Posted tagged ‘மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம்’

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4)

எஸ்.., உட்பட 27 பேருக்கு வெகுமதி: கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில், சதிச்செயலுக்கு திட்டமிட்ட ஜமேஷா முபீன் பலியானார். வழக்கு விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய, 27 பேருக்கு, நேற்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கினார்[1], என்று ஊடகங்கள் கூருகின்றன.. சம்பவம் நடந்த நாளன்று, உக்கடம் எஸ்.ஐ., செல்வராஜன், ஏட்டு தேவக்குமார், காவலர் பாண்டியராஜா ஆகியோர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலைக் காவலர், மூத்த புகைப்படக் கலைஞர் ஒருவர் என மொத்தம் 34 பேருக்கு விருது வழங்கப்பட்டது[2]. இந்த பட்டியலில் உள்ளவர்கள் உளவுப்பிரிவு சைபர் கிரைம் சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது[3]. அதன் காரணமாகவே, ஜமேஷா முபீன், காரில் தொடர்ந்து செல்ல வாய்ப்பின்றி போயிருக்கலாம் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பெரியளவில் ஏற்பட இருந்த பாதிப்பை தடுக்க உதவியதாக, வாகன தணிக்கையில் ஈடுபட்ட எஸ் .ஐ., ஏட்டு, காவலருக்கு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கப்பட்டது.

பந்தை குறிவைப்பது அரசியலாகிறது: வரும், 31ம் தேதி கோவை மாநகரில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த்தை முன்னிட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், வாகன போக்குவரத்துக்கும், அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்துக்கும் எந்தவித குறைபாடும் நேராமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். நிச்சயமாக பொறுப்புடன் வேலை செய்த போலீஸாரை எல்லோருமே பாராட்ட வேண்டிய நிலையில் தான் உள்ளார்கள். இங்கு கூட, அந்த குண்டுவெடிப்பு செயல் அரைகுறையாக முடிந்ததால், யார் நடத்த வேண்டும் என்று நினைத்தானோ, அவன் மட்டும் பலியாகியுள்ளான் என்பது நோக்கத் தக்கது.

மத்திய உளவுத்துறையும், தமிழக போலீஸாரும்: தென்னிந்தியாவில், தீவிரவாதம் பரவி, சிறந்த முறையில், தொழிற்நுட்பத்துடன், பாண்டித்தியத்துடன் நடந்து கொன்டிருப்பதால், வழக்குகள் தொடர்ந்து நடந்து கொன்டிருக்கின்றன. மேலும், அரசியல்வாதிகளின் தொடர்பு மற்றும் இதர பணப் போக்குவரத்து, சட்டமீறல் போக்குவரத்துகளுடன் திறமையாக செயல் பட்டு வருவதால், வழக்குகளும் இழுத்தப் படுகின்றன. இதனால் தான், காவல்துறை இந்த தகவலை தெரிந்தவுடன், பாதுகாப்பை உஷார் செய்தவுடன், இவர் திடீரென மாயமாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[4]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[5]. தேசிய புலனாய்வு முகமை 2019ம் ஆண்டு ஜமேஷா முபினை நேரடியாகவே விசாரணைக்கு அழைத்தது. தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் அவருக்கு இருக்கின்ற தொடர்பு சம்பந்தமான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரை தமிழக காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தமிழகத்தை நாசமாக்கும் எண்ணத்துடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபட 96 பேர் தயாராக இருக்கின்றன என்ற பட்டியலை மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது என்றும், அதில் இவர் இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது[6]. இதனை தமிழக அரசு எப்படி கோட்டைவிட்டது என்று கேள்வி எழுந்துள்ளது[7]. சம்பவம் நடந்த பிறகு தமிழக அரசு சார்பில் விளக்க அறிக்கை உட்பட பல்வேறு தகவல்கள் சரியாக பொதுமக்களிடையே சொல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பட்டியலில் 89 ஆவது நபராக ஜமேஷா முஃபின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு எதிர்வினை இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே எதிர்பார்த்து இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மத்திய உளவுத்துறை எச்சரிக்கைகளை தமிழக அரசு தன்னுடைய முழு கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமயமாக்கப் படும் தீவிரவாதம்: திமுக ஆட்சியில்லாமே “பாஸ்ட் ஃபுட்” ரேஞ்சில், வேகத்தில், அதிரடியாகத்தான் நடக்கும் போலிருக்கிறது. கார் காஸ் சிலிண்டர் விபத்து, தீவிரவாத கார் காஸ் சிலிண்டர் வெடிப்பாகி, கார் குண்டு வெடிப்பாகியுள்ள நிலையில், அமைதிகாத்த திராவிடிய ஸ்டாக் முதலமைச்சர், திடீஎன்று கூட்டம் கூடி, இந்த விபத்து வழக்கை என்.ஐ.ஏ.க்கு ஒப்படைக்க அறிவித்து விட்டார். போலீஸ் துறைக்கும் அவர் பொறுப்பேற்றுள்ளதால், இவ்வழக்கின் பாரத்தை, தீவிரவாதத்தை அறிந்து, மாற்றி விட்டார் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாது, சம்பந்தப் பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு வெகுமதி அளிக்கப் பட்டு பாராட்டும் தெரிவிக்கப் பட்டது. கோவையில் புதியதாக மூன்று காவல் நிலையங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. டிவி செனல்களிலேயே வாதவிவாதங்கள் படுஜோர். பேச்சாளர்கள், நேரிடையாக அரசியலாக்கி, அரசியல் மயமாக்கி, திராவிட மாடலா- குஜராத் மாடலா ரேஞ்சில் இறங்கி விட்டனர். திமுக-பிஜேபி நேரிடையாக இந்த மோதலில் ஈடுபட்டுள்ளன எனலாம்.


தமிழகத்தில் முதன்முதலாக என்... செய்துள்ள வழக்கு: முதன்முதலாக என்.ஐ.ஏ. ஏஜென்சி சென்னையில் அலுவலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போலீஸ் நிலையத்திற்கு சமமாகும். இது போன்ற மற்ற நிறுவனங்கள் இதனுடன் சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட வேண்டும். தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவை சமூக, பொருளாதார, மற்றவற்றை பெரிதும் பாதிப்பதால், இது மனித வாழ்க்கைக்கு எதிராக செயல்படுகிறது. மேலும், எல்லைகளைக் கடந்து, இவை செயல் படுவதால், மற்ற நாடுகளும் இவற்றை கடுமையாக எதிர்க்கிறார்கள். பதிவு செய்துள்ள இந்த முதல் வழக்கே தமிழகத்தின் இறுதி வழக்காக இருக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு, விருப்பமாகும், எனும் நிலையில், இத்தகைய கும்பல்கள் வேறருக்கப் பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] தினமலர், எஸ்.., உட்பட 27 பேருக்கு வெகுமதி, Added : அக் 28, 2022 04:31..

https://www.dinamalar.com/news_detail.asp?id=3156201 – :~:text=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%2C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D,%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1% E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%2C%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு விவகாரம்சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு!!, Narendran S, First Published Oct 27, 2022, 6:00 PM IST, Last Updated Oct 27, 2022, 8:42 PM IST.

[3] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/dgp-praises-the-policemens-for-their-excellent-work-in-covai-car-blast-case-rkew2t

[4] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[5] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

[6] நியூஸ்.4.தமிழ், கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! மத்திய உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் காட்டிய தமிழக காவல்துறை!, Sakthi by SAKTHI October 28, 2022

[7] https://www.news4tamil.com/coimbatore-car-bombing-incident-tamil-nadu-police-ignored-the-central-intelligence-agencys-warning/

முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (2)?

பிப்ரவரி 13, 2014

முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (2)?

 

இப்பெண்ணல்தான் யுவன் மதம் மாறினாரா

இப்பெண்ணல்தான் யுவன் மதம் மாறினாரா

முஸ்லிம்களுக்கான  தனித்த  அடையாளம்  எதுவும்  இன்றி  வந்திருந்தார்: இந்நிலையில் யுசரா பங்கு கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி பற்றி செய்தி ஒன்று இப்படி வந்துள்ளது. ஒரு தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான நடிகர் கிருஷ்ணாவுக்கும், கோவையைச் சேர்ந்த கைவல்யாவுக்கும் கோவையில் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என திரையுலமே திரண்டு வந்து வாழ்த்தியது. இதில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தவர் யுவன் சங்கர் ராஜா. அவர் முஸ்லிமாக மாறிவிட்டார் என்ற தகவல் பரவியிருந்த நேரத்தில் அவரது வருகை முக்கியமாக பார்க்கப்பட்டது. செய்திகளில் வந்தது போன்று அவர் தாடி எதுவும் வைத்திருக்கவில்லை. முஸ்லிம்களுக்கான தனித்த அடையாளம் எதுவும் இன்றி நீல நிற ஜீன்ஸ், வெள்ளை சட்டை அணிந்து வழக்கம்போல “எளிமையாக” வந்திருந்தார். ஆனால் முகத்தில் உற்சாகம் இல்லை.

 

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்

அருகில்  சிகப்பு  நிறத்தில்  துப்பட்டா  அணிந்த  ஒரு  முஸ்லிம்  பெண்  அடிக்கடி  யுவனிடம்  நெருக்கமாக  பேசிக்  கொண்டிருந்தார்: வந்தவர் மேடையில் ஏறி மணமக்களை வாழ்த்திவிட்டு சிறிது நேரம் மேடையில் நின்று கொண்டிருந்தார். அவர் அருகில் சிகப்பு நிறத்தில் துப்பட்டா அணிந்த ஒரு முஸ்லிம் பெண் நின்று கொண்டிருந்தார். அடிக்கடி யுவனிடம் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். யுவன் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணா? அல்லது அந்த பெண்ணின் உறவுக்கார பெண்ணா அவர் என்று எல்லோரும் முணுமுணுத்தார்கள். இதுபற்றி சில பத்திரிகையாளர்கள் விஷணுவர்த்தனிடம் கேட்டபோது அவர் எனது நண்பர்களில் ஒருவர் அவ்வளவுதான் என்று சுருக்கமாக சொல்லிவிட்டு திருமண வேலைகளில் பிசியாகிவிட்டார். திருமணத்துக்கு வந்தவர்கள் எதுவும் பிடிபடாமல் சந்தேகத்தோடு சென்றனர். இதனால் வரவேற்பு நடந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள் ஏன் நேரிடையாக அந்த பெண்ணிடமோ, யுவராவிடமோ கேட்கவில்லை என்பதும் விசித்திரம் தான்!

