Posted tagged ‘வெறி’
ஒக்ரோபர் 15, 2013
அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் தான் பயன் படுத்த வேண்டும் – மலேசிய நீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்பு – அதாவது காபிர்கள் உபயோகப் படுத்தக் கூடாது!

2009 முதல் 2013 முதல் கடவுளுக்கு எந்த சொல்லை உபயோகிப்பது?: 2009ம் ஆண்டு மலேசியாவில் உள்ள கத்தோலிக்கக் கிறிஸ்துவ பத்திரிகை “ஹெரால்ட்” அல்லா என்ற வார்த்தையை கிருத்துவக் கடவுளுக்காக உபயோகப்படுத்தி இருந்தது[1]. குறிப்பாக மலாய் மொழி பைபிளில் கடவுளுக்குப் பதிலாக “அல்லா” என்ற வார்த்தை உபயோகப் படுத்தப் பட்டது[2]. அதை எதிர்த்து முஸ்லிம் இயக்கத்தினர் வழக்குத் தொடர்ந்தன. அதனால், “ஹெரால்ட்” பத்திரிக்கைக்காரர்கள் அதனை உபயோகிக்கக் கூடாது என்று கோர்ட் தடை விதித்தது[3]. இதற்கு எதிராக கிருத்துவ நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இடைக்கால தடையை அது ரத்து செய்தது. இதில் உள்துறை அமைச்சகம் தலையீடு இருந்தது. இதனால், 2010ல் முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள், குறிப்பாக, சர்ச்சுகள் தாக்கப்பட்டன. பெட்ரோல் குண்டு, கற்கள், பெயிண்ட் முதலியை அத்தாக்குதல்களில் உபயோகப் படுத்தப் பட்டன[4]. அரசு மேல்முறையீடு செய்தது.

மலேசிய அரசியல்வாதிகளும், இந்திய அரசியல்வாதிகளைப் போலத்தான் செயல்படுகின்றனர்: 2009ல் நஜீப் ரஸாக் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்பொழுது, மலாய் முஸ்லிம் மற்றும் முஸ்லிம்-அல்லாத சிறுபான்மையினருடன் குறிப்பாக சீன மற்றும் இந்திய வம்சாவளி மக்களுடன் தாஜா செய்து கொண்டிருந்தார்[5]. பிறகு முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் என்று முஸ்லிம் இயக்கங்களுடன் சேர்ந்து செயல்படுகிறார். மலேசியாவின் மக்கட்தொகையில் 60% முஸ்லிம்கள், 9% கிருத்துவர்கள். இப்ராஹிம் அன்வர் கடந்த மலேசிய மேமாத தேர்தல், ஒரு பெரிய பிராடு / மோசடி என்று வர்ணித்தார்[6]. எது எப்படியாகிலும், முஸ்லிம்-அல்லாதோர் மலேசியாவில் அவஸ்தைப் படவேண்டியதுதான். நஜீப் ரஸாக், இப்ராஹிம் அன்வர் முதலியொர் பேசுவது, நடந்து கொள்வது, சோனியா, திக்விஜய் சிங், முல்லாயம் சிங் யாதவ், கருணாநிதி போன்றே உள்ளது. ஆகவே, அடிப்படைவாதிகளுக்குக் கொண்டாட்டம் தான்!

அல்லா முஸ்லிம்களுக்குத் தான் சொந்தமானவர்: “அல்லா” என்ற சொல்லை கடவுளைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தக் கூடாது என்று மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது[7]. இது, மலேசிய சிறுபான்மை மக்களின் உரிமை விவகாரத்தில் தலையிடும் முடிவு என்ற அளவில் மத ரீதியான பதற்றம் உருவாக வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. திங்கள்கிழமை 14-10-2013 அன்று மலேசிய நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள், கடந்த 2009ல் கீழ் நீதிமன்றம் ஹெரால்ட் என்ற பத்திரிகைக்கு அல்லா என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதி வழங்கியதை ரத்து செய்து, இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. கிறிஸ்துவ மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக இந்த அல்லா என்ற வார்த்தை கட்டாயம் இல்லை என்பதாலும், கடவுளைக் குறிக்க அல்லா என்ற வார்த்தை முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என்பதால், மற்றவர்கள் குறிப்பிடுவதில் குழப்பம் ஏற்படும் என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அல்லா என்ற வார்த்தை இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னமே உபயோகத்தில் இருந்தது, கடவுள் என்பதை குறிக்கும் இந்த சொல்லை அனைவரும் பயன்படுத்த உரிமை உண்டு. என்றெல்லாம் வாதிடப்பட்டது[8]. மூன்று நீதிபதிகள் கொண்ட இத்தீர்ப்பு முக்கியமாகக் கருதப்படுகிறது.

“அல்லா” என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்றால், முழு பைபிளையும் மாற்றி மொழிபெயர்த்து எழுத வேண்டிய நிலை உருவாகும்: இதே கருத்தைத்தான் மலேசிய அரசும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து வாதிட்டது. மேலும், 2008ல் பொதுமக்களின் மன நிலைக்கு ஏற்ப, பத்திரிகையில் இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதித்த உள்துறை அமைச்சகத்தின் முடிவை தடை செய்வதாகவும் நீதிமன்றம் கூறியது. மலேசியாவில் உள்ள கத்தோலிக்க மதத்தின் செய்தித்தாள்கள் சார்பில் வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவில், மலேசியாவிலும், மலேசியாவை அடுத்த புருனே தீவிலும் நூற்றாண்டுகளாக மலாய் பேசும் கிறிஸ்துவர்கள் அல்லா என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர் என்றார்கள். இருப்பினும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவின் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்று கூறியுள்ளனர். “அல்லா” என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்றால், முழு பைபிளையும் மாற்றி மொழிபெயர்த்து எழுத வேண்டிய நிலை உருவாகும் என்று சபா பிராந்திய, எஸ்டர் மோய்ஜி என்பவர் பிபிசியிடம் முறையிட்டுள்ளார்[9].

கிருத்துவ-முகமதிய இறையியல் மோதல்கள்: “ஹெரால்ட்” செய்தித்தாளின் ஆசிரியர் லாரன்ஸ் ஆன்ட்ரூ [ Lawrence Andrew, editor of the Catholic newspaper, The Herald] மேல்முறையீடு செய்ய தீர்மானிக்த்துள்ளார்[10]. 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் நாட்டின் தலைமையிடமான புத்ராஜெயாவுக்கு வெளியே கூடியிருந்து இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, “அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட்டன. ஜெப்ரிஜால் அஹமது ஜாபர் என்பவர், “ஒரு முஸ்லிமாக நான் அல்லா என்ற வார்த்தையை ஜிஹாத் போல கருதுகிறேன். அதனை நான் ஆதரிக்கிறேன்”, என்று கூறுகிறார்[11]. இந்தோனியா, போனியோ மற்றும் அரபு நாடுகள், முதலியற்றில் உள்ள கிருத்துவர்கள் அவ்வார்த்தையைத் தொடர்ந்து உபயோகப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளனர்[12].

© வேதபிரகாஷ்
14-10-2013
[5] Prime Minister Najib Razak, who took office in 2009, has walked a tight-rope between pleasing his ethnic Malay Muslim base while not alienating the country’s non-Muslim ethnic Chinese and Indian minorities.
பிரிவுகள்: அருவம், அல், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லா, அல்லாஹ், அழிப்பு, இடிப்பு, இறைவன், இலா, இலாஹி, இல், உடைப்பு, உருவம், எலோஹிம், எல், ஒழிப்பு, கடவுள், கல், குதா, குரான், சிலை, தெய்வம், நாசம், பைபிள், விக்கிரகம், வெறி
Tags: அருவம், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லா, அல்லாஹ், அழிப்பு, இடிப்பு, இறைவன், இலா, இலாஹி, இல், உடைப்பு, உருவம், எலா, எலோஹிம், எல், கடவுள், குதா, சிலை, துலுக்கர், தெய்வம், நாசம், மதவெறி, மீன், முகமதியர், முஸ்லிம், விக்கிரகம், வெறி
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 18, 2013
அப்துல் கரீம் துண்டா என்கின்ற அப்துல் குட்டூஸ் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி கைது – வெளிவரும் விவகாரங்கள்!

