Posted tagged ‘மரபணு’

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – மற்ற முயற்சிகள், முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் மூலம் தொடருமா? (3)

செப்ரெம்பர் 25, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல்மற்ற முயற்சிகள், முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் மூலம் தொடருமா? (3)

முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் (Muslim Rashtriya Manch (MRM) – 2002ல் துவக்கி வைக்கப் பட்டது: கே. எஸ். சுதர்சன் எப்படி கிருத்துவர்களுடன் உரையாடல் ஆரம்பித்தாரோ, அடே போல, முஸ்லிகளுடனும் உரையாடல் வைத்துக் கொள்ள, முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் / முஸ்லீம் தேசிய மன்றம் ஆரம்பித்து வைக்கப் பட்டது[1]. இந்திய முஸ்லீம்களின் அமைப்பான இது ராஷ்டிரிய சுயமசேவாக் சங்கத்துடன் இணைந்தது. இவ்வமைப்பு ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே. எஸ். சுதர்சன் என்பவரால் 24 டிசம்பர் 2002 அன்று நிறுவப்பட்டது. இவ்வமைப்பின் நோக்கம் முஸ்லீம் சமூகத்தில் இந்திய தேசிய உணர்வு, நாட்டுப் பற்று ஊட்டுவதுடன், சங்கப்பரிவாரின் இந்துத்துவா கொள்கைகளை இந்திய முஸ்லீம்கள் அறியச் செய்வதாகும். இதன் தேசியத் தலைவராக முகமது அப்சல் உள்ளார். இந்தியாவின் 26 மாநிலங்களில் உள்ள 300 மாவட்டங்களில் 10 இலட்சம் உறுப்பினரகள் இவ்வமைப்பில் உள்ளனர். உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோகா குறித்து 2015-இல் முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் யோகா மற்றும் இஸ்லாம் தலைப்பில் நூல் ஒன்றை இசுலாமியர்களுக்காக வெளியிட்டது. முஸ்லீம் இராஷ்டிரிய மஞ்சின் மகளிர் அணி, இந்தியாவில் முத்தலாக் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதை வரவேற்றுள்ளது.

15-09-1984 – அப்துல் சமதுசூரியநாராயண ராவ் சந்திப்புதுக்ளக்: முஸ்லிம் லீக் – ஆர்.எஸ்.எஸ் சந்திப்பு என்று துக்ளக்கில் அப்துல் சமது-சூரியநாராயண ராவ் உரையாடல் வெளிவந்தது. அதில் சில சுமுகமான கருத்துகள் வெளிவந்தன. இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலான முஸ்லிம்கள் முன்னர் இந்துக்களாக இருந்தனர், மதம் மாறினர், ஒற்றுமையாக இருக்க வேண்டும் போன்ற கருத்துகள் பேசப் பட்டன. அப்துல் சமது தம் முன்னோர்கள் இந்துக்கள் என்பதனையும் ஒப்புக் கொண்டார். பிறகு ஆத்ரவு-எதிர்ப்பு-கண்டன விமர்சனம் முதலியன நடந்தன. அவற்றில் சில துக்ளக்கில் “வாசகர் கடிதம்” பக்கத்தில் வெளியிடப் பட்டது. பிறகு, அல்லயன்ஸ் பதிப்பகம் அவற்றைத் தொகுத்து புத்தகமாகக் கூட வெளியிட்டது. ஆனால், பிறகு அது மறக்கப் பட்டது எனலாம். ஏனெனில், அத்தகைய உரையாடல்கள் நடக்கவில்லை அல்லது அந்த அளவுக்கு நெருங்கி வரவில்லை. அரசியல், கூட்டணி போன்ற விவகாரங்களால், விலகி சென்றனர் போலும்.

