Posted tagged ‘மர்கஸ்’

இரு நகரங்கள், இரு மதங்களின் கூடுதல், விளைவு கொரோனா பாதிப்பு, பரப்பு மற்றும் குற்றச்சாட்டு, அபாயகரமான விளைவு! [2]

ஏப்ரல் 2, 2020

வைரஸ்இரு நகரங்கள், இரு மதங்களின் கூடுதல், விளைவு கொரோனா பாதிப்பு, பரப்பு மற்றும் குற்றச்சாட்டு, அபாயகரமான விளைவு! [2]

Corona affected India details-Tamilnadu

01-04-2020 அன்றைய நிலை: தமிழ்நாட்டில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டார்[1]. 01-04-2020 அன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இவர்கள் அனைவருமே டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் கூறினார். தமிழகத்திலிருந்தும் 1500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.  சென்னையில் 31-03-2020 அன்று செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், டெல்லியில் நிஜாமுதீன் மர்கஸில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பலரைத் தங்களால் கண்டறிய முடியவில்லையென்றும் அவர்கள் தாங்களாக முன்வந்து அரசிடம் தங்களைப் பற்றிய தகவல்களைக் கூற வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று மாலையிலிருந்தே பலர் தாமாக முன்வந்து தகவல் தெரிவித்ததாகக் கூறிய சுகாதாரத் துறைச் செயலர், இவர்களில் 658 பேருக்கு கொரோனோ தொற்று இருக்கிறதா என்ற சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

1500 from TN attended Tabliq, The Pioneer, 01-04-2020

திரும்பி வந்துள்ளவர்களில், தமிழ்நாட்டில் தொற்றுள்ளவர்கள்: தற்போது தமிழ்நாட்டில் 77330 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப் படுவதாகவும் 81 பேர் அரசின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது[2]. இதுவரை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்தவர்களில் 4070 பேர் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 2726 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 234 பேருக்கு அந்நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது[3]. இன்று கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்ட 110 பேரில் ஒருவர் பர்மாவையும் ஒருவர் இந்தோனீசியாவையும் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் இதுவரை நோய் உறுதிசெய்யப்பட்ட 234 பேரில் 190 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இன்று நோய் உறுதிசெய்யப்பட்டவர்களில் 6 பேர் திருநெல்வேலியையும் 28 பேர் கோயம்புத்தூரையும் 20 பேர் தேனி மாவட்டத்தையும் 17 பேர் திண்டுக்கல் மாவட்டத்தையும் 9 பேர் மதுரை மாவட்டத்தையும் 5 பேர் சிவகங்கை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். மேலும் திருப்பத்தூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து தலா 7 பேருக்கும் ஈரோடு, தூத்துக்குடி, திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து தலா 2 பேருக்கும் கரூர், சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து தலா ஒருவருக்கும் நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Tabliq spreads Islam, , The Pioneer, 01-04-2020

தமிழக அரசு கெஞ்சிக் கேட்கும் விதம்: டெல்லி மாநாட்டில் பங்கேற்றது குறித்து தாமாக முன்வந்து தகவல் தெரிவித்த 1103ல் இதுவரை 658 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது[4]. மீதமுள்ளவர்களுக்கும் சோதனை செய்யப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த 1103 பேர் வசித்துவந்த வீடுகளை தனிமைப்படுத்தும் பணிகள் துவங்கிவிட்டதாகவும் அவர்களோடு யார் யாரெல்லாம் பழகியவர்கள் என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் விரைவில் அவர்களும் கண்காணிப்பு வளையத்தில் வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறித்த எண்ணிக்கையை உறுதி செய்வதில் சிக்கல்கள் இருப்பதாகவும் தொடர்ந்து இது தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருவதாகவும் பீலா ராஜேஷ்[6], தமிழக அரசு சுகாதாரத் துறைச் செயலா் தெரிவித்தார்[7].

