Posted tagged ‘முஸ்லீம்’

பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?

ஏப்ரல் 7, 2013

பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?

இஸ்லாமியநாடாக்கஅடிப்படைவாதிகளின்போராட்டம்: பங்களாதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவதூறு சட்டத்தைத் திரித்து அமைத்து, இணைதளங்களில் இடுகையிடுகிறவர்களுக்கு தூக்குத் தண்டனை செல்லுபடியாகின்ற மாதிரி செய்ய வேண்டி ஆர்பாட்டம் நடத்தினர்[1]. இது அவர்கள் பட்டியல் போட்ட 13 கோரிக்கைகளில் ஒன்றாகும். “இஸ்லாமை தூஷிப்பவர்களுக்கும் தூக்கு”, “இஸ்லாமை விமர்சிப்பவனுக்கு தண்டனை” என்று ஆர்பரித்தனர். அவர்களது மற்ற கோரிக்கைகள், பின்வருமாறு[2]:

  1. அரசியல் நிர்ணய சட்டத்தில் அல்லாவின் மீதான முழுநம்பிக்கையை உறுதி செய்யப்படவேண்டும்[3].
  2. அஹ்மதியா போன்றவர்களை முஸ்லீம்கள் அல்ல என்று பிரகடனபடுத்த வேண்டும்.
  3. அந்நிய கலாச்சாரத்தை அறவே தடை செய்ய வேண்டும்[4].
  4. ஆண்கள்-பெண்கள் பொது இடங்கள், மற்ற இடங்களில் சேர்ந்து பேசுவதை, கூடுவதைத் தடுக்க வேண்டும்.
  5. எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய படிப்பைக் கட்டாயமாக்க வேண்டும்.
  6. பொது இடங்களில் சிற்பங்கள், சிலைகள் முதலியவை வைக்கக் கூடாது.
  7. ஊடகங்களில் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கக் கூடாது.

இவர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்று சொல்லப்படுகின்றனர். பற்பல இஸ்லாமிய மதப்பள்ளிகள், கல்லூரிகள், மதஸாக்கள் முதலியவற்றிலிருந்து சேர்ந்து ஹஃபேஜாத்-இ-இஸ்லாம் [Hefazat-e-Islam] என்ற அமைப்பின் கீழ் சனிக்கிழமை அன்று ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்தினர்[5]. அவர்கள் டாக்காவை நோக்கி வர ஆரம்பித்தனர். இரண்டு லட்சம் மக்கள் கூடியதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்[6].

அடிப்படைவாதிகளை எதிர்க்கும் மிதவாதிகள்: இதை எதிர்த்து தலைநகர் டாக்காவில் 22-மணி நேர முழு அடைப்பு கோரி அழைப்பு விடுத்திருந்த மாணவர்கள் மற்ற மதசார்பற்றவர்கள், இந்த கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்[7].  “அடிப்படைவாதம் ஒழிக”, என்று அவர்கள் முழக்கம் இட்டனர். மதவாதம் ஒழிக” அடிப்படைவாத முஸ்லீம்களுக்கும் மற்ற முஸ்லீம்களுக்கும் இடையே கைகலப்பு, அடி-தடி ஏற்பட்டது. இதற்குள் போலீஸார், இஸ்லாமிஸ்டுகளை துரத்தியடித்தனர். அதற்குள் கடந்த 24-மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரங்களில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் ஜமாத்-இ-இஸ்லாமி ஆர்பாட்டக் காரர்களுடன் மோதியபோது இருவர் கொல்லப்பட்டனர்.  இதனால், இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆகிறது[8].

அரசு எடுக்கும் நடவடிக்கைகள்: பங்களாதேச அரசு, நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்குண்டுத் தவிக்கிறது என்று தெரிகிறது. 1971 போர் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்ததிலிருந்து, மதவாதிகள் இந்துக்களைக் கொல்வது என்பதலிருந்து, மற்ற மிதவாத முஸ்லீம்களை மிரட்டுவது, முதலிய வேலைகளில் இறங்கியுள்ளனர். வெளிநாட்டு உதவிகளால் வாழும் அரசு, தான் “செக்யூலார்ரென்றும் காட்டிக் கொள்ள முயல்கிறது. அரசு ஏற்கெனவே தடை உத்தரவை அமூல் படுத்தி, யாரும் உள்ளே நுழைய முடியாத அளவில் டாக்காவை தனிமைப் படுத்தினர். சபாங் சதுக்கத்தில், போர் குற்றவாளிகளுக்கு தண்டனை என்று ஆதரிப்பவர்கள் கூடி, இஸ்லாமிஸ்டுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போலீஸார் அவர்களையும் அப்புறப்படுத்தினர்.

இஸ்லாமிஸ்டுகள்மற்றும்செக்யூலரிஸ்டுகள்: இஸ்லாமிய, அரபு ஊடகங்கள் ஆர்பாட்டக் காரர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்றும், ஐரோப்பிய ஊடகங்கள் எதிர்-ஆர்பாட்டக்காரர்களை “செக்யூலரிஸ்டுகள்” என்றும் குறிப்பிட்டனர். ஆனால், பங்களாதேசத்தில் “செக்யூலரிஸ்டுகள்” என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், முன்பு, இந்துக்கள் குரூரமாக, கோரமாக, கொடுமையாகக் கொல்லப்பட்டதற்கு, தாக்கப்பட்டதகு, எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. இந்திய ஊடகங்களுக்குக் கவலையே இல்லை. இப்பொழுதும் ஐ.பி.எல் மோகத்தில் மூழ்கியுள்ளது.

இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்:

  • 1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[9] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!
  • ·         முஸ்லீம்களின் வெறியாட்டம்பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன[10].
  • “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[11].

வேதபிரகாஷ்

07-04-2013


[1] Hefajat-e-Islam, an Islamic group which draws support from tens of thousands of seminaries, organised the rally in support of its 13-point demand including enactment of a blasphemy law to prosecute and hang atheist bloggers.

[2] The demands included declaration of the Ahmadiyya Muslim sect as non-Muslim, a ban on free mixing of men and women, making Islamic education mandatory at all levels and no installation of any sculpture in any public place.

http://edition.cnn.com/2013/04/06/world/asia/bangladesh-blasphemy-protest/

[3] The group listed 13 demands, including reinstating “absolute trust and faith in the Almighty Allah” in the nation’s constitution, which is largely secular, and passing a law providing for capital punishment for maligning Allah, Islam and its Prophet Muhammad.

http://abcnews.go.com/International/wireStory/hardline-muslims-rally-bangladesh-amid-shutdown-18895209#.UWEgOqJTCz4

[4] The group’s other demands include declaring the minority Ahmadiya sect living in the country non-Muslims and banning “all foreign culture, including free mixing of men and women.”

குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

மார்ச் 17, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

mulayam-singh-yadavs-iftar-diplomacy-muslims

காபிர்களுடன் உறவு-கூட்டு ஏன், எதற்கு, எப்படி: காபிர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது, இருப்பினும் காபிரை வைத்து காபிரை அழிக்கலாம் என்றால் அவ்வாறான நிலையில் ஓரளவிற்கு நட்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, முஸ்லீம்கள் இருக்கும் போது, விஷயம் அறிந்தும் அறியாதது போல, இந்திய துரோகிகள், அரசியல் ஆதாயத்திற்காக, ஓட்டுவங்கி அரசியலுக்காக பேரம் பேசி தேர்தலை சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்தில் இப்தர் பார்ட்டி நடத்துவதிலிருந்து, அரசியல்வாதிகள் தனியாக மற்றும் இஸ்லாம் அமைப்புகளே நடத்தும் நோன்பு விழாக்கள் பல நடந்து வருகின்றன. அத்தகைய காபிர்-மோமின் கூடுதல்களில் நாத்திக, இந்துவிரோத, ஏன் கம்யூனிஸ்ட் போன்றோரும் கலந்து கொள்கின்றனர். அப்பொழுது, குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகி விட்டது.

Mullah Mulayam and Imam - 2012

முஸ்லீம்களை நம்பும் உபி அரசியல்வாதிகள்: உபியைப் பொறுத்த வரைக்கும் “முல்லா”யம் சிங் யாதவ், முஸ்லீம்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளார். காங்கிரஸ்காரர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், சுன்னத் செய்து கொள்லக் கூட தயாராக உள்ளார்கள். ராஹுல் உபிக்கு போக வேண்டும் என்றால், ஒரு மாதம் முன்னரே ஷேவ் செய்யாமல் இருப்பார். தாடி இல்லாமல் அவரை உபியில் பார்க்க முடியாது. இப்பொழுது கூட, கொலை செய்யப்பட்ட ஜியா உல் ஹக்கின் மனைவி பர்வீன் ஆஜாதைச் சென்று பார்த்துள்ளார்[1]. ஆனால், காஷ்மீரில் கொல்லப்படும் எந்த வீரரின் குடும்பதையோ, மனைவியையோ பார்த்ததாக தெரியவில்லை. அதாவது முஸ்லீம் என்றால், அதிலும் தேர்தல் வருகிறது என்றால் இத்தகைய நாடகங்கள், ஆனால், இந்தியர்களை ஏமாற்றும், துரோகம் இழைக்கும் வேலைகள் என்பதனை மற்றவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.

Mullah Mulayam and Imam

புகாரி-முல்லா நிக்கா தலாக்கில் முடிந்துள்ளது: இப்பொழுது தில்லி இமாம் மௌலானா சையது அஹ்மது புகாரி, “முல்லா”யம் சிங் யாதவுடனான தம்முடைய உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இவரது மறுமகன் உமர் அலி கான் (Umar Ali Khan) மற்றும் வாசிம் அஹமது (Waseem Ahmad) தம்முடைய ராஜினாமா கடிதங்களை சனிக்கிழமை அனுப்பியுள்ளனராம். முஸ்லீம்களை கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர், அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை என்று குற்றஞ்சாட்டியுளார். இருப்பினும், உறுதியான வாக்கு அளித்தால், தமது நிலையை மறுபரிசீலினை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[2] எட்டாவா என்ற இடத்தில் ஏப்ரல் 21ம் தேதி, ஒரு முஸ்லீம் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்[3].

 

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

முஸ்லீம் ஊழல் செய்ய மாட்டாரா?: உபி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட வாசிம் அஹமது, ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால், பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[4]. ஆனால், புகாரி அதனை எதிர்க்கிறார். முஸ்லீம் என்பதினால் தான், ஊழல் குற்றச்சாட்டு ஏற்படுகிறது என்று வாதிடுகிறார். அரசியலில் ஊழல் இல்லாவர் என்பது கிடையாது என்ற நிலையில் இத்தகைய வாதமே போலித்தனமாகும்.

