Posted tagged ‘மௌலானா மதானி’

கோடிகளை சுருட்டிய அப்துல் ஆஜீஸ், அப்துல் மௌதானியின் கூட்டாளியா, உறவினரா, சகோதரரா!

செப்ரெம்பர் 4, 2010

கோடிகளை சுருட்டிய அப்துல் ஆஜீஸ், அப்துல் மௌதானியின் கூட்டாளியாம்!

கூட்டாளியா, சகோதரரா, உறவினரா? ஊடகங்கள் கைது செய்யப்பட்ட அப்துல் ஆஸிசை கூட்டாளி என்றும், உறவினர், சகோதரர் என்றும், கட்சியின் நிதியாளர்……….என்று பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளதால், ஊடகங்கள் குழப்புகின்றனவா அல்லது திசைத்திருப்புகின்றனவா என்று ஒன்றும் புரியவில்லை.

மதானி சகோதரர் கோர்ட்டில் ஆஜர்

செப்டம்பர் 05, 2010,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=77822

மதுரை : பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார். இவரை ஜாமீனில் விடுவிப்பதற்கான முயற்சியில் மதானி சகோதரர் அப்துல் அசீஸ் ஈடுபட்டிருந்தார். அப்துல் அசீஸ் மீது செக் மோசடி தொடர்பாக வழக்குகள் உள்ளன. இது தொ,டர்பாக சி.பி.ஐ., போலீசார் விசாரணை செய்து வந்தனர். பெங்களூருவில் சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அப்துல் அசீஸ், நேற்று இரவு 12.30 மணிக்கு மதுரை சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி ஜெகநாதன் வீட்டில் ஆஜர் செய்யப்பட்டார். பின், மதுரை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.


மதானி கொடுத்த தகவல் படி அப்துல் ஆஜீஸ் கைது (04-09-2010): அப்துல் ஆஜீஸ், மதானி கொடுத்தத் தகவலின்படித்தான் கைது செய்யப் பட்டிருப்பதாக, செய்தி வந்துள்ளது. மதானிக்கு பிணை-விடுதலை ஏற்பாடு செய்ய அப்துல் ஆஜீஸ் வந்ததாகவும், அவன் பெங்களூரு குண்டுவெடிப்பில் சம்பந்தம் கொண்டிருப்பதால்,  கைது செய்யப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

Daijiworld Media Network – Bangalore (SP)
http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=84793&n_tit=Bangalore%3A+Madani%92s+Close+Aide+Arrested+by+CCB+Police

Bangalore, Sep 4: Abdul Aziz, a Kerala-based close aide of Abdul Nasser Madani, was arrested by the policemen of city crime branch on Friday September 3.

Aziz, a prominent leader of People’s Democratic Party floated by Madani, was in the city, trying to get bail for Madani. The policemen, who got wind about his presence here, gathered information about his whereabouts and arrested him. Abdul Aziz reportedly had played a major role in the serial blasts of 2008 in the city and subsequent blasts near Chinnaswamy Stadium last year at the time IPL matches were in progress.

The arrests were made on the basis of information provided by Madani, who is in judicial custody here, during interrogation. Aziz had been nominated by Madani for guiding terrorist activities in the city, it is learnt.

Madani also had revealed that Aziz had duped a bank before getting involved with the above blasts, it is learnt.

மௌதானியின் ஆலோசகர், நிதியுதவியாளர், முக்கியமான ஆள் கைது: முஹம்மது அப்துல் ஆஜீஸ் என்பவன் 1994லேயே, போலீஸாரால் பேங்க் ஆஃப் இன்டியா மற்றும் பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா வங்கிகளில்[1] பண மோசடி வழக்குகளில் போலி “டிமாண்ட் டிராஃப்ட்”கள் மூலம், கோடிகளை சுருட்டியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறான்[2]. ஆனால், பெயிலில் வெளிவந்த அவன் தனது வேலைகளை இன்னும் வளர்த்து அதிகமாகத்தான் செய்து கொண்டிருந்தான். பிறகு திடீரென்று அவன் இந்தியாவில் காணப்படவில்லை. பெயரை மாற்றிக் கொண்டு துபாயில் 16 வருடங்கள் வாழ்ந்ததாகத் தெரிகிறது. இப்பொழுது, திடீரென்று சென்னை சி.பி.ஐக்கு தகவல் வந்ததால், பெங்களூரில் ஷேசாத்ரிபுரம் என்ற இடத்தில் லாட்ஜில் தங்கியிருந்த முஹம்மது அப்துல் ஆஜீஸ் சி,பி.ஐயால் கைது செய்யப்பட்டுள்ளான்[3]. இன்டர்போல் “சிவப்பு நிற எச்சரிக்கை நோட்டீஸ்” அனுப்பியதால், சி.பி.ஐ இவனை கைது செய்துள்ளது.