 

Yuvanshankar-Raja-Islam

Yuvanshankar-Raja-Islam

முஸ்லிமாக  மாறி  ஒன்றிற்கு  மேலாக  மனைவியை  வைத்துக்கொள்ள  சினிமாக்காரர்கள்  பயன்படுத்தி  வருகிறார்கள்[1]: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர்.   இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[2]. இதைப்பற்றியும் பகுத்தறிவு ஜீவிகள், முற்போக்குவாதிகள், பரந்த-விரிந்த பொதுவுடமைக்காரர்கள், ஜனநாயக தோழர்கள், அதிநவீனசித்தாந்திகள் முதலியோர் ஒன்றும் சொல்லாமல் இருப்பதும் தெரியவில்லை.

தொழுகை செய்கின்றவன் எல்லோரும் முஸ்லிம் தான் (பெருநியூஸ்): “பெருநியூஸ்” என்ற ஒரு முஸ்லிம் இணைதளம் இதைப் பற்றி ஒரு விளக்கமே கொடுத்துள்ளது, “ஒருவர் எந்த நாட்டை சேர்ந்தவராயிருந்தாலும் எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் , எந்த நிறத்தை உடையவராக இருந்தாலும் , எந்த மொழியை பேசினாலும் எல்லாம் வல்ல ரஹ்மான் நம்மைப் படைத்த ஏக இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவர் தான் முஸ்லிம்!! எந்த ஒரு மனிதனும் பிறப்பால் முஸ்லிமாவதில்லை; இஸ்லாத்தை கடைப்பிடிப்பதன் மூலம்தான் ஒருவன் முஸ்லிமாகிறான், முஸ்லிம் வீட்டில் பிறந்த ஒருவன் இஸ்லாத்தை பின்பற்றுவதை விட்டுவிட்டால் அவன் முஸ்லிம் இல்லை. முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதி). தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி). அருமை சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுக்கு அல்லாஹ் தவ்பீக் செய்துள்ளான் எனவே இவர் இஸ்லாத்தை படிப்படியாக சரியாக உணர்ந்து கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் நல்லதொரு முஸ்லிமாக , இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஆக்கிக்கொண்டு தொடர்ந்து நேர்வழியில் நிலைத்திருக்க எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் .. இந்த பதிவைப் படிப்பவர்களும் துஆ செய்யுங்கள் .. இன்ஷா அல்லாஹ்”. என்று யுவராவை வரவேற்றுள்ளது . குறிப்பு: இந்த பதிவில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஒரு சில படிப்பினைகளோ, செய்திகளோ, நினைவூட்டல்களோ உள்ளது[3], என்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

 

யுவன்  ஷங்கர்  ராஜா  இஸ்லாத்திற்கு  மாறியது  ஏன்…? இயக்குநர்  அமீர் விளக்கம்! பணம், புகழ், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை,பொதுவாக வாழ்க்கையின் முதல்பாதியில் அமைதியாக இருப்பவர், இரண்டாம் பாதியில் ஆட்டம் போடுவார். அதுபோன்று தான் இப்போது நீயும் செய்கிறாய். என் அனுபவத்தில் சொல்கிறேன், இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம். புகழ், பணம், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை. சினிமாவில் பாதிபேரோடு வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது. சினிமாவில் மிச்சமாவது இந்த வெறுமை மட்டும்தான். ஒருத்தர் சினிமாவில் எவ்வளவு ஜெயிச்சாலும் அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருக்கும் என்று என்னால் முடிந்தளவுக்கு அட்வைஸ் செய்தேன்.என் தேடுதலுக்கான விடை இஸ்லாம் மதத்தில் இருக்கிறது. ஒருநாள் என்னிடம் தான் முழுவதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று யுவன் கூறினார். ஏன்? என்று கேட்டபோது என் மனதில் நிம்மதி இல்லை, அமைதி இல்லை, என்னுள் ஏகப்பட்ட குழப்பம் உள்ளது. இவை எல்லாவற்றுக்குமான விடையும், என்னுள் இருக்கும் தேடுதலுக்கான விடையும் இஸ்லாம் மதத்தில் உள்ளது. அதனால் தான் நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கூறினார். யுவன் இப்படி கூறுவதற்கு முன்பாக அவரை நான் ஒருமுறை சந்தித்தபோது, வாழ்க்கையில் அவர் எதையோ தொலைத்து தேடுவது போன்று எனக்கு தோன்றியது என்றார்[4].

யுவனை  தொடர்ந்து  இஸ்லாத்தைத்  தழுவப்போகும்   2   இளம்   ஹீரோக்கள்! தமிழ் சினிமா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கிய யுவன் சங்கர் ராஜா, சமீபகாலமாக எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கும் அவர் வரவில்லை. காரணம்? மீடியாக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே? அப்படியே மற்றொரு காரணம் அவர் புதிதாக தாடி வளர்த்து வருகிறாம். இதனால் இனி அவர் முழு இஸ்லாமியராக தோற்றமளிக்கப்போகிறாராம். தற்போது இவரைத் தொடர்ந்து தமிழ் திரையுலகத்தில் மேலும் சில நடிகர்கள் இஸ்லாத்தைத் தழுவப் போகிறார்களாம்[5]. இவர்கள் அத்தனை பேரும் யுவனின் நண்பர்கள் என்றும் சினிமா வட்டாத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. இதில் இரண்டு முன்னணி ஹூரோக்களின் பெயர்கள் பரவலாக பேசப்படுகின்றன. இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். கோடம்பாக்கத்தில் இன்னும் எத்தனை மாற்றங்கள் நிகழப்போகிறதோ? அதில் இரு ஹீரோக்களைப் கிசுகிசுவாக தகவல்கள் வெளியாகியுள்ளன[6].

1.   அப்பாவின் செல்லப் பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர். இவரது முதல் படமே ஜெயமானதால் இன்றைய கோடம்பாக்கம் கொண்டாடும் நடிகர். அப்பா முஸ்லீமாக இருந்தாலும், அம்மா இந்து. அதன் காரணமாக இந்துவாகவே வளர்க்கப்பட்டவர் இவர். தனது பெயரை விரைவில் மாற்றிக் கொண்டு முழு இஸ்லாமியராக மாறப் போகிறாராராம்[7].

2.   இவரை தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் தன்னை இஸ்லாத்துக்குள் இணைத்துக் கொள்ள தயாராகி வருகிறாராம். இரண்டெழுத்து ஹீரோவான இவரை சிம்புவுக்கு போட்டியாக சில காலம் மீடியாக்கள் சித்தரித்து வந்தன[8].

இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். தினமணியும் “குசுகுசு”க்களில் இறங்கிவிட்டதா என்று தெரியவில்லை. பொதுவாக அறிவிஜீவிகள் மற்ற சித்தாந்திகள் எல்லாம் தினமலர், தினமணி என்றால் “பார்ப்பன நாளேடுகள்”, “பார்ப்பனத் தூக்கிகள்” “இரண்டையும் ஒழிப்போம்” என்றெல்லாம் கூறுவார்கள், எழுதுவார்கள், பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், அவர்களே இவற்றைக் குறிப்பிட்டு எழுதுகிறார்கள்.

வேதபிரகாஷ்

© 13-02-2014

 


[7] தினமணி, யுவனை  தொடர்ந்து  இஸ்லாத்தைத்  தழுவப்போகும்   2   இளம் ஹீரோக்கள்??, By Web Dinamani, சென்னை, First Published : 11 February 2014 07:33 PM IST

முஸ்லிம் முஸ்லிம் மீது பழி போடுவது தப்பித்துக் கொள்ளவா, நாட்டை சீரழிக்கவா?

ஏப்ரல் 29, 2013

முஸ்லிம் முஸ்லிம் மீது பழி போடுவது தப்பித்துக் கொள்ளவா, நாட்டை சீரழிக்கவா?

குர்ஷித் ஆலம் கான் அத்தகை யசதிதிட்டத்தைத் தீட்டியிருக்க வேண்டும் (28-04-2013): ஆஸம் கான் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் செலவதற்காக பாஸ்டன் விமானநிலையத்திற்குச் சென்ற போது, வழக்காமாக நடத்தப் படும் சோதனைகள் நடைப் பெற்றன. சமீபத்தில் பாஸ்டன் வெடிகுண்டில் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், சோதனைகள் அதிகமாகவே இருந்தன. இதனால், ஆஸம் கான் சிறிது நேரம் காக்க வைக்கப் பட்டார்[1]. ஆனால், அது தம்மை முஸ்லிம் என்பதனால் அவ்வாறு நடஎது கொண்டார்கள் என்று குறைகூறினார். இப்பொழுது, சல்மான் குர்ஷித் தான் இதற்குக் காரணம் என்று பழிபோடுகிறார்[2]. குர்ஷித் ஆலம் கான் அத்தகைய சதி திட்டத்தைத் தீட்டியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்[3].

முஸ்லிம்,  முஸ்லிமை எப்படி பழிவாங்குவார்?: உம்மா, ஷரீயத் மற்றும் ஹதீஸ் முதலிய சித்தாந்தங்களின் படி, ஒரு முஸ்லிம், முஸ்லீமிற்கு எதிராக செயல்படலாகாது. அப்படி செய்வதானால், ஒரு முஸ்லிம், அடுத்த முஸ்லீமை காபிர் என்று அறிவித்து ஜிஹாத் தொடக வேண்டும். அப்படியென்றால், அரசியல் ரீதியில் இந்த இரு முஸ்லிம் தலைவர்களும் ஜிஹாதை ஆரம்பித்து விட்டார்கள் போலும்.

பாஸ்டன் விமான நிலையத்தில் சோதனை: 24-04-2013 புதன்கிழமை அன்று, அகிலேஷ் யாதவ் சார்பில் 11 பேர் கொண்ட படாளம் பாஸ்டன் விமானநிலையத்தில் வந்திறங்கியது. வழக்காமாக நடத்தப் படும் சோதனைகள் நடைப் பெற்றன. சமீபத்தில் பாஸ்டன் வெடிகுண்டில் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், சோதனைகள் அதிகமாகவே இருந்தன. இதனால், ஆஸம் கான் சிறிது நேரம் காக்க வைக்கப் பட்டார்[4].

முஸ்லிம்கள் கும்பமேளாவிற்கு பொறுப்பு,  ஆனால், இந்துக்கள் செத்தா முஸ்லிம்கள் பொறுப்பல்ல: செக்யூலர் நாடென்பதால், கும்பமேளாவிற்கு பொறுப்பாக ஆஸம்கான் என்ற மதவாத அமைச்சரே நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், நெரிசலில் இறப்புகள் ஏற்பட்டவுடன், முஸ்லிம்கள் “கும்பமேளாவிற்கு பொறுப்பு, ஆனால், இந்துக்கள் செத்தால் நாங்கள் பொறுப்பல்ல”, என்ற ரீதியில் பழியை ரெயில்வே மீது போட்டார் ஆஸம் கான். ஆனால், ரெயில்வே பொறுப்பாளர் தான் பொறுப்பு என்றனர். இதனால் ஆஸம் கான் ராஜினாமா செய்தார்.

