Posted tagged ‘முகமது நியாஸ் அப்துல் ரஷீத்’

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி-தீவிரவாதம் வளறும் விதம் (1)

நவம்பர் 17, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதிதீவிரவாதம் வளறும் விதம் (1)

Abdul Rashid Abdulla Isis -terror tape

கேரளாவில் தொடரும் ஐசிஸ் ஆதரவு பிரச்சாரம், தீவிரவாத ஊக்குதல் ஆதரவு முதலியன: ஐஎஸ் அமைப்பின் பிராந்திய பிரிவான “தவுலதுல் இஸ்லாம்”, தனது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு சமீபத்தில் ஒரு குரல் பதிவை (ஆடியோ) வெளியிட்டுள்ளது. “கேரளாவின் ஒளி” என்ற வாட்ஸ்-அப் குழுவில் இது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது[1]. இது அத்தகைய 50வது பதிவேற்றம் என்று சொல்லப்படுகிறது. முன்னர் என்.ஐ.ஏ அப்துல் ரஷீத் என்பவன் அத்தகைய இரண்டு வாட்ஸ்-அப் குழுக்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்தது[2]. சுமார் 10 நிமிடங்கள் ஓடும் அதில் ஒருவர் மலையாள மொழியில் பேசுகிறார். “நமது மக்கள் அனைவரும் .எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணையவேண்டும். அப்படி இணைய விருப்பமில்லை என்றால் தீவிரவாத இயக்கத்தினருக்கு அதிக அளவில் நிதி உதவி அளித்திடவேண்டும். ஐஎஸ் முஜாஹிதீன் அமைப்பினர் உலகின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்துகின்றனர். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை திருவிழாவின்போது, நமது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தாக்குதல் நடத்தினார்[3]. அதில் பலர் உயிரிழந்தனர். இதுபோல, திருச்சூர் (கேரளா) பூரம் அல்லது கும்பமேளா உள்ளிட்ட திருவிழாக்களின்போது உங்கள் புத்திசாலிதனத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துங்கள்[4]. முதலில் இந்த விழா நடக்கும் பகுதிகளுக்கு முன்னதாகவே சென்று உணவில் விஷம் வையுங்கள்[5]. அதை அங்கே வருபவர்களுக்கு சாப்பிட கொடுங்கள்[6].

Abdul Rashid Abdulla Isis -terror tape-drive car into mela

ஐசிஸ் தீவிரவாதி தொடர்ந்து சொல்வது:இந்த தாக்குதலில் தன்னந்தனியாக ஈடுபடுங்கள். லாரியை பயன்படுத்துங்கள். அதேபோல் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சரக்கு வாகனங்களை ஓட்டிச் சென்று அவர்கள் மீது ஏற்றி பெரும் எண்ணிக்கையில் கொன்று குவியுங்கள்[7]. இத்தகைய தாக்குதல் முறைகளைத்தான் உலகம் முழுவதும் இன்று நமது தீவிரவாத இயக்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்[8]. அண்மையில் நமது போராளி ஒருவர் இசை நிகழ்ச்சியின்போது இப்படி தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொன்று குவித்தார். உணவில் விஷம் கலந்து விடுங்கள். அல்லது கத்தியைப் பயன்படுத்துங்கள். குறைந்தது ரயிலை தடம்புரளச் செய்யுங்கள். உங்களால் இதெல்லாம் முடியவில்லை என்றால் ரெயில் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடுங்கள். அதுவும் முடியாவிட்டால் கத்தி முனையில் தாக்குதல் நடத்துங்கள். அவர்கள்(ராணுவத்தினர்) நமது கதையை முடிக்க முயன்றாலும் அது நடக்காது. நமக்கு இதில் உயிர் இழப்புகள் ஏற்படலாம். ஆனால் நமது இயக்கம் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டேதான் இருக்கும். உயிர் இருக்கும் வரை நாம் போராடுவோம்,” என அவர் பேசி உள்ளார்[9].

