Posted tagged ‘வளைகுடா’

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (1)

மே 10, 2015

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதைபுனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல்பொகோ ஹரமின் கவர்ச்சியானசெக்ஸியான திட்டம் (1)

Osama and Ayman Al-Zawahari

Osama and Ayman Al-Zawahari

ஜிஹாதியில் கலக்கும் போதைமருந்துஆயுதங்கள்பெண்கள் வியாபாரம்: ஐஎஸ்ஐஎஸ், தலிபான், அல் காயிதா, பொகோ ஹரம் முதலிய ஜிஹாதி, இஸ்லாமிய திவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் பற்றி அதிக அளவில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் செயல்பாடுகள் பல நாடுகளில், பல இஸ்லாமிய இயக்கங்களின் பின்னணிகளில், உள்ளூர் முஸ்லிம்கள் கொடுத்து வரும் ஆதரவுகளில் வெளிப்படுகின்றன. அமெரிக்க உளவாளி ஏஜென்சிகள் இவற்றிற்குள் உள்ள தொடர்புகளை வெளிகாட்டி வருகின்றன[1]. இஸ்லாமிய நாடுகளில் அந்தந்த நாட்டில் நிலவும் பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்கேற்ப, தமது ஜிஹாதி திட்டங்களை மாற்றியமைத்துச் செயல்படுத்தி வருகின்றன. ஆப்கானிஸ்தானத்தில் ரகசியமாக கஞ்சாச் செடிகளை வளர்த்து, அவற்றின் மூலம் மருந்து தொழிற்சாலைகளில் போதை மருந்து தயாரித்து, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல வழிகளில் அடையச் செய்து விற்று வருகின்றன. இதனால், அவர்கள் சமூகம் பலவிதங்களில் பாதிக்கப்படுவதால், இத்தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் வரும் பணத்தில் ஆயுதங்களை வாங்கி, உலகத்தில் எங்கெல்லாம் சண்டை-சச்சரவுகள் நடந்து கொண்டிருக்கின்றனவோ, அந்த மோதல்களில், தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள இயக்கங்களுக்கு ஆயுதங்களை விற்கவும் செய்கின்றன. கலைசெல்வங்களைக் கொள்ளையெடுத்து, விற்றும் பணத்தைக் குவிக்கிறது. இந்நிலையில் தான், பெண்களை மோசமாக நடத்தும் போக்கு அவர்களிடம் வெளிப்படுவது திகைப்படையச் செய்வதாக உள்ளது.

பொகோ ஹரம் தலைவன்

பொகோ ஹரம் தலைவன்

பொகோ ஹராம் குறிப்பாக பெண்களை பாலியல் ரீதியில் தாக்குவது ஏன்?: ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக, பொகோ ஹராம் பெண்களின் மீதாக நடத்தப் படும் பாலியல் ரீதியான தாக்குதல்கள் அதிர்ச்சியடைய வைக்கிறது. இடைக்காலத்தைப் போல, சிறுமிகள், இளம்-பெண்கள் மற்றும் பெண்களைக் கடத்துவது, செக்ஸுக்கு உபயோகப்படுத்துவது, பிறகு ஜிஹாதி தொழிஸ்சாலைக்குக் குழந்தைகளைப் பெற்றுக் கொடுப்பது என்ற புதிய யுக்தியில் இறங்கியுள்ளதை அறிய முடிகிறது. ஆனால், அதே நேரத்தில், இன்னொரு வகையான இஸ்லாமிய சித்தாந்திகள், இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம், பெண்களுக்கு முழு உரிமகளைக் கொடுக்கிறது, என்றெல்லாம் அதிரடியாக பிரச்சாரம் செய்து வருவார்கள். எனினும் எப்பொழுதெல்லாம், ஜிஹாதி குண்டுவெடிப்புகள், கொலைகள், கற்பழிப்புகள் முதலியவை நடக்கும் போது அமைதியாக இருப்பார்கள். இவ்வாறு இரட்டை வேடங்கள் போட்டுக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பொகோ ஹராம் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது, முதன்முதலாக இஸ்லாமிய ராஜ்யத்தைத் தோற்றுவித்தோம் என்று பறைச்சாற்றிக் கொண்டு, எல்லோருடைய கவனத்தையும் இழுத்துள்ளது.

போகோ ஹராம் தீவிரவாத இயக்க தலைவன் அபுபக்கர் ஷெக்காவு.

போகோ ஹராம் தீவிரவாத இயக்க தலைவன் அபுபக்கர் ஷெக்காவு.

முஸ்லிம்கிருத்துவர்களாக மதமாற்றப் பட்ட நைஜீரிய மக்கள்: நைஜீரியா, கிழக்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடா பகுதியில் கடற்கரையைக் கொண்டுள்ள நாடாகும். வடக்கே நைஜர் மற்றும் சட் நாடுகள் உள்ளன; கிழக்கே சட் மற்றும் காமரூன், மேற்கே பேனின் நாடுகள் உள்ளன. இந்நாட்டில் 50% முஸ்லிம்கள், 48% கிறிஸ்தவர்கள் (அதில் 74% புரொடெஸ்டென்ட், 25% கத்தோலிக்க மற்றும் 1% மற்ற பிரிவுகள்), மீதம் 1.5% புராதன மதங்களைப் பின்பற்றுகிறார்கள். “உன் நம்பிக்கை உனக்கு, என் நம்பிக்கை எனக்கு” என்று மற்ற நம்பிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு, நம்பிக்கைகளுக்கு மற்றும் உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள் அல்லது நியாயப்படி-சட்டப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இத்தகைய மதமாற்றம் அங்கு ஏற்பட்டிருக்காது. அதாவது, இப்பொழுது மதரீயில் முஸ்லிம்-கிறிஸ்தவர்களுக்கிடையில் கலவரங்கள் ஏற்படுகின்றன எனும்போது, சமூகத்தை எவ்வாறு மதமாற்றங்கள் பாதித்துள்ளன என்பதை மற்ற நாட்டு சமூகங்கள் கவனிக்க வேண்டும். பெட்ரோல்யத்தை நம்பி வாழும் இந்நாட்டு பொருளாதாரம் நன்றாக இருக்கும் நிலையில் தான் தீவிரவாதத்தின் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.

