Posted tagged ‘மியன்மார்’

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

பிப்ரவரி 21, 2020

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

Washermenpet Muslim poster Feb 2020- BBC Tamil

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் பிரச்சினையா, அரசியலா?: சென்னை வண்ணாரப்பேட்டை பிரச்சினை ஆழமாக அலசிப் பார்த்தால், அது வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு அல்லது இந்தியாவிற்கான பிரச்சினை அல்ல என்று தெரிகிறது. எல்லை மாநிலங்கள் போலான ஊடுருவல்கள், அயலாட்டவர் இங்கு இருக்கிறார்கள் என்ற பட்சத்தில் அவர்களது நிலைப்பாடு உள்ளது என்றால், அது திகைப்படையச் செய்கிறது. ஏற்கெனவே ஐசிஸ் தொடர்புள்ள தீவீரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் இப்பகுதிகள் மற்றும் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். அப்படியென்றால், இவர்களுக்கு ஏதோ விசயம் தெரியும் போலிருக்கிறது. அமைதியாக “போராட்டம்” நடத்துகிறோம் என்றால், இத்தகைய சூழ்நிலை உருவாகி இருக்காது. குறிப்பிட்ட தெருக்களில் உள்ளவர்கள் நிச்சயமாக “ஹவுஸ் அரெஸ்ட்” நிலையில் இருந்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் தயாராக இருந்தார்கள் என்றாக வேண்டும். ஆனால், இஸ்லாமியர் திட்டமிட்டு, அதனை உருவாக்கியுள்ளனர் என்றும் தெரிகிறது. எனவே, இது எப்படியாவது ஏதோ ஒரு விதத்தில், அமைதியைக் குலைக்க வேண்டும் அல்லது ஊடக கவனம் பெற வேண்டும் போன்ற யுக்தியுடன் ஆரம்பித்ததாக தெரிந்தது. உடனடியாக அரசியல் நுழைந்தது, வேறுவிதமாக உள்ளது.

Washermenpet Muslim poster Feb 2020

போலீஸாரை ஒருதலைப் பட்சம்மாக குறை கூறும் ஊடகங்கள்: சொல்லி வைத்தால் போல, எதிர்கட்சிகள் எல்லாமே, ஒரே மாதிரி போலீஸார் நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை விடுப்பது, ஆளும் அரசை குறை சொல்வது போன்ற விதங்களில் அதிரடி பிரச்சார வேலைகளை முடுக்கியுள்ளார்கள். மின் மற்றும் அச்சு ஊடகங்கள் அவர்கள் மற்றும் அத்தகைய சித்தாந்தக்காரர்களிடம் இருப்பதால், ஆங்கில ஊடகங்களும் பாரபட்சமாகத்தான் இருக்கின்றன. தி இந்து மற்றும்பிரென்ட் லைன் படித்தால் விளங்கும். போலீஸார் பெண்களை, சிறுவர்களை அடித்தார்கள் என்று, பெண்கள் சொன்னதாக, நிருபர்கள் செய்தியை, அப்பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன[1]. பிறகு, போலீஸார் சொல்வதையும் வெளியிட வேண்டுமே, ஆனால், அதை செய்யவில்லை.  பிரென்ட்லை விடும் கதை கொஞ்சம் ஓவராகவே உள்ளது, ஏனெனில், அதற்கு ஆதாரம் இல்லை. ஜீப்பில் வைத்து அடித்தார்கள் என்றால் யார் பார்த்தார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் செய்தி என்று பக்கம்-பக்கமாக போட்டிருக்கிறது[2].

caa demo politicized viduthalai 16-02-2020

தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ உறுப்பினர் போலீஸாருக்கு எதிராக பயங்கரமான புகார் சொன்னது: 15-02-2020 அன்று தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ சார்பாக பேசியவர், போலீஸார், பெண்களின் மர்ம உறுப்புகளில் லத்தியை நுழைத்து….. என்றெல்லாம் பேசியது திகைப்பாக இருந்தது. இதை தந்தி-ஒருங்கிணைப்பாளர் தடுக்கவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் எடுத்துக் காட்டிய பிறகும், அவர் பிடிவாதமாக, மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுப்போம் என்றெல்லாம் வாதித்தார். போலீஸாரை எதிர்த்து அப்படி பேசுகிறார்களே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை என்ற போக்கு தான் காணப் பட்டது. பார்ப்பவர்களுக்கே, அது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தது. அனுமதி எல்லாமல், பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் சாலைகளை மறித்து, ஆக்கிரமித்து, சட்டங்களை மீறி, “அமைதியான போராட்டம்” என்று பெண்கள்-சிறார்களை முன்னே வைத்து கலாட்டாவில் ஈடுபட்டதே, முஸ்லிம்களின் விசமத் தனத்தைக் காட்டுகிறது. ஒருதலைப் பட்சமாக இப்படி ஊடகங்கள் போலீஸாரை குறைகூறுவதும் விசமத் தனமாக உள்ளது. “டெக்கான் குரோனில்” ஒரு பெண் ஜாயின்ட் கமிஷனர், இரண்டு பெண் போலீஸார் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் போராட்டக் காரர்கள் கற்களை வீசியதில் காயமடைந்தனர் என்று போலீஸார் சொன்னதாக, செய்தி வெளியிட்டுள்ளது[3]. மற்ற படி, பிடிஐ என்று செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளது[4]. ஏன் நிருபர்கள் ஆஸ்பத்திரிக்குச் சென்று உண்மை அறிந்து செய்தி போடவில்லை என்று தெரியவில்லை.

Tiruma visiting hospital-16-02-2020

திருமாவளவன் உளறுவது [14-02-2020]: அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்[5]. சிஏஏவுக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்[6]. அந்த அறிக்கையில், “குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் அறவழியில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். பெண்களின் போராட்டம் வெற்றிகரமாக நடப்பதை சகித்துக்கொள்ளமுடியாமல் அவர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி இருக்கிறது. அங்கு இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதை பார்த்த ஆண்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக அங்கே வந்துள்ளனர். அவர்களைத் கடுமையாக காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அந்த நெரிசலில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது. இந்தச் செய்தியை அறிந்ததும் நேற்றிரவு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்தவர்களை விடுவித்துள்ளார். இதனால் சாலை மறியல் போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன….” இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது திகைப்பாக உள்ளது.

Muslims propagating false-police-16-02-2010

உண்மை மறைத்து விமர்சிக்கு போக்கு: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “பெற்றோரின் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகிய விவரங்களைச் சேகரிக்கச் சொல்லும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை தெரிவித்துள்ள நிலையில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை, அதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று இங்கே உள்ள அதிமுக அரசு கூறி வருகிறது. குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து அதை சட்டமாக நிறைவேற்றி இன்று இந்தியா முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுவதற்கு வழிவகுத்த அதிமுக, தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்தைப் போல வன்முறை பூமியாக மாற்றுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. அமைதியான அறவழிப் போராட்டங்களைக் காவல்துறையை வைத்து ஒடுக்குவதற்கு முயல்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் நேற்று நடந்த சம்பவம். இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனுமதிக்க முடியாது”.

© வேதபிரகாஷ்

21-02-2020

Muslim demo-politicized0Viduthalai 16-02-2020

[1] The protesters claimed that the police entered the area in large numbers and started beating the youths who had been organising protests against the CAA in the city. In the melee women and children were beaten. Jannathul Pradesh, one of the women injured in the police violence said: “I told them [the police] not to beat us and the children. We were very peaceful and disciplined. But they were inhuman and resorted to indiscriminate beatings. Many women suffered injuries. We got treated in local hospitals here.”

Frontline, Women, children injured in police lathi-charge against anti-CAA protesters in north Chennai, ILANGOVAN RAJASEKARAN, Published : February 15, 2020 18:37 IST
https://frontline.thehindu.com/dispatches/article30829834.ece

[2] A number of women Frontline spoke to on Saturday said that men outnumbered women in the police force that arrived there. “It was to terrorise the people, especially women, to discourage them from joining such protests in future. We were manhandled and beaten. The State wants to serve a warning to us—not to come out of our houses to defend our rights,” said Jannathul. Many women alleged that they were beaten inside the police vans by policemen and wanted the government to take action against the erring police personnel who unleashed violence against them.

[3] Police claimed that four of their personnel—a woman joint commissioner, two women constables and a sub-inspector—were injured in stonepelting by the protesters.

