Archive for the ‘வங்கி கணக்கு’ category

போதை மருந்து கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவி, சகோதரர் முதலியோர்களிடம் விசாரணை!

மே 23, 2024

போதை மருந்து கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவி, சகோதரர் முதலியோர்களிடம் விசாரணை!

தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவுக்குப் பிறகு அமலாக்கத் துறை விசாரணை: தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவு (NCB) விசாரணை நடந்து வரும் நிலையில், அமலாக்கத் துறை (ED) சோதனை-விசாரணை தொடர்ந்து வருகிறது. அயல்நாட்டு எச்சரிக்கை மூலம், இக்கும்பல் பிடிபட்டிருப்பதால், அயல்நாட்டு தொடர்புகளும் கண்காணிப்பில் எடுத்து வந்து, அம்பந்த[ப் பட்ட அதிகாரிகள் தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர். வங்கி பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில், ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீமிடம், இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் (ED) விசாரணை நடத்தினர். போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் அடைக்கப்பட்டுள்ளனர்[1]. அவர்கள், சட்ட விரோத பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்[2]. முதலில் ஒத்துழைப்பில்லாமல் இருந்தது என்று சொல்லப் பட்டது. வீட்டிற்கு சீல் வைக்கப் பட்டது, ஒட்டிய அறிக்கை தாயாரால் கிழிக்கப் பட்டது என்றும் செய்திகள் வந்தன. ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானுவிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்[3]. ஆனால், விவரங்கள் தெரியவில்லை.

ஜாபர் சாதிக் சகோதரர் சலீமிடம் விசாரணை: ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானுவிடம் வக்குமூலம் பெற்றப் பிறகு, அதன் அடிப்படையில், ஜாபர் சாதிக், சகோதரரும், வி.சி., முன்னாள் நிர்வாகியுமான முகமது சலீம், 23, என்பவரிடம், நேற்று முன்தினம் [21-05-2024], ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர்[4] என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டாலும், அவையெல்லாம் ரத்தின சுருக்கமாகவே இருக்கின்றன. பணபறிமாற்றம் பற்றிய விவரங்கள் கேட்கப் பட்டது. நேற்றும் [22-05-2024] இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்[5]. அப்போது, வங்கி கணக்கு விபரங்களை சலீம் தாக்கல் செய்தார்[6]. அதில், சந்தேகப்படும்படியான பண பரிவர்த்தனைகள் குறித்து, அதிகாரிகள் கேட்டனர்[7]. வெளிநாடுகளில் இருந்து நன்கொடை என, நிதி அளிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்[8]. அந்த வெளிநாட்டு நபர்கள் யார், சலீமுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு[9], இலங்கையைச் சேர்ந்தவர்களிடம் இருந்தும் சலீமுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ஏன்[10], ஜாபர் சாதிக்குடன் கைதாகி சிறையில் உள்ள சதானந்தம் வங்கி கணக்கிற்கு[11], பணம் அனுப்பி இருப்பது ஏன்[12], அது போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணமா என[13], அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டு, சலீமிடம் வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது[14].

சலீம் கூட்டாளிகளுக்கு நிச்சயமாக சம்பந்தம் இருக்கத்தா செய்யும். இருப்பினும் விவரங்கள் தெரியவில்லை. இவையெல்லாம் எப்படி தமிழகத்தின் மூலம் நடந்தேறியுள்ளது என்று நினைக்கும் பொழுதும் அதிர்ச்சியாக உள்ளது. 15,000 கோடி இந்த போதை மருந்து கடத்தல் வியாபாரத்தில் புழங்குவதாகவும் செய்திகள் வந்துள்ளன. இருப்பினும், தமிழகத்தில், இதைப் பற்றி, சீரியஸாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இன்னும் அரசியல் தான் பேசப் பட்டு வருகிறது. ஆனால், போதை விசயமாக இளைஞர்கள் அடித்துக் கொள்வது, வன்முறையில் ஈடுபடுவது, போன்ற செய்திகள் அதிகமாகிக் கொண்டிருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.

