இஸ்லாம், மதமாற்றம், பலதார திருமணம் – பாதிக்கப் படுவது பெண்களே, குறிப்பாக இந்துப் பெண்களே.
முஸ்லிம்கள் தாஜா செய்யப் பட்டு வந்தது (1947-1985): நாங்கள் இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்படமாட்டோம், எங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது, என்ற ரீதியில் முஸ்லிம்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர். இந்திய முஸ்லிம்கள் விடுதலைப் பெற்ற பின்னரும், அதாவது பாகிஸ்தான் மதரீதியில் உருவானப் பிறகும், “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” என்று கலாட்டா, ஆர்பாட்டம், போராட்டம், கலவரம் என்று செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். 1947 முதல் 1964 வரை நேரு காலத்தில் செல்லப்பிள்ளைகளாக நடத்தப் பட்டனர். 1984 வரை, அதாவது இந்திரா பிரியதர்சினி நேரு காலம்வரை ஓரளவிற்கு மாறுபட்டனர் எனலாம். சஞ்சய் காந்தி முஸ்லிம்களுக்கும் கருத்தடை / குடும்பக்கட்டுப் பாடு ஆபரேஷனை வலுக்கட்டாயமாக செய்வித்தார் என்ற புகாரும் / சர்ச்சையும் இருந்தது[1]. ஆனால், ராகுல் கந்தி பதவிக்கு வந்தவுடன், முகமதியர் தறிக்கெட்டு நடக்க ஆரம்பித்தனர் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. 1980ல் தில்லி இமாம் அப்துல்லா புகாரி “ஆதம் சேனா” என்று ஆரம்பித்து, மதவாதத்தைத் தூண்டி விட்டார்[2]. 1985ல் ஷா பானு வழக்குப் பெரியப் பிரச்சினையை ஏற்படுத்தியது[3]. சையது சஹாப்புத்தீன், ஆரிப் முகமது கான், அப்துல்லா புகாரி என அனைவரும் தாம் தான் இஸ்லாத்தைக் காக்கப் போகிறேன் என்பது போல செயல்பட்டு குடும்பச் சட்டங்களை சீர்குலைத்தனர் எனலாம். ஷா பானு வழக்கு இவர்களின் முகத்திரையைக் கிழித்தது, அவரவர் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அளவுகளையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டின.
மொஹம்மதுஅஹமதுகானின்நிக்காஹ்வும், தலாக்கும், மெஹர்பிரச்சினையும் (1985)[4]: மொஹம்மது அஹமது கான் என்பவர் ஷா பானுவை 1932ல் நிக்காஹ் செய்து கொண்டார். வக்கீலாக இருந்த இவர், ஷா பானு மூலம் இரண்டு மகள்களையும் பெற்றெடுத்துக் கொண்டார். சுமார் 46 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை நடத்திய இவர், திடீரென்று 1978ல் வீட்டைவிட்டுத் துரத்தி விட்டாராம். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர் ஒரு போலீஸ் கான்ஸ்டேபிளின் மகளும் ஆவார். பிறகு 06-11-1978 அன்று தலாக் / விவாகரத்து செய்து விட்டாராம். இதனால் வேறு வழியில்லாமல் மெஹர் என்று சொல்லப்படக் கூடிய ஜீவனாம்சத் தொகையான ரூ 500 பிரதி மாதமும் அளிக்கப்படவேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார். இந்திய குற்றவியல் சட்டமுறையின் பிரிவு 125ன் கீழ் இத்தொகை கேட்கப்பட்டது. கீழ்கோர்ட் அளித்தது, ஆனால், மொஹம்மது அஹமது கான் மேல்முறையீடு செய்தார். உச்சநீதி மன்றத்தில் மொஹம்மது அஹமது கானின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது, ஷா பானுவிற்கு அப்பணம் கொடுக்கப் படவேண்டும் என்றாகியது. ஆனால், முஸ்லிம்கள் இதனை வயதான மூதாட்டிக்கு கிடைத்த வெற்றியாகக் கருதவில்லை, மாறாக முஸ்லிம்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளில் நுழைவதாக கொத்தித்தனர்.
“இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” என்ற போராட்டமும், முஸ்லிமளுக்கு தனிசட்டம் உருவான விதமும் (1985-87): முஸ்லிம் இயக்கங்கள் உடனே இதனை “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” என்று திசைத்திருப்பி கலாட்டா, ஆர்பாட்டம், போராட்டம், கலவரம் என்று ஆரம்பித்தன. உச்சநீதிமன்றம் தனது எல்லைகளைக் கடந்து முஸ்லிம் சட்டத்திற்குள் நுழைந்து தீர்ப்பளித்துள்ளது, இது அவர்களது மதஉரிமைகளை மீறும் செயலாகும் என்று கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். தில்லி மசூதி இமாம் புகாரி, உச்சநீதிமன்ற நீதிபதிகளை இழிவாகப் பேசி, அவர்களது கால்களை உடைக்க வேண்டும் என்று பேசினார், வசைபாடினார். இதனால், பேசிய அவர், செய்தியை வெளீயிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலியவற்றின் மீது வழக்குகள் தொடரப்பட்டன. நீதிமன்ற அவதூறு குற்றத்திற்காக வழக்குகள் தொடரப்பட்டு, உயர்நீதி மன்றங்கள் கைது செய்ய வாரண்டையும் பிறப்பித்தது. ஆனால், அவர் இறக்கும் 2009 – வரை கைது செய்யப் படவில்லை. நீதிபதிகளின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதனால், முஸ்லிம்களை தாஜா செய்ய சட்டத்தை மாற்றி, முஸ்லிம்களுக்கு என்று தனியாக 1986லேயே ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. அதுதான் முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகளைக் காக்கும்) சட்டம், 1986 என்ற பெயரில் 19-05-1986 அன்று நிறைவெற்றப்பட்டது.
முஸ்லிம் பெண்கள் உரிமைகளில் மிதவாத–அடிப்படைவாத முஸ்லிம்களின் போராட்டங்கள் (1987-88): அதாவது, முஸ்லிம்களுக்கு மற்ற பெண்களைப் போன்று பொதுசட்டம் பொறுந்தாது. தலாக் செய்யப்பட்ட பெண்களுக்கு என்ன ஜீவனாம்சம் கொடுக்கலாம் அல்லது கூடாது என்பதெல்லாம் பற்றி யாரும் கேட்கமுடியாது. அது முஸ்லிம் சட்டத்திலேயே தீர்மானிக்கப்படும். சையது சஹாப்புத்தீன், ஆரிப் முகமது கான், அப்துல்லா புகாரி என அனைவரும் தாம் தான் இஸ்லாத்தைக் காக்கப் போகிறேன் என்பது போல செயல்பட்டு இவ்விசயத்தில் குழப்பத்தை உண்டாக்கினர். இவ்வாறு முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம் என்ற பெயரில் அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டன என்று மிதவாத முஸ்லிம்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டனர். ஆனால், அடிப்படைவாத முஸ்லிம்கள் தாம் வெற்றிப் பெற்றனர், மற்ற முஸ்லிம்கள் அடங்கிவிட்டனர், அடக்கப்பட்டனர். 1988ல் இந்தியா முதலாக சல்மான் ருஷ்டியின் “சாத்தானிக் வெர்சஸ்” என்ற புத்தகத்தைத் தடை செய்தது. இது அயத்துல்லா கோமேனி என்ற இரானிய மதத்ததலைவர் பத்வா போடுவதற்கு முன்பே செய்யப்பட்ட செயலாகும்.
ஜம்மு–காஷ்மீர் தீவிரவாத மாதிரி செயல்கள் இந்து பெண்களைப் பாதித்த விதம் (1985-95): 1985-1995 காலகட்டத்தில் அடிப்படைவாத முஸ்லிம்களின் செயல்கள் தீவிரவாத செயல்களாகவும் மாறின. ஜகன் மோஹன் கவர்னராக இருந்தபோது, ஓரளவிற்கு கட்டுல்க்குள் இருந்தது. ஆனால், 1990 இமாம் புகாரி வி.பி.சிங்கை வற்புறுத்தி அவரை நீக்கச் செய்தார்[5]. இதனால், இஸ்லாமிய தீவிரவாதம் கட்டவுழ்த்து விடப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து இந்துக்கள் ஈவு-இரக்கமின்றி வெளியேற்றப்பட்டனர். அதாவது, முஸ்லிம்களாக மாறுங்கள், இல்லை வெளியேறுங்கள் என்று ஜிஹாதிகள், இந்துக்களை மிரட்டினர், தாக்கினர், துன்புறுத்தினர், கொலை செய்யவும் ஆரம்பித்தனர். இவ்வாறான வெளிப்படையான தீவிரவாதம் கட்டவிழ்க்கப் பட்டதால், லட்சக் கணக்கான இந்துக்கள் வெளியேறினர்; பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் – கொல்லப்பட்டனர், பெண்கள் கற்பழிக்கப் பட்டனர். காஷ்மீர இந்து பெண்கள் மற்ற மாநில ஆண்களைத் திருமணம் செய்து கொண்டால், சொத்துரிமை கிடையாது என்றும் மிரட்டினர். அதாவது, இம்மாநிலம் இந்து பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் ஷரீயத்தை அமல்படுத்த ஆரம்பித்தது. ஆனால், இஸ்லாம் சட்டத்தில் முஸ்லிம் பெண்களும் மாற்றமடையவில்லை. மாறாக, தற்கொலைப் படையில் சேர்ந்து குண்டுகளாக மாறினர்.