Tabliq attendees portent to sspread Covid-19, Tamil Hindu, 01-04-2020

நிஜாமுத்தீன் ஜமாத் மர்ஜஸ் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களின் நிலைமை: பீலா ராஜேஷ் சொன்னதாவது[8], “நீங்கள் சொல்லும் தகவல் உங்கள் குடும்பத்தைக் காக்கும், சமுதாயத்தைக் காக்கும் என தெரிவித்திருந்தேன் அதை ஏற்று அனைவரும் தாமாக முன் வந்து தகவலை தெரிவித்துள்ளனர் அதற்கு முழுமையான நன்றி . தற்போது 1103 பேர் அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு அவர்களில் 658 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் நாளை சோதனை நடத்தப்படும்……..1500 மேல் என்று சொன்னோம் அதில் 250 , 300 பேர் அங்கே யே இருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் வந்துவிட்டார்கள். நேற்று நாங்கள் கோரிக்கை வைத்தவுடன் இரவு முழுதும் அனைவரும் வந்துவிட்டார்கள் அவர்கள் அனைவருக்கும் டெஸ்ட் எடுத்துள்ளோம். மொத்த எண்ணிக்கை 1103 பேர் தாமாகவே வந்துள்ளனர்…………நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட 110 பேர் 15 மாவட்டங்களிலிருந்து வந்துள்ளனர். மாவட்ட வாரியாக நெல்லை 6 பேர், கோவை 28 பேர், ஈரோடு 2 பேர், தேனி 20 பேர், திண்டுக்கல் 17, மதுரை 9 பேர், சிவகங்கை 5, பேர் திருப்பத்தூர் 7பேர், செங்கல்பட்டு 7 பேர், திருவாரூர் 2 பேர், தூத்துக்குடி 2 பேர், காஞ்சிபுரம் 2 பேர், கரூர் 1, சென்னை 1, திருவண்ணாமலை 1 மாநாட்டில் வந்தவர்கள் மொத்தம் 110 பேர் 15 மாவட்டத்திலிருந்து சென்றுள்ளனர். நேற்றைய கணக்கு 80 பேர் 18 மாவட்டங்கள். மொத்தம் மாநாட்டிலிருந்து வந்தவர்கள் 19 மாவட்டங்களில் உள்ளனர்.

Omar, Mehbuba defend Markaz , The Statesman, 01-04-2020-

இதனை யாரும் மதப் பிரச்சினை ஆக்கவில்லை: கொரோனா நிலைமையை, இங்கு புள்ளி விவரங்களுடன் காணலாம்[9]. இவை எல்லாம் யாரும் மதம், ஜாதி பார்த்து தயாரிப்பது இல்லை. ஆனால், பெரும்பாலானோர் துலுக்கராக இருக்கும் போது, அவ்வாறே சொல்லப் படுகிறது. தில்லி முஸ்லிம்களின் அடவாடி, ஆபத்தான நடவடிக்கைகள் பற்றி கொஞ்சம்-கொஞ்சமாக ஊடகங்களில் பேச ஆரம்பித்து விட்டார்கள். செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. அந்நிலையில், அதைப் பற்றி அதிகம் பேசாமல், அமைதி காத்து வருகிறார்கள். இதை யாரும் மதப்பிரச்சினசென்று யாரும் நினைக்கவில்லை. முஸ்லிம்கள் விவகாரங்களை வெளியில் சொல்லாமல், அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், ரகசியமாக வைத்துக் கொண்டனர். தில்லி பிரச்சினை வெளியே வந்தவுடன், மற்ற விவரங்களும் வெளிவந்தன்ன. அந்நிலயில் தான், இவ்விவரங்கள் வெளிவந்தன. ஆகவே, மதம், நம்பிக்கை, சித்தாந்தம் என்றெல்லாம் இருந்தால் கூட உயிர் மீது ஆசை இருப்பவர்கள் அரசிடம் உண்மை சொல்ல வேண்டும். தற்கொலை படையாவதை விட, தன்னையும் காத்து, தன் குடும்பம், சமூகம், நாடு, உலகம்  என்று எல்லாவற்றையும் காக்க உண்மை சொல்லவேண்டும்.

