Posted tagged ‘ராதா’

பர்வீன்-பைசூல் விவகாரம் – போலீசாருக்கு குழப்பமாம், ஊடகக்காரகள் தெளிவாக இருக்கிறார்களாம்!

ஜனவரி 8, 2014

பர்வீன்-பைசூல் விவகாரம் – போலீசாருக்கு குழப்பமாம், ஊடகக்காரகள் தெளிவாக இருக்கிறார்களாம்!

பைசூலின்  மீது  மறுபடியும்  புகார்: இந்த நிலையில், 30-12-2013 அன்று பகலில் நடிகை ராதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புதிய புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில், பைசூல் மீது கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெறவில்லை என்றும், தன்னை கடத்திச்சென்று, மகாபலிபுரத்தில் ஒரு லாட்ஜில் சிறை வைத்து அடித்து துன்புறுத்தி, மிரட்டியதால் புகாரை வாபஸ் பெற்றேன் என்றும், பைசூல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்[1].  புகாரில் ராதா கூறியதாவது: பைசூல் என்னுடன் 6 வருடம் குடும்பம் நடத்தினார். திடீரென என்னை வீட்டைவிட்டு துரத்தி விட்டு, என் பணத்தையும் பறித்துக் கொண்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தேன். கடந்த 18ம் தேதி பைசூலின் உறவினர்  மாலிக், மற்றும் அவருடைய சகோதரர் ரஹ்மான் ஆகியோர் என் வீட்டுக்கு ஆசிட்டுடன் வந்தனர்[2].

புகார்  வாபஸ்  பெற  வேண்டும்,    இல்லையென்றால்  ஆசிட்  வீசி  கொன்று   விடுவோம்  என்று   மிரட்டல்: பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும், இல்லையென்றால் உன் முகத்தில் ஆசிட் வீசி கொன்று விடுவோம் என, மிரட்டினர். இதை தொடர்ந்து, உயிருக்கு பயந்து நானும் புகாரை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தேன். பின்னர், கத்தி முனையில் என்னை காவல் நிலையத்துக்குஅழைத்துச் சென்று வழக்கை வாபஸ் பெற வைத்தனர். மேலும், என்னை காரில் ஏற்றிக் கொண்டு, பைசூல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரும் என்னை தொடர்ந்து மிரட்டியதுடன், காவல்துறையில் எனக்கு செல்வாக்கு உள்ளது, உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறினார்.

போலீஸ் பாதுகாப்பு வேண்டும்: என்னிடம் ஆள் பலமும், பண பலமும் உள்ளது. உடனடியாக ஊரை காலிசெய்துவிடு என தொடர்ந்து மிரட்டினார். உயிருக்கு பயந்து அவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நானும், சரி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். தற்போது என் உயிருக்கும், உடமைக்கும், ஆபத்து உள்ளது எனவே, போலீசார் எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து, பைசூலை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்[3].

போலீசாரைகுழப்பத்தில்ஆழ்த்திஇருக்கிறது: அவர் திடீரென்று இதுபோல் அதிரடி பல்டி அடித்து மீண்டும் ஒரு புகார் கொடுத்துள்ளது, போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பாவம், தமிழ் ஊடகப் புலிகளுக்கு மட்டும் குழப்பமே இல்லாமல் தெளிவாக இருக்கீறார்கள் போலும். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலும், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் நின்று கொண்டே இருந்தார். ஒருவேளை உட்காருவதற்கறொன்றும் இல்லை போலிருக்கிறது. இந்த விஷயத்தில் அடுத்தகட்டமாக உயர் போலீஸ் அதிகாரிகளை கலந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வடபழனி போலீசார் கூறினார்கள்[4]. ஆமாம், இவ்விசயங்களுக்கு எல்லாம் இப்படி போலீஸ் சேவை சீரழிக்க வேண்டிய நிலையில் இருக்க வேண்டும் போலிருக்கிறது.

வேதபிரகாஷ்

© 08-01-2014


[3] தினகரன், பைசூல்மீதுநடிகைராதாமீண்டும்புகார் – முகத்தில்ஆசிட்வீசுவதாககூறிமிரட்டிவழக்கைவாபஸ்பெறவைத்தனர், 31-12-2013.

[4] மாலைமலர், தொழில்அதிபர்மீதானபுகாரைவாபஸ்வாங்கவில்லை: நடிகைராதாமீண்டும்புகார், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 9:19 AM IST

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)

திசெம்பர் 20, 2013

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)

Faizul complaintant getting undue publicity.2இவ்விவகாரத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவுகளை இங்கே பார்க்கவும்:

  1. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (1)[1]
  2. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (2)[2]
  3. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)[3]

Faizul complaintant getting undue publicityநடிகை  ரா தா  திடீர்  பல்டி:   தொழிலதிபர் மீதான  வழக்கு வாபஸ்: எல்லா தமிழ் நாளிதழ்களும், மிகச்சிறிய மாற்றத்துடன், இந்த செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளன. 18-12-2-13 அன்று இரவு நடிகை ராதா திடீரென்று வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார் என்று தினமலர் கூறுகிறது[4]. கையோடு கொண்டு வந்திருந்த மனுவை அங்கிருந்த போலீசாரிடம் கொடுத்தார் என்று மாலைமலர் கூறுகிறது.  தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை கைவிட்டு விடவேண்டும் என்றும் மனு எழுதி கொடுத்துவிட்டு அவசரமாக சென்றார்[5]. எனினும் அவர் வந்துள்ளது உண்மைதான் என்று தெரிகிறது, மனு கொடுக்கப்பட்டதும் நிஜமே.  மற்ற விசயங்களில் ஊடகங்களில் சட்டமேதைகள் போன்று விவாதிப்பார்கள். ஆனால், இப்பொழுது, அதை போலீசாரிடமே விட்டு விட்டார்கள் போலிருக்கிறது!

Faizul complaint by drug trafficking arrested affectedவடபழனி போலீசார் நிலை: இதே ராதா வடபழனி இன்ஸ்பெக்டர் பைசூலுக்கு ஆதரவாக வேலை செய்வதால், வழக்கை வேறு அதிகாரிக்கு / போலீஸ் ஷ்டேசனுக்கு மாற்ற வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். அப்பொழுது போலீசார் மிகவும் கடுப்பாகி விட்டனர். அதனால் இது போலீசாருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது. இந்த மனுவை ஏற்பதற்கில்லை என்றும்[6], இதை கோர்ட்டில் போய் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர்[7]. அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நடிகை ராதா காரில் ஏறி வேகமாக போய்விட்டார்[8]. நடிகை ராதாவின் இந்த திடீர் முடிவு போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், ஊடகக்காரர்களுக்கு வேடிக்கையாக இருந்தது போலும்! மற்ற நெரங்களில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல், காத்து நிற்பதைப் போல 18-12-2013 அன்று ஊடகக்காரர்கள் நிற்கவில்லை போலும்!!

போலீசார்  விசாரணையைத்  தொடருவார்களா  அல்லது  விட்டு  விடுவார்களா?: தொழிலதிபர் பைசூலை கைது செய்ய தேடிவரும் நிலையில் நடிகை ராதா இதுபோல் திடீரென்று புகாரை வாபஸ் வாங்கி பல்டி அடித்து இருப்பது ஏன்? அதில் உள்ள மர்மம் என்ன? ராதாவின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது குறித்தும், இதன் பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்[9].   இதனை ஏற்க மறுத்து, புதிய கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்[10].  இருப்பினும், புகார் கொடுத்தவரே, வாபஸ் வாங்கிக் கொண்டுள்ளதில் சட்டநிலைனை என்ன என்ற கேளிவியும் எழுகின்றது. போதை மருந்து கடத்தல், வேலை வாங்கித் தருவதாக ஆட்களை ஏமாற்றுதல், பெண்ணின் மீதே பலருடன் வாழ்ந்தவள், ஆதாரங்களை வெளியிடுவேன் என்றெல்லாம் பேட்டிக் கொடுத்துள்ள நிலை, ராதாவுடன் படுத்த காட்சிகளையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளேன், அவற்றை இணைதளத்தில் போடுவேன் என்றெல்லாம் மிரட்டியதாக ஊடகங்களில் அளவிற்கு அதிகமாகவே வந்துவிட்ட நிலையில் போலீசார் சும்மா இருக்க முடியுமா?