 

லல்லு-பாஷ்வான்-குல்லா

லல்லு-பாஷ்வான்-குல்லா

ஆஸம் கானும் ஜெயபிரதாவும்: முலாயம் கட்சியில் ஏற்கெனவே ஆஸம் கான் என்ற முஸ்லீம் அமைச்சர் அடாவடித் தனமாக செயல் பட்டு வருகின்றார் என்பது தெரிந்த விஷயமே. கடந்த தேர்தலின் போது, ஜெயபிரதாவின் மீது அவதூறு ஏற்பட, அசிங்கமான சிடியை வெளியிட்டார் என்று அந்த நடிகையே குற்றஞ்சாட்டியுள்ளார்[5]. அப்பொழுதைய சமஜ்வாதி கட்சியின் பொதுசெயளாலராக இருந்த அமர்சிங் தேர்தல் கமிஷனரிடம் “ஜெயபிரதாவின் நிர்வாண படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் அடங்கிய சிடியை ஆஸம் கான் ஆட்கள் விநியோகித்து வருகிறார்கள்”, என்று புகார் கொடுத்தார்[6]. வெளிப்படையாக, அந்நடிகை இந்து என்பதனால் சீட் கொடுக்கக் கூடாது, அதிலும் முஸ்லீம் வேட்பாளருக்கு எதிராக நிறுத்தக் கூடாது என்றெல்லாம் வெளிப்படையாக முலாமிற்கு கண்டிஷன் போட்டார்.

Azam CD - poster of nude Jataprada

புகாரி- ஆஸம் கான் லடாய்: புகாரியின் மறுமகன் நியமிக்கப்பட்டதற்கு, ஆஜம் கான் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமல்லது “புகாரியை முஸ்லீம்கள் தலைவர்” என்று ஏற்றுக் கொள்ளமுடியாது என்றெல்லாம் பேசியுள்ளார்[7]. ஏனெனில் முஸ்லீம் அமைச்சர் பதவியை தனது மறுமகனுக்குக் கொடுக்குமாறு, புகாரி கேட்டுக் கொண்டார்[8]. இதனால்தான், ஆஸம் கான் – புகாரி இவர்களிடம் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதில் முல்லாயம் சிக்கியுள்ளார்[9].

 

Omar Abdullah - Rahul-Mullah-Topi

Omar Abdullah – Rahul-Mullah-Topi

எந்த முஸ்லீம் கூட்டு அதிக ஓட்டு கிடைக்கும்?: போதாகுறைக்கு, இப்பொழுது பிரைலியைச் சேர்ந்த மௌலானா தௌக்கீர் ராஸா என்பவருடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் (Maulana Tauqeer Raza of Bareilly, for support in the Lok Sabha elections) என்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்[10]. எந்த முஸ்லீம் கூட்டத்துடன் கூட்டு வைத்துக் கொண்டால், அதிக ஓட்டு கிடைக்கும் என்று பார்க்கிறார் போலும்[11]. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளதால், இம்முறை இந்த முஸ்லீம் கூட்டினால் வென்று விடலாம் என்றும் கணக்குப் போடுகிறார்[12].

 

வேதபிரகாஷ்

17-03-2013


[2] However, while Maulana Bukhari indicated that he was not averse to another round of talks with Mr. Singh, he said the discussions should be centred around solid assurances.

http://www.thehindu.com/news/national/other-states/maulana-bukhari-severs-ties-with-sp/article4516659.ece

[4] Sources said that the fissures came to the fore after Ahmad was removed from the post of chairman, UP Pollution Control Board (UPPCB), following stinging charges of corruption against him. Though Ahmad was later adjusted in the Civil Defence Council, the shifting allegedly fuelled animosity between Bukhari and Akhilesh Yadav.

http://timesofindia.indiatimes.com/city/lucknow/Bukhari-distances-self-from-SP-kin-quit-posts/articleshow/19011574.cms

[5] Jaya Prada, who is seeking re-election from Rampur constituency in Uttar Pradesh, alleged, “they (Khan and supporters) have released my CDs and posters just to scandalize my image”. “I am yet to see the content of the CDs but the posters released by them are very bad in taste, damaging my reputation. I am approaching the Election Commission to check this sort of campaigning,” she said.

http://articles.timesofindia.indiatimes.com/2009-05-11/india/28155645_1_azam-khan-rampur-jaya-prada-posters

[6] Samajwadi Party general secretary Amar Singh filed a complaint with the Election Commission charging SP rebel Azam Khan with distributing ‘nude’ photographs and obscene CDs of actor and Rampur candidate Jaya Prada.

http://www.dnaindia.com/india/report_seedy-cd-amar-wants-to-get-azams-scalp_1255500

[7] In April 2012, Bukhari entered into a murkier spat with minority affairs minister Azam Khanwho questioned the Imam’s claim of being a “Muslim leader”. It all started after Bukhari’s son-in-law Umar was nominated by SP as its candidate in the Legislative Council. Azam was peculiarly against Umar citing his failure during the assembly elections. Mulayam tried to pacify Bukhari, who, however, remained unmoved and retaliated by lambasting the SP of relying too much on Azam, while leaving nothing important for others.

http://timesofindia.indiatimes.com/city/lucknow/Bukhari-distances-self-from-SP-kin-quit-posts/articleshow/19011574.cms

ஐயோ–வெடிக்கும், அதிரும், அலறும்பாத் – ஐதராபாத்!

பிப்ரவரி 22, 2013

ஐயோவெடிக்கும், அதிரும், அலறும்பாத்ஐதராபாத்!

