Posted tagged ‘முப்தி’

மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை!

செப்ரெம்பர் 13, 2015

மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை!

Mohammed messenger of God - A R RAhman fatwa

Mohammed messenger of God – A R RAhman fatwa

முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்[1]. ஆஸ்கார் விருது பெற்ற, ஸ்லம்-டாக் மில்லியனர் படம் இசைப்புகழ் ரஹ்மானுக்கு பத்வா போடப்பட்டுள்ளது என்று “ஹாலிவு ரிப்போர்டர்” தலைப்பிட்டு அறிவித்துள்ளது[2]. 1989ல் முஸ்லிமாக மாறிய இவர், தனது பெயரான திலிப் குமார் என்பதனை மாற்றிக் கொண்டார்[3]. அதிலிருந்து, இவர் பழுத்த முஸ்லிமாக நாகூருக்குச் செல்வது, மொட்டை அடித்துக் கொள்வது, சூபித்துவத்தில் ஈடுபடுத்திக் கொள்வது, சூப்பாடல்களை சினிமா பாடல்களில் சேர்ப்பது என்று பரிசோதனை செய்து வந்தார். சினிமா பாடல்களில் கூட இஸ்லாமிய ராகங்கள், இசைக்கருவிகள், கவ்வாலிகள் போன்ற மெட்டுகள் முதலியவற்றைக் காணலாம். இருப்பினும், இப்பொழுது பத்வாவிக்கு உட்பட்டிருக்கிறார்.

A R Rhman and Majid Majith

A R Rhman and Majid Majith

மஜித் மஜீதும், ரஹ்மானும், இறைத்தூதர் மொஹம்மது திரைப்படமும்: ஈரானிய சினிமாவை உலகளவில் பேச வைத்த படம் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படத்தை மஜித் மஜிதி என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் 1997-ல் வெளிவந்து உலக ரசிகர்களால் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் ஒரு ஜோடி ஷூவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உலக ரசிகர்களை மஜித் மஜிதி தன் பக்கம் ஈர்த்தார். உலகப்பட விழாக்களில் நூற்றுக்கணக்கான விருதுகளை குவித்த இந்தப் படம் இப்போதும் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதேபோல் ‘த கலர் ஆப் பாரடைஸ்’, ‘த சாங் ஆப் ஸ்பாரோ’ போன்ற அன்பைப் பற்றி பேசும் தரமான திரைப்படங்களை இவர் அளித்துள்ளார்[4]. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முஹம்மத்: மெசஞ்சர் ஆப் காட்’ [ ‘Muhammad: Messenger of God’] என்ற ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்[5].

Muhammad_-_The_Messenger_of_God_poster

Muhammad_-_The_Messenger_of_God_poster

இறைத்தூதர் மொஹம்மது திரைப்படத்திற்கு எதிப்புத் தெரிவிக்கும் முஸ்லிம்கள்: ஈரான் அரசின் நிதியுதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு முஹம்மது நபியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஹம்மது நபியின் பெயருடன் வெளியாகும் இந்தப் படத்தைப்பற்றி மக்கள் தவறாக விமர்சித்தால் அது அவரை இழிவுப்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே, இந்த படத்தை திரையிட கூடாது எனவும் மும்பையில் உள்ள சன்னி பிரிவினர் கடந்த வாரம் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்[6].  மஹாராச்ட்ரா முதலமைச்சர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் போன்றோரை சந்திப்போம் என்றும் கூறியுள்ளனர். தங்களது எதிர்ப்பையடுத்து, இந்த படத்தை வெளியிடும் முயற்சியை படத்தின் இயக்குனர் கைவிடாததால், இயக்குனர் மஜித் மஜிதி, மற்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையை சேர்ந்த சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ராஸா அகாடமியின் பொதுச் செயலாளர் சயீத் நூரி [Saeed Noorie, chief of Raza Academy] தெரிவித்துள்ளார்[7]. இந்த ராஸா அகடெமி ஏற்கெனவே பல சர்ச்சைகளில், கலவரங்களில் ஈடுபட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மொஹம்மது இறைத்தூதர் - சினிமா