பர்வீன்பைசூல்  அல்லது   ராதாஷ்யாம்  சமரசம்  செய்து  கொண்டனரா?: ராதா வழக்கை வாபஸ் பெற்றார்[11] என்பதை தவிர, பர்வீன்-பைசூல் அல்லது ராதா-ஷ்யாம் சமரசம் செய்து கொண்டதைப் போல, ஆங்கிலத்தில் சில இணைதளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

Actress Radha Got Compromised[12]
Radha accused Faizul of blackmailing her to reveal their intimate photos and videos. She also made statements like the Police is not helping her and acting against her to help Faizul. Now the scene has completely changed. As a development, she reportedly has withdrawn the complaint and got compromised with Faizul.
நடிகைராதாசமரசம் நடிகை ராதா பைசூல் மீது, தங்களது அந்தரங்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியதற்காக புகார் கொடுத்தார். போலீசார் தனக்கு உதவுவதில்லை, மாறாக பைசூலுக்குத் துணை போகின்றனர் என்றேல்லாம் கூட புகார் கூறிவந்தார்.

ஆனால், காட்சி இப்பொழுது முழுவதுமாக மாறிவிட்டது. இப்பொழுது பைசூல் மீது கொடுக்கப்பட்ட புகார் திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும், இதனால் பைசூலிடம் சமாசம் செஹ்ய்து கொண்டதாகவும் தெரிகிறது[13]. இதே மாதிரி மரியம் பீவி கொடுத்த புகார்[14], அக்ரம் கான் ஆட்கள் மிரட்டுகிறார்கள் என்றது[15] மற்றும் அக்பர் பாஷா கொடுத்த புகாரும் வாபஸ் பெற்றால், போதை மருந்து கடத்தல் முதலிய விவகாரங்களும் மறைக்கப்படுமா?

பைசூல்  எனது  கணவர்  தானே  என்றால்,   திருமணம்  இல்லாமலேயே  அந்த   அந்தஸ்து  எப்படி  கிடைக்கிறது?: ராதாவின் திடீர் பல்டி மற்றும் புகாரை வாபஸ் வாங்கியதற்கான காரணம் குறித்து கருத்து கேட்பதற்காக நடிகை ராதாவிடம் நிருபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர்[16]. அப்போது நடிகை ராதா, “ எது எப்படியோ  பைசூல் எனது கணவர்தானே, ஒரு வேகத்தில் புகார் கொடுத்துவிட்டேன். ஆனால் இப்போது மனசு கேட்கவில்லை. அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார். தொடர்ந்து அவரை ஓட விடுவதற்கு எனக்கு மனம் இல்லை[17]. அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்”, என்று கூறி போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்[18]. சரி, பிறகு வீட்டிற்கு நேராகச் சென்று பேட்டிக் கண்டு, விவரங்களை வெளியிட்டிருக்கலாமே? ஆனால், செய்யவில்லை.

பைசூல்எனதுகணவர்தானேஎன்றால், திருமணம்எப்பொழுதுநடந்தது?: அந்தர் பல்டி, வழக்கு வாபஸ் என்று தான், நமது சூரப்புலி ஊடகவீரர்கள் எழுதுகிறார்களே தவிர, திடீரென்று பைசூலுக்கு பர்வீன் எப்படி மனைவி ஆனாள் என்பது குறித்து ஒன்றும் யோசிக்கவில்லை போலிருக்கிறது. நித்தியானந்தா விசயத்தில் அப்படி குதித்த ஊடகக்காரடர்கள் இதை அப்படியே அமுக்கப் பார்க்கிறார்களா? லெனின் போன்ற வீராதி வீரர்கள் படுக்கை அறைக் காட்சிகளை வீடியோ பிடிப்பதில் வல்லவர்கள் ஆயிற்றே? பிறகெப்படி அமைதி காக்கிறார்கள். ராதாவுடன் படுத்த காட்சிகளையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளேன், அவற்றை இணைதளத்தில் போடுவேன் என்றெல்லாம் மிரட்டியதாக செய்திகளை வெளியிட்ட போது, எந்த பெண்ணிய வீராங்கனைகளும் இதைப் பற்றி கேட்கவில்லையே? ஆணுக்கும்-பெண்ணுக்கும் சண்டை வரலாம், ஆனால், அந்தரங்க படுக்கை விசயங்களை ஒரு ஆண் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுகிறான் என்றால், அது எந்தவிதமான கலாச்சாரம், நாகரிகம் என்று எந்த தமிழ்-தெலிங்கு உணர்வுள்ள, இனமான ரோஷமுள்ள எவனும் கேட்கவில்லையே? ஏனிந்த மௌனம் அல்லது பாரபட்சம் அல்லது மறைப்பு?

பர்வீன்பைசூல்  அல்லது  ராதாஷ்யாம்  விவகாரங்களில்  பல  உண்மைகள்   மறைக்கப்படுகின்றன: கீழ் குறிப்பிட்டுள்ள விசயங்களில் பல கேள்விகள் எழும்புகின்றன:

  1. ஒரு பெண் இன்னொரு ஆணுடன் திருமணம் ஆகாமல் உடலுறவு கொண்டுறஆறுவருடம் வாழ்ந்தது.
  2. கருவுற்றபோது, அபார்ஷண் செய்து கொண்டது, அதற்கான சான்றிதழ்கள் பெற்றுக் கொண்டது.
  3. ஆண் அவ்வாறான படுக்கைக் காட்சிகளை, பெண்ணுக்குத் தெரியாமல் போட்டோ-வீடியோ எடுத்து வைத்துக் கொண்டது.
  4. ஒரு நாள் அப்பெண் இதனை அறிந்து ஏன் எடுத்தீர்கள், என்று கேட்டதற்கு, நீ இல்லாத நேரத்தில் அதனைப் பார்த்து ரசிப்பதற்கு என்றது.
  5. பெண் ஆணை தன்னை ஏமாற்றி விட்டான் என்று புகார் கொடுத்தது.
  6. தங்களது அந்தரங்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியதற்காக புகார் கொடுத்தது.
  7. ரூ.50 லட்சம் மோசடி செய்து விட்டார் என்றும் பெண் புகார் கொடுத்தது.
  8. ஆண் பல பெண்களுடன் / நடிகைகளுடன் செக்ஸ் தொடர்பு கொண்டுள்ளார் என்றது.
  9. ஆண் பதிலுக்கு பெண்ணின் அந்தரங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியது.
  10. பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது என்று அந்த ஆண் பேசியது.
  11. ஆணின் தங்கை, அப்பெண் தன்னை மிரட்டுவதாக புகார் கொடுத்தது.
  12. அப்பெண் போலீசார் தனக்கு உதவுவதில்லை, மாறாராணுக்குத் துணை போகின்றனர் என்றேல்லாம் கூட புகார் கூறிவந்தது.
  13. இன்னொரு ஆள், அந்த ஆண் தன்னை போதை மருந்து கடத்தலில் மாட்டி விட்டார் என்று புகார் கொடுத்தது.
  14. மூன்று முறை முன் ஜாமீன் பெற மனு போட்டது.
  15. மூன்று முறையும்முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
  16. அந்த ஆணை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்றது.
  17. ஆனால், இப்பொழுது, பெண் மட்டும் புகாரை வாபஸ் பெற்றுள்ளது.
  18. குறிப்பாக, இப்புகாரணனைத்துப் பெண் பொலீஸ் நிலையத்தில் கொடுக்கப் பட்டுள்ளதால், புகாரை முடித்துவிட முடியுமா?
  19. ஏற்கெனவே கோர்ட்டில் சென்றுள்ள வழக்குகள் என்னவாகும்?
  20. மேலாக, இதனை எந்த பெண் இயக்கமும், மனித உரிமைகள் என்றெல்லாம் பேசும் இயக்கங்களும் ஏன் கண்டுகொள்ளவில்லை.

