Posted tagged ‘பேஸ்புக்’

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – ஐசிஸ் திரும்பி வந்து, மறுபடியும் தீவிரவாதத்தில் ஈடுபட்ட நிலை (2)

ஒக்ரோபர் 13, 2016

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக தொடர்புகள்உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது  – ஐசிஸ் திரும்பி வந்து, மறுபடியும் தீவிரவாதத்தில் ஈடுபட்ட நிலை (2)

kadayanallur-subahani-haja-moideen-bomb-making

கோயம்புத்தூர் தமிழ்நாடுகேரளா தீவிரவாத மையமாக இருக்கிறது: இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து, என்.ஐ.ஏ தென்மாநில ஐ.ஜி அலோக், சூப்பிரண்டு விக்ரம் தலைமையிலான அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தனர். உள்ளூர் போலீசார் உதவியுடன் கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த ஐந்து பேரை பிடித்தனர். 03-10-2016 அன்று கேரளாவைச் சேர்ந்த ஹாஜா மொஹித்தீன் திருநெல்வேலியில் பிடிபட்டான்[1]. இவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[2]. கோயம்புத்தூரில், குண்டுவெடிப்பு நடந்து, கலவரம் ஏற்பட்ட பிறகு கூட, அங்கு, இவ்வாறு தீவிரவாத செயல்களுக்கு உள்ளூர்வாசிகள் ஒத்துழைப்பது, கவலையாகத்தான் உள்ளது. கோயம்புத்தூர் தமிழ்நாடு-கேரளா தீவிரவாத மையமாக இருக்கிறது என்பது போன்று தெரிகிறது.

is-jihadi-from-tirunelveli-dinamani-cutting

சென்னை தொடர்புகள் திகைக்க வைக்கின்றன: கைது செய்யப்பட்ட 6 பேரில் அபு பஷீர்‌ என்பவர் கோவையின் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கேரளா திருச்சூரைச் சேர்ந்த ஸ்வாலி முகமது என்கிற யூசுப் உட்பட மேலும் ஒருவர் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் சில நாட்கள் தங்கிவிட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவர்களுடன் கோவை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வரும் நவாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து செல்போன், ‘லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும், இவர்கள் அனைவரும் வெடிகுண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைச் சேகரித்ததாகவும் தெரிகிறது. மேலும், தென்னிந்தியாவில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் முக்கியமான பிரபலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முக்கியமாக, இவர்கள் அனைவரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின்மீது கொண்ட ஈர்ப்பால், அந்த அமைப்புக்காக வேலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது[3].

gone-for-hajj-returned-as-isis-terrorist

05-10-2016 அன்று கைது செய்யப்பட்ட சுபஹனி ஹாஜா மொஹிதீன்: இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து 3 பெண்கள் உட்பட 21 பேர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், அது தொடர்பாகவும், கைது செய்யப்பட்ட 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கைது செய்யப்பட்ட 6 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுபஹானி [K. Subuhan Abdullah (35)] அவரது மாமனார் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்[4]. கடையநல்லூரில் அவரது வீட்டில் தங்கியிருந்த போது அதிகாலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் துப்பாக்கிமுனையில் கைது செய்தனர். பின்னர் சுபஹனியை கொச்சிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. NIA குழு திருநெல்வேலியில் தங்கியிருந்த சுபாஹினியை கைது செய்து விசாரித்தனர். அவன் சிவகாசியில் வெடி தயாரிப்பாளர்களிடமிருந்து ரசாயனப் பொருட்களை வாங்கியுள்ளான்[5]. கைதான சுபஹானி ஐ.எஸ். ஆதரவாளரா என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரையும் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் 06-10-2016 அன்று ஆஜர்ப்படுத்தி, விசாரணை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்[6].

mosques-dargahs-and-madrassas-should-teach-against-terrorism-to-create-awareness-among-the-muslim-younth

செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பி வந்த ஐசிஸ் போராளி[7]: கடையநல்லூரில் வசித்து வந்த சுபஹனி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் ஈர்க்கப்பட்டு சமூக ஊடகங்கள் மூலம் அந்த அமைப்பில் சேர்ந்தார். பின்னர் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் மெக்கா செல்வதாக கூறி விட்டு 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா விசாவில் சென்றார். அங்கிருந்து ஈராக்கில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டார். போரின் தீவிரத்தை தாங்க முடியாமல் ஐ.எஸ் அமைப்பில் இருந்து விலக முயன்ற சுபஹானியை அந்த அமைப்பினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்தியாவில் ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சுபஹனியை ஐ.எஸ். அமைப்பு விடுதலை செய்தது. விடுதலையான அவர் இஸ்தான்புல்லில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து தான் இந்தியா செல்ல உதவி கேட்டான். அதன்படி இந்திய தூதரக உதவியுடன் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இந்தியாவிற்கு சுபஹனி திரும்பி வந்தான்[8].

%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%b9%e0%ae%a9%e0%ae%bf

கடையநல்லூரிலிருந்து ஐசிஸுடன் தொடர்பு வைத்திருந்த போராளி: சபஹனி ஹாஜா மொஹ்தீன் பின்னர் அவர் கடையநல்லூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்கு ஒரு நகைக்கடையில் வேலை செய்து வந்தான். ஆனால், சில நாட்களில், மறுபடியும், இணையத்தளம் வழியாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டான். அந்த அமைப்பின் கட்டளைபடி சிவகாசியில் இருந்து வெடிமருந்து வாங்கி இந்தியாவில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு சப்ளை செய்துள்ளான். மேலும் ஹவாலா பணம் மூலமும், தங்க நகைகள் மூலமும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சபஹனி பண பரிமாற்றம் செய்துள்ளார். விசாரணையில் இந்த விவரங்களை தெரிந்து கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பினர் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து 05-10-2016 அன்று கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு தென்பிராந்திய ஐ.ஜி. அம்ரத் டங் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் சுபஹனியை நள்ளிரவில் நெல்லை மாவட்டம் குற்றாலம் அழைத்து வந்தனர். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சுபஹனியை பலத்த பாதுகாப்புடன் வைத்திருந்தனர்.