[4] Deccan Chronicle, Washermanpet violence triggers protests in Tamil Nadu, DECCAN CHRONICLE / PTI, Published: Feb 15, 2020, 6:21 pm IST; UpdatedFeb 15, 2020, 6:33 pm IST

https://www.deccanchronicle.com/nation/politics/150220/friday-night-anti-caa-clash-triggers-protests-in-tamil-nadu.html

[5] ஏசியா.நெட்.நியூஸ், இஸ்லாமியரை சாகடித்தவர்கள் மீது கொலை வழக்குப்போடுங்ககொந்தளிக்கும் திருமாவளவன்..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 15, Feb 2020, 3:35 PM IST; Last Updated 3:35 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/murder-of-the-muslims-who-killed-the-file-case-says-thirumavalavan-q5qmow

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (3)

மே 31, 2015

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (3)

Burmese army arrested three Rohingya with Bangladeshi mobiles

Burmese army arrested three Rohingya with Bangladeshi mobiles

கள்ளக் குடியேறிகளின் மீது மலேசியா எடுக்கும் நடவடிக்கை: மலேசியாவில் சட்ட அமலாக்க அதிகாரிகள் நாடு முழுவதும் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கள்ளக் குடியேறி கள் 2,170 பேர் கைது செய்யப்பட்டதுடன் முதலாளிகள் 25 பேர் கைது செய்யப்பட்டதாக மலேசிய உள்துறை துணை அமைச்சர் கூறினார். இந்த ஆண்டு மே மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை துணை அமைச்சர் வான் ஜூனைடி கூறினார். மலேசியாவுக்குள் நுழையும் “கள்ளக் குடியேறிகளின்” எண்ணிக்கையை கணிசமாக குறைப்பதற்காக மலேசிய அதிகாரிகள் அந்த சோதனையை மேற்கொண்டனர். குடியேறிகள் 7032 பேரை சோதனை செய்ததில் “கள்ளக் குடியேறிகள்” என்று தெரியவந்த 2,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக வான் ஜூனைடி கூறினார். கள்ளக் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க அமைச்சு நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது என்றும் சம்பந்தப்ட்ட நிறுவனங்களும் சமூகத்தினரும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்[1].

rohingya-muslim-myanmar-begs-bangladesh-coast-guard-official-stay

rohingya-muslim-myanmar-begs-bangladesh-coast-guard-official-stay

தீவிரவாதிகள் / போராளிகள் இயக்கத்தில் சேர மாறு வேடம் தரித்த ஆட்கள்என்று குற்றஞ்சாட்டும் மலேசியா: தீவிரவாதிகள் / போராளிகள் இயக்கத்தில் சேர விரும்பும் மலேசியர்களில் சிலர், அரசாங்கம் சாரா அமைப்புகளைச் சேர்ந்த உதவிப் பணியாளர்கள் போல் மாறு வேடம் தரித்து போராளிகள் குழுக்களில் சேர்கின்றனர் என்று மலேசிய உள்துறை துணை அமைச்சர் வான் ஜூனைடி துங்கு ஜஃபார் கூறியுள்ளார். அரசாங்கம் சாரா மனிதாபிமான அமைப்புகளைச் சேர்ந்த உதவிப் பணியாளர்கள் போல் அவர்கள் மாறு வேடம் தரித்திருப்பதால் யார், யார் அத்தகைய போராளிகள் குழுக்களில் சேரவுள்ளனர் என்பதை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக உள்ளது என்று வான் ஜூனைடி கூறினார்[2]. ஐசிஸ் ஆள்சேர்ப்பு நடவடிக்கையால், உலகம் முழுவதும் மூளைசலவை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்று போராட தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால், எந்த நாடும் அத்தகைய போராளிகள் / தீவிரவாதிகள் தங்களது நாட்டிலிருந்து சென்றார்கள் என்று ஊடகங்கள் குறிப்பிடவோ, அதனால், அந்நாட்டவர் மற்றவர்களால் சந்தேகிக்கப் படவோ, எந்த நாடும் விரும்பவில்லை. இதனால் தான், முஸ்லிம்கள் என்றாலும், முஸ்லிம் நாடுகள் தயங்க்கின்றன.

Rohingya Muslims found on boat rescued by Myanmar navy

Rohingya Muslims found on boat rescued by Myanmar navy

ரோஹிங்கா முஸ்லிம்கள் மேற்கு வங்காளத்தில் ஊடுருவலும், இந்தியாவிற்கு எதிராக அவர்களது நடவடிக்கைகளும் (2014)[3]: இவர்களின் பிரச்சினை இந்தியாவிலும் உள்ளது. இத்தகைய தீவிரவாதத் தொடர்புகள் மேற்கு வங்காளத்திற்கு நல்லதல்ல, இருப்பினும் ஆளும் கட்சியின் தொடர்புகள், ஆதரவு, போலீஸ் மெத்தனமாக நடந்து கொள்வது முதலியன மற்ற தீவிரவாத ஆராய்வு குழுக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 2013ம் ஆண்டில் மட்டும் 127 ரோஹிங்கா முஸ்லிம்களை மாநில அரசு கைது செய்துள்ளது. தீவிரவாத தொடர்புகள் இல்லையென்றாலும், ஐ.பி, ஒவ்வொருவனின் பின்னணியையும் ஆராய்ந்து வருகிறது. சுமார் 10,000 பேர் எல்லைகளைக் கடந்து இந்தியாவில் நுழைந்துள்ளனர் என்று தெரிய வருகிறது. ஸ்வரூப்நகர், பரிர்ஹத் மற்றும் கைகதா என்ற பகுதிகள் வழியாக அவர்கள் ஊடுருவியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் ஊடகங்கள் இவர்களை “ரோஹிங்கர்”, “முஸ்லிம்கள்”, “இடம் பெயர்ந்தவர்கள்”, “அகதிகள்” என்று பலவாறாகக் குறிப்பிடுவதும் வியப்பாக உள்ளது. ஏனெனில், இவர்கள் எல்லோருமே மியன்மார் / பர்மா குடிமகன்கள். முசபர்நகர் கலவரங்களின் போது, ரோஹிங்க முஸ்லிம்கள் மயன்மாரில் எவ்வாறு கொடுமைப்படுத்தப் பட்டனர் என்பது பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் புழக்கத்தில் விட்டதால் தான் கலவரங்கள் ஏற்பட்டதற்கான காரணங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், உள்ளூர் அரசியல்வாதிகள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர். ஆக, ரோஹிங்க முஸ்லிம்களின் பிரச்சினை இந்தியாவையும் பாதித்துள்ளது.

Rohingya migrants bring back food supplies dropped by a Thai army helicopter after jumping to collect them at sea from a boat

Rohingya migrants bring back food supplies dropped by a Thai army helicopter after jumping to collect them at sea from a boat

பங்களாதேசத்தின் பங்குமுஸ்லீம்களைப் பெருக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பது: பர்மாவின் மத்தியில் இருக்கும் மெய்க்திலா (central city of Meikhtila) என்ற நகரத்தில் தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. பங்களாதேசத்தில் அதிகமாக உள்ள முஸ்லீம்களை அடுத்த நாடுகளில் நுழைய வைப்பது, அவர்களது வேலையாக உள்ளது. ஒரு இடத்தில் முஸ்லீம்கள் இடத்திற்கு அதிகமாக பெருகிவிட்டால், அவர்கள் அப்படியே இடம் கொள்ளாமல் பொங்கி பக்கத்தில் விழுந்து விடுவார்களாம். அப்படி ஒரு சித்தாந்தமே பேசப்பட்டு வருகிறது. இதனால், இந்த ரோஹின்யா முஸ்லீம்கள் பங்களாதேசத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ளனர்[4]. இவர்களுக்கு இடம் கொடுப்பது, சலுகைகள் வழங்குவது முதலியவற்றை பௌத்தர்கள் விரும்பவில்லை. இது முஸ்லீம்களுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன[5] என்று மனித உரிமைக் குழுக்கள் எடுத்துக் காட்டுகின்றன. முஸ்லீம்கள் வழக்கம் போல எண்ணிக்கையில் குறைவாக இருந்தால் ஒருமாதிரி இருப்பார்கள், எண்ணிக்கை அதிகமானால் வேலையை காட்ட ஆரம்பித்து விடுவார்கள். இவ்வாறே புதன்கிழமை, ஒரு புத்த பிட்சு, ஒரு முஸ்லீம் கடையில் பொருள் வாங்கும்போது, வாதம் ஏற்பட்டது. அது விவகாரமாகி கலவரத்தில் முடிந்தது. ஆனால், முதலில் கொல்லப்பட்டது அந்த புத்த பிட்சு தான். இதுதான் கலவரத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது[6]. பர்மாவில் ஏற்பட்டுள்ள கலவரங்களுக்கு உலக அளவில் கவலை ஏற்பட்டுள்ளது[7].

Rohingya Muslims condition

Rohingya Muslims condition

ரோங்கிய பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி?: ஆசியான் அமைப்பைச் சேர்ந்த பணக்கார இஸ்லாமிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருனேய் போன்றவை இம்முஸ்லிம்களை காக்கலாம் என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்[8]. கடார் $ 5,00,00,000 கொடுப்பதாக அறிவித்துள்ளது[9]. உண்மையிலேயே 10 லட்சம் முஸ்லிம்களை பணக்கார முஸ்லிம் நாடுகள் தத்தெடித்துக் கொள்வது, அகதிகளாக ஏற்றுக் கொள்வது, போன்ற செயல்களை செய்வது மிகவும் சுலபமாகும். இருப்பினும், கருத்துகளைத் தெரிவிப்பதோடு நின்றுள்ளன. மியன்மாரும் தன்னுடைய எல்லைகளுக்குள் அவர்களுக்கு இடம் கொடுத்து பிரச்சினையை முடிக்கலாம்[10]. அதற்கு ரோஹிங்கிய முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும். தங்களுடைய எல்லைக் கடந்த போக்குவரத்துகள், உறவுகள், சம்பந்தங்கள் முதலியவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும்[11]. பௌத்தர்களிடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டும். தேசிய நீரோட்டத்தில் கலந்து தாங்களும் பர்மிய ச்நாட்டவர் என்ற உணர்வைக் கொள்ள வேண்டும். பௌத்தர்களும் அதேபோல, அவர்களை நடத்த வேண்டும், அதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இருப்பினும், என்ன நடக்கும் என்பது தெளிவாக இல்லாத நிலையுள்ளது. ஏனெனில், இப்பிரச்சினை அந்த அளவிற்கு அரசியலாக்கப் பட்டுள்ளது.

