Posted tagged ‘மதரஸா’

சென்னை உருது போதிக்கும் மதரஸா, பீகாரிலிருந்து கொண்டு வரப் பட்ட சிறார்கள், சரியாகப் படிக்கவில்லை என்பதால் சித்ரவதை, புகார், கைது முதலியன!

திசெம்பர் 5, 2022

சென்னை உருது போதிக்கும் மதரஸா, பீகாரிலிருந்து கொண்டு வரப் பட்ட சிறார்கள், சரியாகப் படிக்கவில்லை என்பதால் சித்ரவதை, புகார், கைது முதலியன!

 சென்னை மதரஸாவில் பிகார் குழந்தைகள் துன்புறுத்தப் பட்டது: சென்னையில் இயங்கிவரும் மதரஸா (இஸ்லாமிய மதப் பள்ளி) ஒன்றில் பிகாரிலிருந்து அழைத்துவரப்பட்ட சிறார்கள் அடித்து துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழகம் மற்றும் பிகார் அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்ஹெச்ஆா்சி) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது[1]. சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் இந்த மதரஸா இயங்கி வருகிறது[2]. இங்கு படிக்கும் சிறார்களை அடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும் அவா்கள் வேதனையில் அழுதபடி கூச்சல் போடுவதாகவும் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்[3]. அதனடிப்படையில் போலீஸார் அங்கு 29-11-2022 அன்று சென்று விசாரணை நடத்தினா்[4]. போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிஹாரில் அரபி வகுப்புகள் நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தால், அம்மாநில குழந்தைகள் சிலர் இந்த மதராஸா பள்ளியில் தங்கி அரபி வகுப்புகள் படித்து வருவதும், சரியாக படிக்காத குழந்தைகளை நிர்வாகிகள் சிலர் கேபிள் வயர்களால் அடித்து துன்புறுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது[5]

பிஹாரில் அரபி வகுப்புகள் நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தால், தமிழக மதராஸா பள்ளியில் தங்கி அரபி வகுப்புகள் படித்து வருவது: இதுவே விசித்திரமாக உள்ளது, ஏனெனில், வடவிந்தியாவில் இல்லாத “அரபி வகுப்புகள் நடத்துவதற்கு இல்லாத வசதி” தமிழகத்தில், அதிலும் சென்னையில் இருப்பது திகைப்பாக இருக்கிறது. அந்த அளவுக்கு உருதில் தேர்ச்சி, புலமை பெற்ற உருது-ஆசிரியர்கள்-பண்டிதர்கள் இந்த சிங்காரச் சென்னையில் இருக்கிறார் போலும். அந்நிலையில் தான் இந்தி வேண்டாம், இந்தி திணிப்பு என்றெல்லாம் திராவிடத்துவ வாதிகள் ஆர்பாட்டம்-போராட்டம் செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு தமிழும் படிப்பதில்லை, சொல்லிக் கொடுப்பதாகவும் தெரியவில்லை. ஆனால், “மெட்ராஸ் பாஷை” இன்றும் அதிகமாகி, பெறுகி, பிஎச்.டி லெவலுக்குச் சென்று விட்டது. பேச்சு, பாட்டு, கவிதை என்றெல்லாம் வளர்ந்து, சினிமாக்களில் சென்று விட்டு, உயர்ந்துள்ளது.

 வழக்குப் பதிவு செய்யப்படல்: இதையடுத்து சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்[6].  இதனால், குழந்தைகள் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதில், பிகார் மாநிலத்திலிருந்து சிறுவா்களை அழைத்து வந்து அவா்களுக்கு மத போதனை நடத்தப்படுவதும், சரியாகப் படிக்காதவா்களை கடுமையாக தாக்கியதும் தெரியவந்தது. 10 முதல் 12 வயது வரையுடைய அந்தச் சிறார்களை குச்சி மற்றும் கைகளால் கடுமையாக தாக்கியிருப்பதும், கேபிள் வயர்களால் அடித்து துன்புறுத்தியதும் அவா்கள் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி உடனே தகுந்த நடவடிக்கை எடுத்தார்[7]. என் லலிதா, சிறார் நலத்துறை உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் புகார் கொடுத்தார். அதன்படி, ஐபிசி 342 (தவறான முறையில் அடைத்து வைத்தல்), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 324 (அபாயகரமான ஆயுதங்களால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் ஜேஜே சட்டம் பிரிவு 75 (குழந்தைக்கு கொடுமைப்படுத்துதல்) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்[8].

சிறார்கள் மீட்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது: அதனைத் தொடா்ந்து, அங்கிருந்த 12 சிறார்களை போலீஸார் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்[9]. தொடர்ந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பிஹார் மாநிலத்தை சேர்ந்த 12 குழந்தைகளை மீட்டனர்[10]. பின்னர், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்[11]. தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரையும் ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘பிஹாரில் அரபிக் வகுப்புகள் நடத்துவதற்கு போதிய வசதி இல்லாததால், அம்மாநில குழந்தைகள் சிலர் இந்த மதரஸா பள்ளியில் தங்கி அரபி வகுப்புகள் படித்து வருகின்றனர். சரியாக படிக்காத குழந்தைகள், சொல் பேச்சு கேட்காத குழந்தைகளை நிர்வாகிகள் துன்புறுத்தி உள்ளனர். இதில் சில குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது’ என்றனர். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த பள்ளி நிர்வாகிகள் அக்தா் (26), பிகாரைச் சோ்ந்த ஆசிரியா் அப்துல்லா (24) ஆகிய இருவரை கைது செய்தனா்.  அன்வர், அக்தர் மற்றும் அப்துல்லா என்று மூவர் கைது செய்யப் பட்டதாக மற்ற ஊடகங்கள் கூறுகின்றன[12]. இந்த விவகாரத்தை தானாக முன்வந்து கையிலெடுத்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம்[13], இதுதொடா்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழகம் மற்றும் பிகார் மாநில அரசு தலைமைச் செயலாளா்களுக்கும் சென்னை காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது[14].

பீகார் மாநிலத்திற்கு சென்று விசாரிக்க ஆணை: மேலும், இந்த சிறுவர்கள் பீஹாரிலிருந்து, தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆணையம் அதன் சிறப்பு அறிக்கையாளர் டாக்டர் ராஜீந்தர் குமார் மாலிக்கை பீகார் மாநிலத்திற்கு சென்று தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது[15]. இளம் அனாதை சிறார்களை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள இடங்களுக்கு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக அவர் உண்மையைக் கண்டறியும் விசாரணையை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது[16]. பீகார் மாநிலத்தில் சட்டப்பூர்வமான கடமையைச் செய்யத் தவறிய பொறுப்புள்ள ஏஜென்சிகளைப் பற்றி ஆணையம் தெரிந்து கொள்வது அவசியம். மேலும், சம்பவம் குறித்து மேலும் அறிய, பாதிக்கப்பட்ட சிறார்களை சென்னையில் சந்தித்து பரிசோதனை செய்யுமாறும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அவரது அறிக்கை ஒரு மாதத்திற்குள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, இது தேசிய அளவில் அறியப் பட்டு நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

05-12-2022 


[1] தினமணி, மதரஸாவில் சிறார்கள் அடித்து துன்புறுத்தல்: தமிழகம், பிகார் அரசுகளுக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ், By DIN  |   Published On : 05th December 2022 12:19 AM  |   Last Updated : 05th December 2022 12:19 AM

[2]https://www.dinamani.com/india/2022/dec/05/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3961336.html

[3] தமிழ்.இந்து, அடித்து உதைத்த விவகாரம்; மதரஸாவில் மாணவர்கள் சித்ரவதை: பள்ளி நிர்வாகிகள் இருவர் கைது, செய்திப்பிரிவு, Published : 01 Dec 2022 07:31 AM; Last Updated : 01 Dec 2022 07:31 AM. https://www.hindutamil.in/news/crime/908355-torture-of-students-in-madrasa-1.html

[4] https://www.hindutamil.in/news/crime/908355-torture-of-students-in-madrasa-1.html

[5] காமதேனு, கேபிள் வயரால் அடித்து சித்ரவதை: சென்னை மதரஸா பள்ளியில் படித்த பிஹாரைச் சேர்ந்த 12 குழந்தைகள் மீட்பு, Updated on : 29 Nov, 2022, 7:23 pm

[6] https://kamadenu.hindutamil.in/national/12-children-from-bihar-rescued-from-madrasa-school-chennai

[7] நான்காவது கண், விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட 12 பீகார் சிறுவர்கள் மீட்பு: மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி நடவடிக்கை, CRIMEPOLICE NEWSசெய்திகள், By Fourth Eye Last updated Nov 30, 2022.

[8]  India Express, Three held for torturing 12 boys from Bihar at Chennai Madrassa, Published: 01st December 2022 02:49 AM  |   Last Updated: 04th December 2022 04:14 PM.

The police registered a case under four sections – IPC 342 (wrongful confinement), 323 (voluntarily causing hurt.), 324 (voluntarily causing hurt by dangerous weapons) and JJ Act section 75 (cruelty to child).

[9] https://fourtheyenews.com/archives/5585

[10] இ.டிவி.பாரத், மதரஸா பள்ளியில் வடமாநில குழந்தைகள் சித்ரவதை! 12 குழந்தைகள் மீட்பு, Published on: November 30, 2022, 7:22 AM IST.

[11] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/12-bihar-children-rescued-from-arabic-madrasa-school-in-madhavaram-at-chennai/tamil-nadu20221130072233794794832

[12] After an investigation police said, three men – Anwar, Akthar and Abdullah – were running a madrassa where minor boys are taught to learn the Quran.

https://www.newindianexpress.com/cities/chennai/2022/dec/01/three-held-for-torturing-12-boys-from-bihar-at-chennai-madrassa-2523894.html

[13] NHRC notice to the Governments of Tamil Nadu and Bihar over reported torture of 12 orphaned juveniles brought from Bihar to a Madrasa in Chennai, New Delhi:3 December, 2022.

[14] https://nhrc.nic.in/media/press-release/nhrc-notice-governments-tamil-nadu-and-bihar-over-reported-torture-12-orphaned

[15] ANInews, NHRC issues notice to governments of Bihar and Tamil Nadu over torture of 12 orphaned juveniles, ANI | Updated: Dec 03, 2022 19:42 IST

[16] https://www.aninews.in/news/national/general-news/nhrc-issues-notice-to-governments-of-bihar-and-tamil-nadu-over-torture-of-12-orphaned-juveniles20221203194248/

குமுதம் ரிப்போர்டட் 13-2-2022, ‘மதரஸ்ஸா” பெயரில் பணம் வசூல் செய்ததாக் கூறுகிறது…

லக்னௌவில் 51 இளம்பெண்களை கற்பழித்த காஜி, போலீஸ் படை மதரஸாவிற்குள் நுழைந்து மீட்டது! 125 பெண்கள் படித்து வந்தனராம்!

திசெம்பர் 30, 2017

லக்னௌவில் 51 இளம்பெண்களை கற்பழித்த காஜி, போலீஸ் படை மதரஸாவிற்குள் நுழைந்து மீட்டது! 125 பெண்கள் படித்து வந்தனராம்!

Lucknow Madrassa- police raid-Kaji arrested-The serial sexual offender Tayyab Zia, Kaji

ஜாமியா கடிஜடுல் லீலான்வந்த் மதரஸாவில் நடந்தது என்ன?: லக்னௌவில், சஹதத்கஞ் [Shahadatganj area] பகுதியில், ஜாமியா கடிஜடுல் லீலான்வந்த் [Jamia Khadijatul Leelanwat] என்ற மதரஸா பள்ளிக்கூடம் மற்றும் காப்பகத்தின் இயக்குனராக காஜி மொஹம்மது தாய்யப் ஜியா [Mohammad Tayyab Ziya] என்பவர் இருந்து வருகிறார்[1]. சில ஊடகங்கள் மேனேஜர், இயக்குனர் என்றெல்லாம் குறிப்பிடுகின்றன. இதில் 125 இளம்பெண்கள் படித்து வருகிறார்கள்[2]. சமீபகாலத்தில், மதரஸாக்களில் நடக்கும் முறைகேடுகள் அதிகமாக வெளி வந்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக பாலியல் புகார்கள் அதிகமாகஆறியப்படுகின்றன. கேரளா மதரஸா விவகாரம், பாலியல் உட்பட மற்ற விவகாரங்களுடன் வெளிவந்தன. பொதுவாக, முகமதியர் தங்களுடைய விவகாரங்களை வெளியே வரவிடாமல் அமுக்கி விடுவர். ஜமாத் என்ற முறையில், எல்லா பிரச்சினைகளையும் பேசி, தீர்த்து வைத்து விடுவர். அவற்றையும் மீறிய விவகாரங்கள் வெளியே வரும், போலீஸுக்குச் சென்று புகார் கொடுத்தால் தெஇயவரும். இப்பொழுது, உபியில், இவ்விகராம் வெளிவந்துள்ளது.

Lucknow Madrassa- police raid-Kaji arrested-girls rescued

பெற்றோர், உற்றோர், மற்றோர் அறியாமல் பாலியல் வன்மங்கள் நடந்தது எப்படி?: மதரஸாக்களில் பெண்கள் படிப்பதாக சொல்வார்கள். அதே போல, “ஜாமியா கடிஜடுல் லீலான்வந்த்” நடத்தும் மதரஸாவில், பெண்கள் குரான் படிக்கின்றனர் என்றெல்லாம் சொல்ல்ப்பட்டது. ஆனால், மொஹம்மது தாய்யப் ஜியா இப்பெண்களை பாலியல் ரீதியில் திட்டுவது, அடிப்பது மற்றும் புணர்ச்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறான்[3]. அவர்களை வற்புருத்தி ஆபாசப் பாட்டுகளைப் பாடிக் கொண்டு, நடனம் ஆடவைத்தும் சந்தோஷித்திருக்கிறான்[4]. பாலியல் ரீதியில் தொடுவது, கட்டிப்பிடிப்பது என்று கற்பழிப்பிலும் ஈடுபட்டுள்ளான். வெளியே சொன்னால், தீர்த்துக் கட்டி விடுவேன் என்று மிரட்டியும் வைத்துள்ளான். இவ்வாறு பாலியல் வன்மங்கள் தொடர்ந்துள்ளன. இவஇயெல்லாமும் வழக்கமாக, பாலியல் குற்றவளிகள் பயன்படுத்தி வரும் திட்டங்கள் தாம், இருப்பினும், நூற்றுக்கும் மேலாக, இளம்பெண்கள் இருக்கும், இந்த மதரஸாவை தணிக்கை செய்பவர்கள் யாருமில்லையா, பெற்றோர், உற்றோர், மற்றோர் எப்படி ஒன்று தெரியாதது போரிருந்தார்கள் / இருக்கிறார்கள் என்ற விசயங்கள் புதிராக இருக்கின்றன.

Lucknow Madrassa girls- letter-1

பாதிக்கப் பட்ட பெண்கள் புகார் கொடுத்தனரா, வீட்டின் சொந்தக்காரர் புகார் கொடுத்தாரா இல்லை பெண்கள் கடிதங்கள் எரிந்து கவனத்தைக் கவர்ந்தனரா?: பல ஆண்டுகளாக அவர்கள் இவ்வாறு துன்புருத்தப் பட்டு வந்தமையால், சமீபத்தில், சில பெண்கள் தைரியத்துடன், துண்டு காகிதங்களில் தங்கள் நிலைமையை எழுதி, ஜன்னல்கள் வழியாக போட்டுள்ளனர். அக்கம்-பக்கம் வீடுகள் நிலவரங்களையும் குறிப்பிட்டுந்தனர்[5]. அவ்வழியாக நடந்து சென்றவர்களில், சிலர் அவற்றைப் பார்த்து, உண்மையை அறிந்து போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர்[6]. அந்த வீட்டின் சொந்தக்காரரே புகார் கொடுத்தார் என்று இன்னொரு ஊடகம் கூறிகிறது. அவன் [காஜி] அவ்வாறு செய்கிறான், பெண்களை எல்லாம் மிரட்டியிருக்கிறான் என்பதெல்லாம் தனக்குத் தெரியாது, என்றார்[7]. விசயத்தை அறிந்து அவரே பிறகு புகார் கொடுத்துள்ளார். அப்பெண்களில் சிலரும், காப்பாத்துங்கள் என்று கத்தியாக கூறுகிறார்கள். அருகில் உளளவர்கள் அது ஒரு பள்ளி என்கிறார்கள். கோமதி நகரைச் சேர்ந்த 15 வயது பெண் புகார் கொடுத்ததாகவும் கூறப்பட்டது[8]. இவ்வாறு பலவிதமான வர்ணனைகள், அண்டை வீட்டார் மற்றும் யாரோ / ஏதோ ஒரு கூட்டம் இதன் பின்னணியில் உள்ளது, உண்மையினை மறைக்கப் பார்க்கின்றது என்று தெரிகின்றது.