அமீனா பானு மழுப்பலாக பதில் அளித்துள்ளது: அப்போது, ‘உங்கள் கணவர் போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்வது எப்போது தெரியும். வெளிநாடுகளில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு எவ்வளவு தொகை வந்துள்ளது’ என்று கேள்வி எழுப்பி உள்ளனர்[15]. அது பற்றி தனக்கு தெரியாது என அமீனா பானு தெரிவித்துள்ளார்[16]. ‘உங்கள் கணவர் தினமும் வீட்டிற்கு வந்து விடுவாரா’ என்ற கேள்விக்கு, எப்போதாவது தான் வருவார் என்று கூறியுள்ளார். ‘இயக்குனர் அமீருக்கு 3.93 கோடி ரூபாயை உங்கள் கணவர் அனுப்பி உள்ளார். அதற்கான தகவல், ‘வாட்ஸாப்’பில் அழிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஜாபர் சாதிக் சிறையில் அடைக்கப்பட்ட பின் நடந்துள்ளது. ‘இதன் பின்னணியில் நீங்கள் இருப்பதாக சந்தேகம் எழுகிறது’ என, கேட்கப்பட்ட மேலும் பல கேள்விகளுக்கு அமீனா பானு மழுப்பலாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பிறகு, சைபர்-கம்ப்யூட்டர் நிபுணர்களுக்கு அனுப்பப் பட்டு, சோதிக்கப் படுமா, அவர்களது, மின்னணு சாதங்கள் எல்லாம் முறைப்படி சோதிக்கப் படுமா என்றெல்லாம் தெரியவில்லை. இடையிடையே நேரம் கொடுக்கப் படும் நிலையில், அத்தகைய ஆதாரங்களை எல்லாம் அவர்கள் எளிதாக அழித்து விடுவர் என்பது, பெரிய விசயமே இல்லை.

அப்துல் பாஷித் புஹாரிக்குசம்மன்: ஜாபர் சாதிக்கிடம், மார்க்க நெறியாளர் என, இயக்குனர் அமீரால் அறிமுகம் செய்யப்பட்ட அப்துல் பாஷித் புஹாரி என்பவருக்கும் அமலாக்கத் துறை அதிகாரிகள், ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்[17]. இதற்கிடையே, ஜாபர் சாதிக்கின் மற்றொரு சகோதரர் மைதீன், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தில் நடித்தார்[18]. அவர் வாயிலாக, இயக்குனர் அமீருக்கு கோடிக்கணக்கில் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது[19]. அந்த பணமும் போதை பொருள் கடத்தலில் சம்பாதித்தது என, கூறப்படுகிறது[20]. மைதீன் தலைமறைவாக உள்ளார். அவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். இவ்வாறு, பல வேலைகள் தாமதமாகவே சென்றுக் கொண்டிருக்கின்றன. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என்று காலம் / மாதங்கள் சென்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிப்பது: பொதுவாக விசாரணைக்கு அழைக்கப்படுபவர் அலுவலகத்துக்கு சென்றதும் அவர்களை உட்கார வைத்து, சட்டப்படி உள்ள பிரிவுகளை எல்லாம் எடுத்து கூறி விளக்கி வாக்குமூலம் பெறப்படும். அப்பொழுது விசாரிக்கும் அதிகாரிகள் உரிய ஆவணங்கள், மற்ற ஆதாரங்களை காண்பித்து கேள்விகளை கேட்பர், அதற்கு விசாரிக்கப் படுபவர் விளக்கத்தை கொடுப்பார். விசாரணை பொதுவாக சமூகமான முறையில் தான் சென்று கொண்டிருக்கும். சில நேரங்களில், சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்றும் அடம் பிடிக்கின்ற வழக்கம் இருக்கிறது. விசாரணை நடந்த பிறகு, எழுத்து மூலம் வாக்குமூலத்தை பெற்ற பிறகு, அவர் ககையெழுத்து வாங்கப்படும். இரண்டு சாட்சிகளிடமும் கையெழுத்து வாங்கப் படும். அதன் நகலு கொடுக்கப் படும். கொடுத்த வாக்குமூலத்தில் உள்ள விவரங்கள் எல்லாம், நினைத்தால் நிச்சயமாக அந்த நகலை பெற்று அல்லது அவர்களுக்கு சாராம்ம்சங்களை வெளியிடலாம். குறிப்பாக நக்கீரன் போன்ற பெரிய புலி போல வேலை விசாரணை வல்லுனர்கள் மைனமாக இருப்பது வேடிக்கையாக தான் இருக்கிறது.