PARIS, FRANCE - OCTOBER 27:  The Heir Apparent of Qatar HH Sheikh Tamim bin Hamad Al Thani  attends the Memorial Service For Christophe De Margerie, Total CEO, at Eglise Saint-Sulpice on October 27, 2014 in Paris, France.  (Photo by Pierre Suu/Getty Images)

PARIS, FRANCE – OCTOBER 27: The Heir Apparent of Qatar HH Sheikh Tamim bin Hamad Al Thani attends the Memorial Service For Christophe De Margerie, Total CEO, at Eglise Saint-Sulpice on October 27, 2014 in Paris, France. (Photo by Pierre Suu/Getty Images)

ஊடகங்களும் பாரபட்சத்துடன் செய்திகளை கொடுத்து வருகின்றன. மற்ற நாட்டில் உள்ள முஸ்லிம்கள் இதனை முஸ்லிம் பிரச்சினையாக மாற்றி ஆர்பாட்டங்கள் முதலியவற்றைச் செய்து வருவதும் வினோதமாக உள்ளது. ரோஹிங்க முஸ்லிம்களை ஏன் ஆயுத போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்கவில்லை என்று தெரியவில்லை. கலவரங்களுக்கு காரணமான முஸ்லிம்களையும் கண்டிக்கவில்லை. அப்படியென்றால், முஸ்லிம்கள் அத்தகைய கலவரங்கள் தொடர வேண்டும் என்று நினைக்கிறார்களா?

© வேதபிரகாஷ்

30-05-2015

[1] http://www.tamilmurasu.com.sg/story/26037

[2] http://www.tamilmurasu.com.sg/story/43388

[3] https://buddhismstudies.wordpress.com/2013/03/23/why-buddhist-burma-could-not-get-peace-and-harmony/

[4] http://www.thehindu.com/news/international/south-asia/clashes-rock-myanmar-again/article4537607.ece

[5] Mark Farmaner of human rights group Burma Campaign UK said, “We’ve seen examples of anti-Muslim propaganda in Mon state, Shan state, Kachin state and Karen state, where people are distributing anti-Muslim leaflets,” he told the Guardian. “It may not be directly linked to violence in Rakhine state in an obvious way but … aan incident like this [an argument in a gold shop] wouldn’t normally lead to deaths and thousands of people trying to flee, if there weren’t already incredibly high tensions in the first place. That means it’s been organised and that no action has been taken to put a lid on it.” President Tun Khin of the UK-based Burmese Rohingya Organisation described the violence in Meikhtila as a state-sponsored attack, and said: “These are not communal clashes; this is not equal sides fighting. These are organised attacks to cleanse [Burma] of Muslims where the vast majority of those killed and displaced are Muslims … There should be laws on racism if the government wants to see durable peace in Burma.”

http://www.guardian.co.uk/world/2013/mar/22/burma-ethnic-violence-dead-meikhtila

[6] Troubles began on Wednesday after an argument broke out between a Muslim gold shop owner and his Buddhist customers. A Buddhist monk was among the first killed, inflaming tensions that led a Buddhist mob to rampage through a Muslim neighbourhood.

[7] http://online.wsj.com/article/SB10001424127887324103504578376403112277548.html

[8] Muslim countries within ASEAN – Indonesia, Malaysia and Brunei – have more than enough wealth to care for their Islamic neighbors

http://thediplomat.com/2015/05/aseans-refugee-embarassment/

[9] http://www.ibtimes.co.uk/qatar-pledges-33mn-indonesia-rescuing-muslim-rohingya-migrants-1503410

[10] http://thediplomat.com/2015/05/solving-the-rohingya-crisis/

[11] http://burmatimes.net/burmese-army-arrested-three-rohingya-with-bangladeshi-mobiles/

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (2)

மே 31, 2015

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (2)

A migrant Rohingya woman from Myanmar breaks down while holding her son at Kuala Langsa in Aceh province

A migrant Rohingya woman from Myanmar breaks down while holding her son at Kuala Langsa in Aceh province

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள்: மே.28, 2012 அன்று மூன்று முஸ்லிம்கள் ஒரு பௌத்த பெண்மணியைக் கற்பழித்தனர். இதனால், பௌத்தர்கள் முஸ்லிம்களைத் தாக்கியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். மனித உரிமைகளைக் கண்காணிக்கும் குழு, இது முஸ்லிம்களை அங்கிருந்து விரட்டும் முயற்சி என்று குற்றஞ்சாட்டியது[1]. சுமார் 75,000 முஸ்லிம்கள் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் மற்றும் கைது செய்யப்பட்டனர்[2]. இவ்விசயத்தில் கூட, முஸ்லிம்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது, எதற்காக கற்பழிப்பு போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்பது நோக்கத்தக்கது. ஏற்கெனவே, தாக்கப்படும் நிலையில் இருக்கும் போது, இத்தகைய பிரச்சினைகளில், சமூக குற்றங்களில் முஸ்லிம்கள் ஏன் ஈடுபட வேண்டும்? மேலும் ரோஹிங்கிய முஜாஹித்தீனின் தாக்குதல்களும் இருப்பதால், பரிமீய பௌத்தர்கள் அவர்களை “வங்காள தீவிரவாதிகள்” என்றே குறிப்பிடுகின்றனர்.

A refugee tries to help his unconscious friend after being save from the sea in Kuala Langsa

A refugee tries to help his unconscious friend after being save from the sea in Kuala Langsa

மியன்மார் தனது நிலையைத் தெளிவாக கூறியுள்ளது: கப்பல்களில் காணப்படும் முஸ்ம்களைப் பற்றி பங்களாதேசம், மியன்மார், மலேசியா, தாய்லாந்து முதலிய நாடுகள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது. இந்த எல்லா நாட்களும் அவர்கள் தங்கள் பிரஜைகள் அல்ல என்று மட்டும் அறிவிப்பதோடு, “கள்ளக் குடியேறிகள்” என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். ரோஹிங்கிய முஸ்லிம்களை தங்களது நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜிதின் லைன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மியான்மரில் கடந்த வியாழக்கிழமை 21-05-2015 அன்று முறைகேடான பாதுகாப்பு இல்லாத படகில் பயணம் செய்த 200-க்கும் மேற்பட்டவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் அங்குள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அகதிகளை ஐநா குழுவினர் பார்வையிட்டு மருத்துவ உதவிகளை அளித்தனர். மியான்மர் கடற்படையினரால் மீட்கப்பட்ட அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை சமூக விரோதிகள் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு கடத்தி செல்ல இருந்ததாக மியான்மர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ரோஹிங்கிய சிறுபான்மையின மக்களை தங்களது நாட்டு மக்களாக மியான்மர் நடத்த வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்த நிலையில், ரோஹிங்கிய மக்கள் பிரச்சினையில் மியான்மர் மீது குறை கூறுவதை ஏற்க முடியாது என்று மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜிதின் லைன் தெரிவித்துள்ளார். மேலும், “அகதிகளான மக்களுக்கு ஏற்படும் பிரசின்னைகளுக்கு ஊகத்தின் அடிப்படையில் மியான்மரை காரணம் காட்டக் கூடாது. அவரகள் எங்கள் நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்ள கூறுவது தவறானது” என்றார்[3].

Bangladeshi migrants walk toward a temporary shelter al at Kuala Langsa Port in Langsa

Bangladeshi migrants walk toward a temporary shelter al at Kuala Langsa Port in Langsa

தாய்லாந்தில் இத்தகைய முஸ்லிம்கள் வந்ததால் விசாரணை[4]: தாய்­லாந்­தின் தெற்குப் பகு­தி­யில் நூற்­றுக்­கும் அதி­க­மா­ன­ சட்டவிரோதக் குடியேறிகளிடம் அவர்­கள் ஆட்­க­டத்­தல் நட­ வ­டிக்கை­க­ளால் குடி­யே­றி­யவர்­களா என்பது குறித்து அதி­கா­ரி­கள் விசாரணை மேற்­கொண்­டுள்­ள­னர்[5]. தாய்­லாந்து எல்லைக்­குள் ஆட்­க­டத்­தல் முகாம்­கள் பற்றிய உண்மை­களைக் கண்ட­றி­யும் முயற்­சி­யில் இந்த விசாரணை நடத்­தப்­பட்­டுள்­ளது. மியன்­மார், பங்­ளா­தேஷ் நாட்­ட­வ­ருடையதாக இருக்­க­லாம் என நம்பப்­படும் சுமார் 33 உடல்­கள் சொங்க்லா மாவட்­டத்­தில்­ ஒரு பள்­ளத்­தாக்­கில் கடந்த வாரம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது; ஆட்­க­டத்­தல் முகாம்­கள் மூன்று கண்டு­பி­டிக்­கப்­பட்­டன. இதனையடுத்து சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்­தலை முறி­ய­டிக்க அதி­கா­ரி­களுக்கு 10 நாட்கள் அவ­கா­சம் அளித்­தி­ருந்தார் தாய்லாந்து பிர­த­மர் பிரயுத் சனோச்சா. மலேசியா, மியன்­மார் நாடு­களு­டன் முத்­த­ரப்பு கூட்டம் ஒன்றை இதன் தொடர்­பில் நேற்று முன்­ தி­னம் நடத்­தினார் திரு பிரயுத். தற்போது விசா­ரிக்­கப்­படும் 199 பேரில் 74 பேர் மியன்­மாரைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்­லிம்­கள்; 58 பேர் பங்­ளா­தேஷைச் சேர்ந்த­வர்­கள். கடத்தப்பட்டவர்கள் தாய்லாந்­தின் சமுதாய மேம்பாடு, மனிதப் பாது­காப்பு அமைச்­சி­டம் ஒப்­படைக்­கப்­படு­வர். தாமாக விரும்பி தாய்­லாந்­துக்­குள் நுழைந்­தவர்கள் குடி­நுழை­வுப் போலி­சா­ரி­டம் ஒப்­படைக்­கப்­பட்டு சொந்த நாடு­களுக்­குத் திருப்பி அனுப்­பப்­படு­வர், என்று அரசு அறிவித்துள்ளது.

