Posted tagged ‘ஷாகுல் ஹமீத்’

ஐசிஸ் தொடர்பு – அன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது என்று சுருக்கி விடமுடியுமா?

பிப்ரவரி 16, 2018

ஐசிஸ் தொடர்புஅன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது என்று சுருக்கி விடமுடியுமா?

பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்- போட்டோ

அன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது: கன்னியாகுமரியை சேர்ந்த அன்சார் மீரான் என்பவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, என சில ஊடகங்களும். ஐ.எஸ்.ஐ.எஸ்.- அமைப்புக்கு ஆதரவான கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தியதாக, என்று மற்ற சில ஊடகங்களும், தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரால் சென்னையில் 12-08-2018 திங்கட்கிழமை அன்று கைது செய்யப்பட்டான்[1], என்று செய்திகள் வெளியிட்டன. 13-02-2018 அன்று கைது செய்யப்பட்ட அன்சார் மீரான், முறைப்படி, தேசிய புலனாய்வு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்[2]. இதையடுத்து அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்[3]. இந்நிலையில் அவனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு போலீசார் மனு தாக்கல் செய்தனர்[4]. மனு தாக்கல் செய்தனர் என்ற செய்தியையே, ஏதோ, பெரிய விசயமாக வெளியிட்டுள்ளன[5]. என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள விசயங்களைக் கூட வெளியிடவில்லை. மேலும், “கைது செய்யப்பட்டார்,” என்று மரியாதையோடு குறிப்பிட்டன[6]. மனுவை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டியன், மனுவின் மீதான உத்தரவை 14—02-2018 புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்[7]. இதையே எல்லா நாளிதழ்களும் / ஊடகங்களும் வெளியிட்டுள்ளன[8]. சென்னையில் நடக்கும் விசயங்களே இவர்களுக்கு தெரியாதா என்ன?

Indian Muslim youth become ISIS supporters, warriors

14-02-2018 அன்று நீதிமன்றம் மூன்று நாள் விசாரணைக்கு அனுமதி[9]: தேசியப் புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மூன்று நாள்கள் அனுமதி அளித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின்போது புழல் சிறையில் இருந்த அன்சார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக, என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் அன்சாரிடம் உடனடியாக விசாரணையை ரகசியமாக தொடங்கினர். இவ்வளவு வெளிப்படையான விசாரணை, முதலியவை இருந்தும், தமிழகத்தில் ஏன் தீவிரவாதத்தை வளர்க்கின்றனர் என்பது பற்றி யோசிப்பதில் தயக்கம், மறைத்தல் மற்றும் பயமும் இருக்கிறது போலும். தவிர குற்றவாளிகள் மற்றும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு ஆதரவாக பெற்றோர், உற்றோர், மற்றோர் பேசுவது, செயல்படுவது முதலியனவும், தீவிரவாதத்திற்கு உடன் போவதை காட்டுகிறது.

Isis, Tamilnadu links, arrests 2017-18

தினமலர் கூடுதலாக கொடுக்கும் விசயம்: – அரசு வழக்கறிஞர், பிள்ளை கூறியதாவது[10]: “.எஸ்..எஸ்., அமைப்புடன் தொடர்புடைய அன்சார் மீரானை, தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், கைது செய்து உள்ளனர். இந்த வழக்கில், ஒன்பது பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர். அன்சார் மீரானுடன், இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முதல் குற்றவாளியாக கருதப்படும், ஹாஜா பக்ருதீன், சிரியாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது..எஸ்..எஸ்., அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆட்களை சேர்ப்பது போன்ற சதி வேலைகளில், அன்சார் மீரான் ஈடுபட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. மனு மீது, இன்று உத்தரவு வரும்”, இவ்வாறு அவர் கூறினார்[11]. ஓரளவிற்கு, அதிலும், அரசு வழக்கறிஞர், பிள்ளை கூறினார் என்று இவ்வாறு வெளியிட்டுள்ளது. இதெல்லாம் மற்ற ஊடகத்தினருக்கு தெரியாதா என்ன?