ISIS want to kill Hindus in India-tape-3

கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரசீத் பேசியது: கேரளாவைச் சேர்ந்த 100 பேர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாக கேரள போலீஸார் கூறியிருந்த நிலையில் இந்த ஆடியோவெளியாகி உள்ளது. இந்த கேரள மாநிலம் காசர்கோடு பகுதியிலிருந்து ஆப்கன் சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த ரஷித் அப்துல்லாவின் குரலாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது[10]. திருச்சூர் பூரம், கும்பமேளா விழாக்களின்போது உணவில் விஷம் வைத்து பெரும் அளவில் மக்களை கொன்று குவியுங்கள் என்று ஐ.எஸ். தீவிரவாதி விடுத்த ஆடியோ மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து சிரியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்துள்ளதாக கேரள போலீஸ் கூறுகிறது. இவர்களில் பலர் ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளில் ராணுவத்துக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு மரணத்தையும் தழுவியதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் பல்வேறு வழிகளில் தாக்குதல்களை நடத்தி பெரும் எண்ணிக்கையில் மக்களை கொன்று குவிக்கும்படி ஐ.எஸ். தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக கேரள மாநிலம் காசர்கோடு நகரில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் இணைந்த ஒருவர் 10 நிமிடம் மலையாள மொழியில் பேசும் ஆடியோ உரை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[11]. இதையடுத்து கேரளாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன[12].

ISIS want to kill Hindus in India-tape-1

கேரளாகாரன் என்பதால், கேரளாவில் இக்கட்டான நிலை: இதுகுறித்து கேரள காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் இருந்து குரல் பதிவு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பேசியிருப்பவர், ஐஎஸ் அமைப்பில் அண்மையில் சேர்ந்த கேரளம் மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த ரஷித் அப்துல்லாவாக இருக்கலாம் என்று நம்புகிறோம். ரஷித் அப்துல்லாவுக்கு எதிராக என்ஐஏ அமைப்பும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இன்டர்போல் அமைப்பும் அவருக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் பிரப்பித்துள்ளது’ என்றன. இந்த குரல் பதிவு தொடர்பாக கேரள போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்[13]. இதுதொடர்பாக வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 300 குரல் பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சரவை செயலகத்தின் முன்னாள் இயக்குநர் வி. பாலசந்திரன் கூறும்போது, இது மிகவும் கவலைதரும் விஷயமாகும். அந்த அமைப்பினர் தங்களது சண்டையை ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர நினைக்கின்றனர்’ என்றனர்[14].

© வேதபிரகாஷ்

17-11-2017

Jihadi terror- Asianet- modified- Vedaprakash

[1] he voice in the audio clip, posted on a WhatsApp group called ‘Light of Kerala’, is suspected to be that of Abdul Rashid, an engineering graduate. Abdul Rashid is believed to be the man behind the exodus of 21 Keralites to Afghanistan .This is reportedly the 50th such clip that has emerged on the WhatsApp group ‘Light of Kerala’.

http://www.thenewsminute.com/article/horrifying-audio-clip-kerala-isis-recruiter-urging-war-hindus-democracy-surfaces-71651

[2] In an earlier case investigated by National Investigation Agency, it was revealed that Abdul Rashid created at least two WhatsApp groups, in which he added about 200 people in Kerala, and began transmitting messages, urging them to join the Syria-based terror group.

http://www.deccanchronicle.com/nation/current-affairs/151117/kerala-probe-on-to-trace-islamic-state-audio-clips.html

[3] மாலைமலர், திருச்சூர் பூரம் விழாவில் மக்களுக்கு உணவில் விஷம் வையுங்கள்: .எஸ். பயங்கரவாதியின் மிரட்டல் ஆடியோ, பதிவு: நவம்பர் 16, 2017 07:03

[4] http://www.maalaimalar.com/News/TopNews/2017/11/16070309/1129089/Put-poison-in-the-food-at-the-Thrissur-Pooram-festival.vpf

[5] தினத்தந்தி, திருச்சூர் பூரம் விழாவில் மக்களுக்கு உணவில் விஷம் வையுங்கள் .எஸ். பயங்கரவாதியின் மிரட்டல் ஆடியோ, நவம்பர் 16, 2017, 04:45 AM

[6] http://www.dailythanthi.com/News/TopNews/2017/11/16035820/Thrissur-Pooram-festival-put-poison-in-the-food-of.vpf

[7] பாலிமர்.டிவி, அதிக மக்கள் கூடும் இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும்கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்ற தீவிரவாதி எச்சரிக்கை, 15-நவ்-2017 13:40

[8]https://www.polimernews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/

[9] தி.இந்து, திருச்சூர் பூரம் விழாவில் தாக்குதல் நடத்தப்படும்: ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை, Published :  16 Nov 2017  09:15 IST; Updated :  16 Nov 2017  09:22 IST

