Posted tagged ‘மோசுல்’

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் – ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (2)?

ஒக்ரோபர் 26, 2016

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (2)?

paris-bombers-subahani-link-dec-2015

பாரிஸ் தொடர்புகளை ஒப்புக் கொண்ட சுபஹனி மொஹிதீன்: இஸ்லாமிய அரசு போராளி, தமிழகத்தைச் சேர்ந்தவன்[1], அவனுக்கு பாரிஸ் குண்டுவெடிப்பாளர்களுடன் தொடர்புகள் இருக்கின்றன என்று இப்பொழுது (அக்டோபர் 23 2016) வாக்கில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன[2]. 2015 நவம்பரில் அவர்களை சந்தித்தப் பிறகு, இந்தியாவுக்கு வந்ததாகவும், அப்பொழுது ஊடகங்கள் மூலம், பாரிஸ் தாக்குதல் பற்றி அறிந்தபோது, அவர்களுடைய சந்திப்புகளை நினைவு கூர்ந்ததாகவும் சொன்னான்[3]. பாரிஸ் குண்டுவெடிப்பில் மூன்று குழுக்கள், ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் என்று ஈடுபட்டு குண்டுகளை வெடித்தும், ஏ.கே.47 துப்பாக்கிகளால் சுட்டும் 130 பேரைக் கொன்றுள்ளனர். இவர்களுக்கு – இந்த தீவிரவாதிகளுக்கு புனைப்பெயர்கள் தான் கொடுக்கப் பட்டன. மொஹம்மது அல்-பிரான்ஸிசி, அப்சலாம் அல்-பிரான்ஸிசி, என்று தான் அழைக்கப்பட்டனர்[4]. இதெல்லாம் “ஸ்லீப்பர் செல்” சித்தாந்தத்தின் படி, ஒருவரையொருவர் அறிந்து கொள்ளக் கூடாது என்ற முறையில் உருவாக்கப் பட்டதா அல்லது போலீஸாரிடம், தீவிரவாத தடுப்பு-கண்காணிப்பு குழுக்களிடம் மாட்டிக் கொண்டாலும் தப்பித்துக் கொள்ள யுக்தியாக பயன்படுத்திக் கொள்ளப் பட்டதா என்றும் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக கீழ்கண்ட பெயர்கள் வெளியிடப்பட்டன:

  1. Abdelhamid Abaaoud [main plotter] – அபதல்ஹமீது அபௌத்
  2. Brahim Abdeslam [brother of Abdelhamid Abaaoud] – இப்ராஹிம் அப்சலம் [1ன் சகோதரன்]
  3. Salah Abdeslam [brother of Abdelhamid Abaaoud]  – சலஹ் அப்துல் ரஸாக் [1ன் சகோதரன்]
  4. Aleed Abdel-Razzak [killed in bomb blast, but not a terrorist] – அலீத் அப்தல் ரஸாக் [பாரீஸ் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவன், ஆனால், தீவிரவாதி கிடையாது]
  5. Omar Ismail Mostefei – ஒமர் இஸ்மயில் மொஸ்தபி.

abdelhamad-abaaooud-and-ahmad-al-mohammadபாரிஸ் குண்டுவெடிப்பு தலைவன் தான் சுபஹனி மொஹிதீனின் தலைவன் ஆவான்: NIA மற்றும் பிரெஞ்சு தீவிரவாத கண்காணிப்புக் குழு, இவ்வழக்கை ஆராய்ந்து வரும் நிலையில், NIA அவர்களை தொடர்பு கொண்டபோது, பிரான்ஸில் தாக்குதல் நடந்த போது, அப்பகுதிகளில் சுபஹனி மொஹிதீன் இருந்ததாக சொல்கிறார்கள்[5]. மேலும் பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்டவன் தான் தன்னுடைய தலைவன் என்றும் கூறிக் கொண்டான்[6].  “தி ஹிந்து” “குண்டுவெடிப்பாளர்கள்” என்று பன்மையில் குறிப்பிடுகின்றது[7]. அதாவது மேற்குறிப்பிடப் பட்ட மூவரில் ஒருவன் தலைவனா அல்லது மூவருமே தலைவனா என்பதை அவன் தான் சொல்ல வேண்டும்[8]. மேலும் குண்டுவெடிப்பிலும் இவனுக்கு பங்கு உள்ளாதா இல்லையா போன்றா கேள்விகளும் எழுகின்றன. அப்படியென்றால், அவன் ஆணையின் படி அவன் இந்தியாவுக்குத் திரும்பினானா, அவனுக்கு என்ன திட்டம் கொடுக்கப்பட்டது, போன்ற கேள்விகள் எழுகின்றன. பாரிஸ் குண்டுவெடிப்பு நடந்தபோதே, தமிழகத்தைச் சேர்ந்தவனுக்கும் அந்த நிகழ்சிக்கும் தொடர்புகள் இருந்தன, தமிழகத்தைச் செர்ர்ந்த ஒருவன் அதில் இறந்து விட்டான், என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன.