© வேதபிரகாஷ்

23-05-2024


[1] தினகரன், போதைப்பொருள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் ஜாபர் சாதிக் சகோதரரிடம் 6 மணி நேரம் விசாரணை: அமீனா வாக்குமூலத்தை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை, May 22, 2024, 1:20 am.

[2] https://www.dinakaran.com/narcotics_illegalmoney_transfer_jabersadiq_brother_investigation/

[3] தமிழ்.ஒன்.இந்தியா, ‛‛அமலாக்கத்துறையிடம் ஆஜரான ஜாபர் சாதிக்கின் சகோதரர்’’.. ரூ.2000 கோடி தொடர்பாக தீவிர விசாரணை, By Nantha Kumar R Updated: Tuesday, May 21, 2024, 12:59 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/ed-sends-summon-to-summon-to-jaffer-sadiqs-brother-for-appearing-on-enquiry-today-607457.html

[5] தமிழ்.நியூஸ்.18, போதைப் பொருள் கடத்தல் வழக்கு : ஜாபர் சாதிக் சகோதரரிடம் 3 மணி நேரம் விசாரணை!, FIRST PUBLISHED : MAY 21, 2024, 6:55 PM IST; LAST UPDATED : MAY 21, 2024, 6:55 PM IST.

[6] https://tamil.news18.com/tamil-nadu/jaffer-sadiqs-wife-appears-before-ed-quizzed-for-3-hours-1461549.html

[7] இ.டிவி.பாரத், ஜாபர் சாதிக்கின் சகோதரரிடம் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணை! – Jaffer Sadiq Case, By ETV Bharat Tamil Nadu Team, Published : May 22, 2024, 4:16 PM IST.

[8] https://www.etvbharat.com/ta/!state/chennai-ed-department-is-interrogating-jaffer-sadiq-brother-with-important-documents-in-the-drug-smuggling-case-tns24052204352

[9] தினத்தந்தி, போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை, தினத்தந்தி மே 21, 11:33 pm (Updated: மே 21, 11:3.

[10] https://www.dailythanthi.com/News/State/drug-trafficking-case-enforcement-officials-interrogate-zafar-sadiqs-sister-1106645

[11] மாலைமலர், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கின் தம்பி சலீம் ஆஜர், By Maalaimalar, 21 மே 2024 3:24 PM.

[12] https://www.maalaimalar.com/news/state/jaffer-sadiq-brother-appear-in-ed-office-719526

[13] தினமலர், போதை பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரரிடம் விசாரணை, UPDATED : மே 23, 2024 06:17 AMADDED : மே 23, 2024 01:53 AM,

[14] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-jaffer-sadiq-brother-are-being-investigated-in-the-case-of-drug-smuggling–/3630096

[15] தினமலர், அமீருக்கு ரூ.4 கோடி கொடுத்தீர்களா? ஜாபர் சாதிக் மனைவியிடம் விசாரணை, UPDATED : மே 21, 2024 04:36 AMADDED : மே 21, 2024 04:36 AM

[16] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-did-you-pay-rs-4-crore-to-aamir-interrogation-with-zafar-sadiqs-wife–/3628599

[17] தமிழ்.இந்து, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக ஜாபர் சாதிக் சகோதரரிடமும் அமலாக்க துறை தீவிர விசாரணை, Published : 22 May 2024 06:28 AM; Last Updated : 22 May 2024 06:28 AM.