நவீனகாலத்தில் ஜிஹாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்: ஐதராபாத்தில் இந்துக்களைக் கேவலமாகப் பேசிய ஒவைஸியின் சகோதரர் கைதாகிய விஷயம் ஆறுவதற்குள்[1], இரண்டு குண்டுகள் வெடித்து 16 பேர்களை பலிகொண்டதுடன், 100ற்கும் மேற்பட்டவர்களை  காயமடையச் செய்துள்ளது. வழக்கம் போல அதே மாதிரியான, சைக்கிள்-டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், கோவிலைக் குறிபார்த்தது, தியேட்டர்களில் வெடித்துள்ளன.  இந்திய முஜாஹித்தீன் கைவரிசை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிரிகாரிகள் கூறுகிறார்கள்[2]. இடைக்காலத்தில், ஜிஹாதிகள் குதிரைகளின் மீது கத்திகளோடு வந்து, இந்தியர்களைத் தாக்கிக் கொள்ளையிட்டு, தீவிரவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு வெடி மருந்து உபயோகப்படுத்தி, பீரங்கள் மூலம் கோட்டைகளைத் தாக்கி, கொன்று அட்டூழியம் செய்தனர். அப்பொழுது எந்த யுத்ததர்மத்தையும் கடைபிடிக்கவில்லை. இந்தியர்கள் காலையிலிருந்து மாலை வரைத்தான் சண்டையிடுவார்கள். பிறகு அமைதி காப்பார்கள், ஆனால், முகமதியர்களோ வஞ்சகமாக இரவு நேரங்களிலும் தாக்கினர். நவீன காலத்தில் துப்பாக்கி வந்ததும், அதனைப் பயன்படுத்தி எல்லைகளில் தாக்கி வந்தனர். இப்பொழுது ஏ.கே.47 மற்றும் வெடிகுண்டுகளை வைத்துத் தாக்கி வருகின்றனர்.

உபயோகமற்ற உள்துறை அமைச்சர்: எல்லாம் நடந்த பிறகு, ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. முன்னமே விஷயம் தெரியுனம் என்று வேறு கூறுகிறார். பிறகு என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. இந்த இடங்களில் வெடித்தது சக்தி வாய்ந்த தாமதித்து வெடிக்கும் டைமர் குண்டுகள் என தெரியவந்துள்ளது[3]. இது குறித்து ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. உவசி மூன்று என்று இப்படித்தான் சொல்லி, பிறகு இரண்டு என்று மாற்றிக் கொண்டார். அங்குள்ள கொனார்க் தியேட்டர் அருகே 7.01 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 5 நிமிடத்தில் கொனார்க் தியேட்டர் பின்புறம் உள்ள வெங்கடாத்ரி தியேட்டரில் 2வது குண்டு வெடித்தது. 15 நிமிட இடைவெளியில் அங்குள்ள ஒரு ஓட்டலில் 3வது குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 5 பேர் மாணவர்கள். சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயார் செய்வதற்கு புத்தகங்கள் வாங்க வந்துள்ளனர்[4]. அப்போது குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கடைகள் சேதமடைந்தன.

இந்திய முஜாஹித்தீன் கைவரிசை: பயங்கரவாதி கசாப்பிற்குப் பிறகு, நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, சமீபத்தில் தூக்கிலிடப்பட்டாரன். அதனால், இந்திய முஜாஹித்தீன் மும்ஐ, பெஙளூரு, கோயம்புத்தூர், ஐதராபாத் முதலிய இடங்களைத் தாக்குதல் நடத்தலாம் என்று ரகசிய விவரங்கள் வந்துள்ளனவாம். இப்பொழுதோ, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது வேடிக்கைதான்! சைக்கிளில் டிபன்பாக்ஸ் பேக்குகள் மூலம் மிக சக்திவாய்ந்த டைமர் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது முந்தைய வெடுகுண்டுகளைப் போல, உள்ளுக்குள் வெடித்து சிதறும் (Internall Explosive Devices) வகையைச் சேர்ந்தவை. வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை ஐதராபாத் வந்து, குண்டு வெடிப்பு நடந்த இடங்களை அவர் பார்வையிட்டார்.  அவருடன் கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் டிஜிபி தினேஷ் ரெட்டி ஆகியோரும் இருந்தனர்.

ஒத்திகைப் பார்த்ததும், கேமரா வயர்களை அறுத்ததும்: கடந்த அக்டோபரில் கைதான சயீத் மக்பூல் மற்றும் இம்ரான் கான், தாங்கள் ஜூலை 2012ல் திசுக் நகருக்கு வந்து இடங்களைப் பார்த்துவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர்[5]. ரியாஸ் பட்கல் என்ற இந்திய முஜாஹித்தீன் தலைவனின் ஆணைப்படி இவ்வாறு ஒத்திகைப் பார்த்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்னர் தான் அங்கிருந்த கேமராவின் வயர்கள் அறுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்[6]. இவ்விவரம் போலீசாருக்குத் தெரிந்தேயுள்ளது. அமெரிக்க நாளிதழே இதைப் பற்றி வெளியிடும் போது[7], உள்துறை அமைச்சருக்கு தெரியாமலா இடருக்கும்? “காவி தீவிரவாதம்” என்றெல்லாம் பேசும் ஷிண்டே இதைப் பற்றி தெரிந்தும் ஏன் மௌனியாக இருந்தார்? சிதம்பரம் பாதையில் சென்று கழுத்தை அறுக்கிறார் போலும்!

மூன்று  நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது: மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஷிண்டேவிடம் டிஜிபி விளக்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் ஷிண்டே  விசாரித்தார். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ஷிண்டே நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ குண்டு வெடிப்பு குறித்து மாநில அரசு துப்பு துலக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே மூன்று  நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது உண்மைதான். ஆனால் எந்த இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளதுகுண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறோம்.” இவ்வாறு ஷிண்டே கூறினார்.

