Archive for the ‘போரா’ category

இமாம் ஹுஸைனின் 700வது தியாகத்திருநாள் அன்று குண்டு வெடிப்பு: 54 ஷியா முஸ்லீம்கள் சாவு, 160ற்கும் மேல் காயம் – தாலிபன்களின் கொடூரம்!

திசெம்பர் 6, 2011

இமாம் ஹுஸைனின் 700வது தியாகத்திருநாள் அன்று குண்டு வெடிப்பு: 54 ஷியா முஸ்லீம்கள் சாவு, 160ற்கும் மேல் காயம் – தாலிபன்களின் கொடூரம்!


ஷியா முஸ்லீம்கள் சன்னி முஸ்லீம்களா; தாக்கப் படுவது: ஷியா முஸ்லீம்கள், சன்னி முஸ்லீம்களால் தாக்கப்படுவது, செக்யூலரிஸ இந்தியர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் பாகிஸ்தானில் “முஸ்லீம்கள்” என்று கருத/மதிக்கப்படுவதில்லை. அவர்களும், அவர்கள் மசூதிகளும் பலமுறைத் தாக்கப்பட்டுள்ளன[1]. சென்ற 04-09-2010 அன்று அவர்கள் தாக்கப்பட்டனர்[2]. செப்டம்பர் 1, 2010 அன்று, லாஹூரில் ஒரு ஷியா மசூதியில் – கர்பலா கமய் ஷா (Karbala Gamay Shah) ஆயிரக்கணக்கானவர்கள் ஹஜரத் இமாம் அலியின் இறப்பு – உயிர்த்தியாகம் மற்றும் தொழுகைக்காகக் கூடியிருக்கும் போது (Yaum-e-Ali), குண்டுகள் வெடித்ததில் 17 / 28 பேர் கொல்லப்பட்டனர்[3]. பல ஆண்டுகளாக அவர்கள் தாக்கப்படுவது / கொல்லப்படுவது விவரங்களை இங்கு கொடுத்துள்ள[4] அட்டவணையில் பார்க்கலாம்.இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள்[5] என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்[6].

மொகரம்பண்டிகை : ஆப்கன்குண்டுவெடிப்பு : சுமார் 54 பேர்பலி: உலகம் முழுவதும் இன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்பட்ட நாளில் ஆப்கனில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளில் சிக்கி 54 பேர் பலியாயினர்[7]. நூற்றுக்கணக்கான ஷியா முஸ்லீம்கள் அபு பசல் மசூதி [Abu Fazal shrine] யில் கூடி பாடிக்கொண்டிருக்கும் வேளையில் குண்டு வெடித்தது. இது தற்கொலை குண்டுவெடிப்பு என்று கருதப்படுகிறது[8]. 160 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். காபூல் அருகே உள்ள இந்த மசூதியில் சிறப்பு தொழுகை நடந்து கொண்டிருத நேரத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இது ஒரு தற்கொலை மனித வெடிகுண்டாகும்[9]. இதனையடுத்து தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும் பதட்டத்துடன் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதில் சிக்கி 35 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. இன்னும் பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
காபூலின் வடக்கு பகுதியான மசார் இ ஷெரீப் பகுதியில் சித்தி முஸ்லிம் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்திலும் குண்டு வெடித்தது. இக்குண்டு ஒரு சைக்கிளில் கட்டப்பட்டிருந்தது. காபூலில் குண்டு வெடித்ததும், இக்குண்டு வெடித்ததாம். குண்டு வெடித்ததும், ஒரு இளம் வயது பெண் சிறுவர்களின் பிணங்களுக்கு நடுவில் நின்று கொண்டு கூக்குரல் இட்டதாக பார்த்தவர்கள் சொல்கின்றனர்[10]. சால்வார்-கமீஜ் அணிந்திருந்த அவள் உடல் முழுவதும் ரத்தம் தோய்ந்திருந்ததாம்[11].