Lucknow Madrassa girls- letter-2

போலீஸார் விசயத்தை லாவகமாக அணுகியது: வழக்கம் போல, முஸ்லிம்கள் பிரச்சினை என்பதனால், போலீஸார் தீவிரமாக விசயம் அறிந்து, ஆதஆங்களைத் திரட்டி, தகுந்த பலத்துடன், பெண் போலீஸாரையும் கூட்டிக் கொண்டு, தீபக் குமார் [SSP Deepak Kumar] தலைமையில் அதிரடியாக அந்த மதரஸாக்குள் வெள்ளிக்கிழமை [29-12-2017] அன்று நுழைந்தனர்[9]. உள்ளே 51 இளம்பெண்கள் அடைப்பட்டுக் கிடப்பதைக் கண்டு, அவர்களை வெளியே மீட்டுக் கொண்டு வந்தனர்[10]. அவர்கள் நாரி நிகேதன் [Nari Niketan] என்ற பெண்கள் பாதுகப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர். முதல் தகவல் அறிக்கை போடப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாநில குழந்தைநல வாரியத்திற்கும் தகவல் அளிக்கப் பட்டது. மொஹம்மது தாய்யப் ஜியா கைது செய்யப் பட்டு னாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜர் செய்யப் பட்டான். அவனது கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். கூடுதல் நகர மேஜிஸ்ட்ரேட், கூடுதல் மாவட்ட மேஜிஸ்ட்ரேட், பெண்-துணை இன்ஸ்பெக்டர் முதலியோர் அப்பென்களிடம் முறைப்படி வாக்குமூலங்களை எழுதிவாங்கிக் கொண்டனர்[11].  விசாரணையில் மேலே குறிப்பிடப்பட்ட பாலியல் வன்மங்கள் வெளியே வந்தன[12]. இத்தகைய விவரங்களிலிருந்தே, பொலீஸார் மற்ற அரசு அதிகாரிகள் எவ்வளவு எச்சரிக்கையாக, இவ்விவகாரத்தை அணுகி, முடித்துள்ளனர் என்று தெரிகிறது.

Lucknow Madrassa girls- letter-3

மதாஸாவில் எத்தனை பெண்கள் இருந்தனர்?: மதரஸாவில் இருந்தது 125 / 126 பெண்கள் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. போலீஸார் கூற்ரின் படி 51 பெண்கள் மீட்கப் பட்டுள்ளாதாகத் தெரிகிறது. அப்படியென்றால், மீதி 74 அல்லது 75 இளம் பெண்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. ரெயிட் வரும் என்று முன்னமே, வேறு இடங்ககளுக்கு அனுப்பி வைக்கப் பட்டனரா, வேறேங்காவது சென்று விட்டனரா என்று தெரியவில்லை. மொஹம்மது தாய்யப் ஜியாவின் கூட்டாளிகள் மாயமாகி விட்டதால், ஒருவேளை, பெண்களை அவர்கள் கூட்டிச்சென்று மறைத்து விட்டனரா என்ற சந்தேகமும் எழுகின்றது.  அண்டை வீட்டாரிடம் விசாரித்ததில், அது பள்ளி என்றும், பெண்கள் வருவார்கள், போவார்கள் என்ற ரீதியில் பதிலளித்தார்கள். எப்படியோ, 51 இளம்பெண்கள் மீட்கப் பட்டு விட்டனர். இனி மேலே என்ன நடக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

30-12-2017

Lucknow Madrassa- police raid-Kaji arrested

[1] India Today, Lucknow madarsa horror: Chits thrown by captive girls brought police to their rescue, IndiaToday.in | Written by Amit Vasudev, Lucknow, December 30, 2017 | UPDATED 12:44 IST

[2] http://indiatoday.intoday.in/story/lucknow-madarsa-chits-captive-girls-police-rescue/1/1120538.html

[3] ZeeNews, Shocking – 51 girls held hostage and sexually abused in madrasa, rescued by police, By Zee Media Bureau | Updated: Dec 30, 2017, 11:45 AM IST .

[4] http://zeenews.india.com/lucknow/shocking-51-girls-held-hostage-and-sexually-abused-in-madrasa-rescued-by-police-2070776.html

[5] IndiaTV, 51 girls rescued from Uttar Pradesh’s Shahadatganj madrasa, manager arrested on sexual assault charges, Edited by: India TV News Desk, Lucknow [ Updated: December 30, 2017 13:26 IST ]

[6] http://www.indiatvnews.com/news/india-51-girls-rescued-uttar-pradesh-lucknow-madrasa-manager-arrested-sexual-assault-charges-vulgar-song-beating-419541

[7] A neighbour had come across one of the several notes that the girls had thrown out of a window of the educational institute, who informed the owner, who in turn approached the police. Police said, the owner was not aware of these malpractices as he would resided somewhere else and was alarmed at being told that inmates at his madrassa were crying for help. The owner also told SSP Deepak Kumar that some of the girls had been held captive and were being threatened.

News18, Manager of Lucknow Madrassa Arrested Over Charges of Sexual Abuse, Attempt to Rape, Qazi Faraz Ahmad | News18, @qazifarazahmad, Updated:December 30, 2017, 3:06 PM IST

[8] Speaking to the media, SSP Deepak Kumar said, “A 15-year-old girl student of Gomti Nagar in her written complaint has levelled charges of harassment. She has also alleged that seven other girl students were also molested by Tayyab.”

 http://www.news18.com/news/india/manager-of-lucknow-madrassa-arrested-over-charges-of-sexual-abuse-attempt-to-rape-1618633.html

[9] Newstrack, Lucknow: 51 girls rescued from Madrassa; manager arrested, By Sakshi Chaturvedi, December 30, 2017 | 10:11 am

[10] https://newstrack.com/uttar-pradesh/lucknow/lucknow-51-girls-rescued-madarsa-manager-arrested/

 

[11] Financial Express, 51 girls held hostage in Uttar Pradesh’s Shahadatganj, Lucknow Police arrest madrasa manager, By: ANI | Lucknow | Published: December 30, 2017 11:20 AM

[12] http://www.financialexpress.com/india-news/51-girls-held-hostage-in-uttar-pradeshs-shahadatganj-lucknow-police-arrest-madrasa-manager/995368/

காதர் பாட்சா எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? திருமணம் செய்து கொண்ட பெண்கள் முட்டாள்களா?

ஓகஸ்ட் 26, 2016

காதர் பாட்சா எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? திருமணம் செய்து கொண்ட பெண்கள் முட்டாள்களா?

காதர்பாட்சா மீது 8வது மனைவி புகார். தினகரன்

பலதார திருமணங்களில் பெண்கள் சிக்குவது விசித்திரமான நிகழ்வாக இருக்கிறது: பலதாரத் திருமணம் நடந்து கொண்டே இருப்பது, பெண்களின் பலவீனத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறாது, ஏனெனில், இப்படி, ஒரு ஆண், பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது. “வேலைக்குப் போகிகிறானா, இல்லையா?” என்று கூட தெரியாமல், ஒரு பெண் திருமணம் செய்து கொள்கிறாள் என்றால் வியப்பாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால், அவாற்றையும் மீறி, இத்தகைய திருமணங்கள் நடக்கின்றன எனும்போது, வியப்பாக இருக்கிறது. ஒரு பெண் ஒரு ஆணிடம் அவ்வளவு எளிதாக ஏமாந்து விடுவாளா என்று நினைக்கும் போது திகைப்பாக உள்ளது. அடிப்படையிலேயே ஏதோ தவறு-தப்பு இருப்பது தெரிகிறது. எந்த பெண்ணும் தனது கற்பை, தாம்பத்தியத்தை அவ்வளவு எளிதாகக் கொடுத்து விடமாட்டாள். அந்நிலையில், ஒரு பெண் தெரிந்து செய்கிறாள் என்றால், கற்பைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றாகிறது. பிறகு, அது மிக்க தீவிரமான சமூகப் பிரச்சினையாகி விடுகிறது.

8 பேரை மணந்தவர் கைது - 23_08_2016_015_023

பலதார திருமணம் மற்றும் பணமோசடி என்ற குற்றங்களில் ஈடுபட்ட காதர் பாட்சா: திண்டுக்கல் பெண் உட்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் செய்தவர், ஆசிரியை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக காதர் பாட்சாவின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[1] என்று இப்பொழுது – ஆகஸ்டில் தினமலர் செய்தி வெளியிட்டிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், ஜூலை 25ம் தேதியே, இம்மோசடியில் சம்பந்தப்பட்ட காதர் பாட்சா கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தூத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர்பாட்சாவை போலீசார் 24-07-2026 அன்று கைது செய்து மதுரை 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[2]. தலைமறைவாக உள்ள தஸ்லிமா, அப்துல் கயூம், ஜாகீர் உசேன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்[3] என்று தினகரன் செய்தி வெளியிட்டது.

காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- எட்டாவது மனைவி புகார்

சலாமியா பானு மதுரையில் கொடுத்த புகார்: பிறகு எட்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். மதுரை புதுார் இ.பி., காலனியை சேர்ந்தவர் சலாமியா பானு (28). இவர் மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவை சந்தித்து அளித்த புகார் மனு[4]: “எனக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டோம்[5]. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது தாயாருடன் ஒத்தக்கடையில் உள்ள மதரஸாவிற்கு சென்று வரும்போது, மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவி தஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது[6].  கடந்த 2011–ல் கீழக்கரையில் எனக்கு நடந்த திருமணம் தலாக் ஆகி விட்டது. எனவே மனநிம்மதிக்காக நான் மதரஸாவிற்கு வருவதாக அவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர் ஆறுதல் வார்த்தை கூறி, எனக்கு நல்ல வரன் பார்ப்பதாக கூறினார். அதனை நம்பி அவரிடம் ரூ.1.10 லட்சம் வரை கொடுத்தேன்[7].

 காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- 8வது மனைவி புகார்

ஜூன் 26.2016ல் காதர் பாட்சாவுடன் திருமணம்: சலாமியா பானு தொடர்கிறார், “இந்த நிலையில் தஸ்லிமா தனது உறவினர் பையன் ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைக்கிறேன் என்று தெரிவித்தார். அதன்படி கடந்த மே மாதம் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு அவரை பிடிக்கவில்லை என்று கூறினேன். ஆனால் அவர் எனது தாய், தந்தையரின் அனுமதி பெற்று தன்னை காதர்பாட்சா என அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தான் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு வங்கியில் வேலை செய்வதாக கூறினார். அப்போது அவர், என்னுடைய உறவினர் காதர் பாட்சா என்பவர் வங்கியில் வேலை பார்ப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறினார்[8]. மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் காதர்பாட்சா (32). தொடர்ந்து தஸ்லிமா எனது பெற்றோருடன் பேசி, சம்மதம் பெற்று எனக்கும், காதர் பாட்சாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு ஜூன் 26.2016ல் திருமணம் நடந்தது”.  ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, தஸ்லிமா தன்னை வற்புருத்தி கல்யாணம் செய்து வைத்தாள் என்கிறார்[9].

 8 பேரை மணந்தவர் கைது - Webdunia 22-07-2016

காதர்பாட்சாவுக்கு தாய், தந்தை இறந்து விட்டார்கள். சகோதர, சகோதரிகள் யாரும் இல்லைஎன்ற தோழி: சலாமியா பானு தொடர்கிறார், “அப்போது மணமகனின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி நான் தஸ்லிமாவிடம் கேட்டேன். அதற்கு காதர்பாட்சாவுக்கு தாய், தந்தை இறந்து விட்டார்கள். சகோதர, சகோதரிகள் யாரும் இல்லை என்றார். இவர் அருப்புக்கோட்டை வங்கியில் பணியாற்றுவதாக கூறி என்னை திருமணம் செய்தார். 2 பேரும் எனது தாய் வீட்டில் / புதூரில் உள்ள எங்களது வீட்டில் தங்கி இருந்து குடும்பம் நடத்தி வந்தோம். அப்போது கணவர் காதர்பாட்சா திருமணத்திற்காக வங்கியில் 40 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளேன் என்றார். இதைதொடர்ந்து ரம்ஜான் நோன்பு தொடங்கியது. அப்போது அவர் வேலை விஷயமாக ஒரு வாரம் வெளியே செல்வதும், வருவதுமாக இருந்தார்.

 8 பேரை மணந்தவர் கைது -தினகரன் - 22-07-2016

பணம், நகையோடு மாயமான காதர் பாட்சா:  சலாமியா பானு தொடர்கிறார்,திருமணமாகி பல நாட்கள் ஆகியும் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதுகுறித்து நான் கேட்ட போது, சரிவர பதில் கூறாமல் ஏமாற்றி வந்தார்[10]. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட். 2ஆம் தேதி காதர் பாட்சா வேலை வி‌ஷயமாக வெளியூர் செல்வதாக கூறி சென்றார்[11]. பின்பு என்னிடம் இருந்த 3 லட்சம் ரூபாய், 8 பவுன் நகை, .டி.எம்., கார்டுகளை எடுத்துச் சென்றார். .டி.எம்., கார்டை பயன்படுத்தி 35 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, ஊரில் இருந்து திரும்பி வந்தவுடன் கொடுத்துவிடுவதாக தெரிவித்தார். அதன்பின்னர் ரம்ஜானுக்கு முதல்நாள் அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது செல்போன்சுவிட்ச் ஆப்செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர் வைத்திருந்த 5 செல்போன் எண்களுக்கும் மாறி, மாறி போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அவருக்கு ஏதேனும் ஆகி இருக்குமோ என்று எனக்கு பயம் வந்து, தஸ்லிமாவிடம் கேட்டேன். அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

© வேதபிரகாஷ்

26-08-2016

[1] தினமலர், 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் திண்டுக்கல்லில் மோசடி : தனிப்படை போலீசார் தேடல், ஆகஸ்ட்.22 2015: 23.56

[2] தினகரன், 7 பெண்களை மணமுடித்தகல்யாண மன்னன்கைது : பெண் உட்பட 3 பேருக்கு வலை, Date: 2016-07-25@ 02:00:17.

[3] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=233498

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1590948

[5] வெதுனியா, 8 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த வாலிபர், வெள்ளி, 22 ஜூலை 2016 (02:05 IST).

[6] தினத்தந்தி, நகை, பணத்துடன் மாயமாகி விட்டார்: 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுரை போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 22,2016, 12:29 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 22,2016, 5:00 AM IST.

[7] http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/07/22002942/Jewelry-money-made-available-mayamaki-8-women-will.vpf

[8] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/woman-petition-on-her-husband-he-who-married-many-women-116072200004_1.html

[9] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

[10] தமிழ்முரசு, 8 பெண்களை மணம்புரிந்த கல்யாணராமன் மீது புகார், 23 Jul 2016

[11] http://www.tamilmurasu.com.sg/2016/07/23/216412367-3931.html

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (2)

ஒக்ரோபர் 17, 2015

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (2)

உபி தீவிரவாதி வேலூரில் கைது

உபி தீவிரவாதி வேலூரில் கைது

சையத் அகமது அலி  கொடுத்த வாக்குமூலம்[1]: விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு: “திரிபுரா மாநிலம் உன்னுகுட்டி கைலா ஜெகர் பகுதி, தலியார் கந்தி கிராமம்தான் எனது ஊர். என்னுடைய மனைவி பெயர் லுக்பாபேகம். எங்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நான் எனது வீட்டின் அருகே காய்கறி வியாபாரம் செய்து வந்தேன். கடந்த 2000–ம் ஆண்டு எனக்கும் எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் எனது மனைவி போலீசில் புகார் கொடுக்க சென்றார். அதனால் நான் மண்எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தேன். பின்னர் என்னை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நிலை தேறியதும் நான் மீண்டும் காய்கறி வியாபாரம் செய்து வந்தேன். இந்த நிலையில் சிறிது நாட்கள் கழித்து எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அசாமில் உள்ள மருத்துவமனையிலும், பின்பு திரிபுரா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றேன். அப்போது என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள் உனக்கு புற்றுநோய் உள்ளது என்றனர்.

