மதம்மாறியவர்வெறும்முஸ்லிமா, லெப்பைமுஸ்லிமா?: நீதிமன்றமும் மற்றொரு கோணத்தில் இந்தப் பிரச்னையை அணுகியது. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர் அல்லது முஸ்லிம் சமூகமும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்படவில்லை[1]. முஸ்லீம் சமூகத்தில் உள்ள 7 குழுக்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக பட்டியலிடப்பட்டுள்ளன, அவர்களில் லெப்பைகளும் அடங்கும். மனுதாரரின் மதமாற்றம் குறித்து காஜி வழங்கிய சான்றிதழில், அவர் முஸ்லிம்களின் லெப்பை குழுவாக மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை[2]. மனுதாரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்று தான் கூறுகிறது. அதனால், மதம் மாறிய தன்னை பிசி முஸ்லிமாக கருத வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுதான். அதில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்[3]. இனி தீர்ப்பில் உள்ள கடைசி முக்கியமான பத்திகளை கவனிப்போம்.
G.O.Ms.No.85 BC, MBC மற்றும்சிறுபான்மையினர்நல (BCC) துறை, 29.07.2008 தேதியிட்டஅறிக்கை: 12. பிரச்சினையை இன்னொரு கோணத்தில் அணுகலாம். தமிழகத்தில் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
G.O.Ms.No.85 BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நல (BCC) துறை, 29.07.2008 தேதியிட்ட அறிக்கையின் படி, பின்வருவனவற்றின் பின்தங்கிய வகுப்பினரின் (முஸ்லிம்கள்) பட்டியலை மட்டும் பட்டியல்படுத்துகிறது:
“1. Ansar – அன்சார்,
2. Dekkani Muslims – தெக்கானி முஸ்லிம்கள் [தக்காண முஸ்லிம்கள்],
3. Dudekula – துதேகுல,
4. Labbais including Rowthar and Marakayar (whether their spoken language is Tamil or Urdu)- ரவுத்தர் உட்பட லப்பைகள் மற்றும் மரக்காயர் (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது),
இவர்களை முஸ்லிம்கள் பிரிவுகள், சமூக அடுக்குகள், கட்டமைப்புகள் அல்லது ஜாதிகள் என்று எப்படி கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஜாதியில்லை என்றால், இந்த ஏழு குழுக்களும் மாறி, அல்லது மாற்றம் பெற முடியுமா என்றும் தெரியவில்லை.
சென்னைஉயர்நீதிமன்றத்தின்ஜி.மைக்கேல்தீர்ப்பு [Kailash Sonkar v. Maya Devi (1984) 2 SCC 91 and G.Michael v. S.Venkateswaran [1952 (1) MLJ 239]: எப்பொழுது ஒரு இந்து இஸ்லாத்திற்கு மாறும்போது, அவன் ஒரு முசல்மான் ஆகிறான், அவனுடைய இடம்முஸ்லீம் சமூகம் அவருக்கு முன் எந்த சாதியை சார்ந்தது என்பதை வைத்து தீர்மானிக்கப்படவில்லை, படுவதில்லை. காஜியே அதமாற்றம் அடைந்தவர். மாற்றியவர் ப்படி இருக்க வேண்டும் என்று அறிவிக்காதபோது, மதச்சார்பற்ற அரசாங்கத்தின் வருவாய் அதிகாரி எப்படி, அவரை “லெப்பை” என்று அடையாளம் கண்டு, தீர்மானித்து, இஸ்ல்லாம் என்ற கூண்டுக்குள் அடைக்கிறார் என்று தெரியவில்லை. இது எனக்கும் புரியவில்லை.
எஸ்.ருஹய்யாபேகம்வழக்கு [S.Ruhaiyah Begum vs The Government Of Tamil Nadu (WPNo.2972 of 2013 dated 19.02.2013)]: .எஸ்.ருஹய்யா பேகத்தைப் போல ஒரு இந்து “மற்ற வகையை” சேர்ந்தவர்கள் என்ற பக்குப்பிலிருந்து, இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு தம்முடைய நிலையை சாமர்த்தியமாக நிர்வகிக்கிறார்கள் அவர் அல்லது அவள் மேற்கூறிய அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரைச் சேர்ந்தவர் என்பது போன்ற சான்றிதழைப் பெறவும் இத்தகைய புத்திசாலித்தனத்தால் செய்கிறார் என்றால், சமூக நீதியின் நோக்கமே அதனால் தோற்கடிக்கப்படும் உத்திகள். நன்கு கற்றறிந்த மூத்த வழக்குரைஞர், மாற்றுத் திறனாளியாக இருந்தால் மட்டுமே மதமாற்றத்திற்கு முன்பே இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வருகிறார். பின்னர் தனியாக அவர் பிசி (முஸ்லிம்) என்று கருதலாம். எஸ்.ருஹய்யாவில் நடைபெற்றது என்று வாதித்தால், அந்த முயற்சியை அரசு மட்டுமே மேற்கொள்ள வேண்டும், தீர்மானிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின்முன்புநிலையில்உள்ளவழக்கு: “13. எஸ்.யாஸ்மின் வழக்கில் கவனிக்கப்பட்டபடி, மதமாற்றத்திற்குப் பிறகும் பிறந்த சமூகம் [ஜாதி போன்றவற்றை] ஒரு நபர் தனது சுமந்து செல்ல முடியாது. மதமாற்றத்திற்குப் பிறகும் அப்படிப்பட்ட நிலை இருக்க வேண்டுமா, இடஒதுக்கீட்டின் பலன் கொடுக்கப்பட வேண்டுமா என எழுப்பிய கேள்வி, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் உன்பு தீர்ப்பு நிலுவையில் உள்ளது. மாண்புமிகு சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை கைப்பற்றியுள்ளபோது, இந்த நீதிமன்றத்தை எந்த கருத்தையும் சொல்ல முடியாது. இந்த காரணத்திற்காக, மனுதாரரின் கோரிக்கை. நான் வற்புறுத்தினாலும் ஏற்ல முடியாது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய முன்மாதிரிகளும் அவ்வாறே, வரும் திர்ப்புக்குக் கட்டுப்பட்டது. ஆகவே, இரண்டாவது பிரதிவாதி ஆணைக்குழுவின் நிலைப்பாடு சரியானது, அதில்எந்த குறுக்கீடும் எய்ய முடியாது, அது தேவையற்றதும் ஆகும்”.
“இடவொதிக்கீட்டில்இடவொதிக்கீடு / உள்–இடவொதிக்கீடு” முதலியஅரசியல்வாதிகளின்சலுகைகள்: மதம் மாறிவர்களுக்கு இடவொதிக்கீடு கொடுக்க அரசியல்வாதிகள் பலமுறைகளை கையாண்டு வருகிறார்கள். அவை தான், சட்டங்கள், தீர்ப்புகள், நீதிகள், வரையறைகள் என்று எல்லாவற்றையும் மீறி செயல்பட முயற்சித்து பிரச்சினைகளை உண்டாக்குகின்றனர். “இடவொதிக்கீட்டில் இடவொதிக்கீடு / உள்-இடவொதிக்கீடு” என்ற போர்வைகளில் மாநில அரசுகள் முஸ்லிம்களைக் குறிப்பாக தாஜா செய்து, “ஓட்டு வங்கி,” மற்றும் எல்லைகள் கடந்த பொருளாதார ஆதாயங்களைப் பெற “ரிசர்வேஷன்” சலுகைகளைக் கொடுத்து வருகிறார்கள். உண்மையில் அம்மதங்கள், அவர்கள் மதங்கள் அத்தகைய பாகுபாடுகள் கொண்டிருக்கவில்லை, 100% சமத்துவம், சகோதரத்துவம், சமவுரிமைகள் என்றெல்லாம் கொண்டிருக்கின்றன என்றால், மண்டல் கமிஷன் தீர்ப்பு, சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முதலியவற்றின் பரிந்துரைகள் எல்லாம் பொய், தவறு, தங்களது பைபிள் / குரான் –க்ளுக்கு எதிரானவை, ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மறுத்திருக்க வேண்டும். ஆர்பாட்டம்-போராட்டம் செய்து, மாற்றியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. ஜாதிகள் உண்டு என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள், புத்தகங்கள் எழுதி வெளியிட்டு வருகிறர்கள்.
முரண்பாட்டுடன்இறையியல்சித்தாந்தம்இருக்கமுடியாது: கிருத்துவர்கள் லாப-நஷ்ட கணக்குப் போட்டு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் தீர்ப்பு-ஆதரவு, ஆசை-பேராசை போன்றவற்றால் தவிக்கிறார்கள். கிருத்துவர்களைப் போலவே, நீதிமன்றங்களில் சோதனை செய்து பார்க்கிறார்கள். ஆனால், இறையியல் விவகாரங்கள் வெளிவரும் போது, மறைக்கப் பார்க்கிறார்கள். வழக்கம் போல, இந்து மதம், சனாதனம் என்றெல்லாம் பேசி, திசைத் திருப்பப் பார்க்கிறார்கள். முஸ்லிம்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை, பிற மதங்களைச் சேர்ந்த முஸ்லீம்கள் ‘மற்றவர்கள்’ என்ற பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவதால், அவர்கள் இடஒதுக்கீட்டை இழக்கின்றனர்[4]. கிறிஸ்தவ மதத்திற்கு மாறுபவர்கள் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக’ (மதமாற்றத்திற்கு முன் அவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்) கருதப்பட்டாலும், மதம் மாறிய முஸ்லீம்களின் விஷயத்தில், ஒரு நபர் முதலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவை ‘மற்றவை’ என மட்டுமே வகைப்படுத்தப்படுகின்றன, போன்ற கருத்துகள் ஏற்கெனவே வைக்கப் பட்டுள்ளன[5].
சமூகமற்றும்கல்வியில்பின்தங்கியவகுப்பினர்: இந்திய அரசியலமைப்பில், OBC கள் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினராக (SEBC) விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய அரசாங்கம் அவர்களின் சமூக மற்றும் கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது – எடுத்துக்காட்டாக, OBC கள் மேல் கல்வி மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு அதற்கு கொடுக்கப் படுகிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது கல்வி அல்லது சமூகத்தில் பின்தங்கிய சாதிகளை வகைப்படுத்த இந்திய அரசால் பயன்படுத்தப்படும் ஒரு கூட்டுச் சொல்லாகும். பொது சாதிகள், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி மற்றும் எஸ்டி) ஆகியவற்றுடன் இந்தியாவின் மக்கள்தொகையின் பல அதிகாரப்பூர்வ வகைப்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டின் மண்டல் கமிஷன் அறிக்கையின்படி OBC கள் நாட்டின் மக்கள்தொகையில் 52% என்று கண்டறியப்பட்டது, மேலும் 2006 ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு நடைபெற்ற போது 41% ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் OBC களின் சரியான எண்ணிக்கையில் கணிசமான விவாதம் உள்ளது; இது பொதுவாக கணிசமானதாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் மண்டல் கமிஷன் அல்லது தேசிய மாதிரி கணக்கெடுப்பு மேற்கோள் காட்டிய புள்ளிவிவரங்களை விட இது அதிகம் என்று பலர் நம்புகிறார்கள்.
