வேதபிரகாஷ் vs சிராஜ்
வேதபிரகாஷ் vs சிராஜ்
தற்செயலாக, கீழ்கண்ட தளத்தை கூகுள் தேடல் மூலம் 01-12-2009 அன்று காண நேர்ந்தது:
http://islamicparadise.wordpress.com/எ ன்-இந்தியா/வேதபிரகாஷ்-vs-சிராஜ்/
இந்த சிராஜ் என்பவர், முன்பு மின்தமிழ் என்ற குழுவில் விவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்.
https://islamindia.wordpress.com/2009/11/04/வந்தே-மத-அடிப்படை/
அதையே,மின்தமிழ் குழுவிலும் பதிவு செய்தேன்:
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/de357be6aea803a4/64fa5ae1fd72ac2a?q
அந்த எழுச்சிமிக்க தேசியப்பாடலின் விவாதத்தில், திடீரென்று 10-11-2009 அன்று நுழைந்து ஒரு முஸ்லீம் என்ற தோரனையிலேயே அனைவரையும் குறிப்பிட்ட வார்த்தைகள் மூலம் மிரட்ட ஆரம்பித்தார்.
இதனால், மற்றவர் இவரைக் கண்டிக்க ஆரம்பித்தனர். விவாதம் சூடேறியது.
அந்நிலையில், இருகுழுக்களுக்கும் இடையில் நடக்கும் விவாதத்தை பொதுவாக ஒரு உரையாடலாக மாற்றாலாமே என்று நான், கீழ்கண்டவாறு 10-11-2009 அன்று பதிவு செய்தேன்:
நண்பர்களே, வணக்கம்.
ஆண்டவனின் மகிமையால் அனைவருக்கும் சாந்தியும், அன்பும், சந்தோஷமும் நிலவுவதாக! 1. “எனைத் தவிர வேறு தெய்வம் இந்த உலகத்தில் இல்லை” என்கிறது ஒரு தெய்வம்! [நான்தான் வேதபிரகாஷ் எனும்போது, நான் அவ்வாறெல்லம் சொல்லமாட்டேன். சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எனக்குத் தெரியும், நான்தான் இந்த உலகத்தில் வேதபிரகாஷ் என்று]. 2. தெய்வத்திற்கு, தான் தான் தெய்வம் என்றால், எப்படி அந்த தெய்வத்திற்கு மற்ற தெய்வங்கள் இருப்பது தெரியும்? 3. அதுமட்டுமா? “என்னைத் தவிர மேலேயோ, கீழேயோ…………….இல்லை……..”, என்றெல்லாம் ஒரு தெய்வம் சொல்கிறதென்றால், அத்தகைய நிலை, உண்மை தெய்வத்திற்கு இருக்காது. 4. எனவே தெய்வத்திற்கேத் தெரிகிறது போலும், மற்ற தெய்வங்கள் இருப்பது! 5. பிறகு தெய்வத்தை விட்டு, மனிதன் நிலைக்கு வந்தால், அவன் அத்தெய்வத்திற்கு பெயர் வைக்க ஆரம்பிக்கிறான். 6. நான் சொன்ன பெயரில் உள்ளதுதான் தெய்வம், மற்றபெயர்களில் இருப்பதெல்லாம் தெய்வம் இல்லை என்று மனித சண்டை ஆரம்பித்துவிடுகிறது! தெய்வத்திற்கு பெயரிடும்போதும் சண்டைதான்! 7. அத்தகைய ஆணவம் மேன்மேலும் பொங்கியெழும்போது, “என் தெய்வம்தான் தெய்வம், அதுவும் உண்மையான தெய்வம், உனது தெய்வம், தெய்வம் இல்லை”, என்று எக்காளமிட ஆரம்பித்து விடுகிறான் நம்பிக்கையாளான பக்தன்! 8. ஆகவே, எப்பொழுது அம்மாதிரி தெய்வத்திற்காக நம்பிக்கையாளர்கள் சண்டைபோடுகிறர்களோ, வேதபிரகாஷ் வேதனைப் படுகிறான். 9. இந்து-முஸ்லிம் உரையாலுக்கு தாராளமாக இங்கே வாருங்கள்: 10. ஆண்டவனின் கிருபையினால் “கடைசி தினம்” வரும் வரை, மரணம் இல்லை. ஆகவே, |
உடனே, சிராஜ் தானாகவே தலைப்பை மாற்றினார்!
|
ஒரு பெரிய பதிலை கொடுத்தார்.
