மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், அதனால் ஏற்பட்ட முடிவுகள் (2)
தில்லியிலிருந்து துலுக்கர் படை எவ்வாறு ஆரும் அறியாத படி மதுரைக்கு வந்து சேர்ந்தது?: தில்லியிலிருந்து, மதுரைக்கு வர ஆறுமாதங்கள் ஆகும் என்று எழுதி வைத்துள்ளனர். ஆறுமாத இரயாணத்திற்கு, தங்க இடம், உடை, உணவு எல்லாமே தேவையாக இருந்திருக்கும். அதாவது, இடையில், மற்றவர் துணை, உதவி இல்லாமல் சென்றிருக்க முடியாது. அப்படியென்றால், துலுக்கர் எப்படி குதிரைகளில் அவ்வாறு கூட்டமாக வந்திருப்பர், வரும் போது, அவர்களை யாரும் பார்க்காமல் / கண்டு கொள்ளாமல் இருந்திருப்பர் என்று யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. துலுக்கர் அவ்வாறு கூட்டமாக செல்கின்றனர் என்றால், நிச்சயம் பார்த்தவர்கள் விசயம் அறிந்து சொல்லியிருப்பர். ஆகவே, அவர்கள், ஆயுதங்களை மறைத்துக் கொண்டு, ஏதோ தீர்த்த யாத்திரை செல்வது போல சென்றிருக்க வேண்டும். இல்லை, மற்றவர் போல ஆடை அணிந்து, வியாபார நிமித்தம், பொருட்களை வாங்குவது-விற்பது போன்ற ரீதியில் சென்றிருக்க வேண்டும். ஆக வேடமிட்டு தான் துலுக்கர் சென்றுள்ளனர் என்றாகிறது. இல்லை, தீவிரவாதிகள் போல, பீதியைக் கிளமப்பிக் கொண்டு சென்றிருக்க வேண்டும்.
முகமதிய–துலுக்க படையெடுப்பு, பாண்டியர் பற்றிய சரித்திராசிரியர்களின் விளக்கங்கள்: வஸாப் [Wassaf], அமீர் குர்ஷூ [Amir Khusru] மற்றும் ஜியா-உத்-தீன் பர்ணி [Zia-ud-din Barni] முதலியோரின் வர்ணனைகளை வைத்துக் கொண்டு, தெளிவாக விசயங்களை தீர்மானிக்க முடியவில்லை என்று நீலகண்ட சாஸ்திரி கருத்து தெரிவித்தார்[1]. அமீர் குர்ஷூ மற்றும் ஜியா-உத்-தீன் பர்ணி சுந்தர-வீர பாண்டியர் சண்டைபற்றி குறிப்பிடவில்லை என்கிறார். இருப்பினும், அவர்கள் சண்டையிட்டுக் கொண்டு வீழ்ந்தனர் என்று ஒப்புக் கொள்கிறார். எல்லியட் மற்றும் டாவ்ஸன், வஸாப் வர்ணனை, அமீர் குர்ஷூ மூலம் உறுதி படுத்தினர்[2]. பொதுவாக, ராஜாக்கள், ராஜ்ஜியங்கள், நகரங்கள் முதலியவற்றின் பெயர்களை, இந்திய மொழிப் பெயர்களுடன் ஒப்பிட்டு, அவற்றை கல்வெட்டு விவரங்களுடன் சரிபார்த்து, அடையாளம் காண்பதில் தான், அத்தகைய கஷ்டம் ஏற்படுகின்றன. ஆனால், துலுக்கர் கோவில்களை இடித்தது, கொள்ளையடித்தது, சூரையாடியது, தர்கா-மசூதிகளாக மாற்றியது முதலியவை கண்கூடாகவே தெரிகின்றன. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