Burma Rohingya Refugee Camp

Burma Rohingya Refugee Camp

முரண்பட்ட செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாய்லாந்தில் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய நாடுகள் பங்கேற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் 29-05-2015 அன்று (வெள்ளிக்கிழமை) நடந்து. இதில், ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரத்தை தங்களது நாட்டு மக்களுக்கான பிரச்சினையாக எடுத்தக் கொள்ள வலியுறுத்த உள்ளதாக ஐ. நா. குறிப்பிட்டது[6]. மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக, பௌத்தர்கள் தொடுக்கும் தாக்குதல்கள் காரணமாக, பெருமளவிலான முஸ்லிம் மக்கள் மியன்மாரை விட்டு கப்பல்களில் பிற நாடுகளுக்கு தப்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, கப்பல்களில் அடைக்கலம் தேடி வரும் மியன்மார் முஸ்லிம் மக்களை ஏற்க பல நாடுகள் மறுப்பதால், உண்ண உணவின்றி கப்பலிலேயே அவர்கள் பரிதாபமாக இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள், மியன்மார் இனத்தவர்கள் அல்ல என 1956 இல் இருந்தே ஒரு கருத்து அந்த நாட்டில் நிலவி வருகிறது, அந்த காலகட்டத்தில் இருந்து ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக பல வன்முறைகள் அரங்கேறின. இன்று ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் பலவந்தமாக மியன்மாரை விட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். படகுகளில் ஏற்றி அவர்களை வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கும் செயலை அங்குள்ள பௌத்த இனவாதிகள் செய்து வருகிறார்கள்[7]. அண்மையில் இவ்வாறு படகில் தத்தளித்தவர்களுக்கு மலேசியா அடைக்கலம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழ் ஊடகங்கள் ஒரு குழப்பத்துடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன[8]. மேலும் பங்களாதேசத்திலிருந்து வரும் அகதிகளும் இவர்களுள் சேர்ந்துள்ளது மர்மமாக உள்ளது.

MYANMAR_MIGRANTS, where they go

MYANMAR_MIGRANTS, where they go

நாடற்றவர்கள்”, “கள்ளக்குடியேறிகள்”, என்றெல்லாம் சொல்லப்படுகின்ற ரோஹிங்கிய முஸ்லிம்கள்: அமெரிக்க, இந்தோனேசிய, மலேசிய அதிகாரிகள் மியன்மார் சென்றுள்ளனர். அண்மை நாட்களாக மோசமாகிவரும் கள்ளக்குடியேறிகளின் சர்ச்சை குறித்து மியன்மார் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது அந்தப் பயணத்தின் நோக்கம்[9]. இந்தோனேசியா, தாய்லந்து, மலேசியா ஆகிய மூன்றும், வேறு நாடுகளில் இருந்து சட்ட விரோதமாகக் குடிபெயர முயற்சி செய்வோர் வரும் படகுகளை அனுமதிக்கப்போவதாகக் கூறியிருந்தன. அதனைத் தொடர்ந்து மூன்று நாடுகளும் அவற்றின் அதிகாரிகளை மியன்மாருக்கு அனுப்பிவைத்துள்ளன. வாரக் கணக்காக அந்தப் படகுகள், கடலில் அங்குமிங்கும் தத்தளித்ததைத் தொடர்ந்து, கரைக்குள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கடலில் அகப்பட்டிருக்கும் ஆயிரக் கணக்கானோருக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள மியன்மார் நெருக்கப்பட்டு வருகிறது[10]. இருப்பினும், மியன்மார் அம்மக்களின் அடையாளங்களை வைத்துதான் தீர்மானம் செய்யப்படும் என்றால், அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. பங்களாதேசம் ஒரு குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றி வருவதால், மற்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கும், அத்தகைய முறைப்பற்றி சந்தேகம் எழத்தான் செய்கிறது. இப்பொழுதுள்ள பொருளாதார நெருக்கடியில் எந்த நாடும் அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மேலும், “நாடற்றவர்கள்” என்ற நிலையில் முஸ்லிம்களை, இதனால் தான் முஸ்லிம் நாடுகளே ஏற்க தயங்குகின்றன மற்றும் மறுக்கவும் செய்கின்றன.

Stranded Burma-Migrants-AFP

Stranded Burma-Migrants-AFP

புதைக்குழி பற்றிய விவாதங்கள்: 25-05-2015 அன்று மலேசியாவில் கண்டெடுக்கப் பட்ட புதைக்குழிகள் பல்வேறு விசயங்களை எடுத்துக் காட்டுகிறது[11]. அது இம்மாத ஆரம்பத்தில் தாய்லாந்தில் கண்டு பிடித்தது பொன்றேயுள்ளது. ஆட்கடத்தல், சமூக விரோத செயல்களுக்கு உபயோகப்படுத்தப்படல், கள்ளக்கடத்தல், போட்டிக் கூட்டங்களில் நடந்த சண்டை என்று பலவாறு விவாதிக்கப்படுகின்றன[12]. பங்களதேசம் மற்றும் மியன்மார் நாடுகளிலிருந்து வெளியேறும் அகதிகளை ஆல்-கடத்தல் கும்பல்கள் பலவிதங்களில் சதாய்த்து வருகின்றன[13]. தாய்லாந்து மற்றும் மலேசிய எல்லையில், இவ்வாறான புதைக்குழியில் பிணங்கள் கண்டுபிடிக்கப் பட்டது, பல்வேறுபட்ட யூகங்களை உண்டாக்கியுள்ளன. பொதுவாக, தென்கிழக்காசிய நாடுகள், எத்தகைய பிரச்சினை, தீவிரவாதம், போன்ற விசயங்களை ஏற்பதாக இல்லை.  அவர்கள் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தான் என்று வாதிக்கும் நேரத்தில் தான், மியன்மார் அவர்கள் தங்கள் நாட்டவர் அல்ல என்கிறது மற்றும் மலேசியா “கள்ளக் குடியேறிகள்” என்றும் குறிப்பிடுகிறது. ஐநா போன்ற குழுக்கள் பொதுவாக மனித உரிமைகள் என்றெல்லாம் பேசினாலும், முரண்பாடுகள் அதிகம் உள்ள இப்பிரச்சினையில், அனைவருமே ஜாக்கிரதையாகத் தான் செயல்பட்டு வருகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் வழக்கம் போல இதன் மூலம் ஆதாயம் தேடும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஊடக விளம்பரங்களுக்குக்காக ஆர்பாட்டங்கள் நடத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவது வேடிக்கையாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

30-05-2015

[1] http://www.hrw.org/sites/default/files/reports/burma0413webwcover_0.pdf

[2] http://www.cbc.ca/news/world/why-burma-s-rohingya-muslims-are-among-the-world-s-most-persecuted-people-1.3086261

[3] http://www.telesurtv.net/english/news/Myanmar-Denies-Rohingya-Muslims-Citizenship-Under-UN-Pressure-20150529-0018.html

[4] http://www.tamilmurasu.com.sg/story/50804

[5] http://www.telesurtv.net/english/news/Thousands-of-Rohingya-Migrants-Remain-Stranded-at-Sea-20150516-0011.html

[6]http://www.tamilantelevision.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%99-20362.html

[7]http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE-219430.html

[8] http://www.telesurtv.net/english/news/Malaysia-Says-800-Rohingya-Migrants-Muslims-Not-Welcome-20150514-0009.html

[9] http://www.tamilmurasu.com.sg/story/51689

[10] http://seithi.mediacorp.sg/mobilet/asia/21may-us-asia-migrants/1862354.html

[11] http://www.chicagotribune.com/news/nationworld/ct-boat-people-mass-grave-20150524-story.html

[12] http://www.dailyherald.com/article/20150525/news/305259989

[13] http://www.chicagotribune.com/news/nationworld/ct-migrants-rohingya-20150516-story.html#page=1

பர்த்வான், பீர்பும், புருலியா – எல்லாமே வெடிகுண்டுகள், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்டிருப்பது வினோதமே!

ஜனவரி 3, 2015

பர்த்வான், பீர்பும், புருலியா – எல்லாமே வெடிகுண்டுகள், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்டிருப்பது வினோதமே!

NIA-recovered-5-jars-of-picric-acid-used-for-making-explosives

NIA-recovered-5-jars-of-picric-acid-used-for-making-explosives

பெங்களூரில் குண்டுவெடிப்பும், வங்காளத்தில் குண்டுகள் கண்டுபிடிப்பும்: அக்டோபர் 2, 2014 அன்று பர்த்வனின் நடந்த குண்டுவெடிப்பு பங்காளாதேச தீவிரவாதிகளின் தொடர்புகளையும், அவர்களது சதிதிட்டங்களையும் வெளிப்படுத்திக் காட்டின. அந்நிலையில், மறுபடியும் அவ்விடங்களில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் குண்டு வெடித்தது, சிமியுடன் தொடர்புள்ளது என்று செய்திகள் வந்த வேளையில்[1], பீர்பும் மாவட்டத்தில் மன்கர் என்ற இடத்தில், பாலத்திற்கருகில், புத்புத் போலீஸ் ஷ்டேசனுக்கு அருகில், ஒரு வேனை மடக்கி 28-12-2014 அன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டபோது, அதில் ஏராளமான வெடிப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது[2]. முதலில், அந்த வேனின் டிரைவர், வண்டியை விட்டு ஓடப்பார்த்தான், ஆனால், போலீஸார்பாவனை விரட்டிப் பிடிடுத்துள்ளனர், என்று எஸ்.எம்.எச். மீர்ஜா, சூப்பிரென்டென்ட் ஆப் போலீஸ் அறிவித்துள்ளார்[3]. விசாரித்ததில், அவன் பெயர் அப்துல் காதிர் ஷேக் என்று தெரியவந்துள்ளது[4]. இந்த பீர்பும் மாவட்டம், ஏற்கெனவே பல தீவிரவாத காரியங்களுக்காக – ஊடுருவிய பங்காளதேசத்தவர் இருப்பது, வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது, போலீஸாரைத் தாக்கியது, திரணமூல்-பிஜேபிக்காரர்கள் அடித்துக் கொண்டது, குண்டுகளை எரிந்தது – செய்திகளில் அடிபட்டு, பிரபலமாகியுள்ளது. பிடிபட்ட அப்துல் காதிர் ஷேக் (47), ஜமூரியா போலீஸ் ஷ்டேசன் கட்டுப்பாடில் வரும் ஹிஜால்கர கிராமத்தைச் சேர்ந்தவன். ஒடிஸ்ஸாவில் உள்ள பலேஸ்வர் என்ற இடத்திலிருந்து, பீர்பும் மாவட்டத்தில் உள்ள பஞ்ச்லா கிராமத்திற்கு வெடிப்பொருட்களை எடுத்துச் சொல்வதை ஒப்புக்கொண்டான்[5].