பொருளாதார ரீயில் பின்தங்கிய வகுப்பினர்: ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடிமக்கள் மற்றும் பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBCs). இப்பொழுது, இந்தியாவில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) என்பது குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கும் (US$10,000) குறைவாக உள்ளவர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள SC/ST/OBC போன்ற எந்த வகையிலும் சேராதவர்கள் அல்லது தமிழில் MBC அல்லாதவர்களின் துணைப்பிரிவாகும். இப்பொழுது, இப்படியெல்லாம் பிரிக்கப் படும் நிலையில், மதம் போன்ற காரணிகளும் நுழையுமா, நுழைக்கப் படுமா, அல்லது செக்யூலரிஸ கொள்கை பின்பற்ரப் படுமா என்று கவனித்துப் பார்க்க வேண்டும்.
[1] Live Law, One Can’t Carry His Caste After Conversion’: Madras High Court Rejects Backward Quota Claim Of Man Who Converted To Islam From Hinduism, Upasana Sajeev, ‘3 Dec 2022 9:31 AM.
[3] Case Title: U Akbar Ali v The State of Tamil Nadu and another Citation: 2022 LiveLaw (Mad) 492 Case No: WP (MD)No.1019 of 2022.
[4] The Hindu,‘Converted Muslims losing out on reservation in TNPSC jobs’- The same rule does not apply to converted Christians, says a former judge, T.K. ROHIT, – CHENNAI, March 27, 2022 10:50 pm | Updated March 28, 2022 07:48 am IST
[5] Muslims who have converted from other religions are losing out on the reservation for the Backward Class Muslims in Tamil Nadu Public Service Commission (TNPSC) jobs as they are treated as belonging to the category of ‘Others’. While those converting to Christianity are treated as belonging to the ‘Backward Classes’ (even if they belonged to the Scheduled Caste before conversion), in the case of converted Muslims, even if a person originally belonged to the Backward Class or Most Backward Class, they are only classified as ‘Others’.
1972ல் பெரியார் அழுதது, பேசியது: புதுமடம் ஜாபர் அலி தொடர்ந்து, “முன்னதாக காயிதே மில்லத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த புதுக் கல்லூரிக்குப் பெரியார் வந்தார். அப்போது அங்கே கடுமையான கூட்டம். பெரியாரின் நெருங்கிய நண்பரான ஈரோடு கே.ஏ.எஸ். அலாவுதீன் சாஹிப், கூட்டத்தினரை விலக்கிவிட்டு பெரியாரை காயிதே மில்லத் உடல் அருகே அழைத்துச் சென்றார். அப்போது தேம்பிய பெரியார், “இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. உத்தமமான மனிதர். முஸ்லிம் சமுதாயத்துக்கு இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கஷ்டம்,” என்று அனைவரின் காதுகளிலும் விழும்படி கூறினார். இதை அலாவுதீன் சாஹிபே பதிவுசெய்திருக்கிறார். பெரியார் சாதாரணமாக யாரையும் புகழ மாட்டார். அப்படிப்பட்ட பெரியாரிடம் இருந்து காயிதே மில்லத் பற்றி வெளியான இந்த வார்த்தைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு காயிதே மில்லத்தின் பெயரைச் சூட்டி அவரைப் பெருமைப்படுத்தினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இவ்வாறு முஸ்லிம் சமுதாயத்துக்கு வெளியே காயிதே மில்லத்தின் மேன்மையைப் புரிந்துகொண்டு அரசியல் தலைவர்கள் கடமை ஆற்றினார்கள்.,” என்று எழுதி முடித்தது. காயிதே மில்லத்தின் நினைவிடம், சென்னை திருவல்லிக்கேணியில் வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 2016ல் ஈவேரா துலுக்கர் ஆனார் என்று கதைகட்டி விட்டனர். ஆனால், எடுபடவில்லை.
பெரியார் துலுக்கர் ஆனாரா?- முகமதியர் சுற்றில் விட்டுள்ள பெரியாரின் பேச்சு[1]: விடுதலையில் 20-12-1970ல் வெளிவந்ததாக கூறி, அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறியதைப் பற்றி பேசியதை அதில் சேர்துள்ளார்கள்[2]. “பறையன், சக்கிலியன், சண்டாளன்….முகமதிய மதம்…..” போன்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. இதில் ஏதோ இஸ்லாத்தில் சேர்ந்து விட்டால், ஆதிதிராவிடர், எஸ்.சி, பட்டியல் ஜாதியினர்களின் சமூக நிலமையே மாறி விடும் என்பது போல பேசியுள்ளார்[3]. இதிலிருந்தே, அவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய முழுவிவரங்கள் அல்லது நடைமுறை விவகாரங்கள் தெரிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது[4]. முசல்மான்களைத் திருப்தி படுத்த பேசிய விதமாகவே தெரிகிறது. பிறகு, எஸ்.ஐ.ஆர். சங்கம், திருச்சியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்ச்.18, 1947 அன்று பேசிய பேச்சை இணைத்திருக்கிறார்கள். அப்பொழுது அவருக்கு ரூ.1080/- கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் தமிழில் “கடவுள்”, ஆங்கிலத்தில் “காட்”, அரேபிய மொழியில் “அல்லா” என்று சொல்கிறார்கள், எல்லாமே ஒன்று என்பது போல பேசியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், முகமதியர்களுக்கு அல்லா தான் அல்லா, அது “கடவுள், காட்” ஆகாது. ஏனெனில், பிறகு, இவர் சொல்லிவரும் சித்தாந்தம் “கடவுள் இல்லை…….கற்பித்தவன் முட்டாள்……” அதற்கு எதிராகி விடும்[5]. இக்கருத்தை 1919, 1909 லிருந்து கடந்த 28 வருடங்களாக சொல்லி வருகிறேன் என்றார். மேலும் குடி அரசு, தலையங்கம் 17.11.1935ல் காணப்படும் அவரது கருத்துகளிலிருந்து, அவருக்கு முகமதிய பதத்தில் உள்ள பிரசினைகள் தெரிந்திருக்கின்றன என்றாகிறது. அதில் அம்பேத்கர் மதமாறுவது பற்றியும் விமர்சித்துள்ளார்.
ஈவேரா முஸ்லிமாகச் சாவேன் என்றது (05-08-1929): ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது: ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையில் ஈடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கு அனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்”. (திராவிடன் 05-08-1929)[6]. ஆனால், இதனை யாரும் அப்பொழுது பொருட்படுத்த வில்லை[7]. ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்”, என்றதை, பெரியார் தாசன் போன்றோர், “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளனர்[8].
பிரச்சாரம் கட்டுக்கதைகள் ஆராய்ச்சி ஆகாது: இவ்வாறு, துலுக்கர் அடிக்கடி, புதிய கதைகளை உருவாக்கி, பிரபலமடையச் செய்து, பரப்பி வருவதில், பெரிய விற்பன்னர்கள் எனலாம். இப்பொழுது, இன்னொரு கதையைக் கிளப்பி விடுகிறார்கள் போலும். இந்துத்டுவ வாதிகள், முக்கியமாக, ஆவணங்களை சரிபார்த்து ஆராய்ச்சி செய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், ஏதோ, ஒருபக்கமாக ஒரு சாரார் பேசியதாக அச்சில் வந்துள்ளவை என்றெல்லாம் வைத்து, முடிவுக்கு வருவது, தொடரும் போக்கு தெரிகிறது. “தம்பிஎங்களைவிட்டுட்டுபோயிட்டீங்களே. நான்போயிஎன்தம்பிஉயிருடன்இருந்திருக்கக்கூடாதா? இந்தசமுதாயத்தைஇனியார்காப்பாற்றுவாங்க,” என்றுகூறிதனதுதள்ளாதவயதிலும், மூத்திரப்பையைகையில்சுமந்துகொண்டு, தன்தம்பிகாயிதேமில்லத்திற்குஇறுதிஅஞ்சலிசெலுத்தநேரில்வந்ததந்தைபெரியார்கதறிஅழுதகாட்சிஅவ்விருதலைவர்கள்இடையில்நிலவியமாறாதஅன்பை, உண்மையானநேசத்தைஉலகத்திற்குவெளிச்சம்போட்டுகாட்டியது,” என்று இப்பொழுது, இத்தகைய விசயங்கள் வெளிவருவது விசித்திரமாக இருக்கிறது..“முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று / போன்று பிதற்றினாரா?,” என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆன்மா இல்லை, ஆவி இல்லை …..என்றெல்லாம் பேசி, கிண்டலடித்து வந்த பெரியார், பெரிய சித்தர் என்றெல்லாம் சிலர் போற்றி வந்த நிலையில், அவர் அழுதார், அரற்றினார், உடன் இறக்க முயன்றார்… என்று செய்தி உருவானது திகைப்பாக இருக்கிறது. மூலம் / உண்மை ஒன்று என்றால், சமீபத்தை நிகழ்வுகள் பற்றி ஒன்றிற்கு மேலான விவரங்கள் வருவது சிந்திக்க வேண்டிய பொருளாக மாறுகிறது
[5] கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, இது 1967ல் பெரியார் திடலில், பெரியார் வெளியிட்டதாக கூறுகிறார்கள்.
[8] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013, http://bushracare.blogspot.in/2013/09/5.html
கேரளாசென்றுதிரும்பியஇஸ்லாம்நகர்மற்றும்முஸ்லிம்நகர்களுக்குத்திரும்பியவர்கள்: 144 தடை உத்தரவை மீறிய கிராமங்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சீல் வைத்தனர்[1]. திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரகநல்லூர் ஊராட்சி இஸ்லாம் நகர் பகுதியில் 1,100 குடும்பங்கள் வசிக்கின்றன[2]. இதேபோல் சாத்திரம், ஜெயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம் நகரில் மொத்தம் 750 வீடுகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலானோர் காய்கறி நறுக்கும் கத்தியை கூர்மை தீட்டும் தொழில் செய்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் கேரளா மாநிலத்திற்கு சென்று அந்தப் பகுதியில் தொழில் செய்பவர்கள். இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்தது வருவதாக கூறப்படுகிறது. எனவே இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர் மக்கள் கேரளா சென்று திரும்பியவர்கள் என்பதால் இவர்களுக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தின்பேரில் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தங்காமல் நகர்புறம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு அடிக்கடி சென்று வந்தனர்[3]. எனவே அரசு ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்காததால் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணஅமுதம் மற்றும் திருத்தணி போலீஸ் டிஎஸ்பி சேகர், ஒன்றிய ஆணையர்கள் இணைந்து மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி அந்த கிராமங்களை சுற்றி காவலர்களை நியமித்து செக்போஸ்ட் அமைத்து சீல் வைத்தனர்[4]. அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்தனர்.
