைக் கவனிக்கலாம் இக்கட்சிகள் தான், கூட்டணியும் வைத்துள்ளன. . NIAவின் விசாரணைக்குப் பிறகு, திமுக அடங்கி விட்டது, அதுபோல, காங்கிரஸும் இங்கு அமைதியாகி விட்டது. தீவிரவாதத்தில், குண்டுவெடிப்புகளில் தமிழக-கர்நாடக தொடர்புகளை அழித்தே ஆக வேண்டும். இதில் அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை. பொது மக்களை மிகவும் பாதிக்கக் கூடிய விவகாரங்கள் என்பதால், அத்தகைய தீவிரவாத அமைப்புகள் ஆட்கள் முதலியோரைப் பற்றி, சந்தேகிக்கும் பொது மக்கள் உடனடியாக போலீசாரிடம் அல்லது NIA போன்ற அமைப்பினரிடம் தகவல், புகார் கொடுக்கவேண்டும். ரகசியமாக விசாரணை மேற்கொண்டு, முளையிலேயே அத்தகைய திட்டங்களைக் கிள்ளியெறிய வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-04-2024


[1] தமிழ்.இந்து, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபர்கள் இருவர் கொல்கத்தாவில் கைது, செய்திப்பிரிவு, Published : 12 Apr 2024 01:38 PM; Last Updated : 12 Apr 2024 01:38 PM.

[2] https://www.hindutamil.in/news/india/1229724-suspects-in-the-rameshwaram-cafe-blast-in-bengaluru-caught-in-kolkata.html

[3] இடிவிபாரத், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: இருவர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்? – Rameshwaram Cafe Blast 2 Arrest, By ETV Bharat Tamil Nadu Team, Published : Apr 13, 2024, 12:11 PM IST; Updated : Apr 14, 2024, 12:32 PM IST.

[4] https://www.etvbharat.com/ta/!bharat/national-investigation-agency-brought-two-on-rameshwaram-cafe-blast-case-and-remand-tns24041301974

[5] தமிழ்.ஏசியாநெட், Bomb Blast : ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு.. கைதான 2 முக்கிய குற்றவாளிகள்இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்!,, Ansgar R, First Published Apr 13, 2024, 11:24 AM IST;  Last Updated Apr 13, 2024, 11:24 AM IST.

[6] https://tamil.asianetnews.com/india/rameshwaram-cafe-blast-2-main-accused-brought-to-bengaluru-today-facing-court-ans-sbv9r9

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைது – இதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார்குண்டு வெடிப்புகள் தொடர்பு என்ன? (1)

ஏப்ரல் 18, 2024

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைதுஇதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டுவெடிப்புகள் தொடர்பு என்ன? (1)

அல் ஹிந்த் அறக்கட்டளை, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, தீர்த்தஹள்ளி பாதை முதலியன:  அப்துல் மதீன் அகமது தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகிய இருவரும் கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 2020-ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு ஏஜென்சிகளின் ரேடாரின் கீழ் உள்ளனர். இவர்கள், ‘தீர்த்தஹள்ளி பாதை’ [Thirthahalli module] எனக் குறிப்பிடப்படும் ஒரு பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு முகமைகள் நம்புகின்றன[1]. பெங்களூரில் உள்ள சுட்டகுண்டேபாளையத்தில் அல் ஹிந்த் அறக்கட்டளையை நடத்தி வந்த மெகபூப் பாஷாவும், தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீனும் இணைந்து, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை உருவாக்கி தென்னிந்தியாவில் மையங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது[2].

இது உள்ளூர் தீவிரவாதமாஅனைத்துலக ரீதியில் பாதிப்பை உண்டாக்கும் சதி வேலையா?: முந்தைய வெடிகுண்டுகள் தொடர்புகள் போலவே, இதிலும், தமிழக தொடர்பு இருப்பதை கவனிக்கலாம். ஐஎஸ் பாணி கிளர்ச்சியை தென்னிந்தியாவில் தொடங்க வேண்டும் என்பதே இவர்களின் திட்டம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இவர்களோடு, அப்துல் மதீன் அகமது தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  1. 2020 அக்டோபரில் மங்களூருவில் நடந்த பயங்கரவாத ஆதரவு கூட்டம்,
  2. செப்டம்பர் 2022-இல் ஷிவ்மொகாவில் துங்கா நதிக்கரையில் நிகழ்ந்த ஐஇடி குண்டுவெடிப்பு மற்றும்
  3. குக்கர் குண்டுவெடிப்பு –

