Posted tagged ‘வடபழனி’

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

மம்தா- ஹஸினா - அரசியல்-ஜிஹாத்

மம்தா- ஹஸினா – அரசியல்-ஜிஹாத்

வடபழனிக்கும், பர்த்வானுக்கும் என்ன தொடர்பு?: இப்படி கேட்டால், ஏன்னது, “அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்”, போல கேள்விக் கேட்கப் படுகிறதே என்று நினைக்க வேண்டாம். பர்த்வான் வெடிகுண்டு தொழிற்சாலை சொந்தக்காரர்கள், வடபழனியில் உள்ள மூன்று “பாய்கள் / முஸ்லிம் சகோதரர்களுடன்”, அவர்கள் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் தீவிரவாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்க அல்லது தெரியாமல் இருந்திருக்க வேண்டும். தெரிந்திருக்கக் கூடும் என்றால், அவர்களுக்கு ஏன் துணை போகவேண்டும், அப்பா-அம்மா, இப்படி குண்டு தயாரிப்பது, தொழிற்சாலை வைப்பது, மற்றவர்களுக்கு விநியோகிப்பது எல்லாம் தப்பு என்று அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அந்த இரண்டு பேர் இறந்திருக்க மாட்டார்கள், இரண்டு பெண்களும் விதவையாகி இருக்கமாட்டார்கள். முஸ்லிம்களாக இருந்து கொண்டே ஜிஹாதி தொடர்புகள் தெரியாமல் இருந்திருக்க வேண்டும் என்றால், “ஸ்லீப்பர் செல்” முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இருப்பினும் நன்மையாகவோ, மென்மையாகவோ, வன்மையாகவோ கண்டிக்கப்படவில்லை, எச்சரிக்கப்படவில்லை.

Vadapalani -burdwan link

Vadapalani -burdwan link

ஜிஹாத் என்றால் உண்மையினை அறிய வேண்டும்: “ஜிஹாத்” என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கத்தை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அடிக்கடி சில முஸ்லிம் இயக்கங்கங்கள் பறைச்சாற்றிக் கொண்டாலும், குண்டுகள் வெடிக்கும் போது அமைதியாகி விடுகிறார்கள்.  தினத்தந்திக்கு[1] (05-10-2014) எச்சரிக்கைக் கொடுத்து (08-10-2014), ஜிஹாதி-மறுத்த நாட்களில் தான் வடபழனி முஸ்லிம்கள், பர்த்வான் முஸ்லிம்களான ஷகீல் மற்றும் ரஜிரா பீபீ என்ற வெடிகுண்டு தொழிற்சாலைக்காரர்களுடன் (02-10-2014 தேதிக்கு முன்னர்) பேசிக்கொண்டிருந்தார்கள். அதாவது, ஏற்கெனவே, இவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். சென்னயில் உள்ள முஸ்லிம்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கிறதா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும். அவர்கள் ஏன் அப்படி தொடர்பு கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்று எந்த முஸ்லிம் அமைப்பும் கேட்டதாகத் தெரியவில்லை. அதைப் பற்றியும் ஊடகங்கள் தாராளமாகவே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றையும் இவர்கள் எதிர்க்கவில்லை!