முஸ்லிம்என்பதால்வேறுமருத்துவமனையைப்பாத்துக்கோங்கன்னு‘ சொன்னமருத்துவர்: திருத்தணியை அடுத்த இஸ்லாம் நகர் பகுதியில் வசிக்கும் சைதா என்பவர் தன் மனைவி ஆஷாவுக்கு கடந்த சில வாரங்களாக திருத்தணியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை செய்துவந்துள்ளார். திடீரென ஒருநாள், சைதாவைத் தொடர்புகொண்ட மருத்துவமனை நிர்வாகம் `மேற்கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாதென்றும், தங்கள் மருத்துவமனையில் முஸ்லிம் மதத்தினருக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம்’ என்று கூறி சைதாவின் மனைவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய சைதா, “என்மனைவிஆஷாவுக்குபோனமாசம்திடீர்னுஉடம்புசரியில்லாமப்போச்சு. உடனடியா, திருத்தணியிலஇருக்குறபீகாக்மருத்துமனைக்குகூட்டிட்டுப்போனேன். என்மனைவியைப்பரிசோதிச்சிட்டுஅவங்களுக்குகிட்னிலபாதிப்புஇருக்கு, உடனடியாகஆபரேஷன்பண்ணனும்னுசொன்னாங்க. நான்அரசுமருத்துவமனைக்குகூட்டிட்டுபோறேன்னுசொன்னதுக்கு, அவங்கஉடல்நிலைமோசமாஇருக்கறதாலஉடனடியாஆபரேஷன்செய்யணும்னுசொன்னாங்க. இல்லனாஉயிருக்குஉத்தரவாதம்இல்லைனுசொன்னதாலநானும்என்மனைவியைஅந்தமருத்துவமனையிலேயேசிகிச்சைசெய்யலாம்னுமுடிவெடுத்தேன். அந்தஅறுவைசிகிச்சைக்குரூ.30,000 செலவாகும்னுமுதல்லசொன்னாங்க, ஆனாஎங்ககிட்டரூ.65,000 வாங்கிட்டாங்க.அறுவைசிகிச்சைமுடிஞ்சுஅங்கேயே 4 நாள்வெச்சிருந்தாங்கபிறகுவீட்டுக்குஅனுப்பிட்டு, தொடர்ந்துவாரத்துலசெவ்வாய்க்கிழமையும்வெள்ளிக்கிழமையும்வந்துடயாலிசிஸ்செஞ்சுட்டுபோகணும்னுசொன்னாங்க. நானும்கடந்தசெவ்வாய்க்கிழமைகூடஎன்மனைவியகூட்டிட்டுப்போய்டயாலிசிஸ்செஞ்சுட்டுவந்தேன். ஆனாஇந்தநிலையிலஏப்ரல் 2-ம்தேதிகாலையிலமருத்துவமனைலஇருந்துபோன்வந்துச்சு. என்கிட்டபேசினவரு `நாளைக்குநீங்கடயாலிசிஸ்சிகிச்சைக்குவரவேண்டாம், எங்கமருத்துவமனைலமுஸ்லிம்யாருக்கும்சிகிச்சைஅளிக்கக்கூடாதுனுஎங்கஎம்.டிசொல்லிட்டாரு, அதனாலநீங்கமேற்படிசிகிச்சைக்குவேறமருத்துவமனையைப்பாத்துக்கோங்கன்னு” சொன்னாங்க.
திருவள்ளூர்ஜாயின்ட்டைரக்டர்அலுவலகத்துலஇருந்துசுற்றறிக்கை: நான் பதிலுக்கு என் மனைவிக்கு ஆரம்பத்துல இருந்தே உங்க மருத்துவமனையிலதானே பார்த்துட்டு வர்றேன். இப்போ திடீர்னு இப்படி சொன்னீங்கன்னா நாங்க இந்த 144 தடை நேரத்துல எங்க போறதுன்னு கேட்டதுக்கு, இல்ல சார் எங்களுக்கு திருவள்ளூர் ஜாயின்ட் டைரக்டர் அலுவலகத்துல இருந்து சுற்றறிக்கை வந்துருக்கு. அதுல, முஸ்லிம் மதத்தினர் யாரு சிகிச்சைக்கு வந்தாலும் அனுமதிக்க வேண்டாம்னு உத்தரவு போட்ருக்காங்க. உங்களுக்கு மேற்படி சிகிச்சை வேணும்னா நீங்க உங்க மனைவிய அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிப் போன வெச்சுட்டாங்க. இப்ப என் மனைவிக்கு டயாலிசிஸ் பண்ணனும். மருத்துவமனை நிர்வாகம் திடீர்னு இப்படி சொல்லிட்டதால அடுத்து என்ன பண்றதுனு தெரியாம தவிச்சிட்டு இருக்கோம். ஒரு நாள் சிகிச்சை அளிக்கத் தவறினா கூட அவ உயிருக்கே ஆபத்தாயிடும். திருத்தணி பகுதில வேற எங்கயும் இந்த சிகிச்சை கிடையாது. எங்க பகுதில இஸ்லாமிய சமூக மக்கள்தான் அதிகமா இருக்கோம். ஆரம்பத்துல இருந்து சிகிச்சை அளிச்சிட்டு வந்துட்டு இப்ப அவங்க இப்படி எங்களுக்கு மருத்துவம் பார்க்காமல் புறக்கணிக்கிறதுதான் எதுக்குன்னு தெரியல, குறிப்பாக எங்க மதத்தினருக்கு மட்டும் சிகிச்சை இல்லைன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்னும் தெரியல.
டெல்லில நடந்த ஜமா-அத் மாநாட்டுக்குப் போய்ட்டு வந்துருப்போம்னுதான் எங்களுக்கு சிகிச்சை அளிக்காம புறக்கணிக்குறாங்க. ஆனா எங்க இஸ்லாம் நகர் பகுதியில இருந்து ஒருத்தர் கூட அந்த மாநாட்டுக்குப் போகல. அப்படி இருக்கும்போது உயிர் காக்கும் மருத்துவமனையில இது மாதிரி மத பாகுபாடு பார்ப்பதுதான் மிகுந்த வேதனை அளிக்குது. நான் என் மனைவிய வேற மருத்துவமனையில சிகிச்சைக்கு அனுமதிப்பேன். ஆனா எங்களுக்கு நடந்த மாதிரி இனி யாருக்கும் நடக்கக் கூடாது. இன்னைக்கு இப்படி செய்றவங்க நாளைக்கு ஒரு அவசரம்னு போனாலும் இப்படித்தான் எங்களைப் புறக்கணிப்பாங்க. திருவள்ளூர் இணை இயக்குநர்தான் சுற்றறிக்கை அனுப்புனதா சொன்னதால நாங்க இப்ப இணை இயக்குநர்கிட்டயே தகுந்த ஆதாரங்களோடு புகார் மனு அளிச்சிருக்கோம். நடவடிக்கை எடுக்ககுறதா உறுதி அளித்துள்ளார். மேற்கொண்டு அரசு பீகாக் மருத்துவமனை மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து என் மனைவிக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க உதவணும்” என்றார்.
அரசுஆஷாவுக்குதொடர்ந்துசிகிச்சைஅளிக்கஒப்புதல்: இது குறித்து, திருவள்ளூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் இளங்கோவிடம் பேசினோம், “பாதிக்கப்பட்டுள்ள ஆஷாவின் தரப்பிலிருந்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிரான புகார் மனுவைப் பெற்றிருக்கிறேன். மனுவின் மீதான நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளேன். அரசுத் தரப்பிலிருந்து அப்படி ஏதும் சுற்றறிக்கைகள் அனுப்பவில்லை. மருத்துவமனை நிர்வாகம் பொய்யான ஒரு கருத்தை பரப்பியிருப்பது முறையல்ல. மனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை வலியுறுத்தி இருக்கிறேன். உடனடியாக விசாரிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, “ஆஷா எங்கள் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு நாங்கள்தான் சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனால், தற்போது நோய்த் தொற்று பரவலின் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நோய் பாதிப்பு இருக்கலாம். எனவே, அவர்கள் குறித்து அரசுக்குத் தகவல் தெரிவித்து அரசு சிகிச்சையளிக்க ஒப்புதல் அளித்தால் மட்டுமே மேற்கொண்டு சிகிச்சை அளிக்கிறோம். அதன் அடிப்படையில்தான் அவர்களுக்கும் கூறினோம்[5]. ஆனால், இப்போது அரசு ஆஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதால், நாங்கள் ஆஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கத் தயாராகவே இருக்கிறோம்” என்று கூறி சமாளித்தனர்[6].
முஸ்லிம்நகரில்வெறிபிடித்தநாய்கள்கடித்தது: திருத்தணி அருகே ஒரே நாளில் 20 சிறுவர்களை வெறி நாய்கள் துரத்திக் கடித்தன. திருத்தணி ஒன்றியம், வீரகநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்டது இஸ்லாம் நகர். இங்கு, 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இங்கு அரசினர் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், இஸ்லாம் நகர் பகுதியில் வெறி நாய்கள் கடந்த இரு நாள்களாக சுற்றி திரிந்தன. புதன்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவ-மாணவியர் மற்றும் தெருவில் விளையாடிய சிறுவர்களை வெறி நாய்கள் துரத்திக் கடித்துள்ளன. இதில், ஆதீரா(7), சலீம்(6), மஸ்தான்(11), பாய்ஸ் (11), சலீம்முல்லா(12), முகமது அலி (3), ஆயிஷா (7), பாத்திமா (10) உள்பட 18 மாணவ-மாணவிகள், பாஷா பாய் (32) காதர்பாஷா(56) ஆகிய இருவர் என மொத்தம், 20 பேரை வெறி நாய்கள் கடித்து குதறியுள்ளன[7]. இதில் காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வெறி நாய்கள் தொடர்ந்து இஸ்லாம் நகரில் சுற்றித்திரிவதால், புதன்கிழமை பள்ளிக்குச் சென்ற மாணவ-மாணவிகள் தங்களது கைகளில் கம்புடன் சென்றனர். அதே போல் மாலையும் கம்புகளுடன் வீட்டுக்குத் திரும்பினர். வெறி நாய்களைப் பிடிக்க வேண்டும் என ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இஸ்லாம் நகர் மக்கள் கூறுகின்றனர்[8]. எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து, இஸ்லாம் நகரில் சுற்றித்திரியும் வெறி நாய்களைப் பிடித்து காட்டில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி : வீரகநல்லுார்ஊராட்சியில், 28 நாட்களாகபோடப்பட்டிருந்தசோதனைச்சாவடிஅகற்றப்பட்டது: திருத்தணி ஒன்றியம், வீரகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட இஸ்லாம் நகரில் வசிக்கும், 59 இஸ்லாமியர்கள் சாணை பிடிக்கும் தொழிலுக்காக, மார்ச் மாதம், கேரளாவுக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்தனர்.இதையடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, இஸ்லாம் நகர் பகுதியில் வசித்த, 59 குடும்பத்தினரை தனிமைப்படுத்தினர்.மேலும், வெளியாட்கள் யாரும் செல்லாதவாறு வருவாய் துறை மற்றும் சுகாதார துறையின் சார்பில், நுழைவு வாயிலில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், தனிமைப்பட்டவர்களுக்கு, 28 நாட்கள் முடிந்ததைத் தொடர்ந்து, மருத்துவக் குழுவினர், இஸ்லாம் நகர் முழுதும் வீடு வீடாகச் சென்று, வைரஸ் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என, உறுதி செய்யப்பட்டது [9]. அதை தொடர்ந்து, திருத்தணி கோட்டாட்சியர் சொர்ணம் அமுதா உத்தரவின்படி, இஸ்லாம் நகர் சுற்றிலும் மூடப்பட்ட எல்லைகள் மற்றும் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டன[10].
