Posted tagged ‘பொழுதுபோக்குகள்’

அமீன் என்ற அம்முனுத்தீன் ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியது!

ஜனவரி 10, 2011

அமீன் என்ற அம்முனுத்தீன் ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியது

தொடர்ந்து முஸ்லீம் இளைஞர்கள் பல இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பாதிப்பை ஏற்படுத்தி வருவதில் மேலும் ஒரு அம்முனுத்தீன் என்றவன் சேர்ந்துள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது. முன்பு முகமது அனிபா என்ற டிரைவர் பல பெண்களை ஏமாற்றி சீரழித்துள்ளான்[1]. முரளி என்ற அப்துல் ரஹ்மான் ஐந்து பெண்களை மணந்துள்ளான்[2]. அப்துல் வாஹித் என்பவன் குழந்தை பிறக்கவில்லை என்ரு 15 பென்களை மணந்தான்[3]. மொஹம்மது மௌதூத் கான், தான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு ஆறு பெண்களை மணந்தான்[4]. இதே மாதிரி முஹமது ரஹ்மான், இலியாஸ் முதலியோரும் பல பெண்களை மணந்தனர், ஆனால், கைது செய்யப்பட்டனர்[5]. லியாகத் அலிகான் என்பவன் ஏற்கெனவே இணைதாலத்தில் வலைவீசி 50 மேல் பண்களை ஏமாற்றி சீரழித்துள்ளான்[6]. பிறகு மன்சூர் அலிகான்………………..இப்படி தொடர்கிறது!

ஆர்க்குட் போய் ஃபேஸ்புக் வந்தது: ஆர்க்குட் மூலம் மாணவிகள், இளம்பெண்கள், குடும்ப பெண்கள் முதலியோர் ஏமாற்றப்பட்டு சீரழைக்கப் பட்டப் பிறகு, அது தடை செய்யப் பட்ட நிலைக்கு போய்விட்டப் பிறகு, ஃபேஸ்புக் பிரபலமடைய ஆரம்பித்து விட்டது. ஃபேஸ்புக்கில் அக்கோண்ட் ஒன்று ஏற்படுத்திக் கொண்டு, அதில் தன்னைப் பற்றி விவரங்களைத் தரவேண்டும் – பெயர், வயது, பிறந்த தேதி, ஈ-மெயில்-ஐ-டி, விருப்ப-வெறுப்புகள் / பொழுதுபோக்குகள் (ஹாபிஸ்), ……..முதலியன. புகைப்படமும் சேர்த்து கொள்ளலாம். இதே மாதிரி எத்தனை ஈ-மெயில் ஐ-டி உள்ளனவோ, அத்தனை ஃபேஸ்புக்கில் அக்கோண்ட்டுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதாவது, ஒரே நபரே இப்படி பல புனை / போலிப்பெயர்களுடன், அவதாரங்களுடன் பலருடன் உரையாடலாம், உறவாடலாம்! இன்றைய இளைஞர்-இளைஞிகள் இத்தகைய விளையாட்டில் ஈடுப்படுள்ளது சாதாரணமான விஷயம்தான்.

அமீன்[7] என்ற அம்முனுத்தீன்[8] ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியது: இதில் முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள்-மாணவர்கள் புனை / போலிப்பெயர்கள் மூலம் தொடர்பு கொண்டு நேரத்தை விரயம் செய்து கொண்டு சேட்டிங் / உரையாடல் செய்வது வழக்கமாகியது. இதில் முக்கியமாக நட்பு என்ற போர்வையில் இளம் பெண்கள் / மாணவிகள், இளம் ஆண்கள் / மாணவர்கள் கூட சேட்டிங் / உரையாடல் என்று ஆரம்பித்து பிறகு “காதல்” என்ற பெயரில் செக்ஸ் / பாலியல் விஷயங்களை மறைமுகமாக நேரிடையாக பரிமாறிக் கொண்டு, திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆரம்பிப்பது, அந்நிலைக்கு முன்னரே, இருபாலர்களும் செல்போன், முகவரி, குடும்பப் பின்னணி முதலியவற்றை அறிந்துகொள்வதும் உண்டு. இதில்தான், இளம் ஆண்கள் / மாணவர்கள் அல்லது அவர்களைப் போன்று நடிக்கும் வலைவீசும் காமக்கயவர்கள் / செக்ஸ் வக்கிரக்காரர்கள் உள்ளே நுழைந்து இளம் பெண்கள் / மாணவிகளை ஏமாற்ற ஆரம்பிக்கின்றனர், வெற்றியும் பெறுகின்றனர். ஆனால், சீரழைக்கப் படுவது பெண்கள்தாம். இந்த அம்மூனுத்தீனும் அதே முறையைத்தான் கையாண்டுள்ளான்.

திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன: மற்ற காம-வக்கிர மோசடி பேர்வழிகளைப் போல அம்முனுத்தீன் ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளின் தந்தையாக உள்ளான். இருப்பினும் மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளது வேடிக்கையாக உள்ளது. எப்படி இது மனைவிக்குத் தெரியாமல் இருந்தது என்பது வியப்பிற்குரிய விஷயம்தான். இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு, அவன் பல முறை வெளியே சென்றிருக்க வேண்டும். ஆகவே, இவன் விஷயத்தில் பல விஷயங்களை மூடி மறைக்கின்றனர் என்பது தெரிகின்றது.

பெரம்பூர்-இரட்டை ஏரி பெண்ணுக்கு வலை வீசியது: 19-21 வயதான இளம் கல்லூரி மாணவிகளை ஏமாற்றி அனுபவம் உள்ள அம்மீனுத்தீன், பெரம்பூர்-இரட்டை ஏரி பெண்ணுக்கு காதல் வலையை வீசியுள்ளான். அப்பெண்ணும் மாட்டியுள்ளாள். முன்பே திட்டமிட்டபடி, தந்தை இல்லாத பெண்களாக சேர்ந்தெடுத்துள்ளான். நேரிடையாக தாயாருடன் பேசி திருமணம் செய்து கொள்வதாக வாய்ப்பளித்துள்ளான். ஆனால், அப்பெண்ணின் தாயார் விவரமாக அவனுடைய குடும்பத்தைப் பற்றி விசாரித்துள்ளார். கல்யாணத்திற்கு முன்னர் பெற்றோர்களைப் பார்க்கவேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் நம்பிக்கை ஏற்படுத்த அம்முனித்தீனின் தாயார் போல ஒரு பெண் மலேசியாவிலிருந்து அவருடன் பேசியுள்ளார். “உமது பெண்ணை என் பையனே கல்யாணம் செய்து கொள்வான். மற்றெந்த பையனையும் பார்க்கவேண்டாம். இதையே முடித்துவிடலாம்”, என்பது போல பேசினாள். ஆனால், நேரில் யாரும் வராதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. புதன் கிழமை திருமணம் எனும்போது அதற்குள் மற்ற பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். ஆகவே போலீஸாரிடம் புகார் கொடுத்தவுடன், அம்மீனுத்தீன் கைது செய்யப்பட்டான்.

ஆசையினால் / சபலத்தினால் ஏமாற்றப்பட்ட / சீரழைந்த மாணவிகள் / இளம்பெண்கள்: சில பெரிய நடிகர்களைத் தெரியும், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்றெல்லாம் ஆசைக் காட்டி பணம், நகை முதலியவற்றையும் பறித்துள்ளான். அவர்களுடன் செக்ஸும் வைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பாதிக்கப் பட்ட மாணவிகள் தற்கொலை வரை சென்றதுதான் முடிவான கட்டம்.

இவ்வாறு நடப்பதற்கு என்ன காரணம்? இங்கு சம்பந்தப் பட்டுள்ளவர்கள் முஸ்லீம்கள் என்பதனால், அவர்களுக்கேயுரிய மனோதத்துவ ரீதியில் பல பிரச்சினைகள் உள்ளன.

இவ்வாறு நடப்பதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

வேதபிரகாஷ்

10-01-2011


[7] சன்டிவியினர் 09-01-2011 அன்று தொடர்ந்து பலமுறை இச்செய்தியை போட்டு வந்தாலும், அமீன் என்ற பெயரை அனில் என்பது போல உச்சரிக்கப்பட்டது. அவன் காண்பிக்கப் பட்டாலும், அவன் முஸ்லீம் என்று சொல்லப்படவில்லை.

[8] பர்தா போட்டு வந்த ஒரு பெண்மணி தான் பெண் கெட்டுவந்தவன் அம்மீனுத்தீன் என்று குறிப்பிட்டார், அப்பொழுதுதான், அவன் முஸ்லீம் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. இல்லையென்றால் பொதுவாக, யாரோ ஒரு இளைஞன் இம்மாதிரி பெண்களை ஏமாற்றிவந்தான் என்பது போலத்தான் செய்தி பார்ப்பவர்கள் / கேட்பவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.