பர்த்வான் வடபழனி - தொடர்பு

பர்த்வான் வடபழனி – தொடர்பு

வடபழனி முஸ்லிம்களுடன் பேசிய ரூமி பீபி மற்றும் அமீனா பீபி வெளியிடும் திடுக்கிடும் ரகசியங்கள்: JMB தலைவர்களான சொஹைல் மெஹ்பூஸ் [Sohail Mehfooz] மற்றும் மொஹப்பது பிலால் [Mohammed Bilal] அடிக்கடி இந்தியாவில் உள்ள மதரஸாக்களுக்கு வந்து சென்றுள்ளனர். பிறகு, வங்காளதேசத்தில் நவாப் கஞ் என்ற இடத்தில் உள்ள தாருல்-உலும்-மஜ்ஹருல் [the Darul-Ulum-Majharul madrasa in Nawabganj, Bangladesh] என்ற மதரஸாவில், ஆகஸ்ட் 2014ல் கூடிய கூட்டத்தில் தான், இந்தியாவில் எப்படி நிதிதிரட்டுவது, ஆட்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற விவரங்கள் பேசப்பட்டு தீர்மானம் செய்யப் பட்டன. இவர்களுடன் இன்னொரு JMB தலைவர் மொஹம்மது ஹபிபுர் ரஹ்மான் [Mohammed Habibur Rehman] என்பவரும் நிதிதிரட்டும் சேவைக்கு சேர்ந்து வந்துள்ளார். மூர்ஷிதாபாத், மால்டா, நாடியா மாவட்டங்களில் அவர்களது ஆட்கள் வேலைசெய்து வருகிறார்கள். இவ்வாறு உள்ளூர் நிதிவசூல் மட்டுமல்லாது, பங்களாதேசத்தில் சைலெட் என்ற இடத்தில் (Syhlet, Bangladesh) உள்ள JMB ஆட்கள் கொரியர் மூலம் ரூபாய் நோட்டுகளை அசாமில் உள்ள ஒரு டாக்டருக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த டாக்டர் கௌஸருக்கு அறிவிக்க, பணத்தை எடுத்துவர மூன்றுய் ஆட்கள் அசாமிற்கு அனுப்பப்படுகிறார்கள். கொரியர்கள் / பணத்தை எடுத்துச் செல்லும் நம்பிக்கையானவர்கள் மூலம் பல வழிகளில் சென்று, கடைசியில் முர்ஷிதாபாதில் பேராம்பூர் நகருக்கு சுமார் ரூ.10 லட்சம் என்ற விதத்தில் வந்து சேரும். பர்த்வானில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள அந்த வீட்டைப் பிடித்தனர். ஒரு பக்கம் பர்கா பேகடரி மற்பக்கம் பாம்ப் பேக்டரி என்று வேலைகளை ஆரம்பித்தனர். நூற்றுக் கணக்கான ஆட்கள் இவ்வேலையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். ஆனால், மிகவும் விசுவாசமான சுமார் 40 பேர் தாம் குண்டு தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தப் பட்டனர். ரூமி பீபி மற்றும் அமீனா பீபி சாதாரணமாக கொல்கொத்தாவில் உள்ள புர்ரா அஜாருக்குச் சென்று (Burrabazar in Kolkata), குண்டுகள் தயாரிக்க வேண்டிய மூலப் பொருட்களை வாங்கி வருவார்கள். அந்த குண்டு தொழிற்சாலை மூன்று மாதங்களாக, அதாவது, ஆகஸ்ட் 2014லிருந்து, வேலை செய்து வருகின்றது. அக்டோபர் 2 குண்டுவெடிப்பிற்கு முன்னர் சுமார் 50 குண்டுகள் டாக்கா, அசாம் போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.  என்.டி.ஏ அரசாங்கம் பதவி ஏற்றவுடன், இது ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்தோ-பங்காளதேச உறவுகளை சீர்குலைக்க இக்காரியங்கள் நடக்கின்றன, எனும்போது, இதன் பின்னணியில் மற்ற விவகாரங்களும் இருக்க வேண்டும்.

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் - தினத்தந்தி

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்தி

ஜிஹாதிகளாக பெண்கள் உபயோகப் படுத்தப் படுவது ஏன்?: பர்த்வான் குண்டு தொழிற்சாலை உருவானதில் இரண்டு பெண்களின் பங்கு அதிகமாக அறியப்படுகிறது. கைக்குழந்தைகளுடன் இப்பெண்கள் எவ்வாறு அத்தகைய வேலைகளில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்கள் ஜிஹதித்துவத்தில் நன்றாக ஊறவைக்கப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறான காரியங்கள் புண்ணியமானவை, அல்லாவுக்குப் பிடித்தனமானவை, அதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று அறிவுருத்தப் பட்டுள்ளனர். பிறகு அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கப் படும் என்றும் சொல்லப்பட்டது. இதனால், மிகவும் விசுவாசமாக அவர்கள் வேலை செய்து வந்தனர். நிதி வசூல், விநியோகம் போன்ற விசயங்களிலிருந்து, குண்டு தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்குவது, குண்டுகளை விநியோகிப்பது என்ரும் ஈடுபட்டிருக்கிறார்கள். பணம் விசயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள். அதாவது பணம் இப்படித்தான் பட்டுவாடா செய்யப் படுகிறது என்ற அறியப்படாமல் போகும் என்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளார்கள். மேலும் பங்களாதேசத்திலிருந்து, பாகிஸ்தானிலிருந்து வரும் கள்ளநோட்டுகள், இந்தியாவில் புழக்கத்தில் விடும் கோஷொடியினரும், தமிழகத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. இப்பெண்கள் கைக்குழந்தைகள் சகிதமாக சென்றுவரும் போது, யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்பது நிதர்சனமே, ஆனால், அதவே திட்டமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு பெண்களை ஜிஹாதிக்கு உபயோகப் படுத்தும் முறையும் நோக்கத்தக்கது.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