The suspected SIMI

The suspected SIMI

வெடிப்பொருட்களை வாங்குபவர், எடுத்துச் செல்பவர், உபயோகிப்பவர் எல்லோரும் முஸ்லிம்களாக இருக்கவேண்டுமா, என்ன?: அப்துல் காதிர் ஷேக், துர்காபூரில் உள்ள மேஜிச்ட்ரேட்டின் முன்பாக ஆஜர் செய்யப்பட்டு சிறையிலடைக்கப் படுவான் என்று சூப்பிரென்டென்ட் ஆப் போலீஸ் கூறினார்[6]. மேலும் அவர், திரணமூல்-பிஜேபிக்காரர்கள் தாக்குதல்களுக்கும், இந்த வெடிப்பொருட்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்பதையும் விசாரிக்கப்போவதாக கூறினார். பீர்புமில், மக்ராவில் அவர்கள் அடித்துக் கொண்டதில், ஏழு பேர் கொல்லப்பட்டனர்[7]. “200 ஜிலேட்டின் குச்சிகள் கொண்ட 15 கட்டுகள், மொத்தம் 3,000, நாங்கள் வண்டியிலிருந்து கைப்பற்றியிருக்கிறோம்”[8], என்றும், தெரிவித்தார். முஸ்லிம்கள் தங்களை தீவிரவாதத்துடன் சேர்த்துக் குறிப்பிடக்கூடாது என்றெல்லாம் ஆர்பாட்டம், கலாட்டா செய்து எதிர்ப்புத் தெரிவித்தாலும், இப்படி, பிடிப்பட்டவர்கள் எல்லோரும் ஏன் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் விளக்குவதில்லை.  அதேபோல பங்களாதேசம் மற்றும் மியன்மார் நாடுகளிலிருந்து ஊடுருவி வந்துள்ள முஸ்லிம்கள், குறிப்பாக, இத்தகைய தீவிரவாத வேலைகளில் ஈடுபடவேண்டும் என்பதையும் அவர்கள் விளக்குவதில்லை.

ISIS twitter from Bangalore executive

ISIS twitter from Bangalore executive

மேற்குவங்காளத்தில் தொடர்ச்சியாக குண்டுகள், வெடிப்பொருட்கள் மற்றும் ரசாயனப்பொருட்கள் கண்டெடுக்கப்படுவதுசிக்குவது (அக்டோபர், 2014): அக்டோபர்.11, 2014 அன்று, ஒரு மூட்டை நிறைய வெடிக்கவைக்கும் கருவிகள், 11 ஜிலேன் குச்சிகள் முதலியன, புருலியா என்ற இடத்திலிருந்து 30 கிமீ தொலைவில், ரகுநாத போலீஸ் ஷ்டேசனுக்கு அருகில், ஒரு வேனில் கண்டெடுக்கப்பட்டது. இதைப்பற்றிய தகவல் கிடைத்ததால், சாதாரண உடையில் சென்ற நீல்காந்த் சுதிர் குமார் என்ற புருலியாவின் சூப்பிரென்டென்ட் ஆப் போலீஸ், அந்த வண்டியை மடக்கிப் பிடித்து, வெடிப்பொருட்களைக் கைப்பற்றினார்[9]. மேற்கு வங்காளம், அசன்லாலிருந்து, ஜாம்செட்பூருக்கு அது எடுத்தச்செல்லப்பட்டதாக கூறினர். ஆனால், இப்படி ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதாகக் கூறுவது, சம்பந்தமே இல்லாமல் டிரைவர்களை உபயோகிப்பது, குறிப்பாக திரிணமூல் காங்கிரஸ்காரர்களுக்கு தொடர்பு இருப்பது முதலியவை போலீஸாருக்கு திகைப்பாகவும், குழப்பமாகவும் இருந்தது. 1995ல் நடந்த புருலியாவில் ஆயுதங்கள் விமானம் மூலம் போட்ட வழக்கு பிரசித்தமானது. இதனால், குண்டு, வெடிமருந்து என்றாலே, போலீஸார் மிகவும் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. புருலியா ஆயுதவழக்கில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இயக்கங்கள், அப்பொழுதைய கம்யூனிஸ்டு கட்சிகள் முதலியவை தொடர்பு கொண்டிருந்தன[10].

ஐசிஸ் - ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் - சென்னை தொடர்பு

ஐசிஸ் – ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் – சென்னை தொடர்பு

பர்த்வான் குளத்தில் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டது (நவம்பர்.2014): 19-11-2014 (புதன்கிழமை) அன்று பர்த்வானில் உள்ள ஒரு குளத்தியிலிருந்து வெடிமருந்துகள் – மிக்க அபாயகரமான பிக்ரிக் அமிலம் (potentially dangerous picric acid) கண்டெடுக்கப்பட்டன[11]. ஆனால், விசித்திரமாக, அதில் சம்பந்தப்பட்டது மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்கர் என்ற முஸ்லிம்கள் ஆவர். ஐக்கிய நாடுகள் சங்கம், இவர்களை உலகத்திலேயே மிகவும் தண்டிக்கப்படுள்ள சிறுபான்மை இனத்தவர்களுள் ஓரினம் என்று குறிப்பிடுகிறது. அப்படியென்றால், அவர்கள் இந்தியாவில் ஏன் இப்படி தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது புதிராக உள்ளது. மேலும் திகைப்பான விசயம், அந்த குளம் முன்னர் வெடிகுண்டு வெடித்த, காக்ரகரிலிருந்து ஒரு கிமீ தூடரத்தில் தான் உள்ளது. அந்த வழக்கில் ஷேக் அம்ஜத் என்ற ஜே.எம்.பி தீவிரவாதி கைது செய்யப்பட்டிருக்கிறான். ஹைதராபாதில் 17-11-2014 (திங்கட்கிழமை) அன்று மொஹம்மது காலித் என்ற மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்கா முஸ்லிம் கைது செய்யப்பட்டான். தனக்கு அல்-குவைதா மற்றும் தெரிக்-இ-தலிபான் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறது என்று அவன் ஒப்புக்கொண்டுள்ளான்[12].

Amjad shekh, Picric acid, burdwan - changing technology

Amjad shekh, Picric acid, burdwan – changing technology

ரோஹிங்கா முஸ்லிம்கள் மேற்கு வங்காளத்தில் ஊடுருவலும், இந்தியாவிற்கு எதிராக அவர்களது நடவடிக்கைகளும்: இத்தகைய தீவிரவாதத் தொடர்புகள் மேற்கு வங்காளத்திற்கு நல்லதல்ல, இருப்பினும் ஆளும் கட்சியின் தொடர்புகள், ஆதரவு, போலீஸ் மெத்தனமாக நடந்து கொள்வது முதலியன மற்ற தீவிரவாத ஆராய்வு குழுக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 2013ம் ஆண்டில் மட்டும் 127 ரோஹிங்கா முஸ்லிம்களை மாநில அரசு கைது செய்துள்ளது. தீவிரவாத தொடர்புகள் இல்லையென்றாலும், ஐ.பி, ஒவ்வொருவனின் பின்னணியையும் ஆராய்ந்து வருகிறது. சுமார் 10,000 பேர் எல்லைகளைக் கடந்து இந்தியாவில் நுழைந்துள்ளனர் என்று தெரிய வருகிறது. ஸ்வரூப்நகர், பரிர்ஹத் மற்றும் கைகதா என்ற பகுதிகள் வழியாக அவர்கள் ஊடுருவியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் ஊடகங்கள் இவர்களை “ரோஹிங்கர்”, “முஸ்லிம்கள்”, “இடம் பெயர்ந்தவர்கள்”, “அகதிகள்” என்று பலவாறாகக் குறிப்பிடுவதும் வியப்பாக உள்ளது. ஏனெனில், இவர்கள் எல்லோருமே மியன்மார் / பர்மா குடிமகன்கள். முசபர்நகர் கலவரங்களின் போது, ரோஹிங்க முஸ்லிம்கள் மயன்மாரில் எவ்வாறு கொடுமைப்படுத்தப் பட்டனர் என்பது பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் புழக்கத்தில் விட்டதால் தான் கலவரங்கள் ஏற்பட்டதற்கான காரணங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், உள்ளூர் அரசியல்வாதிகள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர்.