Boko Karam hide-outs - Wall Street Journal picture

Boko Karam hide-outs – Wall Street Journal picture

ஜிஹாதித்துவமும், பொருளாஹாரமும்: கடந்த ஐந்தாண்டுகளில் முஸ்லிம்கள் ஜிஹாதி பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளதால், மதகலவரங்கள் ஆரம்பித்துள்ளன. கிருத்துவ அடிப்படைவாதிகளும் கலவரத்தைத் தூண்டி விட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இங்கு வேடிக்கை என்னவென்றால், இந்த நம்பிக்கையாளர்கள் எல்லாமே கருப்பின மக்கள் தாம்[2]. அவர்களை தங்களது சொந்த மதங்களினின்று மதமாற்றி, மக்களைப் பிரித்து மோதவிட்டுள்ளது போன்ற நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. இதனைத்தான் உலக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமோ, கிருத்துவமோ மக்களை இணைக்காமல் பிரித்துக் கொண்டிருக்கிறது மற்றுமல்லாது, பிரித்துக் கொன்றுக் கொண்டிருக்கின்றன. இருமதங்களாலும் அமைதியை உண்டாக்க முடியாமல், சர்ச்சை-சண்டை-போர்-கலவரம்-தீவிரவாதம்-பயங்கரவாதம் இவற்றைத்தான் உண்டாக்கி வருகின்றன.

boko-haram-map

boko-haram-map

போகோ ஹராம்இஸ்லாமிய இயக்கமாசேனையா? பொகோ ஹரம் தோற்றுவித்தவனான மொஹம்மது யூசுப் என்பவனின் போதனைகளை அறிந்து கொண்டால், ஜிஹாத் எப்படி வேலை செய்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். 2010ல் அவன் சுத்தமான சலாபியத்துவ முஸ்லிம்களான கீழ்கண்டவர்களைப் பின்பற்றச் சொன்னான்[3]:

  1. அல்-குவைதாவைத் தோற்ருவித்த ஒசாம பின் லேடன்.
  2. தலிபன்.
  3. சையத் குதுப், எகிப்தைய சித்தாந்தி.
  4. இபின் தய்மியா

பொகோ ஹராம் என்றால் மேற்கத்தைய படிப்புமுறை எதிப்பு என்று பொருள் – (“Western education is forbidden”). பொகோ என்றால் போலி, ஹராம் என்றால் விலக்க / தடைசெய்யப்பட்டது, அதாவது, மேற்கத்தைய படிப்புமுறைக்குத் தடை என்ற பொருளில் உள்ளது. ஜமாது அஹ்லிஸ் சுன்னா லிட்ட-அவதி வல்-ஜிஹாத் [Jama’atu Ahlis Sunna Lidda’Awati Wal-Jihad (Arabic: جماعة أهل السنة للدعوة والجهاد‎, Jamā’at Ahl as-Sunnah lid-Da’wah wa’l-Jihād] என்று பெயரைக்கொண்டுள்ளது, மற்றும் மக்களுக்கு ஜிஹாத் போதிக்கும் அல்லது சுன்னாவுடனான னஜ்க்கள் அல்லது விலாயத் அல் சுடான் அல் கர்பி [Wilāyat al Sūdān al Gharbī (Arabic: ولاية السودان الغربي‎], மேற்காசிய பிரதேச ஜிஹாதி குழு, என்று பலவாறு அழைக்கப்படுகிறது. வடகிழக்கு நைஜீரியாவில் தனது மறைவிடங்களைக் கொண்டிருந்தாலும், அண்டைநாடுகளான நைஜர், சட், காமரூன் முதலிய இடங்களில்ய்ம் செயல்பட்டு வருகின்றது.