shahul-hameed-chennai-arrested-by-nia-and-khaja-moideen

முழு விவரங்களைக் கொடுக்கும் தினத்தந்தி[12]: தினத்தந்தி கூறுவதாவது, “.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் ஆட்களை திரட்டுவதில் கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையைச் சேர்ந்த காஜா பக்ருதீன் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. இவர் சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. சிங்கப்பூர் குடியுரிமை பெற்று இருந்த இவரை தேசிய புலனாய்வு பிரிவினர் கண்காணித்தப்படி இருந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் டெல்லி வந்தபோது தேசிய புலனாய்வு பிரிவினரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது தமிழ்நாட்டில் .எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக தனியாக ஒரு தீவிரவாத குழு உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 இளைஞர்கள் முக்கிய அங்கம் வகிப்பதும் தெரிய வந்தது. அந்த 9 இளைஞர்கள் மீதும் 9 பிரிவுகளில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களை போலீசார் தேடி வந்தனர். அதன் பயனாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அப்துல்லா முத்தலீப் பிடிபட்டார். அவரை தொடர்ந்து 18-ந்தேதி சாகுல் அமீது என்பவர் சென்னை ஓட்டேரியில் கைது செய்யப்பட்டார். இவர்கள் 3 பேரிடமும் தேசிய புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அந்த 6 பேரும் தலை மறைவாக இருந்தபடி .எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டி வருவது தெரியவந்தது[13].

nasser-who-designed-isis-flag-is-from-chennai

.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அவர்கள் நாசவேலை செய்து கை வரிசை காட்டக்கூடும்[14]: தினத்தந்தி தொடர்கிறது, “.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அவர்கள் நாசவேலை செய்து கை வரிசை காட்டக்கூடும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த .எஸ். தீவிரவாதிகளை கூண்டோடு பிடிக்க வேண்டும் என்பதில் தேசிய புலனாய்வு பிரிவு தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் தமிழ் நாட்டில் .எஸ். தீவிரவாதிகளில் 4-வது இடத்தில் இருப்பதாக கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கேடு உத்தமன் பகுதியைச் சேர்ந்த அன்சார் மீரான் சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அவனை கைது செய்ய டெல்லியில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவின் சிறப்பு படை சென்னை வந்தது. சென்னையில் நேற்று அவனை தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். அன்சார் மீரான் சென்னையில் ரகசியமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதில் இருந்தபடியே .எஸ். தீவிரவாத  அமைப்புக்கு நிதி  திரட்டி கொடுத்துள்ளான்மேலும் .எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக சிரியா செல்பவர்களுக்கு விமான டிக்கெட்டும் எடுத்து கொடுத்துள்ளான். குறிப்பாக காஜா பக்ருதீன் சிரியா செல்ல டிக்கெட் எடுத்து கொடுத்தது இவன்தான்  என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கைதான அன்சார் மீரானிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தமிழ்நாட்டில் இருந்து சிரியாவுக்கு எத்தனை பேரை அனுப்பி வைத்துள்ளனர் என்று ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள .எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்களா? என்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது[15]. சாகுல் அமீது மற்றும் காஜா மொஹித்தீன் பற்றிய விவரங்களை இங்கு படித்து அறியலாம்[16].

swalih-was-settled-in-chennai-for-some-time-now-with-wife-and-2-year-old-son

இஸ்லாமிய, ஜிஹாதி தீவிரவாதிகளின் செய்திகளை இருட்டடிப்பு செய்வது ஏன்?: ஆக தினத்தந்தி மற்றும் தினமலர் தவிர, பின்னணி தெரிந்தும், மற்ற ஊடகங்கள் இவ்வாறு செய்திகள் வெளிட்டுள்ளது, அவற்றின் பாரபட்சம் மற்றும் உண்மைகளை மறைக்கும் போக்கு வெளிப்படுகிறது. NIA தனது இணைதளத்தில் உடனுக்குடன் கைது செய்யப் பட்டவர்களின் விவரங்கள், பின்னணி, வழக்கு எண் என்ற எல்லா விவரங்களையும் “ஊடகங்களுக்காக” [Press release] என்று வெளியிட்டு வருகின்றது. அதனை தமிழில் மொழிபெயர்த்துப் போட்டாலே போதும், எல்லா விவரங்களும் பொது மக்களுக்குத் தெரிய வரும். அதனால், ஒருவேளை அவர்கள் விழிப்புடன் இருக்கலாம். ஆனால், அதையே கண்டுகொள்ளாமல், மறைத்து இவ்வாறு செய்தி வெளியிட்டிருப்பது அவர்களுக்கு சாதகாமாக இருப்பது அல்லது அவர்கள், ஊடகக்காரர்களுக்கு ஏதோ “சென்ஸார்” போன்ற ஆணையிட்டது அல்லது மிரட்டியுள்ளது போன்றது உள்ளதா எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

16-02-2018

Isis, Tamilnadu links, Haja Fakrudeen

[1] நியூஸ்7, கைதான .எஸ் ஆதரவாளரை 7 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரிய புலனாய்வு அமைப்பு!, February 14, 2018

[2] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/14/2/2018/person-arrested-chennai-national-intelligence-agency

[3] பாலிமர் செய்தி, ISIS ஆதரவாளர் அன்சார் மீரானை போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரி மனு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணை, 13-பிப்-2018 18:30

[4] https://www.polimernews.com/isis-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88/

[5] தி.இந்து, சென்னையில் பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு, Published :  14 Feb 2018  07:51 IST; Updated :  14 Feb 2018  11:00 IS

[6] http://tamil.thehindu.com/tamilnadu/article22748394.ece

தினமணி, [7] தமிழ்.ஒன்.இந்தியா, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சென்னையில் இளைஞர் அதிரடி கைது!, Posted By: Mathi, Published: Tuesday, February 13, 2018, 11:47 [IST].