அதற்குள் சிராஜ் மதரீதியில் விவாதத்தைத் தொடர்ந்ததால், அந்த குழுவில் இருப்பவர்கள் அதற்கு பதில் தர விரும்பவில்லை. எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
ஆனால், இவர் மறுபடியும் கீழ்கண்டவாறு ஒரு இழையை ஆரம்பித்தார்:
அதில், “இதில் வேதபிரகாஷ் அவர்களின் போக்கும், ஜடாயு அவர்களின் போக்கும் மிகவும் கேவலமாக இருந்ததால்தான் நான் வாக்குவாதத்தில் ஈடுபட முனைப்பு காட்டியது!” என்று வேறு குறிப்பிட்டார். ஆகையால், அதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதோ அந்த பதில்:
“இதில் வேதபிரகாஷ் அவர்களின் போக்கும், ஜடாயு அவர்களின் போக்கும் மிகவும் கேவலமாக இருந்ததால்தான் நான் வாக்குவாதத்தில் ஈடுபட முனைப்பு காட்டியது!” 1. இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? 2. எங்கு, “அவர்களின் போக்கும் மிகவும் கேவலமாக இருந்ததால்தான்” – 3. உண்மையைச் சொல்லப்போனால், இப்போக்குதான் மிகவும் ஆணவத்துடன் 4. மேலும் அந்த தீதத், ஜகீர் மாதிரி கேட்டக் கேள்விகளுக்கு பதில் 5. இத்தகைய போக்கை யாரும் ஒப்புக் கொள்ளமுடியாது. 6. சொல்லப்போனால், விவாதம் போகும் போக்கை கவனித்துதான், நான் பதில் 7. என்னுடைய மற்றொரு தளத்தைக் கொடுத்து அங்கு விவாதிக்கச் சொன்னேன். 8. இப்பொழுதுகூட, விவாதம் இந்த வலையில் தேவையில்லை என்றால், |
விவாதம் மற்ற நண்பர்களிடையே தொடர்ந்தது. சிராஜின் போக்கு மதப்பிரசார ரீதியில் இருந்ததனால், அவருக்கும் அறிவுரையும் வழங்கப்பட்டது.
16-11-2009 அன்று, “இது மின் தமிழ் மதங்களை பின் தள்ளிவைத்து தமிழ் மட்டும் மின்னுமாறு
பார்த்துகெள்ளாலாமே மதப்பிரச்சாரங்களுக்கு பல குழுமங்கள் இருக்கிறது” என்று விவாதத்தை நிறுத்தினர்!
ஆனால், சிராஜ் எல்லாவற்ரையும் விடுத்து மேற்குறிப்பிட்டபடி, ஒரு “பிளாக்” போட்டிருப்பதைப் பார்த்து, “எப்படி என்னிடம் சொல்லாமல், எனக்கு அறிவிக்காமல், அப்படி பதிவு செய்துள்ளீர்” என்று அவரது “பிளாக்கின் கீழே” 01-12-2009 அன்று ஆங்கிலத்தில் பதிவு செய்தேன். ஆனால், சிராஜ் அதை தடுத்து விட்டார்.
மறுபடியும், 02-12-2009 அன்று கேட்டேன். பதில் இல்லை!
வேதபிரகாஷ் V சிராஜ்
What happened? Yesterday, I posted a response here, but you do not publish? What is this? Is this your way of conducting dialogue? 02-12-2009 |
ஆகவே, இங்கு இவ்விவரங்களை பதிவு செய்கிறேன்.