வேதபிரகாஷ்

© 20-12-2013


[4] தினமலர், சென்னை பதிப்பு,

[5] மாலைமலர், நடிகைராதாதிடீர்பல்டி: தொழிலதிபர்மீதானவழக்கைவாபஸ்பெற்றார், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2:57 AM IST; மாற்றம் செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 3:25 AM IST

[11] Actress Radha has suddenly withdrawn the case against entrepreneur Faizul. Police are conducting a new investigation on what is the mystery in her sudden decision. She who starred in “Sundara Travels” film lodged a complaint at Commissioner Office stating, Faizul of Triplicane had lived with her for 6 years as husband, cheated her Rs.50 lakh of money and also threatened her that he would make her private videos public. Vadapalani all-women police registered a complaint and began investigation.  In order to refrain arrest Faizul filed anticipatory bail petition 3 times which was dismissed by the court. In this situation, actress Radha challenged that she would see Faizul jailed. Meanwhile, actress Radha came to Vadapalani all-women police station yesterday and said she would withdraw the case against Faizul. While speaking to the reporter over phone she said, she was not willing to make her husband run around. However, police are investigating on the reason for her sudden change. http://indiaeng.tamil4.com/view.php?view=9000

பர்வீன்–பைசூல் ஜோடி மீது மரியம் பீவி-அக்பர் பாஷா பரஸ்பர புகார்கள், குற்றச்சாட்டுகள் ஏன்?

திசெம்பர் 13, 2013

பர்வீன்–பைசூல் ஜோடி மீது மரியம் பீவி-அக்பர் பாஷா பரஸ்பர புகார்கள், குற்றச்சாட்டுகள் ஏன்?

பர்வீன் மறுபடியும் புகார் அளிக்கிறாராம் - 11-12-13

11-12-13 அன்று பர்வீன் என்கின்ற ராதாவின் மறுபடி-குற்றச்சாட்டு: தேதி “11-12-13” விசித்திரமானது, முக்கியமானது என்றெல்லாம் அலசிக்கொண்டிருக்கும் போது,  சென்னை மாநகர காவல்துறை ஆணையரை புதன்கிழமை 11-12-13 அன்று சந்தித்த நடிகை ராதா, காவல்துறையினர் மீது பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்[1].  இணை கமிஷனர் திருஞானத்தை அவரது அலுவலகத்தில் நடிகை ராதா சந்தித்தார். அப்போது என் வழக்கை விசாரிக்கும் வடபழனி உதவி கமிஷனர் மற்றும் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் அளித்திருந்தார்[2]. “என் வழக்கை விசாரிக்கும் அதிகாரி பைசூலுக்கு ரகசியமாக உதவி வருகிறார்”, என்கிறாராம்[3]. எனவே வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைப்புகார் அளித்துள்ளார். சுந்தரா டிராவல்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராதாவின் செய்திகள் தாம் இப்பொழுது பரப்பரப்பாக ஊடகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன[4].

பர்வீன் மறுபடியும் புகார் அளித்தாராம் - 11-12-13

  1. பைசூல்  மீது மோசடி,   மிரட்டல்   உள்ளிட்ட   சட்டப்   பிரிவுகளின்   கீழ்   வழக்குப்பதிவு  செய்யப்பட்டது: ராதா என்கின்ற பர்வீன், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தொழிலதிபர் பைசூல் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், பைசூல் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதோடு, ரூபாய் 50 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.  இது தொடர்பாக வடபழனி பொலிசார் விசாரணை நடத்தினர். ராதாவை நேரில் அழைத்து சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்திய பொலிசார் அவரது வாக்கு மூலத்தையும் பதிவு செய்தனர். அப்போது பைசூலுக்கு எதிராக மோசடி ஆவணங்களையும் ராதா பொலிசிடம் கொடுத்தார். இதையடுத்து பைசூல் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பைசூல் முன்ஜாமீன் கேட்டு 2 முறை தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து பைசூல் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொலிசார் பிடியில் சிக்காமல் பைசூல் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார்[5].

பர்வீன் மறுபடியும் புகார் - 11-12-13

2.வேலை வாங்கி தருவதாக மோசடி: இதேபோல், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்கள் மூலம் போதை பொருள் கடத்துவதாக, பைசூல் மீது அக்ரம்கான் என்பவரும் புகார் அளித்தார்.

பர்வீன் மறுபடியும் புகார், புகார் - 11-12-13

3. போதை  மருந்து  கடத்தல்  புகார்: அக்ரம்கான் பைசூல் போதை மருந்து கடத்தலிலும் ஈடுபட்டுள்ளதாக புகாரில் கூறியுள்ளார். ராயப்பேட்டையை சேர்ந்த அக்பர் பாஷா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: “ராயப்பேட்டை, யானைக்குளம் 2வது தெரு வில் வசிக்கிறேன். 2007ம் ஆண்டு வரை சென்னையில், துணிகளுக்கு எம்பிராய்டரி போடும் வேலை செய்தேன். வறுமை காரணமாக, வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன்இந்நிலையில், எங்கள் தெருவில் வசிக்கும் நிசார் (43) என்பவர் என்னை அணுகி, எவ்வித செலவும் இல்லாமல் பல இளைஞர் களை வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளேன். அதுபோல் உன்னையும் வெளி நாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார். அவரது பேச்சை நம்பி வெளிநாடு செல்ல சம்மதித்தேன். 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்னுடைய பாஸ்போர்ட்டை நிசாரிடம் ஒப்படைத்தேன். 25.11.2007 அன்று நிசார், தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு 29ம் தேதி அக்பர் டிராவல்ஸ் மூலம் மும்பை சென்று, வெளி நாடு செல்வதுக்கான பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளும்படி கூறினார். மேலும், சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் பைசூல் என்பவர் இதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் கூறினார். அதன்படி, பைசூல் என்னை தொடர்புக் கொண்டு 900 அமெரிக்க டாலரும், தைவான் நாட்டு சிம்கார்டும், கொடுத்து என்னை இலவசமாக வெளிநாடு அனுப்பினார்முன்னதாக, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நிசார் என்னை சந்தித்து, சுமார் 2 அடி நீளமுள்ள பூங்கொத்து ஒன்றை கொடுத்தார். பூங்கொத்தை எதுக்கு கொடுக்கிறாய் என்று கேட்டதற்கு, இது ஒரு அன்பளிப்பு என்றும், இதை பெறுவதற்கு ஏர்போட்டுக்கு ஒரு நபர் வருவார், அவரிடம் இதை கொடுத்துவிடு எனவும் கூறினார். இதை நம்பி பூங்கொத்தை வாங்கி கொண்டு அன்று இரவு விமானம் மூலம் தைவான் சென்றேன். அப்போது தைவான் நாட்டின் சுங்கத்துறையினர், நான் வைத்திருந்த பூங்கொத்து கண்டு சந்தேகம் அடைந்து, பூங்கொத்தை உடைத்துப் பார் த்தனர். அதில் 11 கிலோ எடையில் கேட்டமைன் என்ற போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்து என்னை கைது செய்தனர். இதையடுத்து தைவான் நாட்டு காவல்துறையினர் என்னை சிறையில் அடைத்தனர். கடந்த 5 வருடமாக அந்நாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து, 3.2.2013 அன்று விடுதலை செய்யப்பட்டேன். இந்திய தூதரகத்தின் உதவியோடு இந்தியா திரும்பிய நான், பைசூல் மற்றும் நிசார், ஆகியோரால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் சிறிது காலம் தலைமறைவாக வாழ்ந்தேன். கடந்த ஒரு வாரமாக பைசூல் பற்றி பத்திரிகை யில் வந்த செய்திகளை பார்த்து அவரை அடை யாளம் கண்டு கொண்டேன். பைசூல் மூலம் ஏமாற்றப் பட்டு, வெளி நாட்டு சிறை யில் தண்டனை அனுபவிக்கும் பல இளைஞர் களை காப்பாற்றி, பைசூல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு புகாரில் அக்பர் பாஷா கூறியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக, தொழிலபதிபர் பைசூல் மீது நடிகை ராதா சில தினங்களுக்கு முன்பு புகார் கூறியுள்ளார்[6].  இந்த 2 புகார்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.