kadayanallur-org-says-kerala-is-terrorist-arrested-03-10-2016

கடையநல்லூரில் விசாரணை: அப்போது அவரிடம் தீவிர விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. பிறகு, காலை 10 மணியளவில் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கடையநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் சுபஹனியை ஆஜர்படுத்தி விசாரணையை தொடங்கினர். கடையநல்லூரில் யார்? யாருடன் அவருக்கு தொடர்பிருந்தது, ஹவாலா பணத்தை யார் மூலம் அவர் பெற்றார்? சிவகாசியில் யாரிடம் வெடி மருந்து வாங்கினார்? என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுபஹனியின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சுபஹனி கடையநல்லூர் அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அழைத்துவரப்படும் செய்தி அறிந்த கடையநல்லூர் நகைக்கடை வியபாரிகள் பலர் கடைகளை அடைத்திருந்தனர்.

is-jihadi-from-tirunelveli-indian-express

வீடு, நகைக்கடை முதலிய இடங்களில் விசாரணை / சோதனை[9]: தொடர்ந்து அவரது வீட்டில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.  அங்கு பள்ளிவாசல் தெருவில் உள்ள சுபஹானி வசித்து வந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. சுபஹனி மனைவியின் தாய் வீடு கடையநல்லூர் புதுமனை தென்வடல் தெருவில் உள்ளது. அங்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள், சுபஹனியின் மனைவியிடம் சுபஹனி வசித்து வந்த வீட்டின் சாவியை பெற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து ஒரு பழைய செல்போன் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்[10]. பின்னர் அவர் பணியாற்றிய நகைக் கடையிலும் விசாரணை மேற்கொண்டனர். கடையநல்லூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுபஹனி ஹாஜாமொய்தீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது. சோதனையின்போது செல்லிடப்பேசி, சிம்கார்டு, கணினி நினைவகம் போன்றவற்றை தேசிய புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது[11]. 7 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நகைக்கடை பங்குதாரர் பேட்டி: இதற்கிடையே சுபஹனி ஹாஜாமொய்தீன் பணியாற்றிய நகைக் கடையின் பங்குதாரர் நயினாமுகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சரியாக நடந்து கொள்ளாத காரணத்தால் கடந்த 27ஆம் தேதியே [27-09-2016] அவர் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர்தான் அவர் குறித்த விவரம் எங்களுக்கு தெரியவந்தது. வேலையை விட்டு நீக்கிய பின்னர் மோசமான வார்த்தைகளால் கட்செவி அஞ்சல் மூலம் எங்களை அவர் திட்டினார். இது தொடர்பான தகவல்களையும் நாங்கள் தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்[12].

© வேதபிரகாஷ்

13-10-2016

ஐசிஸ் சர்ட் அணிந்த முச்லிம் வாலிபர்கள் - ராமநாதபுரம் மசூதி

[1] Indian Express, Tamil Nadu: One more person linked to ISIS arrested by NIA in Kerala, By: Express Web Desk | New Delhi | Updated: October 4, 2016 5:56 pm.

[2]http://www.dinamani.com/tamilnadu/2016/oct/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2575458.html?pm=home

[3]  விகடன், தமிழகத்தை குறிவைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்… கேரளாவில் 6 பேர் கைது, Posted Date : 18:10 (03/10/2016); Last updated : 18:10 (03/10/2016).

[4] The Hindu, NIA picks up IS suspect from Kadayanallur, Tirunelveli October.4, 2016; Updated: October 4, 2016 02:21 IST.

[5] News18, Suspected ISIS Operative Arrested in Tamil Nadu, Was Planning Attacks, Press Trust Of India, First published: October 6, 2016, 2:46 PM IST.

[6] http://www.vikatan.com/news/india/69109-isis-terrorists-targeted-tamil-nadu-6-arrested-in-kerala.art

[7] மாலைமலர், .எஸ். தீவிரவாதி சுபஹனியை கடையநல்லூர் அழைத்து வந்து விசாரணை, பதிவு: அக்டோபர் 07, 2016 14:09

[8] http://www.maalaimalar.com/News/State/2016/10/07140918/1043769/kadayanallur-IS-extremist-investigation.vpf

[9] தினமணி, .எஸ். பயங்கரவாதியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை, By கடையநல்லூர் Last Updated on : 08th October 2016 08:21 AM

[10] http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/oct/08/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2578126.html?pm=478

[11] தினத்தந்தி, கேரளாவில் இருந்து .எஸ். பயங்கரவாதி சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து விசாரணை, பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 12:45 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 4:15 AM IST

[12] http://www.dailythanthi.com/News/State/2016/10/08004534/And-brought-to-trial-cupahaniyai-Kadayanallur.vpf

பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது!

பிப்ரவரி 4, 2015

பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது!

With-FacebookCheated-and-deprived-women-jewelryFake_தினத்தந்தி

With-FacebookCheated-and-deprived-women-jewelryFake_தினத்தந்தி

நகை திருட்டு புகார் என்று ஆரம்பித்த விவகாரம்: சேலம் உள்பட பல இடங்களில் ‘’பேஸ்புக்’ போலி கணக்கில், டாக்டர் போல் நடித்து, பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து, 40 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்[1], என்று செய்தி வந்துள்ளன. 03-02-2015 அன்று இச்செய்தி டிவிசெனல்களில் காட்டப்பட்டது. சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பிரபல வக்கீல் சகோதரர்கள் கூட்டுக்குடும்பமாக வசிக்கின்றனர். அவர்கள் தங்க நகைகளை தங்கள் தாயாரிடம் கொடுத்து வைத்திருந்தனர். இதில் தம்பி குடும்பத்தினரின் நகைகள் அப்படியே இருக்க, அண்ணன் குடும்பத்தினரின் நகைகள் 60 சவரனுக்கு மேல் காணாமல்போனது, அதிர்ச்சியைக் கொடுத்தது. இதுகுறித்து அந்த வக்கீல் குடும்பத்தினர் குரோம்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.  இவ்வாறு இப்பிரச்சினை “நகைத்திருட்டு” என்று ஆரம்பித்தது.