பர்த்வான் மதரஸாக்களில் நடப்பவை என்ன?: மதரஸாக்கள் அதிகமாக முளைத்து வருவதும் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன. முஸ்லிம்கள் தாங்கள் மதக்கல்விதான் அளிக்கிறோம் என்றாலும், நடப்பது வேறுவிதமாக இருக்கிறது. ஏனெனில், பர்த்வான் மாவட்டத்தில் மட்டும் உள்ள 700க்கும் மேலான மதரஸாக்காளில் 37 மட்டும் தான் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதாவது, பதிவு செய்யப் படாத மதரஸாக்களில் நடப்பதை யாரும் அறிந்து கொள்ல முடியாது. குறிப்பாக, ஒரு மதரஸாவில் 30-40 இளம்பெண்கள் படிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். வெளியே இருந்து கொண்டு வரப்பட்டுள்ளவர்கள். மேலும் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவது கிடையாது. அவர்கள் தங்களது கணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து அங்கே வசித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், திருமணம் ஆகாத பெண்கள் பாதிக்கப் படுகிறார்களா என்று தெரியவில்லை. அவர்களுக்கு வேண்டிய வசதிகள் எங்குள்ளனவா, பாலியல் ரீதியில் தொல்லைகள் எதுவும் கொடுக்கப் படுகின்றனவா என்ற விசயங்களைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதரஸாக்களில் உள்ள மற்ற முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரையில், அவர்கள் தங்களது உறவுகளை மறந்து ஜிஹாதி வேலைகளை செய்ய தயாராக வந்துள்ளனர்[2].

மதரஸாக்களின் கீழே சுரங்க பாதைகள், உள்ளே வெடிகுண்டுகள், வெளியே நிற்கவைக்கப் பட்ட காரில் ஜிஹாதி புத்தகங்கள்: சில மதரஸ்ஸாக்களின் கீழே சரங்கப் பாதைகளை தோண்டி வைத்துள்ளனர். அவை அருகிலுள்ள குளக்கரைகளில் சென்று முடிகின்றன[3]. பர்த்வானில் ஒரு மதரஸாவுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மஞ்சள் நிற காரில் சோதனையிட்ட போது, அதில் ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் 12 டிரங்க் பெட்டிகள் இருந்துள்ளன[4]. அக்காரின் மீது “இந்திய ராணுவம்” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, ஆனால், எண்ணோ, ஒரு பைக்கினுடையாத இருந்தது. புத்தகங்கள் மற்றவை ஜிஹாதி இலக்கியங்களாக இருந்தன. அவை அரேபிக், உருது மற்றும் வங்காள மொழிகளில் இருந்தன. இவ்வாறு மதரஸாக்கள் ஜிஹாதி காரியங்களுக்கு உபயோகப் படுத்த எப்படி முஸ்லிம்கள் ஒப்புக் கொள்கிறார்கள், அனுமதிக்கிறார்கள்?

© வேதபிரகாஷ்

25-10-2014

பர்கா பேக்டரி - கடை

பர்கா பேக்டரி – கடை

[1] தினத்தந்தி, தீவிவாதிகளாக மாறும் பெண்கள், 05-10-2014

[2] The team has also recovered a phone book, believed to belong to Yousuf Sheikh, the terror module’s mentor. It has the contact numbers of women who took training in the Simulia madrassa, say sources. As per reports, the module was busy recruiting women through systematic brain wash. These women were trained in such a way that they were trained in such a way that they were ready to sacrifice their families when it came to jihad.

http://news.oneindia.in/india/burdwan-blast-nia-secret-tunnel-madrassa-tmc-jamaat-link-1541340.html

[3] In yet another shocking revelation, NIA discovered secret tunnels under mud huts which were previously Madarsas (Islamic Schools) in Burdwan. To everyone’s surprise, the secret passages ended up in nearby ponds.

[4]http://www.nagalandpost.com/ChannelNews/National/NationalNews.aspx?news=TkVXUzEwMDA2ODc0Mg%3D%3D

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (3)

ஒக்ரோபர் 17, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (3)

 

பர்த்வான் குண்டு வெடிப்பு படம்

பர்த்வான் குண்டு வெடிப்பு படம்

மாநில சிபிசிஐடி போலீஸா, என்ஐஏவா என்ற வாதம்: பர்த்வான் குண்டுவெடிப்பு அந்த மாவட்டம் மட்டுமே தொடர்புடைய சம்பவமல்ல, அது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகும். அதில் அன்னிய சக்திகளுக்கும் தொடர்புள்ளது. முன்னதாக, பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து மாநில சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மாநில அரசின் அதிகாரத்தில் தேவையில்லாத குறுக்கீடு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியிருந்தார். மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, கடந்த 2008-ஆம் ஆண்டில் என்ஐஏ அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும் இவ்வாறு, ஒரு மாநிலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு தன்னிச்சையாக உத்தரவிட்டது இதுதான் முதன் முறையாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், மற்ற விவகாரங்களையும் தெரிந்து கொண்ட நிலையில் (சாரதா-போன்ஸி பணம் முதலியவற்றை) அவர் அவ்வாறு எதிர்த்திருப்பாரா என்று தெரியவில்லை.