bilar-hadfi-and-samy-amimour-paris-bombers-deadசுபஹனி மொஹிதீன் பாரிஸில் இருந்தானா, இல்லையா என்ற சந்தேகமும் எழுகின்றது: ஏப்ரல் 8, 2015ல் இராக்கில் இருந்தான், செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பினான், அக்டோபர் 2016ல் திருநெல்வேலியில் கைதானான் என்பதெல்லாம் திகைப்பாக இருக்கிறது. ஏனெனில் நவம்பர் 2015ல் பாரிஸில் குண்டு வைத்தவர்களை இவனுக்குத் தெரிந்தது, அல்லது இவனே அப்பகுதிகளில் இருந்தது போன்றவையும் வியப்பாக இருக்கின்றன. ஆகவே, இவன் இந்தியாவுக்குத் திரும்பி வந்ததே ஒரு நாடகம் போன்றுள்ளது. போரில் தான் கண்ட கொடூரத்தைக் கண்டு பயந்து திரும்பி வந்தான் என்றால், அவன் தொடர்ந்தி, ஐசிஸ் உடன் தொடர்புகள் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. போலி பெயர், போலி பாஸ்போர்ட், தமிழக போலீஸாருக்கே, அவன் சிரியாவுக்குச் சென்றுத் திரும்பியது தெரியாது போன்ற விசயங்கள், ஒருவேளை ஆள்-மாறாட்டம் செய்து ஆட்களை அனுப்பி வைக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது. எப்படியிருந்தாலும், இந்தியர்களை முட்டாள்கள் ஆக்கி, எமாற்றி வருகின்றனர். ஆனால், அவன் தொடர்புகள் வைத்துக் கொண்டு ஆள்சேர்த்தல், சதிதிட்டம் போடுதல் முதலியவற்றை செய்துள்ளான் என்பதிலிருந்தே அவனது பயங்காவாத-தீவிரவாத-குரூர மனத்தை வெளிக்காட்டுகிறது.

imael-omar-mostefai-salah-abdeslam-and-abrahim-abdeslamசுபஹனி மொஹிதீனை பாரிஸ் போலீஸார் விசாரிப்பார்கள்: 2015 நவம்பரில் இந்தியா திரும்பியுள்ளதாக சொல்லப்படும், மொய்தீன், பாரிஸ் தாக்குதல் தொடர்பான தகவலை செய்தியின் மூலம் தெரிந்ததாக கூறியுள்ள நிலையில், சிரியா மற்றும் ஈராக்கின் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் பிடிக்கப்பட்டு இருந்த பகுதியில் பாரீஸ் தாக்குதல் பயங்கரவாதிகள் உடனான சந்திப்பைப்பற்றியும் ஒப்புக் கொண்டுள்ளாதால், இதுதொடர்பான தகவல்களை தேசிய புலனாய்வு பிரிவு பிரான்ஸ் போலீசிடம் தெரிவித்து, இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திடமும் தெரிவிக்கப்பட்டு, விசாரணைக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை பெற்றபின்னர் பிரான்ஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்துவார்கள் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. பாரீஸ் தாக்குதல் தொடர்பாக பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் உள்ளடங்கிய விசாரணை நடைபெற்று வருகிறது, ஐ.எஸ். கைவசம் உள்ள பகுதியில் கொடூரமான கொலைகள் அரங்கேற்றப்பட்ட நேரத்தில் மொகதீனும் அங்குதான் இருந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த நவம்பரில் 6 இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில், 135-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

© வேதபிரகாஷ்

26-10-2016

muhammad-ghani-usman-and-adel-haddadi

[1] Indian Express, ‘Islamic State recruit’ from Tamil Nadu knew Paris attackers tells sleuths, By: Express News Service | New Delhi | Updated: October 24, 2016 6:22 am