முஹம்மது நபியின் பேரரான இமாம் ஹுஸைனின் உயிர்த்தியாகத்தை போற்றும் அஷூரா என்ற நிகழ்ச்சியும் ஆப்கனில் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 30 மில்லியன் ஆப்கன் மக்கள் தொகையில் ஹஜ்ராக்கள் என்ற ஷியா முஸ்லீம்கள் 20% உள்ளனர். 1990களில் சன்னி-தாலிபான்கள் ஷியக்களைத் தாக்கி வந்தனர், கொன்றும் உள்ளன.

முகரம் / முஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும். ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. இந்த மாதத்தில் சண்டைகள் தடை செய்யப் பட்டுள்ளன. முஸ்லீம்கள் இம்மாதத்தின் போது உண்ணாநோன்பு இருப்பர் .முகரம் மாதத்தின் பத்தாம் நாள் – அஷுரா  ஷியாக்களால் தியாகத் திருநாளாகக் கொண்டாடப் படும். அன்று ஷியாக்கள் மற்றும் சன்னிகள் ஒன்பதாம் அல்லது பதினொராம் நாளில் உண்ணாதிருப்பர்.

ஆனால், பிறகு அவர்கள் தமது கவனத்தை முஸ்லீம் அல்லாதவர்கள் – காபிர்கள் என்ற ரீதியில் அமெரிக்க-நாடோ வீரர்களை, அந்நிய சுற்றுலா பயணிகள், வேலையாட்கள் முதலியோர் மீது திருப்பி, அவர்களைக் கொன்று வந்தது. அதனால், இப்பொழுது, சியாக்கள் மறுபடியும் தாக்கப்படுவதற்கு, உலக கவனத்தை ஈர்க்கவே என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஷியா முஸ்லீம்கள் முஹரம் பண்டிகையை வெளிப்படையாகவே கொண்டாடி வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இன்று அதற்காக விடுமுறையும் உள்ளது. பொதுவாக ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானைப் போல இல்லாமல், ஷியா-சன்னி மோதல்கள் குறைவாகவே இருந்து வந்துள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு தலிபான் ஆட்சி காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தலிபான்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களே இந்த குண்டு வெடிப்பை நடத்தியிருக்கலாம் என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இல்லை பாகிஸ்தானைச் சேர்ந்த அல்-கைதா தாக்கியிருக்கக் கூடும், ஏனெனில் பாகிஸ்தானிய சன்னிகள் ஷியாக்களை முஸ்லீம்கள் என்று கருதுவதில்லை.மற்றும் அவகள் தாக்கப்படுவது, அவர்களின் மசூதிகளில் குண்டு வெடிப்பது முதலியவை சாதாரணமா விஷயங்களாக இருந்து வருகின்றன[12]. இருப்பினும் தாலிபனைச் சேர்ந்த ஜபியுல்லா முஜாஹித் மூலம் தாங்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்று இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது[13].

காந்தகாரிலும் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வைத்து வெடிக்கப்பட்ட இந்த குண்டு வெடிப்பில் மூவர் காயமடைந்தனர்.

கடந்த ஆண்டுகளில் தாலிபனால் நடட்தப் பட்ட குண்டுவெடிப்புகள், தாலிபனின் தாக்குதலால் இறந்தவர்கள் முதலிய விவரங்கள் அட்டவணையிடப்பட்டுள்ளன:

January 14, 2008 A Taliban suicide attacker leaves eight dead at the Serena, Kabul’s most luxurious hotel.
July 7, 2008 A car-bomb attack on the Indian embassy building kills more than 60 people.
February 11, 2009 At least 26 people die and 55 are wounded in three almost simultaneous Taliban attacks on official buildings.
 October 28, 2009 An attack claimed by the Taliban kills at least eight people, including five UN staff, at a Kabul hostel. Three attackers also die.
December 15, 2009 At least eight die and 40 are wounded in a suicide attack near a hotel hosting foreigners.
January 18, 2010 Five people die and at least 71 are injured as Taliban guerrillas carry out a wave of coordinated bomb and gun attacks around the capital.
February 26, 2010 Suicide attacks on two Kabul guesthouses kill at least 16 people, including seven Indians, a French national and an Italian.
May 18, 2010 A suicide bomber kills at least 18 people, including five US soldiers and one Canadian soldier, in an attack on a Nato convoy in a busy city centre street.
December 19, 2010 Two suicide bombers attack an Afghan army bus, killing five soldiers.
January 28, 2011 Eight people are killed in a suicide bombing at a central Kabul supermarket popular with Westerners.
May 21, 2011 Six medical students are killed in a Taliban suicide attack at Afghanistan’s main military hospital.
June 18, 2011  Nine people are killed when suicide attackers storm a police station in the capital.
June 28, 2011 21 are killed, including 10 civilians, when suicide bombers storm Kabul’s luxury Intercontinental Hotel.
August 19, 2011  Nine people, including a New Zealand special forces soldier, die when suicide bombers attack the British Council cultural centre in Kabul.
September 13/14, 2011 Taliban attacks targeting locations including the US embassy and headquarters of foreign troops kill at least 14 during a 19-hour siege.
September 20 Burhanuddin Rabbani, Afghanistan’s former president leading efforts to find a peace deal with the Taliban, is assassinated in a suicide attack at his home in Kabul’s supposedly secure diplomatic zone.
October 29, 2011 13 US troops operating under Nato are among 17 people killed in a car-bomb attack on a foreign military convoy in Kabul.
December 6 , 2011  At least 54 people are killed in a shrine bombing in Kabul, with four more dead in another blast at a shrine in the northern city of Mazar-i-Sharif, a day after a major conference in Germany on Afghanistan’s future pledged sustained support for another decade.

வேதபிரகஷ்

06-12-2011


 


[7] தினமலர், மொகரம்பண்டிகை : ஆப்கன்குண்டுவெடிப்பு : 40 பேர்பலி, http://www.dinamalar.com/News_detail.asp?Id=362666

[13] An email message to news organizations from the spokesman for the Taliban, Zabiullah Mujahid, denied responsibility. “We strongly condemn this wild and inhuman act by our enemies, who are tyring to blame us and trying to divide Afghans by doing such attacks on Muslims.”

http://www.nytimes.com/2011/12/07/world/asia/suicide-bombers-attack-shiite-worshipers-in-afghanistan.html

பாகிஸ்தானில் இருந்த இந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜிஹாதி / இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு பயந்து இந்தியாவிற்கு ஓடிவந்து விட்டாராம்!

பிப்ரவரி 2, 2011

பாகிஸ்தானில் இருந்த இந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜிஹாதி / இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு பயந்து இந்தியாவிற்கு ஓடிவந்து விட்டாராம்!

உயிருக்குப் பயந்து பாகிஸ்தானிலிருந்து ஓடி வந்த பாராளுமன்ற உறுப்பினர்: பாகிஸ்தானில் இருந்த ஒரு இந்து பாராளுமன்ற உறுப்பினர், ஜிஹாதி / இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு பயந்து இந்தியாவிற்கு ஓடிவந்து விட்டாராம்! ஏனெனில், தொடர்ந்து ஜிஹாதி / இஸ்லாமிய தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் அவரை “கொன்றுவிடுவோம்”, என்று மிரட்டிக் கொண்டே இருந்தார்களாம். குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. தினமும் நரகம் தான்! வீட்டைவிட்டு வெளியிலேயே வரமுடியாத நிலை. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றாலும், அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப் படவில்லை என்று நன்றாகத் தெரிகிறது[1]. அந்நாட்டு போலீஸாரோ, மனித உரிமைப் போராளிகளோ, மற்றவர்களோ கண்டுக் கொள்ளவில்லை. இல்லை நாளைக்கு, இருக்கும் ஒருசில பாதுகாப்பு காவலாளிகளுக்கு, அந்த ஜிஹாதி / இஸ்லாமிய தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், “அவரைக் கொன்று விடு”, என்று அல்லாவின் பெயரா ஆணையிட்டால், அவ்வாறே செய்தாலும் செய்துவிடுவர் போலும்! இதனால், “விட்டால் போதுமடா சாமி”, என்று இந்தியாவிற்கு எப்படியோ ஓடிவந்துவிட்டாராம். ஆனால், ஒருவேளை, இந்திய அரசாங்கம், அவரைப் பிடித்து பாகிஸ்தானிற்கே அனுப்பி வைத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை! இல்லை பாகிஸ்தான் அவ்வாறு கேட்டுக் கொண்டால், சொல்லவே வேண்டாம், அடுத்த விமமனத்திலேயே ஏற்றி அனுப்பி வைத்து விடுவார்கள்., நம் நாட்டு வீரதீர பராக்கிரமசாலிகள்!