4. பைசூலின்  சகோதரி  மரியம்  பீவி  புகார்: இந்நிலையில், பைசூலின் சகோதரி மரியம் பீவி, புகாரை வாபஸ் வாங்க வேண்டுமானால் ரூ.1 கோடி தர வேண்டும் என்று தன்னை சிலர் மிரட்டுவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார்.

பரஸ்பர புகார்கள் கொடுக்கும் முஸ்லிம்கள்

பைசூலின்  சகோதரி  மரியம்பீவி (46)   கொடுத்த   புகார்:  சேப்பாக்கம் தைபூன் அலிகான் தெருவில் அக்கா, தம்பிகளுடன் வசித்து வருகிறேன். அனைவரும் தம்பி பைசூல் வீட்டில் தங்கி உள்ளோம். என் தம்பி போதைப் பொருள் கடத்துவதாக அக்ரம்கான் என்பவர் புகார் அளித்துள்ளார். இதில் எந்த உண்மையும் இல்லை. நேற்று முன்தினம் இரவு எங்கள் வீட்டிற்கு வந்தவர்கள் நாங்கள் அக்ரம்கானின் ஆட்கள், கமிஷனர் அலுவலகத்தில் பைசூல் மீது புகார் அளித்துள்ளோம். புகாரை வாபஸ் வாங்க ரூ.50 லட்சம் தர வேண்டும். நடிகை ராதாவும் எங்கள் தலைவரின் ஆலோசனைப்படிதான் புகார் அளித்துள்ளார். இந்த 2 புகாரையும் வாபஸ் வாங்க ரூ.1 கோடி வேண்டும். 2 நாட்களுக்குள் தரவில்லை என்றால் அனைவரையும் அசிங்கப்படுத்துவோம். இதை வெளியே சொன்னால் பைசூலை தீர்த்து கட்டுவோம் என்று மிரட்டி சென்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்[7].

நடிகையின் ரகசிய வாழ்க்கை

11-12-2013   அன்று  மறுபடியும்  பர்வீன்  புகார்: இந்த 3 புகார்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது[8]. இந்தநிலையில் சென்னை காவல்துறை ஆணையரை புதன்கிழமை 11-12-2013 அன்று சந்தித்த ராதா, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று காவல்துறையினர் மீது புகார் தெரிவித்துள்ளார்[9].  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பைசூலின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது. இதனால் நான் மன உளைச்சல் அடைத்துள்ளேன். அதேவேளையில் எனக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் கூட போலீஸார் மறுக்கின்றனர். போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் தொடர்புடைய பைசூலை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன்”, என்றார்[10].

போலீசுக்கு  எதிராக  புகார், நடவடிக்கை  எடுக்கப்படும்   என்கிறார்களாம்: பர்வீன் சொன்னது, “வடபழனி மகளிர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரேசா, பைசூலுக்கு சாதகமாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால் எனக்கு நியாயம் கிடைக்குமா என்று தெரியவில்லை[11]. இதுவரை பைசூலை போலீசார் கைது செய்யவில்லை. இந்த வழக்கை  திசை திருப்ப போலீசார் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. தலைமறைவாக உள்ள பைசூல் போலீசாருக்கு தெரியாமல் எப்படி தொலைக்காட்சிக்கு மட்டும் பேட்டி அளிக்கிறார். அவர் வெளியில் இருந்தால் சாட்சிகளை அழித்து விடுவார். இதனால் கூடுதல் கமிஷனர் நல்லசிவத்தை சந்தித்து பைசூலை கைது செய்ய வலியுறுத்தினேன். அதற்கு அவர் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்”,  என்றார்[12].

வேதபிரகாஷ்

© 13-12-2013


[1] நக்கீரன், காவல்துறையினர்மீதுநடிகைராதாபரபரப்புபுகார்!, புதன்கிழமை, 11, டிசம்பர் 2013 (22:57 IST

[9] தினமணி, பைசூலைகைதுசெய்யக்கோரிஆணையர்அலுவலகத்தில்நடிகைராதாமனு, By வாசு, சென்னை, First Published : 11 December 2013 08:33 PM IST

[12] தினகரன், பைசூலுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர் நடிகை ராதா பரபரப்பு புகார்

,

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)

திசெம்பர் 7, 2013

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)

நடிகை ராதா 22-11-2013 வெள்ளிக்கிழமை அன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அவர், புகார் கொடுத்த பரபரப்புப் புகாரையடுத்தார்[1]. 28-11-2013 வியாழக்கிழமை அன்று ஷ்யாம் என்ற பைசூலுக்கு முன் ஜாமீன் கொடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்[2]. தொழிலதிபர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் 05-12-2013 வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. சுந்தரா டிராவல்ஸ் உள்பட 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், திருவல்லிக்கேணி தைபூன் அலிகான் சாலையை சேர்ந்த பைசூலும் தானும் 2008 முதல் 2012 வரை கணவன் மனைவிபோல் வாழ்ந்ததாகவும். வைர வியாபாரத்தை விரிவுபடுத்துவதாக கூறி ரூ.50 லட்சம் பெற்றதாகவும், திருமணம் செய்ய மறுத்து மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.  இதையடுத்து, சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு தொழில் அதிபர் பைசூல் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அதெல்லாம்  சரி,   அப்பா  பெயர்  எங்கே?… ராதாவுக்கு  கிடுக்கிப்பிடி  போடும்  பைசூல்  வக்கீல்![3]: அப்போது பைசூல் தரப்பில் வழக்கறிஞர்கள் கலைச்செல்வன், மார்க்கரெட் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணையின்போது ராதா தரப்பு வக்கீல் வாதிடுகையில், பைசூலுக்கு ஜாமீன் தரக்கூடாது. பைசூலால் ராதா கர்ப்பமாகியுள்ளார். அவரது கட்டாயத்தால் அபார்ஷன் செய்து விட்டார். அதுதொடர்பான ஆதாரங்கள் இதோ என்று ஆவணங்களைச் சமர்ப்பித்தார். இதையடுத்து குறுக்கிட்ட பைசூல் தரப்பு, அதெல்லாம் சரிதான். அதில் அப்பா பெயரே இல்லையே. பைசூல்தான் தந்தை என்றால் அப்பெயர் இருக்க வேண்டுமே என்று கிடுக்கிப்பிடி போட்டனர்[4]. இதே கேள்வியை நீதிபதி அரசு வக்கீலிடம் எழுப்பி விளக்கச் சொன்னார். அபார்ஷண் செய்து கொள்ளும் போது, “தந்தையின்” பெயரைஉக் கேட்பார்களா என்று தெரியவில்லை. “மேரி ஸ்டோப்ஸ்” போன்றவை ரகசியமாக அபார்ஷண் செய்து வருகின்றன.
பைசூல்  மீது  மோசடி,   கொலை  மிரட்டல்  பிரிவுகளில்  வழக்குபதிவு  செய்துள்ளதால்  முன்ஜாமீன்மனுவை  நீதிபதி  தள்ளுபடி  செய்தார்   (04-12-2013)): அதற்கு அரசு வழக்கறிஞர், திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியதாக சொல்ல முடியாது. கற்பழிப்பு வழக்காகவும் எடுத்துக்கொள்ள முடியாது. இப்போதைக்கு பணம் வாங்கியுள்ளதாகவும், அதை திருப்பி கொடுக்க வேண்டும் என்றே விவகாரம் உள்ளது. தீர விசாரித்த பிறகுதான் அரசு நடவடிக்கை எடுக்கும். முகாந்திரம் இருந்தால் வழக்கு தொடருவோம். பைசூலை கைது செய்யலாம். ஆகவே, அதுவரை பைசூலை கைது செய்ய அவசியமில்லை என்று தெரிவித்தார். அப்போது போலீஸ் தரப்பில் வக்கீல் எம்.எல்.ஜெகன் ஆஜராகி, ‘நடிகை ராதா கொடுத்த புகார் குடும்ப பிரச்னை தொடர்பானது. உரிய விசாரணை நடத்தப்பட்டு புகாரில் போதிய முகாந்திரம் இருந்தால் போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள்‘என்றார். பைசூல் தரப்பில் வக்கீல் மார்கரெட் வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்தார். பின்னர் மதியம் நீதிபதியிடம் அரசு வக்கீல் ஜெகன், பைசூல் மீது மோசடி, கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி எப்ஐஆர் நகலை தாக்கல் செய்தார்[5]. இதையடுத்து, பைசூலின் முன் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்[6]