[18] https://www.hindutamil.in/news/crime/1252028-ed-enquires-jaffer-sadiq-brother.html

[19] புதியதலைமுறை, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: ஜாபர் சாதிக்கின் சகோதரரிடம் அமலாக்கத்துறை விசாரணை, Webteam, Published on: , 21 May 2024, 5:36 pm,

[20] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/ed-investigates-jaffer-sadiq-s-brother-over-illegal-money-transfer-case

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (1)

ஏப்ரல் 14, 2024

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (1)

04-02-2024 முதல் 09-04-2024 வரை நடந்தது என்ன?:  போதை மருந்து விவகாரங்களில் நடவடிக்கைகள் வேகமாக நடக்கின்றனவா அல்லது வேகம் குறைவா போன்றவை நடவடிக்கைகள் வைத்து தீர்மானிக்கலாம்.

04-02-2024 போதை மருந்து தில்லியில் 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

15-02-2024ல் தில்லியில் மூவர் கைது, ஜாபர் சாதிக் தலைமறைவு; லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.

22-02-2024 – படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது.

25-02-2024 – திமுகவில் இருந்து நீக்கப் பட்டது.

26-02-2024 – என்.சி.பி அலுவலத்தில் ஆஜராகும் படி ஆணை.

08-03-2024 – வெள்ளிக்கிழமை – ஜெய்பூர்

பிறகு 09-03-2024 சனிக்கிழமை அன்று ஜாபர் சாதிக் கைது செய்யப் பட்டான்.  ஒரு வாரம்காவல்.

சதானந்தன் கைது

16-03-2024 காவல் செவ்வாய்கிழமை வரை நீட்டிக்கப் பட்டது.

17-03-2024 ஞாயிறு – சென்னைக்கு கொண்டு செல்லுதல்

18-03-2024 திங்கட்கிழமை அன்று காலை விமானம் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டான்.

19-03-2024  செவ்வாய்கிழமை – தில்லிக்குத் திரும்ப அழைத்துச் செல்லப் பட்டான்.

20-03-2024  புதன் கிழமை– 14 நாட்கள் காவல்

02-04-2024 – அமீர் தில்லியில் ஆஜர்.

09-04-2024 – காலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜாபர் சாதிக் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் சோதனை.

போதை மருந்து பிடிபட்ட பிறகு ஜாபர் சாதிக் உட்பட கைது: உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய புகாரில் டெல்லியில் 15-02-2024 அன்று தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கையும் அவரது கூட்டாளியையும் என்சிபி அதிகரிகள் 09-03-2024 அன்று கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை செய்த என்சிபி NCB அதிகாரிகள் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். ஜாபர் சாதிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து ஜாபர் சாதிக்கின் வியாபார பங்குதாரர்கள் முதலியோரும் சோதனைக்கு உட்பட்டனர். விசாரணைக்குப் பிறகு, அது முறைப்படி நடந்தேறி வருகிறது.

02-03-2024 அன்று அமீரிடம் தில்லியில் விசாரணை: முன்னதாக ஜாபர் சாதிக்கின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் 02-04-2024 அன்று சம்மன் அனுப்பினர். அமீருடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் 1-வது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞர்களுடன் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய என்சிபி அதிகாரிகள், வாக்குமூலங்கள் பதிவு செய்துகொண்டதாக தகவல் வெளியாகியது. இதனிடையே, ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தது மற்றும் சட்டவிரோதமாக முதலீடு செய்தது போன்ற விவரங்களை பெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தானாக முன்வந்து வழக்கு ஒன்று பதிவு செய்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான ஆவணங்களைக் கையிலெடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு புறம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அமீர் இடையிடையே அறிக்கை விடுவது ஏன்?: அமீர் இடையிடையே அறிக்கை விடுவது போன்ற செயலையும் கவனிக்கலாம். தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்ற பிறகு, தொடர்ந்து அத்தகைய விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. ஊடகக்காரர்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளாகப் போட்டு வந்துள்ளார்கள். அதாவது, தொடர்ந்து தான் குற்றமற்றவன், அப்பாவி, தன்னை ஏதோ இந்த வழக்கில் சிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன என்று எடுத்துக் காட்டுவது போல இருக்கிறது. சினிமவில் இருப்பதனால், அத்தகைய சினிமா பாணியில் பிரச்சாரம் போல செய்வதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால், போதை மருந்து என்பது மிகவும் சீரியசான விசயம். அனைத்துலக ரீதியில் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் சமாசாரம் இல்லை. எனவே, அப்பாவி வேடம் போடுவதினாலோ அத்தகைய வாத-விவாதங்களை வைப்பதினாலோ தப்பித்துக் கொள்ள முடியாது.        

