Posted tagged ‘நாகூர் அனீபா’

மேலூர் மாணவி பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு, இறுதி சடங்குகள் மயானத்தில் நடத்தப் பட்டன – நாகூர் ஹனீபா எலிமருந்து கொடுத்து கொலைசெய்த வழக்கு (3)

மார்ச் 8, 2022

மேலூர் மாணவி பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு, இறுதி சடங்குகள் மயானத்தில் நடத்தப் பட்டனநாகூர் ஹனீபா எலிமருந்து கொடுத்து கொலைசெய்த வழக்கு (3)

பிரேத பரிசோதனை 06-03-2022 சிறுமி இறந்தவுடன் நடத்தப் பட்டதா இல்லையா?: சிறுமி எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை, தூண்டப்பட்ட தற்கொலை, கொலை என்றெல்லாம் விவாதத்திற்கு உட்பபடும் நிலையில், போக்சோவில் ஹனிபா கைது செய்யப் பட்டிருக்கிறான். முன்னர், மருத்துவர்களின் அறிக்கையில் சிறுமி வேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிடப் பட்டது. ஆனால், 07-03-2022 அன்று சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன[1]. அப்படியென்றால், பிரேத பரிசோதனை முன்னர் நடக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகின்றது[2]. 15-02-2022 அன்று போலீஸில் புகார் கொடுத்து, 05-03-2022 அன்று ஹனீபா கைது செய்யப் பட்டவுடன், நிச்சயமாக, போலீஸார் மற்றும் மருத்துவர்கள், சிறுமியின் உடலை பரிசோதனைக்கு (post mortem) அனுப்பியிருக்க வேண்டும், பரிசோதனை நடந்திருக்க வேண்டும். போக்சோ சட்டத்தில் பதிவான வழக்கை, அவ்வாறு சாதாரணமாக முடித்து விட முடியாது.

கைதான 8 பேர், தேடப் படும் இரண்டு பேர்: இந்த சம்பவம் தொடர்பாக கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகூர்ஹனிபா,

  1. பிரகாஷ், அவரது நண்பர்
  2.  பெருமாள் கிருஷ்ணன், அவரது நண்பர்
  3. சாகுல்ஹமீது மற்றும்
  4. மதினா, நாகூர்ஹனிபாவின் தாயார்
  5. சுல்தான் நாகூர்ஹனிபாவின் தந்தை
  6. அலாவுதீன்,
  7. ராஜாமுகமது, நாகூர்ஹனிபாவின் சகோதரர்
  8. ரம்ஜான்பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

வழக்கு பதிவுகள் மாற்றப் படுதல்: ஆரம்பத்தில், ஒரு ‘சிறுமி காணவில்லை’ வழக்கு பதிவு செய்யப்பட்டது, பின்னர் அது 143, 366 (A), 307 IPC, 5 (L), 6 போக்சோ (POCSO) வழக்காக மாற்றப்பட்டது[3]. இருப்பினும், இந்த வழக்கு மீண்டும் 302 IPC ஆக மாற்றப்பட்டது, அவளுடைய மரணத்தைத் தொடர்ந்து 307 IPC தவிர மற்ற அனைத்து பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[4]. சிறுமி நிச்சயமாக கல்யாணம் செய்து கொள்ளாமல், கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். தவிர, “கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக,” குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது 20 நாட்களில் பலமுறை நடந்திருக்கலாம், அதில் ஹனீபா மட்டும் ஈடுபட்டிருப்பதே குற்றம் தான். இவ்வாறு வழக்குப்பதிவுகள் மாற்றம் செய்ய முடியுமா, சட்டப் படி செய்ய முடியுமா என்பதெல்லாம், சாதாரண மக்களுக்கு, செய்தி பட்ப்பவர்களுக்கு தெரியாது, புரியாது. இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது, இதன் தாக்கம், முடிவு என்ன? இதனால், என்ன பாதிப்பு ஏற்படும், சிறுமியின் பெற்றோர்களுக்கு என்ன நீதி, நியாயம், பலன்கிடைக்கும் என்று தெரியவில்லை. சட்ட வல்லுனர்கள் தான், இதைப் பற்றி ஆய்ந்து  சொல்ல வேண்டும்.