பர்த்வான் வீடு, மௌல்வி, பைக் முதலியன

பர்த்வான் வீடு, மௌல்வி, பைக் முதலியன

பர்த்வான் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்ட சென்னைவாசிகள்: இவர்களுக்கு உதவியர்கள் கேரளா, தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் உள்ளார்கள் என்பதால், விசாரணை அங்கும் ஆரம்பித்துள்ளன[1]. முர்ஷிதாபாத்தில் உள்ள உயிரிழந்த ஷகீல் அஹமதுவின் வீட்டையும் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் குண்டு தயாரிப்புக்கான முக்கிய கருவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையிலும், மேற்கொண்டு தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையிலும் சென்னையை சேர்ந்த மூன்று பேருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மூன்று பேருக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இது சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை போலும். பொறுப்பான முஸ்லிம்களும் கண்டு கொள்ளவில்லை போலும். இதுதவிர, நேரில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் பி.வி.ராமசாஸ்திரி ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார்[2]. சென்னையில் தங்கியிருந்து மூன்று பேரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ர்த்வான் வீடு, சோதனை, பர்கா பேக்டரி

ர்த்வான் வீடு, சோதனை, பர்கா பேக்டரி

கைதாகி சென்னையில் இருப்பவர்களுக்கும், இதற்கும் உள்ள தொடர்புகள்: இதேபோல், பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் வழக்கில் கியூ பிராஞ்ச் அளித்த ஆவணங்கள் அடிப்படையில் ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. அருண் செல்வராசனுக்கும், ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் ஜாகீர் உசேனுக்கும் உள்ள தொடர்பு பற்றி கியூ பிரிவு போலீசார் ஏராளமான ஆவணங்களை அளித்துள்ளனர். அதில் ஜாகீர் உசேன் மூலம் அருண் செல்வராசன் கள்ளநோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான தகவல் அளிக்கப்பட்டிருந்தது.கடந்த 2012ம் ஆண்டு அருண் செல்வராசன் மாநகராட்சியில் போலி பிறப்பு சான்றிதழ் பெற்று அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் எடுத்த தகவலும் தெரியவந்துள்ளது. கியூ பிரிவு போலீசார் அளித்த தகவல்கள் அடிப்படையில் 200 கேள்விகளை தயார் செய்து அருண் செல்வராசனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். அதிலும் பல திடுக் கிடும் தகவல்களை அவர் அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்களுடன் தேசிய புலானாய்வு அமைப்பின் எஸ்பி பிராபகர் ராவ் டெல்லி சென்றுள்ளார். சென்னை வரும் ராமசாஸ்திரி அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்தும் ஆலோசிக்க உள்ளதால் டெல்லியிலிருந்து பிரபாகர் ராவ் இன்று சென்னை திரும்புகிறார். சென்னையில் தங்கியுள்ள ராமசாஸ்திரி சென்னை தேசிய புலனாய்வு செயல்பாடுகள் மற்றும் அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை வழங்குவார்[3].

பர்த்வான் தீவிரவாத தொடர்புகள்

பர்த்வான் தீவிரவாத தொடர்புகள்

கொல்கத்தாவில் ரகசியமாக சிகிச்சைப் பெற்ற மூன்று நபர்கள்: சென்னையில் ரகசியமான மூன்று பேர்கள் இருந்தது போல, பர்த்வான் குண்டுவெடிப்பில் காயமடைந்த மூவரை ரகசியமாக, ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க வைத்து,. சிகிச்சைக் கொடுத்ததை என்.ஐ.ஏ கண்டு பிடித்துள்ளனர். மேலும் அந்த வசதியை திரிணமூல் காங்கிரஸ்காரர் செய்து கொடுத்துள்ளார்[4]. பார்க் சர்கஸ் நர்சிங் ஹோம் என்ற மருத்துவ மனையில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. அவர்கள் முன்னுக்கு முரணாக பேசியுள்ளனர். அவர்கள் தாங்கள் பர்த்வான் குண்டுவெடிப்பில் காயமடவில்லை, ஆனால், அக்டோபர்.5 அன்று மால்டாவில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்ததாகக் கூறிக் கொண்டனர். போலீஸார் நரேந்திர பூரில், இங்கிலீஸ் பஜாரில் குண்டு வெடுப்பு நடந்தத்யாக அறிவித்துள்ளனர். ஆனால், போலீஸார் இந்த மூவரை கொல்கொத்தாவிற்கு அனுப்பினாலும், மருத்துவமனை பெயரைக் குறிப்பிடவில்லை. இவ்வாறு, தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப் படுவது, சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.