மொஹம்மது இறைத்தூதர் – சினிமா

மும்பை முதி பத்வா போட்டது ஏன்?: இது தொடர்பாக ரஸாக் அகாடமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[8]:  “மஜித் மஜிதி எடுத்துள்ள முகமத்மெஸஞ்சர் ஆப் காட் படம்  இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது. தன்னைப்பற்றிய எந்த உருவத்தையும் எவ்விதத்திலும் உருவாக்கக் கூடாது என்று மொஹம்மது நபி கூறியுள்ளார்[9]. இந்நிலையில் இஸ்லாம் மத கோட் பாட்டுக்கு எதிராக இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்த முஸ்லிமும் இந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது. இந்த படத்தில் தொழில்முறை முஸ்லிம் கலைஞர்களும், முஸ்லிம்-அல்லாத பிற மதக்கலைஞர்களும் (காபிர்களும்) பணியாற்றியுள்ளனர்[10]. இஸ்லாத்துக்கு விரோதமான ஒரு படத்தில் பணியாற்றியதன் மூலம் மஜித் மஜிதியும், ஏ.ஆர்.ரகுமானும் தெரிந்தே இஸ்லாத்தின் சட்டங்களை மீறி இருக்கிறார்கள்[11]. இந்தப் படத்தை இந்தியாவில் தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மஜித் மஜிதி மற்றும் .ஆர்.ரஹ்மானுக்குபத்வாவிதிக்கப்படுகிறது”, இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது[12].

Mohammed messenger of God - An Iranian film

Mohammed messenger of God – An Iranian film

பிராயசித்தம் செய்ய வேண்டியது என்ன?: மொஹம்மது அக்தர், மும்பை முப்தி அந்த பத்வாவை அறிவித்துள்ளார்[13]. அப்படத்தில் நடித்த, வேலை பார்த்த முஸ்லிம்கள், கலிமா படித்து, தங்களது திருமணங்களையும் மறுபடியும் செய்வித்து புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. மஜீதி மற்றும் ரஹ்மான் இருவரும், அவர்களது கருத்துகளைக் கேட்க முற்பட்டபோது, இருவரையும் காணவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது[14]. அதாவது காபிர்களுடன், மோமின்கள் எந்த தொடர்பையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று இருக்கும் நிலையில், முஸ்லிம்களான இவர்கள், காபிர்களுடன் சேர்ந்து வேலை செய்திருக்கின்றனர். “இறைவனின் தூதர்” என்ற பெயரை வைத்து, அதில் காபிர்களையும் நடிக்க வைத்துள்ளனர். இதனால், அவர்களை காபிருத்துவம் ஒட்டிக்கொண்டுள்ளது. அதனால், அவர்கள் காபிர்களாகவும் மாறி விட்டனர். அதனால், கலிமா படித்து, தங்களது திருமணங்களையும் மறுபடியும் செய்வித்து புனிதப்படுத்திக் கொள்வதின் மூலம் மோமின் நிலையை அடையலாம் என்று, தனக்கேயுரிய பாணியில் முப்தி கூறியுள்ளார். இனமவர்கள் பிராயசித்தம் செய்து மறுபடியும் முஸ்லீம்களாக மாறுவார்களா அல்லது அப்படியே இருப்பார்களா என்று பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

13-09-2015

[1] पैगंबर मोहम्मद साहब पर बनी अब तक की सबसे महंगी फिल्म में संगीत देने वाले भारत के सबसे बड़े संगीताकार को मुस्लिम समुदाय ने फतवा जारी कर दिया है। मुंबई के सुन्नी मुस्लिम समुदाय की राजा एकेडमी ने इरानी फिल्मकार माजिद मजीदी और संगीतकार भारतीय संगीतकार एआर रहमान को फतवा जारी कर पैंगबर मोहम्मद साहब पर बनी अब तक की सबसे बड़ी फिल्म पर कड़ा विरोध जताया है।

http://www.amarujala.com/photo-gallery/multiplex/entertainment-photo-gallery/fatwa-against-a-r-rahman-for-film-on-prophet/

[2] http://www.hollywoodreporter.com/news/fatwa-issued-slumdog-millionaire-composer-822668

[3] Rahman, 48, is one of India’s most successful composers, whose multiple awards include an Oscar and Grammy for his work onDanny Boyle‘s Slumdog Millionaire. He worked again with Boyle on the 2010 release 127 Hours. Rahman officially converted to Islam in 1989, replacing his Hindu birth name Dileep Kumar.