பாகிஸ்தானில் கொல்லப் படுகின்ற இந்துக்களை மறந்துவிட்டு, எகிப்திலிருந்து வரும் இந்தியர்களைப் பற்றி கவலைப் படுகிறார்களாம்: ஆனால் இதைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மாறாக எகிப்திலிருக்கும் இந்தியர்களைப் பற்றி ஊடகங்களில் மணிக்கணக்கில் அளந்து கொண்டிருக்கிறார்கள்! அந்த என்.டி.டி.வி, டைம்ஸ்-நௌ, ஹெட்-லைன்ஸ் டுடே …………முதலிய செனல்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், லைவ்வாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்! அப்படியென்ன அதில் முக்கியத்துவம்?

பாகிஸ்தானில் இந்துக்கள் படும் பாடு[2]: பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்கும்படி, அந்நாட்டு பார்லிமென்ட்டில் எம்.பி.,க்கள் கோரியுள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், 82 வயதான லக்மி சந்த் என்ற இந்து ஆன்மிக தலைவரை, கடத்தல்காரர்கள் கடத்திச் சென்று கணிசமான பணம் வசூலித்தனர். 66 வயதான பாகிஸ்தானிய இந்து எம்.எல்.ஏ., ராம்சிங் சோதோ என்பவர் அங்குள்ள சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு பயந்து சமீபத்தில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்[3]. அதுமட்டுமல்லாது பலுசிஸ்தானில் உள்ள 27 இந்து குடும்பங்கள், அங்குள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க முடியாமல், இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து, பாகிஸ்தான் பார்லிமென்ட்டில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் விவாதித்தனர்.”பாகிஸ்தானில் வசிக்கும் மைனாரிட்டி மக்களுக்கு சமத்துவம் அளிக்கப்படும், என்ற 73ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் ஒழுங்காக பின்பற்றப்படுவதில்லை. பணத்துக்காக இந்துக்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்’ என, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் பல்வாஷா கான், நவாஸ் யூசூப் உள்ளிட்டோர் வற்புறுத்தினர்.

பாகிஸ்தானின் இந்து-விரோத கொடுமையான சட்டங்கள், கொடுமைகள், குரூரங்கள் முதலியன: ராம்சிங் சோதோ 2008ல் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் [Pakistan Muslim League-Functional (PML-F)] சிறுபான்மையினரின் இடஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய உயிக்கான அச்சுறுத்தல் கண்டு பயந்து, சிந்து மாகாண சட்டமன்றத்தின் சபாநாயகரான, நிஸார் அஹமது கோரோ என்பவரிடன் ராஜினாமா கொடுத்தனுப்பியுள்ளார். கேட்க வேண்டுமா, அவருடைய ரரஜினாம, உடனடியாக ஏற்க்கப்பட்டுவிட்டது என்று கராச்சி டைம்ஸ் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது[4]. சிந்து மற்றும் பலூச்சிஸ்தான் மாவட்டங்களில் கணிசமான, இந்துக்கள், பிரிவினைக்குப் பிறகும் தங்கிவிட்டனர். ஆனால், இஸ்லாமிய தீவிரவாதம் ஓங்க-ஓங்க அவர்கள் அங்கு வாழ்வதே கடினமாகி விட்டது.

2007ல் நடந்த லால் மஸ்ஜித் நிகழ்விற்குப் பிறகு, இந்துக்கள் மீதான கொடுமைகள் அதிகமாகி விட்டன. தினமும் இந்துக்களின் மீது மிகவும் குரூரமான அடக்குமுறை, தாக்குதல்கள் முதலியன நடத்தப் படுகின்றன. குழந்தைகளைக் கடத்திச் சென்று பணம் பறிப்பதில் அலாதியான இன்பம் அவர்களுக்கு[5]; இந்துக்களை அடிப்பது-உதைப்பது அவர்களுக்கு வேடிக்கையான செயல்[6]. மாதம் 25 இந்து பெண்கள் கற்பழிக்கப் படுகிறர்கள் என்ற செய்தி வேறு[7]. பெண்களைக் கடத்திச் சென்று, வலுக்கட்டாயமாக மதம் மாற்றி கல்யாணம் செய்து கொள்வதும் உண்டு[8]. 400-500 இந்து குடும்பங்கள், ஏற்கெனெவே, இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முயன்று வருகின்றன.