boko-haram-western education is a sin

boko-haram-western education is a sin

கடந்த ஐந்தாண்டுகளாக மதகலவரங்கள் நடப்பது சாதாரணமான விஷயமாகி விட்டது. இத்தகைய மத கலவரங்கள், கிருத்துவர்கள் மீதான தாக்குதல்கள், சர்ச்சுகளின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது போன்ற தீவிரவாத காரியங்களுக்கு இஸ்லாமிய பொகோ ஹராம் என்ற இயக்கம் (The Islamist Boko Haram group) பொதுவாகக் குற்றம் சாட்டப்படுகிறது[4]. இது இஸ்லாம் பெயரால் கிருத்துவர்களை மட்டுமல்ல, முஸ்லீம்களையே கொன்று வருகிறது என்று எடுத்துக் காட்டுகின்றனர்[5]. ஜனவரி 3.2015 அன்று சுமார் 150 பேரைக் கொன்றுள்ளது, இது பாகா கொலை [2015 Baga massacre] என்றழைக்கப்படுகிறது[6]. ஜனவரி.12, 2015 அன்று காமரூனில் நுழைந்து, அரசு படைகளைத் தாக்கியது[7]. அரசு அறிக்கையின் படி 143 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. ஜனவரி.18, 2015 அன்று காமரூன் கிடராமங்களில் நுழைந்து 60-80 பேர்களைக் கடத்திச் சென்றது. அவற்றில் 50 பேர் 10-15 வயதைச் சேர்ந்தவர்கள். சுன்னி-ஷியா போர்கள், கொலைகள் முதலியவற்றை முகமதியர்கள் மறைத்தாலும், அவை இஸ்லாமிய நாடுகளிலேயே காலம்-காலமாக நடத்துக் கொண்டுதான் வருகின்றன. ஜிஹாதி சித்தாந்தத்தில் உருவான இவ்வியக்கம் முஸ்லீம்கள் அல்லாதவர்களின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது. 2012ல் மட்டும் சுமார் 380 பேர் மதகலவரங்களில் கொல்லப்பட்டுள்ளனர்[8]. நைஜிரிய மக்களுக்கிடையே இதைப் பற்றிய கருத்து மாறுபட்டதாக இருக்கிறது[9]. கென்யாவிலிருந்து கடத்தி வரப்படும் தந்தவியாபாரத்தில் ஈடுபட்டிப்பதாகவும் குற்றஞ்சாட்டப் படுகிறது[10]. பெட்ரோல், தந்தம் எதுவாக இருந்தாலும், அதிலிருந்து கிடைக்கும் பணம் தீவிரவாதத்தை வளர்க்கத்தான் உபயோகப்படுத்தப் படுகிறது. ஆயிரக்கணக்கான அகதிகள் அண்டை நாடுகளுக்குச் செல்வதை அந்நாடுகள் தடுக்கின்றன. நைஜருக்கு வந்த 3,000 அகதிகள் திருப்பி அனுப்பப் பட்டனர்[11]. சட் எதிர்-தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவுகிறது[12]. கடந்த ஆண்டுகளில் இந்த இயக்கதினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத-ஜிஹாதி தாக்குதல்கள் கீழ்கண்டவாறுள்ளது[13].

6 June 2011 Bombing attack on a beer garden in Maiduguri, leaving 25 dead and 12 injured
10 July 2011 Bombing at the All Christian Fellowship Church in Suleja, Niger State
11 July 2011 The University of Maiduguri temperory closes down its campus citing security concerns
12 August 2011 Prominent Muslim Cleric Liman Bana is shot dead by Boko Haram
26 August 2011 2011 Abuja bombing
4 November 2011 2011 Damaturu attacks
25 December 2011 December 2011 Nigeria bombings
5–6 January 2012 January 2012 Nigeria attacks
20 January 2012 January 2012 Kano bombings
28 January 2012 Nigerian army says it killed 11 Boko Haram insurgents
8 February 2012 Boko Haram claims responsibility for a suicide bombing at the army headquarters in Kaduna.
16 February 2012 Another prison break staged in central Nigeria; 119 prisoners are released, one warder killed.
8 March 2012 During a British hostage rescue attempt to free Italian engineer Franco Lamolinara and Briton Christopher McManus, abducted in 2011 by a splinter group Boko Haram, both hostages were killed.
31 May 2012 During a Joint Task Force raid on a Boko Haram den, it was reported that 5 sect members and a German hostage were killed.
3 June 2012 15 church-goers were killed and several injured in a church bombing in Bauchi state. Boku Haram claimed responsibility through spokesperson Abu Qaqa.
Logo_of_Boko_Haram.svg

Logo_of_Boko_Haram.svg

பொகோ ஹராம் இயக்கத்திற்கு பணம் எப்படி கிடைக்கிறது: ஹக்காணி குழுமங்கள் மூலம் இவர்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. தவிர பரஸ்பர உதவிகளையும் செய்து கொண்டு வருகின்றன. பொகோ ஹராம் அவ்வப்போது செலவுகளுக்கு என்று வங்கிகளைக் கொள்ளையடிக்கிறது. வணிகர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோரை பயமுறுத்தி பணம் பறிக்கிறது. “பணம் கொடுக்காவிட்டால் கடத்தி விடுவோம்’’ என்பதுதான் அச்சுறுத்தல், இவையெல்லாம் எப்படி நக்சலைட், போடோ முதலிய குட்டங்கள் செய்து வருகின்றனவோ அத்தகைய பணம்-பரிக்கும் வேலை தான். சில சமயம் பெரும் தொழில் அதிபர்களை கடத்தி வைத்துக் கொண்டு அவர்களைப் பணயக் கைதிகளாக்கி பணம் பெறுவதும் உண்டு. வெளிநாட்டு செல்வந்தர்கள் என்றால் அதற்கான ரேட் அதிகம். சமீபத்தில் பிரெஞ்சு குடும்பம் ஒன்றை பணயக் கைதிகளாக்கி 30 லட்சம் டாலர்களைப் பறித்தது போகோ ஹராம்[14]. ‘’ஐ.எஸ். அமைப்புக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு’’ என்றிருக்கிறார். இராக், சிரியா பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவரும் அமைப்பு ஐ.எஸ். இப்படி அதற்கான ஆதரவை வெளிப்படுத்தியதன் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ள ஐ.எஸ்.போராளிகளின் ஆதரவைத் தாங்கள் பெற முடியும் என்று நம்புகிறது போகோ ஹராம்[15].