[4] தினமணி, .ஆர்.ரஹ்மானுக்கு இஸ்லாமிய அமைப்புஃபத்வாஅறிவிப்பு!, By எழில்

First Published : 12 September 2015 05:17 PM IST.

[5] http://www.maalaimalar.com/2015/09/12130105/Fatwa-issued-against-AR-Rahman.html

[6]http://www.dinamani.com/cinema/2015/09/12/%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85/article3024497.ece

[7] மாலைமலர், ஈரானிய சினிமாவுக்கு இசையமைத்த .ஆர். ரஹ்மானுக்கு எதிராக பத்வா, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, செப்டம்பர் 12, 1:01 PM IST.

[8] தினகரன், முகமது நபிகள் பற்றிய ஈரான் படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .ஆர்.ரஹ்மானுக்கு பத்வா: மும்பையை சேர்ந்த சன்னி அமைப்பு அறிவிப்பு, செப்டம்பர்.13, 2015, 03.22.14, ஞாயிற்றுக்கிழமை.

[9] http://indianexpress.com/article/entertainment/entertainment-others/fatwa-against-a-r-rahman-majid-majidi-for-film-on-prophet/

[10] http://www.dailythanthi.com/News/CinemaNews/2015/09/12142522/Fatwa-against-AR-Rahman-Majid-Majidi-for-film-on-Prophet.vpf

[11] தினத்தந்தி, .ஆர்.ரகுமான்ஈரான் இயக்குனருக்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம், மாற்றம் செய்த நாள்:சனி, செப்டம்பர் 12,2015, 2:25 PM IST; பதிவு செய்த நாள்:சனி, செப்டம்பர் 12,2015, 2:25 PM IST.

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=166848

[13] Saeed Noorie, chief of Raza Academy, which initiated the fatwa that was issued by Muhammad Akhtar – the chief mufti of Mumbai.

http://www.thehindu.com/news/national/fatwa-against-ar-rahman-for-film-on-prophet/article7642275.ece

[14] In the fatwa, they cite as the reason the Prophet’s word that no visual or picture of him be created or kept. The fatwa claims the film makes a mockery of Islam, and professional actors, including some non-Muslims, have been cast in the key roles.The fatwa adds that the Muslims working on the film, especially Majidi and Rahman, have thus committed sacrilege and will have to read the kalma again and also solemnise their marriage again. Despite repeated attempts, Rahman remained unavailable for comment.

தலைக்கு பத்வா போட்ட மதவெறி பிடித்த தௌகீர் ரஸா கான் “இந்து-முஸ்லிம்” ஒற்றுமை, பசுவதை முதலியவற்றை ஆதரித்து போராடப் போகிறாராம்!

நவம்பர் 11, 2013

தலைக்கு பத்வா போட்ட மதவெறி பிடித்த ட்தௌகீர் ரஸா கான் “இந்து-முஸ்லிம்” ஒற்றுமை, பசுவதை முதலியவற்றை ஆதரித்து போராடப் போகிறாராம்!

Acharya Pramod Krishan with Baba Ram dev

பத்வா மௌலானாவின் விவரங்கள்: தௌகீர் ராஸா கான், இதிஹாத்-இ-மில்லத் கவுன்சில் [ Ittehad-e- Millat Council] என்ற தீவிரகருத்துக்களைப் பரப்பி வரும் இயக்கத்தின் தலைவர். என்ற அடிப்படை முஸ்லிம் ஏற்கெனவே கலவரங்களைத் தூண்டி விட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டவர். புஸ்ஸின் தலைக்கு ரூ ஒரு கோடி என்று அறிவித்து பத்வா போட்டவர். அதாவது, தஸ்லிமா நஸ் ரீன் இஸ்லாமுக்கு எதிராக எழுதினார் என்ற காரணத்திற்காக, அயத்துல்லா கோமேனி மாதிரி, தண்டனை விதித்து, யாராவது அவரைக் கொன்று தலை வெட்டிக் கொண்டு வந்தால் பணம் கொடுக்கப்படும் என்று அர்த்தமாம். அதே மாதிரி, பிறகு தஸ்லிமா நஸ் ரீன் என்ற பங்களாதேச தலைக்கு ரூ 5 லட்சம் என்று அறிவித்தவர். இப்படி பத்வா போட்டு பிரபலமாகியதால், இவரை “பத்வா மௌலானா” என்றே அழைக்கப் படுகிறார்.