[10] http://tamil.thehindu.com/india/article20464351.ece

[11] தமிழ்.ஒன்.இந்தியா, திருச்சூர் பூரம் திருவிழாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் பகீர் சதித் திட்டம்ஷாக் தகவல்கள், Posted By:  Mathi, Published: Wednesday, November 15, 2017, 9:19 [IST]

[12] https://tamil.oneindia.com/news/india/isis-advise-kerala-muslims-poison-food-at-thrissur-pooram-kkumbh-mela-301836.html

[13] தினமணி, கும்ப மேளா, திருச்சூர் பூரம் விழாக்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் மிரட்டல், Published on : 16th November 2017 12:53 AM.

[14]http://www.dinamani.com/india/2017/nov/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF-2808510.html

தமிழகத்து ஜிஹாதி தீவிரவாதி பிரான்ஸில் பிடிபட்டான்: உள்ளூரில் வளரும் தீவிரவாதத்தின் அபாயம் அதிகரித்து வருகிறது!

மே 25, 2011

தமிழகத்து ஜிஹாதி தீவிரவாதி பிரான்ஸில் பிடிபட்டான்: உள்ளூரில் வளரும் தீவிரவாதத்தின் அபாயம் அதிகரித்து வருகிறது!

உள்ளூர் தீவிரவாதமா அல்லது வீட்டுத் தீவிரவாதமா? தமிழகத்தில் தீவிரவாதிகளுக்கு அமைதியாக தங்க இடம் கிடைக்கிறது என்று மறுபடியும் தெரியவந்துள்ளது. ஆனால், சிதம்பரம், உள்ளூரில் வளரும் தீவிரவாதத்தின் அபாயம் அதிகரித்து வருகிறது என்கிறார்! [Threat of home-grown terror rising: Chidambaram]. அதாவது, இதை உள்ளூர் தீவிரவாதம் என்பதா அல்லது வீட்டுத் தீவிரவாதம் / வீட்டிலே வளர்த்த தீவிரவாதம்[1] என்பதா என்று தெரியவில்லை.

தமிழகத்து ஜிஹாதி தீவிரவாதி: முகமது நியாஸ் அப்துல் ரஷீத் – திருச்சியைச் சேர்ந்த இவன், தன்னுடைய 21வது வயதில் சிமியில் சேர்ந்துள்ளான். கணினி மென்துறையில் வல்லுனரான, நியாஸ் மற்றவர்களின் இணைதளங்களில் நுழைவதிலும், கைத்தேந்தவனாம். எப்படிப்பட்ட இணைதளத்தையும் உடைத்துவிடும் ஆற்றல் பெற்றவனாம். அதுமட்டுமல்லாது, வெடிகுண்டுகள் போன்றவை தயரிக்க, செயல்பட பல கணினி புரோக்ராம்களை தயாரித்துள்ளானாம்[2]. தந்தை மலேசிய நாட்டு பிரஜையாக உள்ளார். சகோதர்கள் கடாரில் வசிக்கின்றனர். தாயார் பாத்திமா (65), புதியதாகக் கட்டப்பட்டுள்ள, கூத்தப்பன்பட்டி என்ற இடத்தில் மேலூரில் தனியாக வசித்து வருகிறார்[3]. ஆறு மாதங்களுக்கு முன்பு அவன் இங்கு வந்தாதாகவும், தாயுடன் இரண்டு வாரம் தங்கியிருந்து, சென்றுவிட்டதாக அருகிலுள்ளோர் கூறுகின்றனர். தமிழகத்திலிருந்து, அவன் இரண்டு பாஸ்போர்ட்டுகளைப் பெற்ருள்ளதாகத் தெரிகிறது. ஒன்று திருச்சி சரகத்திலிருந்து, இன்னொன்று, இடம் தெரியாதலால், அது போலியாக இருக்கும் என்று தெரிகிறது[4].