பாதிக்கப் பட்ட மாணவியின் தாயார் மாவட்ட ஆட்சியாளருக்கு 05-03-2022 அன்று எழுதிய கடிதம்: பழனியப்பன் -சபரி தம்பதியினரின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்[5].  சுல்தான் என்பவரின் மகன் நாகூர் ஹனிபா அச்சிறுமியை ஏமாற்றி பல இடங்களுக்குக் கூட்டிச் சென்று உடலுறவு கொண்டுள்ளான்[6]. பிறகு, அவன் தூண்டுதலில் எலிவிசம் சாப்பிட்டதால் இறந்து விட்டாள். சிறுமி தாயார், மாவட்ட ஆட்சியாளர்க்கு 05-03-2022 அன்று எழுதியதாக, ஒரு கடித புகைப்படத்தை வெளியிட்டு, பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா முகநூலில் பதிவு செய்துள்ளார்[7]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “மேலூர் சிறுமியின் தாயார் தன் மைனர் மகள் காணவில்லை என மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் சார்லசிடம் 15/2/22ல்  புகார் செய்தும் காவல்துறையின் மெத்தனத்தால் இன்று அச்சிறுமி இறந்துள்ளார். இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. செயல்படாத காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் .  இந்த மோசமான செயலை கண்டித்தும், அச்சிறுமிக்கு நியாயம் கேட்டும் போராடும் மக்களுக்கு எதிராக தடியடி நடத்தும் காவல் துறையின் அத்துமீறிய ஒருதலை பட்சமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்,” என எச்.ராஜா தெரிவித்துள்ளார்[8].

06-03-2022ல் தும்பைப்பட்டியில் சாலை மறியல்: இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தும் மாணவியை மீட்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை, கூட்டு பாலியல் தொந்தரவில் தங்கள் மகள் இறந்ததாகப் பெற்றோர், உறவினர்கள் புகார் தெரிவித்து உடலை வாங்க மறுத்தனர்[9]. இச்சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜக, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 06-03-2022 அன்று தும்பைப்பட்டியில் சாலை மறியல் செய்தனர்[10]. இந்நிலையில் மாணவியின் உறவினர்கள், பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் மதுரை அரசுமருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறை முன்பு 0703-2022 அன்று காலை திரண்டனர். சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரேதப் பரிசோதனைக்கு பெற்றோர், உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.

07-03-2022 அன்று பிரேத பரிசோதனை நடந்தது: மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், மேலூர் ஆர்டிஓ பிர்தெளஸ் பாத்திமா முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. இது வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேசுவரா சுப்ரமணியன், பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஆம்புலன்ஸில் ஏற்றிய மாணவியின் உடலை கோரிப்பாளையம் தேவர் சிலை வழியாகக் கொண்டு செல்ல உறவினர்கள், பாஜகவினர் திட்டமிட்டனர். ஆனால் தேவர் சிலை முன்பு திடீர் சாலை மறியல் செய்யலாம் எனக் கருதி போலீஸார் மறுத்தனர். வைகை ஆறு வடகரை சாலை, ஆவின் சந்திப்பு வழியாக தும்பைப்பட்டிக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பனகல் சாலையில் மறியல் செய்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது[11]. இருப்பினும், சிறிது நேரத்துக்குப் பின்பு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலமாக வைகை வடகரை சாலை வழியாக மாணவியின் உடல் தும்பைப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது, அடக்கம் செய்யப்பட்டது[12]

©  வேதபிரகாஷ்

08-03-2022


[1] தமிழ்.ஏபிபி.லைவ், உடற்கூராய்வு செய்யப்படும் மேலூர் சிறுமியின் உடல்சொந்த கிராமத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு, By: அருண் சின்னதுரை | Updated : 07 Mar 2022 04:10 PM (IST)

[2] https://tamil.abplive.com/news/madurai/madurai-the-body-of-a-melur-girl-who-will-be-autopsied-all-shops-in-her-own-village-will-be-closed-42922

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதுரை சிறுமி மரணம்; 8 பேர் கைது: நடந்தது என்ன? போலீஸ் விளக்கம், Written by WebDesk, March 7, 2022 6:55:13 pm.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/police-explanation-on-madurai-minor-girl-death-case-421647/