ஜம்மு–காஷ்மீர் மாநில மாதிரி மற்ற மாநிலங்களுக்குப் பரவிய வீதம் (1995-2002): இத்தகைய மாற்றம் மற்ற மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் பரவியது. எங்கு முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனரோ அங்கு, குறிப்பாக இந்து பெண்களை மதம் மாற்றம் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு செயல்திட்டங்களை உருவாக்கினர். இதனால், மணமான இந்துக்கள் கூட அவர்களின் வலையில் சிக்கினார்கள். அதாவது, பலதார மணங்களைப் புரிந்து கொள்ள இஸ்லாத்தை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், பாதிக்கப்பட்ட இந்து பெண்கள் புகார் கொடுக்க ஆரம்பித்தனர். முதல் மனைவியின் விருப்பம் / சம்மதம் இல்லாமல் இந்து கணவன் இரண்டாவது, மூன்றாவது மனைவிகளைக் கொண்டு, இஸ்லாமிற்கு மாறியவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப் பட்டன. இந்தியக் குற்றாவியல் சட்டத்தின் 494 பிரிவிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் முஸ்லிமாக மாறுகிறான். காஜியிடமிருந்து சான்றிதழ் பெறுகிறான். இதனால், அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இந்து மனைவிகள் தவித்தனர். 1996ல் எம். எப். ஹுஸைன் இந்து கடவுளர்களை “கலை நயத்துடன்’ வடித்துத் தாக்கியபோது கூட, இந்தியப் பெண்மைதான் தாக்கப்பட்டது.
முஸ்லிம்கள் இஸ்லாத்தை வைத்துக்கொண்டு இந்து பெண்களை ஏமாற்றுவதால் தான் சரளா முதுகல் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது: அந்நிலையில் தான் “கல்யாணி” என்ற அமைப்பு, இப்பிரச்சினையை வழக்காக உச்சநீதி மன்றத்தில் கொண்டு சென்றது. ஶ்ரீமதி சரளா முதுகல் என்ற “கல்யாணி” அமைப்பின் தலைவி இவ்வழக்கை தொடுத்தார்[6]. உள்ள பிரச்சினை தெளிவாக நீதிமன்றத்தின் முன்பாக வைக்கப்பட்டது. 1978 முதல் 1992 வரை எவ்வாறு இந்து பெண்கள் பாதிக்கப் பட்டனர் என்ற உண்மைகள் வைக்கப்பட்டன[7]. பல முந்தைய தீர்ப்புகளை அலசி, ஒரு இந்து ஆண் செய்துகொண்ட திருமணம், திருமண பந்தம், இந்து திருமண சட்டத்தின் கீழ் வருவதால், எந்த காரணத்தினாலும் அதனை முடிவுக்குக் கொண்டுவர முடியாது[8]. அவன் முஸ்லிமாக மாறினாலும் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தி குற்றவியல் சட்டத்தின் பிரிவு 494ன் படி குற்றாவாளி ஆகிறான்[9]. அதே போல ஒரு முகமதியன் ஒரு மணமான இந்து பெண்ணை ஏமாற்றி, மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டாலும் அது செல்லாது[10]. துரதிருஷடமாக அந்த முகமதியனின் ஈனச்செயலால், இந்தியக் குற்றாவியல் சட்டத்தின் 440 பிரிவின் கீழ் விபச்சாரத்தின் கீழ் குற்றஞ்சாட்டப் பட்டாள்[11]. அதாவது சட்டம் கூட அவளது கற்ப்பை பாதுகாக்க முடியாமல் தண்டிக்கிறது. அதே நேரத்தில் பாதித்த முஸ்லிமை எப்படி சட்டம் தண்டித்தது என்று குறிப்பிடவில்லை. அதாவது, இந்து பெண் இருமுறைகளில் தண்டிக்கப் படுகிறாள், சமூகத்தில் மரியாதை இழக்கிறாள், தன்னுடை சுயமரியாதை, உரிமைகள் அனைத்தையும் இழக்கிறாள்.