 

புதியதலைமுறை - ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளில் தொடர்பு

புதியதலைமுறை – ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளில் தொடர்பு

மே, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2015 சென்னைக்கு வந்து சென்றது: அப்போது எனது பக்கத்து வீட்டுக்காரர் பையிம் ஜமான் என்பவரின் அக்காவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர்களுடன் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த மே மாதம் வந்தேன். அங்கு டாக்டர்கள் எனக்கு புற்றுநோய் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக எனது தம்பியுடன் ஆகஸ்டு மாதம் வேலூருக்கு வந்தேன். அப்போது சி.எம்.சி. அருகில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினேன். பின்பு வேலூர் சைதாப்பேட்டை பள்ளிவாசல் அருகே அறை எடுத்து தங்கினேன். அதைத்தொடர்ந்து உத்தரபிரதேசம் அலிகாரில் உள்ள மருத்துவமனையிலும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இதையடுத்து சென்னையில் இருந்து மீண்டும் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற கடந்த 13–ந் தேதி இரவு பீகாரை சேர்ந்த ஹாலித்து என்பவருடன் காட்பாடிக்கு வந்தேன். பின்னர் ஹாலித் எதுவும் கூறாமல் என்னை விட்டு சென்று விட்டார். விடியும்வரை நான் சி.எம்.சி.க்கு எதிரே உள்ள பள்ளிவாசல் அருகே தங்கினேன். 14–ந் தேதி காலை 7–45 மணி அளவில் டாக்டரை பார்க்க நான் சி.எம்.சி.க்கு சென்றேன். அப்போது டாக்டரை பார்க்க விடாமல் காவலர்கள் என்னை தடுத்தனர். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்க முடிவு செய்தேன். இதையடுத்து நான் காலை 8 மணி அளவில் சி.எம்.சி. மருத்துவமனைக்கு போனில் தொடர்பு கொண்டேன். அவர்கள் வேறு ஒரு தொலை பேசி எண்ணை கொடுத்து அதில் தொடர்பு கொள்ளுமாறு கூறினர். பின்பு நான் 8–15 மணி அளவில் எனது தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு மருத்துவமனையில் வெடிகுண்டுகள் உள்ளது எனவும், அவை சரியாக 10 மணிக்கு வெடிக்கும் என்று கூறி போனை துண்டித்தேன். இதே ஏற்கனவே நான் ஆக்ராவிலும், அலிகாரிலும், லக்னோவிலும், ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர், மும்பையில் உள்ள கண்ட்ரோல் அறைக்கும் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார்.

UP Terrorist arrested in Ambur PTI 17-10-2015

UP Terrorist arrested in Ambur PTI 17-10-2015

விசாரணைக்குப் பிறகு ஜெயிலில் அடைப்பு: சென்னை, ஆம்பூர், வேலூர் என்று பல இடங்களுக்கு பலமுறை சர்வ சகஜமாக வந்து போவது, எப்படி என்பதும் வியப்பாக இருக்கிறது. தீவிரவாத செயல்கலில் ஈடுபட்டவர்கள் வந்து செல்கின்றனர் எனும் போது, நிச்சயமாக உள்ளூர் ஆட்கள் உதவி செய்கிறார்கள் என்றாகிறது. அதைத்தொடர்ந்து சையத் அகமது அலியை, துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பலத்த காவலுடன் அணைக்கட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். இங்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்–1 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மீனாசந்திரா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி சையத் அகமது அலி வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ஆம்பூர் மதரஸா - உதாரணம்

ஆம்பூர் மதரஸா – உதாரணம்

குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர் பல மாநிலங்களுக்குச் சென்று வர யார் உதவுகிறார்கள்?: சையத் அகமது அலி உண்மையிலேயே மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து போகலாம், போயிருக்கலாம். இப்பொழுது பார்ப்பதற்கே பாவமகத்தான் இருக்கிறான். ஆனால், அவன் தீவிரவாதியாக இருக்கிறான். குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர்களுக்கு நோய் வரக்கூடாது, சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில்லை. ஆனால், உடல்நிலை ஆரோக்கியமாக மாறியதும், அவர்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது தான் பிரச்சினையாக இருக்கிறது. இங்கும் தனக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஆனதால், குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்திருக்கிறான் என்பது வேடிக்கையாக இருக்கிறது. மருத்துவமனைகளில் காத்துக் கிடப்பது என்பது சர்வ-சகஜமான விசயம் தான். “அப்போது டாக்டரை பார்க்க விடாமல் காவலர்கள் என்னை தடுத்தனர். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்க முடிவு செய்தேன்”, என்பது இன்னும் விசித்திரமாக இருக்கிறது. மேலும், தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவன் எனும்போது, உ.பி, அசாம், மேகாலயா என்ற பல மாநிலங்களுக்குச் சென்று சிகிச்சைப் பெறுவது, மற்றும் தமிழகதுக்கு வந்து செல்வது என்பது, நிச்சயமாக மற்றவர்கள் உதவியுடன் வந்து செல்ல முடியாது. அதற்காக நிறைய பணமும் செலவாகிக் கொண்டிருக்கும். ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் விதவிதமான கெட்டப்பில் சையது முகம்மது அலி சுற்றித்திரிந்து வந்தார் எனும்போது, தனது அடையாளத்தையும் மறைத்துள்ளார் என்றாகிறது. குற்றமுள்ள நெஞ்சு குறு-குறுத்துள்ளது. ஆனால், அதிலும் தன்னலம், அதாவது, மருத்துவ சிகிச்சைப் பெற வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதினால், அடங்கிப் போயிருக்கிறார். இங்கும், தன்னை எதிர்த்தபோது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்.

தினமலர் - வேலூர் கைது

தினமலர் – வேலூர் கைது

குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர் மதரஸாக்களில் தங்க முடியுமா?: மதரஸாக்களில், பள்ளிவாசல்களில் தங்குவது என்பது அவ்வளவு சாதாரணமான விசயமா அல்லது யாராவது போன் செய்து அறிவித்தார்களா, கடிதங்களை கொண்டுவந்து, தங்கினார்களா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், இவையெல்லாமே நடந்தன எனும் போது, அவர்களுக்கு உள்ள பணபலம், நட்பு அல்லது வேறெந்த பலமோ உள்ளது என்பதைக் காட்டுகிறது. இன்றைய நிலையில் அறிமுகத்துடன் சென்றாலே, பலவித கேல்விகள் கேட்கப்படுகின்றன. லாட்ஜுகளில் அடையாள அட்டைகளை கேட்கிறார்கள், அவற்றை நகலும் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்களையும் எடுத்து வைத்துக் கொல்வதால், இவற்றையும் மீறி, தங்க வேண்டுமானால், மதரஸா, பள்ளிவாசல் போன்ற இடங்களில் தான் தங்க வேண்டும். அவ்வாறு தங்கினால், விவரங்கள் மறைக்கப்படும் அல்லது அவ்வளவு சுலபமாக மற்றவர்களுக்குக் கிடைக்காது. ஆகவே, ஒன்று முஸ்லிம்கள் என்ற நிலையில் அல்லது தீவிரவாதிகள் என்று தெரிந்தும், முஸ்லிம்கள் என்பதால் உதவுவது என்பதுள்ளது என்று தெரியவருகிறது. அதனால், குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர்களின் அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன. சித்தூரில் அல்-உம்மா தீவிரவாதிகள் தங்கியிருந்தது, சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டது, அப்பொழுதும், போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையில், ஈடுபட்டது போன்ற விவரக்களும் வெளிவருகின்றன. ஆம்பூரில் சமீபத்தில் தான் கலவரம் ஏற்பட்டுள்ளது. போலீஸாரே தாக்கப்பட்டுள்ளனர். அந்நிலையில் தீவிரவாதிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர், மதரஸாக்களில் தங்க இடம் கொடுக்கப்படுகிறது என்பதெல்லாம் நிச்சயமாக வேறெந்த விசயத்தையோ மறைப்பதாக உள்ளது.

© வேதபிரகாஷ்

17-10-2015


[1]  தினத்தந்தி, சி.எம்.சி. மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: கைதான தீவிரவாதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பு, மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 5:00 AM IST; பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 1:46 AM IST.

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (1)

ஒக்ரோபர் 17, 2015

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (1)

உபி தீவிரவாதி வேலூரில் கைது

உபி தீவிரவாதி வேலூரில் கைது

ஆம்பூர் உமர் சாலையில் மதரஸாஎன்ற இடத்தில் கைதா அல்லது மதரஸாவில் கைதா? – தமிழ்.ஒன்.இந்தியாவின் உண்மை மறைப்பு செய்தி[1]: ஆம்பூரில் பதுங்கியிருந்த 2 வட மாநில தீவிரவாதிகளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த 5 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அவர்கள்தான் என தெரிய வந்துள்ளது[2]என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா. வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சுற்றித்திரிந்து கொண்டு இருப்பதாக ஆம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது[3]. இதையடுத்து போலீசார் நேற்று மாலை ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா என்ற இடத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் சரிவர பதிலளிக்காததால் போலீசார் அவரை ஆம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். “ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா” என்று குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. மதராஸவில் தங்கியிருந்த பயங்கரவாதி கைது என்று உண்மையை வெளியிட ஏன் மறைப்பு என்று தெரியவில்லை. மதரஸாக்கள் பயங்கரவாதத்திற்கு / தீவிரவாதங்களுக்கு உதவுகின்றன என்ற உண்மையினை மறைக்க அவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கலாம். பி.டி.ஐ ஏற்கெனவே அவ்வுண்மையினை வெளியிட்டுள்ளது[4]. அச்செய்தி மற்ற ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன[5].

ஆம்பூர் சாலை - உதாரணம்

ஆம்பூர் சாலை – உதாரணம்

.பி.போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள்[6] / தீவிரவாதிகள்[7]: உத்தரபிரதேச ஆக்ரா தாலியான் காண்டி பகுதியை சேர்ந்தவர் சையது மாமூன் அலி. இவரது மகன் சையது முகம்மது அலி (வயது 37). இவர் மீது உத்தரபிரதேச மாநிலம் போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், தர்கா, மற்றும் நிறுவனம் முதலியவற்றிற்கு தீவிரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்ததால் வழக்குகள் பதிவாகி உள்ளன[8]. ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளிலும் தொடர்பு உள்ளது[9]. ஒரு இது தொடர்பாக சையது முகம்மது அலியை போலீசார் தேடி வந்தனர். ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் விதவிதமான கெட்டப்பில் சையது முகம்மது அலி சுற்றித்திரிந்து வந்தார். இதனால் தீவிரவாதிகளுடன் சையத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்று அம்மாநில போலீசார் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அவரை அறிவித்தனர். மேலும் சையத்தின் குடும்பத்தினர், நண்பர்கள் என அவரை சுற்றியுள்ளவர்களின் செல்போன் எண்ணின் டவரை போலீசார் தினமும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சையத் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக உள்துறைக்கு, உத்தரபிரதேச போலீசார் தகவல் கொடுத்தனர். உள்துறை அதிகாரிகள் உளவு துறை மூலம் வேலூர் மாவட்ட போலீசாரை உஷார்படுத்தினர்[10]. “புதிய தலைமுறை” டிவி பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றது.

UP Terrorist arrested in Ambur தினத்தந்தி 17-10-2015

UP Terrorist arrested in Ambur தினத்தந்தி 17-10-2015

ஆம்பூர் மதரஸாவில் தங்கியிருந்த தீவிரவாதி கைது: எஸ்.பி. செந்தில்குமாரி உத்தரவின்பேரில் ஆம்பூர் டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் சையது முகம்மது அலியின் அடையாளங்களை சேகரித்து, அவரை தேடி வந்தனர். இதற்கிடையில் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உமர் ரோட்டில் சையத் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஒரு மதரஸாவில் தங்கியிருந்தான் என்று பி.டி.ஐ கூறுகிறது[11]. இதையடுத்து டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியை நேற்றிரவு தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து சையத்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை கைது செய்த அணைக்கட்டு காவல் போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், நேற்று முன்தினம் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சையத் என்பது தெரியவந்தது. கடந்த 14–ந் தேதி அடுத்தடுத்து 2 முறை இந்தி, ஆங்கில மொழியில் மாறி, மாறி போனில் மிரட்டல்கள் வந்தன. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் சென்னை உள்பட பல்வேறு இடங்களை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர்[12].

புதியதலைமுறை - பயங்கரவாதிகள்

புதியதலைமுறை – பயங்கரவாதிகள்

ஆம்பூருக்கு அல்லது தமிழகத்திற்கு என்ன தொடர்பு?: எதற்காக சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு சையத் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனால் சையத் தீவிரவாதிகளின் சிலிபர் செல் எனப்படும் உள்நாட்டு குழுக்களை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சையத்துடன் தொடர்புடைய நபர்கள் வேறு யாராவது? தமிழகத்தில் பதுங்கியுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சையத் கைது செய்யப்பட்டது குறித்து உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அம்மாநில போலீசார் வேலூருக்கு விரைந்துள்ளனர். பிடிபட்ட சையத் உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிகிறது. சையத் பிடிபட்டபோது அவரிடம் இருந்து 5 சிம்கார்டுகள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன் எண் பட்டியலையும் சேகரித்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதியதலைமுறை - அணைக்கட்டு காவல் நிலையம்

புதியதலைமுறை – அணைக்கட்டு காவல் நிலையம்

விசாரணையில் வெளியாகும் குழப்பமான விவரங்கள்: காவல்நிலையத்தில் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ‘திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த முகமது மாமுன் அலி என்பவரின் மகன் சையது முகமது அலி என்றும் சிகிச்சை பெறுவதற்கு வேலூரில் தங்கியிருந்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான எவ்வித ஆவணங்களும் அவனிடம் இல்லை. மேலும் அவனிடம் 5 சிம்கார்டுகள் இருந்தன. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சிம் கார்டுகளை ஆய்வு செய்தபோது அதிலிருந்த ஒரு சிம்கார்டு மூலம் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு நேற்றிரவு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு விடிய விடிய விசாரணை நடத்தினர். எஸ்பி செந்தில்குமாரி நேரில் சென்று விசாரணை நடத்தியதில், சையது முகமது அலி ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பேசினான். இதனையடுத்து இந்தி தெரிந்தவர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வேலூர் சிஎம்சி அருகே உள்ள லாட்ஜில் தனது நண்பருடன் தங்கியிருந்தது தெரியவந்தது.

ஆம்பூர் குண்டுவெடிப்பு மிரட்டல் - கைது - உதாரணம்

ஆம்பூர் குண்டுவெடிப்பு மிரட்டல் – கைது – உதாரணம்

வேலூர் லாட்ஜுகளில் சோதனை: இதனையடுத்து, நேற்றிரவு வேலூரில் உள்ள ஒரு சில லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களின் விவரங்களை தீவிரமாக சேகரித்தனர். இதில் வட இந்திய நபருடன் தங்கியிருந்தவனை கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு ராஜஸ்தான், ஆக்ரா உள்ளிட்ட 3 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும், வேலூரில் வெடிகுண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வேலூரில் யார் அவர்களுக்கு உதவி செய்தது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவர்களுக்கு வேறு எந்த அமைப்புடன் தொடர்பு உள்ளது? மேலும் இவர்களின் சதித்திட்டம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சிம் கார்டுகளில் உள்ள செல்போன் எண்களை சைபர் கிரைம் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் வேலூரில் இருந்து அவர்களுக்கு உதவி செய்த பலர் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நோயாளிகள் போர்வையில் தங்கியிருந்து வேலூரில் குண்டுகள் வைக்க சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© வேதபிரகாஷ்

17-10-2015

[1] தமிழ்.ஒன்.இந்தியா, வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் 2 தீவிரவாதிகள் கைது, Posted by: Mayura Akilan, Published: Friday, October 16, 2015, 16:59 [IST].

[2] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/2-terrorists-nabbed-near-ambur-237880.html

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/2-terrorists-nabbed-near-ambur-237880.html

[4] http://www.ptinews.com/news/6626972_Man-wanted-for-making-terror-threats-in-UP-held-in-TN.html

[5] Business Standard, Man wanted for making terror threats in UP held in TN, Press Trust of India , Vellore (TN) October 16, 2015 Last Updated at 22:22 IST.

[6] https://www.youtube.com/watch?v=PWxP66jhXx0

[7] மாலைமலர், சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் பிடிபட்ட வாலிபர் தீவிரவாதியா? – ரகசிய இடத்தில் விசாரணை, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 16, 12:06 PM IST

[8] Syed Ahmed Ali had allegedly made terror threats to Taj Mahal in Agra, a dargah besides an institution in Lucknow. He had arrived here two days ago and stayed in a Madrasa in Ambur. http://www.business-standard.com/article/pti-stories/man-wanted-for-making-terror-threats-in-up-held-in-tn-115101601463_1.html

[9] தினகரன், ஆக்ரா, ஜெய்ப்பூரில் குண்டுவெடிப்பில் தொடர்பு: வேலூரில் கைதான தீவிரவாதியிடம் விசாரணை, அக்டோபர்.17, 20125. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173391

[10] http://www.maalaimalar.com/2015/10/16120645/CMC-hospital-bomb-threat-Ambur.html

[11] Intelligence Bureau officials alerted Tamil Nadu police about the presence of Ali in Ambur in a Madrasa. “We immediately began our probe and with the help of local people we identified Ali…Now Uttar Pradesh police are on their way to take this man into their custody through court,” the official added.

http://www.business-standard.com/article/pti-stories/man-wanted-for-making-terror-threats-in-up-held-in-tn-115101601463_1.html

[12] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/10/17014634/CMC-Hospital-bomb-threat.vpf

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (12)

திசெம்பர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (12)

Burdwan blast accused Shahnoor Alam -Photo- PTI-File

Burdwan blast accused Shahnoor Alam -Photo- PTI-File

இந்திய-விரோத அந்நிய சக்திகளில் வடகிழக்கு மாநிலங்களில் சதிதிட்டங்களை செயல்படுத்தி வருவது: வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் இந்திய-விரோத செயல்கள், தீவிரவாத காரியங்கள், உள்ளூர் மக்களுக்கு எதிராக அவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கரவாத வேலைகள் முதலியவற்றில், பெரும்பாலும் அந்நிய சக்திகள் பின்னணியில் இருந்து கொண்டு, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. அவற்றில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, அல்-குவைதா, தலிபான், வங்காளதேசத்தின் ஜமாத்-உல்-முஜாஹித்தீன், கிருத்துவ மிஷனரிகள், இடதுசாரி-கம்யூனிஸ்ட் சித்தாந்த போடோலாந்து தீவிரவாதிகள், நக்சல்பாரிகள் முதலியோர் அடங்கும். கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இக்காரயங்கள் நடந்து வந்தபோதிலும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இப்பொழுது திரிணமூல் கட்சி இவ்விசயங்களில் மெத்தனமாகவே செயல் பட்டு வந்துள்ளன. இதனால், வங்காளதேசத்திலிருந்து முஸ்லிம்கள் ஊடுருவி, அசாம் மாநிலங்களில், நிரந்தரமாகத் தங்கி வாக்காளர் அட்டை, ரேஷ்னகார்ட் முதலியவற்றைப் பெற்று ஆளும் கட்சிகளுக்கு ஓட்டு வங்கியாக செயல்பட்டு வருவதுடன், கடத்தல், கள்ளநோட்டு-போதை மருந்து விநியோகம், மனிதகடத்தல் (பெண்கள்-குழந்தைகளையும் சேர்த்து) முதலிய காரியங்களிலும் ஈடுபட்டு, அதில் வரும் பணத்தின் பங்கை அரசியல்வாதிகளுக்குக் கொடுத்து வருவதால், அவர்களும் அமைதியாகவே இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் மறுபடியும் அந்நிய சக்திகள் தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளன.