கும்பமேளா என்பது சரித்திரரீதியில் சுமார் 3000 வருடங்களாக நடைப் பெற்றுவருகின்றது. அதில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள மக்கள் கோடி கணக்கில் வந்து கலந்து கொள்வார்கள். இப்பொழுது சொல்லப்படும் “கூட்டத்தை நிர்வகிப்பது” (Crowd Management) என்ற தத்துவம் எல்லாம் அப்பொழுது கிடையாது, ஏனெனில், மக்களே ஒழுங்காக, சிரத்தையாக, சீராக மேளாவில் கலந்து கொண்டு தத்தம் இடங்களுக்கு, நாடுகளுக்குத் திரும்பிச் சென்று விடுவர். ஆனால், இப்பொழுது ஹார்வார்ட் பல்கலைக் கழகத்திலிருந்து (Harvard University) ஒரு குழு, இதைப் பற்றி ஆய்வு நடத்த ஜனவரியிலேயே வந்து தங்கியது[5]. கடந்த பிப்ரவரி 2013ல் நடந்து முடுந்த கும்பமேளா வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகும்.

மக்கள் இறந்த பிறகு, பழியை ஊடகங்களின் மீது போட்ட ஆஸம் கான்:  அலகாபாத்தில், கூட்டநெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டவர்கள் பலியான விவகாரத்திற்கு, மீடியாக்களே காரணம் என்று, கும்பமேளா ‌குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியவரும், மாநில அமைச்சருமான முகம்மது ஆசம் கான் கூறியுள்ளார்[6]. உத்தரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஆசம் கான் கூறியதாவது, மகாகும்பமேளா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக சாக்கடையில் விழுந்து 2 பேர் பலியாயினர். மீடி‌யாக்கள் இந்த செய்தியை வெளியிட்டு பெரும்பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், அவ்விடத்திலிருந்து விரைந்து வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் ரயில்வே ஸ்டேசன் பகுதிக்கு விரைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாயினர். மாநில நிர்வாகம், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. ஆனால், அளவிற்கதிகமாக ஆட்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் மட்டுமே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.முஸ்லிம் முஸ்லிம் மீது பழி போடுவது தப்பித்துக் கொள்ளவா, நாட்டை சீரழிக்கவா?

முஸ்லிமையே விடாவிட்டால், நானும் போக மாட்டேன் – முலாயத்தின் மகன் முழக்கம்: முன்னர் ராமஜென்மபூமி விஷயத்தில் முலாயம் அடாவடி காரியங்களை மேற்கொண்டதால், சாதுக்கள் பலர் கொல்லப்பட நேர்ந்தது; அவர்களை அயோத்தியாவிற்கு வரமுடியாத அளவிற்கு தடுத்தார்; ரெயில்கள் திருப்பிவிடப்பட்டன; ரத்து செய்யப்பட்டன; நடந்து வந்தவர்களையும் அடித்து, துரத்தினர்; இதனால் “முல்லாயம் சிங் யாதவ்” என்றெ அழைக்கபடலானார். அவரது மகன், சும்மா இருப்பாரா? முஸ்லிமையே விடாவிட்டால், நானும் போக மாட்டேன்[7] – என்று முலாயத்தின் மகன் முழக்கமிட்டு, தனது “முல்லா”த்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டார்[8]. இவருடன் ஆஸம் கான், டயானா எக், கெர்க் கிரீனௌ, ராஹுல் மல்ஹோத்ரா முதலியோர் பேசுவதாக இருந்தது[9]. ஆனால், அவர் வரமாட்டார் என்று ஹார்வார்ட் வெப்சை அறிவித்தது[10].

வேதபிரகாஷ்

29-04-2013


[2] A routine action by the US administration is turning into the latest threat for the UPA government. The Samajwadi Party, on whose outside support the UPA government depends, has raked up the brief questioning of minister Azam Khan at Boston’s Logan airport by an official of the US mainland security office. It has tried to blame the UPA government for the incident to possibly whip up Muslim sentiments in its favour and against Congress.

http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/azam-khan-says-salman-khurshid-to-blame-for-his-detention-in-boston/articleshow/19773634.cms

[3] The Samajwadi Party (SP) has blamed external affairs minister Salman Khurshid for plotting the “humiliation” of its senior leader Azam Khan at the Boston airport last Wednesday (24-04-2013).

http://timesofindia.indiatimes.com/india/Khurshid-plotted-my-detention-at-US-airport-Azam/articleshow/19774620.cms

[7] Yadav was listed as a panel speaker in the spring symposium of Harvard’s South Asia Initiative on the subject “Harvard Without Borders: Mapping the Kumbh Mela.” But evidently, Harvard’s outlook on borders was not shared by the department of homeland security when it held up minister Khan at the airport. Yadav later opted out of the presentation at the last minute due to what organizers said was “unforeseen circumstances.”

[9] Also speaking with Yadav on the “Harvard without Borders: Mapping the Kumbh Mela” panel are

  • Diana Eck, a professor of law and psychiatry and a member of the divinity faculty at Harvard;
  • Azam Khan, Urban Development Minister of Uttar Pradesh;
  • Gregg Greenough, professor from the Harvard School of Public Health; and
  • Rahul Mehrotra, a professor of urban design and planning and chair of Harvard’s department of urban planning and design.

The moderator of the panel is Tarun Khanna, director of the South Asia Institute a professor from Harvard Business School.

http://www.indusbusinessjournal.com/ME2/dirmod.asp?sid=&nm=&type=Publishing&mod=Publications%3A%3AArticle&mid=8F3A7027421841978F18BE895F87F791&tier=4&id=C185E65B79234812A70DD51227A3F1C5

[10] Harvard University website said: “Due to unforeseen circumstances, today’s Harvard without Borders: Mapping the Kumbh Mela panel speaker will be UP chief secretary Javed Usmani in place of UP CM Akhilesh Yadav.”

http://www.telegraphindia.com/1130427/jsp/nation/story_16833610.jsp#.UX3dtqJTCz4

தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான், தாலிபான், துபாய் தொடர்புகள் என்ன – அவை எப்படி இந்தியாவிற்கு எதிராகச் செயல்படுகின்றன

ஏப்ரல் 6, 2013

தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான், தாலிபான், துபாய் தொடர்புகள் என்ன – அவை எப்படி இந்தியாவிற்கு எதிராகச் செயல்படுகின்றன

பாகிஸ்தானின் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத – பயங்கரவாதங்கள்: இந்தியா பாகிஸ்தானிற்கு பல ஆவணங்களைக் கொடுத்து, எப்படி தீவிரவாத-பயங்கரவாத கும்பல்கள், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகின்றன என்று எடுத்துக் காட்டி வருகின்றது. தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் இயக்கங்களின் தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு வருகின்றது. இருப்பினும் பாகிஸ்தான் அதனைப் பற்றிக் கவலைப் படுவதாகவே தெரியவில்லை. மாறாக, அது பல வழிகளில் அவற்றை வளர்த்துக் கொண்டே வருகிறது. தாவூத் இப்ராஹிமின் விஷயத்திலேயோ அப்பட்டமான மறுக்கமுடியாத பங்கு வெளிப்பட்டுள்ளது. இப்பொழுதைய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில் கூட அது வெளிப்படையாக எடுத்துக் கட்டியுள்ளது. ஆனால், தாவூத் இப்ராஹிம் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கிறது. மாறாக, குரூரங்களை மறைத்து, கொடுமைகளை மறைத்து, தன் “உடம்பில் முஸ்லீம் ரத்தம் ஓடுகிறது” என்று சொல்லிக் கொண்ட சஞ்சய் தத்திற்காக “கருணை” என்று திசைத்திருப்ப இந்திய ஊடகங்களே ஈனத்தனமாக செய்ல்பட்டு வருகின்றன.

தாவூத் இப்ராமின் பணம்: தாவூத்தின் பணம் புனிதமானது அல்ல, அது –

  • ரத்தக்கறைப் பட்ட பணம்;
  • போதை மருந்து வியாபாரத்தில் ஊர்ந்த பாவப் பணம்;
  • பெண்மையைக் கெடுத்தப் பணம்
  • பலருடைக் குடிகளைக் கெடுத்த பணம்
  • மனிதத்தன்மையற்றப் பணம்.
  • சுக்கமாக கேடு கெட்டப்பணம்.

ஆனால், அப்பணத்தைப் பற்றித்தான் இப்பொழுது, விவகாரங்கள் வெளிப்படுகின்றன. தாவூத் இப்ராஹிம் பணம் பரோடா வங்கி மூலம் பரிவர்த்தனைச் செய்யப்பட்டது என்று சில ஊடகங்களின் செய்தியை[1] அந்த வங்கி மறுத்துள்ளது[2]. மற்ற கணக்குகளைப் போன்றே, குறிப்பிட்ட கணக்கும் பஹாமாவில், நஸ்ஸௌ என்ற பரோடா வங்கிக் கிளையில் (Bank of Baroda, Nassau Branch, Bahamas) இருந்த கணக்கும் பல வருடங்களாக இருந்து வருகிறது. அதன் வழியாக, துபாய்க்கு பணமாற்றம் செய்யப்படுகிறது. இது அந்த நாடு மற்றும் துபாயின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் நடந்துள்ளது, என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது தாவூதின் பணம் அல்ல என்று மறுக்கவில்லை. பரோடா வங்கியின் வாதம் முன்பு HSBC வங்கி எப்படி வாதிட்டதோ, அதுபோலத்தான் உள்ளது.

HSBC வங்கிபோதைமருந்து, தீவிரவாதம், இத்யாதி: முன்பு எச்.எஸ்.பி.சி. வங்கி செப்டம்பர் 2011 தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்களோடு பணம் பரிவர்த்தனை செய்ததில் தொடர்புப் படுத்தப்பட்டது[3]. சுலைமான் பின் அப்துல் ஆசிஸ் அல்-ரஜியின் (Sulaiman bin Abdul Aziz al-Rajhi) பெயர் அல்-குவைதா பட்டியிலில் இருந்தது. அவருடைய அல்-ரஜி வங்கியுடன் HSBC வங்கி தொடர்பு கொண்டிருந்தது[4]. வங்காளதேசத்தின் கிளைக்கும் தொடர்பு இருந்தது[5]. 3000ற்கும் மேலான சந்தேகிக்கப்பட்ட கணக்குகள் அவ்வங்கி கிளைகளிடம் இருந்தன[6]. அவற்றில் தீவிரவாதிகளின் கையிருந்தது. இந்திய ஊழியர்களுக்கும் தொடர்பு இருந்தது எடுத்துக் காட்டப்பட்டது[7]. இங்கிலாந்திலும் இவ்வங்கி கோடிக்கணக்கில் போதை மருந்து வியாபாரிகளுடன் சமந்தப்பட்டு £640million அபராதத்திற்கு உட்பட்டது[8]. அப்பொழுதும் சவுதியின் தீவிரவாத தொடர்பு எடுத்துக் காட்டப்பட்டது. முஸ்லீம்களைத் தீவிவாதிகள் என்று சித்தரிக்கக் கூடாது என்கிறாற்கள். அப்படியென்றால், இவ்விஷயத்திலும் கூட, ஏன் முஸ்லீம்கள் ஈடுபடுகிறார்கள்? தீவிரவாதட் ஹ்திற்கு உபயோகப்படுகிறது எனும் போது, விலகிக் கொள்ளலாமே, புனிதர்களாக இருக்கலாமே?