அடிப்படைவாத சுன்னி முஸ்லீம்கள் ஷியா, அஹ்மதியா, கிருத்துவர் மற்றும் இந்துக்களை விட்டுவைப்பதில்லை. பாகிஸ்தான் மக்கள் கட்சி [Pakistan People’s Party (PPP)], தாங்கள் சிறுபான்மையினரின் நண்பன் என்று எப்பொழுதாவது கூறிக்கொண்டாலும், அது அப்படியொன்றும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. உண்மையில் அரசாங்கத்தால் 1970 மற்றும் 1980களில் சிறுபான்மையினருக்கு எதிராக எடுத்துவரப்பட்டச் சட்டங்களே, இத்தகைய அடக்குமுறைக்குக் காரணம்[9]. அதாவது, இந்துக்களின் சொத்துக்களை, முஸ்லீம்கள் வேண்டும் என்றால் விற்றே ஆகவேண்டும், இல்லையென்றால், மிரட்டியாவது விற்க்க வைத்து விடுவர். அது தவிர, எப்பஒழுதும், மிரட்டி-மிரட்டியே பண கறப்பதும் கொடூர முஸ்லீம்களுக்கு வாடிக்கையான விஷயமாக இருந்து வந்துள்ளது[10].

சிதம்பரமும், பாகிஸ்தானும்: சிந்து மற்றும் பலுச்சிஸ்தானில் இந்துக்களுக்கு என்ன நேர்கிறது என்பதைப் பற்றிக் கவலைப் படவில்லை, ஆனால், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பைப் பற்றிய விவரங்களை[11] பகிர்ந்து கொள்ளலாம் என்கிறார்[12], இந்திய உள்துறை அமைச்சரான சிதம்பரம்! அதற்கு, பாகிஸ்தான் அமோக ஆதரவு தெரிவிக்கிறது[13], மகிழ்ச்சியுடன்! பேசாமல், சிதம்பரத்திற்கு சுன்னத் செய்து, பாகிஸ்தானிற்கே அனுப்பி வைத்து விடலாம் போலிருக்கிறது. ஹிந்து என்று பெயரை வைத்துக் கொண்டுள்ள நாளிதழைக் கேட்கவேண்டுமா, “Malik hails Chidambaram’s remarks on Samjhauta” என்று செய்தியை முதல் பக்கத்தில் வெளியிடுகின்றது! அத்தகைய பிரம்மிப்பான செய்தியைக் கொடுத்த பெண்மணி “Anita Joshua” அனிதா ஜோஸுவா!

© வேதபிரகாஷ்

02-02-2011


[1] An editorial in the Daily Times Wednesday (02-02-2011) said: “On Saturday (30-01-2011) the resignation of a Hindu member of the Sindh Assembly, Ram Singh Sodho, after reportedly receiving threats is alarming.”

[2] தினமலர், மைனாரிட்டி இந்துக்களுக்கு பாதுகாப்பு தர வலியுறுத்தல், பிப்ரவரி 01, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=178509

[4] Karachi Times, Hindu member of Pak Sindh Assembly flees to India for safety after getting life threats, Karachi News.Net, Sunday 30th January, 2011 (ANI)

http://www.karachinews.net/story/737908

[5] 3-year-old Hindu kidnapped in Pak’s Sindh, Press Trust of India, Updated: November 26, 2010 15:21 IST; http://www.ndtv.com/article/world/3-year-old-hindu-kidnapped-in-paks-sindh-68751

[9] New Indian Express, Hindu MP’s resignation alarming: Pakistan daily, dated 02-02-2011,

http://expressbuzz.com/topnews/hindu-mps-resignation-alarming-pakistan-daily/244459.html

[10] Incidents of kidnapping for ransom have seen an alarming rise during the last few months, forcing many families to abandon their homes and shift to India or other countries. (ANI)