பழைய வழக்குகள் ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப் பட்டதால் பாரபட்சம் தெரிந்தது: இந்து ஆண் அல்லது கணவன் இரண்டாவது திருமணத்தைச் செய்து கொள்ள முஸ்லிம் ஆகி தப்பிக்கப் பார்க்கிறான், என்றால், அதே போல, இந்து பெண் தானே முஸ்லிமாக மதம் மாறி, ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டாலும் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது[12]. கிருத்துவ மனைவி அவ்வாறு முஸ்லிமாக மாற்றப்பட்டாலும், அதே முறை பின்பற்றப்பட்டது[13]. அதாவது, இவ்வாறு முஸ்லிம்கள் / மதம் மாறிய இந்துக்கள் இந்து பெண்களை பலாத்காரமாகவோ, ஏமாற்றிவோ, கடத்தியே திருமணம் செய்து கொள்வதால் பாதிக்கப் படுவது பெண்கள் தாம். இருதாரத் திருமணத்திற்காக சட்டத்திலுருந்து தப்பித்துக்கொள்ள அவர்கள் அவ்வாறு செய்யலாம் ஆனால், உண்மையில் சட்டத்தை வளைக்கத்தான் அவ்வாறு செய்வதால் சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்பளித்தன.
ஓட்டு வங்கி அரசியல் சட்டமீறல்களை ஆதரித்து வருகின்றது: இந்து சட்டம் இந்துக்களுக்குப் பொறுந்தும் எனும் போது, இஸ்லாமை உபயோகித்து, இந்து சட்டத்தை உடைக்க முடியாது என்பதுதான் நிரூபிக்கப் பட்டது. இதுதான் சரளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பிலும் முடிவானது. அதனால் தான், ஒரு பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அது ஷா பானு தீர்ப்பிலேயே எடுத்துக் கட்டப்பட்டது[14]. பிறகு 2003ல் கூட இன்னொரு தீர்ப்பில் நினைவு கூறப்பட்டது[15]. இது ஏதோ புதியதான சரத்து அல்ல. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 44ல் உள்ளது[16]. ஆனால், ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. முஸ்லிம் ஓட்டு வங்கி என்ற முறையில் தேர்தல்களில் முஸ்லிம்களை நம்பி, குறிப்பிட்ட இடங்களில் ஜெயித்து ஆட்சிக்கு வருவதால் இதைப் பற்றி கடந்த 60 வருடங்களாக பேசுவதே இல்லை[17]. ஆனால், பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றாலே, முஸ்லிம்கள் “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” என்று கூக்குரலிட ஆரம்பித்துவிடுவார்கள். செக்யூலரிஸ்ட் வகையறாக்களும் அவர்களை ஆதரிக்க ஆரம்பித்து விடும். பிஜேபி போன்ற கட்சிகள் ஏதாவது சொன்னால், அவற்றை மற்ற எல்லா கட்சிகளும் சேர்ந்து கொண்டு தாக்க ஆரம்பித்து விடும். இதுதான், கடந்த ஆண்டுகளில் நடந்து வருகிறது. அரசியல் ஆதாயத்திற்காக, இதனால் தான் பிஜேபியும் அமைதியாக வேண்டியுள்ளது.