வடவிந்தியாதென்னிந்தியா வேற்றுமை: வட இந்தியாவில், பொதுவாக, இந்துக்கள்-முஸ்லிம்கள் சேர்ந்து வாழ்கிறார்கள், தினசரி வேலைகளில் பங்கு கொள்கிறார்கள். இந்து பண்டிகைகளில், பெரும்பாலும், முஸ்லிம்களின் பங்கு உள்ளது. நவராத்திரி-தசரா விழாக்களில் பந்தல், சிலைகள், அலங்காரம் முதலியவற்றை அமைப்பதில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர். வைஷ்ணவி தேவி கோவில் பக்தர்களுக்கு உதவுவதிலும், அவர்கள் பெரும் பங்கு வகுக்கின்றனர். இவையெல்லாம் அவர்களுக்கு வியாபாரமாக, வாழ்வாதார தொழிலாகக் கூட இருக்கலாம். இருப்பினும், அத்தகைய இணைந்து செல்லும் போக்கு உள்ளது. ஆஜ்மீர் மற்ற தர்காக்களில் இந்துக்களும் பெருமளவில் வந்து செல்கின்றனர். அதே போல, தெற்கில் நாகூருக்கு  இந்துக்கள் பெருமளவில் வந்து செல்கின்றனர். ரம்ஜான் இஃப்தர் பார்ட்டிகளிலும் இணைகின்றனர். சேர்ந்து உண்கின்றனர், பொழுது போக்குகின்றனர். பெரும்பான்மையான முஸ்லிம்களும் இதைத்தான் விருமுகின்றனர். தெற்கில் குறிப்பாக, கேரளா, தமிழகம், கர்நாடகா, தெலிங்கானா போன்ற மாநிலங்களில் சில இயக்கங்கள், முஸ்லிம்களை பிரித்து, அடிப்படைவாதிகளாக, பயங்கரவாதிகளாக, தீவிரவாதிகளாக, மாற்ற முயல்கின்றனர். அதனால், இரு சமூகங்களுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. மோதல்களும் ஏற்படுகின்றன. ஆனால், முஸ்லிம்கள், மிக மோசமாக, எல்லைகளைக் கடந்து வன்முறைகளுக்குச் சென்று விடுகிறார்கள். குண்டு வைத்தல், கலவரங்களை உண்டாக்குதல், அப்பாவி மக்களைக் கொல்லுதல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இதனால், பிளவுகள் அதிகமாகின்றன, தீவிரமடைகின்றன.

தமிழகத்தில் இத்தகைய உரையாடல்ளுக்கு வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை: ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் இஸ்லாத்தை விட்டு விரட்ட வேண்டும் என தமிழக ஜாமஅத்துல் உலமா சபைக்கு இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோரிக்கை வைத்துள்ளது[2]. சில நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, அத்தகைய இணைப்புகளை எதிர்க்கிறது. ஆகையால் தமிழ் நாட்டிலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் ஜாமத்துல் உலமா சபை முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை இஸ்லாத்தை விட்டு நீக்கி அவர்களுடன் முஸ்லீம்கள் எந்தவொரு தொடர்பும் வைக்க கூடாது என மார்க உத்தரவு போடவேண்டும். அதே போல் தமிழக அரசும் உளவுத்துறை மூலம் ஆர்எஸ்எஸ் பாஜகவின் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகளை சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 2022ல் இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான் என்று மோஹன் பகவத் பேசியது: இஸ்லாமிய மக்களுக்கு எதிரான இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் அனைவராலும் பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத், `இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஓர் இந்து கூறுகிறார் என்றால், அவர் ஒரு இந்துவே அல்ல’ என்றும், `இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான்’ என்றும் நேற்று ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார்.. உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமியப் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கூட்டத்தில், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது அவருக்கு ஆலோசகராக இருந்த முனைவர் க்வாஜா இஃப்திகார் அஹ்மத் என்பவர் எழுதிய ‘தி மீட்டிங்ஸ் ஆஃப் மைண்ட்ஸ்: எ பிரிட்ஜிங் இனிஷியேட்டிவ்’ (The meeting’s of mind’s : A bridging initiative) என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “நாம் அனைவரும் கடந்த 40,000 ஆண்டுகளாக ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. இந்திய தேசத்தின் மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான். எனவே, இந்துக்களும் இஸ்லாமியர்களும் வேறு வேறு குழுக்கள் அல்ல. ஏற்கெனவே இணைந்துதான் இருக்கிறார்கள். எனவே, அவர்களை இணைப்பதற்குப் புதிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் ஓர் இந்துவே அல்ல[3]: தொடர்ந்து மோஹன் பகவத் பேசியது, “இங்கு அரசியலால் சில பணிகளைச் செய்ய முடியாது. அதன் மூலம் மக்களை இணைக்க முடியாது. அரசியல் எப்போதும் மக்களை இணைக்கும் கருவியாக இருக்காது. அது மக்கள் இடையிலான ஒற்றுமையைச் சிதைக்கும் ஆயுதமாக எப்போது வேண்டுமானாலும் மாறலாம். இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் ஓர் இந்துவே அல்ல[4]. பசு புனிதமான விலங்குதான், ஆனால், மற்றவர்களைக் கொலை செய்பவர்கள்கூட இந்துத்துவா தத்துவத்துக்கு எதிரானவர்களே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்[5]. இத்தகையவர்களைச் சட்டம் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தண்டிக்க வேண்டும். மேலும், நாம் இந்தியாவில் வாழ்கிறோம், இங்கு இந்துவோ, இஸ்லாமியரோ ஆதிக்கம் செலுத்தக் கூடாது, இந்தியர்கள்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும்,” என்றார்[6].