மதானியின் பைலிற்கு பாக்டுபம் கூட்டம்: இதற்கிடையில், மௌதானியை எப்படியாவது பெயிலில் எடுத்துவிட வேண்டும் என்று பலர் ராமநகரம் என்ற இடத்தில் வந்து குவிகின்றதாக கேரள போலீஸார் மற்றும் ஐ.பி கர்நாட போலீஸாரை உஷார் படுத்தியுள்ளனர்[4].  போலீஸார் மௌதானியின் பெயிலை கடுமையாக எதிர்ப்பதாக தெரிகிறது[5]. கைதிற்குப் பிறகு, இனி இதற்கும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்களோ என்னவோ?

Mohammed-Abdul-Azeez-arrested-in-Bengalore

Mohammed-Abdul-Azeez-arrested-in-Bengalore

மௌதானியின் பாதுகாவலர்களாக இருந்த போலீஸாரின் மர்மம்: கோயம்புத்தூரில் சிறையிலிருந்த விடுதலையாகிய பிறகு, ஷாஜஹான், நபீல், சஜீவன் மற்றும் பஷீர் என்ற போலீஸார் மௌதானியின் பாதுகாவலர்களாக இருந்துள்ளனர்[6]. ஆகையால், அவர்களை விசாரிக்க கர்நாடக போலீஸார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அவர்கள் வரவில்லை. ஆகவே, மறுபடியும் நோட்டீஸுகள் அனுப்பப்படும் என்று தெரிகிறது. கேரள போலீஸார், இவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை அல்லது தாமதப்படுத்துகிறது என்று சொல்லப் படுகிறது[7].


[1] மும்பை வங்கியிலும் மோசடி செய்துள்ளாதகத் தெரிகின்றது.

[2] http://timesofindia.indiatimes.com/city/chennai/Fraudster-held-in-Bangalore-turns-out-to-be-a-Madani-aide/articleshow/6488655.cms

[3] http://www.deccanchronicle.com/bengaluru/madani-aide-arrested-city-lodge-529

[4] http://www.thehindu.com/news/states/kerala/article612117.ece

[5] http://news-views.in/police-oppose-bail-to-maudany-final-hearing-on-sep-6/

[6] http://twocircles.net/node/219009

[7] இதனால் தான், ஒருவேளை, கர்நாடக போலீஸாருக்கே நோட்டீஸ் கொடுக்கப் பட்டுள்ளது தெரிகிறது.

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் !

ஓகஸ்ட் 23, 2010

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் பிரச்சினையை விட்டுவிட்டு மதானையைப் பிடித்துக் கொண்டன தமுமுக: தமுமுகவினர் முன்பு காஷ்மீர் பிரச்சினைக்கு, சென்னையில் ஆர்பாட்டம் நடத்தினர். இப்பொழுதுகூட, தீவிரவாதி-ஜிஹாதிகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு அப்பாவி பெண்மணிகளை – தாய்-மகள் என்றுகூட பார்க்காமல் (ஜரினா மற்றும் ஷகிலா) சுட்டுக் கொன்றுள்ளனர்[1]. முன்பு கல்லெடித்து கலாட்டா செய்தனர் அந்த தீவிரவாதிகள், இப்பொழுது கடைக்காரர்களே கல்லடித்து அவர்களை விரட்டுகின்றனர்[2]. எனெனில், அவர்களுக்கு அந்த அளவிற்கு வெறுப்பு வந்து விட்டது[3] போலும்! ஆக அந்த பிரச்சினை சரி வராது என்று நினைத்து, கோயம்புத்தூருக்குச் சென்று, தமுமுக ஆர்பாட்டம் செய்துள்ளனர் போலும்.