ஆகிய மூன்று பயங்கரவாத வழக்குகளிலும் தாஹா மற்றும் ஹுசைன் குற்றம்சாட்டப்பட்டனர். இதையெல்லாம் கூட, முன்னர் “உள்ளூர் தீவிரவாதம்” என்று குறிப்பிடப் பட்டு திசைத் திருப்பப் பட்டது. ஆனால், பெங்களூரு, மும்பக்கு அடுத்தப் படியாக, வியாபார-வணிக முக்கியத்துவம் அடைந்து வந்துள்ள நிலையில், இத்தகைய தீவிரவாத செயல்கள், இந்திய பொருளாதாரத்தைப் பாதிப்பதாக உள்ளது என்பதனை கவனிக்க வேண்டும்.

12-04-2024 அன்று ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கூட்டாளி கைது: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் உள்பட வழக்கில் தொடர்புடைய இருவர் கொல்கத்தாவில் 12-04-2024 அன்று வெள்ளிக்கிழமை, கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது[3]. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில்[4], “பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் 1 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் குண்டுவைத்த நபர் மற்றும் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபர் என சந்தேகிக்கப்படும் இருவர், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா அருகே இன்று (ஏப்ரல் 12) கைது செய்யப்பட்டனர்[5]. குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அப்துல் மதீன் அகமது தாஹா (Adbul Matheen Ahmed Taahaa வயது 30), உணவகத்தில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் (Mussavir Hussain Shazib வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்[6]. இவர்கள் போலியான அடையாளத்துடன் மறைவான இடத்தில் தங்கி இருந்த நிலையில் இன்று அதிகாலை இருவரும் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்புகள், மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகா, கேரள மாநில காவல் துறை ஆகியோரின் துணையோடும், ஒத்துழைப்போடும் இவர்களை கைது செய்யும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது[7].  இன்னொருவன் நெல்லூர், சென்னை, வந்து ஒரிசா வழியாக, கொல்கொத்தாவிற்குச் சென்றதாகத் தெரிகிறது[8]. விக்னேஸ் மற்றும் சுமித் பெயர்களில் இப்ரவரியில் 2024 சென்னையில் தங்கியதாகத் தெரிகிறது. ஆக, இவ்விடங்களில் இவர்களுக்கு உதவியாக தொடர்புகள் இருந்தனவா என்றும் நோக்கத் தக்கது.

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு, கோவை கார் குண்டுவெடிப்பு ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பு தொடர்பு என்ன?: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு, கோவை கார் குண்டுவெடிப்பு இது தொடர்பாக ஏற்கனவே நடந்த மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு, கோவை கார் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களை ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள், அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தான் ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர்[9]. இதற்கான ஆதாரங்கள் கிடைத்ததன் பேரில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களில் தீவிரமாக சோதனை நடத்தினர்[10]. இதனிடையே வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவாடங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஜப் என்பவர், கடந்த மார்ச் 27ம் தேதி் கைது செய்யப்பட்டார். ஆனால், தமிழக ஆளும் அரசியல்வாதிகள் கோவை கார் குண்டுவெடிப்பு பற்றி அமுக்கியே வாசித்தனர், அதனை விபத்து என்று குறிப்பிட்டு வந்தனர். இப்பொழுதெல்லாம், இதை பற்றி கண்டுகொள்வதில்லை.