09-04-2024 அன்று சென்னையில் பல இடங்களில் சோதனை: இந்த நிலையில், திடீரென கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி காலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜாபர் சாதிக் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்[1]. இதில், சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் இல்லத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்[2]. அதுமட்டுமல்லாமல் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீர் வீடு மற்றும் தி நகர் பகுதியில் ராஜன் தெரு உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்[3]. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கும், இயக்குநர் அமீரும் நண்பர்கள் என்பதாலும், போதைப் பொருள் கடத்தலில் ஈட்டிய பணத்தை திரைப்படத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்தாரா என்ற கோணத்திலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியது[4]. அதேபோல், ஜாபர் சாதிக்குடன் சினிமா தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்த கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் இல்லத்திலும், புரசைவாக்கம் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

அமீர் வீடுஅலுவலகங்களில் நடந்த சோதனை: அமீர், “காலையில் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை இரவு 12 மணி வரை சென்றது[5]. சோதனை முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியது[6]. அமலாக்கத்துறை சோதனை முடிந்த அடுத்த நாளே மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் இயக்குநர் அமீர் பங்கேற்றார்[7]. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் அமீர், ரம்ஜான் வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்தார்[8]. அதனைத் தொடர்ந்து பேசிய அமீர், ”11 மணி நேரம் என்.சி.பி விசாரணை நடந்தது உண்மைதான்[9]. வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததும் உண்மை தான்[10]. சோதனை முடிவில் அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர். அது என்ன ஆவணங்கள் என்று அவர்களே சொல்வார்கள். எந்த விசாரணைக்கும் நான் தயார் நிலையில் இருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் என் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை நிரூபிப்பேன். விசாரணை இப்போது நடந்து வருவதால் என்னால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாது. அமலாக்கத்துறை சோதனை இரவு 12 மணிக்குத்தான் முடிந்தது,” என்றார்.

© வேதபிரகாஷ்

13-04-2024


[1] தமிழ்.இந்து, சென்னை | இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை, செய்திப்பிரிவு, Published : 09 Apr 2024 09:13 AM; Last Updated : 09 Apr 2024 09:13 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1228284-chennai-jaffar-sathik-director-ameer-houses-raided-by-ed-1.html

[3] இடிவி.பாரத், ஜாபர் சாதிக் வழக்கு விவகாரம்; இயக்குனர் அமீர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலக்காத்துறை சோதனை – ED Raid In Chennai Ameer House, Published : Apr 9, 2024, 9:15 AM IST.

[4] https://www.etvbharat.com/ta/!state/enforcement-directorate-raids-in-chennai-including-house-of-director-ameer-regards-jaffer-sadiq-drug-smuggling-case-tns24040900907

[5] நக்கீரன், நள்ளிரவு வரை நடந்த ரெய்டுசிக்கலில் அமீர், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 11/04/2024 | Edited on 11/04/2024.

[6] https://www.nakkheeran.in/cinema/cinema-news/ameer-about-ed-raid-and-ncb-investigation-regards-jaffer-sadiq

[7] விகடன், NCB- தொடர்ந்து ED: ஜாபர் சாதிக், அமீர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!, எஸ்.மகேஷ்- வெ.நரேஷ் குமார்,,Published:09 Apr 2024 3 PM; Updated:09 Apr 2024 3 PM.

[8] https://www.vikatan.com/crime/ed-raid-on-jaffer-sadiq-and-director-ameer-house-and-office-in-chennai

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மோடி வரும் அதே நாளில்! அமலாக்கத்துறை ரெய்டு.. ஜாபர் சாதிக் டூ அமீர் டூ புகாரி! நூல் பிடித்து போன ஈடி, By Shyamsundar I Published: Tuesday, April 9, 2024, 8:03.

[10] https://tamil.oneindia.com/news/chennai/ed-raids-in-buhari-hotel-ameer-house-in-chennai-linked-to-jaffarsadiq-ncb-case-597017.html