Why these men have Islamic names

Why these men have Islamic names

பிக்ரிக் அமிலம் கண்டெடுக்கப்பட்டது: ஹைதரபாதில் காலித், பர்த்வானில் ஷேக் அம்ஜத் மற்றும் பீர்புமில் சஜித் கொடுத்த தகவல்களின்படி, விசாரணை மேற்கொண்டதில், கேசப்கஞ் சடி என்ற இடத்தில் உ:ள்ள புலக் சாது (30) என்பவன் கடை மற்றும் வீட்டில் தான் பிக்ரிக் அமிலம் வைக்கப்பட்டிருந்தது என தெரியவந்தது. அம்ஜத் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தான். அவன் கீழ்தளத்தை டோடோ ரிக்ஷா (மூன்று சக்கர வாகனம்) ஷோ ரூமாக மாற்றினான். அம்ஜத் ஒரு ஜே.எம்.பி-தீவிரவாதி என்று தெரியவந்ததும் அவன், பிக்ரிக் அமிலம் கொண்ட கலங்களை ரபீந்தர பவன் அருகில் உள்ள குளத்தில் எரிந்து விட்டான். புலக் NIA-குழுவை மீனவர்களுடன் அந்த குளத்திற்கு அழைத்துச் சென்றான். குளத்தில் தேடிப்பார்த்ததில் ஐந்து அமிலக்கலங்கள் கிடைத்தன, மீதம் ஐந்து கலங்கள் காணப்படவில்லை. ஷேக் அம்ஜத் தான் தான் அமிலக்கலங்களை போர்ஹத் கோடவுனில் (Borhat godown) வைத்திருந்ததாக தகவல் கொடுத்தான்[13].

the Four ISIS

the Four ISIS

பெங்களூரு குண்டுவெடிப்பு, சிமி மற்றும் தென்னிந்திய தொடர்புகள்: முந்தைய பிஜேபி அலுவலகத்திற்கருகில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில், தமிழக-கேரள முஸ்லிம்களின் பங்கு வெளிப்பட்டது. இப்பொழுதைய சர்ச் ரோட் குண்டுவெடிப்பிலும் அதே தொடர்புகள் வெளியாகியுள்ளன. பர்த்வான் குண்டுவெடிப்பில் கைது செய்யப் பெண்களில் ஒருத்தி, சென்னையில் உள்ளவர்களிடன் பேசியுள்ளாள் என்று ஏர்கெனவே தெரியவந்துள்ளது. இந்தியாவில், மற்ற எந்த நகரத்தையும் விட, வியாபார தொடர்புகள் ரீதியில், பெங்களுரு, அமெரிக்காவுடன் நெருங்கியுள்ளது. அமெரிக்க “அவுட்-சுரோசிங்” கம்பெனிகள் பல அங்குள்ளன. பெங்களுரில் என்ன நொகழ்ந்தாலும், அது உலகசெய்திகளில் இடம் பெரும், விளம்பரம் கிடைக்கும் என்ற ரீதியில் தான், தொடர்ச்சியாக, பெங்களுரில், தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தி வருகிறார்கள். மேலும் மத்திய பிரதேசத்தில் உள்ள கண்ட்வா சிறையிலிருந்து (Khandwa jail) ஐந்து சிமி தீவிரவாதிகள் தப்பி, கர்நாடகாவில், ஹோச்பெட், பெல்லாரி மற்றும் பெங்களூரு நகரங்களில் காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அதாவது, ஆங்காங்கு இருக்கும் உள்ளூர் முஸ்லிம்கள் அவர்களுக்கு அவ்வாறு உதவி கொடுத்து வருகின்றனர் என்பது உறுதியாகிறது. மேலும், குண்டுவெடுப்பு ஆய்வாளர்கள், பிஜ்னோர், புனே மற்றும் சென்னை குண்டுவெடிப்புகளை சோதித்துப் பார்த்ததில் அவையெல்லாமே, ஞாயிற்ருக் கிழமை சர்ச் ரோடில் நடந்துள்ள குண்டுவெடிப்பை ஒத்துள்ளது தெரிகிறது. மெஹதி மஸ்ரூர் என்ற ஐசிஸ் தீவிரவாதி கைது செய்யப்பட்டு, அதன்பிறகு, அந்த கைஹிற்காக பழி வாங்கப்படும் என்ற மிரட்டல் டுவிட்டர் தகவல்கள் வெளிவந்து இரண்டு வாரங்களில் இக்குண்டுவெடிப்பு நடந்துள்ளதால், அதன் தொடர்பு இருக்குமோ என்றும் ஆராயப்படுகிறது. பெங்களூரு தொடர்ந்து 2008, 2010 மற்றும் 2013 ஆண்டுகளில் குண்டுவெடிப்புகளைக் கண்டுள்ளது. 2008ல் ஒன்பது இடங்களில் குண்டுகள் வெடித்ததில் இரண்டுபேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்; 2010ல் இரண்டு குண்டுகள் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கும் முன்னர், ஸ்டேடியத்திற்கு வெளியே வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர், ஒரு குண்டு செயலிழக்கப்பட்டது. 2013ல் பிஜேபி அலுவலகத்திற்கு அருகில் மல்லேஸ்வரத்தில், மாநில தேர்தலுக்கு முன்னர் குண்டுவெடித்ததில் 16 பேர் காயமடைந்தனர்[14].

© வேதபிரகாஷ்

31-12-2014

[1] http://zeenews.india.com/news/india/bangalore-blast-case-as-it-happened-on-monday_1521860.html

[2] http://www.financialexpress.com/article/miscellaneous/bangalore-bomb-blast-churst-street-ied-explosion-killed-one-woman/23950/

[3] NDTV, 3,000 Gelatin Sticks Seized by Police in Burdwan, All India | Press Trust of India | Updated: December 29, 2014 02:34 IST

[4] http://www.ndtv.com/article/india/3-000-gelatin-sticks-seized-by-police-in-burdwan-641001

[5] http://www.dnaindia.com/india/report-bengal-3000-gelatin-sticks-seized-by-police-in-burdwan-2047658

[6] http://zeenews.india.com/news/west-bengal/truck-full-of-explosives-seized-in-bengal_1521711.html

[7] DNA, Bengal: 3,000 gelatin sticks seized by police in Burdwan, Sunday, 28 December 2014 – 6:09pm IST Updated: Sunday, 28 December 2014 – 6:10pm IST | Place: Burdwan (West Bengal) | Agency: PTI

[8] Zeenews, Truck full of explosives seized in Bengal, Last Updated: Sunday, December 28, 2014 – 19:27

[9] DNA, Large quantity of explosives seized in West Bengal, Saturday, 11 October 2014 – 2:02pm IST | Place: Purulia (West Bengal) | Agency: PTI

[10] The Purulia arms drop case is the legal case regarding an incident on 17 December 1995 in which unauthorised arms were dropped from an Antonov An-26 aircraft in Purulia district in the state of West Bengal. The chief accused Kim Davy claims that it was a conspiracy of the Indian government together with RAW and MI5 to overthrow the communist government in West Bengal and he was given assurances from the central government about his safety and return to Denmark.While the true motive of the operation remains shrouded in mystery and conjecture, it has been alleged that arms were intended for the socio-spiritual organization Ananda Marga.This has been disputed by the prime accused in the case Kim Davy who claims the central government itself was behind the arms drop to counter the CPI(M) cadres. An Indian court in 1997 determined that the Ananda Marga group was indeed the intended recipient of the guns and ammunition. However, despite the passage of years, many details of the incident are wrapped in mystery, and there has been considerable speculation as to the purpose and modality of the operation. Five Latvian crew members along with arms dealer Peter Bleach was arrested in connection with the case, but key conspirator Davy managed to disappear from the airport. Davy, wanted in the case by the CBI, said he had orchestrated the dropping of the arms and ammunitions — including over 300 AK 47s — to fight the then communist government in West Bengal. Davy is a Danish author. He is the author of book They call me a terrorist. He claims to have been involved in a 14-year journey from 1982 that involved building schools in Guatemala, agricultural projects in India and attending tiger conferences in Russia. He is currently the manager of a company which sells houseboats. Around 1995 he was involved in humanitarian work for the people in West Bengal, which at that time was governed by the Communist Party of India. The authorities claim that he was involved in smuggling of weapons. He admits as much himself in his book, claiming that he made the weapon drop from a plane purchased in Latvia.A total of 4 tonnes of arms were trafficked during his dealings in West Bengal.

http://www.indiatvnews.com/crime/news/know-about-kim-davy-the-man-behind-purulia-arms-drop-2813.html

[11] Indian Express, Explosives seized from Burdwan pond, Debajyoti Chakraborty & Dwaipayan Ghosh, TNN | Nov 19, 2014, 07.35AM IST

[12] Rohingya Myanmar resident Mohammad Khalid, who was held from Hyderabad on 17-11-2014 (Monday) night, has revealed that he had close ties with Tehreek-e-Taliban-Pakistan that has links with AlQaeda.

[13] http://timesofindia.indiatimes.com/city/kolkata/Explosives-seized-from-Burdwan-pond/articleshow/45199256.cms

[14] http://zeenews.india.com/news/india/bangalore-blast-case-as-it-happened-on-monday_1521860.html

மும்பை முஸ்லீம் ஆர்பாட்டம், ரகளை, கலவரம், தீவைப்பு – எதற்கு, பின்னணி என்ன?

ஓகஸ்ட் 12, 2012

மும்பை முஸ்லீம் ஆர்பாட்டம், ரகளை, கலவரம், தீவைப்பு – எதற்கு, பின்னணி என்ன?

நேரு நகரிலிருந்து வந்த கும்பல்[1]: ஒரு குறிப்பிட்ட கூட்டம் நேர் நகரிலிருந்து[2] வந்தது. ஆனால் அது மைதானத்திற்குள் செல்ல முடியவில்லை. ஏனெனில், 15,000 பேர் தான் கலந்து கொள்வார்கள் என்று ராஸா அகடெமி சொல்லி அனுமதி வாங்கியிருந்தது. ஆனால், 40,000ற்கும் மேலாக கூட்டம் வந்துள்ளது. அதெப்படி என்று கேட்டால் எங்களுக்கே தெரியாது என்கிறார்கள். ஆகவே, அந்த நேரு நகர் கும்பல் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முடிந்தது. அப்போழுது தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது என்று குற்றப்பிரிவு போலீஸார் ஆய்வு மேற்கொண்ட பிறகு விவரங்களை வெளியிட்டனர். அந்த நேரு நகர் கும்பல் எப்படி, யாரால் ஏன் அழைத்துவரப் பட்டது?