©  வேதபிரகாஷ்

01-04-2020

Mxm attended Tabliq conf. TN, corona graphics

[1] பிபிசி.தமிழ், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: டெல்லி மத நிகழ்வில் பங்கேற்ற 190 பேருக்கு தொற்று, ஏப்ரல்1, 2020, 7.48 PM

[2] தமிழ்.இந்து, டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய 523 பேரில் 50 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 124 ஆனது ,Published : 31 Mar 2020 09:09 PM; Last Updated : 31 Mar 2020 09:23 PM.

[3] https://www.hindutamil.in/news/tamilnadu/547208-coronal-infection-in-50-people-the-number-became-124-50-out-of-523-returned-to-tamil-nadu-after-attending-delhi-conference.html

[4] தினமணி, தமிழகத்தில் புதிதாக 110 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234-ஆக உயா்வு, By DIN | Published on : 02nd April 2020 04:17 AM

[5] https://www.dinamani.com/tamilnadu/2020/apr/02/corona-110-new-victims-in-tamil-nadu-3392835.html

[6] இந்தியன்.எக்ஸ்பிரஸ்.தமிழ், தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா; மொத்தம் 234 – சுகாதாரத்துறை, WebDesk, April 01, 2020 08:23:38 pm

[7] https://www.bbc.com/tamil/india-52123727

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/beela-rajesh-110-new-corona-cases-in-tn-delhi-nizamuddin-covid-19-181157/

[9] https://www.covid19india.org/

முஸ்லிம்கள் எல்லோரும் சமம் என்றால் தமிழக முஸ்லிம்களில் மோதல் ஏற்படுவது ஏன்?

ஏப்ரல் 27, 2013

முஸ்லிம்கள் எல்லோரும் சமம் என்றால் தமிழக முஸ்லிம்களில் மோதல் ஏற்படுவது ஏன்?

Clash between Muslim groups in constructing mosque

முஸ்லிம்கள் எல்லோரும் சமம்: பொதுவாக முஸ்லிம்கள் எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்று, ஒரு வித்தியாசமும் இல்லை, தோளோடு தோள் இணைந்து, தொட்டுக் கொண்டு, இடித்துக் கொண்டு தொழுகை செய்வோம், ஒன்றாக இருப்போம், சாப்பிடுவோம் என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டு வருவர். ஆனால், அச்சமத்துவ, சகோதரத்துவ, ஏகத்துவ, ஒருத்துவ நிலையில் எப்படி முஸ்லீம்கள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள் என்பது கூர்மையாக ஆய்வதற்குரியது[1]. சன்னி-ஷியா மோதல்கள், கொலைகள், குண்டுவெடிப்புகள் முதலியவை உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றவை[2]. ஆனால், “அமைதிப் பூங்கா”, “வந்தாரை வாழவைக்கும்” என்றெல்லாம் போற்றப்படுகின்ற தமிழகத்தில் எப்படி அத்தகைய மோதல்கள் நடக்கலாம்.

Fight among the Muslims - Kadaiyanallur, Tit

இஸ்லாமியர்களுக்குள்சண்டைஏன்?: சைவம் தழைத்தோங்கிய திருநெல்வேலியில், கடையநல்லூரில் இப்பொழுது முஸ்லிம்கள் ஜனத்தொகைப் பெருகியுள்ளது. இப்பிரச்சினை மீனாட்சிபுரம் மதமாற்றத்திலிருந்தே ஆரம்பிக்கிறது[3]. அதற்கேற்றார்போல, அவர்களது தமிழ்நாடு ஜமாத், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, எஸ்.டி.பி.ஐ, என்று பல அமைப்புகள் உள்ளன. வெளிநாட்டிலிருந்து பணம் வருவதனால்[4], மசூதி, மதரஸா, முதலிய கட்டிடங்கள் கட்டுவது, தொழுகை நடத்துவது, விழாக்கள் நடத்துவது என்ற உள்விஷயங்களில் பெரிய புரச்சினைகள் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள்[5]. கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாஅத்தார் முதலியோருக்கு மோதல், அடிதடி முதலியவை எப்பொழுதும் உள்ளது போலிருக்கிறது, ஏனெனில் அதனை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்[6].