பைசூலின்  சகோதரி  மரியம்  பீவி  போலீசில்  புகார்   (02-12-2013): நடிகை ராதாவின் பெயரைச் சொல்லி, அக்ரம் கானின் அடியாட்கள், ஒரு கோடி ரூபாய் கேட்டு, கொலை மிரட்டல் விடுப்பதாக, பைசூலின் சகோதரி மரியம் பீவி போலீசில் புகார் அளித்தார்[7]. ‘சுந்தரா டிராவல்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்த, நாயகி ராதா, பைசூல் என்ற வைர வியாபாரி மீது பரபரப்பு புகார் அளித்து இருந்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அவர் மீது, போதை பொருள் கடத்தல் புகார் தரப்பட்டது[8]. இதற்கிடையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று, பைசூலின் சகோதரி மரியம் பீவி புகார் அளித்தார். அதன் விவரம்: “தாயாரின் மறைவுக்கு பிறகு, சகோதரிகள் ஜரினா, லக்சூரியா, சகோதரர் முஜிப் ரகுமானுடன், மற்றொரு சகோதரரான பைசூலின் வீட்டில் வசிக்கிறோம். அவர் மீது, உண்மைக்கு மாறாக, போதை பொருள் கடத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர்நேற்று முன்தினம், இரவு 8:30 மணிக்கு, எங்களது வீட்டிற்கு வந்த, அக்ரம் கானின் ஆதரவாளர்கள், ‘உங்கள் தூண்டுதலின் பேரில்தான் நடிகை ராதா புகார் அளித்துள்ளார். அதையும் சேர்த்து, நாங்கள் அளித்துள்ள புகாரை வாபஸ் வாங்க வேண்டும். இல்லை என்றால், இரண்டு நாட்களில், ஒரு கோடி ரூபாய் தர வேண்டும். மறுத்தால், குடும்பத்துடன் கொன்று விடுவோம்”, என, மிரட்டிச் சென்றனர். மேலும், திருவல்லிக்கேணி பகுதியில், பைசூல் குறித்து அவதுாறு விளம்பரங்களும் செய்துள்ளனர்[9]. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மரியம்  பீவி  போலீசில்  புகாரை  மறுக்கும்  பர்வீன்  என்ற  ராதா (03-12-2013): இந்த புகார் குறித்து நடிகை ராதா கூறியதாவது: “பைசூல் என்னுடன், 2008ம் ஆண்டு முதல், ரகசியமாக குடும்பம் நடத்தியது, மரியம் பீவி உட்பட அனைவருக்கும் தெரியும். பைசூல், என் எதிர்காலத்தை சீரழித்து, கருவை கலைத்து, மூளைச்சலவை செய்து, 50 லட்சம் ரூபாயை அபகரித்து சென்றார்நகையை அடகு வைத்து சாப்பிட வேண்டிய நிலையில் இருக்கும் நான், பணம் கொடுத்து மிரட்டுகிறேன் என்பதில் துளியளவும் உண்மை இல்லை. இவ்வாறு, அவர் கூறினார். அக்ரம் கான் கூறுகையில், ”பைசூல் குறித்து உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டதால், பொய் புகார் கொடுத்துள்ளார். அதை சட்டப்படி சந்திப்போம்,” என்றார்.

2007லிருந்து 2012 வரை  தைவான்   சிறையில்  இருந்த   அக்பர்  பாஷா: அக்பர் பாஷா என்பவர், பைசூலினால் தான், தான் தைபை விமானநிலையத்தில் போதை மருந்து வைத்திருந்ததால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டான், ஐந்தாண்டுகள் சிறையில் இருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டான், இப்பொழுது பைசூல் தான் காரணம் என்று சென்னை போலீசாரிடம் 02-12-2013 அன்று புகார் கொடுத்துள்ளான்:

More than five years ago, Akbar Basha left Chennai for a job in Taiwan with stars in his eyes. When he landed in Taipei airport though, he found himself in custody for smuggling narcotics. After serving a five-and-a-half year prison sentence, he’s back in Chennai and has lodged a police complaint against two people who sent him abroad promising him a job but instead turned him into an unwilling carrier of drugs. On Monday (02-12-2013), Basha, 32, met police commissioner S George and filed the complaint, naming two men Faizal and Nizar. He said he’d approached the police after reading news reports of actor Radha lodging a complaint of cheating against a businessman named Faizal, who was probably the same man who duped him[10].Basha, a class 8 drop-out and the eldest of three brothers, had been looking for a job abroad as his family needed the money. The resident of Triplicane lost about Rs 20,000 to agents who had promised him jobs abroad. Nizar, who lived in the same locality, promised to help in 2007. Nizar introduced Basha to Faizal, who said he would fix Basha up with a job in Taiwan without a commission.Faizal gave him the name of a person to contact in Taiwan and said he’d be given the details of the job there. They gave him a SIM card and two wooden flowerpots. Basha was to hand over the pots as a gift to the person he met there. On November 29, 2007, Nizar accompanied him to Mumbai airport where Basha caught a flight to Bangkok and from there to Taiwan.He cleared immigration in Chennai and Mumbai and reached Taiwan. “Faizal asked me to call him once I reached Taiwan. But I was caught by immigration officials in Taiwan before I could meet the person to whom I was to give the flowerpots,” said Basha. “I realized that I had been used as a carrier only when the Taiwan officials told me that I had smuggled narcotics,” he said.Since his English was poor, he could not explain the situation to them. He was told that he was carrying ketamine. A court sentenced him to 10 years in prison. An appellate court accepted his mercy pleas and he returned to Chennai in February after serving half the sentence.

“I earned money in the printing press job inside the prison and managed to reach India with the money I saved,” he said. He reached Chennai in February and tried to contact Faizal but his efforts proved futile. Finally, he decided to go to the police for help.

பிப்ரவரியில் சென்னைக்கு வந்தாலும், இப்பொழுது தான் புகார் கொடுக்கிறான். கேட்டதற்கு நடிகை ராதா புகார் கொடுத்ததை அறிந்து தானும் கொடுப்பதாகக் கூறுகிறான்[11].  ஆகவே, பைசூல்-பர்வின் பிரச்சினை வேறுவிதமாக செல்கிறது என்றாகிறது. செக்ஸ், சேர்ந்து வாழ்தல், புளூபிளிம், போதைமருந்து, போதைமருந்து-கடத்தல், சிறைவாசம், பரஸ்பர குற்றச்சாட்டுகள்………………….இப்படி!

வேதபிரகாஷ்

© 06-12-2013


[3] One-India-Tamil, , Posted by: Sudha; Published: Wednesday, December 4, 2013, 12:56 [IST]

[6] தினகரன், நடிகைராதாபுகாரில்வழக்குபதிவுதொழிலதிபர்முன்ஜாமீன்மனுசெஷன்ஸ்கோர்ட்தள்ளுபடி, சென்னை பதிப்பு, 05-12-2013.

[9] தினமலர், ரூ.1 கோடிகேட்டுமிரட்டல்விடுக்கிறார்வைரவியாபாரியின்சகோதரிபுகார், பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2013,22:39 IST.