பர்த்வான் சோதனை -nia

பர்த்வான் சோதனை -nia

சென்னை சென்ட்ரல் – பர்த்வான் குண்டுவெடிப்புகளுக்குள்ள தொடர்பு: மே.1, 2014வ் அன்று சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில், கௌஹாதி எக்ஸ்பிரஸில், குண்டுகள் இரண்டு வெடித்ததில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கொல்லப்பட்டாள் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்[5]. இப்பொழுது பர்தவான் குண்டுவெடிப்பை விசாரிக்கும் போது, இரண்டு குண்டுவெடிப்புகளுக்கும் உள்ள சம்பந்தம் வெளிப்படுகிறது, குறிப்பாக சென்னையில் உள்ள மூன்று நபர்களுடன் ரஜீயா பீபி மற்றும் ஷகீல் அஹமது தொடர்பு கொண்டு பலமுறை பேசியுள்ளனர். இதையறிந்து தான், என்.ஐ.ஏ சென்னையில் உள்ள அந்த மூன்று நபர்களை விசாரித்தது. இதுதவிர வெடிகுண்டுகளின் தயாரிப்பு முறை, உபயோகப் படுத்தப் பட்டுள்ள ரசாயனப் பொருட்கள் (அம்மோனியம் நைட்ரேட், காரீய ஆக்ஸைடு முதலியன), அவற்றின் கலவை விகிதம் ஒரே மாதியாக உள்ளன. குண்டுவெடிப்பின் தன்மையில் வேறுபாடுள்ளதே தவிர, மற்ற விசயங்களில், இரண்டும் ஒன்றே என்று எடுத்துக் காட்டுகின்றன. குண்டுகளைத் தயாரித்தவர்கள் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரே இடத்தில் கற்றுக்கொண்ட முறையின் மூலம் கற்றுக் கொண்ட முறை என்று தெரிகிறது. மேலும் பர்த்வானில் குண்டு வெடித்தவுடன் ரஜிரா பீபி இந்த மூவருடனும் தொடர்பு கொண்டு பேசியுள்ளாள். இதன் மூலம் “ஸ்லீப்பர் செல்” முறையும் வெளிப்படுகிறது.

பர்த்வான் கைது என்.ஐ.ஏ

பர்த்வான் கைது என்.ஐ.ஏ

அருண் செல்வன் தொடர்பு, விசாரணை: மேலும் செப்டம்பரில் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் அருண் செல்வன் கைது செய்யப் பட்டதும் முக்கியமாகிறது. என்.ஐ.ஏ இந்த விசயத்தில் அவனிடம் விசாரணை மேற்கொண்டது.  ஏனெனில், பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பந்தப் பட்ட இடங்களில், தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களின் புகைப்படங்கள் சிக்கின. அவை அருண் செல்வராஜ் எடுத்து அனுப்பியிருக்கலாம் என்று கருதப் படுகிறது. மேலும் கௌஹாத்தி எக்ஸ்பிரசில் குண்டு வைக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாமல் இருக்கக் கூடும், உண்மையில், தமிழகத்திலிருந்து வெடிப்பொருட்கள், ரசாயன கலவைகள் முதலியன அசாமிற்கு எடுத்தச் செல்ல முயன்றிருக்கலாம். அம்முயற்சியில், சரியாக கையாளப் படாதலால், தவறி வெடித்திருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. எது எப்படியாகிலும், தமிழகத்திற்கும் ஜிஹாதிகளுக்கும் உள்ள தொடர்பு மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.

பர்த்வான் குண்டுவெடிப்பில் தமிழக ஜிஹாதிகளின் தொடர்பு

பர்த்வான் குண்டுவெடிப்பில் தமிழக ஜிஹாதிகளின் தொடர்பு

சாரதா-போன்ஸி ஊழலுக்கும், வங்காளதேச தீவிரவாத குழுக்கும் உள்ள சம்பந்தம்[6]: சாரதா-போன்ஸி ஊழலில், பணம் வங்காள தேசத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய வங்கிற்குச் சென்றதை அமுலாக்கப் பிரிவு கண்டுபிடித்தது. இது ஊழல் பணத்தை நல்ல பணமாக்கும் அல்லது கணக்கில் உள்ள பணம் போல காட்டும் முயற்சி என்றும் எடுத்துக் காட்டப் பட்டது. சுமார் ரூ.60 கோடிகள் இவ்வாறு வங்காளதேச இஸ்லாமிய வங்கிக்கு, மேற்கு வங்காள அரசியல்வாதிகள் மூலம் சென்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு விசாரணை மூலம், இவ்விவரங்களை ஆராய நேர்தால், திரிணமூல் முகமூடி கிழிந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள் போலும். ஒரு பக்கம் சாதாரண மக்களிடமிருந்து பணம் பெற்று, அவர்களை ஏமாற்றி, ஆனால், அதே பணத்தை தீவிரவாத செயல்களுக்கு திருப்பிவிடும், திரிணமூல் காங்கிரஸ்காரர்களைரேன் மற்றவர்கள் ஆதரிக்க வேண்டும். இந்த இஸ்லாமிய வங்கிற்கும், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பிற்கும் தொடர்புள்ளது. இதன் மூலம் ஜே.எம்.பிக்கு பணம் சென்று, அதன் மூலம் தீவிரவாதிகளுக்கு பணம் வந்திருக்கும்[7]. இப்பணத்தினால், இவர்கள் பர்த்வானில் இடத்தை வாங்கி, அங்கு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியுள்ளனர்.

