Posted tagged ‘லப்பை’

சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்த முஸ்லிம்கள் இப்பொழுது சதவீதம் ரீதியில் இட-ஒதுக்கீடு கேட்பதுஏன்?

திசெம்பர் 20, 2022

சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்த முஸ்லிம்கள் இப்பொழுது சதவீதம் ரீதியில்  இட-ஒதுக்கீடு கேட்பது ஏன்?

சமத்துவம், சகோதரத்துவம், பேசும் மதங்களில் திடீரென்று எப்படி ஜாதி வந்தது?: சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம், இப்பொழுது சதவீதத்தில் இட-ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துள்ளன. எங்களிடமும் ஜாதி, ஜாதித்துவம், பிரிவுகள் உள்ள என்று ஒப்புக் கொள்ளும் வரைக்கு வந்து விட்டன. இதுவரையில் ஏன் இன்னும், இந்துமதம் தான் ஜாதிய கட்டமைப்பிற்கு காரணனம் என்று சொல்லிக் கொண்டு வரும் நிலையில், இந்த பிரகடனங்கள் செய்யப் பட்டு வருகின்றன. கிருத்துவ டினாமினேஷன்கள் இனி ஜாதிப் பிரிவுகள் ஆகலாம். சுன்னி, ஷியா, அஹமதியா, போரா, போன்றவை இச்லாமிய ஜாதிகள் ஆகலாம். சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பிற்பட்டுள்ள வகுப்பினர்களுக்கு (Socially and educationally backward classes) இட-ஒதுக்கீடு என்பதை, ஜாதி ரீதியில் திரித்து பேசி, விளக்கம் கொடுக்கப் பட்டு வருகிறது. OBC (Other Backward Classes) என்றதிலும், மதரீதியில் இட-ஒதுக்கீடு செய்யப் பட்டு வருகிறது. அதில், முஸ்லிம்கள் சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் பெற்று வருகின்றனர்.

50% / 69% கணக்கை சுற்றி வளைக்க உள்-இட-ஒதுக்கீடு கொடுத்தது: அ.தி.மு.க, 2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டுக்கு ஆணையம் அமைத்தது[1]. மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு, 2007 செப்டம்பர் 15 அன்று பிற்படுத்தப்பட்டோருக்கான 30% இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடாக 3.5%-ஐ முஸ்லிம்களுக்கும், 3.5%-ஐக் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கியது[2]. இது இந்திய அரசியல்நிர்ணயச்சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என்றாலும், மற்ற மாநிலங்களில் இத்தகைய இட-ஒதுக்கீடு கொடுக்கப் பட்டு, எதிர்க்கப் பட்டு, உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கு நிலுவையிலுள்ளது. ஆகையால், கொடுத்து வைப்போம், அவர்களும் இட-ஒதுக்கீடு பெற்று அனுபவிக்கட்டும். பிறகு, கொடுத்து விட்டதால், அவர்கள் அனுபவித்து வருவதால், அதனை திரும்பப் பெறக்கூடாது என்றும் மேல்முறையீடு செய்யலாம், அரசியல் ரீதியில், எதிர்ப்பு மனு இருக்காது. ஆக, அப்படியே அமைதியாக விவகாரத்தை மூடி விடலாம் என்றும் திட்டம் போட்டிருக்கலாம்.

முஸ்லிம்களின் மக்கள் தொகையும், இடஒதுக்கீடும்: முஸ்லிம்களின் மக்கள் தொகை முஸ்லிம்களின் மக்கள் தொகை நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை, கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரை 24 சதவீதம் அதிகரித்துள்ளது[3]. 2022ல் மேலும் உயர்ந்துள்ளது. போதாகுறைக்கு, பன்களாதேசத்திலிருந்து வேறு உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். அஸாமில் இதுவே 5 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்சினையாகி, இப்பொழுது அமுக்கப் பட்டு விட்டது. இதன் மூலம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் சதவீதம் 13.4-ல் இருந்து 14.2 ஆக உயர்ந்துள்ளது[4]. பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய இசுலாமியர்களின் மேம்பாட்டிற்காக, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு அரசு அரசாணை எண். 85. பிற்படுத்தப்பட்டவகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 29.7.2008 இன் படி பிற்படுத்தோர் வகுப்பினர்க்கான 30% இட ஒதுக்கீட்டில் இசுலாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 3.5% உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1992ல் இது தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பில், மத்திய அரசின் பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லக்கூடாது என உத்தரவிட்டது. இதன் காரணமாக, 1980ல்இருந்து தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டிற்கு சிக்கல் ஏற்பட்டது.

முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு;  இது குறித்து ஏப்ரல் 2022ல், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் பைசல் அகம்மது கூறியதாவது: “இந்தியாவில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13.4 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்[5]. ..எஸ் பணியில் 3 சதவீதம், பட்டப் படிப்பு படித்தவர்கள் 3 சதவீதம், ரயில்வேயில் 4.5 சதவீதம் முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர்[6]. இந்நிலையில் 2007ம் ஆண்டு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தது. இந்திய சமூகங்களுக்கு இடையே ஏற்றத் தாழ்வுகளை நீதிபதி சச்சார் கமிஷன் கண்டறிந்தது. இந்த இரு கமிஷன்களின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2007ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீட்டை திமுக அமல்படுத்தியது. தமிழகத்தில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வரும் 22ம் தேதி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது”.

17-07-2022 அன்று கோரிக்கை 20-12-2022 அன்றும் வைத்தது: ராமநாதபுரத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் உமா் பாரூக் தலைமை வகித்தார். மாவட்டப் பேச்சாளா் பரகத் அலி வரவேற்றார். மாநில துணைத்தலைவா் ஆல்பா நசீா், மாநிலச் செயலாளா் முஹமது ஃபரூஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்[7]. முஸ்லிம்களுக்கு தமிழக அரசு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது[8]. இப்பொழுது மறுபடியும், 20-12-2022 அன்று இதே கோரிக்கையை, தவ்ஹீத் ஜமாத் வைத்துள்ளது. 7% எப்படி எங்கிருந்து வந்தது, எப்படி அமூல் படுத்தப் படும் என்று கவனிக்க வேண்டும்.

இஸ்லாம், ஜாதி, ஒதுக்கீடு: இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்பது குரான்படி அவர்களுடைய நம்பிக்கை. இதற்கு எதிராக எந்த உண்மையான முஸ்லீமும் இஸ்லாத்தில் ஜாதி உண்டு, ஆகையால் அந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடு என்று கேட்கமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் அத்தகைய ஏமாற்றுவேலையல் முஸ்லீம்கள் செய்து வருகிறார்கள். இப்பொழுது, வெளிப்படையாக கோரிக்கைகளும் வைக்கப் படுகின்றன. அதாவது குரானை மதிக்காமல், முஸ்லீம்கள் மாறாக செயல்பட்டு வருகிறர்கள். இங்கு அவர்களின் அல்லாவின் கோபத்தைப் பற்றிக் கவலைப் படுவது கிடையாது. முஸ்லீகளிடையே உள்ள முரண்பாடுகளை சிலர் எடுத்துக் காட்டியுள்ளனர். இறையியல் வல்லுனர்களும் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். 50% மற்ரும் 69% என்னாகும் என்று தான் கவனிக்க வேண்டும்.

இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா? இஸ்லாத்தில் சமத்துவம், தோளோடு தோள் தொட்டுக்கொண்டு, ஒட்டிக்கொண்டு, கட்டிக்கொண்டு இருப்போம், தொழுவோம்……………என்றெல்லாம் பேசி, பிர்ச்சாரம் செய்யும் வேலையில், எப்படி, இப்படியொரு கோரிக்கை இடுவர்? இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா, இல்லையா என்று அவர்கள் வெளிப்படையாக தமது சித்தாந்தத்தை சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது. அவர்களது இறையியல் வல்லுனர்களே விளக்கம் கொடுக்கலாம். ஏனெனில், இரண்டு விதமாக பேசிவருவது மக்களுக்கு விசித்திரமாக உள்ளது. இருப்பினும் ஏதோ காரணங்களுக்காக இட-ஒதுக்கீடு கோரிக்கையை மட்டும் ஆதரிப்பது போலத் தெரிகிறது.

இந்தியர்களை ஏமாற்றும் வேலை: அம்பேத்காரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் இல்லை, நேருவே ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் மதரீதியில் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றால் என்ன விஷயம் என்று இந்தியர்களுக்கு விளங்கவில்லை. சட்டரீதியாக முடியாது என்பதனை, ஒரு அரசியல் கட்சி முடியும் என்று வாக்குறுதி கொடுப்பது, இப்படி அழுத்தத்தை ஏற்படுத்துவது, மக்களை ஏமாற்றுவது என்ற முறையில் செல்லும் இந்த விவகாரத்தை இந்தியர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இப்பொழுது தலித் போர்வையில் எஸ்சி முஸ்லிம்களுக்கும் இட-ஒதுக்கீடு வேண்டும் என்றெல்லாம் கேட்கப் பட்டுள்ளது. மத்திய அரசு பரிசீலினையிலும் உள்ளது.

© வேதபிரகாஷ்

20-12-2022


[1] தமிழ்.இந்து, முஸ்லிம் உள் இடஒதுக்கீடு: சட்ட மறுசீரமைப்பு நடக்குமா?, புதுமடம் ஜாபர் அலி, Published : 13 Sep 2022 07:10 AM, Last Updated : 13 Sep 2022 07:10 AM

[2] https://www.hindutamil.in/news/opinion/columns/865866-muslim-internal-reservation-1.html

[3] தமிழ்.இந்து, 2001-2011-ம் ஆண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரிப்பு, பிடிஐ, Published : 23 Jan 2015 10:35 AM, Last Updated : 23 Jan 2015 10:35 AM.

[4] https://www.hindutamil.in/news/india/27909-2001-2011-24.html

[5] தினமலர், முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பாளை.,யில் 22ம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம், Added : ஏப் 19, 2012  01:59

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=450943

[7] தினமணி, முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், By DIN  |   Published On : 17th July 2022 11:13 PM  |   Last Updated : 17th July 2022 11:13

[8] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2022/jul/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3881897.html

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர்நீதி மன்றம் உத்தரவு (2)

திசெம்பர் 4, 2022

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (2)

மதம் மாறியவர் வெறும் முஸ்லிமா, லெப்பை முஸ்லிமா?:  நீதிமன்றமும் மற்றொரு கோணத்தில் இந்தப் பிரச்னையை அணுகியது. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர் அல்லது முஸ்லிம் சமூகமும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்படவில்லை[1]. முஸ்லீம் சமூகத்தில் உள்ள 7 குழுக்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக பட்டியலிடப்பட்டுள்ளன, அவர்களில் லெப்பைகளும் அடங்கும். மனுதாரரின் மதமாற்றம் குறித்து காஜி வழங்கிய சான்றிதழில், அவர் முஸ்லிம்களின் லெப்பை குழுவாக மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை[2]. மனுதாரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்று தான் கூறுகிறது. அதனால், மதம் மாறிய தன்னை பிசி முஸ்லிமாக கருத வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுதான். அதில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்[3]. இனி தீர்ப்பில் உள்ள கடைசி முக்கியமான பத்திகளை கவனிப்போம்.

G.O.Ms.No.85 BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நல (BCC) துறை, 29.07.2008 தேதியிட்ட அறிக்கை: 12. பிரச்சினையை இன்னொரு கோணத்தில் அணுகலாம். தமிழகத்தில் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

G.O.Ms.No.85 BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நல (BCC) துறை, 29.07.2008 தேதியிட்ட அறிக்கையின் படி, பின்வருவனவற்றின் பின்தங்கிய வகுப்பினரின் (முஸ்லிம்கள்) பட்டியலை மட்டும் பட்டியல்படுத்துகிறது:

“1. Ansar – அன்சார்,

2. Dekkani Muslims  – தெக்கானி முஸ்லிம்கள் [தக்காண முஸ்லிம்கள்],

3. Dudekula – துதேகுல,

4. Labbais including Rowthar and Marakayar (whether their spoken language is Tamil or Urdu)- ரவுத்தர் உட்பட லப்பைகள் மற்றும் மரக்காயர் (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது),

5. Mappilla – மாப்பிள்ள [குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள்],

6. Sheikh – ஷேக்,

7. Syed – சையத்.”

இவர்களை முஸ்லிம்கள் பிரிவுகள், சமூக அடுக்குகள், கட்டமைப்புகள் அல்லது ஜாதிகள் என்று எப்படி கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஜாதியில்லை என்றால், இந்த ஏழு குழுக்களும் மாறி, அல்லது மாற்றம் பெற முடியுமா என்றும் தெரியவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜி.மைக்கேல் தீர்ப்பு [Kailash Sonkar v. Maya Devi (1984) 2 SCC 91 and G.Michael v. S.Venkateswaran [1952 (1) MLJ 239]: எப்பொழுது ஒரு இந்து இஸ்லாத்திற்கு மாறும்போது, அவன் ஒரு முசல்மான் ஆகிறான், அவனுடைய இடம்முஸ்லீம் சமூகம் அவருக்கு முன் எந்த சாதியை சார்ந்தது என்பதை வைத்து தீர்மானிக்கப்படவில்லை, படுவதில்லை. காஜியே அதமாற்றம் அடைந்தவர். மாற்றியவர் ப்படி இருக்க வேண்டும் என்று அறிவிக்காதபோது, மதச்சார்பற்ற அரசாங்கத்தின் வருவாய் அதிகாரி எப்படி, அவரை “லெப்பை” என்று அடையாளம் கண்டு, தீர்மானித்து, இஸ்ல்லாம் என்ற கூண்டுக்குள் அடைக்கிறார் என்று தெரியவில்லை. இது எனக்கும் புரியவில்லை.

