Posted tagged ‘மொஹம்மது ஸ்வாலி’

மொஹம்மது ரியாஸா, மொஹம்மது ஸ்வாலியா, யார் ஐந்து மாணவிகளின் மடிகளில் படுத்தவன் – பிரச்சினை இதுவா அல்லது பெண்மையா, பெண்மையை கீழ்த்தனமாக்கும் காரியங்களா? (2)

மார்ச் 1, 2015

மொஹம்மது ரியாஸா, மொஹம்மது ஸ்வாலியா, யார் ஐந்து மாணவிகளின் மடிகளில் படுத்தவன் – பிரச்சினை இதுவா அல்லது பெண்மையா, பெண்மையை கீழ்த்தனமாக்கும் காரியங்களா? (2)

Mohammed Yesseer arrested by Udupi police  uploading her sex play with him under duress. Jan.2014

Mohammed Yesseer arrested by Udupi police uploading her sex play with him under duress. Jan.2014

தார்மீகக் கட்டுப்பாடு, தார்மீக போலீஸ் கட்டுப்பாடு தேவையா?: தார்மீக காவல் கட்டுப்பாடு (Moral policing), போலீஸ் வேலையை தாங்கள் எடுத்துக் கொள்ளுதல், எச்சரிக்கை தாக்குதல் [“vigilante attack”] முதலிய வேலைகளில் ஈடுபடுகின்றனர், என்று ஊடகத்தினர் குறைகூறி வருகின்றனர்[1]. தமாஷான விசயத்தில் மாணவன் அடிக்கப்பட்டான், என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டுள்ளன[2]. இங்கு “தமாஷான” விசயங்கள் என்று எதையெல்லாம் சொல்வார்கள் என்று தெரியவில்லை.  கர்நாடகாவில், “ஶ்ரீராம் சேனா”, பப்புகளில் இளம் பெண்கள், பள்ளி-கல்லூரி மாணவிகள் குடித்து, ஆட்டம் போட்டபோது, அவர்களை அடித்துத் துரத்தியதை, பெரிய பிரச்சினையாக்கி, அத்தகைய சட்டத்தை தங்கள் கைகளுக்குள் எடுத்துக் கொள்ளும் காரியத்தை “தார்மீக காவல் கட்டுப்பாடு”, “மாரல் போலிஸிங்” (Moral policing) என்றெல்லாம் விமர்சித்துக் கண்டித்தன. இந்து இயக்கங்கள் தாம் அவற்றில் ஈடுபட்டு வருகின்றன என்பது போல சித்தரிக்கப்பட்டு, அத்தகைய போக்கைத் தொடர்ந்து, மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றன மற்றும் எதிர்த்து வருகின்றன.

The Melangadi Mohiuddin Masjid in Ullal  was against the stay order issued by the Karnataka Wakf Board

The Melangadi Mohiuddin Masjid in Ullal was against the stay order issued by the Karnataka Wakf Board

மொஹம்மது ரியாஸ் அல்லது மொஹம்மது ஸ்வாலி அல்லது அப்துர் ரஹ்மான் அல்லது வேறேராவது இருந்தாலும், அவர் தனது மகள், சகோதரி அல்லது உறவினர் பெண்ணை இவ்வாறு ஒரு பையனோடு படுக்க வைத்து, போட்டோ எடுக்க அனுமதிப்பார்களா: பள்ளியில்-கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இவ்வாறு “ஐந்து மாணவிகளின் மடிகளில் ஒரு மாணவன்”, மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு போட்டோ எடுத்துக் கொள்ளலாம், என்றதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையை எதிர்ப்பவர்கள், தங்களது மகள், சகோதரி அல்லது உறவினர் பெண்ணை இவ்வாறு செய்ய அனுமதிப்பார்களா? மொஹம்மது ரியாஸ் அல்லது மொஹம்மது ஸ்வாலி அல்லது அப்துர் ரஹ்மான் அல்லது வேறேராவது இருந்தாலும், அவர் தனது மகள், சகோதரி அல்லது உறவினர் பெண்ணை இவ்வாறு ஒரு பையனோடு படுக்க வைத்து, போட்டோ எடுக்க அனுமதிப்பார்களா. “ஆமாம்” என்றால், ஆஹா, இந்தியர்கள், குறிப்பாக “இந்திய முஸ்லிம்கள்” முன்னேறி விட்டார்கள் என்று விட்டுவிடலாம், “இல்லை” என்றால், அவர்களது போலித்தனத்தைக் காட்டுகிறது. அதாவது, ஒருபக்கம் “மாரல் போலிஸிங்” என்று எதிர்த்துக் கொண்டு, இன்னொருப் பக்கம், முஸ்லிம் பையன்களை, இந்து பெண்களுடன் நட்பு ஏற்படுத்த ஊக்குவிக்கின்றனர்; உறவாட வைக்கின்றனர்; காதல் உண்டாக்கப் பாடுபடுகின்றனர் என்றாகிறது. உண்மையில், இது பெண்களை, கேவலப்படுத்தும், பெண்மையை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. பெண்மை அவமதிக்கப் படுகிறது என்ற எண்ணமே ஏன் யாருக்கும் இவ்விசயத்தில் எழவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. அதே போல, எந்த பெண்ணும், பெண்ணிய வீராங்கனையும், தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து எவரும், இவ்விசயத்தில் தங்களது கருத்தை வெளியிட்டதாகத் தெரியவில்லை, ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை. மேலும், படுத்தவன் ஒரு “முஸ்லிம் பையன்“ என்பதால், பிரச்சினையைத் திசைத்திருப்பப் பார்க்கின்றன.