[2] http://indianexpress.com/article/india/india-news-india/islamic-state-recruit-paris-attack-tamil-nadu-3099457/

[3] http://www.dnaindia.com/india/report-indian-isis-operative-subahani-haja-moideen-knew-paris-bombing-accused-2266706

[4] “In Mosul, he was put in a group which also had these two individuals. He knew them only by their pseudonyms which carried the suffix al-Francisi. However, when he was shown the photographs of the attackers, he recognised them,” an NIA officer said.

http://indianexpress.com/article/india/india-news-india/islamic-state-recruit-paris-attack-tamil-nadu-3099457/

[5] The NIA has informed the French security officials and contacted its Embassy here, the sources said, adding this was done in case it would help in their investigation. They said that French officials could question him as well after getting the requisite court order. According to the multi-country investigation into the French terror strikes, the accused involved in the gruesome killings were in IS-controlled areas at the same time Moideen was there.

The Hindu, ‘Indian ISIS operative knew Paris bombers, NEW DELHI, October 24, 2016 Updated: October 24, 2016 01:36 IST

[6] The Times of India, Paris attacker was my leader: IS recruit from India, Neeraj Chauhan| TNN | Updated: Oct 24, 2016, 01:38 IST

[7] http://www.thehindu.com/news/national/indian-is-operative-knew-paris-bombers/article9258867.ece

[8] http://timesofindia.indiatimes.com/india/Paris-attacker-was-my-leader-IS-recruit-from-India/articleshow/55020602.cms

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் – ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (1)?

ஒக்ரோபர் 26, 2016

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (1)?

subahani-haja-moideen-isis-instagram-links

அபு நைஸா மற்றும் அபு அல்ஸ்வீடி பெண்களுடன் தொடர்பு கொண்டு சுபஹனி ஹாஜா மொஹிதீன் ஐசிஸ்ஸில் சேர்ந்தது: அல்-மக்ரபி 2015ல் அபு பக்கர் அல்-பாக்தாதி [Abu Bakr al-Baghdadi] என்பவன் இஸ்லாமிய அரசுக்கு [the land of Islamic State of Iraq and Syria (ISIS)] குடியேறி, அந்நாட்டிற்காகப் போராடுமாறு அழைப்பு விடுத்தான். +2 படித்து கடைகள் மற்றும் ஆடையுற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த சுபஹனி ஹாஜா மொஹிதீன் [Subahani Haja Moideen] இதற்கு ஈர்க்கப்பட்டான். திருமணமாகியும், இணைதளத்தில் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தான். ஸ்வீடன் நாட்டு பெண் ஒருத்தி உம்ரா / ஹ்ஜ் யாத்திரை செய்வது எப்படி என்று சந்தேகம் கேட்டபோது, அவளுடன் நண்பன் ஆனான்.  அதாவது “ஹஜ்-யாத்திரை” செல்வது என்பது “மோசுலுகுச் செல்வது” என்பது போன்ற பரிபாஷைகளை வைத்துள்ளனர் போலும். மேலும் பெண்களை வைத்து ஆட்களைப் பிடிப்பதும், செக்ஸ்-தூண்டில் போட்டு பிடிக்கின்றனர் என்பதும் தெரிகிறது. இதே போல அபு நைஸா அல்-மக்ரபி [Abu Naisha al Maghrabi] மற்றும் அபு அல்-ஸ்வீடி [Abu al-Swedi] என்ற பெண்களுடன் தொடர்பு துரித தொடர்பு சேவை மூலம் [instant messaging app Telegram] கிடைத்தது. துருக்கிக்கு வந்து விட்டால், அங்கிருந்து ஐசிஸ் நாட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்வதாகவும், அங்கு அவனுக்கு சகல வசதிகளுடன் வேலை கிடைக்கும் என்று உத்தரவாதம் அளித்தனர்.