எஸ்.ருஹய்யா பேகம் வழக்கு [S.Ruhaiyah Begum vs The Government Of Tamil Nadu (WPNo.2972 of 2013 dated 19.02.2013)]: .எஸ்.ருஹய்யா பேகத்தைப் போல ஒரு இந்து “மற்ற வகையை” சேர்ந்தவர்கள் என்ற பக்குப்பிலிருந்து, இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு தம்முடைய நிலையை சாமர்த்தியமாக நிர்வகிக்கிறார்கள் அவர் அல்லது அவள் மேற்கூறிய அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரைச் சேர்ந்தவர் என்பது போன்ற சான்றிதழைப் பெறவும் இத்தகைய புத்திசாலித்தனத்தால் செய்கிறார் என்றால், சமூக நீதியின் நோக்கமே அதனால் தோற்கடிக்கப்படும் உத்திகள். நன்கு கற்றறிந்த மூத்த வழக்குரைஞர், மாற்றுத் திறனாளியாக இருந்தால் மட்டுமே மதமாற்றத்திற்கு முன்பே இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வருகிறார். பின்னர் தனியாக அவர் பிசி (முஸ்லிம்) என்று கருதலாம். எஸ்.ருஹய்யாவில் நடைபெற்றது என்று வாதித்தால், அந்த முயற்சியை அரசு மட்டுமே மேற்கொள்ள வேண்டும், தீர்மானிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் முன்பு நிலையில் உள்ள வழக்கு: “13. எஸ்.யாஸ்மின் வழக்கில் கவனிக்கப்பட்டபடி, மதமாற்றத்திற்குப் பிறகும் பிறந்த சமூகம் [ஜாதி போன்றவற்றை] ஒரு நபர் தனது சுமந்து செல்ல முடியாது. மதமாற்றத்திற்குப் பிறகும் அப்படிப்பட்ட நிலை இருக்க வேண்டுமா, இடஒதுக்கீட்டின் பலன் கொடுக்கப்பட வேண்டுமா என எழுப்பிய  கேள்வி, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் உன்பு தீர்ப்பு நிலுவையில் உள்ளது. மாண்புமிகு சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை கைப்பற்றியுள்ளபோது, இந்த நீதிமன்றத்தை எந்த கருத்தையும் சொல்ல முடியாது. இந்த காரணத்திற்காக, மனுதாரரின் கோரிக்கை. நான் வற்புறுத்தினாலும் ஏற்ல முடியாது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய முன்மாதிரிகளும் அவ்வாறே, வரும் திர்ப்புக்குக் கட்டுப்பட்டது. ஆகவே, இரண்டாவது பிரதிவாதி ஆணைக்குழுவின் நிலைப்பாடு சரியானது, அதில்எந்த குறுக்கீடும் எய்ய முடியாது, அது  தேவையற்றதும் ஆகும்”.

இடவொதிக்கீட்டில் இடவொதிக்கீடு / உள்இடவொதிக்கீடுமுதலிய அரசியல்வாதிகளின் சலுகைகள்: மதம் மாறிவர்களுக்கு இடவொதிக்கீடு கொடுக்க அரசியல்வாதிகள் பலமுறைகளை கையாண்டு வருகிறார்கள். அவை தான், சட்டங்கள், தீர்ப்புகள், நீதிகள், வரையறைகள் என்று எல்லாவற்றையும் மீறி செயல்பட முயற்சித்து பிரச்சினைகளை உண்டாக்குகின்றனர். “இடவொதிக்கீட்டில் இடவொதிக்கீடு / உள்-இடவொதிக்கீடு” என்ற போர்வைகளில் மாநில அரசுகள் முஸ்லிம்களைக் குறிப்பாக தாஜா செய்து, “ஓட்டு வங்கி,” மற்றும் எல்லைகள் கடந்த பொருளாதார ஆதாயங்களைப் பெற “ரிசர்வேஷன்” சலுகைகளைக் கொடுத்து வருகிறார்கள். உண்மையில் அம்மதங்கள், அவர்கள் மதங்கள் அத்தகைய பாகுபாடுகள் கொண்டிருக்கவில்லை, 100% சமத்துவம், சகோதரத்துவம், சமவுரிமைகள் என்றெல்லாம் கொண்டிருக்கின்றன என்றால், மண்டல் கமிஷன் தீர்ப்பு, சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முதலியவற்றின் பரிந்துரைகள்  எல்லாம் பொய், தவறு, தங்களது பைபிள் / குரான் –க்ளுக்கு எதிரானவை, ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மறுத்திருக்க வேண்டும். ஆர்பாட்டம்-போராட்டம் செய்து, மாற்றியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. ஜாதிகள் உண்டு என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள், புத்தகங்கள் எழுதி வெளியிட்டு வருகிறர்கள்.

முரண்பாட்டுடன் இறையியல் சித்தாந்தம் இருக்க முடியாது: கிருத்துவர்கள் லாப-நஷ்ட கணக்குப் போட்டு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் தீர்ப்பு-ஆதரவு, ஆசை-பேராசை போன்றவற்றால் தவிக்கிறார்கள். கிருத்துவர்களைப் போலவே, நீதிமன்றங்களில் சோதனை செய்து பார்க்கிறார்கள். ஆனால், இறையியல் விவகாரங்கள் வெளிவரும் போது, மறைக்கப் பார்க்கிறார்கள். வழக்கம் போல, இந்து மதம், சனாதனம் என்றெல்லாம் பேசி, திசைத் திருப்பப் பார்க்கிறார்கள். முஸ்லிம்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை, பிற மதங்களைச் சேர்ந்த முஸ்லீம்கள் ‘மற்றவர்கள்’ என்ற பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவதால், அவர்கள் இடஒதுக்கீட்டை இழக்கின்றனர்[4]. கிறிஸ்தவ மதத்திற்கு மாறுபவர்கள் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக’ (மதமாற்றத்திற்கு முன் அவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்) கருதப்பட்டாலும், மதம் மாறிய முஸ்லீம்களின் விஷயத்தில், ஒரு நபர் முதலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவை ‘மற்றவை’ என மட்டுமே வகைப்படுத்தப்படுகின்றன, போன்ற கருத்துகள் ஏற்கெனவே வைக்கப் பட்டுள்ளன[5].

சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர்: இந்திய அரசியலமைப்பில், OBC கள் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினராக (SEBC) விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய அரசாங்கம் அவர்களின் சமூக மற்றும் கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது – எடுத்துக்காட்டாக, OBC கள் மேல் கல்வி மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு அதற்கு கொடுக்கப் படுகிறது.  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது கல்வி அல்லது சமூகத்தில் பின்தங்கிய சாதிகளை வகைப்படுத்த இந்திய அரசால் பயன்படுத்தப்படும் ஒரு கூட்டுச் சொல்லாகும். பொது சாதிகள், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி மற்றும் எஸ்டி) ஆகியவற்றுடன் இந்தியாவின் மக்கள்தொகையின் பல அதிகாரப்பூர்வ வகைப்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டின் மண்டல் கமிஷன் அறிக்கையின்படி OBC கள் நாட்டின் மக்கள்தொகையில் 52% என்று கண்டறியப்பட்டது, மேலும் 2006 ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு நடைபெற்ற போது 41% ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் OBC களின் சரியான எண்ணிக்கையில் கணிசமான விவாதம் உள்ளது; இது பொதுவாக கணிசமானதாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் மண்டல் கமிஷன் அல்லது தேசிய மாதிரி கணக்கெடுப்பு மேற்கோள் காட்டிய புள்ளிவிவரங்களை விட இது அதிகம் என்று பலர் நம்புகிறார்கள்.