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை[7]: தொடர்ந்து மோஹன் பகவத் பேசியது, “தற்போது இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஆபத்தில் இருப்பது போன்ற மாய பிம்பம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாம் அந்தச் சதி வலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது. இங்கு இஸ்லாமியர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்[8]. இந்தியாவில் ஒற்றுமை இல்லையென்றால் வளர்ச்சி என்பது துளியும் சாத்தியமில்லை. எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்கள் இயக்கத்துக்குக் கட்சி அரசியலில் விருப்பமில்லை. தேசத்தின் நலனே எங்களுக்கு முக்கியம்,” என்றார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்தப் பேச்சை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்[9]. உத்தரப்பிரதேசத்தில் இந்துத்துவா சித்தாந்தத்தை வலுப்படுத்த பாஜக-வின் யோகி ஆதித்யநாத் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் வேளையில், ஆர்.எஸ்.எஸ் தலைவரின் இந்த ‘இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாடு’ பேச்சு அந்த மாநில அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது[10].

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கருத்து: ஓவைசி ஆவேச ட்வீட்: மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு அனைத்திந்திய மஜ்லிஸ் இ இதிகாதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்[11]. இதுதொடர்பாக ட்விட்டரில் அவர், “பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது கும்பல் வன்முறையில் ஈடுபடுவது இந்துத்துவாவிற்கு எதிரானது என ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத் கூறுகிறார். ஆனால் இந்த வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் ஜூனைத், அக்லக், பெலு, ரக்பர், அலிமுதீன் என்ற பெயர் வைத்திருப்பவர்களை கொல்ல வேண்டும் என்று மட்டும் தெரிகிறது. அந்த குற்றவாளிகளிக்கு இந்துத்துவா அரசு ஆதரவளிக்கிறது. அலிமுதீனின் கொலையாளிகள் மத்திய அமைச்சரின் கையால் மாலை அணிவிக்கப்படுகிறார்கள்,” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்[12]. இதற்கு ட்விட்டரில் பலர் எதிர்க் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

25-09-2022


[1] It was on December 24, 2002 a group of nationalist Muslims and functionaries of the Rashtriya Swayamsevak Sangh (RSS) came together in Delhi. http://muslimrashtriyamanch.org/default.aspx