கடினமானஉழைப்பிற்குப்பிறகுதுண்டாவைப்பிடித்தது: இந்திய புலன்விசாரணைக் குழுக்கள் மிகவும் கஷ்டப்பட்டுத்தான், இவனைப் பிடித்திருக்கிறார்கள்[1]. இன்டர்போலில் விவரங்களைக் கொடுத்து, தொடர்ந்து எல்லை போக்குவரத்து, நேபாளத்தில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களைக் கண்காணிப்பது, ஆப்கானிய தீவிரவாதிகளின் ஊடுருவல் முதலியவற்றை பின்பற்றித்தான் இவனைப் பிடிக்க முடிந்தது. பாபரி மஸ்ஜித் பிரச்சினையை வைத்துக் கொண்டு ஜிஹாதி தீவிரவாதத்தை, இந்தியாவிற்கு எதிராக, ஒரு மாற்றுப் போராக உருவாக்கியது, இந்த துண்டா, தாவூத் இப்ராஹிம் மற்ற பயங்கரவாதிகள் தாம். லஸ்கர்-இ-தொய்பாவின் சித்தாந்தியாக செயல்பட்டவன் பிடிபட்டதில் பல உண்மைகள் தெரியவருகின்றன[2]. இந்தியாவின் மீது இப்படி எல்லா வழிகளிலும் ஜிஹாதி செயல்பட்டு வரும் போது, செக்யூலரிஸ அரசியல்வாதிகள் தமக்கேற்ற வழிகளில் செயல்படுவதால், எந்த சாதகமான முடிவுகளையும், இந்தியாவின் நலன், பாதுகாப்பு, அமைதி முதலியவற்றிற்காக வேண்டிய நன்மைகளும் கிடைக்காமல் போய்விடும். அத்தகைய நிலையைத்தான் சோனியா காங்கிரஸ், முல்லாயம் சிங் யாதவ், கம்யூனிஸ கட்சிகள் செய்து வருகின்றன.

அப்துல்கரீம்துண்டாவின்குடும்பத்தாரின்நிலை: அப்துல் மாலிக் என்ற அவனுடைய சகோதரர், அவன் பிடிபட்டது பற்றி கூறும் போது, “அவன் மரவேலை செய்து கொண்டிருந்தான் என்றுதான் எனக்குத் தெரியும். 1991க்குப் பிறகு அவனைப் பார்க்கவில்லை. அவனை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஒருவேளை பார்த்தால், செய்துள்ள இக்காரியங்களால், நீ செய்த சாதித்தாய்?”, என்று கேட்பேன்[3]. அவனுடைய மைத்துனி தஹிரா கூறும் போது, “அவனுக்குரிய தண்டனை கிடைக்கவேண்டும். அவனால்தான் எங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. எப்பொழுதெல்லாம் குண்டு வெடித்ததோ அப்பொழுதெல்லாம் போலீஸார் எங்களிடம் வந்து விசாரிப்பார்கள்”, என்றார்[4]. தொடர்ந்து, “துண்டாவின் இரு மனைவிகள் – ஜரினா மற்றும் மும்தாஜ் மற்றும் ஆறு குழந்தைகள் 1993ல் ஒரு இரவில் எங்கோ சென்றுவிட்டனர். துண்டா மறைந்த பிறகு அதற்குப் பிறகு அவர்கள் எங்குசென்றனர் என்று தெரியவில்லை”, என்றும் சொன்னார்[5]. போலீஸார், துண்டாவிடம் அவனுடைய குடும்பத்தைப் பற்றி கேட்டபோது, தானும் தன்னுடைய குடும்பத்தை சந்திக்க விரும்பவில்லை என்றான்[6]. ஒருவன் தீவிரவாதியாக மாறும் போது, குடும்பம் எப்படி கஷ்டப்படுகிறது என்றும் தெரிகிறது.

தாவூத்இப்ராஹிமைப்பற்றிபத்துநாட்களில்செய்திகள்வந்துக்கொண்டிருக்கின்றன: பத்து நாட்களுக்கு முன்னால் தான், ஷார்யார் கான் என்ற பாகிஸ்தானின் சிறப்பு தூதர் “தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருந்தான். ஆனால், அவன் பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்டான். அப்படி அவன் இருந்தால், பிடிக்கப்பட்டு கைது செய்யப்படவேண்ட்டும். அவன் அமீரகத்தில் [United Arab Emirates] இருக்கக்கூடும்”, என்றார்[7]. வளைகுடா நாடுகள் ஜிஹாதிகளுக்கு சொர்க்க பூமி போல உள்ளதும் தெரிய வருகிறது. துபாயில் எப்படி யார் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்றால், சவுதியில், வேண்டிய உதவி, பயிற்சி முதலியவற்றைப் பெறலாம் என்றுள்ளது. ஹாவிஸ் சையது இங்கு வந்து படித்துச் சென்றதை கவனிக்க வேண்டும். துண்டாவின் நெருங்கிய நண்பர்தான் ஹாவிஸ் சையது. அதற்கு முன்னால் 14-08-2013 அன்று லண்டனில் தாவூதின் வலதுகை போன்றிருந்து வேலை செய்து வந்த இக்பால் மிர்சி (63) என்பவன் ஹார்ட்ட் அட்டாக்கினால் இறந்து போனான் என்ற செய்தி வந்தது[8]. 1994ல் இந்தியா இன்டர்போல் மூலம் சிவப்பு அறிக்கை கொடுத்திருந்தது. ஸ்காட்லான்ட் யார்ட் போலீஸாரால் 1995ல் பிடிக்கப்பட்டாலும், இந்தியாவிற்கு அனுப்ப உள்ளூர் மாஜிஸ்ட்ரேட் மறுத்து விட்டார்[9]. அதுமட்டுமல்லது இங்கிலாந்தில் தங்கிக் கொள்ள அனுமதியும் கொடுக்கப்பட்டது. இப்பொழுது ஹாவிஸ் சையதிடம் தாவூத் இப்ராஹிமை தான்தான் அறிமுகப்படுத்தினேன் என்று துண்டா ஒப்புக் கொண்டுள்ளான்[10]. அதுமட்டுமல்லாது ஐ.எஸ்.ஐ, சீக்கிய தீவிரவாத இயக்கமான பப்பர் கல்ஸாவிற்கும் உதவி செய்து கொண்டிருந்தது என்பதையும் உறுதி செய்தான்[11] என்ற விவரங்கள் வருகின்றன. மொத்தமாக, பாகிஸ்தான் எப்படி இந்திய விரோதத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்று தெரிகிறது.

டெல்லிகாமன்வெல்த்போட்டியில்குண்டுவைக்கதிட்டமிட்டான்: துண்டாவிடம்நடந்தவிசாரணையில்தகவல்:[12] டெல்லியில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து அப்துல் கரீம் துண்டாவிடம் சிறப்புப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று நடந்த முதல் நாள் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. லஷ்கர்–இ– தொய்பாவின் முக்கிய தலைவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள்? இந்தியாவில் எங்கெங்கு ரகசிய ஆதரவாளர்கள் உள்ளனர்? எங்கெல்லாம் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது? அவை எப்படி நடத்தப்பட்டன என்பன போன்று பல கேள்விகள் அவனிடம் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த அப்துல் கரீம் துண்டா 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியின்போது தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி மிகப்பெரும் நாசவேலைக்கு திட்டமிட்டதாக கூறினான். ஆனால் குண்டு வெடிப்பை நடத்த இருந்த 2 பேர் போலீசாரிடம் பிடிபட்டுவிட்டதால் தனது தாக்குதல் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக கூறினான். 1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தான் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்தான். 1980ம் ஆண்டுகளில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மூலம் வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்து இவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன்பின்னர் வங்க தேசம் சென்ற இவர் லஷ்கர் இயக்கத்தின் தலைவர் ஷகிவுர் லக்வியின் நேரடி மேற்பார்வையில் செயல்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது[13]. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தீவிரவாதிகள் அடுத்து எத்தகைய தாக்குதல் திட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று போலீசார் துண்டாவிடம் விசாரித்து வருகிறார்கள்.