பொருளாதார ரீயில் பின்தங்கிய வகுப்பினர்: ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடிமக்கள் மற்றும் பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBCs). இப்பொழுது, இந்தியாவில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) என்பது குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கும் (US$10,000) குறைவாக உள்ளவர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள SC/ST/OBC போன்ற எந்த வகையிலும் சேராதவர்கள் அல்லது தமிழில் MBC அல்லாதவர்களின் துணைப்பிரிவாகும்.  இப்பொழுது, இப்படியெல்லாம் பிரிக்கப் படும் நிலையில், மதம் போன்ற காரணிகளும் நுழையுமா, நுழைக்கப் படுமா, அல்லது செக்யூலரிஸ கொள்கை பின்பற்ரப் படுமா என்று கவனித்துப் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

02-12-2022 


[1] Live Law, One Can’t Carry His Caste After Conversion’: Madras High Court Rejects Backward Quota Claim Of Man Who Converted To Islam From Hinduism, Upasana Sajeev, ‘3 Dec 2022 9:31 AM.

[2] https://www.livelaw.in/news-updates/madras-high-court-a-person-cannot-carry-his-community-of-birth-even-after-conversion-rejects-backward-class-reservation-of-man-215673

[3] Case Title: U Akbar Ali v The State of Tamil Nadu and another Citation: 2022 LiveLaw (Mad) 492 Case No: WP (MD)No.1019 of 2022.

[4] The Hindu,‘Converted Muslims losing out on reservation in TNPSC jobs’- The same rule does not apply to converted Christians, says a former judge, T.K. ROHIT, – CHENNAI, March 27, 2022 10:50 pm | Updated March 28, 2022 07:48 am IST

[5] Muslims who have converted from other religions are losing out on the reservation for the Backward Class Muslims in Tamil Nadu Public Service Commission (TNPSC) jobs as they are treated as belonging to the category of ‘Others’. While those converting to Christianity are treated as belonging to the ‘Backward Classes’ (even if they belonged to the Scheduled Caste before conversion), in the case of converted Muslims, even if a person originally belonged to the Backward Class or Most Backward Class, they are only classified as ‘Others’.

https://www.thehindu.com/incoming/converted-muslims-losing-out-on-reservation-in-tnpsc-jobs/article65265386.ece

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (1)

திசெம்பர் 4, 2022

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (!)

கிருத்துவம் அல்லது இஸ்லாம் மதமாற்றம் ஏன் நடக்கிறது?: தமிழகத்தில் இந்துக்கள் மதம் மாறுவது நடந்து கொண்டே இருக்கிறது. தீண்டாமை மற்றும் ஜாதி, ஜாதிக் கொடுமைகள் காரணமாக எடுத்துக் காட்டப் பட்டு, கிருத்துவம் அல்லது இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டால், அத்தகைய வேறுபாடுகள், வித்தியாசங்கள், பாகுபாடுகள் முதலியன மட்டுமல்லாது, சமுத்தவம், சகோதரத்துவம், சம-அந்தஸ்து எல்லாம் கொடுக்கப் படும் அல்லது கிடைக்கும் என்று அறிவிக்கப் பட்டு அல்லது பிரச்சாரம் செய்யப் பட்டு, அத்தகைய மதமாற்றங்கள் நடந்தன, நடந்து வருகின்றன. இவையெல்லாம், ஆன்மீகம், தத்துவம், மெய்யியல் போன்றவற்றைக் கடந்து திட்டமிட்டு நடந்து வருகின்றன என்பது அரசாங்க, நிறுவனங்கள் ஆராய்ச்சிகள், தரவுகள் முதலியவை மூலம் அறியப் பட்டுள்ளன. மீனாக்ஷிபுரம் மதமாற்றம் அதனால் தான் பெரும் சர்ச்சையை உண்டாக்கி அடங்கி விட்டது. அதனால், எத்தனை மதம் மாறிய இந்துக்கள் பணக்காரர்கள் ஆனார்கள், உயர்ந்த சமுக்கத்தின் பெண்களை கல்யாணம் செய்து கொண்டார்கள், சிறந்த நிலையை அடைந்தார்கள் என்றெல்லாம் தெரியவில்லை.

மதமாற்றத்தால் உயர்ந்த நிலை கிடைத்ததா இல்லையா?: மண்டல் கமிஷன் தீர்ப்பு இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர் இடையேயும் ஜாதிகள் உண்டு என்றவுடன், சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முதலியவற்றின் பரிந்துரைகளின் ஆதாரமாக, அவர்கள் இடவொதிக்கீடு கேட்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், Caste [காஸ்ட்] மற்றும் class [கிளாஸ்] என்றவற்றிற்குள் இருக்கும் உண்மையினை அறிந்து கொள்ளாமல், உணர்ச்சி, அரசியல், சித்தாந்தம் போன்றவற்றால் உந்தப்பட்டு, மற்றவர்களையும் உசுப்பி விட்டு, பிரச்சினைகளை வளர்த்து வருவதும் தெரிகிறது. ஒரு பக்கம் எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம-உரிமைகள், எல்லோருக்கும் எல்லாம் என்றெல்லாம் பேசிக் கொண்டே, “எல்லாமே எனக்குத்தான்” என்று பல கூட்டங்கள் பெருகி வருவதைக் காணலாம். இங்கு தான், அப்பிரச்சினைகள், பெரிதாகி நீதிமன்றங்கலுக்குச் செல்கின்றன. அங்கு உண்மைகள் ஆராயும், அலசும் மற்றும் முடிவில் தீர்ப்புகளாக வரும் பொழுது, பிடித்தும்-பிடிக்காமலும் போகும் நிலை உண்டாகிறது. இப்பொழுது, இந்த தீர்ப்பும் அவ்வாறே இருக்கிறதா . இல்லையா என்று கவனிப்போம்.

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு: மதுரைக்கிளை உயர் நீதிமன்றம் ‘இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மாதத்துக்கு மாறியவரை பிசி முஸ்லிம் ஆக கருத வேண்டும்’ என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது[1]. இது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தாலும், வழக்கம் போல, “பி.டி.ஐ” பாணியில், “தமிழ்.இந்துவில்” வந்ததை மற்ற ஊடகங்கள் அப்படியே / வேறு தலைப்புகள் இட்டு / சிறிது மாற்றி வெளியிட்டுள்ளன. ஊடக வித்தகர்களும், நிருபர்களும், அப்படியே செய்தியை போட்டு, அமைதியாகி விட்டனர். இவ்வழக்கில் பாதிக்கப் பட்டவரிடம் சென்று பேட்டி காணவில்லை, முஸ்லிம் அரசியல் கட்சிகள், இயக்கத்தினர்களிடம், துறை அமைச்சர்களிடம் கமென்ட் / விளக்கம் கேட்கவில்லை, அன்று மாலையிலேயே, டிவிசெனல்களில் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. சமூகநீதி வித்தகர்கள், சமத்துவ சித்தாந்திகள், சமவுரிமை போராளிகள், சமன்பாட்டு வித்தகர்கள் முதலியோரும் காணப்படவில்லை.