© வேதபிரகாஷ்

09-05-2015

[1]  Combating Terrorism Center brings out monthly CTC Sentinel issue that contains the global activities of Islamic terror groups, their network, funding agencies and other links with which they have been operating in many countries.

[2] இனரீதியில், இந்த சொற்றோடர் பிரயோகம் செய்யப்படவில்லை. அங்கு நடக்கும் சமூகவிரோத, மக்கள்விரோத குற்றங்களை ஆயும் ரீதியில் உபயோகப் படுத்தப் பட்டுள்ளது.

[3] https://www.ctc.usma.edu/posts/a-biography-of-boko-haram-and-the-baya-to-al-baghdadi

[4] http://www.nytimes.com/2012/02/26/world/africa/in-northern-nigeria-boko-haram-stirs-fear-and-sympathy.html?_r=1

[5] http://allafrica.com/stories/201206220837.html

[6] “Boko Haram crisis: Nigeria estimates Baga deaths at 150”. BBC News. 12 January 2015.

[7]  “Cameroon repels Boko Haram attack, says 143 militants killed”. Yahoo News. 12 January 2015.

[8]  http://news.antiwar.com/2012/06/17/39-killed-as-church-bombs-spark-religious-violence-in-nigeria/

[9] http://tribune.com.ng/index.php/opinion/42937-are-boko-haram-terrorists-human

[10] Kathleen Caulderwood (16 May 2014). “Fake Charities, Drug Cartels, Ransom and Extortion: Where Islamist Group Boko Haram Gets Its Cash”. International Business Times. Retrieved 10 January 2014.

[11] http://www.dinamani.com/world/2015/05/08/3000-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/article2802500.ece

[12] the Republic of Chad is building a reputation as a leading African state in the fight against terrorism. Chad will provide more than a third of the 8,700 soldiers—3,000 men, nearly as many as Nigeria’s 3,250—currently assigned to the African Union (AU) approved Multi-National Joint Task Force (MNJTF),1 and Chadian forces have already claimed successes against Boko Haram in its strongholds along Nigeria’s borders.

[13] http://en.wikipedia.org/wiki/Boko_Haram

[14] Kathleen Caulderwood (16 May 2014). “Fake Charities, Drug Cartels, Ransom and Extortion: Where Islamist Group Boko Haram Gets Its Cash”. International Business Times. Retrieved 10 January 2014.

[15] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3/article7010500.ece

சவுதி அரேபியாவில் தேற்காசிய நாடுகளின் பெண்கள் படும் பாடு – ஷேக்குகளுக்கு வீட்டுவேலை, உடலின்பம் எல்லாம் செய்தாலும் தண்டனை மரணம் தான்!

மார்ச் 30, 2014

சவுதி அரேபியாவில் தேற்காசிய நாடுகளின் பெண்கள் படும் பாடு – ஷேக்குகளுக்கு வீட்டுவேலை, உடலின்பம் எல்லாம் செய்தாலும் தண்டனை மரணம் தான்!

இந்தோனேசிய பெண் தண்டனை 2014

இந்தோனேசிய பெண் தண்டனை 2014

இஸ்லாமில்  பெண்களின்  உரிமைகள்  பற்றி  பேசுவதும்,   நடப்பதும்: பெண்களின்  உரிமைகள்  பற்றி  முஸ்லிம்கள்  பிரமாதமாகப்  பேசுவார்கள். ஆஹா  பாருங்கள்  இஸ்லாதில்  போல உரிமைகள் மற்ற வேறு எந்த மதத்திலும் இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.  ஆனால், தொடர்ந்து பெண்கள் ஏன் சவுதி அரேபியாவில் பாலியில் வன்மங்களுக்கு பெண்கள் ஈடுபடுத்தப் படவேண்டும்,  மாறாக அவர்கள் செக்ஸ் கொடுமையை தாங்கமுடியாமல், ஒருவேளை கொதித்து எழுந்தால்,  அவர்களை அடித்து,  நொறுக்கி வழக்குகள் போட்டு,  சரீயத் சட்டம் மூலம் மரணதண்டனைக் கொடுத்து ஏன் கொல்லப் படவேண்டும் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார்கள் அல்லது அவ்வாறெல்லாம் இப்பொழுது நடக்கிறதா என்பது போல மௌனமாக இருக்கிறார்கள்.  இந்நிலையில் வழக்கம் போல இப்படியொரு செய்தி வந்துள்ளது.  வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரைக்கும்,  இந்த பெண்களை வேலைக்கு வரவழைப்பது என்பது,  நவீனகால அடிமைத்தனம்,  அடிமை வியாபாரம் என்றுதான் மெய்பிக்கப்படுகிறது[1].

 