1323 முதல் 1378 வரை சுமார் 55 ஆண்டுகள் மதுரைப் பகுதியில் சுல்தான்களின் ஆட்சி: 1293 முதல்1422 வரை பாண்டியர்களே ஆளவில்லை என்பது போல இடைவெளி காட்டுவதும் வினோதமாக உள்ளது. 1329-1330ல் “சுல்தானிய ஆட்சி” தொடங்குவதாக, நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகின்றார்[3]. 1323-ல் பராக்கிரம தேவபாண்டியன் காலத்தில் உலூகான் படையெடுத்து பாண்டிய நாட்டை கைப்பற்றினான். முகமது பின் துக்ளக் ஆட்சியில் மாபார் என்றழைக்கப் பட்ட தமிழகம் தில்லி சுல்தானியத்தின் 23 மாநிலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. சுல்தான் ஜமாலுத்தீன் ஹஸன்ஷா என்பவன் மதுரையில் ஆளுநராக நியமிக்கப்பட்டான். பின்பு இவன் தில்லி சுல்தானாகத்தில் இருந்து பிரிந்து தன்னிச்சையாக மதுரையை சுதந்திர பிரதேசமாக அறிவித்தான். இவனின் வழிவந்தவர்களே மதுரை சுல்தான்கள் என்று கூறிக்கொள்கின்றனர். சுல்தான் ஜமாலுத்தீன் ஹஸன்ஷா 1335ல் தனித்து ஆட்சி புரிய துவங்கினான். 1323 முதல் 1378 வரை சுமார் 55 ஆண்டுகள் மதுரைப் பகுதியில் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றது. ஏழு சுல்தான்கள் ஆட்சி செய்தனர் என்கின்றனர். ஆனால், இவற்றை சரி பார்க்க, தமிழக ஆவணங்கள் என்ன என்று தெரியவில்லை. கம்பண்ணாவின் கல்வெட்டுகளில், அவனது தளபதி கோபண்ணா 1377-78ல் துருஷ்கர்களை வென்றதாகக் குறிப்பிட்டுள்ளதால், அத்துடன், துலுக்கரது ஆட்சி முடிவுற்றது என்றாகிறது[4].
தர்கா–மசூதி வைத்து, இடத்தை ஆக்கிரமித்து, குடியிருப்பை உண்டாக்கி பெரிதாக்குவது துலுக்கரின் திட்டம்: துலுக்கர் தமது சரித்திரத்தை இவ்வாறு தொடர்கின்றனர், “மதுரை மாநகரில் வைகையாற்றின் வடகரைப் பகுதியில் அமைந்துள்ளது கோரிப்பாளையத்தில் பள்ளிவாசல்–தர்கா உள்ளன. இதனைச் சூழ்ந்த முஸ்லிம் குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள தர்கா, 14ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இத்தர்காவில் அடக்கமாயிருப்பவன் 14ம் நூற்றாண்டில் மதுரைப்பகுதியை ஆண்ட (கி.பி.1338ல்) சுல்தான் அலாவுதீன் உதௌஜி என்று சொல்லப்படுகிறது. இவனே தற்போது காஜா சையத் சுல்தான் அலாவுதீன் என்று அழைக்கப்பட்டான் என்றும் சொல்கின்றனர். இவனது மருமகனான குத்புத்தீன் பிரோம் ஷாக்குசும் இதில் அடக்கமாயுள்ளான்,” என்கின்றனர். இப்படி சமாதிகளை உருவாக்கினர் என்று சொல்வதைத் தவிர, இவர்களால் மதுரைக்கு, மதுரை மக்களுக்கு என்ன நல்லது செய்தார்கள், இவர்களது ஆட்சியால் என்ன பலன் என்பதனை யாரும் சொல்வதாக இல்லை. இந்துக்களைக் கொன்று, கோவில்களை கொள்ளையெடித்து, இடித்தொழித்தவற்றை இவர்கள் சொல்லலாம், ஆனால், அதனால், மதுரைக்கோ, தமிழகத்திற்கோ, பாரதத்திற்கு எந்த பெஉமையும் இல்லை.