Kadayanallur clash between Muslim groups.3

TNTJ மற்றும் TMMK மோதல்கள்: தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாத மற்றும் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் இப்பிரச்சினைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், TNTJ மற்றும் TMMK இடையில் பலமுறை மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

  • 2006ல் மஸ்ஜித்-உர்-ரஹ்மான் என்ற மசூதியை யார் நிர்வகிப்பது என்ற விஷயத்தில் TNTJ மற்றும் TMMK இடையில் சண்டையிட்டுக் கொண்டனர்[7]. இதை அனைத்துலக ரீதியில் பெரிதுபடுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன[8].
  • ஜனவரி 2008ல் அல்-முபாரக் மஸ்ஜிதை நிர்வகிப்பதில் ஜாக் அமைப்பினருக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது[9].
  • 2009ல் தேர்தல் பிரச்சரத்தின்போது மோதல் ஏற்பட்டது[10].
  • செபடம்பர் 2010ல் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்[11].
  • கடந்த மார்ச்சில் கூட மசூதியில் பிரச்சினை ஏற்பட்டது, ஒருவர் தாக்கப்பட்டார்[12].

இதோ அரேபிய, ஆப்பிரிக்க மற்றும் மத்திய ஆசிய முஸ்லீம் அல்லது இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் நிகழ்சியாக, சண்டையாக, சச்சரவாக நினைக்க வேண்டாம். செக்யூலரிஸத்தில் ஊறிப்போயிருக்கும் இந்தியாவில், பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மாநிலத்தில், நுண்ணறிவு, பிரித்தறிவு, செம்மறிவு, என்றெல்லாம் கொண்டுள்ள அறிவிஜீவிகள் கொண்ட தமிழகத்தில் தான் இவ்வாறு முஸ்லீம்கள், முஸ்லிம்கள், இஸ்லாமியர்கள், முகமதியர்கள், துலுக்கர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றவர்கள்[13] அடித்துக் கொள்கின்றனர்.

Kadayanallur clash between Muslim groups.4

மசூதி, அரபுப்பள்ளிக்கூடம், மர்கஸ், மதரஸாஎதுகட்டுவதால்பிரச்சினை: தமிழ் ஊடகங்கள் பிரச்சினை ஏற்பட்டது ஒரு மசூதி, பள்ளிவாசல், அரபுப் பள்ளிக்கூடம் கட்டுவதால் ஏற்பட்டது என்கின்றன. TNTJ “மர்கஸ்” ஒன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பேட்டை பகுதியில் அமைய உள்ளது[14] என்று குறிப்பிடுகின்றது. மர்கஸாவா, மதரஸாவா என்று மற்றவர்களுக்கு புரியவில்லை. அதே மாதிரி எதிர்ப்புத் தெரிவித்த முஸ்லீம்கள் கூறுவதும் வித்தியாசமாக உள்ளது.

தினமலர்சொல்வது: கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெருப்பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறுவர், சிறுமியர் அரபி பாடசாலை[15] பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது[16].

TNTJ சொல்வது: “மர்கஸ்” ஒன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பேட்டை பகுதியில் அமைய உள்ளது[17].

மாலைமலர்கூறுவது: கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெருவின் மேற்கு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதிய பள்ளிவாசல் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது[18].

தினமணி கூறுவது: கடையநல்லூரில், பேட்டை ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இதற்கு அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறுவர் சிறுமியர் அரபி பாடசாலை என்ற பெயரில் துவக்கப் போவதாகச் சொல்லி, பள்ளிவாசல் ஒன்று கட்டும் முனைப்பில் இருந்தார்களாம்[19].