பாகிஸ்தானின்ஜிஹாதிப்போரைஇந்தியாஎதிர்கொள்ளவேண்டும்: இந்தியாவில் பிறந்தும், முஸ்லிம் அடிப்படைவாதம், மதவாதம் என்ற சித்தாந்திங்களால், முஸ்லிம்கள் எளிதில் ஜிஹாதி வெறியினால், தீவிரவாதத்தில் இறங்குகிறார்கள் என்று தெரிகிறது. பாகிஸ்தானின் ஊக்குவிக்கும் போக்கையும் கவனிக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள், ஒரு பக்கம் நட்பு, பேச்சு வார்த்தை என்றெல்லாம் பேசிக் கொண்டு, மறுபக்கத்தில் தொடர்ந்து, தீவிரவாததை இந்தியாவின் மீது ஜிஹாதாக – புனிதப் போராக நடத்தி வருகிறது. அதாவது, மதரீதியில் போரை நிகழ்த்தி வருகிறது. 1965, 1972, 2003 ஆண்டுகளுக்குப் பிறகு, நேரிடையான போர்களைத் தவிர்த்து, இத்தகைய தீவிரவாதிகளின் தாக்குதல்களை போராக நடத்தி வருகின்றது. அதே நேரத்தில், எல்லைகளிலும், “தனது நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை – நாடற்ற மக்களின் வேலை” என்று சாக்கு சொல்லிக் கொண்டு, எல்லைமீறல் தீவிரவாதத்திலும் ஈடுபட்டுள்ளது. எப்பொழுதெல்லாம், பேச்சு வார்த்தைகள் நடக்கின்றனவோ அல்லது நடக்கப் போகின்றதோ, அந்நேரத்தில் இப்படி, அழுத்தத்தை ஏற்பட எல்லைகளில் சுடுதல், ஊடுருவல், எல்லைகளில் வாழும் மக்களைத் தாகுதல், பீதி கிளப்புதல் முதலிய வேலைகளில் ஈடுபடுவதையும் காணலாம். ஆனால், இந்திய ஆட்சியாளர்கள் தொடைநடுங்கிப் பேர்வழிகளாக இருப்பதனால், பாகிஸ்தான் அத்தகைய செக்யூலரிஸ நிலையை சாதகாமாக ஆக்கிக் கொள்கிறது.

Susanna-geelaani-2010
மனிதஉரிமைஆட்கள்இந்தஉண்மையினைஅறிந்துசெயல்படவேண்டும்: அருந்ததி ராய், தாரிக் அலி, ஷப்னம் ஹஸ்மி, போன்றோர் மனித உரிமைகள் என்ற சாக்கை வைத்துக் கொண்டு, பிரிவினைவாதிகளுடன் ஜோடி சேர்ந்து கொண்டு உபன்யாசம் செய்து வந்துள்ளனர். ஆனால், இத்தகைய நேரத்தில் அவர்கள் எல்லோரும் காணாமல் போய்விடுவர். நட்சத்திர ஹோட்டல்கள், பாதுகாப்பாக உள்ள ஏசி அரங்குகள் முதலியவற்றில் தான் இவர்களது சொற்பொழிவுகள் இருக்கும். பொது நிகழ்சிகளில் அவ்வாறு பேச மாட்டார்கள். இருப்பினும் “தி ஹிந்து” போன்ற பிரபல நாளிதழ் முதல் “பாம்பேட் கம்யூனலிஸம்” போன்ற வடித்தெடுத்த மதவெறி பிரச்சார ஏடுகள் வரை இவற்றைப் பற்றி விவரங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கும். ஆனால், இவ்வாறான தீவிரவாதிகள் பிடிபடும் போது, குண்டுகள் வெடிக்கும் போது காணாமல் போய்விடுவர். செய்திகள் வாசிக்கப்படும் அல்லது அச்சடிக்கப் படும், தலையங்கத்தில், நடுபக்கத்தில் அவர்களை எதிர்த்து எதுவும் எழுதப்பட மாட்டாது. மனித உரிமை ஆட்கள் தங்களது போலித்தனத்தை மாற்றிக் கொண்டு, உருப்படியான பேச்சுகளை பேச வேண்டும்.

Arundhati-Roy-SAR.Jilani-2010
செக்யூலரிஸசித்தாந்தத்தைவைத்துக்கொண்டுபாகிஸ்தானைஎதிர்கொள்ளமுடியாது: இந்தியாவின் மீது இப்படி எல்லா வழிகளிலும் ஜிஹாதிகள் செயல்பட்டு வரும் போது, செக்யூலரிஸ அரசியல்வாதிகள் தமக்கேற்ற தாஜா செய்யும் வழிகளில் செயல்படுவதால், எந்த சாதகமான முடிவுகளையும், இந்தியாவின் நலன், பாதுகாப்பு, அமைதி முதலியவற்றிற்காக வேண்டிய நன்மைகளும் கிடைக்காமல் போகின்றன. அத்தகைய நிலையைத்தான் சோனியா காங்கிரஸ், முல்லாயம் சிங் யாதவ், கம்யூனிஸ கட்சிகள் செய்து வருகின்றன. இங்கு இந்திய அரசியல்வாதிகள், செக்யூலரிஸ போர்வையில் இந்த தீவிவாதிகளுக்கு, தங்களது கொள்கைகளினால், மெத்தனமான போக்குகளால், மறைமுக ஆதரவினால் உதவி வருகிறார்கள். இதனால் தான். “உள்ளூர் தீவிரவாதம்” என்பதனை கண்டு கொள்ளாமல், முஸ்லிம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர், ஓட்டு கிடைக்காமல் போகுமே என்று கணக்கு போடுகின்றனர்.