 gone-for-hajj-returned-as-isis-terrorist

ஹஜ் யாத்திரை செல்கிறேன் என்று மோசுலுக்குச் சென்றது: அதன்படியே, மொஹித்தீன் தனது வீட்டை ரூ.18 லட்சங்களுக்கு விற்ருவிட்டு, இஸ்தான்புல்லிற்கு பறந்தான். வீட்டில் ஹஜ் யாத்திரைக்கு செல்வதாக கூறிக்கொண்டான். தாய்-மனை எல்லோரும் சந்தோஷமாகத்தான் அனுப்பி வைத்தனர் போலும்! இஸ்தாபுல்லில் ஒரு வீட்டில் தங்க வைத்தபோது, தன்னைப் போன்று மொரோக்கோ, இங்கிலாந்து, ரஷ்யா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து வந்தவர்களை சந்தித்தான். அங்கிருந்து துருக்கி சிரியா எல்லையில் இருக்கும், ரக்தாத் பகுதியில் உள்ள டெல் அபயது [Tell Abyad on Turkey-Syria border in Raqqa] என்ற நகரத்தை அடைந்தனர். அவர்களுக்கு இஸ்லாம், ஜிஹாத், போர்முறை முதலியவை சொல்லிக் கொடுக்கப்பட்டது. பயிற்சியும் அளிக்கப்பட்டது. பிறகு, சிரிய படைகளுடன் போரிட அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போரில் குண்டு போட்டபோது, தன்னுடன் இருந்த இருவர் கருகி உயிரிழந்தனர். இதைக் கண்டதும், மொஹித்தீன் அலறிவிட்டான். சாவின் கொடூரம், போரின் பயங்கரம் முதலியவற்றை புரிந்து கொண்டான். இதனால் தான் அவன் திரும்பி ஓடி வந்து விட்டான் என்று கூறப்படுகிறது.

 mosques-dargahs-and-madrassas-should-teach-against-terrorism-to-create-awareness-among-the-muslim-younth

மோசுல்லுச் சென்று திரும்பியவன் “ஹாஜா” எப்படி ஆவான்?: சுபஹனி ஹாஜா மொஹிதீன் என்று குறிப்பிடுவதே கேவலமானது, மோசமானது கூட, ஏனெனில், அவன் ஹஜ்ஜிற்கு சென்று திரும்பவில்லை. அதனால் அவனை “ஹாஜா” என்று சொல்வதே தவறு. மோசுலுக்குத்தான் சென்று திரும்பியிருக்கிறான். திரும்பி ஓடி வந்தான் என்பதைவிட, அவன், வேறொரு காரணத்திற்காகத்தான் வந்துள்ளான் என்பது தெரிகிறது. ஏனெனில், அவன் தொடர்ந்து, ஐசிஸுடன் தொடர்புகள் வைத்துக் கொண்டு தீவிரவாதத்திற்காக வேலைசெய்து வந்தது, அவன் “டபுள்-ஏஜென்ட்” அல்லது ஐசிஸ்-உளவாளி என்ற முறையில் செயல்படுவதாக தெரிய வந்தது. ஒருவன் எப்படி இருந்தாலும், ஐசிஸுக்கு உதவுகிறான் என்றால் அவனை, பட்டியிலில் வைத்துக் கொண்டு கவனிக்கப்படுவார்கள். தீவிரவாதியாகி விட்டப் பிறகு, அத்தொழிலில் ஈடுபடமாட்டான் என்பதெல்லாம் மாயை. ஆகவே, இந்திய தூதரகம், ஐ.பி, முதலியவற்றை ஏமாற்றவே அத்தகைய பொய்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவனைப் போன்று, இன்னும் ஏத்தனை உளவாளிகள், ஐசிஸ் ஏஜென்டுகள் உள்ளனர் என்று தெரியவில்லை.

 %e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%b9%e0%ae%a9%e0%ae%bf

தமிழக போலீஸாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது ஆச்சரியமாக உள்ளது: மேலும் தமிழக போலிஸார் அவன் சிரியாவில் போரிடவில்லை என்றெல்லாம் வக்காலத்து வாங்கியதும் வியப்பாக இருந்தது[1]. ஒருவேளை, வழக்கம் போல தீவிரவாதத்தில் கூட “செக்யூலரிஸ” முறைகளை கையாளுகிறார்கள் போலும். சென்னையிலேயே ஐசிஸ்காரகள் பிடிப்பட்ட பிறகு, மெத்தனமாக இருப்பதும் வேடிக்கைதான். இஸ்தான்புல் இந்திய தூதரகத்தில் கூட மொஹித்தீன் பொய் சொல்லியிருக்கிறான். தான் ஒரு சுற்றுலா பயணி என்றும், பாஸ்போர்ட் மற்றும் உடமைகள் காணாமல் போய்விட்டன என்று கூறிக் கொண்டு, திரும்பிச் செல்ல அவசர சான்றிதழ் பெறுறுள்ளான்[2]. இதன்படிதான் செப்டம்பர் 22, 2015 அன்று மும்பைக்கு வந்து, கடையநல்லூருக்குச் சென்றுள்ளான். ஐ.பி இவ்வாறான “அவசர சான்றிதழுடன்” திரும்பிவரும் நபர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையும் விட்டது. ஆனால், தமிழக போலீஸ் உயரதிகாரிகள், அவன் சிரியாவுக்குச் சென்று திரும்பியது எல்லாம் தெரியாது என்று சாதிக்கின்றனர்[3]. இஸ்தான்புல் தூதரகம் கூட தமிழக போலீஸாருக்கு விவரங்களை அனுப்பியிருக்கலாம்.