முஸ்லிம்கள் இவ்வாறு தனிடயாக சேர்ந்து, இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர் என்றெல்லாம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
எல்லோரையும் போல, சேர்ந்து இல்லாமல், இவ்வாறு தனித்திருக்க வேண்டிய, தம்மைத் தனித்துக் காட்டிக் கொள்ளக் கூடிய போக்கு தான் தெரிகிறது.
இவ்வாறு செய்வதால் தான் மற்றவர்களுக்கு, நிச்சயமாக மனங்களில் சந்தேகம், அச்சம், பீதி, கலவரம் முதலியவை வருகின்றன.
இந்த கொரோனா காலத்தில், யாரிடத்தில் தொற்று உள்ளது, இல்லை குடும்பத்தில் உள்ளது என்றெல்லாம் யாருக்கும் தெரியாது.
முஸ்லிம்கள் இல்லாதவர்களே தனிமைப் படுத்திக் கொண்டு வாழும் தனிமனிதர்கள், குடும்பங்கள் இருக்கின்றன.
ஆகவே, இங்கு “முஸ்லிம்” என்ற பிரச்சினையை கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை.
சிகிச்சைப் பொறுத்த வரையில், இருதரப்பிலுமுள்ள விவகாரங்கள் வேறுவிதமாக இருக்கின்றன.
செக்யூலரிஸம் என்றபோது, எல்லா வழிகளிலும் அது கடைபிடிக்கப் படவேண்டும்.
2020 ரம்ஜான் மாறுபட்டதாக இருக்கிறது: கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் மே3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது[1]. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க, அங்காடிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது[2] என்று நியூஸ்.தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில், ரம்ஜானுக்கு இலவசமாகத்தான் அரசு அர்சி டன் டன்னாக கொடுத்து வருகிறது.. இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது[3]. இதில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்[4]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சண்முகம், “5450 மெட்ரிக்டன்பச்சரிசி 2895 பள்ளிவாசல்களுக்குவழங்கப்படும்,” என்றார். இவை வரும் 19ஆம் தேதிக்குள் [இஸ்லாமிய] தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கப்படும் என்றும், இதனை இயலாதவர்களுக்கு பள்ளிவாசல்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்[5]. மேலும் வீட்டிலேயே தொழுகை நடத்துவது, வீட்டிலேயே நோன்பு கஞ்சி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்[6].
அரசு தலைமை காஜியை வைத்து விவகாரத்தை முடிக்க ஆலோசனை கூட்டம் நடதியது: இதனிடையே இது போன்ற விவகாரங்கள் முடிவெடுக்கும் போது இஸ்லாமிய கட்சிகள் அமைப்புகளின் தலைவர்களை அழைத்து தான் தலைமைச் செயலாளர் ஆலோசித்து முடிவை அறிவிப்பார்[7]. ஆனால் இன்று தமிழ்நாடு அரசு தலைமை காஜியை அழைத்து அவருடன் மட்டும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது[8] என்கிறது இன்னொரு ஊடகம். ஏனெனில், துலுக்க இயக்கத்தினர், இதுவரை, “கொரோனா பிரச்சினை” வரும் வரை, அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. உண்மையில் கஞ்சி காய்ச்சுவது மசூதியிலா, விட்டிலா என்பதை எல்லாம் தீர்மானிப்பது, துலுக்கரின் வேலையே தவிர அரசின் வேலை கிடையாது. ஆனால், இம்முறை கரோனா அச்சுருத்தல், அனைவரையும் பீடித்துள்ளது. தப்லிக் விவகாரத்தினால், துலுக்கர் பலர், தொற்றினால் பீடித்துள்ளனர். அதனால், குடும்பங்கள், வீதிகள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. அந்நிலையில், யார் கஞ்சி காய்ச்சுவது, யாருக்குக் கொடுப்பது, குடித்தால் என்னாகும் போன்ற கேள்விகள் எழுந்து அச்சுருத்தத் தொடங்கி விட்டன. இது அவரளுக்குள்ளேயே பிரச்சினையாகி உள்ளது.
ரேசனில் மோசமான அரிசி, ரம்ஜான் கஞ்சிக்கு பச்சரசி: ரமலான் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் பச்சரிசி இந்த ஆண்டும் வழங்கப்படும்[9]. ரேசனில் மோசமான அரிசி விநியோகித்தது இங்கு ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். ஆனாலும் பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சக்கூடாது என தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்[10]. இந்த ஆண்டு ரமலான் நோன்பு ஏப்ரல் 25 அன்று தொடங்க உள்ளது[11]. ஆனால், கொரோனா பீதி காரணமாகப் பள்ளிவாசல்களில் ரமலான் தொழுகை நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது[12]. அதாவது, ரம்ஜான் நேரத்தில், துலுக்கர் ஒன்றாக வந்து, கஞ்சி காய்ச்சி உண்ணும் நிலையில், கரோனா விதிமுறைகள் பின்பற்ற முடியாமல் போகும். அதனால், பிரச்சினை ஏற்படும். அதனால், ரமலான் நோன்பு வருவதை ஒட்டி நோன்புக் கஞ்சி காய்ச்ச தமிழக அரசு அரிசியை வழங்குவது, ரமலான் நோன்பை எதிர்கொள்வது, தொழுகை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இஸ்லாமியத் தலைவர்கள், தலைமை காஜி உள்ளிட்டோருடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
5,450 டன்பச்சரிசியை 2,895 பள்ளிவாசல்களுக்குவழங்கிவருகிறோம்: பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: “5,450 டன்பச்சரிசியை 2,895 பள்ளிவாசல்களுக்குவழங்கிவருகிறோம். இதைஇந்தஆண்டுகரோனாதொற்று, ஊரடங்குஉத்தரவினைக்கருத்தில்கொண்டுஅரிசியைஎப்படிவழங்குவதுபள்ளிவாசல்கள்எப்படிப்பயன்படுத்துவதுஎன்பதுகுறித்துஇஸ்லாமியத்தலைவர்களிடம்ஆலோசனைநடத்தினோம். இன்றும்இஸ்லாமியசமயத்தலைவர்கள், சட்டப்பேரவைஉறுப்பினர்களின்ஆலோசனைகளைக்கேட்டுஆலோசனைசெய்துஅதன்படிசிலமுடிவுகள்எடுக்கப்பட்டுள்ளன. அதன்படிநோன்புக்கஞ்சிகாய்ச்சபள்ளிவாசல்களுக்குவழங்கப்படும்அரிசி 19-ம்தேதிக்குள்நேரடியாகவழங்கப்படும். அதைசிறு, சிறுபைகளாகபிரித்துதன்னார்வலர்கள்மூலம்அந்தக்குடும்பங்கள்இருக்கும்வீடுகளுக்குவழங்கமுடிவெடுக்கப்பட்டது.
கஞ்சியாக கொடுப்போம் என்று அடம் பிடித்த துலுக்கர்: செயலர் தொடர்ந்தார், “இதைக்கஞ்சியாகதயாரித்துவழங்கிவிடுகிறோமேஎனஇஸ்லாமியர்கள்தரப்பில்கோரிக்கைவைக்கப்பட்டது. கஞ்சிதயாரித்துவழங்குவதுஎன்பதுதினந்தோறும்கஞ்சியைத்தயாரித்துஅதைத்தன்னார்வலர்கள்வீடுநோக்கிச்சென்றுகொடுப்பது. அப்படிச்செய்தால்பாத்திரங்கள்பயன்பாடுகாரணமாகசமூகவிலகலைக்கடைப்பிடிக்கமுடியாது. நோய்த்தொற்றுவரக்காரணமாகஅமையும். ஆகவேஅதுகூடாதுஎனமுடிவெடுக்கப்பட்டது[13].ஆகவே 5,450 டன்பச்சரிசிவழக்கம்போல்பள்ளிவாசல்களுக்குவழங்கப்படும். அதை 22-ம்தேதிக்குள்வீடுகளுக்குதன்னார்வலர்கள்கொண்டுசேர்த்துவிடுவார்கள். தனிமைப்படுத்தப்பட்ட, குவாரண்டைன்பகுதிகளில்என்னவழிவகைகளைப்பின்பற்றிஅளிக்கப்படுகிறதோஅதைஅப்படியேபின்பற்றிதன்னார்வலர்கள்ஹாட்ஸ்பாட்பகுதிகளில்கொண்டுசேர்ப்பார்கள்[14]. சிறப்புத்தொழுகைபற்றிமுடிவெடுக்கவேண்டியதுஅவர்கள்மதம்சார்ந்தபிரச்சினை. அதைஅவர்கள்மதம்சார்ந்ததலைவர்கள்அறிவிப்பார்கள். ஏற்கெனவேவீடுகளில்தொழுகைஎனமுடிவெடுத்துவிட்டார்கள். அதனால்பிரச்சினைஇல்லை,” இவ்வாறு தலைமைச் செயலர் சண்முகம் பேட்டி அளித்தார்.
ஈரோட்டில்தனித்தனியாககஞ்சி: ஈரோடு மாவட்ட, அரசு ஹாஜி முகம்மது கிபாயதுல்லா, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்[15]. அதில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனாதடுப்புநடவடிக்கைகாரணமாக, சமூகஇடைவெளியைநடைமுறைப்படுத்திவருகிறோம். ரம்ஜான்நோன்புகஞ்சிதயாரிப்பதற்காகஅரசால்வழங்கப்படும்அரிசி, எங்களுக்குஅத்தியாவசியமாகதேவைப்படுகிறது. எனவே, தமிழகஅரசால்வழங்கப்படும்அரிசியை, நாங்களேஜமாஅத்மூலமாகவீடுகளுக்குவினியோகம்செய்துவிடுகிறோம். அல்லதுநாங்களே, நோன்புகஞ்சிதயாரித்துவீடுகளுக்குஅனுப்பி, மக்கள்மசூதிகளுக்குவருவதைதவிர்த்துவிடுகிறோம். எனவே, ரம்ஜான்நோன்புக்காகவழங்கும்அரிசியைஎங்களுக்குவழங்கவேண்டும்,” இவ்வாறு கடிதத்தில் கோரியுள்ளார்[16]. ஈரோட்டில், கொரோனா பிரச்சினை தீவிரமாக உள்ளது என்பது அறிந்ததே. பெருந்துறை ஆஸ்பத்திரியில், தொற்றுடன் இன்னும் பீடித்துள்ளவர்கள் இருக்கிறார்கள்.
[3] தினத்தந்தி, ரமலான்நோன்புக்கானஅரிசிவழங்குவதுகுறித்துஆலோசனை – இஸ்லாமியதலைவர்களுடன்பேச்சுவார்த்தைநடத்தியபின்அறிவிப்பு, பதிவு : ஏப்ரல் 17, 2020, 08:00 AM
[7] தமிழ்.ஒன்.இந்தியா, பள்ளிவாசல்களில்நோன்புக்கஞ்சிதயாரிக்கஅனுமதிமறுப்பு… வீடுகளுக்குபச்சரிசியைவிநியோகிக்கமுடிவு, By Arsath Kan | Published: Thursday, April 16, 2020, 20:21 [IST]
2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில் தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?