இந்தியத்தனமா-இஸ்லாமியத்தனமா-ஜிஹாதித்தனமா
இந்தியமுஸ்லிம்கள்தீவிரவாதத்தைக்கண்டறிந்துஅதனைஇஸ்லாத்திலிருந்துபிரித்துப்பார்க்கவேண்டும்: இந்திய முஸ்லிம்கள் இப்பொழுதுவது, இத்தகைய இந்திய விரோத செயல்களை அவ்வாறு அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், முஸ்லிம்கள் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. பாகிஸ்தானிலேயே, இஸ்லாம் பெயரில் முஸ்லிம்கள் அடித்துக் கொள்கின்றனர், குண்டுவெடிப்பு நடத்துகின்றனர், மசூதிகளில் கூட முஸ்லிம்களை கொலை செய்கின்றனர் என்பதனையெல்லாம் அறிந்து புரிந்து கொள்ளும். இஸ்லாம் தான் தீர்வு என்ற மூடநம்பிக்கையைக் கொண்டு இருக்கக் கூடாது.
© வேதபிரகாஷ்
18-08-2013
[7] For the first time, Pakistan has admitted to the presence of one of India’s most wanted terrorists Dawood Ibrahim but said he has been “chased out” and could be in the United Arab Emirates. “Dawood [Ibrahim] was in Pakistan but I believe he was chased out of Pakistan. If he is in Pakistan, he should be hounded and arrested. We cannot allow such gangsters to operate from the country,” said Shahryar Khan, Pakistan Prime Minister Nawaz Sharif’s special envoy for improving relations with India.
http://www.thehindu.com/news/national/dawood-chased-out-of-pakistan-shahryar-khan/article5008042.ece?ref=relatedNews
[9] Underworld don Dawood Ibrahim’s close aide Iqbal Mirchi, an accused in the 1993 Mumbai serial blasts case, died of a heart attack in London on Wednesday night. Mirchi, 63, the right-hand man of India’s topmost terrorist, was also facing drug smuggling charges in India. He had been living in a large six-bedroom home in an exclusive part of Hornchurch, a town in Essex, north-east of London. Ranked among the world’s top 50 drug barons, Muhammed Iqbal Memon or Iqbal Mirchi had been issued an Interpol Red Corner Notice in 1994 on Central Bureau of Investigation’s request. In April 1995, officers from Scotland Yard had raided Mirchi’s home and arrested him on drugs and terrorism charges in connection with the blasts in Mumbai. However, an extradition request by India was turned down by magistrates here. Scotland Yard’s investigation of Mirchi, which ended in 1999, found no evidence of criminal activity and in 2001 the UK Home Office granted him indefinite leave to remain in the U.K. India’s most-wanted criminal Dawood Ibrahim is on FBI’s list of top terrorists in the world.
பிரிவுகள்: இஸ்லாமிஸ்ட், இஸ்லாம், உளவாளி, உளவு, ஒற்றன், குண்டு, குரோதம், கொலைவெறி, சதி, துண்டா, துண்டு, துரோகம், நட்பு, பகை, மதவெறி, விரோதம், வெறி, வேவு
Tags: அப்துல், அப்துல் கரிம், அப்துல் கறீம், ஆணி, உளவாளி, உளவு, ஒற்றன், ஒற்று, கரீம், குண்டு, குண்டு வெடிப்பு, கொலைவெறி, தற்கொலை குண்டு வெடிப்பு, துண்டா, துண்டு, நைட்ரேட், பைப் வெடிகுண்டு, மதவெறி, மும்பை குண்டு வெடிப்பு, ரசாயனம், வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெறி, வேவு
Comments: Be the first to comment
ஜூலை 16, 2013
தீவிரவாதம், முஸ்லிம்கள், தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள், கட்சிகளின் போட்டாபோட்டி!
வழக்குகள் நடத்தப்படுவது, தேர்தல்கள் வருவது: தீவிரவாத வழக்குகளில் சோனியா அரசின் நிலையற்றத் தன்மையினாலும், போலீஸ், சிறப்பு புலனாய்வு குழு, சிபிஐ முதலிவற்றின் மீது அதிகாரம் செல்லுத்துவதாலும் காலதாமதம் ஏகுகள் கிடப்பில் போடப் படுக்கின்றன. அந்நிய வியாபார விருப்பங்களுக்கேற்றபடி ஏதாவது ஒரு முக்கிய தீர்மானம் எடுக்க வேண்டும், பஞ்சாயத்து, மாநில மற்றும் மத்திய தேர்தல்கள் வருக்கின்றன எற்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு நடப்புகளில் ஏதாவது பாதிப்பு வரும் என்றால் அத்தகைய வழக்ன்றால், ஏதோ ஆணயுள்ளது போல அவ்வவழக்குகள் முடக்கப்பட்டு விட்டும். ஆரம்பத்தில் பரபரப்பு ஏற்படுத்தி, பிறகு அமைதியாகி விடும். உதாரணத்திற்கு சமீபத்தைய பெங்களூரு குண்டு வெடிப்பை எடுத்துக் கொள்ளலாம். கர்நாடக தேர்தல் என்பதால், குறிப்பாக பிஜேபி அலுவலகம் அருகில் (மே 2013) குண்டு வெடித்தது. முஸ்லிம் அமைச்சர் உடனே அது பிஜேபிக்கு சாதகமாக அமையும் என்றார். ஆனால், காங்கிரஸ்தான் வென்றது. அதாவது, பீஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் குண்டு வெடித்தால், பிஜேபிக்கு எதிரான விளைவு ஏற்படுத்தும். இப்பொழுது (ஜூலை 2013) பீஹாரில், புத்த கயாவில் குண்டுகள் வெடித்துள்ளன. உடனே திக்விஜய சிங் சங்பரிவாருக்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம் என்கிறார்.
“இந்திய முஜாஹித்தீன்” என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்: காங்கிரஸில் திக்விஜய சிங் உளறுகிறார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அர்னவ் கோசுவாமி பேட்டியில் (14-07-2013) இவ்விஷயத்தில் குறிப்பாகக் கேள்விகள் பேட்டபோது, மழுப்பலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன, இந்திய முஜாஹித்தீன் என்றே சொல்லக் கூடாதா என்று கேட்டபோது, ஆமாம் “இந்திய முஜாஹித்தீன்” என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள், என்று பதிலளித்தார். அதாவது குண்டுகள் வெடித்தாலும், இந்திய முஜாஹித்தீன் பொறுப்பேற்றாலும் அதைப் பற்றி விவரிக்கக் கூடாது, தொடர்ந்து பேசக் கூடாது, ஏனென்றல், அப்பொழுது மக்களுக்கு “இந்திய முஜாஹித்தீன்” என்றால் முஸ்லிம்கள் அமைப்பு என்று தெரிந்து விடும், அதனால், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற கருத்து வலுப்படும், என்றெல்லாம் வக்காலத்து வாங்கினார். அப்படியென்றால், வேறு பெயரில் முஸ்லிம்கள் நாளைக்கு குண்டுகள் வெடித்தால் என்னவாகும். ஒருவேளை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத், பஜரங் தள் என்ற பெயர்களில் குண்டு வைத்தால் என்னாகும். ஒருவேளை இவரே அத்தகைய சூழ்ச்சியை சூசகமாக சொல்லிக் கொடுக்கிறாரா.
தீவிரவாதத்தின் நிறம், திசைத் திருப்பல் – செக்யூலார் மயமாக்கப்படும் தீவிரவாதம்: தீவிரவாதத்தை நிறமிட்டு பேசியுள்ளதும் சோனியா காங்கிரஸ் அமைச்சர்கள் தாம். சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, “காவி தீவிரவாதம்” என்ற சொற்றொடரை உபயோகப் படுத்தினார். இப்பொழுது ஷிண்டே அதனை உபயோகப் படுத்தினார். திக்விஜய சிங் அடிக்கடி உபயோகப் படுத்தி வருகிறார். இதனால் “காவி தீவிரவாதம்” என்ற சொற்றோடர் உபயோகத்தில் வந்தது. ஆனால், சமதர்ம முறைப்படி “பச்சை தீவிரவாதம்”, “நீல தீவிரவாதம்”, “சிவப்பு தீவிரவாதம்”, “மஞ்சள் தீவிரவாதம்” என்றெல்லாம் பேசப்படவில்லை அல்லது சொல்லவேண்டுமே என்று “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் அவை எந்த நிறத்துடனும் அடையாளம் காட்டப்படவில்லை. இங்குதான் இந்திய அறிவுஜீவிகளின் போலித்தனம், சித்தாந்திகளின் பாரபட்சம், ஊடகங்களின் நடுநிலையற்றத்தன்மை முதலியவை அப்பட்டமாக வெளிப்படுகின்றன.
முஸ்லிம்கள் கேட்டுக் கொண்டதால் “டாஸ்க் போர்ஸ்” உருவாக்கித் தர ஒப்புதல்: சிறுபான்மையினர் அமைச்சர் என்றிருக்கும் ரஹ்மான் கான்[1] என்பவர் முஸ்லிம்கள் தம்மிடம் வந்து கேட்டுக் கொண்டார்கள் என்று ஒரு உடனடி நடவடிக்கை பிரிவு / படையை (Task force) ஒன்று உருவாக்கித் தர ஒப்புக் கொண்டார்[2]. அதாவது தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் வழக்குகளை சீக்கிரம் முடித்துத் தர அவ்வாறான அமைப்பை உருவாக்கப்படுவதாக அறிவித்தார். இங்கிலாந்து தீவிரவாதம் தொடர்பான பிரச்சினைகளை தீர்மானிக்க மற்றும் தீவிரவாதத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அத்தகைய அமைப்பை உருவாக்கியிருப்பதை சுட்டிக் காட்டி, இந்தியாவிலும் அத்தகைய அமைப்பு இருந்தால் நல்லது என்றார். அப்படியென்றால் முஸ்லிம்கள் மட்டும் தான் தீவிரவாதிகள் என்றகாதா என்று ஊடகக் காரர்கள் கேட்க, உடனே “இல்லை, நான் அப்படி சொல்லவில்லை. தீவிரவாதத்தில் “முஸ்லிம் தீவிரவாதம்”, “இந்து தீவிரவாதம்” “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் இல்லை[3]. எதுவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்”, என்று “அந்தர் பல்டி” அடித்து[4], “யு-டார்ன்” உடன் தான் சொன்னதை மாற்றிக் கொண்டார்!ரதாவது வெள்ளிக்கிழமை (12-07-2013) அன்று சொன்னதை ஞாயிற்றுக்கிழமை (14-07-2013) மாற்றிக் கொண்டார்[5].
முஸ்லிம்களின் அடிப்படைவாதம் எதனைக் காட்டுகிறது?: காங்கிரஸ் எப்பொழுதும் முஸ்லிம் அமைச்சர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பேச்சார்கள் என்று வைத்துக் கொண்டு, முஸ்லிம்களை தாஜா செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்து பெருமான்மையினர் பிரச்சினைகளையும் சேர்த்து பார்க்கிறேன் என்றால் என்ன அர்த்தம்? முன்பு இந்தியதேச சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் முஸ்லிம்களுக்கு மத-அடிப்படையில் இடவொதிக்கீடு அளிக்கப்படும்[6] என்று நோய்டா கூட்டத்தில் (பிப்ரவரி 2012) பேசினார்[7]. தனது மனைவிக்காக தேர்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு வாக்குறுதி அளித்தார். அப்பொழுது தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது[8]. தேர்தல் ஆணையத்தை எதிர்த்தும் பதில் பதில் அளித்துள்ளார்[9]. காங்க்கிரஸ் கட்சியின்ன் தேர்தல் அறிக்கையிலேயே அத்தகைய வாக்குறுதி உள்ளது அதைத்தான் நான் சொன்னேன் என்று விளக்கம் அளித்தார்[10]. இது சர்ச்சையாகியதால் பிறகு வெளியுறவுத் துறைக்கு மாற்றப்பட்டார்[11].
சட்ட அமைச்சரின் மதவாத பேச்சுகளும், கொலை மிரட்டல்களும்: அரவிந்த் கேசரிவால்[12] விஷயத்தில் “பேனாவில் மைக்கு பதிலாக ரத்தம் நிரப்பப்பட வேண்டியிருக்கும்”, என்றெல்லாம் ஆவேசத்துடன் மிரட்டினார்[13]. அதாவது “கொலைசெய்து விடுவேன்” என்று மறைமுகமாக மிரட்டினார்[14].
Khurshid is heard saying: “Mujhe wakilon ka mantri banaa diya, mujhe law minister banaa diya, aur kahaa kalam se kaam karo. Karoonga, kalam se kaam karoonga, lekin lahu se bhi kaam karoonga… Wo jaayein Farrukhabad, woh aayein Farrukhabad, lekin laut kar bhi aayein Farrukhabad se… Wo baat yeh kehte hain ki hum sawaal poochhenge, tum jawaab dena. Hum kehte hain ki tum jawaab suno, aur sawaal poochhna bhool jaao (I have been made the Law Minister and asked to work with the pen. I will work with the pen but also with blood… Let him go to Farrukhabad, but let him also return from Farrukhabad. They say they will ask questions and we should respond. I say that you hear the reply and forget asking questions).” – |
ஆம் ஆத்மி கட்சியின் இணைதளத்தில் இதை வெளிப்படையாக வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது[15].
வேதபிரகாஷ்
© 16-07-2013
[1] Four criminal cases are pending against Rahman Khan himself and major being the charges of embezzlement of the Amanath Cooperative Bank’s funds of Rs.156.77 crore. and also accused of causing loss of property wort Rs 2 lakh crore to Wakf board affecting several thousands of people belonging to minority community. Knowing his past deeds, how can anyone believe him and expect him to do any justice to anyone including Muslims youths who are jailed on terror charges.
http://www.deccanchronicle.com/130712/news-politics/article/rahman-khan-kicks-row
[4] Minority Affairs Minister Rahman Khan on Sunday clarified his demand for setting up a task force to oversee terror cases involving Muslims, which placed him under fire from the Opposition. Khan on Friday (12-07-2013) had said that a task force will ensure justice for “innocent Muslim youth” languishing in jails in terror cases. The minister has now backtracked saying the task force will prevent the rise of radicalisation and terrorism amongst minorities. He also said that the government will soon launch a new helpline for the minorities for lodging complaints against human rights violations.