after-kejriwal-digvijaya-singh-praises-tauquir-raza-khan

அரவிந்த் கேசரிவால் தௌகீர்ராஸாகானை சந்தித்தது:  ஒன்பது நாட்களுக்கு முன்னர் 01-11-2013 அன்று அரவிந்த் கேசரிவால் என்கின்ற “ஆம் ஆத்மி கட்சி”த் தலைவர், இந்த கம்யூனல், அடிப்படைவாத, தீவிரவாத கொள்கைளைக் கடைப்பிடிக்கும் மௌலானாவை பிரெய்லியில் சந்தித்து தங்கள் கட்சிற்காக பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அப்பொழுது “கம்யுனிலிஸத்துடன் ஜோடி சேர்கிறார், ஓட்டுவங்கி அரசியல் நடத்த்ய்கிறார்ரென்றெல்லாம் காங்கிரஸ்காரர்கள் இவரைக் கடுமையாக சாடினார்கள்[1]. மீம் அப்சல் என்ற காங்கிரஸ் கட்சி ஊடக பேச்சாளர், அரவிந்த் கேசரிவாலின் அரசியல் ஆர்.எஸ்.எஸ்ஸை ஆதரிப்பதில் உள்ளது, அதனால் முஸ்லிம்களை கால்பந்து போல நினைக்கிறார்”, என்று எதிர்ப்புத் தெரிவித்தார்[2]. அரவிந்த் கேசரிவாலோ அதெல்லாம் எனக்குத் தெரியாது, என்று சப்பைக்கட்டியதோடு, ஏதோ பெரிய இஸ்லாமிய பண்டிதர் போல, முப்தியால் தான் பத்வா போட முடியும், மௌலானாவால் பத்வா போட முடியாது என்று விளக்கம் கொடுத்தார். வேடிக்கையென்னவென்றால், இதனை எந்த முப்தியோ, மௌலானாவோ தவறு அல்லது சரி என்று சொல்லவில்லை, இல்லை என்ன காபிராகிய நீர், எங்கள் மதவவிசயங்களைப் பற்றி வியாக்யானம் செய்கிறாயே, என்று கண்டிக்கவில்லை.

Digvijay and Tauqeer together 2013

காங்கிரஸ் ஊக்குவிக்கும் சாமியார்கள்: காங்கிரஸுக்கு நெருங்கிய சாமியாரான, ஆச்சார்யா பிரமோத் கிருஷண் என்பவர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்[3]. அது மட்டுமல்லாது மோடிக்கு எதிராக பேசும் சாமி என்றும் குறிப்பிடத் தக்கது[4]. பல போலி சாமியார்கள் மோடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும் பேசி வருகிறார். பாபா ராம் தேவ் விசயத்தில், அவர்க்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பாலகிருஷ்ணனின் போலி பாஸ்போர்ட் வழக்கில் பங்கு கொண்டுள்ளார்[5]. இவர் பேசும் விதம், நடந்து கொள்ளும் போக்கு முதலியவற்றைப் பார்க்கும் போது, காங்கிரஸுக்கு சார்பாக, இந்து நலன்களுக்கு எதிராக செயல்படுவது நன்றாகத் தெரிகிறது. இதனால், இந்து சந்நியாசிகளின் ஒற்றுமை குலைகிறது. அதாவது, சந்நியாசிகள், மடாதிபதிகள் ஒற்றுமையாக இருக்கக் கூடாது, பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸும், காங்கிரஸ் ஆதரவு சந்நியாசிகளும் வேலை செய்கின்றனர் என்ரும் தெரிகிறது.