Facebook love - Islamic way

Facebook love – Islamic way

போலி டாக்டரிடம் சிக்கிக்கொண்ட வக்கீல் குடும்பத்துப் பெண்[2]: போலீசார் வக்கீல் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, வக்கீலின் மகள்தான் நகையை எடுத்து வாலிபர் ஒருவரிடம் கொடுத்ததாக தெரிவித்தார். அதாவது, தன்னுடைய தோழி ஒருவருக்கு ‘பேஸ் புக்’ மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கும் டாக்டர் முகமது ஷானு என்பவர் பழக்கமானார். இவர், தனக்கு கேரளாவில்  மந்திரவாதி ஒருவரை தெரியும். அவரிடம் நகைகளை கொடுத்து பூஜை செய்தால், குடும்ப பிரச்னைகள் தீர்ந்துவிடும் என கூறியுள்ளார்.  குடும்பத்தில் அப்படி என்ன பிரச்சினைகள் என்றும் தெரியவில்லை. வக்கீல்களால் சாதிக்க முடியாதத்தை மந்திரவாதி எப்படி சாதிப்பார் என்றும் தெரியவில்லை. முஸ்லிம்களுக்கு மந்திர-தந்திரங்களில் நம்பிக்கை உண்டா-இல்லையா என்றும் புரியவில்லை[3]. அதை நம்பிய வழக்கறிஞரின் மகள், வீட்டில் உள்ள நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக முகமது சானுவிடம் கொடுத்துள்ளார். தோழி மூலம் வக்கீல் குடும்பத்தில் நடக்கும் சில பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நகைகளை கேரளாவில் பூஜை செய்து கொண்டுவருவதாக கூறி வாங்கியுள்ளார். ஆனால், அவர்  நகைகளை திருப்பி தரவில்லை[4]. அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது

பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது

போலி டாக்டர் மலையாள மாந்தீரிகம் செய்வேன் என்று நகைகளைப் பெற்றது: மாந்தீரகம் செய்ய ஏன் முஸ்லிம் பெண் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. மேலும், மந்திர-தந்திர வேலைகள் செய்து விட்டு எப்படி நகைகளைத் திருப்பிக் கொடுக்கப்படும் என்பதும் தெரியவில்லை. இதை பெற்றோரிடம் மறைக்கவே வீட்டில் இருந்த நகை கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடியது தெரிந்தது, என்று போலீசாருக்குத் தெரிந்தது. இதனால் “பேஸ்புக்” விவகாரங்களை ஆராய ஆரம்பித்தனர். இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், 2 தனிப்படை அமைக்கப்பட்டது. ஜிப்மர் மருத்துவமனையில் விசாரித்தபோது அதுபோல அங்கு யாரும் பணியாற்றவில்லை என தெரியவந்தது. போலீசார் முகமது ஷானுவின் செல்போன் நம்பரை வைத்து அவர் யார்? என்ற விவரங்களை சேகரித்தபோது மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது

பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது

பேஸ்புக் மூலம் ஏமாற்றி பெண்களுடன் உல்லாசம்[5]: முகமது ஷானுவின் உண்மையான பெயர் ரகுமத்துல்லா (வயது 27). அவர் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த அசன்அலி என்பவரது மகன் என்றும், 10–ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் எனவும் தெரியவந்தது. “பேஸ்புக்” தொடர்புகளை “சைபர்-கிரைம்” மூலம் கண்காணிக்கப்பட்டது. அவருடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் யாராவது அவரை தொடர்பு கொள்கிறார்களா? என போலீசார் இரவு பகலாக கண்காணித்து வந்தனர். அப்போது டாக்டர் ஷானு என்ற பெயரில் ரகுமத்துல்லா சென்னை, சேலம், கன்னியாகுமரி, பெங்களூரு, திருநெல்வேலி என பல பகுதிகளிலும் பேஸ்புக் மூலம் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. டாக்டர் என கூறியதால் பல இளம்பெண்கள் அவருடன் தொடர்பு கொண்டுள்ளனர். இதில் எளிதில் ஏமாறுபவர்களை தேர்வு செய்து அந்த பெண்ணுடன் செல்போனில் பேசி பழகி வந்துள்ளார். இதில் ஏமாறும் பெண்களுடன் உல்லாசமாக சுற்றிவிட்டு, கிடைக்கும் நகைகளை சுருட்டிக்கொண்டு அதை விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். எப்படி, அப்படி இளம் பெண்கள் எளிதாக ஏமாறுகிறார்கள் என்றும் தெரியவில்லை.

பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிப்பு

பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிப்பு

பேஸ்புக் பெண் நண்பர் போலி டாக்டரை ஓட்டலுக்கு அழைத்தது: அவரது பேஸ்புக்கை தொடர்ந்து கண்காணித்தபோது, தற்போது ஒரு இளம்பெண், அவருடன் தொடர்பில் இருப்பது தெரிந்தது. அந்த பெண்ணை சந்தித்த தனிப்படை போலீசார், ரகுமத்துல்லா பற்றிய விபரங்களை கூறியதும் அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். தன்னைக் காதலிப்பதாகத்தான் “பேஸ்புக்கில்” உரையாடி போன் நம்பர் முதலியவற்றை அவன்வாங்கியுள்ளதாகத் தெரிவித்தாள். இதனால், தொடர்ந்து ரகுமதுல்லாவிடம் சந்தேகம் வராதது போல பேசி அவரை வரவழைக்க அந்த பெண்ணிடம் போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி அந்த பெண், குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சில நாட்களுக்கு முன் ரகமதுல்லாவை வரவழைத்தார். அப்போது, அங்கு மாறு வேடத்தில் இருந்த தனிப்படை போலீசார், அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்[6].

போலி டாக்டரின் காம வலையில் சிக்கிய பேஸ்புக் நண்பிகள்: ரகமத்துல்லாவிடம் விசாரணை செய்தபோது, அவன் உண்மையினை ஒப்புக்கொண்டுள்ளான். இதுபற்றி போலீசார் கூறியதாவது, “இவர், டாக்டர் சானு என்ற  பெயரில் சென்னை, சேலம், கன்னியாகுமரி, பெங்களூர், திருநெல்வேலி என பல பகுதிகளிலும் பேஸ்புக் மூலம் பல பெண்களை நண்பர்களாக்கி  உள்ளார். தன்னை டாக்டர் என காட்டிக்கொண்டதால், பலர் அவருடன் நட்பு வட்டாரத்தில் இணைந்துள்ளனர்[7]. இதில் யார் எளிதில் ஏமாறுவார் என்பதை அறிந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு, அவர்களிடம் டாக்டர் போலவே நடித்து  பழகி வந்துள்ளார். இதில் ஏமாறும் பெண்களிடம் நகைகளை வாங்கி கொண்டு அதை விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இவரிடம் ஏமாந்த  பெண்கள் போலீசில் புகார் செய்யாமல் இருந்ததால் இதுவரை போலீசில் சிக்கவில்லை”, என தெரிவித்தனர்.