தாவூ த்இப்ராஹிமின் நிழல் கம்பெனிகள் எவை: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத-பயங்கரவாத கும்பல்களிடமிருந்து தாவூத் இப்ராஹிமுக்கு வரும் பணம் எப்படி செல்கிறது என்று ஆயும்போது, அது பஹாமாவில் இருக்கும், நஸ்ஸௌ என்ற பரோடா வங்கிக் கிளைக்குச் செல்கிறது. இப்பணம் கீழ்கண்ட நிதி பரிமாற்ற வங்கிகளினின்று, மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் அக்கிளையை அடைகிறது:

  1. அல்-ஜரௌனி பணபரிமாற்ற வங்கி (al-Zarouni Exchange)
  2. துபாய் பணபரிமாற்ற வங்கி (Dubai Exchange)
  3. அல்-திர்ஹம் பணபரிமாற்ற வங்கி (al-Dirham Exchange)
  4. அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ் (Almas Electronics),
  5. யூசுப் டிரேடிங் (Yusuf Trading),
  6. ரீம் யூசுப் டிரேடிங் (Reem Yusuf Trading),
  7. ஃப்லௌதி டிரேடிங் கம்பெனி (Falaudi Trading Company),
  8. கல்ப் கோஸ்ட் ரியல் எஸ்டேட்ஸ் (Gulf Coast Real Estates).

இதைத்தவிர வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி என்கின்ற ( United Arab Emirates-based tycoon Vardaraj Manjappa Shetty) அமீரக பணமுதலையின் மூன்று ஹோட்டல்களிலும் பங்குள்ளது என்று சொல்லப்படுகிறது[9]. வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி ஊடகங்களில் டி-கம்பெனியுடன் தொடர்புப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும்[10], ஷெட்டி அதனை மறுத்து வருகிறார்[11]. இவர் ராஜ் ஷெட்டி என்று பிரபலமாக அழைக்கப்ப்டுகிறார். ரமீ ஹோட்டல் குழுமங்களுக்கு இவர்தான் தலைவர். இவர் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்[12]. இருப்பினும் மற்ற நிறுவனங்கள் இப்ராஹிமிம் நிழல் கம்பெனிகள் தாம் என்று தெரிகிறது.

போதை மருந்து வியாபாரத்தை செய்யும் தாவூத் இப்ராஹிம்: போதை மருந்து கடத்தல் மற்றும் விநியோகதாரர்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவிப்பதில்   தாவூத் இப்ராஹிம் ஈடுபட்டுள்ளான். தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நடக்கும் $3.5 பில்லியன் வியாபாரத்திற்கு இவன் தான் காரணகர்த்தா. இதற்காக அந்தந்த நாடுகளில் பணத்தை பட்டுவாடா செய்ய மற்றும் வசூலிக்க நிறைய நிறுவனங்களை வைத்துள்ளான்[13]. அமீரகத்தில் மட்டும் அத்தகைய 11 கம்பெனிகள் உள்ளன. இந்தியா பாகிஸ்தானிற்கு அனுப்பியுள்ள தீவிரவாத-பயங்கரவாத கும்பல்களின் விவரங்களைக் கொண்ட புத்தகத்தில் இவ்விவரங்கள் உள்ளன[14]. இப்பணம் எப்படி பாகிஸ்தானிற்கு உபயோகமாக இருக்கிறது என்றால், சலவை செய்யப்பட்ட அப்பணம் அங்கு முதலீடு செய்யப்பட்டதால் 2012ல் பாகிஸ்தானின் பங்கு வர்த்தகம் 49% உயர்ந்தது[15]. அமெரிக்கா இவனது பணப்போக்குவரத்தை முடக்கியதால், இப்படி தனது யுக்தியை மாற்றிக் கொண்டுள்ளான் என்று அனைத்துலக வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்[16]. ஆனால், அதே நேரத்தில் இந்திய பொருளாதாரத்தை சீரழிக்க எதிர்வேலைகளை செய்து வருகிறான்.

தாவூத் இப்ராஹிம் தீவிரவாதியும்,  இந்தியாவைத் தாக்கும் ஜிஹாதியும்: குலாம் ஹஸ்னைன் என்ற பத்திரிக்கையாளர் 2001ல் எழுதியது இன்று எப்படி மாறியிருக்கும் என்று தெரியவில்லை[17]: “தாவூத் இப்ராஹிம் ஒரு ராஜாவைப் போல வாழ்கிறான், அவனது இல்லம் 6,000 சதுர யார்டுகள் ஆகும், அதில் நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட், ஸ்நூக்கர் அறை, தனிப்பட்ட ஜிம், அவனுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வடிவமைக்கப்பட்ட உடைகள், மெர்சிடெஸ் மற்றும் விலையுயர்ந்த கார்கள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள பெடேக் பிலிப் கடிகாரம் முதலியவற்றைக் கொண்டவன். சினிமா நடிகைகள், விபச்சாரிகள் என்றால் சொல்லவே வேண்டாம், அப்படியே கரன்ஸி நோட்டுகளை அவர்கள் மீது வாரி இறைப்பான்”. அப்படி பட்டவன் தான், இப்படி இந்தியாவின் மீது ஜிஹாத் என்று குண்டுவெடிப்புகளில் இறங்கியுள்ளான்.

இஸ்லாமியர்கள் இத்தகைய செயல்களை செய்யலாமா: இப்படி எல்லாவிதங்களிலும், இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைக்க இந்த தீவிரவாத-பயங்கரவாத நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம், வெடிகுண்டு பயங்கரவாதம், இன்னொரு பக்கம் கள்ள நோட்டுப் புழக்கம், பங்கு வணிகத்தில் முதலீடு, தங்கத்தில் முதலீடு, இன்னொரு பக்கம் போதை மருந்து, சினிமா பெயரில் விபச்சாரம், கிரிக்கெட் பெயரில் எல்லாமே என்று கோடிகளில் முதலீடு செய்து பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறார்கள். என்னத்தான் இஸ்லாம், அமைதி, புனிதம் என்றெல்லாம் பேசிக்கொண்டாலும், அவர்கள் செய்து வரும் வேலை பயங்கரமாகத்தான் இருக்கிறது. ஹக்கானி நிதி பரிமாற்ற வலை[18] என்ற அறிக்கைப் புத்தகத்தில் இது எடுத்துக் காட்டப்படுகிறது. பஸிர் அலுவகலக கோப்பு (Pazeer Office File) என்ற இன்னொரு ஆவணம் எப்படி முஜாஹித்தீன்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்று விளக்குகிறது[19]. இவையெல்லாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆவணங்கள் தத்ரூபமாக அவர்களின் எண்ணங்களை, செயல்களை விளக்குகின்றன.

ஆனால், இந்திய முஸ்லீம்கள் இவற்றை –

  • எதிர்ப்பதில்லை;
  • கண்டிப்பதில்லை;
  • கண்டுக்கொள்வதில்லை
  • அமைதியாக இருக்கின்றனர்.

பிறகு இஸ்லாமிய தீவிரவாத-பயங்கரவாதம் என்றால் ஏன் எதிர்க்கின்றனர் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

06-04-2013


[1] The bank’s statement came a day after a CNN-IBN and FirstPost investigation found that Dawood’s cash was washing up in the offshore banking haven of Nassau in The Bahamas – a beach paradise also known for its zero-taxes and high-secrecy banking – in a Bank of Baroda branch.

[4] HSBC, the senate report says, did ill-monitored business with Saudi Arabia’s al-Rajhi bank – whose senior-most official, , appeared on an internal al-Qaeda list of financial benefactors discovered after 9/11. The al-Rajhi bank provided accounts to the al-Haramain Islamic Foundation, designated by the United States as linked to terrorism. Its owners, the Central Intelligence Agency asserted in 2003, “probably know that terrorists use their bank”. Lloyds, in a lawsuit, also alleged that al-Rajhi ran accounts used “to gather donations that fund terrorism and terrorist activities” – including suicide bombing. http://www.indianexpress.com/news/hsbc-india-staff-have-terror-link-/976133/2

[9] In addition, the dossier says Ibrahim has interests in three hotels controlled by United Arab Emirates-based tycoon Vardaraj Manjappa Shetty. Shetty has often been named in media reports as an associate of D-company, but vehemently denies the allegations.

http://www.firstpost.com/economy/from-dubai-to-nassau-dawood-blood-money-is-tainting-banks-686737.html

[12] Varadaraj Manjappa Shetty, better known as Raj Shetty, the Chairman and Managing Worker of the Ramee Group of Hotels, told Gulf News yesterday that “my interaction with the underworld is zero.”

http://gulfnews.com/news/gulf/uae/general/dubai-a-safe-place-says-top-police-officer-1.345336

[13] Dawood, as the investigation reveals, has emerged as the principal provider of financial services to narcotics traffickers and jihadists across South Asia – a business pegged at over $3.5 billion a year, which uses front companies to access the global financial system. New Delhi had provided Islamabad with the dossier in 2011, naming at least 11 United Arab Emirates-based entities controlled by Dawood’s crime cartel.

[14] Dawood, as the investigation reveals, has emerged as the principal provider of financial services to narcotics traffickers and jihadists across South Asia – a business pegged at over $3.5 billion a year, which uses front companies to access the global financial system. New Delhi had provided Islamabad with the dossier in 2011, naming at least 11 United Arab Emirates-based entities controlled by Dawood’s crime cartel.

[17] In 2001, journalist Ghulam Hasnain wrote that Dawood “lives like a king”. “Home is a palatial house spread over 6,000 square yards, boasting a pool, tennis courts, snooker room and a private, hi-tech gym. He wears designer clothes, drives top-of-the-line Mercedes and luxurious four-wheel drives, sports a half-a-million rupee Patek Phillipe wristwatch, and showers money on starlets and prostitutes”.

http://www.firstpost.com/economy/from-dubai-to-nassau-dawood-blood-money-is-tainting-banks-686737.html

[18] The CTC’s latest report leverages captured battlefield material and the insights of local community members in Afghanistan and Pakistan to outline the financial architecture that sustains the Haqqani faction of the Afghan insurgency.  The Haqqani network is widely recognized as a semi-autonomous component of the Taliban and as the deadliest and most globally focused faction of that latter group.  What receives far less attention is the fact that the Haqqani network also appears to be the most sophisticated and diversified from a financial standpoint.  In addition to raising funds from ideologically like-minded donors, an activity the Haqqanis have engaged in since the 1980s, information collected for this report indicates that over the past three decades they have penetrated key business sectors, including import-export, transport, real estate and construction in Afghanistan, Pakistan, the Arab Gulf and beyond.   The Haqqani network also appears to operate its own front companies, many of which seem to be directed at laundering illicit proceeds.  By examining these issues this report demonstrates how the Haqqanis’ involvement in criminal and profit-making activities has diversified over time in pragmatic response to shifting funding conditions and economic opportunities, and how members of the group have a financial incentive to remain the dealmakers and the enforcers in their area of operations, a dynamic which is likely to complicate future U.S. and Afghan efforts to deal with the group.

http://www.ctc.usma.edu/wp-content/uploads/2012/07/CTC_Haqqani_Network_Financing-Report__Final.pdf

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

மார்ச் 10, 2013

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

Ajmer-Sharif-shrine-chief-boycotted-but-deputed-others

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.

உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

Ajmer Sharif Mannat

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.

தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

Qawwali  dance ajmeeri dargah

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.

தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

Sufi dance dailyfresher.com

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.

பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

Sufi dance at Ajmir dargah Urs festival 2012

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

Jawahirullah gwtting blessing from Aadheenam, Mayildauthurai

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

Pakistan urs festival - Kalandar

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!

பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

760th Urs celebrations of Hazarat Lal Shahbaz Qalander RA in Sehwan Sharif Pakistan

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!

இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

Khushi dance at Ajmir Sharif Urs

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

Khushi dance at Ajmir Sharif Urs festival

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

Ajmer-dargah-map

வேதபிரகாஷ்

10-03-2013


1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!

மார்ச் 3, 2013

1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!

Attacks on Hindus is similar to 1971

முஸ்லீம் கலவரத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது: முஸ்லீம்களுக்குள்ளான விவகாரத்தில் கலவரம் வெடித்து அது இந்துக்களைத் தாக்குவதுதான், ஜிஹாதித்துவமாக இருக்கின்றது. தலைநகர் டாக்காவில் கலவரம் செய்தால் அது எதிர்ப்பாக இருக்கலாம் ஆனால், நவகாளி, சிட்டாகாங் பகுதிகளில் வாழும் இந்துக்களைத் தாக்கினால், அதற்கு என்ன அர்த்தம்? “இஸ்லாம்” என்றால் அமைதி என்று மார்தட்டிக் கொள்ளும் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு கொடுக்கும் அமைதி இதுதான் போலும்! ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளணர். இப்பொழுதுதான் செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. நவகாளி மற்றும் சிட்டகாங் பகுதிகளில் அவ்வாறு இந்துக்களின் வீடுகள்-கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்[1].

Hindus attacked - temples torched - houses looted - 2013

இந்தியாவில் இதைப் பற்றி மூச்சு-பேச்சு இல்லை: ஆனால், செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை! காலம் மாறினாலும், யுத்தமுறைகள் மாறினாலும், மாற்றங்களை இந்துக்கள் புரிந்து கொள்வதாக இல்லை[2]. வெளிநாட்டு கத்தோலிக்க சோனியாவிற்கு, 2014ல் ஆட்சியை எப்படி மறுபடியும் பிடிக்க வேண்டும் என்றுள்ளதால், இதைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை[3]. இந்து தொழிலதிபர்களை அடையாளங்கண்டு மிரட்டினாலும், அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை[4]. மமதா அம்மையாரும் இதனை கண்டுகொள்வதாக இல்லை, மாறாக முஸ்லீம்களைத்தான் அவர் ஆதரித்து வருகின்றார். முலாயம் மறுபடியும் “முல்லவாகி” முஸ்லீம்களுடன் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்[5]. ராஹுல் காந்தி பொது காரியதரிசிகளைக் கூட்டி கூட்டம் போடுகிறார்[6].

Hindu woman wails after her house looted and torched

தீவிரவாதிக்குத் தூண்டு தண்டனை அளித்ததால் கலவரம்:  டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[7] விதிக்கப்பட்டுள்ளது! இதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

Nipu Sheel wails -Jamaat-Shibir men at Banshkhali in Chittagong - Photo - Anup Kanti Das

கலவரங்களில் இந்துக்களும் தாக்கப்படுகின்றனர் என்ற செய்தி இப்பொழுது வெளிவருவது: முதலில் ஏதோ முஸ்லீம்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள், கலவரம் செய்து கொள்கிறார்கள் என்று தான் செய்திகள் வந்தன. இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் இந்துக்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். சுமார் 10 இந்து கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன[8]. 50 இந்துக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன[9]. இதனை படமெடுத்த ஊடகக் கரர்களை, அவற்றை வெளியிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். என்றேல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

Bangladesh protesters against Capital punishment

அருந்ததி ராய், ஜிலானி, லோனி, செதல்வாத் போன்றோர் இப்பொழுது ஏன் வாயைத் திறக்கவில்லை?: முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கி வரும் இந்த அறிவு ஜீவிகள் இப்பொழுது ஏன் இருக்கின்ற இடம் கூட தெரியாமல் இருக்கிறார்கள்? பீஜேபி கூட மகிழ்ச்சியாக கூட்டம் கூடுகிறதே தவிர, இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லையே? ஆனால், இலங்களை தமிழர்களுக்கு ஆதரிப்பதாக செய்திகள் வந்துள்ளன. அப்படியென்றால், பீஜேபியும் அதே வழியில் செல்கிறாதா? சல்மான் குர்ஷித் முன்பு முஸ்லீம் போல கத்தினார், ஆனால், இப்பொழுதோ, அது அவர்களது “தொட்டுவிடும்” உள்நாட்டு விஷயம் என்கிறார்[10]. அப்படி என்னத்தைத் தொடுகிறது என்று சொல்லவில்லை[11]. கம்யூனிஸ்ட் யசூரி கலவரத்தைக் கண்டித்தோது சரி[12]. பிரனாப் முகர்ஜி இத்தனை கலவரங்கள், கொலைகள், எரியூட்டுகள் நடந்து கொண்டிருந்தாலும், தமது மாமா-மச்சான்களைப் பார்க்க, தனது அங்கிருக்கும் சொந்த ஊருக்கு வருகிறாராம்!

Mulayam again poses as Mulla - hobnobbing with Muslims 2013

1971 மற்றும் 2013 – இந்துக்கள் தாக்கப்படுவது: பங்களாதேசம் உருவாக இந்திய உதவியது. அதாவது, முக்திவாஹ்னியுடன் போரிட்டு விடுதலை வாங்கிக் கொடுத்த இந்திய ராணுவத்தில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். ஆனால், இந்தியர்கள் அப்பொழுது அவ்வாறு நினைத்ததில்லை. ஆனால், 1071லேயே, பாகிஸ்தானி ஆதரவாளர்கள், ஜமத்-இ-இஸ்லாமி, போன்ற வெறிபிடித்த முஸ்லீம்களை இந்துக்களைத் தாக்கினர், பெண்களைக் கற்பழித்தனர், வீடுகளை சூரையாடினர், கோவில்களை தரை மட்டமாக்கினர். அதேதான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

Taliban wanting Jihadi Bangla Muslims

‘Amra Sobai Hobo Taliban Bangla Hobe Afghanistan’ – பங்களாதேசம் ஆப்கானிஸ்தான் ஆனால் தான், எங்களுக்கு சோபை வரும் என்று வெளிப்படையாக தீவிரவாதத்தை வளர்க்கும் வங்காள ஜிஹாதிகள்! இப்படி இந்தியாவைச் சுற்றி ஜிஹாதிகள் இருந்தால், இந்தியா என்னவாகும்?

© வேதபிரகாஷ்

03-03-2013


 


[1] Police also reported attacks on several Hindu homes and temples in the southern Noakhali and Chittagong districts.

http://thepeninsulaqatar.com/qatar/227373-bangla-death-verdict-sparks-riots-34-die-.html

[6] Party vice-president Rahul Gandhi has convened a meeting of all general secretaries and central leaders in charge of states on March 6, leading to wide anticipation in the party quarters that some of them may get new assignments.http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Rahul-Gandhi-calls-general-secys-meeting/Article1-1020202.aspx

[10] Terming the riots in Bangladesh over a war crimes verdict as an internal matter of that country, External Affairs Minister Salman Khurshid on Friday said the government sitting in Dhaka is fully capable of handling this situation and that the law will take its own course. Khurshid said it is a very touchy political issue for some sections of the Bangladesh polity. http://www.indianexpress.com/videos/international/21/bangladesh-capable-of-handling-riots-over-war-crimes-verdict-khurshid—/15760

கருப்புதினமாகக் கொண்டாடிய காஷ்மீர மக்களும், குண்டுகளைப் பொழிந்த பாகிஸ்தானியரும், குண்டுகள் வெடிக்கப்பட்ட மணிப்பூரும்: சுதந்திரநாள் கொண்டாடப்பட்டவிதம்!

ஓகஸ்ட் 16, 2012

கருப்புதினமாகக் கொண்டாடிய காஷ்மீர மக்களும், குண்டுகளைப் பொழிந்த பாகிஸ்தானியரும், குண்டுகள் வெடிக்கப்பட்ட மணிப்பூரும்: சுதந்திரநாள் கொண்டாடப்பட்டவிதம்!

 

சுதந்திர நாள் கொண்டாட்டம் என்றால் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை விட்டு, ஏதோ தீவிரவாத தாக்குதல் தடுப்பு தினமாகக் கொண்டாடப்படுவதைப் போன்ற சூழ்நிலை இந்தியாவில் உருவாகி வருகிறது. இப்படி பயந்து கொண்டே கொண்டாடுவது கொண்டாட்டமா என்று தெரியவில்லை.

 

வழக்கம்போல பிரிவினைவாத, அடிப்படைவாத, இந்திய-எதிர்ப்பு காஷ்மீர முஸ்லீம் மக்கள் சுதந்திரதினத்தை கருப்பு நாளாகக் கொண்டாடி பெருமை சேர்த்துள்ளனர்[1].

 

பாகிஸ்தானியர்கள் கடந்த 11 நாட்களில், ஏழு முறை சட்டங்களை / ஒழுங்கை மீறி எல்லைப்புறங்களில் துப்பாக்கி சூட்டை நடத்தி, இந்திய வீரர்களுக்கு குண்டுகளை கொடுத்துள்ளது[2].

 

மணிப்பூரிலேயோ, குண்டுகள் வெடித்தே சுதந்திர நாள் கொண்டாடப்பட்டுள்ளது[3].

 

ஆனால், பிரதமந்திரியோ பத்திரமாக, குண்டு துளைக்காத கண்ணாடி கவசத்தின் பின்னாக நின்று கொண்டு, உணர்ச்சியே இல்லாமல் தயார் செய்து கொடுத்த பேச்சை தட்டுத் தடுமாறி இந்தியில் பேசி முடித்துள்ளார்.