Explore posts in the same categories: இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இஸ்லாமும் இந்தியாவும், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், மத-அடிப்படைவாதம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், வந்தே மாதரம், வந்தே மாதரம் எதிர்ப்பது, Uncategorized
திசெம்பர் 4, 2009 இல் 7:19 முப
இது வேடிக்கையாக இருக்கிறது.
தேசியகீதத்தை எதிர்ப்பவர்கள், தாங்கள் இந்தியநாட்டுக் குடிமகன்களாக இருப்பதைவிட, முகமதியர்களாகத் தான், தங்களை அடையாளம் கண்டு, அவ்வாறே தகராறு செய்வோம் சென்றால் என்ன்?
தனது கடவுள் தான் உர்யர்ந்தது என்பது போல வாதிப்பது, எந்ட முடிவிற்கும் வரமுடியாது.
திசெம்பர் 5, 2009 இல் 7:41 முப
These guys have no guts, but just blut out their brainwashed udeasd in a stereotyped way.
They cannot srgue intellectually, but to resort to violence and terrorism.
Therefore, as pointed out aboove, it is waste f time, unless, he comes to argue entering into a “dialogue”, as you expect!
ஜனவரி 14, 2010 இல் 11:04 முப
இன்று விடுமுறையாதலால், கூகிளில் “வேதபிரகாஷ்” என்று வேடிக்கையாகத் தேடிக் கொண்டிருந்தேன்!
அப்பொழுது, “ஷைத்தானின்” என்ற வார்த்தை ஒரு படத்தின் கீழ் இருந்தது.
அதனை கிளிக் செய்தால், இந்து மற்றும் முஸ்லீம்களின் சில பழக்க-வழக்கங்கள் குறித்த ஒப்பீட்டு விமர்சனம் இருந்தது.
வலது பக்கத்தில், “வேதபிரகாஷ் Vs. சிராஜ்” என்றிருந்தது!
நிறைய நாட்கள் ஆயிற்றே என்று கிளிக் செய்து பார்த்தேன்.
பழைய பதிவிலேயே, இப்படியோரு பதில் இருக்கிறது:
——————————————————————————-
பதில் கொடுத்தது – சிராஜ் அப்துல்லாஹ்
குறிப்பு
நீங்கள் படித்த மேலே கண்ட ஆன்லைன் கூகுல் விவாதம் மின்தமிழ் கூகுல் குழுமத்தில நடைபெற்றது அங்கு இஸ்லாத்தை பற்றி விமர்சனங்களுக்கு பதில் பதிக்க தடைவிதிக்கப்பட்டு மேலும் எனக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டது மின்தமிழ் குழும மாடரேட்டரின் உத்திரவுக்கு கட்டுப்பட்டு நானும் கண்ணியம் கருதி வெளியேறிவிட்டேன். ஆனால் என்னுடைய இந்த சொந்த தளத்தில் அந்த விவாதத்தினை பதிப்பதற்கு எனக்கு முழு உரிமையும் உள்ளது அதன் அடிப்படையில் இதை இங்கு நான் பதித்துள்ளேன். இந்த விவாதத்தில் என்னுடன் விவாதித்தில் ஈடுபட்ட என்னுடைய கண்ணியமிக்க மாற்று மத சகோதரர் வேதபிரகாஷ் தற்செயலாக இந்த தளத்தில் பதிக்கப்பட்ட மேற்கண்ட விவாதத்தை படித்திருக்கிறார் உடனே இங்கேயும் தன் விமர்சனம் எழுத முற்பட்டார் ஆனால் அதை நான் ஏற்கவில்லை காரணம் இது என் தளம் எனக்கு ஏற்கும் உரிமையும் நிராகரிக்கும் உரிமையும் உள்ளது. மேலும் குழுமத்தைவிட்டு வெளியேறிய பின் மாற்றுமதத்தை சேர்ந்த ஒரு சகோதரர் (வேதபிரகாஷின்) வேண்டாத விதண்டாவாத கேள்விகளுக்காக என்னுடைய இந்த வளைத்தளத்தில் சண்டையிட்டு இஸ்லாத்தை பற்றி ஓரளவு அறிந்துவைத்துள்ள கண்ணியமுள்ள எனது மற்ற மற்ற மாற்றுமத்தவர்களின் மன வருத்தை பெற வேண்டாம் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பதில் தவிர்த்துள்ளேன்
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது தமிழ் பழமொழி எனவே சகோ. வேதபிரகஸுக்கு பதில் கொடுத்தபின்னரும் அதையே திரும்ப திரும்ப கூறவேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை! நான் மார்க்கத்தை தெளிவாக எத்திவைத்துவிட்டேன் அதற்கு மின்தமிழ் குழுமத்தில் உள்ள 800 தமிழ் உறுப்பினர்கள் சாட்சிகளாக உள்ளனர், அல்லாஹ்வும் சாட்சியாக உள்ளான்!