 

போலி டாக்டர் கைது: இவரிடம் ஏமாந்த பெண்கள் அவமானம் காரணமாக போலீசில் புகார் செய்யாமல் இருந்ததால் தீராத விளையாட்டு பிள்ளையாய் தன்னுடைய லீலைகளை தொடர்ந்துள்ளார், என்று ஒரு நாளிதழ் கூறுகிறது. அப்படியென்றால், பாதிக்கப் பட்ட பெண்கள் எப்படி தங்களது குற்றவுணர்வை மறைத்துக் கொள்கின்றனர், பின்விளைவுகளை சரிசெய்து கொள்கின்றனர் என்பதும் வியப்புகுறிகளாக உள்ளன. ரகுமத்துல்லாவை கைது செய்த போலீசார், அவரை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சுமார் 40 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பேஸ்புக் மூலம் இளம்பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அறிமுகத்தை செய்து வைக்கக் கூட்டம் வேலை செய்யும் போது, அவர்களையும் “சைபர் கிரைம்” வலையில் கண்காணிப்பப் படவேண்டும்.

பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது, தெரியவந்தது[8]: இதில் தான் விவகாரங்கள் அடங்கியுள்ளன என்று தெரிகிறது. இப்பிரச்சினை பொதுவாகவும், இஸ்லாம் நோக்கிலும் ஆராய வேண்டியுள்ளது. பொதுவாக படித்த பெண்கள் ஏமாறுவார்களா என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. அப்படி இளம்பெண்கள் எப்படி, ஏன், எவ்விதமாகத் தூண்டப் படுகிறார்கள் என்றும் நோக்கத்தக்கது. குடும்பத்தில் இளம்பெண்கள் மிகவும் கட்டுப்பாட்டோடுத் தான் வளர்க்கப் படுகிறார்கள். இன்றைய சூழ்நிலைகளில், சிறுமிகள், இளம்பெண்கள் முதலியோர் அடுத்த பையன்கள், வாலிபர்களுடன் பேசுவது, பழகுவது முதலியவை படித்த-நாகரிகமான குடும்பங்களில் அனுமதிக்கப் படுகிறது. ஆனால், “நட்பு” என்ற வட்டத்தில் தான் அது அனுமதிகிகப்படுகிறது. இருப்பினும், இணைத்தள விவகாரங்கள் அவர்களை கட்டுக்கடங்காமல் செய்ய தூண்டுகிறது. அதையே தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் வலைவீசும் போது, இத்தகைய பெண்கள் மாட்டிக் கொள்கிறார்கள் போலும். பழகிய பெண்களிடம் உடனே பாலியல் பலாத்காரம் செய்துவிட முடியாது. அதனால், பழகும் போதே வீடியோ எடுப்பது போன்ற விவகாரங்கள் இருந்தால், அவற்றை வைத்து மிரட்டி அவ்வாறு செய்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு மிரட்டி நகைகளைப் பறித்தல், முதலியன குற்றவாளிகளின் சாதாரண-வழக்கமான வேலைகள் தாம் என்பது தெரிந்த விசயமே.

© வேதபிரகாஷ்

04-02-2015

[1] தினமலர், ‘பேஸ்புக்கில் டாக்டராக நடித்து பெண்களை சீரழித்தவன் கைது : பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை, சென்னை, புதன், 04-02-2015, பக்கம்.6.

[2] தினத்தந்தி, சேலம் உள்பட பல இடங்களில்பேஸ்புக்மூலம் பல பெண்களை ஏமாற்றி நகைகளை பறித்த போலி டாக்டர் கைது, பதிவு செய்த நாள்:புதன், பெப்ரவரி 04,2015, 1:50 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், பெப்ரவரி 04,2015, 1:50 AM IST;

[3] சமீபத்தில் சவால்கள், அதைப் பற்றிய சுவரொட்டிகள், செய்திகள், வாதங்கள்-விவாதங்கள் எல்லாம் வெளிவந்தன.

https://islamindia.wordpress.com/2014/12/30/muslim-wizards-arrested-for-naked-ritual-performed-and-sexual-harassment/

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130284

[5] http://www.dailythanthi.com/News/State/2015/02/04015044/With-FacebookCheated-and-deprived-women-jewelryFake.vpf

[6] தினகரன், பேஸ்புக் மூலம் பழகி பெண்களிடம் நகை மோசடி போலி டாக்டர் பிடிபட்டார், சென்னை, 04-02-2015.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130284

[8] http://www.dinamalar.com/district_detail.asp?id=1175536

 

காஷ்மீர் ஜிஹாதிகளின் அனைத்துலக தீவிரவாத மையமாகிறதா?

ஒக்ரோபர் 24, 2011

காஷ்மீர்  ஜிஹாதிகளின் அனைத்துலக தீவிரவாத மையமாகிறதா?

   


பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஜிஹாதில் ஈடுபடுவது: இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் சிமி முதலியன தடை செய்யப் பட்ட பிறகு, பல அவதாரங்களில் செயல்பட்டு வருகின்றன. அரேபிய நாடுகளில் மக்களாட்சி என்ற கொள்கையில் ஈர்க்கப்பட்டு, முஸ்லீம்களே வீதிகளில் வந்து போராடி வருகின்ற நேரத்தில், எங்கே தங்கள் செல்வாக்கு போய்விடுமோ என்ற பயத்தில், மென்மையான இலக்குகளில் ஒன்று என்று கருதப்படும் இந்தியாவில் தமது குண்டு வெடிப்புகளை அவ்வப்போது, ஜிஹாதிகள் செய்து வருகின்றனர். அத்தகைய அந்நியநாட்டு ஜிஹாதிகள் “இந்தியன் முஜாஹிதீன்” என்ற பெயரில் கடந்த ஆண்டுகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தி, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை ஈவு-இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தனர். “உள்ளுக்குள் வெடித்து சிதறவைக்கும் வெடிகுண்டு வகையில் குண்டு”களைத் தயாரிப்பது, குண்டுகளை தேர்ந்தெடுத்த இடங்களில் வைப்பது, டைமர் மூலம் வெடிக்க வைப்பது, ஊடகங்களுக்கு இ-மெயில் அனுப்பித் தெரிவிப்பது முதலிய செயல்பாட்டினை அதில் காணலாம். இருப்பினும், இத்தகைய தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் சிறுவர்கள்-இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்களே என்று முஸ்லீம் சமூகத்தில் உள்ள பெரியவர்கள் கண்டிப்பதாகவோ, தடுப்பதாகவோ தெரியவில்லை. ஆனால், சில இயக்கங்கள் அவர்களை தேர்ந்தெடுத்து, ஊக்குவித்து, குடும்பதிலிருந்து பிரித்து, மற்ற ஆசைகளைக் காட்டி அத்தகைய செயல்களில் ஈடுபடுத்தி வருவதைக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் ஜிஹாதிகளால், தாலிபான்களால் உபயோகப்படுத்தப் படும் அதே முறையை, பயிற்சியை அவர்களுக்கு அளிக்கிறார்கள்.