ஐதராபாத் சாய்பாபா கோயிலை குறிவைத்த குண்டுகள்: இதற்கிடையே, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயில் அருகே தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்ய திட்டமிட்டு, பின்னர் இடத்தை மாற்றியது தெரியவந்துள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயிலில் குண்டு வைக்கத்தான் சதிகாரர்கள் முதலில் திட்டமிட்டுள்ளனர். நேற்று அங்கு நடந்த சிறப்பு பூஜையில் மாநகர போலீஸ் கமிஷனர் அமர்சிங் கலந்து கொண்டார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் மர்ம நபர்கள், தங்கள் திட்டத்தை கைவிட்டு, வேறு இடங்களில் குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு குண்டு வெடித்திருந்தால் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்.

இரண்டாவது முறையாக குண்டு வெடிப்பில் சிக்கியவர்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி வாசலில் 2007ம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மிர்சா அப்துல்வாசி என்ற கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். அவரது கழுத்து, கால்கள் மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். கல்லூரி படிப்பை முடித்த மிர்சா, சரியான வேலை கிடைக்காததால் கடந்த மாதம் ஐதராபாத் தில்சுக் நகரில் கொனார்க் தியேட்டர் அருகே உள்ள கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தில்சுக் நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பிலும் மிர்சா அப்துல்வாசி சிக்கினார். அவருக்கு முதுகு, இடதுபக்க விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை யசோதா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்துல்வாசியின் தந்தை முகமது அசாமுதீனுக்கு தகவல் தரப்பட்டது. தனது மகன் 2வது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


[1] ஆந்திராவில் கடந்த 2005ம் வருடம் மேடக் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி ஆசாதுதீன் ஒவைசி இன்று மேடக் கோர்ட்டின் முன் ஆஜரானார். அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

[2] Sources claim that Indian Mujahideen founder Riyaz Bhatkal, who is holed up in Pakistan, masterminded the Hyderabad twin blasts and carried it out with the help of IM operative Yasin Bhatkal.

http://timesofindia.indiatimes.com/india/Hyderabad-bomb-blasts-Initial-probe-suggests-hand-of-Indian-Mujahideen/articleshow/18625615.cms

[3] Initial reports speculate use of ‘delayed timer’ for detonating the bombs used in the blasts. The ‘delayed timer’ provides ample time for the bomb-planter to escape after placing the bomb.

http://zeenews.india.com/news/andhra-pradesh/live-hyderabad-blasts-delayed-timer-used-to-detonate-bombs_830723.html

[5] Sayed Maqbool and Imran Khan, both of whom hail from Nanded district in Maharashtra, told police during interrogation after their arrest in October that they both did a recee of Dilsukhnagar, Begum Bazar and Abids in the Andhra Pradesh capital on a motorcycle in July 2012. “About a month before Ramzan in 2012, Maqbool helped Imran in doing a recce of Dilsukhnagar, Begum Bazar and Abids in Hyderabad on a motorcycle. This was done on the instruction of Riyaz Bhatkal,” the officials said.

http://www.dnaindia.com/india/report_pune-blasts-accused-did-a-recce-of-blast-site-other-hyderabad-areas_1803092

[6] In Dilsukhnagar, police officers say the wires of a security camera near the site of yesterday’s blasts had been cut four days ago. Nobody tried to re-connect the camera, though traffic policemen were aware of the lapse.

http://www.ndtv.com/article/india/hyderabad-bomb-blasts-danger-signs-since-october-a-disconnected-cctv-this-week-334057

ரூ.2 கோடி பரிசு – அசாமில் பங்களாதேசியைக் கண்டு பித்தால் – சவால் விட்டுள்ளார் – அபு அசிம் ஆஸ்மி!

ஓகஸ்ட் 22, 2012

ரூ.2 கோடி பரிசு – அசாமில் பங்களாதேசியைக் கண்டு பித்தால் – சவால் விட்டுள்ளார் – அபு அசிம் ஆஸ்மி!

Azmi challenges Raj to find Bangladeshis; offersRs. 2 crore

Press Trust of India | Updated: August 22, 2012 17:08 IST

http://www.ndtv.com/article/india/azmi-challenges-raj-to-find-bangladeshis-offers-rs-2-crore-257917
Azmi challenges Raj to find Bangladeshis; offers Rs 2 crore

Mumbai: Samajwadi Party leader Abu Asim Azmi on Wednesday offered Rs. two crore to MNS chief Raj Thackeray if he substantiates his allegation about Bangladeshi voters in the Assembly constituency from where he won the poll.

“Raj Thackeray says there are lakhs of Bangladeshis in my constituency. I will give Rs. 2 crore if he shows even one lakh Bangladeshis and Pakistanis in Bhiwandi,” Mr Azmi said at a press conference in Mumbai.

Mr Azmi even displayed the Rs. two crore cheque on the occasion.

“I will quit politics if his charge is proved. If he fails, he will have to quit,” Mr Azmi said, accusing the MNS

chief of playing politics by fooling Marathi people.

“Raj has abused me. Even I can hurl abuse, but my tehzeeb doesn’t allow it,” Mr Azmi said. The MNS morcha was taken out in Mumbai on Tuesday without permission and police should act against the organisers, he said.

Mr Azmi congratulated Mumbai police commissioner Arup Patnaik for displaying “restraint” while tackling the August 11 violence at Azad Maidan.

“The drug mafia was behind that violence. The culprits joined the protest morcha later,” he said.