காஜி கொடுத்த முஸ்லிம் சான்றிதழ், கேட்கும் பிசி அந்தஸ்து, மறுத்த TNPSC:  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யு.அக்பர் அலி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]. நானும், என் குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து 2008-ல் இஸ்லாம் மதத்துக்கு மாறினோம்[3]. நான் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் (a group within Muslim community which has been notified as a backward class) என ராமநாதபுரம் மண்டல துணை வட்டாட்சியர் 2015-ல் சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார்[4]. 2018-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு பிசி முஸ்லிம் பிரிவில் விண்ணப்பித்தேன்[5]. எழுத்துத் தேர்வு மற்றும் மெயின் தேர்வு எழுதினேன்[6]. இறுதி தேர்வுப் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை[7]. தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது என் பெயரை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்காமல், பொதுப்பிரிவில் பரிசீலித்துள்ளனர்[8]. என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்கக்கோரி அளித்த மனுவை டிஎன்பிஎஸ்சி செயலாளர் 28.7.2021ல் நிராகரித்து உத்தரவிட்டார். [இந்த TNPSC அதிகாரி வருவாய் அதிகாரியை விட பெரியவர்களா அல்லது அவர்கள் கொடுக்கும் சான்றிதழை மறுக்க அதிகாரம் உள்ளதா?]

லெப்பை முஸ்லிமா, பிற்படுத்தப் பட்ட முஸ்லிமா, ஜாதியா?: என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலித்து வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது[9]. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு[10]. “தமிழகத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுவதில்லை.மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியார் அளித்த சான்றிதழை தாக்கல் செய்துள்ளார்[11]. அதில் சத்திய மூர்த்தி என்பவர் அவராகவே விரும்பி இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது[12]. அதை தவிர – அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை தவிர – சான்றிதழில் வேறு ஏதும் இல்லை. மதம் மாறியவர் லெப்பை வகுப்பை சேர்ந்தவர் என அரசு காஜியார் அறிவிக்க முடியாது. அப்படியிருக்கும்போது மதச்சார்பற்ற அரசின் வருவாய் அலுவலர் மதம் மாறிய தனி நபர் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என எப்படி சான்றிதழ் வழங்கினார் என்பது தெரியவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீட்டு சலுகையை அனுபவித்து வந்த ஒருவருக்கு மதம் மாறிய பிறகும் இடஒதுக்கீட்டு சலுகை வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது[13]. அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது இந்த நீதிமன்றத்தால் எந்த முடிவுக்கும் வர முடியாது[14].  [காஜி தனது மத இறையியலின் படி தீர்மானிக்கிறரா அல்லது வேறு ஏதோரு அதிகாரம் அல்லது அதிகார ஆணை மூலம் தீர்மானிக்கிறாரா என்றும் கவனிக்க வேண்டும். எப்படியிருந்தாலும்,ஐஸ்லாமிய இறையியலின் படி முஸ்லிமுக்கு இரண்டு வித சமூக நிலை, அந்தஸ்து. இடவொதிக்கீடு எல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை.]

© வேதபிரகாஷ்

04-12-2022 


[1] தமிழ்.இந்து, இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு, கி.மகாராஜன், Published : 02 Dec 2022 08:22 PM; Last Updated : 02 Dec 2022 08:22 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/909128-hindu-convert-to-islam-cannot-be-considered-a-bc-muslim-high-court-orders.html

[3]காமதேனு, இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பி.சி முஸ்லிமாக கருத முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு, கி.மகாராஜன், Updated on :  2 Dec, 2022, 9:40 pm.

[4]  https://kamadenu.hindutamil.in/national/a-hindu-convert-to-islam-cannot-be-considered-a-bc-muslim-high-court-orders-action

[5] ஜி.7.தமிழ், இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாதுஉயர் நீதிமன்றம் உத்தரவு  | hindu convert to islam cannot be considered a bc muslim high court orders || G7TAMIL, By g7tamil -December 2, 2022.

[6] https://g7tamil.in/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

[7] தமிழ்.மினட்ஸ், இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறியவருக்கு BC வகுப்பா? மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு, by Bala S, December 3, 2022.

[8] https://tamilminutes.com/madurai-high-court-rejected-religion-changed-case/

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், முஸ்லிம் மதம் மாறிய இந்து பிற்படுத்தப்பட்டவர் அல்ல.. மதுரை உயர்நீதிமன்றம், Written by WebDesk, Madurai, December 3, 2022 2:22:42 pm

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/the-madurai-high-court-has-ordered-that-a-hindu-convert-to-islam-is-not-a-backward-class-552158/

[11] இ.டிவி.பாரத், மதம் மாறியவரை BC முஸ்லிமாக கருத முடியாதுஉயர் நீதிமன்றம் மதுரைக்கிளை, Published on December 03, 2022; Updaed; December 04, 2022.

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/madurai/a-convert-cannot-be-considered-a-bc-muslim-high-court/tamil-nadu20221203130924644644445

[13] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Madurai HC: ‘டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுநீதிமன்றம், Karthikeyan S, 03 December 2022, 15:10 IST

[14] https://tamil.hindustantimes.com/tamilnadu/madurai-hc-rejects-backward-quota-claim-of-hindu-man-converted-to-muslim-131670060279181.html

லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?

மார்ச் 16, 2013

லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?

Fidayeen attack 4

13-03-2013 புதன்கிழமைகாலை 11.00 மணி[1]: காஷ்மீரில் பெமினா என்ற இடத்தில் உள்ள பொது பள்ளிக் கூடத்திற்கு அருகில் CRPFயின் 73ம் முகாம் (CRPF’s 73rd battalion) உள்ளது. இந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், அப்பொழுது, மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பள்ளி மைதானத்தில் சிகப்பு டி-சர்ட், கருப்பு பேன்ட் மற்றும் வெள்ளை டி-சர்ட், கருப்பு பேன்ட் அணிந்த இருவர் கிரிக்கெட் கிட்டுடன் மைதானத்தில் நுழைந்தனர். அருகில் பாதுகாப்பு வீரர்களும் நின்றிருந்தனர். சிறிது நேரம் விளையாடுபவர்களிடத்தில் பேச்சு கொடுத்தனர்.