paris-bombers-7-identified

சுபஹனி மொஹிதீனின் பாரிஸ் குண்டுவெடிப்பவர்களின் தொடர்புகள்: தமிழக முஸ்லிம் இளைஞனுக்கும் பாரிஸ் குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கும் இருக்கும் தொடர்புகள் திடுக்கிட வைக்கின்றன. ஆனால், அவனை, தமிழகத்தில் பெற்றோர், உற்றோர், மற்றோர் போற்றி வளர்ந்துள்ளனர் என்பது, அவர்களது ஜிஹாதி மனப்பாங்கைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஒருவேளை இவர்கள் தமது அரசியல், பணம், செல்வாக்கு வைத்து, இவனது நடவடிக்கைகளை மறைத்திருப்பார்கள் போலும்! அதனால் தான், தமிழக போலீஸார் தமக்கு தெரியாது என்கிறார்கள். ஐசிஸ் இஸ்லாத்திற்கு எதிரி என்று சில நேரங்களில் சில முஸ்லிம்கள் கூறிக் கொண்டாலும், அவர்கள் ஆதரவு கொடுப்பது தான் அதிகமாக உள்ளது என்பது, இத்தகைய ஒத்துழைப்புகளில் வெளிப்படுகிறது. திருநெல்வேலி, கடைய நல்லூரில் கைதான, மொஹிதீம் தனக்கு பாரிஸ் குண்டுவெடிப்பில் பங்கு கொண்ட அப்துல் அஹமது அபாவைத் [Abdelhamid Abaaoud], ஒமர் இஸ்மாயில் மொஸ்தபி [Omar Ismail Mostefei] மற்றும் சலாஹ் அப்சலாம் [Salah Abdeslam] முதலியோரை சந்தித்துள்ளதாக ஒப்புக் கொண்டான்[4]. அப்துல் அஹமது அபாவைத் நவம்பர் 2015ல் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டான். சலாஹ் அப்சலாம் மார்ச் 2016ல், மோலன்பெக், பெல்ஜியத்தில் [Molenbeek, Belgium] பிடிபட்டு, பாரிஸ் போலீஸ் காவலில் உள்ளான். ஒமர் இஸ்மாயில் மொஸ்தபி பற்றிய விவரங்களை சொல்ல அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

kadayanallur-org-says-kerala-is-terrorist-arrested-03-10-2016

ஐசிஸ் தீவிரவாதி கடையநல்லூர் நகைக்கடையில் எப்படி சாதாரணமாக வேலை செய்து கொண்டிருக்க முடியும்?: ஏப்ரல் 8, 2015ல் இராக்கில் இருந்தான், செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பினான், அக்டோபர் 2016ல் திருநெல்வேலியில் கைதானான் என்ற நிலையில் சுபஹனி ஹாஜா மொஹிதீன் இருப்பதை எப்படி பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியோருக்குத் தெரியாமல் இருக்கும். ஐசிஸ்.சுக்கு ஆதரவாக போரிட்டு, திரும்பி வந்தால், எந்தவித சட்டங்களையும் மீறவில்லை என்று, அவன், மறுபடியும் இந்தியாவில் வேலை செய்கிறான் என்பது சரியானதா என்றும் நோக்கத்தக்கது. உள்ளூர் போலீஸாருக்கு தெரியுமா, தெரிவிக்கப்பட்டதா முதலிய விவரங்களும் மர்மமாகவே இருக்கின்றன. சிரியாவில் தீவிரவாதத்திற்குத் துணைபோனான், தீவிரவாதியாக இருந்தான் என்றால், அங்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லையா? இந்திய தூதரகம் மூலம் திரும்பியுள்ளான் என்பது, இன்னும் மர்மமாக இருக்கிறது.  வேலைக்குப் போகிறேன் என்று சென்று ஓடிவந்தவர்களுக்கும், ஐசிஸில் சேர்ந்து போராடி, திரும்பவந்தவனுக்கும் வித்தியாசம் இல்லையா? இந்தியா எந்த அளவுக்கு தாக்குதல்களுக்கு மிகவும் மென்மையாக குறியாக இருக்கிறது என்பதை மறுபடியும் தெரிந்து கொள்ள அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால், துரோகம் செய்யும் இந்தியர்கள் கவலைப்படப் போவதில்லை.