http://ibnlive.in.com/news/rahman-khan-does-a-uturn-on-setting-up-task-force-for-muslims/406472-37-64.html
[8] On Sunday, while campaigning for his wife, Mr Khurshid said that if it is elected, the Congress will set aside a nine per cent sub-quota for UP government jobs for backward Muslims; this would be carved out of existing reservation for Other Backward Castes (OBCs) in UP. The minister said more than eight Muslim castes would benefit from this move. The UP election office has taken cognisance of a newspaper report to serve notice on Louise Khurshid. She has been asked to explain within three days the statements made by her husband. The notice to Mr Khurshid would be served by the Election Commission, sources said, based on a complaint made by the BJP this morning.
http://www.ndtv.com/article/assembly-polls/salman-khurshid-in-trouble-over-muslim-quota-speech-165484
[10] Union Law Minister Salman Khurshid has criticised the Election Commission (EC) for issuing a notice to him for his Muslim sub-quota promise and claimed he did not violate the model code of conduct. Khurshid defended his announcement of granting sub-quota to Muslims if Congress came to power in Uttar Pradesh and insisted that it is not a poll violation of any sorts. Khurshid had promised 9 per cent sub-quota for backward Muslims within 27 per cent OBC quota in Uttar Pradesh if the party wins the Assembly elections.
http://ibnlive.in.com/news/muslim-quota-is-in-congress-manifesto-says-salman-khurshid/219917-37-64.html
பிரிவுகள்: அன்சார், ஆர்.எஸ்.எஸ், இந்திய முஜாஹித்தீன், இஸ்லாமிய தீவிரவாதம், கொலை, கொலை மிரட்டல், கொலைவெறி, சல்மான் குர்ஷித், சிதம்பரம், ஜிஹாதி, ஜிஹாத், தீவிரவாதம், தேர்தல், பஜரங் தள், பாஜக, பிஜேபி, முஜாஹித்தீன், ரத்தம், ரஹ்மான் கான், வாக்குறுதி, விஸ்வ இந்து பரிஷத்
Tags: “இந்து தீவிரவாதம்” “கிருத்துவ தீவிரவாதம்”, “சிவப்பு தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்”, “நீல தீவிரவாதம்”, “பச்சை தீவிரவாதம்”, “மஞ்சள் தீவிரவாதம்”, “முஸ்லிம் தீவிரவாதம்”, அன்சாரி, அன்சார், அரவிந்த் கேசரிவால், ஆர்.எஸ்.எஸ், இந்திய முஜாஹித்தீன், இரக்கம், இஸ்லாம், குற்றம், கொலை, கொலை மிரட்டல், கொலைவெறி, கோபம், சல்மான் குர்ஷித், ஜிஜாதி தீவிரவாதம், தண்டனை, திவிரவாதம், பஜரங் தள், பலி, பிஜேபி, புனிதம், முஸ்லிம், ரத்தம், ரஹ்மான் கான், லஸ்கர், வழக்கு, விஸ்வ இந்து பரிஷத், வெறி, வேகம்
Comments: 1 பின்னூட்டம்
பிப்ரவரி 22, 2013
ஐயோ–வெடிக்கும், அதிரும், அலறும்பாத் – ஐதராபாத்!
நவீனகாலத்தில் ஜிஹாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்: ஐதராபாத்தில் இந்துக்களைக் கேவலமாகப் பேசிய ஒவைஸியின் சகோதரர் கைதாகிய விஷயம் ஆறுவதற்குள்[1], இரண்டு குண்டுகள் வெடித்து 16 பேர்களை பலிகொண்டதுடன், 100ற்கும் மேற்பட்டவர்களை காயமடையச் செய்துள்ளது. வழக்கம் போல அதே மாதிரியான, சைக்கிள்-டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், கோவிலைக் குறிபார்த்தது, தியேட்டர்களில் வெடித்துள்ளன. இந்திய முஜாஹித்தீன் கைவரிசை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிரிகாரிகள் கூறுகிறார்கள்[2]. இடைக்காலத்தில், ஜிஹாதிகள் குதிரைகளின் மீது கத்திகளோடு வந்து, இந்தியர்களைத் தாக்கிக் கொள்ளையிட்டு, தீவிரவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு வெடி மருந்து உபயோகப்படுத்தி, பீரங்கள் மூலம் கோட்டைகளைத் தாக்கி, கொன்று அட்டூழியம் செய்தனர். அப்பொழுது எந்த யுத்ததர்மத்தையும் கடைபிடிக்கவில்லை. இந்தியர்கள் காலையிலிருந்து மாலை வரைத்தான் சண்டையிடுவார்கள். பிறகு அமைதி காப்பார்கள், ஆனால், முகமதியர்களோ வஞ்சகமாக இரவு நேரங்களிலும் தாக்கினர். நவீன காலத்தில் துப்பாக்கி வந்ததும், அதனைப் பயன்படுத்தி எல்லைகளில் தாக்கி வந்தனர். இப்பொழுது ஏ.கே.47 மற்றும் வெடிகுண்டுகளை வைத்துத் தாக்கி வருகின்றனர்.
உபயோகமற்ற உள்துறை அமைச்சர்: எல்லாம் நடந்த பிறகு, ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. முன்னமே விஷயம் தெரியுனம் என்று வேறு கூறுகிறார். பிறகு என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. இந்த இடங்களில் வெடித்தது சக்தி வாய்ந்த தாமதித்து வெடிக்கும் டைமர் குண்டுகள் என தெரியவந்துள்ளது[3]. இது குறித்து ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. உவசி மூன்று என்று இப்படித்தான் சொல்லி, பிறகு இரண்டு என்று மாற்றிக் கொண்டார். அங்குள்ள கொனார்க் தியேட்டர் அருகே 7.01 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 5 நிமிடத்தில் கொனார்க் தியேட்டர் பின்புறம் உள்ள வெங்கடாத்ரி தியேட்டரில் 2வது குண்டு வெடித்தது. 15 நிமிட இடைவெளியில் அங்குள்ள ஒரு ஓட்டலில் 3வது குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 5 பேர் மாணவர்கள். சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயார் செய்வதற்கு புத்தகங்கள் வாங்க வந்துள்ளனர்[4]. அப்போது குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கடைகள் சேதமடைந்தன.
இந்திய முஜாஹித்தீன் கைவரிசை: பயங்கரவாதி கசாப்பிற்குப் பிறகு, நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, சமீபத்தில் தூக்கிலிடப்பட்டாரன். அதனால், இந்திய முஜாஹித்தீன் மும்ஐ, பெஙளூரு, கோயம்புத்தூர், ஐதராபாத் முதலிய இடங்களைத் தாக்குதல் நடத்தலாம் என்று ரகசிய விவரங்கள் வந்துள்ளனவாம். இப்பொழுதோ, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது வேடிக்கைதான்! சைக்கிளில் டிபன்பாக்ஸ் பேக்குகள் மூலம் மிக சக்திவாய்ந்த டைமர் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது முந்தைய வெடுகுண்டுகளைப் போல, உள்ளுக்குள் வெடித்து சிதறும் (Internall Explosive Devices) வகையைச் சேர்ந்தவை. வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை ஐதராபாத் வந்து, குண்டு வெடிப்பு நடந்த இடங்களை அவர் பார்வையிட்டார். அவருடன் கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் டிஜிபி தினேஷ் ரெட்டி ஆகியோரும் இருந்தனர்.
ஒத்திகைப் பார்த்ததும், கேமரா வயர்களை அறுத்ததும்: கடந்த அக்டோபரில் கைதான சயீத் மக்பூல் மற்றும் இம்ரான் கான், தாங்கள் ஜூலை 2012ல் திசுக் நகருக்கு வந்து இடங்களைப் பார்த்துவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர்[5]. ரியாஸ் பட்கல் என்ற இந்திய முஜாஹித்தீன் தலைவனின் ஆணைப்படி இவ்வாறு ஒத்திகைப் பார்த்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்னர் தான் அங்கிருந்த கேமராவின் வயர்கள் அறுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்[6]. இவ்விவரம் போலீசாருக்குத் தெரிந்தேயுள்ளது. அமெரிக்க நாளிதழே இதைப் பற்றி வெளியிடும் போது[7], உள்துறை அமைச்சருக்கு தெரியாமலா இடருக்கும்? “காவி தீவிரவாதம்” என்றெல்லாம் பேசும் ஷிண்டே இதைப் பற்றி தெரிந்தும் ஏன் மௌனியாக இருந்தார்? சிதம்பரம் பாதையில் சென்று கழுத்தை அறுக்கிறார் போலும்!
மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது: மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஷிண்டேவிடம் டிஜிபி விளக்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் ஷிண்டே விசாரித்தார். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ஷிண்டே நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ குண்டு வெடிப்பு குறித்து மாநில அரசு துப்பு துலக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது உண்மைதான். ஆனால் எந்த இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறோம்.” இவ்வாறு ஷிண்டே கூறினார்.
ஐதராபாத் சாய்பாபா கோயிலை குறிவைத்த குண்டுகள்: இதற்கிடையே, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயில் அருகே தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்ய திட்டமிட்டு, பின்னர் இடத்தை மாற்றியது தெரியவந்துள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயிலில் குண்டு வைக்கத்தான் சதிகாரர்கள் முதலில் திட்டமிட்டுள்ளனர். நேற்று அங்கு நடந்த சிறப்பு பூஜையில் மாநகர போலீஸ் கமிஷனர் அமர்சிங் கலந்து கொண்டார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் மர்ம நபர்கள், தங்கள் திட்டத்தை கைவிட்டு, வேறு இடங்களில் குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு குண்டு வெடித்திருந்தால் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்.
இரண்டாவது முறையாக குண்டு வெடிப்பில் சிக்கியவர்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி வாசலில் 2007ம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மிர்சா அப்துல்வாசி என்ற கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். அவரது கழுத்து, கால்கள் மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். கல்லூரி படிப்பை முடித்த மிர்சா, சரியான வேலை கிடைக்காததால் கடந்த மாதம் ஐதராபாத் தில்சுக் நகரில் கொனார்க் தியேட்டர் அருகே உள்ள கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தில்சுக் நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பிலும் மிர்சா அப்துல்வாசி சிக்கினார். அவருக்கு முதுகு, இடதுபக்க விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை யசோதா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்துல்வாசியின் தந்தை முகமது அசாமுதீனுக்கு தகவல் தரப்பட்டது. தனது மகன் 2வது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
[1] ஆந்திராவில் கடந்த 2005ம் வருடம் மேடக் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி ஆசாதுதீன் ஒவைசி இன்று மேடக் கோர்ட்டின் முன் ஆஜரானார். அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
[5] Sayed Maqbool and Imran Khan, both of whom hail from Nanded district in Maharashtra, told police during interrogation after their arrest in October that they both did a recee of Dilsukhnagar, Begum Bazar and Abids in the Andhra Pradesh capital on a motorcycle in July 2012. “About a month before Ramzan in 2012, Maqbool helped Imran in doing a recce of Dilsukhnagar, Begum Bazar and Abids in Hyderabad on a motorcycle. This was done on the instruction of Riyaz Bhatkal,” the officials said.
http://www.dnaindia.com/india/report_pune-blasts-accused-did-a-recce-of-blast-site-other-hyderabad-areas_1803092
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இரட்டை வேடம், உருது மொழி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊரடங்கு உத்தரவு, ஐதராபாத், ஒவைஸி, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காங்கிரஸ், குஜராத், குண்டி, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கைது, கையெறி குண்டுகள், செக்யூலார் அரசாங்கம், ஜமாத்-உத்-தாவா, ஜஹல்லியா, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், டெட்டனேட்டர்கள், தக்காண முஜாஹித்தீன், தருமம், தர்மம், தில்ஷுக், தில்ஷுக் நகர், துப்பாக்கி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, நூருல் ஹூடா, பட்கல், பட்டகல், பட்டக்கல், பள்ளிவாசல், பழமைவாதம், பீரங்கி, புனிதப் போர், பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட், பேட்டரி கட்டைகள், மக்கா, மஜ்லிச்துல் முஸ்லிமீன், மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், யுத்ததருமம், யுத்ததர்மம், ரத்தம், ரமலான், ரமழான், ரமஷான், ரம்ஜான், வஞ்சகம், வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு
Tags: இந்திய முஜாஹித்தீன், இந்து, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், ஐதராபாத், ஒவைசி, ஒவைஸி, கத்தி, குண்டு, குண்டு வெடிப்பு, கேமரா, கொலை, கொலைவெறி, கோயில், கோவில், சய்பாபா, சாய், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், துப்பாக்கி, பட்கல், பட்டகல், பாபா, பீரங்கி, புனிதப்போர், மதம், மருந்து, முஜாஹித்தீன், முஸ்லிம்கள், முஸ்லீம், ரத்தம், ரியாசுதீன், வெறி
Comments: 3 பின்னூட்டங்கள்
ஓகஸ்ட் 15, 2012
இந்திய சுதந்திரப் போரில் தியாகம் புரிந்தவர்களின் நினைவிடத்தை சூரையாடிய
வெறிக்கொண்ட முஸ்லீம் இளைஞர்கள்!