some-swami, Tahil Ali, Dig, Tauqir Raza, Acharya Pramod Krishan

மதவெறிக் கொண்டவர் “இந்து-முஸ்லிம்” பாடுபடப் போகிறாராம்: “கல்கி மஹோத்சவம்” என்ற நிகழ்சியில் கலந்து கொண்டபோது, 10-11-2013 அன்று தனக்கு வலது பக்கத்தில் தாரிக் அன்வர் [Union Minister of State for Agriculture Tariq Anwar] மற்றும் இடது பக்கத்தில் தௌகீர் ராஸா கான் உட்கார்ந்து கொண்டிருந்தனர். இவர்கள் எல்லோருமே ஒரே மேடையில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். நடுவில் திக்விஜய் நன்றக குனிந்து, தௌகீர் ராஸா கானின் பின்பக்கத்தில் ஸ்வாமியுடன் ஏதோ பேசியதும் வீடியோவில் தெர்கிறது[6]. அதாவது அந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கின்றனர் என்ரு காட்டிக் கொள்கின்றனர். திக்விஜய் சிங்கோ, தௌகீர் ராஸா கானைப் புகழ்ந்து, அவர் ஸ்வாமியுடன் சேர்ந்து கொண்டு “இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறார். பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்று பேசியுள்ளார்[7], என்று பாராட்டி பேசினார்[8]. மக்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும். அவரை மதவாதி போல பார்க்கக் கூடாது என்றெல்லாம் விளக்கினார்.

Beware of anti-Hindu hindus

கோசாலையைத் திறந்து வைத்து பசுவதையைப் பற்றி பேசினாராம்: தௌகீர் ராஸா கான் ஆயிரக்கணக்கில் பசுக்கள் கொலைசெய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படும் முறையை எதிர்க்கிறேன். இப்படியே பசுக்கள் கொல்லப்பட்டால், நாளைக்கு குழந்தைகள் குடிக்க பாலே இருக்காது, என்று ஒரு பசு காப்பகத்தைத் திறந்து வைக்கும் போது பேசினார்[9]. பிறகு தௌகீர் ராஸா கான், ஊடகக்காரர்களுடன் பேசும் போது, தான் மதவாதம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுவதாக தெரிவித்தார். பத்வா விசயத்தில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் மறுத்தார்[10].

TAUQEER REZA KHAN

காங்கிரசஸின் வஞ்சக திட்டம்: முன்னர் ராமஜன்ம பூமி விசயத்தில், காங்கிரஸே முந்தி கொண்டது. முலாயம் சிங் யாதவோ, கரசேகர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தி, இந்துக்களைக் கொன்று, முல்லாயம் சிங் யாதவ் ஆனார். இப்பொழுது, சோனியா இந்து சாமியார்களைப் பிரிக்க சட்ய்ஹி செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. பதவி, பணம், அதிகாரம் இருப்பதனால், சோனியா இவர்களை சுலபமாக வளைத்து விடுகிறார் என்று தெரிகிறது. ஒவ்வொரு இந்து எழுச்சியையும் அடக்க இவ்வாறான எதிர்மறையான செயல்களை செய்து வருவது தெரிகிறது. முன்னர் அஜாரே ஆர்.எஸ்.எஸ் தூண்டுதல் பேரில் தான், ஊழல் எதிர்ப்பி போராட்டம் நடத்துகிறார் என்பது போல செய்தி வந்தது. அவர் ஒதுங்கிக் கொண்டார். அரசியல்வாதிகளை எதிர்ப்பதானால், கட்சி தொடங்கி தேர்தலில் நில்லுங்கள் என்ரு கபில் சிபல் சவால் விட்டார். இவ்விதமாக காங்கிரஸ் ஊழல் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை அடக்கியது. அரவிந்த கேசரிவால் கட்சி தொடங்கி அரசியலில் இறங்கி விட்டார். இதனால், காங்கிரசூக்குத் தான் ஆதாயம்.

© வேதபிரகாஷ்

11-11-2013


. [1] Earlier on November 1, Arvind Kejriwal met Maulana Tauqeer Raza Khan in Bareilly, which sparked a political conspiracy as Congress claimed that the AAP leader is playing a communal card ahead of the Assembly election in Delhi. http://www.niticentral.com/?p=155911

[2] Congress spokesman Meem Afzal had alleged that Kejriwal “whose politics originated with the backing of the RSS was trying to make Muslims a football” for electoral mileage.

http://ibnlive.in.com/news/after-kejriwal-digvijaya-singh-praises-tauquir-raza-khan/433353-3-242.html

[3] The function was organised by Swami Pramod Krishnan, who is said to have good relations with the Congress. Krishnan also praised the cleric and said people like him were needed to promote communal harmony in the country

[5] Pramod Krishnan, who is a litigant in the fake passport case filed against Balkrishan, even feared that Shankar Dev may have been killed by them as their guru knew of the fake documents that were submitted by him at Bareilly passport office to procure the passport.