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், RSS-ன் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச்சில் உள்ளவர்களை இஸ்லாத்தில் இருந்தே விரட்டுங்க.. தடா ரஹீம்., Ezhilarasan Babu, Chennai, First Published Jul 4, 2022, 12:10 PM IST.

https://tamil.asianetnews.com/politics/remove-from-islam-those-in-muslim-rashtriya-manch-which-is-a-subsidiary-organization-of-rss-tada-rahim–rehh84

[3] தமிழ்.நியூஸ்18, இந்தியாவில் முஸ்லீம்கள் வாழக்கூடாது எனக்கூறுபவன் இந்துவே அல்லஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு, NEWS18 TAMIL, Published by:Ramprasath H, First published: July 05, 2021, 06:40 IST; LAST UPDATED : JULY 05, 2021, 06:46 IST

[4] https://tamil.news18.com/news/national/anyone-who-says-muslims-should-not-live-in-india-is-not-hindu-mohan-bhagwat-hrp-496409.html

[5] தமிழ்.சமயம், முஸ்லிம் வாழக்கூடாது என்று சொல்லும் இந்து இந்துவே அல்லஆர்.எஸ்.எஸ். தலைவர் அதிரடி,  Divakar M | Samayam Tamil | Updated: 4 Jul 2021, 9:48 pm

[6] https://tamil.samayam.com/latest-news/india-news/it-is-not-the-hindus-who-say-that-muslims-should-not-live-saying-mohan-bhagwat/articleshow/84119597.cms

[7] தினமலர், முஸ்லிம்கள் ஆபத்தில் இல்லை” – மோகன்பகவத், Updated : ஜூலை 05, 2021  09:41 |  Added : ஜூலை 05, 2021  09:38

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2796967

[9] விகடன், இஸ்லாமியர்கள் இங்கு வாழக் கூடாது என்று சொல்பவர் இந்துவே கிடையாது!’ –ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், சே. பாலாஜி, Published: 05 Jul 2021 9 AM; Updated: 05 Jul 2021 9 AM.

[10] https://www.vikatan.com/government-and-politics/politics/if-a-hindu-says-no-muslim-should-live-here-that-person-not-be-hindu-says-rss-chief-mohan-bhagwat

[11] நியூஸ்.தமிழ்.7, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கருத்து: ஓவைசி ஆவேச ட்வீட், by Gayathri VenkatesanJuly 5, 2021.

[12] https://news7tamil.live/asaduddin-owaisi-on-rss-chiefs-remarks.html

சூஃபியா, சோஃபியா, ஜிஹாதி பெண்தீவிரவாதிகள்!

திசெம்பர் 20, 2009

சூஃபியா, சோஃபியா, ஜிஹாதி பெண்தீவிரவாதிகள்

ஆண்டவனின் மகிமையினால் உலகில் அமைதியும் சாந்தமும் நிலவுவதாக!

பெண்களைத் தீவிரவாதிகளாக மாற்ற முடியுமா? இயற்கையில் பெண் மென்மையானவள், மிருதுவானவள் என்றெல்லாம் கருதப்படும்போது, இல்லை அவள் ஆணுக்கு நிகர் என்று எல்லாத் துறைகளிலும் தலைசிறந்து விளங்கும்போது மகிழ்ச்சியாகத் தான் உள்ளது. ஆனால், தீவிரவாத சித்தாந்தத்தை அவர்களின் மனத்தில் ஏற்றி , புகுத்தி அவர்களை தீவிரவாதத்திலும் சிறப்பாக ஈடுபடுத்தலாம், அதிலும் தற்கொலை தீவிரவாதிகளாக, மனித குண்டுகளாகக் கூட மாற்றலாம் என்பது பிரபலமான இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் நடவடிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. மனோதத்துவ ரீதியில் இதன் பின்னணி பயங்கரமாக இருக்கிறது.