© வேதபிரகாஷ்

17-10-2014

[1] http://timesofindia.indiatimes.com/india/Bardhaman-blast-NIA-probe-leads-to-JK-Tamil-Nadu-Kerala/articleshow/44787458.cms

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=113757

[3] தினகரன், பர்த்வான் குண்டுவெடிப்பு: சென்னையை சேர்ந்த 3 பேருக்கு தொடர்பு, 17-10-2014

[4] http://timesofindia.indiatimes.com/india/NIA-suspects-link-between-Bardhaman-Chennai-blasts/articleshow/44819492.cms

[5] http://timesofindia.indiatimes.com/india/NIA-suspects-link-between-Bardhaman-Chennai-blasts/articleshow/44819492.cms

[6] Abhishek Bhalla, Bangladesh terror group thought to be behind Burdwan blast were ‘funded by Saradha ponzi scam‘,  Published: 23:36 GMT, 13 October 2014 | Updated: 23:36 GMT, 13 October 2014, Daily Mail, UK.

[7] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2791507/bangladesh-terror-group-thought-burdwan-blast-funded-saradha-ponzi-scam.html

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)

திசெம்பர் 20, 2013

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)

Faizul complaintant getting undue publicity.2இவ்விவகாரத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவுகளை இங்கே பார்க்கவும்:

  1. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (1)[1]
  2. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (2)[2]
  3. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)[3]

Faizul complaintant getting undue publicityநடிகை  ரா தா  திடீர்  பல்டி:   தொழிலதிபர் மீதான  வழக்கு வாபஸ்: எல்லா தமிழ் நாளிதழ்களும், மிகச்சிறிய மாற்றத்துடன், இந்த செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளன. 18-12-2-13 அன்று இரவு நடிகை ராதா திடீரென்று வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார் என்று தினமலர் கூறுகிறது[4]. கையோடு கொண்டு வந்திருந்த மனுவை அங்கிருந்த போலீசாரிடம் கொடுத்தார் என்று மாலைமலர் கூறுகிறது.  தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை கைவிட்டு விடவேண்டும் என்றும் மனு எழுதி கொடுத்துவிட்டு அவசரமாக சென்றார்[5]. எனினும் அவர் வந்துள்ளது உண்மைதான் என்று தெரிகிறது, மனு கொடுக்கப்பட்டதும் நிஜமே.  மற்ற விசயங்களில் ஊடகங்களில் சட்டமேதைகள் போன்று விவாதிப்பார்கள். ஆனால், இப்பொழுது, அதை போலீசாரிடமே விட்டு விட்டார்கள் போலிருக்கிறது!

Faizul complaint by drug trafficking arrested affectedவடபழனி போலீசார் நிலை: இதே ராதா வடபழனி இன்ஸ்பெக்டர் பைசூலுக்கு ஆதரவாக வேலை செய்வதால், வழக்கை வேறு அதிகாரிக்கு / போலீஸ் ஷ்டேசனுக்கு மாற்ற வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். அப்பொழுது போலீசார் மிகவும் கடுப்பாகி விட்டனர். அதனால் இது போலீசாருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது. இந்த மனுவை ஏற்பதற்கில்லை என்றும்[6], இதை கோர்ட்டில் போய் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர்[7]. அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நடிகை ராதா காரில் ஏறி வேகமாக போய்விட்டார்[8]. நடிகை ராதாவின் இந்த திடீர் முடிவு போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், ஊடகக்காரர்களுக்கு வேடிக்கையாக இருந்தது போலும்! மற்ற நெரங்களில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல், காத்து நிற்பதைப் போல 18-12-2013 அன்று ஊடகக்காரர்கள் நிற்கவில்லை போலும்!!

போலீசார்  விசாரணையைத்  தொடருவார்களா  அல்லது  விட்டு  விடுவார்களா?: தொழிலதிபர் பைசூலை கைது செய்ய தேடிவரும் நிலையில் நடிகை ராதா இதுபோல் திடீரென்று புகாரை வாபஸ் வாங்கி பல்டி அடித்து இருப்பது ஏன்? அதில் உள்ள மர்மம் என்ன? ராதாவின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது குறித்தும், இதன் பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்[9].   இதனை ஏற்க மறுத்து, புதிய கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்[10].  இருப்பினும், புகார் கொடுத்தவரே, வாபஸ் வாங்கிக் கொண்டுள்ளதில் சட்டநிலைனை என்ன என்ற கேளிவியும் எழுகின்றது. போதை மருந்து கடத்தல், வேலை வாங்கித் தருவதாக ஆட்களை ஏமாற்றுதல், பெண்ணின் மீதே பலருடன் வாழ்ந்தவள், ஆதாரங்களை வெளியிடுவேன் என்றெல்லாம் பேட்டிக் கொடுத்துள்ள நிலை, ராதாவுடன் படுத்த காட்சிகளையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளேன், அவற்றை இணைதளத்தில் போடுவேன் என்றெல்லாம் மிரட்டியதாக ஊடகங்களில் அளவிற்கு அதிகமாகவே வந்துவிட்ட நிலையில் போலீசார் சும்மா இருக்க முடியுமா?