இந்தோனேசிய பெண் சவுதி தண்டனை 2014

இந்தோனேசிய பெண் சவுதி தண்டனை 2014

இரு வாரங்களில் ரூ.10 கோடி தராவிட்டால் பணிப்பெண்ணின் தலைதுண்டிப்பு: இந்தோனேஷிய பணிப்பெண்ணின் மரணதண்டனையை நிறுத்துவதற்கு,  சவுதி அரேபியஅரசு,  10 கோடி ரூபாய் கேட்டுள்ளது[2]. சவுதி அரேபியாவில்,  நுராஅல்-கரீப் என்ற முதலாளியிடம், இந்தோனேசியாவைச் சேர்ந்த,  சேத்தினா ஹ்பின்தி ஜூமாதி, 41, வேலை செய்து வந்தார்.முதலாளி, பாலியல் தொந்தரவு செய்ததாகவும்,  கொலை செய்ய முயற்சித்ததாகவும் ஜூமாதி வாக்குமூலம் அளித்துள்ளார். முதலாளியை கொலை செய்துவிட்டு, ஆறு லட்சம் ரூபாயைத் திருடி, தப்பிச்சென்றது தொடர்பாக, கடந்த 2007ம்ஆண்டு,  ஜூமாதிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்தமாதம், 14ம்தேதி, மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.  இந்நிலையில், இந்தோனேஷிய அரசு, இறந்த அல்-கரீப்பின் குடும்பத்திற்கு, நஷ்டஈடாக, 11 கோடி ரூபாய் அளித்து  (ரத்தப்பணம்), மரணதண்டனையை நிறுத்த, மத்தியஸ்தம் செய்தது. இதை ஏற்ற, சவுதிநீதி மன்றம், “இருவாரங்களுக்குள், இந்தத்தொகையை கொடுத்தால், பெண்ணின்  மரணதண்டனை  நிறுத்தப்படும்[3];  இல்லை  எனில், மரணதண்டனை  நிறைவேற்றப்படும்’  என,  கூறியுள்ளது[4]. ஆனால்,  11 கோடிரூபாய்  இல்லாததால், ஜூமாதியின்  குடும்பத்தினர்,  நிதிதிரட்டும்  பணியில்  ஈடுபட்டுள்ளனர்[5].  அவர்களுக்கு  ஆதரவாக, பொதுமக்கள்  நிதியுதவி  அளிக்கத்  துவங்கியுள்ளனர்[6]. இந்தோனேசியாவும்  ஒரு  இஸ்லாமியநாடு  தான், இருப்பினும்  இவ்விசயத்தில்  அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்கு முயன்று வருகிறது.  ஊடகங்களிலும் தண்டனைக்கு  எதிராக  கருத்துருவாக்கம் ஏற்படுகிறது[7].

 

satinah-binti-jumadi-ahmad

satinah-binti-jumadi-ahmad

தெற்காசிய  நாடுகளினின்று  ஏற்றுமதி  செய்யப்படும்  பெண்கள்:  வீட்டுவேலைக்கு  என்று  பல  தெற்காசிய  நாடுகளிலிருந்து ஆயிரக்ககணக்கான  பெண்கள்  வருடந்தோறும்  ஏஜென்டுகள்  மூலம்  அழைத்துச்  செல்லப்பட்டு, ஷேக்குகள்  வீடுகளில்  விடப்  படுகிறார்கள். அதற்குப் பிறகு,  பெரும்பாலான  பெண்களின்  கதி என்ன என்று தெரிவதில்லை. ஷேக்குகள்  அப்பெண்களை  தங்களது  காமத்திற்கு  உபயோகப்படுத்திக்  கொண்டு, வீட்டுவேலைகளைக்கும்  உட்படுத்திக் கசக்கிப்பிழிந்து  விடுகின்றனர். சரியாக  வேலை  செய்யாவிட்டால், மறுத்தால்  அடித்து  உதைக்கப்படுகிறார்கள். அத்தகைய சித்திரவதைகளுக்கு அளவேயில்லை.

செக்ஸ் அடிமைகள்

செக்ஸ் அடிமைகள்

கொடுமைப்  படுத்தப்பட்ட  பெண்க்ளின்  படங்கள்  சிலநேரங்களில்  வெளியில்  வருவதும்  உண்டு[8]. சவுதி  அரேபியா  இவ்விசயத்தில்  மிகவும்  குரூரமாகவே  செய்து  வருகின்றது[9].   பொதுவாக  குரூரமாக  சித்திரவதை  செய்யப்படும்  இப்பெண்கள், ஒருநிலையில்  தடுக்கப்  பார்க்கிறார்கள்,   எதிர்க்க  முயல்கிறார்கள். அந்நிலையில்  பொய்வழக்குப்  போட்டு  தண்டனைக்குட்படுத்தப்  படுகிறர்கள்.  பல  நேரங்களில்  பாதிக்கப்பட்ட  பெண்களே  பழிவாங்க  தாங்களே  சந்தர்ப்பம்  பார்த்து  எஜமானர்களைத்  தாக்குவது, ஏன்கொலை  செய்வதும்உண்டு. ஆனால், இஸ்லாமிய  சட்டத்தில்  பெண்களுக்கு  எதிராகத்தான்   சரத்துகள்  இருப்பதால்,  அவர்களால்  ஒன்றும்  செய்ய  முடியாது. ஒன்று  குரூரமாக  அடிபட்டு  சாகவேண்டும்  அல்லது  இவ்வாறு  மரணதண்டனைக்குட்பட வேண்டும்.  இதுதான்  கதி[10]. ஜனவரி 2013ல்  ஒரு  இலங்கைப்பெண்  கொல்லப்பட்டபோதும்  இத்தகைய  விவரங்கள்  வெளிவந்தன[11].  அப்பொழுது  45 பெண்கள்  தண்டனைக்காகக்  காத்துக்  கிடக்கின்றனர்  என்று  செய்தி  வெளியாகின[12].  குவைத்திலிருந்து  ஒரு  பெண்  எழுதிய  கடிதத்திலும்  அத்தகைய  விவரங்கள்  வெளியாகின[13].