இங்கு ஏதோ இஸ்லாமியத் தீவிரவாதத்தை மட்டும் குறைச் சொல்வதாக நினைக்கவேண்டாம். ஆனால் நிகழ்வுகள் அதைத்தான் காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீரத்தைப் பொறுத்தவரையிலும், சரித்திர ரீதியில் இடைக்காலத்திலிருந்து 1947 வரை பார்க்கும்போது, இந்துக்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனர். காஷ்மீரத்தின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றை அடியோடு ஒழித்து, கோவில்கள், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள், சின்னங்கள் எல்லாமே ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு, இஸ்லாம் அங்கு திணிக்கப்பட்டது. “இஸ்லாம்-மயமாக்கல்” என்ற செயல்பாட்டில், லட்சக் கணக்கான இந்துக்கள் கொடுமைப்படுத்தப் பட்டனர். அவர்கள் தங்களது கோடிக்கணக்கான சொத்துக்களைக் கூட விட்டு-விட்டு துரத்தி அடிக்கப்பட்டனர். தினமும் அவர்களைத் துன்புறுத்துதல், பெண்களை கற்ப்பழித்தல், மதம்-மாறச்சொல்லி அறிவித்தல்…………..என்ற ரீதியில் செயல்பட்டபோது, அவர்கள் தங்கள் பிரதேசத்தைவிட்டு ஓடுவதைத் தவிர வேறு வழி இல்லை. தலைநகர் தில்லியில் விடரட்டியடிக்கப் பட்ட இந்துக்கள் – காஷ்மீரிகள் தங்களது சொந்த நாட்டில் அகதிகளாக கூடாரங்களில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது உரிமைகளைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது. இந்திய அரசியல்வாதிகளோ ஓட்டுவங்கி மற்றும் செக்யூகரிஸம் (மற்ற மறைமுக லாபங்கள் கிடைக்கும்) என்ற போர்வையில் மௌனம் காத்து, அத்தகைய தீவிரவதத்தை வளர்க்க உதவி செய்தனர். விளைவை இன்று எல்லோரும் அனுபவிக்கின்றனர்.

ஆகவே, சரித்திர ரீதியில் மிகவும் கொடுமைப் படுத்தப்படவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள், நொறுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், அடிக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள், …………….என்றெல்லாம் பார்த்தால், இந்துக்கள்தாம் தீவிரவாதிகளாக உலகத்தில் அதிக அளவில் வந்திருக்கவேண்டும்.

அதிலும் இந்து பெண்மணிகள் தாம் தீவிரவதிகளாக மாறியிருக்கவேண்டும். அதற்கு அவர்களுக்கு பயிற்ச்சிக் கூட வேண்டாம். ஒத்தக் கருத்து, மாற்றுக் கருத்து மற்ற நாகரிகக் கருத்து என்று எந்த ரீதியில் பார்த்தாலும் இந்திய பெண்கள், குறிப்பாக இந்துப் பெண்கள்தாம் குறைக்கூறப்படுகிறார்கள், விமர்சனம் செய்யப் படுகிறர்கள், கேவலமாகச் சித்தரிக்கப் படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள்……………….ஊடகங்களிலெயோ, திரைப்படங்களிலேயோ…………கேட்கவே வேண்டாம்…….எனவே அந்நிலையில் ஒவ்வொரு இந்துப் பெண்ணும் தனியாக உட்கார்ந்து சிந்தித்தால், அவள் தானாகவே ஒரு தீவிரவாதி ஆகிவிடமுடியும்! அவளுக்கு எந்த மூளை சலவையும், படிப்பும், பயிற்ச்சியும்………………தேவையில்லை.

ஆனால், மாறாக இஸ்லாமிய பெண்கள் அதிலும் குறிப்பாக, இளம் பெண்கள் எப்படி ஜிஹாதி-தீவிரவாதிகளாக உருவாகுகிறார்கள், உருவாக்கப்படுகிறாற்கள் என்பதைப் பார்க்கவேண்டும். ஒரு ஆணைப்போல அவளுக்கும் அத்தகைய “ஷஹீத்” எண்ணத்தை உருவாக்கவேண்டும். அம்மாதிரி நடந்தால்தான் அவர்கள் மாறமுடியும், உருவாக, உருவாக்க முடியும்.