ஏற்கனவே பள்ளிவாசல் உள்ள நிலையில் புதிய பள்ளிவாசல் அமைக்க வேண்டாம் என்றனர்.

தினத்தந்திகூறுவது: கடையநல்லூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர்[20].  இங்கு “இரு தரப்பினர்” என்று குறிப்பிட்டு, பிரச்சினைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.

நெல்லை-ஆன்-லைன் கூறுவது: தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதிய அலுவலகம் கட்டும் வேலைகள் நடக்கின்றன. இதற்கு பேட்டை ஜமாத் எதிர்ப்புத் தெரிவித்தனர்[21].

இங்கு அரபிப் பள்ளி என்பது “மதரஸா” ஆகுமா, ஒருவேளை அதைத்தான் எதிர்க்கிறார்களா என்று தெரியவில்லை. மதரஸாக்களில் நடப்பவைப் பற்றி பற்பல விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன[22]. தலிபானின் மதரஸாக்கள் பற்றி சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

செக்யூலரிஸஊடகங்கள்உண்மையைச்சொல்கின்றனவா?: மேற்குறிப்பிட்டபடி, தமிழக நாளிதழ்கள் நிகழ்வுகளின் உண்மையினை திருத்தியோ, மாற்றியோ, மறைத்தோ வெளியிடுகின்றன. “இரு பிரிவினர்களுக்கு” என்றால் எப்படி படிக்க வேண்டும் என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

  • இந்து-முஸ்லீம்கள்
  • சன்னி-ஷியா / சுன்னி-ஷியா
  • சையது-லெப்பை
  • முஸ்லிம்-எஸ்.சி
  • முஸ்லிம்-தலித்துகள்
  • TNTJ – TMMK

இப்படி எந்த இரு பிரிவினரை எடுத்துக் கொள்வது. இதை எழுதும் நேரத்திலே, பள்ளக்கால் பொதுக்குடியில் முஸ்லீம்களுக்கும், தலித்துகளுக்கும் இடையே டேற்படவிருந்த மோதல் தடுக்கப்பட்டது என்று செய்தி வருகிறது[23]. எனவே, “செக்யூலரிஸம்” என்ற போர்வையிலேயோ, வேறு எந்த பாரபடசம் அல்லது ஆதரவு, விருப்பு-வெறுப்பு ரீதிகளில் செய்திகளை வெளியிடுவதால், படிப்பவர்களுக்கோ மற்றவர்களுக்கோ எந்த பயனும் இல்லை. இதனால், முஸ்லீம்கள் தங்கள் பிரச்சினையைப் பொதுப் பிரச்சினையாக்கி விடுவர். பந்த, கடையடைப்பு, போராட்டம், ஆர்பாட்டம் என்று எல்லோரையும் படுத்திவிடுவர்.

வேதபிரகாஷ்

27-04-2013


[4] அயல்நாட்டு பணமாற்றத்தில் கடையநல்லூர் முக்கிய ஊராக இருக்கிறது. அனைத்துலக அளவில் தெரியப்பட்டும் உள்ளது. மசூதி, மதரஸா, முதலிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நன்கொடைகளும் வருகின்றன.

[6] கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தார் மோதல்: எஸ்ஐ உள்பட 10 பேர் காயம் – Thursday, April 18, 2013.