Fidayeen attack 1

13-03-2013 புதன்கிழமைகாலை 11.05 மணி[2]: பேசிக் கொண்டேயிருந்தவர்கள், திடீரென்று, கிரிக்கெட் கிட்டைத் திறந்து, ஏ.கே-47 மற்றும் கையெறிக் கொண்டுகளை எடுத்து, CRPF வீரர்கள் மீது வீசி, சுட ஆரம்பித்தனர். இதில் ஐந்து வீரர்கள் உடனடியாக இறந்தனர். ஐந்து பேர் காயமடைந்தனர். விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் ஓட ஆரம்பித்தனர். சுதாரித்துக் கொண்ட வீரர்கள் தீவிரவாதிகளின் மீது சுட ஆரம்பித்தனர். பதினைந்து நிமிடம் துப்பாக்கி சூடு நடந்தது, இறுதியில் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் ஃபிதாயீன் என்ற ஜிஹாதித் தற்கொலைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[3].

Fidayeen attack 2

கொல்லப்பட்டவீரர்கள்பலமாநிலங்களைச்சேர்ந்தவர்கள்: ஜிஹாதி தீவிரவாதம் காஷ்மீரத்தில் குரூரக்கொலையில் ஈடுபட்டாலும், கொலை செய்யப்பட்ட வீரர்கள் இந்தியாவின் பல மாரநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

  1. ஏ. பி. சிங் – assistant sub-inspector A.B Singh of Ujjan, Madhya Pradesh,
  2. ஓம் பிரகாஷ் – constable Om Prakash (Sehore, MP),
  3. எல். பெருமாள் – constable L. Perumal (Madurai, Tamil Nadu),
  4. சுபாஷ் – constable Subhash (Ranchi, Jaharkand) and
  5. சதீஷ் ஷா – constable Satish Shah (Mandya, Karnataka).

Fidayeen attack 3

கைப்பற்றப்பட்டஆயுதங்கள்: கிரிக்கெட் கிட் என்று எடுத்து வந்ததில், உள்ளேயிருந்த ஆயுதங்கள்:

  • இரண்டு ஏ.கே-47 துப்பாக்கிகள் – Two Ak-47 rifles,
  • அதற்கான வெடிப்பொருட்கள் – five Ak magazines,
  • ஆறுமுறை உபயோகிக்கக்கூடிய குண்டுகள் – six AK rounds,
  • இரண்டு சீன கைத்துப்பாக்கிகள் – two Chinese pistols,
  • இரண்டு முறை சுட குண்டுகள் – two pistol rounds,
  • கைக்குண்டு தூக்கியெறியும் கருவி – one UBGL –  Under Barrel Grenade Launcher,
  • அதற்கான மூன்று குண்டுகள் – three UBGL grenades and
  • நான்கு கையெறி குண்டுகள் – four hand grenades

Fidayeen attack 5

கடந்த ஜனவரி 6-7, 2010 தேதிகளில் இதே மாதிரி, இந்த தீவிரவாதிகள், லால் சௌக்கில் ஒரு பஞ்சாப் ஓட்டலில் மறைந்து கொண்டு பாதுகாப்பு வீரர்களுடன் சண்டை போட்டனர். அப்பொழுது தங்களை லஸ்கர்-இ-தொய்பா என்று சொல்லிக் கொண்டனர். அதாவது “பிதாயீன்” என்பது பொதுப்பெயர், ஜிஹாதி போல!

தாக்குதலைநடத்தியவர்கள்யார்?: ஜிஹாதி தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள் என்று எல்லாவிதமான இஸ்லாமிய கொலைவெறிக் கும்பல்களுடன் மக்களில் பெரும்பாலோர் தொடர்பு வைத்திருப்பதனால், தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றி, பலவிதமான செய்திகள் வெளிவந்த வண்னம் இருந்தன[4]. ஹிஜ்புல் முஜாஹித்தீன் தான் தாக்கினர் என்று தொலைபேசி மூலம் யாரோ அறிவித்தாக மகூறி, பிறகு அவர்கள் மறுத்துள்ளதாக அறிவித்தனர். பிறகு லஸ்கர்-இ-தொய்பா தாக்குதல் மாதிரி இருக்கிறது என்று அபதுல் முஜாதபா என்ற போலீஸ் அதிகாரி கூறியதாக கூறினர். ஆனால் மாட்டிக் கொண்ட[5] “அபு தல்ஹா” என்ற ஜிஹாதியிடமிருந்து, இது “பிதாயீன்” வேலைதான் என்று தெரியவந்துள்ளது[6]. “பிதாயீன்” என்ற ஜிஹாதிகள் தம் உயிரையும் கொடுத்து காபிர்களைக் கொல்லும் ஜிஹாதிகள். குரான் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, இத்தகைய வேலைகளை செய்கிறார்கள். ஏனெனில் அல்லா அவர்களுக்கு சொர்க்க வாசலைத் திறந்து வைத்துள்ளதாக நம்புகிறார்கள். முன்னர் ஷிண்டே ராஜ்ய சபாவில் பாகிஸ்தானிய தொடர்பு உள்ளதாக கூறியிருக்கிறார்[7]. பிறகு அந்த தலைவெட்டியானிடமே குர்ஷித்தை விட்டுக் கேட்டிருக்கலாமே?

Kashmir terror

ஜிஹாதி தாக்குதலில் தமிழக வீரர் இறப்பு: பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் பலியான மதுரை வீரர் எல். பெருமாள் உடல் அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. செல்லூர் ராஜா – தமிழக அமைச்சர், அன்சுல் மிஸ்ரா – மாவட்ட கலெக்டர், ஓம் பிரகாஷ் -CRPF கமாண்டெர், பாலகிருஷ்ணன் – மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்[8]. அமைச்சர் ரூ. ஐந்து லட்சம் தொகைக்கான செக்கை குடும்பத்தாருக்கு அளித்தார். சேடபட்டி முத்தையா –திமுக, இல. கணேசன் – பிஜேபி, ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் முதலிய இயக்கத்தோடும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செல்லுத்தினர்[9].

al-jihad-al-jihad-al-jihad

ஜிஹாதி முஸ்லீம்கள் தாக்கிக் கொன்றுள்ளதால் பகுத்தறிவு தமிழர்கள் கண்டனம் செல்லுத்தவில்லையா?: ஜம்மு காஷ்மீரில் கடந்த (13 ம் தேதி) புதன்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பெருமாள் என்பவரும் ஒருவர். இவரது உடல் நேற்று இரவு சென்னைக்கு வந்தது. இடையப்பாடியில் இருக்கும் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சுமார் 11 மணி அளவில் தும்மநாயக்கன்பட்டி கிராமத்திற்கு வந்தது. தெருக்கள் எல்லாம் கருப்புக் கொடிகளினால் துக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. தமிழக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில்: “இது போன்ற பயங்கரவாத சம்பவத்தை தடுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை”, என்றார்.  ஏன் மற்றவர்கள் எதுவும் சொல்லக்கூடாதா?