http://www.tribuneindia.com/2012/20120806/dun.htm#7

[7] Speaking at the inauguration of Kalki Mahotsava here last night, Digvijay praised Raza, who enjoys minister of state rank in SP government in Uttar Pradesh, and said that he along with Acharya Pramod Krishnan have started a mission of Hindu-Muslim unity in the country.

http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/after-arvind-kejriwal-digvijay-singh-praises-controversial-muslim-clerictauqeer-raza-khan/articleshow/25562343.cms

[8] Dig vijay Singh on Sunday shared the stage with controversial Muslim cleric Tauqeer Raza Khan praised him for working for ‘Hindu-Muslim unity’. his party attacked AAP leader Arvind Kejriwal following his meeting with the religious leader.

http://zeenews.india.com/news/nation/digvijay-praises-tauqeer-raza-says-he-started-mission-of-hindu-muslim-unity_889072.html

[9] Inaugurating a cow shelter, Raza said the manner in which thousands of cattles were being slaughtered and exported to foreign countries was a matter of great concern and if it was not stopped a day would come when the children in the country would not get milk to drink.He said that a joint campaign was needed to save cattle.

http://ibnlive.in.com/news/after-kejriwal-digvijaya-singh-praises-tauquir-raza-khan/433353-3-242.html

[10] Tauqeer Razadenied having any hand in the violence. He has also denied that he had issued any “fatwa” against Taslima Nasreen.

http://www.deccanherald.com/content/368211/digvijay-shares-stage-039controversial039-cleric.html

காஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது!

மார்ச் 1, 2013

காஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது!

JK assembly-2013 broken mike

 

உடைந்த மைக்கின் கீழ் பகுதியை தூக்கி வரும் எம்.எல்.ஏ!

காஷ்மீர சட்டசபையில் கலாட்டா-ரகளை: காஷ்மீர சட்டபையில் தீவிரவாதி மொஹம்மது அப்சல் குரு தூக்கிலிட்டதை எதிர்த்து கோஷம் எழுப்பினர், பின்னர் உடல் கேட்டு பயங்கர ரகளையில் ஈடுபட்டனர்[1]. பேப்பர்களை வீசியும், மைக்கைப் பிடுங்கியும் கலாட்டா செய்தனர்[2]. மொஹம்மது அப்சல் குரு போன்று உடையணிந்த ஒருவர் ஆவேசமாக கத்திக் கொண்டிருந்ததை டிவி-செனல்கள் காண்பித்தன. சட்டபைக்கு வெளியிலும் ஆர்பாட்டத்தை நடத்தினர்[3]. கலாட்டா செய்த லங்கேட் அப்துல் ரஷீத் இஞ்சினியர்  (MLA Langate Abdul Rashid Engineer ) என்ற எம்.எல்.ஏ வெளியேற்றப்பட்டார்[4]. சட்டசபையில் இப்படி கலாட்டா செய்வது அவர்களுக்கு வழக்கமான-வாடிக்கையான விஷயம் தான்[5]. பெண்ணான மெஹ்பூபா முப்தியே கலட்டா செய்துள்ளார்[6].

JK assembly-2013 MLAs fight

புதைத்த உடலைக் கேட்டு சண்டை: இதில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இரண்டும் போட்டிப் போடுக் கொண்டு தீவிரவாதத்துரடன் துணைபோகுக் போக்கில் உடலைக் கேட்டு சண்டை போட ஆரம்பித்தனர். அப்சல் குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது குறித்தும், அவரது உடலை திரும்ப பெற வலியுறுத்தியும் காஷ்மீர் சட்டமன்றத்தில் இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி கொண்டு வந்தது. நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு கடந்த மாதம் திகார் சிறையில் ரகசியமாக தூக்கிலிடப்பட்ட பிறகு, அமைதியாக இருந்தவர்கள், திடீரென்று. அவனது உடல் கேட்டு ஆர்பாட்டத்தை ஆரம்பித்தனர். திகார் சிறை வளாகத்திலேயே அவ்வுடல் அடக்கம் செய்யப்பட்டது தெரிந்த விஷயமே. அதற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது மேலும் வியப்பிற்குரிய விசயமாக உள்ளது.

Jammu & Kashmir Assembly March 2012

 

மார்ச் 2012ல் உமர் அப்துல்லாவை நோக்கி காலை உயர்த்தி வரும் எம்.எல்.ஏ!