இது என்னுடைய தளம் இங்கு என்னை திட்டக்கூடிய வசைபாடக்கூடிய சகோதரர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் மாற்றுமதத்தினராக இருந்தாலும் ஏன் இந்து FRONT போன்ற மதவாதிகளாக இருந்தாலும் அவர்களின் கண்ணியம் காக்கப்படும் ஆனால் இஸ்லாத்தின் பெயருக்கோ, உரிமைக்கோ பங்கம் விளைவிக்க நினைனப்பவர்களுக்கு (இறைவன் நாடினால்) சரியான பதில் கொடுக்கப்படும்! நானாக முன்வந்து பிறரை இகழமாட்டேன் என் மார்க்கத்தை இகழ்ந்தல் அல்லாஹ்வின் மீதாணையாக பதில் அளிக்க தவறமாட்டேன்!
எனது கண்ணியமிக்க மாற்றுமத சகோதரர்களே இந்த தளத்தில் கேள்விகளுக்கு பதில்கள்தான் பதிக்கப்பட்டுள்ளதே தவிர உலகில் உள்ள மதங்கங்களுக்கு கண்ணியக்குறைவாக விமர்சனம் இடம் பெறவில்லை (என்னுடைய மார்க்கத்தை மாற்று மதத்தவர்களால் இழிவுபடுத்தி பேசும்போது அதை எதிர்த்து குரள் கொடுக்கும் விதமாக மாற்றுமததை பற்றி விமர்சனம் கொடுத்ளேனே தவிர வேண்டுமென்றே கண்ணியமுள்ள மாற்றுமதத்தவர்களின் மனக்கசப்பை தூண்டுவதற்காக மாற்றுமதத்தின் மீது விமர்சனம் செய்யவில்லை – நம்முடைய உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான்) என்பது அனைவரும் அறிந்துக்கொள்ளுங்கள்.
ஆனால் கண்ணியமுள்ள என் அருமை சகோதரர் தனது இஸ்லாம்-இந்தியா வளைத்தளத்தில் இஸ்லாத்தை வேண்டுமென்றே கண்ணியக்குறைவான விமர்சனங்களை எழுதி வருகிறார் இது உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கட்டும்! தமிழர்களாகிய நீங்கள் நடுநிலையாளர்களாக இருந்தால் கண்ணியம் கருதி அவருக்கு அறிவுரை கூறுங்கள்!
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!
———————————————————————————-
1. இந்த விவாதத்தில் என்னுடன் விவாதித்தில் ஈடுபட்ட என்னுடைய கண்ணியமிக்க மாற்று மத சகோதரர் வேதபிரகாஷ் தற்செயலாக இந்த தளத்தில் பதிக்கப்பட்ட மேற்கண்ட விவாதத்தை படித்திருக்கிறார் – உண்மை!