அமைப்பாளர்கள் கலவரத்தைக் கட்டுப்படுத்தது ஏன்?: ராஸா அகடெமி முஸ்லீம் கலாச்சாரம் முதலிவற்றை ஊக்குவிக்கிறது என்றுள்ளது. அந்நிலையில் ராஸா அகடெமி ( Raza Academy) சார்பில் மயன்மார் (பர்மா) மற்றும் அசாமில் முஸ்லீம்களால்  மும்பையில் ஆஜாத் மைதானத்தில் ஆர்பாட்டத்தை ஏன் நடத்த முடிவு செய்தது என்று தெரியவில்லை. இப்படி ரகளை, கலவரம், தீ வைப்பில் முடிந்து இரண்டு பேர் கொல்லப்படுவர்[3] என்றிருந்தால், அமைதியாக நடத்தமுடியாது என்று தெரிந்திருந்தால் தவிர்த்திருக்கலாம் அல்லது அதிகக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டாம். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சன்னி ஜமைதுல் உல்மா மற்றும் ஜமாதே-இ-முஸ்தபா (Sunni Jamaitul Ulma and Jamate Raza-e-Mustafa) போன்ற இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரித்துள்ளன.  அவர்களைச் சேர்ந்தவர்களும் கலவரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

கலவரத்தைத் தூண்டிய காரணங்கள் என்ன?: மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடினர். அமைப்புகளின் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர்[4]. முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தவர்கள், பிறகு உணர்ச்சிப் போங்க, தூண்டும் விதத்தில் பேச ஆரம்பித்தனர். இந்தியாவில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அரசு அதார்குத் துணை போகிறது என்று ஆரம்பித்தனர்.

  • காங்கிரஸுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் முஸ்லீம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை.
  • குறிப்பாக அசாம் மற்றும் பர்மா முஸ்லீம்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • மன்மோஹன் சிங் மற்றும் சோனியா காந்தி முதலியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
  • பர்மாவிலிருந்து வந்த ஒரு தம்பதியர், தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.
  • அவர்கள் தமது கைகளில் பிடித்திருந்த பதாகைகளில் எங்களைக் கொல்லவேண்டாம் என்ற வாசகங்கள் இருந்தன.
  • அதனை காட்டியபோது, கூச்சல் கோஷம் கிளம்பியது.

பிரார்த்தனையை முடித்துக் கொள்ளச் சொன்ன மர்மம் என்ன?: அதுமட்டுமல்லாது, மேடையில் பேச அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. சிலரை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டது. அப்பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இந்த பிரச்சினை என்ன, முஸ்லீம்களுக்குள் வெஏர்பாடு என்ன, ஏனிப்படி வெளிப்படையாக மோதிக் கொண்டஸ்ரீகள் என்ற விவரங்கள் தெரியவில்லை. மேடையிலேயே இத்தகைய ரகளை ஏற்பட்டு, கூச்சல்-குழப்பங்களில் நிலவரம் இருந்ததால், மௌலானா பொயின் அஸ்ரப் காதரி ஆரம்பித்த பிரார்த்தனையை முடித்துக் கொள்ள அமைப்பாளர்கள் சொல்லவேண்டியதாயிற்று[5]. உண்மையான முஸ்லீம்கள் இப்படி நடந்து கொள்வார்களா, பிரார்த்தனைக்குக் கூட இடைஞ்சல் செய்வார்களா அல்லது பாதியிலேயே முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஒருவேளை அவர்களுக்கு கலவரம் நடக்கும் என்று தெரியும் போலிருக்கிறது!

சோனியா மெய்னோ எதிர்ப்பு ஏன்?: இந்தியாவில் சோனியா மெய்னோ அரசு முஸ்லீம்களுக்கு தாராளமாகவே சலுகைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது[6]. அசாமிலேயே கோடிகளைக் கொட்டியுள்ளது. அந்நிலையில் காங்கிரஸ்காரர்களுக்கு எதிராக ஏன் கோஷம் என்று தெரியவில்லை. ஆனால், அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், திடீரென்று போலீஸார் மற்றும் ஊடகக்காரர்களின் மீது கல்லெறிய ஆரம்பித்தனர்.  அடிபட்ட-காயமடைந்த 54 பேர்களில் 45 பேர் போலீஸ்காரர்கள் எனும்போது, அவர்கள் குறிப்பாக தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதேபோல ஊடகக்காரர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையாளர் மற்றும் கேமராமேன் தாக்கப்பட்டு, அவர்களின் கேமரா-வீடியோக்கள் உடைக்கப் பட்டுள்ளன[7]. “தி ஹிந்து” பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படாத ரகசியம் என்னவென்று தெரியவில்லை.

கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?: ஆஜாத் மைதானத்தில் மட்டும் கூட அனுமதி பெற்ற முஸ்லீம்களில், திடீரென்று தெருக்களில் வந்து ரகளை செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே நின்று கொண்டிருந்த டிவி-செனல்களின் வண்டிகள், போலீஸ் வேன்கள் முதலியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். பிறகு  CST ரெயில்வே டெர்மினலுக்குள் (CST Railway terminus) நுழைந்து கண்ணாடி ஜன்னல்களை உடைக்க ஆரம்பித்தனர்[8].  மூன்று மணிக்கு ஆரம்பித்த கூட்டம், 3.30ற்கு கலவரமாக மாறியது. எதிப்பு போராட்டம் என்று ஆரம்பித்த முஸ்லீம்கள் எப்படி திடீரென்று கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. தெருக்களின் வந்து ரகளை செய்து வண்டிகளை அடித்து நொறுக்கியதில் 10 பெஸ்ட் பேரூந்துகள், 6 கார்கள், 20ற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் முதலியன கொளுத்தப்பட்டு சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், புறவழி ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது[9]. மும்பை நகரத்தில் பிரதானமான ஒரு இடத்தில் இப்படி, திடீரென்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளது, போலீஸாருக்கே பிரமிப்பாக இருக்கிறது.

போலீஸார் மீது தாக்குதல் ஏன்?: கலவரத்தை அடக்க தாமதமாகத்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது முதலில் அதிகமாக வந்த கூட்டத்தை சமாதனப்படுத்திக் கட்டுப்படுத்த ஆரம்பித்தனர். பிறகு உள்ளே நுழைய முடியாமல் மற்றும் உள்ளேயிருந்து வெளியே வந்து கொண்டிருந்தவர்களை முறைப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென்று கற்கள் அவர்கள் மீது வீசப்பட்டன. அதுமட்டுமல்லாது, சிலர் நேரிடையாகவே வந்து போலீஸார் மீது கற்களை சரமாரியாக வீசித் தாக்கினர். அதற்குள் தேவையில்லாமல், ஒரு வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதற்குப் பிறகே ஆகாசத்தில் சுட்டு, பிறகு லத்தி ஜார்ஜ் செய்துள்ளனர்[10]. முதலில் (நேற்று சனிக்கிழமை 11-08-2012) அவர்களின் அடையாளம் தெரியவில்லை என்று சொல்லப்பட்டது. இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது[11]. அவர்கள் முஹம்மது உமர் (பந்த்ரா) மற்றும் அட்லப் சேக் (குர்லா) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். (Two persons, 22-year-old Mohammad Umar and 18-year-old Altaf Sheikh (one from Bandra and the other from Kurla), died ). 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் செயின்ட் ஜார்ஜ், ஜி.எச். மற்றும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர்[12].  இப்பொழுது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். முஹம்மது சயீத் என்ற அகடெமியின் பொது செயலாளர் (Mohammed Saeed, General Secretary of the academy) திடீரென்று தமக்கும் அந்த கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்[13]. அதாவது தங்கள் சமூகத்தினரையே கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது தெரிந்தோ தெரியாமலோ அத்தகைய கலவரம் ஏற்பட துணைபோயிருக்கிறார்கள்.

ஊடகக்காரர்கள் தாக்கப் பட்டதேன்?: பத்திரிக்கை-செய்தியாளர்கள் மற்றும் டிவி-செனல் ஊடகக்காரகள் நின்று கொண்டு செய்திகளை சேகரித்து மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது, சிலர் அவர்களைப் பார்த்து கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர். லண்டனுக்குச் சென்று ஒலிம்பிக்ஸ் செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், அமெரிக்காவிற்கு சென்று சீக்கியர்கள் கொல்லப்பட்டதைப் பற்றி செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், என்று நக்கலாக பேசி, அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரி என்று கோஷமிட்டுள்ளனர். பெயர் சொல்ல மறுத்த எதிர்ப்பாளர் “நாங்கள் ஏதாவது (தமாஷா) செய்ய வந்து விட்டால் அதை (தமாஷாக) போடுவீர்கள் போல”, என்று நக்கலடித்தார்[14]. அதுமட்டுமல்லாமல், “அவர்களை வெளியே அனுப்பு” என்றும் கோஷமிட்டுள்ளனர். இதனால், ஊடகக்காரர்கள் வெளியேற ஆரம்பித்தனர்.