முப்தி முஹம்மது சையது மற்றும் அவரது மகள் போடும் நாடகங்கள்: அப்சலின் உடலை அவரது குடும்பத்தாரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாநில முதல்வர் உமர் அப்துல்லாவும் கோரிக்கை வைத்துள்ளது, போட்டாட்ப்போட்டி அரசியலைத்தான் எடுத்துக் காட்டுகிறது. இந்நிலையில் அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டதன் மூலம் காஷ்மீர் குடிமக்களின் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாக முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியுள்ளது, முன்னர் முப்தி முஹம்மது சையது, தமது மகளை எப்படி தீவிரவாதிகள் கடத்திக் கொண்டது போல நாடகம் ஆடி, பிரியாணி கொடுத்து அனுப்பி, பிறகு 180 தீவிவாதிகளை விடுவித்தார் என்பதனை நினைவு கூரவேண்டும்[7]. ஆனால், அதே முப்தியின்பின்னொரு மகள் கலாட்டா செய்கிறார்[8].

March 2011 - JK Assembly

 

மார்ச் 2011 – சட்டசபையில் கட்டிப்பிடி கலாட்டா-ரகளை!

விளம்பர கலாட்டா-ஆர்பாட்டம்-ரகளை: தூக்கு தண்டனை கைதிகள் வரிசையில் 28ம் இடத்தில் இருந்த அப்சல் குருவை மட்டும் தேர்ந்தெடுத்து தூக்கில் போட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது, அண்டை நாடான இஸ்லாமிய பங்களாதேசத்தில் எப்படி, பல ஜிஹாதி பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்பதனையும் மறந்து விடுகின்றனர். ராஜீவ்காந்தி கொலையாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது போல அப்சல் குருவுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன் என்ற கேள்வியை பிடிபி முன்வைத்துள்ளது இந்த உண்மைகளை மறைக்கவே என்று தெரிகிறது.  அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது தொடர்பாகவும், அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதில் ஏற்பட்டு வரும் தாமதம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பற்காக இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை மக்கள் ஜனநாயக கட்சி சபாநாயகரிடம் தாக்கல் செய்தது. இந்த தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு, இந்த தகவலை மக்கள் ஜனநாயக கட்சி செய்தி தொடர்பாளர் நயீம் அக்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்த பிறகும், சட்டசபையில் ரகளை செய்துள்ளது, வெறும் விளம்பரத்திற்காகவே என்று தெரிகிறது. இதில் காஷ்மீர இஸ்லாம் எப்படி செயல்படுகிறது என்பதனையும் அறிந்து கொள்ளலாம்[9].

JK MLA uproar

 

கலாட்டா செய்யும் எம்.எல்.ஏவை தடுக்கும் போலீஸ் / மார்ஷெல்!

கடையடைப்பு-பந்த்-போராட்டம்: பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவின் உடலை, அவரது உறவினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி காஷ்மீரில் முழுக்கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களும் பெருமளவில் இயங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனை நடத்தப்பட்டன. மாநிலத்தின் பல பகுதிகளில் துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய போராட்டங்கள் நடக்கும் என்று அந்நிய நாளிதழ்கள் சந்தோஷமாக செய்திகளை முன்னரே வெளியிட்டுள்ளது கவனிக்கத் தக்கது[10].

Six JMB militants hanged in Bangaladesh

 

ஆறு ஜிஹாதிகள் தூக்கிலிடப்பட்ட செய்தி!

புதைத்த உடலை, மறுபடியும் தோண்டியடுத்துப் புதைக்கலாமா?: புதைத்தப் பிணத்தைத் தோண்டி எடுக்கலாமா, மறுபடியும் புதைக்கலாமா, புதைத்த பிணம் இவ்வளவு நாள் முழுமையாக இருக்குமா, முதலிய கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று தெரியவில்லை. இஸ்லாம் பொறுத்த வரைக்கும், தீர்ப்பு நாளில் புதைத்த உடல் உயிர் பெற்று எழும். அல்லா அவர்களின் செயல்களைப் பொறுத்து சுவர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அனுப்பி வைப்பார் என்று நம்பிக்கையாளர்கள் சொல்கின்றனர். அந்நிலையில் புதைத்த உடலை, மறுபடியும் தோண்டியடுத்துப் புதைக்கலாமா, அதனை அல்லா ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

01-03-2013