முஸ்லீம் இளைஞர்கள் வெறியுடன் அமர்ஜோதி ஜவான் நினைவகத்தை சேதப்படுத்தியது: மும்பையில் நடந்த கலவரத்தில் முஸ்லீம் இளைஞர்கள் சிறிதும் உண்மையினை உணராமல், இந்நாட்டின் தியாகிகளின் மகத்துவத்தை நினையாமல், வெறியுடன், வெறுப்புடன், காழ்ப்புடன் அமர் ஜோதி ஜவான் நினைவகத்தை கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்து சேதப்படுத்தினர்[1]. உடையாத “பைபர் கிளாஸ்” கண்ணடி பெட்டியையும் உடைத்து சூரையாடியுள்ளனர்[2]. அது மட்டுமல்லாது, அங்கு வைக்கப்பட்டிருந்த தலைகவசம் மற்றும் துப்பாக்கி முதலியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்[3]. மும்பை கார்ப்பரேஷன் அதிகாரிகள் இன்றைக்குள் அதனை சீர் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்கள், ஆனால் முடியவில்லை[4].

அத்தகைய வெறிக்குக் காரணம் என்ன – யார் அப்படி அவர்களை வெறி கொள்ள செய்தனர்?: அடுல் காம்ப்ளே என்ற “மிட்-டே” என்ற நாளிதழைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் எடுத்த புகைப்படங்களில், அந்த வெறிகொண்ட முஸ்லீம் இளைஞர்கள் பதிவாகியுள்ளார்கள். அவர்கள் செயல்படும் விதத்திலிருந்தே, அவர்கள் எந்த அளவிற்கு வெறிகொண்டுள்ளார்கள் என்பதனையறியலாம். அஜ்மல் கசாப் போன்று ஆக்ரோஷமாக உள்ளான் என்று பார்த்தவர்களே கூறுகிறார்கள்[5]. அந்த அளவிற்கு முஸ்லீம் இளைஞர்களை வெறிகொள்ளச் செய்வது யார்? நாட்டின் மேன்மையை, வீரர்கள் சுதந்திரத்திற்காகத் தியாகம் புரிந்தத்தையும் அறியாமல் அப்படி கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்துள்ளார்கள் என்றால் அந்நிலை மாறவேண்டும். அவர்கள் திருந்த வேண்டும், தம்முடைய நாட்டைப் பற்றிப் புரிந்து கொள்ளவேண்டும்.