21-12-2014-10 grenades found JMB - Assam

21-12-2014-10 grenades found JMB – Assam

ஒரே நாளில் இம்பால் குண்டுவெடிப்பில் மூன்று பேர் சாவு, பஸ்கா மாவட்டத்தில் 10 கையெறிகுண்டு கண்டுபிடிப்பு: 21-12-2014 அன்று மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் ஒரு குண்டு வெடித்து, மூன்று பேர் கொல்லப்பட்ட அதே நாளில்[1], அசாமில், பார்பேடாவில், நாம்பாரா மாவட்டத்தில், பதசர்குச்சி என்ற கிராமத்தில் ஷாஹநூர் ஆலத்தின் [Sahanur Alom] கையாளியான நூர்ஸலால் ஹக் [Nurjamal Haque வயது 25] என்பவன் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் குறிப்பிட்ட இடத்தில், மறைத்து வைக்கப்பட்ட தோண்டிப் பார்த்ததில் 10 நாட்டு கையெறி-வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன[2]. அக்குண்டுகள் பஸ்கா மாவட்டத்தில், பன்பரா கிராமத்தில் உள்ள ஒரு வாழைத்தோப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன[3]. வெடிகுண்டுகள் தவிர, கையெறி குண்டுகளும் தயாரிக்கப்படுகின்றன என்று தெளிவாகிறது. சஹநூர் ஆலத்தின் வீட்டிற்கருகில் சுமார் 500 மீ தொலைவில் ரூபோஹி நதிக்கரையில் பாலிதீன் உறைகளில் சுற்றி அவை புதைக்கப்பட்டிருந்தன[4].  அதாவது, சோதனைக்கு வருகிறார்கள் என்பதும், அவர்களுக்கு முன்னமே தெரிந்திருக்கிறது என்றாகிறது. 90க்கும் மேற்பட்ட குண்டுகள் மறைத்து வைக்கப் பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது[5]. இருப்பினும் கண்டெடுக்கப்பட்ட குண்டுகள் சோதனைக்குப் பின்னர் அழிக்கப்பட்டன.

jmb - Bangala terror

jmb – Bangala terror

மதரஸாவின் முதல்வரே குண்டுகள் விசயத்தில் கைது: ஜிஹாதி நோட்டிசுகள், கையேடுகள், சிறுபுத்தங்களும் குழிகளில் கண்டெடுக்கப்பட்டன. முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாதி இயக்கத்திற்கு சேர்ப்பது, அவர்களை இத்தகைய பிரச்சார இலக்கியங்களினால் வெறிகொள்ள செய்வது, தீவிரவாதிகளாக மாற்றுவது போன்ற வேலைகளில் தான் மதரஸாக்கள் ஈடுப்பட்டுவருகின்றன என்பது தெளிவாகிறது. நூர்ஸலால் ஹக் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பஸ்கா மாவட்டத்தில், சல்பாரி கிராமத்தில் 12-12-2014 வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டான். இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப் பட்டனர்[6]. இன்னொரு கூட்டாளியான நஜ்முல் இஸ்லாம் [ Nazmul Islam] என்பவன் ஞாயிற்றுக்கிழமை 14-12-2014 அன்று பார்பேடாவில் கைது செய்யப்பட்டான்[7]. இவன் கோராகுரி அஞ்சாலிக் மதரஸாவின் பிரின்சிபால் ஆவான்[8]. அதாவது, மதரஸாக்கள் எப்படி ஜிஹாதி-தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

huji Bangaladesh

huji Bangaladesh

அனைத்து அசாம் மாணவர்கள் குழுமத்தின் அறிக்கையில் வெளியாகும் தகவல்கள்: அடுத்த நாள் (22-12-2014), அனைத்து அசாம் மாணவர்கள் குழுமம் [The All Assam Students’ Union (AASU)] அல்-குவைதா, ஜமாத்-உல்-முஜாஹித்தீன் போன்ற தீவிரவாத அமைப்புகளை வேரறுக்க வேண்டுமானால், சட்டத்திற்குப் புறம்பாக, வங்காளதேசத்திலிருந்து ஊரடுருவியுள்ள முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கையை மறுபடியும் வைத்தது[9]. அரசே பார்பேடா, நல்பாரி மற்றும் பஸ்கா போன்ற மாவட்டங்களில் தீவிரவாதிகள் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒப்பொஉக் கொண்டுள்ளதால், உடனடியாக, அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டது[10]. அசாம் உடன்படிக்கையை அரசு செயல்படுத்தத் தயங்கியதால், பாகிஸ்தானிலிருந்து வரும் ஐ.எஸ்.ஐ ஆட்களும் அந்த போர்வையில், வங்காளாதேசத்தின் வழியாக, எல்லைகளைக் கடந்து அசாமில் வந்து நுழைந்துள்ளார்கள்[11]. மேலும் உச்சநீதி மன்றம் சட்டவிரோதமாக உள்நுழைந்த-இடம் பெயர்ந்தவர்களை அடையாளம் காணும் சட்டத்தை [Illegal Migrants (Determination by Tribunals) Act] திரும்பப்பெற்றதால், அசாம் வெளியிலிருந்து தாக்குதல்களையும், உள்ளே கலவரத்தொந்தரவுகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று எடுத்துக் காட்டியுள்ளதையும், அனைத்து அசாம் மாணவர்கள் குழுமம் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியது[12].

AASU demand on illegal immigration, infiltration etc

AASU demand on illegal immigration, infiltration etc

மதரஸாக்களைக் குறைகூறக்கூடாது என்றால், அவை ஏன் குண்டு தொழிற்சாலையாக, கிடங்குகளாக செயல்படவேண்டும்?: மதரஸாக்களை ஒட்டு மொத்தமாகக் குறைகூறக்கூடாது என்று எதிர்க்கும் முஸ்லிம்கள், மதரஸாக்கள் இவ்வாறு தீவிரவாதத்திற்கு உபயோகப்படுத்தப் படுவதை ஏன் எதிர்ப்பதில்லை, போலீஸாரிடம் புகார் கொடுப்பதில்லை அல்லது முளையிலேயே கிள்ளி எரிவதில்லை என்ற வினாக்களிலிருந்தே, அவர்களது, நேரிடையான மற்றும் மறைமுக ஆதரவு வெளிப்படுகிறது. முன்பு பர்த்வானிலேயே பெரிய கூட்டம் போட்டு, அதில் சில இந்துக்களையும் ஆதரவாகப் பேசவைத்ததை நினைவு கூறவு, இப்பொழுது, அவர்கள் எல்லோருமே அமைதியாகி விடுவர். இதனை எதிர்த்துக் கூட்டம் போடமாட்டார்கள், கண்டன-அறிக்கைகளையும் வெளியிட மாட்டார்கள். அதுதான், அவர்களது தங்களது செக்யூலரிஸத்தை வெளிப்படுத்தும் விதம் போலும். உண்மையில், இத்தகைய செக்யூலரிஸாத்தால் தான் ஜிஹாதித்துவ-தீவிரவாதம், ஊக்குவிக்கப்படுகிறது, ஆதரிக்கப்படுகிறது மற்றும் வளர்க்கப்படுகிறது,

Photo taken on the occasion of signing of memorandum of settlement on the Assam problem between the Government representatives and representatives of the All Assam Students Union and the all Assam Gana Sangram Parishad in New Delhi on August 15, 1985.

Photo taken on the occasion of signing of memorandum of settlement on the Assam problem between the Government representatives and representatives of the All Assam Students Union and the all Assam Gana Sangram Parishad in New Delhi on August 15, 1985.

மதரஸாக்கள் தீவிரவாதிகளின் பயிற்சிக்கூடமாக செயல்பட்டது: அசாமில் உள்ள பல கிராமங்களில் தீவிரவாத செயல்களுக்கு, முஸ்லிம்களை தயாராக்கி வைத்திருக்கிறார்கள். லார்குச்சியில் உள்ள மதரஸா அதற்காகப் பயன்படுத்தப் பட்டது. பல இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு ஜிஹாதி பயிற்சி அளிக்கப்பட்டது[13]. கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது, இவர்கள் மிகவும் திட்டமிட்டு, இக்காரியங்களை செய்ய ஆரம்பித்துள்ளனர் என்று தெரிகிறது. ஒருவேளை, அக்டோபர்.2, 2014 அன்று குண்டுவெடித்து, அவர்கள் மாட்டிக் கொண்டிருக்காவிட்டால், இவர்கள் நாடு முழுவதும், பல குண்டுவெடிப்புகளை நடத்தியிருப்பார்கள் என்று தெரிகிறது. மேலும், அவர்கள், ஜிஹாதி எண்ணங்களில் ஊறியுள்ளது, அவர்களது பேச்சுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஏதோ தீவிரவாத செயல்களை செய்கிறோமோ என்ற எண்ணமே இல்லாமல், புனித காரியத்தைச் செய்கிறோம் என்ற நிலையில் உள்ளார்கள். அப்பாவி மக்களைக் கொல்வதும், அவர்களுக்கு புனித காரியமாகவே தோன்றுகிறது.

he girls Madrasa at Simulia village under Mangalkot PS of Burdwan, alleged terror training centre

he girls Madrasa at Simulia village under Mangalkot PS of Burdwan, alleged terror training centre

வழக்கம் போல திரிணமூல்-பிஜேபி பரஸ்பர குற்றச்சாட்டுகள்: 21-12-2014 அன்று ஷகீல் அஹமதுவின் உடலும் புதைக்கப் பட்டது[14]. முன்பு உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் கலாட்டா செய்து வந்தனர். தீர்ணமூல் காங்கிரஸ் தொடர்ந்து தனக்கும், இந்த குண்டுவெடிப்புகள், தொழிற்சாலை, ஜே.எம்.பி தீவிரவாத ஊக்குவிப்பு முதலியவற்றில் தொடர்பில்லை என்று வாதிட்டு வந்தாலும், அவற்றிற்கிடையே உள்ள சம்பந்தங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்பொழுது சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி பணமும், இதற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[15]. வழக்கம் போல மம்தா இது பிஜேபியின் சதி, ராவின் மூலம் தான் இவையெல்லாம் செய்யப்பட்டது என்று கூறிவருவது, மிக்க வியப்பாகவும், பொறுப்பற்ரதாகவும் இருக்கிறது. மதகலவரங்களை உருவாக்கவே இவையெல்லாம் செய்யப் பட்டு வருகின்றன என்றும் குற்றஞ்சாட்டினார்[16]. அதற்கு மேலும் டெரிக் ஓபராய் என்ற அக்கட்சி ஊடக தொடர்பாளர், தமதிச்சைக்கேற்றபடி பேசி வருவதும் வியப்பாக உள்ளது. அக்கட்சியின் எம்.எல்.ஏ, அமைச்சர் என்று பலருடைய தொடர்புகள் இதில் மெய்ப்பிக்கப்பட்டும், இருவரும் அப்பட்டமாக இல்லவே இல்லை என்று சாதித்து வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

25-12-2014

[1] http://www.assamtribune.com/dec2114/at044.txt

[2] The Special Operation Unit of the state police recovered the bombs that were hidden in Nampara village in Patacharkuchi following the alleged confession of Nurzalal Haque who is an alleged associate of Shahnoor Alam, the prime accused in the October 2 Burdwan blast. Alam, who was arrested nearly two weeks ago by the National Investigation Agency from the state, was the face of jihadi terror in Assam, according to the police.

http://www.ndtv.com/article/india/10-crude-bombs-found-in-assam-after-alleged-confession-of-burdwan-blast-accused-637943

[3] In a major breakthrough, the Assam Police today managed to recover 10 bombs of the Jamaat-ul-Mujaheedin, Bangladesh (JMB). Police sources said that the crude bombs were kept concealed inside a banana plantation in Panpara village in Baksa district. The recoveries were made following the confessions of JMB militant Nurjamal, who was arrested on Friday. Sources said that Nurjamal was a trained cadre of the JMB and he was a close associate of Sahanur Alom, one of the key men of the Bangladesh based militant outfit in the State. http://www.assamtribune.com/dec2214/at051.txt

[4] Based on Sahanur’s confession, the National Investigation Agency (NIA) recovered the grenades near Rupohi river, about 500 metre from his house in Salbari sub-division, NIA sources said.

http://indianexpress.com/article/india/india-others/burdwan-blast-case-nia-recovers-10-hand-grenades/

[5] http://www.deccanchronicle.com/141221/nation-current-affairs/article/burdwan-blast-case-nia-recovers-10-hand-grenades

[6] http://www.telegraphindia.com/1141222/jsp/frontpage/story_4732.jsp#.VJjNKULY8

[7] NDTV, 10 Crude Bombs Found in Assam After Alleged Confession of Burdwan Blast Accused All India | Edited by Mala Das (with inputs from Agencies) | Updated: December 22, 2014 11:32 IST

[8] Police today arrested Nazmul Islam, principal of Koraguri anchalik madarsa in Barpeta district, based on the confession of Haque.

http://www.telegraphindia.com/1141222/jsp/frontpage/story_4732.jsp#.VJjNKULY8

[9] The All Assam Students’ Union (AASU) today reiterated its demand for uprooting the fundamentalist organisations like Al-Qaeda and Jamaat-ul-Mujahideen Bangladesh and also for deporting the illegal Bangla migrants from Assam. http://www.assamtribune.com/dec2314/at055.txt

[10] http://www.assamtribune.com/dec2314/at055.txt

[11] Illegal Bangla migrants, members of the fundamentalist organisations and even members of the intelligence organisation of Pakistan are entering Assam taking advantage of its porous border with Bangladesh. This is because of the failure of the Government to implement the Assam Accord, it said. http://www.assamtribune.com/dec2314/at055.txt

[12] It reminded the Central as well as the State Government of the observation made by the Supreme Court of India while repealing the infamous Illegal Migrants (Determination by Tribunals) Act. The apex court had, interalia, said in its verdict that due to illegal migration, Assam is facing external aggression as well as internal disturbances, said the student body. http://www.assamtribune.com/dec2314/at055.txt

[13] http://indianexpress.com/article/india/india-others/burdwan-blast-probe-key-suspect-shahnoor-alam-arrested/

[14] http://www.oneindia.com/india/body-of-another-burdwan-blast-accused-buried-1599494.html

[15] http://articles.economictimes.indiatimes.com/2014-12-21/news/57280801_1_saradha-scam-trinamool-rajya-sabha-trinamool-congress

[16] http://www.ndtv.com/article/india/centre-stage-managed-burdwan-blast-to-trigger-riots-in-bengal-claims-mamata-banerjee-624484

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (10)

நவம்பர் 19, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (10)

huji Bangaladesh

huji Bangaladesh

என்.. (NIA) மற்றும் ஆர்..பி (RAB)சேர்ந்து வேலை செய்ய திட்டம்: இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகிற ஷேக் கவுசர், யூசுப் என்னும் இரண்டு பேர் உள்பட 12 பேர் தலைமறைவாக உள்ளனர். ஷேக் கவுசர், யூசுப் இவ்விருவரும் வங்காளதேச பிரஜைகள் என்பதால், என்.ஐஏ – தேசிய புலனாய்வு ஏஜென்சி படையினர் வங்காள தேசத்திற்கு சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். அதன்படியே, தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் மேற்குவங்க போலீஸ் அதிகாரிகள் நவம்பர் 9 அல்லது 10-ம் தேதியில் வங்காளதேசம் செல்வதாக உள்ளது. இருநாடுகளின் புலனாய்வு குழுக்கள் [the National Investigation Agency (NIA) and Rapid Action Battalion (RAB)] இவ்விசயத்தில் ஒன்றாக வேலை செய்யவும், விவரங்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடிவு செய்துள்ளன[1]. இந்த வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகள் தொடர்பாக துப்பு தருவோருக்கு ரூ.10 லட்சமும், மீதி 7 குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் கொடுப்போருக்கு ரூ.5 லட்சமும் ரொக்கப்பரிசு வழங்குவதாக என்.ஐஏ ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதற்குள் சில முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன.