On Raj Thackeray displaying a purported Bangladeshi passport at the rally on Tuesday, Mr Azmi said: “The throwing of passport should be inquired into. It is a serious offence.”

“Raj Thackeray is against Dalits and Muslims. His Hindutva face has come to the fore,” Mr Azmi said.

ஜிஹாதிகள் ஊக்குவிக்கும் தெருக் கலவரங்கள், சாவுகள்!

ஜூலை 10, 2010

ஜிஹாதிகள் ஊக்குவிக்கும் தெருக் கலவரங்கள், சாவுகள்

திவிரவாதிகளின் திட்டமிட்ட சதி அவர்களின் உரையாடலில் வெளிப்படுகிறது: குலாம் அஹமது தார் (Ghulam Ahmad Dar) மற்றும் ஷபீர் அஹமது வானி (Shabir Ahmed Wani) என்ற ஹுரியத் என்ற அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பட்காம் என்ற இடத்தில் போட்ட கூட்டத்தில் இப்படி பேசிக்கொள்கிறார்கள்[1]:

ஷபீர் அஹமது வானி: உங்க ஆளுங்க காசை வாங்கிக் கொண்டு வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வருகிறார்கள்.

குலம் அஹமது தார்: இல்லை, இந்த கும்பலை கட்டுப்படுத்துவதற்கு கஷ்டமாக போய்விட்டது………………அதற்கு பிறகும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

ஷபீர் அஹமது வானி: என்னடா பேசுரே, அவர்கள் மகம் என்ற இடத்திலிருந்து இருந்து பட்கம் நோக்கி வருவதற்குள் கலவரம் வெடிக்க வேண்டும், என்று சொல்லியாகி விட்டதே.

குலம் அஹமது தார்: நான் சொன்னேனே………………

ஷபீர் அஹமது வானி: ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து பேர் “சஹீத்” / தியாகிகள் ஆகவேண்டும்…… (அதாவது அப்பாவி மக்கள் சாகவேண்டும்).

குலம் அஹமது தார்: ஐயா………………

ஷபீர் அஹமது வானி: இன்று 15 பேர் “சஹீத்” / தியாகிகள் ஆகவேண்டும்…………..

குலம் அஹமது தார்: ம்ம்ம்ம்ம்ம்………………

செய்யது அலி ஷா கிலானி என்ற ஹுரியத் தலைவரின் கீழ் மேற்குறிப்பிடப்பட்ட இருவரும் இவ்வாறு பேசிக் கொள்வதாக ஒலிஅலைகளை இடையில் குறுக்கிட்டு பதிவு செய்தபோது தெரிகின்றது[2]. இதைத்தவிர, இன்னுமொரு பதிவு செய்யப்பட்ட உரையாடலும் கிடைத்திருக்கிறது. அதில் கிடைக்கும் விவரங்கள், இதோ:

Abu Inquilabi: Stone-throwing has started. அபு இன்குவிலாபி: கல்லெறிதல் ஆரம்பித்து விட்டதா?.

Suspect: Stone-throwing has started.

தீவிரவாதி: கல்லெறிதல் ஆரம்பித்து விட்டது.
Abu: Allah be praised.

அபு இன்குவிலாபி: அல்லாவைப் போற்றுவோமாக!
Suspect: Allah be praised. Today, curfew was imposed at night.

தீவிரவாதி: அல்லாவைப் போற்றுவோமாக! இன்று ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
Abu: Yes, I’ve also heard the army has been called.

அபு இன்குவிலாபி: ராணுவம் அழைக்கப் பட்டிருக்கிறது என்று கேள்விப் படுகிறேன்?
Suspect: Yes, some troops have arrived.

தீவிரவாதி: ஆமாம், சில ராணுவ வீரர்கள் வரவழைக்கப் பட்டுள்ளார்கள்.
Abu: There was no Army earlier…

அபு இன்குவிலாபி: ஆனால், முன்னால் ராணுவம் இல்லை, இல்லையா………….?

Suspect: There are some troops in Srinagar, but here in Shopian and Pulwama, there is CRPF and police.

தீவிரவாதி: ஸ்ரீநகரில் சில ராணுவ வீரர்கள் இருந்தார்கள், ஆனால், சோஃபியான் மற்றும் புல்வாமா பகுதிகளில் சி.ஆர்.பி.எஃப் மற்றும் போலீஸ்தான் இருந்ததன.
Read more at: http://www.ndtv.com/article/india/kashmir-more-phone-conversations-prove-instigated-violence-36612?cp

கலவரம் செய்ய ஆட்கள் பணம் கொடுத்து கூட்டிவந்தது: ஹுரியத் மாநாடு என்ற இந்து விரோத, பாகிஸ்தான் ஆதரவு கூட்டத்திற்கு[3] எந்த மனித உணர்வுகளும் இல்லாத வெறிபிடித்தக் கூட்டம் என்பதை தானே வெளிப்படுத்திக் கொண்டு விட்டது. ஹுரியத் மற்றும் இந்திய விரோத தீவிரவாத இயக்கங்கள், கல் எறிவதற்கு ஒருநளைக்கு ரூ.300/- என்று பணம் கொடுத்து[4] கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்துள்ளனர்[5]. அதனால் அந்த கல்லெறி வெறிக்கூட்டம் எதைப் பற்றியும் கவலைப் படவில்லை[6] (என்னுடைய முந்தைய பதிவில் புகைப்படங்களைப் பார்க்கவும்). இப்படி அடியாட்கள் வைத்துக் கொண்டு அராஜகம் செய்யும் தீவிரவாதிகளுடந்தான் “பேச்சு” நடத்துகிறார் சிதம்பரம்! இதற்காக பணம் துபாயிலிருந்து காஷ்மீரத்திற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது[7]. சந்தேகம் வராத அளவிற்கு ரூ.10 லட்சங்கள் என்று வங்கிகள் மூலம் மாற்றப் பட்டு, பணம் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளது. ஏற்கெனவே 40 ஆண்டுகளாக அழகான காஷ்மீரத்தை நரகமாக்கி விட்ட இந்த தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் தான் காஷ்மீர் மக்களுக்கு சொர்க்கத்தைக் கொடுக்கப் போவதாக நம்பியிருக்கும் மக்களை என்ன சொல்லுவது?