11 முறை தோற்று வெண்ர பெருமாள், 17-முறை தாக்கிய கஜினி முஹம்மது ஜிஹாதிக்கு பலியாகி விட்டாரா?: பலியானவர் பெருமாள் (வயது 29) மதுரை மாவட்டம் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். இவரது தந்தை லிங்கம் ஆட்டோ டிரைவர் ஆவார். மொத்தம் 5 குழந்தைகள் பெற்ற இவருக்கு பெருமாள் என்பவர் மிக பாசமாக இருப்பாராம். பெருமாள் 10 ம் வகுப்பு வரை படித்து எப்படியாவது ராணுவ படையில் சேர வேண்டும் என்று பெரும் ஆவலோடும், லட்சிய கனவோடும் இருந்து வந்தாராம். இந்த படையில் சேருவதற்கான தேர்வில் பல முறை தோற்று போனாராம். குறிப்பாக 10 முறை இவர் தேர்வாகவில்லை இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து 11 வது முறை படைக்கு பிட் ஆனாராம். தேர்வு செய்யப்பட்ட தகவலை அவர் தனது கிராமம் முழுவதும், உற்றார் உறவினர்களிடம் பெரும் செய்தியாக தெரிவித்து மகிழ்ந்தாராம் பெருமாள்.

Indian flag burned

திருமணத்திற்கு ஜிஹாதிகள் பிணத்தை அனுப்பியுள்ளார்களே?: கடந்த 2010 ல் பணியில் சேர்ந்த பெருமாள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு பணியாற்றிய 3 ஆண்டில் தனது இன்னுயிரை இழந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முறை விடுப்புக்கு வந்த பெருமாள் திருமணம் செய்வது தொடர்பாக தனது உறவுக்கார பெண்ணை பார்த்து உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார். வரும் ஜூன் மாதம் ஊருக்கு வருவேன் அப்போது திருமணம் செய்து கொள்வோம் என்று வாக்கு கொடுத்து சென்றவர் இன்று பிணமாக திரும்பியதை கண்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.  இவரது உடல் இன்று சொந்த கிராமத்திற்குகொண்டு வரப்பட்டது.அமைச்சர் , மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழக போலீசார் சார்பில் 21 குண்டுகளும், சி.ஆர்.பி.எப்., போலீசார் சார்பில் 21 குண்டுகளும் வானத்தை நோக்கி சுடப்பட்டன. வருவதையொட்டி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் காத்து நிற்கின்றனர். மதுரையில் மாவட்ட உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவ்வளவுதான், மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால், ஏன் இப்படி இந்தியா வீரர்களை ஜிஹாதிகளுக்கு பலியாக்க வேண்டும்?

Karunanidhi-with-kulla

Karunanidhi-with-kulla

என்ன நடந்தாலும், குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கும் பட்டாளம் நஎப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் குர்ஷித் போன்ற பேனாக்களில் ரத்தத்தை நிரப்பும் முஸ்லீம்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும், எதிரிகளுடன் உணவருந்துவார்கள்!

வேதபிரகாஷ்

16-03-2013


[4] Police say two pocket diaries; a SIM card of an Indian telecommunication company issued in Uri, an ointment tube made in Pakistan; an under-surveillance guerilla activity controlled by a Kashmiri militant for several weeks at Palhalan village of Baramulla; the Hizbul Mujahideen’s first-ever claim of owning up a suicide attack; the Lashkar-e-Taiba spokesman’s “meaningful quiet”; no local claim on the two bodies (of the militants); besides some telephonic intercepts and call detail records pieced together by the investigators make the fidayeen attack “a clear case of foreign terror.” “We have noticed the signature of the Lashkar-e-Taiba in this operation,” a senior official associated with the investigation told The Hindu. He refused to disclose details but was confident that a breakthrough was not far away. “An operation jointly planned and executed by the Kashmiri and Pakistani cadres of the LeT in coordination with the United Jihad Council,” he said when pressed to identify the actors.

[6]However, another police source told The Hindu that on specific information, the militant in his late 20s, codenamed Abu Talha, was arrested with a loaded pistol during a dramatic raid. The Army and the CRPF provided cover to the SOG unit.

http://www.thehindu.com/news/national/other-states/pakistani-militant-linked-to-fidayeen-attack-arrested/article4509622.ece

இமாம் ஹுஸைனின் 700வது தியாகத்திருநாள் அன்று குண்டு வெடிப்பு: 54 ஷியா முஸ்லீம்கள் சாவு, 160ற்கும் மேல் காயம் – தாலிபன்களின் கொடூரம்!

திசெம்பர் 6, 2011

இமாம் ஹுஸைனின் 700வது தியாகத்திருநாள் அன்று குண்டு வெடிப்பு: 54 ஷியா முஸ்லீம்கள் சாவு, 160ற்கும் மேல் காயம் – தாலிபன்களின் கொடூரம்!


ஷியா முஸ்லீம்கள் சன்னி முஸ்லீம்களா; தாக்கப் படுவது: ஷியா முஸ்லீம்கள், சன்னி முஸ்லீம்களால் தாக்கப்படுவது, செக்யூலரிஸ இந்தியர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் பாகிஸ்தானில் “முஸ்லீம்கள்” என்று கருத/மதிக்கப்படுவதில்லை. அவர்களும், அவர்கள் மசூதிகளும் பலமுறைத் தாக்கப்பட்டுள்ளன[1]. சென்ற 04-09-2010 அன்று அவர்கள் தாக்கப்பட்டனர்[2]. செப்டம்பர் 1, 2010 அன்று, லாஹூரில் ஒரு ஷியா மசூதியில் – கர்பலா கமய் ஷா (Karbala Gamay Shah) ஆயிரக்கணக்கானவர்கள் ஹஜரத் இமாம் அலியின் இறப்பு – உயிர்த்தியாகம் மற்றும் தொழுகைக்காகக் கூடியிருக்கும் போது (Yaum-e-Ali), குண்டுகள் வெடித்ததில் 17 / 28 பேர் கொல்லப்பட்டனர்[3]. பல ஆண்டுகளாக அவர்கள் தாக்கப்படுவது / கொல்லப்படுவது விவரங்களை இங்கு கொடுத்துள்ள[4] அட்டவணையில் பார்க்கலாம்.இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள்[5] என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்[6].

மொகரம்பண்டிகை : ஆப்கன்குண்டுவெடிப்பு : சுமார் 54 பேர்பலி: உலகம் முழுவதும் இன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்பட்ட நாளில் ஆப்கனில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளில் சிக்கி 54 பேர் பலியாயினர்[7]. நூற்றுக்கணக்கான ஷியா முஸ்லீம்கள் அபு பசல் மசூதி [Abu Fazal shrine] யில் கூடி பாடிக்கொண்டிருக்கும் வேளையில் குண்டு வெடித்தது. இது தற்கொலை குண்டுவெடிப்பு என்று கருதப்படுகிறது[8]. 160 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். காபூல் அருகே உள்ள இந்த மசூதியில் சிறப்பு தொழுகை நடந்து கொண்டிருத நேரத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இது ஒரு தற்கொலை மனித வெடிகுண்டாகும்[9]. இதனையடுத்து தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும் பதட்டத்துடன் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதில் சிக்கி 35 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. இன்னும் பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
காபூலின் வடக்கு பகுதியான மசார் இ ஷெரீப் பகுதியில் சித்தி முஸ்லிம் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்திலும் குண்டு வெடித்தது. இக்குண்டு ஒரு சைக்கிளில் கட்டப்பட்டிருந்தது. காபூலில் குண்டு வெடித்ததும், இக்குண்டு வெடித்ததாம். குண்டு வெடித்ததும், ஒரு இளம் வயது பெண் சிறுவர்களின் பிணங்களுக்கு நடுவில் நின்று கொண்டு கூக்குரல் இட்டதாக பார்த்தவர்கள் சொல்கின்றனர்[10]. சால்வார்-கமீஜ் அணிந்திருந்த அவள் உடல் முழுவதும் ரத்தம் தோய்ந்திருந்ததாம்[11].