[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-police-arrests-pakistan-spy-311239.html

[9] தினமணி, .எஸ். ஆதரவாளரிடம் என்ஐஏ விசாரணை தொடக்கம், Published on : 15th February 2018 02:28 AM.

http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2863616.html

[10] தினமலர், .எஸ்..எஸ்., ஆதரவாளரை போலீஸ் காவலில் விசாரிக்க மனு, Added : பிப் 14, 2018  02:18.

 

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1958705

[12] தினத்தந்தி, .எஸ். தீவிரவாதி சென்னையில் கைதுதமிழகத்தில் நாசவேலைக்கு சதி, பிப்ரவரி 13, 2018, 01:07 PM.

[13] https://www.dailythanthi.com/News/State/2018/02/13130746/ISIS-terroristArrested-in-Chennai-In-TamilNadu-The.vpf

[14] தினத்தந்தி, .எஸ். தீவிரவாதி சென்னையில் கைதுதமிழகத்தில் நாசவேலைக்கு சதி, பிப்ரவரி 13, 2018, 01:07 PM.

[15] https://www.dailythanthi.com/News/State/2018/02/13130746/ISIS-terroristArrested-in-Chennai-In-TamilNadu-The.vpf

[16] வேதபிரகாஷ், மறுபடியும் .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!, செப்டம்பர் 23, 2017.

https://islamindia.wordpress.com/2017/09/23/isis-funder-from-chennai-arrested-by-nia-more-jihadis-in-south/

ஆதிலாபானு கொலை – சாத்தான்குளத்துக் கொலையை தொடர்ந்துள்ளது: தமிழகத்தில் கோஷ்டி போர் நடக்கிறாதா (2)?

நவம்பர் 22, 2010

ஆதிலாபானு கொலை – சாத்தான்குளத்துக் கொலையை தொடர்ந்துள்ளது: தமிழகத்தில் கோஷ்டி போர் நடக்கிறாதா (2)?

ஷாகுல் சினிமா நடிகர்[1]: பிடிபட்ட கார் ஸ்கார்பியோ (டிஎன்65 கே 2223) ஷாகுல் என்பவனுக்கு சொந்தமானது. அவன் இந்தி படத்தில் வில்லனாக நடித்துள்ளானாம். சினிமாவில் நடித்தபோது எடுத்துக் கொண்ட படம் காரில் வைத்திருந்தானாம். காரைக் கைப்பற்றியபோது, இவ்விவரங்கள் தெரியவந்தன, மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளான  ராமநாதபுரம் அருகே சாத்தான்குளத்தைச் சேர்ந்த சாகுல், வாணி கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷத், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன். மணிகண்டன் ஆகிய 3 பேரும் மலேசியாவுக்குத் தப்பி விட்டதாகவும், மற்றொரு குற்றவாளியான வாலாந்தரவை முனியசாமி தலைமறைவாக இருப்பதாகவும் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தெரிவித்திருக்கிறார்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்: ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த ஆதிலாபானு, அவரது மகன் முகமது அஸ்லாம் (7), மகள் ஹாஜிராபானு (5) ஆகியோர் கடந்த 8ம் தேதியன்று கடத்திக் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை தொடர்பாக முதலில் ஆதிலாபானுவின் குடும்ப நண்பர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். பிறகு வாடிப்பட்டி போலீசார் –

1.   வாலாந்தரவையை சேர்ந்த துரைராஜ் மகன் முனியசாமி (28),

2.   ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது உல்லா மகன் சேக்கஜத் என்ற சூடானி (19), (கீழக்கரை கல்லூரி பிகாம் 2ம் ஆண்டு மாணவர்),

3.   நயினா முகமது மகன் தமிமுல் அன்சாரி (21),

4.   பட்டினம்காத்தானை சேர்ந்த கலீம் மகன் சாநவாஸ் (20) (மதுரை தனியார் கல்லூரி பிகாம் 3ம் ஆண்டு மாணவர்),