கேரள போலீஸார் எப்பொழுதும் தீவிரவாதிகளுக்கே உதவிக் கொண்டிருக்கவேண்டுமா? கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மதானியை பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடகப் போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறக் கழகத்தினர் இன்று கோவையில், நேற்று காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர்[4]. தமுமுகவின் கோவை மாவட்டத் தலைவர் பர்கத் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். கர்நாடக போலீஸாருக்குத் துணைபோன கேரள போலீஸாரை அவர்கள் கடுமையாக விமர்சித்தினர்[5]. மாவட்ட செயலர் ரபீக், பொருளாளர் அகமது கபீர் முன்னிலை வகித்தனர். ஏற்கெனெவே, கேரள போலீஸார், அவ்வாறு உதவி செய்துததன், ரொம்ப நல்லபேரை வாங்கிக்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் சாதிக்[6], மாநில துணைச் செயலர் செய்யது பேசியதாவது[7]: “கடந்த 2008ல் பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட கேரளாவை சேர்ந்த நசீர் கொடுத்த வாக்குமூலத்தில், மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையானவர், கேரள சிறப்பு போலீஸ் படை பாதுகாப்பில் இருந்தார். அவர் எங்கெல்லாம் சென்றார் என கேரள போலீசாருக்கு தெரியும்.இப்படி இருக்கும் போது, 31வது குற்றவாளியாக இருக்க முடியுமா? மதானி கைது மூலம் வேறு யாரையோ சிக்க வைக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது. மதானியை கைது செய்ய தீவிரம் காட்டிய போலீசார், மலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா பெரும்புள்ளிகளை கைது செய்யாதது ஏன்?கேரள போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் எப்படி குண்டு வைத்திருக்க முடியும். எனவே கேரள போலீசாரையும் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்க வேண்டும்”.

முஸ்லீம்கள் இந்தியாவை ஆண்டால்தான் முஸ்லீம்களுக்கு உரிமைகள் கிடைக்கும்: “தவிர கர்நாடக அரசையும் மத்திய போலீசார் விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும், முஸ்லிம்களை கைது செய்து, தீவிர விசாரணைக்கு பின் விடுவிக்கின்றனர்.மத்திய உளவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்., பற்றுள்ளவர்கள் தான் அதிகாரிகளாக உள்ளனர். இவர்கள் தான் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். முஸ்லிம்களாகிய நமக்குரிய உரிமைகள் கிடைக்க, நாம் இந்தியாவை ஆள வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது[8]. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மதானியை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்”, இவ்வாறு செய்யது பேசினார். கோவை மாநகர் மாவட்ட தலைவர் மொய்தீன் சேட் நன்றி கூறினார்

கேரள போலீஸார் தடியன்டவிடே நசீருக்கு உதவுவது ஏன்? அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, கேரள போலீஸார் நடத்தும் விதத்தைக் கண்டு, அதிகமான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அதன்படியே, ஐ.பி மற்றும் ராவின் உயர்மட்ட அதிகாரிகள், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்திடம் இதைப் பற்றி சொல்லியுள்ளனர். கேரள போலீஸ் துறையிலுள்ள, சில கருப்பு ஆடுகள் நஸீருக்கு உதவுகின்றன அன்று அவர்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்[9]. அதன்படியே, உள்துறை அமைசகம் கேரள அரசை விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நஸிரின் முகத்தை மறைக்காமல் இருப்பது, ஊடகக்காரர்கள் அவனது போகும் இடங்களை அறிந்து கொள்வது, அவனுடன் பேச எத்தனிப்பது………..முதலியன நடக்கும் விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா உளவுப் படைகளைவிட தமுமுகவிற்கு உண்மை தெரியும் போல இருக்கிறது: பெங்களூர் குண்டுவெடிப்பில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நசீர் என்பவர் அளித்த தகவலின் பேரில் மதானியை போலீஸார் கைது செய்துள்ளனர். அத்தகவலை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை என்றும், வேறு பலமான ஆதாரங்கள் இல்லாததாலும் மதானியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதாவது, போலீஸார் ஒன்றுமே இல்லாமல் கைது செய்துள்ளனராம்! அப்பொழுது, நஸீரையும் விட்டு விடாலாமே? மற்ற கைது செய்யப்பட்டுள்ள, எல்லா தீவிரவாதிகளையும் விட்டுவிடலாமே?