© வேதபிரகாஷ்

26-10-2016

moideen-is-operative-ie-cutting-25-10-2016

[1] Police officers from Tamil Nadu said Moideen did not take part in any armed conflict either in Mosul or Raqqa, because he was physically inept and also because he questioned IS strategies.

http://www.dnaindia.com/india/report-the-isis-mirage-2266839

[2] At the Indian embassy, Moideen, too, pretended to be an Indian tourist who had lost his passport and luggage. The Indian embassy, after checking his background, issued him an Emergency Certificate that allowed him to travel back. He returned on September 22 to Mumbai and headed to his village in Kadayanallur in Tamil Nadu’s Tirunelveli district. Although the Intelligence Bureau has issued a circular that states should be notified about any EC issued to any of their residents, senior officials from Tamil Nadu police said they were in the dark about Moideen’s journey to Syria and his return.http://www.dnaindia.com/india/report-the-isis-mirage-2266839

[3] Although the Intelligence Bureau has issued a circular that states should be notified about any EC issued to any of their residents, senior officials from Tamil Nadu police said they were in the dark about Moideen’s journey to Syria and his return.http://www.dnaindia.com/india/report-the-isis-mirage-2266839

[4] DNA-Daily News & Analysis, ‘Indian ISIS operative Subahani Haja Moideen knew Paris bombing accused, Sun, 23 Oct 2016-03:30pm , PTI.

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக-சென்னை தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – இஞ்சினியரிங் படித்தாலும் அடிப்படைவாதம் ஆட்டிப்படைக்கிறது (1)

ஒக்ரோபர் 13, 2016

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழகசென்னை தொடர்புகள்உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறதுஇஞ்சினியரிங் படித்தாலும் அடிப்படைவாதம் ஆட்டிப்படைக்கிறது (1)

khilafat-e-rashida-is-the-only-solution

ஐசிஸ் தீவிரவாதத்துடன் தொடர்பு கொண்ட சென்னைவாசி:  இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவிற்குள் உள்நாட்டுக் குழப்பங்களை உண்டுபண்ணும் நோக்கில் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளன. தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அந்த முயற்சியை முறியடித்து, தீவிரவாதிகள் ஆறு பேரை கேரளாவில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவனுக்கு தமிழகத்துடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. பிறகு, சென்னையில் தங்கியிருந்த ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதி கத்தார் நாட்டுக்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது[1].

six-arrested-02-10-201601-10-2016 அன்று பிடிபட்ட தீவிரவாதிகள்[2]: கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம் கனகமலைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்தனர்[3].  முதலில் மலைமீது ஐவர் கூடியிருந்தபோது பிடிபட்டனர், பிறகு இன்னொருவன் பிடிபட்டான்.

எண் பிடிபட்டவன் பெயர், வயது தந்தை முகவரி
1 மன்சித் / உமர் அல் ஹிந்தி / முத்துக (Manseed alias Omar al Hindi 30) மஹ்மூத் மதீனா மஹால், அனியரம், கன்னூர் மாவட்டம், கேரளா.
2 அபு பஷீர் / ரஸீத் / பச்சா / தளபதி / அமீர்  (Abu Basheer 29) கோட்டைகுடிர், மஸ்ஜித் தெரு, ஜி.எம். நகர், தெற்கு உக்கடம், கோயம்புத்தூர், தமிழ்நாடு
3 ஸ்வாலிஹ் மொஹமத் டி / யூசுப் / அபு ஹஸ்னா (26) தாஹா மொஹமது அம்பலத், வெங்கநல்லூர், செலக்கர பஞ்சாயத்து, திரிசூர், கேரளா. இப்பொழுது சென்னையில் வசித்து வருகிறான்.
4 பி. சப்வான் (30) ஹம்ஜா பூக்கட்டில்இல்லம், பொன்முன்டம் பி.ஓ, திரூர், மலப்பப்புரம் மாவட்டம், கேரளா.
5 என். கே. ஜாஸிம் (25) அப்துல்லா நங்கீலம் கன்டி, கோழிக்கோடு மாவட்டம், கேரளா.
6 ராம்ஷெத் நகீலன் கண்டியல் / அம்மு (Ramshad Nageelan Kandiyil 24) அஸ்ரப் நங்கீலன் கன்டியல் இல்லம், குட்டியாடி பி.ஓ, கோழிக்கோடு மாவட்டம், கேரளா.