பர்வீன்பைசூல்  அல்லது   ராதாஷ்யாம்  சமரசம்  செய்து  கொண்டனரா?: ராதா வழக்கை வாபஸ் பெற்றார்[11] என்பதை தவிர, பர்வீன்-பைசூல் அல்லது ராதா-ஷ்யாம் சமரசம் செய்து கொண்டதைப் போல, ஆங்கிலத்தில் சில இணைதளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

Actress Radha Got Compromised[12]
Radha accused Faizul of blackmailing her to reveal their intimate photos and videos. She also made statements like the Police is not helping her and acting against her to help Faizul. Now the scene has completely changed. As a development, she reportedly has withdrawn the complaint and got compromised with Faizul.
நடிகைராதாசமரசம் நடிகை ராதா பைசூல் மீது, தங்களது அந்தரங்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியதற்காக புகார் கொடுத்தார். போலீசார் தனக்கு உதவுவதில்லை, மாறாக பைசூலுக்குத் துணை போகின்றனர் என்றேல்லாம் கூட புகார் கூறிவந்தார்.

ஆனால், காட்சி இப்பொழுது முழுவதுமாக மாறிவிட்டது. இப்பொழுது பைசூல் மீது கொடுக்கப்பட்ட புகார் திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும், இதனால் பைசூலிடம் சமாசம் செஹ்ய்து கொண்டதாகவும் தெரிகிறது[13]. இதே மாதிரி மரியம் பீவி கொடுத்த புகார்[14], அக்ரம் கான் ஆட்கள் மிரட்டுகிறார்கள் என்றது[15] மற்றும் அக்பர் பாஷா கொடுத்த புகாரும் வாபஸ் பெற்றால், போதை மருந்து கடத்தல் முதலிய விவகாரங்களும் மறைக்கப்படுமா?

பைசூல்  எனது  கணவர்  தானே  என்றால்,   திருமணம்  இல்லாமலேயே  அந்த   அந்தஸ்து  எப்படி  கிடைக்கிறது?: ராதாவின் திடீர் பல்டி மற்றும் புகாரை வாபஸ் வாங்கியதற்கான காரணம் குறித்து கருத்து கேட்பதற்காக நடிகை ராதாவிடம் நிருபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர்[16]. அப்போது நடிகை ராதா, “ எது எப்படியோ  பைசூல் எனது கணவர்தானே, ஒரு வேகத்தில் புகார் கொடுத்துவிட்டேன். ஆனால் இப்போது மனசு கேட்கவில்லை. அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார். தொடர்ந்து அவரை ஓட விடுவதற்கு எனக்கு மனம் இல்லை[17]. அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்”, என்று கூறி போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்[18]. சரி, பிறகு வீட்டிற்கு நேராகச் சென்று பேட்டிக் கண்டு, விவரங்களை வெளியிட்டிருக்கலாமே? ஆனால், செய்யவில்லை.

பைசூல்எனதுகணவர்தானேஎன்றால், திருமணம்எப்பொழுதுநடந்தது?: அந்தர் பல்டி, வழக்கு வாபஸ் என்று தான், நமது சூரப்புலி ஊடகவீரர்கள் எழுதுகிறார்களே தவிர, திடீரென்று பைசூலுக்கு பர்வீன் எப்படி மனைவி ஆனாள் என்பது குறித்து ஒன்றும் யோசிக்கவில்லை போலிருக்கிறது. நித்தியானந்தா விசயத்தில் அப்படி குதித்த ஊடகக்காரடர்கள் இதை அப்படியே அமுக்கப் பார்க்கிறார்களா? லெனின் போன்ற வீராதி வீரர்கள் படுக்கை அறைக் காட்சிகளை வீடியோ பிடிப்பதில் வல்லவர்கள் ஆயிற்றே? பிறகெப்படி அமைதி காக்கிறார்கள். ராதாவுடன் படுத்த காட்சிகளையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளேன், அவற்றை இணைதளத்தில் போடுவேன் என்றெல்லாம் மிரட்டியதாக செய்திகளை வெளியிட்ட போது, எந்த பெண்ணிய வீராங்கனைகளும் இதைப் பற்றி கேட்கவில்லையே? ஆணுக்கும்-பெண்ணுக்கும் சண்டை வரலாம், ஆனால், அந்தரங்க படுக்கை விசயங்களை ஒரு ஆண் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுகிறான் என்றால், அது எந்தவிதமான கலாச்சாரம், நாகரிகம் என்று எந்த தமிழ்-தெலிங்கு உணர்வுள்ள, இனமான ரோஷமுள்ள எவனும் கேட்கவில்லையே? ஏனிந்த மௌனம் அல்லது பாரபட்சம் அல்லது மறைப்பு?