Burdwan blast -Subramanian swami photo

Burdwan blast -Subramanian swami photo

12-11-2014 (புதன் கிழமை) அசாமில் அன்று அசாமில் விசாரணை: அசாமில் உள்ள பார்பேடா என்ற இடம், ஜிஹாதிகளின் புகலிடமாக உள்ளது போலும். என்.ஐ.ஏ இங்கு கீழ்கண்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டது[2]:

  1. கவான் புர்ஹா, கிராமத் தலைவர் [Gaon Burha (village headman)]
  2. ரஷீத் அலி அஹமது [Rashid Ali Ahmed],
  3. ஜஹிதுல் இஸ்லாம் [Jahidul Islam],
  4. படாஸி பேகம் [Batasi Begum],
  5. சைஃபுல் இஸ்லாம் [Saiful Islam] மற்றும்
  6. சைபர் அலி [Saibar Ali],

சஹனூர் ஆலம் [Sahanur Alam] பர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சந்தேகிக்கப் படும் குற்றவாளியின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மசூதியில் இவர்கள் இருந்ததனர்[3]. இவ்வாறு மசூதிகளில் தஞ்சம் அடைவது, ஒளிந்து கொண்டிருப்பது முதலியன புலன் விசாரணை செய்பவர்களுக்கு தர்ம சங்கடமாக, பிரச்சினையாக இருக்கிறது. சஹனூர் ஆலத்தின் மனைவி சுஜனா பேகம் [Sujana Begum] ஏற்கெனவே 07-11-2014 அன்று வெளியூர் பேருந்து நிலையத்தில் [interstate bus terminus -ISBT] கைது செய்யப் பட்டுள்ளாள்[4]. படாஸி பேகம் இவருக்கு நெருங்கிய நண்பராம். இப்பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுக்கப் பட்டுள்ளது. ரஷீத் அலி அஹமது பல முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதச் செயல்களுக்கு ஆள் சேர்த்துள்ளான். அவர்கள் எல்லோருமே “சதாலா” என்ற கிராமத்திலிருந்து மறைந்து விட்டதாக சொல்கிறார்கள். அதாவது, மாயமாகும் முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறு ஜிஹாதிகளாக மாற்றப் படுகிறார்கள் போலும். சஹனூர் ஆலம் மறைந்திருந்தாலும், அவனது சகோதரன் ஜகாரியாவும் [Jakaria] ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளான்[5]. சஹனூர் ஆலம் வங்காளதேசத்திற்கு தப்பித்துச் சென்றுவிட்டதாகச் சொல்லப் படுகிறது[6]. ஆக மொத்தம் எட்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவ்வாறு ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள், குறிப்பாக மனைவியும் கணவனுடன் சேர்ந்து தீவிரவாத வேலைகளில் ஈடுபட்டு வருவது இவ்வழக்கில் அதிகமாக தெரிய வருகிறது. அதாவது, ஜிஹாதி-குண்டு தயாரிப்பு-குண்டுவெடிப்பு முதலியன ஏதோ குடும்பத் தொழிலாகி விட்டது போலிருக்கிறது.

jmb - Bangala terror

jmb – Bangala terror

அகில இந்திய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஜிஹாதிகளுக்கும் தொடர்புள்ளதா?: அசாமில் அகில இந்திய ஜனநாயக் கூட்டணி கட்சி தனது ஆதிக்கத்தைச் செல்லுத்தி வருகிறது. பங்காளதேச எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. அசாம் சட்டசபையிலும் 26 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ளதுமசாமில் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சியை இக்கட்சி கண்டுள்ளது. ஆனால், முஸ்லிம் கட்சிக்கும் [All India United Democratic Front (AIUDF)] இதற்கும் தொடர்புள்ளது என்று ஒரு டிவி-செனல் குறிப்பிட்டதால்[7], ஹைதர் ஹுஸைன் போரா [Haidar Hussain Bora] என்ற அக்கட்சியின் தலைவர், ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்[8]. “இந்தியா-டிவி” செனல் மீதும் வழக்குத் தொடரப் பட்டுள்ளது[9]. அச்செனல் “நியூஸ்-எக்ஸ்” என்று இன்னொரு தளத்தின் மூலம் தெரிய வருகின்றது[10]. அசாம் அனைத்து ஜனநாயக பேரவை மற்றும் ஜமைத் உலமா இ-இந்த் ஒரு இளைஞர் குழுவை சுக்சார், தூப்ரி மாவட்டம், அசாமிலிருந்து ஜிஹாதி பயிற்சி பெற பங்களாதேசத்தில் உள்ள ரங்கப்பூர் என்ற இடத்திற்கு, கடந்த ஜூன்-ஜூலை 2013 மாதங்களில் அனுப்பி வைத்ததாக “நியூஸ் எக்ஸ்” செனல் குறிப்பட்டது[11]. முதல் குழுவில் உள்ளவர்களை முன்னணி தலைவர்களே பிரத்யேகமாகத் தேர்ந்தெடுத்து அனுப்பினர் என்றும், இரண்டாவது குழு நவம்பர் 2013ல் சென்றது என்றும் குறிப்பிட்டது[12]. இத்தகைய பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஜிஹாதி நிறுவனங்கள் ஹுஜி, சிமி, மூல்தா – [ intelligence reports named jihadi organisations like HuJI, SIMI, MULTA.] முதலியன. அசாம் முதலமைச்சர் தருண் ககோய் செய்தியாளர்களிடம் 04-11-2014 (செவ்வாய்கிழமை) இதே மாதிரித்தான் சொல்லியிருந்தார்[13], “ஜே.எம்.பி இங்கு முஸ்லிம் பெண்களிடம் பர்கா / பர்தா துணிகளை விற்கும் போர்வையில் ஒரு பெண்கள் பிரிவை ஏற்படுத்த முயன்றுள்ளார்கள். பார்பேடா மற்றும் நல்பாரி ஊர்களில் உள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று ஜிஹாதி பயிற்சி பெற்றுள்ளனர்.” முன்பு (29-10-2014) பிஜேபி, பஜ்ரங் தள் முதலியவை மௌலானா பதாருத்தீன் அஜ்மல் [Maulana Badruddin Ajmal ] கைது செய்யப் படவேண்டும் என்று போராட்டம் நடத்தின[14]. ஆனால் அக்கட்சி தங்களுக்கும் பங்களாதேசத்து ஜிஹாதி குழுமங்களுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று அறிவித்துள்ளது[15].

 

வங்காளதேசத்தின் மெத்தனம்

வங்காளதேசத்தின் மெத்தனம்

ஜே.எம்.பியின் அம்ஜத் அலி சென்னைக்குத் தப்பிச் சென்றான் என்றது ஆனால் கைது என்றது (10-11-2014): ஜே.எம்.பியின் அம்ஜத் அலி ஷேக்கிற்கு [Amjad Ali Sheikh] அடைக்கலம் கொடுத்து உதவியதற்காக, சஸ்ஹஸ்த்ரா சீமா பல் [Sashastra Seema Bal] என்ற மத்திய அரசு போலீஸ் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரனிடம் 10-11-2014 அன்று விசாரணை நடத்தப் பட்டது[16]. இவன் உத்திரப் பிரதேசத்தில் உள்ள பஸ்தி வழியாக சென்னைக்குத் தப்பிச் செல்ல, அந்த வீரன் அம்ஜத் அலி ஷேக்கிற்கு உதவியுள்ளான்[17]. தில்லியில் அவனுக்கு இடம் கொடுத்துள்ளான், தில்லியிலிருந்து அவன் சென்னைக்குத் தப்பிச் சென்றுள்ளான்[18]. அதாவது, சென்னையில் இத்தகைய ஆட்களுக்கு தங்கிக் கொள்ள அல்லது மறைந்து வாழ இடம் கொடுக்கப் படுகிறது என்று தெரிகிறது. ஏற்கெனவே, சென்னையில் உள்ள மூன்று நபர்களுடன் ரஜீயா பீபி மற்றும் ஷகீல் அஹமது தொடர்பு கொண்டு பலமுறை பேசியுள்ளனர். இதையறிந்து தான், என்.ஐ.ஏ சென்னையில் உள்ள அந்த மூன்று நபர்களை விசாரித்தது. ஆகவே சென்னையில் “ஸ்லீப்பர் செல்கள்” உள்ளனவா அல்லது அறிந்தே ஜிஹாதிகளுக்கு, இங்குள்ள அடிப்படைவாதி முஸ்லிம்கள் உதவுகிறார்களா என்ற விசயம் நோக்கத்தக்கது. ஜே.எம்.பியின் அம்ஜத் அலி இப்பொழுது சென்னையிலுள்ளானா அல்லது வேறெங்காவது தப்பித்துச் சென்று விட்டானா எ இருக்கின்று தெரியவில்லை. அம்ஜத் அலி ஷேக் 10-11-2014 (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக “டெயிலி மெயில்” குறிப்பிடுகின்றது[19]. இவர்களுக்கு ஜார்கண்டிலும் தொடர்பு இருப்பதால், அங்கும் விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது.

அல்-உம்மா சிமி ஹிஹாதின் பல உருவங்கள்

அல்-உம்மா சிமி ஹிஹாதின் பல உருவங்கள்

சென்னையில் வாழும் குல்ஷன் பீபி என்றபோதைமருந்து ராணி[20]: என்.ஐ.ஏ குல்ஷன் பீபி என்ற “போதைமருந்து ராணி”யைத் தீவிரமாகத் தேடி வருகிறாதாம். கொல்கொத்தாவிலிருந்து சென்னைக்கு ஓடிவந்துவிட்ட அந்த பெண்மணி இப்பொழுதும் தனது “ரிமோட் கன்ட்ரோல்” மூலம் “போதைமருந்து வியாபாரத்தை” செய்துவருவதாக, என்.ஐ.ஏ-துப்பறிவாளர்களுக்குத் தெரியவந்துள்ளது. ஆனால், சென்னை போலீஸாருக்கோ, போதைமருந்து தடுப்புத்துறையினருக்கோ, அப்பெண்மணியைப் பற்றிய எந்த விவரங்களும் தெரியாமல் இருக்கிறது. ஆனால், மே.1.2014 குண்டுவெடிப்புக்கு முன்னர், இரண்டு ஜே.எம்.பி தீவிரவாதிகள் தங்க சென்னையில் இடம் கொடுத்துள்ளார். அவள் கிழக்குக் கடற்கரையில் மஹாபலிபுரம் வரையில் உள்ள ரிசார்ட்டுகளில் போதைமருந்து ஜல்ஸா பார்ட்டிகளை நடத்தியிருப்பதாகவும் கூறுகிறார்கள். பி.பி.ஓக்கள் மற்றும் கே.பி.ஓக்களில் வேலை செய்யும் இளம் ஆண்கள்-பெண்கள் தவிர, திரைப்பட உலகில் உள்ளவர்களும், இவளது வாடிக்கையாளர்களாம். ஆகஸ்ட்.1,1993 அன்று உத்தம் மண்டல் என்ற சி.பி.எம் தோண்டர், இந்த பெண்மணி ஒரு உருது பள்ளிக்கு வந்திருந்த போது எதிர்ப்புத் தெரிவித்தால் குரூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். அப்பொழுது குல்ஷன் பீபி கைது செய்யப் பட்டாலும், பிறகு ஒரு சி.பி.எம் அமைச்சர் தயவால் தப்பி விட்டார். கொல்கொத்தாவில் தேசிய போதைமருந்து தடுப்புத்துறை மற்றும் போலீஸாரின் தொல்லை தாங்காமல், சென்னைக்கு தனது ஜாகையை மாற்ரிவிட்டதாக தெரிகிறது. எல்லொருக்கும் லஞ்சம் கொடுத்து கொல்கொத்தா-சென்னை ரயில்வழியில் தனது ஆட்சியை நடத்தி வருகிறாராம்[21]. இவ்வழக்கில் ஏற்கெனவே ஒரு குல்ஷன் பீபி கைது செய்யப் பட்டிருக்கிறாள், ஆனால், அவள் வேறு. பாகிஸ்தானில், இதே பெயரில் இன்னொரு போதை மருந்து ராணி இருக்கிறாள். அவளும் வேறு, ஆக இந்த சென்னையில் இருக்கும் ராணி யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

 முந்தைய சென்னையுடனான தொடர்புகள்: முர்ஷிதாபாத்தில் உள்ள உயிரிழந்த ஷகீல் அஹமதுவின் வீட்டையும் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் குண்டு தயாரிப்புக்கான முக்கிய கருவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையிலும், மேற்கொண்டு தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையிலும் சென்னையை சேர்ந்த மூன்று பேருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மூன்று பேருக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இது சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை போலும். பொறுப்பான முஸ்லிம்களும் கண்டு கொள்ளவில்லை போலும். இதுதவிர, நேரில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் பி.வி.ராமசாஸ்திரி ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார்[22]. சென்னையில் தங்கியிருந்து மூன்று பேரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.  இது தவிர சென்னை கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் இவர்களது சம்பந்தம் உள்ளதாக தெரிகிறது.

© வேதபிரகாஷ்

17-11-2014

[1] http://www.hindustantimes.com/india-news/nia-bangladesh-s-rab-may-share-info-on-probe/article1-1285465.aspx

[2] http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[3] A NIA team led by Superintendent of Police Debojit Hazarika during their search in the village yesterday had directed the five to present themselves at the NIA office in Guwahati as they had attended a prayer meeting in a house in the village which was close to the one of Sahanur Alam, one of the main accused in the Burdwan blast case, they said.

http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[4] Batasi Begum is a close friend of Sahanur’s arrested wife Sujana Begum, they said adding, Rashid Ali Ahmed was called as many youths were missing from his Chatala village.

http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[5] In continuation of their search operation at Chatala village, the NIA searched Sahanur’s house yesterday (11-11-2014) for the third time, quizzed his father and brother about the accused. Alam is absconding and the NIA has recently declared a reward of Rs five lakh for anyone giving information leading to his arrest. Alam’s wife Sujana Begam was arrested in Guwahati on November 7 from the ISBT. So far eight persons, including Sujana and Sahanur’s brother Jakaria have been arrested in this connection.

http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[6] http://timesofindia.indiatimes.com/india/Sahanur-might-have-fled-to-Bangladesh-NIA-says/articleshow/45104798.cms

[7] The All India United Democratic Front (AIUDF) has slammed a criminal defamation case against a private news channel which had recently broadcast news about party’s alleged involvement with Jehadi elements.

http://twocircles.net/2014nov12/1415811473.html#.VGQtdPmSynU

[8] Meanwhile, the Badruddin Ajmal-led All India United Democratic Front (AIUDF) has filed a criminal case against a national TV channel on Monday. The party’s Dhubri district unit registered the case against the channel after accusing it of airing ‘defamatory’ content. Haidar Hussain Bora, an AIUDF leader, said, “A case has been registered. Seven officials of the TV channel have been accused of maligning the party’s image.”

http://timesofindia.indiatimes.com/india/Sahanur-might-have-fled-to-Bangladesh-NIA-says/articleshow/45104798.cms

[9] http://www.milligazette.com/news/11249-maulana-badruddin-ajmal-slaps-defamation-on-newsx-tv-channel

[10] http://twocircles.net/2014nov12/1415811473.html

[11] The New Delhi-based news channel, News X, claimed leaders of Assam’s All India United Democratic Front (AIUDF) and a leading Islamist organisation, Jamiat Ulama-e-Hind, had sent a group of youths from Sukchar area in the state’s Dhubri district for Jihadi training from terrorist organisations in Bangladesh’s Rangpur in June-July last year. http://bdnews24.com/bangladesh/2014/10/29/assam-youths-undergo-jihadi-training-in-bangladesh

[12] The channel, quoting intelligence reports, also said apart from the first batch of youths, the leaders of the AIUDF and the Jamiat Ulama-e-Hind personally handpicked the members of the second team that went to Bangladesh last November.

http://bdnews24.com/bangladesh/2014/10/29/assam-youths-undergo-jihadi-training-in-bangladesh

[13] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/bangladesh-outfit-trying-to-set-up-womens-wing-in-assam/article6565371.ece

[14] http://indianexpress.com/article/india/india-others/bjp-bajrang-dal-bandh-demanding-aiudf-leader-ajmals-arrest-cripples-life-in-assam/

[15] http://www.thehindu.com/news/national/other-states/aiudf-refutes-links-with-bangladesh-jihadi-groups/article6547627.ece

[16] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2830582/India-reveals-terror-plot-Bangladesh-tip-shows-terrorists-active-Jharkhand.html

[17] http://www.ndtv.com/article/india/nia-questions-soldier-who-reportedly-sheltered-key-burdwan-blast-suspect-619456

[18] After the blast in Burdwan on October 2, which was believed to be an accident, Sheikh reportedly fled to Delhi, where he was allegedly given shelter by the soldier. From Delhi, Sheikh reportedly escaped to Chennai through Basti in Uttar Pradesh. “The soldier helped Sheikh in this too,” sources said.