மக்களை இப்படி நரபலியிடுவது தியாகம் . ஷஹீத் ஆகுமா? ஹுரியத் என்ற இந்திய விரோத இயக்கத்தின் தலைவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறான்[8]. மதத்தால் மூளைசலவை செய்து, இப்படி 10-15 பேர்களை நரபலி கொடுக்கப் படவேண்டும் என்று ஒரு வெறிபிடித்தவன் கத்திக் கொண்டிருக்கிறான், ஆனால், அது தெரிந்த பிறகும், இந்தியாவில் உள்ள அறிவுஜீவிகள், முஸ்லீம்கள் அமைதியாக இருக்கிறார்கள். எந்த பொறுப்புள்ள முகமதியனோ / முஸல்மானோ, முஸ்லீமோ இதைக் கண்டிக்கவும் இல்லை. சென்னைக் குலுங்கியது, மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது என்று பெருமை பேசி, தம்பட்டம் அடித்துக் கொண்ட கூட்டங்களும் பொத்திக் கொண்டுதான் உள்ளன[9]. செக்யூலரிஸ ஜீவிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். மற்ற இந்தியர்களுக்கோ, கால்பந்து பார்ப்பதற்கக நேரமில்லை, இதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதில்லை.

மெஹ்பூபா முஃப்டியின் அடாவடித்தனம்[10]: நிருபர்கள் அந்த மெஹ்பூபா முஃப்டி என்ற பெண்மணியிடம் கேட்கிறார்கள், “என்ன அம்மையாரே, இப்படி தாங்கள் ஆதரிக்கும் தீவிரவாத ஆட்கள் பேசிக் கொள்கிறார்களே, என்ன சொல்கிறீர்கள்?”

மெஹ்பூபா முஃப்டி: அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லமுடியாது. அங்கு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளது உண்மை.

நிருபர்: ஆனால், கலவரத்தை உண்டாக்கியது, தாங்கள் ஆதரிக்கும் ஹுரியத் ஆட்கள் தாம். அதை பற்றி என்ன சொல்கிறிர்கள்?

மெஹ்பூபா முஃப்டி: சிலர் அவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அரசு சக்திகள்தாம் அந்த இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம்.

நிருபர்: ஆனால், கலவரம் ஏற்படுத்தியதே ஹுரியத் ஆட்கள் என்றாகிறது. அதற்கு நீங்கள் பதில் சொல்லாமல் இருக்கிறீர்கள்.

மெஹ்பூபா முஃப்டி: (அதே பாட்டைத் திரும்ப-திரும்ப பாடிக்கொண்டிருந்தது, உண்மையை எதிர்கொள்ள முடியவில்லை என்று நன்றாகவே தெரிகிறது)

ஷபீர் அஹமது வானி கைது: வெள்ளிக்கிழமையன்று, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப் பட்டு, மக்கள் வெளியே வரவேண்டிய நிலையுள்ளதால், ஏற்கெனெவே விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஷபீர் அஹமது வானி என்பவன் வியாழக்கிழமை அன்றே, அடையாளங்காணப்பட்டான். மேலே குறிப்பிடப்பட்ட ஹுரியத் மாநாட்டைச் சேர்ந்த, ஷபீர் அஹமது வானி என்பவன் தான் அது, என்று உறுதி செய்யப் பட்டப் பிறகு, கலவரத்தைத் தூண்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளான்[11].

பாகிஸ்தான், பாகிஸ்தான் அபகரித்துள்ள காஷ்மீர், இந்திய காஷ்மீர் என்று ஜிஹாதிகள் இந்தியர்களைக் கொன்றுவருகின்றனர்: ஹிஜ்புல் முஜாஹித்தீன் தான் காஷ்மீரத்தில் இப்பொழுதைய கலவரங்களை ஊக்குவித்து, அப்பாவி மக்களைப் பகடைக் காய்களாக உபயோகித்து, பிரச்சினையை வளர்க்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது:

Transcripts show Hizb activist seeking details from PoK
Press Trust Of India
New Delhi, July 09, 2010; First Published: 18:16 IST(9/7/2010)
Last Updated: 21:21 IST(9/7/2010)
http://www.hindustantimes.com/Transcripts-show-Hizb-activist-seeking-details-from-PoK/Article1-569818.aspx

In clear signs of cross-LoC linkages to the latest trouble in Kashmir, talks intercepted by security agencies reveal how a Hizbul Mujahideen activist based in Pakistan-occupied Kashmir enquires from a local contact about the status of protests and government response. The undated transcripts of the conversation describe a person in Shopian in South Kashmir informing Abdul Inquilabi about protests, curfew and troop movement into Srinagar.

“Kya baat hui hai yaar (what has happened, friend?),” asks Inquilabi, who according to security agencies is a Hizbul Mujahideen activist based in PoK.

“Pata nahi, halat kharab huyi hai (I do not know, the situation has deteriorated),” responds the unidentified person from Shopian, according to the transcripts.