2. உடனே இங்கேயும் தன் விமர்சனம் எழுத முற்பட்டார் –
ஆமாம்.
3. ஆனால் அதை நான் ஏற்கவில்லை –
ஆச்சரியம் தான்!
4. காரணம் இது என் தளம் –
இருக்கட்டும் (எல்லமே ஆண்டவனுடையது எனும்போது எப்படி என்னுடையது என்று வருகிறது)!
5. எனக்கு ஏற்கும் உரிமையும் நிராகரிக்கும் உரிமையும் உள்ளது –
[ஆண்டவனைப் போல!].சந்தோஷம்!
6. மேலும் குழுமத்தைவிட்டு வெளியேறிய பின் மாற்றுமதத்தை சேர்ந்த ஒரு சகோதரர் (வேதபிரகாஷின்) வேண்டாத விதண்டாவாத கேள்விகளுக்காக என்னுடைய இந்த வளைத்தளத்தில் சண்டையிட்டு இஸ்லாத்தை பற்றி ஓரளவு அறிந்துவைத்துள்ள கண்ணியமுள்ள எனது மற்ற மற்ற மாற்றுமத்தவர்களின் மன வருத்தை பெற வேண்டாம் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பதில் தவிர்த்துள்ளேன் –
*உரையாடலைத் தவிர்த்த பிறகு,
*வேண்டாத
*விதண்டாவாத
*கேள்விகளுக்காக
*என்னுடைய இந்த வளைத்தளத்தில்
*சண்டையிட்டு
*இஸ்லாத்தை பற்றி ஓரளவு அறிந்துவைத்துள்ள
*கண்ணியமுள்ள எனது மற்ற
*மற்ற மாற்றுமத்தவர்களின் மன வருத்தை பெற வேண்டாம் –
என்றேல்லாம் அடுக்குவது ஏனோ? அத்தகைய விமர்சனமும் தேவையில்லையே? [ஏனெனில், ஏற்கெனவே தீர்மானம் செய்தாகிவிட்டது]
7. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது தமிழ் பழமொழி எனவே சகோ. வேதபிரகஸுக்கு பதில் கொடுத்தபின்னரும் அதையே திரும்ப திரும்ப கூறவேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை! –
இத்தகைய ஒருதலை வாதங்கள் எதனைக் காட்டுகின்றன?
8. நான் மார்க்கத்தை தெளிவாக எத்திவைத்துவிட்டேன் அதற்கு மின்தமிழ் குழுமத்தில் உள்ள 800 தமிழ் உறுப்பினர்கள் சாட்சிகளாக உள்ளனர், அல்லாஹ்வும் சாட்சியாக உள்ளான்!-
நிச்சயமாக.
9. இது என்னுடைய தளம் இங்கு என்னை திட்டக்கூடிய வசைபாடக்கூடிய சகோதரர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் மாற்றுமதத்தினராக இருந்தாலும் ஏன் இந்து FRONT போன்ற மதவாதிகளாக இருந்தாலும் அவர்களின் கண்ணியம் காக்கப்படும் ஆனால் இஸ்லாத்தின் பெயருக்கோ, உரிமைக்கோ பங்கம் விளைவிக்க நினைனப்பவர்களுக்கு (இறைவன் நாடினால்) சரியான பதில் கொடுக்கப்படும்! –
தாராளமாக, இறைவனின் பெயரில் நடக்கும் விவாதங்களில் ஆண்டவன் பெயரிலேயே உரையாடல் நடக்கும்போது, கடவுள் இருக்கத்தான் செய்கிறான். அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்! எனவே எந்த நம்பிக்கையாளனும் ஆண்டவனின் பதிலுக்குப் பயப்பட வேண்டியதில்லை!
10. நானாக முன்வந்து பிறரை இகழமாட்டேன் என் மார்க்கத்தை இகழ்ந்தல் அல்லாஹ்வின் மீதாணையாக பதில் அளிக்க தவறமாட்டேன்! –
எல்லோரும் அப்படித்தான்!