[19] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2830582/India-reveals-terror-plot-Bangladesh-tip-shows-terrorists-active-Jharkhand.html

[20] http://www.newindianexpress.com/nation/Police-Clueless-as-Terror-Trail-Leads-to-Chennai-Drug-Queen/2014/11/16/article2525871.ece

[21] NIA is looking for a “drug queen” from Kolkata, now reportedly based in Chennai. Gulshan Bibi, who fled to Chennai years ago, still runs, through remote control, the narcotics business and sleuths have found connections between her and Islamic terrorists, said NIA sources. However, the police in Chennai have no clue about the drug queen. But NIA sources in Kolkata said Gulshan provided shelter to two Jamaat-ul-Mujahideen (JUMB) terrorists, who visited Chennai before the May 1 blasts at the Central railway station. Sources said she conducted rave parties in resorts at Mahabalipuram on the East Coast Road. Besides young men and women working in various call centres, BPOs and KPOs, her clientele reportedly included members of the film industry. On August 12, 1993, Uttam Mondal, a CPM worker protested the presence of a narcotics den in an Urdu medium school in Dakshindari in eastern Kolkata. Mondal, who used to tutor poor students, was brutally killed for taking on the drug mafia. Gulshan was arrested but due to the intervention of a CPM minister, went scot free. With the NCB and the Kolkata police hot on her trail, she shifted to Chennai. With money power growing, she could reportedly bribe police not only in Tamil Nadu and West Bengal but also states along the Kolkata-Chennai train route.

[22] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=113757

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (7)

ஒக்ரோபர் 31, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (7)

பெண் ஜிஹாதிகலுக்கு madrasas பயிற்சி

பெண் ஜிஹாதிகலுக்கு madrasas பயிற்சி

சிமுலியா (பர்த்வான்) மற்றும் லால் கோலா (மூர்ஷிதாபாத்) என்ற இடங்களில் இருக்கும் மதரஸாக்கள், குண்டு தயாரிப்பு, விநியோகம் மற்றும் ஜிஹாத் வேலைகளில் பயிற்சி கொடுத்து வந்தன என்று ஊர்ஜிதம் ஆகியது. அங்கு, ஆண்களுக்கு மட்டுமல்லாது, பெண்களுக்கும் அத்தகைய பயிற்சிகள் கொடுக்கப்பட்டன[1]. அவ்வாறு பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 120-150-200 என்று பலவிதமாகக் கொடுக்கப் பட்டுள்ளன. முஸ்லிம் பெண்கள் இதில் இவ்வாறு எல்லாவித வேலைகளிம் ஈடுபட்டுள்ளது, போலீஸார், பாதுகாப்பு, மற்ற அதிகாரிகளுக்குப் பெருத்தப் பிரச்சினையாக இருக்கிறது. ஏனெனில், முஸ்லிம் சமூகத்தில் பெண்களை தனிமைப் படுத்தியுள்ளார்கள், பர்தா அணிந்துள்ளதால் அடையாளம் காண முடியாது, மேலும் வீடுகளில் சோதனை செய்ய வேண்டும் என்றால், பெரிய கலாட்டா-ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள்[2]. பெண்கள் ஜிஹாதிகளாக மாற்றப் படுவது, தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தப் படுவது போன்ற உண்மைகள் திடுக்கிட வைக்கின்றன. ஏனெனில், இதுவரை காஷ்மீர் வரையில் தான் அத்தகைய போக்கு காணப்பட்டது. ஆனால், அது மேற்குவங்காளத்தில் ஊரூன்றி விட்டது வியப்பாக உள்ளது,

Bangla link with Burdwan blast JMB

Bangla link with Burdwan blast JMB

அசாம், மேகாலயா மாநிலங்களிலும் ஊடுருவியுள்ள பங்களாதேச தீவிரவாதம்: பங்களாதேச மக்களின் ஊடுருவல்கள் 1947களிலிருந்து நடந்து வந்தாலும், 1970களில் அதிகமாகியது. ஆனால், 1980களில் மதரீதியில் முஸ்லிம் மக்கள் இடபெயர்ச்சி, குடியேற்றம் ஏற்பட்டது. 1990களில் அது தீவிரவாதத்திற்கு துணைபோகும் ரீதியில் மாறியது. 2000களில் அது நன்றாகவே வெளிப்பட்டது. ஜே.எம்,பி [Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB)] 2007ல் தடை செய்யப் பட்ட பிறகு, அது இந்தியாவில், குறிப்பாக பங்களாதேசத்தில் எல்லைகளில் உள்ள இந்திய மாநிலங்களில் ஊடுருவி, இந்திய பிரஜைகள் போல வாழ ஆரம்பித்தனர். இவர்கள் எல்லோருமே அந்நியர்கள் என்றாலும், போலீஸார் சோதனை, குடியேற்ற அலுவலக சரிபார்ப்பு என்ற எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை முதலியவற்றைப் பெற்று, “இந்திய குடிமகன்கள்” ஆகி, உள்ளூர் பெண்களை மணந்து கொண்டு, குடும்பம்-குட்டிகளுடன் தங்களை ஸ்திரப் படுத்திக் கொண்டனர். இதற்கு காங்கிரஸ், மார்க்சீய கம்யூனிஸ்டு மற்ற இடதுசாரி கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் என்று எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டு உதவினர். ஏனெனில், அவர்கள் அப்படியே ஒட்டு மொத்தமாக தேர்தலில் வாக்களிக்கிறார்கள் என்பதால், எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர். மற்றவர்கள் இதைப் பற்றி எடுத்துக் காட்டினாலும், அதிலுள்ள பயங்கரவாத, தீவிரவாதங்கள் இருப்பதைக் காட்டினாலும், செக்யுலரிஸம் என்றெல்லாம் பேசி அவர்களை ஊக்குவித்து வந்தனர். பலமுறை சில குழுக்கள் அசாமில் AIUDF, மேற்கு வங்காளத்தில் HUJI-B, போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளது என்றும், அவை Al-Qaeda வுடன் சம்பந்தப் பட்டுள்ளது என்றும், உரிய அரசாங்களுக்கு அறிவிக்கப் பட்டிருந்தாலும், அவை மெத்தனமாகவே செயல்பட்டுள்ளன.

Manisha Banerjee, Siddiqullah Chowdhury, Ashim Chatterje, Samir Puttunda, and others personalities in a protest convention of Jamiat-e-Ulama WB at Burdwan on 20 oct 2014

Manisha Banerjee, Siddiqullah Chowdhury, Ashim Chatterje, Samir Puttunda, and others personalities in a protest convention of Jamiat-e-Ulama WB at Burdwan on 20 oct 2014

பீர்பும் குண்டு தொழிற்சாலை தகவல், போலீஸார் சோதனை, போலீஸார் மீதே குண்டு தாக்குதல்: பீர்பும் கிராமத்தில் சௌபண்டல்பூர் என்ற இடத்தில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் படுவதாக தகவல் கிடைத்ததால், அசிரத்தையாக இருந்துவிடக் கூடாது என்று வெள்ளிக்கிழமை (25-10-2014) போலீஸார் அங்கு சென்று சோதனையிட்டபோது, திடீரென்று ஒரு கும்பல் போலீஸாரைத் தாக்க ஆரம்பித்தது[3]. அதாவது, போலீஸாருக்குக் கூட பயப்படாத கூட்டத்தினர் அங்குள்ளனர் என்று தெரிகிறது. பதிலுக்கு போலீஸார் தாக்க, எதிர்பார்க்க முடியாத நிலையில் குண்டுகள் எரியப்பட்டன[4]. இதுவும் போலீஸார் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அங்கு குண்டுகள் உள்ளன என்பது ஊர்ஜிதமாகி விட்டது. ஒரு போலீஸ் அதிகாரியின் (புரோசேன்ஜித் என்பது அவர் பெயர்) மீது குண்டு எரியப் பட்டதில், அவரும் நான்கு போலீஸார் காயமடைந்தனர்[5]. இதனால், கோபமடைந்த பொலீஸார், பதிலுக்கு அவர்களைத் தாக்க ஆரம்பித்தனர். தாக்கியர்வர்கள், குறிப்பிட்ட வீடுகளில் பதுங்கிக் கொண்டதால், போலீஸார் அவ்வீடுகளை நோக்கிச் சென்றனர், சோதனையிட முயன்றனர். ஆனால், அவர்கள் அதற்கு ஆட்சேபித்தனர். இதற்குள், ஆளுங்கட்சியினர்-(திரிணமூல் காங்கிரஸ்) வந்து, அவர்களும் எதிர்த்தனர். இருப்பினும், சோதனையில் சில வீடுகளில் குண்டுகள் கண்டெடுக்கப் பட்டன. இங்கு 1000ற்கும் மேலான குண்டுகள் கண்டெடுக்கப் பட்டன. ஆக, இப்பகுதியில் வெடுகுண்டுகள் தயாரிக்கப்படுவது தெரிந்து விட்டது. இங்கும் ஒரு குண்டு தொழிற்சாலை இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கபடுகிறது[6].

he girls Madrasa at Simulia village under Mangalkot PS of Burdwan, alleged terror training centre

he girls Madrasa at Simulia village under Mangalkot PS of Burdwan, alleged terror training centre

பிஜேபிகாரர்கள் கைது: 25-10-2014 (வெள்ளிக்கிழமை) என்று போலீஸார் தங்களைத் தாக்கியதாக, கிராமத்தினர் புகார் அளித்தனர்[7]. பொலீஸார் சாதாரண உடையில் வந்து வீடுகளில் புகுந்து அடித்து நாசம் செய்ததாக புகார் கூறினர். இது ஆளும் கட்சியினர் தூண்டுதல் பெயரில் என்று சொல்லப்படுகிறது. ஆனால், போலீஸார் மறுத்து, தாங்கள் தாம் தாக்கப் பட்டனர் என்று மற்றவர்கள் மீது பழியைப் போட்டனர். புரோசேன்ஜித் காயத்துடன் இருந்த காட்சிகள் டிவிசெனல்களில் காட்டப்பட்டது. ஆனால், திடீரென்று ஐந்து பிஜேபிக்காரர்கள் கைது செய்யப் பட்டனர்[8] என்று சில செய்திகள் குறிப்பிடுகின்றன.  இதற்குள் கைது செய்யப்பட்ட ஐந்து பேர்கள் பெயர்கள் –

  1. ஹாவிஸ் மொல்லாஹ் [Hafiz Mollah],
  2. நூரி ஆலம் [Nure Alam],
  3. நூர் ஹுஸைன் [Nur Hossain],
  4. செயிக் ஷமீம் [Seikh Shamim]
  5. மொஜாமெல் ஹக் [Mojammel Haque]

ஆனால், போலீஸார் இவர்களை பெயிலில் அடைக்காமல், நீதிமன்ற காவலில் வைக்க ஏற்பாடு செய்துள்ளது[9].  அவர்கள், பிஜேபிக்காரர்களா என்று கேட்டதற்கு, போலீஸார், “இருக்கலாம்” என்கின்றனர்! இந்த ஐந்து பேர்களும், அந்த ஐந்து பேர்களா என்ற சதேகமும் எழுகிறது. ஏனெனில், பிஜேபிகாரர்கள் எனப்படுகின்ற அவர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றனர். முஸ்லிம்கள் பிஜேபியில் இருக்கக் கூடாது என்பதில்லை, ஆனால், மேற்கு வங்காளத்தில் உடனடியாக அவர்களை ஆதரிக்கும் அளவிற்கு உறுப்பினர்களாகி விட்டார்களா என்ற சந்தேகம் எழுகின்றது. ஆகவே, இது அரசியல் ஆக்க, அவ்வாறு செய்தி கொடுக்கப் பட்டது என்றாகிறது. பரூய் குண்டு தாக்குதலில் 43 நபர்கள் மீது புகார் கொடுத்துள்ளது[10].

Locked Madrasa at Simulia village

Locked Madrasa at Simulia village

பிஜேபிதிரிணமூல் வாய்சன்றை மற்றும் அடிதடி, சாவு: பிஜேபிக்காரர்கள் கைது என்றதும், அதன் தலைவர்கள் மறுத்து, திரிணமூல் கட்சியினர் தான் தீவிரவாதிகளுக்கு உதவி வருகின்றனர், வாக்காளர் அட்டைகள், ரேஷன் கார்டு முதலியவை கொடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளை வைத்தனர். பிஜேபி மற்றும் ஒரு திரிணமூல் கட்சிக்காரர்கள் ஒருவர்மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுகளைச் சொல்லி, போட்ட வாய்ச்சண்டை அதிதடியில் முடிந்தது. போலீஸார் ஆளும் கட்சிக்கும் சாதகமாக இருப்பதால், கலவரம் உண்டாகும் நிலை ஏற்பட்டது.டாப்படித்தான், திங்கட் கிழமை (27-10-2014) வாக்குவாதம் சண்டையில் முடிந்தது. இதனால் பிஜேபி மற்றும் ஒரு திரிணமூல் கட்சிக்காரர்கள் அதில் பீர்பும் [Birbhum] கிராமத்தில் நடந்த சண்டையில் இரண்டு பிஜேபி மற்றும் ஒரு திரிணமூல் கட்சி தோண்டர்கள் என்று மொத்தம் மூன்று பேர் கொல்லப்பட்டனர், என்று பிறகு செய்தி வந்தது.

Burdwan blast -Subramanian swami photo

Burdwan blast -Subramanian swami photo

யூசுப் செயிக், முக்கியக் குற்றவாளி நேபாளத்தில் கைது: யூசுப் செயிக் என்ற பெல்டெங்காவைச் (மூர்சிதாபாத், மேற்கு வங்காளம்) [Yusuf Saikh, a resident of Beldanga in West Bengal’s Murshidabad district] சேர்ந்தவன், நேபாளத்தில் கக்ரபிட்ரா என்ற இடத்தில் 27-10-2014 (திங்கட்கிழமை) அன்று கைது செய்யப்பட்டான்[11]. இவன் தான் “பர்தவான் குண்டு தொழிற்சாலை” வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியமான குற்றவாளி[12]. ஏற்கெனவே, யூசுப் செயிக்கின் இரண்டு உறவினர்கள் என்.ஐ.ஏ விசாரணையின் போது கைது செய்யப் பட்டனர். யூசுப் செயிக்கிடம் விசாரணை நடத்தியபோது, இவனும், இவன் கூட்டாளியும் 2013-14 வருட காலத்தில் நூற்றுக்கணக்கான குண்டுகளை பர்தவான் மதரஸா தொழிற்சாலையில் உற்பத்தி செய்து, பங்களாதேசத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறான் என்று தெரியவந்துள்ளது[13]. அப்படியென்றால், மேற்கு வங்காள பொலீஸார், உளவுத்துறையினர், தீவிரவாத எதிர்ப்பு-பாதுகாப்புத் துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது. இந்திய முஜாஹித்தீன் வழிமுறைகளை இவர்கள் அப்படியே பின்பற்றும் போக்கு தெரிகிறது.