தமிழக போலீஸார் தூங்கினார்களா? தமிழக போலீஸார், வழக்கம் போல கோட்டை விட்டதுடன், அவனைப் பற்றி விரோதமான அறிக்கைகள் / தகவல்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளாரர்களாம்[5]. வழக்கம் போல, உள்துறை அமைச்சர், நாளுக்கு நாள் உள்ளூரில் வளரும் தீவிரவாதம் பெருகிவருகிறது என்று சொல்லியுள்ளார்[6]. வழக்கம் போல தி ஹிந்துவின் செய்தி வெளியீடே அலாதியானது தான். முதலில் “பாரிஸில் கைது செய்யப் பட்ட மனிதன் மதுரையைச் சேர்ந்தவனா?” என்று செய்தி வெளியிட்டது[7]. பிறகு வரும் செய்தியில், ரஷிதைப் பற்றி இந்தியா பிரான்சிடம் விவரங்களைக் கேட்கிறது, என்று செய்தி வருகிறது[8]. உண்மையில், பிரான்ஸ் இந்தியாவிடமிருந்து, அவனைப் பற்றி விவரங்களைக் கேட்டுள்ளது. இவன் தனது தாயாரது தொலைபேசியை உபயோகித்து, பாகிஸ்தானிலுள்ள தனது தொடர்பாளிகளுடன் பேசியுள்ளான். பிரான்ஸ் இதைப் பற்றி விவரங்களைக் கொடுத்துள்ளது. ஆனால், அவரது தாயார் அதை மறுப்பது போன்று தமிழில் சொல்வதை தொலைகாட்சிகளில் காட்டப்படுகிறது.

அல்ஜீரியாவிலிருந்து பிரான்சுக்கு திரும்பி வந்த முகமது நியாஸ் அப்துல் ரஷீத் கைது: பிரான்ஸில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட மதுரை மேலுரைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்[9].  பிரான்ஸில் தீவிரவாதப் பயிற்சி மேற்கொண்டதாக கடந்த மே 10ம் தேதி 6 பேரை [Charles de Gaulle Airport ] அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது நியாஸ் அப்துல் ரஷீத் என்பவரும் அடக்கம். அல்ஜீரியாவிலிருந்து திரும்பி பிரான்சுக்கு வந்த நிலையில் சார்லஸ் டி கால் விமானநிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார்[10]. பிரான்ஸைச் சேர்ந்த மூவரை பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களுக்கு இவர் அனுப்பி வைத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. ரஷீத் குறித்து பிரான்ஸ் போலீசார் மத்திய அரசுக்குத் தகவல் அனுப்பியதைத் தொடர்ந்து அவர் குறித்து மத்திய உளவுப் பிரிவினரும் தமிழக உளவுப் பிரிவினரும் விசாரணையில் இறங்கியுள்ளனர். தாஹிர் ஷைஜாத் கைது செய்யப் பட்டவுடன், உமர் படேக் என்ற தீவிரவாதியுடனான அவனது தொடர்பு தெரியவந்துள்ளது. பாலி வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப் பட்டுள்ள அவன், அபோதாபாதில் கடந்த ஜனவரி மாதம் பிடித்து கைது செய்துள்ளனர்[11].
இவர் மதுரை மேலூரைச் சேர்ந்தவர் என்றும், தனியார் பொறியியல் படித்தபோது சிமி இயக்கத்துடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த தீவிரவாதியின் கூட்டாளிகளுடன் இவர் நெருக்கமாக இருந்தது தெரியவந்தபோதே இவரை மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. கண்காணிக்க ஆரம்பித்ததாகவும், 3 மாதங்களுக்கு முன் இவர் பிரான்சிலிருந்து மேலூர் வந்து 10 நாட்கள் தங்கியிருந்தபோதும் கண்காணிப்பிலேயே இருந்தார் என்றும், அந்த நேரத்தில் இவரது நடவடிக்கைகளில் தீவிரவாத செயல்கள் ஏதும் இல்லாததால் இவரை அப்போது ஐ.பி. கைது செய்யாமல் விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவிற்குத் தெரியாதது, எப்படி பிரான்ஸிற்கு தெரிந்துள்ளது? ஆனால், பிரான்சில் இவர் எந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டார் என்ற விவரம் ஐ.பியிடம் இல்லை. இப்போது பிரான்ஸ் போலீசார் தந்துள்ள தகவல்களின்படி இவரது பின்னணியை ஐ.பியும் மாநில உளவுப் பிரிவினரும் மீண்டும் தோண்ட ஆரம்பித்துள்ளனர். இவர் மீது தமிழகத்தில் எந்த வழக்குகளும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், மெக்கனிக்கல் என்ஜினியரான இவர் அல்-கொய்தா அமைப்புடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும், பாகிஸ்தானில், குறிப்பாக பின்லேடன் கொல்லப்பட்ட அபோடாபாத் நகரில் தீவிரவாத அமைப்பினருடன் இவர் தொடர்பு கொண்டிருந்ததாகவும் பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பிரான்ஸ் வாலிபர்கள் மூவரை தீவிரவாத பயிற்சிக்காக இவர் பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது[12].

