Posted tagged ‘ஷமி’

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்ட மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ்!

நவம்பர் 23, 2015

.எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்ட மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ்!

Bangalore Biswas becomes ISIS agent, techie workerடுவிட்டர் மூலம் .எஸ்.க்கு ஆட்கள் வேலைசேர்ப்பு: கடந்த வருடம் 2014ல் பெங்களூரில் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்பவரை ஜாலஹள்ளி என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர்[1].  இவர் ஷாமி என்ற பெயரில் ஐ.எஸ் இயக்கத்திற்கான “@ShamiWitness” என்ற பிரசார டுவிட்டர் கணக்கை நடத்தி வந்தார்[2]. அவனது இருப்பிடத்தில் சோதனை செய்ததில், அவனது கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன்கள் முதலியவற்றிலிருந்து பல விவரங்கள் தெரிய வந்தன. முன்னர் ஷாமி விட்னஸ் என்கிற பெயரிலான இந்த குறிப்பிட்ட டுவிட்டர் கணக்கை நடத்துபவர் யார் என்கிற அடையாளத்தை பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி சேனலான சேனல் 4 தொலைக்காட்சி தனது புலனாய்வு மூலம் கண்டறிந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது[3]. அந்த நபரை மெஹ்தி என்கிற பெயரிட்டு அழைத்திருந்த அந்த சேனல்-4 தொலைக்காட்சி, அவரது முழுமையான அடையாளத்தை வெளியிட்டால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவரது முழுமையான அடையாளத்தை தாம் வெளியிடவில்லை என்று தெரிவித்திருந்தது. இந்திய பெருவர்த்தக நிறுவனக் குழுமம் ஒன்றில் அவர் நிர்வாகியாக பணிபுரிவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெங்களுர் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் - ShamiWitness - போட்டோநீண்ட நாள்களாக .எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்ட மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ்: இஸ்லாமிய அரசு அமைப்பு, வெளிநாடுகளிலிருந்து புதிதாக ஆள் சேர்க்கவும், மேலை நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னார்வப் பணியாளர்களை தாங்கள் சிரச்சேதம் செய்யும் காட்சிகளை வீடியோவாக வெளியிடவும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்திவந்தது என்பது குறிப்பிடத்தக்கது[4]. மெஹ்தியிடம் நடத்திய விசாரணையில், நீண்ட நாள்களாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்டார் என்று, கர்நாடக டி.ஜி.பி லால்ரோக்குமா தெரிவித்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மட்டுமன்றி, சட்டவிரோத சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழும் மெஹ்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, தன் மகனுக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதை நம்ப முடியவில்லை என்று, மெஹ்தியின் தந்தை பிஸ்வாஸ் தெரிவித்தார். மகன் இவ்வளவு வேலைகளை செய்து வந்தபோது, இவர் தெரியாது என்று சொல்வது வியப்பாக இருக்கிறது. பட்கல் விசயத்தில் கூட பேற்றோர்கள் மட்டுமல்ல, அந்த ஊரில் உள்ளோர் அனைவரும், எங்கள் குழந்தைகள் அப்பாவிகள், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது, என்று தான் சொல்லி வந்தனர்!

மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் - இரு முகங்கள்மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது: முஸ்லிம் இளைஞர்களை வேலைக்கு எடுப்பது, இந்தியாவிற்கு வெளியே அனுப்பி வைப்பது என்று செய்து வந்தான். பொதுவாக வளைகுடா நாடுகளுக்கு அல்லது அந்நியநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதாக இருந்தால், அவர்கள் ஏஜென்டுக்கு அல்லது ஏஜென்சிக்கு பணம் கொடுக்க வேண்டும், இங்கோ வேலைக்கு விரும்பி வருபவர்களுக்கு அவர்களே பணத்தைக் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். இஸ்லாமிய அரசின் பிரசாரத்தை தொடர்ந்து, 150 இந்தியர்கள் (இதில் அதிகமான பேர் நாட்டின்  தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள்) ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்து வந்து உள்ளனர் என உளவுத்துறை அறிந்து எச்சரித்துள்ளது. ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்து செயல்படுபவர்களை தேசிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அமைப்பு வழிகாட்டுதலின்படி உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்[5]. இந்நிலையில் தான், பெங்களுர் வழியாக சிரியாவுக்குச் செல்ல முயன்ற இரு தமிழ்நாட்டு முஸ்லிம் வாலிபர்களின் கதை வருகிறது. பாவம், துருக்கி அவர்களை நாடு கடத்த, பெங்களுருக்கே வந்து சேர்ந்து விட்டனராம்!