கோவில்கள் மசூதிகள் ஆக்கப்பட்டது

கோவில்கள் மசூதிகள் ஆக்கப்பட்டது

இந்து மாணவிகளுடன் போஸ் கொடுத்த முஸ்லிம் பையன் அடித்து நொறுக்கப்பட்டான்[3]: இந்திய ஊடகங்களின் ஒருதலைப்பட்சமான அல்லது பாரபட்சமான போக்கு, பாகிஸ்தான் ஊடகங்களை வாசித்தப் பிறகுதான் தெரிகிறது. இதே செய்தியை, “பாகிஸ்தான் டுடே” இந்து மாணவிகளுடன் போஸ் கொடுத்த முஸ்லிம் பையன் அடித்து நொறுக்கப்பட்டான், என்று செய்தி வெளியிட்டுள்ளது[4]. இந்தியாவில் இப்படி செய்து வெளியிடக்கூடாது என்று “செக்யூலரிஸ” கட்டுப்பாடு இருக்கலாம். அவனது மதம் என்ன என்று கேட்கப்பட்டு உதைக்கப்பட்டான் மற்றும் நண்களும் அடிக்கப்பட்டனர் என்று “தி இந்து” தனக்கே உரிய பாணியில் கூறுகிறது[5], என்று மேலே எடுத்துக் காட்டப்பட்டது.   அப்படியென்றால், “பாகிஸ்தான் டுடே”க்குத் தெரிந்திருப்பது, “தி இந்து”வுக்குத் தெரியவில்லையா, அல்லது உண்மையினை உண்மையாக எடுத்துரைக்க தைரியம் இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. இதே, சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், விசயத்தை அப்படியே அமுக்கி விடுவார்களா? பிரச்சினையை, பிரச்சினையாக அணுகாமல், இத்தகைய “செக்யூலரிஸ-கம்யூனலிஸ” நிறம் பூசி செய்திகளை அரைகுறையாக வெளியிடுவதன் மூலம் தான் பொது மக்களிடத்தில் நம்பிக்கைக் குறைகிறது, சந்தேகம் எழுகின்றது, மனங்களில் கலவரம் ஏற்படுகின்றது. உண்மையில் மதங்களிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்றால், பொதுப்பிரச்சினைகளை, பொதுப்பிரச்சினைகளாகத்தான் பார்க்கப்பட வேண்டும்.