5.   சாத்தான்குளம் அக்பர் அலி மகன் நாகூர் உசேன் (19)

உள்ளிட்ட 5 பேர் கைது செய்ய்பட்டனர். இப்படி கல்லூரியில் படிக்கும் / படித்த இளைஞர்கள் கொலையில் பங்கு கொண்டுள்ளது வியப்பக உள்ளது. ஏனெனில், இவர்கள் எல்லோரும் கூலிப்படையினர் போலவோ அல்லது மணத்திற்காகவோ கொலை செய்பவர்களைப் போலத் தெரியவில்லை. குழந்தைகளையும் கொல்ல மனம் வந்துள்ளது என்றால், அந்த அளவிற்கு தூண்டுதலாக இருந்தது எதுவென்று தெரியவில்லை.

சாத்தான்குளம் கொலையும் அகமது-அமீத் பகையும்: அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன[2]. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சாகுல் அமீத் / ஷாகுல் ஹமீத், மண்டபம் யூனியன் முன்னாள் தலைவர் சீனிக்கட்டியின் உறவினர். ஆதிலாபானுவின் கணவர் முத்துசாமி இவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2002ம் ஆண்டு சீனிக்கட்டியின் தங்கை மறுமகன் கொலை செய்யப்பட்டார். இவர் மலேசியாவில் வசிக்கும் ஷாகுல் அமீதுக்கு உறவினர் ஆவார். இக்கொலை வழக்கில் முத்துசாமி / அகமது முக்கிய சாட்சியாக இருந்தார். அரசு தரப்பு சாட்சியாக முத்துசாமி சேர்க்கப்பட்டார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முத்துசாமி பிறழ்சாட்சியம் அளித்தார். கொலையாளிகள் விடுதலையானார்கள். இதனால், முத்துசாமி மீது சாகுலுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதனால், அதாவது சாதகமாக சாட்சி சொல்ல மறுத்தவிட்டதால், ஷாகுல் அமீதுக்கும் முத்துசாமி-அகமதுக்கும் விரோதம் ஏற்பட்டது.

மலேசியாவிலும் தகராறு: மலேசியாவில் சீனிக்கட்டி உறவினர் சாகுலும், முத்துச்சாமியும் தனித்தனியாக ஆனால் எதிரிதிரே ஓட்டல் நடத்தி வந்துள்ளனர். சாகுல் மாமிசக்கறிக்கடையும், உணவகவும் வைத்துள்ளான்[3]. கோலாலம்பூரில் முத்துசாமியும், சாகுலும் இப்படி எதிரெதிரே ஓட்டல் நடத்தியதால், முன்விரோதம் இவர்களுக்குள் தொழில் போட்டியாகவும் மாறியது. இதனால், கடந்த சில மாதங்கள் முன்பு தகராறு ஏற்பட்டதில், சாகுல் தாக்கியதில் முத்துச்சாமி காயமடைந்தார். இது தெரிந்த ஆதிலாபானு கோபமடைந்து, ஆகஸ்ட் 31ம் தேதியன்று குழந்தைகளுடன் ராமநாதபுரம் திரும்பினார். இந்நிலையில் ஆதிலாபானு, ராமநாதபுரம் வந்த ஆதிலா, கணவரின் நண்பர் ஜெயக்குமாரிடம் மலேசியாவில் நடந்த தகராறு குறித்து கூறியுள்ளார். மேலும், கணவரை தாக்கிய சாகுலின் கையை, ஆள் வைத்து வெட்டாமல் விடமாட்டேன் என கூறியுள்ளார்[4]. [வேறொரு இடத்தில், ‘எனது கணவரை சாகுல் அடித்துள்ளார். அவரை கொலை செய்யாமல் விடமாட்டேன்‘ என்றுள்ளது]. ஆகையால், “கொலை செய்ய வேண்டும்” என குடும்ப நண்பர் ஜெயக்குமாரிடம் தெரிவித்தார். இத்தகவலை ஜெயக்குமார் அத்தை மகன் முனியசாமியிடம் தெரிவித்துள்ளார். முனியசாமி இதை மலேசியாவில் உள்ள சாகுலுக்கு தெரிவித்தார்.