 ஆகிய 6 பேரை தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ) போலீஸ் அதிகாரிகள் கடந்த 2ம் தேதி கைது செய்தனர்[4].  இவர்கள் 24-30 வயதுடையவர்கள். இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக செய்யும் வேலைகளைத் தடுக்கும் சட்டம் முதலியவற்றின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[5]. மூன்று மாதங்களுக்கு முன்பு, கேரளாவிலிருந்து 21 பேர் காணவில்லை என்றும், அவர்கள் ஆப்கானிஸ்தான் வழியாக சிரியாவிற்கு சென்று ஐ.எஸ்ஸில் சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது[6]. இவர்களால் அல்லது இவர்களின் கூட்டாளிகளின் மூலம் இரண்டு கேரள நீதிபதிகளுக்கு ஆபத்து என்று கேரள முதலமைச்சருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது[7]. தென்னிந்தியா முழுவதும் மேற்கொண்ட தேடுதலில் இவ்விவகாரங்கள் வெளிவந்துள்ளன[8].

Russian plane crash - ISIS claiming responsibility blowing with IED in softdrink canஅன்ஸர்உல்காலிபா கேரளா” – “ஐஎஸ் பரப்பும் கொள்கைகளைப் பின்பற்றும் காலிபைட்டின் வீரர்கள்: இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்கு சென்று, ஆனால், இந்தியாவுக்கு விசுவாசமாக இல்லாமல், அயல்நாடுகளுடன் விசுவாசம் கொண்டு, ஜிஹாதி மனப்பாங்குடன், தீவிரவாதத்தை மேற்கொள்வது எப்படி என்பது புதிராகத்தான் உள்ளது. உமர் அல் ஹிந்தி என்பவன் இக்கூட்டத்தின் தலைவன். இவன் “அன்ஸர்-உல்-காலிபா கேரளா” என்ற இயக்கத்தை உருவாக்கினான். “ஐஎஸ் பரப்பும் கொள்கைகளைப் பின்பற்றும் காலிபைட்டின் வீரர்கள்” [”Ansar-ul-Khilafah Kerala” (soldiers of the Caliphate as propagated by IS)] என்று பொருளாகும். இவ்வாறு மனப்பாங்கை ஏற்படுத்துவது விஞ்ஞானம், தொழிற்நுட்பம் படிப்பதால் அல்ல, மாறாக, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிப்பதால் தான் உண்டாகிறது. என்.கே. ஜாஸிம் என்பவன் இஞ்சினியர், இவன் சிரிய அரசு ஐஎஸ்ஸுக்கு எதிராக நடத்தும் நடவடிக்கைக்களை எதிர்த்து சமூக ஊடகங்களில் செய்திகளைப் போட்டு வந்தான்[9]. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில், முஸ்லிம் இளைஞர்களை தொடர்ந்து கவர்ந்து, தீவிரவாதத்தில் இணைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளான். முஸ்லிம் அல்லாத இளைஞர்களைக் கூட “எல்லாம் கிடைக்கும்” என்ற ரீதியில் தூண்டில் போடப்பட்டுள்ளது. இளம்பெண்கள் போன்று நண்பர்களாகி, திசைத்திருப்பும் யுக்தியும் கையாளப்பட்டது. இவையெல்லாமே, பெற்றோர், உற்றோர், மற்றோர் அறியாமல் செய்யும் காரியங்கள் அல்ல. அவரவர் வீடுகளில் சோதனையிட்டபோது, ஆவணங்கள், மிண்ணனு கருவிகள் முதலியன கைப்பற்றப்பட்டன.