அமர்ஜோதி ஜவான் நினைவகம் உருவாகிய வரலாறு: அமர் ஜோதி ஜவான் மெமோரியல் – அமர் ஜோதி ஜவான் நினைவகம் ட்ரில் ஹவல்தார் சய்யது ஹுஸைன் (Drill Havaldar Sayyed Hussein) மற்றும் சிப்பாய் மங்கள் சாதியா (Sepoy Mangal Cadiya) என்ற இரு இந்திய வீரர்களின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் நிறுவப்பட்டதாகும். இவ்விரு வீரர்களும் ஆங்லிலேயரை எதிர்த்து போராடி, 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் ஈடுபட்டவர்கள். 150 ஆண்டு நினைவு விழாவின் போது, 2009ல் ஆஜாத் மைதானத்தில் நிறுவப்பட்டது. அக்டோபர் 15, 1857 – தீபாவளி நாளன்று சார்லஸ் போர்ஜெட் (Charles Forjett, the then Superintendent of Police, Bombay Region) எனேஅ அப்பொழுதய கிழக்கிந்திய கம்பெனியின் போலீஸ் சூப்பிரென்டென்டின் உத்தரவு படி, கிரெக்கெட் கிளப் அருகில் உள்ள மைதானத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனால்தான், அந்த இடம் “ஆஜாத் மைதான்” சுதந்திர மைதானம் என்று அழைக்கப்பட்டது. ரவீந்தர வைகர் (Ravindra Waikar) என்பவர்தாம், அந்த நினைவிடம் அமைக்கக் காரணமாக இருந்தவர். அப்பொழுதைய கமிட்டியின் தலைவராக இருந்து, நினைவகத்தை உருவாக்கத் திட்டமிட்டார். அந்நினைவிடம் சேதப்படுத்தப் பட்டதைக் குறித்து, அவர் மிகவும் வருத்தமடைந்தார். “அச்செயல் மிகவும் அசிங்கமானது, வெட்கப்படவேண்டியது, கண்டிக்க வேண்டியது”, என்று தனது கருத்தை வெளியிட்டார்.

சேதப் படுத்தியவர்களை கைது செய்ய போலீஸார் தீவிரம்:
Mumbai Crime Branch and local police are racing against each other to nab these hoodlums, knowing whoever makes these crucial arrests will reap rich professional rewards.“Of all the miscreants, these men are the most wanted. They have hurt the sentiments of the entire nation. They must be arrested on priority,” said a senior Crime Branch official, on condition of anonymity.
An officer from Azad Maidan police station said, “In such a scenario, it is better if these men surrender before the police reach them. By giving themselves up, they would be able to avoid the wrath of the police as well as the public.”
“These photographs have been circulated among our informers. We are in constant touch with them for leads. Every policeman is on the lookout for them at present. If we manage to arrest them before Independence Day, it will be our tribute to the freedom fighters,” he added.
The photographs caused a furore in social media networks. Readers across the nation condemned the act, some even comparing the vandals to 26/11 militant Ajmal Qasab.
Confirming the report, joint commissioner of police (crime) Himanshu Roy said, “This man (top-right) has insulted the national monument of India, and arresting him is our priority. Several Muslim leaders have also condemned the act.”
மும்பை கலவரக்காரர்களிலேயே, இவ்விருவரும் தான் இந்த நாட்டின் மதிப்பையே அவமதித்துள்ளார்கள்.அவர்களை கைது செய்ய வேண்டியதுதான் எங்களது தலையாயக் கடமையாக உள்ளது, என்று மும்பை போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
ஒவ்வொரு போலீஸாரிடமும் இப்படங்கள் உள்ளதால், அவர்கள் பிடிபட்டு விடுவார்கள் என்று நம்புகிறோம்.
மேலும் அவர்களாகவே வந்து சரண்டர் ஆகிவிட்டாலும் நல்லதுதான்.
சுதந்திரத்தினத்கிற்கு முன்பாகவாது, அவனைப் பிடித்துவிட வேண்டும். அப்படி செய்தால், அது அந்த தியாக-வீரர்களுக்கு செய்யும் உயர்ந்த மரியாதையாக இருக்கும்.
இப்படங்களைப் பார்த்தவர்களும் கொதித்துப் போயுள்ளார்கள். அக்மல் கசாப்புடன் ஒப்பிட்டி, அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.


இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே போரிட்டது: இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே சத்தியாகிரகம், அஹிம்சை முறைகளில் போரிட்டார்கள். ஜின்னா போன்றவர்கள், பாகிஸ்தான் கேட்கும் வரை அவர்கள் ஒற்றுமையாகத்தான் செயல்பட்டார்கள். அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக நினைவு சின்னங்களை, இப்படி வன்முறை, வெறி, காழ்ப்பு போன்ற உணர்வுகளுடன் சூரையாடுவதே அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக – முறைகளை நிந்திப்பதாகும், அவமதிப்பதாகும், தேசவிரோதமாகும். ஆகவே, இக்கால இந்திய முஸ்லீம்கள் தங்களது பிள்ளைகளுக்கு உண்மையான சுதந்திர உணர்வுகளை ஊட்டி வளர்க்க வேண்டும். அதைவிடுத்து, “நாங்கள் முஸ்லீம்கள், நாங்கள் இந்தியர்களிடமிருந்து மாறுபட்டவர்கள், நாங்கள் பாகிஸ்தானிற்காகத்தான் ………………………………….., பாகிஸ்தான் கொடிகளை ஏந்திக் கொண்டு இந்தியாவிலேயே போராடுவோம்……………………………………………..”, என்று வளர்த்து வந்தால், இத்தகைய வெறிதான் வரும், வளரும், பாதிக்கும்.
வேதபிரகாஷ்
15-08-2012
பிரிவுகள்: அழுக்கு, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இஸ்லாம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, எரிப்பு, ஓட்டு, ஓட்டுவங்கி, கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், கார்டூன், காஷ்மீர், கிலாபத், குஜராத், சிறுபான்மையினர், சுன்னி-ஷியா, ஜமாத், ஜிஹாத், துப்பாக்கி, துப்பாக்கிச் சூடு, தேச கொடி, தேச விரோதம், தேசியக் கொடி, தேர்தல், நெருப்பு, மதகலவரம், மதவாதம், மதவெறி, மறைப்பு, மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம்கள், முஸ்லீம்தனம், வங்காள தேசம், வங்காள மொழி, வங்காளப் பிரிவினை, ஷியா-சுன்னி
Tags: ஃபத்வா, அமர் ஜோதி, அமர் ஜோதி ஜவான், அவமதிக்கும் இஸ்லாம், ஆஜாத் மைதான், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், சிப்பாய் கலகம், சிறுபான்மையினர், சுதந்திரம், ஜவான், தியாகி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், மும்பை, முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம்கள், வெறி
Comments: 3 பின்னூட்டங்கள்
திசெம்பர் 14, 2009
இஸ்லாம் இப்படியும் செய்யுமா?
இச்செய்தி பழைதேயாயினும் இதை இப்போழுது படித்தபோது ஆச்சரியமாக இருந்தது.
ஏனெனில் அந்த முஸ்லீம்களைப் பார்க்கும் போது மிகவும் நாகரிகம் மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர்.
இறகு எப்படி அவர்கள் அத்தகைய கீழ்த்தரமான செயல்களை செய்கின்றனர்? தமிழக / தமிழ் பேசும் முஸ்லீம்கள் பொத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் மலேசியரின் பெரும்பாலான மூதாதையர்கள் எல்லாம் இந்துக்கள்தாம்.பிறகு என்ன இத்தகைய காழ்ப்பு, வெறுப்பு, துவேஷம் எல்லாம்?
மலேசியாவில் இந்துக்களை அவமதித்து, – ‘மாட்டுத்தலையுடன்’ நடந்த ஆர்ப்பாட்டம் சர்ச்சையில் |
|
|
|
Written by Sara Wednesday, 09 September 2009 06:31 |
 |
மலேசியாவில் செலாங்கூர் மாநில தலைநகர் ஷாஅலாமில் செக்ஷன் 19 இல் இருந்த, 150 வருடம் பழமைமிக்க பாரம்பரிய இந்து கோவில் ஒன்றினை, செக்சன் 23ல் அதிகமாக முஸ்லீம் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு இடம்மாற்றம் செய்ய, அரசு தீர்மானம் எடுத்திருந்ததை முன்னிட்டு, அக்குடியிருப்பு வாசிகள் ஒன்றினை ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஓர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து கோவில் கட்டக்கூடாது என்று முஸ்லீகளின் வெறிச்செயல்!
ஆகஸ்ட்.29, 2009ல் இந்துக்கள் தங்களுக்காக ஒரு கோவிலைக் கட்டத் தீர்மானித்தபோது, செலங்கூர் தலைநகர் ஷா ஆலம் என்ற இடத்தில் 50 முஸ்லீம்கள் சேர்ந்து கொண்டு கலாட்டா செய்தனர். வழக்கம்போல, தொழுகைக்குப் பிறகு மசூதியிலிருந்துப் ( Sultan Salahuddin Abdul Aziz Mosque ) புறப்பட்ட முஸ்லீம்கல் ஒரு பசுமாட்டின் தலையை அறுத்து, அதனை வீதி-வீதியாக எடுத்துச் சென்று, அரசு தலைமையகத்தின் வாசலில் போட்டனர். வெறிபிடுத்து கால்களினால் ரத்தம் சொட்டும் அந்த பசுத்தலையை உதைத்துத் தள்ளினர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில், இந்துக்கள் தெய்வமாக மதித்து வழிபடும், (கோமாதா) பசுவினை நிந்திக்கும் முகமாக, உண்மையான ஒரு மாட்டுத்தலையினை தமது கைகளில் பிடித்த படி கொண்டு வந்து, அதனை அரச கட்டிட நுழைவாயிலில் போட்டு மிதித்துள்ளதுடன், காறியும் உமிழ்ந்துள்ளனர்.
இது இந்துக்கள் மீதான இனவெறியினை சித்தரிக்கும் முகமாக அமைந்திருக்க, கடும் அதிர்ச்சிக்குள்ளானர்கள் இந்துமக்கள்.
இவ் ஆர்ப்பாட்டத்தின் பின்னர், இந்துக்கோவிலை இடம்மாற்றம் செய்யும் திட்டத்தை மாநில அரசாங்கம் முடக்கி வைத்தது.
எனினும் மாட்டுத்தலை ஆர்ப்பாட்டக்காரர்களின் விவகாரத்தினால், மலேசிய தமிழர்கள் மிகவும் கொதிப்படைந்து போயினர்.
இந்நிலையில், இத்தேச நிந்தனைக்காக குற்றம் சுமத்தப்பட்டு, சுமார் ஆறு பேர் கைது செய்யப்பட்டு, 15, 000 ரிங்கிட் பிணையில் ஜாமீனில் விடுவிக்கப்படவுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதனை எதிர்த்தும் அக்குடியிருப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லீம் இன குடியிருப்பாளர்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் தவறேதும் செய்யவில்லை. எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஒன்று பட்டோம். அவ்வளவு தான் எனக்கூறியுள்ளனர்.
எனினும் இம்மாட்டுத்தலை ஆர்ப்பாட்டத்தினால், மலேசியாவின், முஸ்லீம், இந்துக்களிடையேயான முறுகல் நிலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. |
பிரிவுகள்: அவமதிக்கும் இஸ்லாம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், மிதிக்கும் இஸ்லாம், முஜாஹித்தீன், Uncategorized, X மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம்
Tags: அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், கொலைவெறி, கோமாதா, பசு, பசுத்தலை, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், ரத்தம், வெறி
Comments: 2 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்