சாகுல் அமீது நேராக தமிழகத்திற்கு வந்து திட்டமிட்டு ஆதிலா-குழந்ர்கைகளைக் கொன்றது[5]: அதனால் சாகுல் அமீது, ஆதிலாபானுவை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக மலேசியாவிலிருந்து சொந்த ஊருக்கு வந்து, ஜெயக்குமாரை அணுகி ஆதிலாபானுவை கடத்தி பணம் பறிக்கலாம் என மூளைச்சலவை செய்தார். அதனால் ஜெயக்குமார் கடந்த 8ம் தேதியன்று மாருதி காரில் ஆதிலாபானுவை 2 குழந்தைகளுடன் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளைக்கு அழைத்து வந்தார். ஜெயக்குமார் வந்ததும் அவரை, சாகுல் தாக்கினார். ஜெயக்குமார் கீழே விழுந்தார்[6]. அங்கு ஸ்கார்பியோ காரில் தயாராக காத்திருந்த சாகுல், 3 பேரையும் காரில் வலுக்கட்டாயமாக ஸ்கார்பியோ (டிஎன்65 கே 2223) காரில் ஏற்றினர்[7].

பாட்டி பக்கீரம்மாள் தோட்டத்திற்கு சென்றது, கொன்றது, புதைத்தது: அந்த கார் சாகுலின் பாட்டி பக்கீரம்மாள் தோட்டத்துக்கு சென்றது. அங்கு காரில் உள்ள மியூசிக் சிஸ்டத்தை சத்தமாக வைத்தனர். சாகுல், நண்பர்கள் மணிவண்ணன், ஹர்சத், முனியசாமி ஆகியோருடன் சேர்ந்து ஆதிலாபானு மற்றும் 2 குழந்தைகளை தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்தனர்[8]. அந்த தோட்டத்தில் 2 இடங்களில் குழி தோண்டினர். ஒரு குழியில் ஆதிலாபானுவையும், மற்றொரு குழியில் 2 குழந்தைகளையும் போட்டு புதைத்தனர். மறுநாள் காலையில் சாகுல் உள்பட 4 பேரும் சென்னை சென்றனர். அங்கிருந்து மலேசியா செல்ல முயன்றனர். அப்போது முனியசாமிக்கு மட்டும் விசா கிடைக்கவில்லை.

விஷயம் தெரிந்த பக்கிரியம்மாள் செய்த தகராறு: பாட்டி என்ற நிலையில், பேரனுக்கு இப்படியா உதவுவார் என்பதும் புதிராக உள்ளது. முதலில் கொலைசெய்ததே மாபெரும் குற்றம், அதிலும், இளம்பெண் மற்றும் இரு குழந்தைகளைக் கொன்றதுகூட மறந்து விட்டு, பிணங்களைப் பற்றிக் கவலைப்படும் பாட்டி வினோதம்தான். இந்நிலையில் தோட்டத்தில் உள்ள உடல்களை அகற்றுமாறு பக்கிரியம்மாள் போனில் சாகுலிடம் சண்டையிட்டுள்ளார். கடந்த 10-11-1010 தேதியன்று காலை சாகுல் விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து ஒரு காரில் பரமக்குடி வந்தார். அங்கு தயாராக இருந்த –

1.   முனியசாமி (28),

2.   சேக்கஜத் என்ற சூடானி (19),

3.   தமிமுல் அன்சாரி (21),

4.   சாநவாஸ் (20)

5.   நாகூர் உசேன் (19)

ஆதிலா, குழந்தைகளை கொலை செய்ய வேதாரண்யம் சென்றனர். செல்லும் வழியில் மாருதி ஆம்னியை வாடகைக்கு பிடித்தனர். அதில், ஆதிலா, குழந்தைகளை ஏற்றினர். அவர்களுக்கு துணையாக முனியசாமியை ஏற்றினர். ஆம்னியை பின் தொடர்ந்து சென்றனர். வேதாரண்யத்தில் கொலை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