தாவூத் ஜிலானி சொல்வர்டு பொய்யா, நஸீர் சொல்வர்து பொய்யா? தடியன்டவிடே நசீர் லஸ்கர் தீவிரவாதி மட்டுமல்லது தாவூத் ஜீலானி என்கின்ற டேவிட் ஹெட்மேன் கோல்மென் என்ற தீவிரவாதியுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் பங்களாதேசத்தின் உடனடி நடவடிக்கை போலீஸார், எஃப்.பி.ஐ கொடுத்த தகவலின்படித்தான், அந்த மூன்று லஸ்கர்-சந்தேகத் தீவிரவாதிகளை பிடிக்கச் சொன்னது[10].  நஸீர் சொல்லியுள்ள இடங்களுக்குத்தான், இப்பொழுது மௌலானா மைதானியை அழைத்துச் சென்றுள்ளனர்[11]. இதையும் மறுக்க முடியுமா?


[1] http://www.ndtv.com/article/india/zareena-19-and-mother-killed-by-militants-in-kashmir-46663

[2] http://timesofindia.indiatimes.com/india/Protestors-in-Kashmir-face-stones-their-own-bitter-pill/articleshow/6420878.cms

[3] http://www.dnaindia.com/india/report_kashmir-stone-pelters-get-a-taste-of-their-own-medicine_1427515

[4] தினமணி, மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்; First Published : 23 Aug 2010 04:26:06 PM IST; Last Updated : 23 Aug 2010 04:28:31 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=…………….SectionName=Latest

[5] Demonstration in Tamil Nadu condemning Kerala and Karnataka govts on Madani’s arrest; Published: Monday, Aug 23, 2010, 15:30 IST; Agency: PTI
http://www.dnaindia.com/india/report_demonstration-in-tamil-nadu-condemning-kerala-and-karnataka-govts-on-madani-s-arrest_1427524

[6] http://www.indiatalkies.com/2010/08/activists-muslim-voluntary-forum-protest-madanis-arrest-karnataka-police.html

[7] தினமலர், இந்தியாவை நாம் ஆளும் போது தான் நமக்குரிய உரிமைகள் கிடைக்கும்: .மு.மு.., மாநில துணை செயலர், ஆகஸ்ட் 23, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=68650

[8] ஜிஹாதி மொழி பேசப்படிகிறது இங்கு, அதாவது, காஃபிர்கள் ஆளும் நாட்டில் மோமின்களுக்கு உரிமைகள் கிடைக்காது, அதனால், இந்தியாவை முஸ்லீம்கள் ஆளவேண்டும், என்ற கருத்து வைக்கப்படுகிறது. முஸ்லீம்கள் எப்படி, எவ்வாறு மறுபடியும் ஆளமுடியும், ஆள்வார்கள் என்று மற்றவர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும்.

[9] Arjun Raghunath, Black sheep among cops shielding LeT man Nazeer, Express News Service,First Published : 25 Jun 2010 03:01:37 AM IST; Last Updated : 25 Jun 2010 07:53:38 AM IST,

http://expressbuzz.com/topic/black-sheep-among-cops-shielding-let-man-nazeer/184388.html

[10] http://www.asianetindia.com/news/arrest-naseer-accomplice-registered-meghalaya_106626.html

[11] Dajjiworld, Madani in Madikeri, IB team Coming,  Sunday, August 22, 2010 11:16:15 AM (IST) ,

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=83862&n_tit=Madani+in+Madikeri%2C+IB+team+Coming+