இந்தியாவில் நடந்த, நடக்கும், நடக்கின்ற நிகழ்வுகள் அத்தகையப் போக்கைக் காட்டுகின்றன. அதில்தான் இந்த சோஃபியா முதல் சூஃபியா வரை சில உதாரணங்கள் வருகின்றன.

காவலர்கள் கைது: ஜூலை 2009: தெற்கு காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்தில் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி, ஆயிஸா, நீலோஃபர் என்ற இரு பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இச்சம்பவம் காஷ்மீரில் பெரும் கலவரத்தையும், வன்முறையையும் ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டங்களினால், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் 4 காவலர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. உடனே கைது செய்யுமாறு ஜம்மு-காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு மரபணு சோதனை நடத்தவும், உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டது. பரிசோதனைக்குப் பிறகு அத்தகைய பலாத்காரம் எதுவும் காணப்பட்டதாகத் தெரியவில்லை என்று அறிக்கை வந்தது. ஆனால் கொல்லப்பட்ட ஆஸியா, நிலோஃபர் ஆகியவரின் உடலிலிருந்து எடுத்த மாதிரிகளை அனுப்பாமல் வேறொன்றை அதிகாரிகள் ஃபாரன்சிக் சோதனைக்கூடத்திற்கு அனுப்பியதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. கொல்லப்பட்ட பெண்களின் மர்ம உறுப்புகளிலிருந்து எடுக்கப்பட்டதாக அனுப்பப்பட்ட திரவம் / செமன் அவர்களின் இரத்த சாம்பிள்களுடன் / மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை என்று சோதனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால்தான் அனுப்பட்ட மாதிரிகள் கொல்லப்பட்ட பெண்களுடையதல்ல என்ற முடிவுக்கு வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுபற்றிய விளக்கம் வரவில்லை. எடுக்கப்பட்டதாக இருக்கலாம். இப்பிரச்சினையால் சி.பி.ஐ. விசாரணை வந்தது.

 

ஷோபியான்கொலைவழக்கு: செப்டம்பர் 2009: ஷோபியான் கொலை வழக்கில் இறந்தவர்களின் உடலை தோண்டியெடுத்து மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்த மத்திய குற்றப்புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ., வழக்கு விசாரணைக்காக நீதிமன்ற அனுமதியுடன் இறந்தவர்களின் உடல்களை இன்று தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்மூலம் தடயங்கள் கிடைத்தலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது.

 

டிசம்பர் 2009 சி,பி.ஐ அறிக்கைத் தாக்கல்: காஷ்மீரத்தில் எது கிடைத்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு பிரச்சினை செய்வது, கலாட்டா செயவது, அதன்மூலமாக பிரபலம் தேடுவது என்ற ரிதியில் முஸ்லீம்கள் தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு செயல்படுகின்றனர். ஷோஃபியா பகுதியைச் சேர்ந்த ஆயிஸா, நீலோஃபர் என்ற இரு பெண்கள் கற்ப்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாக குற்றாஞ்சாட்டி கலாட்டா செய்து வருகின்றனர். அந்நிலையில் சி,பி.ஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பிறகு இந்த மாதம் 14ம் தேதி 66-பக்க அறிக்கையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி அவ்விரு பெண்களும் நீரில் மூழ்கியதாகத் தெரிகிறது அதாவது இந்திய-விரோத சக்திகளின் குற்றாச்சாட்டின் படி அவர்கள் கற்ப்பழிக்கப்படவும் இல்லை, கொலைசெய்யப்படவும் இல்லை.