© வேதபிரகாஷ்
13-03-2014
[1] Syed Abdullah Bukhari became the Shahi Imam of Jama Masjid in 1973. He was one of the strong voices that opposed the Emergency in 1975. He protested against the targeting of Muslims when they were asked to undergo ‘nasbandi’ (vasectomy). The former Shahi Imam of Delhi’s Jama Masjid, Syed Abdullah Bukhari, died at the All-India Institute of Medical Sciences here on Wednesday July 8, 2009 following a heart attack. He was 87. http://www.hindu.com/2009/07/09/stories/2009070959730400.htm
[2] Seeing political leaders flocking to the Jama Masjid and seeking blessings from his father, Ahmed Bukhari too realised the political and religious significance of the Shahi Imam’s post. In 1980, he entered the political fray by forming the Adam Sena. It was publicised as an organisation that would protect Muslims from every danger, especially during communal riots. But despite all his efforts, it failed to win popular support. “The Sena was not welcomed by the Muslim community and seeing no support, Ahmed Bukhari shut down the organisation,” says senior journalist Wadood Sajid. http://www.tehelka.com/the-bullys-pulpit/
[3] Mohammed Ahmed Khan vs Shah Bano Begum and Ors – 1985 AIR 945
[5] http://indiatoday.intoday.in/story/syed-abdullah-bukhari-emerges-as-a-prominent-spokesman-of-the-muslims/1/315411.html
[7] Smt Sarla Mudgal vs UOI & Ors – 1995 AIR 1531
[8] The doctrine of indissolubility of marriage, under the traditional Hindu law, did not recognise that conversion would have the effect of dissolving a Hindu marriage. Conversion to another religion by one or both the Hindu spouses did not dissolve the marriage.
[9] It would be useful to have a look at some of the old cases on the subject. In Re Ram Kumari 1891 Calcutta 246 where a Hindu wife became convert to the Muslim faith and then married a Mohammedan, it was held that her earlier marriage with a Hindu husband was not dissolved by her conversion. She was charged and convicted of bigamy under Section 494 of the IPC. It was held that there was no authority under Hindu law for the proposition that an apostate is absolved from all civil obligations and that so far as the matrimonial bond was concerned, such view was contrary to the spirit of the Hindu law. Re Ram Kumari 1891 Calcutta 246
[10] The Madras High Court followed Ram Kumari in Budansa vs. Fatima 1914 IC 697. Budansa vs Fatima 1914 IC 697
[11] In Gul Mohammed v. Emperor AIR 1947 Nagpur 121 a Hindu wife was fraudulently taken away by the accused a Mohammedan who married her according to Muslim law after converting her to Islam. It was held that the conversion of the Hindu wife to Mohammedan faith did not ipso facto dissolve the marriage and she could not during the life time of her former husband enter into a valid contract of marriage. Accordingly the accused was convicted for adultery under Section 497 of the IPC. Gul Mohammed vs Emperor AIR 1947 Nagpur 121
[12] Nandi @ Zinab vs Criown – ILR 1920 Lahore 440
[13] Emperor vs Mt. Ruri AIR 1919 Lahore 389
[14] Mohammed Ahamed Khan vs Sha Bano Begum AIR 1985 SC 945
[15] July 23, 2003: The Supreme Court today called for a common civil code for all citizens of the country, holding that it would not go against the two key constitutional provisions governing religion. The court said the effort to secure a uniform civil code across India — Article 44 — would not come in the way of the right to freedom of religion or the freedom to manage religious affairs as laid down in Articles 25 and 26 of the Constitution. Rather, it would “help the cause of national integration”.
http://www.telegraphindia.com/1030724/asp/frontpage/story_2194921.asp
[16] In Ms. Jordan Diengdeh vs. S.S. Chopra AIR 1985 SC 935 O. Chinnappa Reddy, J. speaking for the Court referred to the observations of Chandrachud, CJ in Shah Bano Begum’s case and observed as under: “It was just the other day that a Constitution Bench of this Court had to emphasise the urgency of infusing life into Art. 44 of the Constitution which provides that “The State shall endeavour to secure for the citizens a uniform civil code throughout the territory of India.” The present case is yet another which focuses .. on the immediate and compulsive need for a uniform civil code. The totally unsatisfactory state of affairs consequent on the lack of a uniform civil code is exposed by the facts of the present case. Before mentioning the facts of the case, we might as well refer to the observations of Chandrachud, CJ in the recent case decided by the Constitution Bench (Mohd. Ahmed Khan vs. Shah Bano Begum).” One wonders how long will it take for the Government of the day to implement the mandate of the framers of the Constitution under Article 44 of the Constitution of India
[17] The Successive Governments till-date have been wholly re-miss in their duty of implementing the constitutional mandate under Article 44 of the Constitution of India. We, therefore, request the Government of India through the Prime Minister of the country to have a fresh look at Article 44 of the Constitution of India and “endeavour to secure for the citizens a uniform civil code throught the territory of India”. http://indiankanoon.org/doc/733037/
அண்மைய பின்னூட்டங்கள்