தமிழகத்தில் தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்துவது ஏன்?
![](https://islamindia.wordpress.com/wp-content/uploads/2024/06/nia-raid-at-12-locations-in-tamilnadu-malaimurasu-30-06-204-1.jpg?w=967)
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு படையினர் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை: சட்டவிரோத செயல்பாடு காரணமாக, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) உள்ளிட்ட 8 அமைப்புகள், ஐந்து ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு கடந்த ஆண்டு 2023 தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு படையினர் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்[1]. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடந்து வருகிறது[2]. அல்உம்மா என்ற பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த ரெய்டு நடக்கிறது. தமிழகத்தில் இவ்வாறு தீவிரவாத அமைப்புகள் தொடர்ந்து, செயல்பட்டு வருவது திகைப்பாக இருக்கிறது. பொதுவாக, அத்தகைய தீவிரவாத நபர்களுக்கு உதவ ஆட்கள் இல்லாமல், அவர்கள் சுற்றி வர / தங்க முடியாது அப்படியென்றால், குறிப்பிட்ட நபர்களுக்கு தெரிந்தே இவை நடந்து வருகின்றன என்றாகிறது.
![](https://islamindia.wordpress.com/wp-content/uploads/2024/06/nia-raid-at-12-locations-in-tamilnadu-malaimurasu-30-06-2024-.jpg?w=967)
ஹிஸ்புத் தஹிரகமப்பு அதரவு வீடுகளில் சோதனை: ஹிஸ்புத் தஹிர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புடையதாக கருதி தேசிய புலனாய்வு அமைப்பினர் தஞ்சாவூரில் 5 இடங்களில் ரெய்டு நடக்கிறது. குழந்தையம்மாள் நகரில் அகமது என்பவர் வீட்டில் இன்று (ஜூன் 30) காலை 6 மணியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பின் டிஎஸ்பி ராஜன் தலைமையில் நான்கு பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்[3]. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும். சாலியமங்கலத்தில் அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட மூவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது[4]. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் ஐந்து இடங்களில் 0-06-2024 அன்று காலை ஆறு மணி முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உட்பட 12 இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை என்று இன்னொரு ஊடகம் கூறுகிறது[5]. உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ’ஹிஸ்புத் தஹிர்’ இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது[6].
![](https://islamindia.wordpress.com/wp-content/uploads/2024/06/nia-raid-at-12-locations-in-tamilnadu-malaimurasu-30-06-2024-.2.jpg?w=967)
பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் சென்னையில் தங்கியிருந்த்து எப்படி?[7]: பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேர் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கி இருந்து சதி திட்டம் தீட்டியது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்[8]. குண்டு வெடிப்பு குற்றவாளிகள் இருவரும் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது[9]. இது தொடர்பாக 1000 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ள போலீசார் இருவரும் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள்? என்பது பற்றிய தகவல்களை ரகசியமாக திரட்டி வைத்துள்ளனர்[10]. ஒருமாதம் தங்கியிருந்து ஊரைச் சுற்றி வந்திருக்கிறார்கள் என்பது சாதாரணமான விசயம் அல்ல. அதாவது, இங்கு பிரச்சினை இல்லை, ஆதரவாளர்கள் இருக்கிறார்கள், பாதுகாப்புடன் வேலைகளை செய்யலாம் என்ற நிலையறிந்து தான் செய்துள்ளனர்.
![](https://islamindia.wordpress.com/wp-content/uploads/2024/06/nia-raid-at-12-locations-in-tamilnadu-makkalkural-30-06-2024.jpg?w=965)
தமிழகத்தில் 5 / 10 / 12 இடங்களில் சோதனை[11]: வழக்கம் போல, ஊடக்ச்ங்கள் அரைத்த மாவை அரைத்துள்ளன. எல்லா ஊடக விவரங்களையும் படித்து, தொகுக்கப் பட்டுள்ள விவரங்கள் இவ்வாறு[12]:
- தஞ்சாவூர் அருளானந்த நகர் அருகேயுள்ள குழந்தையம்மாள் நகரில் காதர் சுல்தான் மகனான தனியார் புகைப்பட நிபுணர் அகமது (35) வீடு[13].
- இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் மகன் சலீம் வீட்டிலும்[14].
- சாலியமங்கலத்தில் அப்துல் காதர், முஜிபுர் ரஹ்மான், காதர் மைதீன்
- ஈரோடு பெரியார் நகர் அருகே கருப்பண்ணசாமி கோயில் வீதியில் வசித்து வரும் முகமது இசாக் (40) என்பவர் வீடு..