மேற்கு வங்காளத்தில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பது யார்?: யாசின் மாலிக்கை 2009ல் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் போலி நோட்டுகளை வைத்திருந்தான் என்பதற்காக சிறப்பு போலீஸ் படையினரால் பிடிபட்டாலும், அவனது அடையாளம் தெரியாமல் போலீஸார் விட்டுவிட்டனர்[14] என்பதால், ஒன்று தீவிரவாதிகளைப் பற்றிய விவரங்கள் கொல்கொத்தா போலீஸாருக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் அல்லது தெரிந்தும் தெரியாதது போல விட்டிருக்க வேண்டும். முதல் வாதம் வாய்ப்பிலை என்பதால், இரண்டாவது விசயத்தை ஆராயும் போது, இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட, முஸ்லிம்களுக்கு சாதகமாக இருக்கின்ற, மதரீதியிலான சித்தாந்தத்தை ஆதரிக்கின்ற அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றவர்கள் ஆதரவாக இருக்கின்றார்கள் என்றாகிறது. இதனால் தான் இவ்விசயத்தில் ஆரம்பத்திலிருந்தே திரிணமூல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்பு: மேலும் அந்த பர்கா / குண்டு தொழிற்சாலை கட்டிடத்தில் திரிணமூல் கட்சி அலுவலகம் இருந்தது மற்றும் அவர்களது “கட்சிச் சின்னம், பெயர், முகவரி” கொண்ட போர்ட் கடிடத்தின் முகப்பில், பர்கா தொழிற்சாலைக்கு மேலே இருந்தது, ஆனால், குண்டுவெடிப்பு நடந்தவுடன், அந்த போர்ட் எடுக்கப் பட்டு விட்டது. ஆயிரக்கணக்கான குண்டுகள் தயாரிப்பது, அவற்றை ஒரு நாட்டிலிருந்து, இன்னொரு நாட்டிற்குள் எடுத்துச் செல்வது என்பது சாதாரண விசயம் அல்ல. அப்படியென்றால், இந்தோ-பங்களாதேச எல்லைகள் அந்த அளவிற்கு, திறந்துள்ளன அல்லது சோதனைகள் ஒழுங்காக நடத்தப் படுவதில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து இஸ்லாமிய தீவிரவாதிகள், போதை மருந்து கடத்தல் மற்றும் வியோக்கிக்கும் கூட்டத்தினர், செக்ஸ்-குற்றங்கள் செய்பவர்கள் என்று பலவித சட்டமீறல் மற்ற அகில் உலகக் கூற்றவாளிகள் போன்றவர்களுக்கு நேபாளம் புகலிடமாக இருப்பது, இந்தியாவிற்கு பெருத்தத் தலைவலையாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

30-10-2014

[1] http://news.oneindia.in/india/burdwan-blasts-women-taking-bomb-making-lesssons-wb-madrasas-1548388.html

[2] The role of women that comes as a surprise to investigators has created problems in plenty for the security agencies, as by virtue of being a closed society it is not easy to check and apprehend women.

http://www.dnaindia.com/india/report-both-the-madrasas-were-teaching-bomb-making-to-women-2030054

[3] Prosenjit Dutta, the OC of Parui Police Station, was injured on Friday when bombs were thrown at his team who had gone to Chakmondola village to inquire about bombs being illegally manufactured there.

http://zeenews.india.com/news/west-bengal/police-party-attacked-in-west-bengals-birbhum-4-injured_1490178.html

[4] http://www.dnaindia.com/india/report-violence-in-birbhum-district-of-west-bengal-police-vehicle-allegedly-bombed-2029557

[5] http://zeenews.india.com/news/west-bengal/police-party-attacked-in-west-bengals-birbhum-4-injured_1490178.html

[6] http://indianexpress.com/article/india/india-others/the-bomb-trail-in-bengal/

[7] Residents of Choumandalpur, the Birbhum village where bombs and bricks were hurled at police yesterday, have alleged that over 100 cops armed with scythes and axes tortured them and vandalised their homes in a late-night retribution. “Most of the policemen were not in uniform. They hurled expletives, beat us up and threatened to kill us. Even women were not spared,” said Hafizur Rahman, a marginal farmer.

http://www.telegraphindia.com/1141026/jsp/bengal/story_18966039.jsp#.VE41svmSynU

[8] The Telegraph, Calcutta, Sunday , October 26 , 2014

[9] The investigation officer charged the five with attempt-to-murder, but did not seek police custody when they were produced in Suri court. “The judge remanded them in jail custody for 15 days because the investigating officer did not ask for police remand. However, police can ask for their custody during the course of investigation while the accused are in jail,” government lawyer Bikash Paitandi said. The suspects — Hafiz Mollah, Nure Alam, Nur Hossain, Seikh Shamim and Mojammel Haque — have also been charged with criminal intimidation and attempt to deter a public servant from discharge of duty, apart from the Arms Act. All the charges are non-bailable. “Police have filed a suo motu complaint against 43 people in the Parui bomb attack case,” Paitandi said.

[10] http://timesofindia.indiatimes.com/city/kolkata/Parui-OC-attack-Police-dont-seek-suspects-custody/articleshow/44936189.cms

[11] http://www.firstpost.com/india/burdwan-blast-29-year-old-youth-arrested-nepal-1775635.html

[12] http://www.business-standard.com/article/news-ians/burdwan-blast-youth-arrested-from-nepal-114102800021_1.html

[13] http://timesofindia.indiatimes.com/videos/news/Burdwan-blast-probe-Shaikh-Yusufs-arrest-from-Nepal-deepens-plot/videoshow/44958590.cms

[14] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2787086/West-Bengal-India-s-new-terror-haven-Bangladesh-border-creates-major-channel-militants-fake-currency.html

மதரஸாக்களில் என்ன நடக்கின்றன – அவை மன-நோய், மனச்சிதைவு, முதலியவற்றை தீர்க்கின்றனவா அல்லது அதை துர்பிரயோகத்திற்கு உபயோகப்படுத்துகின்றனவா?

திசெம்பர் 15, 2011

மதரஸாக்களில் என்ன நடக்கின்றன – அவை மன-நோய், மனச்சிதைவு, முதலியவற்றை தீர்க்கின்றனவா அல்லது அதை துர்பிரயோகத்திற்கு உபயோகப்படுத்துகின்றனவா?

மதரஸாவில் நடந்த ரெயிட்/அதிரடி சோதனை: பாகிஸ்தான் தலைநகரமான கராச்சியில், சோரம் கோத் என்ற இடத்தில் மசூதிக்குப்பக்கத்தில் இயங்கி வரும் ஒரு மதரஸாவிலிருந்து 50ற்கும் மேற்பட்ட 10-14 வயது சிறுவர்கள், 15-30 வயது இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்[1]. ஜக்கரியா மதரஸா என்ற இஸ்லாமிய மத போதனை செமினரி / பள்ளிக்கூடம் / குருகுலம் இயங்கி வரும் இடத்தைச் சுற்றியுள்ளவர்களுக்கு அங்கிருந்து வினோதமான சப்தங்கள் வருவதினால் சில சந்தேகங்கள் ஏற்பட்டதால், அவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்[2]. அதன்படி, 12-12-2011 (திங்கட்கிழமை இரவு) அன்று அந்த ஜக்காரியா மதரஸாவின் அடித்தளத்தை போலீஸார் அதிரடியாக சோதனையிட்ட போது, சிறு-சிறு புறாக்கூண்டுகள் போன்ற அறைகளில் சங்கிலிகளால் கட்டுண்ட, அடிபட்ட, மனநிலை சமமாக/சரியாக இல்லாத, போதை மருந்துக்குட்பட்ட, சித்திரவதை செய்யப்பட்ட என்ற பலர் காணப்பட்டனர்[3]. உடனடியாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்டவர்களின் மனோநிலை: இலவசமாக இஸ்லாம் மதக்கோட்பாடுகள் சொல்லித்தரப்படும் என்று அவர்கள் அங்கு சேர்க்கப்பட்டிருக்கிறார்களாம். ஆனால், அவர்களை சங்கிலியிலால் பிணைக்கப்பட்ட நிலையிலும், அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையிலும், செக்ஸ் தொல்லைக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது பிடோபைல் போன்ற தொந்தரவு / வழக்கம் பின்பற்றப்பட்டதா அல்லது, அந்த சிறுவர்கள்-இளைஞர்கள் அவ்வாறு துர்பிரயோகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டனரா என்று ஆராய வேண்டியுள்ளது. அவர்கள் விடுவிக்கப்பட்டதும் பாடி-ஆட ஆரம்பித்து விட்டனர். அவர்கள் எல்லோருமே மன-அளவில் பாதிக்கபட்டவர்கள் என்று தெரிந்தது[4]. இதே மாதிரியான அடைத்து வைக்கப்பட்ட சிறுவர்கள்-இளைஞர்களின் நிலை முன்பு மூல்தான், சிந்த், கைபர் பக்துன்ங்வா முதலிய இடங்களிலிலும் கண்டறியப்பட்டன.

மதரஸாக்கள் என்ன செய்கின்றன?: அரசு புள்ளி விவரங்களின் படி, 15,000ற்கும் மேற்பட்ட மதரஸாக்கள் பாகிஸ்தானில் இயங்கி வருகின்றன. அவை சுமார் 2 மில்லியன்கள் – 20,00,000 அதாவது 20 கோடி மாணவர்களுக்கு இத்தகைய இஸ்லாம் மதகோட்பாட்டு கல்வி கொடுத்து வருகின்றன. மக்கள் மற்ற பள்ளிகளுக்கு தங்களது சிறுவர்களை அனுப்பினால் செலவாகும் என்பதினாலும், தீவிரவாத கொள்கைகளில் பிடிப்புள்ளதனாலும், கல்வி, உணவு இலவசம் என்பதினாலும் பெற்றோர்கள் அனுப்பிவைப்பதாக தஎரிகிறது. இத்தகைய மதரசாக்கள் அரசின் கட்டுப்பாடுகள், விதிகள் முதலியவற்றில் இல்லாமல் சுதந்திரமாக இயங்கி வருகின்றன என்று மனித உரிமை மற்றும் சமூக சேவகர்கள் கூறுகிறார்கள். நாஸிஸ் புரோஹி என்ற சமூகவியல் ஆர்வலர், அடிப்பது, தண்டிப்பது முதலியன சட்டப்படி குற்றம் என்றாலும், இத்தகைய பள்ளிகள், மதரஸாக்களில் சாதாரண விஷயங்களாக இருக்கின்றன என்கிறார்[5].

மூளைச்சலவை ஏன் செய்யப்படுகிறது?: மதரஸா ஜக்கரையாவின் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர்[6]. உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அமைசர் ரஹ்மான் மாலிக், “அவர்கள் மூளசலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சமூகத்திலுள்ள மற்ற மக்களின் மீதான எதிர்ப்புத்தன்மை முதலியவற்றை அறிந்து கொள்வது கடினம். அவர்களை மிருகங்களைப் போலக் கட்டிவைத்துள்ளார்கள்”, என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்[7]. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு, போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது என்றால், அவர்கள் ஏன் “மூளைச்சலவை” செய்யப்படவேண்டும்? இன்றைய நிலையில் “சிக்ஸோபிடனியா” என்ற சாதாரண நிலைகளுக்கே மருத்துவர்கள், ஆஸ்பத்திரிக்களில், விஞ்ஞான ரீதியில் சிகிச்சை அளிக்கிறார்கள். பிறகு, மதரஸாக்களில் கட்டிப் போட்டு அடித்தால், அவர்கள் குணமாவார்களா? அல்லது இதன் பின்னணி என்ன?

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறியப்பட்ட விஷயங்கள்: தீவிரவாத, பயங்கரவாத இயகங்களுக்கும், இந்த மதரஸாவிற்கும் தொடர்பு இருக்குமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். அடைப்பட்டுள்ளவர்களை கேட்டபோது, அவர்கள் பலவிதமான விவரங்களைக் கூறியுள்ளது திகைப்படையச் செய்துள்ளன[8]:

  1. எங்களுக்கு ஜிஹாத் போதிக்கப் படுகிறது. புனித போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
  2. வடமேற்கிலிருந்து தாலிபான்கள் எங்களை தயார்படுத்து அழைத்துச் செல்கிறார்கள் என்று சிலர் கூறியுள்ளனர். எங்களை ‘முஜாஹித்தீன்’களாக மாற்றுகிறார்கள் என்று பாகிஸ்தானின் ஜியோ டிவிக்கு பேட்டி கொடுத்துள்ளனர்[9].
  3. எங்களுக்கு சாப்பாடே சரிவர கொடுப்பதில்லை, அடைத்து வைத்து அடிக்கிறார்கள். எங்கள் பொற்றோர்களைப் பார்க்கக் கூட அனுமதிப்பதில்லை.
  4. முப்பது நாட்களுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வெயிலையே பார்க்காமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
  5. மாறாக, பெற்றோர்கள் தாம் அவர்களை அங்கு சேர்த்துள்ளனர். அவர்கள் சில குற்றங்களில் அகப்பட்டுள்ளதால், தப்பிவிடாமல் இருக்க பிணைத்து வைத்துள்ளோம் என்று மதரஸாவில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
  6. போதை மருந்துக்குட்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சிகிச்சையளிக்க அழைத்துவரப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
  7. ஹெராயின் போன்ற போதை மருந்துகளுக்கு அடிமையான அவர்கள் தப்பித்து விடக்கூடாது என்றுதான் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டுள்ளார்கள்.
  8. ஆனால் மருத்துவ ரீதியில் சிகிச்சையளிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் எதுவுமே அங்குக் காணப்படவில்லை.
  9. தனித்தனியாக கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டவிதம், சங்கிலிகளால் பிணைத்து வைக்கப்பட நிலை, கை-கால்களில் அடி-காயம் முதலியவை இருப்பது, சரியான பேச்சில்லாமை அல்லது முன்னுக்கு முரணாக பேசுவது முதலியன சந்தேகங்களை எழுப்புவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
  10. சமூகத்தில் கீழுள்ளவர்கள்[10] இவ்வாறு நடத்தப் படுகிறார்கள் என்று “டான்” பத்திக்கைக்கூறுகிறது. அப்படியென்றால், இவர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது[11].

மதரஸாக்கள்: மதரீதியில் இயங்குகின்றனவேயன்றி, பொது காரணங்களுக்கக இயங்குவதில்லை: பாகிஸ்தானின் “டான்” என்ற பத்திரிக்கை, ஏன், எதற்காக, எவ்வாறு இப்படி முஸ்லீம் சிறுவர்கள்-இளைஞர்கள் போதை மருந்து, மன-நோய், மனச்சிதைவு முதலிய தவறுகளுக்கு-குற்றங்களுக்கு அடிமையாகிறார்கள் என்று அலசியுள்ளது. ஆனால், மற்ற சமுகங்களைப் போல பொதுவான காரணங்களையே கூறியுள்ளது[12]. ஒரு இஸ்லாமிய சமூகத்தில், இஸ்லாம் அடிப்படவாதம் போற்றும் நாட்டில், எப்படி அதுவும் இஸ்லாம் போதிக்கும் மதரஸாக்களில் அத்தகைய சீரழிவுகள் ஏற்படமுடியும் என்ற முக்கிய விஷயத்தை தவிர்த்து மற்ற பொதுகாரணங்களின் மீது முடிவாக தீர்வைக் காணுவது வேடிக்கையாக உள்ளது[13].

வேதபிரகாஷ்

15-12-2011


[10] …………….“detoxification/rehabilitation” center for the underprivileged people, located in the outskirts of Karachi.

http://www.dawn.com/2011/12/14/spiritually-healed-or-derailed.html

[11] ‘Privileged addicts’ are however, given the best of facilities which include a diet and exercise regime to assist them in staying sober and straight. There are various not-for-profit organisations operating in Pakistan specialising in the causes to eradicate addictions from our society, however how many of those are actually working to constructively assist  the underprivileged and needy addicts remain ambiguous.

http://www.dawn.com/2011/12/14/spiritually-healed-or-derailed.html

The debate entailing whether these Medressahs are helping the underprivileged or taking advantage of their poverty and ignorance is a moot point. However, the will to change and challenge the current situation by questioning the governance of our religious clerics and many such seminaries should top the government’s agenda.

http://www.dawn.com/2011/12/14/spiritually-healed-or-derailed.html

காஷ்மீர் ஜிஹாதிகளின் அனைத்துலக தீவிரவாத மையமாகிறதா?

ஒக்ரோபர் 24, 2011

காஷ்மீர்  ஜிஹாதிகளின் அனைத்துலக தீவிரவாத மையமாகிறதா?

   


பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஜிஹாதில் ஈடுபடுவது: இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் சிமி முதலியன தடை செய்யப் பட்ட பிறகு, பல அவதாரங்களில் செயல்பட்டு வருகின்றன. அரேபிய நாடுகளில் மக்களாட்சி என்ற கொள்கையில் ஈர்க்கப்பட்டு, முஸ்லீம்களே வீதிகளில் வந்து போராடி வருகின்ற நேரத்தில், எங்கே தங்கள் செல்வாக்கு போய்விடுமோ என்ற பயத்தில், மென்மையான இலக்குகளில் ஒன்று என்று கருதப்படும் இந்தியாவில் தமது குண்டு வெடிப்புகளை அவ்வப்போது, ஜிஹாதிகள் செய்து வருகின்றனர். அத்தகைய அந்நியநாட்டு ஜிஹாதிகள் “இந்தியன் முஜாஹிதீன்” என்ற பெயரில் கடந்த ஆண்டுகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தி, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை ஈவு-இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தனர். “உள்ளுக்குள் வெடித்து சிதறவைக்கும் வெடிகுண்டு வகையில் குண்டு”களைத் தயாரிப்பது, குண்டுகளை தேர்ந்தெடுத்த இடங்களில் வைப்பது, டைமர் மூலம் வெடிக்க வைப்பது, ஊடகங்களுக்கு இ-மெயில் அனுப்பித் தெரிவிப்பது முதலிய செயல்பாட்டினை அதில் காணலாம். இருப்பினும், இத்தகைய தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் சிறுவர்கள்-இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்களே என்று முஸ்லீம் சமூகத்தில் உள்ள பெரியவர்கள் கண்டிப்பதாகவோ, தடுப்பதாகவோ தெரியவில்லை. ஆனால், சில இயக்கங்கள் அவர்களை தேர்ந்தெடுத்து, ஊக்குவித்து, குடும்பதிலிருந்து பிரித்து, மற்ற ஆசைகளைக் காட்டி அத்தகைய செயல்களில் ஈடுபடுத்தி வருவதைக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் ஜிஹாதிகளால், தாலிபான்களால் உபயோகப்படுத்தப் படும் அதே முறையை, பயிற்சியை அவர்களுக்கு அளிக்கிறார்கள்.