பர்வீன்பைசூல்  அல்லது  ராதாஷ்யாம்  விவகாரங்களில்  பல  உண்மைகள்   மறைக்கப்படுகின்றன: கீழ் குறிப்பிட்டுள்ள விசயங்களில் பல கேள்விகள் எழும்புகின்றன:

  1. ஒரு பெண் இன்னொரு ஆணுடன் திருமணம் ஆகாமல் உடலுறவு கொண்டுறஆறுவருடம் வாழ்ந்தது.
  2. கருவுற்றபோது, அபார்ஷண் செய்து கொண்டது, அதற்கான சான்றிதழ்கள் பெற்றுக் கொண்டது.
  3. ஆண் அவ்வாறான படுக்கைக் காட்சிகளை, பெண்ணுக்குத் தெரியாமல் போட்டோ-வீடியோ எடுத்து வைத்துக் கொண்டது.
  4. ஒரு நாள் அப்பெண் இதனை அறிந்து ஏன் எடுத்தீர்கள், என்று கேட்டதற்கு, நீ இல்லாத நேரத்தில் அதனைப் பார்த்து ரசிப்பதற்கு என்றது.
  5. பெண் ஆணை தன்னை ஏமாற்றி விட்டான் என்று புகார் கொடுத்தது.
  6. தங்களது அந்தரங்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியதற்காக புகார் கொடுத்தது.
  7. ரூ.50 லட்சம் மோசடி செய்து விட்டார் என்றும் பெண் புகார் கொடுத்தது.
  8. ஆண் பல பெண்களுடன் / நடிகைகளுடன் செக்ஸ் தொடர்பு கொண்டுள்ளார் என்றது.
  9. ஆண் பதிலுக்கு பெண்ணின் அந்தரங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியது.
  10. பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது என்று அந்த ஆண் பேசியது.
  11. ஆணின் தங்கை, அப்பெண் தன்னை மிரட்டுவதாக புகார் கொடுத்தது.
  12. அப்பெண் போலீசார் தனக்கு உதவுவதில்லை, மாறாராணுக்குத் துணை போகின்றனர் என்றேல்லாம் கூட புகார் கூறிவந்தது.
  13. இன்னொரு ஆள், அந்த ஆண் தன்னை போதை மருந்து கடத்தலில் மாட்டி விட்டார் என்று புகார் கொடுத்தது.
  14. மூன்று முறை முன் ஜாமீன் பெற மனு போட்டது.
  15. மூன்று முறையும்முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
  16. அந்த ஆணை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்றது.
  17. ஆனால், இப்பொழுது, பெண் மட்டும் புகாரை வாபஸ் பெற்றுள்ளது.
  18. குறிப்பாக, இப்புகாரணனைத்துப் பெண் பொலீஸ் நிலையத்தில் கொடுக்கப் பட்டுள்ளதால், புகாரை முடித்துவிட முடியுமா?
  19. ஏற்கெனவே கோர்ட்டில் சென்றுள்ள வழக்குகள் என்னவாகும்?
  20. மேலாக, இதனை எந்த பெண் இயக்கமும், மனித உரிமைகள் என்றெல்லாம் பேசும் இயக்கங்களும் ஏன் கண்டுகொள்ளவில்லை.

வேதபிரகாஷ்

© 20-12-2013


[4] தினமலர், சென்னை பதிப்பு,

[5] மாலைமலர், நடிகைராதாதிடீர்பல்டி: தொழிலதிபர்மீதானவழக்கைவாபஸ்பெற்றார், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2:57 AM IST; மாற்றம் செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 3:25 AM IST

[11] Actress Radha has suddenly withdrawn the case against entrepreneur Faizul. Police are conducting a new investigation on what is the mystery in her sudden decision. She who starred in “Sundara Travels” film lodged a complaint at Commissioner Office stating, Faizul of Triplicane had lived with her for 6 years as husband, cheated her Rs.50 lakh of money and also threatened her that he would make her private videos public. Vadapalani all-women police registered a complaint and began investigation.  In order to refrain arrest Faizul filed anticipatory bail petition 3 times which was dismissed by the court. In this situation, actress Radha challenged that she would see Faizul jailed. Meanwhile, actress Radha came to Vadapalani all-women police station yesterday and said she would withdraw the case against Faizul. While speaking to the reporter over phone she said, she was not willing to make her husband run around. However, police are investigating on the reason for her sudden change. http://indiaeng.tamil4.com/view.php?view=9000