 

Saudi Arabian women slavery

Saudi Arabian women slavery

ஷரீயத்  என்கின்ற  இஸ்லாம்  சட்டப்படி கடுமையான, குரூரமான  தண்டனைகள்  கொடுக்கப்  படல்: சவுதி  அரேபியாவில்  கொலைகுற்றத்துக்காக  2  பேருக்கு  தலைதுண்டித்து  மரணதண்டனை  நிறைவேற்றப்பட்டது [14]. இந்தாண்டில்  இதுவரை 7 பேரின்  தலை  துண்டித்து  மரணதண்டனை  நிறைவேற்றப்  பட்டுள்ளது.  இஸ்லாமிய  நாடான  சவுதி  அரேபியாவில்  பலாத்காரம், கொலை, மதத்தை  அவமதித்தல்,  ஆயுதங்களுடன்  கொள்ளையடித்தல்,  போதைமருந்து  கடத்துதல்  ஆகிய  குற்றங்களுக்கு  மரணதண்டனை  அளிக்கப்படுகிறது. தலையை  துண்டித்து  மரணதண்டனையை  நிறைவேற்றுகின்றனர். தெயிப்  நகரில்  பழங்குடியினத்தை  சேர்ந்த  அப்துல்லா  என்பவர்,  அதே  இனத்தை  சேர்ந்த  ஒருவரை  கொலை  செய்ததாக  குற்றம்  சாட்டப்பட்டது.  அதுபோல  தென்மேற்கு  அசிர்  பகுதியில்  நாசர் அல்  கதானி  என்பவர்  அயத்  இல்கதானி  என்பவரை  கொலை  செய்ததாக  குற்றம்  சாட்டப்பட்டார்.  இருவர்  மீதும்  குற்றம்  நிரூபிக்கப்பட்டதை  தொடர்ந்து  அவர்களுக்கு  மரணதண்டனை  விதிக்கப்பட்டது.   பிறகு இருவரின்  தலையைத் துண்டித்து  தண்டனை  நிறைவேற்றப்பட்டதாக  உள்துறை  அமைச்சகம்  தெரிவித்துள்ளது.  இந்தாண்டு  தொடங்கி 35  நாட்களே  ஆகியுள்ள  நிலையில்,   இதுவரை 7 பேருக்கு  மரணதண்டனை  நிறைவேற்றப்  பட்டுள்ளது.  கடந்த  ஆண்டு  தலை  துண்டிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை  78.  இதில்  வெளிநாட்டினரும்  அடக்கம்.   2012ல்   79 பேருக்கும், 2011ல் 82 பேருக்கும்  மரணதண்டனை  நிறைவேற்றப்பட்டது  குறிப்பிடத்தக்கது[15]. சவூதியில் 5  வயது  மகளை  கொடுமைப்படுத்தி, கற்பழித்துக்  கொன்ற  இஸ்லாமிய  போதகருக்கு 8 ஆண்டு  சிறை, 800 சவுக்கடி –  சாட்சி  சொன்ன  மனைவிக்கும்  தண்டனை!  என்ற  செய்திகள்  எல்லாம்  சகஜமாக  வந்துள்ளன[16].

 

Saudi treatment of migrant workers

Saudi treatment of migrant workers

முலைப்பால்  ஊட்டுங்கள்,   ஆனால்  காரை  ஓட்ட  பெண்களுக்கு  அனுமதியில்லை!: சவுதி  அரேபியாவில்  பெண்களுக்கு  பற்பல  கட்டுப்பாடுகள்  உள்ளன.   எல்லோரும்  உடலை  மறைப்புத்துணியால்  மூடிக்கொண்டு  இருக்க  வேண்டும். வெளியேபோனால், ஒரு  ஆணுடன்தான்  போகவேண்டும். வேலைக்குப்  போகக்  கூடாது…………….இப்படி  ஏராளமான  விதிகள். இந்நிலையில்  பெண்கள்  காரோட்ட  வேண்டி  கேட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கம்  மறுப்புத்  தெரிவித்துள்ளது. செய்க்  அப்துல்  மோஷின்  பின்நாசர்  அலி ஒபைகன்  என்ற  இஸ்லாமிய  வல்லுனர்  சமீபத்தில்  ஒரு  பத்வா  கொடுத்துள்ளார்.  இதன்படி,  சௌதி  பெண்கள்  வெளிநாட்டு  காரோட்டிகளுக்கு  முலைப்பால்  கொடுக்கலாம்,   அவ்வாறு  செய்வதால்,   இஸ்லாமிய  முறைப்படி,  அவர்கள்  மகன்கள்  ஆவார், தமது  மகள்களுக்கு  சகோதரர்கள்  ஆவர்.   இதன்படி,   புதியவர்கள்  கூட  இந்த  பத்வா  மூலம்,   குடும்ப  பெண்களுடன்  கலந்து  இருக்கலாம்.   இதனால்,   முலைப்பால்  உண்ட  அந்த  அந்நிய  ஆண்மகன்  பெண்களிடம்  செக்ஸ் ரீதியிலாக  தொந்தரவு  கொடுக்கமாட்டான்.   இஸ்லாம்  இதை  அனுமதிக்கிறது.