சந்தேகிக்கப் பட்ட நபர் பற்றிய புகைப்படம் வெளியீடு முதலியன: குண்டுவெடிப்பு தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்திருந்தது. தகவல் அளிப்பவர்களின் அடையாளங்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் நிறுவனம் வலியுறுத்தியது. பெங்களூரின் புரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபலமான உணவகமான தி ராமேஸ்வரம் கஃபேயில் ஒரு பையை வைத்திருக்கும் போது சிசிடிவி கேமரா காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட குற்றவாளியின் படத்தையும் நிறுவனம் வெளியிட்டது. என்ஐஏ வெளியிட்ட புகைப்படத்தில், குண்டுவைத்தவர் தொப்பி, கருப்பு பேன்ட் மற்றும் கருப்பு காலணிகளை அணிந்திருப்பதைக் காணலாம். அந்த பதிவில், “அவரை கைது செய்ய வழிவகுக்கும் எந்தவொரு தகவலுக்கும் வெகுமதி வழங்கப்படும்” என்றும் என்ஐஏ வலியுறுத்தியது. உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) இந்த வழக்கின் விசாரணையை பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பிடம் ஒப்படைத்த மூன்று நாட்களுக்குப் பிறகு என்ஐஏ வெகுமதியை அறிவித்தது. வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவடாங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஃப் என்பவர், கடந்த மார்ச் 27ல் கைது செய்யப்பட்டார்[11]. ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 3 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது[12].  என்.ஐ.ஏ அதிக முயற்சியோடு செயல்பட்டது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

16-04-2024


[1] A group once associated with graffiti near a police station in Mangaluru has become the most wanted terror module in Karnataka. Known in police circles as the “Thirthahalli module”, this group is believed to be responsible for a series of improved explosive device (IED) explosions in both Mangaluru and Bengaluru, with aspirations of establishing an Islamic State Caliphate within Karnataka’s forests, according to a charge sheet filed by NIA.

Hindustan Times, NIA links ‘Thirthahalli module’ to IED blasts in parts of Karnataka, By Arun Dev, Bengaluru, Mar 30, 2024 07:40 AM IST.

[2] Their emergence on the radar of investigative agencies dates back to January 2020 when state police uncovered the Al Hind terror module, inspired by the Islamic State (IS), operating in Bengaluru’s Suddaguntepalya. Spearheaded by Mehboob Pasha, affiliated with the Al Hind Trust, Shihabudeen and Khaja Moideen from Cuddalore, Tamil Nadu the module aimed at establishing an IS province through insurgent activities spanning Karnataka and Tamil Nadu. “They formed the Al-Hind module and selected Bengaluru as their base and conducted several criminal conspiracy meetings in Karnataka and Tamil Nadu since April 2019,” NIA said in its charge sheet filed in the Al-Hind module case in September 2021.

https://www.hindustantimes.com/india-news/nia-links-thirthahalli-module-to-ied-blasts-in-parts-of-karnataka-101711738475993.html

[3] விகடன், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கைதுகொல்கத்தாவில் மடக்கிய NIA!, சி. அர்ச்சுணன், Published:12 Apr 2024 3 PM; Updated:12 Apr 2024 3 PM.

[4] https://www.vikatan.com/crime/nia-arrests-two-main-accused-of-bengaluru-rameshwaram-cafe-blast

[5] புதியதலைமுறை, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்புமூளையாக செயல்பட்ட இருவர் அதிரடியாக கைது!,ஜெனிட்டா ரோஸ்லின், Published on: 12 Apr 2024, 12:48 pm

[6] https://www.puthiyathalaimurai.com/india/nia-arrests-2-main-suspects-in-bengaluru-rameshwaram-cafe-blast-case

[7] தமிழ்.ஒன்.இந்தியா, ராமேஸ்வரம் கபேவசமாய் சிக்கிய மாஸ்டர் மைண்ட்..சுற்றி வளைத்து கைது செய்த என்ஐஏ.! சென்னையில் தஞ்சமா?, By Rajkumar R, Updated: Friday, April 12, 2024, 12:43 [IST].

[8] https://tamil.oneindia.com/news/india/two-accused-involved-in-bengaluru-rameswaram-cafe-blast-incident-arrested-in-kolkata-by-nia-597799.html

[9] தினகரன், பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: மேற்குவங்கத்தில் முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது, Published: April 12, 2024, 11:50 amLast Updated on April 12, 2024, 11:51 am.

[10] https://www.dinakaran.com/bengaluru_blast_two_arrested/

[11] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Bengaluru Cafe blast: பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு வழக்கு.. 2 பேரை அதிரடியாக கைது செய்தது என்ஐஏ!, Karthikeyan S HT Tamil, Apr 12, 2024 11:27 AM IST,

[12] https://tamil.hindustantimes.com/nation-and-world/two-arrested-from-west-bengal-in-connection-with-bengalurus-rameswaram-cafe-blast-131712900386950.html