 

காஷ்மீரில் பெண்கள் சாவது: காஷ்மீரத்தில் பெண்கள் சாவது என்பது சகஜம். முன்பெல்லாம், இந்து பெண்கள் கற்ப்பழிக்கப் பட்டு கொலைசெய்யப் படுவர், அவகளது பிணங்கள் கிடைக்கும். ஆனால், ஊடகங்கள் அதைப் பற்றி என்றும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

 

பிப்ரவரி 2009: பெண் தீவிரவாதிகள் இந்தியாவில் நுழைவதாக தகவல்:பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இந்த சதியை அறிந்த இந்திய உளவு நிறுவனம் மத்திய அரசை உஷார்படுத்தியது[1]. இதையடுத்து மத்திய அரசு நாடெங்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.இதனால் தீவிரவாதிகளால் கடந்த 3-மாதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ இயலவில்லை. இதன் காரணமாக வெறுப்படைந்த தீவிரவாதிகள், பெண்-தீவிரவாதிகளை பயன்படுத்த முடிவு செய்தனர்[2]. அல்-கொய்தா இயக்கத்தில் பெண்-மனித-வெடிகுண்டு தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். இவர்கள் மூலம் மிகப் பெரிய தாக்குதலை நடத்த தீர்மானித்துள்ளனர்.  பெண் மனித வெடி குண்டுகளில் சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் போர்வையில் அவர்கள் ஊடுருவி உள்ளனர். அவர்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பதுங்கி உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் மும்பையில் தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகளுடன் பெண் தீவிவாதிகள் சிலரும் சேர்ந்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அவர்கள் குஜராத் மாநிலத்துக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. அவர்கள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

 

ஜிஹாதி-தற்கொலை-பெண்-குண்டுகள்: மார்ச் 2009: இதற்கிடையே மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு முன்பாகவே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பெண் மனித வெடிகுண்டுகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை உயர் அதிகாரிகள் கருதுகிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா,குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, உள்பட சில தலைவர்களை பெண் மனித வெடிகுண்டுகள் குறி வைத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி.தலைவர்கள் அருகில் வரும்,அறிமுகம் இல்லாத பெண்களிடம் மிக,மிக உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண் தற்கொலை தீவிரவாதிகள் தவிர,விஷவாயு மற்றும் வேறு சில புதிய பாணிகளிலும் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி செய்வார்கள் என்று தெரியவந்துள்ளது.இது குறித்து டெல்லியில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

 

சமீபத்தில் ஜிஹாதி-பெண்கள்: ஏப்ரல் 2009: சென்ற வருடம் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளுடன் மோதியபோது, சில பெண்தீவிரவாதிகள் அச்செயல்களில் ஈடுபட்டது ஆச்சரியமாக இருந்தது. நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவிய மூன்று தீவிரவாதிகளை ஜம்மு காஷ்மீர் போலீசார் சுட்டு கொன்றனர். நவம்பர் 26ம் தேதி 2008 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மும்பை மீது தாக்குதல் நடத்தினர். அவர்களில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் பிடிபட்டான். மற்றவர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள். இந்நிலையில் இது போன்ற வெறி தாக்குதலை தீவிரவாதிகள் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மீண்டும் அரங்கேற்றலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீருக்குள் சமீபத்தில் 400க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்று தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இதுவரை நடந்த சண்டையில் சுமார் 30 தீவிரவாதிகளும், 10 ராணுவ வீரர்களும் மரணமடைந்துள்ளனர்.