முஸ்லீம் அடையாளங்களை மறைத்து செயல்படுவது: கசாப்பின் வேஷத்தைப் பற்றி முன்பொரு பதிவில் விளக்கியிருந்தேன். அவன் அழகாக மழித்துவிட்டு / சேவ் செய்துவிட்டு, நீல நிறம் ஜீன்ஸ்-சர்ட் போட்டுக் கொண்டு, நெற்றியில் குங்குமம், கையில் கயிறு சகிதம் வந்து, வழியில் உள்ளவர்களிடம் “நமஸ்தே” என்று குசலம் விசாரித்து, பிறகு தான், தன்னுடைய குரூர உருவத்தைக் காட்டி சுட்டுக் கொள்ள ஆரம்பித்தான். அதே முறை தான் காஷ்மீரத்தில் சில தீவிரவாதிகளைப் பற்றி விசாரித்தபோது அம்முறை அங்கும் செயல்படுத்தப் படுவதைக் காணலாம்.அதனால் தான்  இக்காரியங்களில் இளைஞர்கள் மற்றும் இளைஞ்சிகள் பயன்படுத்தப் படுகின்றனர். அதிலும் குறிப்பாக படித்தவர்கள், தாடி-மிசை-குல்லா என்று இஸ்லாத்தை அடையாளம் காட்டாத, அவையெல்லாம் இல்லாமல், அழகாக ஜீன்ஸ்-குள்ளசர்டுகளைப் போட்டுக் கொண்டு ராஜா, தேவ் ….. போன்ற இந்து பெயர்களையும் சேர்த்துக் கொண்டு செயபட்டு வருகிறார்கள். அதற்கு முன்பு, அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, பயிற்சி கொடுக்கப் பட்டு, ஜிஹாதி என்ற “புனிதப் போரை” நடத்த மூளைசலவை செய்து தயார்படுத்துகின்றனர்.

இ-மெயில்களில் விளையாடும் இளம் தீவிரவாதிகள்: இ-மெயில்கள் மூலம் திசைத்திருப்ப அல்லது சாட்டரீதியாக வழக்குகளை பலமிழக்க வேண்டுமென்றே பல இடங்களிலிருந்து இ-மெயில்கள் அனுப்பப்படுவது, அதற்கு ஊடகங்கள் துணைபோவதும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் சுப்ரீக் கோர்ட் வளகத்தில் குண்டு வெடித்த பிறகு பல இ-மெயில்கள் அனுப்பப்பட்டன. இரண்டாவது மற்றும் நான்காவது இ-மெயில்கள் கொல்கத்தாவிலிருந்து ஒரு டிவி செனலுக்கு Chottuminaliayushman@gmail.com என்ற பெயரில் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது[1]. அதே நேரத்தில் இரண்டாவது இ-மெயில் கிஸ்த்வார், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்தது என்றும் செய்தி வந்துள்ளது[2]. இன்னொரு இ-மெயில் அஹமதாபாதிலிருந்து “சோட்டு” [Chhotoo Minani Ayushman[3]] என்ற பெயரில் அனுப்பட்டது[4]. மூன்றாவது இ-மெயில்சஹீத் அலி ஹூரி என்ற பெயரில், இந்தியன் முஜாஹிதீன் தரப்பில் URL|killindian@yahooID என்ற அடையாளத்தில் அனுப்பப்பட்டுள்ளது[5]. இரண்டு இடங்களிலிருந்து வந்ததாக உள்ள இ-மெயில்களை ஆராய்ந்தபோது, அவை ஆசம்கர், உத்திரபிரதேசம் மற்றும் காக்ஸ் பஜார், பங்களாதேசம் என்ற ஊர்களிலிருந்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் ஹுஜியின் பயிற்சி முகாம்கள் இருக்கும் இடங்கள் ஆகும். இதிலிருந்து தான், ஹுஜியின் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது[6].

எட்டாவது படிக்கும் அமீர் அப்பாஸ் ஹுஜியின் சார்பாக இ-மெயில் அனுப்பினான்: டில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி அன்று நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் இறந்தனர்[7]. இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுப்பிரிவு காவல்துறையினர் [The National Investigation Agency (NIA)] தீவிர விசாரணை நடத்தி காஷ்மீரைச் சேர்ந்த அமீர் அப்பாஸ் தேவ் என்ற 8- ஆம் வகுப்பு மாணவன் உள்பட 3 பேரை அக்டோபர் 7ம் தேதி கைது செய்தனர். கைதான மாணவன் அமீர் குண்டு வெடிப்பு பற்றிய தகவல்களை பத்திரிகை அலுவலங்களுக்கு ஹுஜியின் சார்பாக [Bangladesh-based Harkat-ul-Jihad-e-Islami (HuJI)] இ-மெயில் அனுப்பியது தொடர்பாக அவனை காவல்துறையினர் கைது செய்தனர்[8]. கைதான மாணவர் அமீர் அப்பாஸ் தேவ் நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற காவலில் காவல்துறை விசாரணையில் இருந்து வருகிறார்.  இதற்கிடையே மாணவனின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அவனிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால், அவனுக்கு காவலை நீட்டித்து தரவேண்டும் என்று சிறப்பு பாதுகாப்பு படையினர் நேற்று அவனை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று மாணவன் அமீரின் நீதிமன்ற காவலை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.எஸ்.ஷர்மா 7 நாட்கள் நீட்டித்து அதாவது வரும் 14- ஆம் தேதி வரை காவல்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

   

திட்டமிட்ட யுனானி மருத்துவர் காஷ்மீரிமாணவர் வாசிம் அக்ரம் மாலிக்[9]: இந்த நிலையில், காவல்துறை விசாரணையில் டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு வந்த வங்காளதேசத்தில் யுனானி மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் காஷ்மீரி மாணவர் வாசிம்அக்ரம் மாலிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. செப்டம்பர் 7 அன்று வாசிம் டில்லியில் இருந்துள்ளான்[10]. அதைத்தொடர்ந்து அவனை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு சிறப்பு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மாணவரை இந்தியா-வங்காள தேச எல்லையான டாகா அருகே அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்து, இந்திய பாதுகாப்பு படையினரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