“Yeh Hindustani fauj panga le rahi hai Kashmiriyon ke saath. Yeh kahan Chhodegi inko (The Indian Army is troubling Kashmiris. It will not spare them),” remarks Inquilabi.

“Chhodte nahi yeh (They don’t spare),” is the response.

Then Inquilabi asks whether stone-pelting has begun and the answer is in affirmative.

Inquilabi asks whether a procession is to be taken out on that day and the response is that it is to start at 9 am.

The Shopian-based person says that an announcement had been made in the morning that all should participate in the protest. He then informs that security forces have clamped curfew at night.

Inquilabi says that he has heard about more Army being requisitioned. The response is, “yes, some has reached.”

Inquilabi then asks, “was Army not there earlier?”

His contact replies that it is in some strength in Srinagar, but in Shopian and Pulwama it is CRPF and police.

ஆனால், காஷ்மீரத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல் செய்தே, அத்தகைய பயங்கரவாதத்திற்கு, இஸ்லாம் என்ற பார்வையில் துணை போகின்றனர்.

ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் முஸ்லீம்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் உரிமைகள் கிடைக்கின்றனவா? இந்திய முஸ்லீம்கள் இதை முக்கியமாக கவனித்து யோசிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் ஜிஹாதி பயங்கரவாத்தால் நாட்டையேக் குட்டிச் சுவராக்கி விட்டார்கள். பெண்கள் அங்கு வெளியே வரமுடியாது, பள்ளிக்கூடங்களுக்குச் செல்லமுடியாது. ஏன் பென்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களையெல்லாம் இடித்துவிட்டார்கள்.

பாகிஸ்தானில் தினம் வெடிகுண்டு வெடித்து மக்கள் சாகிறார்கள். அதாவது, முஸ்லீம்களே முஸ்லீம்கள் இஸ்லாம் பெயரில் கொன்றுக் குவிக்கிறார்கள். இத்தகைய நுனுக்கங்களை முஸ்லீம்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆக, இந்த நவீன காலத்தில், தங்களது மதத்தைத் தாராளமாகப் பின்பற்றிக் கொண்டு, ஏன் அமைதியாக, ஆனந்தமாக வாழக்கூடாது? எதற்கு யாதாவது, ஒரு பிரச்சினையை வைத்துக் கொண்டு இப்படி கலவரங்கள், கலாட்டாக்கள் செய்து கொண்டு அமைதியைக் குலைத்து வாழவேண்டும்?

இந்துக்களை விரட்டிவிட்டார்கள், பிறகு ஏன் அங்கு அமைதி வரவில்லை?

இந்திய முஸ்லீம்கள், இதையெல்லாம் யோசித்துப் பார்க்கவேண்டும். மக்களை பலிகொடுத்து, …………..நரபலி கொடுத்து, ……………தீவிரவாதத்தை வளர்த்து, ………………பயங்கரவாதத்தால் மனிதகுண்டுகளை வெடித்து மனிதர்களைக் கொன்று……………….இப்படியே வாழ்நாளைக் கழிப்பது என்ன அர்த்தம்? இதற்காக நம்பிக்கைகளை வளர்க்கவேண்டுமா?


[1] http://www.ndtv.com/article/india/kashmir-intercept-10-15-people-more-must-be-martyred-36362?cp

[2] http://timesofindia.indiatimes.com/India/Did-separatists-plan-instigate-Kashmir-violence/articleshow/6143623.cms

[3] http://sify.com/news/home-ministry-says-kashmir-valley-violence-being-planned-instigated-news-national-khis4dedbdd.html

[4] With reports of anti-national elements owing allegiance to the separatists creating unrest in Kashmir, the Centre has already asked the state government to take stern measures. It was claimed by government agencies that the stone-pelters were being paid Rs 300 per day by separatists and militant outfits.

http://www.deccanchronicle.com/hyderabad/kashmir-rebels-wanted-15-killed-fan-trouble-647

[5] திராவிட கட்சிகள் எப்படி காசு கொடுத்து லாரி-லாரியாக, பஸ்-பஸ்ஸாக குட்டத்தைக் கூட்டி வருவார்களோ, கலவரம் செய்ய இப்படி கான்டிராக்ட் எடுத்து மக்களைக் கொல்லும் கூட்டம் இப்பொழுதுதான் வெளிப்படுகிறது போலும்.

[6] உள்ளுர் அப்பாவி சிறுவர்கள், இளைஞர்கள் முகமூடி இல்லாமல் இருப்பார்கள், இறக்குமதி செய்யப் பட்ட அதாவது காசு கொடுத்து கூட்டி வரப்பட அடியாட்கள் கூட்டம் முகங்களைத் துணியால் மறைத்து இருப்பதைப் பார்க்கலாம்.

[7] http://thehindu.com/news/article506279.ece

[8] http://www.tribuneindia.com/2010/20100709/main3.htm

[9] இணைத்தள வீரர்கள் காஷ்மீரத்தின் அராஜகம், கொலைகள், கற்பழிப்புகள் பற்றி மூச்சுக் கூட விடமாட்டார்கள். மற்ற ஏதாவது ஒரு பிரச்சினையை 50-100 பேர்கள் மாற்றி-மாற்றி பிளாக் போட்டு, திசைத் திருப்பி விடுவார்கள்.

[10] http://ibnlive.in.com/news/separatist-leaders-behind-kashmir-violence/126253-3.html?from=tn

[11] http://economictimes.indiatimes.com/news/politics/nation/Hurriyat-leader-Wani-held/articleshow/6149661.cms