New college students become ISIS warriorsபுரசவாக்கம் மசூதியில் ராயப்பேட்டை பாயும், கரூர் பாயும் சந்தித்தது எப்படி?: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கரூரை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரும் ராயப்பேட்டை ஐஸ் அவுஸ்சில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தனர்[6]. முன்னவர் பி.காம் பட்டதாரியாவார், தனது தந்தையின் துணிகடையில் வேலை பார்த்து வந்தார். பின்னவர் பள்ளிபடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சென்னைக்கு ஒரு கடையில் வேலைக்கு வந்திருந்தார்[7]. ஆக, ராயப்பேட்டை பாயும், கரூர் பாயும் எப்படி அறிமுகமானார்கள்? இருவருக்கும் ஜிஹாதில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது? இருவரும் புரசவாக்கத்தில் உள்ள ஒரு மசூதியில் சந்தித்துள்ளனர்[8] என்று செய்திகள் கூறுகின்றன. பிறகு, மசூதிகள் தாம் இவர்கள் சந்திந்துக் கொண்டு அறிம்கமாவதற்கு தகுந்த இடமாக இருக்கின்றனவா? இவர்கள் தாமாகவே வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்களா அல்லது யாராவது இணைப்பாக செயல்பட்டாரா? ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முடிவு செய்ததால், அவர்கள் இணையதளம் மூலமாக சிரியா நாட்டிற்குச் செல்வது குறித்த தகவல்களை திரட்டியுள்ளனர்[9]. அப்போது பெயர் தெரியாத நபர் ஒருவர் அவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்[10]என்று மேலும் செய்திகள் கூறுகின்றனர். ஒருவேளை, முழுவிவரங்கள் வெளியில் தெரியக்கூடாது என்று அவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், இணைத்தள உபயோகம் இவர்களுக்குக் கிடைத்துள்ளது. இவ்விசயங்கள் எல்லாம் ரகசியமாகத்தான் பார்க்க முடியும், கண்டவர்கள் எல்லோரும் பார்க்க முடியாது.  அந்த வசதிகளை இவர்களுக்கு அளித்தது யார்? இவ்விருவருல் ஒருவன் நியூ காலேஜில் படித்தான் என்றால், அந்த ஹாஜா பக்ருதீன் மற்றும் குல் மொஹம்மது ஜோடிக்கும், இவனுக்கும் தொடர்பு இருந்ததா?

Bangalore to turkey and back- ISIS agent, techie workerசென்னை, பெங்களுர், இஸ்தான்புல் சென்றது: அப்படியென்றால், அத்தகைய விவரங்களை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றாகிறது. அதன்படி, சென்னையிலிருந்து பெங்களூர் சென்று, அங்கிருந்து, துபாய்க்கு சென்றுள்ளனர்[11].  அதாவது, இவர்களுக்கு விமான டிக்கெட், பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படியென்றால், தமது அடையாள விவரங்கள், விலாசம் முதலியவற்றைக் கொடுத்தான் அவை பெறப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா பயணிகள் போல் பெங்களூருவிலிருந்து துபாய் சென்ற இருவரும் பின்னர் அங்கிருந்து துருக்கி சென்றுள்ளனர்[12]. ஆக, இஸ்தான்புல் நகரத்தில் இறங்கியதும், இவர்களை வரவேற்று, ஓட்டலுக்குச் சென்று தங்க வைத்தது யார் என்று தெரியவில்லை. சிரியா எல்லை பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி எல்லை தாண்டி செல்வது குறித்து இருவரும் விசாரித்திருக்கின்றனர்[13] என்றுதான் செய்திகள் கூறுகின்றன. ஆனால், அவ்வாறு செல்வதற்கு வேண்டிய அவசியம், தேவை என்னவென்று குறிப்பிடப்படவில்லை.  இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தங்கும் விடுதி ஊழியர் துருக்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்[14].  இருவரையும் பிடித்து விசாரித்த துருக்கி அதிகாரிகள் அவர்கள் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக வந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.  இதையடுத்து இருவரும் துருக்கியிலிருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்[15]. பெங்களூருவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்த அவர்களை பிடித்தனர். இத்தனைக்கும், பணம் தேவையாயிற்றே, யார், எவ்வாறு கொடுத்தனர்? பிறகு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய உளவு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.

© வேதபிரகாஷ்

23-11-2015

 

[1] http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-190057.html

[2] It may be recalled that in December 2014, Bengaluru police had arrested Mehdi Masroor Biswas from the city for operating a pro-ISIS Twitter handle. Biswas owned @ShamiWitness, which had 17,700 followers.

http://timesofindia.indiatimes.com/india/Engineers-among-9-ISIS-bound-Indians-deported-by-Turkey/articleshow/46079886.cms

[3] http://www.bbc.com/tamil/india/2014/12/141212_isistwitter

[4] http://www.bbc.com/tamil/india/2014/12/141213_indiatwitter

[5] http://www.dailythanthi.com/News/State/2015/11/21125309/ISIS-The-extremist-movement-2-young-men-who-went-to.vpf

[6]  பாரத்.நியூச்.ஆன்லைன், .எஸ்..எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற 2 தமிழக வாலிபர்கள், 21 November, 2015.

[7] மாலைமலர், .எஸ். இயக்கத்தில் சேர்ந்த 2 தமிழக வாலிபர்கள்: உளவுத்துறை விசாரணை, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 21, 12:07 PM IST.

[8] http://indianexpress.com/article/india/india-news-india/two-chennai-men-deported-from-turkey-for-trying-to-join-is/

[9] http://bharathnewsonline.com/714/

[10] தமிழ்.வெப்துனியா, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழக இளைஞர்களை நாடு கடத்திய துருக்கி அரசு: பரபரப்பு தகவல்கள், சனி, 21 நவம்பர் 2015 (13:59 IST).

[11]  தினத்தந்தி, .எஸ்..எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற 2 தமிழக வாலிபர்கள் நாடு கடத்தல், மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 21,2015, 12:53 PM IST; பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 21,2015, 12:53 PM IST.

[12] நியூ.இந்தியா நியூஸ், துருக்கிசிரியா எல்லையில் சிக்கிய .எஸ். இயக்கத்தில் சேரச் சென்ற தமிழக இளைஞர்கள், சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 06:15.04 AM GMT +05:30.

[13] http://tamil.oneindia.com/news/tamilnadu/turkey-deports-2-tamil-nadu-men-trying-contact-isis-240380.html

[14] http://www.newindianews.com/view.php?23DA2cUMU42M4302lA2dyO322A03e3Ag2bImN3

[15]  http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/turkey-deports-2-tamil-nadu-men-for-trying-to-contact-isis-115112100031_1.html