   

வீட்டில் மொபைல் போன்கள் ஆவணங்கள் சிக்கின: இதில், முக்கிய மூளையாக செயல்பட்ட கிஷ்த்வாரைச் சேர்ந்த இளைஞர் வாசிம் அகமதுவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பினர், சிறப்பு விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலை ஜம்முவுக்கு வந்தனர். அன்கிருந்து கிஷ்த்வாருக்கு ஹெலிகாப்டரில் சென்று, வாசிம் அகமது வீட்டில் சோதனை நடத்தியபோது. மூன்று மொபைல்போன்கள், மற்றும் சில ஆவணங்களைக் கைப்பற்றினர்[11]. குறிப்பாக பணம் பட்டுவாடா செய்ய விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் சிக்கின[12]. இவற்றுக்கும், டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பிற்கும் முக்கிய தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பற்றிய முக்கிய விவரங்கள் ஓரிரு நாளில் வெளிவரும் என தெரிகிறது. மேலும், இதுவரை நடந்த விசாரணையில், இந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பிற்கு தொடர்பு உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது[13]. இருப்பினும் வாசிம் அக்ரத்தின் பெற்றோர் அவன் குற்றமற்றவன் என்று வாதிடுகின்றனர்[14]. இரண்டு பேர்களில் யார் இ-மெயில் அனுப்பியது என்று என்.ஐ.ஏவால் சொல்லமுடியவில்லை என்றும் வாதம் உள்ளது[15].

   
   

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி அஷர் அலி சொன்ன விவரங்கள்: டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தீவிரவாதிகளுடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்த பாகிஸ்தானை சேர்ந்த அவரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த அஷர் அலி என்பவர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்று காவல்துறையினரிடம் அக்ரம் தெரிவித்தார். அவர் தற்போது காஷ்மீர் மாநிலத்தில் கோத்பால்வால் சிறையில் உள்ளார். அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அஷர் அலியிடம் விசாரித்தபோது, வாசிம் அக்ரமின் சகோதரன் ஜுனைத் என்பவனும் தீவிரவாத குழுவில் உள்ளான் என்று தெரிவித்தான். படித்துக் கொண்டிருந்த அவன் திடீரென்று காணாமல் போய்விட்டதால், அவனது பெற்றோர் போலீஸாரிடம் புகாரும் கொடுத்துள்ளனர்[16]. இப்படி இரண்டு மகன்களும் தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிடுவது எப்படி என்று தெரியவில்லை[17].

பல காதலிகளுடன் பேசிக் கொண்டே, ஜிஹாதியைப் பற்றியும் படித்த வாசிம் அக்ரம் மாலிக்: வாசிம் அக்ரம் மாலிக்கிடம் போலீஸார் விசாரித்தபோது அவன் சொன்ன விவரங்கள், எவ்வாறு இளைஞர்கள் ஜிஹாதிகளால் மூலைசலவை செய்யப்படுகிறது என்று தெரிகிறது. துப்பாக்கியை எடுத்துக் மொண்டு காஷ்மீர் காடுகளில் திரிந்து தான் ஜிஹாத்தில் ஈடுபட வேண்டும் என்பதில்லை. பல கார்ல்-ஃபெரெண்டுகளுடன் / பண் நண்பர்கள் / காதலிகள் ஃபேஸ்புக்கில் ஒரு கம்ப்யூட்டரில் பேசிக்கொண்டே, இன்னொரு கம்ப்யூட்டரில் அல்லது வின்டோவில் ஒசாமா பின் லேடன், அயம் அல் ஜவஹிரி, அன்வர் அல் அவ்லகி போன்ற ஜிஹாதி தலைவர்களைப் பற்றியும் விவாதிக்கும் திறன் கொண்டவன் என்று விளாக்கினான்[18]. அதாவது மனத்தை எவ்வாறு மாற்றி, பதப்படுத்தி, சித்தாந்த ரீதியில் தாங்கள் செய்வது ஒன்றும் தவறில்லை என்ற நிலைக்குக் கொண்டு வந்து, பிறகு குண்டுகளை வைத்து, வெடிக்கப் பயிற்சிக் கொடுக்கப்படுகிறது[19]. ஆகவே, முஸ்லீம் பெற்றோர்கள், பொறுப்புள்ள பெரியோகள் இவ்வாறு முஸ்லீம் இளைஞர்கள் மாறுவதை கண்டு பிடித்து தடுக்க வேண்டும், ஏனெனில் நாளைக்கு அவர்கள், தங்கள் சமூகத்தையே அழிக்க முற்பட்டாலும், முற்படலாம். அதாவது “ஜிஹாதி” முஸ்லீம்களுக்குள் கூட நடக்கலாம். யார் பெரிய ஜிஹாதி என்ற போட்டி வரலாம். அப்பொழுது எல்லோருடைய கதியும் அதோ கதிதான்.

குண்டு வெடிப்பில் மூன்று பேருக்கு தேடுதல் நோட்டீஸ்: ஜுனைத் அக்ரம் மாலிக் (19) வாசிம் அக்ரமின் தம்பி, ஷகிர் ஹுசைன் ஷேக் என்கின்ற சோடா ஹாஃபிஸ் (26), மற்றும் அமீர் அலி கமல் (25) என்ற மூவருக்கு தேடுதல் பிடிப்பு அறிக்கை அனுப்பப்படுள்ளது. மூன்றாமவன் 2005லிருந்து, காஷ்மீரத்தில் தீவிரவாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறான்[20]. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் ஏற்கெனெவே காஷ்மீர் வழியாக, பங்களாதேசத்துடன் இணைப்பு ஏற்படுத்தி, பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களது திட்டம், இதற்கு முஸ்லீம் நாடுகள் அமோகமாக ஆதரவுடன் உதவி வருகின்றன. மேற்காசியாவில், ஜனநாயகம், குடியரசு போன்ற ரீதியில் முஸ்லீம்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், தென்கிழக்காசிய அடிப்படைவாதிகள் அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதாக உள்ளது. குறிப்பாக இந்தோனேசிய பயங்கரவாதம், தீவிரவாதம் வெளிப்படையாக, ஆனால், திறமையாக வேலை செய்து வருகின்றது. இதற்கு ஆதரவும் இருப்பதால், அதன் மூலம் தமது ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்ள முயல்கின்றனர்.