23 இஸ்லாமியஅமைப்புகள்மற்றும்அரசியல்கட்சிகள்கூட்டமைப்பினர்ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்: கூட்டத்தில் கீழ்கண்டவர் கலந்து கொண்டு பேசினர். 23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[1].
மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா,
எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி,
மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.முகம்மது இஸ்மாயில்,
ஐ.என்.டி.ஜெ. தலைவர் எஸ்.எம்.பாக்கர்,
மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக்,
இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அகமது,
ஜம்மியத் உலமாயே ஹிந்து தலைவர் மன்சூர் காஸிபி,
வெல்பேர் பார்ட்டி தலைவர் எஸ்.என்.சிக்கந்தர்,
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஷப்பீர் அகமது,
முஸ்லிம் லீக் தலைவர் பாத்திமா முஸப்பர்,
இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகம்மது கான் பாக்கவி
இப்படி, முஸ்லிம் அல்லாத இயக்கங்கள், பொட்டு வைத்த பெண்கள் முதலியோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளது வியப்பாக உள்ளது. உண்மையிலேயே அவர்கள் விசயம் அறிந்து கலந்து கொண்டுள்ளனரா அல்லது தமிழகத்திற்கே உரிய “கூட்டம் சேர்க்கும்” முறையில் கலந்து கொண்டார்களா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.
அரசியல்நிர்ணயசட்டம்பிரிவு 25ன்கீழுள்ளஉரிமைகள்: தாங்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றி புலன் விசாரணை மேற்கொள்வதில் தலையிடுவதில்லை என்றாலும், தீவிரவாதத்திற்கும், அவருக்கும் தொடர்பிருப்பது போன்று சித்தரிப்பதை எதிர்ப்பதாக கூறினர்[2]. அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றும், அதனை அரசு தடுக்கக் கூடாது என்றும் ஆர்பாட்டம் செய்தனர்[3]. மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா அரசுகளை எதிர்த்து பலவித கோஷங்களை எழுப்பினர்[4]. பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றாலும், அவை மற்றவர்களின் உரிமைகளை மீறக்கூடாது, பொது அமைதியை பாதிக்கக்கூடாது என்றெல்லாம் கூட உள்ளன. அவற்றை மறந்து, மறைத்து, மறுத்து ஆர்பாட்டம் செய்வது வேடிக்கைதான்.
தமிழ்நாடுதவ்ஹீத்ஜாமாஅத்ஆர்பாட்டத்தைஅறிவித்து, பிறகுநிறுத்துக்கொண்டது: முன்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் பட்டுக்கோட்டையில், “ஜாகிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க சதி செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து”ம் மற்றும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக போராட்டம் என்று அறிவித்தது[5]. பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜாகிர் நாயக்-கிற்கு ஆதரவாக நடைபெற இருந்த அனைத்து மாவட்ட ஆர்ப்பாட்டங்களும் ரத்து என்று அறிவித்தது. ஜாகிர் நாயக்கை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மும்பை காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த அனைத்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் ரத்து செய்யப்பபடுகிறது என்றது[6]. அதாவது ஒதுங்கவில்லை, ஜாகிர் நாயக்கே அடுத்த ஆண்டுதான் இந்தியாவுக்கு வரப்போகிறார் எனும்போது, இப்பொழுது என்ன ஆர்பாட்டம் வேண்டியிருக்கிறது, “வேஸ்ட்” தான் என்று தீர்மானித்திருக்கும். ஆனால், மற்ற கூட்டத்தினர் அவ்வாறில்லை, அவர்களுக்கு “மோடியை” எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. கேரளா, காஷ்மீர், பங்களாதேசம், பாரீஸ், துருக்கி…..என்று எங்கு என்ன நடந்தாலும் அவர்களுக்குக் கவலை இல்லை, எப்படியாவது “மோடியை” தாக்க வேண்டும்.
2009ல்ஜாகிர்நாயக்கைஎதிர்த்தவர்கள்இப்பொழுது – 2016ல்ஆதரிப்பதேன்? (ப்ழையகட்டுரையிலிருந்து): பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதே நேரத்தில் சிலர் ஆதரித்து, நாயக்கின் கூட்டங்களை எடெற்பாடு செய்தனர். இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது[7]:
இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று, இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள், இன்ஷா அல்லாஹ், வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில், மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது. (ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.
எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM
சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்!
ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்! மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!
ஒன்றும் புரியவில்லையே?
கேரள ஐஎஸ் தொடர்புகள், லவ்-ஜிஹாத், வேலைவாய்ப்பு போர்வையில் ஆட்சேர்ப்பு – யுத்தபூமியை நோக்கி பயணம்!
முதலமைச்சர் ஒப்புக் கொண்டார்: சட்டசபையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன்[1], “காசர்கோடில் இருந்து 17 பேரும், பாலக்காட்டில் இருந்து 4 பேரும் மாயமாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாயமானவர்களில் காசர்கோட்டில் இருந்து 4 பெண்கள், 3 குழந்தைகளும், பாலக்காட்டில் இருந்து 2 பெண்களும் அடங்குவர். பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்தார். ஊடகங்களில் வெளியான தகவலின்படி இவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர். மும்பை விமான நிலையத்தில் காத்திருந்த காசர்கோடு பகுதியை சேர்ந்த பிரோஸ் என்பவர் அண்மையில் கைதாகியுள்ளார். 10-07-2016 அன்று மும்பையில் பெரோஸ் கான் என்பவன் கைது செய்யப்பட்டதிலிருந்து, கேரள இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது[2].
ஒட்டுமொத்தமுஸ்லிம்சமூகத்தையும்சந்தேககண்ணோடுபார்க்கும்நிலையும்உருவாகிவருகிறது: கேரள இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவது தொடர்பான விவகாரத்தை அரசு மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது[3]. மத்திய அரசின் ஆதரவுடன் இதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்தவொரு தீவிரவாத நடவடிக்கையையும் அரசு பொறுத்துக் கொள்ளாது. நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் அரசியல் ஆதாயத்துக்காக இந்த விவகாரத்தை பெரிது படுத்தவும் அனுமதிக்க மாட்டோம். இப்பிரச்சினையால் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான மனோபாவம் வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவாகி வருகிறது. ஒரு சிலர் வேண்டுமென்றே மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். கேரளாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எந்தவொரு தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஏற்க மாட்டார்கள். வெறும் அரசால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றாக கைகோர்த்தால் மட்டுமே தீய சக்திகளை தனிமைப்படுத்தி களையெடுக்க முடியும்”, என்று சட்டசபையில் பேசியுள்ளார்[4]. கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரையில், இது அவர்களே வளர்த்து விட்ட விவகாரம் ஆகும். அரசியல் மற்றும் இதர சம்பந்தங்களை தாராளமாக வைத்துக் கொண்டு அனுபவித்து வருகின்றனர்.
ஜிஹாதிகள் பெற்றோர்களையும், ஏன் குடும்பத்தையே தீவிரவாதிகளாக்க முயற்சிப்பது: கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காட்டை சேர்ந்த 16 பேர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திடீரென மாயமானார்கள். இவர்களில் 4 பெண்களும் 2 குழந்தைகளும் உண்டு. இவர்கள் இலங்கை மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். இதன்பிறகு கடந்த ஒரு மாதமாகியும் இவர்களை பற்றிய எந்த தகவலும் வரவில்லை. இந்நிலையில் காணாமல் போன ஹபீசுதீன் என்பவரின் மனைவி செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. அந்த செய்தியில், “நாங்கள்சொர்க்கராஜ்ஜியத்திற்குவந்துவிட்டோம். இனிஎங்களைதேடவேண்டாம். நாங்கள்இஸ்லாமியநாட்டிற்குவந்துவிட்டோம். இங்குநிரபராதிகளைஅமெரிக்காகொன்றுகுவிக்கிறது. எனவேஅவர்களைபழிவாங்குவதற்காகஐஎஸ்அமைப்புக்காகநாங்கள்எங்களைஅர்ப்பணித்துவிட்டோம். இதுகுறித்துபெற்றோரிடம்கூறிபுரியவைக்கவேண்டும். அவர்களையும்ஐஎஸ்அமைப்பிற்குஅழைத்துகொண்டுவரவேண்டும்”, என்று குறிப்பிடப்பட்டிருந்தது[5]. அதாவது, குடும்பத்தையே தீவிரவாதிகளாக்க திட்டம் இருப்பது வெளிப்படுகிறது. மேலும், இது கேரளாவிலிருந்து தீவிரவாதிகளாக்க ஏற்றுமதி நடக்கிறது எனலாம். முன்பு கன்னியாஸ்த்ரிக்கள், நர்ஸுகள் மாதிரி, இப்பொழுது இவர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள்.
தீவிரவாதியின் தகவல் படித்து திகைத்துப் போன மனைவி: இதை பார்த்து ஹபீசுதீனின் மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து கணவரின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் காசர்கோடு எம்பி கருணாகரன், எம்எல்ஏ ராஜகோபாலன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனிடமும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக விசாரணை நடத்த கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவுக்கு முதல்வர் உத்தரவிட்டார். உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காசர்கோடு மாவட்டம் திருக்கரிப்பூரை சேர்ந்த டாக்டர் இஜாஸ் என்பவர் தலைமையில் 16 பேரும் சிரியாவுக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது[6]. காசர்கோடில் உள்ள அப்துல் ரஸீத் (29) அப்துல்லா [Abdul Rasheed] என்பவன் அப்துல்லாவின் மகன் [Abdulla] இவர்களை இவ்வழிக்கு இழுத்துள்ளான் என்று தெரிகிறது[7]. இவன் பெங்களுரில் இஞ்சினியரிங் படித்து மும்பைக்கு வியாபாரம் நிமித்தம் சென்று வருகிறான்[8]. ஈஸா மற்றும் யாஹியாவின் தந்தை வின்சென்ட், தன்னுடைய மகள்கள் ஜாகிர் நாயக்கின் பிரச்சாரத்தால் கவரப்பட்டார்கள் என்கிறார்[9].
தமிழகத்தின் மீதான தாக்கம்: கேரளாவில் இருந்து ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்கள், தமிழக எல்லையில் உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் தமிழகத்தில் இருந்து யாரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்க, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை காவல் துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படுபவர்களில் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகுதியைச் சேர்ந்த பிடிஎஸ் மாணவி நிமிஷா என்ற பாத்திமாவும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. இவரது தாய் பிந்து. தனது மகளும் ஐஎஸ்சில் சேர்ந்ததாக நேற்று பத்திரிகைகளில் தகவல் வந்த பிறகுதான் அவருக்கு இது தெரியவந்துள்ளது. இதுபோல் கொச்சியை சேர்ந்த ஒரு பெண்ணும் ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமாணவிகளை குறிவைத்து காதலித்து திருமணம் செய்வதோடு அவர்களை ஐ.எஸ் அமைப்பில் இணைத்து விடுகின்றனர்.