[11] “In prison, I met several people who said they were similarly sent by Faizal. They all said they were unaware that they had been used as carriers,” he said. Though he returned to India in February, Batcha said he had come forward to lodge the complaint now as recently, cine actress Radha also lodged a complaint against Faizal.Akbar Batcha said that he was coming out in public as he did not want others to get cheated by Faizal.

http://newindianexpress.com/cities/chennai/After-5-Years-in-Taiwan-Prison-Chennai-Man-Seeks-Justice/2013/12/04/article1926166.ece

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல்!

நவம்பர் 23, 2013

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல்!

வழக்கம் போல தமிழ் ஊடகங்களின் ரியாக்ஸன்: இவ்வாரம் முழுவதும் தருண் தேஜ்பாலின் “லிப்ட் செக்ஸ்”, “எலிவேடர் ரேப்”, என்றெல்லாம் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்திலும் அத்தகைய விருவிருப்பு வேண்டும் என்ற ரீதியில் செய்திகள் வந்துள்ளன. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஐந்து கல்யாணம் செய்து கொண்ட ஆண்கள், கணவனைக் கொன்ற மனைவி, கள்ளக் காதல், கணவன் – மனை சண்டை என்று புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பஓதா குறைக்கு சினிமாக்காரர்களின் புகார்கள் வேறு. பட்டிமன்றம் நடத்துகிற அளவுக்கு கமிஷனர் அலுவலகத்தில் கள்ளக் காதல் புகார்கள் குவிகின்றன. சினிமா தொடர்பானவையாக இருந்தால் நட்சத்திர அந்தஸ்துதான். சந்திரனுக்கு அனுப்புகிற ராக்கெட்டை படம் பிடிக்க குவிவது போல் குவிந்துவிடுகின்றன மீடியாக்கள். விஷயம் இதுதான். சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் ராதா (30). இவர் சுந்தரா டிராவல்ஸ், காத்தவராயன், மானஸ்தன், அடாவடி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு படவாய்ப்புகள் இல்லாத நிலையில் 22-11-2013 வெள்ளிக்கிழமை அன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அவர், பரபரப்புப் புகார் ஒன்றை அளித்தார்[1]. இப்படி தமிழ் ஊடகங்கள் படு குஷியாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

பர்வீன் ராதாவானது ஷ்யாமுக்காகவா, பைசுலுக்காகவா: இது குறித்து செய்தியாளர்களிடம் ராதா கூறியது[2]: “ஆந்திர மாநிலம் நெல்லூர் எனது சொந்த ஊர். தாயாருடன் வசிக்கிறேன். இயற்பெயர் பர்வீன். சினிமாவுக்காக ராதா என்று பெயரை மாற்றிக் கொண்டேன். தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக

நடித்துள்ளேன். தெலுங்கு படத்தி லும் நடித்துள்ளேன். கடந்த 2008-ல் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பைசூல் என்பவர் எனக்கு அறிமுகமானார். ஆகஸ்ட் 16ம் தேதி எனக்கு தெரிந்த சினிமா தயாரிப்பாளர் சவுந்தர் ராஜன் என்பவர் சினிமாவுக்கு நடிக்க வந்தால் பெயரை மாற்ற வேண்டும் என்று ஏன் பழக்கம் வந்தது என்று தெரியவில்லை. இதில் விசித்திரம் என்னவென்றால், இன்றைய நிலையில் முஸ்லிம்கள் இந்து பெயர்களில் மறைந்து கொள்வது தான்!

திருவல்லிக்கேணி தைபூன் அலிகான் சாலையை சேர்ந்த பைசூல் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். தான் ஒரு வைரவியாபாரி என்றும், விரைவில் ஒரு புதுப்படம் தயாரிக்க உள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தார். அதில் என்னை கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக அவர் அடிக்கடி என்னைச் சந்தித்து வந்தார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் என்னை மிகவும் நேசிப்பதாகவும், என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார். இதை நம்பி நானும் அவருடன் பழகி வந்தேன்.

2008ம்ஆண்டுமுதல் 2012ம்ஆண்டுவரைஎன்னுடன்உறவுகொண்டார்: “அதன் படி, ஆசை வார்த்தை கூறி 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை என்னுடன் உறவு கொண்டார். கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்தோம். நான் கர்ப்பம் ஆனேன். அதை கலைக்க சொன்னார். வைர வியாபாரத் தில் தற்போது நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அதில் இருந்து மீண்ட உடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். அதை நம்பி கர்ப்பம் கலைக்கப்பட்டது[3]. இந்நிலையில் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனை ஈடுகட்ட பணம் தேவைப்படுவதாகவும் என்னிடம் கூறினார். இன்றைக்கு ஒப்புக்கொண்ட உடலுறவு, ஒப்புக்கொள்ளாத உடலுறவு என்றெல்லாம் சட்டப்படிப் பேசப் படுகின்றது. இந்நிலையில், இவர் ஒப்புக்கொண்டு உடலுறவு கொண்டுள்ளார் என்று அறிவித்திருப்பது தாம்பத்தயத்தையேக் கேவலப்படுத்துவதாகும்

அதிலிருந்து மீண்ட பிறகுதான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று பைசூல் கூறினார். இதனால், என்னிடம் இருந்த ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் தங்க நகைகளை அவரிடம் கொடுத்தேன்[4]. அதன் பிறகும் அவர் என்னைத் திருமணம் செய்யத் தயங்கியதால் சந்தேகமடைந்து அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினேன்.

ஏற்கனவேதிருமணமாகிவிட்டபைசூல்: “அப்போது தான் பைசூலுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட விஷயம் எனக்குத் தெரிந்தது. மேலும் அவர் சட்ட விரோதமான தொழில்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே பைசூல் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று நடிகை ராதா தெரிவித்தார். அவருக்கு திருமணம் ஆனது எனக்கு முதலில் தெரியாது. அவரை உண்மையாக நேசித்தேன். நாங்கள் இருவரும் கணவன், மனைவிபோல் இருந்தபோது, அதை தனது செல்போனில் படம் பிடித்தார். ஏன் அந்தரங்கத்தை செல்போனில் படம் பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நீ இல்லாத நேரத்தில் உன் நினைவாக அதை பார்ப்பதற்காகத் தான் என்று கூறினார்.

தற்போது, போலீசுக்கு சென்றால் அந்த அந்தரங்க காட்சிகளை இணைய தளத்தில் வெளியிட்டு அவமானப்படுத்தி விடுவேன் என்று மிரட்டுகிறார். பைசூலை நம்பி திரைப்பட தொழிலை விட்டு விட்டேன். பணத்தையும் இழந்து விட்டேன்”, இவ்வாறு அவர் கூறினார்[5].  எந்த ஆணும் இப்படி வக்கிரமாக படம் எடுப்பானா என்று தெரியவில்லை, அப்படி எடுத்ததைப் பற்றிக் கேட்டவளுக்கு விளக்ஜ்கம் அளித்த விதம் அதைவிட கேவலமாக இருக்கிறது. மிருகங்களைவிட கேவலமான இவர்களின் கதை, சமூகத்தை சீரழிக்கும் விதமாக உள்ளது.

ஐந்துபேரைத்திருமணம்செய்தேனாநான்ஒன்றும்விபச்சாரிஅல்ல! – நடிகைராதா[6]:  இவரின் குற்றச்சாட்டுகளை தொழில் அதிபர் பைசூல் மறுத்து, ராதா பலரை திருமணம் செய்தவர் என்றும், அவருக்கு 5 முறை திருமணமாகியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்துள்ள ராதா, ஆறு வருடங்களுக்கு முன்னால் காத்தவராயன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, சவுந்தரபாண்டி என்பவர் பைசூலை சிங்கப்பூரில் பெரிய வைர வியாபாரி, பைனான்சியர் என்று எனக்கு அறிமுகப்படுத்தினார்.