“தி ஹிந்து” கரிசனம் மிக்க செய்திகள்: “தி ஹிந்து” இதைப் பற்றி விசேஷமாக செய்திகளைக் கொடுத்துள்ளது[15]. அது ஏற்கெனெவே முஸ்லீம்களை (பங்களாதேச ஊடுவல்) ஆதரித்து பல செய்த்களை வெளியிட்டுள்ளது[16]. “தி ஹிந்து” கட்டுரைகளை உன்னிப்பாகப் படித்துப் பார்த்தால், இந்திய சட்டங்களை திரித்து, வளைத்து, எப்படி “கருத்துவாக்கம்” என்ற பிரச்சார ரீதியில், பொய்களை உண்மையாக்கப் பார்க்கிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, பங்ளாதேச முஸ்லீம்களால் இந்தியர்கள் எப்படி எல்லாவிதங்களிலும் பாதிக்கப்படுகிறர்கள் என்பதை மறைத்து, அந்நியர்களுக்காக வக்காலத்து வாங்கும் முறையில் அவை இருக்கின்றன. மதவாதத்தை வளர்த்துவிட்டு, இப்பொழுது மனிதத்தன்மையுடன் இப்பிரச்சினையை அணுகவேண்டும் என்று ஒரு கட்டுரை[17]. மனிதத்தன்மையிருந்திருந்தால் முஸ்லீம்கள் அவ்வாறு ஊடுருவி வந்திருப்பார்களா? இந்தியர்களை பாதித்திருப்பார்களா? இந்துக்களைக் கொன்றிருப்பார்களா? அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார்களா? போடோ இந்தியர்கள் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டால் போல ஒரு கட்டுரை[18]. போடோ கவுன்சிலை கலைத்துவிட வேண்டும் என்று சூசகமாகத் தெரிவிக்கும் ஒரு கட்டுரை[19]. மதரீதியில் முஸ்லீம்களை ஊடுருவ வைத்து விட்டு, மதரீதியில் பிரிக்க முடியாது என்று அரசே உச்சநீதி மன்றத்தில் தாக்குதல் செய்கிறது[20]. பாகிஸ்தான் ஊடகங்கள் அமுக்கி வாசித்துள்ளன[21]. பிரஷாந்த் சவந்த் என்ற ஊடகக்காரரை மிரட்டியதுடன் அவருடைய கேமராவை உடைத்துள்ளனர். பிரஸ் கிளப் கட்டிடத்திற்குள் சென்று வெளிவந்தபோது, “அவனையும் சேர்ந்து எரிடா” என்று கும்பல் கூச்சலிட்டது[22].

முஸ்லீம்கள் கலவரங்களை ஒரு பேரத்திற்காக உபயோகப்படுத்துகிறார்களா?: முஸ்லீம் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் என்று பலர், முஸ்லீம்கள் ஏன் கலவரங்களில் ஈடுபடுகின்றனர் என்று ஆராய்ச்சி செய்து நிறையவே எழுதியுள்ளனர். ரபிக் ஜக்காரியா, அஸ்கர் அலி இஞ்சினியர், இம்தியாஸ் அஹமத், அப்த் அல்லா அஹம்த் நயீம்[23], இக்பால் அஹ்மத் என்று பலர் முஸ்லீம் மனங்களை ஆழ்ந்து நோக்கி, எப்படி “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது”, “முஸ்லீம்கள் ஆபத்தில் உள்ளனர்”, “அல்லாவின் பெயரால்……..” என்றெல்லாம் கூக்குரலிடும் போது, பொது கூட்டங்கள், ஊர்வலங்கள்-போராட்டங்கள் நடத்தும்போது, அமைதியான முஸ்லீம்கள் உந்துதல்களுக்குட்பட்டு, தூண்டப்பட்டு “அல்லாஹு அக்பர்” கோஷமிட்டு, கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று எடுத்துக் காட்டுகின்றனர். இங்கும் அதேமாதிரியான முறை கையாளப்பட்டுள்ளது. ஒவைஸி அசாமிற்குச் சென்று, முஸ்லீம்களை மட்டும் கவனித்து, நிவாரணப்பணி என்ற போர்வையில் பொருட்களைக் கொடுத்து வருகிறார். பாராளுமன்றத்தில் 08-08-2012 அன்று ஆவேசமாகப் பேசுகிறார்[24].

ஆகஸ்ட் 8, 2012, அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது[25], “கடைசியாக நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன், இங்குள்ள மதிப்புக்குரிய அங்கத்தினர்களையும் இதுபற்றி எச்சரிக்கிறேன். சரியான குடியேற்ற முறைமை செய்யாவிட்டால், மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், என்று ஆவேசமாக, ஆக்ரோஷமாக கைகளை ஆட்டிக் கொண்டு அபாயகரமான எச்சரிக்கை விடுத்தார்!

உடனே கூட்டம் கூட்டப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டு, 11-08-2012 கலவரம் நடக்கிறது. காங்கிரஸ் / காங்கிரஸ்காரர்கள் / சோனியா இந்த அளவிற்கு ஒத்துப் போகும்போதே, அவர்களை எதிர்த்து கோஷம் போடுகிறார்கள், கலவரம் நடத்துகிறார்கள் என்றால், இதற்கும் மேலாக, அவர்களுக்கு என்ன வேண்டும்?

[நேற்றையக் கட்டுரையின்[26] தொடர்ச்சி, விரிவாக்கம்]

© வேதபிரகாஷ்

12-08-2012


[1] A senior officer said the probe, given to the Crime Branch later in the evening, was zeroing in on a group that came from Nehru Nagar. “This group could not enter Azad Maidan, and there were reports that it was the first flashpoint,” the officer told TOI.

http://timesofindia.indiatimes.com/india/Assam-riots-protesters-go-on-rampage-hold-Mumbai-hostage/articleshow/15455083.cms

[2] Nehru Nagar, originally an area cordoned off for leprosy sufferers, is the only slum area in Vile Parle, Mumbai – a suburb near to the airport and train station. Now, eying on property appreciation, the builders have been constructing multi-storeyed flats offering to the slum dwellers. Thus, slum-dwellers becoming flat-owners, but creating new slums – a cycle that is perpetrated by the vested interested people. The builders, promoters and corporators have always been colluding with each other encouraging communal politics.

[4] At the protest meet, there was enough to raise passions. Many speakers spoke of teaching the Congress a lesson for not doing enough to save Muslims in Assam as others slammed prime minister Manmohan Singh and UPA chairperson Sonia Gandhi. A couple of men from Burmacarried small kids on their shoulders who held placards that said ‘Don’t kill us’.

[5] As news of a minor scuffle outside reached the dais, the organisers decided to wrap up with a dua (seeking of divine blessings) led by Maulana Moin Ashraf Qadri of Madrassa Jamia Qadriya, Grant Road.

http://timesofindia.indiatimes.com/india/Assam-riots-protesters-go-on-rampage-hold-Mumbai-hostage/articleshow/15455083.cms

[6] இதை பி.ஜே.பி போன்ற கட்சிகள் மட்டுமல்லாது, உள்ளூர் அசாம் கட்சிகளே எடுத்துக் காட்டியுள்ளன. உண்மையில், நிவாரண கூடாரங்களில் உள்ளவர்களை பாகுபடுத்திப் பார்த்து, உதவி செய்து வருவதே மதரீதியிலான சண்டை வர காரணமாகிறது. முஸ்லீம்கள் தெரிந்தும், போட்டிப் போட்டுக் கொண்டு முஸ்லீம்களுக்கு மட்டும் உதவி வருகிறார்கள். போடோ இனத்த்வர் என்று பேசும்போது, அதில் கூட முஸ்லீம்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பிரிந்து தனிக் கட்சி / இயக்கம் ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஊடுருவ் வந்துள்ள முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு, அதேபோல தனி மாகாணத்தைக் கேட்டு வருகிறார்கள். இங்குதான், பிரிவினைப் பிரச்சினை முஸ்லீம் என்ற ரீதியில் வருகிறது. மேலும் இவர்களுக்குத்தான் பாகிஸ்தான் உதவி வருகிறது.

[7] Several newspersons, including photographers Shriram Vernekar and Prashant Nakwe from The Times of India, were beaten up and Vernekar’s camera was broken. Cops were singled out for specially violent treatment.

http://timesofindia.indiatimes.com/india/Assam-riots-protesters-go-on-rampage-hold-Mumbai-hostage/articleshow/15455083.cms

[13] Meanwhile, Raza Academy distanced itself from the violence. “While we were protesting at the ground, some people got aggressive and started behaving violently,” Mohammed Saeed, General Secretary of the academy, said. “We never encourage violence and strongly condemn such acts,” he added.

http://www.indianexpress.com/news/16-injured-as-antiassam-riot-protest-turns-ugly-in-mumbai/987080/2

[14] “Only when we do some tamasha [spectacle] do the media land up to cover,” said a protester who refused to give his name.

[17] Farah Naqvi, Assam calls for a human response, The Hindu, August 6, 2012. http://www.thehindu.com/opinion/op-ed/article3731625.ece

[22] Prashant Sawant, photographer with the daily Sakaal Times was on the fateful assignment.

“I, along with fellow photographers, started to shoot when the rally started. But we sensed something was wrong when a couple of persons remarked that the press was not supporting them,” Mr. Sawant told The Hindu. “We left the rally and went to the terrace of the Mumbai Marathi Patrakar Sangh adjoining the Maidan. However, some saw us and started throwing stones. We then went to the Press Club and came out again when the arson started. It was then that the mob started to assault me. They showered me with blows. My camera was broken. They were shouting ‘Isko bhi jala dalo’ [Set him on fire too]. I sustained injuries on the head, neck and face. The doctors have told me to do an MRI scan,” he said. “Provocative speeches against the media started from the stage itself,” said Ameya Kherade, another photographer. “The crowd was shouting ‘Media ko bhaga do’ [Chase away the media],” he added.

http://www.thehindu.com/news/national/article3754980.ece