 

அதுமட்டுமல்லாது, பல இடங்களில் உளறிக் கொட்டியுள்ளார் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[4].


இந்திய சுதந்திரப் போரில் தியாகம் புரிந்தவர்களின் நினைவிடத்தை சூரையாடிய வெறிக்கொண்ட முஸ்லீம் இளைஞர்கள்!

ஓகஸ்ட் 15, 2012

இந்திய  சுதந்திரப்  போரில்  தியாகம்  புரிந்தவர்களின்  நினைவிடத்தை  சூரையாடிய 

வெறிக்கொண்ட முஸ்லீம் இளைஞர்கள்!

முஸ்லீம் இளைஞர்கள் வெறியுடன் அமர்ஜோதி ஜவான் நினைவகத்தை சேதப்படுத்தியது: மும்பையில் நடந்த கலவரத்தில் முஸ்லீம் இளைஞர்கள் சிறிதும் உண்மையினை உணராமல், இந்நாட்டின் தியாகிகளின் மகத்துவத்தை நினையாமல், வெறியுடன், வெறுப்புடன், காழ்ப்புடன் அமர் ஜோதி ஜவான் நினைவகத்தை கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்து சேதப்படுத்தினர்[1]. உடையாத “பைபர் கிளாஸ்” கண்ணடி பெட்டியையும் உடைத்து சூரையாடியுள்ளனர்[2]. அது மட்டுமல்லாது, அங்கு வைக்கப்பட்டிருந்த தலைகவசம் மற்றும் துப்பாக்கி முதலியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்[3]. மும்பை கார்ப்பரேஷன் அதிகாரிகள் இன்றைக்குள் அதனை சீர் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்கள், ஆனால் முடியவில்லை[4].

அத்தகைய வெறிக்குக் காரணம் என்ன – யார் அப்படி அவர்களை வெறி கொள்ள செய்தனர்?: அடுல் காம்ப்ளே என்ற “மிட்-டே” என்ற நாளிதழைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் எடுத்த புகைப்படங்களில், அந்த வெறிகொண்ட முஸ்லீம் இளைஞர்கள் பதிவாகியுள்ளார்கள். அவர்கள் செயல்படும் விதத்திலிருந்தே, அவர்கள் எந்த அளவிற்கு வெறிகொண்டுள்ளார்கள் என்பதனையறியலாம். அஜ்மல் கசாப் போன்று ஆக்ரோஷமாக உள்ளான் என்று பார்த்தவர்களே கூறுகிறார்கள்[5]. அந்த அளவிற்கு முஸ்லீம் இளைஞர்களை வெறிகொள்ளச் செய்வது யார்?  நாட்டின் மேன்மையை, வீரர்கள் சுதந்திரத்திற்காகத் தியாகம் புரிந்தத்தையும் அறியாமல் அப்படி கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்துள்ளார்கள் என்றால் அந்நிலை மாறவேண்டும். அவர்கள் திருந்த வேண்டும், தம்முடைய நாட்டைப் பற்றிப் புரிந்து கொள்ளவேண்டும்.

அமர்ஜோதி ஜவான் நினைவகம் உருவாகிய வரலாறு: அமர் ஜோதி ஜவான் மெமோரியல் – அமர் ஜோதி ஜவான் நினைவகம் ட்ரில் ஹவல்தார் சய்யது ஹுஸைன் (Drill Havaldar Sayyed Hussein) மற்றும் சிப்பாய் மங்கள் சாதியா (Sepoy Mangal Cadiya) என்ற இரு இந்திய வீரர்களின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் நிறுவப்பட்டதாகும். இவ்விரு வீரர்களும் ஆங்லிலேயரை எதிர்த்து போராடி, 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் ஈடுபட்டவர்கள். 150 ஆண்டு நினைவு விழாவின் போது, 2009ல் ஆஜாத் மைதானத்தில் நிறுவப்பட்டது. அக்டோபர் 15, 1857 – தீபாவளி நாளன்று சார்லஸ் போர்ஜெட் (Charles Forjett, the then Superintendent of Police, Bombay Region) எனேஅ அப்பொழுதய கிழக்கிந்திய கம்பெனியின் போலீஸ் சூப்பிரென்டென்டின் உத்தரவு படி, கிரெக்கெட் கிளப் அருகில் உள்ள மைதானத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனால்தான், அந்த இடம் “ஆஜாத் மைதான்” சுதந்திர மைதானம் என்று அழைக்கப்பட்டது. ரவீந்தர வைகர் (Ravindra Waikar) என்பவர்தாம், அந்த நினைவிடம் அமைக்கக் காரணமாக இருந்தவர். அப்பொழுதைய கமிட்டியின் தலைவராக இருந்து, நினைவகத்தை உருவாக்கத் திட்டமிட்டார். அந்நினைவிடம் சேதப்படுத்தப் பட்டதைக் குறித்து, அவர் மிகவும் வருத்தமடைந்தார். “அச்செயல் மிகவும் அசிங்கமானது, வெட்கப்படவேண்டியது, கண்டிக்க வேண்டியது”, என்று தனது கருத்தை வெளியிட்டார்.

சேதப் படுத்தியவர்களை கைது செய்ய போலீஸார் தீவிரம்:

Mumbai Crime Branch and local police are racing against each other to nab these hoodlums, knowing whoever makes these crucial arrests will reap rich professional rewards.“Of all the miscreants, these men are the most wanted. They have hurt the sentiments of the entire nation. They must be arrested on priority,” said a senior Crime Branch official, on condition of anonymity.

An officer from Azad Maidan police station said, “In such a scenario, it is better if these men surrender before the police reach them. By giving themselves up, they would be able to avoid the wrath of the police as well as the public.”

“These photographs have been circulated among our informers. We are in constant touch with them for leads. Every policeman is on the lookout for them at present. If we manage to arrest them before Independence Day, it will be our tribute to the freedom fighters,” he added.

The photographs caused a furore in social media networks. Readers across the nation condemned the act, some even comparing the vandals to 26/11 militant Ajmal Qasab.

Confirming the report, joint commissioner of police (crime) Himanshu Roy said, “This man (top-right) has insulted the national monument of India, and arresting him is our priority. Several Muslim leaders have also condemned the act.”

மும்பை கலவரக்காரர்களிலேயே, இவ்விருவரும் தான் இந்த நாட்டின் மதிப்பையே அவமதித்துள்ளார்கள்.அவர்களை கைது செய்ய வேண்டியதுதான் எங்களது தலையாயக் கடமையாக உள்ளது, என்று மும்பை போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

ஒவ்வொரு போலீஸாரிடமும் இப்படங்கள் உள்ளதால், அவர்கள் பிடிபட்டு விடுவார்கள் என்று நம்புகிறோம்.

மேலும் அவர்களாகவே வந்து சரண்டர் ஆகிவிட்டாலும் நல்லதுதான்.

சுதந்திரத்தினத்கிற்கு முன்பாகவாது, அவனைப் பிடித்துவிட வேண்டும். அப்படி செய்தால், அது அந்த தியாக-வீரர்களுக்கு செய்யும் உயர்ந்த மரியாதையாக இருக்கும்.

இப்படங்களைப் பார்த்தவர்களும் கொதித்துப் போயுள்ளார்கள். அக்மல் கசாப்புடன் ஒப்பிட்டி, அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

 

 

இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே போரிட்டது: இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே சத்தியாகிரகம், அஹிம்சை முறைகளில் போரிட்டார்கள். ஜின்னா போன்றவர்கள், பாகிஸ்தான் கேட்கும் வரை அவர்கள் ஒற்றுமையாகத்தான் செயல்பட்டார்கள். அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக நினைவு சின்னங்களை, இப்படி வன்முறை, வெறி, காழ்ப்பு போன்ற உணர்வுகளுடன் சூரையாடுவதே அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக – முறைகளை நிந்திப்பதாகும், அவமதிப்பதாகும், தேசவிரோதமாகும். ஆகவே, இக்கால இந்திய முஸ்லீம்கள் தங்களது பிள்ளைகளுக்கு உண்மையான சுதந்திர உணர்வுகளை ஊட்டி வளர்க்க வேண்டும். அதைவிடுத்து, “நாங்கள் முஸ்லீம்கள், நாங்கள் இந்தியர்களிடமிருந்து மாறுபட்டவர்கள், நாங்கள் பாகிஸ்தானிற்காகத்தான் ………………………………….., பாகிஸ்தான் கொடிகளை ஏந்திக் கொண்டு இந்தியாவிலேயே போராடுவோம்……………………………………………..”, என்று வளர்த்து வந்தால், இத்தகைய வெறிதான் வரும், வளரும், பாதிக்கும்.

வேதபிரகாஷ்

15-08-2012


[5] The photographs caused a furore in social media networks. Readers across the nation condemned the act, some even comparing the vandals to 26/11 militant Ajmal Qasab.

http://www.mid-day.com/news/2012/aug/140812-Mumbais-most-wanted.htm

மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப்பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்: இந்தியாவை மிரட்டும் அசாதுதீன் ஒவைஸி!

ஓகஸ்ட் 11, 2012

மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப்பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்: இந்தியாவை மிரட்டும் அசாதுதீன் ஒவைஸி!

ஆகஸ்ட் 8, 2012, அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது[1], “கடைசியாக நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன், இங்குள்ள மதிப்புக்குரிய அங்கத்தினர்களையும் இதுபற்றி எச்சரிக்கிறேன். சரியான குடியேற்ற முறைமை செய்யாவிட்டால், மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்”, என்று ஆவேசமாக, ஆக்ரோஷமாக கைகளை ஆட்டிக் கொண்டு அபாயகரமான எச்சரிக்கை விடுத்தார்!

‘Be Ready For A Third Wave Of Radicalization Among Muslim Youth’The Lok Sabha member from Hyderabad warned of the above “if proper rehabilitation does not take place”, while participating in a discussion on August 8, 2012 in the House on the recent Assam violence – ASADUDDIN OWAISI
http://www.outlookindia.com/article.aspx?281958

அவ்வாறு அவர் பேசிய வீடியோ பதிவை இங்கே காணலாம்[2]. மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனும்போது, முதல் இரண்டு தடவை எப்பொழுது இந்தியர்கள் அவ்வாறு எதிர்கொண்டார்கள் என்று ஒவைஸி விளக்க வேண்டும். 1947 மற்றும் 1971 ஆண்டுகளை குறிக்கிறாரா அல்லது நடந்துள்ள தீவிரவாத நிகழ்சிகளைக் குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. எது எப்படியாகிலும் இந்தியாவை துண்டாடுவோம் என்று வெளிப்படையாகச் சொன்னதால், கூட்டிக் கெடுக்கும் காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்று பார்க்க வேண்டும்.