Coastal Karnataka love jihad

Coastal Karnataka love jihad

மேற்குக்கடற்கரைக் கரைப் பகுதிகள் அந்நிய சக்திகளின் கைகளில் போகும் அபாயம்: மேற்குக்கடற்கரைக் கரைப் பகுதிகளில் தீவிரவாதம், கடத்தல், போதை மருந்து விநியோகம், விபச்சாரம், அந்நிய சுற்றுலா இவற்றுடன் சம்பந்தப் பட்டுள்ள தொழில்கள், வியாபாரங்கள் என்று பல விசயங்கள் அடங்கியுள்ளன. மும்பை தாக்குதலுக்குப் பிறகு, இப்பகுதிகள், மிகவும் அபாய வளையத்தில் வந்துள்ளன. கோவாவில், அந்நிய சுற்றுலா பயணிகளுக்கு, சில கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளமையால், அவர்கள், கீழே கோகர்ணம், முருடீஸ்வர், பட்டகல், மங்களூரு போன்ற பகுதிகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். பட்டகல் என்பது, ஏற்கெனவே அனைத்துலக தீவிரவாதம், போதை மருந்து மற்றும் கடத்தல் வளையத்தில் உள்ளது. பட்டகல் சகோதர்களின் ஜிஹாதி தீவிரவாதச் செயல்கள் அனைவரும் அறிந்த விசயங்களாக இருக்கின்றன. இக்கடற்கரைப் பகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது ஆதிக்கத்தைப் பெருக்கி வருகின்றனர். பட்டகல் மற்றும் அதற்கு மேல் மற்றும் கீழ் பகுதிகளில் அவர்களது ஆதிக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. போதாகுறைக்கு, வளைகுடா நாடுகளிலிருந்து, இஸ்லாமிய மதகுருக்கள், காஜிக்கள் முதலியோரது போக்குவரத்தும் அதிகமாகியுள்ளது. புதியதாக மசூதிகளும் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றின் எண்ணிகையும் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. இது கேரளாவையே மிஞ்சிவிடும் போலுள்ளது. அதே நேரத்தில், இக்கடற்கரைகளில் இந்துக்களின் புண்ணிய க்ஷேத்திரங்கள் அதிகமாக உள்ளன மற்றும் அவர்கள் ஆண்டு முழுவதும் வந்து போகிறார்கள் என்பதும் தெரிந்த விசயம் தான். எனவே, அவர்களது தீர்த்த-யாத்திரை போக்குவரத்துகளில் ஏற்படும் எந்த தொந்தரவும், இடைஞ்சலும், பாதிப்பும் நாளடைவில் பெரிய விரிசலை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இப்பொழுதே, இந்து தீர்த்த யாத்திரிகளுக்கு, அந்நிய சுற்றுலாப் பயணிகளால், கோகர்ணம் போன்ற பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிகமுக்கியமான கோகர்ண கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் அவர்களது ஆக்கிரமிப்பில் சேருவது புலப்படுகிறது.

© வேதபிரகாஷ்

28-02-2015

[1] http://indianexpress.com/article/india/india-others/whatsapp-picture-raises-hackles-of-moral-police-in-mangalore/

[2] http://www.deccanherald.com/content/461514/mluru-student-assaulted-over-photo.html

[3] http://www.pakistantoday.com.pk/2015/02/27/foreign/muslim-boy-beaten-black-and-blue-for-posing-with-hindu-girls/

[4] Pakistan Today, Muslim boy beaten black and blue for posing with Hindu girls, 28-02-2015.

[5] When contacted by The Hindu , Riaz said his friend Ritesh, who was in the photo, had come to his (Riyaz’s) house in Kana with another friend, Vinith, around 11 a.m. on Sunday to discuss the photo going viral. He said that suddenly, four persons came in a car, pushed the three of them inside and drove to Kaikamba, near Bajpe. Riaz said that at a ground there, five more persons joined the assailants and mercilessly beat him after asking about his religion. They also beat up his two classmates.

மொஹம்மது ரியாஸா, மொஹம்மது ஸ்வாலியா, யார் ஐந்து மாணவிகளின் மடிகளில் படுத்தவன் – பிரச்சினை இதுவா அல்லது பெண்மையா, பெண்மையை கீழ்த்தனமாக்கும் காரியங்களா? (1)

மார்ச் 1, 2015

மொஹம்மது ரியாஸா, மொஹம்மது ஸ்வாலியா, யார் ஐந்து மாணவிகளின் மடிகளில் படுத்தவன் – பிரச்சினை இதுவா அல்லது பெண்மையா, பெண்மையை கீழ்த்தனமாக்கும் காரியங்களா? (1)