பைசூல் எனது தீவிர ரசிகர் என்றும் கூறினார். அப்போது எனக்கு பண கஷ்டம் இருந்ததால், ரூ.2 லட்சம் கடன் கொடுத்தார். இதனால் பைசூல் மேல் மரியாதை ஏற்பட்டது. அதன்பிறகு அடிக்கடி சந்திதார். ஒருநாள் என் கையை பிடித்து காதலிப்பதாக சொன்னார். காரில் என் வீட்டு முன்னால் அடிக்கடி வந்து நின்றார். பெரிய பணக்காரன் என்று நினைத்தேன். இப்படி பைக்கில் வருவது, காரில் வருவது, பணக்காரன் போல நடிப்பது, போன்ற கதைகளை வைத்துக் கொண்டுதான், இக்கால இளைஞர்களின் மனங்களை சினிமாக்காரர்கள் கெடுத்து வருகிறார்கள். அதில் நடிகையே சிக்கிக் கொண்டது, அவர்களின் தராதரத்தை மெய்ப்பிப்பது போல உள்ளது.

என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை காட்டினார். நானும் நம்பினேன். வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். அப்புறம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி என்னோடு வாழத் தொடங்கினார். ஒரே வீட்டில் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தினோம். என்னை மணந்து கொள்வார் என்று முழுமையாக நம்பினேன். வைர வியாபாரத்துக்கு தேவைப்படுவதாக ரொக்கம், நகை என்று ரூ.50 லட்சத்துக்கு மேல் என்னிடம் வாங்கினார் அதன்பிறகு வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.

நிறையநடிகைகள்மற்றும்பெண்களுடன்அவருக்குசெக்ஸ்தொடர்புஇருப்பதுதெரியவந்தது: விசாரித்தபோது நிறைய நடிகைகள் மற்றும் பெண்களுடன் அவருக்கு செக்ஸ் தொடர்பு இருப்பது தெரியவந்தது இதனால் அதிர்ச்சியானேன்.  நன்றாக குடும்பம் நடத்தியபோது ‘சைக்கோ’ போல் அடிப்பார். காமக் கொடூரனாக நடந்து கொள்வார்.

அவரது மொபைலில் நிறைய பெண்கள் ‘செக்ஸ்’ மெசேஜ் அனுப்புவார்கள். உடம்பாலும் மனதாலும் நிறைய புண்பட்டு விட்டேன்[7].  பைசூலுக்கு 42 வயது ஆகிறது. அவர் சிங்கப்பூர் வைர வியாபாரி என்றது பொய். பல பெண்கள், நடிகைகளுடன் செக்ஸ் தொடர்பு இருந்தது, எனும்போது, சினிமாவின் தரமும் விளங்குகிறது. படுத்தால் சான்ஸ் என்ற உண்மையை வளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள் போலும்.

ஏற்கனவே திருமணமாகி மனைவி ஓடிவிட்டாள்.மதம், தொழில், ஊர் பெயர் எல்லாம் ஆரம்பத்தில் அவர் சொன்னது பொய். என்னுடன் தாலி கட்டாமல் ரகசிய குடித்தனம் நடத்தவே அவர் விரும்பி இருக்கிறார்.

நடிகையைதிருமணம்செய்துகொண்டுவாழமுடியாது: நடிகையை திருமணம் செய்து கொண்டு வாழ முடியாது என்று இப்போது சொல்கிறார். அப்படியென்றால் –

  1. ஆறு வருடங்கள் என்னொடு குடித்தனம் நடத்தியது எதற்காக?
  2. என் கையால் சமைத்து சாப்பிட்டது எதற்காக?
  3. வீட்டிலேயே கதியாக கிடந்தது எதற்காக?
நம்பிய என்னை மோசம் செய்து விட்டார். பைசூல் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்ட தகவல்களும் எனக்கு தெரிய வந்தது. இவரது கூட்டாளி ஒருவன் மலேசியாவில் கைதாகி இருக்கிறான். நன்றாக குடும்பம் நடத்தியபோது ‘சைக்கோ’ போல் அடிப்பார். இப்படி கேள்விகள் கேட்பதால் என்ன லாபம்? இவர்களின் சீரழிவு கதைகள் தமிழகத்திற்கு தேவையானதா? இவற்றை வெளிப்படையாக சொல்லவேண்டிய அவசியம் என்ன? சமூகம் சீரழிவில் இவர்கள் பங்களிக்கின்றனரா அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை.

காமக் கொடூரனாக நடந்து கொள்வார். செக்ஸ் வைத்துக் கொண்டதையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளார்[8]. அவரது மொபைலில் நிறைய பெண்கள் ‘செக்ஸ்’ மெசேஜ் அனுப்புவார்கள். உடம்பாலும் மனதாலும் நிறைய புண்பட்டு விட்டேன்.

நடிகைராதாவுக்குஎதிரானஆதாரங்களைவெளியிடுவேன்: பைசூல்பேட்டி[9]: நடிகை ராதா புகாருக்கு தொழில் அதிபர் பைசூல் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:– ராதா என் மேல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். எனக்கு நிறைய தொல்லை கொடுத்தார். அரசியல்வாதிகளை வைத்தும் மிரட்டினார். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். தயாரிப்பாளர் என்ற முறையில் என்னுடன் படம் எடுத்துக் கொண்டார். ராதா ஏற்கனவே திருமணம் ஆனவர். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. அவற்றை வெளியிடுவேன்.  போலீஸ் கமிஷனரை சந்தித்து ராதா மீது புகார் அளிக்க உள்ளேன். எனக்கு நிறைய எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி உள்ளார். ராதாவின் பாஸ்போர்ட், வருமான வரித்துறை பான்கார்டு நகல்கள் என்னிடம் உள்ளன. அவற்றை போலீசில் ஒப்படைப்பேன். ராதாவை ஜெயிலுக்கு அனுப்புவேன்.  இவ்வாறு பைசூல் கூறினார்[10].

மதம், தொழில், ஊர்பெயர்எல்லாம்ஆரம்பத்தில்அவர்சொன்னதுபொய்: பர்வீன் பைசுலைப் பற்றி இப்படி குறிப்பிட்டதில் அவர்களது மதப்பிரச்சினையும் இருக்கிறது என்று தெரிகிறது. “பைசூலுக்கு 42 வயது ஆகிறது. அவர் சிங்கப்பூர் வைர வியாபாரி என்றது பொய். ஏற்கனவே திருமணமாகி மனைவி ஓடிவிட்டாள். மதம், தொழில், ஊர் பெயர் எல்லாம் ஆரம்பத்தில் அவர் சொன்னது பொய். என்னுடன் தாலி கட்டாமல் ரகசிய குடித்தனம் நடத்தவே அவர் விரும்பி இருக்கிறார்”. மேலும் “பலதார / ஐந்து திருமணங்கள்” என்ற பரஸ்பரக் குற்றச்சாட்டும் உள்ளது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும், ஒரு ஆண் ஒரே நேரத்தில் நான்கு மனைகளை வைத்திருக்கலாம். பிடிக்காவிட்டால், ஒத்துப்போகாவிட்டால், தலாக் செய்து விட்டு, இன்னொருத்தியை நிக்காஹ் செய்து கொள்ளலாம். அதே போல, பெண்ணும் தலாக் செய்து கொள்லலாம். மேலும், “மூத்தா” என்ற திருமணமுறையும் இஸ்லாத்தில் உள்ளது. அதன்படி, ஒரு ஆண், இன்னொரு பெண்ணை தான் விரும்பும் வரையில் சிறிது காலத்திற்கு சேர்ந்து இருக்கலாம், பிறகு விலகிக் கொள்ளலாம். ஷரீயத் சட்டப்படி, இத்தகைய முறையும் அனுமதிக்கப் படுகிறது. எனவே, பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா என்ற கேள்வியும் எழுகின்றது.