போலீஸார் திரட்டி வருகின்றனர்: இவர் குறித்து முழுமையாக விசாரித்து தகவல் தருமாறு பிரான்ஸ் கோரியுள்ளது. இதையடுத்து ரஷீத்தின் குடும்பத்தைப் பற்றிய முழுமையான தகவல்களைப் போலீஸார் திரட்டி வருகின்றனர். ரஷீத் குடும்பத்தினர் கடைசியாக திருச்சியில் தங்கியிருந்ததும், அவர் தனது பாஸ்போர்ட்டை திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் தான் பெற்றார் என்றும் தெரியவந்துள்ளது. ஆனால் அவரிடம் போலி பாஸ்போர்ட் ஒன்றும் இருக்கலாம் என்றும் தெரிகிறது. பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு பலமுறை சென்று வந்துள்ள ரஷீத்துக்கு, ஷியா எதிர்ப்பு இயக்கமான ஜுன்துல்லா (Jundullah) என்ற அமைப்பின் மூலமாக அல்-கொய்தா இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்பட்டதாக பிரான்ஸ் உளவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

முகமது நியாஸ் அப்துல் ரஷீத் பற்றி உள்துறை அமைச்சர் கூறியுள்ளது[13]: தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக பிரான்சில் கைது செய்யப்பட்ட மதுரை வாலிபர் – ரஷீத் ஆப்கானிஸ்தானில் ஜிகாத் பயிற்சிக்காக மொராக்கோ, பாகிஸ்தான், துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த 3 பிரான்ஸ் வாலிபர்களை அனுப்பி வைத்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். டெல்லியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், சிமி இயக்கத்துடன் தொடர்புள்ள இவர் வேலைக்காக  2008-ம் ஆண்டில் பிரான்ஸ் சென்ற அவர்[14],  பிரான்ஸ் சென்று, அங்கு தீவிரவாத கொள்கை கொண்டவர்களுடன் நெருக்கமாகி அவர்களுக்கு உதவியுள்ளார். ஆப்கானிஸ்தானில் ஜிகாத்[15] பயிற்சிக்காக மொராக்கோ, பாகிஸ்தான், துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த 3 பிரான்ஸ் வாலிபர்களை அனுப்பி வைத்துள்ளார். இவரது வலையில் இந்தியர்கள் யாரும் சிக்கவில்லை. முதலில் இவரது குழு மாதம் ஒரு முறை சந்தித்து வந்துள்ளது. பின்னர் அடிக்கடி சந்தித்து தீவிரவாத பயிற்சி-தாக்குதல்கள் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களிடம் பயிற்சி பெற ஆட்களை அனுப்பியதாக பிரான்ஸ் போலீசாரிடம் ரஷீத் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த விஷயத்தில் பிரான்ஸ் முழுமையாக விசாரித்து முடிக்கும் வரை ரஷீதுக்கு இந்தியத் தூதரக உதவிகள் ஏதும் வழங்கப்படாது. விசாரணையின் முடிவைப் பொறுத்தே மத்திய அரசின் செயல்பாடு இருக்கும். ரஷீத் விஷயத்தில் பிரான்சும் இந்தியாவும் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து வருகின்றன. தனது 21 வயதிலிருந்தே தீவிரவாத எண்ணங்களில் மூழ்கியுள்ளார் ரஷீத் என்பது உளவுத் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் சிதம்பரம்.

வேதபிரகாஷ்

25-05-2011


[1] வீட்டு சமையல் / வீட்டு ஊறுகாய் போல, இப்படியும் சொல்லலாமா என்று சிதம்பரம் தான் கூற வேண்டும்.

[7] Man detained inParis is fromMadurai?,  MADURAI, May 24, 2011

http://www.thehindu.com/news/national/article2043102.ece

[8] India seeks report from France on Rashid; http://www.hindu.com/2011/05/25/stories/2011052563090100.htm

[15] முன்பு ஜிஹாத் பற்றிய எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளேன் என்று சொன்ன சிதம்பரம், இப்பொழுது, புதியதாக எந்த ஜிஹாதைப் பற்றி சொல்கிறார் என்று தெரியவில்லை.