Riyaz on the lap of girls - Suratkal college

Riyaz on the lap of girls – Suratkal college

ஐந்து மாணவிகளின் மடியில் படுத்த மாணவன்[1]: மங்களூரு அருகே உள்ள சூரத்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுராவை சேர்ந்தவன் முகமது ரியாஷ் (Mohammed Riaz, வயது 20) என்ற மாணவன். இவன், மங்களூருவில் உள்ள கோவிந்த தாஸ என்ற தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறான். இந்த நிலையில், முகமது ரியாஷ் தனது கல்லூரியில் பயிலும் 5 மாணவிகளின் மடியில் படுத்து கிடப்பது போல மர்ம நபர்கள் சித்தரித்து ‘வாட்ஸ்அப்’ சமூக வலைதளத்தில் படம் வெளியிட்டனர்[2]. கேலியாக பேஸ் புக்கில் வெளியிட்டனர். பிப்ரவரி 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவனின் புகைப்படம் பேஸ் புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் மனு அளித்து உள்ளனர். இந்த படம் ‘வாட்ஸ்அப்’ மூலமாக மங்களூரு நகர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது[3]. மாணவிகளின் மடியில் படுத்திருப்பது போன்ற அப்படம் பேஸ் புக்கில் வெளியிடப்பட்டது[4] என்று சில நாளிதழ்கள் குறிப்பிடுகின்றன[5]. இரண்டிலும் வெளியிடப்பட்டு, பரப்பப்பட்டது என்று தெரிகிறது[6]. ஆகவே, ஊடகங்கள் இவ்வாறு இரண்டுவிதமாக செய்திகளை வெளியிட வேண்டிய தேவையில்லை.

மாணவிகளுடன் ரியாஸ்

மாணவிகளுடன் ரியாஸ் – நோக்கம் என்ன என்று அவன் தான் விளக்க  வேண்டும்

மொஹம்மது ரியாஸ் அல்லது மொஹம்மது ஸ்வாலியார் மடியில் படுத்திருந்தது: இந்த பிரச்சினைப் பற்றி, கடந்த 21–ந்தேதி சுமார் 11 மணி அளவில் முகமது ரியாஷ், கானா என்ற இடத்தில் உள்ள, தனது வீட்டில் நண்பர்களான வினித், ரித்தீஷ் ஆகியோருடன் பேசிக் கொண்டு இருந்தான். அதாவது, சம்பந்தப் பட்ட மாணவர்களுக்கு, இவ்விவகாரம் தெரிந்திருக்கிறது என்றாகிறது. படிக்கும் மாணவர்கள் இவ்வாறு  மற்ற காரியங்களில் ஈடுபடுவது ஏற்ற்க்கொள்ளத்தக்கதன்று. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரது வீட்டுக்கு காரில் வந்த 5 பேர் கும்பல் முகமது ரியாசை காரில் கடத்தி, பஜ்பே என்ற இடத்திற்கு அருகில் உள்ள கைகம்பா அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து அடித்து உதைத்துவிட்டு சென்றுவிட்டனர். அவனது மதம் என்ன என்று கேட்கப்பட்டு உதைக்கப்பட்டான் மற்றும் நண்களும் அடிக்கப்பட்டனர் என்று “தி இந்து” தனக்கே உரிய பாணியில் கூறுகிறது[7].  ஊடகங்கள் அந்த பையனின் அடையாளத்தைக் குறிப்பிடாமல் குழப்பியுள்ளது தெரிகிறது. “தி இந்து” மாணவிகளின் மடியில் படுத்திருந்தவன் “ரியாஸ்” என்று குறிப்பிடுகிறது. “இந்தியன் எக்ஸ்பிரஸ்” கும்பல் அடையாளம் தெரியாமல் அந்த பையனை அடித்துவிட்டதாகக் கூறுகிறது. “தைஜி வார்ல்ட்” என்ற நாளிதழ் அவன் பெயர் மொஹம்மது ஸ்வாலி [Mohammed Swali] என்கின்றது[8]. படத்தில் இரு பையன்கள் இருந்தார்கள். அக்கல்லூரி மாணவர்களே, ஒரு குழுவாக அமைந்து, தவறு செய்யும் மாணவர்களைக் கண்டிக்க மேற்பட்டது. அப்பொழுதுதான், இவர்கள் மாட்டிக் கொண்டார்கள். ஊடகங்கள் உண்மையினை வெளியிடாமல், இவ்வாறு குழப்ப வேண்டிய அவசியம் இல்லை.

Coastal Karnataka love jihad

Coastal Karnataka love jihad – ஏற்கெனவே முஸ்லிம் பையன்கள், இந்து பெண்களை ஏமாற்றி பிரச்சினை செய்த விசயங்கள் இருக்கின்றன.