[9] கடையநல்லூர்: கடையநல்லூரில் பள்ளிவாசலை நிர்வாகிப்பதில் இரு அமைப்பினரிடையே இருந்து வரும் தொடர் மோதலால் இன்று தொழுகை நடத்துபவரை தாக்கி பள்ளிவாசலின் பூட்டை உடைத்து 6 பேர் கொண்ட கும்பல் நுழைய முயன்றது. இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடையநல்லூர் மெயின் பஜாரில் அல் முபராக் மஸ்ஜீத் பள்ளிவாசல் 1985ம் ஆண்டு துவக்கப்பட்டது. இப்பள்ளி வாசலை நிர்வாகிப்பதில் ஜாக் அமைப்பினருக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு பள்ளி வாசலில் தொழுகையை நடத்துபவரும், ஜாக் அமைப்பை சேர்ந்தவருமான முகமது இஸ்மாயில் பள்ளிவாசலுக்கு வந்துக் கொண்டிருந்தார். அவர் பள்ளிவாசலை நெருங்கியதும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த சேகனா உள்பட 6 பேர் கொண்ட கும்பல் முகமது இஸ்மாயிலை சராமரியாக தாக்கியது. அவர் சுதாரிப்பதற்குள் பூட்டை உடைத்து பள்ளி வாசலுக்குள் நுழைய முயன்றது. அவர் சத்தம் போடவே கும்பல் தப்பியோடி விட்டது. இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். Read more at: http://tamil.oneindia.in/news/2008/01/03/tn-clash-in-masjid-at-kadayanallur.html

http://tamil.oneindia.in/news/2008/01/03/tn-clash-in-masjid-at-kadayanallur.html

[10] பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தமுமுகவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 11 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன் பட்டியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்திரத்திற்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அதே பகுதியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவாக தமுமுகவினர் பிரசாரம் செய்து வந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும், தமுமுகவினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகின்றது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read more at: http://tamil.oneindia.in/news/2009/05/08/tn-tntj-tmmk-cadres-clash-near-pollachi.html

[11] Two persons were shot dead and 10 injured in a shootout following a clash between two groups over observing a fast at Thiruvidaicherry in this district last last night.Police said, misunderstanding between a section of Muslims belonging to Tamil Nadu Thowheed Jamad (TNTJ)and another belonging to Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK) often led to clashes. Since last evening, the two groups were quarrelling and when they assembled in the mosque late last night, they clashed and exchanged fire with country made revolvers.– (UNI) –  http://news.webindia123.com/news/articles/India/20100906/1581449.html

[12] கடையநல்லூர்,: கடையநல்லூரில் பள்ளிவாச லில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர் பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ரஹ்மானியாபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சுலைமான் (79). கடையநல்லூர் வடக்கு அய்யாபுரத்தில் உள்ள செய்யது அப்துல்லா கலிபா சாகிப் பள்ளிவாசலில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் பள்ளிவாசலை பூட்டும் போது அதே தெருவை சேர்ந்த கபீத்ரஹ்மான், ஷேக் மைதீன் ஆகியோர், ‘‘நாங்கள் உள்ளே இருக்கும்போது எப்படி பள்ளிவாசலை பூட்டலாம்?’’ என்று கூறி அவரை தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து அவர் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் கபீத்ரஹ்மான் போலீசில் அளித்த புகாரில்,  நானும், ஷேக்மைதீனும் பள்ளிவாசலில் இருக்கும்போது வடக்கு அய்யாபுரத்தை சேர்ந்த சுலைமான், இலியாஸ், காதர்மைதீன், செய்யது அப்துல்லா ஆகிய 4 பேரும் தாக்கியதில் காயம் அடைந்ததாக குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பாக கபீத்ரஹ்மான், ஷேக்மைதீன், சுலைமான், இலியாஸ், காதர்மைதீன், செய்யது அப்துல்லா ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=181750&cat=504

[13] சரித்திரரீதியில் காலக்கட்டங்களில் அவ்வாறுதான் அழைக்கப்பட்டனர். இன்று குறிப்பிட்ட வார்த்தைகள் இப்படித்தான் சொல்லப்பட வேண்டும், எழுதப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் வற்புறுத்துகின்றனர்.

[23] The timely initiative taken by the Communist Party of India (Marxist) and the Tamil Nadu Muslim Munnetra Kazhagam averted a clash between Muslims and Dalits of Pallakkaalpothukkudi near Ambasamudram in the district recently. – TIRUNELVELI, April 26, 2013

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/communal-clash-averted/article4656034.ece