tamilnadu-jihad-hi-tech-jihad-with-isisபி., பி.டெக் என்று படித்த இளைஞர்கள் தாம் இந்த தீவிரவாத அமைப்புகளில் சேருகிறார்கள்: எம். கே. ஜாசிம் (24) ஒரு எஞ்சினியராக இருந்தாலும், ஜாகிர் நாயக்கின் போதனையால் கவரப்பட்டு, பாலஸ்டைன், சிரியா போன்ற இடங்களில் முஸ்லிம்கள் கொலையுண்ட காட்சிகளை பேஸ்புக்கில் தொடர்ந்து போட்டு, பழிவாங்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தான். தவிர தான் கால்பந்து, கிரிக்கெட் போன்றவற்றில் விருப்பம் உள்ளவன் என்றும் காட்டிக் கொண்டான். கன்னூரில், ஒரு மலையுச்சியில், வெடிகுண்டுகளை தயாரித்து, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல்வாதிகளின் மீது தாக்குதல் நடத்த திட்டம் போட்டான். இருப்பினும் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. செப்டம்பர் கடைசி வாரத்தில் மன்ஸீத் கட்டாரிலிருந்து கன்னூருக்கு வந்தான். அபு பஸீர் அல்லது ரஸீத் (29) ஒரு மெக்கானிக் ஆவான். டி. ஸ்வாலி மொஹம்மது (26) சென்னையில், கிளப் மஹிந்தராவில் வேலை செய்து வந்தான். பி. சப்வான் (30), ஒரு நாளிதழில், வடிவமைப்பாளனாக வேலை செய்தான். என். கே. ஜாஸிம் (25) மற்றும் ரம்ஸீத் (24) மைத்துனர்கள் ஆவர். இவர்கள் எல்லோருமே, யாருடைய உத்தரவின் மீது வேலை செய்து வந்தார்கள். அவர்களிடமிருந்து கைப்பற்றிய செல்போன்கள், சமூக ஊடக விவரங்கள் மற்ற மின்னணு சாதனங்கள் மூலம், இவ்விவரங்களை என்.ஐ.ஏ பெற்றுள்ளது.

© வேதபிரகாஷ்

13-10-2016

subahani-kadayanallur-arrested-and-questioned-08-10-2016

[1] தினமணி, சென்னையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற .எஸ். பயங்கரவாதி: என்... விசாரணையில் கிடைத்த தகவல், By DIN  |   Last Updated on : 04th October 2016 10:34 AM.

[2] http://www.nia.gov.in/writereaddata/Portal/News/104_1_PressRelease_02.10.2016.pdf

[3] NDTV, 6 Persons With Suspected ISIS links Arrested In Kerala, Updated: October 03, 2016 07:55 IST.

[4] தினகரன், .எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பா? கோவையில் பிடிபட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை, Date: 2016-10-05@ 01:19:28

[5] http://indiatoday.intoday.in/story/kerala-nia-is-terrorism/1/778722.html

[6] http://www.ndtv.com/kerala-news/6-persons-with-suspected-isis-links-arrested-in-kerala-1469311

[7]  Intelligence agencies in Kerala have alerted the State government of a threat from an Islamic State-linked module to two High Court judges and some politicians, close on the heels of the National Investigation Agency (NIA) arresting six persons of the terror module from the State.

The Hindu, Kerala warned of IS threat to 2 HC judges, Thiruvananthapuram, October.5, 2016; Updated: October 5, 2016 01:20 IST.

[8] NIA teams along with the Kerala Police, the Delhi police and the Telangana police had launched surveillance on the movement of the accused involved in the conspiracy and, during searches, the six were arrested from Kozhikode and Kannur districts.

http://www.thehindu.com/news/national/kerala/kerala-warned-of-is-threat-to-2-hc-judges/article9185038.ece

[9] The accused, who were radicalised online, had formed a group called ”Ansar-ul-Khilafah Kerala” (soldiers of the Caliphate as propagated by IS) on Telegram — a web-based application platform, a senior Home Ministry official told The Hindu. One of the accused, Jasim N.K. (24) — an engineer and the only one with an active Facebook account — was following Islamic preacher Zakir Naik and posted several messages against killings in Syria by the Assad regime and also about children and women killed in Palestine. His social media account also said that he was a keen follower of football and cricket and he last posted a message on May 3.

http://www.thehindu.com/news/national/isinspired-group-was-on-radar-for-4-months/article9181053.ece?utm_source=InternalRef&utm_medium=relatedNews&utm_campaign=RelatedNews