தாய், மகன், மகள் கொலை செய்தது: ஆம்னியில் இருந்த ஆதிலா, குழந்தைகளை ஸ்கார்பியோவிற்கு மாற்றினர். முனியசாமியை, ஆம்னியில் ஏறி ஊருக்கு செல்லும்படி கூறினர். பின், ஸ்கார்பியோவில் இரவு எட்டு மணிக்கு சாத்தான்குளம் புறப்பட்டனர். வரும் வழியிலேயே ஆதிலா, குழந்தைகளின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி சாகுல், மூவரையும் கொலை செய்தார்[9]. சாகுலின் பாட்டி பக்கீரம்மாளுக்கு சொந்தமான சவுக்கு தோப்புக்கு வந்தனர். அங்கு மூவரையும் குழி தோண்டி புதைத்தனர். கொலை சம்பவம் பக்கீரம்மாளுக்கு தெரிந்தது. அவர், பிணத்தை அப்புறப்படுத்தும்படி எச்சரிக்கை விடுத்தார். இதனால் உடல்கள் தோண்டியெடுப்பு: கடந்த நவ., 10 அன்று இரவு மீண்டும் சவுக்கு தோப்புக்கு வந்து மூவர் உடலையும் தோண்டி எடுத்தனர்[10]. உடல்களை சுமோ காரில் (டிஎன்65 எப் 3999) ஏற்றி, கொடைக்கானல் டம்டம் பாறைக்கு புறப்பட்டனர். இதையெல்லாம் தெரிந்திருந்த அந்த பாட்டி எப்படி சும்மா இருந்தார்? மதுரை நகருக்குள் வராமல் அலங்காநல்லூர் வழியாக வாடிப்பட்டிக்கு வந்தபோது விடியத் தொடங்கி விட்டது. காரில் இருந்த பிணங்களில் துர்நாற்றம் வீசத்கொடங்கியது. எனவே போலீஸ் சோதனைச் சாவடிகளில் மாட்டிக் கொள்வோம் என பயந்து பிணங்களை துணியில் சுற்றி ஆண்டிபட்டி மற்றும் விராலிப்பட்டியில் வீசிச்சென்றுள்ளனர். அதன்பிறகு சாகுல், மணிகண்டன், ஹர்சத் 3 பேரும் மலேசியா தப்பியுள்ளனர் (12-11-2010)[11].

வேதபிரகாஷ்

© 22-11-2010

See first posting, here:

https://islamindia.wordpress.com/2010/11/21/1238-adhila-murder-gang-war-or-religious-persecution/


[3] He owned a mutton shop and operated a food stall in Kula Lumpur, http://www.bernama.com/bernama/v5/newsgeneral.php?id=544350

[5] Their interrogation revealed that Shakul, the prime accused, also running a hotel in Malaysia, had flown to India and plotted to eliminate Adhila due to a running feud with Ahamed. Adhila was angry with Shakul because he had attacked her husband Ahamed a few months ago, an investigating officer said.

[6] ஜெயக்குமார் கூறியுள்ளதில் வேறுபாடு காணப்படுகிறது. கொலை நடந்ததே தஎரியாது என்றும் கூறியிருப்பது நோக்கத்தக்கது.

[8] கீழேயுள்ள மற்றொரு வர்ணனை மாறுபட்டிருப்பதை காணலாம். அதாவது கொலைசெய்யப்பட்ட இடத்தை மாற்றிக் காட்டப்படுகிறது.

[9] மேலேயுள்ள மற்றொரு வர்ணனை மாறுபட்டிருப்பதை காணலாம். அதாவது கொலைசெய்யப்பட்ட இடத்தை மாற்றிக் காட்டப்படுகிறது.

[10] மேலே குறிப்பிட்டபடியுள்ள, “கடந்த 10-11-1010 தேதியன்று காலை சாகுல் விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து ஒரு காரில் பரமக்குடி வந்தார்”, என்பது முரணாக இருக்கிறது. இல்லை அதிகாலை வந்து மாலையில் கொலைசெய்து, இரவுக்கு வந்திருக்க வேண்டும்.

[11]தினகரன்,  கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் கைது, 21-11-2010, http://www.dinakaran.com/highdetail.aspx?id=20857&id1=13

ஆதிலாபானு கொலை – சாத்தான்குளத்துக் கொலையை தொடர்ந்துள்ளது: தமிழகத்தில் கோஷ்டி போர் நடக்கிறாதா (1)?

நவம்பர் 21, 2010

ஆதிலாபானு கொலை – சாத்தான்குளத்துக் கொலையை தொடர்ந்துள்ளது: தமிழகத்தில் கோஷ்டி போர் நடக்கிறாதா (1)?