வேதபிரகாஷ்

24-10-2011


[1] The second and the fourth Indian Mujahideen (IM) e-mails in the Delhi High Court blast case have been traced to Kolkata. The e-mails were sent from Chottuminaliayushman@gmail.com to a TV channel.

http://ibnlive.in.com/news/delhi-blast-two-im-emails-traced-to-kolkata/183773-3.html

[2] A second unverified email received today by different media organisations allegedly from Indian Mujahideen said that the group takes responsibility for Wednesday’s Delhi High Court blast in which 12 people were killed and over 76 were injured. Yesterday, HuJI, an outlawed  terrorist group with a base in Pakistan took responsibility for the blast. The mail was traced to a cyber cafe in Kishtwar, Jammu and kashmir

http://www.hindustantimes.com/Read-Indian-Mujahideen-mail-claiming-Delhi-blast/Article1-743144.aspx

[4] Investigators were groping for leads on Wednesday’s blast at Delhi High Court even as an email was sent to a TV channel claiming that the attack was carried out by Indian Mujahidin and not HuJI and threatening attacks on shopping complexes on Tuesday (13-09-2011). The email sent by one Chhotu, an alleged IM operative, was traced to Ahmedabad.

http://articles.timesofindia.indiatimes.com/2011-09-09/india/30134439_1_huji-mail-im-emails-new-email

[5] Third email after Delhi blast ‘decoded’ Earlier, the Delhi Police claimed to have decoded the third email sent after the Delhi High Court blast. This email sent by someone claiming to be Saeed Ali Al Hoori of Indian Mujahideen from aURL|killindian@yahooIDclaimed the next attack would be at 1.8.5.13.4.1.2.1.4. But this is more like a kindergarten riddle: read A for 1, H for 8, E for 5 and you have Ahmedabad. Read more at: http://indiatoday.intoday.in/story/delhi-hc-blast-third-email-warns-of-attack-in-ahmedabad/1/150641.html

[6] In what is viewed as a positive lead, agencies are probing two calls made on the evening of the blast from two different places in Uttar Pradesh to Bangladesh. Highly placed sources said they have managed to track calls made from Pilkhuwa and Azamgarh in UP to Cox’s Bazar and Chittagong in Bangladesh.Both these calls were made from a PCO between 5 pm and 6 pm on the day of the blast. Both Chittagong and Cox’s Bazar have Harkatul-Jihad al-Islami (HuJI) training camps and it is in these camps that some key IM members are said to have taken refuge.

[7] வேதபிரகாஷ், கத்தியிலிருந்துகுண்டுவெடுப்புவரைமாறிவரும்ஜிஹாதின்தன்மை!, https://islamindia.wordpress.com/2011/09/11/transformation-of-jihadi-terror/

[8]

[12] Looking for some ‘concrete’ evidence connecting the ‘missing’ links in the Delhi High Court blast case probe, the National Investigation Agency (NIA) has seized three mobile phones and some documents, including papers relating to money transaction, from residence of one of the accused Wasim Ahmed Malik in Jammu and Kishtwar.

[15] Unfortunately, the absurdity of the NIA’s allegations against Mr Malik is only symptomatic of its pathetic handling of the probe into the blast. Even when the agency arrested Abid Hussain and Amir Abbas – the two boys from Kishtwar who allegedly sent the email claiming responsibility for the attack – it provided only sketchy details, failing to pinpoint which of the two had sent the email.

Read more at:http://indiatoday.intoday.in/story/delhi-hc-blast-probe-nia-claim-questionable/1/154392.html

[16] According to sources, NIA officials had recently quizzed Azhar and found that Wasim’s teenaged brother Junaid had been initiated into terrorism. Junaid allegedly disappeared a year ago and his family has lodged a missing person report. Intelligence agencies suspect that Junaid has been operating from somewhere in the Kashmir Valley.

[18] For Wasim, the idea of jehad is not picking up a gun and fighting in the jungles of Jammu and Kashmir; he is highly radicalised but without overt symbols attached to it. He can discuss his multiple girlfriends with as much ease as he can discuss Osama bin Laden, Ayman al Zawahiri and Anwar al Awlaki.He has no qualms about opening Facebook in one window and chatting with girlfriends and simultaneously reading about international jehad in the second window on his computer,” said a source who is privy to his interrogation details.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Malik-believed-in-action-did-recee-of-HC-himself/Article1-760830.aspx

[20] The fugitives include 19-year-old Junaid Akram Malik, younger brother of Wasim Akram Malik. Wasim, a medical student in Bangladesh, is presently in NIA custody in Delhi. The other two are Shakir Hussain Sheikh alias Chota Hafiz (26) and Amir Ali Kamal (25). While Sheikh has been active in the Kashmir Valley since 2005, Kamal has been operating since 2008.

http://timesofindia.indiatimes.com/india/NIA-issues-wanted-notice-for-3-Hizbul-terrorists-in-Delhi-HC-blast-case/articleshow/10446851.cms

பாகிஸ்தான் 450 இணைய தளங்களை பாகிஸ்தான் தடை செய்தது!

மே 21, 2010

பாகிஸ்தான் 450 இணைய தளங்களை பாகிஸ்தான் தடை செய்தது!

விடுதலையும் இஸ்லாமும் – 24-05-2010

http://www.viduthalai.com/20100521/news24.html

விடுதலையும் இஸ்லாமும்: இஸ்லாம் மதத்துக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி யூ_டியூப், பேஸ்புக் போன்ற 450 இணைய தளங்களை பாகிஸ்தான் அரசு நேற்று முதல் தடை செய்தது; மேற்கண்ட இணைய தளங்களை தடை செய்யுமாறு பாகிஸ்தானில் உள்ள பல்வேறு மதவாத கட்சிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞான முன்னேற்றம், கருத்துச் சுதந்திரம் போன்றவை முன்னேறி வரும் காலகட்டத்தில் இன்னும் பகுத்தறிவற்ற மதங்களின்மீது நம்பிக்கை கொண்டவர்களை என்ன சொல்வது?

பகுத்தறிவற்ற மதங்களின்மீது நம்பிக்கை கொண்டவர்களை என்ன சொல்வது? விடுதலை சொல்வது “பகுத்தறிவற்ற மதங்களின்மீது நம்பிக்கை கொண்டவர்களை என்ன சொல்வது?”, என்று கேட்கிறது. அதாவது, இஸ்லாம் பகுத்தறிவற்ற மதம், மற்றும் அத்தகைய பகுத்தறிவற்ற மதத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்களை என்ன – முஸ்லீம்களை சொல்வது, என்று கேட்கும் போது முஸ்லீம்கள் தாம் பதில் சொல்லவேண்டும்.