மத்திய அரசின் விசாரணை: இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உளவுத்துறையான ரா அதிகாரிகள் கேரளா வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர்கள் காசர்கோட்டிலும் மங்களூரிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூரில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் அமைப்பு செயல்படுவதாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. சிறப்பு புலனாய்வு குழுவினரால் “ஐஎஸ்சில் சேர்ந்தவர்கள்”, அவர்களது உறவினர்கள் முதலியோரது தொலைபேசி-அலைபேசி விவரங்கள் ஆராயப்படுகின்றன[10]. இதன் மூலம், இறுதியாக அவர்கள் எங்கிருந்து யாருடன் தொடர்பு கொண்டார்கள் என்று தெரிய வரும்[11].
[2] Firoz Khan, a 24-year-old from Trikaripur in Kerala’s Kasargod district, was arrested yesterday (10-07-2016) evening by officers of the Intelligence Bureau from Mumbai. He was nabbed from a hotel in Dongri in Mumbai. Firoz had left for Mumbai on June 22 on the pretext of going to Kerala’s Kozhikode city. A phone call Firoz made to inform his family about his whereabouts is what trapped him. During the call, he said some others who went missing from his village have reached IS camps in Syria, says a Manorama report.
[3] தி.இந்து, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த விவகாரம்: கேரள மாநிலத்தில் இருந்து 6 பெண்கள் உட்பட 21 பேர் மாயம் – சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தகவல், Published: July 12, 2016 09:49 ISTUpdated: July 12, 2016 10:02 IST.
ஶ்ரீரவிசங்கர் – ஜாகிர்நாயக்உரையாடல்தான்: ஜாகிர் நாயக்குக்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கும் இடையே இஸ்லாமியம் மற்றும் இந்து மதம் கடவுள் கருத்து பற்றி விவாதம் பெங்களூரில் 21 ஜனவரி 2006 அன்று நடைபெற்றது. இவரைப் போல, கட்டிப் பிடித்துக் கொண்டு பாராட்டவில்லை. இரு மதங்கள் பற்றி, இருவரும் அலசினர், ஆனால், எந்த முடிவுக்கும் வரவில்லை. மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று தேசிய புலனாய்வு முகமை சமீபத்தில் விசாரணை கோர்ட்டில் தெரிவித்தது. இதன் காரணமாக சாத்வி பிரக்யா தாக்குர் விடுவிக்கப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது. உண்மையில், காங்கிரஸ் அரசு, “காவி பயங்கரவாதம்” என்று சொல்லி அதனை மெய்பிக்க இவ்வாறான, பொய்யான வழக்குகளை போட்டன என்று தெரியவரும் நிலையில், இத்தகைய பேச்சுகள் வெளிவருகின்றான என்பதனை கவனிக்க வேண்டும்.
“பீஸ்–டிவி” / அமைதிதொலைக்காட்சிவளர்ந்தவிதம்: மும்பையில் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான “பீஸ் டிவி” என்ற செனலை, கேபிள் நெட்வொர்க்கில் பரப்பாபட்டு வருகிறது. அதில் தான், நாயக் சர்ச்சைக்குரிய போதனைகளை செய்து வருகிறார். இதற்கு பல நாடுகளிலிருந்து பணம் நன்கொடையாக வந்து கொண்டிருக்கிறது. அதற்கு அரசு அனுமதி அளித்து வருகிறது. அதாவது, இது காங்கிரஸ்-பாஜக அரசுகளுக்கு தெரிந்தே நடந்து வருகிறது. அப்பொழுது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊடகங்களும் அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, இப்பொழுது, ஏதோ தாங்கள் புதியதாக கண்டுபிடித்து விட்டதைப் போன்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டன. இதனால், மஹாராஷ்ட்ர அரசு நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது[1]. இப்பொழுது, இப்பிரச்சினை வெளிவந்தவுடன், “ஜாகிர் நாயக் பேச்சு குறித்த அனைத்து சிடிக்களையும் பெற்று, ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்யும்படி மும்பை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன்[2]. அவரது முகநூல் உட்பட சமூக வலைத்தள பக்கங்கள் போலீஸ் உதவியுடன் காண்காணிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது” என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார்[3].
குற்றச்சாட்டைமறுக்கும்ஜாகிர்நாயக்[4]: தன் மீது குற்றஞ்சாட்டப் பட்டு வருகிறது என்பதனை உணர்ந்த ஜாகிர், தன்னைக் காத்துக் கொள்ள முயன்றார். இஸ்லாமிய நாடான பங்களாதேசம் தீவிரவாதிகள் தன்னால் ஊக்குவிக்கப்பட்டார் என்றதும் உசாரானார். இதனால், தன் மீதான குற்றச் சாட்டுகளை மறுத்துள்ள ஜாகீர் நாயக், “தீவிரவாதத்தைநான்அடியோடுவெறுக்கிறேன். முஸ்லீம்அல்லதுமுஸ்லீம்அல்லாதமக்களைகொலைசெய்யும்படிநான்யாரிடமும்கூறவில்லை. என்மீதானகுற்றச்சாட்டுகள்எனக்குஅதிர்ச்சியளிக்கிறது,” என்றார்[5]. நிலைமை மோசமாகி, தன்னுடைய அடிப்படைவாத-தீவிரவாத ஆதரவு வெளிப்பட்டு விட்டதால், மேலும், “எனக்கும்வங்கதேசதாக்குதலுக்கும்எவ்விததொர்பும்இல்லை. மீடியாக்கள்தவறாகசித்தரிக்கின்றன. டாக்காதாக்குதலுக்குநான்பொறுப்பல்ல”, என மும்பையை சேர்ந்த ஜாகீர் நாயக் கூற ஆரம்பித்துவிட்டார்[6]. மெக்காவிலிருந்து, காணொலியில் பேசி, அவ்வாறு சொன்னதாக செய்திகள் வெளிவந்துள்ளன[7].
யார்இந்தகாஜிர்நாயக்?: அப்துல் கரீம் நாயக் Zakir Naik (1965 அக்டோபர் 18 இல் பிறந்தவர்) பிரபல இஸ்லாமிய மதபோதகர், அறிஞர், சர்வதேச சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் ஆவார் என்று புகழ்ந்து தள்ளுகிறது தமிழ்-விகிமீடியா[8]. அவர் தற்போது இந்தியாவில் பீஸ் டிவி எனும் தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்[9]. இஸ்லாமிய பொது பேச்சாளர் ஆவதற்கு முன்பு அவர் ஒரு மருத்துவரும் ஆவார். மும்பை, மகாராஷ்டிரா, இந்தியாவில் 18 அக்டோபர் 1965 பிறந்த சாகிர் நாயக் மும்பை புனித பீட்டர் உயர்நிலை கல்லூரியிலும் பின்னர் மும்பை பல்கலைக்கழகதில் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1991 ஆம் ஆண்டில் அவர் ஐ அர் எப் எனும் நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் இசுலாமிய அழைப்பு பணியை ஆரம்பித்தார்[10]. சாகிர் நாயக் 1991ம் ஆண்டின் பின்னர் தனது இசுலாமிய ஆராய்ச்சி மூலம் திரிபுவாதங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். இவர் குரான், இந்துமத வேதங்கள், கிறித்துவ, பைபிள்கள் மற்றும் பல புத்தகங்களையும் படித்து மனப்பாடம் செய்து, அத்தகைய விளக்கங்களைக் கொடுத்து வந்தார். செப்டம்பர் 2001 முதல் ஜூலை 2002 வரை கடும் எதிர்ப்பில் அமெரிக்கவில் இசுலாமிய மதப் பிரச்சாரம் செய்து 34,000 அமெரிக்கர்களை இஸ்லாமிய மதத்தினுள் கொண்டு வந்தார்[11] என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், முஸ்லிம்கள் ஏன் அமெரிக்காவில் 11/9 தீவிரவாதத்தை செய்தனர் என்று விளக்கவில்லை. மாறாக, ஒசாமா பின் லேடனை புகழ்ந்து பேசுவது தான், பழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தியாவின் இசுலாமிய இதழான இஸ்லாமிய குரல்பத்திரிகையில் அவரது கட்டுரை சில வெளி வந்துள்ளன[12].
ஜாகிர்நாயக்கின்பொன்மொழிகள்தீவிரவாதியின்குரூரமனப்பாங்கைக்காட்டுகிறது[13]: ஜாகிர் நாயக்கின் “பொன் மொழிகள்” என்று வீடியோக்கள், இணைதளங்களில் குறிப்பட்டப்பட்டுள்ளது. அவற்றைப் படித்துப் பார்த்தால், தலிபான், அல்-குவைதா போன்ற தீவிரவாதிகள் சொன்னதற்கும், இந்த ஆள் சொல்வதற்கும், எந்த வித்தியாசமும் இல்லை என்று தெரிகிறது. அவற்றில் சில, பின்வருமாறு[14]:
அவர்களது மதம் தவறானது மற்றும் அவர்கள் வழிபடுவதும் தப்பானது எனும்போது, அவர்களது நாம் எப்படி இஸ்லாமிய நாடுகளில் சர்ச்சுகள், கோவில்கள் கட்டப்படுவதற்கு அனுமதிக்கலாம்?
முன்றாம் பாலினர் முதலியோர் பாவமான மனநோயாயால் பீடிக்கப்பட்டுள்ளனர், அது ஹராம் ஆகும். ஏனெனில், அவர்கள் டிவி-செனல்களில் போர்னோகிராபி படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனால், அத்தொலைக்காட்சிகளை தடை செய்ய வேண்டும்.
குரானில் பல அயத்துகள் சொல்வதாவது, “நீ உன் மனைவியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், பிறகு, வலது கையில் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம்”! அதாவது, நான்கு மனைவிகளைத் தவிர, பெண்ணடிமைகளையும் செக்ஸுக்கு வைத்துக் கொள்ளலாம்.
“சார்லஸ் டார்வினின் “பரிணாம வளர்ச்சி சித்தாந்தம்”, சித்தாந்தம் தான், “பரிணாம வளர்ச்சி உண்மை” என்று டெந்த புத்தகமும் இல்லை” – இப்படி அதையும் மறுக்கிறார்.
ஒசாமா பின் லேடன், இஸ்லாத்தின் எதிரிகளோடு போராடுகிறார் என்றால், நான் அவரோடு இருக்கிறேன். அமெரிக்கா என்ற மிகப் பெரிய தீவிரவாதியை பயமுறுத்துகிறார் என்றால், நான் அவரை ஆதரிக்கிறேன். அதனால், எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும். அதாவது ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றிக் கொண்டு, தீவிரவாதியையே கதிகலங்கும் படி பயமுறுத்துகிறான் என்றால், தீவிரவாதியாக இருக்கலாம்.
சிறுமிகள், பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பக் கூடாது, ஏனெனில், அவர்கள் தேறி வெளியில் வருவதற்குள், அவர்களது கற்ப்பு, பறிபோயிருக்கும். அதனால் பள்ளிகள் மூடப்பட வேண்டும். அவர்கள் எந்த அணிகலன்களையும் அணியக்கூடாது.