முஸ்லீம் அடையாளங்களை மறைத்து செயல்படுவது: கசாப்பின் வேஷத்தைப் பற்றி முன்பொரு பதிவில் விளக்கியிருந்தேன். அவன் அழகாக மழித்துவிட்டு / சேவ் செய்துவிட்டு, நீல நிறம் ஜீன்ஸ்-சர்ட் போட்டுக் கொண்டு, நெற்றியில் குங்குமம், கையில் கயிறு சகிதம் வந்து, வழியில் உள்ளவர்களிடம் “நமஸ்தே” என்று குசலம் விசாரித்து, பிறகு தான், தன்னுடைய குரூர உருவத்தைக் காட்டி சுட்டுக் கொள்ள ஆரம்பித்தான். அதே முறை தான் காஷ்மீரத்தில் சில தீவிரவாதிகளைப் பற்றி விசாரித்தபோது அம்முறை அங்கும் செயல்படுத்தப் படுவதைக் காணலாம்.அதனால் தான்  இக்காரியங்களில் இளைஞர்கள் மற்றும் இளைஞ்சிகள் பயன்படுத்தப் படுகின்றனர். அதிலும் குறிப்பாக படித்தவர்கள், தாடி-மிசை-குல்லா என்று இஸ்லாத்தை அடையாளம் காட்டாத, அவையெல்லாம் இல்லாமல், அழகாக ஜீன்ஸ்-குள்ளசர்டுகளைப் போட்டுக் கொண்டு ராஜா, தேவ் ….. போன்ற இந்து பெயர்களையும் சேர்த்துக் கொண்டு செயபட்டு வருகிறார்கள். அதற்கு முன்பு, அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, பயிற்சி கொடுக்கப் பட்டு, ஜிஹாதி என்ற “புனிதப் போரை” நடத்த மூளைசலவை செய்து தயார்படுத்துகின்றனர்.

இ-மெயில்களில் விளையாடும் இளம் தீவிரவாதிகள்: இ-மெயில்கள் மூலம் திசைத்திருப்ப அல்லது சாட்டரீதியாக வழக்குகளை பலமிழக்க வேண்டுமென்றே பல இடங்களிலிருந்து இ-மெயில்கள் அனுப்பப்படுவது, அதற்கு ஊடகங்கள் துணைபோவதும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் சுப்ரீக் கோர்ட் வளகத்தில் குண்டு வெடித்த பிறகு பல இ-மெயில்கள் அனுப்பப்பட்டன. இரண்டாவது மற்றும் நான்காவது இ-மெயில்கள் கொல்கத்தாவிலிருந்து ஒரு டிவி செனலுக்கு Chottuminaliayushman@gmail.com என்ற பெயரில் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது[1]. அதே நேரத்தில் இரண்டாவது இ-மெயில் கிஸ்த்வார், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்தது என்றும் செய்தி வந்துள்ளது[2]. இன்னொரு இ-மெயில் அஹமதாபாதிலிருந்து “சோட்டு” [Chhotoo Minani Ayushman[3]] என்ற பெயரில் அனுப்பட்டது[4]. மூன்றாவது இ-மெயில்சஹீத் அலி ஹூரி என்ற பெயரில், இந்தியன் முஜாஹிதீன் தரப்பில் URL|killindian@yahooID என்ற அடையாளத்தில் அனுப்பப்பட்டுள்ளது[5]. இரண்டு இடங்களிலிருந்து வந்ததாக உள்ள இ-மெயில்களை ஆராய்ந்தபோது, அவை ஆசம்கர், உத்திரபிரதேசம் மற்றும் காக்ஸ் பஜார், பங்களாதேசம் என்ற ஊர்களிலிருந்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் ஹுஜியின் பயிற்சி முகாம்கள் இருக்கும் இடங்கள் ஆகும். இதிலிருந்து தான், ஹுஜியின் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது[6].

எட்டாவது படிக்கும் அமீர் அப்பாஸ் ஹுஜியின் சார்பாக இ-மெயில் அனுப்பினான்: டில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி அன்று நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் இறந்தனர்[7]. இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுப்பிரிவு காவல்துறையினர் [The National Investigation Agency (NIA)] தீவிர விசாரணை நடத்தி காஷ்மீரைச் சேர்ந்த அமீர் அப்பாஸ் தேவ் என்ற 8- ஆம் வகுப்பு மாணவன் உள்பட 3 பேரை அக்டோபர் 7ம் தேதி கைது செய்தனர். கைதான மாணவன் அமீர் குண்டு வெடிப்பு பற்றிய தகவல்களை பத்திரிகை அலுவலங்களுக்கு ஹுஜியின் சார்பாக [Bangladesh-based Harkat-ul-Jihad-e-Islami (HuJI)] இ-மெயில் அனுப்பியது தொடர்பாக அவனை காவல்துறையினர் கைது செய்தனர்[8]. கைதான மாணவர் அமீர் அப்பாஸ் தேவ் நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற காவலில் காவல்துறை விசாரணையில் இருந்து வருகிறார்.  இதற்கிடையே மாணவனின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அவனிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால், அவனுக்கு காவலை நீட்டித்து தரவேண்டும் என்று சிறப்பு பாதுகாப்பு படையினர் நேற்று அவனை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று மாணவன் அமீரின் நீதிமன்ற காவலை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.எஸ்.ஷர்மா 7 நாட்கள் நீட்டித்து அதாவது வரும் 14- ஆம் தேதி வரை காவல்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

   

திட்டமிட்ட யுனானி மருத்துவர் காஷ்மீரிமாணவர் வாசிம் அக்ரம் மாலிக்[9]: இந்த நிலையில், காவல்துறை விசாரணையில் டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு வந்த வங்காளதேசத்தில் யுனானி மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் காஷ்மீரி மாணவர் வாசிம்அக்ரம் மாலிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. செப்டம்பர் 7 அன்று வாசிம் டில்லியில் இருந்துள்ளான்[10]. அதைத்தொடர்ந்து அவனை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு சிறப்பு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மாணவரை இந்தியா-வங்காள தேச எல்லையான டாகா அருகே அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்து, இந்திய பாதுகாப்பு படையினரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

   

வீட்டில் மொபைல் போன்கள் ஆவணங்கள் சிக்கின: இதில், முக்கிய மூளையாக செயல்பட்ட கிஷ்த்வாரைச் சேர்ந்த இளைஞர் வாசிம் அகமதுவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பினர், சிறப்பு விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலை ஜம்முவுக்கு வந்தனர். அன்கிருந்து கிஷ்த்வாருக்கு ஹெலிகாப்டரில் சென்று, வாசிம் அகமது வீட்டில் சோதனை நடத்தியபோது. மூன்று மொபைல்போன்கள், மற்றும் சில ஆவணங்களைக் கைப்பற்றினர்[11]. குறிப்பாக பணம் பட்டுவாடா செய்ய விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் சிக்கின[12]. இவற்றுக்கும், டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பிற்கும் முக்கிய தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பற்றிய முக்கிய விவரங்கள் ஓரிரு நாளில் வெளிவரும் என தெரிகிறது. மேலும், இதுவரை நடந்த விசாரணையில், இந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பிற்கு தொடர்பு உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது[13]. இருப்பினும் வாசிம் அக்ரத்தின் பெற்றோர் அவன் குற்றமற்றவன் என்று வாதிடுகின்றனர்[14]. இரண்டு பேர்களில் யார் இ-மெயில் அனுப்பியது என்று என்.ஐ.ஏவால் சொல்லமுடியவில்லை என்றும் வாதம் உள்ளது[15].

   
   

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி அஷர் அலி சொன்ன விவரங்கள்: டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தீவிரவாதிகளுடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்த பாகிஸ்தானை சேர்ந்த அவரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த அஷர் அலி என்பவர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்று காவல்துறையினரிடம் அக்ரம் தெரிவித்தார். அவர் தற்போது காஷ்மீர் மாநிலத்தில் கோத்பால்வால் சிறையில் உள்ளார். அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அஷர் அலியிடம் விசாரித்தபோது, வாசிம் அக்ரமின் சகோதரன் ஜுனைத் என்பவனும் தீவிரவாத குழுவில் உள்ளான் என்று தெரிவித்தான். படித்துக் கொண்டிருந்த அவன் திடீரென்று காணாமல் போய்விட்டதால், அவனது பெற்றோர் போலீஸாரிடம் புகாரும் கொடுத்துள்ளனர்[16]. இப்படி இரண்டு மகன்களும் தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிடுவது எப்படி என்று தெரியவில்லை[17].

பல காதலிகளுடன் பேசிக் கொண்டே, ஜிஹாதியைப் பற்றியும் படித்த வாசிம் அக்ரம் மாலிக்: வாசிம் அக்ரம் மாலிக்கிடம் போலீஸார் விசாரித்தபோது அவன் சொன்ன விவரங்கள், எவ்வாறு இளைஞர்கள் ஜிஹாதிகளால் மூலைசலவை செய்யப்படுகிறது என்று தெரிகிறது. துப்பாக்கியை எடுத்துக் மொண்டு காஷ்மீர் காடுகளில் திரிந்து தான் ஜிஹாத்தில் ஈடுபட வேண்டும் என்பதில்லை. பல கார்ல்-ஃபெரெண்டுகளுடன் / பண் நண்பர்கள் / காதலிகள் ஃபேஸ்புக்கில் ஒரு கம்ப்யூட்டரில் பேசிக்கொண்டே, இன்னொரு கம்ப்யூட்டரில் அல்லது வின்டோவில் ஒசாமா பின் லேடன், அயம் அல் ஜவஹிரி, அன்வர் அல் அவ்லகி போன்ற ஜிஹாதி தலைவர்களைப் பற்றியும் விவாதிக்கும் திறன் கொண்டவன் என்று விளாக்கினான்[18]. அதாவது மனத்தை எவ்வாறு மாற்றி, பதப்படுத்தி, சித்தாந்த ரீதியில் தாங்கள் செய்வது ஒன்றும் தவறில்லை என்ற நிலைக்குக் கொண்டு வந்து, பிறகு குண்டுகளை வைத்து, வெடிக்கப் பயிற்சிக் கொடுக்கப்படுகிறது[19]. ஆகவே, முஸ்லீம் பெற்றோர்கள், பொறுப்புள்ள பெரியோகள் இவ்வாறு முஸ்லீம் இளைஞர்கள் மாறுவதை கண்டு பிடித்து தடுக்க வேண்டும், ஏனெனில் நாளைக்கு அவர்கள், தங்கள் சமூகத்தையே அழிக்க முற்பட்டாலும், முற்படலாம். அதாவது “ஜிஹாதி” முஸ்லீம்களுக்குள் கூட நடக்கலாம். யார் பெரிய ஜிஹாதி என்ற போட்டி வரலாம். அப்பொழுது எல்லோருடைய கதியும் அதோ கதிதான்.

குண்டு வெடிப்பில் மூன்று பேருக்கு தேடுதல் நோட்டீஸ்: ஜுனைத் அக்ரம் மாலிக் (19) வாசிம் அக்ரமின் தம்பி, ஷகிர் ஹுசைன் ஷேக் என்கின்ற சோடா ஹாஃபிஸ் (26), மற்றும் அமீர் அலி கமல் (25) என்ற மூவருக்கு தேடுதல் பிடிப்பு அறிக்கை அனுப்பப்படுள்ளது. மூன்றாமவன் 2005லிருந்து, காஷ்மீரத்தில் தீவிரவாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறான்[20]. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் ஏற்கெனெவே காஷ்மீர் வழியாக, பங்களாதேசத்துடன் இணைப்பு ஏற்படுத்தி, பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களது திட்டம், இதற்கு முஸ்லீம் நாடுகள் அமோகமாக ஆதரவுடன் உதவி வருகின்றன. மேற்காசியாவில், ஜனநாயகம், குடியரசு போன்ற ரீதியில் முஸ்லீம்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், தென்கிழக்காசிய அடிப்படைவாதிகள் அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதாக உள்ளது. குறிப்பாக இந்தோனேசிய பயங்கரவாதம், தீவிரவாதம் வெளிப்படையாக, ஆனால், திறமையாக வேலை செய்து வருகின்றது. இதற்கு ஆதரவும் இருப்பதால், அதன் மூலம் தமது ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்ள முயல்கின்றனர்.

வேதபிரகாஷ்

24-10-2011


[1] The second and the fourth Indian Mujahideen (IM) e-mails in the Delhi High Court blast case have been traced to Kolkata. The e-mails were sent from Chottuminaliayushman@gmail.com to a TV channel.

http://ibnlive.in.com/news/delhi-blast-two-im-emails-traced-to-kolkata/183773-3.html

[2] A second unverified email received today by different media organisations allegedly from Indian Mujahideen said that the group takes responsibility for Wednesday’s Delhi High Court blast in which 12 people were killed and over 76 were injured. Yesterday, HuJI, an outlawed  terrorist group with a base in Pakistan took responsibility for the blast. The mail was traced to a cyber cafe in Kishtwar, Jammu and kashmir

http://www.hindustantimes.com/Read-Indian-Mujahideen-mail-claiming-Delhi-blast/Article1-743144.aspx

[4] Investigators were groping for leads on Wednesday’s blast at Delhi High Court even as an email was sent to a TV channel claiming that the attack was carried out by Indian Mujahidin and not HuJI and threatening attacks on shopping complexes on Tuesday (13-09-2011). The email sent by one Chhotu, an alleged IM operative, was traced to Ahmedabad.

http://articles.timesofindia.indiatimes.com/2011-09-09/india/30134439_1_huji-mail-im-emails-new-email

[5] Third email after Delhi blast ‘decoded’ Earlier, the Delhi Police claimed to have decoded the third email sent after the Delhi High Court blast. This email sent by someone claiming to be Saeed Ali Al Hoori of Indian Mujahideen from aURL|killindian@yahooIDclaimed the next attack would be at 1.8.5.13.4.1.2.1.4. But this is more like a kindergarten riddle: read A for 1, H for 8, E for 5 and you have Ahmedabad. Read more at: http://indiatoday.intoday.in/story/delhi-hc-blast-third-email-warns-of-attack-in-ahmedabad/1/150641.html

[6] In what is viewed as a positive lead, agencies are probing two calls made on the evening of the blast from two different places in Uttar Pradesh to Bangladesh. Highly placed sources said they have managed to track calls made from Pilkhuwa and Azamgarh in UP to Cox’s Bazar and Chittagong in Bangladesh.Both these calls were made from a PCO between 5 pm and 6 pm on the day of the blast. Both Chittagong and Cox’s Bazar have Harkatul-Jihad al-Islami (HuJI) training camps and it is in these camps that some key IM members are said to have taken refuge.

[7] வேதபிரகாஷ், கத்தியிலிருந்துகுண்டுவெடுப்புவரைமாறிவரும்ஜிஹாதின்தன்மை!, https://islamindia.wordpress.com/2011/09/11/transformation-of-jihadi-terror/

[8]

[12] Looking for some ‘concrete’ evidence connecting the ‘missing’ links in the Delhi High Court blast case probe, the National Investigation Agency (NIA) has seized three mobile phones and some documents, including papers relating to money transaction, from residence of one of the accused Wasim Ahmed Malik in Jammu and Kishtwar.

[15] Unfortunately, the absurdity of the NIA’s allegations against Mr Malik is only symptomatic of its pathetic handling of the probe into the blast. Even when the agency arrested Abid Hussain and Amir Abbas – the two boys from Kishtwar who allegedly sent the email claiming responsibility for the attack – it provided only sketchy details, failing to pinpoint which of the two had sent the email.

Read more at:http://indiatoday.intoday.in/story/delhi-hc-blast-probe-nia-claim-questionable/1/154392.html

[16] According to sources, NIA officials had recently quizzed Azhar and found that Wasim’s teenaged brother Junaid had been initiated into terrorism. Junaid allegedly disappeared a year ago and his family has lodged a missing person report. Intelligence agencies suspect that Junaid has been operating from somewhere in the Kashmir Valley.

[18] For Wasim, the idea of jehad is not picking up a gun and fighting in the jungles of Jammu and Kashmir; he is highly radicalised but without overt symbols attached to it. He can discuss his multiple girlfriends with as much ease as he can discuss Osama bin Laden, Ayman al Zawahiri and Anwar al Awlaki.He has no qualms about opening Facebook in one window and chatting with girlfriends and simultaneously reading about international jehad in the second window on his computer,” said a source who is privy to his interrogation details.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Malik-believed-in-action-did-recee-of-HC-himself/Article1-760830.aspx

[20] The fugitives include 19-year-old Junaid Akram Malik, younger brother of Wasim Akram Malik. Wasim, a medical student in Bangladesh, is presently in NIA custody in Delhi. The other two are Shakir Hussain Sheikh alias Chota Hafiz (26) and Amir Ali Kamal (25). While Sheikh has been active in the Kashmir Valley since 2005, Kamal has been operating since 2008.

http://timesofindia.indiatimes.com/india/NIA-issues-wanted-notice-for-3-Hizbul-terrorists-in-Delhi-HC-blast-case/articleshow/10446851.cms