[5] தமிழ்.ஏசியா.நெட், போலீஸ் மெத்தன போக்கால் பறிபோன உயிர்.. மேலூர் சிறுமி தாயாரின் பரபரப்பு புகார் கடிதத்தை வெளியிட்ட எச்.ராஜா.!, vinoth kumar, Tamil Nadu,

[6] First Published Mar 7, 2022, 6:53 AM IST.

https://tamil.asianetnews.com/politics/h-raja-who-published-the-sensational-complaint-letter-of-the-melur-girl-mother-r8cp6n

[7] மேலூர் மாணவி தாயாரின் புகார் கடிதம் வெளியிட்டு போலீசை சாடும் எச்.ராஜா,  By KATHIRAVAN T R Sun, 6 Mar 20226:13:40 PM.

[8] https://www.toptamilnews.com/thamizhagam/H-Raja-slams-police-for-releasing-letter-of-complaint-from/cid6673172.htm

[9] தமிழ்.இந்து, கடத்தி செல்லப்பட்டு இறந்த மேலூர் மாணவி உடல் பிரேத பரிசோதனை: இறுதி ஊர்வலம் தொடர்பாக பாஜகவினர் சாலை மறியல், செய்திப்பிரிவு, Published : 08 Mar 2022 07:54 AM; Last Updated : 08 Mar 2022 07:54 AM.

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/775067-melur-student.html

[11] தினதந்தி, மேலூர் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு, பதிவு: மார்ச் 08,  2022 02:47 AM.

[12] https://www.dailythanthi.com/News/Districts/2022/03/08024752/Road-block.vpf

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது, ஆனால், சிறுமி இறந்தது, ஹனீபா தப்பித்தது! (2)

மார்ச் 8, 2022

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் மனைவி போன்று வாழ்ந்தது, எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது, ஆனால், சிறுமி இறந்தது, ஹனீபா தப்பித்தது! (2)

05-03-2022 – சிறுமியின் உடலை வாங்க மறுப்பு: இந்த நிலையில் சிறுமியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்து தும்பைப்பட்டிக்கு சென்று விட்டனர்[1]. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள், கிராம மக்கள் தும்பைப்பட்டியில் சிறுமியின் வீட்டு முன்பு திரண்டனர்[2].  அதாவது அதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை போலிருக்கிறது. அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இது பற்றி அறிந்ததும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்[3]. அரசு அதிகாரிகளும் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்[4]. இந்த நிலையில் அங்கு வந்த பா.ஜ.க. மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன், தென்னிந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன், இந்து மகா சபா மாநில துணை தலைவர் செல்லத்துரை உள்ளிட்டவர்கள் சிறுமியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அவர்களுடன் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி பேச்சுவார்த்தை நடத்தினார்[5]. தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்[6].

பிரச்சினை மக்கள் போராட்டமானதுசாலை மறியல்போலீஸ் தடியடி: சிறுமியின் சாவில் உள்ள மர்மத்தை போலீசார் மறைப்பதாக கூறி கோஷமிட்ட மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், பா.ஜ.க. நிர்வாகிகள் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன், விவசாய அணி தலைவர் பி.வி.தர்மலிங்கம், மேலூர் நகர் தலைவர் எவரெஸ்ட் தென்னரசு, காந்திநகர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். போலீசாரின் இந்த செயலை கண்டித்து தும்பைப்பட்டியில் மதுரை- திருச்சி நான்குவழிச்சாலையில் மாலை 5.30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்[7]. இதனால் அந்த பகுதியில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்[8]. மற்ற அரசியல்வாதிகள் இதில் கலந்து கொள்வது, பொது பிரச்சினை அரசியலாக்கப் படுகிறாதா என்று யோசித்தாலும், உண்மைகளை மறைக்கும் போக்கு நன்றாகவே தெரிகிறது. மயக்கமாக உள்ள சிறுமியை எவ்வாறு திருப்பரங்குன்றம், ஈரோடு என்று கூட்டிச் சென்று பிறகு, மதுரையில் தனது தாயாரிடம் கொண்டு சேர்த்தான் என்று புரியவில்லை. தூக்கிக் கொண்டு வந்தானா, காரில் வைத்து கொண்டு வந்தானா, அப்பொழுது யாரும் ஒன்றும் கேட்கவில்லையா போன்ற கேள்விகளும் எழும்.