11. எனது கண்ணியமிக்க மாற்றுமத சகோதரர்களே இந்த தளத்தில் கேள்விகளுக்கு பதில்கள்தான் பதிக்கப்பட்டுள்ளதே தவிர உலகில் உள்ள மதங்கங்களுக்கு கண்ணியக்குறைவாக விமர்சனம் இடம் பெறவில்லை (என்னுடைய மார்க்கத்தை மாற்று மதத்தவர்களால் இழிவுபடுத்தி பேசும்போது அதை எதிர்த்து குரள் கொடுக்கும் விதமாக மாற்றுமததை பற்றி விமர்சனம் கொடுத்ளேனே தவிர வேண்டுமென்றே கண்ணியமுள்ள மாற்றுமதத்தவர்களின் மனக்கசப்பை தூண்டுவதற்காக மாற்றுமதத்தின் மீது விமர்சனம் செய்யவில்லை – நம்முடைய உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான்) என்பது அனைவரும் அறிந்துக்கொள்ளுங்கள் –
நண்பரே – “சாத்தானின்” – என்பதின் கீழ் கண்டதால்தான், நான் பார்க்க நேரிட்டது.
உமது நம்பிக்கையாளர்கள் –
* சந்தனக்கூடு
* கொடிமரம்
* சமாதி வழிபாடு
* அவ்லியாக்களுக்கு நேர்ச்சை
* கப்ரை உயர்த்திக் கட்டுதல்
* தஸ்பீஹ் மணி உருட்டுதல்
* மவ்லூது பாடல்கள்
* கவ்வாலி இசைக்கச்சேரிகள்
* உரூஸ் உண்டியல்
* யானை குதிரை ஊர்வலங்கள்
* பிறந்த நாள் விழா எடுப்பது
* இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்
* வட்டி வாங்குதல்
* வரதட்சணை பிடுங்குதல்
* ஜோதிட நம்பிக்கை
* கருமணி தாலி கட்டுதல்
* வாழைமரம் நடுதல்
* ஆண்கள் தங்கம் அணிவது
* மஞ்சள் நீராட்டுவிழா
* சுன்னத் கத்னா திருவிழா
இதெல்லாம் செய்கின்றனர் என்றால், அவர்களை மாற்றுங்கள்.
அதைவிடுத்து, மற்ற மதக்காரர்களின் படங்களை போட்டு, ஏன் ஒப்பீடு செய்கிறீர்கள்? “சாத்தான்” பிரயோகம் எதனைக் காட்டுகிறது?
12. ஆனால் கண்ணியமுள்ள என் அருமை சகோதரர் தனது இஸ்லாம்-இந்தியா வளைத்தளத்தில் இஸ்லாத்தை வேண்டுமென்றே கண்ணியக்குறைவான விமர்சனங்களை எழுதி வருகிறார் –
இல்லை, அது பொதுப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
நம்பிக்கையுள்ள நான் எந்த கடவுளையும் மதிப்பேன். இதில் பிரச்சினையே இல்லை.
13. இது உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கட்டும்! தமிழர்களாகிய நீங்கள் நடுநிலையாளர்களாக இருந்தால் கண்ணியம் கருதி அவருக்கு அறிவுரை கூறுங்கள்! –
நிச்சயமாக.
14. முதலில் உங்களுக்கு இவ்வளவு ஆணவம் இருப்பது வியப்பாக உள்ளது. அடுத்தவர் மீது குறைகூறும் போது, உமது குறைகளைக் கவனித்துக் கொள்ளுங்கள் [குரானிலும் இத்தகைய அறிவுரை இருக்குமே!].
15. அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக! – நிச்சயமாக!
வரவேற்கிறேன்!
இந்திய நாட்டில், எல்லோரும் இந்தியர்கள் என்ற நிலையில் இருக்க வேண்டும். அப்படியிருக்கும் பட்சத்தில், எந்த பிரச்சினையும் இல்லையே?