அளந்து கொடுக்கும் இந்திய ஆங்கில நாளிதழ்கள், ஆனால் அள்ளி வீசும் மலேசிய நாளிதழ்கள்: காதலும், கொலையும் இந்த கொலையின் பின்னணியில் இருப்பதாகத் தெரிகிறது, என்று “தி இந்து” மிகவும் சுருக்கமாக செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை[1]. டெக்கான் ஹரால்ட் ஓரளவிற்கு விஷயத்தைக் கொடுத்திருக்கிறது – “மலேசிய கோஷ்டி சண்டை தமிழகக் கொலைக்குக் காரணமகியது” [Malay feud leads to murder in TN], என்று தலைப்பிட்டு கொடுத்துள்ளது[2]. மலேசிய பெர்நாமா, “கோஷ்டி போர் மூன்று மலேசிய மக்கள் கொலைக்கு காரணாமாகியது” [Gang war led to Triple murder of Malaysians] என்று தலைப்பிட்டு கொடுத்துள்ளது[3]. முக்கியமாக ஆறு ஆண்கள் மற்றும் முன்று பெண்கள் இவ்விஷயத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் விசாரணையில் மேலும் விவரங்கள் தரக்கூடும்[4]. அப்படியென்றால், அந்த முன்று பெண்கள் யார் என்று தெரியவில்லை. தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல், முதலிய கோஷ்டிகள்தாம் மும்பை, துபாய் முதலிய இடங்களில் இருந்து கொண்டு அப்படி யுத்தங்களை நடத்துகின்றனர் என்று கேள்விப்பட்டதுண்டு. அவர்கள் போதை மருந்து கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், தீவிரவாதம், ஜிஹாத், விபச்சாரம், சிறுமிகள்-பெண்களை அதற்காக பெருமளவில் கடத்துதல், கள்ளப்பணத்தை அச்சடித்தல், விநியோகித்தல், திருட்டு டிவிடி போடு விற்றல், நடிக-நடிகையரை மிரட்டுதல், அவர்களிடம் பணம் வாங்குதல் என பல விவகாரங்களை, பல நாடுகளில் செய்து வருகின்றனர். அத்தகைய கலாச்சாரம், தமிழகத்திற்கும் வந்து விட்டதா?

கைது செய்யப்பட்டுள்ள ஆறு ஆண்கள் மற்றும் முன்று பெண்கள் யார்? இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள், விவரங்கள் பலவாறு வெளிவந்துள்ளன. கைது செய்யப்பட்டுள்ள ஆறு ஆண்கள் – ஜெயக்குமாரையும் சேர்த்து, இவ்வாறு இருக்கலாம்:

1.   முனியசாமி, 

2.   சேக் தாஹாசத்,

3.   தமிமுல் அன்சாரி,

4.   சானவாஸ்,

5.   நாகூர் ஹூசைன்

1.   முனியசாமி (28), 

2.   சேக்கஜத் என்ற சூடானி (19),

3.   தமிமுல் அன்சாரி (21),

4.   சாநவாஸ் (20)

5.   நாகூர் உசேன் (19)

அந்த இரண்டு விவசாயிகள் யார்? இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. ஆனால், அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

செய்திகளில் பெண்கள் பெயர்கள் இரண்டு / மூன்று இடங்களில்தான் வந்துள்ளன:

1.   சுந்தரி: சம்பவ தினத்தன்று (08-10-2010) மத்தியான பொழுதில் பக்கத்து வீட்டுக்காரரான சுந்தரி என்பவருடன் சமையல் சாமான்களும் சமையல் எரிவாயு உருளையும் வாங்குவதற்கு கடைக்கு போயிருக்கிறார்கள்[6].

2.   பக்கிரியம்மாள்: சாகுலின் பாட்டி பக்கிரியம்மாள் – இந்நிலையில் தோட்டத்தில் உள்ள உடல்களை அகற்றுமாறு பக்கிரம்மாள் போனில் சாகுலிடம் சண்டையிட்டுள்ளார்[7].

3.   மூன்றாவது பெண்: யார் என்று தெரியவில்லை! – ஆதிலாபானுவின் தாயார் – ஹம்சத் நிஷா?

மலேசியாவுக்குத் தப்பி விட்டவர்கள்:

1.   சாத்தான்குளத்தைச் சேர்ந்த சாகுல்,

2.   வாணி கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷத்,

3.   ராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன். மணிகண்டன்

மற்றொரு குற்றவாளியான வாலாந்தரவை முனியசாமி தலைமறைவாக இருப்பதாகவும் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தெரிவித்தார்.

ஆதிலா கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது[8]: கடந்த 11ம் தேதியன்று வாடிப்பட்டி அருகே பாலத்துக்கு கீழ் ஒரு பெண், 2 குழந்தைகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் இறந்து போன ஆதிலாவின் கணவர் முத்துசாமி (எ) அகமதுவின் நண்பன் ஜெயக்குமார் முதல் கட்டமாக கைது செய்யப்பட்டான். ஜெயக்குமார் அளித்த தகவலின் அடிப்படையில் கொலையில் தொடர்புடைய –

6.   முனியசாமி,

7.   சேக் தாஹாசத்,

8.   தமிமுல் அன்சாரி,

9.   சானவாஸ்,

10.  நாகூர் ஹூசைன்

ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவுக்கு தப்பி ஓடிய சாகுல், அர்சத், மணிவண்ணன் ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலும் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெட்சுமணன் தலைமையிலும் இரு தனிப் படை போலீஸார் குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில்  ஆதிலா பானுவின் குடும்ப நண்பரான ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை வாடிப்பட்டி போலீஸார் செவ்வாய்க்கிழமை 16-11-2010 அன்று வாலாந்திரா பஸ் ஸ்டேன்டில் கைது செய்துள்ளனர்[9].