டைம்ஸ் நௌ டிவி-செனலிலும் தான் பேசிய வார்த்தைகளை செத்தாலும் திரும்பப் பெறமாட்டேன் என்று உறுதியாகக் கூறினார்: மேற்கு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேச நாடுகளினின்று முஸ்லீம்களின் சட்டத்திற்குப் புறம்பான, திருட்டுத்தனமான உள்நுழைவுகள் 1947லிருந்தே நடந்து கொண்டிருக்கின்றன. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இதனை ஊக்குவித்து வந்துள்ளார்கள். 1947லிருந்தே காங்கிரஸ் அசாமில் அபாயகரமான, தேசவிரோத செயல்களில் தான் ஈடுபாட்டு வந்துள்ளது[3]. இதனால்தான், அசாம் கனசங்கிரம் பரிஸத் போராடியபோது, தேசிய குடிமகன்கள் பதிவுப்புத்தகத்தின் அடிப்படையில், அந்நியர்கள் / அயல்நாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் அதை எதிர்த்து வருவது முஸ்லீம் இயக்கங்கள்தாம் என்பது வியப்பாகவுள்ளது[4]. 2005 போதும் எதிர்த்தன[5]. இப்பொழுது கூட, அந்த புத்தகத்தை புதுபிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பல முஸ்லீம் அமைப்புகள் எதிர்க்கின்றன[6].

இன்று அசாம் பிரச்சினைக்கு மதசாயம் பூசக் கூடாது என்று வெட்கமில்லாமல் பேசும் சோனியா காங்கிரஸ் அன்று முதல் மதரீதியில் தான் செயல்பட்டு வந்துள்ளது. அதாவது முஸ்லீம் ஓட்டுவங்கியை உருவாக்க வேண்டும், அதன் மூலம் தேர்தலை வெல்லவேண்டும் என்றுதான் குறிக்கோள். 1947-1979 மற்றும் 1979-1985 காலக்கட்டங்களில் காங்கிரஸின் செயல்பாடுகளை நினைவு படுத்துக் கொண்டால், இந்த உண்மையினை அறிந்து கொள்ளலாம். 1983ம் வருடத்தில் 10-20 ஓட்டுகள் வாங்கி காங்கிரஸ் ஜெயித்த கதை இங்குதான் நடந்துள்ளது[4]. இப்பொழுது 2014 தேர்தல் வருகிறது என்று நினைவில் கொள்ளவேண்டும்.

 

அசாம் ஆளுனர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரியும் விஷயங்கள்: அப்பொழுது ராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பிரெட்னான்டஸ் இதனை எடுத்துக் கட்டியுள்ளார்[7]. கீழ்கண்ட அட்டவளணைகளினின்று முஸ்ளீம்கள் அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஊடுருவியுள்ளார்கள் என்று அறிந்து கொள்ளலாம்[8].

காலம்

% வளர்ச்சி 1971-1991

% வளர்ச்சி 1991-2001

பகுதி / இடம் இந்துக்கள் முஸ்லீம்கள் வித்தியாசம் இந்துக்கள் முஸ்லீம்கள் வித்தியாசம்
அசாம் 41.89 77.42 35.53 14.95 29.3 14.35
இந்தியா 53.25 73.04 19.79 20 29.3 9.3

காலம்

% வளர்ச்சி 1971-1991

% வளர்ச்சி 1991-2001

பகுதி / இடம் இந்துக்கள் முஸ்லீம்கள் வித்தியாசம் இந்துக்கள் முஸ்லீம்கள் வித்தியாசம்
மேற்கு வங்காளம் 21.05 36.67 15.62 14.26 26.1 11.84
இந்தியா 22.8 32.9 10.1 20 29.3 9.3

1961-1991 முப்பது ஆண்டுகள் காலத்தில் அசாமில் முஸ்லீம்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குகளுக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

வருடம்

அசாம்

இந்தியா

இந்துக்கள் முஸ்லீம்கள் இந்துக்கள் முஸ்லீம்கள்
(i) 1951-1961 33.71 38.35 20.29 25.61
(ii) 1961-1971 37.17 30.99 23.72 30.85
(iii) 1971-1991 41.89 77.42 48.38 55.04

இதுதான் முஸ்லீம்கள் அதிக அளவில் ஊடுருவல் செய்துள்ளார்கள் என்பதனை எடுத்துக் காட்டுகிறது. அசாம் கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் –  D. O. No. GSAG.3/98/ dated November 8, 1998, கீழ்கண்டவற்றைக் குறிப்பாக தெளிவு படுத்தியுள்ளார்.

  1. The growth of Muslim population has been emphasised in the previous paragraph to indicate the extent of illegal migration from Bangladesh to Assam because as stated earlier, the illegal migrants coming into India after 1971 have been almost exclusively Muslims.
  1. 21.  Pakistan’s ISI has been active in Bangladesh supporting militant movements in Assam. Muslim militant organisations have mushroomed in Assam and there are reports of some 50 Assamese Muslim youth having gone for training to Afghanistan and Kashmir.
20. முந்தையப் பத்தியில் முஸ்லீம் மக்கட்தொகை எண்ணிக்கை உயர்வு பற்றிச் சுட்டிக் கட்டப்பட்டுள்ளது, இது 1971ற்குப் பிறகு சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்துள்ளவர்கள் எல்லோருமே முஸ்லீம்களாக உள்ளனர்.

  1. பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ பங்களாதேசத்தில் தீவிரவாத இயக்கங்களை ஆதரித்து செயல்பட்டு வருகிறது.  அசாமில் முஸ்லீம்  தீவிரவாத இயக்கங்கங்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரத்திற்குச் சென்று 50 பேர் பயிற்சி பெற்று வந்துள்ளதும் தெரிகிறது

ஊடுருவும் அயல்நாட்டினரை அந்நியர்கள், இந்தியக் குடிமக்கள் அல்லர் என்று பார்க்காமல், அவர்கள் முஸ்லீம்கள் என்ற பார்வையில் பார்ப்பதில் தான் பிரச்சினைகள் வந்துள்ளன. பங்களாதேசத்து முஸ்லீம்களை முஸ்லீம்கள் என்று பார்ப்பதை விடுத்து அயல்நாட்டுக் காரர்கள், சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்தவர்கள் என்று பார்க்க வேண்டும்[9]. இந்தியாவிலிருந்து முஸ்லீம்கள் பங்களாதேசத்திலேயோ, பாகிஸ்தானிலேயோ நுழைந்தால் அந்நாடுகள் ஏற்றுக் கொள்ளுமா? இதனை முஸ்லீம் தலைவர்கள் ஆதரிப்பார்களா?ஆனால், இந்தியாவில் நுழைந்தால் ஏனிப்படி துரோகத்தனமாக நடந்து கொள்கிறார்கள்? அப்படி சொன்னஆல் சோனியாவிற்குப் பொத்துக் கொண்டு வருகிறது? இவ்வளவு விஷயங்கள், புள்ளிவிவரங்கள், ஆதாரங்கள் இருந்தாலும், சோனியா காங்கிரஸ் ஓட்டு வங்கி, தேர்தல் என்ற கண்ணோட்டத்துடனே இருப்பதால், அனைத்தையும் அனுமதித்து இந்திய மக்களுக்கு தீங்கினை உண்டாக்கி வருகிறது[10].

© வேதபிரகாஷ்

11-08-2012


[3] The years from 1979 to 1985 witnessed political instability in the stale, collapse of state governments, imposition of President’s Rule, sustained, often violent, agitation, frequent general strikes, civil disobedience campaigns which paralyzed all normal life for prolonged periods, and unprecedented ethnic violence. The central government’s effort to hold a constitutionally mandated election to the state assembly in 1983 led to its near total boycott, a complete breakdown of order, and the worst killings since 1947 on the basis of tribal linguistic and communal identities. Nearly 3,000 people died in statewide violence. The election proved to be a complete failure with less than 2 per cent of the voters casting their votes in the constituencies with Assamese majority. The 1983 violence had a traumatic effect on both sides, which once again resumed negotiations in earnest. Finally, the Rajiv Gandhi government was able to sign an accord with the leaders of the movement on 15 August 1985. All those foreigners who had entered Assam between 1951 and 1961 were to be given full citizenship, including the right to vote; those who had done so after 1971 were to be deported; the entrants between 1961 and 1971 were to be denied voting rights for ten years but would enjoy all other rights of citizenship. A parallel package for the economic development of Assam, including a second oil refinery, a paper mill and an institute of technology, was also worked out. The central government also promised to provide ‘legislative and administrative safeguards to protect the cultural, social, and linguistic identity and heritage’ of the Assamese people. The task of revising the electoral rolls, on the basis of the agreement, was now taken up in earnest. The existing assembly was dissolved and fresh elections held in December 1985. A new party, Assam Gana Parishad (AGP), formed by the leaders of the anti-foreigners movement, was elected to power, winning 64 of the 126 assembly seats. Prafulla Mahanta, an AASU leader, became at the age of thirty-two the youngest chief minister of independent India. Extreme and prolonged political turbulence in Assam ended, though fresh insurgencies were to come up later on, for example that of the Bodo tribes for a separate state and of the secessionist United Liberation Front of Assam (ULFA).

http://indiansaga.com/history/postindependence/accord.html

[5] The All India United Democratic Front, a party with considerable influence over more than 30 per cent Muslim population in the state, has opposed the proposal to have the 1951 National Register of Citizens or 1952 electoral roll as the cut-off date to identify or define an Assamese.

http://www.telegraphindia.com/1100726/jsp/northeast/story_12726570.jsp

[6] The All Assam Minorities Students’ Union (AAMSU) along with 24 other minority organisations have strongly objected the state cabinet sub-committee’s decision to re-launch the registrar general of citizen registration’s pilot project to update the National Register of Citizens (NRC) of 1951 in three phases from July 1, 2012.

http://articles.timesofindia.indiatimes.com/2012-03-26/guwahati/31239803_1_aamsu-nrc-abdur-rahim-ahmed

[7] 2 cr Bangladeshis in India: Fernandes Says proxy war by Pak main challenge, Tribune News Service, September 27, 2003; http://www.tribuneindia.com/2003/20030928/main1.htm

[9] The Tribune, Monday, February 17, 2003, Chandigarh;http://www.tribuneindia.com/2003/20030217/edit.htm#3

மும்பை வெடிக்குண்டு ஜிஹாதி கொலைக்காரன் தாவூத் இப்ராஹிம் தன்னுடைய சமாதிக்கு மும்பையில் இடம் தேடச் சொல்லியுள்ளானாம்!

நவம்பர் 12, 2011

மும்பை வெடிக்குண்டு ஜிஹாதி கொலைக்காரன் தாவூத் இப்ராஹிம் தன்னுடைய சமாதிக்கு மும்பையில் இடம் தேடச் சொல்லியுள்ளானாம்!