- ஈரோடு பூந்துறை ரோடு, அசோக் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் வீ
- ஷேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்[15]. ஷேக் தாவூத் மீது கடந்த 2018 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஆயுதங்கள் வைத்திருத்தல், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது, தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு பண பரிவர்த்தனை செய் தது, இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து பயிற்சி அளித்தது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது[16].
- குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கை பகுதியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
- சென்னையில் மண்ணடி விநாயகர் கோவில் தெருவில் ஒரு வீடு.
- மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் ஒரு வீடு.
- திருவல்லிக்கேணியில் லாட்ஜ் ஒன்று
- தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் மின் வாரிய காலனியில் கபீர் அகமது என்பவரது வீடு.
பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?: கோயம்புத்தூர் கேஸ் சிலிண்டர் காரில் வெடித்ததிலிருந்து, பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடித்தது தீவிரவாத செயல்களுக்கு தமிழகத்தில் உள்ளவர் நேரடியாகவோ மறைமுகமாக உதவி வந்துள்ளனர் என்பது சோதனைகள் மூலம் தெரிய வந்தது. இதனால்தான் தொடர்ந்து அவர்கள் சோதனை செய்து வருகிறார்கள். சிலரை கைது செய்யப்பட்ட விசாரணையில் வைத்துள்ளார்கள். இதில் பிரச்சனை என்னவென்றால், இத்தனை பேர்கள் தொடர்ந்து தீவிரவாத செயல்வாதிகளுக்கு உதவ வரும்போது, எப்படி மற்றவர்கள் அதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது தான். ஏனெனில் சாதாரண மனிதர்களாலே சில வேலைகளை யாரிடமும் மறைத்து செய்துவிட முடியாது என்பது மிக கடினமான செயல். இருப்பினும் அவர்கள் அவருடைய செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள். என்பதை கவனிக்கும் பொழுது மிகவும் திகைப்பாக தான் இருக்கிறது. ஒருவேளை அவர்கள் திட்டமிட்ட காரியங்கள் எல்லாம் நடக்கும் அல்லது நடந்து விடும் என்றால், அதன் விளைவே நினைத்து பார்க்கும் மிக பயங்கரமாக உள்ளது. ஆகவே, வருமுன் காப்போம் என்று மற்ற விசயங்களில் பிரசாரம் செய்யும் நிலையில், முதலிய தீவிரவாத செயல்களை தடுத்து, அப்பாவி மக்களை காப்போம் என்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுமக்களும் சந்தேகத்திற்குரிய நபர்கள் இவ்வாறு நடமாடும் பொழுது உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டு,ம் நமக்கு எதற்கு பிரச்சனை என்று பிறந்து விடக்கூடாது
© வேதபிரகாஷ்
30-06-2024
[1] தினமணி, தஞ்சாவூரில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை, Published on: 30 ஜூன் 2024, 10:58 am; Updated on: 30 ஜூன் 2024, 10:58 am.
[2] https://www.dinamani.com/tamilnadu/2024/Jun/30/nia-conducts-raids-in-thanjavur
[3] தினமலர், பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.ஏ., சோதனை, ADDED : ஜூன் 30, 2024 08:35 AM.
[4] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/nia-raid-in-various-districts–/3660988
[5] புதியதலைமுறை, தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உட்பட 12 இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை, Published on: 30 Jun 2024, 8:28 am
[6] https://www.puthiyathalaimurai.com/india/nia-raids-at-12-places-in-tamil-nadu
[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை: இதுதான் காரணமா?, WebDesk, 30 Jun 2024 08:53 IST, புதுப்பிக்கப்பட்டது 30 Jun 2024 08:55 IST.
[8] https://tamil.indianexpress.com/tamilnadu/nia-raid-12-palces-of-tamilnadu-4787067
[9] தமிழ்.இந்து, தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு – ஈரோட்டில் இரு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை, எஸ்.கோவிந்தராஜ், Published : 30 Jun 2024 12:07 PM; Last Updated : 30 Jun 2024 12:07 PM.
[10] https://www.hindutamil.in/news/tamilnadu/1272266-nia-raids-at-two-locations-in-erode.html
[11] மாலைமலர், தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை , Byமாலை மலர்30 ஜூன் 2024 9:13 AM (Updated: 30 ஜூன் 2024 2:02 PM).
[12] https://www.maalaimalar.com/news/state/nia-searches-at-10-locations-across-tn-726385
[13] நக்கீரன், தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 30/06/2024 | Edited on 30/06/2024
[14] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nia-raids-12-places-tamil-nadu
[15] மாலைமலர், தமிழகத்தில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை, Byமாலை மலர்27 மார்ச் 2024 8:53 AM (Updated: 27 மார்ச் 2024 11:37 AM).
[16] https://www.maalaimalar.com/news/state/nia-raid-5-places-in-tn-710027
அண்மைய பின்னூட்டங்கள்