[9]24-Hour Islamic Spiritual Edutainment International Satellite TV Channel
Telecasting ‘Free to Air’ state-of-the-art TV Programmes in English, Urdu, Bangla and Chinese.
Telecasting ‘Free to Air’ state-of-the-art TV Programmes in English, Urdu, Bangla and Chinese.
2. Backed by the Best available Media Technology, Creativity, Research, Programmes Softwares and
Operational Management.
3. Quest for Promoting truth, Justice, Morality, Harmony and Wisdom for the whole of Humankind.
4. Now can be received in more than 125 countries… in Asia, Middle East, Europe, Africa and Australia.
Shortly it would be telecast to the rest of the world too.
5. The TV programmes will feature internationally famous scholars and orators on religion and
humanity like:Dr Zakir Naik, India, Ahmed Deedat , South Africa, Salem Al Aamry, UAE, Assim Al Hakeem, Saudi Arabia, A. Rahim Green, UK, Hussain Yee, Malaysia, etc. http://www.irf.net/peacetv.html
[10] The Islamic Research Foundation (IRF), Mumbai, India, is a registered non-profit public charitable trust. It was established in February 1991. It promotes Islamic Da’wah – the proper presentation, understanding and appreciation of Islam, as well as removing misconceptions about Islam – amongst less aware Muslims and non-Muslims. IRF uses modern technology for its activities, where ever feasible. Its presentation of Islam reach millions of people worldwide through international satellite T.V. channels, cable T.V. networks, internet and the print media. IRF’s activities and facilities provide the much needed understanding about the truth and excellence of Islamic teachings – based on the glorious Qur’an and authentic Hadith, as well as adhering to reasons, logic and scientific facts. http://www.irf.net/
[11] Ghafour, P.K. Abdul. “New Muslims on the rise in US after Sept. 11”. Arab News. 3 November 2002.
ஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் கலவரம் ஏற்படுத்தும், நகரங்களைத் தாக்கும் தீவிரவாத வெளிப்பாடுகள்!
பிடிபட்டவர்களின்விவரங்கள்: இதையடுத்து, ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சிலர் கடந்த நான்கு மாதங்களாக ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தனர்[1]. சந்தேகம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த அதிரடி சோதனையும், கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்டவர்கள், சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஹைதராபாத் நகரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த இவர்கள் தயாராகி வந்துள்ளனர் என்றும். இதற்காக ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து அந்த இளைஞர்கள் பணம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த இந்த தீவிரவாதிகள், நாட்டிலுள்ள பிற தீவிரவாத அனுதாபிகளை மூளை சலவை செய்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது[2].
முகமது இப்ராஹிம் யாஷ்தானி [Mohammed Ibrahim Yazdani, 30],
உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடைபெற்றதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆறுபேர் பிடிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது[3].
முதல்வர்மீதுபாஜககுற்றச்சாட்டு: சிறுபான்மையினர் வாக்குவங்கியைக் கருத்தில் கொண்டு ஹைதராபாத் நகரை பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றிவிட்டதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர், ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சிறுபான்மையினரின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஹைதராபாத் நகரை பயங்கரவாதிகளின் புகலிடமாக முதல்வர் சந்திரசேகர ராவ் மாற்றிவிட்டார். பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்கிறார்கள் என்ற சந்தேகம் இருந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது. இதனால் தேசிய அளவில் ஹைதராபாத் நகருக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
பிடிபடும் தீவிரவாதிகள் முஸ்லிம்கள் என்றாலும், இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிப்பது இல்லை: முன்னர் தீவிரவாதம் விசயமாக, ஹைதராபாத் இளைஞர்கள் மாட்டிக் கொண்டதால், சில வழக்கமான அறிக்கைகள் விடப்பட்டன. ஹைதராபாத் முஸ்லிம் இளைஞர்கள் ஐஎஸ் போன்ற அமைப்புகளில் சேருவது, இங்கிருந்தே ஆன்-லைன் மூலம் வேலை செய்வது, வேலைக்கு ஆள் சேர்ப்பது போன்ற காரியங்கள் அதிகமாகி வந்ததால், முன்பே முஸ்லிம் இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அதனால், பதிலுக்கு 2014ல் ஜாமியா நிஜாமியா [Jamia Nizamia one of the oldest Islamic seminaries in south India] போன்ற இஸ்லாமிய நிறுவனங்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு “தீவிரவாதத்திற்கு ஐஎஸ் துணைபோகிறது, அதனால் அதற்கு இஸ்லாத்தில் இடம் இல்லை,” ஐஎஸ்போன்ற இயக்கங்களுடன் சேரக்கூடாது என்று எச்சரித்தது[4]. ஆனால், இளைஞர்களும் அத்தகைய வேலைகளில் சேர்வது நிற்கவில்லை, தீவிரவாத செயல்களும் நின்றபாடில்லை.
கலவரங்கள் ஏற்படுத்துவது மற்றும் தீவிரவாத திட்டங்கள் செயல்படுத்துவது: இவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது: இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணம் அதிக அளவில் கிடைத்து வருகிறது. அந்த பணத்தை வைத்து, இவர்கள் ஆயுதங்களை வாங்கியுள்ளனர். மேலும், வெடி குண்டு தயார் செய்யும் தொழில்நுட்பமும் இவர்களுக்கு தெரியும். பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களை வெடி குண்டு வைத்து தகர்க்க, இந்த அமைப்பினர் திட்ட மிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது[5]. இதற்காக, மூன்று குழுக்களாக பயங்கரவாதிகள் செயல்பட்டு வந்த தகவலும் வெளியாகியுள்ளது. அதனால், கைது செய்யப்பட்ட அனைவரையும், காவலில் எடுத்து விசாரிக்க, கோர்ட்டின் அனுமதி கோரப் பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், அவர்களை டில்லி அழைத் துச் சென்று விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டது. கோவிலில் மாட்டிறைச்சி…:என்.ஐ.ஏ., அதிகாரி கள் கூறியதாவது: ஐதராபாத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற பாக்கியலட்சுமி கோவிலில், மாட்டிறைச்சியை வைத்து, மிகப்பெரிய மதக் கலவரத்தை ஏற்படுத்த, இந்த அமைப்பினர் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் போன்ற பண்டிகைக் காலங்களில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், இதற்கு முன்பும் கலவரங்கள் நடந்துள் ளன. அதுபோலவே, இந்தாண்டும் கலவரத்தை ஏற்படுத்த, இவர்கள் திட்டமிட்டு இருந்தனர்[6]. ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் 25-06-2016 சனிக்கிழமை அன்று மாலை தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவல், அவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது[7].அதற்கு முன்னோட்டமாக ஹைதராபாத் நகரின் பல்வேறு முக்கிய பொதுஇடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன[8].
பிரஸ்ஸெல்ஸ் குண்டுவெடிப்பில் உபயோகப்படுத்தப் பட்ட ரசாயனப் பொருள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது: டிரையசிடோன் ட்ரிபராக்ஸைடு [ triacetone triperoxide (TATP)] ஹபீப் முஹமது இல்லத்திலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது[9]. பாரிசில் நடந்த குண்டுவெடிப்பில் இந்த ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தப்பட்டது. முகமது இப்ராஹிம் யஜ்தானி என்பவன் தான் ஹபீப் முகமதுவை தன்னில்லத்தில் இந்த குண்டை [ improvised explosive device (IED)] தயாரிக்கச் சொல்லியிருக்கிறான். அவனது வீட்டிலிருந்து ஆணிகள் முதலியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஷபி ஆர்மர் அல்லது யூசூப் அல்-ஹிந்தி [Shafi Armar alias Yousuf Al Hindi] என்பவன் தான் சிரியாவிலிருந்து இவர்களை கட்டுப்படுத்தியுள்ளான்[10]. வழக்கமாக, இவர்களின் பெற்றோர், தங்களது மகன்கள் அப்பாவி, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளனர். ஆனால், டிரையசிடோன் ட்ரிபராக்ஸைடு போன்ற ரசாயனப் பொருட்களை ஏன் வீட்டில் வைத்திருந்தனர் என்பதற்கு பதில் சொன்னதாகத் தெரியவில்லை. இன்டெர்நெட் சென்டரில் வேலை பார்க்கிறான் என்றால், ஐஎஸ்சுடன் ஏன் தொடர்பு வைத்துள்ளான் என்றும் விளக்கவில்லை. அவர்கள் அத்தகைய வேலைகளை செய்வதை தடுக்க வேண்டுமே, ஆனால், அதைப் பற்றியும் விளக்கவில்லை.
தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் நடத்திய சிறை நிரப்பும் போராட்டமும் (28-01-2014), ஆம் ஆத்மியின் தில்லி தெருக்களில் நடத்திய போராட்டமும் (22-01-2014 வரை)!
தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் நடத்திய சிறை நிரப்பும் போராட்டம்
“மைனாரிடி”களுக்கு “இடவொதிக்கீடு” நடக்கும் போட்டாபோட்டி: சச்சார் கமிஷன் அறிக்கைக்குப் பிறகு, முஸ்லிம்கள் “இடவொதிக்கீடு” விசயத்தில் தீவிரமாகியுள்ளனர். “மைனாரிடி” என்றாலே, “முஸ்லிம்கள்” என்ற நிலை போய், இப்பொழுது “ஜைனர்கள்” கூட “மைனாரிடி” அந்தஸ்த்தைக் கேட்டுள்ளனர். காங்கிரஸ் ஒப்புக் கொண்டு பரிந்துரைத்துள்ளது. இருப்பினும் நீதிமன்றங்களில் இதைப் பற்றிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல, மாநிலங்களில் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு “பிற்பட்டவர்” பட்டியிலில் “இடவொதிக்கீடு” கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எஸ்.சிக்கான “இடவொதிக்கீடிலிருந்து” கருணாநிதி 3.5% முஸ்லிம்கள் மற்ரும் கிருத்துவர்களுக்கு கொடுத்தார். இதை எதிர்த்தும் வழக்குகள் நிலுவையில் மற்ற மாநிலங்களில் உள்ளன.
முஸ்லிம்கள் போராட்டம் தாம்பரம் 28-01-2014..ஆட்டோவில் விளம்பரம்.
தவ்ஹீத்ஜமாஅத்சிறைநிரப்பும்போராட்டம்: இந்நிலையில், கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு கோரி நடத்தப்பட்ட சிறை நிரப்பும் போராட்டத்தில் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்[1] என்ற செய்திகள் வந்துள்ளன. கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு மத்தியில் 10 சதவீதமும், தமிழகத்தில் 7 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதை வலியுறுத்தி சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. விளம்பரங்கள் அளவிற்கு அதிகமாகவே செய்யப்பட்டது. சுவர்கள், சுவரொட்டிகள் என இருந்தன. அவர்களின் வாகனங்களில் கூட பதாகைகள் வைக்கப் பட்டன. பிரச்சாரமும் செய்யப்பட்டது.
முஸ்லிம்கள் போராட்டம் 28-01-2014.. வேனில் விளம்பரம்..