மூத்தா திருமணம் என்றால் என்ன?[11]: நிக்காஹ் அல்-மூத்ஹா என்பது குறுகிய கால திருமணம் ஆகும். இவ்வார்த்தைக்கு “இன்பம், சந்தோஷம், முழுமையாக திருப்தியடைவது, பூர்த்தி செய்வது” என்று பொருள். “ஹஜ்” காலத்தில் மகிழ்சியாக, நிம்மதியாக இருப்பது என்ற நிலையைக் குறிக்கும். ஷியாக்கள் மட்டுமல்லாது சன்னி / சுன்னி முஸ்லிம்களும் இம்முறையைக் கடைப் பிடித்து வருகிறார்கள்[12]. இது மகிழ்சிற்காக, சந்தோஷத்திற்காக, இன்பத்திற்காக, ஜாலியாக இருப்பதற்கு செய்யப்படுவதாகும்[13]. ஆணும், பெண்ணும் முன்னமே குறிப்பிட்ட காலத்தைக் குறிப்பிட்டு, அதற்கான பிரதிபலன் என்ன என்பதையும் அறிவித்து செய்து கொள்வதாகும். இது வாய்-ஒப்பந்தமாகவும் இருக்கலாம், ஆனால், நிக்காஹாவாக இருந்தால் அறிவிக்கப்படவேண்டும். குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு இத்திருமண ஒப்பந்தத்தை செய்து கொண்டு முறித்துவிடலாம். இருப்பினும் அத்தகைய குறுகிய மற்றும் நெடிய சேர்ந்து வாழும் காலம் என்னவென்று குறிப்பிடவில்லை. இத்தகைய திருமணத்தை ஒரு முஸ்லிம் ஆண், முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத பெண்ணுடன் செய்து கொள்ளலாம். ஆனால், பெண் முன்னர் திருமணம் செய்து கொடிருக்கக் கூடாது, கற்புடன் இருக்க வேண்டும், தந்தையில்லாத கன்னியாக இருக்கக் கூடாது போன்ற சரத்துகளும் இதில் உள்ளன[14].

சினிமா உலகத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லமுடியுமா?: மதம், தொழில், ஊர், பெயர், ஜாதி…………இதெல்லாம் கடந்து, சினிமாக்காரர்கள் தங்களது நிஜவாழ்க்கையில் இருக்கிறார்கள் எனலாம். எப்படி ஒரு முஸ்லிம், இந்துவுடன் வாழ்ந்து, பிறகு அந்த இந்து நடிகர் இன்னொரு கிருத்துவ நடிகையை மணந்து கொள்ள முயன்ற போது கோடிக்கணக்கில் ஜீவனாம்சம் கொடுத்த செய்திகளும் உள்ளன. ஆனால், விதிவிலக்காக ஶ்ரீவித்யா போன்ற இந்து நடிகைகள், கிருத்துவ கணவனிடம் கொடுமைப்பட்டு பிரிந்து வாழ்ந்த நிஜங்களும் உண்டு. இத்தகைய கணவன் – மனைவி மற்றும் சேர்ந்து வாழும் வாழ்க்கைகளில் யார் இலக்கணம் வகுக்க முடியும் என்று சொல்ல முடியாது. கமல் ஹஸன் என்ற உல்க நாயகனுக்கு எந்த விதிமுறைகளும் இல்லை. அவர் எப்படி-எப்படியோ நடிகைகளுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார். ஒரு நிலையில் அவரை அதிகமாக உதாரணத்திற்குக் காட்டப்பட்டவர் என்ற புகழையும் கொண்டுள்ளார். அதாவது, இருக்கின்ற சட்டங்களில் சிக்காமல் அப்படி ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களுடன் வாழ்ந்தபோது, திருமணம் செய்து கொண்டோ அல்லது செய்து கொள்ளாமலோ இருந்தபோது, குழந்தைகளைப் பெற்றுக் கொண்டபோது, முஸ்லிம்கள் இவரை உதாரணமாகக் குறிப்பிட்டு, இவரைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று வாதித்துள்ளனர்.

முஸ்லிம்களின் இரட்டை வேடங்கள்: பொதுவாக பெண்கள் கைது செய்யப்படும் போது, நீதிமன்றங்களுக்கு வரும் போது, பர்தா போட்டுக் கொண்டு வரும் போது அதனை கண்டிக்கின்றார்கள். ஒரு மலையாள முஸ்லிம் நடிகையே ஒரு வழக்கிற்காக பர்தா போட்டுக் கொண்டு தமிழக நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, எதிர்த்தனர், ஆர்பாட்டம் செய்தனர். ஆனால், இப்பொழுது பர்வீன் / ராதா இந்து போல வந்து புகார் கொடுக்கிறார், புகைப்படத்திற்குப் போஸ் கொடுக்கிறார். ஆனால், எந்த முஸ்லிமும் எதிர்க்கவில்லை. ஏன் பர்தா போட்டுக் கொண்டுவரவில்லை, இல்லை முஸ்லிமாக இருந்து கொண்டு இப்படி பொட்டு வைத்துக் கொண்டு வந்திருக்கிறாராயே என்றெல்லாம் கேட்கவில்லை. இதனை என்னெனென்பது என்று புரியவில்லை.

© வேதபிரகாஷ்

24-11-2013


[2] தினமணி, திருமணம் செய்து கொள்வதாக நடிகையிடம் ரூ.50 லட்சம் மோசடி, First Published : 23 November 2013 05:54 AM IST

[6] டமிள் ஒன் இந்தியா, ஐந்து பேரைத் திருமணம் செய்தேனா… நான் ஒன்றும் விபச்சாரி அல்ல! – நடிகை ராதா, Posted by: Shankar, Updated: Saturday, November 23, 2013, 14:15 [IST]

[9] மாலைமலர், நடிகைராதாவுக்குஎதிரானஆதாரங்களைவெளியிடுவேன்: பைசூல்பேட்டி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 23, 1:15 PM IST

[11] Nikā al-Mutʿah (Arabic: نكاح المتعة‎, “pleasure marriage”) is a fixed-term or short-term marriage in Shia Islam, where the duration and compensation are both agreed upon in advance. It is a private and verbal marriage contract between a man and an unmarried woman and there must be declaration and acceptance as in the case of nikah. The length of the contract and the amount of consideration must be specified. There is no minimum or maximum duration for the contract. The Oxford Dictionary of Islam states that, “the minimum duration of the contract should be at least three days”. The wife must be unmarried, either Muslim or one of the ahl-e-kitab, she should be chaste and should not be addicted to fornication or a virgin without father, and due inquiries should be made into these regards. At the end of the contract period (i.e. dissolution of Mut’ah), the wife must undergo iddah.

[12] Both Shias and Sunnis agree that Mut’ah was legal in the beginning. Ibn Kathir writes: “There’s no doubt that in the outset of Islam, Mut’ah was allowed under the Shari’ah”.

Esposito, John L. (2003). The Oxford dictionary of Islam. Oxford University Press. p. 221. Retrieved April 4, 2013. Tafsir al-Qur’an al-Azim, Volume 1 p. 74.

[13] Mut’ah is an Arabic word meaning literary “joy, pleasure, compliance, fulfillment or enjoyment.’ Its meaning has to be taken in context of how it is used. So for example in an oath the word mutah means compliance or fulfillment; in terms of marriage it means happiness or joy while in terms of Hajj it means relaxing. As it has a number of meanings the Quran has nanstead the word ISTIMTAH is used which for Shias means mutah. Mutah in pre Islamic Arabia was used to mean pleasure marriage. Hence, the Shias says that when in the Quran the verse 4:24 says: “Forbidden to you are married women except your slave girls….” they say that as the same verse uses the word ISTIMTAH, therefore, this means that you cannot have temporary marriage with a married woman except if she makes her your slave girl. In Al Mizan by Ayatullah Tabatabaei the claim is made that often the Companions of the Prophet would withhold their slave girls from their husbands for two months to ensure they were not pregnant and have sex through mutah with them. Then after that they would withhold the girls again for two more months before returning them to their husbands. The Ayatuallah quotes this to prove his point that the Companions used the word Istimtah to mean mutah which was used in the context the pre Islamic Arabs did.