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக என்ற நிலை பிம்பம் ஏன் உருவானது போன்றவை: மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தை சேர்ந்த சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும்[9], அதன் காரணமாக உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பரவிய தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 06-03-2022 அன்று காலை அச்சிறுமி மரணமடைந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது[10]. மேலும் மருத்துவர்களின் அறிக்கையில் சிறுமி வேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்[11]. 20 நாட்களாக இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் நாகூர் ஹனிபா பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்சோ வழக்காக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது[12].  ஆனால், போலீஸார் இப்பொழுது, அத்தகையை கருத்தை முன் வைக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளர்களை சந்தித்து கூறியது: இருப்பினும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது[13]: “சிறுமி தனது காதலர் நாகூர் ஹனிபாவுடன் காதலர் தினத்தன்று வீட்டைவிட்டு வெளியேறி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியை ஈரோட்டுக்கு அழைத்துச்சென்று ஒரு வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும், சிறுமியுடன் கட்டாயப் பாலியல் உறவில் ஈடுபடவில்லை என்றும் நாகூர் ஹனிபா விசாரணையில் கூறியதாக, பாஸ்கரன் தெரிவித்தார். “போலீஸ் தேடுவதை அறிந்து நாகூர்ஹனிபாவும் அந்த சிறுமியும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது வீட்டில் நாகூர்ஹனிபாவின் தாயார் விட்டுசென்றுள்ளார். மதுரை சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவு செய்ததாக தவறான செய்தி பரப்பப்படுகிறது…….சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கூட்டுப் லியல் வல்லுறவு நடக்கவில்லை, உடலில் எந்தவித காயமும் இல்லை என்பதும் கையில் குளுகோஸ் ஏற்றியதற்கான தடயமே உள்ளது எனவும் மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது. …….சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்….இந்த விவகாரத்தில் போக்சா வழக்கு பதிவாகியுள்ளதால் சிறுமியின் புகைப்படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக்கூடாது ……,” என்றும் அவர் கூறினார்[14].

எலிமருந்து சாப்பிட்ட காதலன்காதலி, காதலன் மட்டும் தப்ப்பித்துக் கொண்ட மர்மம்: இந்த எலிமருந்து சாப்பிட்ட படலமே பல கேள்விகளை எழுபுகிறது. ஊடகங்கள் சொல்வதாவது:

  1. போலீஸ் தேடுவதை அறிந்து நாகூர்ஹனிபாவும் அந்த சிறுமியும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்….
  2. இந்த நிலையில் எனது தாயார் என்னிடம் தொடர்பு கொண்டு, சிறுமியை நான் அழைத்து சென்றதாக ஊருக்குள் பேசிக்கொள்கின்றனர்.
  3. இது பிரச்சினையாகி விடும் என்று கூறினார். இதைவைத்து அந்த சிறுமியை பயமுறுத்துவது போல் பேசினேன்[15].
  4. பின்னர் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தேன்.
  5. இதற்காக எலி மருந்து வாங்கி வந்திருந்தேன். அதை சிறுமியை சாப்பிட வைத்தேன்[16].
  6. ஆனால் நான் அதை சாப்பிடவில்லை[17].
  7. சாப்பிடுவது போன்று சாப்பிட்டு துப்பி விட்டேன்…….
  8. சிறுமியுடன் கட்டாயப் பாலியல் உறவில் ஈடுபடவில்லை என்றும் நாகூர் ஹனிபா விசாரணையில் கூறியதாக, பாஸ்கரன் தெரிவித்தார்.