துலுக்கரின் படையெடுப்பினால் உண்டான தீய விளைவுகள்: மாலிகாபூர் தங்கம், வெள்ளி, வைரம் முதலியவற்றை யனைகளின் மீது வைத்து கொண்டு சென்றான் போன்ற செய்திகளைத் தான் நாம் படிக்கிறோம். ஆனால், அவ்வாறு யானைகள் மீது மெதுவாக தில்லி வரை சென்றதைப் பார்த்த, அக்காலத்தைய சைவர்களுக்கு, எந்த ரோஷமும் வரவில்லையா? பாண்டிய மன்னர்கள் துண்டைக் காணோம், துணொஇயைக் காணோம் என்று தங்கள் பிள்ளை-பெண்டுகள் விட்டு ஓடியபோது கூட, இந்துக்களுக்கு எந்த கோபமும் வரவில்லையா? இங்கிருந்து தில்லிக்கு செல்ல சுமார் ஆறுமாத காலம் ஆகும் என்று அவர்களே எழுதி வைத்துள்ளனர். அப்படியென்றால், ஆறுமாத காலத்தில் சென்றபோது, பாரதத்தில், எங்குமே எந்த எதிர்ப்பும் இல்லாமல் சென்று விட்டனவா? இதைப் பற்றி எந்த ஆசிரியனும் யோசிப்பதில்லை போலும். துலுக்கர், அக்காலத்திலும், தீவிரவாதிகளாக இருந்திருக்கின்றனர். எதிர்ப்பவர்களை கண்ட-துண்டமாக கத்திகளால் வெட்டிக் கொன்றிருக்கின்றனர். அவற்றை நாற்சந்திகளில் எல்லோரும் பார்க்கும் படி, போட்டு, பீதியை, திகிலை, பேரச்சத்தை உண்டாக்கி வைத்தனர். எதிர்த்தால் “காபிர்களின்” கதி இதுதான் என்று மிரட்டிவைத்துள்ளனர். துலுக்கரை படவீரன், துபாஷி, தரகன், போன்ற வேலைகளில் வைத்துக் கொண்டதால், விவரங்களை அவர்கள் மற்ற துலுக்கர்களுக்கு தாராளமாக தெரிவித்துள்ளனர். அதனால் தான், மாலிக்காபூர் போன்றவர்கள், தில்லியிலிருந்து, சரியான பாதையில் ராமேஸ்வரம் வரை வந்து, கொள்ளையெடித்து, திரும்பச் சென்றிருக்கிறான். இது தவிர காடு, மலைப்பகுதிகள் வழியாக ரகசியமாகச் செல்லவும் பாதைகள் இருந்திருக்கின்றன. அவற்றுன் மூலம் சென்றதால், மறைக்கப்பட்டிருக்கலாம். கோவில்கள் இடித்தது, கொள்ளையெடித்தது, தர்கா-மசூதிகளாக மாற்றப் பட்டது உண்மையாகிறது.
வீரவல்லாளன் கொலையுண்டது, உடல் தொங்கவிடப்பட்டது[5]: கி.பி.1340இல் மதுரையை ஆட்சி செய்து வந்த ஜலாலுதீன் அசன்ஷா கொல்லப்பட்டான். அலாவுதீன் உதாஜிக்குப் பின்னர் அவனது மருமகன் குத்புதீன் மதுரையில் சுல்தான் பதவியேற்றான். இவனது ஆட்சி வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே நடந்தது. இச்சுல்தானும் இந்துக்களின் வீர உணர்வுக்குப் பலியானான். அதன் பின்னர் கியாஸ் உதீன் தம்கானி [1342-1344] மதுரையில் சுல்தான் பொறுப்பில் அமர்ந்தான். இச்சமயத்தில் போசள அரசன் மூன்றாம் வீரவல்லாளன் தமிழகப் படையெடுப்பைத் தொடங்கினான். கண்ணனூர்க் கொப்பத்தைக் கைப்பற்றும் நோக்குடன் முன்னேறி வந்தான். இசுலாமியருக்கும் இந்து சமயத்தைச் சார்ந்த போசளப் படையினர்க்கும் இடையே கடுமையான போர் மூண்டது. இதில் போசள அரசன் வீரவல்லாளன் தோல்வியுற்று, கைது செய்யப்பட்டு மதுரைக்கு அனுப்பப்பட்டான். பின்பு வீரவல்லாளனைத் தம்கானி கொன்று அவனுடைய தோலை உரித்து, உடலுக்குள் வைக்கோலை அடைத்து, அதை மதுரையின் மதில் சுவரின் மேல் தொங்கவிட்டான். வீரவல்லாளனின் உடலைக் கி.பி. 1342இல் மதுரையில் பார்த்ததாக இபன்பதூதா என்பவன் தனது குறிப்பில் கூறியுள்ளான்.
© வேதபிரகாஷ்
06-12-2017
[1] K. A. Nilakanta Sastri, The Pandyan Kingdom – from the Earliest times to the sixteenth century, Luzac & Co., London, 1929, p.204
[2] Elliot and Dowson, History of India as told by Indian Historians, Vol.III, p.88.
[3] K. A. Nilakanta Sastri, The Pandyan Kingdom – from the Earliest times to the sixteenth century, Luzac & Co., London, 1929, p.259.
[4] K. V. Raman, Some aspects of Pandyan History in the light of Recent Discoveries, University of Madras, Madras, 1971, p.37
[5] http://www.tamilvu.org/courses/degree/a031/a0313/html/a0313333.htm
அண்மைய பின்னூட்டங்கள்