 

saudi slavery cartoon

saudi slavery cartoon

“ஒன்று  எங்களை  காரோட்ட  அனுமதியுங்கள்  அல்லது  எங்களது  காரோட்டிகளுக்கு  முலைப்பால்  ஊட்ட  அனுமதியுங்கள்”: சவுதியில்  என்ன  பிரச்சினை  என்னவென்றால்,  கடைக்குச்  சென்றுவிட்டு  வரும்  பெண்கள்  திரும்ப  வீட்டுக்கு  போக, காரோட்டி  வருவதற்காகக்  காத்துக்  கிடக்க   வேண்டியுள்ளது.  அதனால், தாங்களே  காரோட்ட  வேண்டும்  என்று  விரும்புகிறார்கள்.  இதனால்  தேவையில்லாமல் நேரத்தை  வீணடிக்க  வேண்டாம்  என்கிறார்கள்.  இதையே,   சவுதி  பெண்கள்  தமக்கு  சாதகமாக  எடுத்துக்கொண்டு,  பிரச்சாரம்  செய்ய  ஆரம்பித்துள்ளதாகத்  தெரிகிறது.சவுதி  குடும்பத்திற்கு  ஒரு  காரோட்டித்  தேவைப்படுகிறது.  அதற்கு  பெண்களே  காரோட்ட  அனுமதிக்கப்  படவேண்டும்  என்று  அந்நாட்டுப்  பெண்கள்  போராடி  வருகின்றனர்.  இந்நிலையில்,   அப்பெண்கள்  கூறுவதாவது,    “ஒன்று  எங்களை  காரோட்ட   அனுமதியுங்கள்  அல்லதுஎங்களதுகாரோட்டிகளுக்கு   முலைப்பால்  ஊட்ட  அனுமதியுங்கள்”   என்று  அதிரடியாகக்  கேட்டுள்ளார்கள்[17]!  வளைகுடாநாடுகளில்  பெண்கள்  வேலைக்குப்  போவதும்  அதிகரித்துள்ளது.  சுமார்  மூன்று  வருடங்களுக்குப்  பிறகு,   இப்பொழுது  அல்  வலீது  பின்  தலால் (Saudi billionaire Prince Alwaleed bin Talal) என்கின்ற  பில்லியனர்  இளவரசர்  பெண்கள்  காரோட்டுவது  பற்றி  தனது  இணக்கமாகக்  கருத்தை  வெளியிட்டுள்ளாராம்.

 

© வேதபிரகாஷ்

30-03-2014

 

[1] http://www.algeria.com/forums/world-dans-le-monde/23714-saudi-slave-treatment-migrant-workers-condemned.html

[2]தினமலர், இருவாரங்களில்ரூ.10 கோடிதராவிட்டால்பணிப்பெண்ணின்தலைதுண்டிப்பு, சென்னை, 30-03-2014.

[3] http://www.ibtimes.co.uk/savesatinah-abused-indonesian-maid-be-beheaded-saudi-arabia-unless-family-pays-1m-1441598

[4] http://www.thejakartaglobe.com/news/indonesia-to-pay-1-87m-to-save-maid-from-death-row-in-saudi-arabia-bnp2tki/

[5] http://www.thejakartaglobe.com/news/indonesia-raising-blood-money-domestic-worker-death-row-saudi-arabia/

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=944177

[7] http://www.thejakartapost.com/news/2014/03/27/editorial-the-tale-satinah.html

[8]In 2010, shocking photographs emerged of maid Sumiati Binti Salan Mustapa, 23, who suffered severe injuries from being stabbed, burned and beaten. Her employer was sentenced to just three years in jail but was later acquitted altogether, in a case that outraged human rights groups.

Speaking at the time, Wahyu Susilo of the Indonesian advocacy group, Migrant Care, said: ‘Again and again we hear about slavery-like conditions, torture, sexual abuse and even death. ‘But our government has chosen to ignore it. Why? Because migrant workers generate £4.7billion in foreign exchange every

[9]Saudi Arabia is notorious for its treatment of domestic staff, the majority of who migrate from poverty-stricken countries.

[10] http://www.dailymail.co.uk/news/article-2261655/Scores-maids-facing-death-penalty-Saudi-Arabia-crimes-child-murder-killing-employers.html

[11] http://www.theguardian.com/world/2013/jan/13/saudi-arabia-treatment-foreign-workers

[12]More than 45 foreign maids are facing execution on death row in Saudi Arabia, the Observer has learned, amid growing international outrage at the treatment of migrant workers.

The startling figure emerged after Saudi Arabia beheaded a 24-year-old Sri Lankan domestic worker, Rizana Nafeek, in the face of appeals for clemency from around the world.

[13]https://islamindia.wordpress.com/2010/07/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/

[14] http://www.result.dinakaran.com/News_Detail.asp?Nid=78346

[15]See more at: http://www.result.dinakaran.com/News_Detail.asp?Nid=78346#sthash.I7cDgE99.dpuf

[16] https://islamindia.wordpress.com/2013/10/10/islamic-clergy-raped-her-daughter-tortured-and-killed-also-but-only-jailed/

[17] https://islamindia.wordpress.com/2010/06/24/saudi-women-threaten-to-breastfeed-their-drivers-if-not-allowed-to-drive/

விதிகளை மீறி இந்தியாவுக்குள் நுழைந்த இரு சவுதி அரேபியர்கள் கேரளாவில் கைது

திசெம்பர் 17, 2010

விதிகளை மீறி இந்தியாவுக்குள் நுழைந்த இரு சவுதி அரேபியர்கள் கேரளாவில் கைது

விதிகளை மீறி இந்தியாவுக்குள் நுழைந்த இரு சவுதி அரேபியர்கள் கேரளாவில் கைது[1]: கொல்லத்தில் இம்மாதம் – டிசம்பர் எட்டாம் தேதி டூரிஸ்ட் விசாவில் இந்தியாவிற்கு, இரண்டு சவுதி அரேபியர்கள் இங்கு வந்து நுழைந்துள்ளனர்[2]. சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்குள், இப்படி வருவது சகஜமாகவே இருந்துள்ளது. மேலும் சமீபத்தில் தீவிரவாதிகளுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் போக்குவரத்து அதிகம் இருப்பதால் போலீஸார்  கண்காணித்து வருகின்றனர். ஆகையால், விசா விதிகளை மீறி நுழைந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்[3].