 

நேருவின் இறுதி ஆசையும், தாவூதின் இறுதி ஆசையும்!: பள்ளியில் படிக்கும் போது, நேருவின் இறுதி ஆசை என்று ஏதோ படித்ததாக ஞாபகம். அதில் நேரு தான் இறந்தால், தனது உடல் இந்தியாவிற்கு எடுத்து வரவேண்டும், உடல் எரிக்கப் படவேண்டும், அஸ்தி கங்கையில் கரைக்கப்பட வேண்டும், இந்தியா முழுவதும் தூவப்படவேண்டும் என்றேல்லாம் குறிப்பிட்டதாக ஞாபகம். விபரீதமான ஆசைதான். அப்பொழுது இப்படி இறந்த மனிதனின் சாம்பல் தூவப்பட்டால் சுற்றுநிலை மாசு ஏற்படுமா என்றேல்லாம் யாரும் யோசிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. நேருவைப் பின்பற்றும் அல்லது செக்யூலரிஸ போர்வைப் போர்த்திக் கொண்டு உலாவரும் அறிவுஜீவிகளும் பிறகு அறிந்து வெட்கப்படவில்லை. அதுபோல இந்த தாவூத் இப்ராஹிம் என்ன பெரிய சுதந்திரத் தியாகியா, இந்திய அரசியல்வாதியா, பிரதம மந்திரியா, முக்கியமான ஆளா? பிறகு, இவனுக்கு ஏன் இந்த ஆசை? உண்மையில் தேடப்படும் குற்றவாளியான அவன், இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் கேட்டுள்ள 22 தீவிரவாதிகளில் அவனும் ஒருவன். கசாப்பைப் போல அவனுக்கும் தூக்குத்தண்டனைதான் கொடுக்கப்படும். ஆனால், இறப்பின் மூலம் தப்பித்துக் கொள்ள முயல்கிறான் போலும். இறந்த பிறகு பட்டங்களைக் கொடுத்து கௌரவிப்பது போல, இவன் இறந்தாலும், அவனுக்குக் கொடிய தண்டனைக் கொடுக்கப் பட வேண்டும். அப்பொழுதுதான், தீவிரவாத-பயங்கரவாத அரக்கர்களுக்கு பயம் வரும். செத்தப் பிறகு நரகத்திற்குச் செல்லக் கூடிய இந்த கொடியவர்களுக்கு, இந்தியா இடந்தரலாகாது.

 

கொலைக்காரன், தீவிரவாதி, பயங்கரவாதி: செத்தபிறகும் பிரச்சினை கிளப்ப தீர்மானமாகவே உள்ளான் போலும் வெடிகுண்டு கொலைக்காரன், ஜிஹாதி தாவூத் இப்ராஹிம். உண்மையிலேயே நம்பிக்கையுள்ள மனிதனாக இருந்திருந்தால் பாவத்தைக் கழுவ வருந்தியிருக்க வேண்டும். ஆனால், சாவிற்குப் பிறகு தீவிரவாத-பயங்கரவாத சின்னமாக இருக்க முடிவு செய்திருப்பது, இந்திய மக்களுக்கு, குறிப்பாக மும்பை மக்களுக்கு பெரிய அபாயமான விஷயமாகும். தனது மரணத்திற்கு பின்னர் தனது உடல் மும்பையில் புதைக்கப்பட வேண்டும் என்று பிரபல நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன[1]. .அந்த அளவிற்கு பிறந்த மண்ணுடன் ஐக்கியம் ஆகவேண்டும் என்று நினைப்பவன், எப்படி அந்த மண்ணிற்கு தொரோகம் விளைவித்திருப்பான்? அப்பாவி மக்களைக் கொன்றிருப்பான்? கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்புகளை நடத்தி 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலியாவதற்கு காரணமாக இருந்து[2], அச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத், அத்தாக்குதலுக்கு பின்னர் மும்பையிலிருந்து தப்பி சென்று பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்துவருகிறான்[3]. அவனை பாகிஸ்தான் அரசும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் பாதுகாத்து வருகிறது[4].

 

இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைத்தவன், சீர்குலைத்து வருபவன்: ஏதோ இந்த தாவூத் இப்ராஹிம் பெரிய மனிதனைப் போல ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. எதிர்மறை விளம்பரத்தின் மூலம், மக்கள் மனத்தில் பதிய வைக்கிறது. சமயத்தில் முஸ்லீம்கள் அவனை தியாகி என்றும் நினைப்பர், நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவன் நினைவாக திரைப்படம் எடுக்கவும் ஆரம்பித்துவிட்டனர்[5]. கொலை[6], கள்ளக்கடத்தல், கிரிக்கெட் சூதாட்டம், போதை மருந்து வியாபாரம்[7], மும்பை திரைப்படத் தொழிலை, ஏன் இந்தியத் திரைப்படத்தொழிலையே[8] ஆட்டிப் படைப்பவன், பல நடிகைகளின் வாழ்க்கையை நாசமாக்கிவன், விபச்சாரம் பெருகக் காரணமானவன், மொத்த ஹவாலா போக்குவரத்திற்கும் கணிசமான அளவிற்குக் காரணமானவன், இதையெல்லாம் தவிர பத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத-பயங்கரவாதக் கூட்டங்களுக்கு பலவகைகளில் உதவி வருபவன்[9]. பிறகு அவனுக்கு என்ன இந்தியாவின் மீது, தான் பிறந்த மண்ணின் மீது ஆசை?

 

நம்பிக்கையாளனான ஜிஹாதி ஏன் சாவைக்கண்டு பயப்பட வேண்டும்? இந்நிலையில், கடந்த மே மாதம் 2010 பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல் காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடனை, அமெரிக்க படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றதையடுத்து, தாமும் அவ்வாறு வேட்டையாடப்படலாமோ என்ற அச்சத்தில், தாவூத் கராச்சியிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. நம்பிக்கையாளனான ஜிஹாதி சாகத்தான் விரும்புவானேத் தவிர, சாவைக்க் அண்டு பயப்பட மாட்டானே? ஆக சாவிலும் இந்தியாவை பாதிக்க விரும்புகிறான். ஆனால் அவன் தொடர்ந்து கராச்சியிலேயே ஐஎஸ்ஐ-யின் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்துவருவதாக கூறப்படுகிறது.  அப்படியென்றால், கராச்சியிலேயே அவனை புதைத்து விடலாமே? இந்நிலையில் தற்போது 56 வயதாகும் தாவூத்திற்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு வந்ததை தொடர்ந்து அவன், தனக்கு விரைவில் மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனது இரண்டாவது மகள் திருமணத்தை, திட்டமிட்டதற்கு ஓராண்டுக்கு முன்னரே கடந்த ஆண்டு 2010 நடத்தி வைத்தான். தாவூத், தனது மூத்த மகளை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாந்தத் மகனுக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளான். மகனுக்கு, பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளான். இந்நிலையில் சமீப நாட்களாக தாவூத்தின் உடல் நிலை மிக மோசமடைந்துள்ளதாகவும், அவன் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இந்தியாவிற்கு தாவூத் வேண்டுமா? பொதுவாக தேடப்படும் தீவிரவாதி, பயங்கரவாதி, மறைந்து வாழும் குற்றவாளியை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் பரிசு என்றேல்லாம் அறிவிப்பர்கள். இந்நிலையில், தனது இறுதி நாட்கள் நெருங்குவதை உணர்ந்துள்ள தாவூத், தனது மரணத்திற்கு பின்னர் தனது உடலை தாம் தாதாவாக கோலோச்சிய மும்பையிலோ அல்லது தமது பிறந்த ஊரான மும்பையை அடுத்துள்ள ராய்காட் மாவட்டத்தின் கேத் நகரிலோ புதைக்க வேண்டும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது[10].  இது குறித்து மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவு தலைவர் ஹிமான்ஷு ராஜிடம் இது குறித்து கேட்டபோது, தங்களுக்கும் இது குறித்த நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்[11]. தாவூத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா, நீண்ட காலமாக பாகிஸ்தான் அரசிடம் கோரி வருகிறபோதிலும், அவன் தங்கள் நாட்டில் இல்லை என்று அந்நாடு மறுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. பிறகு பிணத்தை இந்தியாவிற்குக் கொடுப்போம் என்றால் என்ன அர்த்தம்?

 

வேதபிரகாஷ்

11-11-2011


[1] என்னுடைய உடல் மும்பையில் புதைக்கப்பட வேண்டும்: தாவூத் இப்ராகிம்

புதுடெல்லி , வியாழன், 10 நவம்பர் 2011

http://tamil.webdunia.com/newsworld/news/national/1111/10/1111110033_1.htm

[5] Zubair Khan, son-in-law of Dawood Ibrahim’s sister Haseena Parkar, is making a film on the life and crimes of the dreaded don which is titled Lakeer Ka Fakir. The film also deals with roles of Karim Lala and Chhota Shakeel and their association with Dawood.

http://searchandhra.com/cinema/a-film-on-dawood-ibrahim-by-his-relative

[6] ஆகஸ்ட் 17, 1997ல் டி-சீரிஸ் குல்ஸன் குமார் சுட்டுக் கொள்ளப்பட்டது, திரைப்படத்துறையினரை கப்பங்கட்டச் சொல்லி பயமுறுத்திய செயல்தான்!

In a breakthrough in the Gulshan Kumar murder case, the city police claimed that Abdul Rauf Dawood Merchant, an aide of the underworld don, Dawood Ibrahim, today “confessed” to having killed the music mughal three years ago.

http://hindu.com/2001/01/10/stories/0210000a.htm

[8] அவனுடையக் கூட்டாளிகள் இன்றும் தமிழ் திரைப்படத்துறையில் தமிழ் நடிகர்களாக, தமிழச்சி நடிகைகளாக மறைந்து வாழ்கின்றனர். பங்கை சேகரித்து அவனுக்குத் தப்பாமல் அனுப்பி வைக்கின்றனர். இதைப் பற்றி எந்த பச்சைத் தமிழனுக்கும் அக்கரையில்லை, கேட்கத் துப்பில்லை.

[9] Dawood is among the 50 terrorists India wants Pakistan to hand over. Apart from his hawala network in India, his involvement is also suspected in providing logistics to the 10 terrorists who attacked Mumbai in 2008.

[10] Zee News reported According to Zee News, the 56-year-old “Karachi-based don”, who has had two massive heart attacks in the past two years, is being monitored round-the-clock by a team of doctors and his family members. However, according to the report, Dawood is already busy planning his end. He has instructed his men to find a suitable place for his burial in Mumbai or in his native town Khed in Ratnagiri district.

http://www.pakistantoday.com.pk/2011/11/dawood-ibrahim%E2%80%99s-%E2%80%98days-numbered%E2%80%99/

[11] Zee News said the Mumbai Crime Branch was also aware of the don’s desire to be buried in India. Himanshu Rai, chief of the Crime Branch, has been quoted as saying, “We have received credible inputs regarding this.”

http://www.pakistantoday.com.pk/2011/11/dawood-ibrahim%E2%80%99s-%E2%80%98days-numbered%E2%80%99/