முஹம்மதுவை வரைந்தவனைக் கொல்லுங்கள்: அல் முஹம்மதியா மாணவர்கள், கராச்சி என்ற அமைப்பு, இணைதளங்களில் முஹம்மதுவின் சித்திரங்கள், படங்கள் முதலியவற்றை வெளியிடுவது, அனைவரும் பார்க்கும்படி செய்வது முதலியவற்றைக் கடுமையாக எதிர்க்கிறது. “முஹம்மதுவை வரைந்தவனைக் கொல்லுங்கள்”, என்று தட்டிகளை கராச்சியில் நடந்த ஊர்வலத்தில் ஏந்தி வந்தனர்.

பிரச்சினை எப்படி ஆரம்பித்தது? ஒரு இணைத்தளக் குழு, முஹம்மதுவைப் பற்றிய “கார்ட்டூன் சித்திரம் வரையும் போட்டி” என்று அறிவித்ததாம். வியாழக்கிழமை, அத்தகைய கார்ட்டூன் வரையும் நாள் என்று தமாழாக ஆரம்பித்தனராம், ஆனால், பாகிஸ்தானில் அது “தெய்வ தூஷணம்” / “தெய நிந்தை” / அவதூறு என்று கருதப் பட்டதால், நீதிமன்றத்தீர்குச் சென்று தடை அமூல்படுத்திதாம். அதனால்தான், அத்தகைய இணைத்தளங்கள் தடை செய்யப் பட்டுள்ளன. விவரங்களுக்கு கீழேயுள்ளதைப் படிக்கவும்:

May 19, 2010 10:51 PM PDT

Cartoon contest leads Pakistan to shutter Facebook

http://news.cnet.com/8301-1023_3-20005464-93.html

A Seattle cartoonist’s satirical suggestion that Thursday be dubbed “Everybody Draw Mohammed Day” has led to anything but humor in some quarters, particularly Pakistan, which on Wednesday evening shut down Facebook.

An Islamic lawyers association in Lahore, Pakistan, argued that the contest essentially was blasphemous and won a court injunction against the social-networking site on Wednesday. A Facebook page promoting the idea had drawn more than 81,000 members as of 6:30 a.m. PDT Thursday. The cartoonist, Molly Norris, did not create the Facebook page and is actively opposing it.

Facebook will reportedly be shut down in Pakistan for the remainder of the month.

In related news, the Associated Press reported Thursday that Pakistan’s government has banned YouTube over “sacrilegious” content in what could be a wider Internet crackdown.

This is part of the original cartoon that sparked a viral campaign out of the artist’s control.

(Credit: Molly Norris)

The Facebook brouhaha started when Norris drew a cartoon last month depicting objects like a domino, a spool of thread, and a handbag, saying they were the “real likeness of Mohammed.”

Norris said she drew her cartoon as a statement on free speech and a gesture of support for Matt Stone and Trey Parker, creators of the Comedy Central show “South Park.” The pair drew threats of retaliation after airing an episode earlier this year depicting the prophet Muhammad in a bear suit. Some Muslims consider images of Muhammad to be blasphemous.

The episode led a New York-based Web site called RevolutionMuslim.com to warn creators of the animated series that “what they are doing is stupid, and they will probably wind up like Theo van Gogh.”

Van Gogh, a Dutch filmmaker and relative of famed painter Vincent van Gogh, was murdered in 2004 after producing a 10-minute movie focused on violence against women in some Islamic societies.

The producers of “South Park” then said that Comedy Central, to make the episode suitable for later airing, censored the show by removing a speech about intimidation and fear without their permission.

After posting her Muhammad-related cartoon–which included a fake group called Citizens Against Citizens Against Humor calling for an “Everybody Draw Mohammed Day”–the idea quickly went viral, drawing thousands of enthusiastic supporters and spawning not only a Facebook page, but a blog.

The idea has also drawn a good share of opponents, including some pro-free-speech political cartoonists–on Facebook and elsewhere online.

Among the opponents is Norris, who on her Web site has now strongly distanced herself from the concept of “Everybody Draw Mohammed Day,” apologizing to Muslims and saying she meant her cartoon as a one-off statement on free speech and censorship and had no idea how far her attempt at satire would go.

“The vitriol this ‘day’ has brought out, of people who only want to draw obscene images, is offensive to Muslims who did nothing to endanger our right to expression in the first place,” she writes. “Only Viacom and Revolution Muslim are to blame, so…draw them instead!” (The Viacom reference is related to Viacom-owned Comedy Central censoring the “South Park” episode.)

Norris even joined the Facebook group Against “Everybody Draw Mohammed Day – May 20,” which as of Thursday morning had more than 38,000 members.

A blurb on the “Against” page say it exists “to portray this group from a moral, not religious, standpoint that is respectful towards the human race, and is capable of knowing what is/can be unnecessarily offensive and controversial to any group of people/individual.”

In addition, as an alternative, Norris now suggests turning Thursday into “Everybody Draw Al Gore Day,” wherein people turn their creative attention to depicting the “Holy Prophet of the Church of Global Warming.”

Updated at 6:30 a.m. PDT on May 20: with Pakistan’s ban on YouTube and higher member numbers on the Facebook pages..

ஒருவேளை இங்கும் முஸ்லீம்களின் இரட்டைவேடம் வெளிப்படுகிறதா? இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் “முஹம்மதுவை வரைந்துக் காட்டுதல்” என்பதே தூஷணமாகக் கருதப் படுகிறது. அப்படியென்றால், முஸ்லீம் ஒருவனே இந்துமதக் கடவுளர்களை தனதிஷ்டத்திற்கு  வரைதூள்ளான்., அதை இந்துக்கள் எதிர்த்தூள்லனர், வழக்குகளும் தொடுத்துள்ளனர். ஏனெனில், இந்துக்கடவுளர்களை, ஹுஸைன் அப்படி சித்திரங்களாக வரைந்துத் தள்ளியபோது, பொறுப்புள்ள, நியாயவானான……………….முஸ்லீம் அதை எதிர்க்கவில்லை. இப்பொழுது, இதை எதிர்க்கிறர்கள்? இதுதான் “பகுத்தறிவு” என்று சொல்லப்படுகிறதா? இல்லை, ஏனெனில், திக-திமுக-மற்ற கருப்புப்பரிவார் கூட்டங்களே அத்தகைய அறிவோடுதான் இருக்கிறார்கள்.