மசூதி திறப்பு விழா: வளைகுடா நாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் தரும காரியங்களுக்கு என்ற பெயரில் வருகின்றது. அந்நியசெலாவணி சட்டப்பிரிவுகளுக்குட்பட்டு வரும் அப்பணம், மசூதி கட்டுவது மற்றும் தருமம் அல்லாத அதாவது தீவிரவாதிகளுக்கு உதவுவது போன்ற காரியங்களுக்கும் திருப்பிவிடப்படுகிறது. 1980ளில் அரேபிய ஷேக்குகள் வந்து தங்கி பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர்[4]. அப்பொழுதெல்லாம் மதமாற்றம் செய்வதற்கு என்றுதான் பிரச்சினை வரும். சில நாட்களில் விவாதங்களுடன் அடங்கி விடும். ஆனால், இப்பொழுததோ தீவிரவாதம் என்ற பயம் வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் தீவிரவாத கட்டுப்பாடு நடவடிக்கைகளில்  கண்ணுரில், எடக்காடு என்ற இடத்தில் மனப்புரம் மசூதியின் வளாகத்தில் வெடிகுண்டுகள், வெடிப்பொருள்கள் முதலியவை கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன[5]. இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லம் அருகே, குளத்துப்புழா தைக்காடு குன்னின்புரா பகுதியில், புதியதாக நிர்மாணிக்கப்பட்ட மசூதி திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு முன்பே அந்த டிரஸ்ட் அனுமதி இல்லாமல் அயல்நாட்டவர் யாரும் நிகழ்ச்சியில் பங்குக் கொள்ளக்கூடாது, பேசக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது[6].

அந்நியர் விழாவில் கலந்து கொள்ளுதல், பேசுதல்: அதில் சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த அப்துல் கரீம் அப்துல் முஹ்சீன் அல்ஜமீன் (Abdul Kareem Abdul Muhasin Al-Jameel 49 and Abdul Abdul Khader Sulaiman 52) மற்றும் அப்துல்லா அப்துல் காதர் சுலைமான் ஆகிய, இருவர் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாது மேடையில் பேசவும் செய்தனர்.  அதைத்தவிர அழைப்பிதழிலும் அவர்கள் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தன. இதனல்ல் உள்ளூர்வாசிகளின் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகித்து விசாரணையை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் சவுதி அரேபிய நாட்டின் தூதரக அனுமதியோ, இந்திய நாட்டின் தூதரக அனுமதியோ பெறாமல், பயணிகள் விசா மூலம், கள்ளத்தனமாக நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்[7]. ஆயூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இவர்கள் குறித்து, ரகசிய தகவல் கிடைத்ததும், சடையமங்கலம் போலீசார் அவர்களை கைது செய்தனர். பயங்கரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர்களா எனவும், போலீசார் விசாரிக்கின்றனர். சவுதி அரேபியா தீவிவாத்தைதை ஏற்றுமதி செய்யும் நாடாகக் கருதப் பட்டு வருகின்றது[8]. இதைப் பற்றிய பயங்கரமான விஷயங்கள் சமீபத்தில் விக்கி-லீக்கில் கூட வந்துள்ளன. அதுமட்டுமல்லாது, அந்த அரசாங்கத்தை மதிக்காமலேயே தீவிரவாதத்திற்கு ஆதரவு, நிதியுதவி, புகலிடம் கொடுப்பது என்பது தொடர்ந்து நடந்து வருகின்றன. சமீபத்தில் நூற்றிற்கும் மேலாக அல்-கைதா தீவிரவாதிகளை அந்நாடு கைது செய்துள்ளது[9]. யேமன், சோமாலியா, எரிகத்ரிடயன், பங்களாதேஷ் என பல நாடுகளிலிருந்து ஹஜ் யாத்திரை என்ற பெயரில் வந்து தங்கி தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டம் தீட்டியதாக, பாதுகாப்புப் படையினர் யேமன் நாட்டு எல்லைகளில் கைது செய்துள்ளனர்.

1. In the early 1990s, Amirul Azim, accompanied by Salauddin, the Sudanese instructor, entered India via Bangladesh and met Basheer and his associates  for discussing their future plans.

2. In August 1994, “Al-Sirat Al-Mustaqeem (The Straight Path)”, an Islamic journal published in Pakistan (Issue No. 33), carried an interview with Abu Abdel Aziz.  The journal, without identifying his nationality, reported  that Abu Abdel Aziz spoke perfect Urdu and that he had spent extended periods in Kashmir.  It was stated that  Abu Abdel Aziz’s followers, believed to be mostly Indian Muslims from the Gulf,  were part of the seventh battalion of the Bosnian Army (SEDMI KORPUS, ARMIJA REPUBLIKE BH).

3. Basheer, who must now be around 50, is from Parambayam in Kerala.

இப்பிரச்சினையின் கடுமை, கொடுமையான விளைவுகள், முடிவுகளை அறிந்து முஸ்லீம்களே இத்தகைய செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வேதபிரகாஷ்

© 17-12-2010


[4] இதைப் பற்றி கேரள சட்டமன்றத்தில் பெரிய அளவில் விவாதங்கள் எல்லாம் நடந்துள்ளன.