Posted tagged ‘ஸபானா’

மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்!

மே 2, 2010

மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்!

மொஹம்மது மௌதூத் கான் (Mohammed Maodood Ahmed Khan) தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டான், “நான் கிருத்துவர்களுக்கு ஏசு கிருஸ்து; இந்துக்களுக்கு சிவா; முஸ்லீம்களுக்கு மஸிஹா. நான் உலகத்தைக் காப்பாற்றி இருப்பேன்“, என்றெல்லாம் சொன்னனாம், அவன் மார்ச் 8ம் தேதி 2010 கைது செய்யப் பட்டபோது!

முஹம்மது கான் / அஹமது கான் தனது மனைகள் – தேவதைகள் – காயத்ரி, சதி, பார்வதி, கங்கா, துர்கா மற்றும் மஹாகாளி என்றானாம். அனால், உண்மையில்

1. இவனது முதல் மனைவி நஜ்மா ஃபாதிமா ஆவாள், அவளுடன் ரியாதில் வாழ்ந்து வந்தானாம்.

2, இரண்டாவது மனைவி காயத்ரி தேவி, பத்தே நாட்களில் ஓடிவிட்டாளாம்.

3. சஜிதா என்ற மூன்றாவது மனைவி பதினான்கு நாட்கள் இருந்தாளாம். அந்த  குருகிய காலத்திலேயே முகல் ரெஸிடன்ஸி என்ற இடத்தில் இருந்த அடுக்கு மாடி வீட்டை தனது பெயரில் எழுதி வாங்கிக் கொண்டானாம்.

4. நான்காவது மனைவி சும்ரனா. அவள் இவன் கொடுமை தாங்காமலேயே இறந்து விட்டாளாம்.

5. ஐந்தாவது மனைவு தஸீன் மட்டும் இவனுடனே இருக்கிறாளாம்.

6. ஆறாவது மனைவி ஸபானா, இவன் அவளை கொலை செய்ய முயற்சித்தபோது தப்பித்து ஓடிவிட்டாளாம்.

இவ்வாறு, இவன் பணக்காரப் பெண்களாகத் தேர்ந்தெடுத்து, பல லட்சங்களை சுருட்டிக் கொண்டு மறைந்து விடுவானாம்.

போலீஸ் சொல்வது என்னவென்றால், “ஏமாற்றுவேலைகளுக்காக இந்த கான் பல தடவை கைது செய்யப் ப்ட்டிருக்கிறான். பஞ்சாபில் கடியனா போலீஸாரால், மத ஒற்றுமை குளைக்கும் விதத்தில் பேசியதற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான். அவன் ஆறு பெண்களை மணந்து கொண்டு ஒன்பது கொழந்தைகளைப் பெற்றெடுத்து இருக்கிறான். ஆனால், எல்லா மனைவிகளும் இவனை விட்டு ஓடிபோய் விட்டனராம்“. அவனுடைய டார்ச்சர் / கொடுமை தாங்க முடியவில்லை என்று ஓடினராம்.

வெஸ்லி என்பவரின் கூற்றுப்படி, “ஜெயிலிலிருந்துவெளியே வந்த பிறகும் அதே மாதிரியான வேலைகளை மறுபடியும் செய்து வந்தானாம்“.

சில மாதங்களுக்கு முன்பாக, எம். ஜே. மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த  யாஸ்மீன் என்ற டாக்டரிடமிருந்து, ஒரு கிலோ எடையுள்ள தங்கநகைகளைத் திருட்டுத்தனமாக கவர்ந்துள்ளானாம். அது தவிர தனக்காக ஒரு மனையை ரரூ.25 லட்சங்களுக்குப் பதிவு செய்துத் தரச் சொல்லியுள்ளான்.

இதே மாதிரி பஸீர்பாக்கைச் சேர்ந்த லதா என்ற பெண்மணியிடமிருந்து ரூ. ஆறு லட்சம் அபகரித்துள்ளான். பிறகு புகார் பேரில் அவன்  மார்ச் 8ம் தேதி சிறப்புப் போலீஸ் பிரிவால் பிடிபட்டான்.

ஆகமொத்தம், இவன் நிச்சயமாக செக்ஸ் மற்றும் பணத்திற்காகத் தான் இவ்வாறு சாமியார் வேடம் போட்டு திரிந்துள்ளான் எனத் தெரிகின்றது. ஆனால், ஊடகங்கள் ஏன் மௌனமாக இருந்தன, இப்பொழுது லேசாக வெளிவிடுகின்றன என்று புரியவில்லை.