அப்படியென்றால், 16-17 வயதுடைய சிறுமி உடன்பட்டே விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்டான் என்று தொணிப்பது போலிருக்கிறது. பிறகு ஏன் எலிமருந்து கொடுத்து கொல்ல வேண்டும்?  அதையும், அவளே விருப்பப் பட்டு சாப்பிட்டாள் என்பார்களா? பிறகு உண்மையான காதலன், காதலியுடன் இரண்டு வாரங்கள் ஜாலியாக உடலுறவு கொண்டு, கணவன் – மனைவி போன்று வாழ்ந்து, விசம் கொடுத்து அவள் சாக, இவன் தப்பித்துக் கொள்வானா? இல்லை, சாப்பிட்டுவது போல சாப்பிட்டு துப்பி விட்டான் என்றால், அந்த விசம் சாப்பிட்ட நாடகம் ஏன்? இரண்டு வாரம் “எஞ்சாய்” பண்ணுவேன், பிறகு கொன்று விடுவேன் என்பது என்ன? சரி “உலக பெண்கள் தினம்” என்றுள்ளதே, ஏன் எந்த பெண்ணியங்களும் இதைக் கண்டு கொள்ளவில்லை?

©  வேதபிரகாஷ்

07-03-2022


[1] பாலிமர் செய்தி, மாமமான சிறுமி மரணம், இளைஞன் உட்பட 8 பேர் கைது, மே.07, 2022. 07:11:15 AM.

[2] https://www.polimernews.com/amp/news-article.php?id=170722&cid=1

[3] தினமணி, மதுரை அருகே திருமண ஆசை காட்டி கடத்தப்பட்ட சிறுமி உயிரிழப்பு:இளைஞா், குடும்பத்தினா் உள்பட 8 போ் ‘போக்சோவில் கைது, By DIN  |   Published on : 06th March 2022 11:04 PM  |  Last Updated : 06th March 2022 11:04 PM

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/mar/06/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3803401.html

[5] புதியதலைமுறை, மதுரை சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்புமேலூரில் உறவினர்கள் சாலைமறியல்,    Veeramani Published :06,Mar 2022 07:37 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/131526/Madurai-Melur-girl-dies-after-treatment–8-persons-arrested-in-POCSO

[7] நக்கீரன், மதுரை மேலூர் சிறுமி உயிரிழப்பு சம்பவம்போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மீது போலீசார் தடியடி!, செய்திப்பிரிவு, Published on 07/03/2022 (09:58) | Edited on 07/03/2022 (10:11).

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/madurai-melur-girl-incident-police-beat-relatives-involved-struggle/

[9] விகடன், மதுரை: மாயமான சிறுமி மரணம்; போக்சோவில் இளைஞர் உட்பட 8 பேர் கைது! –கொதித்த ஊர் மக்கள்.. நடந்தது என்ன?, செ.சல்மான் பாரிஸ், Published: 06-03-2022 at 7 PM; Updated: 06-03-2022  at 7 PM

[10] https://www.vikatan.com/social-affairs/crime/girl-went-on-missing-died-in-hospital-at-madurai-police-arrested-8-members

[11] சமயம், மதுரை சிறுமி பலாத்காரம், நடந்தது என்ன..? படிக்க படிக்க அதிர்ச்சி..!, Divakar M | Samayam TamilUpdated: 6 Mar 2022, 2:16 pm.

[12] https://tamil.samayam.com/latest-news/crime/missing-minor-girl-rescued-in-critical-condition-at-madurai/articleshow/90029814.cms

[13] பிபிசி தமிழ், மேலூர் சிறுமி மரணம், 8 பேர் கைது: பேருந்துகள் மீது கல் வீச்சுநடந்தது என்ன? போலீஸ் விளக்கம், பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக, 7 மார்ச் 2022.

[14] https://www.bbc.com/tamil/india-60644716

[15] அதாவது நடித்தான் என்றாகிறது, பிறகு அவன் ஏன் அந்த சிறுமியை பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றான், அங்கெல்லாம் இருந்தவர்கள் ஒப்புக் கொண்டு இருவரையும் வைத்துக் கொண்டார்கள், அறிவுரைக் கூறி அனுப்பி வைக்கவில்லை அல்லது சந்தேகம் கொண்டு போலீஸாரிடம் புகார் அளிக்கவில்லை போன்ற கேள்விகளும் எழுகின்றன.

[16] தினகரன், போலீஸ் தேடியதால் எலிபேஸ்ட் சாப்பிட்டார் காதலனால் கடத்தப்பட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு: காதலன், தாய் உள்பட 8 பேர் கைது, 2022-03-07@ 01:13:12.

[17] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=747689