மொஹம்மது ரியாஸ் பெண்களுடன் இருப்பவனா?: “இதெல்லாம் ஒரு நாடகம் போன்று தோன்றுகிறது. நான் தண்ணீர் கேட்டபோது, என் வாயில் பீரை ஊற்றிக் குடிக்க வைத்தனர். பிறகு கண்கள் கட்டப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் [(Mangaluru–Udupi) 66] முக்கா என்ற இடத்தில் விட்டுச் சென்றனர்”, என்று மொஹம்மது ரியாஸ் கூறினான். கடந்த பிப்ரவரி 2014ல் தான் ஒரு இளம்பெண்ணுடன் சூரத்கல் கடற்கரையில் இருந்தபோது, ஒரு 20-வயது பையன் ஒரு கும்பலால் தாக்கப்பட்டான் என்றும் கூறினான்[9]. ஆனால், அப்பெண்ணைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிடவில்லை. அதற்கும், இதற்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை. மொஹம்மது ரியாஸ் பெண்களுடன் சுற்றும் மற்றும் இருக்கும் பழக்கம் கொண்டவனாஎன்பதை அவன் தான் விளக்க  வேண்டும். படிக்கும் பையன்களுக்கு, இத்தகைய வேலை ஏன் என்பதை அவர்கள் தாம் விளக்க வேண்டும். ஏற்கெனவே, “லவ்-ஜிஹாத்” என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்நிலையில், முகமதிய பையன்கள், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதில், கொண்டுள்ள உள்நோக்கம் என்னவென்பதை, அவர்கள் தாம் விளக்கி சரிசெய்ய வேண்டும். ஆனால், தொடர்ந்து, இத்தகைய வேலைகளில் ஈடுபடுவதை, தமாஷாக என்று யாரும் எடுத்துக் கொள்ள முடியாது.

Mangalore pub attack - m oral policing

Mangalore pub attack – m oral policing – இப்பொழுது இந்த அம்மணிகள், பெண்கள் உரிமைகள் பற்றி பேசக் காணோம்!

நான் அவன் இல்லை எனும் மொஹம்மது ரியாஸ்: இதில் காயம் அடைந்த முகமது ரியாஷ் மங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இதற்கிடையே, அவன் சூரத்கல் போலீசில் புகார் செய்தான். அதில், ‘வாட்ஸ்அப்’பில் என்னுடன் பயிலும் 5 மாணவிகளின் மடியில் நான் படுத்து இருப்பது போல படம் சித்தரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அதில் இருப்பது நான் அல்ல. எனது படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இதற்குள் பையனின் தந்தை அப்துர் ரஹ்மான் [Abdur Rehman] சூரத்கல் போலீஸாரிடம், தன் மகனை யாரோ கடத்திச் சென்று, கொலை செய்ய முயன்றதாக புகார் கொடுத்துள்ளார்[10]. ஆனால் தன்னை மர்ம நபர்கள் தாக்கியது பற்றி முகமது ரியாஷ் புகாரில் குறிப்பிடவில்லை. அப்படியென்றால், தாக்கப்பட்டது யார் என்ற குழப்பமும் சேர்கிறது. மேலும், அவன் மொஹம்மது ஸ்வாலி என்றால், ரியாஸ் தாராளமாக சொல்லியிருக்கலாம், அவ்வாறு சொல்லவில்லை என்றால், அவன் ஏன் உண்மையினை மறைக்கிறான் என்ற கேள்வி எழுகிறது.

Muslim women-out-on-streets-against-moral-policing

Muslim women-out-on-streets-against-moral-policing –  உன்பு கொடி பிடித்த இந்த முஸ்லிம் பெண்கள், இப்பொழுது ஏன் மௌனமாக இருக்கிறார்கள்?