முதன் முதலில் ஜிஹாதி-பெண் தீவிரவாதி: ஏப்ரல் 2009: இந்நிலையில் நேற்று இந்திய ராணுவத்துக்கு ஜம்முவில் இருந்து வட கிழக்கே சுமார் 180 கிமீ., தூரத்தில் உள்ள தோடா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் உள்ளூர் போலீசாருடன் கிளம்பி அந்த வீட்டை முற்றுகையிட்டனர். இதில் அந்த வீட்டில் தங்கியிருந்த ஒரு பெண் தீவிரவாதி உட்பட மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் பிப்லாவ் நாத் கூறுகையில், நேற்று காலை 9.00 18-04-2009 மணிக்கு துவங்கிய என்கவுன்டர் பிற்பகல் வரை நீடித்தது. இதில் 1 பெண் உட்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த இரண்டு துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம். தீவிரவாதிகள் கூட்டத்தை சேர்ந்த பெண் தீவிரவாதி சுட்டு கொல்லப்படுவது இதுவே முதல் முறை என்றார்[3]. இதையடுத்து காஷ்மீர் பகுதியில் ஆண் தீவிரவாதிகளை தொடர்ந்து சில பெண் தீவிரவாதிகளும் ஊடுருவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியான அந்த பெண் தீவிரவாதியின் பெயர் ஷகிதா பானு என தெரிகிறது. மற்ற இரண்டு ஆண் தீவிரவாதிகளின் பெயர்கள் நிசார் அகமது, ரபீக் குஜ்ஜார். இவர்கள் மூன்று பேருமே லஷ்கர்- இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.

 

இந்நிலையில் கேரளாவில் லவ் ஜிஹாத்: நவம்பர் 2009: காஷ்மீரத்தில் கொல்லப்பட்ட ஒரு பெண் தீவிரவாதி கேரளாவைச் சேர்ந்தவர் என்று சொல்லப்பட்டது. பிறகு கேரளவிலிருந்து, மும்பை பெண்ணுடன் குஜராத்திற்கு சென்றவரும் பிரச்சினையில் சிக்கினர், கொல்லப்பட்டனர். கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டக்கல் என்ற இடத்திலிருந்து முன்பு சிமி இளைஞர்கள்-பெண்கள் இச்செயல்களில் ஈடுபடுவது தெரிகிறது. முன்பு ராம்சேனா பிரச்சினையில், இதுமாதிரி ஒரு முஸ்லிம் பெண் தன் காதலனுடன் பஸ்ஸில் சிக்கினார், ஆனால், கேரள அரசியல்வாதியின் மகள் என்பதும் விஷயம் அப்படியே அமுக்கப்பட்டது.

 

சூஃபியாவின் பின்னணி: டிசம்பர் 2009: கேரளாவில் செயல்படும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மதானியின் மனைவி சூஃபியா கலமசேரியில் 2005ல் தமிழகப் பேருந்து எரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தன்னை விடுவிக்கக் கோரி அலுவலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சூஃபியா சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி பி.எஸ். ஜோசப் முன்னிலையில் அந்த மனு விசாரணைக்கு வந்தது.  இதில், சூஃபியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூஃபியா ஜனவரி 1ம் தேதி, 2010 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியின் மனைவி சூபியா மதானிக்கு தொடர்பு இருப்பது, சமீபத்தில் தெரியவந்தது. வங்கதேச ரைபிள் படையினரால் கைது செய்யப்பட்டு, இந்திய பாதுகாப்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி நசீர் என்பவனிடம் கேரள போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விவரம் தெரியவந்தது.அவரது கணவர் மதானி கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பின்னர் விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பெண் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற கட்டுரையை 30-04-2009 அன்று கீழ்கண்ட தளத்தில் வெளியிட்டேன்:

http://vedaprakash.indiainteracts.in/2009/04/30/woman-islamic-terrorist-in-india/

The revelation of a Pakistani woman, Asiya Bibi (23), who is in J&K police’s custody, that ISI is training about 100 women for terror assignments in the state has sent the security establishment into a tizzy.

வேதபிரகாஷ்

19-12-2009 ©


[1] http://economictimes.indiatimes.com/News/Politics/Nation/Now-ISI-training-women-for-jihad-in-JK/articleshow/3995939.cms

[2] http://www.jihadwatch.org/2009/01/pakistans-isi-training-women-in-the-arts-of-jihad-and-terrorism.html

[3] http://thatstamil.oneindia.in/news/2009/04/19/india-three-militants-inlcuding-1-women-killed.html