முஹம்மது நபியின் பேரரான இமாம் ஹுஸைனின் உயிர்த்தியாகத்தை போற்றும் அஷூரா என்ற நிகழ்ச்சியும் ஆப்கனில் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 30 மில்லியன் ஆப்கன் மக்கள் தொகையில் ஹஜ்ராக்கள் என்ற ஷியா முஸ்லீம்கள் 20% உள்ளனர். 1990களில் சன்னி-தாலிபான்கள் ஷியக்களைத் தாக்கி வந்தனர், கொன்றும் உள்ளன.

முகரம் / முஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும். ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. இந்த மாதத்தில் சண்டைகள் தடை செய்யப் பட்டுள்ளன. முஸ்லீம்கள் இம்மாதத்தின் போது உண்ணாநோன்பு இருப்பர் .முகரம் மாதத்தின் பத்தாம் நாள் – அஷுரா  ஷியாக்களால் தியாகத் திருநாளாகக் கொண்டாடப் படும். அன்று ஷியாக்கள் மற்றும் சன்னிகள் ஒன்பதாம் அல்லது பதினொராம் நாளில் உண்ணாதிருப்பர்.

ஆனால், பிறகு அவர்கள் தமது கவனத்தை முஸ்லீம் அல்லாதவர்கள் – காபிர்கள் என்ற ரீதியில் அமெரிக்க-நாடோ வீரர்களை, அந்நிய சுற்றுலா பயணிகள், வேலையாட்கள் முதலியோர் மீது திருப்பி, அவர்களைக் கொன்று வந்தது. அதனால், இப்பொழுது, சியாக்கள் மறுபடியும் தாக்கப்படுவதற்கு, உலக கவனத்தை ஈர்க்கவே என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஷியா முஸ்லீம்கள் முஹரம் பண்டிகையை வெளிப்படையாகவே கொண்டாடி வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இன்று அதற்காக விடுமுறையும் உள்ளது. பொதுவாக ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானைப் போல இல்லாமல், ஷியா-சன்னி மோதல்கள் குறைவாகவே இருந்து வந்துள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு தலிபான் ஆட்சி காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தலிபான்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களே இந்த குண்டு வெடிப்பை நடத்தியிருக்கலாம் என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இல்லை பாகிஸ்தானைச் சேர்ந்த அல்-கைதா தாக்கியிருக்கக் கூடும், ஏனெனில் பாகிஸ்தானிய சன்னிகள் ஷியாக்களை முஸ்லீம்கள் என்று கருதுவதில்லை.மற்றும் அவகள் தாக்கப்படுவது, அவர்களின் மசூதிகளில் குண்டு வெடிப்பது முதலியவை சாதாரணமா விஷயங்களாக இருந்து வருகின்றன[12]. இருப்பினும் தாலிபனைச் சேர்ந்த ஜபியுல்லா முஜாஹித் மூலம் தாங்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்று இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது[13].

காந்தகாரிலும் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வைத்து வெடிக்கப்பட்ட இந்த குண்டு வெடிப்பில் மூவர் காயமடைந்தனர்.

கடந்த ஆண்டுகளில் தாலிபனால் நடட்தப் பட்ட குண்டுவெடிப்புகள், தாலிபனின் தாக்குதலால் இறந்தவர்கள் முதலிய விவரங்கள் அட்டவணையிடப்பட்டுள்ளன:

January 14, 2008 A Taliban suicide attacker leaves eight dead at the Serena, Kabul’s most luxurious hotel.
July 7, 2008 A car-bomb attack on the Indian embassy building kills more than 60 people.
February 11, 2009 At least 26 people die and 55 are wounded in three almost simultaneous Taliban attacks on official buildings.
 October 28, 2009 An attack claimed by the Taliban kills at least eight people, including five UN staff, at a Kabul hostel. Three attackers also die.
December 15, 2009 At least eight die and 40 are wounded in a suicide attack near a hotel hosting foreigners.
January 18, 2010 Five people die and at least 71 are injured as Taliban guerrillas carry out a wave of coordinated bomb and gun attacks around the capital.
February 26, 2010 Suicide attacks on two Kabul guesthouses kill at least 16 people, including seven Indians, a French national and an Italian.
May 18, 2010 A suicide bomber kills at least 18 people, including five US soldiers and one Canadian soldier, in an attack on a Nato convoy in a busy city centre street.
December 19, 2010 Two suicide bombers attack an Afghan army bus, killing five soldiers.
January 28, 2011 Eight people are killed in a suicide bombing at a central Kabul supermarket popular with Westerners.
May 21, 2011 Six medical students are killed in a Taliban suicide attack at Afghanistan’s main military hospital.
June 18, 2011  Nine people are killed when suicide attackers storm a police station in the capital.
June 28, 2011 21 are killed, including 10 civilians, when suicide bombers storm Kabul’s luxury Intercontinental Hotel.
August 19, 2011  Nine people, including a New Zealand special forces soldier, die when suicide bombers attack the British Council cultural centre in Kabul.
September 13/14, 2011 Taliban attacks targeting locations including the US embassy and headquarters of foreign troops kill at least 14 during a 19-hour siege.
September 20 Burhanuddin Rabbani, Afghanistan’s former president leading efforts to find a peace deal with the Taliban, is assassinated in a suicide attack at his home in Kabul’s supposedly secure diplomatic zone.
October 29, 2011 13 US troops operating under Nato are among 17 people killed in a car-bomb attack on a foreign military convoy in Kabul.
December 6 , 2011  At least 54 people are killed in a shrine bombing in Kabul, with four more dead in another blast at a shrine in the northern city of Mazar-i-Sharif, a day after a major conference in Germany on Afghanistan’s future pledged sustained support for another decade.

வேதபிரகஷ்

06-12-2011


 


[7] தினமலர், மொகரம்பண்டிகை : ஆப்கன்குண்டுவெடிப்பு : 40 பேர்பலி, http://www.dinamalar.com/News_detail.asp?Id=362666

[13] An email message to news organizations from the spokesman for the Taliban, Zabiullah Mujahid, denied responsibility. “We strongly condemn this wild and inhuman act by our enemies, who are tyring to blame us and trying to divide Afghans by doing such attacks on Muslims.”

http://www.nytimes.com/2011/12/07/world/asia/suicide-bombers-attack-shiite-worshipers-in-afghanistan.html