ஜெயக்குமாரின் வாக்குமூலத்தில் அறிவாதாவது: ஆதிலா பானுவின் கணவர் முத்துசாமி / அகமதுக்கும், இவனுக்கும் பத்தாண்டுகளுக்கு மேலாக பழக்கம் இருந்தது. அகமது வீட்டிற்கு அடிக்கடி சென்று குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்வான். கடந்த 20 நாட்களுக்கு முன்பு கியாஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டதாக ஆதிலாபானு கூறினார். உடனே தீபாவளி சமயமாக உள்ளதால் தட்டுப்பாடு உள்ளதால், குடோனில் கேட்டுப் பெற்றுத்தருவதாக சொன்னான். அந்நேரத்தில் அங்கு வந்த அத்தை மகன் முனியசாமி, அவள் பணக்காரப் பெண்ணாக உள்ளதால் கடத்திச் சென்று வைத்துக் கொண்டு தாயாரிடம் பணம் பறித்துக் கொண்டு பிறகு விட்டுவிடலாம் என்று தூபம் போட்டான். முதலில் ஜெயக்குமார் ஒப்புக்கொள்ளாததால், மூளைசலவை செய்வது போல பண ஆசைக் காட்டி மயக்கியதும், பிறகு ஒப்புக் கொண்டான். பிறகு மொட்டார் சைக்கிளில் ஆதிலா வீட்டிற்குச் சென்று, சிலின்டர் வாங்க கூப்பிட்டேன். அதன்படியே ஆதிலா தன்னுடைய குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டார். அவர்களை மொட்டார் கைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு ஓட்டிச்சென்றேன்[10]. குடோனுக்கு அருகில் சென்றபோது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென ஒரு கறுப்புக்கார் வந்தது. ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தினான்.  காருக்குள் இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஷாகுல் (29), மணிவண்ணன் (29), முகமது சர்ஜித் (30), முனியசாமி (30) ஆகியோர் இறங்கி ஓடிவந்து, ஜெயக்குமாரைத் தள்ளிவிட்டு, அவர்களைக் கடத்திக் ககண்டு சென்றுவிட்டனர். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரியாது. பிணம் கிடைத்தப் பிறகுதான், அவள் கொலை செய்யப்பட்டதே தெரியும்[11] என்கிறான் ஜெயக்குமார்.

வேதபிரகாஷ்

© 21-11-2010


[1] A combination of factors, including enmity between Shahul and Adhila Banu while they were in Malaysia, a love affair and a murder, is said to be the motive behind the murders.

The Hindu, Five persons arrested in murder of mother and her two children, Sunday, Nov 21, 2010, http://www.hindu.com/2010/11/21/stories/2010112158400100.htm

[2] Deccan Chronicle, Malay feud leads to murder in TN, November 21st, 2010,

http://www.deccanchronicle.com/chennai/malay-feud-leads-murder-tn-072

[3] Bernama, Gang war led to Triple murder of Malaysians, says police, Nov.20, 2010, http://www.bernama.com/bernama/v5/newsgeneral.php?id=544350

[4] This follows the arrest of six men and three women whom the police believe cpuld shed light on the triple murder.

http://www.bernama.com/bernama/v5/newsgeneral.php?id=544350

[5] Police in India have detained two farmers in connection with the death of a Malaysian woman and her two children who had earlier gone missing in South India last Monday (08-11-2010). http://thestar.com.my/news/story.asp?file=/2010/11/14/nation/7427381&sec=nation

[8] தினமலர், ஆதிலா கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது, நவம்பர் 20, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=130240

[9] தினமணி, தாய், 2 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கு: குற்றவாளிகளில் 3 பேர் மலேசியா தப்பி ஓட்டம்,, First Published : 18 Nov 2010 12:42:13 PM IST, http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Madurai&artid=333673&SectionID=137…….8D

[10] நான்கு பேர்கள் எப்படி மோட்டார் சைக்கிளில் சென்றார்கள் என்று தெரியவில்லை. மேலும், ஒரு மணமான முஸ்லீம் பெண் அப்படி செல்வாளா என்பது சந்தேகமே. எப்படியாகிலும், அவ்வாறு சென்றிருந்தால், பலரும் பார்த்திருப்பார்கள். அதைத் தெரிந்துதான் அவடர்கள் சென்றார்களா?

[11] இது பொய் என்பது, அவன் சாகுல் அமீதுடன் பேசியது – போனில் மற்றும் நேரில் – அவனே இவனுடன் முதலிய விஷயங்களில் தெரிகிறது.