மொஹம்மது ஸ்வாலி மற்றும் ஐந்து மாணவிகள் கல்லூரியிலிருந்து இடைக்கால நீக்கம்: ஐந்து மாணவிகளுள் ஒருத்தி யாரோ தனது பேஸ்புக் கணக்கைத் திருடி, அப்போட்டோவை எடுத்து, மாற்றி வெளியிட்டு விட்டனர் என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளாள்[11]. அம்மாணவி இவ்வாறு தாமதமாக புகார் கொடுத்துள்ளதும் வியப்பாக இருக்கிறது. முதலில் படிக்க செல்லும் மாணவிகள் படிப்பில் சிரத்தைச் செல்லுத்தி, முன்னேற வழிபார்த்து செல்ல வேண்டும், தமது பெற்றோர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டும், இத்தகைய, குழுக்களிலிருந்து விலகி இருக்க வேண்டும், ஆனால், போலீஸார், அப்பையன் மொஹம்மது ஸ்வாலி [Mohammed Swali] என்று உறுதி செய்துள்ளனர்[12]. அதாவது, “தி ஹிந்துவின்” செக்யூலரிஸ வக்காலத்து பொய்யாகிறது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போதுதான் முகமது ரியாசை மர்ம நபர்கள் காரில் கடத்தி தாக்கியிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், தனியார் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, முகமது ரியாசை, மாணவிகளுடன் சேர்த்து சித்தரித்து படம் வெளியிட்டதாக கூறி அந்த கல்லூரியில் படித்து வரும் 6 மாணவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது[13].

© வேதபிரகாஷ்

28-02-2015

[1] நியூஇந்தியாநியூஸ், கல்லூரி மாணவிகள் மடியில் அமர்ந்த மாணவன்: புகைப்படத்தால் வெடிக்கும் சர்ச்சை [ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 06:16.39 AM GMT +05:30 ]

[2] மாலைமலர், மாணவிகளின் மடியில் உட்கார்ந்த மாணவனின் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட 6 மாணவர்கள் சஸ்பெண்ட், மாற்றம் செய்த நாள்: செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 24, 7:38 PM IST; பதிவு செய்த நாள்: செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 24, 7:12 PM IST.

[3] http://www.maalaimalar.com/2015/02/24191202/morphing-photo-spread-in-socia.html4

[4] வெப்.இந்தியா, மாணவியின் மடியில் அமர்ந்து எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட மாணவர்கள், செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (19:26 IST)

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=133552

[6]http://www.newindianews.com/view.php?22cOl72bcy40Wb4e3KMM402dKmD3dd0pDmI203CgA42e4g04Oecb3lOec3

[7] When contacted by The Hindu , Riaz said his friend Ritesh, who was in the photo, had come to his (Riyaz’s) house in Kana with another friend, Vinith, around 11 a.m. on Sunday to discuss the photo going viral. He said that suddenly, four persons came in a car, pushed the three of them inside and drove to Kaikamba, near Bajpe. Riaz said that at a ground there, five more persons joined the assailants and mercilessly beat him after asking about his religion. They also beat up his two classmates.

[8] The photo of a boy, identified as Mohammed Swali, lying on the laps of five girls created a furore after it was uploaded on Facebook.

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=299167

[9] “It was like a drama,” Riaz said. “When I asked for water, they forcibly made me drink beer,” he alleged and added that later, they blindfolded him and left him near a petrol station at Mukka on National Highway (Mangaluru–Udupi) 66. He was later admitted to hospital. At that time, he was not even aware about what happened to Ritesh and Vinith. In February 2014 at Surathkal beach, a 20-year-old youth was attacked by a group when he was found with a girl.

http://www.firstpost.com/india/mangalore-goons-thrash-college-student-after-group-photo-with-girls-goes-viral-on-whatsapp-2118939.html

[10] The victim, Mohammed Riaz, was admitted to a private hospital. Based on a complaint by Riaz’s father, Abdur Rehman, the Surathkal police have registered a case of kidnapping and attempt to murder against the assailants.

The Hindu, Youth thrashed after group photo is widely circulated on WhatsApp, Magaluru, February 23, 2015; Updated: February 23, 2015 16:13 IST

[11] In a complaint filed in Suratkal police station, a girl student of Govinda Dasa College in Suratkal has claimed that the controversial photo of five girl students with a boy lying on their laps, which was uploaded in Facebook, had been doctored and uploaded after hacking her Facebook account. She claimed that the picture in question had been originally clicked by her classmate named Vineeth on February 18 and it was uploaded in Facebook. She has alleged that some mischief-mongers accessed this photo by hacking her account, misused the photo, and then posted it back in social media after affecting certain modifications.

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=299167

[12] The photo of a boy, identified as Mohammed Swali, lying on the laps of five girls created a furore after it was uploaded on Facebook.

[13] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/students-suspend-for-take-photo-of-sitting-the-women-student-and-published-on-facebook-115022400040_1.html