போராட்டத்திற்குஅனுமதிவழங்ககூடாதுஎன்றுசிலஇந்துஅமைப்புகள், போலீஸ்கமிஷனர்அலுவலகத்தில்புகார்அளித்தன: இந்த போராட்டத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே, போராட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று சில இந்து அமைப்புகள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தன[2]. என்று தினகரன் குறிப்பிட்டாலும், அனுமதி கொடுக்கப்பட்டதா அல்லது மறுக்கப் பட்டதா என்று குறிப்பிடவில்லை. சென்ற ஆண்டு, இதே பாணில்யில் பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்தார், “கிறிஸ்தவர், முஸ்லிம்உள்ளிட்டசிறுபான்மைமாணவர்களுக்குமத்தியஅரசுகல்விஉதவித்தொகைவழங்குகிறது. கடந்தஆண்டுதமிழகத்துக்குரூ.58 கோடிஒதுக்கப்பட்டது. இந்தகல்விஉதவித்தொகையைஏழைஇந்துமாணவர்களுக்கும்வழங்கவேண்டும். இதைவலியுறுத்திஜூலையில்போராட்டம்நடைபெறும். பெட்ரோல்விலைஉயர்வைதிரும்பபெறக்கோரியும்விலைவாசிஉயர்வைகட்டுப்படுத்தகோரியும்தமிழகபாஜசார்பில்வரும் 22ம்தேதிசிறைநிரப்பும்போராட்டம்நடைபெறுகிறது. புதுக்கோட்டைஇடைத்தேர்தலில்இந்தியஜனநாயககட்சிவேட்பாளர்கே.பி.என்.சீனிவாசனைஆதரிக்கிறோம். சென்னைமருத்துவக்கல்லூரியில்பயிற்சிடாக்டரைதாக்கியவர்களைஉடனேகைதுசெய்யவேண்டும். தேர்தல்ஆணையரைநியமிக்ககுழுவேண்டும்என்றுஅத்வானிகூறியகருத்தைதிமுகதலைவர்கருணாநிதிவரவேற்றுள்ளதைபாராட்டுகிறேன்”, என்றார்[3]. ஆனால், என்னவாயிற்று என்று தெரியவில்லை.
முஸ்லிம்கள் போராட்டம் நெல்லை 28-01-2014..சுவர் விளம்பரம்
தமிழகத்தில் முஸ்லிம்கள் நடத்திய ஆர்பாட்டம் (28-01-2014): முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (28-01-2014) போராட்டம் நடத்தினர். இதில் சுமார் 62 ஆயிரம் பங்கேற்றனர்[4]. சென்னையில் நடந்த போராட்டத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடும், மாநில அளவில் 7 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய 4 இடங்களிலும், மும்பை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் என மூன்று இடங்களிலும் சிறைச் செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முஸ்லிம்கள் போராட்டம் சென்னை 28-01-2014..ஆபிதீன்
பி.ஜைனுல்ஆபிதீன்தலைமையில் சென்னையில் நடந்த ஆர்பாட்டம்: சென்னை எழும்பூர் மார்ஷல் சாலையில் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து அந்த அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக பங்கேற்றனர்[5]. போராட்டத்துக்கு அந்த அமைப்பின் நிர்வாகி பி. ஜைனுல் ஆபிதீன் தலைமை வகித்து பேசுகையில் ‘கடந்தசட்டமன்றதேர்தலில்எங்களுக்குரியஇடஒதுக்கீட்டைதரஏற்பாடுசெய்வதாகஅதிமுகமற்றும்திமுகஉறுதியளித்தது. ஆனால்அதுநிறைவேற்றப்படவில்லை. வரும்தேர்தலில்எங்களுக்குரியஇடஒதுக்கீட்டையார்தருகிறார்களோஅவர்களுக்கேஆதரவுஅளிப்போம். மற்றவர்களுக்குஎதிராகவாக்களிப்போம்‘ என்றார்[6]. இவரது பேச்சை இங்கு கேட்கலாம்[7]. போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். ஆகவே, வரும் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டும், இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர் என்று தெரிகிறது.
முஸ்லிம்கள் போராட்டம் சென்னை 28-01-2014
போராட்டம்காலை 10 மணிக்குதொடங்கிநண்பகல் 2 மணிவரைநடைபெற்றதால்எழும்பூர்பகுதியிலும், அண்ணாசாலையிலும்போக்குவரத்துபாதிக்கப்பட்டது: இந்த போராட்டத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்றதால், மார்ஷல் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வேறு சாலைகள் வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்[8]. மேலும் போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 2 மணி வரை நடைபெற்றதால் எழும்பூர் பகுதியிலும், அண்ணாசாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் போராட்டம் நெல்லை 28-01-2014.. ஊடக விளம்பரம்.
சென்னையில்ஆர்ப்பாட்டம்நடத்தியதமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்அமைப்பினர் –கைதுஇல்லை: சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்துச் சென்றனர். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. கோவை, நெல்லை: இதேபோல கோவை, திருச்சி, நெல்லையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையில் 25 ஆயிரம் பேரும், திருச்சியில் 15 ஆயிரம் பேரும் கோவையில் 8 ஆயிரம் பேரும் பங்கேற்றனர். புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற போராட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் பங்கேற்றனர். இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்[9].
சென்னையில் டிஜிட்டல் பேனர் விதவிதமாக
சிறை நிறப்பும் போராட்டம்: இந்த சித்தாந்தமே முறையற்றதாக, சட்டவிரோதமாக இருக்கிறது, ஏனெனில், இருக்கின்ற சட்டங்கள், விதிமுறைகள் முதலியவற்றை மீறினால், கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டால், பிறகு மாஜிஸ்ட்ர்ரெட் / நீதிமன்றம் காவலில் வைக்க ஆணையிட்டால்தான் சிறையில் வைக்க முடியும். ஆனால், அவையெல்லாம் இல்லாமலேயே, ஊர் முழுக்க இப்படி விளம்பரம் செய்து கலாட்டாவில் இறங்கியிருப்பதனால், இது முழுக்க பிரச்சார ரீதியில் செய்யப்பட்ட ஆர்பாட்டமே என்றாகிறது. இல்லை, அவ்வாறு நாங்கள் சட்டங்களை மீறுவோம் என்றால், அவ்வாறும் ஒன்றும் செய்யவில்லை, கத்தி, போக்குவரத்தை பாதிக்க வைத்து, அலுவலகங்களுக்கு செல்பவர்களை தொந்தரவு செய்து, கலைந்து சென்றுள்ளனர். ஆனால், இதற்கு ஏகப்பட்ட அளவில் விளம்பரத்தைச் செய்துள்ளனர், ஆடகளை வண்டிகளில் கூட்டி வந்துள்ளனர். இதற்கு இப்படி லட்சக்கணக்கில் செலவு செய்யவேண்டிய அவசியம் என்ன? இப்படி எல்லோரும் கலாட்டா செய்தால், கேட்டது கிடைத்துவிடுமா? தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் நடத்திய சிறை நிரப்பும் போராட்டமும் (28-01-2014), ஆம் ஆத்மியின் தில்லி தெருக்களில் நடத்திய போராட்டமும் (22-01-2014 வரை) ஒரே மாதிரியாக இருப்பதாகத் தெரிகிறது. தங்களுக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும், பொது மக்கள் அவதிப்பட வேண்டும். இந்த அளவிற்கு ஒற்றுமை இருப்பதால் தான், ஒரு முஸ்லிம் சையது ஜுபைர் அஹமது [Syed Zubair Ahmad] ஒரு முஸ்லிம், “அரவிந்த கேசரிவால் பிறப்பால் இந்துவாக இருந்தாலும், நடைமுறையில் முஸ்லிமாக இருக்கிறார்”, என்று எடுத்துக் காட்டியுள்ளார்[10].
பர்வீன்-பைசூல் விவகாரம் – போலீசாருக்கு குழப்பமாம், ஊடகக்காரகள் தெளிவாக இருக்கிறார்களாம்!
பைசூலின் மீது மறுபடியும் புகார்: இந்த நிலையில், 30-12-2013 அன்று பகலில் நடிகை ராதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புதிய புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில், பைசூல் மீது கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெறவில்லை என்றும், தன்னை கடத்திச்சென்று, மகாபலிபுரத்தில் ஒரு லாட்ஜில் சிறை வைத்து அடித்து துன்புறுத்தி, மிரட்டியதால் புகாரை வாபஸ் பெற்றேன் என்றும், பைசூல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்[1]. புகாரில் ராதா கூறியதாவது: பைசூல் என்னுடன் 6 வருடம் குடும்பம் நடத்தினார். திடீரென என்னை வீட்டைவிட்டு துரத்தி விட்டு, என் பணத்தையும் பறித்துக் கொண்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தேன். கடந்த 18ம் தேதி பைசூலின் உறவினர் மாலிக், மற்றும் அவருடைய சகோதரர் ரஹ்மான் ஆகியோர் என் வீட்டுக்கு ஆசிட்டுடன் வந்தனர்[2].
புகார் வாபஸ் பெற வேண்டும், இல்லையென்றால் ஆசிட் வீசி கொன்று விடுவோம் என்று மிரட்டல்: பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும், இல்லையென்றால் உன் முகத்தில் ஆசிட் வீசி கொன்று விடுவோம் என, மிரட்டினர். இதை தொடர்ந்து, உயிருக்கு பயந்து நானும் புகாரை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தேன். பின்னர், கத்தி முனையில் என்னை காவல் நிலையத்துக்குஅழைத்துச் சென்று வழக்கை வாபஸ் பெற வைத்தனர். மேலும், என்னை காரில் ஏற்றிக் கொண்டு, பைசூல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரும் என்னை தொடர்ந்து மிரட்டியதுடன், காவல்துறையில் எனக்கு செல்வாக்கு உள்ளது, உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறினார்.
போலீஸ் பாதுகாப்பு வேண்டும்: என்னிடம் ஆள் பலமும், பண பலமும் உள்ளது. உடனடியாக ஊரை காலிசெய்துவிடு என தொடர்ந்து மிரட்டினார். உயிருக்கு பயந்து அவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நானும், சரி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். தற்போது என் உயிருக்கும், உடமைக்கும், ஆபத்து உள்ளது எனவே, போலீசார் எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து, பைசூலை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்[3].
போலீசாரைகுழப்பத்தில்ஆழ்த்திஇருக்கிறது: அவர் திடீரென்று இதுபோல் அதிரடி பல்டி அடித்து மீண்டும் ஒரு புகார் கொடுத்துள்ளது, போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பாவம், தமிழ் ஊடகப் புலிகளுக்கு மட்டும் குழப்பமே இல்லாமல் தெளிவாக இருக்கீறார்கள் போலும். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலும், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் நின்று கொண்டே இருந்தார். ஒருவேளை உட்காருவதற்கறொன்றும் இல்லை போலிருக்கிறது. இந்த விஷயத்தில் அடுத்தகட்டமாக உயர் போலீஸ் அதிகாரிகளை கலந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வடபழனி போலீசார் கூறினார்கள்[4]. ஆமாம், இவ்விசயங்களுக்கு எல்லாம் இப்படி போலீஸ் சேவை சீரழிக்க வேண்டிய நிலையில் இருக்க வேண்டும் போலிருக்கிறது.
அண்மைய பின்னூட்டங்கள்